ரஜினியை அவமானப்படுத்தியது யார்? கேபிள் சங்கரா..? ரசிகர்களா..?

18-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தியேட்டர், தியேட்டராக படையெடுத்துச் சென்று புதிய, புதிய திரைப்படங்களைப் பார்த்தவுடன் சுடச்சுட விமர்சனம் எழுதி மிகக் குறுகியக் காலத்தில் வலைப்பதிவுகளில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துவிட்ட அன்புச் சகோதரர், வருங்கால திரைப்பட இயக்குநர் திருவாளர் கேபிள் சங்கர் அவர்களுக்கு சமீபத்தில் இடம் பெயர்ந்த குரு பெயர்ச்சி அமோகமாக தனது வேலையைக் காட்டியிருக்கிறது.

ஏதோ ஒரு இணைய தளமாம்.. யாரோ சில ரசிகர்களாம்.. எதையோ சொன்னார்களாம் என்ற அளவில் நமத்துப் போன உப்புமாவாக இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி அதில் தானே சொந்தமாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி மிக அழகாக ஒரு பதிவைப் போட்டு தனக்குத் தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளார்.

பிரச்சினை என்ன..?

"ரஜினி ‘நான் கடவுள்’ படத்தைப் பார்த்துவிட்டு பாலாவையும், ஆர்யாவையும் பாராட்டியுள்ளார். அவர் பாலாவுக்கு எழுதிய கடிதத்தை வைத்து ‘நான் கடவுள்’ படத்தை விளம்பரப்படுத்துகிறார்கள். இதன் மூலம் இன்னும் அதிகமான வசூலை அந்தத் திரைப்படம் அள்ளுகிறது..”

இதுதான் அந்த இணையச் செய்தி.

"இன்று பட்டப்பகலில் பட்டுக்கோட்டை பஜாரில் ஒரு படுகொலை நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நகரில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது..” என்று தொலைக்காட்சிகளில் வாசிக்கப்படும் செய்திக்கும், மேற்குறிப்பிட்ட இணையச் செய்திக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.

வழக்கமான செய்திகளைப் போலத்தான் இதுவும். ஆனால் இந்தச் செய்தியைப் படித்ததும் திருவாளர் கேபிள் அவர்களுக்கு விளக்கெண்ணெய் குடித்தது போலாகிவிட்டதாம். ஆற, அமர, தீர யோசிக்காமல், விளங்கிக் கொள்ளாமல், யாரிடமும் விசாரிக்கவும் இல்லாமல் அவசரத்தனமாக ஒரு பதிவை இட்டுள்ளார்.

"பாலா என்கிற பெரிய இயக்குநரை மட்டம் தட்டும் முயற்சி இது. அவருடைய பெருமையைச் சீர்குலைக்கும் செய்தி இது..” என்று சீறிப் பாய்கிறார் கேபிள்..

முதலில் ஒரு செய்தியை செய்தியாய் பார்க்க வேண்டும். இது அரசியல் செய்தி அல்ல; அதன் பின்னணியைத் தோண்டித் துருவுவதற்கு. இணையத்தில் பலரும் பந்திக்கு முந்தி என்றுதான் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். காரணம் கிடைக்கப் போகும் கவன ஈர்ப்பு, அதன் மூலம் வரவிருக்கும் பார்வையாளர்கள், கடைசியில் வரவிருக்கும் விளம்பரப் பணம். இதுதான் மூல காரணம். இதற்காக அவர்கள் எழுதியது, அல்லது எழுதுகின்ற அனைத்துமே உண்மை என்றாகிவிடாது.

மிஸஸ் ஒபாமா ஒரு பொது நிகழ்ச்சியில் தனது அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்ததைப் பார்த்து ஒரு இணைய தளம் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தியை எழுதியது. அவர் வாந்தியெடுத்ததை பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல அனைத்து இந்திய இணையத் தளங்களும் இதனை மறு வாந்தியெடுத்தன. யாராவது இது உண்மையாக இருக்குமா? அல்லது பொய்யான செய்தியா..? என்று யோசித்திருப்பார்களா..? அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு செய்தி. அவ்வளவுதான். அது உண்மையாகவும் இருக்கலாம்.. அல்லது பொய்யாகவும் இருக்கலாம். உண்மை இல்லை என்று செய்தி வந்தால் மறுபடியும் ஒரு செய்தியைப் போட்டு அது பொய் என்று சொல்லிவிடலாம். மேட்டர் குளோஸ். இதுதான் பத்திரிகா தர்மம்.

மறுபடியும் இங்கே வருவோம். இந்த இணையத் தளத்தின் செய்தியிலும், ரஜினி ரசிகர்கள் சிலர் தெரிவி்த்ததாக வெளிவந்த செய்தியினாலும் பாலாவின் பெருமை எங்கே குறைந்துவிடப் போகிறது..? இதுவொன்றும் ரஜினி சொல்லவில்லையே.. “தன்னால்தான்.. தன்னுடைய கடிதத்தால்தான் ‘நான் கடவுள்’ வசூல் அள்ளுகிறது” என்று.. பின்பு எப்படி அவர் இதற்கு முழுப் பொறுப்பாக முடியும்..?

ரசிகன் ஆயிரம் சொல்லுவான்.. அப்படிச் சொல்பவன்தான் ரசிகன். அவன் சொல்வதையெல்லாம் அவன் தலைவன் சொன்னதாகவே எடுத்துக் கொள்வது முட்டாள்தனம். அதிலும் நமது கேபிள் ஸார் செய்திருப்பது மகா முட்டாள்தனம்.

முதலில் அவருடைய பதிவின் நோக்கமே.. ரஜினி எழுதிய கடிதத்தால் ‘நான் கடவுள்’ படத்தின் வசூல் கூடவில்லை. இப்படிச் சொல்வது இயக்குநர் பாலாவுக்கு அசிங்கம் என்பதைத்தான்.. இதை அவர் ரஜினி ரசிகர்களை மையமாக வைத்து, அந்த இணையதளத்தை மட்டுமே குற்றம்சாட்டி சொல்லியிருக்க வேண்டும்.

நான் கடைசி வரையிலும் 7, 8 முறை படித்துவிட்டேன். அந்த இணையதளத்தின் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. எந்த ஊர் ரசிகர்கள் தெரிவித்தார்கள் என்பதையும் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள் என்று புகார் சொல்லியுள்ளார்.

//சமீபத்தில் ரஜினி பாலாவின் ‘நான் கடவுள்’ படம் பார்த்துவிட்டு, ஆகா ஓகோ என்று பாராட்டியிருக்கிறார். அதை பார்த்து அவரது ஆதரவாளர்கள், ரஜினியின் பாராட்டுக்கு பிறகு பாலாவின் படம் கோடி, கோடியாய் வசூலிக்கிறது என்று இணையதளம் மூலம் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இதைவிட கீழ்தரமாய் இந்திய இயக்குனர்களில் சிறந்த ஒருவரான பாலாவை கேவலபடுத்த முடியாது.//

இதில் என்ன கீழ்த்தரம் இருக்கிறது..?

ரஜினி ரசிகர்கள் வேறு என்ன சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறார் நம்ம கேபிளு..?

ரசிகர்கள் என்பவர்களே தலைவனை ரசிப்பவர்கள்தான். அவர்களுக்கு இது ஒரு செய்தி. அந்தச் செய்திக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது சகஜம்தானே.. இதில் என்ன தவறு இருக்க முடியும்..?

ரஜினி கருத்து சொல்லியிருக்கிறார் என்றால் அதனைப் படிப்பவர்களில் 5-ல் ஒரு பொதுஜனம் படம் பார்க்க வருவார்.. அல்லது அவருடைய ரசிகர்களில் 3-ல் ஒருவர் நிச்சயம் படம் பார்க்க வருவார் என்பது உறுதி. அதுதான் ரஜினியின் தாக்கம். இல்லாவிடில் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை. அவர் சூப்பர் ஸ்டாராக இல்லையென்றால் கேபிளுக்கு இந்தப் பதிவே தேவையிருந்திருக்காது.

படத்தைப் பார்த்துவிட்டு வெறுமனே போய்விட ரஜினி என்ன வெறும் ரசிகரா..? திரையுலகின் முதன்மையானவர். அவருக்குப் பிடித்திருக்கிறது. "நல்லா இருக்கு.. பாராட்டுக்கள்..” என்று சொல்லி கடிதம் கொடுத்திருக்கிறார். ஏன் கடிதம் கொடுத்தார்?

படம் பார்த்துவிட்டு அரங்கில் இருந்து வெளியில் வந்தவுடன் ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் நடித்தவர்களைப் போலவோ, ‘தசவாதாரம்’ படத்தின் கதாநாயகன் கமலைப் போலவோ அந்த இடத்தில் படத்தின் இயக்குநர் பாலோவோ, அகோரி ஆர்யாவோ இல்லை. தயாரிப்பாளர் மட்டுமே இருந்திருக்கிறார். அவரிடம் "படம் நல்லா இருக்கு. டைரக்டர்கிட்ட பெஸ்ட்டுன்னு சொன்னேன்னு சொல்லுங்க..” என்றவர் வீட்டுக்குப் போனவுடன் பாலாவுக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றை எழுதி தனது பி.ஆர்.ஓ. நிகில் முருகனிடம் கொடுத்தனுப்பியுள்ளார். இது அவர் படத்தில் வெகுவாக ஈர்க்கப்பட்டதால் செய்திருக்கிறார். இதில் இருப்பது அடிப்படை நாகரிகம்.. திரைப்படத் துறையின் வளர்ச்சியே இந்த ஒரு சுழற்சியான செயலில்தான் அடங்கியிருக்கிறது.

"அந்தக் கடிதத்தை வெளியிடுங்கள்..” என்று ரஜினியா சொன்னார்? தயாரிப்பாளர்தானே இந்த வேலையைச் செய்திருக்கிறார்.

பாலாவும், ஆர்யாவும் ரஜினியை சந்திக்கப் போகும்போது புகைப்படக்காரரை அழைத்து வந்து நிறுத்தியது ரஜினிதான் என்று கேபிளார் சொல்வார் போலிருக்கிறது. பாவம் அவருக்கு வேற வேலையே இல்ல பாருங்க..!

தயாரிப்பாளரே தனது படத்தின் விளம்பரத்திற்கு ரஜினியின் பாராட்டுக் கடிதம் தேவை என்று நினைத்து விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும்போது, ரஜினியையோ, ரஜினி ரசிகர்களையோ குற்றம் சொல்லி எழுதுவும், பேசுவும் மகா முட்டாள்தனம்..

உண்மையாகவே கேபிளார் பாலாவின் தீவிர ரசிகராக இருந்தால், இந்நேரம் பாலாவுக்கு ஒரு கடிதம் எழுதியோ அல்லது போன் செய்தோ இதனைச் சொல்லி அந்த விளம்பரத்தை தடை செய்யச் சொல்லலாம். சொல்லிவிட்டால்தான் பாலா செய்வாரா..? ரஜினியைச் சந்திக்க ஆர்வத்துடன் போயிருப்பவரே பாலாதான்.

ரஜினியை படம் பார்க்க வைத்தது தயாரிப்பாளர். அழைப்பு வரும் என்று சொல்லிவைத்து, பின்பு காக்க வைத்து, கடைசியாக சந்திப்புக்கு நேரம் வாங்கி அனுப்பி வைத்தது தயாரிப்பாளர். ரஜினி விளம்பரம் எனக்குத் தேவையில்லை என்று பாலா நினைத்திருந்தால் எதற்காக போனாராம்? புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாராம்..? பதில் சொல்வாரா கேபிளார்?

இந்த விளம்பரமும் பாலாவின் பார்வைக்குப் போய் அந்தக் கடிதத்தை எந்த positition-ல் விளம்பரத்தில் வைக்க வேண்டும் என்பதையும் அவரேதான் டிஸைன் செய்து கிராபிக்ஸ்க்கு அனுப்பியிருக்கிறார். கேபிளாருக்கு சந்தேகம் இருந்தால் பாலாவிடமே கேட்டுக் கொள்ளலாம்.

இப்போது கேவலம் பாலாவுக்கா..? அல்லது ரஜினிக்கா..? அல்லது பரபரப்புக்கு பதிவெழுதிய கேபிளாருக்கா..?

//இதைவிட கீழ்தரமாய் இந்திய இயக்குனர்களில் சிறந்த ஒருவரான பாலாவை கேவலபடுத்த முடியாது.//

ஏதோ பாலாவுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததுபோல் கேபிளார் மேற்கண்ட வரிகளில் சொல்லியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த வரிகளே தவறு என்கின்றபோது கேபிளார் எழுதியிருக்கும் அந்தப் பதிவே அர்த்தமற்றது என்றாகிறது.

அவருடைய விளம்பரத்தினால் படத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணி்ககை கூடும். அதனால் வசூலும் கூடு்ம் என்பதை எதிர்பார்த்துதான் விளம்பரமே வெளியிட்டுள்ளார்கள். அந்த வசூல் ஆயிரத்தில் இருந்தால் என்ன..? லட்சத்தில் இருந்தால் என்ன? கோடியில் இருந்தால் என்ன? அர்த்தம் ஒன்றுதானே..?

ஏதோ இயக்குனர் பாலாவுக்குத் தான்தான் அத்தாரிட்டி என்பதைப் போல் கேபிளார் எழுதியிருப்பது நகைப்புக்குரியது.

இதைவிட நகைச்சுவை திருவாளர் கேபிளார் இந்தப் பிரச்சினையை அணுகியிருக்கும் விதம்.

கடிதம் கொடுத்ததையும், அதனால் மட்டுமே ‘நான் கடவுள்’ திரைப்படம் ஓடாது என்பதை மட்டுமே சொல்ல வேண்டியவர், ரஜினியின் கடந்த கால கலை, அரசியல் வாழ்க்கையையே தேவையில்லாமல் இழுத்துள்ளார். இது முட்டாள்தனமானது.

ரஜினிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் நடந்த பிரச்சினை இப்போது எதற்கு? அவருடைய அரசியல் வாய்ஸ்களை வைத்துத்தானா தயாரிப்பாளர் அவரை படம் பார்க்க அழைத்தார்..? ரஜினியின் அரசியல் செல்வாக்கினால்தான் பாலா அவரை பார்க்க விழுந்தடித்து ஓடினாரா..? என்னே கண்டுபிடிப்பு..?

கேபிளு.. எங்கிட்டோ உமக்கு சுளுக்கிருச்சுன்னு நினைக்குறேன்..

சரி.. இவ்ளோ தூரம் நீர் எழுதிட்டதால அது பத்தின எனது கருத்தையும் சொல்லிக்குறேன்..

ரஜினி ஜெயலலிதா பத்தி கமெண்ட் அடிச்சப்போ தமிழ்நாடு இருந்த நிலைமை என்ன..?

எதிரணி அரசியல்வாதிகளே ஜெயலலிதாவை எதிர்த்து கோஷம் போடுவதற்கு தயங்கிக் கொண்டிருந்த காலம்.. எங்காவது அரசியல் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் மட்டுமே முழங்கிக் கொண்டிருந்தார்கள்.

எந்த அரசியல்வாதியைப் பிடித்தாலும் போலீஸ் ஸ்டேஷனில் இரவு முழுவதும் ஜட்டியோடு நிற்க வைத்து அவமானப்படுத்தி மகிழ்ந்த பாஸிஸ ஆட்சியாக இருந்த காலம் அது.. மத்தியில் நரசிம்மராவ் என்றொரு வாய் பேச முடிந்த பொம்மை ஆட்சியில் இருக்கிறேன் என்று சொல்லி கையையும், காலையும் ஆட்டிக் கொண்டிருந்த காலம்..

தமிழகத்தில் உண்மையான முதலமைச்சர் யார் என்பதே தெரியாத அளவுக்கு ஒரு கொடூரமான காலகட்டம்.. அரசியல்வாதிகளைத் தவிர வேறு யார் வாய்ஸ் கொடுப்பது..? யாராவது முன் வந்திருக்க வேண்டுமே..?

ஹிந்து ராமும், நடிகை ரேவதியும், எழுத்தாளர் சிவசங்கரியும் இணைந்து ஹார்மோனி என்றொரு அமைப்பை உருவாக்கினார்கள்.. கூட்டம் நடத்தினார்கள். கமலஹாசன் வந்திருந்தார். திடீரென்று அ.தி.மு.க.வின் மகளிரணியைச் சேர்ந்த சில பெண்கள் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு திடீர் போராட்டம் நடத்தினார்கள். “எங்க அம்மாவைப் பத்தி தப்பா பேசாதே..” என்று கோஷம் போட்டார்கள். “புரட்சித் தலைவி வாழ்க..” என்றார்கள். கமல்ஹாசன் அமைதியாக நின்றார். அரங்கத்தின் உள்ளேயிருந்த போலீஸார் இதைப் பார்த்த உடனேயே சப்தமில்லாமல் வெளியேறினார்கள்.

யார் சொல்லியும் கேட்கவில்லை. ஹிந்து ராமும், கமல்ஹாசனும் பலவாறு அந்தப் பெண்களிடம் பேசி, போராட்டம் நடத்தித்தான் ஒரு வழியாக மேடையிலிருந்து கீழே இறக்கினார்கள். நினைவிருக்கிறதா..? அப்போது நான் நினைத்தது கமல்ஹாசன்தான் முதலில் இந்த அட்டூழிய ஆட்சிக்கு குரல் கொடுக்கப் போகிறார் என்று.. ஆனால் வாயே திறக்கவில்லை அவர்.. கேட்டால், “அரசியல் தெரியாது” என்பார் அவர். (நான் தீவிர கமல் ரசிகன்.. ரஜினி ரசிகன் அல்ல.. சந்தேகம் வேண்டாம்.) அப்போதும் அதனைத்தான் சொன்னார். ‘தேவி’ பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது, “இவங்களுக்கு அவங்க பரவாயில்லை.. அவங்களுக்கு இவங்க பரவாயில்லை.. என்றுதான் இப்போதைய அரசியல் பற்றிச் சொல்லத் தோன்றுகிறது..” என்றார் கமல். இப்படி மொட்டையாகச் சொல்லிவிட்டால் போதுமா..?

ஆனால் முதல் குரலாக, கலகக் குரலாக ஒலித்தது ரஜினியின் குரல்தான். இப்போதுதான்.. இந்த ஒரே காரணத்திற்காகத்தான் எனக்கு ரஜினியைப் பிடித்துப் போனது.(முன்பு பிடிக்காமல் இருந்ததற்கு ஒரே காரணம், அவருடைய சிகரெட் பிடிக்கும் பழக்கம்.) அவர் குரல் கொடுத்த பின்புதான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு உத்வேகம் பிறந்து அம்மாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கினார்கள். இது அரசியல் வரலாற்று உண்மை.

அந்த வகையில் தமிழகம் என்றென்றைக்கும் ரஜினிக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது. அந்தச் சூழலில் அவர் மட்டும் ஒற்றுமையை கிளப்பியிருக்காவிட்டால் தமிழகம் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ரஜினியின் சினிமா சாதனையைவிடவும், மிகப் பெரிய சாதனை இதுதான்..

“மன்னன்” திரைப்படத்தில் விஜயசாந்தியை திருத்துவதைப் போல் ஜெயலலிதாவுக்கு ஒரு பாடத்தை உணர்த்தி, அம்மையாருக்கு இன்றளவுக்காச்சும் மக்கள் மீது கொஞ்சுண்டு பயம் வந்தது இதனால்தான்.. ரஜினியினால்தான்.. இதனை உரக்கச் சொல்லுவேன்..

அப்போதுகூட அவர் நாட்டு நலனுக்காகத்தான் அதனைச் சொன்னாரே தவிர, ஏதோ தான் அடுத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும்.. தனது ரசிகர் மன்றத்தினரை வைத்து தனக்கு நாலு சீட் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தல்ல.. இது நிச்சயமாக தன்னலமில்லாத நற்செயல்.

இதுதான் அவருடைய குணம். அந்த நேரத்தில் என்ன நினைப்பாரோ, என்ன நினைத்தாரோ அதைச் சொல்லிவிடுவது. அது பலருக்கும் குழப்பமாகவும், குழப்பவாதியாகவும் காட்சியளிக்கிறது என்றால் தயவு செய்து நாம் கண்ணாடியில் நமது முகத்தை ஒரு முறை பார்த்துக் கொள்வது நலம். சந்தர்ப்பச் சூழலுக்காக நமது கொள்கைகளை, நமது எதிர்பார்ப்புகளை எத்தனை முறை நாம் மாற்றிக் கொண்டதில்லை..? யோசிக்கணும்ப்பூ..!

முதல் நாள் “நாயகன்” திரைப்படத்தைப் பார்த்து அசந்துபோய் கமலிடம் உருகி உருகி பேசிவிட்டு, மறுநாள் ஏவிஎம் ப்ரிவியூ தியேட்டரில் “மனிதன்” படத்தை பார்த்துவிட்டு “ ”நேத்து கமல் ‘நாயகன்’ படம் போட்டுக் காட்டினாரு.. பென்ட்டாஸ்டிக்.. பிச்சிருக்காரு கமலு.. ‘மனிதனும்’ நல்லாத்தான் இருக்கு.. நாமளும் நல்லாத்தான் பண்ணிருக்கோம்.. வெரிகுட் ஸார்..” என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் சொல்லியிருக்கும் ரஜினியை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது. இதுதான் ரஜினி.

‘நாயகன்’ எங்கே..? ‘மனிதன்’ எங்கே..? ஆனால் ரஜினி ஏன் இரண்டையும் பேலன்ஸ் செய்கிறார்..? அவர் கலையுலகில் இருக்கிறார். இரண்டு படங்களுமே ஓட வேண்டும். அது அவரது தொழில். அந்தவிடயத்தில் அதனை அவர் கைவிட முடியாது.. அவருக்கென்று பொறுப்புக்களும், கடமைகளும் இருக்கின்றன. இதை எப்போதுமே ரஜினி மிகச் சரியாகவே கணித்து வருகிறார். அதை தவறு என்று எவருமே சொல்ல முடியாது..

“ஒரு காலத்துல துணைக்கு பொண்ணு இல்லாத ராத்திரியே கிடையாது.. அப்படியொரு மஜா வாழ்க்கை..” என்று வெளிப்படையாகத் தன்னைப் பற்றிச் சொ்ன்னவரும் அவர்தான்.. இது ஏதோ இமயமலைக்குப் போய் விரதமிருந்து, சாமியாரிடமிருந்து தீட்சை பெற்ற பின்பு வந்து சொன்ன வார்த்தைகள் அல்ல.. அவர் உச்சத்தில் இருந்தபோது 1980களில் ‘பொம்மை’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தது..

இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த மனிதரை எவ்வளவு வேண்டுமானாலும் புகழலாம்.. அரசு சார்பான பியூன் வேலைக்கு எனது கட்சிக்காரனுக்கு சிபாரிசு செய்திருக்கிறேன் என்று எந்த அரசியல்வியாதியாவது இன்றைக்கு ஒத்துக் கொள்வானா..? ஆனால் இவர் எவ்வளவு பெரிய வார்த்தைகளை எவ்வளவு அனாயசமாக ஒத்துக் கொண்டிருக்கிறார்? யோசிங்க ஸார்.. யோசிங்க..

மூப்பனார் அப்போதும் ரஜினியை முன்னிறுத்தி தனி அணி அமைத்து போட்டியிடலாம் என்று பீட்டர் அல்போன்ஸ், சோ மூலமாகச் சொல்லியும் தேர்தலில் போட்டியிடவும், கட்சி அமைக்கவும் ரஜினி மறுத்துவிட்டதும் ஒரு உண்மை. அப்போதுதான் மூப்பனார் ரஜினிக்கு அணியில் தலைமைப் பொறுப்பு கொடுக்கவும் முன் வந்தார். அதையும் மறுத்தார். அவருடைய ரசிகர்களுக்கு சீட் கொடுக்க முன் வந்ததையும் ரஜினி திட்டவட்டமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவருடைய ஒரே லட்சியம் ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும் என்பதுதானே ஒழிய, தான் எப்படியாவது அரசியலில் நுழைய வேண்டும்.. ஆட்சியில் அமர வேண்டும் என்பதல்ல. அவர் நினைத்திருந்தால் அப்போதே அவர் செய்து பார்த்திருக்கலாம்.. ஜெயித்திருக்கலாம்.. தான் கலையுலகில் மட்டுமே முதல்வனாக இருக்க விரும்பினார் அவர். இன்றைக்கும் அதைத்தான் அவர் விரும்புகிறார்.

அடுத்து வந்த தேர்தல்களிலும் ஜெயலலிதாவுக்கு எதிராக அறிக்கைவிட்டு எதிரணிக்கு ஆதரவு தந்ததும் தனது கொள்கையினால்தான்.. அப்போதெல்லாம் ஆதரவை பைசா செல்வில்லாமல் வாங்கிக் கொண்டவர்களுக்கு இனித்தது. அடுத்து அமைந்த ஆட்சிக் காலத்தில்கூட தனக்கென்று எதையும் வாங்கிக் கொள்ளாமல் கை நிறைய புத்தகங்களை மட்டுமே கோபாலபுரத்தில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தார். (எடுத்துக் கையில் திணித்தால் அவர் பாவம் என்ன செய்வார்..?)

நெய்வேலி போராட்ட நேரத்தில் பாரதிராஜா-விஜயகாந்த் ஈகோ யுத்தத்தில் பலிகடா ஆக்கப்பட்டார் ரஜினி. “முடிந்தால் சென்னையில் வையுங்கள்.. இல்லையென்றாலும் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் வந்து போராடுகிறேன்..” என்று முதல் நாள் மாலை நடிகர் சங்கத்திற்கு நேரில் வந்து சொல்லிவிட்டு வந்த பின்பும், ரஜினியிடம் சொல்லாமலேயே நெய்வேலியில் போராட்டம் என்பதை அறிவித்துவிட்டு, வருபவர்கள் வரலாம் என்று அறிவிப்பு விட்டதும், ரஜினிக்கு இதில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்பதைப் போல் செய்தியை பரப்பியதனாலும்தான் ரஜினிக்கு கோபம் வந்தது. அதுதான் தனிப் போராட்டமாக சென்னையில் வெடித்தது.

அனைவருக்கும் தன்மானம் என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும். உரசிப் பார்த்தால் அந்த நேரத்தில் யாராக இருந்தாலும் அதற்கு பலியாகத்தானே செய்வார்கள்.

“யாரும் சொல்லவே வேண்டாம்.. நானே படித்துக் கொள்கிறேன்..” என்று வேண்டாத விருந்தாளியைப் போல தளத்தின் உரிமையாளர் சொல்லியும் கேளாமல் ஜெயமோகனின் பதிவில் ‘நான் கடவுள்’ விமர்சனங்களை சிலர் தொகுத்து வைத்தபோது, அதில் கேபிளாராகிய உங்களுடைய பதிவு இல்லையென்றவுடன் ‘தன்மானச் சிங்கமாக’ கிளர்ந்தெழுந்து “இதோ என்னுடைய பதிவு” என்று சொல்லி அங்கே ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வந்தீர்களே.. கேபிளாரே..

உங்களுக்கே இப்படியென்றால் பிரதமரோ, ஜனாதிபதியோ எவர் வந்தாலும், எங்கே வந்தாலும் உடன் சென்றால் முதல் மரியாதையைப் பெறவிருக்கும் ஒரு மனிதருக்கு எவ்வளவு தன்மானம் இருக்கும்..? சிந்தித்துப் பாருங்கள்.. இதில் என்ன தப்பு இருக்கு..? அவர் மனதுக்குப் பட்டதைச் சொல்கிறார்.. செய்கிறார்..

தான் தலைமகனாக இருக்கின்ற கலையுலகத்திலே நடக்கின்ற விழா அது.. கலைஞருக்கு நூறு மேடைகள் கண்டாகிவிட்டது. ஜெயலலிதாவுக்கு விரல் விட்டு எண்ணக் கூடியதுதான்.. பிடிக்கவில்லைதான். ஆனால் என்ன செய்ய? மக்கள் முதலமைச்சராகத் தேர்வு செய்திருக்கிறார்களே.. தலை வணங்கித்தான் ஆக வேண்டும்.. “தைரியலட்சுமி” என்று பாராட்டிவிட்டு கூடவே “நான் அப்படித்தான். என் மனசுல பட்டதை சொல்லிருவேன்..” என்று சொன்னதில் என்ன தவறு..? மக்களே மன்னித்திருக்கிறார்கள் என்றால் நாமும் மன்னிப்போம் என்பது அவரது கருத்து..

‘பாபா’ பட ரிலீஸீன் போது பா.ம.கட்சிக்காரர்கள் படச்சுருள் பெட்டியையே தூக்கிக் கொண்டு போன போது, கால நேரத்தால் மாட்டிக் கொண்டு முழித்தார். பெட்டியைக் கைப்பற்ற வேண்டியவர்கள் காவல்துறையினர். அவர்களுக்கு தலைவியோ அவர் எதிர்த்த அம்மையார்.. யார் அப்போது அவரது உதவிக்கு வந்தார்கள்? அத்தனைக் கட்சிக்காரர்களும் சமயம் பார்த்து கைவிட்டார்களே.. நடிகர் சங்கமே இறங்கி வரவில்லையே.. அவருக்கு எப்படி இருந்திருக்கும்..?

அடையாறு இல்லத்தின் மாடியிலிருந்து விறுவிறுவென்று இறங்கி வந்து “இங்க இருந்தா கர்நாடகாக்காரன்கிறாங்க.. கர்நாடகாவுக்கு போனா நான் மகாராஷ்டிரன். அங்க போங்கிறாங்க.. நான் எங்கதான் போறது..?” என்று ரஜினி தொலைக்காட்சியில் பேசிய அந்த வினாடியில் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு தொண்டையில் விசுக்கென்ற சப்தம்தான் எழுந்தது. என்னவொரு வார்த்தை அது..?

எத்தனை கோடி ரூபாயை தமிழகத்தில் புரட்டிக் கொடுத்திருப்பார்..? எத்தனை கோடி ரூபாயை தமிழக அரசுக்கு வரியாகக் கிடைக்கச் செய்திருப்பார்..? எத்தனை லட்சம் முறை சினிமா பற்றி நம்மை நினைக்க வைத்திருப்பார்..? எத்தனை பேரை லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக ஆக்கியிருப்பார்..? எத்தனை தொழிலாளர்களை தனது படத்தின் மூலம் வாழ வைத்திருப்பார்..? எத்தனை லட்சம் ரசிகர்களுக்கு திரையரங்கில் ஒரு மூன்று மணி நேரங்கள் மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்திருப்பார்..? கேபிள் சங்கர் போன்ற எத்தனை பேருக்கு சினிமா மேல் ஆர்வத்தை உண்டு செய்து அவர்களுக்கு ஒரு பெருமைமிக்க வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்..?

யோசிச்சுப் பாரு கேபிளு.. எழுதறதும், திட்டறதும் ரொம்ப, ரொம்ப சுலபம்.. ஆனா நாம எப்படி வந்தோம்ன்றதையும் கொஞ்சம் மனசுல வைச்சுக்கணும்..

அவர் இன்றுவரையிலும் சொல்லி வருகிறார் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லையென்று.. ஆனாலும் அவர் பேசிய பன்ச் டயலாக்குகள் ‘குசேலனில்’ சொல்லியதுபோல அவருடைய திரைப்படங்கள் மீதான ஆர்வத்திற்கு மிகவும் பயன்பட்டன. அதனை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு பத்திரிகைகள்தான் அதனை அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டி தங்களுடைய விற்பனையை அதிகரித்துக் கொண்டன.

ரசிகர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.. இருக்கத்தான் செய்யும். ஆனால் தலைவர் பிடிக்கவில்லை என்கிறாரே.. அவருக்குள் இப்போதும் ஒரு தயக்கம் இருக்கிறது. இவ்வளவு நாள் நாம் பார்த்து, பழகி, பேசியிருக்கும் ஒருவரை சட்டென எதிர்த்துப் பேச வேண்டுமா என்று அவர் யோசிக்கலாம்.. அல்லது இப்போது அரசியலில் நுழைந்தாலும் தன்னால் ஜெயிக்க முடியுமா? தோல்வியடைந்தால் அது தனக்கு எந்தவிதத்தில் பாதிப்பைத் தரும் என்று அவர் நிச்சயம் யோசித்திருப்பார்.

சாதாரணமாக சட்டை வாங்கப் போனால்கூட பிராண்ட் நேம் என்ன..? உழைக்குமா? எத்தனை காலம் என்று நாம் யோசிப்பதில்லையா..? அது போலத்தான்.. அதே சமயம் தனது கலையுலக வாழ்க்கைக்கு அந்த ரசிகர்களும் தேவை.. அவர்களையும் பயன்படுத்தியாக வேண்டும்.. சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அந்த பன்ச் டயலாக்குகள் அவருடைய ரசிகர்களைவிட பொதுவானவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. இது ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கான வழி. அதைத்தான் அவர் செய்கிறார் என்று நினைக்கிறேன்.

‘குசேலன்’ படம் ஓடும் என்று அவர் சொன்னது அவருடைய நம்பிக்கை. கல்யாணப் பத்திரிகை கொடுக்கும்போது “என் கல்யாணம் நிச்சயமா நடக்கும்” என்றுதான் மாப்பிள்ளைக்காரன் சொல்லுவான்.. “சந்தேகம்..” என்றா அவன் சொல்லுவான்.. அந்த படம் தோல்வி என்றால் அதற்கு அவரா காரணம்..?

கேபிளு.. எனக்கு கோபம், கோபமா வருது.. நல்லாத் தெரிஞ்ச நீரே இப்படி எழுதினா எப்படி?

ஒரு படம் ஜெயிச்சவுடனே ஹீரோவாலதான் ஜெயிக்குதுன்னு சொல்றது.. தோத்துட்டா ஐயோ போச்சேன்றது.. உலகத்துல எந்த சினிமா ஹீரோ தொடர்ந்து ஹிட்டையே கொடுத்திருக்கான்.. கூட்டிக் கழிச்சுப் பார்த்து சொல்லுங்க.. அது அப்படித்தான் நடக்கும்.. ஒரு தோல்வி.. சில வெற்றிகள்.. சில தோல்விகள். ஒரு வெற்றி.. இது உலக நியதி.. தெய்வ நம்பிக்கை இருக்குல்ல.. பிறகென்ன இப்படியொரு முட்டாள்தனமான கேள்வி..?

கர்நாடகாவில் குசேலன் பட ரிலீஸிற்காக அறிக்கை விடும்படி அவரைக் கேட்டுக் கொண்டது தயாரிப்பாளர் தரப்புதான். அவர் முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும் என்பது உங்களது வாதமென்றால் தாங்கள் சினிமாத் துறையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்று எனது தாழ்மையான கருத்து. உண்மையாகவே அவர் உதைக்க வேண்டும் என்று சொன்னதுகூட அன்றைக்குப் பிரச்சினை செய்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத்தான்.. அதைத்தான் மறுபடியும் குறிப்பிட்டுச் சொன்னார்.. உடனேயே நமது பத்திரிகைகளுக்கு பரபரப்புக்கு செய்தி பற்றாக்குறை போலும். பொதுமக்கள் தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அந்த அறிக்கையை விட்டார். இதனை மன்னிப்பு என்கிற ரீதியில் சில பத்திரிகையாளர்கள்தான் கொண்டு சென்றார்கள். அதனால்தான் மறுபடியும் 'குசேலன்' நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தினார். இதில் உங்களுக்கு என்ன குழப்பம்..?

‘குசேலன்’ விநியாக விஷயம்.. எனக்கு படு பயங்கர கோபத்தைக் கிளறிருச்சு கேபிளு.. ஏதோ மூணாம் மனுஷன் எழுதினா பரவாயில்லை.. ரஜினியா இத்தனை கோடிக்கு வாங்கிக்குங்கன்னு சொன்னாரு.. பிளாங்க் செக்கை எழுதி வைச்சிட்டு வீடடுக்கும், ஆபீஸுக்குமா அலையச் சொன்னது ரஜினியா..? விற்பனை என்று சொல்லி அக்ரிமெண்ட் கையெழுத்தான பின்னாடிதான அவர் காதுல ஓதுனாங்க..

அப்பவே அவர் சொன்னாரே.. “இவ்ளோ வேண்டாம்.. திருப்பிக் கொடுத்திருங்க”ன்னு.. கொடுக்காதது யாரு..? இதுக்கெப்படி ரஜினி பொறுப்பாக முடியும்.. ‘பேராசை பெருநஷ்டம்’ங்கிறதுக்கு முழு முதற் உதாரணம் இத்திரைப்படத்தின் வியாபாரம்தான்.. படட்டும்.. பட்டாத்தானே புத்தி தெரியும்.. ஆனாலும் திருப்பிக் கொடுக்கணும்னு முறையோ, விதியோ இல்லாமலேயே ஒரு பங்குத் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறாரே.. வேறென்ன செய்யணும்..? இப்படி திருப்பிக் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்ட பின்பும், அதைக் கேளாமல்தானே ரஜினி திருப்பிக் கொடுத்திருக்கிறார். இப்போது மறைமுகமான கெட்டவர்கள் யாராம்..? ரஜினியா? தயாரிப்பாளர்கள் சங்கமா..?

பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை என்பதைப் போல் ஒரு திரைப்படத்தின் வெற்றியும், தோல்வியும் ஹீரோக்களின் கையில் இல்லை என்பது ரஜினிக்கே நன்கு தெரியும். அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னார். கேட்கலை.. கடைசியா அனுபவிச்சங்க பழியை அவர் மேலேயே தூக்கிப் போட்டாங்க.. வழக்கம்போல ‘எத்தனையோ தாங்கியாச்சு.. இதையும் தாங்கிருவோம்’னுட்டு அதையும் தாங்கிக்கிட்டாரு.. அவ்ளோதான்..

கலையுலகம் ஒரு குடும்பம் மாதிரி.. அதிலும் நட்புகளும், உறவுகளும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன. தனது நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யார் அழைத்தாலும் வஞ்சகமில்லாமல் படம் பார்க்க வந்து கொண்டுதான் இருக்கிறார். விளம்பரத்திற்கு கடிதம் கேட்டால் அவரும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். தன்னால் கூடுதலாக ஒரு சதவிகிதம் விளம்பரம் கூடும் என்பது அவருக்குத் தெரியும்.. கடிதம் வாங்கியவர்களுக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்.. உங்களுக்கும் தெரியும்.. பின்பு ஏன் இப்படியொரு குதர்க்கமான பேச்சு உங்களிடமிருந்து..?

படம் ஓட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் கடிதமே கொடுக்கிறார். அப்படி ஓடாமலும் இருக்கலாம் என்பதும் அவருக்குத் தெரியும்.. தெரிந்துதான் தருகிறார். ஏனெனில் அவர்கள் ஒரே குடும்பத்தினர். இதில் ஒன்றும் தவறில்லையே. உங்களுக்கு கண்ணுல காமாலை ஜாஸ்தியாயிருச்சு போலிருக்கு..

எப்படி..? எப்படி..?

‘எந்திரனைத்’ தயாரிங்கோன்னு கேட்டு கலாநிதிமாறனைத் தேடி ரஜினி ஓடினாராமா..? எவன் சொன்னது..? கேபிளு.. என்ன நட்டு கழன்றுச்சா..? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்.. எவனோ தியேட்டர்ல பிட்டு எழுதிக் கொடுத்து இந்தப் பதிவ எழுதினீங்களா..?

ஷங்கரும், சரத்தும் பேசி முடிச்சுட்டுத்தான ரஜினிகிட்ட போயிருக்காங்க.. “தயாரிப்பாளரை ஒரு வாரமா போன்லேயே பிடிக்க முடியல.. இனியும் காத்திருக்க முடியாது.. இவங்க தயாரா இருக்கேன்றாங்க..” என்று சொல்லித்தானே ரஜினியிடம் அப்ரோச் செய்திருக்கிறார்கள். அவருக்கும் படம் வரணும்.. தனது ரசிகர்களுக்கு வேலை கொடு்க்கணும்.. நாம வேலை செய்யணும்ன்ற ஆசையில ஒத்துக்கிட்டாரு.. இதுல என்ன பிரச்சினை..? தயாரிப்பாளரே பின்னால ஓடி வந்து வேற ரெண்டு படத்தோட வெளிநாட்டு உரிமையை பதிலுக்கு வாங்கிட்டு, சப்தமில்லாம கையெழத்துப் போட்டு்ட்டுப் போயிட்டாரே.. பிறகென்ன..? இதுல ரஜினியின் பங்கு என்ன..?

அவர் நடிகர் ஸார்.. படத்துல நடிக்கிறாரு.. அவர் நடிக்குற படம் நிக்கக்கூடாது.. வெளிவரணும்.. ரசிகர்கள் பார்க்கணும்.. திருப்பித் திருப்பிப் பார்க்கணும்.. படம் ஜெயிக்கணும்.. இதுதான் ஒவ்வொரு நடிகனோட ஆசையும்.. இந்த ஆசைகூட தப்புன்னா உங்க சினிமா ஆசையை என்னன்னு சொல்றது..?

//“அவருக்கு ஆதரவளிக்கிறேன், அவரின் பெருமையை போற்றுகிறேன், புகழ் பரப்புகிறென் என்று இம்மாதிரியான் செய்திகளை வெளியிட்டு ரஜினியை இமேஜை உயர்த்துவதாய் நினைத்து, பாலா போன்ற் ஜீனியஸ்களை அவமான படுத்தாதீர்கள். ரஜினிக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியமா போகும். நன்றி.”//

முடிவுரையாய் இப்படி சொல்லிவிட்டால் நாங்கள் விட்டுவிடுவோமா..? பாலாவை அவமானப்படுத்துதல் என்பதே தவறான செய்தி என்பதனால் இந்த பத்தியை உதைத்து வெளியேற்றிவிடலாம்.

//இது கண்டிப்பாய் ரஜினி எதிர்ப்பு பதிவல்ல.. அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்கிற ஆதங்கத்தோடு ரஜினியின் நடிப்பை விரும்புகிறவனின் அன்பான வேண்டுகோள். மீண்டும் நன்றி .. வணக்கம்.//

என்னே ஒரு பாசம்..? கமல்ஹாசன் செத்தார் போங்க.. கொன்னூட்டீங்க கேபிளு..

எப்படிங்கண்ணா.. இப்படி..?

நீங்க எழுதினதையெல்லாம் ஒரு தடவை படிச்சிட்டுத்தான இதை எழுதினீங்க.. அப்புறம் எப்படி இது..?

நான் நினைக்கிறேன்.. மொதல்லேயே இந்த டிஸ்கியை எழுதி வைச்சிட்டு அப்புறமா பதிவு எழுத உட்கார்ந்திருப்பீங்க.. எழுதும்போது ஏதோ மனசுக்குள்ள இருக்குற ‘உண்மைத்தனம்’ உங்களையறியாமல் வெளியே வந்து கொட்டிருச்சு.. கரீக்ட்டுங்களா..?

ரஜினி ஒரு மாயை.. அவர் பற்றிய அனைத்தும் மித் என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து சொல்லியிருக்கிறீர்கள். இருக்கட்டும்..

முந்தாநாள் வரைக்கும் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை உங்களை அலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்த எனக்கு, இந்தப் பதிவைப் படித்ததில் இருந்து போனை எடுத்து டயல் செய்யவே பிடிக்காமற்போய்விட்டது. ஏன் தெரியுமா..?

இதுதான் சரியான, முழுமையான காரணம் என்று குறிப்பிட்டு எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது.

அது மிஸ்டர் ரஜினிகாந்த்..!

கேபிளாரே... வாழ்க வளமுடன்!!!

160 comments:

butterfly Surya said...

கேபிளார் பதிவிற்கு இதுவரை 112 பின்னூட்டங்கள்.

இந்த பதிவிற்கும் 100+ நிச்சயம் உண்டு..


நீங்களும் விரைவில் லட்சம் ஹிட் அடைய வாழ்த்துகள்.

அத்திரி said...

அய்யய்யோ........

Muthu said...

அப்படியே சந்தில் சிந்து பாடி ரஜினி வாய்சில் தான் ஜெயலலிதா ஆட்சி போச்சுன்னு துக்ளக் கருத்தை விதைச்சாச்சு.

கேபிள் ஆசாமியை பழிச்ச மாதிரியும் ஆச்சு. அப்படியே ஒரு துக்ளக் கருத்தை விதைச்ச மாதிரியும் ஆச்சு.

வாழ்க ஜனநாயகம்.

( நானெல்லாம் ஏதோ அந்த டைமில் நாய், பேய் எல்லாம் ஜெயலலிதாவை எதிர்த்துக்கொண்டு இருந்ததா நினைச்சுட்டு இருக்கேன்)

gulf-tamilan said...

நிச்சயம் சூடான பதிவில் வரும் :)))

butterfly Surya said...

Sorry. இரண்டு லட்சம் ஹிட் விரைவில் அடைய வாழ்த்துகள்.

ஊர்சுற்றி said...

என் நண்பன் அப்பவே சொன்னான் 'நீ ரஜினி ரசிகனா மாறிடுடா' ன்னு...
நான் கேக்கல. ஆனா உங்க இடுகையை படிச்சதுக்கு அப்புறம் 'எங்க இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமாயிருக்கு'(!!!)

Anonymous said...

இப்படி எல்லாம் பதிவு போட எங்க இருந்து ஐயா உங்களுக்கு நேரம் வருகிறது?

Anonymous said...

வலையுலகில் பெரும்பாலானோர் நோயுற்ற மனதுடன்தான் இருக்கிறார்கள் என ஒருமுறை சொல்லியிருக்கிறார் கமல்ஹாஸன். அதை நிரூபிக்கும் விதத்தில் இருந்தது கேபிள் சங்கர் பதிவு.

நீங்கள் எழுதியிருப்பது உளப் பூர்வமான பதிவு. உண்மையான பதிவு. ரஜினியை அவரது தீவிர ரசிகர்களைவிட அழகாய் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

-எஸ்.பிரபாகர்
மதுரவாயில்

ராவணன் said...

//கமல்ஹாசன் செத்தார் போங்க..
கொன்னூட்டீங்க கேபிளு//

என்னது கமலு செத்துட்டாரா?

Anonymous said...

பன்னாடைங்களா வேலையப் பாருங்கடா. உங்க பொண்டாட்டிங்க யாரோடையாவது ஓடிடப் போறாங்க, இதை எழுதவும், படிக்கவும் உக்காந்தா,,,

இரா. வசந்த குமார். said...

அன்பு உண்மைத்தமிழன்...

ஒன்றும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. சில கிறுக்குகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக எழுதி, பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் யார் ரசிகனாயும் இருங்கள்.

ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றிகள்.

Cable சங்கர் said...

அண்ணே.. மிக நல்ல அருமையான பதிவுண்ணே.. நீங்க பதிவு போட போறீங்கன்னு சொன்னவுடனே.. 12 மணி வரைக்கும் காத்திட்டிருந்தேன்..

Anonymous said...

நெத்தியடி பதில்..

யாராவது ஒருத்தர் சொல்ல மாட்டாங்களான்னு எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன்..

நீங்க சொல்லிட்டீங்க..

இது மாதிரி யாராச்சும் நச்சுன்னு சொன்னாத்தான் அதுகளுக்கு உரைக்கும்..

வருண் said...

ரஜினி ரசிகர்கள் அறியாமையில் ஏதோ சொல்லி இருக்காங்க. அது தப்புத்தான். ரஜினி ஒரு வகையில் இந்தப்படத்திற்கு ஒரு ஃப்ரீ கமர்ஷியல் கொடுத்து இருக்கார். அதை பெரிதாக பேசுவது ரஜினி ரசிகர்களின் அறியாமை.

ஆனால் நம்ம “லட்சம் ஹிட் பெற்றுவிட்டேன்” என்று பெருமையாக சொல்லும் இந்த பிரபலமாகிக்கொண்டு இருக்கும் பதிவர் இப்படி ஒரு பதிவைப்போட்டு இவருக்கு ரஜினிமேல் த்னக்கு எவ்வளவு வெறுப்பு இருக்குனு காட்டி இருக்கார்! இயக்குனர் பாலாவுக்கே இவர் பதிவு பிடிக்காது மற்றும் எரிச்ச்லைத்தரும் என்பது என் தாழ்மையான கருத்து!

Anonymous said...

Hats off Unmai tamizhan!

Anonymous said...

ஜெயலலிதாவின் ஆட்சிக்கெதிரான பொதுவான ஒரு எதிர்ப்பை ஒருங்கிணைத்தது ரஜினிதான் என்பது உண்மை.

அப்ப இருந்து நானும் பார்த்திட்டுத்தான் வரேன்.. நீங்கள் மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்..

Anonymous said...

உண்மையை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்.

மிக மிக விரிவாகவும், தெளிவாகவும் உள்ளது உங்கள் பதில்.

வாழ்த்துக்கள் பாஸ்.

Anonymous said...

மதிப்புற்குரிய உண்மைத்தமிழன் அவர்களுக்கு,

கேபிள் சங்கரின் கருத்து அவரின் பார்வையில் சரிதான், ஏனென்றால் ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி, அவர் பாலாவை பாராட்டியதின் உள்நோக்கமே பாலாவின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் அவருடைய மகள்தான் அதற்காக பாலாவிற்கு ஐந்து கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. ஏனன்றால் பாலாவிற்கு தியட்டரில் ஒரு வரவேற்பு இருக்கிறது.. ஆனால் ''நான் கடவுள்'' எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை, விளிம்பு நிலையில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமே படமாக்கியிருந்தால் அது ஒரு மைல் கல்லாக இருந்திருக்கும்

விஷயம் என்னவென்றால் ரஜினியின் வாய்ஸ் என்பது எப்போதும் அவரின் சுய லாபங்களை ஒட்டியே அமைந்திருக்கும், அதனைபற்றி எழுதினால் உங்களைபோல இன்னொரு பதிவு போடவேண்டியிருக்கும், நல்ல கருத்துகளை தொடர்ந்து சொல்லிவரும் தாங்கள், ரஜினி போன்ற ஆசாமிகளுக்கு தயவு செய்து வக்காலத்து வாங்கவேண்டாம், ஏனெனில் ரஜினியால் குட்டிச்சுவரான அநேகம்பேரை எனக்கு தெரியும் ,நானே ஒரு காலத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்தவன்தான், அதனால் இதனை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது..

நன்றி...

Bleachingpowder said...

கோடி நன்றி. வரிக்கு வரி பொறுமையாக பதிலெழுதி அசத்தீட்டீங்க. இந்த பதிவு நிச்சயம் பலரால்(புரிஞ்சுதுங்கலா) கவணிக்க படுமென்றே தோனுகிறது, நீங்கள் அதற்காக எழுதாவிட்டாலும்.

Bleachingpowder said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
ரஜினியால் குட்டிச்சுவரான அநேகம்பேரை எனக்கு தெரியும் ,நானே ஒரு காலத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்தவன்தான்,
//

தயவு செய்து உங்களை வைத்து மற்றவர்களை எடை போட வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

Senthil said...

u r simply great

senthil, bahrain

Anonymous said...

சினிமா காரனுங்க அவங்களுக்கு துட்டு வரனுமின்னு கடிதம் கொடுக்கிற மாதிரி கொடுக்கிரனுங்க ...வெளியிட்டு விளம்பரம் போட்டு காசா ஆக்கி கிரான்னுங்கோ ...
அவனுங்க்குள்ள என்ன டிளிங்கோ ...காசையும் கொடுத்திட்டு தலைவர் சொன்னா சரிதான் ,அவரைப் பத்தி சொன்னே பிட்சிபோடுவேன் பிட்சின்னு இந்த தொண்டனுங்க கூச்சல் ஒரே தொல்லை தாங்க முடியலடா மா மா ஜி ...சாரி பா பா ஜி ...

Anonymous said...

I completely agree with u vunmai... keep it up

முரளிகண்ணன் said...

தலவைரே என்ன டிராக் மாறிட்டீங்க?

Anonymous said...

நல்ல பதிவு சார்!! வாழ்த்துக்கள்!! அப்புறம் அவரை திட்டாமல் கருத்துக்கு பதில் சொன்ன விதம் அருமை!!

Anonymous said...

Sema Comedy Post sir...Atheppadi sir sirikkama ippadi rajini ah pugalreenga..Tamilnadu nasama ponathukku rajinium oru karanum. Unga Manachatchia kelunga, athu sollum...

Anonymous said...

well, i think u too one of best rajani fan. actually i read before article also, exactlay rajani no responsible for that because his charector usually postive for everytime.......
anyhow thanks for explain complete story about the situation...
I too advice to everybody, just think few min before writing your coments such a pig people....

have a nice day with regards..

வினோத் கெளதம் said...

எதோ தெரியமா ஒரு சின்ன லெட்டர் எழுதிட்டார் அதுக்கு இவளோ கூத்தா..

malar said...

///புத்தகத்தை படித்தபடியே வந்து சேர்ந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. புத்தகமும் அவ்வளவு சூடு. என்ன புத்தகம் என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.////

என்று சொல்லி இருந்தேர்கள் .புஸ்தகத்தின் பெயரை சொல்லுங்கள்

Anonymous said...

I also agree with ur reply.

butterfly Surya said...

என்ன இதுவரை 30 தானா..?? 50தாண்டியிருக்கும்ன்னு நினைச்சேன்.

கண்டிப்பா 100+ ..

மக்களே.. நல்லா அடிச்சு ஆடுங்க...

Anonymous said...

Raja said...
Sema Comedy Post sir...Atheppadi sir sirikkama ippadi rajini ah pugalreenga..Tamilnadu nasama ponathukku rajinium oru karanum. Unga Manachatchia kelunga, athu sollum...
----------------------------------
இவரு யாருக்கு வோட்டு போட்டாருன்னு தெரியல.

போட்ட வோட்ட நியாபகப்படுத்தி அவங்கள போய் கேக்க சொல்லுங்க, தமிழ்நாடு உருப்படறதுக்கு ஐடியாவ!!!!

நல்ல சொல்றான்யா டீடயிலு ................

சந்திரசேகர் said...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள் !

Anonymous said...

Tahnk you for your SUPER reply.
But, I cant believe you are not a SUPERSTAR fan.
naren

நையாண்டி நைனா said...

படிச்சிட்டேன் தலே .... ஆனா அப்பாலிக்கா வாறேன்.

Anonymous said...

A true and fantastic post. Congratz! Fitting reply.

கணேஷ் said...

சார், என்னை தப்பா எடுத்துக்காதீங்க. இவ்வளவு காட்டமா உங்க எதிர்ப்ப காட்டியிருக்கணும்னு அவசியம் இல்லைனு நினைக்கிறேன்.

Anonymous said...

வாவ்... சார்.. அருமை... சார்..
வார்த்தைகள் இல்லை...

Anand said...

Reallly a very good post

ரமேஷ் வைத்யா said...

சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறீர்கள்.

Anonymous said...

///அன்பு உண்மைத்தமிழன்...

ஒன்றும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. சில கிறுக்குகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக எழுதி, பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் யார் ரசிகனாயும் இருங்கள்.

ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றிகள்.///

ரஜினி ரசிகர்கள் சார்பாக
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
THANKS

நாமக்கல் சிபி said...

//சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறீர்கள்.//

சுருங்க - !?

ஆண்டவா!

நாமக்கல் சிபி said...

//என்ன இதுவரை 30 தானா..?? 50தாண்டியிருக்கும்ன்னு நினைச்சேன்.

கண்டிப்பா 100+ ..

மக்களே.. நல்லா அடிச்சு ஆடுங்க.//

படிக்கவே ஒரு வாரம் ஆகும்!

எங்க போயி அடிச்சி ஆட?

வெற்றி said...

படிச்சு முடிச்சதும் ஒரு நிமிசம் ஆடிப்போய்விட்டேன். உண்மைத் தமிழா உம்மை நினைத்து ஒரு நிமிசம் ஆடிப்போய்விட்டேன்.

எத்தனை விசயங்கள், எத்தனை கோணங்கள் என்னை வியக்க வைக்கிறது.

அருமையானப் பதிவு.

இதற்கு மேலும் ரஜினியப் பற்றி தரக்குறைவாக யாராவது எழுதினால் அவர்களைப் போல "மூளைவாதம்" வந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

இதுவரை 5 அல்லது 6 ரஜினிப் படமே பார்த்திருப்பேன். ஆனாலும் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். காரணம் அவரின் அந்த அசுர வளர்ச்சி. எந்த ஒரு சாதகமான அமசமும் இல்லாமல் ஒரு தனிமனிதனாய் தன் தகுதியை உயர்த்திக் கொண்டப் போக்கு, இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியத்தில் வாய்ப்பிளக்கும்.

வாழ்க உண்மைத் தமிழன்.

ஷாஜி said...

சாட்டையடி பதிவு இது....
யாருக்கு என்பது பதிவுலகுக்கு தெரியும்?

பாலா என்ற இயக்குனர். அஜித் என்ற நடிகரை ஓட்டல் ரூமில் அடைத்துவைத்து செய்த டார்ச்சரை 'கேபிள் சங்கர்' மறந்துவிட்டார் போலும்..

Unknown said...

சும்மா நிறுத்துங்க....
அரைச்ச மாவையே அறைகாதீங்க ப்ளீஸ்...
தாங்கமுடியல.....
புதுசு.. புதுசா... ஏதாவது கதை சொல்லுங்க...

Arun Kumar said...

அருமையான பதிவு
ரஜினியை திட்டுவதற்க்கே பிழைப்பாக வைத்து இருப்பவர்கள் இந்த பதிவை படித்து விட்டு இனி முடிவு எடுக்கட்டும்

வெற்றி said...

// Anonymous said...
பன்னாடைங்களா வேலையப் பாருங்கடா. உங்க பொண்டாட்டிங்க யாரோடையாவது ஓடிடப் போறாங்க, இதை எழுதவும், படிக்கவும் உக்காந்தா,,,//

மட ஜென்மன்ங்கள்.

வெற்றி said...

// Anonymous said...
பன்னாடைங்களா வேலையப் பாருங்கடா. உங்க பொண்டாட்டிங்க யாரோடையாவது ஓடிடப் போறாங்க, இதை எழுதவும், படிக்கவும் உக்காந்தா,,,//

நல்ல புத்தி உமக்கு கிடைக்கட்டும்.

வெற்றி said...

// இரா. வசந்த குமார். said...
அன்பு உண்மைத்தமிழன்...

ஒன்றும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. சில கிறுக்குகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக எழுதி, பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் யார் ரசிகனாயும் இருங்கள்.

ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றிகள்//

ரிப்பீட்டோ...........ய்.

Anonymous said...

//முத்து தமிழினி said...

அப்படியே சந்தில் சிந்து பாடி ரஜினி வாய்சில் தான் ஜெயலலிதா ஆட்சி போச்சுன்னு துக்ளக் கருத்தை விதைச்சாச்சு.

கேபிள் ஆசாமியை பழிச்ச மாதிரியும் ஆச்சு. அப்படியே ஒரு துக்ளக் கருத்தை விதைச்ச மாதிரியும் ஆச்சு.//

ஆமாம் இவருக்கு பிடிக்காத கருத்தை யாராவது சொல்லிபுட்டா உடனே விளுந்து அடிச்சு ஓடு வந்துடுவாருப்பா இவரு.

Cable சங்கர் said...

//பாலா என்ற இயக்குனர். அஜித் என்ற நடிகரை ஓட்டல் ரூமில் அடைத்துவைத்து செய்த டார்ச்சரை 'கேபிள் சங்கர்' மறந்துவிட்டார் போலும்..//

அது பற்றி தனி பதிவு எழுதிட்டா போச்சு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தலைவா.. கொஞ்சம் சின்னதா எழுதக்கூடாதா... இதென்ன அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரையா, பொறுமையா படிக்க? :) :)

Muthu said...

கேபிள் ஆசாமியை பழிச்ச மாதிரியும் ஆச்சு. அப்படியே ஒரு துக்ளக் கருத்தை விதைச்ச மாதிரியும் ஆச்சு.//

ஆமாம் இவருக்கு பிடிக்காத கருத்தை யாராவது சொல்லிபுட்டா உடனே விளுந்து அடிச்சு ஓடு வந்துடுவாருப்பா இவரு.//

:) வேற எப்படாப்பா வர்றது? நீயெல்லாம் இப்ப என்னை இன்னும நெனச்சிட்டு ஓடோடி வரல்லயா :)

துரியோதனன் said...

:)

Anonymous said...

உண்மைத்தமிழா,
சூப்பர் போஸ்ட்.

வயிற்றெரிச்சல் பார்ட்டிகளுக்கு சரியான மருந்து.

அடுத்தவன் முன்னேற்றத்தில் நொந்துபோகும் வீணாப்போனவர்களுக்கு சரியான சுளுக்கு.

பொறாமைப் பேய்களுக்கு கொடுக்கும் சரியான தண்டனை.

மொத்தத்தில் ரஜினியை திட்டி எழுதி பேமஸாக நினைக்கும் பேமானிகளின் ஜட்டியை உருவிட்டீங்க.

Anonymous said...

Nanbare ungala ethuku munadi parthathuh ellai, ethuku munadi unga blog a padichathae ellai, thalaivar pathi padichan, athunala appadi enna cable eluthinaru padichitu unga post a padichan

First kodana kodi thanks, evalavu periya blog post padichu time porathe theriyala unmalaye neenga romba arumai a sonnninga nandri

Valgha nallavanga

Rajini is a gentle men, entha heights layum evalavu amathi,

Cable showed his bad attitude and dark side from his post.

Please carry on :-) dont speak with cable sankar, sorry namma auto sankar a veda mosamana mana noiyali

நந்தா said...

தலைவரே இதுக்கு இவ்ளோவ் பெரிய பதிவா???? உங்கள் எழுத்துக்களை நீங்கள் அளவுக்கதிகமாய் காதலிக்கிறீர்களோ?? தெரியலை.

வண்ணாந்துறையில பாவாடை காணாமப் போனா கூட அதை என் பேருல பழி போடுறாங்க யுவர் ஆனர்னு பாலாவோட இன்னொரு படத்துல கருணாஸ் சொல்லுவாரு.

ரஜினி ரசிகர்களின் அந்த படிவைப் பார்த்த உடன் எனக்கு இந்த வசனம் சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்து தொலைத்தது. ஆனால் நீங்களே சொன்ன மாதிரி இதற்கு மேல் ரசிகர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என்பதால் இன்னுமா திருந்தலை என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு உதடு பிதுக்கி நகர்ந்து விட்டேன்.

இதில் ரஜினியைப் பற்றியோ, பாலாவைப் பற்றியோ பேச ஒண்ணுமே இல்லை. அவர்கள் தவறு எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாய் நிகழ்ந்தவை இவை.

ஸ்கூலுக்கு போகும் 15 வயதுப் பொண்ணு கால் தடுக்கி கீழே விழுந்து முட்டியில் அடிபட்டதை "பருவப் பெண் பாவாடையில் ரத்தம்" என்று திரித்து சென்சேஷனல் செய்தியாய் வெளியிடும் பத்திரிக்கைகளை படித்து வளர்ந்தவர்கள். அவர்கள் இது போன்று தனது வசதிக்கேற்ப, தனக்கு பிடிச்ச மாதிரி பாமரத்தனமாய் செய்திகளை மாற்றியமைத்துக் கொள்வதில் வெட்கம் கொள்ள மாட்டார்கள்தான்.

ரஜினி மேல எல்லாம் எனக்கு என்ன கோபம். அவரு மூச்சு விடறதைக் கூட சூறாவளின்னு நினைச்சுக்கிற சிலர் மீதுதான் எனக்கு ஆழ்ந்த அனுதாபம்.

http://blog.nandhaonline.com

குசும்பன் said...

//முந்தாநாள் வரைக்கும் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை உங்களை அலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்த எனக்கு, இந்தப் பதிவைப் படித்ததில் இருந்து போனை எடுத்து டயல் செய்யவே பிடிக்காமற்போய்விட்டது//

அண்ணே இதுதான் இத்தனை நாள் பழகி புரிஞ்சுக்கிட்டதா? தனக்கு பிடிக்காததை மற்றவர் செஞ்சா அவர் கூட பேசக்கூட பிடிக்காதா? என்ன பழக்க வழக்கம் இது!:((((

சஞ்சய்க்கும் எனக்கும் பல கருத்து வேறு பாடு உண்டு ஆனால் அந்த அன்பு இன்று வரை மாறாது.

அவர் காங்கிரஸ் தொண்டர்
நான் புலி ஆதரவாளன்
இப்படி பல விசயங்கள் எனக்கு பிடிக்காததை அவர் எழுதி இருக்கிறார், அது போல் அவருக்கு பிடிக்காததை நான் எழுதி இருக்கிறேன்
அதனால் அவரிடம் பேச பிடிக்கவில்லை என்று சொன்னால் எப்படி இருக்கும்?

மிகவும் அபத்தமாக இருக்கிறது:(((

என்.இனியவன் said...

good post. i ageee with u

Anonymous said...

நெத்தியடி சகா நெத்தியடி.
இனியும் அவனுங்க திருந்தலன்னா அசிங்கமா கேட்டுபுட வேண்டியதான்.

ஒழுங்கா குளிக்காத கம்முனாட்டிங்கெல்லாம் ரஜினியப்பத்தி பேசவந்துட்டானுவ.

நெத்தியடி சகா.

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...

கேபிளார் பதிவிற்கு இதுவரை 112 பின்னூட்டங்கள்.

இந்த பதிவிற்கும் 100+ நிச்சயம் உண்டு..


நீங்களும் விரைவில் லட்சம் ஹிட் அடைய வாழ்த்துகள்.//

முதல் சூப்பர் பாஸ்ட் பின்னூட்டத்திற்கு நன்றி பூச்சியாரே..

உண்மைத்தமிழன் said...

//அத்திரி said...
அய்யய்யோ........//

என்ன வெறும் அய்யய்யோதானா..?

வேற ஒண்ணுமில்லையா..?

ஓ.. ஒண்ணும் சொல்ல முடியல போலிருக்கு..

ஆனாலும் வருகைக்கு நன்றி அத்திரி..

உண்மைத்தமிழன் said...

//முத்து தமிழினி said...

அப்படியே சந்தில் சிந்து பாடி ரஜினி வாய்சில் தான் ஜெயலலிதா ஆட்சி போச்சுன்னு துக்ளக் கருத்தை விதைச்சாச்சு.

கேபிள் ஆசாமியை பழிச்ச மாதிரியும் ஆச்சு. அப்படியே ஒரு துக்ளக் கருத்தை விதைச்ச மாதிரியும் ஆச்சு.

வாழ்க ஜனநாயகம்.

( நானெல்லாம் ஏதோ அந்த டைமில் நாய், பேய் எல்லாம் ஜெயலலிதாவை எதிர்த்துக்கொண்டு இருந்ததா நினைச்சுட்டு இருக்கேன்)//

முத்து ஸார்..

நீங்கள் ஏற்றுக் கொண்டாலும், அல்லது கொள்ளாவிட்டாலும் அந்தச் சமயத்தில் ரஜினியும், சோவும் இல்லாமல் இருந்திருந்தால் தி.மு.க.வுக்கும், த.மா.கா.வுக்கும் இடையில் எந்த தேர்தல் ஒப்பந்தமும் ஏற்பட்டிருக்காது..

நிலைமை வேறு விதமாக மாறியிருக்கும்..

உண்மைத்தமிழன் said...

//gulf-tamilan said...
நிச்சயம் சூடான பதிவில் வரும் :)))//

வந்தாச்சு..

எல்லாம் உங்க ஆசீர்வாதம் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...

Sorry. இரண்டு லட்சம் ஹிட் விரைவில் அடைய வாழ்த்துகள்.//

உங்களுடைய எண்ணம்போல் நடக்கட்டும்..

உண்மைத்தமிழன் said...

//ஊர் சுற்றி said...
என் நண்பன் அப்பவே சொன்னான் 'நீ ரஜினி ரசிகனா மாறிடுடா' ன்னு...
நான் கேக்கல. ஆனா உங்க இடுகையை படிச்சதுக்கு அப்புறம் 'எங்க இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமாயிருக்கு'(!!!)//

மாறிருங்களேன்.. ஏன் தயங்குறீங்க.. கம்பெனிக்கு ஆள் குறையுதே எனக்கு..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
இப்படி எல்லாம் பதிவு போட எங்க இருந்து ஐயா உங்களுக்கு நேரம் வருகிறது?//

கடிகாரத்தில் இருந்துதான்..)))))))))

நான் வெட்டி ஆபீஸர்.. வேலையில்லை. அதுதான்..

உங்களுக்கு ஏன் பொறாமை..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...

வலையுலகில் பெரும்பாலானோர் நோயுற்ற மனதுடன்தான் இருக்கிறார்கள் என ஒருமுறை சொல்லியிருக்கிறார் கமல்ஹாஸன். அதை நிரூபிக்கும் விதத்தில் இருந்தது கேபிள் சங்கர் பதிவு.//

கமல் எப்போது சொன்னார்? எனக்குத் தெரியவில்லை..

//நீங்கள் எழுதியிருப்பது உளப்பூர்வமான பதிவு. உண்மையான பதிவு. ரஜினியை அவரது தீவிர ரசிகர்களைவிட அழகாய் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
-எஸ்.பிரபாகர்
மதுரவாயில்//

நன்றி பிரபாகர்..

உண்மைத்தமிழன் said...

///ராவணன் said...

//கமல்ஹாசன் செத்தார் போங்க..
கொன்னூட்டீங்க கேபிளு//

என்னது கமலு செத்துட்டாரா?///

கமலைவிட நடிப்புல பின்னிட்டாரு நம்ம கேபிளுன்னு சொல்ல வந்தேன் சாமி..

தப்புத் தப்பா அர்த்தம் எடுத்துக்குறீங்களே..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
பன்னாடைங்களா வேலையப் பாருங்கடா. உங்க பொண்டாட்டிங்க யாரோடையாவது ஓடிடப் போறாங்க, இதை எழுதவும், படிக்கவும் உக்காந்தா,,,//

உம்மை யாரு சாமி வந்து படிக்கச் சொன்னது..?

அதுக்கேன் இம்புட்டு கோபம்..?

அடக்கு.. அடக்கு..

உண்மைத்தமிழன் said...

//இரா. வசந்த குமார். said...

அன்பு உண்மைத்தமிழன்...

ஒன்றும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. சில கிறுக்குகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக எழுதி, பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் யார் ரசிகனாயும் இருங்கள்.

ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றிகள்.//

நன்றி வசந்தகுமார்..

நண்பர் கேபிளு.. கொஞ்சம் அவசரப்பட்டுட்டார்ன்னு சொல்லலாம்..

உண்மைத்தமிழன் said...

//Cable Sankar said...
அண்ணே.. மிக நல்ல அருமையான பதிவுண்ணே.. நீங்க பதிவு போட போறீங்கன்னு சொன்னவுடனே.. 12 மணி வரைக்கும் காத்திட்டிருந்தேன்..//

ஏன் பேச மாட்டீரு..?

போஸ்ட் எழுத வைச்சு போட வைச்சிட்டீருல்ல..

இதுக்காக ஒரு சினிமா பார்க்குறதையே தியாகம் பண்ணினேனாக்கும்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...

நெத்தியடி பதில்..

யாராவது ஒருத்தர் சொல்ல மாட்டாங்களான்னு எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன்..

நீங்க சொல்லிட்டீங்க..

இது மாதிரி யாராச்சும் நச்சுன்னு சொன்னாத்தான் அதுகளுக்கு உரைக்கும்..//

அப்பா.. என்ன கோபம் அல்லாருக்கும்..

கேபிளு, எல்லாருக்கும் நேரமில்ல போலிருக்கு.. அதான் தப்பிச்சிட்டீரு..

உண்மைத்தமிழன் said...

//வருண் said...
ரஜினி ரசிகர்கள் அறியாமையில் ஏதோ சொல்லி இருக்காங்க. அது தப்புத்தான். ரஜினி ஒரு வகையில் இந்தப் படத்திற்கு ஒரு ஃப்ரீ கமர்ஷியல் கொடுத்து இருக்கார். அதை பெரிதாக பேசுவது ரஜினி ரசிகர்களின் அறியாமை.
ஆனால் நம்ம “லட்சம் ஹிட் பெற்றுவிட்டேன்” என்று பெருமையாக சொல்லும் இந்த பிரபலமாகிக்கொண்டு இருக்கும் பதிவர் இப்படி ஒரு பதிவைப்போட்டு இவருக்கு ரஜினிமேல் த்னக்கு எவ்வளவு வெறுப்பு இருக்குனு காட்டி இருக்கார்! இயக்குனர் பாலாவுக்கே இவர் பதிவு பிடிக்காது மற்றும் எரிச்ச்லைத் தரும் என்பது என் தாழ்மையான கருத்து!//

நன்றி வருண்..

ரசிகர்களின் ஆர்வக் கோளாறு.. அதனைப் படித்த கேபிளாரின் அவரசப் பதிவுக் கோளாறு.. எல்லாம் சேர்ந்து அவருக்கே வினையாகிவிட்டது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Hats off Unmai tamizhan!//

நன்றி அனானியண்ணேன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...

ஜெயலலிதாவின் ஆட்சிக்கெதிரான பொதுவான ஒரு எதிர்ப்பை ஒருங்கிணைத்தது ரஜினிதான் என்பது உண்மை.

அப்ப இருந்து நானும் பார்த்திட்டுத்தான் வரேன்.. நீங்கள் மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்..//

எப்ப இருந்து பார்த்திட்டு வர்றீங்க அனானி..?

உண்மைத்தமிழன் said...

//R.Gopi said...

உண்மையை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்.

மிக மிக விரிவாகவும், தெளிவாகவும் உள்ளது உங்கள் பதில்.

வாழ்த்துக்கள் பாஸ்.//

நன்றி கோபி ஸார்..

சமயம் வாய்க்கும்போதே நமது கருத்தை பொதுவில் வைத்துவிட வேண்டும்.

அது பலரது கண்ணையும் திறக்கும்..

Anonymous said...

//ரஜினி மேல எல்லாம் எனக்கு என்ன கோபம். அவரு மூச்சு விடறதைக் கூட சூறாவளின்னு நினைச்சுக்கிற சிலர் மீதுதான் எனக்கு ஆழ்ந்த அனுதாபம்.//
இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் திருந்தாது சாமி!!இந்த பின்னூட்டங்கள்ள இருந்தே படிச்ச சிந்திக்க தெரியாத முட்டா பயல்கள எல்லாம் தெரிஞ்சிக்கலாம்.

வலையப்பன் said...

பாலாவுக்கு அவர் பதிலடி கொடுத்தார்... நீங்க கேபிளுக்கே மின்சாரம் கொடுக்குறீங்களே

உண்மைத்தமிழன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
மதிப்புற்குரிய உண்மைத்தமிழன் அவர்களுக்கு,
கேபிள் சங்கரின் கருத்து அவரின் பார்வையில் சரிதான், ஏனென்றால் ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி, அவர் பாலாவை பாராட்டியதின் உள்நோக்கமே பாலாவின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் அவருடைய மகள்தான் அதற்காக பாலாவிற்கு ஐந்து கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. ஏனன்றால் பாலாவிற்கு தியட்டரில் ஒரு வரவேற்பு இருக்கிறது..//

நீங்கள் இன்றைய ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டரை பார்த்துவிட்டு பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

அது உண்மையோ, பொய்யோ விரைவில் வெளியே வந்துவிடும்.

ஆனால் ரஜினி தான் பார்க்கும் திரைப்படங்களுக்கு கேட்டால் கடிதம் கொடுப்பது வழக்கம். அதில் தவறேயில்லை என்பது எனது கருத்து.

இதில் நான் கடவுள் தயாரிப்பாளர்தான் அந்தக் கடிதத்தை பாலாவின் அனுமதியுடன் விளம்பரப் படுத்தி வருகிறார். ஆகவே இதில் எந்தத் தவறும் இல்லை என்பது எனது கருத்து.

//ஆனால் ''நான் கடவுள்'' எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை//

பொய்யான செய்தி. சூப்பர்ஹிட் இல்லைதான். ஆனால் ஓரளவு புகழ் பெற்றுவிட்டது.

//விளிம்பு நிலையில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமே படமாக்கியிருந்தால் அது ஒரு மைல் கல்லாக இருந்திருக்கும்.//

கதை, திரைக்கதையில் சில குழப்பங்கள் உண்டுதான்..

//விஷயம் என்னவென்றால் ரஜினியின் வாய்ஸ் என்பது எப்போதும் அவரின் சுய லாபங்களை ஒட்டியே அமைந்திருக்கும், அதனை பற்றி எழுதினால் உங்களைபோல இன்னொரு பதிவு போடவேண்டியிருக்கும்.//

நான் அப்படி நினைக்கவில்லை வசந்த். அவர் சினிமாவில் நீடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால்தான் சிற்சில சமயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் அவர் சொல்வதும், செய்வதும் சரிதான்..

//நல்ல கருத்துகளை தொடர்ந்து சொல்லிவரும் தாங்கள், ரஜினி போன்ற ஆசாமிகளுக்கு தயவு செய்து வக்காலத்து வாங்கவேண்டாம்.//

மன்னிக்கணும் வசந்த்.. பாராட்டிற்கு நன்றி.. ஆனால் ரஜினி விஷயத்தில் நான் அவரைப் பாராட்டித்தான் தீருவேன்.. நீங்கள் அவரைப் புரிந்து கொள்ளாதது துரதிருஷ்டமே..

//ஏனெனில் ரஜினியால் குட்டிச்சுவரான அநேகம் பேரை எனக்கு தெரியும். நானே ஒரு காலத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்தவன்தான், அதனால் இதனை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது..
நன்றி...//

ரஜினி ரசிகர் மன்றத்தில் சேருங்கள் என்று யாரையும் கூப்பிடவில்லை. நீங்களாகத்தான் போனீர்கள்.. உங்களுக்குப் பிடிக்கவில்லை. விலகிவிட்டீர்கள். இதற்கெதற்கு அவரை இழுக்குறீர்கள்..?

உண்மைத்தமிழன் said...

//Bleachingpowder said...
கோடி நன்றி. வரிக்கு வரி பொறுமையாக பதிலெழுதி அசத்தீட்டீங்க. இந்த பதிவு நிச்சயம் பலரால்(புரிஞ்சுதுங்கலா) கவணிக்க படுமென்றே தோனுகிறது, நீங்கள் அதற்காக எழுதாவிட்டாலும்.//

லட்சம் நன்றி பிளீச்சிங் ஸார்.. நான் கவனிப்புக்காக எழுதவில்லை. அந்தப் பதிவைப் படித்தவுடன் நான் நினைத்ததை எழுத வேண்டும் என்று நினைத்தேன். எழுதிவிட்டேன்.. அவ்வளவுதான்..

உண்மைத்தமிழன் said...

///Bleachingpowder said...
// கே.ஆர்.பி.செந்தில் said...
ரஜினியால் குட்டிச்சுவரான அநேகம்பேரை எனக்கு தெரியும் ,நானே ஒரு காலத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்தவன்தான்//
தயவு செய்து உங்களை வைத்து மற்றவர்களை எடை போட வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.///

நன்றி பிளீச்சிங்..

அவரவர் கருத்து அவரவர்க்கு.. விடுங்கள். அவருக்கு ஏதாவது மோசமான அனுபவம் கிட்டியிருக்கும். அதனால் சொல்கிறார் என்று நினைக்கிறேன்..

Anonymous said...

//கேபிளு, எல்லாருக்கும் நேரமில்ல போலிருக்கு.. அதான் தப்பிச்சிட்டீரு..//
ஆமா இது ஒரு பெரிய பிரச்சினை.வேல வெட்டி இல்லாதவந்தான் இப்படி பத்தி பத்தியா எழுதுவான்.ரஜினி மாதிரி ஒரு மொக்கைக்கு இவ்வளவு சவுண்டு ஓவரு!

புருனோ Bruno said...

நல்ல எழுத்து நடையில் எழுதியிருக்கிறீர்கள் தலைவரை

உண்மைத்தமிழன் said...

//Senthil said...

u r simply great

senthil, bahrain//

நன்றி செந்தில்..

ஏன் நீங்கள்லாம் பிளாக் எழுதக் கூடாதா..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
சினிமாகாரனுங்க அவங்களுக்கு துட்டு வரனுமின்னு கடிதம் கொடுக்கிற மாதிரி கொடுக்கிரனுங்க. வெளியிட்டு விளம்பரம் போட்டு காசா ஆக்கிகிரான்னுங்கோ.
அவனுங்க்குள்ள என்ன டிளிங்கோ காசையும் கொடுத்திட்டு தலைவர் சொன்னா சரிதான் ,அவரைப் பத்தி சொன்னே பிட்சி போடுவேன் பிட்சின்னு இந்த தொண்டனுங்க கூச்சல் ஒரே தொல்லை தாங்க முடியலடா மா மா ஜி ...சாரி பா பா ஜி...//

ஸாரி அனானி..

நானே சினிமாக்காரன்தான்.. அதுனால என்னை விட்ருங்க..

நான் இப்படித்தான் பேசுவேன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
I completely agree with u vunmai... keep it up.//

நன்றி அனானி அண்ணே..

ஒத்தக் கருத்துள்ளவர்கள் என்று அனைவருமே சொல்கிறீர்கள்.. யாராவது துணைக்குக் கை கொடுத்து பதிவு போடலாம்ல..?

உண்மைத்தமிழன் said...

//முரளிகண்ணன் said...
தலவைரே என்ன டிராக் மாறிட்டீங்க?//

இந்த கமெண்ட்டை காலைல வேற எங்கிட்டோ பார்த்தனே..?

ஓ.. அங்கிட்டுப் போட வேண்டியதை மாத்தி இங்கிட்டுப் போட்டுட்டீங்களா..?

ஒரு நினைப்புல இருக்கணுமாக்கும்..

உண்மைத்தமிழன் said...

//Bhuvanesh said...
நல்ல பதிவு சார்!! வாழ்த்துக்கள்!! அப்புறம் அவரை திட்டாமல் கருத்துக்கு பதில் சொன்ன விதம் அருமை!!//

கேபிளைத் திட்ட முடியுங்களா..? அப்புறம் நான் செத்துப் போனா ஒரு மாலை குறையுமே..

நன்றி புவனேஷ்..

உண்மைத்தமிழன் said...

//Raja said...
Sema Comedy Post sir... Atheppadi sir sirikkama ippadi rajiniah pugalreenga.. Tamilnadu nasama ponathukku rajinium oru karanum. Unga Manachatchia kelunga, athu sollum...//

என் மனசாட்சிதான் இதை எழுதச் சொல்லுச்சு அனானி..

உண்மைத்தமிழன் said...

//asfar said...
well, i think u too one of best rajani fan. actually i read before article also, exactlay rajani no responsible for that because his charector usually postive for everytime....... anyhow thanks for explain complete story about the situation... I too advice to everybody, just think few min before writing your coments such a pig people.... have a nice day with regards..//

இது சும்மா மன வேறுபாடுதான்..

கேபிளுக்கு கொஞ்சம் பக்குவம் வந்துட்டா எல்லாம் சரியாயிரும்..

உண்மைத்தமிழன் said...

//vinoth gowtham said...
எதோ தெரியமா ஒரு சின்ன லெட்டர் எழுதிட்டார் அதுக்கு இவளோ கூத்தா..//

தெரியாம எழுதிட்டாரா..? அவரா..? பதிவு போட்டிருக்கேன்.. வந்து படிச்சுப் பாருங்கன்னு கூப்பிட்டதே அவர்தான்..

என்னா நெஞ்சழுத்தம் இருக்கும்..?

உண்மைத்தமிழன் said...

///malar said...
//புத்தகத்தை படித்தபடியே வந்து சேர்ந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. புத்தகமும் அவ்வளவு சூடு. என்ன புத்தகம் என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.//
என்று சொல்லி இருந்தேர்கள். புஸ்தகத்தின் பெயரை சொல்லுங்கள்///

மலரு கொன்னிட்டீங்க போங்க..

இந்தப் பதிவுக்கு அடுத்தப் பதிவா திருச்சி நகர்வலம்னு ஒரு பதிவு போட்டிருக்கேன்..

படிச்சுப் பாருங்க.. தெரியும்..

உண்மைத்தமிழன் said...

//anbuaran said...

I also agree with ur reply.//

அன்பு அரண் அவர்களுக்கு எனது நன்றிகள்..

புரிஞ்சுக்கிட்டவங்க நிறைய பேருங்கோ..

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...

என்ன இதுவரை 30 தானா..?? 50 தாண்டியிருக்கும்ன்னு நினைச்சேன்.

கண்டிப்பா 100+ ..

மக்களே.. நல்லா அடிச்சு ஆடுங்க...//

ஏன் நீங்க கொஞ்சம் கை குடுக்கிறது..?

ஏத்திவிட்டுட்டு அப்படியே சத்தமில்லாம ஓடிர்றதா..?

கேபிளு உங்களைத் தேடிக்கிட்டிருக்காரு..

உண்மைத்தமிழன் said...

//R.Gopi said...

Raja said...
Sema Comedy Post sir...Atheppadi sir sirikkama ippadi rajini ah pugalreenga..Tamilnadu nasama ponathukku rajinium oru karanum. Unga Manachatchia kelunga, athu sollum...
----------------------------------
இவரு யாருக்கு வோட்டு போட்டாருன்னு தெரியல.

போட்ட வோட்ட நியாபகப்படுத்தி அவங்கள போய் கேக்க சொல்லுங்க, தமிழ்நாடு உருப்படறதுக்கு ஐடியாவ!!!!

நல்ல சொல்றான்யா டீடயிலு ................//

நியாயமான கோபம்தான் கோபி..

அன்னிக்கு ரஜினியும், சைக்கிள் சின்னமும் த.மா.கா.வுக்குக் கிடைக்கலைன்னா என்னாயிருக்கும்னு சொல்ல முடியல..

அனுபவமில்லாம பேசுறாங்களேப்பா.. வருத்தமாயிருக்கு..

உண்மைத்தமிழன் said...

//சந்திரசேகர் said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்!//

நன்றி சந்திரசேகர் ஸார்..

அடிக்கடி வாங்க..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Tahnk you for your SUPER reply.
But, I cant believe you are not a SUPERSTAR fan.
naren//

என்ன பண்றது? நீங்க நம்பித்தான் ஆகணும்..

நமக்கு கமலஹாசன்தான் நடிப்புல கண் கண்ட தெய்வம்..

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
படிச்சிட்டேன் தலே .... ஆனா அப்பாலிக்கா வாறேன்.//

என்னது இது கெட்டப் பழக்கம்..?

படிச்சவுடனேயே கமெண்ட்டு போட வேணாம்..

திரும்பி வரலேன்னா பிச்சுப்பிடுவேன் பிச்சு..

உண்மைத்தமிழன் said...

//Kumaran said...
A true and fantastic post. Congratz! Fitting reply.//

நன்றி குமரன்..

உண்மைத்தமிழன் said...

//கணேஷ் said...
சார், என்னை தப்பா எடுத்துக்காதீங்க. இவ்வளவு காட்டமா உங்க எதிர்ப்ப காட்டியிருக்கணும்னு அவசியம் இல்லைனு நினைக்கிறேன்.//

இதுல தப்பா எடுத்துக்கிறதுக்கு என்ன இருக்கு கணேஷ்..?

காட்டமாவெல்லாம் எதுவும் எழுதலையே.. எப்பவும் போலத்தான் மென்மையாகத்தான் எழுதியிருக்கிறேன்..

பயப்படாதீங்க.. கேபிளு நம்மாளுதான்.. கோச்சுக்க மாட்டாரு..

உண்மைத்தமிழன் said...

//Manikandan said...

வாவ்... சார்.. அருமை... சார்..
வார்த்தைகள் இல்லை...//

நன்றி மணிகண்டன்..

உண்மைத்தமிழன் said...

//Anandakumar said...
Reallly a very good post//

நன்றி அனந்தகுமார்..

உண்மைத்தமிழன் said...

//ரமேஷ் வைத்யா said...
சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறீர்கள்.//

சுருக்கமாகப் பாராட்டியிருக்கிறீர்கள்.. நன்றி ரமேஷ்வைத்யா..

உண்மைத்தமிழன் said...

///டன்மானடமிழன said...
//அன்பு உண்மைத்தமிழன்...
ஒன்றும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. சில கிறுக்குகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக எழுதி, பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் யார் ரசிகனாயும் இருங்கள்.
ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றிகள்.///
ரஜினி ரசிகர்கள் சார்பாக
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
many many many many many
THANKS//

மிக்க நன்றி.. நன்றி.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...

//சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறீர்கள்.//

சுருங்க - !?

ஆண்டவா!///

வந்துட்டியா முருகா..

நீதான் பாக்கி..

சுருங்க என்றால் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன் என்று பாராட்டியிருக்கிறார்.. அவ்ளோதான்.. இதுக்கு எதுக்கு முருகா வாயைப் பொளக்குற..?

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...

//என்ன இதுவரை 30 தானா..?? 50தாண்டியிருக்கும்ன்னு நினைச்சேன்.

கண்டிப்பா 100+ ..

மக்களே.. நல்லா அடிச்சு ஆடுங்க.//

படிக்கவே ஒரு வாரம் ஆகும்!

எங்க போயி அடிச்சி ஆட?///

லொள்ளு ஜாஸ்தியாயிருச்சு உனக்கு..

உண்மைத்தமிழன் said...

//தேனியார் said...
இதுவரை 5 அல்லது 6 ரஜினிப் படமே பார்த்திருப்பேன். ஆனாலும் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். காரணம் அவரின் அந்த அசுர வளர்ச்சி. எந்த ஒரு சாதகமான அமசமும் இல்லாமல் ஒரு தனிமனிதனாய் தன் தகுதியை உயர்த்திக் கொண்டப் போக்கு, இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியத்தில் வாய்ப்பிளக்கும்.//

இந்தக் காரணத்தினால்தான் எனக்கும் அவரைப் பிடித்திருக்கிறது..

நன்றி தேனியாரே..

உண்மைத்தமிழன் said...

//ஷாஜி said...
சாட்டையடி பதிவு இது....
யாருக்கு என்பது பதிவுலகுக்கு தெரியும்?
பாலா என்ற இயக்குனர். அஜித் என்ற நடிகரை ஓட்டல் ரூமில் அடைத்துவைத்து செய்த டார்ச்சரை 'கேபிள் சங்கர்' மறந்துவிட்டார் போலும்..//

கேபிளார் மறந்திரு்கக மாட்டார் ஷாஜி..

வருகைக்கு நன்றி..

உண்மைத்தமிழன் said...

//ஆகாயமனிதன்.. said...

சும்மா நிறுத்துங்க....
அரைச்ச மாவையே அறைகாதீங்க ப்ளீஸ்...
தாங்கமுடியல.....
புதுசு.. புதுசா... ஏதாவது கதை சொல்லுங்க...//

நீங்க யார்கிட்ட சொல்றீங்க ஆகாயம் ஸார்..

என்கிட்டயா..? கேபிளார்கிட்டயா..?

உண்மைத்தமிழன் said...

//Arun Kumar said...
அருமையான பதிவு ரஜினியை திட்டுவதற்க்கே பிழைப்பாக வைத்து இருப்பவர்கள் இந்த பதிவை படித்து விட்டு இனி முடிவு எடுக்கட்டும்.//

அருண் தம்பி.. நலமா..? ரொம்ப நாளாச்சு பார்த்து..?

கேபிள் நமக்கு பிரெண்டுதான்..

வருகைக்கு நன்றி..

உண்மைத்தமிழன் said...

///தேனியார் said...
// Anonymous said...
பன்னாடைங்களா வேலையப் பாருங்கடா. உங்க பொண்டாட்டிங்க யாரோடையாவது ஓடிடப் போறாங்க, இதை எழுதவும், படிக்கவும் உக்காந்தா,,,//
மட ஜென்மன்ங்கள்.///

அவங்களுக்குத் தெரிந்த நாகரிகம் அவ்ளோதான் தேனியாரே..

கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்..

உண்மைத்தமிழன் said...

///தேனியார் said...
// Anonymous said...
பன்னாடைங்களா வேலையப் பாருங்கடா. உங்க பொண்டாட்டிங்க யாரோடையாவது ஓடிடப் போறாங்க, இதை எழுதவும், படிக்கவும் உக்காந்தா,,,//
நல்ல புத்தி உமக்கு கிடைக்கட்டும்.///

இதையே நானும் சொல்லிக்கிறேன் தேனியாரே..

உண்மைத்தமிழன் said...

///தேனியார் said...
// இரா. வசந்த குமார். said...
அன்பு உண்மைத்தமிழன்...
ஒன்றும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. சில கிறுக்குகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக எழுதி, பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் யார் ரசிகனாயும் இருங்கள்.
ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றிகள்//
ரிப்பீட்டோ...........ய்.///

ரொம்ப ஆர்வத்துல இருக்கீங்க போலிருக்கு..

நன்றி தேனியாரே..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//முத்து தமிழினி said...
அப்படியே சந்தில் சிந்து பாடி ரஜினி வாய்சில் தான் ஜெயலலிதா ஆட்சி போச்சுன்னு துக்ளக் கருத்தை விதைச்சாச்சு.
கேபிள் ஆசாமியை பழிச்ச மாதிரியும் ஆச்சு. அப்படியே ஒரு துக்ளக் கருத்தை விதைச்ச மாதிரியும் ஆச்சு.//
ஆமாம் இவருக்கு பிடிக்காத கருத்தை யாராவது சொல்லிபுட்டா உடனே விளுந்து அடிச்சு ஓடு வந்துடுவாருப்பா இவரு.///

ஓ.. அனானியாரே..

முத்து ஸாரையும் தெரியுமா..? அப்போ பழைய அனானியா..?

நல்லாயிருங்க.. நான் வேறென்ன சொல்றது..?

அவர் கருத்தை சொல்றாரு.. எனக்கும் தப்பாத்தான் தெரியுது.. நானும் சொல்லிட்டனே..

உண்மைத்தமிழன் said...

///Cable Sankar said...

//பாலா என்ற இயக்குனர். அஜித் என்ற நடிகரை ஓட்டல் ரூமில் அடைத்துவைத்து செய்த டார்ச்சரை 'கேபிள் சங்கர்' மறந்துவிட்டார் போலும்..//

அது பற்றி தனி பதிவு எழுதிட்டா போச்சு.///

போடுங்க கேபிளு.. போடுங்க..

கொஞ்சம் முன்கூட்டியே சொல்லிருங்க.. நானும் தயாரா இருந்துக்குறேன்.. ஓகேவா..?

உண்மைத்தமிழன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
தலைவா.. கொஞ்சம் சின்னதா எழுதக்கூடாதா... இதென்ன அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரையா, பொறுமையா படிக்க? :) :)//

என்ன தலைவா நீங்களும்..?

இதை நான் சின்னதா எப்படி எழுதறது..?

கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்..

Anonymous said...

ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி

ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி

ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி

ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி

ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி

உண்மைத்தமிழன் said...

///முத்து தமிழினி said...
கேபிள் ஆசாமியை பழிச்ச மாதிரியும் ஆச்சு. அப்படியே ஒரு துக்ளக் கருத்தை விதைச்ச மாதிரியும் ஆச்சு.//
ஆமாம் இவருக்கு பிடிக்காத கருத்தை யாராவது சொல்லிபுட்டா உடனே விளுந்து அடிச்சு ஓடு வந்துடுவாருப்பா இவரு.//
:) வேற எப்படாப்பா வர்றது? நீயெல்லாம் இப்ப என்னை இன்னும நெனச்சிட்டு ஓடோடி வரல்லயா :)///

ஒரு பாசந்தான் முத்து ஸார்..

அப்ப நிறைய பேர் மனசுக்குள்ள நீங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க..

உண்மைத்தமிழன் said...

//துரியோதனன் said...
:)//

துரியோதனன் ஸார்..

தங்களுடைய மிகப் பெரிய பின்னூட்டத்திற்கு எனது மிகப் பெரிய நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//ரசிகன். said...
உண்மைத்தமிழா, சூப்பர் போஸ்ட்.
வயிற்றெரிச்சல் பார்ட்டிகளுக்கு சரியான மருந்து. அடுத்தவன் முன்னேற்றத்தில் நொந்துபோகும் வீணாப்போனவர்களுக்கு சரியான சுளுக்கு. பொறாமைப் பேய்களுக்கு கொடுக்கும் சரியான தண்டனை.
மொத்தத்தில் ரஜினியை திட்டி எழுதி பேமஸாக நினைக்கும் பேமானிகளின் ஜட்டியை உருவிட்டீங்க.//

ஐயகோ..

ஜட்டியை உருவறதெல்லாம் சட்டமன்றத்துலதான செய்வாங்க..

இதையெல்லாம் இப்படியா கம்ப்பேர் பண்றது? தப்பு ரசிகா.. தப்பு..

கருத்து வேறுபாடுகளை கருத்தால்தான் மாற்றிக் கொள்ள வேண்டும்.. முடியும்.. அதுதான் நல்லது..

உண்மைத்தமிழன் said...

//suresh said...
Nanbare ungala ethuku munadi parthathuh ellai, ethuku munadi unga blog a padichathae ellai, thalaivar pathi padichan, athunala appadi enna cable eluthinaru padichitu unga post a padichan
First kodana kodi thanks, evalavu periya blog post padichu time porathe theriyala unmalaye neenga romba arumai a sonnninga nandri
Valgha nallavanga
Rajini is a gentle men, entha heights layum evalavu amathi,
Cable showed his bad attitude and dark side from his post.
Please carry on :-) dont speak with cable sankar, sorry namma auto sankar a veda mosamana mana noiyali.//

போச்சுடா சாமி..

சுரேஷ் கேபிளு நிசமாவே என்னோட தோஸ்த்துதான்.. பிரெண்டுதான்.. டெய்லி பேசுறவருதான்..

என்ன கொஞ்சம் கருத்து வேறுபாடுதான்.. கொள்கைல.. அம்புட்டுத்தான்..

அதுக்காக நீங்க சொல்ற மாதிரியெல்லாம் என்னால நினைக்கக் கூட முடியல..

விட்ருங்க சாமிகளோவ்..

Anonymous said...

மொத்தத்தில் ரஜினியை திட்டி எழுதி பேமஸாக நினைக்கும் பேமானிகளின் ஜட்டியை உருவிட்டீங்க.
hahaha epadiya ipadi elam eluthureenga

உண்மைத்தமிழன் said...

//நந்தா said...
தலைவரே இதுக்கு இவ்ளோவ் பெரிய பதிவா???? உங்கள் எழுத்துக்களை நீங்கள் அளவுக்கதிகமாய் காதலிக்கிறீர்களோ?? தெரியலை.//

அப்படித்தான் நான் நினைக்கிறேன் தம்பி.. எதையுமே லேசுல நிறுத்த முடியறதில்ல..

//வண்ணாந்துறையில பாவாடை காணாமப் போனாகூட அதை என் பேருல பழி போடுறாங்க யுவர் ஆனர்னு பாலாவோட இன்னொரு படத்துல கருணாஸ் சொல்லுவாரு.
ரஜினி ரசிகர்களின் அந்த படிவைப் பார்த்த உடன் எனக்கு இந்த வசனம் சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்து தொலைத்தது. ஆனால் நீங்களே சொன்ன மாதிரி இதற்கு மேல் ரசிகர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என்பதால் இன்னுமா திருந்தலை என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு உதடு பிதுக்கி நகர்ந்து விட்டேன். இதில் ரஜினியைப் பற்றியோ, பாலாவைப் பற்றியோ பேச ஒண்ணுமே இல்லை. அவர்கள் தவறு எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாய் நிகழ்ந்தவை இவை.
ஸ்கூலுக்கு போகும் 15 வயதுப் பொண்ணு கால் தடுக்கி கீழே விழுந்து முட்டியில் அடிபட்டதை "பருவப் பெண் பாவாடையில் ரத்தம்" என்று திரித்து சென்சேஷனல் செய்தியாய் வெளியிடும் பத்திரிக்கைகளை படித்து வளர்ந்தவர்கள். அவர்கள் இது போன்று தனது வசதிக்கேற்ப, தனக்கு பிடிச்ச மாதிரி பாமரத்தனமாய் செய்திகளை மாற்றியமைத்துக் கொள்வதில் வெட்கம் கொள்ள மாட்டார்கள்தான். ரஜினி மேல எல்லாம் எனக்கு என்ன கோபம். அவரு மூச்சு விடறதைக் கூட சூறாவளின்னு நினைச்சுக்கிற சிலர் மீதுதான் எனக்கு ஆழ்ந்த அனுதாபம்.
http://blog.nandhaonline.com//

நன்றி நந்தா..

ஊடகங்கள்தான் இதனைப் பெரிதாக்கி, எப்படியாவது பரபரப்பாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு ரசிகர்களை பலிகடாவாக்கிவிட்டார்கள்..

நம்மாளு கேபிளாரும் சேர்ந்து கொஞ்சம் பிசகிட்டாரு..

வருகைக்கு நன்றி நந்தா.. ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை..?

Unknown said...

Nee kannada veriyan rajini rasigan enbathu uruthi aaghi vittathu. Still you believe in Sottaji?
After the hoggenekkal debacle(rajini's andhar balti), most of the tamilians came to know the true color of rajini.

Now please dont start creating good image about the so called sappa star once again.

Tamilians are not fools to believe this...

Please post this comment. this came from my heart.

உண்மைத்தமிழன் said...

///குசும்பன் said...
//முந்தாநாள் வரைக்கும் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை உங்களை அலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்த எனக்கு, இந்தப் பதிவைப் படித்ததில் இருந்து போனை எடுத்து டயல் செய்யவே பிடிக்காமற் போய்விட்டது//
அண்ணே இதுதான் இத்தனை நாள் பழகி புரிஞ்சுக்கிட்டதா? தனக்கு பிடிக்காததை மற்றவர் செஞ்சா அவர் கூட பேசக்கூட பிடிக்காதா? என்ன பழக்க வழக்கம் இது!:((((///

கண்ணா.. நல்லவேளை மனசுக்குள்ள வைச்சுக்காம கேட்டியே..? அதுவரைக்கும் சந்தோஷம்..

அது ஒரு கோபத்தில் சொன்ன வார்த்தைகள் ராசா.. இப்ப நமக்கு யார் மேலயாவது திடீர்ன்னு கோபம் வந்தா ஒரு மணி நேரம், ஒரு நாள் பேசாம இருப்போம் பார்த்தியா..? அதே மாதிரிதான்..

ஆனாலும் பதிவைப் போடறதுக்கு முன்னாடி அவரும் பேசினாரு.. நானும் பேசினேன்.. நோ பிராப்ளம்..

//சஞ்சய்க்கும் எனக்கும் பல கருத்து வேறுபாடு உண்டு ஆனால் அந்த அன்பு இன்று வரை மாறாது.
அவர் காங்கிரஸ் தொண்டர். நான் புலி ஆதரவாளன்.//

ஐயகோ நான் புலி எதிர்ப்பாளன்..//

//இப்படி பல விசயங்கள் எனக்கு பிடிக்காததை அவர் எழுதி இருக்கிறார், அது போல் அவருக்கு பிடிக்காததை நான் எழுதி இருக்கிறேன்
அதனால் அவரிடம் பேச பிடிக்கவில்லை என்று சொன்னால் எப்படி இருக்கும்? மிகவும் அபத்தமாக இருக்கிறது:(((//

ஸாரி தங்கம்.. நீ கோச்சுக்குற மாதிரி அர்த்தத்தை அந்த வரிகள் கொடுத்திருச்சு..

இன்னிக்குக்கூட நானும், கேபிளும் பத்து தடவை பேசிட்டோம்.. வேண்ணா கேபிளுக்கு போன் செஞ்சு கேட்டுக்கோ..

இது பதிவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மட்டும்தான்.. வேற ஒண்ணுமில்ல..

நான் இருக்குற இருப்புல மனுஷங்களை பகைச்சுக்குவனா? உனக்குத் தெரியாதா..?

வருகைக்கும், அறிவுரைக்கும் நன்றி குசும்பா..

உண்மைத்தமிழன் said...

//என்.இனியவன் said...
good post. i ageee with u//

நன்றி இனியவன் அவர்களே..

உண்மைத்தமிழன் said...

//பாயும் புலி. said...
நெத்தியடி சகா நெத்தியடி.
இனியும் அவனுங்க திருந்தலன்னா அசிங்கமா கேட்டுபுட வேண்டியதான்.
ஒழுங்கா குளிக்காத கம்முனாட்டிங்கெல்லாம் ரஜினியப் பத்தி பேசவந்துட்டானுவ. நெத்தியடி சகா.//

பாயும்புலி ஸார்..

இதென்ன புதுக் கதையா இருக்கு..?

உண்மைத்தமிழன் said...

பின்னூட்டம் இட்ட தெய்வங்களே..

ஒரு சின்ன விஷயம் சொல்றேன்..

இந்தப் பதிவுக்குப் போய் மைனஸ் குத்தை நிறைய பேர் குத்திருக்காங்க.. என்னன்னே தெரியல..? எதுக்குன்னும் புரியல..

கிட்டத்தட்ட 66 பேர் பின்னூட்டம் போட்டிருக்கீங்க..

நீங்க எல்லாரும் பிளஸ் குத்து குத்திருந்தீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்..

இனிமே எந்தப் பதிவுக்குப் போனாலும், என் பதிவுக்குள்ள வந்தாலும் பிளஸ்ஸோ, மைனஸோ ஏதோ ஒண்ண குத்திட்டுப் போயிருங்க.. புண்ணியமாப் போயிரும்..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

///இருள்நீக்கி சுப்பு said...
//ரஜினி மேல எல்லாம் எனக்கு என்ன கோபம். அவரு மூச்சு விடறதைக்கூட சூறாவளின்னு நினைச்சுக்கிற சிலர் மீதுதான் எனக்கு ஆழ்ந்த அனுதாபம்.//
இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் திருந்தாது சாமி!! இந்த பின்னூட்டங்கள்ள இருந்தே படிச்ச சிந்திக்க தெரியாத முட்டா பயல்கள எல்லாம் தெரிஞ்சிக்கலாம்.//

சுப்பு ஸார்..

ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து கொள்வது கஷ்டமான விஷயம்.

ரஜினியைப் பொறுத்தமட்டில் அவர் ரசிகர் மன்றங்களை பொதுநலச் சேவையிலும், ஆன்மிகத்திலும் திசை திருப்ப முயன்று கொண்டு வருகிறார்.

ஆனால் அரசியல்தான் அவரையும், அவரது ரசிகர்களையும் விட மறுக்கிறது..

காரணம் வெரி சிம்பிள் ஸார்..

வேறு யாரும் இங்கே சூப்பர் ஸ்டார் இல்லை.. அதுதான்..

வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் சுப்பு ஸார்..

உண்மைத்தமிழன் said...

//பரக்கத் அலி said...
பாலாவுக்கு அவர் பதிலடி கொடுத்தார்... நீங்க கேபிளுக்கே மின்சாரம் கொடுக்குறீங்களே..//

பரக்கத் செளக்கியமா..?

அவர் எங்க பாலாவுக்கு பதிலடி கொடுத்தாரு..? அதுக்குப் பேரு காத்துல இல்லாத ஆளை இருக்குன்னு நினைச்சு கத்திய வீசுன கதைதான்.

எங்க ரெண்டு பேர் கதையும் இப்ப கந்தலாயிருச்சு.. பார்த்தீங்கள்ல..

உண்மைத்தமிழன் said...

///டண்மான டமிளன் said...
//கேபிளு, எல்லாருக்கும் நேரமில்ல போலிருக்கு.. அதான் தப்பிச்சிட்டீரு..//
ஆமா இது ஒரு பெரிய பிரச்சினை. வேல வெட்டி இல்லாதவந்தான் இப்படி பத்தி பத்தியா எழுதுவான். ரஜினி மாதிரி ஒரு மொக்கைக்கு இவ்வளவு சவுண்டு ஓவரு!///

அடப்பாவி டன்மான தமிழா..

ரஜினி மொக்கையா..?

அனானியா வந்ததால தப்பிச்ச மவனே.. பொழைச்சுப் போ..

உண்மைத்தமிழன் said...

//புருனோ Bruno said...
நல்ல எழுத்து நடையில் எழுதியிருக்கிறீர்கள் தலைவரை.//

ஐயோ இது யாராக்கும்..?

புருனோ ஸாரா..?

ஆச்சரியமா இருக்கு..?

ஜனாதிபதி, பிரதமர் ரேஞ்ச்சுக்கு சில பதிவுல மட்டும்தான் தலையைக் காட்டுவாரு.. இன்னிக்கு அவரோட தலைவர்ன்ன உடனே நம்ம வூட்டுக்குள்ள வந்திருக்காரு..

நன்றி ஸார்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி
ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி
ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி
ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி
ரஜினி ஒரு அப்பட்டமான வியாபாரி.//

உண்மைதான்..

தன்னிடம் திறமையும், பொருளும் இருக்கு.. விற்கிறார்.. விற்பனை கட்டுப்படியானவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். பயன்படுத்திக் கொள்கிறார்கள்..

இதில் என்ன தவறு இருக்கு அனானி..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
மொத்தத்தில் ரஜினியை திட்டி எழுதி பேமஸாக நினைக்கும் பேமானிகளின் ஜட்டியை உருவிட்டீங்க. hahaha epadiya ipadi elam eluthureenga//

ஐயையோ.. ஏன் இப்படி ஜட்டி அது, இது என்று எழுதுகிறீர்கள்..?

என்னமோ போங்கய்யா..

உண்மைத்தமிழன் said...

//Murali said...
Nee kannada veriyan rajini rasigan enbathu uruthi aaghi vittathu.//

அப்படியா முரளி.. ரஜினி கன்னட வெறியனா..? சூப்பர் கண்டுபிடிப்பு..

//Still you believe in Sottaji?
After the hoggenekkal debacle(rajini's andhar balti), most of the tamilians came to know the true color of rajini. Now please dont start creating good image about the so called sappa star once again. Tamilians are not fools to believe this. Please post this comment. this came from my heart.//

பப்ளிஷ்தான பண்ணணும் பண்ணிட்டேன்..

ஆனா பதில் கேட்காத ராசா..

முட்டாள்தனமா இப்படி பேசினா நான் எங்கிட்டுப் போறது பதிலுக்கு..?

நல்லாயிரு..

Anonymous said...

Raja said...
Sema Comedy Post sir...Atheppadi sir sirikkama ippadi rajini ah pugalreenga..Tamilnadu nasama ponathukku rajinium oru karanum. Unga Manachatchia kelunga, athu sollum...
----------------------------------
இவரு யாருக்கு வோட்டு போட்டாருன்னு தெரியல.

போட்ட வோட்ட நியாபகப்படுத்தி அவங்கள போய் கேக்க சொல்லுங்க, தமிழ்நாடு உருப்படறதுக்கு ஐடியாவ!!!!

நல்ல சொல்றான்யா டீடயிலு ................
Gopi Anna,

Yarukku vottu pottomnathu kelvi illa. Rajini Tamilnada Nasam Pannama iruntharunnu thaan Kelvi..Eppadi Dedaillluuu???

Anonymous said...

//Raja said...
Sema Comedy Post sir... Atheppadi sir sirikkama ippadi rajiniah pugalreenga.. Tamilnadu nasama ponathukku rajinium oru karanum. Unga Manachatchia kelunga, athu sollum...//

என் மனசாட்சிதான் இதை எழுதச் சொல்லுச்சு அனானி..
/////
Sir,

My name is raja and i commented in the same name. Why are you calling me as anony. Please call me as Raja....

Ungaloda Karuthu enakku pidakka vittalum, ungaloda Nadai Nalla Iruggu..Athai Neenga Nalla Message sollurathukku use pannina nalla iruggum.

Oru Velai Neengalum, Cable Sangarum Engaley vaichu Comedy Kemedy Panna villeye...

உண்மைத்தமிழன் said...

///Raja said...
Gopi Anna, Yarukku vottu pottomnathu kelvi illa. Rajini Tamilnada Nasam Pannama iruntharunnuthaan Kelvi.. Eppadi Dedaillluuu???///

ராஜா ஸார்..

இப்படி மொட்டையா ரஜினி மேல ஒரு குற்றச்சாட்டை சொன்னா எப்படி?

நாடு, நாசம்னு பேச்செடுத்தாலே நம்ம அரசியல்வியாதிகளைத் தவிர வேற யாரும் ஞாபகத்துக்கு வரல..

உங்களுக்கு ரஜினி வருது.. என்ன செய்யறது?

பேசுங்க.. பேசுங்க..

உண்மைத்தமிழன் said...

//Raja said...
My name is raja and i commented in the same name. Why are you calling me as anony. Please call me as Raja....//

சரிங்க ராஜா அவர்களே.. சொல்லுங்க..

//Ungaloda Karuthu enakku pidakka vittalum, ungaloda Nadai Nalla Iruggu.. Athai Neenga Nalla Message sollurathukku use pannina nalla iruggum.//

இப்ப நான் சொல்லிருக்கிறதுகூட நல்ல மெஸேஜ்தான் ராஜா..

Anonymous said...

Rajini is a successful businessman, we can learn business techniques from him., he knows how to utilise the situations in his favour. He will go to any extent, and he'll do anything for his survival. If he's really a gentlemen, he should keep up his words and enter politics or else he should stop delivering steamy dialogues. Its really sad, still some people beleive him.

Ramesh

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Rajini is a successful businessman, we can learn business techniques from him., he knows how to utilise the situations in his favour. He will go to any extent, and he'll do anything for his survival. If he's really a gentlemen, he should keep up his words and enter politics or else he should stop delivering steamy dialogues. Its really sad, still some people beleive him.
Ramesh//

ரமேஷ் ஸார்..

ரஜினி சக்ஸஸ்புல்லான பிஸினஸ்மேன் என்றால் அதற்கு மூலதனம் என்ன..? பணமா..? கம்பெனியா..?

இல்லியே.. அவர்தானே.. தன்னை வைத்துதானே வியாபாரமே என்கிறபோது அவர் அதனை கடைசிவரையில் காப்பாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

அரசியலைவிட கலைத்துறையில் தான் முதல்வனாக இருப்பதையே ரஜினி அதிகம் விரும்புகிறார் என்பதைத்தான் நான் திரும்பத் திரும்ப இந்தப் பதிவில் சொல்லி வருகிறேன்.

வருகைக்கு நன்றி ரமேஷ்..

ThiruMuru said...

//Still you believe in Sottaji?
After the hoggenekkal debacle(rajini's andhar balti), most of the tamilians came to know the true color of rajini. Now please dont start creating good image about the so called sappa star once again. Tamilians are not fools to believe this. Please post this comment. this came from my heart.//

////***பப்ளிஷ்தான பண்ணணும் பண்ணிட்டேன்..

ஆனா பதில் கேட்காத ராசா..

முட்டாள்தனமா இப்படி பேசினா நான் எங்கிட்டுப் போறது பதிலுக்கு..?

நல்லாயிரு..***////


Hello உண்மைத்தமிழன்!
நீங்க ரொம்ப அறிவாளித்தனமா பேசுறதா நெனப்பா? ரஜினிய பத்தி உயர்வா பேசும்போதே உங்க intelligence தெரிஜ்சது.
1000 பெரியார் வந்தாலும் உங்கள மாதிரி ஆள் இருக்கின்ற வரை தமிழ்நாட்டை திருத்த முடியாது.

நீயும் ரொம்ப நல்லா இரு.

ThiruMuru said...

//Still you believe in Sottaji?
After the hoggenekkal debacle(rajini's andhar balti), most of the tamilians came to know the true color of rajini. Now please dont start creating good image about the so called sappa star once again. Tamilians are not fools to believe this. Please post this comment. this came from my heart.//

////***பப்ளிஷ்தான பண்ணணும் பண்ணிட்டேன்..

ஆனா பதில் கேட்காத ராசா..

முட்டாள்தனமா இப்படி பேசினா நான் எங்கிட்டுப் போறது பதிலுக்கு..?

நல்லாயிரு..***////


Hello உண்மைத்தமிழன்!
நீங்க ரொம்ப அறிவாளித்தனமா பேசுறதா நெனப்பா? ரஜினிய பத்தி உயர்வா பேசும்போதே உங்க intelligence தெரிஜ்சது.
1000 பெரியார் வந்தாலும் உங்கள மாதிரி ஆள் இருக்கின்ற வரை தமிழ்நாட்டை திருத்த முடியாது.

நீயும் ரொம்ப நல்லா இரு.

Please post this comment also....

உண்மைத்தமிழன் said...

///ThiruMuru said...
/Still you believe in Sottaji?
After the hoggenekkal debacle(rajini's andhar balti), most of the tamilians came to know the true color of rajini. Now please dont start creating good image about the so called sappa star once again. Tamilians are not fools to believe this. Please post this comment. this came from my heart./
//***பப்ளிஷ்தான பண்ணணும் பண்ணிட்டேன்.. ஆனா பதில் கேட்காத ராசா.. முட்டாள்தனமா இப்படி பேசினா நான் எங்கிட்டுப் போறது பதிலுக்கு..? நல்லாயிரு..//
Hello உண்மைத்தமிழன்!
நீங்க ரொம்ப அறிவாளித்தனமா பேசுறதா நெனப்பா? ரஜினிய பத்தி உயர்வா பேசும்போதே உங்க intelligence தெரிஜ்சது.
1000 பெரியார் வந்தாலும் உங்கள மாதிரி ஆள் இருக்கின்றவரை தமிழ்நாட்டை திருத்த முடியாது.
நீயும் ரொம்ப நல்லா இரு.///

இதுக்கெதுக்கு சாமி பெரியாரை இழுக்குறீங்க..?

உண்மைத்தமிழன் said...

///ThiruMuru said...
//Still you believe in Sottaji?
After the hoggenekkal debacle(rajini's andhar balti), most of the tamilians came to know the true color of rajini. Now please dont start creating good image about the so called sappa star once again. Tamilians are not fools to believe this. Please post this comment. this came from my heart.//

////***பப்ளிஷ்தான பண்ணணும் பண்ணிட்டேன்..

ஆனா பதில் கேட்காத ராசா..

முட்டாள்தனமா இப்படி பேசினா நான் எங்கிட்டுப் போறது பதிலுக்கு..?

நல்லாயிரு..***////
Hello உண்மைத்தமிழன்!
நீங்க ரொம்ப அறிவாளித்தனமா பேசுறதா நெனப்பா? ரஜினிய பத்தி உயர்வா பேசும்போதே உங்க intelligence தெரிஜ்சது.
1000 பெரியார் வந்தாலும் உங்கள மாதிரி ஆள் இருக்கின்ற வரை தமிழ்நாட்டை திருத்த முடியாது.
நீயும் ரொம்ப நல்லா இரு.
Please post this comment also....///

பண்ணியாச்சுல்ல..

mvalarpirai said...

அண்ணாத்தே ! ரஜினி வல்லவரு.நல்லவரு..எல்லாத்தைய்ம் ஒத்துக்குவோம் !

கேள்வி 1 : ரஜினி எல்லாருக்கும் நல்லவனாக இருக்க ஆசைப்படுறார்..கொலைகாரனுக்கு நண்பன்....கொலைசெய்யப்பட்டவனுக்கும் நண்பன்..உதாரணம்..இவரே வாட்டாள் நாகராஜுக்கு நண்பர்..இவரே தான் அவரை திட்டினாரு..அப்புறம் தயாரிப்பாளர் கேட்டாருனே உடனே மன்னிப்பு ! அவர் பேசியதிக்கு ஒரு விளக்கம் தேவைப்படுது அந்த அளவுக்கு தெளிவா பேசுராரு மனுசன்..கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை ...அப்ப அந்த நிமிசத்தில் என்ன தோணுதோ அத நாங்களும் நீனும் பேசலாம்..அவருக்கு பின்னால சில் வெறித்தன மான ரசிகர்கள் இருக்கிறவரு பேசலாமா ? யாரு உங்க ரோல் மாடல்னு எங்க்லிஷ் சேனல் கேட்டா..அமிதாப்பச்சன்னு சொல்ராரு...தமிழ் சேனல் கேட்டா சிவாஜினு சொல்ராரு ஏன்பா ?

கேள்வி 2 : // எத்தனை கோடி ரூபாயை தமிழக அரசுக்கு வரியாகக் கிடைக்கச் செய்திருப்பார்..?எத்தனை பேரை லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக ஆக்கியிருப்பார்..? எத்தனை தொழிலாளர்களை தனது படத்தின் மூலம் வாழ வைத்திருப்பார்..?

எத்தனை பேருனு சொன்னா வசதியா இருக்கும்....அவரு சொந்த தயாரிப்புகள் நிரைய படங்கள்....எத்தனை பேரு தன் சம்பளத்தை ரஜினிக்காக போஸ்டர் அடிக்க,பால் ஊத்த, முதல் நாள் படம் பார்க்க செலவழித்தான் தெரியுமா? அவன் பணத்தை எல்லாம் புடுங்கி ஒருத்தன்/சில பேருகிட்ட கொடுத்திருக்கிறார் ரஜினி ! அதுக்கு அவருக்கு பாராட்டு மழை..பால் மழை!
ரஜினியா ஊத்த சொன்னாருனு நீங்க கேட்பீங்க ! இவரருக்கு உடன் பாடு இல்லைனா..அவங்களை அவர் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்க வேண்டியதுதானே ?!

கேள்வி 3 : // ரசிகர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.. இருக்கத்தான் செய்யும். ஆனால் தலைவர் பிடிக்கவில்லை என்கிறாரே.. //

தலைவர் பிடிக்கவில்லைனு சொன்னாதான் பரவாயில்லையே..நான் வரலாம்..வரலாமலும் போகலாம்ல சொல்ராரு..வரும் ஆனா வராதுனு வடிவேல் காமெடி மாதிரில சொல்ராரு.அதனால இந்த பைத்தியாகார பசங்க நம்மலும் அரசியலில் குதித்து சம்பாரிக்கலாம்னு கனவு காண்டுகிட்டு இருங்காங்க ! அதில் சில பேர் ஏற்கனவ நடந்த தேர்தலிலில் ரஜினி பேரை சொல்லி பொறுக்கி தின்றார்கள்..(அதை ரஜினி கண்டுகமாட்டார்..ஏனா அவருக்கு ஒண்ணும் நஸ்டம் இல்லை)..வரமாட்டேன் இல்லை வருவேனு சொல்லிட்டு போய்டவேண்டியதுதானப்ப..ஏன் வரமாட்டேன் சொன்னா அவர் படம் ஓடாதுனு கஸ்டபடுறாரு..! இத்தனை நாள் ரசிகர் சந்திக்காதவரு..எந்திரன் படம் வருதுனோ ரசிகர்கள் மீது ஏன் தீடிர் பாசம்?

கேள்வி 5 : எத்தனை லட்சம் ரசிகர்களுக்கு திரையரங்கில் ஒரு மூன்று மணி நேரங்கள் மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்திருப்பார்..? //
" சகீலா கூடதான் ரசிகர்களுக்கு மன அமைதியாயும் சந்தோசத்தையும் கொடுத்தார்." இது எல்லாம் ஒரு ரீசனா...மத்த வங்க எல்லாம் என்ன ரசிகர் எல்லாம் சாவனும்ன படம் எடுக்கிறான்.அடப் போங்க தலை..அவர் புகழ் பாடுவதை விட்டிடு குழந்தை குட்டிகளை படிக்க வைங்கோ !

Sri said...

Super post. kalakiteenga. :-)

உண்மைத்தமிழன் said...

mvalarpirai ஸார்..

உங்க சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நன்றி..

பதில்தானே.. எல்லாத்தையும் இதுலயே எழுதியிருக்கேன்.. நீங்க மறுபடியும் கேட்டீங்கன்னா எப்படி?

உங்க மனசுல அவர் பேர்ல ஒரு மரியாதை இல்லாம இருக்கலாம். அது உங்களுடைய உரிமை..

ஆனா என் மனசுல இருக்கு.. அதுக்கான காரணத்தையும் நான் சொல்லியிருக்கேன்.. இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியாது..

உண்மைத்தமிழன் said...

//Sri said...
Super post. kalakiteenga. :-)//

மிக்க நன்றி..

Muthukumara Rajan said...

First of all thanks for this blog.
i am Rajini fans for the past 22 years now am 28.

i have some difference of opnion in your blog.

i accept that Jayalalitha period (91-96) is one of the wrost period of Tamil history. Please note it is one of the not the only government. i dont know that u know abotut the DMK period . (89-91) and between period between anna death and Mgr's Era. Admk period gained the worst name not only because of JJ activity slso because of media. Media always support DMK in most of the time. (ex: so many article about JJ wealth. anyone show me a single article about Mr. karunanidhi. is it mean that he is 100% pure.

People knows how he treated Police.
People knows activity of his sons Mr. Stalin and others.

even now no one write boldly about Alagiri.

another think which i assume that she is bold lady media which
is mostly a man made industry doesnt accept her only because bold lady.


so what happen is instand of taking a bad/worst person from the role she has been replaced by other farud . who lives always for his family.

paya kuripu
email address vichu address kandupuchu yaravathu oruthu kadi yoda vanthu adicha enna panurathu.

உண்மைத்தமிழன் said...

//muthukumar said...
First of all thanks for this blog.
i am Rajini fans for the past 22 years now am 28. i have some difference of opnion in your blog.
i accept that Jayalalitha period (91-96) is one of the wrost period of Tamil history. Please note it is one of the not the only government. i dont know that u know abotut the DMK period . (89-91) and between period between anna death and Mgr's Era. Admk period gained the worst name not only because of JJ activity slso because of media. Media always support DMK in most of the time. (ex: so many article about JJ wealth. anyone show me a single article about Mr. karunanidhi. is it mean that he is 100% pure.
People knows how he treated Police.
People knows activity of his sons Mr. Stalin and others. even now no one write boldly about Alagiri.
another think which i assume that she is bold lady media which
is mostly a man made industry doesnt accept her only because bold lady. so what happen is instand of taking a bad/worst person from the role she has been replaced by other farud . who lives always for his family.
paya kuripu
email address vichu address kandupuchu yaravathu oruthu kadi yoda vanthu adicha enna panurathu.//

முத்துக்குமார்,

இரண்டு கழகங்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று பெருந்தலைவர் காமராசர் சொன்னதில் எந்தத் தவறுமில்லை.. அதனை நானும் நம்புகிறேன்..

இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை..

சதவிகிதக் கணக்கில் பார்த்தால் அ.தி.மு.க. ஆட்சிக்கு தி.மு.க. ஆட்சி பரவாயில்லை என்றுதான் தோன்றும்..

நான் இருவருக்குமே வக்காலத்து வாங்கவில்லை. இருவருமே ஜனநாயகத்தின் எதிரிகள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் இவர்களைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்..?! அதுதானே இப்போது கேள்விக்குறி..?

Muthukumara Rajan said...

tamila,

thanks for ur acceptance.

i dont know in point of view ur telling the DMK govt. is better.

I accept that the we have no other go but In the 96 Rajini had a great chance. He may show his support to some good leader other than KK.

உண்மைத்தமிழன் said...

//Suresh said...
vithiyasamana pathivu thalaiva
Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha oru vote panunga :-)
Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html
கருணாநதி அரசு மருத்துவமனையில்? அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே, உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.//

படித்தேன் சுரேஷ்..

நன்று.. வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள். உண்மைதான்..

வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

வாழ்க வளமுடன்

uitda said...

Devaanandh - Rajini fan

I read a neutral and a true article about Rajini, by a non-fan, for the first time in my life. Thank you so much,

உண்மைத்தமிழன் said...

//muthukumar said...
tamila, thanks for ur acceptance. i dont know in point of view ur telling the DMK govt. is better.//

அதிகாரத் துஷ்பிரயோகம், ஊழல், நேர்மையின்மை, சகிப்புத் தன்மை இல்லாதது இவற்றில் ஜெயலலிதாவிற்கு கலைஞர் கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. அதனால்தான் குறிப்பிட்டேன்..!

//I accept that the we have no other go but In the 96 Rajini had a great chance. He may show his support to some good leader other than KK.//

உண்மை.. மறுக்க முடியாத உண்மை. ரஜினி அன்றைக்கு அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்க வேண்டும்.. விட்டுவிட்டார்.. அவர் போட்ட பிச்சையில்தான் அன்றைக்கு தி.மு.க.வும், த.மா.கா.வும் தப்பித்தன என்பதை அவர்களாலேயே மறக்க முடியாது..!

உண்மைத்தமிழன் said...

//uitda said...
Devaanandh - Rajini fan
I read a neutral and a true article about Rajini, by a non-fan, for the first time in my life. Thank you so much,//

நன்றி தேவானந்த்..

அவருடைய ரசிகராக இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டில் அவரை வைத்து வியாபாரம் செய்துவிட்டு, அவர் பெயரைப் பயன்படுத்திவிட்டு அவரையே கேலிக்குள்ளாக்கும் செயலை என்னால் ரசிக்க முடியவில்லை.. அதனால்தான் இந்தப் பதிவு..!

Maani said...

Arumaiyana, thelivana pathivu...!!!

Excellent..

People in web community are with perception, whoever likes rajini are not intellectuals and just blind followers of rajini the actor. But the truth is that, many of the fans if not most are diehard supporters than fans. They dont understand, there is a community which likes the work of kamal, views of periyar, speech of seeman, conduct of LTTE and still loves rajini just because the human being he is.

உண்மைத்தமிழன் said...

//Maani said...

Arumaiyana, thelivana pathivu...!!!

Excellent..

People in web community are with perception, whoever likes rajini are not intellectuals and just blind followers of rajini the actor. But the truth is that, many of the fans if not most are diehard supporters than fans. They dont understand, there is a community which likes the work of kamal, views of periyar, speech of seeman, conduct of LTTE and still loves rajini just because the human being he is.//

ரஜினிக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் அவருடைய நடிப்பைவிட அவருடைய தனிப்பட்ட குணநலன்களுக்காகத்தான் என்பது இங்கே பலருக்கும் புரிவதில்லை..

புரிந்து கொண்டால் நலமே..!

வருகைக்கு நன்றி மணி ஸார்..!