தவித்த கனிமொழி... தழுதழுத்த கருணாநிதி...!

25-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜூனியர்விகடனில் எப்போதும் தனியாக எழுதப்படும் கனிமொழியின் ஜெயில் வாசம் பற்றிய கட்டுரை, இந்த முறை அதிசயமாக கழுகாரின் வாயில் இருந்து வருவதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்காகவா.. அல்லது வித்தியாசத்திற்காகவா என்று தெரியவில்லை..! ஆனாலும் இதுவும் நன்றாகத்தான் எழுதப்பட்டுள்ளது..

இனி படியுங்கள்..!
கழுகார் உள்ளே நுழையும்போது, அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்-கள் அடுத்​தடுத்து வந்துகொண்டே இருந்தன. ''எல்லாம் டெல்லியில் இருந்து!'' என்றார் சுருக்கமாக!
 
 

''காங்கிரஸ் மேலிடம் தி.மு.க-வை நெட்டி வெளியே தள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டது. அதற்கான காரியங்களை மறைமுகமாகத் தொடங்கி​விட்டார்கள். இதைத் தி.மு.க-வும் தெளிவாகவே தெரிந்துகொண்டுவிட்டது!'' என்று ஆரம்பித்த கழுகாரிடம்,

''அதனால்தான் டெல்லி சென்ற கருணாநிதியை காங்கிரஸ் ஆட்கள் யாருமே சந்திக்கவில்லை​யா?'' என்​றோம்.

''கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை காலை​யில் சென்னையில் இருந்து டெல்லிக்குச்சென்றார். அன்று மாலை திகார் சிறைக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். இரவு டெல்லியில் தங்கிவிட்டு, புதன்கிழமை மாலைதான் சென்னை திரும்பினார். இந்த ஒன்றரை நாள் பயணத்தில் அவரை டெல்லியில் சந்தித்த ஒரே காங்கிரஸ் வி.ஐ.பி., மத்திய அமைச்சர் வயலார் ரவி மட்டும்தான். அவரும் ரொம்ப கேஷூவலாக வந்து கருணாநிதியைச் சந்தித்தாராம். மற்றபடி, காங்கிரஸ்​காரர்கள் யாரும் கருணாநிதியை சந்திக்க வரவும் இல்லை... இவர் முயற்சிக்கவும் இல்லை.''

''சொல்லும்!''

''ஆனால், தன்னுடைய கோபம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தி.மு.க. காட்டிவிட்டது என்பதுதான் உண்மை. கருணாநிதி டெல்லியில் இருந்தபோது, மத்தியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அவர் பேசப் பேச, அங்கே இருந்த தலைவர்களுக்கு குப்பென்று வேர்த்துவிட்டது. 'லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும்’ என்று அண்ணா ஹஜாரே போன்றவர்கள் சொல்ல... அதை ஏற்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், 'பிரதமரையும் உறுதியாகச் சேர்க்கவேண்டும்’ என்று டி.ஆர்.பாலு சொன்னால் எப்படி இருக்கும்? 'காங்கிரஸ் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முன்னதாக, தானே போய்விட ஒரு காரணத்தை தி.மு.க. தேடியது. அதுதான் லோக்பால்!’ என்கிறார்கள். மன்மோகன் சிங்கையும் சோனியா​வையும் சுரீர் எனத் தைக்கிறது, தி.மு.க-வின் கோரிக்கை. யார் முந்திக் கொள்கிறார்கள் என்று பார்ப்​போம்!''

''அடுத்து திகார் காட்சிகளுக்கு வாரும்!''

''துன்பமும் துயரமும் வேதனையும் கலந்த காட்சி அது! 'இந்த வயதான மனிதர் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார், பார்த்தீர்களா?’ என்று கருணாநிதியை டெல்லி விமான நிலையத்தில் பார்த்த இந்திப் பத்திரிக்கையாளர் ஒருவர் வருத்தப்​பட்டாராம். அந்த அளவுக்கு கருணாநிதி டெல்லியில் கஷ்டப்பட்டார். அவரது வழக்கமான வீல் சேரை டெல்லிக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. அதை எடுத்துச் சென்றாலும், ஸ்லோப் உள்ள இடங்களில்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்பதால், அங்கேயே இருக்கும் வீல் சேரைப் பயன்படுத்திக்கொள்கிறார். திகாருக்கு அவர் சென்றபோது, ராஜாத்தி அம்மாளும் உடன் இருந்தார். கனிமொழியைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுதிருக்கிறார். கனிமொழியும் கண்ணீர் மல்க அப்பாவைத் தொட்டுச் சமாதானப்படுத்தினார். ஆற்றாமை மிகுதியால் தான் உட்கார்ந்து இருந்த வீல் சேரை இறுக்கமாக கருணாநிதி பிடிக்க... 'அவ்வளவு அழுத்திப் பிடிக்காதீங்கப்பா. கை வலிக்கப்போகுது’ என்று கனிமொழி சொல்லி இருக்கிறார். 'உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலை... இங்கயே ரெண்டு வாரத்துக்குத் தங்கிடலாம்னு இருக்கேன்’ என்று கருணாநிதி சொல்ல... 'வேண்டாம்பா. நீங்க சென்னையிலயே இருங்க’ என்று கனிமொழி மறுத்தாராம். 'தயாளுவும் உன்னைப் பார்க்கணும்னு சொல்றா! அடுத்த தடவை வரும்போது அழைச்சுட்டு வர்றேன்’ என்ற கருணாநிதி, 'பேரன் ஆதியைப் பார்க்கறப்பதான் எனக்கு வருத்தம் அதிகமாயிடுது. அதனால, காலையில ஒரு தடவையும் ராத்திரி ஒரு தடவையும் அவன்ட்ட பேசுறேன்’ என்று சொன்னாராம். இவை அனைத்தையும் கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தாராம் ராஜாத்தி!''

''ம்!''

''அப்போது, கனிமொழி சில கோரிக்கைகளை வைத்துள்ளார். 'சரத் ரொம்ப வருத்தமா இருக்கார். அவரை நீங்க பார்த்து ஆறுதல் சொல்லணும். அதே மாதிரி, ராசாவோட மனைவி பரமேஸ்வரியிடமும் நீங்க பேசணும்’ என்று சொன்னாராம். 'நான் பேசுறேன்மா’ என்று கருணாநிதி சொல்லிவிட்டு வந்தார். கனிமொழியைச் சந்தித்துவிட்டு ஹோட்​டலுக்கு வந்த கருணாநிதி, யாரிடமும் பேசாமல் அமைதியாகவே  இருந்தாராம். அழகிரி வந்த பிறகுதான் கொஞ்சம் சமாதானம் ஆகி, சில வார்த்தைகள் பேசினாராம். தன்னுடைய உடல் நிலை, மனநிலை பற்றி அதிகம் பேசிய கருணாநிதி, 'மக்கள் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை. அதனால, இப்போ என் மக்களைக் காப்பாத்த முடியலை’ என்று அந்தச் சூழ்நிலையிலும் நயத்துடன் பேசி இருக்கிறார்.''

''சரத், பரமேஸ்வரியைப் பற்றி ஏன் கனிமொழி பேசினார்?''

''மிக மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கலைஞர் டி.வி. சரத்குமாரால் திகாருக்குள் பொழுதைக் கழிக்கவே முடியவில்லை. ஆ.ராசா மூன்று வேளையும் சிறை உணவு சாப்பிடப் பழகிவிட்டார். கனிமொழி ஒருவேளை மட்டும் சிறை உணவு சாப்பிடுகிறார். ஆனால், சரத்குமாருக்கு சிறை உணவு ஒப்புக்கொள்ளவே இல்லை. டெல்லியில் 42 டிகிரிக்கு மேல் அடிக்கும் அனலும் திகாருக்குள் வெம்மையை உண்டாக்கி இருக்கிறதாம். வேனல் கட்டிகள் உருவாக, அதன் எரிச்சல் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சரத்.

டெல்லியின் மத்தியப் பகுதியில் வசிக்கும் சரத்குமாரின் சகோதரிதான் தினமும் தன் வீட்டுச் சாப்பாட்டை திகாருக்குக் கொண்டுவருகிறார். சமீபத்தில் அவர் சாப்பாடு கொண்டுவந்தபோது, தி.மு.க-வின் எம்.பி ஒருவர் திகாருக்கு வந்தாராம். 'சரத்துக்கும் கலைஞர் டி.வி-க்குக் கைமாறிய 200 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணம் கைமாறிய தேதியில் சரத் அதிகாரப்பூர்வமாக கலைஞர் டி.வி-யில் அங்கம் வகிக்கவே இல்லை. இதை எல்லாம் சொன்னால், கலைஞர் குடும்பத்துக்கு சிக்கலாகிவிடும் என்பதால்தான் சரத் அமைதியாக இருக்கிறார். ஆனால், உணவு, உடல் உபாதைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செலவுக்குக்கூடப் பணம் இல்லாத அளவுக்குத் தவிக்கும் எங்களை, உங்கள் கட்சியும் கைவிட்டுவிட்டது. இனியும் சரத் அமைதியாக இருக்க மாட்டார்!’ என ஆவேசமாக வெடித்தாராம்.''

''அப்புறம்..?''

''சரத்தை எப்படியாவது அப்ரூவர் ஆக்கிவிட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. '200 கோடி கைமாறியதில் உங்களின் பங்களிப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதே நேரம் உங்களை நிர்ப்பந்தித்த ஆட்களைப்பற்றி நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்!’ என வற்புறுத்தும் சி.பி.ஐ., அதற்கு கைம்மாறாக சரத்தின் ஜாமீன் கோரிக்கைக்கு உதவுவதாகச் சொல்கிறதாம். சிறையின் சூழ்நிலை பிடிக்காமல் தவிக்கும் சரத், எந்த நேரத்திலும் அப்ரூவர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அவர் வாய் திறந்தால், தி.மு.க-வின் மிக முக்கியத் தலையே  திகாரை நோக்கி வரக்கூடிய இக்கட்டு உருவாகுமாம்!''

''சரத்தை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கி இருக்குமே?''

''யாருடைய சமாதானத்தையும் ஏற்கிற நிலையில் சரத் இல்லை. தயாநிதி மாறனையே 'பார்க்க மாட்டேன்’ எனச் சொல்லி திருப்பி அனுப்பிய சரத், கருணாநிதியின் சந்திப்பின்போதும் பெரிதாக ஏதும் பேசவில்லையாம். 'எனக்கும் 200 கோடிக்கும் என்ன சம்பந்தம்?’ என சரத் கேட்க, 'இதே கேள்வியைத்தான் என் மகளும் கேட்கிறார். உங்களுக்கே தெரியும்... சினியுக் கம்பெனியில் கடன் வாங்கிய விஷயமே கனிக்கு தெரியாது. அதனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் ஆலோசனை நடத்தியபோதுதான், கனிமொழிக்கு விஷயம் தெரியும். உங்க இரண்டு பேருடைய சூழ்நிலையும் ஒன்றுதான்!’ என உருகினாராம் கருணாநிதி. சிறையில் கனிமொழியுடன் மட்டுமே சரத் பேசுகிறாராம். ஆ.ராசாவின் முகத்தை அவர் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை. கனிமொழிக்குத் தேவையான உடைகள்கூட சரத்குமாரின் சகோதரி வீட்டில் இருந்துதான் வருகிறது. கனிமொழியின் சமாதானத்துக்கு மட்டுமே சரத் கட்டுப்படுகிறாராம். சரத் உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் நிலையை கருணாநிதியிடம் சொன்ன கனிமொழி, 'அவரை சமாதானப்படுத்துவது சிரமம்’ எனச் சொன்னாராம்.''

''பரமேஸ்வரி விஷயம்?''

''ஆ.ராசாவின் மனைவியான பரமேஸ்வரி அதிகப் பயத்தில் இருக்கிறார். 'தன்னுடைய கணவர் சிக்க​வைக்கப்​பட்டுள்ளார்’ என்ற சந்தேகம் பலமாக இருக்கிறது. அதைத்தான் பேசி சமாதானப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம் கனிமொழி!'' என்ற கழுகார், அருகில் இருந்த ஐஸ் வாட்டரில் ஒரு 'சிப்’ பருகிவிட்டுத் தொடர்ந்தார்.

''கேபிள் டி.வி-க்களை மொத்தமாக அரசாங்கமே கையில் எடுக்கப்போகிறது என்று நான் உமக்குச் சொல்லி இருந்தேன். 'குறைந்தபட்சம் 30 ரூபாய்வரைக்கும் கொடுத்தால்கூட எனக்கு சந்தோஷம்தான்’ என்று ஜெயலலிதா சொன்னதையும் நான் உமக்கு சொன்னேன். அதன் தொடர்ச்சியாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை கோட்டைக்கு அழைத்துப் பேசினார் முதல்வர். இதில் கோவை யுவராஜ் தலைமையிலான சங்கத்தினரும் கரூர் ஆறுமுகம் தலைமையிலான சங்கத்தினரும் கலந்துகொண்டனர். ஆபரேட்டர்கள் தரப்பில், 'சென்னையில் இருப்பதுபோலவே எல்லா ஊர்களிலும் தமிழ் சேனல்கள் அனைத்தும் இலவசமாகத் தர ஏற்பாடு செய்யவேண்டும். கடந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கேபிள் தொழிலைவிட்டே போகும் அளவுக்குத் தொல்லைகள் தரப்பட்டன. ஆளும் கட்சியால் தொழில் பாதுகாப்பு இல்லாமல் போனது. எங்களுக்குத் தொழில் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அரசு கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.


எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஜெ., 'அரசின் தொழில்நுட்பப் பிரிவினருடன் கலந்து பேசி, கேபிள் தொழிலுக்கு நல்லது செய்கிறேன்’ என்று உறுதி சொன்னாராம். அதற்கு முந்தைய நாள், தலைமைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், சட்டத் துறை செயலாளர் மூவரும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இரண்டு மணி நேரம் பேசினர். விரைவில் இதற்கான தனிச் சட்டம் வரப் போகிறது. ஆனால், இதில் ஒரு கூத்து நடந்துள்ளதாக இன்னொரு தரப்பினர்  சொல்கிறார்கள்.''

''என்னவாம்?''

''தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநிலத் தலைவரான சகிலன்தான் இதுவரை இந்தப் பிரச்னையை வைத்துப் புயல் கிளப்பி வந்தவராம். எஸ்.சி.வி-க்கு எதிரானவர்களை ஒன்று திரட்டுவார் இவர். ஜெயலலிதா புதிய குரூப் ஒன்றை சந்தித்து இருப்பதைப் பார்த்து, சகிலன் தரப்புக்கு அதிர்ச்சி. 'முதல்வரை சந்திக்கும் தகவல் எங்களுக்குச் சொல்லப்படவே இல்லை. அவர் சந்தித்தது எல்லாமே, புதிதாக உருவான  சங்கங்கள். 'அரசு கேபிளைக் கொண்டு வரக் கூடாது’ என்பதற்காக செயல்படும் சிலர் இது போன்ற சங்கங்களைத் திடீரெனத் தொடங்கி, பின்னால் இருந்து இயக்குகிறார்கள். நாங்கள் முதல்வரை சந்தித்தால் இந்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால்தான் எங்களைத் தவிர்த்துவிட்டனர். கூடிய சீக்கிரமே முதல்வரை சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்வோம்’ என்று சொல்லி வருகிறாராம்.''

''கேபிள் ஒயர்களைப் போலவே இவர்களும் செம சிக்கலில் இருப்பார்கள்போல!'' என்றோம். சிரிப்புச் சத்தம் வானத்தில் கேட்டது!

நன்றி : ஜூனியர்விகடன்-ஜூன்-29, 2011

13 comments:

pichaikaaran said...

நல்ல கட்டுரை..உங்கள் கருத்துக்களை இன்னும் அதிகம் சேர்த்து இருக்கலாம்

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

நல்ல கட்டுரை. உங்கள் கருத்துக்களை இன்னும் அதிகம் சேர்த்து இருக்கலாம்.]]]

என் கருத்தை எழுதலையே பார்வை..! எவ்வளவுதான் எழுதறது.. இது வெறும் சந்திப்பு பற்றியதுதானே..? போதும். விடுங்க..!

ஸ்ரீராம். said...

ஜூவியில் நானும் படித்தேன். ஆனால் இது மாதிரி எல்லாம் படிக்கும்போது எனக்கு எப்பவுமே ஒரு சந்தேகம் வரும்.'எப்படி ஏதோ பக்கத்திலேயே இருந்து பார்த்தது போலச் சொல்லுகிறார்கள்' என்று...!

Unknown said...

ஜூனியர் விகடன், தின மலர் போன்ற சில பத்திரிக்கைகள் சொல்வதெல்லாம் வர வர நம்ப முடிவதில்லை. அவர்களின் கருத்துக்களை நம்மிடம் திணிக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. கருணாநிதி சிறையில் கதறிக் கதறி அழுதார் என்பதெல்லாம் டூ மச்சாக தெரிகிறது. இவர்களின் கருத்துகளுக்கேற்ப தான் மக்களும் தங்கள் கருத்தை அமைத்துக் கொள்கிறார்களோ?

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
ஜூவியில் நானும் படித்தேன். ஆனால் இது மாதிரி எல்லாம் படிக்கும்போது எனக்கு எப்பவுமே ஒரு சந்தேகம் வரும். 'எப்படி ஏதோ பக்கத்திலேயே இருந்து பார்த்தது போலச் சொல்லுகிறார்கள்' என்று...!]]]

சில செய்திகளை அவர்களே கொடுப்பார்கள்.. பல செய்திகளை அருகில் இருந்தவர்களிடம் துழாவியெடுப்பார்கள்..! பத்திரிகை வரலாற்றில் இதெல்லாம் சகஜம்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[கிணற்றுத் தவளை said...

ஜூனியர் விகடன், தினமலர் போன்ற சில பத்திரிக்கைகள் சொல்வதெல்லாம் வர வர நம்ப முடிவதில்லை. அவர்களின் கருத்துக்களை நம்மிடம் திணிக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. கருணாநிதி சிறையில் கதறிக் கதறி அழுதார் என்பதெல்லாம் டூ மச்சாக தெரிகிறது. இவர்களின் கருத்துகளுக்கேற்பதான் மக்களும் தங்கள் கருத்தை அமைத்துக் கொள்கிறார்களோ?]]]

அழுதார் என்பதும் மக்களுக்குத் தேவையான விஷயம்தானே..! திணிக்கவில்லை.. சொல்கிறார்கள்..! கொஞ்சம் தப்பிக்க நினைக்கிறார்கள். அவ்வளவுதான்..!

தமிழ் வசந்தன் said...

ஜீனியர் விகடன், தினமலர் போன்ற இதழ்கள் திரும்பத் திரும்ப இது போன்ற கட்டுரைகளை வெளியிடுவது, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததன் மூலம் பார்ப்பனியத்தை நிலைநிறுத்திவிட்டதாகவும், தங்கள் வெற்றியால் அதை எதிரியின் மீதான அற்பத்தனமான களியாட்டத்தை வெளிப்படுத்துவதைப் போலவும் உள்ளது.

தேர்தல் முடிந்து இத்தனை நாட்களுக்குப் பின்னும் இதுபோன்ற ஜோடனைக்கட்டுரைகளை பிரசுரிப்பது எதிரியைப் பார்த்து கொக்கரிப்பதாக இருக்கிறது. இதற்குப்பிறகு ஜீ.வி., மற்றும் பார்ப்பனிய இதழ்கள் அடக்கிவாசிக்கவேண்டும். இப்படியெல்லாம் இழித்தனமாக எழுதுவது நடுநிலையாக செய்தி வெளியிடுவதை இவ்வதழ்கள் மறந்துபோய்விட்டதையே காட்டுகிறது.

இதுபோன்ற பில்ட்-அப் கட்டுரைகளைப் படிக்கும் போது, தேர்தலின் போதும் இவர்கள் இப்படி வெளியிட்டதும் வெறும் பில்ட்-அப் தான் என்பதையும், தேர்தல் வேகத்தில் இவைகள் ஒன்றிணைந்து மக்கள் மனத்தில் சலனத்தை ஏற்படுத்தியிருந்துவிட்டிருப்பதையும், இவைகளின் வஞ்சகத்தனமான கட்டுரைகள் மக்கள் மனத்தை மாற்றி தவறாக ஓட்டுப்போட்ட வைத்துவிட்டதையும் காட்டிவிட்டது.

ஏழை, எளியோருக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும், ஏன் - பல அதிமுக காரர்களுக்கும் கூட பயனளித்த கலைஞராட்சியின் தொலைநோக்குத் திட்டங்கள் பல இல்லாமலேயே போய்விட்டதே என்கிற வருத்தத்தை ஏற்படுத்துவதோடில்லாமல்,

இத்தனை நலத்திட்டங்களைத் தந்த கலைஞரை இவ்வளவு மோசமாக சித்தரித்து எழுதி தங்களின் கேவலமான புத்தியைக் காட்டிவிட்டிருப்பதை உணரமுடிகிறது.

என்ன இருந்தாலும், நல்லாட்சி ஒன்றை இழந்துவிட்டோமோ என எண்ண வேண்டியிருக்கிறது. என்ன தான் அதிமுக மெஜாரிட்டியாக ஆட்சியைப் பிடித்தாலும், கடந்த ஆட்சியை இழந்துவிட்டதை வருத்தத்துடன் உணர்கிற நிலையை இதற்குமுன் ஆட்சிபீடத்தை இழந்த எந்த ஆட்சியும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

Nivisugis said...

ஒரு மனிதனின் குடும்பத்தை எந்த அளவிற்கு மட்டப் படுத்த முடியுமோ அந்த அளவிற்கு செல்லும் பூணூல் புத்தி உள்ள பத்திரிக்கைகள் எல்லாம் சேர்ந்து மீண்டும் மீண்டும் காயங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன . பத்திரிகை பாதி பொய் என்பதை ஜனங்கள் உணரும் காலம் வரும். அப்போது பார்பனிய ஜாலங்கள் பலிக்காது .

Anonymous said...

அண்ணே ..,இந்த நாசம் புடிச்சிவன் அழுத அழுகைகெல்லாம் இப்ப தானே .,பதில் தெரிஞ்சுது ..,மிட்னாபூர்ல ஒரு குழந்தை பாலுக்காக ஏங்கி அழுத அழுவை ..,

உண்மைத்தமிழன் said...

[[[பனங்காட்டு நரி said...

அண்ணே.. இந்த நாசம் புடிச்சிவன் அழுத அழுகைகெல்லாம் இப்பதானே பதில் தெரிஞ்சுது. மிட்னாபூர்ல ஒரு குழந்தை பாலுக்காக ஏங்கி அழுத அழுவை..]]]

புரியலையே நரி ஸார்..! கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்..!

உண்மைத்தமிழன் said...

தமிழ்வசந்தன்..

கருணாநிதி தோற்கடிக்கப்பட்டது பார்ப்பனீயத்தால் அல்ல. ஜனநாயகத்தினால்..!

மக்களுக்கு அவரது ஆட்சியின் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்புதான் அவரது தோல்வியின் அடையாளம்..!

தோல்வியடைந்ததற்கு என்னென்ன காரணங்கள் என்று பத்திரிகைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்..!

எல்லாவற்றுக்கும் ஜாதி சாயம் பூசி, கருணாநிதியும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே தமிழகத்தில் வாழத் தகுதியுடைவர்கள் என்று சொல்லாமல் சொல்லுவது அறிவீனம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nivisugis said...

ஒரு மனிதனின் குடும்பத்தை எந்த அளவிற்கு மட்டப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு செல்லும் பூணூல் புத்தி உள்ள பத்திரிக்கைகள் எல்லாம் சேர்ந்து மீண்டும் மீண்டும் காயங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. பத்திரிகை பாதி பொய் என்பதை ஜனங்கள் உணரும் காலம் வரும். அப்போது பார்பனிய ஜாலங்கள் பலிக்காது.]]]

ஒரு மனிதன் அல்ல.. கொள்ளைக்காரன்.. கொடுமைக்காரன்.. அவரது குடும்பமே அப்படித்தான் இருக்கிறது என்கிறபோது அவர்களைப் பற்றி எழுதத்தான் வேண்டும். தண்டிக்கத்தான் வேண்டும்..!

இதுவும் பார்ப்பனீய வேலை என்பது உங்களுடைய சமாளிப்பு. பழியை யார் மீதாவது தூக்கிப் போட்டுவிட்டு நீங்கள் தப்பிக்க நினைக்கிறீர்கள்..!

Ganpat said...

தமிழ்வசந்தன்,Nivisugis,
என்னங்க இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்க?

ஒருவேளை தமிழ்நாட்டில் இப்போ இருக்கும் 3 சதவீத பார்பனர்களும் இல்லாமலிருந்திருந்தால் உங்க தலைவர் ஊழல செய்யாமல் காமராஜர் போல ஆட்சி செய்திருப்பாரோ?இன்னும் இங்கே 3 சதவீத பார்பனர்கள் இருக்கிறார்களே என்ற மனக்கவலையில்தான் அவர் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டி
தன் குடும்பத்தை நன்கு கவனித்துக்கொண்டாரோ?
இன்னும் இங்கே 3 சதவீத பார்பனர்கள் இருக்கிறார்களே என்ற மனக்கவலையில்தான் ஆண்டிமுத்து ராசாவை மறந்து,கனிமொழியை காப்பற்ற முயல்கிறாரோ?
ஜாக்கிரதை சார்! எவனாவது நாளைக்கு ஒங்க பர்சை திருடிவிட்டு,பிடிபட்டவுடன், இதற்கு காரணம் பார்ப்பாந்தான்ணே என்று சொன்னால்,அப்பாவித்தனமா அவனை மன்னிச்சு விட்டுடாதீங்க!(இப்போ ஒங்க தலைவர
விட்டாமாதிரி)நல்லா நாலு சாத்து சாத்தி போலீசில் ஒப்படையுங்க!
என்ன வெளங்கிச்சா?
அப்போரம் இதுக்கு பதில் எழ்தறேன்னு நினைச்சு ஜெயா ஊழல் பண்ணலையா?சோனியா ஊழல் பண்ணலையா?மாயாவதி ஊழல் பண்ணலையா?பவார் ஊழல் பண்ணலையா?லல்லு ஊழல் பண்ணலையா?எடுயூரப்பா ஊழல் பண்ணலையா? இப்படி அடுக்கிகிட்டே போகாதீங்க!
ஒன்னு... மேலே சொன்ன அனைவருக்கும் ஒங்க தலைவர் தாத்தா. ரெண்டு...
செய்யற தப்பைஎல்லாம் செஞ்சிட்டு மாட்டிக்கிட்டா ஒரு ஜாதிய காரணம் சொல்லறது ஓலகத்திலேயே ஒங்க தலைவர் தானுங்க!