இந்த வருடமும் ஏமாற்றமளித்த பத்ம விருதுகள்..!

30-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2010-ம் ஆண்டுக்கான இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை மத்திய அரசு சென்ற வாரம் அறிவித்துள்ளது.

கலை, பொது நலச் சேவை, அறிவியல், தொழில் நுட்பம், தொழில் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, அரசுப் பணி என்று அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கி இதில் அப்போதைய ஆளும் அரசினை எதிர்க்காதவர்களை தேடிப் பிடித்து வாரி வழங்கி வருவதுதான் பத்ம விருதுகள்.

அவரது துறையில் உயர்ந்த, அரிய சாதனைகளைப் படைத்து புகழ் பெற்றிருக்கும் ஒருவருக்கு பத்ம விபூஷன் விருதும், சாதனை படைத்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதும், புகழ் பெற்றவர்களுக்கு பத்ம‚ விருதும் வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறுவதற்கு 1303 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் யோகா குரு பாபா ராம்தேவ், பேஷன் டிஸைனர் ரிட்டு பெரி, துப்பாக்கிச் சுடும் வீரர் தேஜஸ்வாணி சவாண்ட், நடிகை ஜெயபிரதா, பிரியங்கா சோப்ரா, சல்மான்கான் என்று பலரும் சிபாரி செய்யப்பட்டிருந்தார்கள்.

இவர்களுடன் கூடவே சாலை போக்குவரத்தில் நடைபெற்ற ஊழலைத் தட்டிக் கேட்டு படுகொலையான சத்யேந்திர துபே மற்றும் மஞ்சுநாத் சண்முகம் இருவரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஆனால் எதிர்பார்த்தது போலவே இவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை. இவர்கள் மட்டுமல்ல.. உத்தர்காண்ட் மாநில தற்போதைய முதலமைச்சர் ரமேஷ் போக்ரியல் தான் எழுதிய நிஷான்க் என்கிற புத்தகத்திற்காக இலக்கியப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாராம். இதோடு கூடவே ஒரிஸ்ஸா மாநில முன்னாள் முதலமைச்சர் கிரிதர் கொமாங்கின் பெயர் வாத்தியக் கருவியின் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரில் இருந்ததாம்.. நல்ல வேளை.. இவர்கள் இருவரின் பெயர்களும் இந்தாண்டுக்கான லிஸ்ட்டில் இல்லை.

இந்த ஆண்டுக்கான பட்டியலில் 12 பிரிவுகளின் கீழ் அயல் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் விருதுகளைப் பெறுகிறார்கள். 13 பத்ம விபூஷன் விருதுகள், 31 பத்ம பூஷன் விருதுகள், 84 பத்ம‚ விருதுகள் என மொத்தம் 130 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 17 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளும், ஜால்ராக்களும் பொதுச்சேவை என்கிற பிரிவின் கீழ் விருதினைப் பெற்றுள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

பத்ம விபூஷன் விருதினைப் பெற்றுள்ள கபில் வாத்ஸாயன், மற்றும் மாண்டேக்சிங் அலுவாலியாவைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்..!  மாண்டேக்சிங், பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆத்மார்த்தமான தோழர். “இந்திய விவசாயிகளுக்கு இன்னும் எத்தனை வருடம்தான் மானியம் தருவது..?” என்று சமீபத்தில்தான் மீடியாக்களிடம் அலுத்துக் கொண்டார் இந்த மாண்டேக்சிங். அந்த அளவுக்கு நல்ல மனிதரும்கூட..! இதற்காக பாரத்ரத்னா விருதைக்கூட இவருக்குக் கொடுத்திருக்கலாம்..!

இதில் ஆச்சரியப்படுத்தியிருக்கும் ஒரு விஷயம், அடல்பிகாரி வாஜ்பாயின் நெருங்கிய நண்பரும், அவருடைய ஆட்சிக் காலத்தில் 'சாணக்கிய குரு' என்ற பட்டத்தையும் பெற்றிருந்த பிரிஜேஸ் மிஷ்ராவிற்கு அரசு நிர்வாகத் துறையின் கீழ் பத்ம விபூஷன் விருதை வழங்கியிருப்பதுதான். என்ன லின்க்கோ தெரியவில்லை..!

கலைத்துறையின் சார்பில் தெலுங்குலகின் பழம் பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ், பத்ம விபூஷன் விருதினைப் பெறுகிறார். ஹிந்தி திரையுலகின் பழம் பெரும் நடிகர் சசிகபூர், நடிகை வஹிதா ரஹ்மான், இசையமைப்பாளர் ஹாயம் மற்றும் தமிழ்நாட்டின் பாடும் குயில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நால்வரும் பத்ம பூஷன் விருதினைப் பெறுகின்றனர்.

மேலும் நடிகைகள் கஜோல், தபு, நடிகர் இர்பான்கான், வங்காளத்தின் ஸ்வீட் மாமியார் உஷா உதூப், கன்னட இயக்குநர் கிரீஷ் காஸரவல்லி, மலையாள இயக்குநர் ஷாஜி கரூண், நடிகர் ஜெயராம் ஆகியோர் பத்ம
ஸ்ரீ விருதினைப் பெறுகிறார்கள். இதில் நடிகர் ஜெயராமிற்கு தமிழ்நாடு மாநில கோட்டாவில் விருது வழங்கப்பட்டுள்ளது எப்படி என்று எனக்குப் புரியவில்லை.

நான் வருடந்தோறும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, பிலிம் நியூஸ் ஆனந்தன், பி.பி.சீனிவாஸ், எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் என்ற உயரிய கலையுலகக் கலைஞர்கள் உயிரோடு இருக்கின்றபோதே பத்ம
ஸ்ரீ விருதாவது கொடுத்து இந்திய அரசு தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் என்று பார்க்கிறேன்.. ம்ஹூம்.. எனது ஆசை கனவாகவே இருந்து தொலைகிறது..!

டி.எம்.எஸ். எப்படியோ கஷ்டப்பட்டு 2003-ல் பத்ம
ஸ்ரீ விருதைப் பெற்றுவிட்டார். சுசீலாம்மா பத்ம பூஷன் விருதையே பெற்றுவிட்டார்கள். இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும்கூட பத்ம பூஷன் விருதினைப் பெற்றுவிட்டார்கள். பாடகி சித்ராவும்  பத்மஸ்ரீ விருதைப் பெற்றுவிட்டார்.

ஆனால் இவர்களுக்கும் மூத்த அந்தத் திரைக் கலைஞர்களுக்கு இன்னமும் பத்ம விருதுகள் கொடுக்கப்படாதது அதிர்ச்சியாக உள்ளது. இதனைப் பொறுப்பாக பரிந்துரைக்க வேண்டியவர்களே பாராமுகமாக இருக்கும்போது நாம் என்ன செய்ய..? கேவலம்..!

2010-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளின் முழுப் பட்டியல் இது :

பத்ம விபூஷன் விருது பெற்றவர்கள் :
 
1.    Dr. (Smt.) Kapila Vatsyayan  -  Art - Art Administration and Promotion. -   Delhi   
 
2.    Mrs. Homai Vyarawalla  -  Art - Photography -  Gujarat   
 
3.    Shri A Nageshwara Rao -   Art- Cinema - Andhra Pradesh   
 
4.    Shri Parasaran Kesava Iyengar -   Public Affairs -  Delhi   
 
5.    Dr. Akhlaq-ur-Rehman Kidwai  -  Public Affairs -  Delhi   
 
6.    Shri Vijay Kelkar  -  Public Affairs -  Delhi   
 
7.    Shri Montek Singh Ahluwalia -   Public Affairs - Delhi   
 
8.    Shri Palle Rama Rao  -  Science and Engineering - Andhra Pradesh   
 
9.    Shri Azim Premji  -  Trade and Industry - Karnataka   
 
10.    Shri Brajesh Mishra  -  Civil Services -  Madhya Pradesh   
 
11.    Prof. (Dr.) Ottaplakkal Neelakandan Velu Kurup  -  Literature and Education - Kerala   
 
12.    Dr. Sitakant Mahapatra - Literature and Education - Orissa   
 
13.    Late Shri L. C. Jain -  Public Affairs - Delhi *   
 
பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் :

1.    Shri Satyadev Dubey  -  Art - Theatre -   Maharashtra   
 
2.    Shri Mohammed Zahur Khayyam Hashmi alias Khayyam  -  Art - Cinema - Music  - 
       Maharashtra   
 
3.    Shri Shashi Kapoor - Art - Cinema  -  Maharashtra   
 
4.    Shri Krishen Khanna - Art - Painting -   Haryana   
 
5.    Shri Madavur Vasudevan Nair  -  Art - Dance - Kathakali  -  Kerala   
 
6.    Ms. Waheeda Rehman  -  Art - Cinema  -  Maharashtra   
 
7.    Shri Rudrapatna Krishna Shastry Srikantan  -  Art - Music-Vocal -   Karnataka   
 
8.    Ms. Arpita Singh  -  Art - Painting  -  Delhi   
 
9.    Dr. Sripathi Panditharadhyula Balasubrahmanyam  -  Art - Playback Singing, Music 
       Direction & acting  -  Tamil Nadu   
 
10.    Shri C.V. Chandrasekhar    Art - Classical Dance-Bharatanatyam - Tamil Nadu   
 
11.    Shri Dwijen Mukherjee  -  Art  -  West Bengal   
 
12.    Smt. Rajashree Birla  -  Social work  -  Maharashtra   
 
13.    Mrs. Shobhana Ranade  -  Social work  -  Maharashtra   
 
14.    Dr. Suryanarayanan Ramachandran  -  Science and Engineering -  Tamil Nadu   
 
15.    Shri S.(Kris) Gopalakrishnan  -  Trade and Industry  -  Karnataka   
 
16.    Shri Yogesh Chander Deveshwar -   Trade and Industry  -  West Bengal   
 
17.    Ms. Chanda Kochhar  -  Trade and Industry  -  Maharashtra   
 
18.    Dr. K. Anji Reddy -   Trade and Industry- Pharmacy  -  Andhra Pradesh   
 
19.    Shri Analjit Singh  -  Trade and Industry -  Delhi   
 
20.    Shri Rajendra Singh Pawar -  Trade and Industry -  Haryana   
 
21.    Dr. Gunapati Venkata Krishna Reddy-Trade and Industry-Andhra Pradesh   
 
22.    Shri Ajai Chowdhary-Trade and Industry-Delhi   
 
23.    Shri Surendra Singh-Civil Services-Delhi   
 
24.    Shri M. N. Buch-Civil Services-Madhya Pradesh   
 
25.    Shri Shyam Saran - Civil Services -   Delhi   
 
26.    Shri Thayil Jacob Sony George - Literature and Education - Karnataka   
 
27.    Dr. Ramdas Madhava Pai  -  Literature and Education  -  Karnataka   
 
28.    Shri Sankha Ghosh  -  Literature and Education -   West Bengal   
 
29.    Late Shri K. Raghavan Thirumulpad -   Medicine - Ayurveda.  -  Kerala*   
 
30.    Late Dr. Keki Byramjee Grant -   Medicine - Cardiology  -  Maharashtra *   
 
31.    Late Shri Dashrath Patel  -  Art -   Gujarat *   
 
பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் :

1.    Ms. Neelam Mansingh Chowdhry    Art - Theatre    Chandigarh   
 
2.    Shri Makar Dhwaja Darogha    Art- Chhau Dance    Jharkhand   
 
3.    Shri Shaji Neelakantan Karun    Art - Film Direction    Kerala   
 
4.    Shri Girish Kasaravalli    Art - Film making    Karnataka   
 
5.    Ms. Tabassum Hashmi Khan alias Tabu    Art - Cinema    Maharashtra   
 
6.    Shri Jivya Soma Mase    Art - Warli Painting    Maharashtra   
 
7.    Guru (Ms.) M.K. Saroja    Art - Dance- Bharatnatyam    Tamil Nadu   
 
8.    Shri Jayaram Subramaniam    Art - Cinema    Tamil Nadu   
 
9.    Pandit Ajoy Chakraborty    Art - Music-Indian Classical Vocal    West Bengal   
 
10.    Smt. Mahasundari Devi    Art - Mithilia/ Madhubani Painting.    Bihar   
 
11.    Shri Gajam Govardhana    Art - Handloom Weaving    Andhra Pradesh   
 
12.    Ms. Sunayana Hazarilal    Art - Dance - Kathak    Maharashtra   
 
13.    Shri S.R. Janakiraman    Art - Carnatic Vocal Music    Tamil Nadu   
 
14.    Shri Peruvanam Kuttan Marar    Art - Chenda Melam- Drum concert    Kerala   
 
15.    Smt. Kalamandalam Kshemavathy Pavithran    Art - Dance - Mohiniattam    Kerala   
 
16.    Shri Dadi Dorab Pudumjee    Art - Puppetry    Delhi   
 
17.    Shri Khangembam Mangi Singh    Art - Traditional Music of Manipur (Pena)    
         Manipur   
 
18.    Shri Prahlad Singh Tipaniya    Art - Folk Music    Madhya Pradesh   
 
19.    Smt. Usha Uthup    Art - Music.    West Bengal   
 
20.    Smt. Kajol    Art- Cinema    Maharashtra   
 
21.    Shri Irfan Khan    Art- Cinema    Maharashtra   
 
22.    Shri Mamraj Agrawal    Social work    West Bengal   
 
23.    Shri Jockin Arputham    Social work    Maharashtra   
 
24.    Ms. Nomita Chandy    Social work    Karnataka   
 
25.    Ms. Sheela Patel    Social work    Maharashtra   
 
26.    Ms. Anita Reddy    Social work    Karnataka   
 
27.    Shri Kanubhai Hasmukhbhai Tailor    Social work    Gujarat   
 
28.    Shri Anant Darshan Shankar    Public Affairs    Karnataka   
 
29.    Prof. M. Annamalai    Science and Engineering    Karnataka   
 
30.    Dr. Mahesh Haribhai Mehta    Science and Engineering - Agricultural Science    
         Gujarat   
 
31.    Shri Coimbatore Narayana Rao Raghavendran    Science and Engineering    Tamil 
         Nadu   
 
32.    Dr. (Mrs.) Suman Sahai    Science and Engineering    Delhi   
 
33.    Prof.(Dr.) E.A. Siddiq    Science and Engineering - Agricultural Science    Andhra      
         Pradesh   
 
34.    Shri Gopalan Nair Shankar    Science and Engineering - Architecture    Kerala   
 
35.    Shri Mecca Rafeeque Ahmed    Trade and Industry    Tamil Nadu   
 
36.    Shri Kailasam Raghavendra Rao    Trade and Industry    Tamil Nadu   
 
37.    Shri Narayan Singh Bhati    Civil Services    Andhra Pradesh   
 
38.    Shri P K Sen    Civil Services    Bihar   
 
39.    Ms. Shital Mahajan    Sports - Adventure Sports- Para Jumping    Maharashtra   
 
40.    Ms. Nameirakpam Kunjarani Devi    Sports - Weightlifting    Manipur   
 
41.    Shri Sushil Kumar    Sports - Wrestling    Delhi   
 
42.    Shri Vangipurapu Venkata Sai Laxman    Sports - Cricket    Andhra Pradesh   
 
43.    Shri Gagan Narang    Sports - Shooting    Andhra Pradesh   
 
44.    Smt. Krishna Poonia    Sports - Discus Throw    Rajasthan   
 
45.    Shri Harbhajan Singh    Sports - Mountaineering    Punjab   
 
46.    Dr. Pukhraj Bafna    Medicine - Padeatrics    Chhattisgarh   
 
47.    Prof. Mansoor Hasan    Medicine- Cardiology    Uttar Pradesh   
 
48.    Dr. Shyama Prasad Mandal    Medicine - Orthopaedic    Delhi   
 
49.    Prof. (Dr.) Sivapatham Vittal    Medicine - Endocrinology    Tamil Nadu   
 
50.    Prof. (Dr.) Madanur Ahmed Ali    Medicine - Gastroenterology    Tamil Nadu   
 
51.    Dr. Indira Hinduja    Medicine - Obstetrics and Gynaecology.    Maharashtra   
 
52.    Dr. Jose Chacko Periappuram    Medicine - Cardio-Thoracic Surgery.    Kerala   
 
53.    Prof. (Dr.) A. Marthanda Pillai    Medicine - Neurosurgery    Kerala   
 
54.    Shri Mahim Bora    Literature and Education    Assam   
 
55.    Prof. (Dr.) Pullella Srirama Chandrudu    Literature and Education- Sanskrit    Andhra 
         Pradesh   
 
56.    Dr. Pravin Darji    Literature and Education    Gujarat   
 
57.    Dr. Chandra Prakash Deval    Literature and Education    Rajasthan   
 
58.    Shri Balraj Komal    Literature and Education    Delhi   
 
59.    Mrs. Rajni Kumar    Literature and Education    Delhi   
 
60.    Dr. Devanooru Mahadeva    Literature and Education    Karnataka   
 
61.    Shri Barun Mazumder    Literature and Education    West Bengal   
 
62.    Dr. Avvai Natarajan    Literature and Education    Tamil Nadu   
 
63.    Shri Bhalchandra Nemade    Literature and Education    Himachal Pradesh   
 
64.    Prof. Riyaz Punjabi    Literature and Education    Jammu and Kashmir   
 
65.    Prof. Koneru Ramakrishna Rao    Literature and Education    Andhra Pradesh   
 
66.    Ms. Buangi Sailo    Literature and Education    Mizoram   
 
67.    Prof. Devi Dutt Sharma    Literature and Education    Uttarakhand   
 
68.    Shri Nilamber Dev Sharma    Literature and Education    Jammu and Kashmir   
 
69.    Ms. Urvashi Butalia #    Literature and Education    Delhi   
 
70.    Ms. Ritu Menon #    Literature and Education    Delhi   
 
71.    Prof. Krishna Kumar    Literature and Education    Delhi   
 
72.    Shri Deviprasad Dwivedi    Literature and Education    Uttar Pradesh   
 
73.    Ms. Mamang Dai    Literature and Education    Arunachal Pradesh   
 
74.    Dr. Om Prakash Agrawal    Others - Heritage Conservation    Uttar Pradesh   
 
75.    Prof. Madhukar Keshav Dhavalikar    Others - Archeology    Maharashtra   
 
76.    Ms. Shanti Teresa Lakra    Others-Nursing    Andaman & Nicobar   
 
77.    Smt. Gulshan Nanda    Others - Handicrafts promotion    Delhi   
 
78.    Dr. Azad Moopen    Social work    UAE *   
 
79.    Prof. Upendra Baxi    Public Affairs -Legal Affairs    United Kingdom *   
 
80.    Dr. Mani Lal Bhaumik    Science and Engineering    USA *   
 
81.    Dr. Subra Suresh    Science and Engineering    USA *   
 
82.    Prof. Karl Harrington Potter    Literature and Education    USA *   
 
83.    Prof. Martha Chen    Social work    USA *   
 
84.    Shri Satpal Khattar    Trade and Industry    Singapore *   
 
85.    Shri Granville Austin    Literature and Education    USA *   

33 comments:

pichaikaaran said...

first

Ganpat said...

ம்ம்ம்ம்......ஆ ராசாவிற்கு,
பாரத ரத்னா விருது கிடைக்கும் என எதிர்பார்த்து,ஏமாந்தேன்!அடுத்த வருடம் தாத்தாவிற்கு இது நிச்சயம் கொடுக்கப்படும்.

pichaikaaran said...

மூன்றாம் இடம் மிஸ் ஆயிடீச்சே :-(

Unknown said...

நல்ல பதிவு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜனும் பத்மஸ்ரீ பெறுகிறார். அவரைப் பற்றி ஒரு வரி எழுதியிருக்கலாம்.

Indian said...

//
இதில் ஆச்சரியப்படுத்தியிருக்கும் ஒரு விஷயம், அடல்பிகாரி வாஜ்பாயின் நெருங்கிய நண்பரும், அவருடைய ஆட்சிக் காலத்தில் 'சாணக்கிய குரு' என்ற பட்டத்தையும் பெற்றிருந்த பிரிஜேஸ் மிஷ்ராவிற்கு அரசு நிர்வாகத் துறையின் கீழ் பத்ம விபூஷன் விருதை வழங்கியிருப்பதுதான். என்ன லின்க்கோ தெரியவில்லை..!
//

பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் கைதான (இக்கால) ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவரை விதயம் வெளியே கசியாமல் ரகசியமாக விடுவிப்பதில் ஆற்றிய பணிக்கான கைமாறு என்று கூறப்படுகிறது.

இது உண்மையாயின் சு.சாமியிடமிருந்து சிலபல அறிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

Indian Share Market said...

இது போன்ற சிற்றின்பம் தவிர்த்து பேரின்பமாய் 'எதாவது' கொடுத்தால் நலம். Mark the occassion with lifetime gift.

raja said...

எம்.எஸ்.வி அய்யாவுக்கு இந்திய அரசின் ஜால்ரா விருதுகளை கொடுத்து அசுத்தபடுத்தவேண்டாம் எத்தனை தலைமுறைகள் போனாலும் இளமை கலையாத, சுவை குறையாத தாலாட்டக்கூடிய இசையை அளித்த அந்த மாமேதைக்கு இனிவரும் தலைமுறைகள் அனுபவிக்கப்போகும் அவரது இசை இனிமையே அவருக்கு அற்புதமான பெரும் பொக்கிஷம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

10th

Anonymous said...

அண்ணே நம்ம ப்ளாக் பார்த்து உங்களைபோன்றோர் சிறு மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தால் அதை உரிமையோடு செய்ய சொன்னால் என்னை போன்ற துவக்க நிலை ப்ளாக்கர்களுக்கு உதவியாக இருக்கும்

http://thothavanda.blogspot.com/

R.Gopi said...

இசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோர்க்கு இந்த விருது குமிட்டி காட்டும் பாரபட்சம் மிகவும் கண்டனத்துக்குரியது...

நானும் உங்களை போல், எம்.எஸ்.வி. அவர்களுக்கு இந்த வருடமாவது விருது வழங்கி இருக்கிறார்களா என்று பட்டியலை பார்த்து ஏமாந்தேன்...

Unknown said...

Anney S.P.B Andhra kaarar illaiya?? Avara Tamil Nadu pirivula kuduthurkaangaley!!!! Neengalum Tamil Nattu kaararnu sollreenga??

ரிஷி said...

பத்ம விருதுன்னா என்ன? எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன? திறமைகளின் அளவுகோலை எந்தக் கமிட்டி நிர்ணயிக்கிறது? அந்தக் கமிட்டியின் தரம் என்ன?

சூரியனின் ஒளிவீச்சை கைகளினால் மறைத்திட்டால் உலகில் வெளிச்சம் குறைந்திடுமா??

தகுதியானவர்களுக்கு காலத்தே வழங்கப்படும்போது மட்டுமே விருதுக்குப் பெருமை கிடைக்கிறது. கவனிக்கவும்! "விருதுக்கு" பெருமை கிடைக்கிறது!

விருதுகளைப் பற்றி நான் எப்போதுமே அலட்டிக் கொண்டதில்லை!

சமுத்ரா said...

நல்ல பதிவு.

உண்மைத்தமிழன் said...

பார்வையாளன்..!

நீங்களே குறிப்பிடத்தக்க பதிவராகிவிட்டீர்கள். நீங்களும் இப்படிச் செய்யலாமா..?

இந்தப் பதிவை சில தகவல்களுடன் தேடிப் பிடித்து எழுதுவதற்கு 4 மணி நேரங்களை நான் செலவழித்துள்ளேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...
ம்ம்ம்ம். ஆ ராசாவிற்கு, பாரத ரத்னா விருது கிடைக்கும் என எதிர்பார்த்து, ஏமாந்தேன்! அடுத்த வருடம் தாத்தாவிற்கு இது நிச்சயம் கொடுக்கப்படும்.]]]

கண்பத்.. உங்களது வாக்கு பலிக்கக் கூடாது என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கலாநேசன் said...
நல்ல பதிவு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜனும் பத்மஸ்ரீ பெறுகிறார். அவரைப் பற்றி ஒரு வரி எழுதியிருக்கலாம்.]]]

அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. என்றாலும் எழுதாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

//இதில் ஆச்சரியப்படுத்தியிருக்கும் ஒரு விஷயம், அடல்பிகாரி வாஜ்பாயின் நெருங்கிய நண்பரும், அவருடைய ஆட்சிக் காலத்தில் 'சாணக்கிய குரு' என்ற பட்டத்தையும் பெற்றிருந்த பிரிஜேஸ் மிஷ்ராவிற்கு அரசு நிர்வாகத் துறையின் கீழ் பத்ம விபூஷன் விருதை வழங்கியிருப்பதுதான். என்ன லின்க்கோ தெரியவில்லை..!//

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் கைதான (இக்கால) ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவரை விதயம் வெளியே கசியாமல் ரகசியமாக விடுவிப்பதில் ஆற்றிய பணிக்கான கைமாறு என்று கூறப்படுகிறது. இது உண்மையாயின் சு.சாமியிடமிருந்து சில பல அறிக்கைகளை எதிர்பார்க்கலாம்.]]]

நானும் கேளஷ்விப்பட்டேன்..! எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா கூட்டுக் களவாணித்தனம் பண்ணிக்கிறாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
இது போன்ற சிற்றின்பம் தவிர்த்து பேரின்பமாய் 'எதாவது' கொடுத்தால் நலம். Mark the occassion with lifetime gift.]]]

உங்களுக்கு அவைகள் பேரின்பம். ஆனால் எனக்கு துன்பக் கதை..! எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் வேணுமே?

உண்மைத்தமிழன் said...

[[[raja said...
எம்.எஸ்.வி அய்யாவுக்கு இந்திய அரசின் ஜால்ரா விருதுகளை கொடுத்து அசுத்தப்படுத்த வேண்டாம். எத்தனை தலைமுறைகள் போனாலும் இளமை கலையாத, சுவை குறையாத தாலாட்டக் கூடிய இசையை அளித்த அந்த மாமேதைக்கு இனி வரும் தலைமுறைகள் அனுபவிக்கப் போகும் அவரது இசை இனிமையே அவருக்கு அற்புதமான பெரும் பொக்கிஷம்.]]]

என்ன இருந்தாலும் அரசு கொடுக்கும் விருது மிக முக்கிய அங்கீகாரம் ராஜா.. கொடுத்தே தீர வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

10-th]]]

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய்ய்ய்ய்ய்யய்ய்...

உண்மைத்தமிழன் said...

[[[செந்தில் குமார் said...
அண்ணே நம்ம ப்ளாக் பார்த்து உங்களை போன்றோர் சிறு மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தால் அதை உரிமையோடு செய்ய சொன்னால் என்னை போன்ற துவக்க நிலை ப்ளாக்கர்களுக்கு உதவியாக இருக்கும்

http://thothavanda.blogspot.com/]]]

செந்தில்.. உங்களது வலைத்தளத்தைப் பார்த்தேன். உங்களைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்போல் உள்ளது.. நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களே..? நல்ல காமெடி.. குட் பிளாக்.. நன்றாகத்தான் உள்ளது.

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

இசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோர்க்கு இந்த விருது குமிட்டி காட்டும் பாரபட்சம் மிகவும் கண்டனத்துக்குரியது...

நானும் உங்களை போல், எம்.எஸ்.வி. அவர்களுக்கு இந்த வருடமாவது விருது வழங்கி இருக்கிறார்களா என்று பட்டியலை பார்த்து ஏமாந்தேன்...]]]

கேவலமாக இருக்கிறது கோபி..! அடுத்த வருடமாவது கொடுக்கிறார்களா என்று பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sai said...
Anney S.P.B Andhra kaarar illaiya?? Avara Tamil Nadu pirivula kuduthurkaangaley!!!! Neengalum Tamil Nattu kaararnu sollreenga??]]]

ஆமாம்.. இதுதான் அதிகாரிகள் செய்யும் குளறுபடி..! எப்படி? ஏன்? என்பதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

பத்ம விருதுன்னா என்ன? எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன? திறமைகளின் அளவுகோலை எந்தக் கமிட்டி நிர்ணயிக்கிறது? அந்தக் கமிட்டியின் தரம் என்ன?]]]

இதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவங்க கொடுக்குறாங்க.. அவ்ளோதான்..!

[[[சூரியனின் ஒளி வீச்சை கைகளினால் மறைத்திட்டால் உலகில் வெளிச்சம் குறைந்திடுமா??
தகுதியானவர்களுக்கு காலத்தே வழங்கப்படும்போது மட்டுமே விருதுக்குப் பெருமை கிடைக்கிறது. கவனிக்கவும்! "விருதுக்கு" பெருமை கிடைக்கிறது! விருதுகளைப் பற்றி நான் எப்போதுமே அலட்டிக் கொண்டதில்லை!]]]

நமக்கு ஒன்றுமில்லை ரிஷி.. ஆனால் அந்த மனிதருக்கு அது மிகவும் முக்கியமாச்சே.. நாளைய வரலாற்றில் அது பற்றிக் குறிப்பிட்டாக வேண்டுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[Samudra said...

நல்ல பதிவு.]]]

நன்றிகள் ஸார்..!

ஜோதிஜி said...

சரவணன் ஒரு வகையில் பார்க்கப்போனால் உங்களின் ஒவ்வொரு நீண்ட இடுகையும் எதிர்காலத்தில் ஆவணம் தான். இந்த பதக்கத்தை இப்போது தான் பார்க்கின்றேன்.

மறுபடியும் எந்த வகையிலும் உங்கள் தளத்தை பறிகொடுத்து விடாதீர்கள். இதையெல்லாம் மறுபடியும் எழுத வேண்டுமென்றால் ?

தலை சுத்துகிறது.

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
சரவணன் ஒரு வகையில் பார்க்கப் போனால் உங்களின் ஒவ்வொரு நீண்ட இடுகையும் எதிர்காலத்தில் ஆவணம்தான். இந்த பதக்கத்தை இப்போதுதான் பார்க்கின்றேன்.
மறுபடியும் எந்த வகையிலும் உங்கள் தளத்தை பறிகொடுத்து விடாதீர்கள். இதையெல்லாம் மறுபடியும் எழுத வேண்டுமென்றால்? தலை சுத்துகிறது.]]]

நான் இது போன்றவைகளைக் பதிவு செய்வதே அதற்காகத்தான்..!
உங்களுடைய நம்பிக்கை என்னை இன்னமும் உறுதியாக்குகிறது.. நன்றிகள் ஸார்..!

ரிஷி said...

///உண்மைத்தமிழன் said...
[[[raja said...
எம்.எஸ்.வி அய்யாவுக்கு இந்திய அரசின் ஜால்ரா விருதுகளை கொடுத்து அசுத்தப்படுத்த வேண்டாம். எத்தனை தலைமுறைகள் போனாலும் இளமை கலையாத, சுவை குறையாத தாலாட்டக் கூடிய இசையை அளித்த அந்த மாமேதைக்கு இனி வரும் தலைமுறைகள் அனுபவிக்கப் போகும் அவரது இசை இனிமையே அவருக்கு அற்புதமான பெரும் பொக்கிஷம்.]]]

என்ன இருந்தாலும் அரசு கொடுக்கும் விருது மிக முக்கிய அங்கீகாரம் ராஜா.. கொடுத்தே தீர வேண்டும்..!///

அப்படியெல்லாம் இல்லண்ணே! லட்சோப லட்சம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கின்றனர் எம்.எஸ்.வி.. எஸ்.ஜானகி போன்றோர். அது போதும் அண்ணே!

எம்.எஸ்.வி.யின் ரஜினிக்கான "சிவனே மந்திரம்...." பாடல் என் காதுகளில் இன்னமும் ரீங்காரமிடுகிறது! அதுதான் அவருடைய வெற்றி! காலத்தை வென்ற வெற்றி!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
///உண்மைத்தமிழன் said...
[[raja said...
என்ன இருந்தாலும் அரசு கொடுக்கும் விருது மிக முக்கிய அங்கீகாரம் ராஜா.. கொடுத்தே தீர வேண்டும்..!///

அப்படியெல்லாம் இல்லண்ணே! லட்சோப லட்சம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கின்றனர் எம்.எஸ்.வி.. எஸ்.ஜானகி போன்றோர். அது போதும் அண்ணே! எம்.எஸ்.வி.யின் ரஜினிக்கான "சிவனே மந்திரம்...." பாடல் என் காதுகளில் இன்னமும் ரீங்காரமிடுகிறது! அதுதான் அவருடைய வெற்றி! காலத்தை வென்ற வெற்றி!]]]

நாம் பாடலின் தன்மை, அதன் ஈர்ப்பு இவற்றை வைத்து அவரைக் கொண்டாடுகிறோம்..! ஆனால் இந்த நாடு இந்த மகத்தான மனிதருக்கு என்ன செய்தது என்பதை மட்டும் நாம் மறந்து விடுகிறோம். நமக்குக் கொடுக்க வேண்டியதை அரசு கொடுக்காவிட்டால் நாம் கேட்கத்தான் வேண்டும் ரிஷி..!

Kaliraj said...

இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதுக்கு காங்கிரஸ் அரசால் தேர்ந்தெடுக்கப்ப்பட்டிருப்பவர்தான் இந்த பிரிஜேஸ் மிஸ்ரா.

வாஜ்பாய் பிரதமராய் இருந்தபோது பாதுகாப்பு ஆலோசகராய் இருந்தவர். அவராலேயே அரசியல் குரு என்று வர்ணிக்கப்பட்டவர்.

அப்படிப்பட்ட ஒருவருக்கு ஏன் இந்த விருதை காங்கிரஸ் கொடுக்கிறது
சரின்னு கூகுள்ள தேடினேன்.

அவரோட அப்பா இந்திராகாந்தி காலத்தில் கட்சியில் இருந்து கட்சிக்கு பல நல்லது செய்திருக்கிறார். இதுக்குப்போய் சோனியாகாந்தி இப்படி விருது கொடுத்தால் கொடுத்தகாசுக்கு மேல கூவுனமாதிரி இருக்கேன்னு யோசிச்சேன்.




அட கொஞ்சம் அங்க இங்கே விசாரிச்சதுக்கு பின்னதான் தெரிஞ்சது, அய்யா என்ன மாதிரி உதவி பண்ணியிருக்காருன்னு.

வாஜ்பாய் பிரதமராய் இருந்தபோது,

இந்தியாவின் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், காங்கிரஸ் இளவரசர், வருங்கால பிரதமர் திரு. ராகுல் காந்தி அய்யா கணக்கில் வராத கத்தை கத்தையாக முறைகேடான பணத்துடன் அமெரிக்க ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார்.

இதை வெளியே விஷயம் கசியாமல் டீல் பண்ணி ராகுலை பாதுகாப்பாக அவங்க அம்மாவிடம் சேர்த்தார்.

அமெரிக்க அரசாங்கத்திடம் சொல்லியிருப்பார், போபால் விஷவாயுக்கசிவில் 25000 பேரைக்கொன்ன ஆண்டர்சனை உங்க நாட்டுக்கு இராஜிவ்காந்தி பாதுகாப்பாஅனுப்பி வைச்சார். நீங்களும் அதுமாதிரி அவரோட புள்ளையை பாதுகாப்பா அனுப்பி வையுங்கன்னு

இப்ப சொல்லுங்க இவருக்கு பத்ம விபூஷன் தந்தது சரிதானே..

உண்மைத்தமிழன் said...

[[[Rasu said...

இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதுக்கு காங்கிரஸ் அரசால் தேர்ந்தெடுக்கப்ப்பட்டிருப்பவர்தான் இந்த பிரிஜேஸ்மிஸ்ரா. வாஜ்பாய் பிரதமராய் இருந்தபோது பாதுகாப்பு ஆலோசகராய் இருந்தவர். அவராலேயே அரசியல் குரு என்று வர்ணிக்கப்பட்டவர்.
அப்படிப்பட்ட ஒருவருக்கு ஏன் இந்த விருதை காங்கிரஸ் கொடுக்கிறது
சரின்னு கூகுள்ள தேடினேன்.
அவரோட அப்பா இந்திராகாந்தி காலத்தில் கட்சியில் இருந்து கட்சிக்கு பல நல்லது செய்திருக்கிறார். இதுக்குப்போய் சோனியாகாந்தி இப்படி விருது கொடுத்தால் கொடுத்தகாசுக்கு மேல கூவுனமாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். அட கொஞ்சம் அங்க இங்கே விசாரிச்சதுக்கு பின்னதான் தெரிஞ்சது, அய்யா என்ன மாதிரி உதவி பண்ணியிருக்காருன்னு.
வாஜ்பாய் பிரதமராய் இருந்தபோது,
இந்தியாவின் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், காங்கிரஸ் இளவரசர், வருங்கால பிரதமர் திரு. ராகுல்காந்தி அய்யா கணக்கில் வராத கத்தை கத்தையாக முறைகேடான பணத்துடன் அமெரிக்க ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார். இதை வெளியே விஷயம் கசியாமல் டீல் பண்ணி ராகுலை பாதுகாப்பாக அவங்க அம்மாவிடம் சேர்த்தார்.
அமெரிக்க அரசாங்கத்திடம் சொல்லியிருப்பார், போபால் விஷவாயுக் கசிவில் 25000 பேரைக் கொன்ன ஆண்டர்சனை உங்க நாட்டுக்கு இராஜிவ்காந்தி பாதுகாப்பாஅனுப்பி வைச்சார். நீங்களும் அது மாதிரி அவரோட புள்ளையை பாதுகாப்பா அனுப்பி வையுங்கன்னு. இப்ப சொல்லுங்க இவருக்கு பத்மவிபூஷன் தந்தது சரிதானே.]]]

இது மட்டும் உண்மையாக இருந்தால் இந்தாண்டுக்கான பத்ம விருதுகளில் மிகச் சரியானது இதுதான்..! தகவலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!

abeer ahmed said...

See who owns pro-sys.ca or any other website:
http://whois.domaintasks.com/pro-sys.ca

abeer ahmed said...

See who owns diclib.com or any other website.