கேள்வி-பதிலில் தமிழ்மணம்-லக்கிலுக்-பெயரிலி-ஜெயமோகன்-சுகுணா-வளர்மதி-ஆ.வி.

27-03-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நேரம்தான் இல்லை..

அனைத்திற்கும் நேரம் ஒதுக்கி எழுதுவதற்குள் காலம் கடந்து விஷயம், ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.

இடையில் படிப்பதற்கு வராத சோம்பேறித்தனம், தட்டச்சு செய்வதற்கு வந்து தொலைக்கிறது..

எழுதலாம் எனில் எத்தனை பேருக்குத்தான் ஒரே சமயத்தில் பதில் சொல்வது என்று அயர்ச்சி ஏற்படுகிறது.

சரி.. பதிலைத்தான் சொல்லித் தொலைவோமே என்றால் எத்தனை முறைதான் ஒரே பதிலை சொல்லிக் கொண்டேயிருப்பது என்று வெறுப்பாக உள்ளது.

அதுதான் ஒரு பத்து நாளாக அமைதி காத்து.. வேடிக்கை பார்த்து.. காத்து வாங்கி.. மூச்சு விட்டு.. முனங்கி, எழுந்து பார்ப்பதற்குள் தமிழ்மணம் எங்கேயோ போய்விட்டது.

சரி.. ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் வழக்கம்போல் மனம் பேயடித்த குரங்கு போல் உள்ளது.

“ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் ஒரே பதிவுல பதிலை போட்டுட்டு விட்ருங்க. எதுக்கு போயி வீணா டென்ஷனாகுறீங்க..” என்று 'வலையுலக வசிஷ்ட மாமுனி' அட்வைஸ் செய்ததால்.. சரி, நாமும் ஒரு கேள்வி-பதிலை போட்டு அதிலேயே எல்லாத்தையும் கொட்டிட்டு போர்வையைப் போர்த்திக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்..

இனி எனது கேள்வி-பதில்

கேள்வி : தமிழ்மணத்தின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா..?

பதில் : ஒரு காலத்தில் பீகாரில் நடந்த ராப்ரிதேவியின் ஆட்சிக் காலத்தை ஞாபகப்படுத்துவதைபோல் இவ்வளவு நாளும் ஜனநாயகத்தை மெளனமாகக் கட்டிக் காத்த தமிழ்மணம் நிர்வாகிகள் இன்றைக்குத்தான் தூங்கி எழுந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதிலும் 12 பேர் இருக்கிறார்களாம். “அவ்வப்போது கூடிப் பேசிக் கொண்டிருந்தோம். இப்போதுதான் நடவடிக்கை எடுத்துள்ளோம்..” என்று நமது அரசியல்வாதிகளுக்கு இணையாக பதில் சொல்லி காமெடி செய்திருக்கிறார்கள்.

அந்த ‘வீராங்கனை’ முதலில் ஒழுங்காக காப்பி-பேஸ்ட் செய்து வந்து, பின்பு திடீரென்று தடம் மாறி ரயில் புரண்டபடி தண்டவாளத்தில் ஓடுவதைப் போல் பதிவுகள் எழுதியபோதே பலரும் சொல்லிப் பார்த்தார்கள். கண்டித்துப் பார்த்தார்கள். பேசிப் பார்த்தார்கள். அம்மையார் திருந்தியபாடில்லை.

இதற்கு முன்பேயே வீராங்கனையின் தோஸ்த்து கோயம்புத்தூர்காரர் ‘படங்களாக’ காட்டியபோதே தமிழ்மணம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால், இப்போதைய துரதிருஷ்டமான நிலை நமக்கு வந்திருக்காது. தமிழ்மண நிர்வாகம் அப்போதெல்லாம் சுண்டக்கஞ்சி குடித்துவிட்டு, குப்புறப்படுத்து தூங்கியதைப் போல் இருந்தது.. அதற்கெல்லாம் இப்போது பதில் இல்லை.

அப்போது நான் கோயம்புத்தூர்க்காரரை கண்டித்து கமெண்ட் மேல் கமெண்ட் போட்டு “சரியான அரை லூஸ்ய்யா நீ..” என்று அவரிடம் ‘பாட்டு’ வாங்கியதுதான் மிச்சம்.

இந்த வீராங்கனையின் பதிவின் தலைப்புகளை பார்த்து, பார்த்து தமிழ்மணம் தளப் பக்கத்தை திறப்பதற்கே எரிச்சல் வந்துவிட்ட நிலையில்தான் நானும் ஒரு பதிவைப் போட்டேன்.. கிடைத்தது ‘காயடிக்கப்பட்ட காளை’ என்றொரு பட்டம்.

ஏற்கெனவே பல பதிவர்களும் விதவிதமான பட்டங்களை அம்மையாரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருந்ததால், எனக்கும் இப்படித்தான் நடக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.. அதுவே நடந்தது.

நாம் ஒன்றும் அந்த வீராங்கனையின் பதிவுகளைத் தவறு என்று சொல்லவே இல்லை.. பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமையான அந்த நிகழ்வுகளைத்தான் அவர் படம் பிடித்திருந்தார். நடக்கவே இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது.

ஆனால் அதை மலிவான விளம்பர நோக்கில் தலைப்பிலேயே அந்த வார்த்தையைக் குறிப்பிட்டு தொடர்ந்து பல நாட்கள், பல இடுகைகளாக எழுதியதுதான் அப்பதிவுகள் குறித்து பரிதாபத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக பலருக்கும் அருவருப்பை ஏற்படுத்திவிட்டது.

இதை பலரும் பலவிதமாக, நல்லவிதமாக, மிக மரியாதையாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல் சக பதிவர்களுக்கு எழுதிய பதிலில் ஒரு மனிதனாககூட அவர்களைக் கருதாமல் அள்ளி வீசிய வசவுகளால்தான் அந்த அம்மணி பலரிடமிருந்தும் கண்டனங்களையும், விரோதங்களையும் எதிர்கொண்டார். அதை அவர் இன்றுவரையிலும் புரிந்து கொள்ளாதது நமக்கு வருத்தமே.

அப்போது தூங்கியிருந்த தமிழ்மணம் இப்போது அதே வீராங்கனை, பெயரிலியுடன் மோதிய பின்பு முழித்துக் கொண்டதைப் போல் ஆக்ஷன் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை.

அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது.

அது சரி.. இதற்கு முன்பு நான் உள்ளிட்ட பல பதிவர்கள் அம்மையாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் தமிழ்மணத்திற்குத் தெரியுமே...

‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

அப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..?


கேள்வி : உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த ‘காயடிக்கப்பட்ட காளை’ என்ற பட்டத்தினால் பெருமையடைகிறீர்களா..?

பதில் : பின்ன..? யார்கிட்டேயிருந்து வாங்கியிருக்கேன்னு நினைக்கிறீங்க..

பெரியாரின் போர்வாள்.. சுயமரியாதை இயக்கத்தின் சுடரொளி.. பெண்ணியத்தின் கண்ணியமான தலைவி.. சங்கம் வளர்த்து பிரான்ஸில் தமிழ் வளர்க்கும் பேரொளி.. இத்தனை பட்டத்தையும் கைல வைச்சிருக்கிறவர்கிட்டயிருந்து ஒரு பட்டம் வாங்கிறதுன்னா சும்மாவா.. இதுக்கெல்லாம் கொடுத்துல்ல வைச்சிருக்கணும்..

கேள்வி : இந்த ‘காயடிக்கப்பட்ட காளை’ என்ற பட்டத்திற்கு அர்த்தம் தெரியுமா?

பதில் : அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க..?

கோயம்புத்தூர்க்காரர்கிட்ட கேட்டேன். “உன் பிரெண்ட் இப்படியொரு பட்டப் பேரை எனக்குக் குடுத்திருக்கு சாமி. அதுக்கு என்ன அர்த்தம்..?”னு கேட்டேன். “அப்படியா ரொம்ப.. ரொம்ப சந்தோஷம்யா.. காயடிக்கப்பட்ட காளைன்னா ‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.

இன்னும் கல்யாணம்கூட ஆகாத.. அக்மார்க் எலிஜிபிள் பேச்சுலர் நான். எனக்குத் தேவைதானா இது..?

கேள்வி : லக்கிலுக்கின் தளத்தை தமிழ்மணம் தூக்கிவிட்டதே.. இது குறித்து..?

பதில் : இதற்கெல்லாம் மூல காரணம் யார் என்பதை தம்பி லக்கிலுக் இப்போதாவது உணர வேண்டும்.

சும்மா கிடந்த ஓணானை தூக்கி மடில போட்டுட்டு அப்புறமா ‘குத்துதே’, ‘குடையுதே’ன்னு அலைஞ்ச மாதிரி.. அன்னிக்கே தூர வீசிட்டுப் போயிருந்தா, இப்படியொரு பிரச்சனை தம்பிக்கு வந்திருக்காது..

ஏதோ இந்த 'வீராங்கனை'தான் பெரியாரை உலகம் முழுக்க கொண்டு போகப் போறார்ன்னு நினைச்சுட்டு ‘கும்மியடிப்பு’ என்ற பெயரில் அவரோடு சேர்ந்து அடித்த கூத்துதான் இத்தனைக்கும் காரணம்.

லக்கியின் தளம் நீக்கப்பட்டது வருத்தத்திற்குரியதுதான். அதே சமயம் லக்கியும் ஒரு முறை தன்னை திரும்பிப் பார்க்க வேண்டும்.

அவருக்குப் பிடிக்காதவற்றை யார் பேசினாலும், உடனேயே அவர்களை ஏக வசனத்தில் எடுத்தெறிந்து பேசி வருவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். (உதாரணம் : அண்ணன் காசி ஆறுமுகத்துடனான அவருடைய மோதல். அது முட்டாள்தனம் என்பது எனது கருத்து)

வலையுலகில் அதிகம் பேர் இப்போதெல்லாம் தாங்களே நேரடியாகத் திட்டாமல், அனானி பெயரில் கமெண்ட்ஸ்களை அனுமதித்து அதன் மூலம் அந்த கமெண்ட்ஸ்களுக்குத் ‘நாங்கள் பொறுப்பல்ல.. எழுதியவர் எவரோ அவரேதான்..’ என்ற பிலாத்து மன்னனைப் போல் ‘கை கழுவல்’ வேலையை பொறுப்பாகச் செய்து வருகிறார்கள். இதற்கு லக்கிலுக்கும் விதிவிலக்கல்ல..

இந்த விஷயத்தில் லக்கி ஒருவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. முக்கால்வாசி அரசியல் பதிவர்களின் தளங்களிலும் இதுதான் தென்படுகிறது.

இந்த ‘வீராங்கனை’யின் ‘சித்து’ விளையாட்டு, இரயாகரன், தமிழரங்கம் என்று சுற்ற ஆரம்பித்து கடைசியில் பெயரிலி ‘கார்ட்டூன் கேரக்டர்’ என்று கிண்டலடிக்கும்விதத்தில் எழுதி, அது லக்கியின் கை வண்ணத்தில் ‘தூத்தேறி.. முண்டம்..’ என்கின்றவரையில் போனது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம்.

பெயரிலியும் தனது பதிவில் சொல்லியிருந்த ‘கேபரே டான்ஸ்’ என்கின்ற வார்த்தையையெல்லாம் தவிர்த்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எழுதிவிட்டு அந்த 12 பேரில் ஒருவர் என்ற பேனரின் கீழ் அவர் ஒளிந்து கொண்டது முட்டாள்தனம்.

லக்கியின் தளத்தை அந்த ஒரு பதிவிற்காக நீக்கியது சரிதான் என்றால், இன்னொருபுறம் பெயரிலியின் தளத்தையும் அதே காரணத்திற்காக நீக்கியிருக்க வேண்டும். அதுதான் நியாயம்..

அப்படியானால் அந்த வீராங்கனையின் பதிவு..?

அதை எப்போதோ தூக்கியெறிந்திருக்க வேண்டும்.. அந்தமட்டும் நான் சந்தோஷப்படுகிறேன்..

ஒரு பெண்ணால் பதிவர்களுக்குள் எத்தனை சண்டைகள்..? எத்தனை பிரிவுகள்..? எத்தனை வேதனைகள்..? தாங்காதுடா சாமி..

கேள்வி : ஓசை செல்லா தமிழ்மணத்திலிருந்து விலகி விட்டாரே..?

பதில் : இதற்கும் அந்த ‘கூடா நட்பு’தான் காரணம்..
அப்படியென்னதான் கூடிப் பேசி திராவிடத்தைத் தூக்கி வளர்க்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ராத்திரி தூங்கி காலையில் உயிரோடு எழுவோமா என்பதே உறுதிப்படுத்தப்படாத நிகழ்வு.

வாழ்க்கையே அந்த ஓட்டத்தில் இருக்க.. இருக்கின்றவரையில் தமிழ் மொழியை அடுத்தக் கட்டத் தலைமுறைக்குக் கொண்டு போகும் மகத்தான பணியில் நாம் இருக்கின்றபோது இது போன்ற விளம்பர அல்பத்தனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி.. நம்முடைய நேரத்தை வீணாக்குவது செல்லா போன்ற துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு நல்லதல்ல..

அவர் தமிழ்மணத்தை விட்டு விலகியது உணர்ச்சிப் பெருக்கில் எடுத்த முடிவாக இருக்கலாம். ஆனால் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கேள்வி : மகரநெடுங்குழைநாதனுடனான உங்களது நட்பு இப்போது எப்படி உள்ளது?

பதில் : ‘தளபதி’ படம் பார்த்தீர்களா..? அதில் ராஜாஜி மண்டபத்து படிக்கட்டுகளில் மம்மூட்டி, அம்ரீஷ்பூரியுடன் பேசுவார் பாருங்கள்.. அது போன்று பேச வேண்டிய கட்டாயத்துடன் இருக்கிறேன். நேரில் பார்த்தால் அதைத்தான் பேசுவேன்.

கேள்வி : இந்த மாதத்தில் நல்ல விஷயங்கள் எதையாவது செய்திருக்கிறீர்களா..?

பதில் : ஓ. உண்டே.. புதிதாக வலைப்பதிய வந்த பதிவர்கள் மூன்று பேர் எனக்கு தொலைபேசி செய்து எனது எழுத்து பற்றி பேசினார்கள்.

அப்படியே கப்பென்று அவர்களுக்கு வலைவீசிப் பிடித்து, அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.

அடுத்த நாளே அவர்களிடமிருந்து போன்.. ‘காப்பாத்திட்ட தெய்வமே..’ என்று.. இது எப்படியிருக்கு..?

கேள்வி : இதுக்கு முந்தின கேள்விக்கும், அதுக்கும் முந்தின கேள்விக்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா..?

பதில் : எனக்குத் தெரியாது..

கேள்வி : ‘வலையுலக தாதா’ எப்படியிருக்கிறார்..?

பதில் : அப்படியேதான் இருக்கிறார். முகத்தில் கொஞ்சம் தேஜஸ் கூடியிருக்கிறதாம். பர்ஸின் 'கனம்' சமீபகாலமாக அதிகரித்துள்ளதுதான் இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள் சிலர்.

போன் பேசும்போதெல்லாம் ஏதாவது ஒரு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறார். கேட்டால் “வெயிட்டைக் குறைக்கிறேன்” என்கிறார். ஆனால் “பஸ்ஸ¤க்கு வெயிட் ஏறுகிறதே..” என்று கேட்டால் “ங்கொய்யால..” என்று பஸ்ஸில் இருந்தே கத்துகிறார்.

நண்பர்களை நேரில் அழைத்து காபி, டீ, வடை, பஜ்ஜி வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை இப்போது அடியோடு நிறுத்திவிட்டாராம்.. நிறைய பேர் ‘ஆட்டே’ போடுகிறார்கள் என்று கண்ணைக் கசக்குகிறாராம்.

‘மப்பு மாப்ளை’ வந்தால் மட்டுமே கூடப்போய் தோள் மேல் கை போட்டு 10 ரூபாய் காபி கடையில், கால் மேல் கால் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

அதே ‘மப்பு மாப்ளை’ டாஸ்மாக் கடைக்குப் போகும்போது மட்டும் “எனக்கு வயித்த வலிக்குது” என்று சொல்லி எஸ்கேப்பாகிறாராம்.

இரவு நேரங்களில் மட்டும், “அமாவாசை’ இரவினிலே நிலவது உதிப்பதில்லை..” என்று யாரையோ நினைத்து ஏகாந்தம் பாடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

கேள்வி : அ.தி.மு.க. பெருந்தலை ஜோதி, தி.மு.க.வில் சேர்ந்தது பற்றி..?

பதில் : அரசியல் கட்சிகள் என்ன பொதுநல சேவையா செய்கிறார்கள். தனியார் கம்பெனி மாதிரிதான்.. இங்கே சம்பளம் கம்மி என்றால் கூட யார் கொடுக்கிறார்களோ அங்கே போய்விட வேண்டியதுதான்..

கேள்வி : சசிகலா வகையறாக்கள் எப்படி இன்கம்டாக்ஸ் கட்டுகிறார்கள் என்று கேட்டுள்ளாரே..?

பதில் : இதே கேள்வியை போயஸ் கார்டனில் இருக்கும்போது அவர்களிடமே கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும். இப்போது யார் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து இப்படி கொஸ்டீன் கேக்குறார்ன்னு தெரியல..

கேள்வி : சாருநிவேதிதாவின் ஈ-மெயில் ஐடி களவாடப்பட்டு நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பற்றி..?

பதில் : மனுஷன் பாவம் நொந்து போயிருக்கிறார்.

அவரோட வெப்சைட்லேயே ‘எனக்கு ஹெல்ப் பண்ணுங்க’ன்னு எழுதி பேங்க் நம்பரையெல்லாம் போட்டிருக்கார்.. அப்பவெல்லாம் கண்டுக்காதவங்க, எவனோ ஒருத்தன் இன்னிக்கு எழுதினான்னவுடனேயே 500, 600 டாலர்ன்னு அனுப்புனதை நினைச்சு மனசு வெடிச்சுப் போயிருக்கார்.

“நான் கேட்டப்பல்லாம் எங்கய்யா போயிருந்தாங்க..”ன்னு நொந்து போய் சொல்லிக்கிட்டிருக்கார்..

இதுக்கெல்லாம் காரணம்னு சமீப காலமா பிரபலமான ஒரு நாஞ்சில் நாட்டு எழுத்தாளரை கை காட்டி சொல்றாரு..

வெகுவிரைவில் ஏதாவதொரு இலக்கியக் கூட்டத்தில் ‘முதல்முறையாக சாரு நிவேதிதா அடி கொடுத்தார்’னு செய்தி வந்தாலும் வரும்.. எதிர்பாருங்கள்..

கேள்வி : நடிகர் சங்கத்தில் ஜெயமோகனை பொளந்து கட்டீட்டாங்களாமே..?

பதில் : பின்ன.. மனுஷன் வந்திருந்து அர்ச்சனைகளைக் கேட்டிருந்தா.. தமிழ்நாட்டைவிட்டு கேரளாவுக்கே ஓடிப் போயிருப்பார்.. அம்புட்டு அர்ச்சனை மழை..

சாம்பிளுக்கு கேட்டுக்குங்க..

மனோரமா :

"சிவாஜி, எம்.ஜி.ஆர். இருவரும் தமிழ் சினிமாவின் கலை பொக்கிஷங்கள். அவர்களைப் போய் ஒரு நாய் விஷம் கக்கியிருக்கிறது. அவனை சும்மா விடலாமா? அப்பன் பெயர் தெரியாத பயல் அந்த ஜெயமோகன். அதுதான் அப்படி எழுதத் துணிந்திருக்கிறான். அவனுடைய பொறப்பே தவறாக இருந்திருக்கிறது. இவனை சும்மா விடக்கூடாது.."

சத்யராஜ் :

"மாமா(ராதாரவியைப் பார்த்து) நீ சட்டம் படித்திருக்கிறாய்தானே..? பேசுவதற்கும், எழுதுவதற்கும் சட்டத்தில் உரிமை இருக்கும்போது ஒருத்தன் முகத்தில் காறித் துப்புவதற்கு உரிமை இருக்கிறதா..? (ராதாரவி 'இல்லை' என்று தலையாட்டினார்) இருந்தா சொல்.. அவன் முகத்தில் காறி துப்ப வேண்டும் போலிருக்கிறது. யார் அந்த ஜெயமோகன். எவனென்றே தெரியவில்லை. தெரியாத ஒருத்தனை எப்படி திட்டுவதென்றே தெரியவில்லை. ஆனாலும் அவனை சும்மாவிட மனசு ஏற்கவில்லை.."

ராதாரவி :

"சிவாஜியும், எம்.ஜி.ஆரும் நம் கலைத்துறையின் தலைமகன்கள். அவர்களை கொச்சைப்படுத்தியுள்ள அவனை எப்படித் தண்டித்தாலும் என் மனசு ஆறாது. நிக்க வச்சு அந்தப் பயலை உதைக்க வேண்டும். காலில் போட்டிருக்கிற செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்தணும் போலிருக்கிறது. அந்தப் பொறம்போக்கு எழுதியதை இங்குள்ள பத்திரிகையும் எடுத்துப் போட்டு எம்.ஜி.ஆர்., சிவாஜியின் புகழை மேலும் அசிங்கப்படுத்தியிருக்கிறது."

போதுமா..?

கேள்வி : இனி சினிமாத் துறைக்குள் ஜெயமோகன் ஊடுறுவ முடியுமா?

பதில் : இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நடக்கும். காரணம் டெக்னீஷியன் யூனியனும், லைட்மேன் யூனியனும் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த இரு சங்கத்திலும்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரின் ஆதரவாளர்களும், அவர்களால் வளர்க்கப்பட்ட குடும்பத்தினரும் அதிகம் இருக்கிறார்கள். அதுதான் காரணம்.

கேள்வி : ஆ.வி.ல என்ன சொல்றாங்க..

பதில் : இப்படியெல்லாம் நடக்கும்னு அவங்களுக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்.. நேரம் சரியில்லை.. மாட்டிக்கிட்டாங்க.. மன்னிப்பு கேட்டு லெட்டர் எழுதிக் கொடுத்திட்டு அவங்களோட படத்தோட ஷ¥ட்டிங்கை நடத்த ஆரம்பிச்சிட்டாங்க.. இல்லாட்டி முடியுமா? போட்ட பணத்தை எடுக்க வேண்டாம்.

கேள்வி : பிரச்சனை முடிஞ்சிருச்சா இல்லையா..?

பதில் : யார் சொன்னது..? ஆ.வி.க்குன்னு இல்ல, சென்னை பத்திரிகையாளர்களுக்கே புரியாத புதிர் ஒண்ணும் இந்த விஷயத்துல இருக்கு.. இந்த மேட்டரை ஆ.வி.ல எழுதினது ‘கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..

பத்திரிகையோட ஓனரும், எம்.டி.யும் சேர்ந்து வருகைப் பதிவேட்டை தலைகீழா புரட்டிப் பாத்துட்டாங்களாம்.. ம்ஹ¤ம்.. அப்படியொரு பேர், வாட்ச்மேன் லிஸ்ட்லகூட இல்லை.. விசாரணை கமிஷன் வைச்சுத்தான் அந்தாள் யாருன்னு கண்டுபிடிக்கணும்னு சொல்றாங்க..

கேள்வி : உங்களுடைய இன்னொரு தளத்தில் புதிய இடுகைகள் எதுவும் இல்லையே.. ஏன்.. கதைப் பஞ்சமா..?

பதில் : கதைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த இடத்தில் இப்போது புதிய நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். அதனால் உள்ளே நுழைந்து காப்பி, பேஸ்ட் செய்வதற்கு இப்போது சிக்கல் எழுந்துள்ளதாம்.. இதுதான் காரணம்.

கேள்வி : வலையுலக வசிஷ்ட மாமுனி திடீரென்று நிஜமாகவே காட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொல்லி விட்டாராமே..

பதில் : அவர் சொல்லிவிட்டால் போதுமா..? விடப் போவது யார்..? இப்போதே அவர் தலையில் ஸ்டிக்கர்களை விற்கும் பொறுப்பை சுமத்தியிருப்பதாகத் தெரிகிறது. மனிதர் அதற்கே தத்தளிக்கிறார்..

மார்ச்-30 காந்தி சிலையருகே கூடப் போகும் பதிவர்களின் பாக்கெட்டில் இருந்து கணிசமாக தொகையை தானே கையைவிட்டு அள்ளப் போவதாக சபதம் செய்திருக்கிறார். ஜாக்கிரதை பதிவர்களே..

கேள்வி : பெங்களூர் பதிவர் ஏன் அதிகம் பதிவு எழுதாமல் இருக்கிறார்..?

பதில் : அலுவலகத்தில் பியூஸை பிடுங்கிவிட்டார்களாம். வீட்டிலும் புதுசா வந்த வீட்டுக்காரம்மாவும் அதுக்குத் தடா போட்டுட்டாங்களாம்.. மொதல்ல பொழப்ப பாருங்கன்னு அட்வைஸ் பண்றாங்களாம்.. அதுதான்..

கேள்வி : உங்களுடைய பதிவுகள் எல்லாமே ரொம்ப நீளமா இருக்குன்னு நிறைய பேர் கம்ப்ளையிண்ட் பண்றாங்களே..

பதில் : அதெல்லாம் மவுஸை கிளிக் பண்றதுக்கு சோம்பேறித்தனப்படும் பதிவர்கள் சொல்வது..

இப்போதெல்லாம் நானே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய பேர் புதுசா, புதுசா எழுத ஆரம்பிச்சிட்டாங்க.. சமீபமா நம்ம முட்டம் அண்ணாச்சி எழுதித் தள்ளிருக்காரு.. போய் படிச்சுப் பாருங்க..

கேள்வி : வளர்மதி-சுகுணா திவாகர் மோதல் பற்றி..?

பதில் : இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இருவருமே இவ்வளவு ஆக்ரோஷமாக எழுதுவதற்கு காரணம் இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் தனித்து விடப்பட்டதுதான்..

ஒரே ஒரு முறை எங்காவது நேரில் சந்தித்து தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக கொட்டி விட்டார்களானால் அவர்களுடைய ஆவேசம் நிச்சயம் அடங்கிவிடும். அப்படியொரு சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிட்டும்வரையில் இந்த தர்மசங்கடம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள். இவர்களுடைய எழுத்து நமது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கண்டிப்பாக தேவை..

இப்போதே இந்த இருவரையும் விழாவுக்கு அழைத்தால் முதல் நாள் ஒருவரும், இரண்டாம் நாள் ஒருவருமாக கலந்து கொள்ள வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் ஒரு திரைப்படத் திறனாய்வுக் கூட்டத்தில் இப்படித்தான் நடந்ததாக எனக்கு ஒரு செய்தி கிடைத்தது.

சென்ற ஆகஸ்ட்-20 வலைப்பதிவு கூட்டத்தில்கூட வளர்மதி வந்து சென்ற பிறகுதான் சுகுணா வந்தார்.

விட்டு விடுங்கள்.. காலம் அவர்களின் காயங்களை ஆறப்படுத்தி ஒன்று சேர்க்கும்.. அதுவரைக்கும் நாம் பொறுத்திருப்போம்.

கேள்வி : வாத்தியார் சுஜாதா பற்றிய சுகுணா திவாகரின் கட்டுரையைப் படித்தீர்களா? எதிர்வினை..

பதில் : ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்தீர்களா..? அதில் பெண் பார்க்கும் படலத்தின் இறுதியில் அப்பா எஸ்.வி.சுப்பையா ‘ஒரே ஒரு வார்த்தை பேசிக்கிறேன்மா..’ என்று மகள்களிடம் பெர்மிஷன் கேட்டு கடைசியில் ஒரு வார்த்தையை வீசுவார்.. அது மாதிரி நானும் ஒரு பெளன்ஸரை எனக்குள் வைத்திருக்கிறேன்.. மனுஷன் நேர்ல சிக்கட்டும்.. பேசிக்கிறேன்.

கேள்வி : வரப் போற மார்ச்-30 வலைப்பதிவர் சந்திப்பில் என்ன செய்யப் போறீங்க..?

பதில் : குட் கொஸ்டீன்.. ஒரு தீர்மானம் கொண்டு வரப் போறேன்..

சென்னையில் இருந்து கொண்டே முகத்தைக் காட்டாமல், போன் நம்பரைக்கூட சொல்லாமல், யாருக்கும் தெரியாமல்.. பெயரை மட்டும் போட்டுக் கொண்டு, எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சிலரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறேன்.

‘அதிரடிக்கார மச்சான்’. ‘தெய்வ மச்சான்’, ‘பைத்தியக்காரனின் லக்கிலுக் பாசம்’.. இன்ன பிற பற்றி.. அவர்களே மறந்து தொலையப் போகும் பின்னாளில் பேசுவோம். அப்போதுதான் நமக்கும் பொழுது போகும்.. தமிழ்மணத்திற்கும் புதிய விஷயம் ஒன்று கிடைக்கும்.

அதுவரையில்.. குட்பை..

54 comments:

Anonymous said...

அண்ணா...

சூப்பர் சூப்பர் சூப்பர்

இது முதன்முதலாக நான் அனானியாக போடும் கமெண்ட்...

வாழ்க நீ எம்மான்

லக்கிலுக் said...

//இந்த ‘வீராங்கனை’யின் ‘சித்து’ விளையாட்டு, இரயாகரன், தமிழரங்கம் என்று சுற்ற ஆரம்பித்து கடைசியில் பெயரிலி ‘கார்ட்டூன் கேரக்டர்’ என்று கிண்டலடிக்கும்விதத்தில் எழுதி, அது லக்கியின் கை வண்ணத்தில் ‘தூத்தேறி.. முண்டம்..’ என்கின்றவரையில் போனது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம்.//

எண்ணன்னே! நீங்க கூட இவ்ளோ லைட்டா சொல்றீங்க. பெயரிலியின் என் மீதான விமர்சனத்தை/விஷத்தை படித்தீர்களா இல்லையா?

“அந்து மணிக்கு மாமா வேலை பார்ப்பவன்”

- இந்த ரீதியான விமர்சனத்தை உங்கள் மீது வைத்தால் உங்கள் ஈகோ நிச்சயமாக சிலிர்த்தெழாதா?

அந்த ஆள் என்ன விமர்சனம் எழுதினாரோ அதை அப்படியே காப்பி & பேஸ்ட்டு செய்து பெயர்களை மற்றும் மாற்றினேன். அதுவே அவ்வளவு பெரிய குற்றம் என்றால் ஒரிஜினலாக அதை சிந்தித்த பெயரிலியை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா?

தமிழ்மண நிர்வாகிகள் தான் பாவம். சந்தர்ப்ப காரணங்களால் பூசி மெழுகிறார்கள் என்றால் நீங்களுமா? :-(

இப்பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டாலும் சரி, வெளியிடாவிட்டாலும் சரி. சொல்லவேண்டும் என்று தோன்றியது, சொன்னேன்.

Osai Chella said...

adapaavi? nee eppo enakku phone pannina?

வவ்வால் said...

உண்மைத்தமிழர்,

என்னத்திடீர்னு வீரத்தமிழர் ஆகிட்டிங்க, சூடும் , சுவையுமா இருக்கு பதிவு!

//ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.//

ஏன் வடைய ஊசியால குத்துனிங்க, இல்லை நீங்க டாக்டரா, வடைக்கு உடம்பு சரி இல்லைனூ ஊசிப்போட :-))


பதிவுகள் நீக்கம் குறித்து கிட்டத்தட்ட நானும் இப்படிப்பட்ட கருத்தினை தான் தெரிவித்திருந்தேன்.

ஆனால் அம்மணிப்பதிவுக்கும் நீக்கம் தேவைனு சொல்லவில்லை.அதை லூஸ்ல விட்டாச்சு!

//‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.
//

என் ஜாய்னு சொன்ன மவராசன் ஒரு பொண்ணுக்கும் ஏற்பாடு தந்திருக்கலாம்ல :-))

//அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//

குலம் கெடுக்க வந்த கோடாரிக்காம்பே என்று சொல்லனும் போல இருக்கு, எதாவது பழைய கலைஞர் வசனம் எழுதிய படத்த பார்த்துட்டு வந்து கச்சேரிய வச்சுக்கிறேன் :-))

யாராவது புதுசா, இளசா பதிவுக்கு வந்தா தப்பி தவறி நம்ம பக்கம் வருவாங்க அதையும் கெடுத்துப்புட்டு நல்ல காரியம்னு வேற சொல்லிகிறிங்களே!

//கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..//

ச்சே வலைப்பதிவ விட மோசமா இருக்கே ஆ.வி எவனோ கிஷோர்ங்கிற பேர்ல அதர் ஆப்ஷனில் போய் கட்டுரையே எழுதிட்டானே :-))

//வலையுலக வசிஷ்ட மாமுனி//

இது யாருப்பா அது புச்சா கீது பட்டமெல்லாம்?

//இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.//

அதுக்கு அவங்க ரெண்டு பேரும் கூரியரில் எழுதி அனுப்பிக்கனும் என்னாத்துக்கு வலைப்பதிவில வந்து கூவிக்கினு இருக்கணும்?

//இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள்.//

என்னக்கொடுமை சார் இது!

ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுங்க!

//எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சிலரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறேன்.//

அப்படி தீர்மானம் போட்டு கண்டுப்பிடிச்சா எனக்கும் அது யார்னு சொல்லிடுங்க, தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன் :-))

ச்சே உங்க பதிவை படிச்சே களைத்துப்போய்ட்டேன், இதுல பின்னூட்டம் போட்டு இன்னும் களைச்சுப்போய்ட்டேன் இதுக்கே ஒரு ஆஃப் அடிக்கணும்டா சாமி!

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
எண்ணன்னே! நீங்க கூட இவ்ளோ லைட்டா சொல்றீங்க. பெயரிலியின் என் மீதான விமர்சனத்தை/விஷத்தை படித்தீர்களா இல்லையா? “அந்துமணிக்கு மாமா வேலை பார்ப்பவன்” - இந்த ரீதியான விமர்சனத்தை உங்கள் மீது வைத்தால் உங்கள் ஈகோ நிச்சயமாக சிலிர்த்தெழாதா? அந்த ஆள் என்ன விமர்சனம் எழுதினாரோ அதை அப்படியே காப்பி & பேஸ்ட்டு செய்து பெயர்களை மற்றும் மாற்றினேன். அதுவே அவ்வளவு பெரிய குற்றம் என்றால் ஒரிஜினலாக அதை சிந்தித்த பெயரிலியை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா? தமிழ்மண நிர்வாகிகள்தான் பாவம். சந்தர்ப்ப காரணங்களால் பூசி மெழுகிறார்கள் என்றால் நீங்களுமா? :-( இப்பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டாலும் சரி, வெளியிடாவிட்டாலும் சரி. சொல்லவேண்டும் என்று தோன்றியது, சொன்னேன்.//

தம்பீபீபீபீ..

நான் அதையும் படித்தேன். பெயரிலி எழுதியதும், நீ எழுதியதும் இரண்டுமே ஒரு பிரச்சினையின் விளைவால் எழுந்த வாக்குவாதங்கள்..

ஆனால் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று யோசி.. அது உனக்குத் தேவைதானா என்பதுதான் எனது ஆதங்கம்..

இப்போதுகூட அதேபோல்தான் நீ யோசிக்கிறாய்.. 'செருப்பால் அடித்திருக்க வேண்டாமா?' என்ற வார்த்தைகளெல்லாம் எந்தச் சந்தர்பத்திலும் தவிர்க்கப்பட்டே ஆக வேண்டும்.

நான் எதையும் பூசி மெழுகவில்லை.. உன்னை நீக்கியது சரியெனில், பெயரிலியையும் நீக்கித்தான் ஆக வேண்டும் என்று உறுதியுடன் இப்போதும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு சொல்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
அண்ணா... சூப்பர் சூப்பர் சூப்பர் இது முதன்முதலாக நான் அனானியாக போடும் கமெண்ட்... வாழ்க நீ எம்மான்//

முதல் அனானி கமெண்ட்டே எனக்கா..? அப்ப உங்களோட வலையுலக வாழ்க்கை ஓஹோன்னு வரப் போகுதுன்னு இப்பவே வாழ்த்திர்றேன்..

SP.VR. SUBBIAH said...

:-))))))))))

உண்மைத்தமிழன் said...

//OSAI Chella said...
adapaavi? nee eppo enakku phone pannina?//

ம்.. நீங்க போனை கைல வைச்சிருந்து.. நான் போன் பண்ணி.. ரிங் அடிச்சு.. நீங்க அதை ஆன் பண்ணி 'ஹலோ'ன்னு சொன்னப்போ நான் பேசினேன்..

Athisha said...

//
வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.
//

அதெல்லாம் எனக்கு கூட சொல்லி குடுக்கறீங்களாணா

30ம் தேதி மெரினால சந்திப்பு உங்கள சந்திக்க ஆவலா இருக்கேன்

லக்கிலுக் said...

///ஆனால் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று யோசி.. ////

பிரச்சினைக்கு மூலகாரணம் என்று பெயரிலி கண்டுபிடித்திருப்பது “இரவுக்கழுகு” என்ற வலைப்பதிவு.

எந்த கபோதியோ எழுதிய எந்த பதிவுக்கோ என்னையும், ரவியையும் ரொம்பநாளாக பெயரிலி திட்டிக் கொண்டிருந்தார். அவர் என்ன திட்டுகிறார் என்பதை கூட நாம் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு அவரது மொழிநடை மேன்மையாக இருக்கும் :-) அதனால் இவ்வளவு நாட்களாக கண்டுகொள்ளாமல் இருந்தோம்.

கடைசியாகப் பார்த்தால் அந்த இரவுக்கழுகே பெயரிலி தானாம். பெயரிலியே அதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ என்னவோ?

தமிழச்சியின் யோனி பதிவுகள் குறித்து தமிழ்மணத்துக்கு அதிகமுறை முக்கோணம் அழுத்தி புகார் செய்தவன் நான் தான். இது தோழர் தமிழச்சிக்கும் தெரியும். அதனால் தான் உங்களுக்கு ‘காயடிக்கப்பட்ட காளை' பட்டம் கொடுத்தது போல எனக்கு ‘யோனி கொண்டான்' பட்டத்தை தோழர் கொடுத்தார். எனவே தோழர் தமிழச்சியுடனான என்னுடைய நட்பு மற்றும் கும்பி தான் பெயரிலி என்னை திட்ட காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தவறு.

யாரையாவது திட்ட பெயரிலிக்கு காரணமெல்லாம் தேவையே இல்லை. ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை? ”அது தான் பெயரிலி!” :-)))))))))

உண்மைத்தமிழன் said...

///வவ்வால் said...
உண்மைத்தமிழர்,
என்னத்திடீர்னு வீரத்தமிழர் ஆகிட்டிங்க, சூடும் , சுவையுமா இருக்கு பதிவு!//

நன்றி..

//ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.//
ஏன் வடைய ஊசியால குத்துனிங்க, இல்லை நீங்க டாக்டரா, வடைக்கு உடம்பு சரி இல்லைனூ ஊசிப்போட:-))///

ம்.. நக்கலு..

//பதிவுகள் நீக்கம் குறித்து கிட்டத்தட்ட நானும் இப்படிப்பட்ட கருத்தினை தான் தெரிவித்திருந்தேன். ஆனால் அம்மணிப் பதிவுக்கும் நீக்கம் தேவைனு சொல்லவில்லை. அதை லூஸ்ல விட்டாச்சு!//

நான் விடமுடியாது..

//‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.//
என் ஜாய்னு சொன்ன மவராசன் ஒரு பொண்ணுக்கும் ஏற்பாடு தந்திருக்கலாம்ல :-))///

இதுக்குத்தான் நான் சொல்லிருக்கேன்.. தெரியாத ஆளோட கமெண்ட்ஸையெல்லாம் பப்ளிஷ் பண்ணணுமான்னு..?

//அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//
குலம் கெடுக்க வந்த கோடாரிக்காம்பே என்று சொல்லனும் போல இருக்கு, எதாவது பழைய கலைஞர் வசனம் எழுதிய படத்த பார்த்துட்டு வந்து கச்சேரிய வச்சுக்கிறேன் :-))
யாராவது புதுசா, இளசா பதிவுக்கு வந்தா தப்பி தவறி நம்ம பக்கம் வருவாங்க அதையும் கெடுத்துப்புட்டு நல்ல காரியம்னு வேற சொல்லிகிறிங்களே!///

முக்கியமா உங்களைப் பத்தியும் சொல்லியிருக்கேன்.. போய் படிக்கிறதோ நிறுத்திக்குங்க.. அரைகுறையா எதையும் சொல்லிராதீங்க.. கட்டி மேஞ்சிருவாருன்னு.. கரீக்ட்டுத்தான..?

///கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..//
ச்சே வலைப்பதிவ விட மோசமா இருக்கே ஆ.வி எவனோ கிஷோர்ங்கிற பேர்ல அதர் ஆப்ஷனில் போய் கட்டுரையே எழுதிட்டானே:-))///

அப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க.. ஜெயமோகனே அந்த கிஷோரை தேடிக்கிட்டிருக்கார்..

///வலையுலக வசிஷ்ட மாமுனி//
இது யாருப்பா அது புச்சா கீது பட்டமெல்லாம்?///

கூட்டத்துக்கு வாங்க காட்டுறேன்..

///இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.//
அதுக்கு அவங்க ரெண்டு பேரும் கூரியரில் எழுதி அனுப்பிக்கனும..் என்னாத்துக்கு வலைப்பதிவில வந்து கூவிக்கினு இருக்கணும்?///

யாராவது ஒருத்தர் நிறுத்தினா இஇன்னொருத்தரும் நிறுத்திருவார்.. இப்ப குழப்பமே யார் முதல்ல நிறுத்துறது அப்படீங்கறதுதான்..

///இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள்.//
என்னக ்கொடுமை சார் இது! ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுங்க!///

இருக்கட்டும்.. முகம் தெரியாத ஒரு ஆளு சொல்றதைவிட நல்லாத் தெரிஞ்ச நான் சொல்றது எல்லாருக்கும் உண்மையாகத்தான் இருக்குமுங்க சாமி..

//எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சிலரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறேன்.//
அப்படி தீர்மானம் போட்டு கண்டுப்பிடிச்சா எனக்கும் அது யார்னு சொல்லிடுங்க, தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன் :-))///

இதையும் நான் கை வலிக்க டைப் செஞ்சாத்தான் தெரியுமாக்கும்..

//ச்சே உங்க பதிவை படிச்சே களைத்துப ்போய்ட்டேன், இதுல பின்னூட்டம் போட்டு இன்னும் களைச்சுப் போய்ட்டேன் இதுக்கே ஒரு ஆஃப் அடிக்கணும்டா சாமி!//

போய் அடி சாமி.. ஏப்ரல்-1-லருந்து டெய்லி புல் அடிக்க வேண்டி வரும்னு நினைக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//SP.VR. SUBBIAH said...
:-))))))))))//

வாத்தியாரே.. புரிஞ்சது.. நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

///அதிஷா said...
//வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//
அதெல்லாம் எனக்கு கூட சொல்லி குடுக்கறீங்களாணா. 30ம் தேதி மெரினால சந்திப்பு உங்கள சந்திக்க ஆவலா இருக்கேன்///

கண்டிப்பா.. பீஸ்கூட வேண்டாம். நான் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன். ஆனா நான் சொல்றதை மட்டும் கரெக்ட்டா பாலோ பண்ணணும்.. அவ்ளோதான்.. மெரீனாவில் சந்திப்போம்..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
இம்சை said...

27-03-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நேரம்தான் இல்லை..

அனைத்திற்கும் நேரம் ஒதுக்கி எழுதுவதற்குள் காலம் கடந்து விஷயம், ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.

இடையில் படிப்பதற்கு வராத சோம்பேறித்தனம், தட்டச்சு செய்வதற்கு வந்து தொலைக்கிறது..

எழுதலாம் எனில் எத்தனை பேருக்குத்தான் ஒரே சமயத்தில் பதில் சொல்வது என்று அயர்ச்சி ஏற்படுகிறது.

சரி.. பதிலைத்தான் சொல்லித் தொலைவோமே என்றால் எத்தனை முறைதான் ஒரே பதிலை சொல்லிக் கொண்டேயிருப்பது என்று வெறுப்பாக உள்ளது.

அதுதான் ஒரு பத்து நாளாக அமைதி காத்து.. வேடிக்கை பார்த்து.. காத்து வாங்கி.. மூச்சு விட்டு.. முனங்கி, எழுந்து பார்ப்பதற்குள் தமிழ்மணம் எங்கேயோ போய்விட்டது.

சரி.. ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் வழக்கம்போல் மனம் பேயடித்த குரங்கு போல் உள்ளது.

“ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் ஒரே பதிவுல பதிலை போட்டுட்டு விட்ருங்க. எதுக்கு போயி வீணா டென்ஷனாகுறீங்க..” என்று 'வலையுலக வசிஷ்ட மாமுனி' அட்வைஸ் செய்ததால்.. சரி, நாமும் ஒரு கேள்வி-பதிலை போட்டு அதிலேயே எல்லாத்தையும் கொட்டிட்டு போர்வையைப் போர்த்திக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்..

நான் எல்லாம் இதயே 10 பதிவா போடுவேன் சரி இருங்க மிச்சட்தயும் படிச்சிட்டி வரேன்

Athisha said...

//கண்டிப்பா.. பீஸ்கூட வேண்டாம்//

அண்ணே நீங்க எங்கயோ போய்ட்டிங்கண்ணே .

// நான் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் //

:-)


// நான் சொல்றதை மட்டும் கரெக்ட்டா பாலோ பண்ணணும் //

yes boss :-)))))

இம்சை said...

அப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..?

அண்ணே பதில்ங்கர தலைப்புல நீங்க கேள்வி எல்லாம் கேக்க கூடாது.... நமக்கு தெரியாதா நாம யாருன்னு அதான் அடுத்த மாசம் பூரா நம்ம மாசம் தான்...

இம்சை said...

இன்னும் கல்யாணம்கூட ஆகாத.. அக்மார்க் எலிஜிபிள் பேச்சுலர் நான்.

இதில உள் குத்தா உங்களுக்கு பொண்ணு பாக்க சொல்லறிங்களோ... சரி பாத்திடுவோம்...

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//ஆனால் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று யோசி..//
பிரச்சினைக்கு மூலகாரணம் என்று பெயரிலி கண்டுபிடித்திருப்பது “இரவுக்கழுகு” என்ற வலைப்பதிவு. எந்த கபோதியோ எழுதிய எந்த பதிவுக்கோ என்னையும், ரவியையும் ரொம்ப நாளாக பெயரிலி திட்டிக் கொண்டிருந்தார். அவர் என்ன திட்டுகிறார் என்பதை கூட நாம் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு அவரது மொழிநடை மேன்மையாக இருக்கும் :-) அதனால் இவ்வளவு நாட்களாக கண்டுகொள்ளாமல் இருந்தோம். கடைசியாகப் பார்த்தால் அந்த இரவுக்கழுகே பெயரிலிதானாம். பெயரிலியே அதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ என்னவோ?//

தம்பீ.. இரவுக் கழுகு என்ற கமெண்ட்டையொட்டி பெயரிலியும் மற்ற ஈழத்து பதிவர்களும் சர்ச்சையைக் கிளப்பியதை படித்தேன். ஆனால் நீ சொல்வதைப் போல் இதற்கு முன்பேயே உங்கள் இருவருக்கும் இடையில் இது தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை நான் அறியேன்.

நான் நினைத்த முதல் தகராறு.. பெயரிலியின் 'சுஜாதா' பற்றிய பதிவில் நீ எழுதிய சாதாரண காமெடி கமெண்ட்டில் ஆரம்பித்துதான் என்று நினைத்தேன்.

//தமிழச்சியின் யோனி பதிவுகள் குறித்து தமிழ்மணத்துக்கு அதிக முறை முக்கோணம் அழுத்தி புகார் செய்தவன் நானதான். இது தோழர் தமிழச்சிக்கும் தெரியும். அதனாலதான் உங்களுக்கு ‘காயடிக்கப்பட்ட காளை' பட்டம் கொடுத்தது போல எனக்கு ‘யோனி கொண்டான்' பட்டத்தை தோழர் கொடுத்தார். எனவே தோழர் தமிழச்சியுடனான என்னுடைய நட்பு மற்றும் கும்பிதான் பெயரிலி என்னை திட்ட காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தவறு.//

பெயரிலிக்கு இப்படியொரு மேடை அமைத்துக் கொடுத்தது உனது தோழர் தமிழச்சிதான் என்பதில் எனக்கு ஐயமில்லை. பெயரிலி இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று நீ சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.. முதல் மோதலோ.. அல்லது கடைசி மோதலோ வார்த்தைப் பிரயோகத்தில் இருவருமே எல்லை மீறிவிட்டீர்கள் என்பது வருத்தமானது ராசா..

தமிழச்சி பற்றி அதிக முறை புகார் கொடுத்துவிட்டு அதிகமான கமெண்ட்ஸ்களை போட்டதையும், அதிக முறை கும்மியடித்ததையும் எந்தவிதத்தில் நீ நியாயப்படுத்துவாய்..?

வெளியேற்று என்று பகிரங்கமாக ஒரு பதிவைப் போட்டு போம்மா என்று சொல்லியிருக்கலாம்.. அதைவிட்டுவிட்டு இஇந்தா வாங்கிக்க. என்று 100, 150 என்று சொல்லி வைத்து கும்மியடித்ததை நான் எங்கே போய் சொல்வது..?

எல்லா விஷயத்திலும் நேராகவே நாம் நடப்போம். நமக்கு நடப்பதும் நியாயமானதாகவே நடக்கும். நீ இந்த விஷயத்தில் சரியாக நடந்திருந்தாலே அந்தப் பெண்ணுக்கு புறமுதுகைக் காட்டியிருந்தாலே அய்யனாரின் பதிவில் வந்த அந்த கமெண்ட்கூட பப்ளிஷ் ஆயிருக்காது. அதனால் அவருக்கும் தொல்லை.. அவரையும் போய் ரவுண்டு கட்டிவிட்டீர்கள்.. அவர் என்ன செய்வார் பாவம்..? இப்படி கமெண்ட்டை பப்ளிஷ் செய்ததற்காவே ஒவ்வொருவரும் நமக்கு எதிரியானவர் எனில் பதிவுலகில் ஒருவர்கூட மிஞ்ச முடியாது.

//யாரையாவது திட்ட பெயரிலிக்கு காரணமெல்லாம் தேவையே இல்லை. ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை? ”அதுதான் பெயரிலி!” :-)))))))))//

அவருடைய சுஜாதா பதிவைத்தானே சொல்கிறாய்.. அதை ஏன் திட்டுதல் என்ற பார்வையில் எடுக்கிறாய்..? அவர் என்ன சொல்ல வந்தார் என்பது எனக்கு இன்றுவரையிலும் புரியவில்லை.. திட்டுவதைக்கூட புரியாத மொழியில் சொல்வதை இவர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வோம்.

இம்சை said...

அடுத்த நாளே அவர்களிடமிருந்து போன்.. ‘காப்பாத்திட்ட தெய்வமே..’ என்று.. இது எப்படியிருக்கு..?

இதெல்லாம் எங்களுக்கும் கொஞ்சம் கிளாஸ் எடுக்கரது... இப்ப கூட எங்க போகனும் எங்க கும்மி அடிக்கனும் ஒன்னும் தெரிய மாட்டேக்குது....

அண்ணே மூச்சி வாங்குது ஒரு மணி நேரமா உங்க பதிவு படிச்சிட்டி இருக்கேன் இன்னும் முடிய மாட்டேங்குது

இம்சை said...

இரவு நேரங்களில் மட்டும், “அமாவாசை’ இரவினிலே நிலவது உதிப்பதில்லை..” என்று யாரையோ நினைத்து ஏகாந்தம் பாடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

ஆகா அவர் பாடி கொலை செஞ்ச பாட்ட தான் கேட்டிருக்கோமே...

Anonymous said...

i think osai is creating a scene such that he quit before they threw him out...osai blog has been removed by TM..this is what people believe

Anonymous said...

Lucky scold other Bloggers Badly in comments. He doesn't know the pain. Now, he is enjoying the pain in another way. Whatever you give, you will take the same or more.

Lucky illathath Tamizhan.
Lucky English word samy, Change your Name ok?

உண்மைத்தமிழன் said...

//இம்சை said...
நான் எல்லாம் இதயே 10 பதிவா போடுவேன. சரி இருங்க மிச்சட்தயும் படிச்சிட்டி வரேன்.//

உங்களோட இந்தச் 'சின்ன' டெக்னிக்தான் எனக்குத் தெரிய மாட்டேங்குது இம்சை..

உண்மைத்தமிழன் said...

///அதிஷா said...
//கண்டிப்பா.. பீஸ்கூட வேண்டாம்//
அண்ணே நீங்க எங்கயோ போய்ட்டிங்கண்ணே///

எங்கேயும் போகல.. இங்கனதான் இருக்கேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் ஓடோடி வருவேன்..

// நான் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்
:-)//

வாய்ல வார்த்தை வராதே.. அதான் தமிழ்நாடு..

//நான் சொல்றதை மட்டும் கரெக்ட்டா பாலோ பண்ணணும்.
yes boss :-)))))//

இது போதும்.. நீங்க இந்த வலையுலகில் குப்பை கொட்டி, கொட்டி அள்ளிப் போடலாம். எந்தப் பிரச்சினையும் எழாது. அதுக்கு நான் கியாரண்டி..

உண்மைத்தமிழன் said...

///இம்சை said...
அப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..?//
அண்ணே பதில்ங்கர தலைப்புல நீங்க கேள்வி எல்லாம் கேக்க கூடாது.... நமக்கு தெரியாதா நாம யாருன்னு அதான் அடுத்த மாசம் பூரா நம்ம மாசம்தான்...///

சுருக்கமா என்னையும் உன்னோட சேர்த்து முட்டாள்ன்ற.. ம்.. எனக்கு நேரம் சரியில்லை.. அதான்..

உண்மைத்தமிழன் said...

///இம்சை said...
இன்னும் கல்யாணம்கூட ஆகாத.. அக்மார்க் எலிஜிபிள் பேச்சுலர் நான்.//
இதில உள் குத்தா உங்களுக்கு பொண்ணு பாக்க சொல்லறிங்களோ... சரி பாத்திடுவோம்...///

அதெப்படிய்யா.. எந்த இடத்துல, எம்புட்டு உள் குத்து வைச்சாலும் கண்டு பிடிச்சுர்றீங்க..?

உண்மைத்தமிழன் said...

//இம்சை said...
அடுத்த நாளே அவர்களிடமிருந்து போன்.. ‘காப்பாத்திட்ட தெய்வமே..’ என்று.. இது எப்படியிருக்கு..?//
இதெல்லாம் எங்களுக்கும் கொஞ்சம் கிளாஸ் எடுக்கரது... இப்பகூட எங்க போகனும் எங்க கும்மி அடிக்கனும் ஒன்னும் தெரிய மாட்டேக்குது....///

போன் பண்ணிட்டு நேர்ல வர்றது.. சொல்லித் தரவா மாட்டேன்..

//அண்ணே மூச்சி வாங்குது ஒரு மணி நேரமா உங்க பதிவு படிச்சிட்டி இருக்கேன் இன்னும் முடிய மாட்டேங்குது.//

தம்பி.. அது முடியாது ராசா.. போய்க்கிட்டேதான் இருக்கும்..

உண்மைத்தமிழன் said...

//இம்சை said...
இரவு நேரங்களில் மட்டும், “அமாவாசை’ இரவினிலே நிலவது உதிப்பதில்லை..” என்று யாரையோ நினைத்து ஏகாந்தம் பாடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.//
ஆகா அவர் பாடி கொலை செஞ்ச பாட்டதான் கேட்டிருக்கோமே...///

எப்ப ராசா.. எங்கன கண்ணு.. எனக்குத் தெரியாதே.. கொஞ்சம் சொல்றது..?

இம்சை said...

சுருக்கமா என்னையும் உன்னோட சேர்த்து முட்டாள்ன்ற.. ம்.. எனக்கு நேரம் சரியில்லை.. அதான்..

அட்டா கோச்சிக்காதிங்க இதெல்லாம் சீரியசா எடுத்துக்ககூடாது....நாம எல்லாம் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்கரான் அப்படின்னு சொல்லப்படர பரம்பரைல வந்தவங்க :)

Athisha said...

//
எங்கேயும் போகல.. இங்கனதான் இருக்கேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் ஓடோடி வருவேன்..
//

இப்படிலாம் கூடவா லோகத்துல மனுஷா இருக்கா....

// வாய்ல வார்த்தை வராதே.. அதான் தமிழ்நாடு.. //

இலவசம் என்று வந்துவிட்டாலே.....!!!!

// இது போதும்.. நீங்க இந்த வலையுலகில் குப்பை கொட்டி, கொட்டி அள்ளிப் போடலாம். எந்தப் பிரச்சினையும் எழாது. அதுக்கு நான் கியாரண்டி..
//

எல்லாம் பெரியவா ( நீங்கதான் ) ஆசீர்வாதம்

Anonymous said...

உண்மைத் தமிழ் அண்ணா!!!

இதோ ஒரு கேள்வி?

' கீழ்த்தரமான அருவருப்பான' தோழியின் பதிவுகளை நீக்க ஆண் பதிவாளர்கள் போராடியது போன்று ஏன் ' பெண் பதிவாளர்கள்' போராட முன்வரவில்லை?


புள்ளிராஜா

கோவி.கண்ணன் said...

உண்மைத்தமிழன்,

நகைச்சுவை உணர்வோடு எழுதி இருக்கிறீர்கள், அங்கங்கே ஊசி சொருக்கி உங்கள் ஆதங்கங்களையும் அழகாக சொல்லி இருக்கிங்க, முதன் முதலில் உங்கள் இடுகையில் பத்தியை ஸ்கிப் பண்ணாமல் படித்த பதிவு இதுதான். மற்றதெல்லாம் மேய்சல் மாதிரி வேகமாக படித்துவிடுவேன்.

Kasi Arumugam said...

உண்மைத்தமிழரே,

உங்க பதிவின் தலைப்புப்பட்டியில் இருக்கும் வாசகத்துக்கேற்ப இருக்கிறது உங்கள் அணுகுமுறை. அதற்கு பாராட்டும் நன்றியும். என் பெயரை ஏன் தேவையில்லாமல் இழுத்து உங்கள் நண்பர்களாலேயே உங்களுக்கு வீண் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள், பாவம். (நீங்களாவது) நல்லா இருங்க:-)

இடுகையின் கருத்துக்களில் ஏற்க்கக்கூடி்யதும் ஏற்கமுடியாததும் இருந்த்தாலும் 'உங்கள் பார்வை அது' என்று கொள்கிறேன். என் கருத்துக்கள் என்னோடு.

இரண்டாம் சொக்கன்...! said...

இன்னொரு நீளமான பதிவு....

தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை.

நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு இப்போது தன்னுடைய ஆள் ஒருவருக்கு பிரச்சினை என்றவுடன் யோசித்தோம், விவாதித்தோம், எதிர்பார்த்தோம், இப்பத்தான் எல்லாருமா சேர்ந்து முடிவெடுத்தோம்னு அறிக்கை கொடுப்பது அபத்தமான அபத்தம்.

தமிழ்மணம் யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான்...ஆனால் தார்மீகம், வெங்காயம்,எழுத்துறிமையை மதிக்கிறோம் என்றெல்லாம் இனியும் அறிக்கை கொடுத்தால் சீரியஸாக எடுத்துக் கொள்ளாது சிரித்துவிட்டு போவதே நலம்....

Anonymous said...

இரண்டாம் சொக்கா!!!!!

"தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை.

நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு"


ஆக, தமிழச்சி அராஜகம் பண்ணினா எங்கிறத ஏத்துக்கிறீங்க. அப்புறம் எதுக்கு நைனா தமிழச்சிக்கு ஜல்ரா பதிவு போட்டீங்க?


புள்ளிராஜா

பொய்யன் said...

antha englishla vantha ANNONYthan peyariliyo

இரண்டாம் சொக்கன்...! said...

புள்ளிராஜா...

நல்ல கேள்வி உங்களுடையது....

முதலில் குற்றம் குறையில்லாத பதிவர் என்று யாராவது ஒருவரை காட்டுங்களேன்....எல்லோர் மீதும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன...

தமிழ் பெண் பதிவர்கள் பெரும்பாலானோர் கலாச்சார எல்லைக்குள்(டாக்டரம்மா,காட்டாறு, மங்கை,தமிழ்நதி..இவர்கள் விதிவிலக்கு) நின்று கொண்டு சமைப்பதும், கோலம் போடுவதையும்,கதை எழுதுவதையும் பதிந்து கொண்டிருக்கும் போது இவர்கள் நினைத்துப் பார்க்க தயங்கும் ஒரு தளத்தில் அசுரத்தனமாய் இயங்கும் ஒரு பெண் பதிவர் மீதான பிரம்மிப்பான ஆச்சர்யமே அவர் பால் ஈர்த்தது.

காப்பி,பேஸ்ட் செய்கிறார் என்று அவரை விமர்சிப்பவர்கள், தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆண்டாண்டு காலமாய் பதிவுலகில் காப்பிபேஸ்ட் செய்து கொண்டிருக்கும் ஆ(ண்)ன்மீக பதிவர்களை விமர்சித்ததில்லை.

அவரை சீண்டிவிட்டு அவரின் எதிர்வினையை வைத்தே மொத்த நாடகமும் நடத்தப்பட்டது என்பதே என்னுடைய கருத்து.அவரின் வார்த்தைகளை வைத்தே அவரை எள்ளி நகையாடி அவரை மேலும் உக்கிரமாக்கி...இப்படியாக ஒரு Character assasination நடத்தப்பட்டது.இதை யாரும் மறுக்க முடியாது.

தமிழச்சி காட்டாறாக ஓடினாலும் ஒரு கட்டத்தில் சீரான பாதையில் வந்து கொண்டிருந்தார் என்பதும் உண்மை.தமிழச்சி,லக்கி போன்றோர் நீக்கப்பட்ட முறையும் அதன் அறிவிப்பும் விவாதத்திற்குறியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாத போது என் என்னுடைய எதிர்ப்பினை தனியொரு பதிவாக பதிவதில் எந்த தவறுமில்லை....எதிர் காலத்திலும் செய்வேன்.

தமிழச்சி விளம்பரபிரியை என்கிற குற்றச்சாட்டிற்கு என்னுடைய கேள்வியெல்லாம், இங்கே யார்தான் விளம்பரபிரியர் இல்லை...நம் ஒவ்வொருவருடைய ஒவ்வொரு பதிவுமே விளம்பரங்களுக்காத்தான் எழுதப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

(ஏனுங்க உண்மைதமிழன்...உங்க ஏரியாவுக்குள்ள வந்தா இப்டி நீளநீளமாத்தான் எழுதியாகனும் போல எதுக்கும் நல்ல வாஸ்துக்காரரை பாருங்க...ஹி..ஹி...)

உண்மைத்தமிழன் said...

//இம்சை said...
அட்டா கோச்சிக்காதிங்க இதெல்லாம் சீரியசா எடுத்துக்ககூடாது....நாம எல்லாம் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்கரான் அப்படின்னு சொல்லப்படர பரம்பரைல வந்தவங்க :)//

இப்படி சொல்லியே தாக்குறீங்களேப்பா.. உடம்பு தாங்குமா..?

உண்மைத்தமிழன் said...

///அதிஷா said...
எங்கேயும் போகல.. இங்கனதான் இருக்கேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் ஓடோடி வருவேன்.. //
இப்படிலாம் கூடவா லோகத்துல மனுஷா இருக்கா....
// வாய்ல வார்த்தை வராதே.. அதான் தமிழ்நாடு.. //
இலவசம் என்று வந்துவிட்டாலே.....!!!!
// இது போதும்.. நீங்க இந்த வலையுலகில் குப்பை கொட்டி, கொட்டி அள்ளிப் போடலாம். எந்தப் பிரச்சினையும் எழாது. அதுக்கு நான் கியாரண்டி..//
எல்லாம் பெரியவா ( நீங்கதான் ) ஆசீர்வாதம்.///

என் ஆசீர்வாதம் உங்களுக்கு என்னைக்கும் உண்டு. ஆனா அதுக்காக மெயில்லேயே வாங்கிட்டுப் போதும்னு நினைக்காதீங்க.. நேர்ல வாங்க.. அப்பத்தான் சடாரி தீர்த்தமும் அளிக்க முடியும்..

உண்மைத்தமிழன் said...

//pulliraja said...
உண்மைத் தமிழ் அண்ணா!!! இதோ ஒரு கேள்வி? ' கீழ்த்தரமான அருவருப்பான' தோழியின் பதிவுகளை நீக்க ஆண் பதிவாளர்கள் போராடியது போன்று ஏன் ' பெண் பதிவாளர்கள்' போராட முன ்வரவில்லை?
புள்ளிராஜா//

அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.. என்னைக் கேட்டா..?

உண்மைத்தமிழன் said...

//கோவி.கண்ணன் said...
உண்மைத்தமிழன்,
நகைச்சுவை உணர்வோடு எழுதி இருக்கிறீர்கள், அங்கங்கே ஊசி சொருக்கி உங்கள் ஆதங்கங்களையும் அழகாக சொல்லி இருக்கிங்க, முதன் முதலில் உங்கள் இடுகையில் பத்தியை ஸ்கிப் பண்ணாமல் படித்த பதிவு இதுதான். மற்றதெல்லாம் மேய்சல் மாதிரி வேகமாக படித்துவிடுவேன்.//

மேய்ச்சல் இல்லாமல் ஏன் படித்தீர்கள் என்பது எனக்குப் புரிகிறது..

நன்றிகள் கோவி ஸார்..

உண்மைத்தமிழன் said...

Kasi Arumugam - காசி said...
உண்மைத்தமிழரே, உங்க பதிவின் தலைப்புப்பட்டியில் இருக்கும் வாசகத்துக்கேற்ப இருக்கிறது உங்கள் அணுகுமுறை. அதற்கு பாராட்டும் நன்றியும்.//

அப்படியா.. தேங்க்ஸ்ங்கோ..

//என் பெயரை ஏன் தேவையில்லாமல் இழுத்து உங்கள் நண்பர்களாலேயே உங்களுக்கு வீண் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள், பாவம். (நீங்களாவது) நல்லா இருங்க:-)//

எல்லாரையும் நண்பர்களாக பாவிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. உங்கள் நண்பர்கள் எனக்கு நண்பர்களாக வேண்டும். என் நண்பர்கள் உங்களுக்கு நண்பர்களாக வேண்டும். இதுவே சமூகம் வளர முதல் படி.

//இடுகையின் கருத்துக்களில் ஏற்க்கக்கூடி்யதும் ஏற்கமுடியாததும் இருந்த்தாலும் 'உங்கள் பார்வை அது' என்று கொள்கிறேன். என் கருத்துக்கள் என்னோடு.//

எது ஏற்கக்கூடியது.. எது ஏற்க முடியாதது என்பதையும் சொல்லியிருந்தால் உங்களது பார்வை என்ன என்பதை நான் அறிந்து கொள்வேன்.

மற்றபடி, போட்டோவில் அம்சமாக இருக்கிறீர்கள்..

உண்மைத்தமிழன் said...

//இரண்டாம் சொக்கன்...! said...
இன்னொரு நீளமான பதிவு.... தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை. நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு இப்போது தன்னுடைய ஆள் ஒருவருக்கு பிரச்சினை என்றவுடன் யோசித்தோம், விவாதித்தோம், எதிர்பார்த்தோம், இப்பத்தான் எல்லாருமா சேர்ந்து முடிவெடுத்தோம்னு அறிக்கை கொடுப்பது அபத்தமான அபத்தம்.//

அபத்தமோ அபத்தம்.. சரிதான்..

//தமிழ்மணம் யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான்...ஆனால் தார்மீகம், வெங்காயம், எழுத்துறிமையை மதிக்கிறோம் என்றெல்லாம் இனியும் அறிக்கை கொடுத்தால் சீரியஸாக எடுத்துக் கொள்ளாது சிரித்துவிட்டு போவதே நலம்....//

சரி.. மிக்க நலம்..

நானும் அப்படித்தான் எடுத்துக் கொள்ளப் போகிறேன் சொக்கன்ஜி..

உண்மைத்தமிழன் said...

//pulliraja said...
இரண்டாம் சொக்கா!!!!!
"தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை. நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு"
ஆக, தமிழச்சி அராஜகம் பண்ணினாங்கிறத ஏத்துக்கிறீங்க. அப்புறம் எதுக்கு நைனா தமிழச்சிக்கு ஜல்ரா பதிவு போட்டீங்க?
புள்ளிராஜா//

நியாயமான கேள்வி.. அது ஜால்ராவா இல்லையான்றதை சொக்கன்ஜிதான் சொல்லணும்..

உண்மைத்தமிழன் said...

//பொய்யன் said...
antha englishla vantha ANNONYthan peyariliyo//

அப்படியா.. எனக்குத் தெரியாது..

உண்மைத்தமிழன் said...

//இரண்டாம் சொக்கன்...! said...
புள்ளிராஜா... நல்ல கேள்வி உங்களுடையது....
முதலில் குற்றம் குறையில்லாத பதிவர் என்று யாராவது ஒருவரை காட்டுங்களேன்....எல்லோர் மீதும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன...
தமிழ் பெண் பதிவர்கள் பெரும்பாலானோர் கலாச்சார எல்லைக்குள் (டாக்டரம்மா,காட்டாறு, மங்கை,தமிழ்நதி..இவர்கள் விதிவிலக்கு) நின்று கொண்டு சமைப்பதும், கோலம் போடுவதையும், கதை எழுதுவதையும் பதிந்து கொண்டிருக்கும் போது இவர்கள் நினைத்துப் பார்க்க தயங்கும் ஒரு தளத்தில் அசுரத்தனமாய் இயங்கும் ஒரு பெண் பதிவர் மீதான பிரம்மிப்பான ஆச்சர்யமே அவர் பால் ஈர்த்தது.//

எது.. நினைத்துப் பார்க்கத் தயங்கும் தளம் சொக்கன்ஜி..?

//காப்பி, பேஸ்ட் செய்கிறார் என்று அவரை விமர்சிப்பவர்கள், தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆண்டாண்டு காலமாய் பதிவுலகில் காப்பிபேஸ்ட் செய்து கொண்டிருக்கும் ஆ(ண்)ன்மீக பதிவர்களை விமர்சித்ததில்லை.//

அவருடைய காப்பிபேஸ்ட்டை விரும்பாதவர்கள் வலையுலகில் அதிகம் என்பதாலும், ஆன்மிகப் பதிவர்களும், ஆன்மிக ரசிகர்களும் அதிகமாக வலையுலகில் இருப்பதாலும்தான் விமர்சிக்க ஆளில்லை. வேறொன்றுமில்லை சொக்கன்ஜி..

//அவரை சீண்டிவிட்டு அவரின் எதிர்வினையை வைத்தே மொத்த நாடகமும் நடத்தப்பட்டது என்பதே என்னுடைய கருத்து. அவரின் வார்த்தைகளை வைத்தே அவரை எள்ளி நகையாடி அவரை மேலும் உக்கிரமாக்கி...இப்படியாக ஒரு Character assasination நடத்தப்பட்டது.இதை யாரும் மறுக்க முடியாது.//

அப்படியானால், இதற்கான முழு பொறுப்பையும் அவர்தானே ஏற்க வேண்டும்.. பெண் என்பதற்காக தன்னைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என்று ஏன் புலம்ப வேண்டும்?

தமிழ் மொழியில் அவ்வளவு பரிச்சியம் இல்லையெனில் அதற்கான எதிர்வினைகளுக்கும் அவரேதானே பொறுப்பு..

//தமிழச்சி காட்டாறாக ஓடினாலும் ஒரு கட்டத்தில் சீரான பாதையில் வந்து கொண்டிருந்தார் என்பதும் உண்மை.//

எது யோனிப் பதிவுகளாக போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தாரே அப்போதா..?

//தமிழச்சி, லக்கி போன்றோர் நீக்கப்பட்ட முறையும் அதன் அறிவிப்பும் விவாதத்திற்குறியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாதபோது என்னுடைய எதிர்ப்பினை தனியொரு பதிவாக பதிவதில் எந்த தவறுமில்லை....எதிர் காலத்திலும் செய்வேன்.//

உங்கள் கருத்தை நீங்கள் எப்போதும் பொதுவில் வைக்கலாம்.. யாரும் கேள்வி கேட்க முடியாது சொக்கன்ஜி..

//தமிழச்சி விளம்பர பிரியை என்கிற குற்றச்சாட்டிற்கு என்னுடைய கேள்வியெல்லாம், இங்கே யார்தான் விளம்பர பிரியர் இல்லை...நம் ஒவ்வொருவருடைய ஒவ்வொரு பதிவுமே விளம்பரங்களுக்காத்தான் எழுதப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.//

சரி.. ஆனால் நான் எழுதுவது எனது கருத்து இதுதான் என்பதை வெளியில் சொல்வதற்காக மட்டுமே.. அதுவும் ஒரு வகையில் விளம்பரம்தான் எனில் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏற்றுக் கொள்கிறேன்.

//(ஏனுங்க உண்மைதமிழன்...உங்க ஏரியாவுக்குள்ள வந்தா இப்டி நீள நீளமாத்தான் எழுதியாகனும் போல எதுக்கும் நல்ல வாஸ்துக்காரரை பாருங்க.//

எனக்கு வாயிலும், எழுதுவதிலும்தான் வாஸ்து என்கிறார் உமது வாஸ்து நிபுணர். இரண்டையும் நான் மூடிவிட வேண்டுமாம்.. அப்போதுதான் வீட்டில் நல்லது நடக்கும் என்கிறார்.. முடியுமா சொக்கன்ஜி..

//ஹி..ஹி...)//

இது எதுக்கு சொக்கன்ஜி..? இதற்கு எனது தளத்தில் வேலையே இல்லை.. நீங்கள் இதைப் போடாமலேயே எதையும் எழுதலாம். நான் எதையும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்..

வாழ்க்கையில் நிரம்ப அனுபவப்பட்டவர்களுக்கு மனிதர்களைப் புரிந்து கொள்வது ரொம்பச் சுலபம் ஜி..

வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
i think osai is creating a scene such that he quit before they threw him out...osai blog has been removed by TM..this is what people believe.//

ஓசை செல்லா அவராக, தானே முன் வந்து தமிழ்மணத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுவிட்டார். அதுதான் உண்மை.

தமிழ்மணம் அவரை நீக்குவதற்கான சூழலே இப்போது இல்லை..

இதுவன்றோ நட்பு..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Lucky scold other Bloggers Badly in comments. He doesn't know the pain. Now, he is enjoying the pain in another way. Whatever you give, you will take the same or more.//

நானும் அனுபவித்திருக்கிறேன். அதனால்தான் சொல்லியிருக்கிறேன்.. அவர் தன்னைத் திருத்திக் கொள்வார் என்றே நம்புகிறேன்.

//Lucky illathath Tamizhan. Lucky English word samy, Change your Name ok?//

முடியாது.. இப்படி ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கண்டுபிடிச்சிட்டு வந்து கொஸ்டீன் கேட்டா எப்படி?

Boston Bala said...

---அனானி பெயரில் கமெண்ட்ஸ்களை அனுமதித்து அதன் மூலம் அந்த கமெண்ட்ஸ்களுக்குத் ‘நாங்கள் பொறுப்பல்ல.. எழுதியவர் எவரோ அவரேதான்..’ என்ற பிலாத்து மன்னனைப் போல் ‘கை கழுவல்’ வேலையை பொறுப்பாகச் செய்து வருகிறார்கள்.---

:)

---தனியார் கம்பெனி மாதிரிதான்.. இங்கே சம்பளம் கம்மி என்றால் கூட யார் கொடுக்கிறார்களோ அங்கே போய்விட வேண்டியதுதான்..---

:))

(பத்து, பதினைந்து பதிவுகளுக்கான மேட்டர்! ஒரே இடுகையாப் போட்டு அசத்தறீங்க )

உண்மைத்தமிழன் said...

//Boston Bala said...
பத்து, பதினைந்து பதிவுகளுக்கான மேட்டர்! ஒரே இடுகையாப் போட்டு அசத்தறீங்க.//

எழுதிருக்கலாம் பாபா.. மொதல்ல அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா நேரம் கிடைக்க மாட்டேங்குது.. அதுனாலதான் ஒரே பதிவா போட்டுத் தாளிச்சிட்டேன்..

வருகைக்கு நன்றி பாபா..

வவ்வால் said...

உண்மைத்தமிழர்,

//வாழ்க்கையில் நிரம்ப அனுபவப்பட்டவர்களுக்கு மனிதர்களைப் புரிந்து கொள்வது ரொம்பச் சுலபம் ஜி..//

ஓஹ் அந்த அனுபவஸ்தர் நீங்க தானா சொல்லவே இல்லை :-))

முகம் தெரியாத பதிவர்கள் போடுற கமெண்ட் எல்லாம் போடனுமானு கேட்பது எப்படி அனுபவமா? இங்கே எத்தனைப்பேர் முகத்தைப்பார்த்து இருப்பிங்க, இல்லை முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நல்லவங்களா என்ன?

அப்படி முகம் தெரிந்தா தான் பேசுவேன்னு சொன்னா உங்க பக்கத்து வீட்டுக்காரங்க கூட திண்ணைல உட்கார்ந்து பேசிட்டு போகலாமே :-))

முகம் தெரியாத பதிவர்கள்னு நம்ம பாஸ்டன் பாலா ஒரு சின்னப்பட்டியல் ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட் பதிவில் போட்டு இருக்கார் அதில இருக்க எத்தனைப்பேர் முகம் உங்களுக்கு தெரியும்னு போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க சாரே :-))

உண்மைத்தமிழன் said...

///வவ்வால் said...
உண்மைத்தமிழர்,
//வாழ்க்கையில் நிரம்ப அனுபவப்பட்டவர்களுக்கு மனிதர்களைப் புரிந்து கொள்வது ரொம்பச் சுலபம் ஜி..//
ஓஹ் அந்த அனுபவஸ்தர் நீங்க தானா சொல்லவே இல்லை :-))///

உங்களுடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லியிருக்கிறேனே.. இதிலிருந்தே தெரியவில்லை..

//முகம் தெரியாத பதிவர்கள் போடுற கமெண்ட் எல்லாம் போடனுமானு கேட்பது எப்படி அனுபவமா? இங்கே எத்தனை பேர் முகத்தைப் பார்த்து இருப்பிங்க, இல்லை முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நல்லவங்களா என்ன? அப்படி முகம் தெரிந்தாதான் பேசுவேன்னு சொன்னா உங்க பக்கத்து வீட்டுக்காரங்க கூட திண்ணைல உட்கார்ந்து பேசிட்டு போகலாமே :-))//

இதுக்குத்தான் வவ்ஸ் சொல்றேன்.. இது மாதிரி உரிமையை கேள்வி கேக்குறவுக நேர்ல வரலாமே.. இல்லாட்டி போன்ல பேசலாமேன்னு.. புரிஞ்சதா..?

//முகம் தெரியாத பதிவர்கள்னு நம்ம பாஸ்டன் பாலா ஒரு சின்னப் பட்டியல் ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட் பதிவில் போட்டு இருக்கார். அதில இருக்க எத்தனை பேர் முகம் உங்களுக்கு தெரியும்னு போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க சாரே :-))//

பாத்துட்டேன் ஸாரே.. அவர் எந்த அர்த்தத்துல எழுதியிருக்காருன்னு படிச்சீங்களா ஸாரே.. சொந்தப் பெயரை விடுத்து புனைப் பெயரில் எழுதுபவர்கள் பட்டியலில் தங்களைக் கவர்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் அவர் எழுதியுள்ளார்.

சரி.. நாளைக்கு மீட்டிங் வர்றீங்களா..? இல்லாட்டி எனக்கு போன் பண்றீங்களா..?

இன்னும் ரெண்டு நாள்தான் கெடு..

abeer ahmed said...

See who owns wideworld1.org or any other website:
http://whois.domaintasks.com/wideworld1.org