சூரிய நகரம் - சினிமா விமர்சனம்

02-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனை முறை அடிபட்டாலும், எத்தனை பேரின் கண்ணீர்க் கதைகளைக் கேட்டாலும் புதிய தயாரிப்பாளர்கள் திருந்த மாட்டார்கள் போலிருக்கிறது.!

கையில் பணம் இருக்கிறது என்றாலும், தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு கதையையும், இயக்குனரையும் தேர்வு செய்வதுதான் அவர்கள் செய்ய வேண்டிய மிகப் பெரிய வேலை..! சிறந்த இயக்குநர்கள் எனப்படுபவர்களின் படங்களே தலைகுப்புற விழுகும் சூழலில், புதுமுக இயக்குநரிடம் லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்னும் கேட்கும் அளவுக்கு ஒரு காமெடியான படத்தை எடுத்துக் கொடுத்தால் எப்படி..?


மதுரைதான் கதைக் களம். அதனால்தான் சூரிய நகரம் என்ற டைட்டிலாம்..! ஹீரோ ராகுல், ஹீரோயின் மீரா நந்தனின் வீட்டுக்கு நேர் எதிரில் இருக்கும் கஞ்சா கருப்புவின் வொர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்கிறார். மீரா நந்தனின் அப்பா இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். சாதிக்காகவே உயிர் வாழும் உத்தம மனிதர். தன் உயிரைவிட சாதியே பெரிது என்று நினைக்கும் சாதிச் சங்கத்தின் தலைவர் அவர்தானாம்..! எந்தச் சாதி என்பதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் தேவர் சாதியைத்தான் குறிப்பிடுகிறார் என்பதற்கு பல குறியீடுகளை இலவசமாக அள்ளி வீசியிருக்கிறார்கள்.

ராகுலின் குடும்பம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. கஞ்சா கருப்பு அண்ட் கோவிடம் எப்படி வந்து மாட்டினார் என்பதும் தெரியாது. ஆனால் ஹீரோயினை பார்த்தவுடன்.. அதுவும் அவரது வளையல் அணிந்த ஒரு கையைப் பார்த்தவுடனேயே லவ்வு பீறிக்கிட்டு வருதாம்..!  பின்னாடியே துரத்துறாரு.. ஹீரோயினும் லவ் பண்ண ஆரம்பிக்க.. 2 டூயட்டுகளுக்கு வசதியா போச்சு..

ஆர்.வி.உதயகுமாரின் அறிமுகத்திற்கு இத்தனை பில்டப்புகள் எதுக்குன்னு தெரியலை..? அத்தோட அவரோட வீட்டு உறவுகளையெல்லாம் அறிமுகப்படுத்துறதெல்லாம் பக்கா சீரியல் டைப்.. உதயகுமாரின் கையாளின் தங்கையை வேறொரு சாதிக்கார பய இழுத்துக்கிட்டு ஓடிட்டினான்னு தெரிஞ்சவுடனேயே தேடத் துவங்குறாங்க பாருங்க.. காமெடி களை கட்டுது.. 

மதுரைல தேவர் சிலை பக்கத்துல தேடிக்கிட்டிருக்குறவங்க டக்குன்னு ஒரு போன் வந்தவுடனேயே பிளைட்ல ஏறி தேனி என்.ஆர்.டி. நகர்ல பாரதிராஜா வீட்டுத் தெருவுக்கே போயிட்டாங்க. இவங்க போய் லைட்டு அடிச்சவுடனேயே மிகச் சரியா லவ்வர்ஸ் அந்தத் தெருவுலதான் துண்டைக் காணோம்.. துணியைக் காணோம்ன்னு ஓடிக்கிட்டிருக்காங்களாம்.. ஆளைப் பிடிச்சவுடனேயே ஒரே வெட்டு.. இவனை என்ன செய்யணுமோ செய்யுன்னு கெத்தா சொல்லிட்டு வண்டியேறுறாரு சாதித் தலைவரு..? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே சீனை காட்டி நம்ம தாலியை அறுக்கப் போறாங்கன்னு தெரியலை..?

இதுல உதயகுமாருக்கு ஒரு தங்கச்சி.. அவருக்கு ஒரு பொறம்போக்கு புள்ளை.. ஆத்தா வீட்ல பார்த்துக்கிட்டிருக்கும்போதே வேலைக்காரியை ரூமுக்குள்ள இழுத்துட்டுப் போய் ஜல்சா பண்ற டைப்பு. உறவு விட்டிரக் கூடாதுன்னு இந்த மருமகனுக்கு கட்டி வைக்கப் பாக்குறாங்க.. ஓடுவதுதான் சிறந்த வழின்னு லவ்வர்ஸ் ஓடத் துவங்க.. அப்பாவும் அவங்களை  மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல பார்த்துர்றார்.. ஹீரோவைத் தூக்கிப் போட்டு மிதிச்சு சட்னியாக்கிட்டு, பொண்ணை அழுங்காம, குலுங்காம தூக்கிட்டுப் போறாரு..! அப்புறம் அவங்க ஒண்ணு சேர்ந்தாங்களா இல்லையான்றதை முடிஞ்சா தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க..! 

ரீலுக்கு ரீல் சாதி.. சாதி.. சாதின்னு இவங்க பேசுற பேச்சைப் பார்த்தா சாதிக்காரப் பயலுவலே காதைப் பொத்திக்கிட்டு போயிருவாங்க. அந்த அளவுக்கு சாதிப் பித்து பிடிச்சுப் போயிருக்குன்னு இந்தப் படத்துல நிறுவியிருக்காரு இயக்குநரு..!

ஹீரோ ஆயுள் தண்டனை கைதியா ஜெயில்ல இருக்காரு.. விசாரணை கைதியா 15 நாள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிடுறாரு.. ஆனா ஹீரோவை தண்டனை கைதி உடைல உள்ள கொண்டு போறாங்க.. என்ன பெர்பெக்சன் பாருங்க..!?

ஜெயில்ல தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஹீரோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர்றாங்க..! எங்கேன்றீங்க.. சரவணா மருத்துவமனைன்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு. இயக்குநர் இவ்வளவு நாளா வேறெங்கயோ வாழ்ந்திருக்காரு போலிருக்கு..  ஹீரோயினும் விஷத்தைக் குடிச்சிட்டு ச்சும்மா அதே ஆஸ்பத்திரிலதான் ஹாயா படுத்திருக்கு..! இயக்குநர், முன்ன பின்ன விஷம் குடிச்சவங்க கதியை ஆஸ்பத்திரில போய் பார்த்ததில்லை போலிருக்கு..! ஏதோ காய்ச்சல் வந்த மாதிரி படுத்திருக்கு பொண்ணு. கைல டிரிப்ஸ்கூட ஏறலை.. ஏத்தி முடிச்ச மாதிரி காட்டுறாங்களாம்..! அடுத்த சீன்ல தானா எந்திரிச்சு நடக்குது..! அங்க ஹீரோ இருக்குற ரூம் வாசல்ல நிக்குற 2 போலீஸ்காரங்க, “வாய்யா போய் ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்..”ன்னு டயலாக் பேசிட்டே நடந்து போறாங்க..!  இத்தனை சினிமாக்களை பார்த்தும் இப்பவும் எல்கேஜி ஸ்டூடண்ட் மாதிரியே படத்தை எடுத்துக் கொடுத்தா எப்படி..? 

சாதிக்காரங்க எல்லாரும் சேர்ந்து உங்கப்பா மாதிரியே நீங்களும் தலைவரா இருங்கன்னு சொல்லி வற்புறுத்த முடியாதுன்னு மறுக்குறாரு உதயகுமாரின் மகன்..! இவர்தான் சிறைக்கும், வீட்டுக்குமாக நடந்து அக்காவின் காதலை வாழ வைக்கிறார்..!

10 ஆண்டு கால சிறை வாழ்க்கையை, ஜஸ்ட் ஒரேயொரு சீனில் ஜம்ப் செய்து திரைக்கதையைக் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். 10 ஆண்டுகால முடிவில் கைதிகளை விடுதலை செய்யும் திட்டத்தை துணைக்கு வைத்துக் கொண்டு ஹீரோவை விடுவித்து, ஹீரோயினோடு சேர்த்து வைக்க தம்பியும் எண்ணுகிறார்..  ஆனால் விதி வேறு மாதிரியாகி.. ஒரு ஊரே திரண்டு வந்து இவர்களை கொலை செய்தே தீர வேண்டும் என்று சொல்வதெல்லாம் ரொம்பவே டூ மச்.. இதற்காக அந்தத் தம்பி செய்யும் கருணைக் கொலையும் ரொம்ப ரொம்ப டூ மச்சு.. 

இதுதான் இப்படியென்றால் படத்தின் பாடல்களை கேட்டீர்களேயானால் என்ன செய்வீர்களோ தெரியாது..? அந்த அளவுக்கு என்ட்டர் டைப் வசனங்களை பாடல் வரிகளாக்கி இசை என்ற பெயரில் அலங்கோலப்படுத்தியிருக்கிறார்கள்..!

ஹீரோ ராகுலைவிடவும் ஹீரோயின் ஓகேதான்.. பாவாடை, தாவணில ரொம்ப நாள் கழிச்சு ஒரு அழகு பொண்ணை ஸ்கிரீன்ல பார்க்க முடிஞ்சது..! தம்பியை மொட்டை மாடிக்கு அடிக்கடி விரட்டி தான் வரப் போவதைச் சொல்லச் சொல்லும் காட்சியிலும், வொர்க் ஷாப்பில் பூக்கள் மத்தியில் காதல் வசனம் பேசும் காட்சியிலும் அழகும், நடிப்பும் மிளிர்கிறது..! ஏதோ மலையாளத்துக்காக நடிக்க வைத்திருந்தாலும், கேரளாவில் ஓடுமா என்பதும் சந்தேகமே..

ஜாதி மேட்டர் என்பதால் சென்சார் போர்டில் ரொம்பவே உன்னிப்பாக கவனித்திருப்பார்கள் போலும்.. பல இடங்களில் கத்திரி போட்டும், இன்னும் போடப்பட வேண்டியவை நிறையவே உள்ளன..! ஆபாசம், வன்முறையைவிட இது போன்ற இன உணர்வைத் தூண்டும் வசனங்களைத்தான் முற்றிலும் தடை செய்ய வேண்டும்..!

ஜாதின்னா என்ன என்று கேட்கும் அளவுக்கு நமது தலைமுறையை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது உண்மையைத்தான் சொல்கிறோம் என்ற போர்வையில் “ஓஹோ.. நாமெல்லாம் அவுக.. அவுகெல்லாம் வேற ஆளா..?” என்ற சிந்தனையை படம் பார்க்கும் ரசிகர்களின் மனதிலும் விஷமாக விதைக்க முயற்சித்திருப்பதைத் தவிர வேறு எதையும் இந்தப் படம் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது..!

6 comments:

கோவை நேரம் said...

வேணும்னே போய் புதை குழியில் விழுகிறீர் களே....இந்த படம்லாம் பார்க்கணும்னு யார் அழுதா...தேவையா உங்களுக்கு...

மணிஜி said...

//வேணும்னே போய் புதை குழியில் விழுகிறீர் களே....இந்த படம்லாம் பார்க்கணும்னு யார் அழுதா...தேவையா உங்களுக்கு...//



it is his duty sir:-)

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

வேணும்னே போய் புதைகுழியில் விழுகிறீர்களே.... இந்த படம்லாம் பார்க்கணும்னு யார் அழுதா... தேவையா உங்களுக்கு...?]]]

இதுக்கு மணிஜி பதில் சொல்லியிருக்கார் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜி...... said...

//வேணும்னே போய் புதை குழியில் விழுகிறீர் களே....இந்த படம்லாம் பார்க்கணும்னு யார் அழுதா...தேவையா உங்களுக்கு...//



it is his duty sir:-)]]]

உதவிக்கு நன்றிண்ணே.. பரப்புரைக்கு காசெல்லாம் கேக்காதண்ணே..!

ஸ்ரீகாந்த் said...

நீங்க ரொம்ம்ம்ம்ப நல்லவர்னே

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

நீங்க ரொம்ம்ம்ம்ப நல்லவர்னே..]]]

தப்பு.. இளிச்சவாயன்..!