விஸ்வரூபமான விஸ்வரூபம்..!

31-01-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"யார், யாருக்கோ சாவு வருது..!!!" - குறிச்சு வைச்சுக்குங்க.. யாருக்குன்னு கடைசியா சொல்றேன்..!

ஜனநாயக ரீதியில் தனக்கு ஆட்சி நடத்தவே தெரியாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் ஜெயலலிதா.! இவரது பாஸிஸ, அராஜக அரசியலை எதிர்த்தும், இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் சில ரவுடிக் கும்பல்களையும் எதிர்த்து இப்போதுவரையிலும் சட்டத்தின் துணை கொண்டு மட்டுமே போராடி வரும் கமல்ஹாசன் என்னும் பிரியத்துக்குரிய கலைஞனுக்கு எனது சல்யூட்..!

அரசியல் வஞ்சத்தை அரங்கத்தில் நேரிடையாக நிறைவேற்றுவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் அவரேதான்..! வலம்புரி ஜான் என்னும் மதிப்புமிக்க எழுத்தாளரை அவமரியாதை செய்ய வேண்டி, அவர் பெற்ற மகள்கள் மூலமாகவே அவர் மீது கற்பழிப்பு வழக்கை பதிவு செய்ய வைத்த உத்தமத் தலைவி இவரே என்பதால் இது மாதிரியான அரசியல் அதிகாரத் திமிரில் ஆடுவது இவருக்கு ஒன்றும் புதிதல்ல..!

ஆனால் இப்போது இவர் எடுத்திருக்கும் ஆட்டம்தான் கொஞ்சம் புதுசு. ஒரு பக்கம் தனது தலை மீது தொங்கிக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு.. அதில் இருந்து தப்பிக்க வேண்டி தனது அனைத்து சக்தியையும் ஒருமனதோடு செலுத்திக் கொண்டிருக்கும் ஆத்தாவுக்கு கூடுதலாக கிடைத்துள்ள இணைப்பு வசதி வரும் பொதுத் தேர்தல்தான்..!

இதில் 40-க்கு 35 தொகுதிகளையாவது முழுமையாகப் பெற்றுவிட்டு, இதன் மூலம் மத்தியில் தனது ஆதரவில்லாமல் புதிய பிரதமர் உருவாக முடியாது என்னும் சூழலை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒருவேளை தானே பிரதமராகலாம்.. அல்லது பெங்களூர் கோர்ட் சிக்கல்களை உடைத்தெறியும் அளவுக்கு நட்பான ஒருவரை கொண்டு வர செய்யும் உத்தியை துழாவிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா..! இதற்கு இப்போதைக்கு அவருக்குத் தேவை ஒட்டு மொத்த தமிழகத்தின் ஆதரவு.. ஏற்கெனவே மின்வெட்டு பிரச்சினையில் மக்கள் ஆதரவு அதோ கதியாக அந்தரத்தில் இருக்க.. போதாக்குறைக்கு காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகமும், காங்கிரஸும் செய்யும் தில்லாலங்கடி வேலையினால் விவசாயிகளின் வாயில் தினமும் வெந்து போகும் வெந்தயமாக தான் இருப்பதும் ஆத்தாவுக்கு தெரிந்துதான் இருக்கிறது..! ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு வித்தியாசத்தை கூட்டியோ, குறைத்தோ வெற்றி தோல்விக்கு வழி வகுப்பது சிறுபான்மையினரான இஸ்லாமிய பெருமக்கள் என்பதை தாத்தாவும், ஆத்தாவும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள்..!

இவர்களது ஆதரவை ஒட்டு மொத்தமாக கைப்பற்ற என்ன வழி என்று யோசனையில் தானாகவே வந்து சிக்கியிருக்கிறது விஸ்வரூபம். கூடவே ஜெயல்லிதாவின் இயல்பான கோபம், ஆவேசம், பழி வாங்கும் உணர்வுகளுக்கு ஏற்ப  சேனல் ரைட்ஸ் விவகாரம் வேறு வெடித்து திசை திரும்பி விஜய் டிவிக்கு போய்விட.. இந்தக் கோபமும் ஒன்று சேர்ந்து இப்போது ஆத்தாவின் நேரடி உத்தரவில்.. அவரது கண் அசைவில்தான் கமல்ஹாசன் என்னும் கலைஞன் போராடிக் கொண்டிருக்கிறார்..!


கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று சத்யம் தியேட்டரில் தனது விஸ்வரூபத்தை பதிவு செய்திருக்கும் புதிய தொழில் நுட்ப முறையான ஆரோ 3-டி முறையைப் பற்றி பத்திரிகையாளர்களுக்கு விளக்கிச் சொல்லிவிட்டு அவசரம், அவசரமாக கோட்டைக்கு ஓடோடிச் சென்று ஆத்தாவின் முன்பு பவ்யமாக உட்கார்ந்து எழுந்த வந்த கமலை நினைக்கும்போது அன்றைக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது..! அவர் எப்போதும் வருடாவருடம் சந்திக்கும் கருணாநிதியைக் கூட அன்றைக்கு அவர் சந்திக்கவில்லை..! 

ஜெயா டிவியுடன் சேனல் ரைட்ஸுக்காக ஒப்பந்தம் போட்டு முடித்து கையெழுத்தாகும் முன்பேயே டிடிஹெச் அறிவிப்பை கமல் வெளியிட்டபோது அவர்களும்தான் சற்று சங்கடப்பட்டார்கள். ஆனாலும் மூன்று நகரங்களில் நடந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வேண்டிய அனைத்து செலவுகளையும் செய்து அதனை தங்களது தொலைக்காட்சியில் வெளியிடவும் செய்தார்கள். பின்பு எப்போது பிரச்சினை துவங்கியது..?

சின்னப் பயல் சிதம்பரத்தை ஆத்தாவுக்கு எப்போதுமே பிடிக்காதுதான்.. இருவருக்குமே நன்கு படித்தவர்கள் என்ற திமிரும்.. இயல்பான ஈகோவும் இன்றுவரையில் இருக்கத்தான் செய்கிறது.. ஒரு விழாவுக்கு அழைத்தால் போனோம்.. வந்தோம் என்றெல்லாம் இல்லாமல் ரஜினியை போலவே அன்றைக்கு ரொம்பவே சிதம்பரத்திற்கு ஜோஸியம் பார்த்துவிட்டார் கமல்.. அரங்கம் நிரம்பி வழிந்து தரையில் உட்காரக்கூட இடமில்லாத நிலையில் இருந்த, அந்தக் கூட்டத்தைப் பார்த்து வார்த்தைகள் ஸ்லிப்பானதுபோல் கமல் பேசிய பேச்சுக்கள்தான் அதன் பின்னான இன்றுவரையிலான தரங்கெட்ட சூழலுக்கு காரணம் என்று யூகிக்கவும் முடிகிறது..!

விஸ்வரூபம் பற்றிய சர்ச்சைகள் பெரிதும் வந்து கொண்டிருந்த நேரத்தில், டிடிஹெச் சமயத்திலேயே இந்த முஸ்லீம் பிரச்சனையும் எழுப்பப்பட்டது..! ஆனால் “படத்தில் ஒன்றுமே இல்லை.. படம் பார்த்த பின்பு குற்றம் சொல்பவர்கள் அண்டா அண்டாவாக பிரியாணிதான் சாப்பிட வேண்டி வரும்..” என்றுதான் கமல் சொல்லியிருந்தார்.  அரசின் நடவடிக்கைகள் நியாயமாக, நடுநிலையாக இருக்கும் அவர் அப்போது பெரிதும் நம்பியிருந்தார்..!

அந்த நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டு, தான் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்படி இன்றைக்கு விஸ்வரூபத்தை தமிழ்நாட்டில் திரையிட விட மாட்டேன் என்ற சபதத்தையும், வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வர வேண்டும் என்றவரை புரட்சித் தலைவிக்கு நன்றி என்றும் சொல்ல வைப்பேன் என்ற ஆணவச் செருக்கில் இன்றைக்கு தனது அராஜகத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருக்கிறார் ஆத்தா..!

தொடர்ந்து இவைகளையே பேசுவதற்கும், எழுதுவதற்கும், படிப்பதற்கும் எரிச்சலாகத்தான் உள்ளது. ஆனால் பேசாமலும், எழுதாமலும் இருக்கத்தான் முடியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டிருப்பவர் நான் பிறந்து வளர்ந்த காலத்தில் இருந்தே என்னை மகிழ்வித்தவர்.. என் கூடவே பயணப்பட்டவர்.. என் துக்கத்தில் பங்கு கொண்டவர்.. என்னை பண்படுத்தியவர்.. எனக்குச் சிலவற்றைச் சொல்லிக் கொடுத்தவர்.. என்றெல்லாம் பல முகங்களைக் கொண்ட ஒரு நல்ல கலைஞனாக இருப்பதினால் என்னுடைய இயலாமை.. அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்ற ஆதங்கமே மீண்டும், மீண்டும் இது பற்றி எழுத வைக்கிறது..!

முஸ்லீம் அமைப்பினர் சொல்லும் தங்கள் மனம் புண்பட்டிருக்கிறது என்பதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதை நடப்பது ஆப்கானிஸ்தானில்.. அங்கே இருப்பவர்கள் முஸ்லீம்கள்.. தாலிபான்கள் தீவிர முஸ்லீம்கள்.. இஸ்லாத்தை பரப்புபவர்கள்..! இவர்களைக் காட்டும்போது அவர்கள் குரான் படிப்பது போலவும், அதற்குப் பிறகு போர்க்களத்தில் பணியாற்றுவது போலவும் காட்டத்தான் வேண்டும். எவ்வளவு போர்க் காலத்திலும் ஐந்து வேளை தொழுகையை அவர்கள் கைவிட்டதில்லை என்று பல இடங்களில் படித்திருக்கிறேன்.. இதில் தொழுகையை காட்டுகிறார்கள்.. குரானை காட்டுகிறார்கள்.. அப்புறம் துப்பாக்கியையும் காட்டுகிறார்கள்.. சுடுவதையும் காட்டுகிறார்கள் என்று சின்னத்தனமாக ஒப்பாரி வைப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல..!

இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி படத்தில் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்று படம் பார்த்தவர்கள் சொல்லிவிட்டார்கள்.. ஆப்கான் தாலிபான்களை பற்றி கூறினால், படமெடுத்தால், இங்கே உள்ளவர்களுக்கு ஏன் வலிக்கிறது என்றுதான் தெரியவில்லை. அமைதியே உருவான புத்தரின் அந்த மகா வடிவத்தை.. அற்புதமான கலைச் சிற்பத்தையே தங்களது மார்க்கத்துக்கு எதிரானது என்று சொல்லி குண்டு வைத்து இடித்த இந்த உத்தமர்களை விமர்சிக்கக் கூடாது என்றால் இது சிரிப்பாக இல்லை..?

பகவத்கீதை, குரான், பைபிள் - இந்த மூன்றுமே படிப்பதற்காக மட்டுமே இருப்பவை.. இவற்றை வைத்துக் கொண்டு வேறு என்ன செய்வது..? தலகாணிக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்..! இதில் இருக்கும் கதைகளை படித்துவிட்டு இது மாதிரி நம்மால இருக்க முடியாது.. ஆனால் இருக்கணும் என்று நினைக்கலாம்..! ஆனால் இதையே உயிரைவிட பெரிசாக நினைப்பதெல்லாம் அவரவர் நிலைப்பாடு.. விருப்பம்.. இதனை அவரவர்கள் தங்களது வீட்டிற்குள் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.. தெருவுக்கு வந்துவிட்டால் பக்கத்து வீட்டில் வேறொரு இந்தியன் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு தனது விருப்பத்தை ஓரங்கட்டுவதுதான் சிறந்த மதச் சார்பின்மை..!

குண்டு வைக்கும்போது குரானை காட்டுகிறார்கள்.. முஸ்லீம்களை காட்டுகிறார்கள். இதனாலேயே முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற பொருளாகிவிடுகிறது என்கிறார்கள்..! நானே இதனைப் பற்றி பல முறை, பல சினிமா விமர்சனங்களில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் அதனைக் குறிப்பிட முடியாமைக்குக் காரணம் கதையின் களன்தான்..! ஏன் முஸ்லீம்களில் திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கற்பழித்தவர்கள்,  கொலைகாரர்கள் யாருமே இல்லையா..? அனைவருமே ஒழுக்கமாகத்தான் வாழ்கிறார்களா என்ன..? 

தமிழகத்து சிறைகளில் குண்டு வெடிப்பு கைதிகளைத் தவிர மற்ற பிரச்சினைகளிலும் முஸ்லீம்கள் கைதாகியிருக்கிறார்களே.. வாராவாரம் திருட்டு விசிடி பிரச்சினையில் கைதாகுபவர்களில் 99 சதவிகிதத்தினர், முஸ்லீம்களாத்தான் இருக்கிறார்கள்..!  ஒருவரைக் குறிப்பிட்டால், அந்த சமூகத்தையே சொல்வது போலாகிவிடுமா..? அப்படிப் பார்த்தால் இதுவரையில் வந்த எத்தனையோ தமிழ்த் திரைப்படங்களில் கற்பழிக்கும் காட்சிகளில் நடித்தவர்களில் 99 சதவிகிதத்தினர் இந்து பெயர்கள் கொண்ட வில்லன்களே.. அப்படியனால் அனைத்து இந்துக்களும் கற்பழிக்கும் ஆசை கொண்ட வெறியர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா..? 

இது சினிமா.. இரண்டரை மணி நேர ஒரு மாயாஜாலத்தை.. ஒரு கற்பனைக் கதையை.. ஒரு இயக்குநர் தனது படைப்புத் திறமையினால் நடந்தது போல் கொண்டு வந்து காட்டுகிறார்..! நிஜத்தில் நடக்காததை..  அல்லது நடந்ததை.. நாம் உணராததை.. நம் கண் முன்னே காட்டுவதற்குப் பெயர்தானே படைப்பு.. அவன்தானே படைப்பாளி.. இவனை இந்தக் கதையைத்தான் படமாக்க வேண்டும்.. அந்தக் கதையை இப்படி எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவனுக்குக் கொடுத்திருக்கும் கருத்துரிமை, பேச்சுரிமையை தடை செய்வது போலாகாதா..?

ஒருவரின் கருத்து மற்றவருக்கு கேலியாக இருக்கலாம்.. இன்னொருவருக்கு முட்டாள்தனமாக இருக்கலாம்.. அது அவரவர் விருப்பம்.. இதில் தனி மனித தலையீடு இருக்கவே கூடாது..! மேலே சொன்னபடி குரானை என்னிடம் கொடுத்தால் நான் தலைக்கு வந்து தூங்குவேன்.. கீதைக்கும் இதே கதிதான்.. ஆனால் ஒரு சிலர் அதனை அட்டை டூ அட்டை படிப்பார்கள்.. சிலர் அதனை பரப்புரையே செய்வார்கள்.. ஆனால் அவர்கள் செய்வதுதான் சரி..? நானும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி..?

இதுவரையிலும் வந்த எத்தனையோ சினிமாக்களில் இந்து கடவுள்களை கேலியாகவும், கிண்டலாகவும் செய்து எத்தனையோ காட்சிகள் வந்திருக்கின்றன.. யாரும் இது பற்றி கண்டு கொண்டதில்லை.. சில வேலை வெட்டியில்லாத இந்து அமைப்புகள் தலைதூக்கும்வரை..! மக்களுக்குத் தெரியும்.. இது கிண்டல்தான் என்று.. இப்படியெல்லாம் கிண்டல் செய்தால் முருகன் வேல் வைச்சு கண்ணைக் குத்துவான் என்றோ.. சிவன் சூலாயுதத்தைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவான் என்றோ அவர்கள் நினைப்பதில்லை.. இவ்வளவு ஏன்..? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டிதொட்டியெங்கும் ஓடிக் கொண்டிருந்த பிட்டு படங்களின் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோர் தங்களது பட நிறுவனத்திற்கு லஷ்மி மூவிஸ், முருகன் பிலிம்ஸ் என்ற ரீதியில் கடவுளர் பெயர்களைத்தான் வைத்திருந்தார்கள்..! தொழில் வேறு.. பக்தி வேறு என்பது அவர்களது அபிப்ராயம்.. இதனால்தான் இப்போதும் சென்னையில் மாநகராட்சியின் கக்கூஸ்களை ஏலத்தில் எடுத்தவர்கள்கூட கக்கூஸ் வாசலில் திருப்பதி பெருமாளின் படத்தை வைத்திருக்கிறார்கள்..

“ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருக்கு. எங்களுக்கு இல்லை. இஸ்லாமும், குரானும் எங்களுக்கு உயிர் போல..” என்னும் அன்பர்கள், அதனைத் தாங்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் நியாயமும் கூட..! நாங்கள் யாரும் படம் பார்க்க வாருங்கள் என்று யார் கையையும் பிடித்திழுக்கவில்லை.. எப்போதும் போலவே ஒரு சராசரி சினிமா ரசிகன், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டர் வாசலிலேயே பிடித்திருந்தால் பிடித்தது என்றும், இல்லையென்றால் உதட்டைப் பிதுக்கிவிட்டும் அடுத்த வேலையைப் பார்த்து போய்விடுவான்..!

இந்த ஒரு படத்தை பார்த்து முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று நினைக்க இங்கே யாரும் முட்டாள்கள் இல்லை..! அப்படி நினைத்திருந்தால் இப்போதுபோல் முஸ்லீம் பெருமக்கள் தமிழகத்தில் இந்த அளவுக்கு நிம்மதியுடன் வாழ முடியுமா..? 

அரசியல்வியாதிகள் எங்கே புகுந்தாலும் அது உருப்படாது என்பதற்கு இந்த அமைப்புகளும் ஒரு உதாரணம்..! குரூப் குரூப்பாக பிரிந்து நிற்கும் தலைவர்கள்.. தங்களது சுய லாபத்துக்காக.. அடுத்தத் தேர்தலில்  தி.மு.க., அ.தி.மு.க. அணியில் சேர துடிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்.. எப்படியாவது கூட்டணி வைத்து எம்.எல்.ஏ.வாகிவிட வேண்டும்.. எம்.பி.யாகிவிட வேண்டும் என்று நினைக்கும் கொள்ளையர்கள்தான் இப்போது அப்பாவி முஸ்லீம்களை முன் வைத்து இந்தப் பிரச்சினையை இழுத்துச் செல்கிறார்கள்.! என்னதான் தலை, தலையாய் அடித்து கூப்பாடு போட்டாலும் ஆத்தாவைவிட்டால் தாத்தா.. தாத்தாவைவிட்டால் ஆத்தா என்றே தேர்வு செய்து வரும் பொதுமக்களில் ஒரு பிரிவினரான இஸ்லாமிய பெருமக்களில் ஒரு சிலரும் இவர்களுக்கு ஆதரவளிப்பது அவர்களது அறிவீனமே..!  

இவர்களது எதிர்ப்பை நான் தவறென்று சொல்லவில்லை. இவர்களது கருத்துரிமையும், பேச்சுரிமையும் கமலுக்கு உள்ளதுபோலவே இருக்கும்தான். ஆனால் அதனை இவர்கள் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்..? தியேட்டர்கள் முன் ஓரிடத்தில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் செய்யலாம்.. உண்ணாவிரதம் இருக்கலாம்.. கோஷங்கள் எழுப்பலாம்.. “இந்தப் படத்தை நாங்கள் எதற்காக எதிர்க்கிறோம்.. புறக்கணிக்கிறோம்..” என்பதை பிட் நோட்டீஸாக அச்சடித்து படம் பார்க்க வரும் ரசிகர்களின் கைகளில் கொடுக்கலாம்.. இதுதான் ஜனநாயக ரீதியிலான ஒரு போராட்ட வழிமுறை..  இதனைவிட்டுவிட்டு “படத்தையே திரையிட விட மாட்டோம்.. உயிரைக் கொடுத்தாவது தடுப்போம்.. ரகளையில் ஈடுபடுவோம்.. தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம்..” என்றெல்லாம் செய்வது ரவுடித்தனம்..! இவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் இந்தச் செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.. விஸ்வரூபத்தில் இவர்கள் இதையே செய்திருக்கலாம்..!

கமல் இன்று முதலீடு செய்திருக்கும் 100 கோடி ரூபாய் அடுத்த வருடம் இதே தமிழ்ச் சினிமாவில் இறக்குமதி செய்யப்பட்டு பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும். 30 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்களைக் கொண்டு, 1 லட்சத்திற்கும் மேலான சார்நிலை தொழிலாளர்களைக் கொண்ட தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் ஒரு போராட்டத்தை இஸ்லாமிய அன்பர்களின் ஆதரவுடன் சில ரவுடிக் கும்பல்கள் இப்படிச் செய்ய நினைப்பது  ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல..!

கமல்ஹாசனை தவிக்க விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் ஜெயலலிதாவின் அரசியல் சூழ்ச்சியில் இஸ்லாமிய அன்பர்களும்  சிக்கிக் கொண்டது அவர்களுக்கே தெரியவில்லைபோலும்.. இன்றுவரையிலும் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.. இதுவரையிலும் நான் ஒரு இந்து என்று நினைப்பே வராமல் இருந்த எனக்கு, ஒரு கணத்தில் “இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..! இது என் ஒருவனுக்கு மட்டுமே வந்ததில்லை.. தமிழ்நாட்டில் பெருவாரியான சினிமா ரசிகர்களுக்கு வந்துவிட்டது.. இந்த முட்டாள்தனமான போராட்டத்தினால் இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது இதைத்தான் என்று உறுதியுடன் சொல்லலாம்..!

தன்னுடைய சொத்து முழுவதையும் பணயம் வைத்து ஹாலிவுட் படங்களுக்கு இணையான தொழில நுட்ப நேர்த்தியுடன் ஒரு கலைப்படைப்பை படைத்திருக்கும் கமல் என்னும் கலைஞனை வாழ்த்த உங்களுக்கு மனமில்லாமல் இருக்கலாம்.. அல்லது அது ஒரு கலைத்திறன் சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூளையும் உங்களுக்கு இருக்கலாம்.. ஆனால் கமல்ஹாசன் என்ற மனிதனுக்கும் தனி கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு என்பதையாவது சற்று சிந்தித்துப் பாருங்கள்..! உங்களது குரான் எப்படி மேம்பட்டது என்று சொல்ல உங்களுக்கு உரிமையுண்டோ, அதே அளவுக்கு அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லவும் அவருக்கும் உரிமையுண்டு..!

நேற்று இரவில் உயர்நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பை பார்த்துவிட்டு உடனுக்குடன் அதனை எதிர்த்து அப்பீல் செய்ய துடியாய் துடித்த இந்த அரசாங்கத்தின் தவிப்பைப் பார்த்தவுடன் “அடப்பாவிகளா..? எம்.ஜி.ஆர். என்ற இதயக்கனி உருவாக்கிய அ.தி.மு.க.வின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்ச் சினிமாவை வீழ்ச்சிக்கு கொண்டு போகிறீர்களேடா பாவிகளா..” என்ற என் புலம்பலுக்கு இப்போதுவரையிலும் நல்ல முறையில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் ஆத்தா..!

தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வரும் திங்கள்கிழமைக்குள் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்திருக்கும் கமலின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். உச்சநீதிமன்றமாவது ஒரு கலைஞனின் மனதைப் புரிந்து கொண்டு செயல்பட்டு தீர்ப்பளிக்கும் என்றே நம்புகிறேன்..!

உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகலை உடனுக்குடன் தர விடாமல் இழுத்தடித்து.. வழக்கில் கமலுக்காக ஆஜராகிய எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரது மகனான பி.எஸ்.ராமனை மிரட்டி.. காலையில் தியேட்டர்களில் தவியாய் தவிப்புடன் திரண்டிருந்த ரசிகர்களை போலீஸை வைத்து துரத்தியடித்து.. சில தியேட்டர்களில் போலீஸ் துணையுடன் பெட்ரோல் குண்டுகளை வீச வைத்து.. இந்தக் குண்டுகள் வீசப்பட்ட 15 நிமிடத்தில், அந்தச் செய்தியை வாதிட்டுக் கொண்டிருந்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளிடம் புகாராக பதிவு செய்து.. சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். அதனைக் கட்டுப்படுத்தும் அறிவும், ஆற்றலும் எங்க சி.எம்.முக்கு இல்லவே இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டு.. பாதிக்குப் பாதி நீதியை அளித்துக் கொண்டிருக்கும் இந்த நீதிபதிகளிடம் மீண்டும் தடை என்று உத்தரவை வாங்கிவிட்டுத்தான் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் ஆத்தாவும், அவருடைய சட்டம் படித்த தொண்டரடிப் பொடியாள்வார்கள்..!

இதே வேகத்தை.. துடிப்பை.. தனது சொத்துக் குவிப்பு வழக்கின் மீதும் செலுத்தி விரைவாக.. ஒரு மாதத்திற்குள்ளாக வழக்கு விசாரணையை முடிக்க வைத்து.. நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியே வருவேன்னு சொல்ல இந்தம்மாவுக்கு வக்கில்லை.. அறிவில்லை.. ஆனால் ஒரு நல்ல கலைஞனை அவமானப்படுத்த, அழித்தொழிக்க, மட்டும் துடியாய் துடிக்கும் இந்தக் கேவலமான, வெக்கங்கெட்ட, கேடுகெட்ட அரசியல்தனத்தையெல்லாம் பார்க்கத்தான் வேண்டுமா..? இன்னும் எத்தனை முறைதான் இப்படியே எழுதுவது.. பேசுவது..? இந்தக் கொடுமையையெல்லாம் பார்க்குறதுக்கு பதிலா மேல போய்ச் சேர்ந்தா நிம்மதி கிடைக்மேன்னும் அடிக்கடி எனக்குத் தோணுது.. இதுக்காகத்தான் முதல் வரியில் அந்த வார்த்தைகள்..!

90 comments:

bandhu said...

ரொம்பவே வெறுத்துப் போயிருக்கிறீர்கள். நமக்கே இவ்வளவு வெறுப்பாக இருக்கும்போது பாதித்தவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது.

ஊரெங்கும் கரண்ட் இல்லை, வானளவு விலைவாசி. விளையும் நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு விற்கும் கொடுமை, பத்து வருடங்களில் குடிக்கும் தண்ணீர் இலவசமாக கிடைத்ததிலிருந்து மாறி விலைக்கு வாங்க வேண்டிய கொடுமைக்கு ஆளாகியிருக்கிறோம், பத்து வருடங்களில் கோடிகளிலிருந்த லஞ்ச ஊழல்கள் ஆயிரம் கோடிகளில் மாறிய மாயம், அரசு நிறுவனங்களை எல்லாம் தனியாரிடம் தாரை வார்க்கத்துடிக்கும் மத்திய அரசு, தீர்க்க முடியாமல் மாறிய காவிரி, பெரியாறு அணை பிரச்சனைகள்..

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது, மேலும் ஒரு பிரச்சனையை பெரிதாக்கினால் மக்கள் மற்றவற்றை மறந்து விடுவார்கள் என்று அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். மாட்டியவர் கமல் இம்முறை.

எல்லாவற்றையும் அவரவர் நம்பும் கடவுள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். எப்படி கூலி கொடுக்கப்போகிறார் என்பதை பார்க்கத்தானே போகிறோம்!

Trails of a Traveler said...

நல்ல பதிவு!

Ram

Anonymous said...

* ஒரு கலைத்திறன் சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூளையும் உங்களுக்கு இருக்கலாம்.* ஏன் இல்லை. அவர்களுடைய கசாப்பு கடைகளில் அதானே விக்கிறாங்க. கன்டவனெல்லாம் அதானே வாங்கி தங்கிறாங்க.

Anonymous said...

இதுவரையிலும் நான் ஒரு இந்து என்று நினைப்பே வராமல் இருந்த எனக்கு, ஒரு கணத்தில் “இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..! இது என் ஒருவனுக்கு மட்டுமே வந்ததில்லை.. ///எனக்கும் அப்படித்தான் தோணுது.நல்ல பதிவு.

Read more: http://truetamilans.blogspot.com/2013/01/blog-post_31.html#ixzz2JWYXoRG3

நம்பள்கி said...
This comment has been removed by the author.
செங்கோவி said...

ஒரே வாரத்தில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்ததும், இஸ்லாமியர்கள் மேல் வெறுப்புணர்வை வர வைத்ததும் தான் இந்த இஸ்லாமிய அமைப்புகளின் சாதனை.

தருமி said...

//இதுவரையிலும் நான் ஒரு இந்து என்று நினைப்பே வராமல் இருந்த எனக்கு, ஒரு கணத்தில் “இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..!//

இதையெல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளும்போது காலம் மிகவும் கடந்திருக்கும் ......

ஜோதிஜி said...

எப்படி கூலி கொடுக்கப்போகிறார் என்பதை பார்க்கத்தானே போகிறோம்!

வவ்வால் said...

அண்ணாச்சி,

இப்போ பொங்கி என்ன புண்ணியம்.

ஆரம்பத்திலேயே சேட்டலைட்ஸ் உரிமை வச்சு பிரச்சினை வர்ம்னு நான் சொன்னது நினைவிருக்கா? அப்போ அதெல்லாம் பேசி இருப்பார்னு சொன்னது நீங்க தான்,நான் அப்போ சொன்னது போல தான் நடந்து இருக்கு.

ஜெயா ட்டீவீயா தேடிப்போய் உரிமை கேட்டுச்சு,இவராத்தேடிப்போய் சுயலாபத்துக்காக வித்தார்,பின்னர் ட்டிஎச் வச்சு பிரச்சினை. இந்த நிலையில் ஏன் படத்தைப்போட்டுக்காட்டணும், உண்மையில் பிரச்சினை வரட்டும் அப்போ தான் விளம்பரம்னு நினைச்சார், அவர் நினைக்காதது தமிழக அரசு தடைப்போடும், இந்தளவுக்கு பிடிவாதமாக இருக்கும் என்பதே ,லோகநாயகர் தப்புக்கணக்கே நானும் போட்டு தவிச்சேன் ஞான தங்கமேனு புலம்புறார் இப்போ :-))

சரி சொத்தை அடமானம் வச்சு படம் எடுத்தேன்னு சொல்வதை நீங்களும் நம்புறிங்களா?

பிவிபி கிட்டே வாங்கின பணம்?அந்த பணத்திலே படம் எடுத்தாச்சு, இவர் பட்ஜெட் கூட சொல்லி கள்ளக்கணக்கு சொன்னதால் தான் வியாபாரம் ஆகலை,இப்போ செண்டிமெண்டா என் மொத்த சம்பாத்தியம் முடங்கிப்போச்சுனு ஒரு கதை சொல்லுறார்.


ஒரு பைசா நட்டம் வராது. வேண்டுமானால் கிடைக்க இருந்த லாபம் இழக்கலாம்.

இப்போ பிவிபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செட்டில் செய்யலைனு நினைக்கிறேன்,இன்னும் சில நாளில் பிவிபி வழக்கு தொடுக்கலாம், அதன் அடிப்படையில் லோகநாயகர் கைதும் ஆகலாம்,இப்போ உள்ள\நிலமை அப்படி.

பிவிபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தாரா என விசாரித்து சொல்லுங்கள்,கொடுக்கலைனா சிக்கலாகிடும்.

Babu Palamalai said...

“இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..! இது என் ஒருவனுக்கு மட்டுமே வந்ததில்லை.. தமிழ்நாட்டில் பெருவாரியான சினிமா ரசிகர்களுக்கு வந்துவிட்டது.. இந்த முட்டாள்தனமான போராட்டத்தினால் இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது இதைத்தான் என்று உறுதியுடன் சொல்லலாம்..! //
நெத்தி அடிண்ணே !! இவங்க பண்ணின இந்த வேலையால சகஜமாய் பழகி வந்த வேற்று மத நண்பர்களை கூட சற்று சஞ்சலத்துடன் பார்க்க வைத்திருக்கிறார்கள் :(

Velu said...

படத்தில் வரும் ஒரே இந்திய ( தமிழ்) முஸ்லிம் நல்லவரே என காட்டப்படுகிறதே .
ஆகையால் இந்தியாவில் வாழும் முஸ்லிம் அனைவரும் நல்லவர்களே .
அவர்களைப்போல வாழ கற்றுக்கொள்ளுங்கள் என உலக முஸ்லிம்களுக்கு கமல் கருத்து சொல்வதாக ஏன் இங்குள்ளவர்கள் எடுத்துக்கொள்ளகூடாது ?

MnB said...

முதல்வர் செய்தது தவறு. மறுக்கவில்லை. அவர் செய்ததை ஆதரிக்கவும் இல்லை.
உங்கள் கருத்துகளும் சரி.
ஆனால் கமலுக்கு இது தேவை என்று நினைக்கிறன். கமல் எப்போதுமே இந்துக்கள் & இந்து கடவுள்களை அவமரியாதை செய்து படத்தில் காட்சி வைப்பார். தசாவதாரத்தில் இந்த வசனம் : " சண்டை இடுவதற்கு முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் இல்லாத காரணத்தால் சைவமும் வைணவமும் சண்டையிட்ட காலம்" - இதுல இரண்டு தவறுகள். 1.இந்துக்கள் தான் சண்டை ஆரம்பிபவர்கள் என்று தோற்றம் தருவது 2. கமல் இந்த படத்தில் " அடியேன் ராமானுஜதாசன் என்பார். ராமானுஜர் காலத்தில் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்தனர். பழய கதையில் தன பொய் என்றால், சுனாமியிலும் பொய். சுனாமி வந்தபோது முதல்வர் ஜெயலலிதா தான். ஆனால் கமல் கருணாநிதி முதல்வர் என்று காண்பித்து இருப்பார்.
கமல் தனது கருணாநிதி பாசத்தை காண்பித்தது அரசியல் இல்லையா?

அன்பே சிவம் படத்தில் வில்லன் நாசர் " தென்னாடு உடைய சிவனே போற்றி " என்று அடிகடி சொல்வார். இந்துக்கள் எதிர்கவில்லை. இது நமது சகிப்புதன்மை. இது தான் சரி. ஆனால் முஸ்லிம்கள் அப்படி அல்ல. கமல் இப்போதாவது இதை புரிந்து கொண்டால் சரி.

எனக்கு தோன்றுவது இதுதான்.
தமிழ் மூதுரை - தீதும் நன்றும் பிறர் தர வாரா
மற்றும்
ஒருவனுக்கு காலம் சரியில்லை என்றால் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று மகாபாரதத்தில் அர்ஜுனனின் கடைசி காலத்தில் நடந்தவை.

Doha Talkies said...

அண்ணா பட்டய கிளப்பி இருக்கீங்க.
மிகவும் எதிர்பார்த்திருந்தேன் இந்த பதிவிற்காக..
சரியான விளாசல்..மத வியாபாரிகளுக்கும்..ஒட்டு பொறுக்கிகளுக்கும்.

நிகழ்காலத்தில்... said...

திரைப்படத்தில் தவறாகவே இருப்பதாக வைத்துக்கொண்டாலும் இதைப்பார்த்து உண்மையான முஸ்லீம் கெட்டுவிடுவார் என்பது நான் குர்ரான் மீது வைத்த நம்பிககையைவிட அவர்கள் புனிதநூல்மீது குறைவாக வைத்திருக்கின்றனர் என்றே அர்த்தம் :)

இல்லை.. மதம் மாறி வர்றங்க வரமாப் போயிடுவாங்களோன்னு பயப்படறாங்களா ? :)

திரைத்துறையில் இஸ்லாம் சார்ந்த படத்தயாரிப்பாளர்கள் இல்லையா? அவர்களை வச்சு உயர்வா படம் எடுத்து சமூகத்தில அமைதிய வளர்க்க வேண்டியதுதானே..

ஜெ இவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி இருந்தாலும் தியேட்டர்களில் ரகளை என்பது தொடரும்போது நாம் சந்தேகக்கண் கொண்டே பார்க்க வேண்டி இருக்கிறது.

அரவிந்த் said...

நன்கு பொறுமையாக அலசி ஆராய்ந்து எழுது உள்ளீர்கள். உண்மையில் தேவையின்றி ஒரு பிரச்சினையை உருவாக்கி அதை பெருதுபடுத்தி உள்ளனர். ஒருவேளை படம் எப்போதும் போல வந்திருந்தால் கூட ஒன்றும் நடந்திருக்காது. ஆனால் இப்போது வெளியிட்டால், மத இயக்கத்தினர் உடனே படத்தை தடை செய்ய வேண்டும் என்று பேரணி, ஊர்வலங்கள் நடத்துவர். சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக சீர்குலையும். படம் நிரந்தரமாக தடை செய்யப்படும்.

நாட்டில் இதுவரை படங்களால் இந்து முஸ்லிம் ஒற்றுமையோ, சாதிப் பிரச்சினையோ ஏற்பட்டதில்லை. குண்டுவெடிப்பு, வேறு பல பிரசினைகளின்போதுதான் கலவரமே ஏற்பட்டது. மக்கள் யாரும் படங்களைப் பார்த்து அப்படியே நம்புவதற்கு கமல் ஒன்றும் எம்.ஜி.ஆர். அல்ல. இப்போது கமல் ரசிகர்கள் அனைவரும் தேவையின்றி பாரம்பரிய முஸ்லிம்களை ஒரு எதிரி போல பாவிப்பர்.

தேர்தலின்போது கமலுக்கு 200 கோடியும், மருதநாயகம் படத்தை முடிக்க பணமும் தருவதாக ஒரு அரசியல் கட்சி சொன்னதாக ஒரு வதந்தி வந்தது. இப்போது அதை ஒருவேளை ஓசியிலேயே நடத்தி விடுவார்களோ?

இதைப் பற்றி நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன். தங்களது கருத்தை எதிர் பார்க்கிறேன்.

http://www.sivigai.blogspot.in/2013/01/blog-post.html

Kumar said...

மிக நல்ல பதிவு... முஸ்லிம்கள் மதம் என்ற முகமுடியோடு எல்லாவற்றையும் பார்ப்பதை விட சுயமாக சிந்தித்து செயல்படவேண்டும்... பீ ஜே போன்ற மத பிழைப்புவாதிகள் பின்னால் போனால் ஆட்டுமந்தையாக இருக்க வேண்டியது தான்

Unknown said...

ஐயா, சிதம்பரம் முன் இருக்கையில், ஒரு முக ஸ்துதிக்கு "வெட்டி கட்டிய தமிழன் விரைவில் பிரதமராக வேண்டும்” என்று கமல் பேசி இருக்கலாம். ஆனால் பின் பேசிய முதியவர் “வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்!'' என்று கோத்து விட்டது தான் பிரச்னையை பெரிது படுத்தி இருக்கும் என்று நினைக்கிறன்.

James said...

முஸ்லிம்கள் சுயமாக சிந்தித்து செயல்படவேண்டும்.

ravikumar said...

Kamal deserves this punishment
So far he was exploting the name in favor of money, sabotizing others. Now he faces the Music. He could have solved this issue using his rationalized thinking power.

அஹோரி said...

யோவ் எங்கய்யா போன இத்தன நாளா. மனசுல இருக்குறத அப்பிடியே எழுதிட்ட போ.

ரொம்ப ஆடுனா சுத்தமா ஒதுக்கப்பட வேண்டி இருக்கும்ன்னு எல்லாம் புரிஞ்சிக்கணும்.

Subramanian said...

Dear UT, my heart goes out to Kamal. Even with all his mistakes he always invests everything he has in Cinema. The way he is being treated now is a shame. Hope atleast if the hindi version is a superhit it will offset his losses.Only a person who has lost money in business knows the pain of others.Hope People who are protesting against this film get the punishmnent they deserve in this same birth.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

பொண்ணா பொறந்தாதான் பொம்பளையோட கஷ்டத்தை உணர முடியும். ---இது சிரிக்க வைக்கும் சீரியஸ் சினிமா டயலாக் அல்ல என்று திருமணம் ஆன பின்னர் மனைவியை காதலிக்க ஆரம்பித்த போதுதான் உணர்ந்தேன்.

ஒடுக்க பட்ட சாதியில் பிறந்தால்தான் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உள்ளக்குமுறலை உணர முடியும் என்பதை எப்படியோ யாரோ ஒரு ஆளுங்கட்சி அரசியல் தலைவர் புரிந்து கொண்டது போல...

நம் நாட்டில் முஸ்லிமா வாழ்ந்து பார்த்தால்தான் ஒரு முஸ்லிமின் உள்ளக்குமுறலை உணர முடியும் என்பதை யாரவது ஒரு முஸ்லிம் அல்லாத ஆத்மா புரிந்து கொள்ளுங்களேன் ப்ளீஸ்..!

---இது ஒவ்வொரு முஸ்லிமின் உள் மனக்குமுறல்..!

முடிந்தால்............
இது போன்ற படம் வேண்டாம்.

நான் பக்கம் பக்கமாக விளக்கி சொன்னாலும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

இறுதியில் பிட் நோட்டிஸ் அடிச்சு கொடுங்க, அனுமதி வாங்கிட்டு மூலையில் நின்னு உங்க எதிர்க்கருத்தை கத்திட்டு போங்கன்னுதான் சொல்வீங்க.

நன்றி..!

வலிக்கும் மனதுடன்... விடை பெறுகிறேன்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

'பிறர் மனை நோக்கா பேராண்மை..' என்று பேக்கிரவுண்டில் பாடல் படித்துக்கொண்டே...

திருக்குறளை கையில் வைத்துக்கொண்டே....

பக்கத்து வீட்டு காரனின் மனைவி குளிக்கும் பாத்ரூமில் எட்டிப்பார்க்கும் ஒரு தமிழனின் கயமையை காட்டி...

எங்க கேரள நாட்டில் நடப்பதைத்தான் காட்டுகிறோம்...

தமிழன் பக்கத்து வீட்டானாக வந்தால் என்னாகும் என்ற கதைக்களம் அப்படித்தான் உள்ளது....

என்று சொல்லிக்கொண்டு...

'தமிழர்களே இப்படித்தான்' என்று ஒரு மலையாள சினிமாவில் மலிவான ரசனை கொண்ட மலையாள அடியன்சுக்காக ஐம்பத்தி எட்டாவது முறையாக காட்சிப்படுத்தி கல்லா கட்டும் வக்கிரமாக தமிழர் விரோத உள்குத்துடன் கேரளாவில் தொடர்ந்து அவர்கள் படம் எடுத்தால்...

அதை கேரளா சென்சார் கெக்கே பிக்கே என்று தொடர்ந்து இம்முறையும் சிரித்துக்கொண்டே அனுமதித்தால்...

அந்த படத்தை தயவு செய்து நீங்கள் உண்மைத்தமிழன் என்றால்...

கேரளாவில் இருந்தால்...

இதுவரை பொறுமை காட்டியது போதும் என்று இம்முறையாவது... அக்காட்சியை நீக்க படம் எடுத்தவரிடம் கோருங்கள்.

படம் எடுத்தவர் மாட்டேன் என்றால்...

இதனால்... தமிழருக்கு எவரும் வாடகை வீடோ வேலையோ வாணிபமோ செய்வதில்லை என்பதால்...

அரசிடம் சிறுபான்மை தமிழருக்காக தடை கோரிக்கை வையுங்கள்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நீங்க எப்பவும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரியே நீங்க சொன்னதுதான் நடக்குதுன்னு தொடர் கருத்து சொல்லிகிட்டே வர்றீங்க.முக்கியமாக இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஏன் படத்தைப் போட்டுக்காண்பிக்கனும்ன்னு கேட்டுகிட்டே இருக்கிறீங்க.கமல் பிரச்சினை வேண்டாமென்ற நல்லெண்ணத்தில் இவர்களைப் படம் பார்க்க வைத்து பிரச்சினை ஆப்கானிஸ்தானில்தானே நடக்குதுன்னு நினைப்பாங்கன்னு கன்வின்ஸ் செய்யலாம்ன்னு நினைச்சிருக்க கூடும்.ஒருவேளை இவர்களுக்கு படம் போட்டுக்காண்பிக்காமல் இருந்திருந்தால் இவர்கள் மாற்று வழியில் கலவரத்தை உருவாக்கியிருப்பார்கள்.அப்படி பிரச்சினையாகியிருந்தால் இவர்களுக்கு முன்பே படம் போட்டுக்காண்பித்திருக்கலாமேன்னு நீங்களே வாதாடுவீங்க.

கமல் படம் போட்டுக்காண்பித்ததின் மூலம் இந்த கலாச்சார தீவிரவாதிகளின் முகத்தாடியை கிழித்திருக்கிறார்.

ஜெயலலிதா இன்று போலிஸ் எண்ணிக்கை பத்தாது என்றும் நாம் முன்பே பேசிக்கொண்டது போல் ஜார்ஜ் போன்றவர்களுக்கு சில உளவுத்தகவல்கள் தெரிந்திருக்க கூடும் என்பதால் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறேன் பேர்வழியென அறிக்கை தருகிறார்.அப்படியே ஒரு முதலமைச்சரின் கடமையாக சட்டம்,ஒழுங்கை காப்பாற்றுகிறேன் பேர்வழியென்றாலும் கூட நீதிபதி ராமனின் தீர்ப்போடு நீதிமன்றம் சொன்னதை இனி தான் மீற முடியாது என நழுவியிருக்கலாம்.

இன்னொரு நீதிபதியை இரவு 11மணிக்கு சந்தித்து அடுத்த நாள் படத்தையும் திரையிட விடாமல் மேலும் படத்தை வெளியிடாமல் செய்ததில் ஜெயலலிதாவின் வன்மம் வெளிப்படுகிறது.

நம்ம இணைய பங்காளிகளுக்கு ஜெயலலிதாவை மட்டும் உண்மைத்தமிழன்,என்னைப்போன்றவர்கள் தி.மு.க காலத்தை விமர்சித்ததைப் போல விமர்சிப்பதில்லையென்ற பெரும் ஆதங்கம் உண்டு:)

எதிர் விமர்சனம் செய்வதற்கும் கலைஞர் போன்று ஒரு தகுதி வேண்டும்.ஜெயலலிதா போன்ற எதை செய்கிறோமென்றே தூரப்பார்வை இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோமென செயல்படும் ஹிஸ்டீரியா பெண்ணை விமர்சனம் செய்துதான் குடநாட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற அவசியமில்லை.அவரே யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிற மாதிரி செய்து கொள்வார்.

உண்மைத்தமிழன்!நீங்க சொன்னமாதிரிதான் வாழ்க்கையோடு இணைந்து பயணம் செய்த நண்பன் மாதிரி கமல்.துக்கத்தை பின்னூட்டத்தில் சொல்லி தீர இயலாது.முடிச்சிடறேன்.

ராஜ நடராஜன் said...

பின்னூட்டம் போட்டு முடிச்சதும் சிட்டிசன் பின்னூட்டம் காண நேர்ந்தது.தமிழக இஸ்லாமியர்களை அரேபிய,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் என்ற இஸ்லாமியர் வட்டத்துக்குள்ளேயே வச்சுப்பார்க்க முடியலை.முப்பாட்டன்கள் வர்ணாசிரமங்களுக்கு எதிராகவோ அல்லது நவாப்,நிஜாம்களின் முன்னுரிமைகளுக்காகவோ மதம் மாறியவர்களாகவே கருதுகிறேன்.உங்கள் மீது தீவிரவாத பிம்பம் பரவுவதை நீங்கள் உணர்ந்தாலும் கூட அவற்றிலிருந்து விடுபடுகிற மாதிரி இயக்கப் பிரச்சாரங்கள்,இணைய கருத்துரையாடல்கள் எங்காவது தென்படுகிறதா?தலிபான்களை சுதந்திரப்போராளிகள் என்றும்,நாங்கள் ஜிகாதிகள் என்றும் மட்டுமே குரல் கொடுக்கிறீர்கள்.இதோ உங்களை பிரதிபலிக்கிற மாதிரியே அரசியல் களம் சார்ந்தும் விஸ்வரூபத்துக்கான தடையை ஜெயலலிதாவின் துணையோடு கொண்டு வந்துள்ளீர்கள்.

கோவை குண்டுவெடிப்புக்குப் பின் நீங்கள் செய்த மாபெரும் தவறு விஸ்வரூபத்துக்கு எதிரான சூழ்ச்சிகள் .விஸ்வரூபம் திரைப்படம் இன்னும் கொஞ்ச காலத்தில் மறக்கப்பட்டு விடும்.ஆனால் விஸ்வரூபத்துக்கு எதிரான சூழ்ச்சிகள் வரலாறாகிப்போனதால் இஸ்லாமியர்கள் மீதான பிம்பத்தை மாற்றுவதற்கு எவ்வளவு நாளாகுமோ?

சிந்திக்கும் மானிடன் யாராவது தமிழக இஸ்லாமியர்களை வழிநடத்துவானாக.

சுரேஷ்குமார் said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

தமிழக இஸ்லாமியர்களை அரேபிய,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் என்ற இஸ்லாமியர் வட்டத்துக்குள்ளேயே வச்சுப்பார்க்க முடியலை.முப்பாட்டன்கள் வர்ணாசிரமங்களுக்கு எதிராகவோ அல்லது நவாப்,நிஜாம்களின் முன்னுரிமைகளுக்காகவோ மதம் மாறியவர்களாகவே கருதுகிறேன்.

கல்வெட்டு said...

உங்களையும் இப்படி இந்துவாக உணரவைத்துவிட்டது இந்த நிகழ்வு?
:(((

ஏற்கனவே நீங்கள் பக்தர்.
அப்படியே இருங்கள் இராமர் பக்கம் திரும்பிவிடாதீர்கள் பிஜேபி என்ற டவுசரை மாட்டிவிடுவார்கள்

Velu said...

அன்புள்ள இஸ்லாமிய சகோதரருக்கு ,

அண்மை சம்பவங்களின் மூலம் என்னை போன்றோரை இந்து மதத்தை சார்ந்தவர்கள் நாங்கள் என நினைவு படுத்தியமைக்கு நன்றி

ஆம் இதுவரை நாங்கள் எங்கள் மதத்தை பற்றி அதிகம் நினைத்ததில்லை .
அது உண்மை

இதுவரை நாங்கள் அப்துல் கசாப் -ய் பார்த்த பார்வை வேறு
எங்கள் அண்டை அண்டை வீட்டு இஸ்லாமிய நண்பரை பார்த்த பார்வை வேறு .

தலிபான்களை பார்த்த பார்வை வேறு .எங்களுடன் தொழில் புரியும் முஸ்லிம்களை பார்த்த பார்வை வேறு

எங்கள் பார்வையை புரிந்துகொள்ளாதது நீங்கள் செய்த தவறு

அண்மையில் வெளி வந்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் ஒரு காவி கட்டிய சாமியார் வில்லன்களுடன் சேர்ந்து நாட்டுக்கு துரோகம் செய்வது போல் காட்டியதை நாங்கள் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை

அதற்காக எல்லா சாமியார்களும் மோசம் என்று நாங்கள் நினைப்பதில்லை

எங்களுக்கும் மதம் இருந்தாலும் நாங்கள் கோயிலுக்கு சென்றாலும்
எங்களுக்குள்ள பகுத்தறிவு எங்களை வழி நடத்துகிறது

வாழ்க்கையின் யதார்த்தை நாங்கள் புரிந்து கொள்ளுகிறோம்

இந்த ஒரு படத்தினால் நம் உறவு முறிந்து விடப்போவதில்லை

எங்கோ அமெரிக்காவில் வெளியான ஒரு படத்திற்கு நீங்கள் சென்னையில் செய்த காரியம் சரியா ?

விஸ்வரூபம் படத்தை ஒரு சினிமா தானே என நினைத்து விட்டிருந்தால் இந்நேரம் தியேட்டரை விட்டே ஓடி இருந்திருக்கும்

ஆனால் உங்களை எல்லோரும் தவறாக நினைப்பார்கள் என நினைத்து (பயந்து )
தடை வாங்கி பிரச்னையை ஏற்படுத்திவிட்டீர்கள் .

ஒன்று கூற விரும்பிகிறேன்

மடியில் கனம் இருந்ததால்தான் வழியில் பயம் இருக்கும்

மட்டை ஊறுகாய் said...

மிகவும் உண்மை...அம்மா என்பதால் எல்லோரும் அடக்கி வாசிக்கிராங்களோ??
சென்ற தேர்தல் சமயத்தில் நியாயமாக கோவப்பட்டது போல இணையத்திலோ, பதிவிலோ யாரும் அரசை குமுருவதில்லை..
அம்மா என்ற பயமா??
இல்லை இது தான் அவர்கள் நடுநிலைமையா??
சவுக்கு கூட ஆட்சியை கிழிக்க ஆரம்பித்து விட்டார்..
பதிவர்களுக்கு எல்லாம் செலெக்டிவ் அம்னீசியா வந்து வந்து விட்டது போல???
எது எப்படியோ அண்ணனின் இன்றைய பதிவு...அண்ணன் பார்ம்க்கு வந்துட்டார்...
மிகத்தேவையான பதிவு..
எனது உற்ற நண்பன் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த்தவர், 30 வருடங்களாக நண்பர்களாக உள்ளோம். இந்த படப்ப்ரிச்சனைக்கு பிறகு நட்பில் சிறு விரிசல் விட்டது போல உணருகிறேன்.
எங்கே எனக்கும் மத வெறியை ஏற்றி விடுவார்களோ என்று அஞ்சுகிறேன்..

k.rahman said...

//கமல்ஹாசனை தவிக்க விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் ஜெயலலிதாவின் அரசியல் சூழ்ச்சியில் இஸ்லாமிய அன்பர்களும் சிக்கிக் கொண்டது அவர்களுக்கே தெரியவில்லைபோலும்.. இன்றுவரையிலும் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.. இதுவரையிலும் நான் ஒரு இந்து என்று நினைப்பே வராமல் இருந்த எனக்கு, ஒரு கணத்தில் “இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..! இது என் ஒருவனுக்கு மட்டுமே வந்ததில்லை.. தமிழ்நாட்டில் பெருவாரியான சினிமா ரசிகர்களுக்கு வந்துவிட்டது.. இந்த முட்டாள்தனமான போராட்டத்தினால் இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது இதைத்தான் என்று உறுதியுடன் சொல்லலாம்..!//

நியாமான பேச்சு சார். ஆனா என்னன்னு தெரியல இந்த பீஜே வந்தப்புறம் தான் இந்த குழப்பம்லாம். என்ன சொன்னாலும் உணர்ச்சி வசபடறாங்க. கொஞ்சம் அதிகமா கேள்வி கேட்டா நீ எல்லாம் முஸ்லீமான்னு கேட்கறாங்க. என்னத்த சொல்றதுன்னே தெரியல.

middleclassmadhavi said...

migavum oonri padikka vaiththa pathivu - nanrikaL

வவ்வால் said...

ராச நட,

//நீங்க எப்பவும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரியே நீங்க சொன்னதுதான் நடக்குதுன்னு தொடர் கருத்து சொல்லிகிட்டே வர்றீங்க.
//

இதுல உங்களுக்கு என்ன பிரச்சினை,நான் சொன்னது எல்லாம் நடந்துப்போச்சே ஹி...ஹி எல்லாம் ஏக இறைவன் வவ்வாலின் அருள் வாக்கு :-))

சரி எனக்கு எதுவும் தெரியாதுனு நானே சொல்லிடுறேன் ,போய் நிம்மதியா சாப்புட்டு தூங்கும் :-))

உளவுத்துறை அறிக்கை எல்லாம்ம் தெரிஞ்சாப்போல சொல்லுவாராம் அதை கேட்டுக்கணுமாம், இவரு தான் உளவுத்துறை தலிவரு :-))

//ஒருவேளை இவர்களுக்கு படம் போட்டுக்காண்பிக்காமல் இருந்திருந்தால் இவர்கள் மாற்று வழியில் கலவரத்தை உருவாக்கியிருப்பார்கள்.

//

நீங்க எல்லாம் தெரிஞ்சவரு தப்பாவா சொல்லப்போறிங்க,ஆதிபகவன் படத்தை போட்டுக்காட்ட சொல்லுறாங்க ,போட்டுக்காட்டிடனும் இல்லைனா கலவரம் செய்துடுவாங்க, கடல் படம் நாளைக்கு வரப்போகுது, மீனவர்கள் இன்னிக்கு நைட்டே போட்டுக்காட்டுன்னு சொன்னாலும் போட்டுக்காட்டி ஒப்புதல் வாங்கனும் இல்லைனா கலவரம் ஆயிடும்.

இப்படியே எல்லாப்படத்தையும் யாராவது எங்களுக்கு போட்டுக்காட்டுன்னு சொன்னதும் ,போட்டுக்காட்டி ஒப்புதல் வாங்கிடனும் ,இல்லைனா கலவரம் ஆகிடும் :-))

ஆமாம் படம் எடுத்ததும் சேட்டிலைட்ஸ் உரிமையை தேடிப்போய் வித்தது யாரு?

வேற யாருக்கிட்டேயும் விக்க முடியாம போச்சா அப்போ?

இந்தப்படத்துக்கு இஸ்லாமியர்கள் மூலம் எதிர்ப்பு வரும்,நாம ஆளுங்கட்சிக்கு நெருக்கமா காட்டிக்கிட்டா எதிர்ப்பு வராதுன்னு தானே அப்போ சேட்டிலட்ஸ் உரிமை தேடிப்போய் கொடுத்தார்.

தன் சுயலாபத்துக்கு அரசியல் சக்தியை பயன்ப்படுத்திக்கலாம்னு பார்த்தார், கொஞ்சம் முட்டிக்கிட்டதும், இவர் தேடிப்போன அரசியல் சக்தியே பதம் பார்க்குது.

அம்மையாருடன் முட்டிக்காமல் இருந்து,அரசியல் பலம் வைத்து எதிர்ப்புகளை அடக்கி இருந்தால் அப்போ என்ன சொல்லியிருப்பீர்?

அரசியல் பலம் வைத்து எதிர்ப்பவர்களை அடக்கணும் திட்டம் போட்டது யார்?லோகம் தானே :-))

யார் ஆட்சி நடக்குதோ அவுங்க கிட்டே ஒட்டிக்கொள்ளும் வியாபாரிகளுக்கு அவர்களாலேயே பிரச்சினை வரும் :-))

Unknown said...

sariyaana neraththil thevaiyaana pathivu....paaraattukkal

சசி ராஜா said...

சூப்பர்...தமிழா!

ஒவ்வொரு வரியும் 'நச்', அப்படியே மனதில் ஓடுகிற எண்ணத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்து இருக்கீறீங்க..

அதிகார போதையும், ஆணவமும் அழிவைத்தான் தரும்..

ரஜினி டயலாக், சீக்கிரம் மறந்து போச்சு போல..

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...

ரொம்பவே வெறுத்துப் போயிருக்கிறீர்கள். நமக்கே இவ்வளவு வெறுப்பாக இருக்கும்போது பாதித்தவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது.

ஊரெங்கும் கரண்ட் இல்லை, வானளவு விலைவாசி. விளையும் நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு விற்கும் கொடுமை, பத்து வருடங்களில் குடிக்கும் தண்ணீர் இலவசமாக கிடைத்ததிலிருந்து மாறி விலைக்கு வாங்க வேண்டிய கொடுமைக்கு ஆளாகியிருக்கிறோம், பத்து வருடங்களில் கோடிகளிலிருந்த லஞ்ச ஊழல்கள் ஆயிரம் கோடிகளில் மாறிய மாயம், அரசு நிறுவனங்களை எல்லாம் தனியாரிடம் தாரை வார்க்கத் துடிக்கும் மத்திய அரசு, தீர்க்க முடியாமல் மாறிய காவிரி, பெரியாறு அணை பிரச்சனைகள்..

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது, மேலும் ஒரு பிரச்சனையை பெரிதாக்கினால் மக்கள் மற்றவற்றை மறந்து விடுவார்கள் என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மாட்டியவர் கமல் இம்முறை.

எல்லாவற்றையும் அவரவர் நம்பும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். எப்படி கூலி கொடுக்கப் போகிறார் என்பதை பார்க்கத்தானே போகிறோம்!]]]

இந்த ஒரு நம்பிக்கையிலதான் எல்லா அநியாயத்தையும் பொறுத்திக்கிட்டு வாழுறோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

நல்ல பதிவு!

Ram]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[pulsepazhani said...

*ஒரு கலைத்திறன் சார்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடியாத மூளையும் உங்களுக்கு இருக்கலாம்.* ஏன் இல்லை. அவர்களுடைய கசாப்பு கடைகளில் அதானே விக்கிறாங்க. கன்டவனெல்லாம் அதானே வாங்கி திங்கிறாங்க.]]]

அதன் தாக்கம் இந்த அளவுக்கா இருக்க வேண்டும்..?

உண்மைத்தமிழன் said...

[[[suji said...

இதுவரையிலும் நான் ஒரு இந்து என்று நினைப்பே வராமல் இருந்த எனக்கு, ஒரு கணத்தில் “இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..! இது என் ஒருவனுக்கு மட்டுமே வந்ததில்லை.. ///

எனக்கும் அப்படித்தான் தோணுது. நல்ல பதிவு.]]]

இப்படி எழுதக் கூட முதலில் எனக்கு மனமில்லை.. பின்பு எழுதித்தான் தீர வேண்டியதாகிவிட்டது..! வருந்துகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

ஒரே வாரத்தில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்ததும், இஸ்லாமியர்கள் மேல் வெறுப்புணர்வை வர வைத்ததும்தான் இந்த இஸ்லாமிய அமைப்புகளின் சாதனை.]]]

இதனை இப்போதாவது அவர்கள் புரிந்து கொண்டால் சரி..!

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//இதுவரையிலும் நான் ஒரு இந்து என்று நினைப்பே வராமல் இருந்த எனக்கு, ஒரு கணத்தில் “இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..!//

இதையெல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளும்போது காலம் மிகவும் கடந்திருக்கும் ......]]]

அப்போதைய வாழ்க்கையோட்டத்தில் இது எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும்னு தெரியலை ஸார்.. ஆனால் நம்முடைய வாரிசுகளை நினைத்தால் பாவமாவும் இருக்கு.. பயமாவும் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

எப்படி கூலி கொடுக்கப் போகிறார் என்பதை பார்க்கத்தானே போகிறோம்!]]]

இது நம்முடைய ஆசை இல்லண்ணே.. ஆனால் விரக்தியின் வெளிப்பாடுதான் இப்படி சொல்ல வைக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, இப்போ பொங்கி என்ன புண்ணியம்.

ஆரம்பத்திலேயே சேட்டலைட்ஸ் உரிமை வச்சு பிரச்சினை வர்ம்னு நான் சொன்னது நினைவிருக்கா? அப்போ அதெல்லாம் பேசி இருப்பார்னு சொன்னது நீங்கதான்... நான் அப்போ சொன்னது போலதான் நடந்து இருக்கு.

ஜெயா டீவீயா தேடிப் போய் உரிமை கேட்டுச்சு, இவரா தேடிப் போய் சுய லாபத்துக்காக வித்தார். பின்னர் ட்டிஎச் வச்சு பிரச்சினை. இந்த நிலையில் ஏன் படத்தைப் போட்டுக் காட்டணும்.]]]

பிரச்சினையை முன்பே தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துதான்..!

[[[உண்மையில் பிரச்சினை வரட்டும் அப்போதான் விளம்பரம்னு நினைச்சார், அவர் நினைக்காதது தமிழக அரசு தடை போடும்.. இந்தளவுக்கு பிடிவாதமாக இருக்கும் என்பதே, லோகநாயகர் தப்புக் கணக்கே நானும் போட்டு தவிச்சேன் ஞான தங்கமேனு புலம்புறார் இப்போ :-))]]]

நோ.. தனது சொத்துக்களை பணயம் வைத்த சூழலில் இது போன்று விளையாட அவர் ஒன்றும் முட்டாள் இல்லை..! அரசியல் இடையில் புகுந்து கெடுத்துவிட்டது..!

[[[சரி சொத்தை அடமானம் வச்சு படம் எடுத்தேன்னு சொல்வதை நீங்களும் நம்புறிங்களா?]]]

உண்மையே அதுதான்..!

பிவிபி கிட்டே வாங்கின பணம்? அந்த பணத்திலே படம் எடுத்தாச்சு, இவர் பட்ஜெட் கூட சொல்லி கள்ளக் கணக்கு சொன்னதால்தான் வியாபாரம் ஆகலை, இப்போ செண்டிமெண்டா என் மொத்த சம்பாத்தியம் முடங்கிப் போச்சுனு ஒரு கதை சொல்லுறார். ஒரு பைசா நட்டம் வராது. வேண்டுமானால் கிடைக்க இருந்த லாபம் இழக்கலாம்.
இப்போ பிவிபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செட்டில் செய்யலைனு நினைக்கிறேன். இன்னும் சில நாளில் பிவிபி வழக்கு தொடுக்கலாம், அதன் அடிப்படையில் லோகநாயகர் கைதும் ஆகலாம், இப்போ உள்ள\நிலமை அப்படி.
பிவிபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தாரா என விசாரித்து சொல்லுங்கள், கொடுக்கலைனா சிக்கலாகிடும்.]]]

பணத்தை விரைவில் கொடுத்துவிடுவார்.. இல்லாவிடில் சொத்துக்களை அட்டாச் செய்துவிடுவார்..! உங்களுக்கு கவலை வேண்டாம் வவ்ஸ்.. உங்களிடம் வந்து நிச்சயமாக கடன் கேட்க மாட்டார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Babu Palamalai said...

“இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..! இது என் ஒருவனுக்கு மட்டுமே வந்ததில்லை.. தமிழ்நாட்டில் பெருவாரியான சினிமா ரசிகர்களுக்கு வந்துவிட்டது.. இந்த முட்டாள்தனமான போராட்டத்தினால் இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது இதைத்தான் என்று உறுதியுடன் சொல்லலாம்..! //

நெத்தி அடிண்ணே !! இவங்க பண்ணின இந்த வேலையால சகஜமாய் பழகி வந்த வேற்று மத நண்பர்களைகூட சற்று சஞ்சலத்துடன் பார்க்க வைத்திருக்கிறார்கள் :(]]]

எனக்கும்தான்.. இது பத்தி பேசவே தயக்கமா இருக்கு..! என்ன கொடுமை இது..?

உண்மைத்தமிழன் said...

[[[Velu said...

படத்தில் வரும் ஒரே இந்திய(தமிழ்) முஸ்லிம் நல்லவரே என காட்டப்படுகிறதே. ஆகையால் இந்தியாவில் வாழும் முஸ்லிம் அனைவரும் நல்லவர்களே .
அவர்களைப் போல வாழ கற்றுக் கொள்ளுங்கள் என உலக முஸ்லிம்களுக்கு கமல் கருத்து சொல்வதாக ஏன் இங்குள்ளவர்கள் எடுத்துக் கொள்ளகூடாது ?]]]

ம்ஹும்.. இங்கே கருத்துச் சொல்வதே அவர்களுக்குப் பிடிக்காது.. குரானை மிஞ்சி ஆசான் வேறெதுவும் இல்லை என்பார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[MnB said...

கமலுக்கு இது தேவை என்று நினைக்கிறன். கமல் எப்போதுமே இந்துக்கள் & இந்து கடவுள்களை அவமரியாதை செய்து படத்தில் காட்சி வைப்பார். தசாவதாரத்தில் இந்த வசனம் : " சண்டை இடுவதற்கு முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் இல்லாத காரணத்தால் சைவமும் வைணவமும் சண்டையிட்ட காலம்" - இதுல இரண்டு தவறுகள். 1.இந்துக்கள்தான் சண்டை ஆரம்பிபவர்கள் என்று தோற்றம் தருவது
2. கமல் இந்த படத்தில் " அடியேன் ராமானுஜதாசன் என்பார். ராமானுஜர் காலத்தில் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்தனர். பழய கதையில் தன பொய் என்றால், சுனாமியிலும் பொய். சுனாமி வந்தபோது முதல்வர் ஜெயலலிதாதான். ஆனால் கமல் கருணாநிதி முதல்வர் என்று காண்பித்து இருப்பார். கமல் தனது கருணாநிதி பாசத்தை காண்பித்தது அரசியல் இல்லையா? அன்பே சிவம் படத்தில் வில்லன் நாசர் "தென்னாடு உடைய சிவனே போற்றி" என்று அடிகடி சொல்வார். இந்துக்கள் எதிர்கவில்லை. இது நமது சகிப்புதன்மை. இதுதான் சரி. ஆனால் முஸ்லிம்கள் அப்படி அல்ல. கமல் இப்போதாவது இதை புரிந்து கொண்டால் சரி.]]]

இப்போது அனைவருக்குமே இது புரிந்திருக்கிறது..!

[[[எனக்கு தோன்றுவது இதுதான்.
தமிழ் மூதுரை - தீதும் நன்றும் பிறர் தர வாரா மற்றும் ஒருவனுக்கு காலம் சரியில்லை என்றால் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று மகாபாரதத்தில் அர்ஜுனனின் கடைசி காலத்தில் நடந்தவை.]]]

கமலுக்கு இதுவும் கடந்து போகும்...

உண்மைத்தமிழன் said...

[[[Doha Talkies said...

அண்ணா பட்டய கிளப்பி இருக்கீங்க.
மிகவும் எதிர்பார்த்திருந்தேன் இந்த பதிவிற்காக. சரியான விளாசல். மத வியாபாரிகளுக்கும். ஒட்டு பொறுக்கிகளுக்கும்.]]]

இதுபோல் அடிக்கடி வந்து போனால் சந்தோஷமா இருக்கும் தம்பி..! வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[நிகழ்காலத்தில் சிவா said...

திரைப்படத்தில் தவறாகவே இருப்பதாக வைத்துக் கொண்டாலும் இதைப் பார்த்து உண்மையான முஸ்லீம் கெட்டு விடுவார் என்பது நான் குர்ரான் மீது வைத்த நம்பிககையைவிட அவர்கள் புனித நூல் மீது குறைவாக வைத்திருக்கின்றனர் என்றே அர்த்தம்:)]]]

அப்ப முஸ்லீமும் சக மனிதனைப் போல ஒருவன்தானே..? பின் எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்..?

உண்மைத்தமிழன் said...

[[[அரவிந்த் said...

நன்கு பொறுமையாக அலசி ஆராய்ந்து எழுது உள்ளீர்கள். உண்மையில் தேவையின்றி ஒரு பிரச்சினையை உருவாக்கி அதை பெருதுபடுத்தி உள்ளனர். ஒருவேளை படம் எப்போதும் போல வந்திருந்தால்கூட ஒன்றும் நடந்திருக்காது. ஆனால் இப்போது வெளியிட்டால், மத இயக்கத்தினர் உடனே படத்தை தடை செய்ய வேண்டும் என்று பேரணி, ஊர்வலங்கள் நடத்துவர். சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக சீர்குலையும். படம் நிரந்தரமாக தடை செய்யப்படும். நாட்டில் இதுவரை படங்களால் இந்து முஸ்லிம் ஒற்றுமையோ, சாதிப் பிரச்சினையோ ஏற்பட்டதில்லை. குண்டு வெடிப்பு, வேறு பல பிரசினைகளின்போதுதான் கலவரமே ஏற்பட்டது. மக்கள் யாரும் படங்களைப் பார்த்து அப்படியே நம்புவதற்கு கமல் ஒன்றும் எம்.ஜி.ஆர். அல்ல. இப்போது கமல் ரசிகர்கள் அனைவரும் தேவையின்றி பாரம்பரிய முஸ்லிம்களை ஒரு எதிரி போல பாவிப்பர். தேர்தலின்போது கமலுக்கு 200 கோடியும், மருதநாயகம் படத்தை முடிக்க பணமும் தருவதாக ஒரு அரசியல் கட்சி சொன்னதாக ஒரு வதந்தி வந்தது. இப்போது அதை ஒருவேளை ஓசியிலேயே நடத்தி விடுவார்களோ?]]]

நடந்தாலும் நடக்கலாம்..! கமல் காயம்பட்டுவிட்டதாக இப்போதுவரையிலும் நினைக்கிறார். அது ஆறுவதும், அவரது மனதில் இருந்து மறைவதும் கஷ்டம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Kumar said...

மிக நல்ல பதிவு. முஸ்லிம்கள் மதம் என்ற முகமுடியோடு எல்லாவற்றையும் பார்ப்பதை விட சுயமாக சிந்தித்து செயல்படவேண்டும். பீ ஜே போன்ற மத பிழைப்புவாதிகள் பின்னால் போனால் ஆட்டுமந்தையாக இருக்க வேண்டியதுதான்.]]]

நம்ம அரசியல்வியாதிகள்தான் இப்படியென்றால், அவர்களுக்கும் அதே கதிதானா..? அல்லாதான் காப்பாத்தணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[நிஷா said...

ஐயா, சிதம்பரம் முன் இருக்கையில், ஒரு முகஸ்துதிக்கு "வெட்டி கட்டிய தமிழன் விரைவில் பிரதமராக வேண்டும்” என்று கமல் பேசி இருக்கலாம்.

ஆனால் பின் பேசிய முதியவர் “வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர ​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்!'' என்று கோத்து விட்டதுதான் பிரச்னையை பெரிதுபடுத்தி இருக்கும் என்று நினைக்கிறன்.]]]

ஹா.. ஹா.. நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு..! வருகைக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[DiaryAtoZ.com said...

முஸ்லிம்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.]]]

அரசியல் கட்சித் தொண்டர்களைப் போல ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களால்தான் பிரச்சினைகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ravikumar said...

Kamal deserves this punishment
So far he was exploting the name in favor of money, sabotizing others. Now he faces the Music. He could have solved this issue using his rationalized thinking power.]]]

அனைவரும் மனிதர்கள்தான். தவறு செய்யக் கூடியவர்கள்தான்.. ஒரு தவறில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக் கொள்வார்கள்..!

உண்மைத்தமிழன் said...

அஹோரி said...
யோவ் எங்கய்யா போன இத்தன நாளா.]]]

இதை நானுல்ல கேக்கணும்..! நீரு எங்க போயிருந்தீரு இத்தனை நாளா..?

[[[மனசுல இருக்குறத அப்பிடியே எழுதிட்ட போ. ரொம்ப ஆடுனா சுத்தமா ஒதுக்கப்பட வேண்டி இருக்கும்ன்னு எல்லாம் புரிஞ்சிக்கணும்.]]]

இது கமலுக்கும் பொருந்தும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Subramanian said...

Dear UT, my heart goes out to Kamal. Even with all his mistakes he always invests everything he has in Cinema. The way he is being treated now is a shame. Hope atleast if the hindi version is a superhit it will offset his losses. Only a person who has lost money in business knows the pain of others. Hope People who are protesting against this film get the punishmnent they deserve in this same birth.]]]

நானும் இதைத்தான் சொல்கிறேன்.. நாம் அனைவரும் இந்தப் படத்தை இதற்காகவே ஒரு முறைக்கும் மேலாக பார்த்தே தீர வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

பொண்ணா பொறந்தாதான் பொம்பளையோட கஷ்டத்தை உணர முடியும். ---இது சிரிக்க வைக்கும் சீரியஸ் சினிமா டயலாக் அல்ல என்று திருமணம் ஆன பின்னர் மனைவியை காதலிக்க ஆரம்பித்தபோதுதான் உணர்ந்தேன்.
ஒடுக்கபட்ட சாதியில் பிறந்தால்தான் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உள்ளக் குமுறலை உணர முடியும் என்பதை எப்படியோ யாரோ ஒரு ஆளுங்கட்சி அரசியல் தலைவர் புரிந்து கொண்டது போல...
நம் நாட்டில் முஸ்லிமா வாழ்ந்து பார்த்தால்தான் ஒரு முஸ்லிமின் உள்ளக் குமுறலை உணர முடியும் என்பதை யாரவது ஒரு முஸ்லிம் அல்லாத ஆத்மா புரிந்து கொள்ளுங்களேன் ப்ளீஸ்..!]]]

புரிந்து கொண்டதால்தான் இத்தனை தன்மையோடு, உள்ளக் குமுறலோடு எழுதியுள்ளேன் நண்பரே.. தவறுகளை தயவு செய்து நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

'பிறர் மனை நோக்கா பேராண்மை..' என்று பேக்கிரவுண்டில் பாடல் படித்துக் கொண்டே திருக்குறளை கையில் வைத்துக் கொண்டே....
பக்கத்து வீட்டுகாரனின் மனைவி குளிக்கும் பாத்ரூமில் எட்டிப் பார்க்கும் ஒரு தமிழனின் கயமையை காட்டி...

எங்க கேரள நாட்டில் நடப்பதைத்தான் காட்டுகிறோம்...

தமிழன் பக்கத்து வீட்டானாக வந்தால் என்னாகும் என்ற கதைக்களம் அப்படித்தான் உள்ளது என்று சொல்லிக் கொண்டு...

'தமிழர்களே இப்படித்தான்' என்று ஒரு மலையாள சினிமாவில் மலிவான ரசனை கொண்ட மலையாள அடியன்சுக்காக ஐம்பத்தி எட்டாவது முறையாக காட்சிப்படுத்தி கல்லா கட்டும் வக்கிரமாக தமிழர் விரோத உள்குத்துடன் கேரளாவில் தொடர்ந்து அவர்கள் படம் எடுத்தால்.

அதை கேரளா சென்சார் கெக்கே பிக்கே என்று தொடர்ந்து இம்முறையும் சிரித்துக்கொண்டே அனுமதித்தால்...

அந்த படத்தை தயவு செய்து நீங்கள் உண்மைத்தமிழன் என்றால்...

கேரளாவில் இருந்தால்...

இதுவரை பொறுமை காட்டியது போதும் என்று இம்முறையாவது... அக்காட்சியை நீக்க படம் எடுத்தவரிடம் கோருங்கள்.

படம் எடுத்தவர் மாட்டேன் என்றால்...

இதனால்... தமிழருக்கு எவரும் வாடகை வீடோ வேலையோ வாணிபமோ செய்வதில்லை என்பதால்...

அரசிடம் சிறுபான்மை தமிழருக்காக தடை கோரிக்கை வையுங்கள்.]]]

இதை நாம் செய்ய முடியாது..! தமிழர்கள் அனைவருமே அப்படித்தான் என்று சொல்லவில்லையே..? யாரோ ஒருத்தன்தானே.. அதுவும் இது ஒரு கற்பனைதானே..? இதில் என்ன பிசிறு இருக்கிறது..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

வவ்வால்! நீங்க எப்பவும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரியே நீங்க சொன்னதுதான் நடக்குதுன்னு தொடர் கருத்து சொல்லிகிட்டே வர்றீங்க. முக்கியமாக இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஏன் படத்தைப் போட்டுக் காண்பிக்கனும்ன்னு கேட்டுகிட்டே இருக்கிறீங்க. கமல் பிரச்சினை வேண்டாமென்ற நல்லெண்ணத்தில் இவர்களைப் படம் பார்க்க வைத்து பிரச்சினை ஆப்கானிஸ்தானில்தானே நடக்குதுன்னு நினைப்பாங்கன்னு கன்வின்ஸ் செய்யலாம்ன்னு நினைச்சிருக்க கூடும். ஒருவேளை இவர்களுக்கு படம் போட்டுக் காண்பிக்காமல் இருந்திருந்தால் இவர்கள் மாற்று வழியில் கலவரத்தை உருவாக்கியிருப்பார்கள். அப்படி பிரச்சினையாகியிருந்தால் இவர்களுக்கு முன்பே படம் போட்டுக் காண்பித்திருக்கலாமேன்னு நீங்களே வாதாடுவீங்க. கமல் படம் போட்டுக் காண்பித்ததின் மூலம் இந்த கலாச்சார தீவிரவாதிகளின் முகத்தாடியை கிழித்திருக்கிறார்.
ஜெயலலிதா இன்று போலிஸ் எண்ணிக்கை பத்தாது என்றும் நாம் முன்பே பேசிக் கொண்டது போல் ஜார்ஜ் போன்றவர்களுக்கு சில உளவுத் தகவல்கள் தெரிந்திருக்க கூடும் என்பதால் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறேன் பேர்வழியென அறிக்கை தருகிறார். அப்படியே ஒரு முதலமைச்சரின் கடமையாக சட்டம், ஒழுங்கை காப்பாற்றுகிறேன் பேர்வழியென்றாலும் கூட நீதிபதி ராமனின் தீர்ப்போடு நீதிமன்றம் சொன்னதை இனிதான் மீற முடியாது என நழுவியிருக்கலாம். இன்னொரு நீதிபதியை இரவு 11 மணிக்கு சந்தித்து அடுத்த நாள் படத்தையும் திரையிட விடாமல் மேலும் படத்தை வெளியிடாமல் செய்ததில் ஜெயலலிதாவின் வன்மம் வெளிப்படுகிறது.]]]

இதைத்தான் நானும் சொன்னேன் ஸார்..!

[[[நம்ம இணைய பங்காளிகளுக்கு ஜெயலலிதாவை மட்டும் உண்மைத்தமிழன், என்னைப் போன்றவர்கள் தி.மு.க காலத்தை விமர்சித்ததைப் போல விமர்சிப்பதில்லையென்ற பெரும் ஆதங்கம் உண்டு:) எதிர் விமர்சனம் செய்வதற்கும் கலைஞர் போன்று ஒரு தகுதி வேண்டும். ஜெயலலிதா போன்ற எதை செய்கிறோமென்றே தூரப்பார்வை இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோமென செயல்படும் ஹிஸ்டீரியா பெண்ணை விமர்சனம் செய்துதான் குடநாட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற அவசியமில்லை. அவரே யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிற மாதிரி செய்து கொள்வார்.]]]

நாம் ஒன்று போலத்தான்.. விஷயத்திற்கேற்றாற்போல் விமர்சிக்கிறோம்.. அவர்களிடம் பதில் இல்லை.. இதனால் பிளேட்டை நம்மை பார்த்து திருப்பிப் போடுகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

தமிழக இஸ்லாமியர்களை அரேபிய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்ற இஸ்லாமியர் வட்டத்துக்குள்ளேயே வச்சுப் பார்க்க முடியலை. முப்பாட்டன்கள் வர்ணாசிரமங்களுக்கு எதிராகவோ அல்லது நவாப், நிஜாம்களின் முன்னுரிமைகளுக்காகவோ மதம் மாறியவர்களாகவே கருதுகிறேன்.]]]

உண்மைதான்.. இவர்களும் தமிழர்கள்தான்.. நம்முடைய வரலாறுகள்தான்.. வாரிசுகள்தான்.. கலப்பினமாக இங்கேயே இஸ்லாமியர்களாக ஆனவர்கள்.. குடியேறியவர்கள் அல்ல.. மதம் மாற்றம் செய்யப்பட்ட அல்லது கலப்பின மூதாதையர்களைக் கொண்டவர்கள்.. இதனால்தானே தமிழின் மீது அவர்களுக்கும் கொஞ்சம் பாசம் இருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Kalvetu Kalvetu said...

உங்களையும் இப்படி இந்துவாக உணரவைத்துவிட்டது இந்த நிகழ்வு?
:(((]]]

பின்ன என்னண்ணே..? எப்போ பார்த்தாலும், குரான்.. குரான்னு.. சொல்லிக்கிட்டே இருந்தால் எப்படி.. எரிச்சலா இருக்குல்ல..!!!?

[[[ஏற்கனவே நீங்கள் பக்தர்.
அப்படியே இருங்கள் இராமர் பக்கம் திரும்பி விடாதீர்கள் பிஜேபி என்ற டவுசரை மாட்டி விடுவார்கள்..]]]

ஹா.. ஹா.. அப்படி மாட்டினாலும் அவர்களாகவே கொஞ்ச நாளில் கழட்டிக் கொள்வார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Velu said...

அன்புள்ள இஸ்லாமிய சகோதரருக்கு,

அண்மை சம்பவங்களின் மூலம் என்னை போன்றோரை இந்து மதத்தை சார்ந்தவர்கள் நாங்கள் என நினைவுபடுத்தியமைக்கு நன்றி. ஆம் இதுவரை நாங்கள் எங்கள் மதத்தை பற்றி அதிகம் நினைத்ததில்லை .
அது உண்மை. இதுவரை நாங்கள் அப்துல் கசாப்-ய் பார்த்த பார்வை வேறு. எங்கள் அண்டை அண்டை வீட்டு இஸ்லாமிய நண்பரை பார்த்த பார்வை வேறு. தலிபான்களை பார்த்த பார்வை வேறு. எங்களுடன் தொழில் புரியும் முஸ்லிம்களை பார்த்த பார்வை வேறு. எங்கள் பார்வையை புரிந்து கொள்ளாதது நீங்கள் செய்த தவறு. அண்மையில் வெளி வந்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் ஒரு காவி கட்டிய சாமியார் வில்லன்களுடன் சேர்ந்து நாட்டுக்கு துரோகம் செய்வது போல் காட்டியதை நாங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதற்காக எல்லா சாமியார்களும் மோசம் என்று நாங்கள் நினைப்பதில்லை. எங்களுக்கும் மதம் இருந்தாலும் நாங்கள் கோயிலுக்கு சென்றாலும் எங்களுக்குள்ள பகுத்தறிவு எங்களை வழி நடத்துகிறது. வாழ்க்கையின் யதார்த்தை நாங்கள் புரிந்து கொள்ளுகிறோம். இந்த ஒரு படத்தினால் நம் உறவு முறிந்து விடப் போவதில்லை. எங்கோ அமெரிக்காவில் வெளியான ஒரு படத்திற்கு நீங்கள் சென்னையில் செய்த காரியம் சரியா? விஸ்வரூபம் படத்தை ஒரு சினிமாதானே என நினைத்து விட்டிருந்தால் இந்நேரம் தியேட்டரை விட்டே ஓடி இருந்திருக்கும். ஆனால் உங்களை எல்லோரும் தவறாக நினைப்பார்கள் என நினைத்து (பயந்து )
தடை வாங்கி பிரச்னையை ஏற்படுத்திவிட்டீர்கள். ஒன்று கூற விரும்பிகிறேன். மடியில் கனம் இருந்ததால்தான் வழியில் பயம் இருக்கும்.]]]

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

கோவை குண்டு வெடிப்புக்குப் பின் நீங்கள் செய்த மாபெரும் தவறு விஸ்வரூபத்துக்கு எதிரான சூழ்ச்சிகள். விஸ்வரூபம் திரைப்படம் இன்னும் கொஞ்ச காலத்தில் மறக்கப்பட்டு விடும். ஆனால் விஸ்வரூபத்துக்கு எதிரான சூழ்ச்சிகள் வரலாறாகிப் போனதால் இஸ்லாமியர்கள் மீதான பிம்பத்தை மாற்றுவதற்கு எவ்வளவு நாளாகுமோ? சிந்திக்கும் மானிடன் யாராவது தமிழக இஸ்லாமியர்களை வழி நடத்துவானாக.]]]

சரியாகச் சொன்னீர்கள் ஸார்..! இனியாவது தங்களை உணர்ந்து கொண்டால் அவர்களுக்கு மிக மிக நல்லது..! அரசியல்வாதிகளின் பின்னால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டாம் என்பதே எனது கோரிக்கை..!

உண்மைத்தமிழன் said...

[[[மட்டை ஊறுகாய் said...

மிகவும் உண்மை... அம்மா என்பதால் எல்லோரும் அடக்கி வாசிக்கிராங்களோ?? சென்ற தேர்தல் சமயத்தில் நியாயமாக கோவப்பட்டது போல இணையத்திலோ, பதிவிலோ யாரும் அரசை குமுருவதில்லை..
அம்மா என்ற பயமா?? இல்லை இதுதான் அவர்கள் நடுநிலைமையா??
சவுக்கு கூட ஆட்சியை கிழிக்க ஆரம்பித்து விட்டார். பதிவர்களுக்கு எல்லாம் செலெக்டிவ் அம்னீசியா வந்து வந்து விட்டது போல???
எது எப்படியோ அண்ணனின் இன்றைய பதிவு. அண்ணன் பார்ம்க்கு வந்துட்டார். மிகத் தேவையான பதிவு. எனது உற்ற நண்பன் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த்தவர், 30 வருடங்களாக நண்பர்களாக உள்ளோம். இந்த படப்ப்ரிச்சனைக்கு பிறகு நட்பில் சிறு விரிசல் விட்டது போல உணருகிறேன். எங்கே எனக்கும் மத வெறியை ஏற்றி விடுவார்களோ என்று அஞ்சுகிறேன்.]]]

இந்தப் பயத்துடன்தான் நானும் இருக்கிறேன் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[k.rahman said...

//கமல்ஹாசனை தவிக்க விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் ஜெயலலிதாவின் அரசியல் சூழ்ச்சியில் இஸ்லாமிய அன்பர்களும் சிக்கிக் கொண்டது அவர்களுக்கே தெரியவில்லைபோலும்.. இன்றுவரையிலும் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.. இதுவரையிலும் நான் ஒரு இந்து என்று நினைப்பே வராமல் இருந்த எனக்கு, ஒரு கணத்தில் “இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..! இது என் ஒருவனுக்கு மட்டுமே வந்ததில்லை.. தமிழ்நாட்டில் பெருவாரியான சினிமா ரசிகர்களுக்கு வந்துவிட்டது.. இந்த முட்டாள்தனமான போராட்டத்தினால் இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது இதைத்தான் என்று உறுதியுடன் சொல்லலாம்..!//

நியாமான பேச்சு சார். ஆனா என்னன்னு தெரியல இந்த பீஜே வந்தப்புறம்தான் இந்த குழப்பம்லாம். என்ன சொன்னாலும் உணர்ச்சி வசபடறாங்க. கொஞ்சம் அதிகமா கேள்வி கேட்டா நீ எல்லாம் முஸ்லீமான்னு கேட்கறாங்க. என்னத்த சொல்றதுன்னே தெரியல.]]]

நல்லவேளை எங்ககிட்ட நீ இந்துவான்னு எவனும் கேக்குறதில்லை. அதுனால தப்பிச்சோம்..! இஸ்லாத்தை பரப்புபவர்கள்தான் உங்களது சமூகத்திற்கு மிக மிக ஆபத்தானவர்கள் என்று நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[middleclassmadhavi said...

migavum oonri padikka vaiththa pathivu - nanrikaL]]]

வருகைக்கு மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

ராச நட,

//நீங்க எப்பவும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரியே நீங்க சொன்னதுதான் நடக்குதுன்னு தொடர் கருத்து சொல்லிகிட்டே வர்றீங்க.//

இதுல உங்களுக்கு என்ன பிரச்சினை, நான் சொன்னது எல்லாம் நடந்து போச்சே ஹி... ஹி எல்லாம் ஏக இறைவன் வவ்வாலின் அருள் வாக்கு -))]]]

சரி.. சரி.. ஓகே.. உம்மை நீயே புகழ்ந்துக்காதீரும்.. கருணாநிதி ஒருத்தரே இதுக்கு போதும்..!

//ஒருவேளை இவர்களுக்கு படம் போட்டுக்காண்பிக்காமல் இருந்திருந்தால் இவர்கள் மாற்று வழியில் கலவரத்தை உருவாக்கியிருப்பார்கள்.//

நீங்க எல்லாம் தெரிஞ்சவரு தப்பாவா சொல்லப் போறிங்க, ஆதிபகவன் படத்தை போட்டுக் காட்ட சொல்லுறாங்க, போட்டுக் காட்டிடனும் இல்லைனா கலவரம் செய்துடுவாங்க, கடல் படம் நாளைக்கு வரப் போகுது, மீனவர்கள் இன்னிக்கு நைட்டே போட்டுக் காட்டுன்னு சொன்னாலும் போட்டுக் காட்டி ஒப்புதல் வாங்கனும் இல்லைனா கலவரம் ஆயிடும்.
இப்படியே எல்லாப் படத்தையும் யாராவது எங்களுக்கு போட்டுக் காட்டுன்னு சொன்னதும் போட்டுக் காட்டி ஒப்புதல் வாங்கிடனும், இல்லைனா கலவரம் ஆகிடும் :-))]]]

எழுத்தே கலவரமா இருக்கே வவ்ஸ்..!

[[[ஆமாம் படம் எடுத்ததும் சேட்டிலைட்ஸ் உரிமையை தேடிப் போய் வித்தது யாரு? வேற யாருக்கிட்டேயும் விக்க முடியாம போச்சா அப்போ?]]]

கமல்தான்..! நிறைய பணம் தரணும்ல்ல.. தொடர்பு கொள்வதற்கு சன் டிவியைவிட மிகவும் ஈஸி என்பதால் ஜெயாவுக்கு போயிருப்பார்..!

[[[இந்தப் படத்துக்கு இஸ்லாமியர்கள் மூலம் எதிர்ப்பு வரும், நாம ஆளுங்கட்சிக்கு நெருக்கமா காட்டிக்கிட்டா எதிர்ப்பு வராதுன்னுதானே அப்போ சேட்டிலட்ஸ் உரிமை தேடிப் போய் கொடுத்தார். தன் சுயலாபத்துக்கு அரசியல் சக்தியை பயன்ப்படுத்திக்கலாம்னு பார்த்தார், கொஞ்சம் முட்டிக்கிட்டதும், இவர் தேடிப் போன அரசியல் சக்தியே பதம் பார்க்குது. அம்மையாருடன் முட்டிக்காமல் இருந்து, அரசியல் பலம் வைத்து எதிர்ப்புகளை அடக்கி இருந்தால் அப்போ என்ன சொல்லியிருப்பீர்? அரசியல் பலம் வைத்து எதிர்ப்பவர்களை அடக்கணும் திட்டம் போட்டது யார்? லோகம்தானே :-)) யார் ஆட்சி நடக்குதோ அவுங்க கிட்டே ஒட்டிக்கொள்ளும் வியாபாரிகளுக்கு அவர்களாலேயே பிரச்சினை வரும் :-))]]]

போச்சுடா.. இம்புட்டு நீளமா சிஐஏ ரிக்கார்டுகளை வைச்ச நான் எப்படி படிச்சு பதில் சொல்றது..? யோசிக்கிறேன்.. உண்மையான்னு..!

உண்மைத்தமிழன் said...

[[[ssr sukumar said...

sariyaana neraththil thevaiyaana pathivu. paaraattukkal.]]]

நன்றி சுகுமார் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[மனக்குதிரை said...

சூப்பர்...தமிழா!

ஒவ்வொரு வரியும் 'நச்', அப்படியே மனதில் ஓடுகிற எண்ணத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்து இருக்கீறீங்க. அதிகார போதையும், ஆணவமும் அழிவைத்தான் தரும். ரஜினி டயலாக், சீக்கிரம் மறந்து போச்சு போல]]]

இப்போ மறுபடியும் ஒரு தடவை நடந்திரும் போலிரு்ககே.. அதுதான் பயமாயிருக்கு..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

நீங்க ஒரு ரசிக கண்மணியாகவே யோசிக்கிறீங்க :-))

//நோ.. தனது சொத்துக்களை பணயம் வைத்த சூழலில் இது போன்று விளையாட அவர் ஒன்றும் முட்டாள் இல்லை..! அரசியல் இடையில் புகுந்து கெடுத்துவிட்டது..!//

அரசியல் எப்படி உள்ள புகுந்தது?

முதலில் ஆளுங்கட்சி டீவிக்கு விற்றுவிட்டு அல்லது விற்பதாக பேசிவிட்டார், அப்போது டிடிஎச் இல் வெளியிடுவதை தெரிவிக்கவில்லை, பின்னர் டிடிஎச் இல் வெளியாகும் படத்திற்கு அதிக தொகை கொடுக்க முடியாது என்றபின்னரே வேறு சேனலிடம் விற்றுள்ளார்.

//Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.//

டிசம்பர்-11,2012 அன்று இந்து பிசினெஸ் லைனில் வந்த பேட்டியில் சொன்னது.

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

இஸ்லாமிய இயக்கங்களுக்கு படம் போட்டுக்காட்டுமுன்னரே இதெல்லாம் நடந்துவிட்டது, ஏற்கனவே ஆளும் தரப்பிடம் பிரச்சினை செய்துக்கொண்டு விட்டார்.

ஆளுங்கட்சிக்கு விற்றதே எதிர்ப்பு எதுவும் வந்தால் சமாளிக்க உதவும் என்று தான் ,பின்னர் அந்த டீலையாவது சரியா காப்பாத்தியிருக்கணும், அதுவும் செய்யவில்லை, அப்படி இருக்கும் போது ஏன் படத்தினை போட்டுக்காட்ட வேண்டும்?

படத்தினை போட்டுக்காட்டவில்லை எனில் அவர்கள் தடை செய்ய கோரி விண்ணப்பமே கொடுக்க முடியாது, வழக்கு தான் போட்டிருக்கனும், வழக்கு போட்டால் நீதி மன்றம் தடை விதிக்கமுடியாது என்றே சொல்லி இருக்கும்.

ஆனால் ஏற்கனவே அரசியல் சக்திகளிடம் கொடுக்கல்,வாங்கல் என பிரச்சினை செய்துக்கொண்டுள்ள நிலையில் படம் போட்டுக்காட்டி , பார்க்க வைத்ததால் நேரடியாக தடை என அரசிடம் மனு செய்து விட்டார்கள், இதான் சாக்கு என தடையைப்போட்டுவிட்டார்கள்.

படத்தை போட்டுக்காட்டாமல் இருந்திருந்தால் ,படத்தை காட்ட சொல்லி தான் போராடியிருப்பார்கள்,அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் முன்னரே ,படம் வெளியாகி இருக்கும், வெளியான பின்னர் என்ன தடையா செய்ய முடியும், துப்பாக்கி என்ன தடையா செய்யப்பட்டது, சில காட்சிகள் நீக்குகிறேன்னு இப்போ சொன்னது போல சொல்லிட்டு போயிருக்கலாமே.

ஒரு லோக்கல் கவுன்சிலரிடம் கூட ஒரு இடத்தினை விற்பதாக பேசிவிட்டு இன்னொருவரிடம் மாற்றிவிற்க முயன்றால் யாரையும் வாங்க விடாமல் தடுத்துவிடுவார் என்பது சாதரணமா பொது மக்களுக்கே தெரியும், அப்படி இருக்கும் போது பெரிய இடத்திடம் விற்றுவிட்டு மாற்றி விற்றால் விடுவார்களா?

எத்தனையோ சேனல்கள் இருக்க லோகநாயகர் ஏன் ஆளுங்கட்சி சேனலிடம் தானே போய் விற்க வேண்டும்? கடந்த ஐந்து ஆண்டுகளாக யாரிடம் விற்றுக்கொண்டிருந்தார், அப்போ எல்லாம் இந்த சேனலே இல்லையா? ஆளுங்கட்சி ஆதரவு வேண்டும் என அரசியல் கணக்குப்போட்டதே லோகநாயகர் தானே, கணக்கு பிசகிப்போச்சு :-))

டிடிஎச் வெளியிடுவதை சொல்லாமல் ஆளுங்கட்சி சேனலுக்கு விற்றது முதல் தவறு, அப்படியும் விற்ற பின் எதிர் தரப்பு டிடிஎச் ஐயும் சேர்த்துக்கொண்டது இரண்டாவது தவறு. பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் பகைத்துக்கொண்டதும் தவறு. ஒன்று இவர் ஆரம்பத்திலேயே ஆளுங்கட்சி சேனலுக்கு போயிருக்க கூடாது போன பின் பாதியில் டீலை உடைத்தும் இருக்க கூடாது, அரசியல்வியாதிகளின் டீல் எல்லாம் ஒன் வே தான், நாம் முடிவு எடுக்க முடியாது :-))

//உண்மையே அதுதான்..! //

அப்போ பிவிபி யிடம் வாங்கிய பணத்தை வைத்து பொறிகடலை வாங்கி சாப்பிட்டாரா?

அந்த பணத்தில் தான் படம் எடுக்கப்பட்டுள்ளது, 95 கோடி என சொல்வதெல்லாம், எப்படி எனில் நடிப்பு,இயக்கம், கதை வசனம் என இவர் பார்த்த வேலைக்கு சம்பளம் என ஒரு 45 கோடி இவரே கணக்கு காட்டிக்கொண்டது :-))

எனவே பிவிபி கொடுத்த பணத்தில் படத்தினை முடித்தாயிற்று அப்புறம் எங்கே இருந்து மொத்த சொத்தையும் அடக்கு வைத்தேன் என சொல்கிறார்.

தமிழ் நீங்கலாக , தெலுகு, இந்தி ,அயல்நாட்டு உரிமை, சேட்டலைட்ஸ் உரிமை,இசை உரிமை என இப்போவே போட்ட உண்மையான பட்ஜெட்டில் 90% எடுத்தாச்சு , இவராக சொல்லும் உயர்த்தப்பட்ட பட்ஜெட் கணக்குக்கு தான் நஷ்டம் காட்டுகிறார்.

படத்தினை தடை செய்யாமல் விட்டிருந்தால் சத்தமே இல்லாமல் படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போயிருக்கும் ,இப்போ தியாகி ஆகிட்டார் :-))

உண்மைத்தமிழன் said...

[[[ஆளுங்கட்சிக்கு விற்றதே எதிர்ப்பு எதுவும் வந்தால் சமாளிக்க உதவும் என்றுதான்..]]]

வவ்ஸ்.. இது உங்களுடைய தீர்மானம்.. எனவே இதன் அடிப்படையில் நீங்களே பேசலாம்..!

படம் போட்டுக் காட்டியதும் கமல் செய்த பெரும் தவறு.. அதனை அவர் செய்திருக்கக் கூடாதுதான்..!

பண விவகாரம் குறித்து, வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கடும் ஆவணங்களுடன் வந்து சொன்னால்தான் இங்கே ஏற்றுக் கொள்ளப்படும். இல்லாவிடில் நீங்கள் கேட்டது உங்களுக்கு.. நான் கேள்விப்பட்டது எனக்கு..!

saravanan selvam said...

உங்களது கட்டுரை ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதபட்டுள்ளது. நடுநிலையான கட்டுரை.உங்களது கட்டுரைகாண உழைப்பை பாராட்டுகிறேன்.

CSB said...

superb article.

உண்மைத்தமிழன் said...

[[[saravanan selvam said...

உங்களது கட்டுரை ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதபட்டுள்ளது. நடுநிலையான கட்டுரை. உங்களது கட்டுரைகாண உழைப்பை பாராட்டுகிறேன்.]]]

தங்களுடைய கருத்துரைக்கு எனது நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[CSB said...

superb article.]]]

வருகைக்கு நன்றிகள் நண்பரே..!

makdns said...

Bharathiraja supports kamal Vishwaroopam - http://www.youtube.com/watch?v=5iWZQZ6jz5Y

makdns said...

Vishwaroopam - Are Muslims Against Freedom Of Expression? - http://www.youtube.com/watch?v=8E_3XkzczT0

makdns said...

Vishwaroopam - Muslims in Response To Manishya Puthiran - http://www.youtube.com/watch?v=nC2i8-pSNd4

makdns said...

Vishwaroopam - Muslims in Response To Dr.Ramadas (PMK) & T.Pandiyan - http://www.youtube.com/watch?v=i5WbxlmmVPc

makdns said...

Vishwaroopam - Muslims in Response To Kollywood - http://www.youtube.com/watch?v=yI6XVg1wLvk

makdns said...

Vishwaroopam vs Dam999 - http://www.youtube.com/watch?v=ZQEBRGLNF1M

makdns said...

http://www.youtube.com/watch?v=2UCGwBFoTCo - Vishwaroopam - Muslims in Response To BJP,RSS,VHP,SIVA SENA

makdns said...

http://www.youtube.com/watch?v=-Zk1RcXG9aU - Vishwaroopam - Muslims in Response To Censor Board

makdns said...

http://www.youtube.com/watch?v=1VjexQ34foI - Vishwaroopam - Muslims in Response To Kamal Haasan & His Supporters

makdns said...

http://www.youtube.com/watch?v=uIrDyRPsKBM - Cultural Terrorist - Vishwaroopam - Muslims in Response To Kamal Haasan & Censor Board

makdns said...

http://www.youtube.com/watch?v=sTK0Ru7-v5s - Vishwaroopam - Difference Between Hindus and Muslims

உண்மைத்தமிழன் said...

Daynight ஸார்...

தங்களுடைய உதவிக்கு மிக்க நன்றிகள்..! இந்த ஒரு போஸ்ட்டை படித்தாலே முழு தகவல்களும் தெரிந்துவிடும் அளவுக்குச் செய்துவிட்டீர்கள்.. மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

சிஎஸ்பி ஸார்..

உங்களுடைய பின்னூட்டத்தில் இருந்த சில வார்த்தைகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே நீக்கிவிட்டேன். கோபிக்க வேண்டாம்..!

Kannan said...

"பாப்பாத்தியமா ... நீ சா(ப்)ட்டு
சொல்லு உப்பு காரம் போதுமான்னு."
இது ஒரு டயலாக். இதில் கமல்
யாரை திருப்தி செய்ய விரும்புகிறார்.
தி.க-வா , தி.மு.க-வா ?
புரியாதவர்க்கு உள்செய்தி (சில வருடங்கள் முன்பு
செல்வி ஜெயலலிதா மாட்டு கறி சமைத்து
படைத்து மற்றும் உண்டதாக
செய்திகள் ...தி.க. எப்பவும் போல
காலைல வெளிய சரியா போலன்ன அது பார்பனர் சதி
என்று கூறும்). உலக படம் எடுக்குற நாய்க்கு உள்ளூர்
விவகாரம் எதுக்கு? குரங்கு ஆப்ப
எடுத்த கதையா ஆகி போச்சுல்ல, நீ
உலக தரத்துல எடுத்தது?

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...

"பாப்பாத்தியமா... நீ சா(ப்)ட்டு
சொல்லு உப்பு காரம் போதுமான்னு."
இது ஒரு டயலாக்.

இதில் கமல் யாரை திருப்தி செய்ய விரும்புகிறார். தி.க-வா , தி.மு.க-வா? புரியாதவர்க்கு உள் செய்தி (சில வருடங்கள் முன்பு
செல்வி ஜெயலலிதா மாட்டு கறி சமைத்து படைத்து மற்றும் உண்டதாக செய்திகள்... தி.க. எப்பவும் போல காலைல வெளிய சரியா போலன்ன அது பார்பனர் சதி
என்று கூறும்). உலக படம் எடுக்குற நாய்க்கு உள்ளூர் விவகாரம் எதுக்கு? குரங்கு ஆப்ப எடுத்த கதையா ஆகி போச்சுல்ல, நீ உலக தரத்துல எடுத்தது?]]]

சில வருடங்களுக்கு முன்னாடி இல்லை.. சில மாதங்களுக்கு முன்னால..

முடியலை..!

happy journey said...

கமல் ஒரு விளங்காத கூ.,,,,,தி