இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-22-01-2011

22-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சாதனை படைத்த புத்தகக் கண்காட்சி

ஒரு வழியாக 34-வது புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்துள்ளது. 14 நாட்கள் நடைபெற்றுள்ள இந்தக் கண்காட்சிக்கு ஏறக்குறைய 12 லட்சம் மக்கள் வந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 80000 பேர் வந்து சென்றுள்ளனர். மொத்தமாக 7.5 கோடி ரூபாய்க்கு புத்தக விற்பனை நடந்துள்ளது. இதுவரையில் நடந்துள்ள கண்காட்சிகளின் விற்பனையைக் கணக்கிட்டால் இதுதான் அதிகம் என்று 'பபாப்ஸி' சொல்கிறது.. வாழ்த்துக்கள்..

மக்கள் இந்த அளவுக்கு புத்தகங்களுக்காக பணத்தைச் செலவழித்திருப்பது பாராட்டுக்குரியது. வரவேற்புக்குரியது. புத்தக எழுத்தும், பதிப்பும் இன்னமும் தமிழ்நாட்டில் ஒரு சீரான தொழிலாக வளரவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் நிச்சயமாக அது நடைபெற்றே தீரும்போல தெரிகிறது..

646 பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். புத்தகங்களின் தலைப்பே 2 லட்சமாம். மொத்தமாக 5 கோடி புத்தகங்கள்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கைகள் நிச்சயமாக உயரும் என்றே நினைக்கிறேன். இந்த உயர்வுக்கு இந்த வருடத்திய விற்பனைத் தொகையும் ஒரு காரணமாக இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. 

இந்த வருடத்திய விற்பனையில் டாப் 5 லிஸ்ட் புத்தகங்கள் இது :

1. ஆனந்த விகடனின் "காலப்பெட்டகம்'
 2. தினத்தந்தியின் "வரலாற்றுச் சுவடுகள்'
 3. கல்கியின் "பொன்னியின் செல்வன்'
 4. கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்'
 5. ச.ந. கண்ணனின் "ராஜராஜசோழன்'

எத்தனை வருடங்கள் கடந்தாலும், புத்தகங்கள் புதிது, புதிதாக வந்தாலும் 'பொன்னியின் செல்வனும்', 'அர்த்தமுள்ள இந்து மதமும்' இப்போதும் சக்கைப் போடு போடுகின்றன என்பதே பெருமைக்குரிய விஷயம்..!

அதே சமயத்தில் நாஞ்சில் நாடனின் 'சூடிய பூ சூடற்க'  சிறுகதைத் தொகுப்பு 2650 பிரதிகள் விற்று இலக்கிய உலகில் சாதனை படைத்திருப்பதற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


லீனா மணிமேகலையின் செங்கடலுக்கு சென்சார் சான்றிதழ் மறுப்பு

கவிஞர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியிருக்கும் செங்கடல் படத்திற்கு தென் மண்டல சென்சார் போர்டும், மத்திய சென்சார் போர்டும் சான்றிதழ் தர மறுத்துள்ளன.

மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் சில திரைப்படங்களை சென்சார் போர்டு உறுப்பினர்களாக இருந்து தொலையும் சில அரசியல்வியாதிகள் தங்களது சக்தியை வைத்துத் தடுப்பது படைப்புத் திறனை முடக்குவதற்குச் சமமானது..!

அந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். ஒரே ஒரு இடத்தில் ஒரு வசனத்தைத் தவிர மற்றவைகள் ஏற்புடையவைதான்.. மாநில, மத்திய, சிங்கள அரசுகளை இடித்துரைக்கும் வசனங்கள் நிறையவே உள்ளன. ஆனால் இவைகள் அனைத்தும் உண்மையைத்தான் சொல்கின்றன. இங்கேதான் உண்மைக்கு மதிப்பில்லையே..!

தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் திரையிட வேண்டி இந்தச் சான்றிதழ் அவசியம் தேவைப்படுகிறது. தியேட்டர்களில் திரையிடும் அளவுக்கான தகுதியுடனும், பொருட்செலவுடனும் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கும் வேறு வழியில்லை..!

இலங்கை அகதிகளின் ராமேஸ்வர வருகையையும், அகதிகளின் பிரச்சினையையும், ராமேஸ்வர மீனவர்களின் அவதி வாழ்க்கையையும், சிங்கள துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியா மீனவர்களின் வாழ்க்கையையும், நமது அரசியல்வியாதிகளும், அதிகார வர்க்கமும், மீடியாக்களும் இலங்கை பிரச்சினையை அணுகுகின்றவிதமும் இத்திரைப்படத்தில் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

மீடியாக்களுக்கு போடப்படும் வாய்ப்பூட்டு என்கிற வகையில் இல்லாது, ஈழப் போராட்ட வரலாற்றில் சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் மத்திய, மாநில அரசுகளின் எதேச்சதிகாரத்தில் இதுவும் ஒன்று என்ற வகையிலாவது படைப்பாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்..!




எழுத்தாளர் தாமிராவின் கதைக்கு எதிர்ப்பு

எழுத்தாளரும், சினிமா இயக்குநருமான அண்ணன் தாமிரா சென்ற மாதம் தினமணி கதிரில் எழுதிய கல்லறை நகரம் என்ற சிறுகதையை எதிர்த்து நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதுவே இந்தக் கதையின் உயிர்ப்பை நிலை நாட்டுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.


திருநெல்வேலி அருகேயுள்ள ஓரிடத்தில் விளைநிலங்களையெல்லாம் பிளாட் போட்டு விற்கும் இன்றைய வியாபார உலகத்தனத்தை அந்தச் சிறுகதையில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த இடத்தின் வரலாறு தெரிந்துதான் எழுதியிருக்கிறார்.

நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் இருக்கிறதாம் இந்த இடம். முற்றிலும் விளைநிலங்களாக இருந்தப் பகுதி ரியல் எஸ்டேட்காரர்களின் கண்களில் பட்டுவிட்டதால் தற்போது இடமே பட்டுப் போய்விட்டது.




கை நிறைய கரன்சியைக் காட்டி நில உரிமையாளர்களிடம் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக வாங்கிவிட்டார்கள் புரோக்கர்கள். இன்னும் கொஞ்ச நிலம்தான் பாக்கி. தற்போது விளைந்திருக்கும் நெல்மணிகள் அறுவடை செய்யப்பட்டவுடன் அந்த நிலங்களும் ஸ்வாகா ஆகிவிடும் என்கிறார்கள். 

இந்தக் கதை தாங்கள் வீடு கட்டியிருக்கும் சாதனைக்கு பங்கம் விளைவித்திருக்கிறது என்று சொல்லி இப்படியொரு போஸ்டரை ஒட்டி தங்களது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். கூடவே அண்ணன் தாமிராவை போனில் தொடர்பு கொண்டு அவர் மீது வழக்குப் போடப் போவதாகவும் மிரட்டுகிறார்களாம்.

ஒரு பேனா.. ஒரு எழுத்து, ஒரு கதை.. என்ன செய்ய முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்..!

கல்லறை நகரம் சிறுகதைக்கான லின்க் இது :

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Kadhir&artid=352578&SectionID=146&MainSectionID=146&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88:%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

ஒரு மனைவியின் கோபம்


தனக்கு ஏற்கெனவே திருமணமானதை மறைத்துவிட்டுத் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிய அப்பாவி கணவன் மீது ஒரு கொடுங்கோல் மனைவி காவல்துறையில் புகார் கொடுத்திருந்தாராம்..!
 
விசாரணைக்காக அழைத்தவுடன் சட்டத்தை மதித்து போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதித்து உள்ளே வந்திருந்த கணவனை, ஒரு மரியாதைக்குரிய 40 வயதான ஆண் என்றுகூட பாராமல் கட்டிய மனைவியே அவனை அடுத்தாள் முன்பாக கை நீட்டி அடிக்கும் கொடுமையைப் பாரீர்..! பாரீர்..! 

இந்தக் கொடுமையைக் கேட்பாரே இல்லையா..? இந்தக் கொடுமைக்கார மனைவிகளிடமிருந்து அப்பாவி கணவர்களைக் காப்பாற்றுவது எப்படியோ..? இப்படியிருந்தால் நாட்டில் எப்படி மழை பொழியும்..? விளைச்சல் பெருகும்..! கட்டிய கணவன் மீது கை நீட்டும் சீதைகள் நிறைந்த பாரதமா இது..? ஐயகோ.. ராம ராஜ்ஜியத்தில் இப்படியெல்லாம் நடக்கலாமா..? 

ராமா. ராமா.. ராமா..!





திருட்டுப் போகாத சாகித்ய அகாடமி விருது

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு சாரல் விருது வழங்கும் விழாவில் பேசிய எழுத்தாளர் பாரதிமணி ஒரு சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அது உங்களுக்காக இங்கே :

“எண்பதுகளில் க.நா.சு. இறந்த பிறகு அவரது பரிசுப் பொருட்கள், மானுஸ்க்ரிப்ட் முதலியவை சென்னையிலிருந்து தில்லிக்கு வந்தன. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கொண்டு வந்த அட்டைப் பெட்டிகள் என் காரில் இருந்தன. காலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து நானும் அவற்றை காரிலேயே வைத்திருந்தேன்.

அன்றைய நாள் இரவில் அங்கு வந்த ஒரு திருடர், காருக்குள் இருந்த பெட்டிகளை  கிழித்துப் பார்த்திருக்கிறார். அதில் க.நா.சு.வுக்குப் பரிசாகக் கிடைத்த மூன்று வெள்ளித் தட்டுகள் - அதில் ஒன்று மறைந்த நம் எம்.ஜி.ஆர். கொடுத்தது - அதுவே சுமார் ஒன்றரை கிலோ எடையிருக்கும். - இன்னும் கையை விட்டு துழாவியதில் க.நா.சு.வின் சாகித்ய அகாடெமி பித்தளைப் பட்டயம்.. அதுவும் இருந்திருக்கிறது.

அதைப் பார்த்தவுடன், இந்த பித்தளை யாருக்கு வேண்டும் என்று அதை காருக்கடியில் வீசிவிட்டு, காரின் ஸ்டீரியோ செட், மூன்று வெள்ளித் தட்டுகள்.. இவற்றுடன் போனஸாக, காரில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய்  விலையுள்ள ஜெர்மன் பைப் லைட்டரையும் சுருட்டிக் கொண்டு போனார் அந்த மரியாதைக்குரிய திருடர்..!

அடுத்த நாள் காலையில் நான் வந்து பார்த்தபோது அந்தத் திருடருக்குக்கூட வேண்டாத சாகித்ய அகாடமியின் பித்தளைப் பட்டயம், சிவனே என்று காரின் அருகே கீழே கிடந்தது. க.நா.சு. பெற்ற விருதுகளில் அது ஒன்றுதான் இப்போது உருப்படியாக என் வீட்டில் இருக்கிறது!..”

நல்ல விஷயம்.. அரசு அமைப்புகள் தாமிர, பித்தளைப் பட்டயங்களை கொடுப்பதில் திருடர்களுக்குக்கூட உடன்பாடில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது.. கொஞ்சம் தங்கத்தில் கொடுத்தாலாவது திருடர்களிடமாவது பரிசு வாங்கியவர்களுக்கு மரியாதை இருக்கும்..! அரசாளர்கள் சற்று யோசிக்கட்டும்..!


துக்ளக்கில் வந்த அவதூறு

நமது வலையுலகப் பதிவர் முகில் தனது வலைத்தளத்தில் சினிமா தலைப்புகளை அரசியல்வாதிகளின் புகைப்படங்களுக்கு வைத்து ஒரு காமெடி செய்திருந்தார்.

இதனை இந்த வாரம் வெளிவந்திருக்கும் துக்ளக் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார் அதன் ரிப்போர்ட்டர் எஸ்.ஜே.இதயா. ஆனால் அதனுடன் சில தேவையற்ற வார்த்தைகளையும் எழுதியுள்ளார்.

இதயா எழுதியிருப்பது : "கம்ப்யூட்டர் அறிவை முதலீடாகக் கொண்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றாலும், ஓய்வு நேரங்களில் (அல்லது அலுவலக நேரங்களிலேயே திருட்டுத்தனமாய்) அந்த  கம்ப்யூட்டர் அறிவைப் பயன்படுத்தி நம்ம ஊர் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்வது நமது என்.ஆர்.ஐ.க்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..! கடந்த வாரம் என் கண்ணில்பட்ட சில கற்பனைகள் இங்கே :" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது முகிலின் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை அவர் அறிந்தாரா? அறியவில்லையா என்று தெரியவில்லை..! முகிலைத் தெரியவில்லை என்றால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அதென்ன “அந்த ஊர் கம்ப்யூட்டர் அறிவைப் பயன்படுத்தி நம்ம ஊர் அரசியல்வியாதிகளைக் கிண்டல் செய்வது..” என்கிற வார்த்தை..!

இதைப் படித்தவுடன் எனக்குச் சிரிப்புதான் வந்தது. “அந்த  கம்ப்யூட்டர் அறிவு..” என்று இதயா எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. முகில் போட்டோஷாப்பில் செய்திருக்கும் டகால்டி வேலைகளைத்தான் இப்படி குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். எப்படி இந்தக் கார்ட்டூன்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதுகூட தெரியாதவரா இதயா..?

துக்ளக்கில் அட்டைப் படத்தை கையாலேயே வரைவதால் கணினியில் பயன்படுத்துவதெல்லாம் நம் வேலை அல்ல என்று அவர் நினைத்துவிட்டாரோ..? துக்ளக்கின் தயாரிப்பு வேலைகளுக்கு கணினியைப் பயன்படுத்தாமல் இப்போதும் எழுத்துக் கூட்டி, பிளாக் வைத்துதான் தயாரிக்கிறார்கள் போலிருக்கிறது.

அப்புறம் இன்னொரு வார்த்தை.. “அலுவலக நேரங்களிலேயே திருட்டுத்தனமாய்..” என்றும் பயன்படுத்தியிருக்கிறார். முகிலின் இந்தக் கார்ட்டூன் எப்படி இதயாவின் கண்களுக்குப் பட்டது என்று தெரியவில்லை. இவர் இணையத் தளங்களைத் துழாவியது மட்டும் திருட்டுத்தனம் இல்லாமல் வேறென்னவாம்..? இவர் பாட்டுக்கு துக்ளக்கிற்கு கட்டுரை எழுத வேண்டியதுதானே..? ம்ஹூம்.. என்.ஆர்.ஐ.க்கள் என்றால் எல்லாருக்கும் இளக்காரமாத்தான் இருக்கு..!

(உஷ்.. அப்பாடா.. துக்ளக்கை மட்டும்தான் இதுவரைக்கும் திட்டாமல் இருந்தேன். இப்போது அதுவும் நிறைவேறிவிட்டது.)


ஆஸ்திரேலியாவில் வெள்ளம்

புயல், மழை, வெள்ளம் என்று அதிகம் நான் கேள்விப்பட்டிருக்காத ஆஸ்திரேயா தற்போது வெள்ளத்தில் மிதக்கிறது. பல்வேறு நகரங்களிலும் வெள்ள நீர் உட்புகுந்து நகரங்களை நாசமாக்கியிருக்கிறது.

தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த அரியக் காட்சியும் எனக்குக் காணக் கிடைத்தது..


ஒரு வெற்றி - இரட்டை மகிழ்ச்சி

சூடான் நாட்டில் அதன் தென் பகுதி மட்டும் தனி நாடாகப் பிரிவடைவது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளது இந்த ஆண்டின் துவக்கத்தில் கிடைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தி.


இதுநாள்வரைக்கும் அந்த நாட்டில் நடந்த இனப் படுகொலைகள், பிரிவினை கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், எதிர் போராட்டங்கள் என்று நாடே அழிவுப் பாதைக்கு வந்து ஐ.நா. அமைதி காப்புப் படையும், ஆப்பிரிக்க படைகளும் களமிறங்கியும் கட்டுக்குள் அடங்கவில்லை.

ஒரு வழியாக இப்போதுதான் ஐ.நா.வின் ஏற்பாட்டின்படி நடத்தப்பட்ட இந்த தேசம் தழுவிய வாக்குப் பதிவில் தேசத்தைப் பிரித்துவிடலாம் என்று மெஜாரிட்டியான மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஐ.நா.வின் 193-வது நாடாக மிக விரைவில் உருவாக உள்ளது தென் சூடான் நாடு. 

இது முதல் சந்தோஷம் எனில் இரண்டாவது இது தொடர்பானதுதான்..

விடுதலைப்புலிகளின் தற்காலிகமான தற்போதைய வீழ்ச்சிக்குப் பிறகு தனி நாடு கோரிக்கையை இலங்கையில் வசிக்கும் தமிழர்களே எழுப்பாத சூழலில் தனி நாடு கேட்டும், தனி அரசாங்கமே அமைத்தும் தமிழர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள்.

உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஓட்டளித்து தேர்வாகியிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு தென் சூடான் உருவாகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இது நிச்சயம் மிகப் பெரிய விஷயம்.

நாடு கடந்த தமிழீழப் பிரதிநிதிகளுக்கு இராஜதந்திர அந்தஸ்து இதன் மூலம் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். தென் சூடானைத் தொடர்ந்து வரும் காலங்களில் மற்றைய நாடுகளும் நமக்கு அங்கீகாரம் அளிக்கும்படியான சூழ்நிலைகள் வரும் என்றே நினைக்கிறேன். 


விபச்சார வழக்கில் ஒரு பிரபலம்

இந்தச் செய்தியைக் கேட்டவுடன் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இந்தம்மாவுக்கு அப்படியென்ன பிரச்சினை என்று இன்று காலை முதல் பரபரப்பாக பேசி வருகிறார்கள். எழுதி வருகிறார்கள்.


யமுனா என்ற இந்த தெலுங்கு திரையுலக நடிகை ராமாநாயுடு இயக்கிய 'மெளனப் போராட்டம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். 'மனதில் உறுதி வேண்டும்' - தமிழ்த் திரைப்படத்தில் சுஹாசினிக்கு தங்கையாக நடித்தவர் இவர்.

இப்போது கொஞ்சம் வயதான காரணத்தினால் அனைத்து சினிமா ரிட்டையர்ட்மெண்ட் பார்ட்டிகளும் செய்வதைப் போல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து தனது திறமையைக் காட்டி வருகிறார். நானும் பார்த்திருக்கிறேன். அம்மா, அக்கா கேரக்டர்களில் திரைப்படங்களில்கூட நடித்திருக்கிறார். தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான 'அரசி,' 'செல்வி' சீரியல்களின் கன்னட பதிப்பில் இவர்தான் ராதிகா நடித்த கேரக்டரில் நடித்தவர்..!

ஆனால் நேற்று இரவு இவர் பெங்களூரில் விட்டல் மல்லையா சாலையில் இருக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டலான I.T.C.  Royal
Gardenia ஹோட்டலில் 4-வது மாடியில் 1402-வது எண் கொண்ட அறையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குறி வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார். இவருடன் 'பணி'யில் இருந்த  நந்தகுமார் என்பவர் Transoft Call Centre என்னும் சாப்ட்வேர் கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரியாம்.  

ஹோட்டலுக்கு வந்த போலீஸ் படை, நேராக இவர்கள் இருந்த அறைக்கே சென்று கைது செய்திருக்கிறார்கள். போட்டுக் கொடுத்த துரோகி யார் என்று தெரியவில்லை. யமுனா அப்போது கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயையும் போலீஸ் கைப்பற்றியுள்ளது. அந்த அறையில் இருந்த புரோக்கரும் பிடிபட்டிருக்கிறார்..! இதில் புரோக்கருக்குக் கிடைத்த கமிஷன் தொகையான 46,000 ரூபாயையும் போலீஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் அதே ஹோட்டலில் விபச்சாரம் தொடர்பாக 7 பேரையும் கைது செய்துள்ளது பெங்களூர் போலீஸ்.

யமுனா இப்போதும் 'அன்வேஷிதா', 'ரத்த சம்பந்தம்' என்று சில சீரியல்களில் நடித்து வருகிறாராம். இந்தம்மாவுக்கு அப்படியொண்ணும் சோத்துக்குப் பஞ்சமில்லை. பெயரும் ரிப்பேரில்லை. ஆனாலும் ஏன் இப்படி என்பதுதான் இன்றைய டாலிவுட்டின் ஹாட் டாபிக்..!

ஏதோ வலுக்கட்டாயமாக, வேறு வழியில்லாமல், சோத்துக்கே அல்லாடியதால் என்றெல்லாம் வசனம் பேசி விபச்சாரத்திற்கு உச்சுக் கொட்டுபவர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ..?


படித்ததில் ரசித்தது 



“நான் சில படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதாக நீங்கள் எண்ணம் கொண்டிருப்பது சரியில்லை. ஒரேயொரு படம்தான்.. பாலாஜி பிக்சர்ஸின் லைலா மஜ்னு படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். அதுவும் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும்தான். படத்தின் டைட்டிலில் வசனம் : வல்லிக்கண்ணம் என்று பெரிதாக போட்டிருந்தார்கள். ஸ்வர்ணலதா நடித்து வெற்றிகரமாக ஓடிய இந்தி லைலா மஜ்னுவை அப்படியே பிரேமுக்கு பிரேம் தமிழ்ப்படுத்தியிருந்தார்கள். அதில் ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே வெவ்வேறு எழுத்தாளர்களை வசனம் எழுதச் சொல்லிப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  இதற்காக எனக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் கொடுத்தார் படத்தின் இயக்குநர் நாகூர்..”

- எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் நேர்காணலில் இருந்து...

பார்த்ததில் ரசித்தது 


47 comments:

bandhu said...

நன்றாக இருந்தது.
நீளம் கம்மியோ? உடம்புக்கு ஒன்னுமில்லையே?

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே !! எப்ப தான் தூங்குவீங்க?

வருண் said...

எந்த ஊர்லங்க இது நடந்தது (ஆடியோ கேக்கவில்லை) இந்தக் கொடுமை?

பாவம், அந்த ஆளை இந்த அடி அடிச்சு, அந்தம்மா கை வலிக்க்கப்போவுது! :(

கறையும் பட்டுவிடும்! :(

He must have hurt her so badly. But, it looks like she is the "villain" now! LOL

பெண்களை ஏன் மதிக்கனும்னா அவங்க திருப்பி அடிச்சா தாங்க முடியாது!

இன்னொரு பொம்பள-பொம்பளை சண்டையும் உங்க தளத்தில் பார்த்தேன்.

ஆமா, பெண்களெல்லாம் பாவம் இல்லைனு சொல்ல வர்றீங்களா? :))

Anonymous said...

துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில்(ஜெயா டி.வி.) ராஜபக்சே குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சோ விளக்கம் அளிக்கவில்லை. மர்மம் என்னவோ?

pudugaithendral said...

அண்ணே !! எப்ப தான் தூங்குவீங்க?//

சேம் க்வஸ்டீன் அண்ணேன்.

அந்த டீவி9ல இன்னொரு ந்யூஸும் பார்த்தேன். காதலித்து திருமணம் முடித்து முதல் மனைவியுடன் குழந்தையும் இருக்கும் டாக்டர் இன்னொரு பெண்ணை விஜயவாடாவில் திருமணம் செய்யப்போக இந்தப் பெண் போலீஸில் கேஸ் கொடுக்க திருமண மண்டபத்தில் வந்து அரெஸ்ட் செய்து போனார்கள். ஸ்டேஷனுக்கு போன மாப்பிள்ளை,”எல்லோருக்கும் அவமானம் வரும்படி இப்படி செஞ்சிட்டேனேன்னு” அழுவாச்சி அழுவாச்சியா வந்து அழுதாரு பாருங்க.. நிக்க வெச்சு சுடணும்னு தோணிச்சு.


வீடியோவுல இருக்கறாப்ல அடிச்சால்லாம் பத்தாது.

Jackiesekar said...

அண்ணே அசத்தல் அண்ணே..கலக்குங்க..

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...
நன்றாக இருந்தது. நீளம் கம்மியோ? உடம்புக்கு ஒன்னுமில்லையே?]]]

நீளம் கம்மியா..? ஒருத்தர் நீளம்ன்றீங்க..? இன்னொருத்தர் கம்மின்றீங்க..? ம்ஹும்.. அடப் போங்கப்பா..! எனக்கு முடியலை..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-22-01-2011//

அண்ணே புதினா சட்னி இல்லை?

உண்மைத்தமிழன் said...

[[[குறை ஒன்றும் இல்லை !!! said...
அண்ணே !! எப்பதான் தூங்குவீங்க?]]]

ராத்திரி 1 மணிக்கு மேல நிச்சயமா தூங்கிருவேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

எந்த ஊர்லங்க இது நடந்தது (ஆடியோ கேக்கவில்லை) இந்தக் கொடுமை?]]]

ஆந்திரா..!

[[[பாவம், அந்த ஆளை இந்த அடி அடிச்சு, அந்தம்மா கை வலிக்க்கப்போவுது! :(
கறையும் பட்டுவிடும்! :(]]]

ஹா.. ஹா.. இதையெல்லாம் பார்ததா முடியுமா..? பெண் பாவம் பொல்லாதது வருண்.. அம்மணியின் கோபம் அப்படி..!

[[[He must have hurt her so badly. But, it looks like she is the "villain" now! LOL]]]

உண்மைதான். மூணு கல்யாணம் செஞ்சா கோபம் வராதா..?

[[[பெண்களை ஏன் மதிக்கனும்னா அவங்க திருப்பி அடிச்சா தாங்க முடியாது!]]]

ஒத்துக்கலாம்.. அதுனாலதான் பெண் பாவம் பொல்லாததுன்னு அழுத்தி, அழுத்திச் சொல்றாங்க..!

[[[இன்னொரு பொம்பள-பொம்பளை சண்டையும் உங்க தளத்தில் பார்த்தேன். ஆமா, பெண்களெல்லாம் பாவம் இல்லைனு சொல்ல வர்றீங்களா? :))]]]

ரொம்பப் பாவம்.. நீங்க அவங்களைத் தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லத்தான் எடுத்துப் போட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...
துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் (ஜெயா டி.வி.) ராஜபக்சே குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சோ விளக்கம் அளிக்கவில்லை. மர்மம் என்னவோ?]]]

நான் அதனைப் பார்க்கவில்லை நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[புதுகைத் தென்றல் said...

அண்ணே !! எப்பதான் தூங்குவீங்க?//

சேம் க்வஸ்டீன் அண்ணேன்.]]]

பாசத்துக்கு நன்றிம்மா..!

[[[அந்த டீவி-9-ல இன்னொரு ந்யூஸும் பார்த்தேன். காதலித்து திருமணம் முடித்து முதல் மனைவியுடன் குழந்தையும் இருக்கும் டாக்டர் இன்னொரு பெண்ணை விஜயவாடாவில் திருமணம் செய்யப் போக இந்தப் பெண் போலீஸில் கேஸ் கொடுக்க திருமண மண்டபத்தில் வந்து அரெஸ்ட் செய்து போனார்கள். ஸ்டேஷனுக்கு போன மாப்பிள்ளை, ”எல்லோருக்கும் அவமானம் வரும்படி இப்படி செஞ்சிட்டேனேன்னு” அழுவாச்சி அழுவாச்சியா வந்து அழுதாரு பாருங்க.. நிக்க வெச்சு சுடணும்னு தோணிச்சு. வீடியோவுல இருக்கறாப்ல அடிச்சால்லாம் பத்தாது.]]]

ஓகே.. ஓகே.. சுட்ருங்க.. நான் என்ன வேணாம்னா சொல்றேன்..!? அப்பத்தான் நாலு பேருக்காச்சும் உங்க மேல கொஞ்சம் பயம் இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜாக்கி சேகர் said...
அண்ணே அசத்தல் அண்ணே.. கலக்குங்க..]]]

ஐ.. படு லோக்கலான என்னைய எல்லாம் நம்ம பெரிய அண்ணன் ஜாக்கி வாழ்த்த வந்திருக்காரு..

ரொம்ப சந்தோஷம்ண்ணே.. மறக்காம இருக்குறதுக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-22-01-2011//

அண்ணே புதினா சட்னி இல்லை?]]]

அடுத்த டிபன்ல சேர்த்து வைச்சுத் தரேன்..!

ரிஷி said...

///மீடியாக்களுக்கு போடப்படும் வாய்ப்பூட்டு என்கிற வகையில் இல்லாது, ஈழப் போராட்ட வரலாற்றில் சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் மத்திய, மாநில அரசுகளின் எதேச்சதிகாரத்தில் இதுவும் ஒன்று என்ற வகையிலாவது படைப்பாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்..! ///

யார் செய்வார்கள்?? :-)
மஞ்சள் துண்டாரின் மகிமைகளைப் பறைசாற்றுவதுதான் படைப்பாளின் வேலையாக இருக்கிறது! அதனால் யார் குரல் கொடுப்பார்கள்?!!

///இந்தக் கொடுமையைக் கேட்பாரே இல்லையா..? இந்தக் கொடுமைக்கார மனைவிகளிடமிருந்து அப்பாவி கணவர்களைக் காப்பாற்றுவது எப்படியோ..? இப்படியிருந்தால் நாட்டில் எப்படி மழை பொழியும்..? விளைச்சல் பெருகும்..! கட்டிய கணவன் மீது கை நீட்டும் சீதைகள் நிறைந்த பாரதமா இது..? ஐயகோ.. ராம ராஜ்ஜியத்தில் இப்படியெல்லாம் நடக்கலாமா..?
///

ரசித்தேன் :))

//அந்த ஊர் கம்ப்யூட்டர் அறிவைப் பயன்படுத்தி//

இப்படிக் குறிப்பிடப்படவில்லையே?? " கம்ப்யூட்டர் அறிவைப் பயன்படுத்தி" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது! ஆனாலும் இதயாவின் இந்த நக்கல் தேவையில்லாதது!

///ஏதோ வலுக்கட்டாயமாக, வேறு வழியில்லாமல், சோத்துக்கே அல்லாடியதால் என்றெல்லாம் வசனம் பேசி விபச்சாரத்திற்கு உச்சுக் கொட்டுபவர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ..?///

இங்கேயும் இந்தப் பெண்மணியைப் பற்றித்தான் குறைகூறுகிறோம். அந்த ஆணும் அரிப்பெடுத்துத்தானே சொறிந்து கொள்வதற்கு இந்தப் பெண்ணை நாடியிருக்கிறார். அந்த ஆணைக் குறைகூறுவார் இங்கே யாரும் இல்லை!

இந்த இருவரும் இப்படி நடந்து கொண்டதால் இந்த சமுதாயத்திற்கு என்ன பங்கம் ஏற்பட்டது? எதனால் போலிஸ் அவர்களைக் கைது செய்தது?

ராம்ஜி_யாஹூ said...

அருமை. நிறைய உழைத்து இருக்கிறீர்கள்

ஸ்ரீராம். said...

வழக்கம்போல் சுவை.

தின மலர் பதிவுலகில் பாபு பதிவை எடுத்து வெளியிட்டது..தினமணி ஜனவரி பதினொன்றாம் தேதி வலையுலகப் பதிவர்களை தாக்கி எழுதி இருந்தது. இப்போது துக்ளக்...எடுத்து உபயோகிப்பதில் குறைவில்லை இதில் இது வேறே...

IKrishs said...

நடிகை யமுனா மனதில் உறுதி வேண்டும் ல சுஹாசினி தங்கச்சியா வருவாங்க ..செல்வி ,அரசி சீரியல் இன் கன்னட version லும் இவங்களே ஹீரோஇன்

NADESAN said...

கடைசி போட்டோ எந்த ஊர் என்று சொல்லவில்லையே
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய்

Ganesan said...

அருமையான தொகுப்பு.
வாழ்த்துக்கள்.

Unknown said...

எப்படி சார்,உங்களால் மட்டும்...........
//ஒரு மனைவியின் கோபம்//
அந்த மனைவிக்கு சப்போர்ட் பண்றீங்களா?இல்ல கேலி பண்றீங்களா?,என்றுதான் புரிய மாட்டன் என்கிறது.

totally nice.

பரதேசித் தமிழன் said...

நல்ல அலசல் சார், நடிகைகள் விபச்சாரம் செய்வது சாப்பாட்டிற்காகத்தான் என்று யாரோ உங்களுக்குத் தவறான தகவலைத் தந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். விபச்சாரம் அவர்களுடைய ஆடம்பர வாழ்விற்குத் தேவையான உபரி வருமானத்திற்கான சுலபமான வழி, அவ்வளவே!

Unknown said...

நாடு கடந்த தமிழீழ அரசு விரைவில் தமிழீழ தனியரசாகும் ...

Adriean said...

//தனி நாடு கோரிக்கையை இலங்கையில் வசிக்கும் தமிழர்களே எழுப்பாத சூழலில் தனி நாடு கேட்டும், தனி அரசாங்கமே அமைத்தும் தமிழர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள். //
இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக கிழக்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இது பற்றிய செய்திகள் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. ஆனால் நீங்கள் இன்னொரு கனவு உலகத்தில் வாழ்கிறீர்கள்.

ராஜ நடராஜன் said...

உண்மை!எப்படியிருக்கீங்க?உங்களை சந்தித்த பின் இந்த வருட முதல் பின்னூட்டம்.

பதிவில் இரண்டு செய்திகளுக்கு பின்னூட்டம்.முதலாவதாக விளை நிலங்கள் வீட்டுமனைகளாவது வருத்தம் தருகிறது.கல்லறை நகரங்கள் பெருகி வருகிறதென்றே தெரிகிறது.

இரண்டாவது

//இதயா எழுதியிருப்பது : "கம்ப்யூட்டர் அறிவை முதலீடாகக் கொண்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றாலும், ஓய்வு நேரங்களில் (அல்லது அலுவலக நேரங்களிலேயே திருட்டுத்தனமாய்) அந்த கம்ப்யூட்டர் அறிவைப் பயன்படுத்தி நம்ம ஊர் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்வது நமது என்.ஆர்.ஐ.க்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..! கடந்த வாரம் என் கண்ணில்பட்ட சில கற்பனைகள் இங்கே :" என்று குறிப்பிட்டிருக்கிறார்.//

துக்ளக் சமைத்து சோ சாப்பிடாத அல்வாவையா என்.ஆர்.ஐகள் சாப்பிட்டு விட்டார்கள்?

இதயாவை மூன்று மாத விசிட்டிங் விசாவில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு போய் வரச்சொல்லுங்கள்.சொல்லப்போனா அரசு பணியாளர்களையும் வருடத்தில் ஒரு வருடம் அரசு செலவில் Probationery Trainee என்று சிறப்பாக செயல்படும் வெளிநாட்டு நிர்வாக அமைப்புகளுக்கு அனுப்பி வைப்பதும் என்.ஆர்.ஐகள் அல்வா சாப்பிடுவதை குறைக்கும்.

மேலும் புலிகள் இயக்கத்தின் சில அரசியல் கண்ணோட்ட தவறுகளையும்,ஈழமக்களின் படுகொலைகளையும் கூட வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாத சோ வுக்கெல்லாம் என்ன மனிதாபிமானமும் அடிப்படையில் மனிதனாகவும் விமர்சகனாகவும் இருக்கும் தகுதி இருக்க முடியும்?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

///மீடியாக்களுக்கு போடப்படும் வாய்ப்பூட்டு என்கிற வகையில் இல்லாது, ஈழப் போராட்ட வரலாற்றில் சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் மத்திய, மாநில அரசுகளின் எதேச்சதிகாரத்தில் இதுவும் ஒன்று என்ற வகையிலாவது படைப்பாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்..! ///

யார் செய்வார்கள்?? :-)
மஞ்சள் துண்டாரின் மகிமைகளைப் பறைசாற்றுவதுதான் படைப்பாளின் வேலையாக இருக்கிறது! அதனால் யார் குரல் கொடுப்பார்கள்?!!

நாமாவது குரல் கொடுக்க வேண்டும் ரிஷி..!

//அந்த ஊர் கம்ப்யூட்டர் அறிவைப் பயன்படுத்தி//

இப்படிக் குறிப்பிடப்படவில்லையே?? "கம்ப்யூட்டர் அறிவைப் பயன்படுத்தி" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது! ஆனாலும் இதயாவின் இந்த நக்கல் தேவையில்லாதது!]]]

மன்னிக்கணும். நானும் இதன் பின்புதான் கவனித்தேன். அந்த "ஊர்" எழுத்து எப்படி உள்ளே நுழைந்தது என்று தெரியவில்லை. திருத்திவிட்டேன். நன்றி..!

[[[இங்கேயும் இந்தப் பெண்மணியைப் பற்றித்தான் குறை கூறுகிறோம். அந்த ஆணும் அரிப்பெடுத்துத்தானே சொறிந்து கொள்வதற்கு இந்தப் பெண்ணை நாடியிருக்கிறார். அந்த ஆணைக் குறை கூறுவார் இங்கே யாரும் இல்லை!]]]

தெலுங்குலகின் அனைத்து சேனல்களிலும் அந்த வேணுகோபால் என்னும் மனிதரின் புகைப்படத்தையும் தொடர்ந்து காட்டியபடியேதான் உள்ளார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
அருமை. நிறைய உழைத்து இருக்கிறீர்கள்.]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

ஸ்ரீராம். said...
வழக்கம்போல் சுவை. தினமலர் பதிவுலகில் பாபு பதிவை எடுத்து வெளியிட்டது.. தினமணி ஜனவரி பதினொன்றாம் தேதி வலையுலகப் பதிவர்களை தாக்கி எழுதி இருந்தது. இப்போது துக்ளக். எடுத்து உபயோகிப்பதில் குறைவில்லை இதில் இது வேறே...]]]

ம்ஹும்.. நானே எடுத்தாண்டு வருகிறேன். அதனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் அந்த நக்கல் தேவையில்லாதது..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...
நடிகை யமுனா மனதில் உறுதி வேண்டும்-ல சுஹாசினி தங்கச்சியா வருவாங்க. செல்வி ,அரசி சீரியல் இன் கன்னட version-லும் இவங்களே ஹீரோஇன்..]]]

அப்படியா..? எனக்கு ஞாபகமில்லை.. தகவலுமில்லை. நன்றி கிருஷ்குமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[NADESAN said...

கடைசி போட்டோ எந்த ஊர் என்று சொல்லவில்லையே..?
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய்]]]

அதுவொரு சினிமா படத்தின் ஸ்டில்.. எந்தப் படம் என்று எனக்குத் தெரியவில்லை. விசாரித்து வருகிறேன். கிடைத்தவுடன் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[காவேரி கணேஷ் said...
அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்.]]]

நன்றிகள்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[malgudi said...

எப்படி சார்,உங்களால் மட்டும்...........

//ஒரு மனைவியின் கோபம்//

அந்த மனைவிக்கு சப்போர்ட் பண்றீங்களா? இல்ல கேலி பண்றீங்களா? என்றுதான் புரிய மாட்டன் என்கிறது.]]]

இன்னுமா புரியலை.. கணவனைத்தான் கிண்டல் செய்திருக்கிறேன்..!

totally nice.]]]

உண்மைத்தமிழன் said...

[[[பச்சத்தமிழன் said...
நல்ல அலசல் சார், நடிகைகள் விபச்சாரம் செய்வது சாப்பாட்டிற்காகத்தான் என்று யாரோ உங்களுக்குத் தவறான தகவலைத் தந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். விபச்சாரம் அவர்களுடைய ஆடம்பர வாழ்விற்குத் தேவையான உபரி வருமானத்திற்கான சுலபமான வழி, அவ்வளவே!]]]

ஹி.. ஹி.. ஹி.. நானும் நினைச்சதையே நீங்களும் சொல்றீங்களே பச்சத்தமிழன்..! நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

நாடு கடந்த தமிழீழ அரசு விரைவில் தமிழீழ தனியரசாகும் ...]]]

இதுதான் நம் கனவு.. நினைவாக வேண்டுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[Chandran said...

//தனி நாடு கோரிக்கையை இலங்கையில் வசிக்கும் தமிழர்களே எழுப்பாத சூழலில் தனி நாடு கேட்டும், தனி அரசாங்கமே அமைத்தும் தமிழர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள். //

இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக கிழக்கில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இது பற்றிய செய்திகள் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. ஆனால் நீங்கள் இன்னொரு கனவு உலகத்தில் வாழ்கிறீர்கள்.]]]

நிஜம்தான். அதே சமயம் இன்னொரு பக்கம் இன்னொரு பிரிவில் வேலை நடப்பதையும் சொல்லியாக வேண்டுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
உண்மை! எப்படியிருக்கீங்க? உங்களை சந்தித்த பின் இந்த வருட முதல் பின்னூட்டம்.]]]

நன்றி.. நலமாக இருக்கிறீர்கள்தானே..? சந்தோஷம் ஸார்..!

[[[பதிவில் இரண்டு செய்திகளுக்கு பின்னூட்டம். முதலாவதாக விளை நிலங்கள் வீட்டு மனைகளாவது வருத்தம் தருகிறது. கல்லறை நகரங்கள் பெருகி வருகிறதென்றே தெரிகிறது.]]]

கல்லறையில்கூட வீடு கட்டத் துவங்கிவிட்டார்கள்..! இதுதான் பணத்தாசை கொண்ட மனிதர்களாக நாம் மாறி வருவதற்கு அத்தாட்சி..!

[[[இரண்டாவது, துக்ளக் சமைத்து சோ சாப்பிடாத அல்வாவையா என்.ஆர்.ஐகள் சாப்பிட்டு விட்டார்கள்?
இதயாவை மூன்று மாத விசிட்டிங் விசாவில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு போய் வரச் சொல்லுங்கள். சொல்லப் போனால் அரசு பணியாளர்களையும் வருடத்தில் ஒரு வருடம் அரசு செலவில் Probationery Trainee என்று சிறப்பாக செயல்படும் வெளிநாட்டு நிர்வாக அமைப்புகளுக்கு அனுப்பி வைப்பதும் என்.ஆர்.ஐகள் அல்வா சாப்பிடுவதை குறைக்கும்.]]]

இப்போதும் அதைத்தானே செய்து வருகிறார்கள். வருடந்தோறும் சில ஐ.ஏ.எஸ்.களும், ஐ.பி.எஸ்.களும் மட்டும் தான்தோன்றித்தனமாக இந்தச் சலுகையை பயன்படுத்தி வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள்..!

[[[மேலும் புலிகள் இயக்கத்தின் சில அரசியல் கண்ணோட்ட தவறுகளையும், ஈழ மக்களின் படுகொலைகளையும்கூட வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாத சோவுக்கெல்லாம் என்ன மனிதாபிமானமும் அடிப்படையில் மனிதனாகவும் விமர்சகனாகவும் இருக்கும் தகுதி இருக்க முடியும்?]]]

எனக்கு அவரிடத்தில் பிடிக்காத சில விஷயங்களில் இதுவும் ஒன்று..!

நாகை சிவா said...

உனாதனா!

வணக்கம்.

தென் சூடான் தனி நாடாக ஆனால் ஐ.நா. 193 வது நாடாக அறிவிக்கப்படும். உங்களின் 197 கணக்கு எனக்கு புரியவில்லை.

தென் சூடான் தனி நாடாக கண்டிப்பாக வரும் என்பது உறுதி. ஆனால் ஐ.நா. வந்த பிறகு அமைதி படுத்த முடியவில்லை என்பது தவறு. 2005 ஆண்டில் அமைதி ஒப்பந்தம் சூடான் அரசுக்கும் தென் சூடான் பிரதிகளுக்கும் கையெழுத்தான பிறகு பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை. Malakkal, Abeyi போன்ற இடங்களில் மற்ற Rebels உடன் நடைபெற்ற சண்டைகள் தவிர.

மேலும் இதில் ஆப்பிரிக்க படைகளுக்கும் (AMIS) க்கு எந்த ஒரு வேலையும் கிடையாது. முழுக்க முழுக்க ஐ.நா. வை சார்ந்தது தான். ஆப்பிரிக்க படைகள் இருந்தது டார்பூர் என்ற இடத்தில். அதன் கதை தனிக்கதை.

இந்த வாக்கெடுப்பு தேசம் தழுவிய வாக்கெடுப்பு கிடையாது. தென் சூடான் மக்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட வாக்கெடுப்பு. உலக அளவில் நடைப்பெற்றது. சூடான் முழுவதும், உகாண்டா மற்ற சில நாடுகளின் நடைப்பெற்றது.

பிப்ரவரி முதல் வாரங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதை பற்றி மேலும் சில விபரங்கள் என் பதிவில் விரைவில் எழுத முயல்கிறேன்.

நாகை சிவா said...

ஐ.நா.வில் கடைசியாக அதாவது 192 வது நாடாக இணைந்த நாடு Montenegro என்னும் ஐரோப்பிய நாடு.

இதை தவிர்த்து சில நாடுகள் ஐ.நா.வில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. உ.தா. தைவான், வாடிகன் சிட்டி, கோசொவோ.....

கோவை செய்திகள் said...

மிகசிறப்பான வலைபூ. வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[நாகை சிவா said...

உனாதனா! வணக்கம். தென் சூடான் தனி நாடாக ஆனால் ஐ.நா. 193 வது நாடாக அறிவிக்கப்படும். உங்களின் 197 கணக்கு எனக்கு புரியவில்லை.]]]

மன்னிக்கணும் சிவா. நான்தான் சரியாகக் கவனிக்காமல் போட்டுவிட்டேன். இப்போது திருத்திவிட்டேன்..!

தென் சூடான் தனி நாடாக கண்டிப்பாக வரும் என்பது உறுதி. ஆனால் ஐ.நா. வந்த பிறகு அமைதிபடுத்த முடியவில்லை என்பது தவறு. 2005 ஆண்டில் அமைதி ஒப்பந்தம் சூடான் அரசுக்கும் தென் சூடான் பிரதிகளுக்கும் கையெழுத்தான பிறகு பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை. Malakkal, Abeyi போன்ற இடங்களில் மற்ற Rebels உடன் நடைபெற்ற சண்டைகள் தவிர.
மேலும் இதில் ஆப்பிரிக்க படைகளுக்கும் (AMIS) க்கு எந்த ஒரு வேலையும் கிடையாது. முழுக்க முழுக்க ஐ.நா. வை சார்ந்ததுதான். ஆப்பிரிக்க படைகள் இருந்தது டார்பூர் என்ற இடத்தில். அதன் கதை தனிக்கதை. இந்த வாக்கெடுப்பு தேசம் தழுவிய வாக்கெடுப்பு கிடையாது. தென் சூடான் மக்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட வாக்கெடுப்பு. உலக அளவில் நடைப்பெற்றது. சூடான் முழுவதும், உகாண்டா மற்ற சில நாடுகளின் நடைப்பெற்றது. பிப்ரவரி முதல் வாரங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும். இதை பற்றி மேலும் சில விபரங்கள் என் பதிவில் விரைவில் எழுத முயல்கிறேன்.]]]

போடுங்க பிரதர்.. நானும் தெரிந்து கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[நாகை சிவா said...

ஐ.நா.வில் கடைசியாக அதாவது 192 வது நாடாக இணைந்த நாடு Montenegro என்னும் ஐரோப்பிய நாடு.

இதை தவிர்த்து சில நாடுகள் ஐ.நா.வில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. உ.தா. தைவான், வாடிகன் சிட்டி, கோசொவோ.....]]]

ஓகே.. தகவலுக்கு நன்றி சிவா..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை செய்திகள் said...
மிக சிறப்பான வலைபூ. வாழ்த்துக்கள்.]]]

உமது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்பு விழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html]]]

சரக்கு எவ்வளவு அடித்தாலும் சரி.. தள்ளாடியாவது வீடு போய்ச் சேர வாழ்த்துகிறேன்..!

498ஏ அப்பாவி said...

இ​தொ இன்​னொரு ம​னைவியின் மிரட்ட​லை ​கேழுங்கள்

http://www.youtube.com/watch?v=97bC0UhOUR4

இ​தெல்லாம் நம்ப நாட்டில் இப்​பொ சர்வசாதரணம்

உண்மைத்தமிழன் said...

[[[498ஏ அப்பாவி said...

இ​தொ இன்​னொரு ம​னைவியின் மிரட்ட​லை ​கேழுங்கள்

http://www.youtube.com/watch?v=97bC0UhOUR4

இ​தெல்லாம் நம்ப நாட்டில் இப்​பொ சர்வ சாதரணம்]]]

அந்தப் பக்கமும் சில விதிவிலக்குகள் இருக்கு போல..!

Margie said...

எப்பிடி விபச்சாரம் பண்றவங்க பசிக்காகவும் பகட்டுக்காகவும் தான் பண்றாங்கன்னு முடிவுக்கு வந்திடறீங்க? அரசியல்வியாதிகளாலும் சினிமா / தொலைகாட்சி இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் இதர தொழிலாளிகளாலும் இந்த தொழிலுக்கு தள்ளப்படுராங்கன்ன்றது தான் உண்மை. அது மாதிரி ஆளுங்க பாவப்பட வேண்டியவங்களே தவிர கிண்டல் பண்ணபட வேண்டியவங்க இல்ல. இது வேதனைக்குரிய விஷயம். எல்லா விஷயத்திலயும் யோசிச்சு எழுதுற உங்களுக்கு ஏன் இது தோணலை?

உண்மைத்தமிழன் said...

[[[Margie said...
எப்பிடி விபச்சாரம் பண்றவங்க பசிக்காகவும் பகட்டுக்காகவும்தான் பண்றாங்கன்னு முடிவுக்கு வந்திடறீங்க?

அரசியல்வியாதிகளாலும் சினிமா / தொலைகாட்சி இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் இதர தொழிலாளிகளாலும் இந்த தொழிலுக்கு தள்ளப்படுராங்கன்ன்றதுதான் உண்மை. அது மாதிரி ஆளுங்க பாவப்பட வேண்டியவங்களே தவிர கிண்டல் பண்ணபட வேண்டியவங்க இல்ல. இது வேதனைக்குரிய விஷயம். எல்லா விஷயத்திலயும் யோசிச்சு எழுதுற உங்களுக்கு ஏன் இது தோணலை?]]]

மார்ஜி..

இந்தம்மாவுக்கு பணக் கஷ்டமில்லை. இந்தத் தொழிலில் யாரும் அவரைக் கட்டாயப்படுத்துவும் இல்லை. அவர் யாருடைய கன்ட்ரோலிலும் இல்லை. ஒரு மணி நேரத்துக்கு 2 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறார்.. அதாவது தான் ஒரு சினிமா ஹீரோயின் என்பதை வைத்துத்தான் தனது ரேட்டை பிக்ஸ் செய்திருக்கிறார். தவறு இவருடையதுதான். இவருடைய பண ஆசைதானே தவிர வேறில்லை..!