இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-2013-1

08-01-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது இந்தாண்டின் முதல் இட்லி-வடை பதிவு..!

தாத்தாவின் அறிவிப்பு

தாத்தாவின் நேற்றைய பேட்டி தி.மு.க.வுக்குள் மீண்டும் ஒரு சகோதர யுத்தத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் பெயரில் மன்றம் ஆரம்பித்திருப்பதை மெளனமாக கவனித்து வந்திருக்கும் மதுரையின் பட்டத்து இளவரசர் தனது மகனையும் களத்தில் குதிக்க வைக்க அப்பாவை போலவே வார்த்தைகளால் ஆழம் விட்டுப் பார்க்கிறார்..! 3-வது தலைமுறையும் இப்போது அதிகாரப் போரில் குதித்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.. அப்படியாவது இந்தத் திமுக சிதைந்து போகாதா என்ற நல்ல எண்ணம்தான்..! (அதிமுக, ஆத்தாவுக்கு பின்பு தானாகவே காணாமல் போகும்.. ஆகவே அது பற்றி பெரிய கவலையில்லை..) ஏற்கெனவே இவர்களுக்குள் நடந்த சகோதர சண்டையில் மதுரையில் பேருந்துகள் எரிக்கப்பட்டு 3 அப்பாவிகளும் உயிரிழந்தார்கள். இனி வரவிருக்கும் சண்டையில் எத்தனை தாலிகளை அறுக்கப் போகிறார்களோ தெரியவில்லை..! இந்த லட்சணத்தில் இவர்கள்தான் மனுநீதிச் சோழனின் பரம்பரையாம்..!  

பத்திரிகைகளின் பரபரப்பு..!

டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை நிகழ்வுக்கு பிறகு பத்திரிகைகள் அது போன்ற செய்திகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வருவது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. ஆனால் தூங்கி எழுந்தவுடன் அந்தச் செய்திகளைத்தான் படித்தாக வேண்டும் என்ற சூழலுக்கு பத்திரிகைகள் நம்மை தள்ளுவது கொடுமையாக உள்ளது. பாலியல் வன்முறை பக்கங்கள் என்றே தனி பக்கம் வைத்து செய்திகளை வெளியிடலாம் போல..! தினத்துக்கு இது போன்ற செய்திகள் வந்தவண்ணம்தான் இருக்கின்றன..!  அதுக்காக கள்ளக்காதல் செய்திகளோடு இதனையும் பெரிதாக குறிப்பிட்டு வெளியிடுவது  எரிச்சலைத்தான் தருகிறது..! டெல்லியில் மீண்டும் ஒரு நிகழ்வு நடந்திருப்பதாகச் செய்திகள்.. இதனையும் ஊடகங்கள் அணுகுண்டு வெடித்தாற்போன்று பரபரப்பாக்கி பீதியை கிளப்புகின்றன..!  ம்ஹூம்.. இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை..?

ராமதாஸின் சாதி வெறி

இரண்டு திராவிடக் கட்சிகளும் “வேண்டாமே இந்த எக்ஸ்ட்ரா கேரேஜ்..” என்று கை கழுவிவிட்ட பின்புதான் திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தைக் கெடுத்தன என்பது மருத்துவர் ராமதாஸுக்கு தெரிந்ததாம்.. தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளையெல்லாம் இந்த இரு கட்சிகளும் கையில் எடுத்திருப்பதால் வேறு எப்படியாவது மக்கள் மனதில் இடம் பிடிக்க முயல்கிறார்..! சாதியை அவர் கையில் எடுப்பதை இப்போதுதான் முதல்முறையாக பார்ப்பது போல கடந்த ஒரு மாதமாகவே மருத்துவரை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில். அவர்தான் முதலில் இருந்தே சொல்லி வருகிறாரே.. “வன்னியர் உதவியில்லாமல் இங்கே யாரும் முதல்வராக முடியாது..” என்று.. நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்..!

சென்ற தேர்தலின்போது கட்சி சாராத அனைவருக்குமே தேர்தல் முடிவுகளில் கிடைத்த ஒரேயொரு திருப்தி இவரது தோல்விதான்.. இதுவே நம் ஆயுட்காலம் உள்ளவரையில் நீடிக்குமானால் மருத்துவர் நம் எல்லார் மனதிலும் நீங்காத தனி இடத்தைப் பிடித்துவிடுவார்.. அதற்கான முயற்சிகளின் முதல் படியாகத்தான் ஜாதிகளின் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார். செய்யட்டும்..! 

தேவயானியின் கல்யாண கதை

வராதுவந்த மாமணியாய் தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும் பவர் ஸ்டாருக்கு போட்டியாய் களத்தில் குதித்திருக்கும் இயக்குநர் ராஜகுமாரனை நாம் வரவேற்றே ஆக வேண்டும்..! “நீங்களே ஏன் நடிக்க முடிவெடுத்தீர்கள்..” என்று கேட்டால், “தேவயானியின் கால்ஷீட் டைரி இப்போ ஹவுஸ்புல்.. அவங்களுக்கு பிரேக் கிடைக்கும்போதுதான் இந்த ஷூட்டிங்கை வைக்க முடியும்.. இதுக்கேத்தாப்புல எந்த ஹீரோ வந்து நடிப்பாரு..? யாரும் ஒத்துக்க மாட்டாங்களேன்னு, யோசிச்சுதான் நானே நடிச்சிட்டேன்..” என்றார்.. புல்லரித்தது நிருபர்களுக்கு..! 

ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசிய நடிகர் சிங்கமுத்து, நள்ளிரவில் தேவயானி வீட்டு வாசலில் காத்திருந்தது. தேவயானி சுவர் ஏறிக் குதித்து வந்து ராஜகுமாரன் கைப்பிடித்து திருத்தணிக்கு ஓடிப் போய் கல்யாணம் செய்த அந்த நாளை, அப்படியே சினிமா கதை போல் சொன்னது செம சுவராஸ்யமாக இருந்தது..! இதையே ஏதாவது ஒரு படத்தில் காட்சிகளாக பயன்படுத்திக் கொள்ளலாம்..! படத்தின் பாடல் காட்சிகளையும், டிரெயிலரையும் பார்த்துவிட்டு அதற்கு மேல் கேள்வி கேட்கவே மனசில்லாமல் எழுந்து ஓடினார்கள் பிரஸ்காரர்கள்..! 

ஒரேயொரு விஷயத்துக்காக ராஜகுமாரனுக்கு எனது பாராட்டுக்கள்.. படத்தின் பாடல்கள் முழுவதிலும் தமிழ் வார்த்தைகள் முத்துக்களாக சிதறியிருக்கின்றன. அதிலும் தமிழின் அனைத்து வகைகளையும் குறிப்பிட்டு ஒரு பாடலை அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் நிச்சயம் இது மட்டுமே பேசப்படும்..!

சினிமா காலண்டர்

ராணி முத்து காலண்டரில் இருக்கும் இன்றைய ராசிபலன் தமிழகத்தில் மிகவும் பேமஸானது..! அதைப் பார்த்துவிட்டே அன்றைய பொழைப்பை பார்ப்பவர்களும் இங்கே அதிகம்.. இப்போது அதே பாணியில் தமிழ்ச் சினிமாவுலகத்துக்காக தனி காலண்டரை வடிவமைத்திருக்கிறார்கள். இதில் ராசி பலனுக்கு பதிலாக சினிமா நட்சத்திரங்களின் பிறந்த நாட்கள், அவர்களுடைய போன் நம்பர்களை போட்டு வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையான பிறந்த நாளை சொல்லிவிட்டு போன் நம்பருக்கு மட்டும் லேண்ட்லைன் நம்பரை அளித்திருக்கிறார்கள் முக்கால்வாசி நட்சத்திரங்கள்..! காலண்டரின் விலை 75 ரூபாய். வேண்டும் என்பவர்கள் 9094786565 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம்..!

கலைஞர் டிவி விவகாரம்

காலை அலுவலகம் வந்த சிறிது நேரத்தில் டிஸ்மிஸ் ஆர்டர் கையில் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் ரமேஷ்பிரபா என்று கலைஞர் டிவியின் உள் விவகாரம் வெளிப்பிரகாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு பின்பு பகிரங்கானது. அதற்கடுத்த 2 நாட்களும் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்து கணக்கு வழக்குகளை செட்டில் செய்தாராம் ரமேஷ்பிரபா..! உண்மையில் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..! பணம் கையாடல் என்பது மற்ற டிவிக்களில் ஓகே.. கலைஞர் டிவியில்..? நம்ப முடியவில்லை..! 

ஏற்கெனவே சமீபத்தில் 2-ஜி ஊழல் வழக்கில் சிக்கிய நிறுவனங்களிடமிருந்து கடனாகக் கலைஞர் டிவிக்கு கிடைத்த தொகையை, திரும்பவும் செட்டில் செய்யப்பட்டபோதும் சில வில்லங்கங்கள்.. மெட்ராஸ் சிமெண்ட் சீனிவாசன். செட்டி நாட்டு குடும்பத்தினர்.. அப்போலோ குழுமம் என்று பலரிடமும் பணம் பெறப்பட்டு கூடுதலாக கொல்கத்தா நிறுவனங்களின் மூலமாக 100 கோடிக்கும் மேலாக கடன் பெறப்பட்டு இந்தக் கடனும் செட்டில் செய்யப்பட்டதாம். அந்தக் கொல்கத்தா கம்பெனிகள் எவை.. அவைகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்..? அவைகள் எதற்காக உங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை கடனாகத் தர வேண்டும் என்று டெல்லி பத்திரிகைகள் எழுப்பிய கேள்வியை வழக்கம்போல தாத்தா சாய்ஸில் தொலைத்துவிட்டார். பதிலளிக்க கடமைப்பட்டுள்ள கைப்புள்ள ஸ்டாலினும்  கிட்டிப்புள் விளையாட போய்விட்டார்..! ஆனாலும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாம்.. விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றே நினைக்கிறேன்..!

பேஸ்புக் நண்பி

ஊரெல்லாம் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வை அரசுகளும், தனியார் அமைப்புகளும், பெண்ணுரிமை கழகத்தினரும் பரப்பிக் கொண்டிருக்க பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் சில பெண்கள் இதைப் பற்றியே கண்டு கொள்ளாமல் தங்களைப் பற்றிய செய்திகளை பரப்பி வருவது வேடிக்கையாக இருக்கிறது..! அதிலும் குறிப்பாக ஒருவர், தான் எந்த ஊருக்கு போனாலும் தங்கப் போகும் ஹோட்டலின் பெயரைச் சொல்லியும், எத்தனை நாட்கள் இருப்பேன் என்பதையும், வருபவர்கள் வரலாம்.. சந்திக்கலாம்.. பேசலாம்.. 'மேலே' எனக்கு விருப்பமிருந்தால்.. என்ற ரீதியில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு வருகிறார்..!

அவர் போடுகின்ற அவரது அரைகுறை படங்களுக்கு வருகின்ற கமெண்ட்டுகளை படித்தாலே போதும்.. நாட்டில் எவ்வளவு பாலியல் வறட்சி நிலவுகிறது என்பது புரியும்..! பாலியல் வன்முறையின் வெளிப்பாடு எங்கேயிருந்து துவங்குகிறது என்பதை இவருக்கு யாராச்சும் புரிய வைத்தால் நல்லது..! 

விஸ்வரூபம்-முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு

7 பேர் சேர்ந்து சங்கம் வைச்சு, ஆபீஸ் போட்டுட்டு, கொடி, சின்னமெல்லாம் வரைஞ்சுட்டு அடு்த்து முதல் போராட்டத்துக்கு யோசிக்கும்போது இனிமே தைரியமா சினிமாக்காரங்களை எதிர்த்தே கச்சேரியை துவக்கலாம்..! ஒரு படத்தை சென்சார் போர்டுல சர்டிபிகேட்டை வாங்கிட்டு தியேட்டருக்கு கொண்டு போனாலும், ஆங்காங்கே இருக்கிறவங்களுக்கு பதில் சொல்லியே தாவூ தீர்ந்திரும் போலிருக்கு..! இப்போ விஸ்வரூபம் படம் முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருக்கும் என்று நினைத்து முதல்ல படத்தை எங்களுக்கு போட்டுக் காண்பிக்க வேண்டும்ன்னு 2, 3 முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை வைச்சிருக்காங்க.. ஒரு பெரிய முஸ்லீம் அமைப்புகிட்ட கஷ்டப்பட்டு நோ அப்ஜெக்ஷன் சர்பிடிகேட் வாங்கி அதையும் விளம்பரப்படுத்தியிருக்காங்க. 

ஒரு படத்தை ரிலீஸ் செய்றதுக்கு எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கு..? இப்படி ஆளாளுக்கு இந்தப் படம் எனக்குப் பிடிக்கலை.. எங்க கொள்கைகளுக்கு எதிரானது.. தடை செய்யணும்.. ஓட விட மாட்டோம்ன்னு சொன்னா எப்படி..? படம் பற்றிய உங்களது கருத்துக்களை படம் ரிலீஸுக்கு அப்புறமா வெளிப்படை சொல்லுங்க.. பேசுங்க.. எழுதுங்க.. அதை விட்டுட்டு எங்களுக்குக் காட்டிட்டுத்தான் படத்தை வெளியிடணும்னு சொல்றது அராஜகம்..! கூட்டம் கூட்டும் வலிமை இருக்கேன்ற தைரியம்..! ஒரு கலைஞனுக்கு தன்னுடைய கருத்தை அவனது தளத்திலேயே வெளியிட முழு உரிமை உண்டு.. கருத்துக்களை எதிர்ப்பவர்கள் இதே தளத்தில் தாங்களும் முயன்று வெளியிடலாம்.. அதைவிட்டுட்டு அதிகார பலத்துடன் எளிய கலைஞர்களை மிரட்டுவதும், தடுப்பதும் கொடுமையானது..  ஏற்கெனவே தியேட்டர்காரங்க கொடுக்குற குடைச்சல் போதாதுதுன்னு, இப்போ புதுசா இதையும் சமாளிச்சுக்கிட்டிருக்காரு..! பாவம் கமல் அண்ணே..!

லட்சுமி ராமகிருஷ்ணனின் செலக்டிவ் அம்னீஷியா..!

வருடா வருடம் நடக்கும் எடிசன் சினிமா விருதுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் பேச வந்த இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை பற்றி ரொம்பவே கொதிப்பான நிலைமையில் பேசினார்..! பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருது.... இதற்கு உதாரணமா உகாண்டா, சூடான், தென் ஆப்ரிக்கா என்றெல்லாம் சொன்னவர் இலங்கை, ஈழம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லவே இல்லை..! 

நம்மில் பலரும் மனம் புழங்கியதை போலவே ஈழம், தமிழர் என்றாலே பலருக்கும் இரண்டாம்பட்சம்தான் போலிருக்கிறது..! டெல்லிக்காக பொங்கிய டெல்லிக்காரர்களின் உணர்வுகளை நாம் உணர்ந்து கொண்டோம். ஆனால் அது இந்திய தேசத்தின் அவமானம் என்று இப்போது கூப்பாடு போட்டவர்களெல்லாம், ஈழத்தில் நடந்த படுகொலைகளின்போதெல்லாம் கப்சிப்பென்று கள்ள மெளனம் சாதித்து வந்ததையும் நாம் உணர வேண்டும்..! ரொம்பவே சுயநலவாதிகளாகவே இருக்கிறோம் என்ற குற்றவுணர்வுகூட இல்லாதவர்கள்தான் நமது இந்தியச் சொந்தங்கள்..!

சிக்கலில் அண்ணாமலை பல்கலைக்கழகம்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் நண்பரொருவரை சந்திக்க நேர்ந்தது..! 

பல்கலைக்கழகம் பற்றி விசாரித்தபோது அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமானவை. இவரே பணம் கொடுத்துதான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாராம்.. பணம் கொடுக்காமல் யாரும் அங்கே வேலைக்கு சேர முடியாதாம்..! கிட்டத்தட்ட 14000 மாணவர்கள் படித்து வரும் பல்கலையில் அதே 14000 அளவுக்கு ஊழியர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.. “இத்தனை பேருக்கு வேலை இருக்கிறதா..?” என்றால் சிரிக்கிறார்.. ஒரு வேலையை செய்ய 4 பேர் இருக்கிறார்கள்.. அதிலேயும் அவர்களுக்குள்ளேயே டூட்டியிலேயே ஷிப்டிங் போட்டு வேலை செய்வார்களாம்.. மற்றவர்கள் ச்சும்மாதான் இருப்பார்களாம்..! பாதிக்கு பாதி பேராசிரியர்களுக்கு வேலையே இல்லை. பேப்பர் திருத்தும்போதுகூட 10, 10 பேப்பர்களாகப் பிரித்தெடுத்து போய் வேலையை ஷேர் செய்து கொள்கிறார்களாம்..

“மாதந்தோறும் சம்பளமாகவே 80 கோடிக்கு செலவாகிறது என்கிறார்கள்.. இதனால்தான் ஆள்குறைப்பு செய்யணும்னு மேலிடத்துல குதிச்சாங்க.. நாங்க போராட்டத்தை அறிவிச்சவுடனேயே வாபஸ் வாங்கிக்கிட்டாங்க.. இப்போ ஆள் சேர்ப்புப் பணியை மட்டும் கொஞ்சம் நிறுத்தி வைச்சிருக்காங்க..” என்றவர் கூடுதலாக சொன்ன ஒரு தகவல்தான் எனக்கு வியப்பை அளித்தது..! 

“செட்டி நாட்டு பரம்பரையில் நேரடி வாரிசாக பிறந்தவர்தான் பல்கலையின் இணைவேந்தராக இருக்க வேண்டும் என்று பல்கலையைத் தோற்றுவித்தவரின் உயில் கூறுகிறதாம்..! இப்போதைய நிலையில் அந்த உயிலின்படி இணைவேந்தர் பதவி அடுத்ததாக செட்டி நாட்டு குடும்பத்தில் எம்.ஏ.சிதம்பரத்தின் பேரனுக்குத்தான் போய்ச் சேருமாம்.. அதற்காகவே இப்போதைய ஆளுபவர்கள் பல்கலையில் முடிந்த அளவுக்கு ஆட்களைச் சேர்த்து வைத்து, இதன் மூலம் பங்காளிகளுக்கு பிரச்சினையை உருவாக்கி வைத்துவிட்டு, நாமும் நாலு காசு பார்த்துவிட்டு விலகிச் சென்றுவிடலாம் என்று நினைத்ததினால் வந்த விளைவுதான் இத்தனையும்..” என்றார்..!  என்னால் நம்பத்தான் முடியவில்லை..! 

சேவை வரி விதிப்பு

சினிமாக்காரர்கள் போராட்டம் என்றாலே எடக்கு, மடக்காக யோசிப்பவர்களுக்கு இன்றைக்கு ஒரு லட்டான விஷயம்..! சேவை வரி விதிப்பு விவகாரம்..! 1994-ல் கொண்டு வரப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, மீண்டும் 2004-ல் கொண்டு வரப்பட்டு அப்போது திரைப்படத் துறைக்கு விலக்களிக்கப்பட்டு மீண்டும் சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்டது.. அப்போது பிரணாப் முகர்ஜியிடம் திரைப்படத் துறையினர் கேட்டுக் கொண்டதையடுத்து அவரும் அதை ஏற்றுக் கொண்டு விலக்களித்தார். இப்போது மீண்டும் நிதியமைச்சர் போஸ்ட்டை பிடித்திருக்கும் சின்னப் பயல் சிதம்பரம், தான் கொண்டு வந்தே தீருவேன் என்று சபதமெடுத்து உத்தரவிட்டிருக்கிறார். அதிலும் சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்த சேவை வரி அமல்படுத்தப்படும் என்று சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது. சிதம்பரத்துக்கு சினிமாக்காரர்கள் மேல் என்ன கோபமோ தெரியவில்லை..! ஒருவேளை இவர்களும் தனக்காக பாராட்டு விழா நடத்தணும்னு எதிர்பார்க்கிறோ என்னவோ.. அதை வெளிப்படையாகக் கேட்டுவிட்டாலும் சந்தோஷமா நடத்திக் கொடுப்பாங்க..! யார், யாருக்கோ செஞ்சவங்க இவருக்காக செய்ய மாட்டாங்களா..? 

12.36 சதவிகிதம் என்றால் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கிறார்ன்னு வைச்சுக்குங்க. ஒரு ஆக்டருக்கு சம்பளமா 1 கோடி கொடுக்குறார்ன்னா இதுல 12 லட்சத்து 36000 ரூபா வரியா போயிரும்.. இது மாதிரியே ஹீரோயின், மெயின் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் கொடுத்துட்டே போனா என்னாகும்..? இந்த வரியையும் தயாரிப்பாளரே ஆக்டர்கள் சார்பா சேர்த்து கட்ட வேண்டி வரும்..! அப்போ அவங்க சம்பளம் ஒரு கோடியோ 12 லட்சத்து 36000 ரூபாயாகும். இது மாதிரி எல்லாருக்கும் கட்டினா அந்தப் படத்தோட பட்ஜெட் என்ன ஆகும்..? இந்தச் செலவை அவர் யார் மேல திணிப்பாரு..? படத்தின் தயாரிப்புச் செலவு இவ்வளவு ஆகும்போது தியேட்டருக்கு அந்தப் படம் வரும்போது தியேட்டரில் கொள்ளை லாபத்தில் கட்டணத்தை வைத்தால்தான் போட்ட காசை அவரால் எடுக்க முடியும்..! இது மேலும், மேலும் பல தவறுகளுக்கு வழிவகுக்கும்னு சினிமாக்காரங்க சொல்றாங்க..! சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரியே கறுப்புப் பணத்துக்கு இந்தச் சட்டம் வழி வகுக்கும்போலத்தான் தெரிகிறது.. இன்றைய கூட்டத்தில் பேசியவர்களில் சிலரே குறிப்பா அண்ணன் ஆர்.கே.செல்வமணி ரொம்ப தைரியமா, வெளிப்படையா “எங்களைத் தப்பு செய்ய வைக்காதீங்க.. வேற வழியில்லாமல் தயாரிப்பாளர்கள் அவ்வாறு செய்தால், அரசுக்கு நியாயமாக வர வேண்டிய வரியும் வராமல் போய்விடும்..” என்றார்..!

10 லட்சம் ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்குறவங்களுக்குத்தான் இந்த சேவை வரின்னாலும், தயாரிப்பாளர், இயக்குநர்கள், நடிகர்களுக்கு மட்டுமே இதனை புகுத்தியிருக்கும் மத்திய அரசு தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்துள்ளதாம்..! மேலும் ஒரு ஆண்டு ஒருவர் சேவை வரி செலுத்தியிருந்தால், தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதே அளவு சேவை வரியைச் செலுத்த வேண்டும் என்பதும் விதியாம்.. முதல் வருஷம் படம் கிடைச்சு கட்டினாலும், அடுத்த வருஷம் சும்மா இருக்கும்போதும் கட்டணும்னா எப்படிங்க என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். நியாயமான கேள்விதானே..?

கூட்டத்தில் தியேட்டர்கள் சங்கத்தின் துணை செயலாளர் ஸ்ரீதர் பேசும்போது ஒரு விஷயத்தைச் சொன்னார். “2005-ம் வருடம் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை என்ற 4 சிட்டிகளிலும் உள்ள மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களுக்கு அவர்களுடைய வருமான வரியில் முதல் 5 ஆண்டுகளுக்கு 50 சதவிகிதம் விலக்களிப்பதாக ஒரு ஆணை பிறப்பித்தார்களாம். அப்போது சிதம்பரம்தான் நிதியமைச்சர்..! இந்த ஆணைப்படி டெல்லி, கொல்கத்தா, மும்பையில் உள்ள மல்டிபிளெக்ஸ்களுக்கு 50 சதவிகித வரி விலக்கு என்ற செய்திகள் அந்தந்த மாநிலத்தின் வருமான வரித்துறைக்கு சென்றடைந்துவிட்டதாம்.. ஆனால் சென்னைக்கு வரவேயில்லை.. அதனால் அமல்படுத்த உத்தரவும் கிடைக்கவில்லையாம்.. சென்னையில் இருக்கும் மல்டிபிலெக்ஸ் உரிமையாளர்கள், திரையுலகப் புள்ளி ஒருவரையும் அழைத்துக் கொண்டு சிதம்பரத்தை நேரில் சென்று சந்தித்து நிலைமையை  விளக்கினார்களாம்.. “சென்னைக்கும் இந்த அரசு ஆணையை கொண்டு வந்துட்டீங்கன்னா நல்லாயிருக்கும்”னு சொன்னவுடனேயே சிதம்பரம், “ஓ.. அதுக்கென்ன செஞ்சிட்டா போச்சு..” என்று புன்சிரிப்புடன் சொல்லி அனுப்பி வைத்தாராம்..! அவர்களும் சந்தோஷமா திரும்பி வந்தார்களாம். ஆனால் ஒரே வாரத்தில் அந்த அரசு ஆணை, 4 சிட்டிகளுக்கும் சேர்த்தே அறவே நீக்கப்பட்டுவிட்டதாக புது ஆணை பிறப்பிக்கப்பட்டதாம்..! அப்பேர்ப்பட்ட சிதம்பரத்தை பத்தி தெரியாமலேயே இங்க நிறைய பேர் பேசிக்கிட்டிருக்காங்க..” என்று சொல்லி வருத்தப்பட்டார் ஸ்ரீதர்.. 

அதானே 'சின்னப் பயல்' சிதம்பரம்ன்னா கொக்கா என்ன..?

பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்

நம்ம மதிப்பிற்குரிய ஆத்தா தான்தான் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதை நினைவில் வைத்திருந்து பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை கடுமையான சட்டம் கொண்டு தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பதோடு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கமும் செய்யப்பட வேண்டும் என்றும் மிக அற்புதமான ஒரு யோசனையைச் சொல்லியிருக்கிறார்..!

என்னைப் பொறுத்தளவில் இந்த நாட்டில் மிகப் பெரிய வன்முறையே அரசியல்வியாதிகள் செய்யும் ஊழல்களும், அராஜகங்களும்தான் என்பேன்.. அந்த வகையில் ஊழல் செய்யும் அரசியல்வியாதிகளுக்குத்தான் இது போன்ற அதிகப்பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன்.. அதிலும் மாதந்தோறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி,  5 ஆண்டு முடிவில் 65 கோடி ரூபாய் வருமானம் என்று காந்தி கணக்குக் காட்டிய பொம்பளை அரசியல்வியாதிகளுக்கு, ரசாயன முறையில் என்ன மாதிரியான தண்டனை தரப்பட வேண்டும் என்பதையும் ஆத்தாவே சொல்லிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும்..!

படித்ததில் பிடித்தது

ரஜினி நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. நான் அந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பில் ரஜினியுடன் பேசிக் கொண்டிருந்தபோது தேங்காய் சீனிவாசன் பற்றி பேச்சு வந்தது.

“அவருக்கு நான் ஒரு படம் செய்து தரலாம்னு இருக்கிறேன். இது பற்றி சென்னை சென்றதும் பேசலாம்..” என்று சொன்னார் ரஜினி. படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரும் சென்னை திரும்பினோம். ரஜினி ஒரு பிளைட்டில் ஏறி முன்பே சென்றுவிட்டார். நான் மறு பிளைட்டில் ஏறுவதற்காக படக் குழுவினருடன் ஐதராபாத் ஏர்போர்ட்டுக்கு சென்றேன். அப்போது தேங்காய் சீனிவாசனும் அவருடைய மனைவியும் சென்னையில் இருந்து வந்திறங்கினர்.

அவரைப் பார்த்ததுமே, “ஒரு சந்தோஷமான செய்தியை சொல்லப் போறேன்..” என்று சொன்னேன்.  உடனே அவர், “நான் ஒரு துக்கச் செய்தியைச் சொல்லப் போறனே..?” என்று சொல்லிவிட்டு, “சரி முதல்ல நீயே சந்தோஷமான செய்தியைச் சொல்லு..” என்றார். ரஜினி சொன்ன விஷயத்தைச் சொன்னதும் மகிழ்ந்தார். உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அதனால்தான் துக்கத்திற்கு வந்திருக்கிறோம். மெட்ராஸ் வந்ததும் இது பற்றி பேசலாம் என்று சந்தோஷமாய் சொல்லிவிட்டுச் சென்றார்.

நான் சென்னைக்கு வந்து இரண்டு நாட்கள் கழித்து தேங்காய் சீனிவாசனின் சகோதரி எனக்கு போன் செய்து, ஐதராபாத்தில் அண்ணன் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று சொல்லி அழுதார். நான் அவர் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு நின்றேன். சிவாஜி ஸார் உட்பட பல நடிகர், நடிகைகள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். சிவாஜி ஸார் உட்பட பலரும் வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது ராமாவரம் தோட்டத்தில் இருந்து போன் வந்தது. மக்கள் திலகம் அப்போதும் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அதே நேரத்தில் முதல்வராகவும் இருந்தார். “சி.எம்.முக்கு உடம்புக்கு ரொம்ப முடியலை. அதனால் ஜானகியம்மா வர்றாங்க. பாடியை எடுத்திராதீங்க..” என்று போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சில நிமிடங்களில் ராமாவரம் தோட்டத்தில் இருந்து மீண்டும் போன். சி.எம். வர்றார் என்று சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் மக்கள் திலகத்தின் கார் வந்தது. அவர் காரில் வந்து இறங்கியதுமே சிவாஜி ஸார் உட்பட அனைவரும் எழுந்து நின்றார்கள். காரைவிட்டு இறங்கியதுமே மக்கள் திலகம் கொஞ்ச நேரம் தூரத்திலேயே நின்று தேங்காய் சீனிவாசன் உடலை பார்த்துக் கொண்டிருந்தார். உடல் நிலை மோசமாக இருந்ததால் அவரால் ரொம்ப நேரம் நிற்கவும் முடியவில்லை.

மெல்ல தேங்காய் சீனிவாசன் அருகில் சென்று மாலை அணிவித்தார். அந்த மாலையைத் தூக்கி போடுவதற்கே ரொம்ப சிரமப்பட்டார். உடல் நிலை அந்த அளவுக்கு மோசமாக இருந்தும் தேங்காயின் மீதிருந்த பாசத்தால் வந்திருக்கிறார் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள்.  தேங்காய் சீனிவாசன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. பின்பு மெல்ல திரும்பி நடந்து காரில் ஏறினார். காரில் ஏறும்போது தேங்காய் சீனிவாசன் மகனை சைகையால் அழைத்தார். சரியாகப் பேசக் கூட முடியாத நிலையில் இருந்ததால்தான் சைகையால் அழைத்தார். அவரையும் காரில் ஏற்றிக் கொண்டார்.

தேங்காய் சீனிவாசனின் உடலை எடுப்பதற்கு நேரமாகிவிட்டது. இந்த நேரத்தில் எதற்கு அவரை காரில் ஏற்றிக் கொண்டு போகிறார் என்று எல்லோருக்கும் புரியவில்லை. எல்லோரும் குழப்பத்தில் இருக்கும்போது கார் கொஞ்ச தூரம் சென்றதும் நிற்கும் சப்தம் கேட்டது. காரில் இருந்து தேங்காய் சீனிவாசனின் மகன் இறங்கி வந்தார். அவரின் கையில் ஒரு பேப்பர் கட்டு இருந்தது. நெருங்கும்போதுதான் தெரிந்தது அது பெரும் பணக்கட்டு என்று..!

நன்றி : எ.சங்கர்ராவ்
நூல் : தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.
நக்கீரன் வெளியீடு
விலை : ரூபாய் 150.

பார்த்ததும் பதறியது 


65 comments:

ஆனந்த் தங்கமணி said...

அண்ணே சின்னப்பயல் னு சொன்னதுக்கு எதாச்சும் வழக்கு வந்தா என்ன பண்ண போறீங்க. உங்களுடைய நெடுநாளைய வாசகன் இடும் முதல் பின்னூட்டம் இது. நல்லா எழுதுரீங்கண்ணே.

கானா பிரபா said...

படித்து முடித்ததும் கலவையான உணர்வுகள், உங்களின் இந்தத் தொடர் என்றுமே சோடை போனதில்லை, நன்றி அண்ணே

Pulavar Tharumi said...

அட்டகாசமான பதிவு!

கவியாழி said...

எல்லாமே அற்புதம் .தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

[[[என் எண்ணங்கள் said...

அண்ணே சின்னப்பயல்னு சொன்னதுக்கு எதாச்சும் வழக்கு வந்தா என்ன பண்ண போறீங்க. உங்களுடைய நெடுநாளைய வாசகன் இடும் முதல் பின்னூட்டம் இது. நல்லா எழுதுரீங்கண்ணே.]]]

வருகைக்கு மிக்க நன்றிகள் ஸார்..! வழக்கு வந்தா சந்திப்போம்.. அதுகூட நான் சொன்னதில்லையே.. தாத்தா சொன்னதுதானே..?

உண்மைத்தமிழன் said...

[[[கானா பிரபா said...

படித்து முடித்ததும் கலவையான உணர்வுகள், உங்களின் இந்தத் தொடர் என்றுமே சோடை போனதில்லை, நன்றி அண்ணே..]]]

நன்றி கானா..! உங்களை மாதிரியான அன்பர்களின் உற்சாகமும், தூண்டுதலும்தான் எந்த நிலைமையிலும் இங்கேயே இருக்க வைக்கிறது..! மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Pulavar Tharumi said...

அட்டகாசமான பதிவு!]]]

நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[கவியாழி கண்ணதாசன் said...

எல்லாமே அற்புதம் .தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.]]]

வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா..!

நாய் நக்ஸ் said...

சிக்கலில் அண்ணாமலை பல்கலைக்கழகம்//////////////

பல்கலைக்கழகம் பற்றி விசாரித்தபோது அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமானவை. இவரே பணம் கொடுத்துதான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாராம்.. பணம் கொடுக்காமல் யாரும் அங்கே வேலைக்கு சேர முடியாதாம்..! கிட்டத்தட்ட 14000 மாணவர்கள் படித்து வரும் பல்கலையில் அதே 14000 அளவுக்கு ஊழியர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.. “இத்தனை பேருக்கு வேலை இருக்கிறதா..?” என்றால் சிரிக்கிறார்.. ஒரு வேலையை செய்ய 4 பேர் இருக்கிறார்கள்.. அதிலேயும் அவர்களுக்குள்ளேயே டூட்டியிலேயே ஷிப்டிங் போட்டு வேலை செய்வார்களாம்.. மற்றவர்கள் ச்சும்மாதான் இருப்பார்களாம்..! பாதிக்கு பாதி பேராசிரியர்களுக்கு வேலையே இல்லை. பேப்பர் திருத்தும்போதுகூட 10, 10 பேப்பர்களாகப் பிரித்தெடுத்து போய் வேலையை ஷேர் செய்து கொள்கிறார்களாம்./////////////////



“மாதந்தோறும் சம்பளமாகவே 80 கோடிக்கு செலவாகிறது என்கிறார்கள்.. இதனால்தான் ஆள்குறைப்பு செய்யணும்னு மேலிடத்துல குதிச்சாங்க.. நாங்க போராட்டத்தை அறிவிச்சவுடனேயே வாபஸ் வாங்கிக்கிட்டாங்க.. இப்போ ஆள் சேர்ப்புப் பணியை மட்டும் கொஞ்சம் நிறுத்தி வைச்சிருக்காங்க///////////////////////////////////



அண்ணே ...இந்த மாதிரி பல்கலைகழகத்தை பத்தி தகவல் போடும்போது கொஞ்சம் என்னிடம் சரி பார்க்கவும்.....

தற்சமயம் நேரடியாக இங்கு படிப்பவர்கள்....சுமார் 50,0000 மாணவர்கள்......

தொலைதூரத்தில் படிப்பவர்கள் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேல்......
ஊழியர்கள் எண்ணிக்கை சரி .....


சம்பளம் மாதம் 42 to 44 கோடி.....ஆகிறது.....

தங்களிடம் தகவல் சொன்னவரை என்னிடம் பேச சொல்லவும்.....
பொத்தாம் பொதுவாக அள்ளி வீசிவிட்டார்.......

ஊழியர்களுக்கு ஒரு சில இடங்களில் கடுமையான வேலை இருக்கிறது......
ஒரு சில இடங்களில்.....வேலை இல்லை.....

RAJESH said...

Anna,

This edition was good. I am sorry to write in English.
The detail about actor thengai srinivasan is wrong. Dr. MGR died in Dec 1987 and Thengai Srinivasan died in Nov 1988. Tharmathin thalaivan was released in Sep 1988. There is so much factual error in Mr. Sankar Rao's book. The irony in books published in tamil is there is no one to check these factual errors.
I am sure MGR would have given money to some one's son, but the writer can't claim such things.

Thanks,
Rajesh

Anonymous said...

அந்த கடைசிப்படத்தைப் பார்த்ததும் நிசமாவே பதறிப்போனது.தீயில் நடத்தல் என்பது மனபலத்தை கூட்ட செய்கிற ஒரு உத்தி.விரதங்கள் இருக்கணும் அதற்கு முந்தைய நாட்களில்.அப்போது மனம் ஒருமையடைந்து அதிலும் பக்தி சேர்ந்து கொண்டு மிக இயல்பாக தீயில் நடப்பவர்களை கண்டிருக்கிறேன். ஒன்றும் செய்யாது அவர்களை...திராவிடர் கழக பிரமுகர்கள் கூட அதை செய்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன...கடவுள் இல்லை என்று கோஷம் போட்டுக்கொண்டு..ஆனால் அதை சிறுவர் சிறுமிகளிடம் செய்ய சொல்லக் கூடாது.பதின் பருவ வயதுகளின் முடிவில் இருப்பவர்களுக்கு அது ஓ.கே...இது மிக தவறான ஒரு விசயம்

Anthony Robbins என்பவர் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு workshop நடத்துபவர். awaken the giant within,unlimited powers போன்ற புத்தகங்கள் எல்லாம் எழுதியிருக்கிறார்.self development பட்டறைகள் அதிகம் நடத்துவார்.இந்த புத்தகங்களும் பிரபலமானவை.

இவர் அமெரிக்காவில் நடத்தும் அந்த workshopஇல் எல்லாம் இந்த தீமிதிப்பும் ஒரு நிகழ்வாக இருக்கும்.இந்த firewalkஐ அவர் சிபாரிசு செய்வார். நம்முடைய மன எல்லைகளை அது விரிவுபடுத்தும் தன்மை கொண்டது என்பதால். பெரும்பாலும் பயப்படுபவர் என்றாலும் அதில் இறங்குபவர்கள் கணிசமாக உண்டு. it breaks our psychological barriers/borders...

Unknown said...

எவ்வளவு விஷயங்கள் சூப்பர் ஆனா ஒரு விஷயம் முஸ்லிம்கள் கமல் படத்த முன்னாடி திரையிட்டு காட்டணும்னு சொல்றங்கான அவங்கள மட்டும் தான் திவிரவாதிய எல்லா படத்துலயும் காட்றாங்க ஆனா கமல் அதை செய்ய மாட்டார்னு நான் நம்புறேன்

தமிழன் said...

அண்ணே அந்த பேஸ்புக் நண்பியோட ஐ டி கொடுக்க மறந்திடிங்களே?

a said...

எம்.ஜி.ஆர். தேங்காய் சீனிவாசன் மேட்டர் நெகிழ்ச்சி....

scenecreator said...

இது இந்தாண்டின் முதல் இட்லி-வடை பதிவு..!

தொடர்ந்து இட்லி வடை எழுதினால் நன்றாக இருக்கும் .
ஒரு விஷயம் படிக்கும்போது உணர்ந்தேன் .என்னதான் மோசமான படமாக இருந்தாலும் உங்கள் விமர்சனங்களில் தெரியாத ஒரு கடுமை அரசியல் பற்றியும்
அரசியல்வாதிகள் பற்றியும் எழுதும்போது இருக்கிறது.,எல்லா விஷயங்களுமே அருமை. தொடர்ந்து இந்த பகுதியை எழுதுங்கள் .

5 ஆண்டு முடிவில் 65 கோடி ரூபாய் வருமானம் என்று காந்தி கணக்குக் காட்டிய பொம்பளை அரசியல்வியாதிகளுக்கு, ரசாயன முறையில் என்ன மாதிரியான தண்டனை தரப்பட வேண்டும் என்பதையும் ஆத்தாவே சொல்லிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும்..!

பாத்து அண்ணே ! நீங்கள் அதிகம் பேர் படிக்கும் ப்ளாக் எழுதி வருகிறீர்கள்.ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிவிட போகுது.

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

//தற்சமயம் நேரடியாக இங்கு படிப்பவர்கள்....சுமார் 50,0000 மாணவர்கள்......//

நீங்க அங்கே தான் இருக்கீங்க,அதுக்கு ஐந்து லட்சம்னு சொல்வதெல்லாம் ரொம்ப ஓவரு , 5,000 பேரா இருக்கப்போகுது :-))

அதிகமா சொன்னாலும் ஒரு அம்பதாயிரம்னு சொல்லலாம்.
----------------

நாய் நக்ஸ் said...

வவ்வாலு....
அது 50,000 மாணவர்கள் தான்....
டைப் பண்ண வேகத்தில் அப்படி வந்துவிட்டது....

பிறகு தான் கவனித்தேன்...மீண்டும் சரி பண்ண நேரம் இல்லை...இன்று கடுமையான வேலை...

அதிகமா சொன்னாலும் ஒரு அம்பதாயிரம்னு சொல்லலாம்./////////////

உண்மைதான்....பொறியியல் மாணவர்கள் மட்டும் 16,000 பேர்....
மற்ற புலன்களை கணக்கிட்டால் 50000 மாணவர்களை தாண்டி வரும்....

ஒரு சில விஷயங்களை ஓபன்ஆக வெளியில் சொல்ல முடியாத நிலைமை....

புரிதலுக்கு நன்றி....!!!!

(முழுக்க முழுக்க போராட்ட களத்தில் நிற்பதால்...)

குட்டன்ஜி said...

யாருங்க அந்த முகநூல் நண்பி?!

வருண் said...

****காரில் இருந்து தேங்காய் சீனிவாசனின் மகன் இறங்கி வந்தார். அவரின் கையில் ஒரு பேப்பர் கட்டு இருந்தது. நெருங்கும்போதுதான் தெரிந்தது அது பெரும் பணக்கட்டு என்று..!***

அண்ணே இதே வேலையத்தான் (ட்ராமாவைத்தான்)மினிஸ்டர் கக்கன் சாகும்போதும் உங்க "இதய் தெய்வம்" "நடிப்புத் திலகம்" அதான் புரச்சித் தலை செய்தாராம்.

கணக்குல இல்லாத பணம் போல அதான் "cash" வே டெலிவர் பண்ணுறாரு போல!

உண்மைத்தமிழன் said...

[[[நாய் நக்ஸ் said...

அண்ணே... இந்த மாதிரி பல்கலைகழகத்தை பத்தி தகவல் போடும்போது கொஞ்சம் என்னிடம் சரி பார்க்கவும். தற்சமயம் நேரடியாக இங்கு படிப்பவர்கள். சுமார் 50,000 மாணவர்கள். தொலைதூரத்தில் படிப்பவர்கள் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேல். ஊழியர்கள் எண்ணிக்கை சரி. சம்பளம் மாதம் 42 to 44 கோடி ஆகிறது. தங்களிடம் தகவல் சொன்னவரை என்னிடம் பேச சொல்லவும். பொத்தாம் பொதுவாக அள்ளி வீசிவிட்டார். ஊழியர்களுக்கு ஒரு சில இடங்களில் கடுமையான வேலை இருக்கிறது. ஒரு சில இடங்களில் வேலை இல்லை.]]]

தகவல்களுக்கு மிக்க நன்றி நக்கீரன் அண்ணே.. நீங்களே இது பற்றி எழுதலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[RAJESH said...

Anna, This edition was good. I am sorry to write in English. The detail about actor thengai srinivasan is wrong. Dr. MGR died in Dec 1987 and Thengai Srinivasan died in Nov 1988. Tharmathin thalaivan was released in Sep 1988. There is so much factual error in Mr. Sankar Rao's book. The irony in books published in tamil is there is no one to check these factual errors. I am sure MGR would have given money to some one's son, but the writer can't claim such things.

Thanks,
Rajesh]]]

நானும் விசாரித்தேன் ராஜேஷ்.. தேங்காய் சீனிவாசன் இறந்த ஆண்டு விக்கிபீடியாவில் மட்டுமே தவறாகப் போடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். 1987-ம் ஆண்டில்தான் தேங்காய் இறந்தாராம்..! நக்கீரன் வெளியீடு.. மிகப் பிரபலமானவர்.. இவர் பொய் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் புத்தகத்தை எழுதி வாங்கியிருக்கிறார்கள்.. நானும் இவர்களையே நம்பித்தான் இதனை டைப் செய்து போட்டிருக்கிறேன்..!

இதன் ஆசிரியரை இப்போது என்னால் பிடிக்க முடியவில்லை.. விரைவில் விசாரிக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

அந்த கடைசிப் படத்தைப் பார்த்ததும் நிசமாவே பதறிப் போனது. தீயில் நடத்தல் என்பது மன பலத்தை கூட்ட செய்கிற ஒரு உத்தி. விரதங்கள் இருக்கணும், அதற்கு முந்தைய நாட்களில். அப்போது மனம் ஒருமையடைந்து அதிலும் பக்தி சேர்ந்து கொண்டு மிக இயல்பாக தீயில் நடப்பவர்களை கண்டிருக்கிறேன். ஒன்றும் செய்யாது அவர்களை. திராவிடர் கழக பிரமுகர்கள் கூட அதை செய்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன. கடவுள் இல்லை என்று கோஷம் போட்டுக் கொண்டு.. ஆனால் அதை சிறுவர் சிறுமிகளிடம் செய்ய சொல்லக்கூடாது. பதின் பருவ வயதுகளின் முடிவில் இருப்பவர்களுக்கு அது ஓ.கே. இது மிக தவறான ஒரு விசயம்.]]]

கண்டிப்பாகக் கண்டிக்கத்த விஷயம்..! பக்தி மனிதனை மேம்படுத்த மட்டுமே.. அடிமைப்படுத்தி வைக்க அல்ல என்பதை பக்தர்களும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்..! இந்தச் சின்னப் புள்ளைகளை போய் நடக்க வைத்து அப்படி என்னதான் கோரிக்கை வைக்கப் போறாங்களாம்..? முட்டாள்தனம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

எவ்வளவு விஷயங்கள் சூப்பர். ஆனா ஒரு விஷயம் முஸ்லிம்கள் கமல் படத்த முன்னாடி திரையிட்டு காட்டணும்னு சொல்றங்கான அவங்கள மட்டும்தான் திவிரவாதிய எல்லா படத்துலயும் காட்றாங்க.. ஆனா கமல் அதை செய்ய மாட்டார்னு நான் நம்புறேன்.]]]

ஆப்கானிஸ்தானில் நடக்கும் சண்டையில் யார் ஈடுபட்டிருப்பார்கள்..? இந்துக்களா..? இல்லையே முஸ்லீம்கள்தானே..? அதனால் அவர்களைக் குறிப்பிடத்தான் வேண்டும். ஏன் ஆப்கானிஸ்தான் கதையை எடுத்தீர்கள் என்று கேட்டால் அது படைப்பாளியின் உரிமை என்பது எனது பதில்..!

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

எவ்வளவு விஷயங்கள் சூப்பர். ஆனா ஒரு விஷயம் முஸ்லிம்கள் கமல் படத்த முன்னாடி திரையிட்டு காட்டணும்னு சொல்றங்கான அவங்கள மட்டும்தான் திவிரவாதிய எல்லா படத்துலயும் காட்றாங்க.. ஆனா கமல் அதை செய்ய மாட்டார்னு நான் நம்புறேன்.]]]

ஆப்கானிஸ்தானில் நடக்கும் சண்டையில் யார் ஈடுபட்டிருப்பார்கள்..? இந்துக்களா..? இல்லையே முஸ்லீம்கள்தானே..? அதனால் அவர்களைக் குறிப்பிடத்தான் வேண்டும். ஏன் ஆப்கானிஸ்தான் கதையை எடுத்தீர்கள் என்று கேட்டால் அது படைப்பாளியின் உரிமை என்பது எனது பதில்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழன் said...

அண்ணே அந்த பேஸ்புக் நண்பியோட ஐ டி கொடுக்க மறந்திடிங்களே?]]]

கொடுக்க மாட்டேன். நீங்களே தேடி கண்டுபிடிச்சுக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

எம்.ஜி.ஆர். தேங்காய் சீனிவாசன் மேட்டர் நெகிழ்ச்சி.]]]

அவர்தான் எம்.ஜி.ஆர்..! இன்றைக்கும் பலரது மனதிலும் அவர் வாழ்வது அவர் பெற்ற அரசியல் வெற்றிகளுக்காக அல்ல..! மனித நேயத்திற்காக..!

உண்மைத்தமிழன் said...

[[[scenecreator said...

தொடர்ந்து இட்லி வடை எழுதினால் நன்றாக இருக்கும். ஒரு விஷயம் படிக்கும்போது உணர்ந்தேன். என்னதான் மோசமான படமாக இருந்தாலும் உங்கள் விமர்சனங்களில் தெரியாத ஒரு கடுமை, அரசியல் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் எழுதும்போது இருக்கிறது. எல்லா விஷயங்களுமே அருமை. தொடர்ந்து இந்த பகுதியை எழுதுங்கள்.]]]

பரவாயில்லையே.. கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க.. தேங்க்யூ..!

[[[5 ஆண்டு முடிவில் 65 கோடி ரூபாய் வருமானம் என்று காந்தி கணக்குக் காட்டிய பொம்பளை அரசியல்வியாதிகளுக்கு, ரசாயன முறையில் என்ன மாதிரியான தண்டனை தரப்பட வேண்டும் என்பதையும் ஆத்தாவே சொல்லிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும்..!

பாத்து அண்ணே ! நீங்கள் அதிகம் பேர் படிக்கும் ப்ளாக் எழுதி வருகிறீர்கள். ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிவிட போகுது.]]]

அதான் நீங்கள்லாம் இருக்கீங்களே.. பத்திரமா தூக்கிட்டுப் போய் சேர்த்திருங்க.. போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

//தற்சமயம் நேரடியாக இங்கு படிப்பவர்கள்....சுமார் 50,0000 மாணவர்கள்......//

நீங்க அங்கேதான் இருக்கீங்க, அதுக்கு ஐந்து லட்சம்னு சொல்வதெல்லாம் ரொம்ப ஓவரு , 5,000 பேரா இருக்கப் போகுது :-)) அதிகமா சொன்னாலும் ஒரு அம்பதாயிரம்னு சொல்லலாம்.]]]

ஒரு தப்பு இருந்திரக் கூடாதே.. மூக்குல வியர்த்திருமே..!?

உண்மைத்தமிழன் said...

[[[நாய் நக்ஸ் said...

[[[உண்மைதான்....பொறியியல் மாணவர்கள் மட்டும் 16,000 பேர்....
மற்ற புலன்களை கணக்கிட்டால் 50000 மாணவர்களை தாண்டி வரும்....
ஒரு சில விஷயங்களை ஓபன்ஆக வெளியில் சொல்ல முடியாத நிலைமை....
புரிதலுக்கு நன்றி....!!!!]]]

உங்க நிலைமையும் எனக்குப் புரியுது.. நன்றி நக்கீரன் அண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[குட்டன் said...

யாருங்க அந்த முகநூல் நண்பி?!]]]

ஸாரி பிரதர்.. சொல்வதற்கில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

****காரில் இருந்து தேங்காய் சீனிவாசனின் மகன் இறங்கி வந்தார். அவரின் கையில் ஒரு பேப்பர் கட்டு இருந்தது. நெருங்கும்போதுதான் தெரிந்தது அது பெரும் பணக்கட்டு என்று..!***

அண்ணே இதே வேலையத்தான் (ட்ராமாவைத்தான்) மினிஸ்டர் கக்கன் சாகும்போதும் உங்க "இதய் தெய்வம்" "நடிப்புத் திலகம்" அதான் புரச்சித் தலை செய்தாராம். கணக்குல இல்லாத பணம் போல.. அதான் "cash" வே டெலிவர் பண்ணுறாரு போல!]]]

வாங்குற இடத்துல இருந்து பார்த்தால்தான் அந்தப் பணத்தின் மதிப்பு உங்களுக்குத் தெரியும் வருண்.. விட்ருங்க..!

வருண் said...

அண்ணே!

வாங்குற இடத்தில் நிண்ணுதான் சொல்றேன். எல்லாரும் சாகத்தான் போறோம்னு தெரிஞ்சுதான் சொல்றேன். செத்தா என்ன செய்யணும்னுனு ஏற்பாடு செஞ்சுட்டுப் போகணும். யாராவது பணக்கட்டு கொடுப்பாங்களா?னு எதிர்பார்த்துக்கொண்டு அல்ல!

நீங்க இப்போ தேங்காய் சீனிவாசன் குடும்பத்துக்கு கண்ணீர்விட்டு நீங்க நெகிழ்வதால் நல்லவராயிடுறீங்க. நான் பணக்கட்டை விமர்சிப்பதால் கெட்ட்வனாயிடுறேன்.

எல்லாமே எம் ஜி ஆர் சினிமாமாரித்தான் போயிக்கிட்டு இருக்கு! நீங்க நல்லாயிருங்க!

நம்பள்கி said...

வாங்கினவனுக்குத தான் தெரியும் பணத்துடன் அருமை; கணக்கில் வரா கள்ளப் பணமாக இருந்து கொடுத்தாலும் ஓகே; அதே கள்ளப் பணம் வைததிருபவரிடம் இருந்து நான் திருடி தேங்காயின் மகனிடம் கொடுத்தால் ஓகேவா?

சேருமிடம் இடம்; செயல்; முடிவு எல்லாம் ஒன்னு தானே; நான் வெறும் குரியர் தானே; அப்ப இது சரியா?



raja said...

பம்பாய் படத்தை பால் தாக்கரேக்கு போட்டு காமிச்சாங்க .. அதை என்னனு சொல்லுறது

வவ்வால் said...

அண்ணாச்சி,

//ஒரு தப்பு இருந்திரக் கூடாதே.. மூக்குல வியர்த்திருமே..!?//

நம்ம பதிவில தவறான தகவல் வந்துச்சுன்னு நாளைக்கு யாரும் சொல்லிடக்கூடாதுன்னு ஒரு நல்லெண்ணம் தேன்.

நக்ஸ் அண்ணாத்த தவறா சொல்லிட்டார்னு பேரு வரக்கூடாதுனும் ஒரு நல்லெண்ணம் தேன் :-))

------------

//ஏன் ஆப்கானிஸ்தான் கதையை எடுத்தீர்கள் என்று கேட்டால் அது படைப்பாளியின் உரிமை என்பது எனது பதில்..!
//

ஹி...ஹி படத்தையும் ஆப்கானில் ரிலிஸ் செய்து இருக்கலாம் ,என்ன எழவுக்கு தமிழ்நாட்டில் தியேட்டர் கொடுக்கமாட்டாங்கிறாங்கன்னு பொலம்பனும் :-))

அப்கானில் படம் ஓட்ட முடியாதுன்னா என்னாத்துக்கு ஒலகநாயகர்னு சொல்லிக்கணும் ,பேசாம உள்ளூர் நாயகன்னு போஸ்டர் ஒட்டிக்கட்டும் :-))

டிடிஎச்சில் கடசி நேரத்தில் போடாம ஜகா வாங்குவார்னு நான் அன்றே சொன்னது நினைவிருக்கா?

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

அண்ணே! வாங்குற இடத்தில் நிண்ணுதான் சொல்றேன். எல்லாரும் சாகத்தான் போறோம்னு தெரிஞ்சுதான் சொல்றேன். செத்தா என்ன செய்யணும்னுனு ஏற்பாடு செஞ்சுட்டுப் போகணும். யாராவது பணக்கட்டு கொடுப்பாங்களானு எதிர்பார்த்துக் கொண்டு அல்ல!]]]

ஆஹா.. இது நல்லாயிருக்கே..! இப்படி எல்லாரும் செத்தா தூக்குறதுக்கு காசு சேர்த்து வைக்கச் சொல்லி நீங்களே பிரச்சாரம் செய்யலாம்ண்ணே..! அவங்க காசு நிச்சயமா எதிர்பார்க்கலை.. ஆனா எம்.ஜி.ஆர். வந்தால் கொடுப்பாருன்னு தெரியும்.. இது மாதிரி தனக்கு நெருக்கமானவர்களுக்கு எந்த நேரத்துலேயும் உதவி செய்றது அவரது வழக்கம்.. இதில் எந்தத் தவறுமில்லை..!

[[[நீங்க இப்போ தேங்காய் சீனிவாசன் குடும்பத்துக்கு கண்ணீர்விட்டு நீங்க நெகிழ்வதால் நல்லவராயிடுறீங்க. நான் பணக்கட்டை விமர்சிப்பதால் கெட்ட்வனாயிடுறேன். எல்லாமே எம்.ஜி.ஆர். சினிமாமாரித்தான் போயிக்கிட்டு இருக்கு! நீங்க நல்லாயிருங்க!]]]

நீங்க ரொம்ப ஃபீல் பண்றீங்கண்ணே..! இதுல நல்லவர், கெட்டவர்ன்னுல்லாம் இல்லீங்கண்ணா.. உதவி செய்றதுக்கு வரைமுறையெல்லாம் வைச்சுக்குறது சிலருக்கு பழக்கமில்லை.. அதை மட்டும் நாம புரிஞ்சுக்கிட்டா சரி..!

உண்மைத்தமிழன் said...

[[[நம்பள்கி said...

வாங்கினவனுக்குததான் தெரியும் பணத்துடன் அருமை; கணக்கில் வரா கள்ளப் பணமாக இருந்து கொடுத்தாலும் ஓகே; அதே கள்ளப் பணம் வைததிருபவரிடம் இருந்து நான் திருடி தேங்காயின் மகனிடம் கொடுத்தால் ஓகேவா? சேருமிடம் இடம்; செயல்; முடிவு எல்லாம் ஒன்னுதானே; நான் வெறும் குரியர்தானே; அப்ப இது சரியா?]]]

அது கருப்புப் பணமென்றால் நீங்கள் சொன்னதெல்லாம் சரிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

பம்பாய் படத்தை பால் தாக்கரேக்கு போட்டு காமிச்சாங்க. அதை என்னனு சொல்லுறது..?]]]

அது தயாரிப்பாளரும், இயக்குநரும் விருப்பப்பட்டு செய்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//ஒரு தப்பு இருந்திரக் கூடாதே.. மூக்குல வியர்த்திருமே..!?//

நம்ம பதிவில தவறான தகவல் வந்துச்சுன்னு நாளைக்கு யாரும் சொல்லிடக்கூடாதுன்னு ஒரு நல்லெண்ணம் தேன். நக்ஸ் அண்ணாத்த தவறா சொல்லிட்டார்னு பேரு வரக்கூடாதுனும் ஒரு நல்லெண்ணம் தேன் :-))]]]

வலையுலகத்துல உம்மை மாதிரி ஒரு நல்லவன் இருக்கிறதாலதான் என்னை மாதிரி பத்து கெட்டவனுக காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டு நடக்குறோம்.. நன்றிங்கோ எசமான்..!

//ஏன் ஆப்கானிஸ்தான் கதையை எடுத்தீர்கள் என்று கேட்டால் அது படைப்பாளியின் உரிமை என்பது எனது பதில்..!//

ஹி... ஹி படத்தையும் ஆப்கானில் ரிலிஸ் செய்து இருக்கலாம் ,என்ன எழவுக்கு தமிழ்நாட்டில் தியேட்டர் கொடுக்கமாட்டாங்கிறாங்கன்னு பொலம்பனும் :-)) அப்கானில் படம் ஓட்ட முடியாதுன்னா என்னாத்துக்கு ஒலக நாயகர்னு சொல்லிக்கணும், பேசாம உள்ளூர் நாயகன்னு போஸ்டர் ஒட்டிக்கட்டும் :-))]]]

அவதார் படத்தை அமெரிக்கால மட்டுமே ரிலீஸ் செய்யணும்னு சொல்லியா எடுத்தாங்க..? உலக சினிமா ரசிகர்களுக்காக எடுத்ததுதானே..? அது மாதிரிதான் இதுவும்..!

[[[டிடிஎச்சில் கடசி நேரத்தில் போடாம ஜகா வாங்குவார்னு நான் அன்றே சொன்னது நினைவிருக்கா?]]]

ம்.. தியேட்டர்காரர்களின் பயம் அநியாயத்திற்கு இருக்கிறது..! திரைப்படத் துறையின் ஒரு வளர்ச்சியை இன்றைக்கு தடுத்துவிட்டார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//ஒரு தப்பு இருந்திரக் கூடாதே.. மூக்குல வியர்த்திருமே..!?//

நம்ம பதிவில தவறான தகவல் வந்துச்சுன்னு நாளைக்கு யாரும் சொல்லிடக்கூடாதுன்னு ஒரு நல்லெண்ணம் தேன். நக்ஸ் அண்ணாத்த தவறா சொல்லிட்டார்னு பேரு வரக்கூடாதுனும் ஒரு நல்லெண்ணம் தேன் :-))]]]

வலையுலகத்துல உம்மை மாதிரி ஒரு நல்லவன் இருக்கிறதாலதான் என்னை மாதிரி பத்து கெட்டவனுக காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டு நடக்குறோம்.. நன்றிங்கோ எசமான்..!

//ஏன் ஆப்கானிஸ்தான் கதையை எடுத்தீர்கள் என்று கேட்டால் அது படைப்பாளியின் உரிமை என்பது எனது பதில்..!//

ஹி... ஹி படத்தையும் ஆப்கானில் ரிலிஸ் செய்து இருக்கலாம் ,என்ன எழவுக்கு தமிழ்நாட்டில் தியேட்டர் கொடுக்கமாட்டாங்கிறாங்கன்னு பொலம்பனும் :-)) அப்கானில் படம் ஓட்ட முடியாதுன்னா என்னாத்துக்கு ஒலக நாயகர்னு சொல்லிக்கணும், பேசாம உள்ளூர் நாயகன்னு போஸ்டர் ஒட்டிக்கட்டும் :-))]]]

அவதார் படத்தை அமெரிக்கால மட்டுமே ரிலீஸ் செய்யணும்னு சொல்லியா எடுத்தாங்க..? உலக சினிமா ரசிகர்களுக்காக எடுத்ததுதானே..? அது மாதிரிதான் இதுவும்..!

[[[டிடிஎச்சில் கடசி நேரத்தில் போடாம ஜகா வாங்குவார்னு நான் அன்றே சொன்னது நினைவிருக்கா?]]]

ம்.. தியேட்டர்காரர்களின் பயம் அநியாயத்திற்கு இருக்கிறது..! திரைப்படத் துறையின் ஒரு வளர்ச்சியை இன்றைக்கு தடுத்துவிட்டார்கள்..!

k.rahman said...

தவறான தகவல். தேங்காய் ஸ்ரீநிவாசன் இறந்தது November 9, 1988 ல். எம் ஜி ஆர் இறந்தது 1987 இல்.


http://www.thehindu.com/arts/cinema/he-walked-tall-in-tinsel-town/article4016391.ece


//பம்பாய் படத்தை பால் தாக்கரேக்கு போட்டு காமிச்சாங்க. அதை என்னனு சொல்லுறது..?]]]

அது தயாரிப்பாளரும், இயக்குநரும் விருப்பப்பட்டு செய்தது..!//

மணிரத்தினம் அப்படி காட்டலனா என்ன ஆகும்ன்றது அவருக்கு தெரியும். அதான் பால் தாச்கேறாய் கேட்டாரோ இல்லியொ அவரே காட்டிட்டார். ஏன் fire படத்துக்கு நேர்ந்த கதி எல்லாம் உங்களுக்கு மறந்து போச்சா?





ராஜரத்தினம் said...

நான் எட்டாவது படிக்கும்போது தேங்காய் இறந்தார்! ஒன்வதாவது படிக்கும்போது எம்ஜிஆர் இறந்தார்!உண்மைதமிழன் சொல்வது சரியே!

உண்மைத்தமிழன் said...

[[[k.rahman said...

தவறான தகவல். தேங்காய் ஸ்ரீநிவாசன் இறந்தது November 9, 1988-ல். எம் ஜி ஆர் இறந்தது 1987-ல்.

http://www.thehindu.com/arts/cinema/he-walked-tall-in-tinsel-town/article4016391.ece]]]

இதுதான் தவறான தகவல் என்று சினிமாவுலகில் அடித்துச் சொல்கிறார்கள். 1987-ல்தான் தேங்காய் மறைந்தாராம்..! சங்கர்ராவ் இதில் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே..? யோசிச்சுப் பாருங்க..!

[[[//பம்பாய் படத்தை பால் தாக்கரேக்கு போட்டு காமிச்சாங்க. அதை என்னனு சொல்லுறது..?]]]

அது தயாரிப்பாளரும், இயக்குநரும் விருப்பப்பட்டு செய்தது..!//

மணிரத்தினம் அப்படி காட்டலனா என்ன ஆகும்ன்றது அவருக்கு தெரியும். அதான் பால் தாச்கேறாய் கேட்டாரோ இல்லியொ அவரே காட்டிட்டார். ஏன் fire படத்துக்கு நேர்ந்த கதி எல்லாம் உங்களுக்கு மறந்து போச்சா?]]]

பயர் ரீ ரிலீஸில் சக்கை போடு போட்டது..! இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இது போன்ற அரசியல் அதிகார குறுக்கீடுகள் இருக்கத்தான் செய்கிறது..!

வருண் said...

***இதுதான் தவறான தகவல் என்று சினிமாவுலகில் அடித்துச் சொல்கிறார்கள். ***

இதென்ன பதில்??? ரெண்டு பேரு இறந்த தேதியையும் கொடுங்க! Let us analyze the facts! Thanks!

***சங்கர்ராவ் இதில் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே..? யோசிச்சுப் பாருங்க..!***

சும்மா காமெடி பண்ணாதீங்க சார். He wants to sell his book. So he is going make up stories as well. he is not going to say any bad things MGR did to anybody. SO are you!

You know even in 1987, MGR was not "HIMSELF". He was more like a "toy".

OK please give me dates of their DEATH. Let us carefully look at it. Thanks

வருண் said...

///Thengai’s son Sivashankar, daughters and grandchildren were with him in Bangalore when he suddenly collapsed following a brain haemorrhage and passed away on November 9, 1988, at the age of 51.///

நீங்க என்ன சொல்றீங்க?? தேங்காய் சீனிவாசன் இறந்தது 1987 நவம்பர் 1987 லனா?? எம் ஜி ஆர் இறந்தது டிசம்பர் 1987 (கிருஷ்மஸ் அன்றுனு நெனைக்கிறேன்). ஒரு மாதம் முன்னால தேங்காய் இறந்தாரா?

சும்மா சினிஉலகம் சொல்லுது மண்னாங்கட்டினு சமாளிப்பு வேணாம். தேங்காய் சீனிவாசன் இறந்த சரியான தேதியைக் கொடுக்கவும். நனறி!

வருண் said...

Even if he had died in November 9 1987, this story has problems as MGR was not healthy and himself at that time. I know lots of people used MGR at that time like a "toy" to fool people like you!

அப்புறம் நீங்க யாரை வேணா நம்பிக்கோங்க, எனக்கு பிரச்சினை இல்லை. எங்களை சந்தேகப்பட வேணாமே னு எதிர் பார்க்காதீங்க. நாங்க எல்லாம் "உண்மைத் தமிழர்" னு சொல்லிக்கிறதில்லை. ஆனால் உண்மையைத் தேடும் தமிழர்கள்! :)

நாய் நக்ஸ் said...

@ வருண்............

இது தமிழ் தளம்-என்று நினைக்கிறேன்...............

URL-பார்த்துட்டு...(!!!!!!!!!!)........கமெண்ட்.......இடவும்..........

:))))))))))))))

வருண் said...

அப்போ ஹிந்துல வந்துள்ள செய்தியை இங்கே யாருக்கும் வாசிக்கத் தெரியாதா?

அப்போ என்னத்தை விவாதம் செய்வது, நாய்நக்ஸ் அண்ணா???

நாய் நக்ஸ் said...

வருண் said...
அப்போ ஹிந்துல வந்துள்ள செய்தியை இங்கே யாருக்கும் வாசிக்கத் தெரியாதா?

அப்போ என்னத்தை விவாதம் செய்வது, நாய்நக்ஸ் அண்ணா???/////////////////////

இங்க ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்............

படிக்க வரும் மற்றவர்கள்..............அவர்கள் ........எப்படி நினைப்பார்கள் என்று நினைத்து கமெண்ட் போடவும்..........

நம்மலின் அதி மேதாவித்தனம்......இங்கு தேவை இல்லை..........

உங்களுக்கு.......தமிழ் டைப் பண்ண வசதி ..........இருக்கு......எனில் .....GO FOR IT.....

:)))))))))))))))

வருண் said...

///Thengai Srinivasan (21 October 1937 – 9 November 1988) was an Indian Tamil film actor popular in the 1970s and 1980s. He was given the title Thengai (coconut) after his role as a coconut-seller in the drama Kal Manam, staged by actor K. Kannan. Though basically a comedian, he proved himself an all-rounder by excelling in roles other than comedy. He excelled as hero, villain and also character artiste.[1]///

http://en.wikipedia.org/wiki/Thengai_Srinivasan

விக்கிப்பீடியாவிலேயும் தப்பா? அப்போ உண்மைத் தமிழன் சொல்றது மட்டும்தான் சரியா?? நாங்க இவரு என்ன எழவைச் சொன்னாலும் நம்பணும்???

வருண் said...

அவரு 51 வய்துல போகலனா, 50 வயதிலேயே பூட்டாரா? இல்லை அவர் பொறந்த தேதி யும் தப்பா?? அப்போ என்ன எழவுதான் சரி? உண்மைத்தமிழன் சொல்றது மட்டும்தானா?? :))))

நாய் நக்ஸ் said...

@வருண்..................
நான் ஏற்கெனவே..............என்....சம்பத்தமான கேள்வி,,,,,,,,,,,,பதில் வைத்து விட்டேன்..........

நீங்க............உன்தன-வை கேட்டுள்ளீர்கள்............

அவருக்கு விருப்பம் இருப்பின்.........பதில் சொல்லுவார்..........

be...CLEAR IM...............NOT...........SUPPORTING.....

வருண் said...

***சீனிவாச ன் தன் குடும்பத்தினருடன் பெங் களூர் சென்றிருந்தார். நிகழ்ச் சியில் கலந்து கொண்டு விட்டு பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை எடுத்து குடும்பத்தினருடன் தங்கினார்.
இரவு அவருக்கு “திடீர்” என்று பக்கவாத நோய் ஏற்பட்டது. உடனே அவரை பெங்களூர் சாந்தி நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன் றுக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்து பாதிக்கப் பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர் கள் சந்தேகித்தார்கள். எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்ய தீர்மா னித்தனர். ஆனால் 9-11-1987 அன்று அதிகாலையில் அவர் நினைவு திரும்பாமலேயே மரணம் அடைந்தா ர்.
தேங்காய் சீனிவாசனின் உடல் “வேன்” மூலம் சென்னைக்கு கொ ண்டு வரப்பட்டு, சென்னை கோபாலபுரம் ராமசாமி தெருவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்ச லிக்காக வைக்கப்பட்டது. நடிகர் – நடிகை களும் திரை உலக பிரமுகர்களும் திரளாக வந்திருந்து மரியாதை செலுத்தினார்கள். மறுநாள் தேங்காய் சீனிவாசனின் உடல் தக னம் செய்யப்பட்டது. தேங்காய் சீனிவாசனி ன் மனைவி பெயர் லட்சுமி. கீதா, ராஜேஸ்வ ரி என்ற 2 மகள்கள். சிவசங்கர் என்ற ஒரே மகன்.****

---------------

நான் சென்னைக்கு வந்து இரண்டு நாட்கள் கழித்து தேங்காய் சீனிவாசனின் சகோதரி எனக்கு போன் செய்து, ஐதராபாத்தில் அண்ணன் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று சொல்லி அழுதார்.

--

சரி, இந்த மாலைமலர் செய்தியில் தேதி ஓரளவுக்கு சரியா வருதுணு பார்த்தால் அவர் இறந்த ஊர் இடிக்கிது!

வவ்வால் said...

அண்ணாச்சி,

உங்களை சொல்லி குற்றமில்லை, உங்க புரிதல் அம்புட்டுதேன் :-))

டிடிஎச் இல் போடுவதில் என்ன புரட்சி செய்துட்டார், என் படம் நான் எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவேன் என்றால், என் தியேட்டர் எந்த படம் வேண்டுமானலும் வெளியிட எனக்கு உரிமை இருக்குன்னு தியேட்டர்காரன் சொல்லுறான், அது எப்படி லோகநாயகரை தடுப்பதாகும்.

அதான் டிடிஎச் இல் கூறைய பிச்சுக்கிட்டு கொட்டுதுல்ல அப்புறம் என்னாத்துக்கு தியேட்டராம் :-))

தொழில்நுட்பத்தினை வரவேற்பவர் தான் லோகநாயகர் எனில் நடிகர்,நடிகைகளின் டிஜிட்டல் முப்பரிமாண இமேஜ் இருந்தாலே படம் எடுக்கலாம்னு நிலை இப்போ இருக்கு ,இவரோட கால்ஷீட் வாங்காமல் அப்படி படம் எடுத்தால் சும்மா விடுவாரா?

இவரு ஒன்னும் முப்பரிமாண இமேஜுக்கு உழைக்க எல்லாம் வேண்டாம், எல்லாம் கணினி முறையில் உருவாக்க முடியும், அப்படி உருவாக்கி படம் எடுத்துக்கொண்டால் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது ,என சும்மா இருப்பாரா :-))

# இப்போ 1000 ரூ கொடுத்த மாக்கான்களுக்கு என்ன பதில் சொல்லுவார்? ஒன்று முழு காசு திரும்பி கொடுக்கணும் ,இல்லை படம் ரிலீசுக்கு முன்ன டிடிஎசில் காட்டணும்.

டிடிஎச்சில் 300 கோடி கொட்டிச்சுன்னு சொன்ன ஃப்ராடுகள் வந்து காசை கொடுப்பாங்களா?

இம்புட்டு பேசுற நீங்க 1000 கட்டி டிடிஎச்சில் பதிவு செய்தீர்களா?

1000 ரூபான்னா அம்புட்டு லேசா பூடுச்சா ?

வருண் said...

பெங்களூர்ல இறந்தாரா இல்லைனா ஹைதராபாத்லயா??? அஹ்டிஅயும் கேட்டுச் சொல்லுங்கப்பா!

உண்மைத்தமிழன் said...

வருண்..

எதுக்கு இந்தக் கோபம்..? "எழவு" என்ற வார்த்தையெல்லாம்..? நானே தனியாக எழுதியிருந்தால் சொல்லலாம்.. புத்தகத்தைப் பார்த்துதானே எழுதியிருக்கிறேன்..! பிறகென்ன..? வேண்டுமென்றே யாராவது பொய் சொல்வார்களா..?

புத்தகத்தின் தொகுப்பாசிரியரான திரு.கதிரவனிடம் கேட்டுவிட்டேன்.. எம்.ஜி.ஆர். மறைவுக்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1987 நவம்பர் 9-ம் தேதிதான் தேங்காய் சீனிவாசன் காலமாகியிருக்கிறார். இதுதான் உண்மையான இறந்த வருடம்..! விக்கிபீடியாவிலும் சில தளங்களிலும் தவறாக எழுதியிருக்கிறார்கள்..!

தேங்காய் சீனிவாசன் இறந்தது பெங்களூர்தான்.. அது மட்டும் தவறுதலாக ஹைதராபாத் என்று புத்தகத்தில் வந்துவி்ட்டது என்கிறார் ஆசிரியர்..! அடுத்தப் பதிப்பில் திருத்திவிடுவோம் என்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

நக்கீரன் அண்ணே..

வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

டிடிஎச் இல் போடுவதில் என்ன புரட்சி செய்துட்டார், என் படம் நான் எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவேன் என்றால், என் தியேட்டர் எந்த படம் வேண்டுமானலும் வெளியிட எனக்கு உரிமை இருக்குன்னு தியேட்டர்காரன் சொல்லுறான், அது எப்படி லோகநாயகரை தடுப்பதாகும். அதான் டிடிஎச் இல் கூறைய பிச்சுக்கிட்டு கொட்டுதுல்ல அப்புறம் என்னாத்துக்கு தியேட்டராம் :-))]]]

இதே கேள்வி எனக்குள்ளும் உண்டு..! அவர் தனது திட்டங்களை வெளிப்படையாக இன்னமும் சொல்லவில்லை. அதனால் தியேட்டர் உரிமையாளர்களும் வரும் காலத்திய படங்களுக்கும் சேர்த்து தடை என்று சொல்லியிருக்கிறார்கள்..!

தொழில்நுட்பத்தினை வரவேற்பவர்தான் லோகநாயகர் எனில் நடிகர், நடிகைகளின் டிஜிட்டல் முப்பரிமாண இமேஜ் இருந்தாலே படம் எடுக்கலாம்னு நிலை இப்போ இருக்கு. இவரோட கால்ஷீட் வாங்காமல் அப்படி படம் எடுத்தால் சும்மா விடுவாரா?
இவரு ஒன்னும் முப்பரிமாண இமேஜுக்கு உழைக்க எல்லாம் வேண்டாம், எல்லாம் கணினி முறையில் உருவாக்க முடியும், அப்படி உருவாக்கி படம் எடுத்துக் கொண்டால் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, என சும்மா இருப்பாரா :-))]]]

இருக்க மாட்டார்.. ஆனால் இது போலவும் ஏதாவது ஒரு படத்தை தயாரித்துவிடுவார் என்றே நினைக்கிறேன்..!

[[[# இப்போ 1000 ரூ கொடுத்த மாக்கான்களுக்கு என்ன பதில் சொல்லுவார்? ஒன்று முழு காசு திரும்பி கொடுக்கணும்.. இல்லை படம் ரிலீசுக்கு முன்ன டிடிஎசில் காட்டணும். டிடிஎச்சில் 300 கோடி கொட்டிச்சுன்னு சொன்ன ஃப்ராடுகள் வந்து காசை கொடுப்பாங்களா?
இம்புட்டு பேசுற நீங்க 1000 கட்டி டிடிஎச்சில் பதிவு செய்தீர்களா?
1000 ரூபான்னா அம்புட்டு லேசா பூடுச்சா?]]]

நான் பணம் கட்டவில்லை. ஆனால் கமலும், டிடிஎச் நிறுவனங்களும் செய்வது சட்டப்படி தவறு. வாடிக்கையாளரை ஏமாற்றும் செயல்.. சட்டப்படி கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கலாம்..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

நீங்க வெவரமானவர் 1000 ரூவாக்கட்டாம எஸ்கேப் ஆகிட்டிங்க :-))

அவதார் எல்லாம் மார்க்கெட் வேல்யு கணிச்சு உலக அளவில் வெளியிடுறாங்க,அமெரிக்காவில் தயாராகும் எல்லாப்படமும் உலக அளவில் வராது இன்னும் சொல்லப்போனால் சில மகாணத்தில் மட்டும் வெளியாகும்.

எல்லாம் படத்தோட மார்கெட் வேல்யூ பொருத்து தான், நம்ம லோகநாயகருக்கு மார்க்கெட் வேல்யு இல்லாமல் உலக அளவில் வெளியீடுன்னு சொன்னா எப்பூடி?

சல்மான் கானின் ஏக்தா டைகர் படம் பட்ஜெட் 115 கோடி, ஜஸ்ட் சேட்டலைட் டீவீ ரைட்ஸ் மட்டும் 75 கோடிக்கு விற்பனையானது. இப்படி மார்க்கெட் வேல்யு இருந்தால் எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்வாங்க, இல்லாதவங்க விரலுக்கு ஏத்த வீக்கம் தான் காட்டனும் :-))

ஹாலிவுட்டில் மர்லின் மன்றோவின் டிஜிட்டல் இமேஜ் வைத்தே 3டியில் உருவாக்கி ஒரு படம் எடுத்து ,நின்று போனது,காரணம் உருவத்தின் காபிரைட் யாருக்குன்னு பிரச்சினை. எனவே பணம் என வந்துவிட்டால் யாருக்கு லாபம்னு தான் பார்ப்பாங்க, தொழில்நுட்ப வளர்ச்சின்னு சும்மா இருக்க மாட்டாங்க.

சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் உரிமத்தில என்ன இருக்குன்னா சேட்டிலைட்ஸ் உரிமம் வாங்கியவர்களுக்கே டிடிஎச் ஒளிபரப்பு உரிமமும் உண்டுன்னு இருக்கு, ஜெயா டீவிக்கு தான் டிடிஎச் உரிமம் இப்போ இருக்கு, டிடிஎச் ஒளிபரப்பு உரிமம் தனியா விற்கனும்னா சேட்டலைட்ஸ் உரிமம் வாங்கிய சேனல் ஒத்துழைச்சா தான் உண்டு.அதாவது ஜெயா டி.வி டிடிஎச் ஒளிபரப்ப தனியா செய்துக்கலாம்னு அனுமதிச்சு இருக்கணும், அதுக்கு ஏற்றார்ப்போல் ஒப்பந்தம் போட்டிருக்கணும், ஆனால் ஜெயா டீவிக்கு உரிமம் விற்றப்போ டிடிஎச் ஒளிபரப்பு ஐடியாவே இருந்திருக்காது எனவே தனி ஒப்பந்தம் உருவாகி இருக்கும் வாய்ப்பு குறைவு.

இப்போ ஜெயா டீவி ஒரு லீகல் நோட்டீஸ் விட்டாப்போதும் லோகநாயகர் ஆட்டம் அம்பேல் ஆகிடும், சந்தேகமா இருந்தா உங்க அலுவலகத்தில் விசாரித்து பார்க்கலாம்.

சன் டீவி சேட்டிலைட்ஸ் உரிமத்தினை வைத்து தான் டிடிஎச்சிலும் படம் போட்டுக்கொண்டிருக்கிறது :-))

வருண் said...

அண்ணே!

நம்மலால 30 வருடத்துக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வை தவறில்லாமல் கொடுக்க முடியலை. 300 அல்லது 3000 வருடத்துக்கு முன்னால நடந்ததாக சொல்லப்படும் நமாளுக எழுதிய வரலாறை எப்படி நம்புறது? காலங்காலமாக நம்ம இப்படித்தான் இருக்கோம். கவன்க்குறைவாக. என்னைக்குத் திருந்த??? ஹிந்து, விக்கிப்பீடியா போன்றவைகளில் இது போல் தவறான செய்திகள் இருக்கக்கூடாது. ஏன் என்றால் இதுதான் நாளைக்கு வரலாறாகும்.

* Someone should have commented to correct the fact when hindu published that article.

* Someone should fix the glitch in wikipedia as well.

It is our responsibility!

அவன் எழுதினான், இவன் சொல்லியிருக்கான், நானா சொன்னேன்? எனக்கென்ன? என்கிற நம்மில் உள்ள மனப்பாங்கு நம்ம நாசமாக்ப்போகத்தான் வழி வகுக்கும்!

உங்களுக்கு வெறும் ஜால்ரா பின்னூட்டம்தான் வேணும்னா பேசாமல் மாடெரேஷன் என்கிற பேரில் எதையாவர்து செய்யுங்க!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

நீங்க வெவரமானவர் 1000 ரூவா கட்டாம எஸ்கேப் ஆகிட்டிங்க :-))]]]

வீட்ல டிடிஹெச்சே இல்லீங்கண்ணா..!

[[[சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் உரிமத்தில என்ன இருக்குன்னா சேட்டிலைட்ஸ் உரிமம் வாங்கியவர்களுக்கே டிடிஎச் ஒளிபரப்பு உரிமமும் உண்டுன்னு இருக்கு. ஜெயா டீவிக்குதான் டிடிஎச் உரிமம் இப்போ இருக்கு. டிடிஎச் ஒளிபரப்பு உரிமம் தனியா விற்கனும்னா சேட்டலைட்ஸ் உரிமம் வாங்கிய சேனல் ஒத்துழைச்சாதான் உண்டு. அதாவது ஜெயா டி.வி டிடிஎச் ஒளிபரப்ப தனியா செய்துக்கலாம்னு அனுமதிச்சு இருக்கணும். அதுக்கு ஏற்றார் போல் ஒப்பந்தம் போட்டிருக்கணும். ஆனால் ஜெயா டீவிக்கு உரிமம் விற்றப்போ டிடிஎச் ஒளிபரப்பு ஐடியாவே இருந்திருக்காது.. எனவே தனி ஒப்பந்தம் உருவாகி இருக்கும் வாய்ப்பு குறைவு. இப்போ ஜெயா டீவி ஒரு லீகல் நோட்டீஸ் விட்டா போதும் லோகநாயகர் ஆட்டம் அம்பேல் ஆகிடும். சந்தேகமா இருந்தா உங்க அலுவலகத்தில் விசாரித்து பார்க்கலாம். சன் டீவி சேட்டிலைட்ஸ் உரிமத்தினை வைத்துதான் டிடிஎச்சிலும் படம் போட்டுக்கொண்டிருக்கிறது :-))]]]

ஜெயா டிவியுடன் தனி ஒப்பந்தம் போட்டிருப்பார் கமல்.. இல்லாமல் இவ்வளவு தூரம் பேச மாட்டார்.. 13 கோடிக்கு சேனல் ரைட்ஸ் வாங்கியிருக்கிறார்கள் ஜெயா டிவி. அவங்களும் ச்சும்மா விட்ருக்க மாட்டாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[உங்களுக்கு வெறும் ஜால்ரா பின்னூட்டம்தான் வேணும்னா பேசாமல் மாடெரேஷன் என்கிற பேரில் எதையாவர்து செய்யுங்க!]]]


இவ்ளோ கோபம் எதுக்கு..? நான் நாகரிகமான அனைத்து பின்னூட்டங்களையும் அனுமதிக்கிறேனே..? விக்கிபீடியாவில் தேங்காய் பற்றிய செய்தியை இப்போதுதான் நானே பார்க்கிறேன். நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்குற..?

வருண் said...

அண்ணே!

உங்க மேலே எல்லாம் கோவம் கெடையாது. நீங்க செய்ய வேண்டியதை செஞ்சுப்புட்டீங்க. அதைத்தவிற நான் வேற எதுவும் எதிர்பார்க்கல.

உங்க மேலே கோவம், அதனால உங்க தளத்தில் பின்னூட்டம் இட இஷ்டமில்லைனா நான் இதையெல்லாம் வந்து சொல்லிக்கிட்டு இருக்கமாட்டேன்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்!

Unknown said...

நல்ல நாள்,

நான் ஒரு பதிவு தனியார் பணம் கடன் இருக்கிறேன். நாம் உலகின் எந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு திருப்பி கால காலம் ஒரு வருடத்திற்குள் 3% ஆக குறைந்த மிக குறைந்தபட்ச வருடாந்திர வட்டி விகிதங்கள் உலகெங்கிலும் தமது நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் மக்கள், நிறுவனங்கள், உதவ கடன் கொடுக்க. நாம் 100,000,000 யூரோ வரை 5,000 யூரோ எல்லைக்குள் கடன் கொடுக்க. நமது கடன்கள், நன்றாக காப்பீடு அதிகபட்ச பாதுகாப்பு எங்கள் priority.Interested நபர் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று: (calvinkingloanfirm@gmail.com)

கடன் வழங்குகின்றன.

Unknown said...

நல்ல நாள்,

நான் ஒரு பதிவு செய்யப்பட்ட தனியார் பணம் கடன். உலகின் எந்தவொரு பகுதிக்கும் 30 ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்தும் காலத்திற்கு ஒரு வருடத்திற்கு 2% குறைவாக குறைந்தபட்ச வருடாந்திர வட்டி விகிதத்துடன் உலகெங்கிலும் உள்ள அவர்களின் நிதி நிலைகளை புதுப்பிக்க வேண்டிய மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவ நாங்கள் கடன்களை வழங்குகிறோம். 5,000 முதல் 500,000,000 யூரோ வரையிலான கடன்களை நாங்கள் கொடுக்கிறோம். எங்கள் கடன்கள் நன்றாக காப்பீடு, அதிகபட்ச பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை உள்ளது. ஆர்வமுள்ள நபர் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்: (calvinkingloanmanagementfirms@gmail.com)

கடன் வழங்க.