இந்தக் கடன்களை யார் அடைப்பது..? நமது வாரிசுகளா..? ஆட்சியாளர்களின் வாரிசுகளா..?

26-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தினம்தோறும் செய்தித்தாள்களைத் திறந்தால் மக்களுக்கு வழங்கியிருக்கும் திட்டங்களினால் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள்.. நிறைவாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியோடு காணப்படுகிறார்கள். என்றென்றைக்கும் நாங்கள்தான் முதல்வர்கள் என்கிற ரீதியில் ஆளும் கட்சியின் அடிப்பொடிகள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளோ எதை வைத்து ஆளும்கட்சியை எதிர்ப்பது என்பது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றன. பொதுவில் வைத்துதான் கொள்ளையடித்துப் பழக்கமான ஜெயலலிதாவுக்கு பிடிபடாமலேயே கொள்ளையடிக்கும் திறன் கொண்ட கலைஞர் கூட்டணியின் சாமர்த்தியம் போதவில்லை.

என்ன செய்தால் இந்த ஆட்சி ஒழியும் என்று ஜெயலலிதாவும், இன்னும் என்னென்னவற்றை வாரி வழங்கினால் நமது அடுத்த மூன்றாவது தலைமுறை வரையிலும் நான் ஆட்சிக் கட்டிலில் இருக்கலாம் என்று ஆளும் கட்சியும் மாறி மாறி செய்து வரும் திட்டத்தில் தங்கள் தலையில் துண்டு விழுந்திருப்பதை உணராமலேயே.. தாங்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே மக்கள் சந்தோஷமாக இலவச டிவியில் படம் பார்த்துக் கொண்டு இலவச கேஸ் ஸ்டவ்வில் இலவச அரிசியையும், சமையல் பொருட்களை வைத்து பொங்கி, ஆக்கி தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இலவசங்களை வாரி வழங்குகின்ற அரசர் தனது குடும்பத்தினர் இதுவரையில் நம்மிடமிருந்து சம்பாதித்த சொத்துக்களில் இருந்து கொடுத்திருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை.. அனைத்துமே நம்மிடம் இருந்தே.. நம் பெயரில் வெளி ஆளிடம் கடனாகப் பெற்று.. நமக்காக வாங்கியதாகச் சொல்லி பாதியை நம்மிடமும், மீதியை அவரிடமும் தள்ளிவிட்டு போய்க் கொண்டேயிருக்கிறார்.

எப்படியும் நமது கழுத்துக்கு ஒரு நாள் கத்தி வரும்போதுதான் இந்த உண்மை நமக்குத் தெரியும்.. புரியும். அதனால் என்ன..? அப்போது அவர்கள் இருந்தால்தானே.. இருக்கின்றவரையில் அரசராக இருந்துவிட்டு போன பின்பு எதுவாக இருந்தால் அவர்களுக்கென்ன..? மாட்டப் போவது நாம்தானே.. நம் வாரிசுகள்தானே.. அவர்களது வாரிசுகள் இல்லையே..? அவர்கள்தான் இப்போது தமிழகத்திலேயே முதன்மையான பணக்காரர்களாகிவிட்டார்களே..!

இதுவரையில் ஆண்ட தமிழக அரசுகள் வாங்கிக் குவித்திருக்கும் கடன் தொகையை இங்கே பட்டியலிட்டிருக்கிறது ஒரு பத்திரிகையின் கட்டுரை. (தினமலர் என்று நினைக்கிறேன்) படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்..

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதனால், தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும், 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலில் ஒவ்வொரு லிட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதியளவு மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாகப் போகிறது. சாலை வரி, கல்வி வரி போன்ற சேவை வரிகள், சம்பளம் வாங்குவோரிடம் மாநகராட்சிகள் வசூலிக்கும் தொழில் வரி, இது தவிர ஆண்டுதோறும் வருமான வரி என, அனைத்து விதத்திலும் வரிகளைச் செலுத்தி, நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறிக் கொண்டுள்ளனர்.

மக்களின் இந்தச் சுமையை குறைக்க வேண்டிய அரசு, மேலும் மேலும் கடனை வாங்கி, அதைச் சரிகட்ட, இது போன்று புதுப்புது வழிகளில் வருவாய் தேடி வருகிறது.

கடந்த நான்காண்டு காலத்தில், தமிழக அரசு எந்த பொருளுக்கும் வரியை உயர்த்தாவிட்டாலும், "டாஸ்மாக்' வருமானம் மற்றும் உள்ளாட்சிகள் மூலம் வருவாய் உயர்வு போன்றவற்றால் சமாளித்து வருகிறது.

அதே சமயம், கடன் வாங்கும் அளவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழக அரசுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

கடந்த 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, முந்தைய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி, புதிய வரிகளை விதித்தார். இதனால், மக்கள் மீதான சுமை அதிகரித்தது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், தமிழக அரசின் கடன் 53 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருந்தது.

இப்படி மாறி மாறி கடனை வாங்கினாலும், அதை நியாயப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் தவறவில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடன் வாங்குவது அவசியம் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் செயல்பட முடியாது என்றும் நியாயப்படுத்துகின்றனர்.

கடந்த 1988-89 வரை, கடன்கள் ஆண்டுக்கு 1,027 கோடி, 1,554 கோடி ரூபாய் என்ற அளவில்தான் வாங்கப்பட்டது. திருப்பிச் செலுத்தியது போக, மீத கடன் சுமை, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் அளவில் இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த கடன் சுமைதான், மொத்தமாக இன்றைக்கு 73 ஆயிரம் கோடி ரூபாயாக தமிழகத்தின் மீது உள்ளது. ஏறத்தாழ, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி பொறுப்புடைமைச் சட்டப்படி, மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் பெறக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல் கடன் வாங்கினால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். காரணம், அதற்கு மேல் கடன் வாங்கினால், வட்டியை மட்டுமே கட்ட முடியும்; அசலை திருப்பிச் செலுத்த முடியாது.

தமிழகத்தை பொறுத்தவரை, 10 சதவீதத்துக்கு உள்ளாகவே கடன் வாங்குகிறோம் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு குறைவாகவே, பட்ஜெட் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

பொதுக் கணக்கை மட்டும் பார்க்காமல் மற்றவற்றையும் சேர்த்தால், 3 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கும் என்பதுதான் உண்மை. முந்தைய ஆட்சிகளில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு கூடுதலாக இருந்தது.

1999ல் 8,545.81 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட போதிலும், 5,438.15 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது.

கடந்த 2000ம் ஆண்டில், 11 ஆயிரத்து 596 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 7,719 கோடியே 99 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டது.

2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், 65 ஆயிரத்து 627.63 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 34 ஆயிரத்து 844.71 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கடன் வாங்குவது குறைந்தும், திருப்பிச் செலுத்துவது அதிகரித்தும் வந்ததைக் காண முடிகிறது.

கடந்த 2006-ல் தி.மு.க., அரசு அமைந்த பின், 53,526.63 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, இதுவரை 19,155.84 கோடி ரூபாய்தான் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியைவிட தி.மு.க. ஆட்சியில் குறைவான அளவே கடன் வாங்கப்பட்டிருந்தாலும், திருப்பிச் செலுத்தும் தொகை மிகக் குறைவாக இருந்ததால், கடன் சுமை அதிகரித்துள்ளது.

பொதுக் கடனை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கடனுக்கான அசல் மற்றும் வட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில்தான், திருப்பிச் செலுத்தப்படுகிறது. இருந்தாலும், கடன் சுமையைக் குறைக்க, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்து இருக்கலாம்.

ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக கடன் வாங்கி ஈடுகட்டுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு ஈடுகட்டப்பட்டு, அதிகரித்துள்ள கடன் சுமை ஒவ்வொன்றும் மக்கள் தலையில்தான் விழுந்துள்ளது.

கடன் தொகை அதிகமானது எப்படி?

1989-ம் ஆண்டில் கடன் 602.31 கோடி

1990-ல் 755.60 கோடி

1991-ல் 874.36 கோடி

1992-ல் 943.78 கோடி

1993-ல் 1,044.68 கோடி

1994-ல் 1,625.71 கோடி

1995-ல் 1,192.57 கோடி

என்று திருப்பி செலுத்திய பின், ஆண்டுதோறும் கடன் சுமை இருந்து வந்தது.

பின்னர் அமைந்த தி.மு.க., ஆட்சியில்,

1996-ல் 1,442.26 கோடி

1997-ல் 1,724.92 கோடி

1998-ல் 2,159.64 கோடி

1999-ல் 3,107.66 கோடி

2000-ம் ஆண்டில் 3,876.04 கோடி

என்று கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.

அதன் பின் வந்த அ.தி.மு.க., ஆட்சியில்

2001-ம் ஆண்டு 3,445.20 கோடி

2002-ல் 7,251.91 கோடி

2003-ல் 5,195.36 கோடி

2004-ல் 4,948.32 கோடி

2005-ல் 5,644.53 கோடி

என்று அதிகரித்தது.

தற்போதைய அரசு அமைந்த பின்

2006-ல் 2,456.91 கோடி

2007-ல் 4,643.03 கோடி

2008-ல் 9,482.21 கோடி

2009-ல் 9,928.71 கோடி

என்று திருப்பித் தராத கடன் சுமை அதிகரித்துள்ளது.

இது பற்றி தமிழகத்தின் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் சமீபத்தில் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது தெரிவித்த கருத்து முத்துக்கள் இவை..

"மாநிலத்தின் சமூக நலத் திட்டங்களால் ஒருபக்கம் செலவு அதிகரிக்கிறது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால், அரசு ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை ரூ. 11,093 கோடி வழங்க வேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 5,156 கோடி தொடர் செலவு ஏற்படும்.

இந்த ஆண்டுக்கு மட்டும் ஊதிய உயர்வு காரணமாக, சுமார் ரூ. 7,500 கோடி கூடுதல் செலவும், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான ஒட்டுமொத்த செலவு ரூ. 30,647 கோடியாகவும் இருக்கும். இது மாநிலத்தின் மொத்த வருவாய் செலவில் 52 சதவீதம் ஆகும்.

2008-2009ம் ஆண்டில் உணவு மானியம் ரூ. 1,950 கோடியாக இருந்தது. இப்போது, இது ரூ. 2,800 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீட்டுத் திட்டங்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ. 2,080 கோடி செலவு ஏற்படும்.

கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் மாநில அரசின் கடன் ரூ. 74,456 கோடி. இது 2000-2001ம் நிதியாண்டில் ஆட்சியிலிருந்து திமுக விலகியபோது, ரூ. 28,685 கோடியாக இருந்தது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சியில் இருந்து விலகியபோது, அவர்கள் வைத்துச் சென்ற கடன் தொகை ரூ. 57,457 கோடி. அதற்கு அடுத்த ஆண்டு ரூ. 60,170 கோடி என கடன் தொகை உயர்ந்து கொண்டே வருகிறது. நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டு காலத்தில் நிதித் துறை செம்மையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மொத்த வருமானத்தில், 3 சதவீதம் அளவுக்கு நிதி பற்றாக்குறை பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வரையிலும் மூன்று சதவீதம் அளவிலேதான் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை இருக்கிறது. ஆனால், வருங்காலத்தில் சற்று அதிகமாகலாம்.

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் நிதி நிலைமை சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் வருவாய் வளர்ச்சி சரிந்து வருகிறது. மறுபக்கத்தில் செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தின் சொந்த வரி வருவாயில், குறிப்பாக வணிக வரிகள் மற்றும் முத்திரைத்தாள் தீர்வைகளின் வளர்ச்சி விகிதம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

மத்திய வரியில் இருந்து பெறப்பட்ட மாநில அரசின் பங்கு முதலில் எதிர்பார்க்கப்பட்ட தொகையைவிட ரூ. 986 கோடி குறைந்துள்ளது. மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு வழங்குகிற நிதிப் பகிர்வு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வந்திருக்கிறது. மூன்றாவது திட்டக் குழு காலத்தில் அது 7.48 சதவீதமாக இருந்தது. 12வது திட்ட காலத்தில் அது 5.31 சதவீதமாக குறைந்துவிட்டது"

என்றார் பேராசிரியர் அன்பழகன்.

போதுமா...?

ஒரு பக்கம் நிதியுதவிகளாலும், இலவசத் திட்டங்களினாலும் மாநில அரசின் பட்ஜெட்டில் ஒட்டை விழுந்திருப்பதை நிதியமைச்சரே வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார். ஆனால் இதை நிவர்த்தி செய்வது முடியாது என்பதையும் மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆட்சிப் பொறுப்பிற்கு மறுபடியும் வரத் துடிப்பதால் இப்படியெல்லாம் இலவசங்களை வாரி வழங்கினால்தான் மக்கள் ஓட்டளிப்பார்கள் என்பதால் இதிலிருந்து இவர்களால் தப்பிக்க முடியவில்லை.

ஆக.. இவர்கள் ஆட்சிக்கு வந்து மீண்டும் கொள்ளையடிக்கத் துடிப்பதால்தான் இலவசத் திட்டங்கள் தொடர்கின்றன என்பதுதான் உண்மையே தவிர.. ஏதோ நிஜமாகவே ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அல்ல..

ஒரு கதை சொல்கிறேன்.. உங்களுடைய வீடாகவே இருக்கட்டும். வீடோ குடிசை வீடு என்று வைத்துக் கொள்ளுங்கள். சம்பளமோ மாதம் ஐந்தாயிரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தச் சம்பளத்திலேயே எல்.சி..டி. டிவி, பிரிட்ஜ், கட்டில், மெத்தை, என்று பலதரப்பட்ட பொருட்களையும் யாரிடமாவது கடன் பெற்றாவது வாங்குவீர்களா..?

இதுவெல்லாம் இருந்தால் மனம் சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால் திருப்பிக் கட்ட வேண்டுமே என்று யோசிக்க மாட்டீர்களா..? கடன் வாங்காமல் குடும்பம் நடத்த முடியாது எனில், இதுவரையில் குடும்பம் நடத்தியவர்களையெல்லாம் என்னவென்று சொல்வது..?

காலம் மாறுகின்றபோது தேவைகளும் மாறுகிறதே என்று நீங்கள் சொன்னாலும் தேவைகளை நினைத்துப் பார்க்க வைக்கும் ஆசைகளைத் தூண்டிவிட்டது உங்களுடைய திறந்துவிடப்பட்ட பொருளாதாரம்தான் என்பதும், அந்த நிறுவப்பட்ட திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியால் அதிகம் வளர்ந்தது ஆதிக்கத்தில் இருந்தவர்கள் என்பதும்தான் உண்மை.

ஸோ.. இப்படியே போனால் நிலைமை என்ன..? எப்போது இந்தக் கடன்கள் தீரும்..? கடனை அடைக்க முடியாமல் போனால்.. போகாது.. மத்திய அரசு இருக்கிறது. அது கடனை அடைத்துவிடும். அந்த லூஸுகளுக்கும் இதே போல பல மடங்கு கடன் இருக்கிறதே.. அவர்கள் எப்படி அடைப்பார்கள்..? இல்லை.. இல்லை.. எப்பாடுபட்டாவது கூடுதலாக கரன்ஸி நோட்டுக்களை அடித்து வெளியி்ட்டு இதன் மூலமாவது கடனை அடைத்துவிடுவார்கள்..

கரன்ஸிகளை அதிகம் வெளியிட்டு கடனை அடைத்துவிடலாம் என்கிற அபார யோசனை அரசுகளுக்குத் தெரிந்திருந்தால் இவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள். வெறும் கரன்ஸி நோட்டுக்களை அச்சடித்து அதையே பயன்படுத்தியிருக்கலாமே.. எதற்காக கேவலமாக இன்னொருவரிடம் போய் கையேந்த வேண்டும்..?

அட போப்பா.. என்னவோ.. எவன் கடன் வாங்கினா என்ன..? எனக்கு டிவி வந்திருச்சு.. ஓசில கேஸ் வந்துச்சு.. ஓசில அரிசி, பருப்பெல்லாம் கிடைச்சுச்சு. நான் சாகுறப்பகூட ஓசில உதவித் தொகை என் குடும்பத்துக்கு கிடைச்சிரும்.. அப்புறம் நான் எதுக்கு இதைப் பத்தி யோசிக்கணும்.. அதான் நான் மண்ணோட மண்ணா ஆகியிருவனே..

இதைப் பத்தி யோசிக்க வேண்டியவன் நானில்லை.. எனக்கப்புறம் இங்க குடியிருக்கப் போறானுக பாரு.. நம்ம வாரிசுக அவங்க பாடு.. ஆட்சியாளர்கள் பாடு..! நான் இருக்கிறவரைக்கும் ஜாலியா, சந்தோஷமா, நிம்மதியா இருந்திருவேன்..!

என்ன ஒரு சுயநலம் நம் அனைவருக்குள்ளும்..!?????

 தொடர்புடைய பதிவு : ஊழலை தொடர்ந்து, வாங்கிய கடனும் லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது..!



74 comments:

Prabhu said...

டிவி கொடுத்தா கரண்ட் பில்லு, கேபிள் காசு யாரு கொடுக்கிறது. என்னவோ போங்க..

Raja said...

எவ்வளவு முக்குனாலும் ஒன்னும் நடக்காது...பொய் புள்ள குட்டிய படிக்க வையுங்க ....இல்லேன போய் வரிசைல நில்லுங்க..இலவச டிவி யாவது கிடைக்கும்

Paleo God said...

இனமான கடன்
அடமான கடன்

--

அதான் நான் செஞ்சேன், நான் செஞ்சேன் ன்னு நிறைய கல்வெட்டுங்க தொறந்து வெச்சிருக்காங்களே, மல்லாக்க படுத்துகிட்டு மல்லாட்ட திம்போம்..!
--
இந்த விஷயமெல்லாம் இவ்ளோ எளிமையாவா சொல்வீங்க??

என்னமோ போங்கண்ணே ..!

நாமக்கல் சிபி said...

//போய் வரிசைல நில்லுங்க..இலவச டிவி யாவது கிடைக்கும்//

பேசாம வரிசைலயே வந்து நின்னுடுங்க!

:)

கிரி said...

சிறப்பான கட்டுரை. இலவசங்களினால் தமிழ்நாடு நாசமாகி போகும். இவர்கள் இலவசங்கள் கொடுத்து பழக்கி விட்டதால் அடுத்து வருபவர்களும் இதை தந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள், இல்லை என்றால் ஆட்சியை பிடிக்க முடியாது.

இவை எல்லாம் எங்கே சென்றே முடியுமோ தெரியவில்லை!

சைவகொத்துப்பரோட்டா said...

இலவசம் என்ற மாய உலகம் எப்படி உருவாகுதுன்னு தெளிவா சொல்லிடீங்க.

vasu balaji said...

5 வது மாடியில் இருக்கிறவனுக்கும் வெள்ள நிவாரணம் குடுக்கறாய்ங்க சார். குடுக்குறவனுக்கு 5 வருஷம்.வாங்குறவனுக்கு வாழ்நாள் பூரா. தீக்கப் போறது யாரு?

Anonymous said...

புரிதமாதிரி சொல்லியிருக்கீங்க. எவனுக்கும் சொரணை வந்து திருந்தப்போரது இல்ல். கடன் வாங்கி கமிஷன் பார்த்து சுவிஸ் பாங்குல எவ்வளவு போட்டிருக்காங்க என்ற விரத்தையும் சொல்லலாமே

துளசி கோபால் said...

ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபா.........
கண்ணைக் கட்டிக்கிட்டு வருதே...........

முகில் said...

Why again?
Refer http://sangeymuzangu.blogspot.com/2010/03/blog-post_14.html

Unknown said...

very nice

Indian said...

சிறப்பான பதிவு. பாராட்டுகள்.

சதீஷ் said...

யோவ் நீதான்யா உண்மை(யான) தமிழன்

பாருய்யா ஒரு பெரியார் வந்து எத்தனையோ வருஷமாச்சு. அடுத்து ஏதாவது பெரியார் வந்தாராய்யா???

ஆனா அதுக்குள்ளே ஜெயேந்திரர், சாய்பாபா, நித்தி, ஜட்டின்னு எவ்ளோ பேரு வந்துட்டானுங்கய்யா...

நீ இருக்கய்யா, எங்களுக்கு நீ இருக்க...

வாழ்க வாழும் பெரியாரே.
இதே மாதிரி உன்கிட்ட இருந்து நிறைய்ய பகுத்தறிவான/யாருமே சிந்திக்காத நிறைய பதிவுகளை எதிர்ப்பாக்குறோமையா நாங்க

Prathap Kumar S. said...

அண்ணே சூப்பரு...நம்ம கேப்டனை விட சூப்பரா புள்ளிவிவரம் கொடுத்துட்டீங்க...

எண்ணண்ணே பண்றது... இலவசம்னு சொன்னா பல்பொடி பாக்கெட்டுலேருந்து கலர்டிவி வரைக்கும் நம்ம மக்கள் அடிச்சுகிறாங்க. நம்ம காசுலேயே வாங்கி கொடுத்து இலவசம்னு சொல்லுறாங்க... இது மக்களுக்கு புரியற வரைக்கும் ஒண்ணு பண்ணமுடியாது.

மோனி said...

//..எவ்வளவு முக்குனாலும் ஒன்னும் நடக்காது...பொய் புள்ள குட்டிய படிக்க வையுங்க ....இல்லேன போய் வரிசைல நில்லுங்க..//

ரிப்பீட்டே ...

இரும்புக்குதிரை said...

படிச்சவங்க கூட பைசா மற்றும் இலவசம் வாங்கிட்டு ஓட்டு போடும்போது இதை யாருக்கு சொல்றிங்க? கடைசில எல்லோரும் டாஸ்மாக்ல பொய் ஊத்திகிட்டு மல்லாந்துருவோம். அதுல வர்ற வரியா கொஞ்சம் கண்ணக்கு காமிச்சிட்டு மீடியா தமிழ்படம் எடுக்கவும் மானாட மயிலாட எடுக்கவும் உபயோகம் பண்ணிக்கலாம். பச்சையா சொல்லணும் னால் சேது சமுத்திரம் திட்டம் பணம் கலைஞர் டிவி ஆனது பொல

Jerry Eshananda said...

அதான் "டாஸ்மாக்"இருக்குல ,சரிபண்ணிடலாம்

VISA said...

இதை பற்றி நானும் குட்டியூண்டா எழுதி இருந்தேன்.
ஆனால் உங்களின் அழகான நடையில் விலாசியிருக்கிறீர்கள்.

இதில் முரண் நகை என்னவென்றால்

புரிந்துகொள்ள வேண்டியவர்கள் இதை படிப்பதில்லை.
இதை படிப்பவர்கள் புரிந்துகொண்டாலும் அவர்களால் பயன் இல்லை.

புரிந்துகொள்ள வேண்டியவர்கள் படிக்கும் பத்திரிகைகளில்
"அன்புடன் அந்தரங்கம்" தான் அதிகமாக ஸ்லாகித்து படிக்கப்படுகிறது.

நித்தியே டி.ஆர்.பி யின் சக்தி.

வாழ்க ஜனங்களின் நாயகம்.

K.R.அதியமான் said...

தமிழக அரசின் தற்போதைய கடன் சுமார் 90,000 கோடிகள் என்று கேள்விப்பட்டேன். இதுவரை அதை பற்றிய சரியான தகவல் அரசின் வலைமனைகளில் இல்லை. மிக சாமர்த்தியமாக நிகர கடன் அளவை பற்றி தகவல் தராமல் மறைக்கிறார்கள். ஆனால்
மிக அயோக்கியத்தனமான முறையில் வெட்டி செலவுகள், ஓசி திட்டங்களை அதிரித்து, ஊழலையிம் மிக அதிர்கத்துவிட்டனர். எதிர்காலத்தில் இதற்கு விலை கொடுக்க போகிறோம்.

////எப்பாடுபட்டாவது கூடுதலாக கரன்ஸி நோட்டுக்களை அடித்து வெளியி்ட்டு இதன் மூலமாவது கடனை அடைத்துவிடுவார்கள்..

கரன்ஸிகளை அதிகம் வெளியிட்டு கடனை அடைத்துவிடலாம் என்கிற அபார யோசனை அரசுகளுக்குத் தெரிந்திருந்தால் இவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள். வெறும் கரன்ஸி நோட்டுக்களை அச்சடித்து அதையே பயன்படுத்தியிருக்கலாமே.. எதற்காக கேவலமாக இன்னொருவரிடம் போய் கையேந்த வேண்டும்..?////

அரசுகள் அதையும் தாரளாமாக செய்கின்றன நண்பரெ. மத்திய அரசு செய்வது அதைதான். மத்திய அரசு கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கியுடம் விற்று, அதற்க்கு பதிலாக கரன்ஸிக்களை பெற்று செலவு செய்கின்றனர். இந்த வருடம் மட்டும் சுமார் 3 லச்சம் கோடிகள். இதன் விளைவு : விலைவாசி உயர்வு. இதை பற்றிய எமது பழைய பதிவு இது :

http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html
விலைவாசி ஏன் உயர்கிறது ?

பெரியசாமி said...

அனைத்து மாநிலங்களின் கடன் நிலவரம் - http://finance.kerala.gov.in/index.php?option=com_docman&task=doc_download&gid=1803&Itemid=34

பக்கம் - 30

Romeoboy said...

பத்தோட பதினொண்ண எனக்கு இருக்கும் சில கடன்களை அரசு ஏற்குமா அண்ணே .. கொஞ்சம் பேராசிரியரிடம் கேளுங்க..

ஜோதிஜி said...

இது போன்ற படைப்புக்கு எந்த உண்மைத்தமிழன் மைனஸ் ஓட்டு குத்தியிருப்பார்?

உண்மைத்தமிழன் said...

[[[pappu said...
டிவி கொடுத்தா கரண்ட் பில்லு, கேபிள் காசு யாரு கொடுக்கிறது. என்னவோ போங்க..]]]

இதென்ன கேள்வி..? வேணும்னு அழுது வாங்கினது மக்கள்தானே.. அவங்கதான் கட்டணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Raja said...
எவ்வளவு முக்குனாலும் ஒன்னும் நடக்காது. பொய் புள்ள குட்டிய படிக்க வையுங்க. இல்லேன போய் வரிசைல நில்லுங்க. இலவச டிவி யாவது கிடைக்கும்.]]]

ராஜா.. நான் இன்னும் உக்காரலை..!

உண்மைத்தமிழன் said...

[[[♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said

இனமான கடன்
அடமான கடன்

--

அதான் நான் செஞ்சேன், நான் செஞ்சேன்ன்னு நிறைய கல்வெட்டுங்க தொறந்து வெச்சிருக்காங்களே, மல்லாக்க படுத்துகிட்டு மல்லாட்ட திம்போம்..!
--
இந்த விஷயமெல்லாம் இவ்ளோ எளிமையாவா சொல்வீங்க?? என்னமோ போங்கண்ணே ..!]]]

ஷங்கர்..! நாமளே மல்லாந்து படுத்துக்கிட்டு நாமளே துப்பினா நல்லாவா இருக்கும்..!

நிக்க வைச்சு அவனுக மூஞ்சிலதான் துப்பணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[என்.ஆர்.சிபி said...
//போய் வரிசைல நில்லுங்க. இலவச டிவியாவது கிடைக்கும்//

பேசாம வரிசைலயே வந்து நின்னுடுங்க!:)]]]

அப்ப எனக்கு முன்னாடி நீ நிக்குறியா..?

உண்மைத்தமிழன் said...

[[[கிரி said...
சிறப்பான கட்டுரை. இலவசங்களினால் தமிழ்நாடு நாசமாகி போகும். இவர்கள் இலவசங்கள் கொடுத்து பழக்கி விட்டதால் அடுத்து வருபவர்களும் இதை தந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள், இல்லை என்றால் ஆட்சியை பிடிக்க முடியாது. இவை எல்லாம் எங்கே சென்றே முடியுமோ தெரியவில்லை!]]]

ஒருவன் கோர்ட்டில் திவால் நோட்டீஸ் கொடுத்தால் என்னாகும்..?

அதே கதைதான் ஒரு நாள் நடக்கும்..!

அப்போது இந்த ஆட்சியாளர்கள் கல்லறையில் இருக்கப் போவதால் அவங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்கப் போவதில்லை.

நம்முடைய வாரிசுகளுக்குத்தான் தலையில் இடி விழுகப் போகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[சைவகொத்துப்பரோட்டா said...
இலவசம் என்ற மாய உலகம் எப்படி உருவாகுதுன்னு தெளிவா சொல்லிடீங்க.]]]

நன்றி கொத்துப்புரோட்டா..!

உண்மைத்தமிழன் said...

[[[வானம்பாடிகள் said...
5 வது மாடியில் இருக்கிறவனுக்கும் வெள்ள நிவாரணம் குடுக்கறாய்ங்க சார். குடுக்குறவனுக்கு 5 வருஷம். வாங்குறவனுக்கு வாழ்நாள் பூரா. தீக்கப் போறது யாரு?]]]

அதேதான் ஸார்..

மழைத் தண்ணி தேங்காத தெருவுல எல்லாம் வெள்ள நிவாரணம் வாங்கினாங்க..

நம்ம மக்களைத்தான் குத்தம் சொல்லணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[திரவிய நடராஜன் said...
புரிதமாதிரி சொல்லியிருக்கீங்க. எவனுக்கும் சொரணை வந்து திருந்தப்போரது இல்ல். கடன் வாங்கி கமிஷன் பார்த்து சுவிஸ் பாங்குல எவ்வளவு போட்டிருக்காங்க என்ற விரத்தையும் சொல்லலாமே.]]]

அதான அவங்க வம்சத்தோட சொத்து.. அவ்ளோ சீக்கிரம் சொல்லிருவாங்களா என்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...
ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபா.........
கண்ணைக் கட்டிக்கிட்டு வருதே...........]]]

நாங்க(உங்களைச் சேர்க்கலீங்கோ) எவ்ளோ கடன்ல இருக்கோம்னு தெரிஞ்சுக்குங்க..! இப்பவாச்சும் நல்லா சுகமா இருக்கீங்களேன்னு சொல்லாதீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ராமு said...
Why again?
Refer http://sangeymuzangu.blogspot.com/2010/03/blog-post_14.html]]]

இப்போதுதான் இதனைப் பார்த்தேன் நண்பரே..!

நன்று..!

உண்மைத்தமிழன் said...

[[[suresh said...
very nice]]]

மிக்க நன்றிகள் சுரேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...
சிறப்பான பதிவு. பாராட்டுகள்.]]]

நன்றி இந்தியன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சதீஷ் said...

யோவ் நீதான்யா உண்மை(யான) தமிழன். பாருய்யா ஒரு பெரியார் வந்து எத்தனையோ வருஷமாச்சு. அடுத்து ஏதாவது பெரியார் வந்தாராய்யா???
ஆனா அதுக்குள்ளே ஜெயேந்திரர், சாய்பாபா, நித்தி, ஜட்டின்னு எவ்ளோ பேரு வந்துட்டானுங்கய்யா...
நீ இருக்கய்யா, எங்களுக்கு நீ இருக்க...
வாழ்க வாழும் பெரியாரே.
இதே மாதிரி உன்கிட்ட இருந்து நிறைய்ய பகுத்தறிவான/யாருமே சிந்திக்காத நிறைய பதிவுகளை எதிர்ப்பாக்குறோமையா நாங்க.]]]

ம்ஹும்.. நம்ப முடியலை.. இப்படியெல்லாம் எனக்கு பின்னூட்டம் வரும்னு..!?

உண்மைத்தமிழன் said...

[[[நாஞ்சில் பிரதாப் said...

அண்ணே சூப்பரு. நம்ம கேப்டனை விட சூப்பரா புள்ளிவிவரம் கொடுத்துட்டீங்க. எண்ணண்ணே பண்றது. இலவசம்னு சொன்னா பல்பொடி பாக்கெட்டுலேருந்து கலர்டிவி வரைக்கும் நம்ம மக்கள் அடிச்சுகிறாங்க. நம்ம காசுலேயே வாங்கி கொடுத்து இலவசம்னு சொல்லுறாங்க. இது மக்களுக்கு புரியற வரைக்கும் ஒண்ணு பண்ணமுடியாது.]]]

என்னைக்குத்தான் இவங்க திருந்துவாய்ங்க பிரதாப்பு..!?

உண்மைத்தமிழன் said...

[[[மோனி said...

//எவ்வளவு முக்குனாலும் ஒன்னும் நடக்காது. பொய் புள்ள குட்டிய படிக்க வையுங்க. இல்லேன போய் வரிசைல நில்லுங்க//

ரிப்பீட்டே]]]

பாருங்கப்பா.. இதுக்குக் கூட ரிப்பீட்டாம்..!

மோனி ஆர் யூ பிரண்ட் ஆர் எனிமி..?

உண்மைத்தமிழன் said...

[[[இரும்புக்குதிரை said...
படிச்சவங்ககூட பைசா மற்றும் இலவசம் வாங்கிட்டு ஓட்டு போடும்போது இதை யாருக்கு சொல்றிங்க?

கடைசில எல்லோரும் டாஸ்மாக்ல பொய் ஊத்திகிட்டு மல்லாந்துருவோம்.

அதுல வர்ற வரியா கொஞ்சம் கண்ணக்கு காமிச்சிட்டு மீடியா தமிழ்படம் எடுக்கவும் மானாட மயிலாட எடுக்கவும் உபயோகம் பண்ணிக்கலாம்.

பச்சையா சொல்லணும்னா சேது சமுத்திரம் திட்டம் பணம் கலைஞர் டிவி ஆனது பொல.]]]

ஐயையோ.. இப்படி பச்சையா வெளிப்படையா சொன்னா நான் எப்படி பதில் சொல்றது..?

பெரிய ஆளா இருப்பீங்க போலிருக்கே இரும்புத்திரை..!?

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெரி ஈசானந்தன். said...
அதான் "டாஸ்மாக்" இருக்குல சரி பண்ணிடலாம்]]]

எல்லாத்தையும் மறக்கிறதுக்கு குடி இருக்குல்ல..

மை காட்.. நான்தான் அதை மறந்து தொலைச்சிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[VISA said...
இதை பற்றி நானும் குட்டியூண்டா எழுதி இருந்தேன். ஆனால் உங்களின் அழகான நடையில் விலாசியிருக்கிறீர்கள்.
இதில் முரண் நகை என்னவென்றால்
புரிந்துகொள்ள வேண்டியவர்கள் இதை படிப்பதில்லை. இதை படிப்பவர்கள் புரிந்துகொண்டாலும் அவர்களால் பயன் இல்லை.
புரிந்து கொள்ள வேண்டியவர்கள் படிக்கும் பத்திரிகைகளில் "அன்புடன் அந்தரங்கம்"தான் அதிகமாக ஸ்லாகித்து படிக்கப்படுகிறது.
நித்தியே டி.ஆர்.பி யின் சக்தி.
வாழ்க ஜனங்களின் நாயகம்.]]]

உண்மைதான்.. அன்றைக்குத்தான் மிக அதிகமான டி.ஆர்.பி. சன் டிவிக்குக் கிடைத்திருக்கிறதாம்..!

மக்களுக்குப் புரிய வேண்டுமே விஸா....!

பனித்துளி சங்கர் said...

{{{{இவர்கள் ஆட்சிக்கு வந்து மீண்டும் கொள்ளையடிக்கத் துடிப்பதால்தான் இலவசத் திட்டங்கள் தொடர்கின்றன என்பதுதான் உண்மையே தவிர.. ஏதோ நிஜமாகவே ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அல்ல.}}}}}


நிதர்சனமான வரிகள்!!!
அருமையான பதிவு நண்பேரே!!!
வாழ்த்துக்கள்!!!!

உண்மைத்தமிழன் said...

[[[K.R.அதியமான் said...
தமிழக அரசின் தற்போதைய கடன் சுமார் 90,000 கோடிகள் என்று கேள்விப்பட்டேன். இதுவரை அதை பற்றிய சரியான தகவல் அரசின் வலைமனைகளில் இல்லை. மிக சாமர்த்தியமாக நிகர கடன் அளவை பற்றி தகவல் தராமல் மறைக்கிறார்கள். ஆனால்
மிக அயோக்கியத்தனமான முறையில் வெட்டி செலவுகள், ஓசி திட்டங்களை அதிரித்து, ஊழலையிம் மிக அதிர்கத்துவிட்டனர். எதிர்காலத்தில் இதற்கு விலை கொடுக்க போகிறோம்.]]]

இந்த அரசியல்வியாதிகளின் வெட்டிச் செலவுகளை யார் கணக்கில் எழுதுகிறார்கள் என்பதைக்கூட கண்டு கொள்ளாமல் டாஸ்மாக்கில் குடித்துக் கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது..?

//எப்பாடுபட்டாவது கூடுதலாக கரன்ஸி நோட்டுக்களை அடித்து வெளியி்ட்டு இதன் மூலமாவது கடனை அடைத்துவிடுவார்கள்..
கரன்ஸிகளை அதிகம் வெளியிட்டு கடனை அடைத்துவிடலாம் என்கிற அபார யோசனை அரசுகளுக்குத் தெரிந்திருந்தால் இவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள். வெறும் கரன்ஸி நோட்டுக்களை அச்சடித்து அதையே பயன்படுத்தியிருக்கலாமே.. எதற்காக கேவலமாக இன்னொருவரிடம் போய் கையேந்த வேண்டும்..?////

அரசுகள் அதையும் தாரளாமாக செய்கின்றன நண்பரெ. மத்திய அரசு செய்வது அதைதான். மத்திய அரசு கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கியுடம் விற்று, அதற்க்கு பதிலாக கரன்ஸிக்களை பெற்று செலவு செய்கின்றனர். இந்த வருடம் மட்டும் சுமார் 3 லச்சம் கோடிகள். இதன் விளைவு : விலைவாசி உயர்வு. இதை பற்றிய எமது பழைய பதிவு இது :
[[[http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html
விலைவாசி ஏன் உயர்கிறது ?]]]

ஓ.. இதைத் தலையைச் சுற்றும் மக்களுக்குப் புரியாத தகவல்கள்..! இதனை வைத்துத்தான் நம் தலையில் கொள்ளி வைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பெரியசாமி said...
அனைத்து மாநிலங்களின் கடன் நிலவரம் - http://finance.kerala.gov.in/index.php?option=com_docman&task=doc_download&gid=1803&Itemid=34
பக்கம் - 30]]]

தங்களுடைய பேருதவிக்கு மிக்க நன்றிகள் பெரியசாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[~~Romeo~~ said...
பத்தோட பதினொண்ண எனக்கு இருக்கும் சில கடன்களை அரசு ஏற்குமா அண்ணே .. கொஞ்சம் பேராசிரியரிடம் கேளுங்க..]]]

ஏத்துக்கும்.. அதுக்கு நீங்க பெரிய இடத்து சம்பந்தமா இருக்கோணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
இது போன்ற படைப்புக்கு எந்த உண்மைத்தமிழன் மைனஸ் ஓட்டு குத்தியிருப்பார்?]]]

போட்டுட்டுப் போறாங்க விடுங்க ஜோதிஜி..!

அவங்க விருப்பம் அது..!

உண்மைத்தமிழன் said...

[[[♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

{{{{இவர்கள் ஆட்சிக்கு வந்து மீண்டும் கொள்ளையடிக்கத் துடிப்பதால்தான் இலவசத் திட்டங்கள் தொடர்கின்றன என்பதுதான் உண்மையே தவிர.. ஏதோ நிஜமாகவே ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அல்ல.}}}}}


நிதர்சனமான வரிகள்!!!
அருமையான பதிவு நண்பேரே!!!
வாழ்த்துக்கள்!!!!]]]

உண்மையைத்தான் சொல்லியிருக்கிறேன் பனித்துளி..!

இதனால் இந்த ஆட்சியாளர்களுக்குத் துளிகூட பாதிப்பு ஏற்படப் போவதில்லை. அதனால்தான் அவர்கள் குளுகுளுவென்று இருக்கிறார்கள்..!

சிநேகிதன் அக்பர் said...

அண்ணே நம்மள நம்பியும் ஆளுக்கு பத்தாயிரம் கொடுக்கிறவங்க இருக்கிறாங்க பாருங்க ரொம்ப சூப்பர்.

ஆனா ப்ரஷ்ஷர் இருக்கிற‌வங்க இந்த பதிவை படிக்க வேணம்னு டிஸ்கி போடுங்கண்ணே.

kanagu said...

அண்ணா... எல்லாருக்குமே தெரியும் இப்ப நடக்குற ஆட்சி போற பாதை எதிர்காலத்துக்கு நல்லதில்ல-னு... ஆனா மக்களுக்கு எல்லா காசையும் அவனுங்களே அடிச்சுக்காம நமக்கும் ஒரு ஆயிரம், இரண்டாயிரம் வருதே சந்தோஷம்...

இத தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசாங்கம் என்னவோ ஆச்சு... எனக்கு ஆதரவு கொடுத்தா போச்சு-னு விட்டுட்டாங்க...

நல்ல பதிவு அண்ணா... வரிகள பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்க முடிஞ்சது...

geethasmbsvm6 said...

என்ன பெரிய கடன் அது, இதுனுட்டு இருக்கீங்க?? அதனால் என்ன?? ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை அரசுச்சின்னத்திலே இருந்து மாற்றிவிட்டு குமரியின் வள்ளுவர் சிலையைக் கொண்டு வரப் போகும் முயற்சியைச் சிறிதாவது பாராட்டி இருக்கலாம் அல்லவா?? என்ன போங்க! எப்போவோ நீங்க எழுதும் இந்த மாதிரிப் பதிவுகளைத் தான் படிக்கிறேன் நேரம் கிடைக்கும்போது, அப்போவும் இப்படிப் புலம்பினால் என்ன பண்ணறது?? :P:P:P:P:P:P:P:P

Anonymous said...

தி.மு.க அரசுவைப்பற்றி எழுதும் கட்டுரைகளின் உங்கள் ஆதங்கம் என்ன்வென்றால், அவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்பதே தொனிக்கிறது. மக்களைக்கொள்ளையடித்து வாழ்கிறார்கள்.

ஆர் ஆட்சி செய்தாலும் அப்படித்தான் இருப்பார்கள்.

அடுத்த தலைமுறையைப ்பற்றிக்கவலைபடாதீர்கள். அது நம்மை விட புத்திசாலியாகத்தான் இருக்கும்.

மக்களுக்கு இலவசங்களைக்கொடுத்து ஏமாற்றுகிறார்கள். மக்கள் ஏன் ஏமாறுகிறார்கள்? என்பதையும் கண்டுபிடியுங்கள். உங்கள் ம்களை ஒரு கயவன் ஏமாற்றி மணந்து கொள்கிறாள். மகள் வாழ்க்கை சீரழிகிறது. ஆர் குற்றம்? உங்கள் குற்றம். நீங்கள் சரியாக வளர்க்க்வைல்லை. வரவேண்டிய வயதில் வருவது power of judgement. அதைக்கொடுப்பது ஆர்? ஏமாற்றிய கயவனா? இல்லை நீங்களா.

மக்கள் ஏமாற்றப்படுகிறர்கள்! கருனானிதி ஏமாற்றுகிறார். சிரிக்கத்தான் செய்யமுடியும்.

இல்வசதிட்டங்கள் ஒரு welfare state ந் க்டமைகள். அது எங்கே எப்போது ஆருக்கு எப்படி என்பதைக்கணிப்பதிலதான் ஒரு அரசின் திறமை இருக்கிறது. அதுவே நல்லாட்சிக்கு வழிகோலாகும். அதைக்கண்டிபிடித்து விமர்சனம் செய்வதுதான் உங்கள் தொழில்.

மாறாக, இலவசத்திட்டங்களே ஒரு ஏமாற்று. அவர்கள் தின்று கொழுக்கவே அவை . இலவ்சத்திட்டங்களே இருக்கக்கூடாது என்பது political naiveté. Throwing the baby with bathwater.

இந்த வலைபதிவுக்குச்செல்லுங்கள்: http://stopbribe.blogspot.com/2010/03/blog-post_5010.html.

எதை இலவசமாகக் கொடுக்கவேண்டும்? என்று இவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

வெறும் காழ்புணர்ச்சி உறைந்த கட்டுரைகளை எழுதுவது சரி. ஆனால், அதனுடன் உருப்படியான ஆலோசனைக்ளச்சொன்னால் ஆராவது படிக்கலாம்.

Anonymous said...

ஆட்சி என்பது அரசியல்வாதிகளே. அரசியல்வாதிகளைத்தான் அமர்த்துகிறோம். எதற்க? அவர்களின் கற்ப்னைகளச் செயல்படுத்த்த்ததான். அக்கற்பனகளை அவர்கள் முன்பே பட்டியலிட்டு நம்க்குக்காட்டிவிடுகிறார்கள் . அப்பட்டியலின் பெயர் manifesto. எந்தக்கட்சியின் மனிஃபெஸ்டோ நமக்கு பிடித்ததோ அதற்கு வாக்கள்த்தோம். கருனானிதியின் மனிஃபெஸ்டோவில் இலவச டிவி திட்டம் உண்டு. என்வே கொடுக்கிறார். இப்போது எப்படி திட்டமுடியும் மக்களைக்கெடுக்கிறார் என்று? பிடிக்காவிட்டால் ஏன் வாக்களித்தீர்கள்?

வெள்ள நிவாரணம் அடுக்குமாடிக்காரர்களுக்கு கொடுக்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு. இது இலவசத்திட்டம். இத குடிசைவாசிகளுக்கு மட்டுமல்ல. வெள்ளம் ஏழை பணக்காரர் என்று பார்ப்பதில்லை. இரயில் விபத்தில் பலியான அல்லது காயப்பட்ட் அனைவருக்கும் நிவாரணம் உண்டு. இரண்டாம் வகுப்பினருக்கு மட்டும்; ஏசி பெட்டியினருக்கு இல்லை என்பது கிடையாது. அதைப்போல வெள்ள நிவாரணம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுப்பது அரசின் கடமை.

கருனானிதி தன் சொந்தகாசையா செல்வழிக்கிறார் என்பது உ.த கேட்கிறார்?

மனிஃபெஸ்ட்டொவின் திட்டங்களைச்செயல் படுத்த ஆரின் காசை செலவழிக்கவேண்டும்? மனிஃபெஸ்ட்டொவைன் திட்டங்கள் அரசின் திட்டங்களாகும். இது elementary political science subject. என்வே மக்கள் பணமே செல்வழிக்கப்படும்.

அரசியல்வாதியின் கற்பனைகள் திட்டங்களாக அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். உங்க்ள் கற்ப்னைகளை நன்வாக்கி எங்களுக்கு நல்லாட்சி தருக என்று சொல்லும் மக்கள் அரசியலவாதிகளுக்கு தங்கள் பணத்திலிருந்துதான் அவற்றைச்செயல் படுத்த ச்சொல்லுகிறார்கள்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

புரிந்துகொள்ள வேண்டியவர்கள் இதை படிப்பதில்லை.
இதை படிப்பவர்கள் புரிந்துகொண்டாலும் அவர்களால் பயன் இல்லை.

புரிந்துகொள்ள வேண்டியவர்கள் படிக்கும் பத்திரிகைகளில்
"அன்புடன் அந்தரங்கம்" தான் அதிகமாக ஸ்லாகித்து படிக்கப்படுகிறது.
Thanks to visa

உண்மைத்தமிழன் said...

[[[அக்பர் said...
அண்ணே நம்மள நம்பியும் ஆளுக்கு பத்தாயிரம் கொடுக்கிறவங்க இருக்கிறாங்க பாருங்க ரொம்ப சூப்பர்.
ஆனா ப்ரஷ்ஷர் இருக்கிற‌வங்க இந்த பதிவை படிக்க வேணம்னு டிஸ்கி போடுங்கண்ணே.]]]

ஆஹா.. கெட்ட ஐடியாவா இருக்கே.. எனக்கே பிரஷ்ஷர் இருக்கு.. ஆனா ஒண்ணும் ஆகலியே..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
அண்ணா எல்லாருக்குமே தெரியும் இப்ப நடக்குற ஆட்சி போற பாதை எதிர்காலத்துக்கு நல்லதில்லனு. ஆனா மக்களுக்கு எல்லா காசையும் அவனுங்களே அடிச்சுக்காம நமக்கும் ஒரு ஆயிரம், இரண்டாயிரம் வருதே சந்தோஷம். இத தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசாங்கம் என்னவோ ஆச்சு. எனக்கு ஆதரவு கொடுத்தா போச்சுனு விட்டுட்டாங்க.
நல்ல பதிவு அண்ணா. வரிகள பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்க முடிஞ்சது.]]]

ஏது மத்திய அரசா தட்டிக் கேக்கணும்.. அப்புறம் அதை யாரு தட்டிக் கேக்குறது..?

இந்தக் கொள்ளைக் கூட்டத்துல அவங்களுக்கும் ஒரு பங்கு இருக்கே..!

உண்மைத்தமிழன் said...

[[[geethasmbsvm6 said...
என்ன பெரிய கடன் அது, இதுனுட்டு இருக்கீங்க?? அதனால் என்ன?? ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை அரசு சின்னத்திலே இருந்து மாற்றிவிட்டு குமரியின் வள்ளுவர் சிலையைக் கொண்டு வரப் போகும் முயற்சியைச் சிறிதாவது பாராட்டி இருக்கலாம் அல்லவா?? என்ன போங்க! எப்போவோ நீங்க எழுதும் இந்த மாதிரிப் பதிவுகளைத்தான் படிக்கிறேன் நேரம் கிடைக்கும்போது, அப்போவும் இப்படிப் புலம்பினால் என்ன பண்ணறது?? :P:P:P:P:P:P:P:P]]]

ஐயோ கீதாம்மா..! பணம் என்றால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான் நடக்கும்..!

நம்மால் முருகனிடம் இறைஞ்சுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது..!

ஆன்மிகவாதிகளின் அமைதியை இந்த கேடுகெட்ட அரசியல்வியாதிகள் ஒரு ப்ளஸ் பாயிண்ட்டாக எடுத்துக் கொள்கிறார்கள்..!

ஆனாலும் உங்களது சோகத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[மணி(ஆயிரத்தில் ஒருவன்) said...

புரிந்துகொள்ள வேண்டியவர்கள் இதை படிப்பதில்லை.
இதை படிப்பவர்கள் புரிந்துகொண்டாலும் அவர்களால் பயன் இல்லை.

புரிந்துகொள்ள வேண்டியவர்கள் படிக்கும் பத்திரிகைகளில்
"அன்புடன் அந்தரங்கம்" தான் அதிகமாக ஸ்லாகித்து படிக்கப்படுகிறது.
Thanks to visa]]]

உண்மைதான் மணி..

விஸாவின் இந்தப் பின்னூட்டம் அருமை..!

Anonymous said...

//ஆன்மிகவாதிகளின் அமைதியை இந்த கேடுகெட்ட அரசியல்வியாதிகள் ஒரு ப்ளஸ் பாயிண்ட்டாக எடுத்துக் கொள்கிறார்கள்..!//

கீதா சாமபசிவம் மற்றும் சரவணன்!

ஆன்மிகவாதிகள் என்றால் முருகனைக்கும்பிடுப்வர்கள் மட்டும்தானா? இந்துக்கள் மட்டும்தானா? தமிழக அரசு இந்துக்களுக்கு மட்டுமா?

இக்கேள்விகளுக்கு இல்லயென்று பதில் சொன்னால், ஏன் தமிழக அரசு சின்னத்தில் இந்துக்கோயில் இருக்கவேண்டும்? ஏன், அனைவருக்கும் பொதுவான வள்ளுவரின் படம் இருக்கக்கூடாது?

தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் இச்சின்னத்தை மாற்றவேண்டும்.

’ஆன்மிகவாதிகளின் அமைதி’ என்றொரு பொய். சொல்வது உண்மைத்தமிழன். ஆரந்த ஆன்மிக வாதிகள்? இந்துக்கள். ஏன், ‘இந்துக்களின் அமைதி’ என்றெழுதக்கூடாது?

ஏன் பொய்?

Anonymous said...

இன்றைய செய்தியின்படி தமிழ்க அரசு 400 கோடி தமிழக கோயில்களின் குடமுழுக்கு விழாக்கள் நடாத்த செல்வழிக்கப்போகிறதாம்.

இவர்கள் ஏன் 400 கோடி தலா கிருத்துவ தேவாலாயண்ட்களுக்கும், மசூதி சீரமைப்புகளுக்கும் கொடுக்கவில்லை?

இந்த் அரசுக்கு முருகபக்தர்கள் அல்லது இந்துக்கள் என்றால் என்ன உயர்வு?

சில் நாட்களுக்கு முன் வந்த செய்தி:

நெல்லை மாவட்டம் உவரி என்ற கடலோரக்கிராமத்தைச் சுற்றுலாத்தளமாக்க ப் போகிறதாம் இந்த் அரசு. ஏனென்று தெரியுமா?

அங்கே புராதனமான சுயம்புலிங்க சுவாமி ஆலயம் இருக்கிறதாம். அங்கு யாத்ரீகர்கள் வருகிறார்களாம்.

அதே கிராமத்தில் அந்தோணியார் ஆலய்மும் இருக்கிறது. அவ்வாலத்திற்கு இலங்கை, கேரளம், ம்ற்றும் கோவா போன்றவிடங்களிலிருந்து ஆய்ரக்கணக்கான் யாத்ரீகர்கள் வருகிறார்கள். இந்த அரசு கண்டுகொண்டதா?

என்வே இந்த் கேடுகெட்ட அரசு இந்துக்களுக்குத்தான் இருக்கிறது.

geethasmbsvm6 said...

//கீதா சாமபசிவம் மற்றும் சரவணன்!

ஆன்மிகவாதிகள் என்றால் முருகனைக்கும்பிடுப்வர்கள் மட்டும்தானா? இந்துக்கள் மட்டும்தானா? தமிழக அரசு இந்துக்களுக்கு மட்டுமா?//

நான் என்னை ஆன்மீகவாதி என்று ஒருநாளும் சொல்லிக்கொண்டதில்லை. தமிழக அரசின் இந்தச் சின்னத்தைச் சமயச் சின்னமாய்ப் பார்ப்பதும் தவறு. இந்தச் சின்னத்தைத் தமிழ்நாட்டுக்காகத் தேர்ந்தெடுத்த ஓமந்தூர் ரெட்டியார் அவர்கள் மத்திர அரசின் பார்வைக்கு அனுப்பியபோது, அப்போதைய பாரதப் பிரதமர் நேரு அவர்களும் உங்களைப் போல் இது சமயச் சின்னம் என ஆக்ஷேபித்திருக்கிறார். ரெட்டியார் அவர்களோ இது சமயச் சின்னமே அல்ல. திராவிடக் கட்டிடக் கலையின் பாரம்பரியத்தைக் காட்டும் சின்னம், அப்படித் தான் பார்க்கவேண்டும் என்று வாதாடி அநுமதி பெற்றார். இன்று ஓமந்தூரார் இருந்திருப்பாரானால்????? கண்ணீர் விட்டிருப்பார்! :(((((((((

போகட்டும், இந்த நாட்டு மன்னர்களும், அவர்களின் மந்திரிகளும், மற்ற சாமான்யர்களும் கட்டியவை நீங்கள் சமயச் சின்னம் எனக் கூறும் கோயில்களே. மன்னர்கள் தங்களுக்கெனக் கட்டிய கோயில்கள் அழிந்தாலும் இன்றளவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் அவர்கள் எழுப்பிய மாடக்கோயில்கள் நிலை பெற்று நின்று இந்த நாட்டின் வரலாற்றைப் பறை சாற்றி வருகின்றன. அது போல் மீண்டும் ஓர் எழுச்சி நடைபெறும் நாள் தூரத்தில் இல்லை. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

Chandra said...

Nice one. But how can it be stopped. With current trend, I do not see any strong opposition in Tamilnadu.. JJ is loosing her stand and hold in our state.of course I do not wish to see her again. My concern is someone should be there to fight for the people though not in power as opposition. that would control the ruling government of whatever can be done attitude.. I wish to see some revolution. If this continues, No wonder TN will go back to monarchy ruling.. No one can save us.. I am not much worried about liability. But more concerned about the family politics and kind of corruption of power held by a single family controlling our fate.
Samora

geethappriyan said...
This comment has been removed by the author.
geethappriyan said...

அண்ணே,நட்சத்திர வாழ்த்துக்கள்.
மிக அருமையான விழிப்புணர்வு கட்டுரை,
இலவசம் என்பது இழவுவிஷம்.
அண்ணே எனக்கு டிவி,கேஸ்,எதுவும் கிடைக்கலை,நான் அமீரகத்தில் இருக்கேன்.எனக்கும் அந்த 10000 கடன் சுமை இருக்குமா?:))))
ஓட்டுக்கள் போட்டாச்சு அண்ணே

கண்ணா.. said...

அண்ணே நல்ல பதிவு. தினமலரில்தான் அந்த செய்தி வந்திருந்தது. நீங்கள் உங்கள் ஸ்டைலில் அழகாக விவரித்து விட்டீங்க..

நீங்க இன்னைக்கு ஞாயிற்றுகிழமைன்னு சொன்னா கூட் நண்பர் ஜோ அமராயன் அதுக்கு எதிரா விவாதிப்பாரோன்னு தோணுது.

:)

Anonymous said...

My basic point, Kanna, is somewhat touched upon by Chandra. அதாவது ஓரள்வுக்கு அவர் சொல்லியிருக்கிறார். Chandra says we may be seeing monarchy, as the form of alternative model, to oust present day politicians.

I would say two models could be considered:

Shariat of Taliban style
Military Junta of Burmese style or African style

Shariat means, the guilty will be hanged in public. The rapists will be shot dead point-blank in open space in front of people. The hands of robbers will be cut off. The adulterers will be flagged. The corrupt public authorities will be shot dead on a fast tract court trial.

We need this, if the ambition of Unmaith thamizan and Chandra and you and, why not, me, too, to oust Karunanithi clan out of Tamilnadu.

But unmaith thamizan wont accept only because this form comes from Muslims. He has written a lot against purdha

He may accept military junta: all power to police, which will be used by military junta. People will ‘disappear’. They will be dragged away from their houses at the mid of night and further trace of them will be unknown to their family members. Trains will run on time. Government employees will attend and leave office at correct time. No bribe anywhere. No employee will ask for wage rise. They will be charged with treason against state. All religious people will shut their…. No one will be allowed to terrorist other. Power will be in the hands of a few army generals to be executed by Police.

This is Police Raj.

This will help oust Karunanithi clan.

Obviously, Kanna will be frightened to read all this. So, I would say, oust karunanith clan from politics by voting them out of power at the next general elections. This is parliamentary democracy, which we like. Why don’t Unmaith Thamizan start a campaign against karnanith clan to exhort all of us to use our vote power.

What is the use of whining? Act.

The campaign will be named

OUST KARUNANIDHI CLAN FROM TAMILNADU POLITICS AND POWER

Anonymous said...

கீதா சாம்பசிவம்!

நான் ச்ரவணனுக்கும் சேர்த்தே சொன்னேன். சரவணன் உங்களுக்குப்போட்ட பதில்: ‘ஆன்மிகவாதிகளின் அமைதி’ கெடுகிறதாம். அரசு அச்சின்னத்தை அகற்றி வள்ளுவரை அங்கே போட்டால்.

நீங்கள் ஆன்மிகவாதி இல்லையென்று சொன்னால், அது மிக வியப்பே. ஒன்றல்ல இரண்டு வலைபதிவுகளை ஓட்டி இந்துமதப்பரச்சாரம் செய்துகொண்டு, எனக்கும் ஆண்டாள் கோயில் சின்னத்துக்கும் தொடர்பில்லை என்கிறீர்கள். கிடக்கட்டும். மேலும் எழுதினால் அது தனிநபர் விமர்சன்மாகும்.

ஆண்டாள் கோயில் கோபுரமே அச்சின்னம். ஓமந்தூர திராவிடக்கலைக்காக ப் போட்டார் எனச்சொல்கிறீர்கள். அதென்ன திராவிடக்கலை.

‘திராவிடம்’ என்ற சொல்லே இல்லயென வும், அதுவும் கிருத்துவ மிசுனோரிகளான கால்டுவெல் போன்றோரின் சூழ்ச்சியேய்னெறும், அதைப்பிடித்துத் தொங்கிக்கொண்டே திராவிடக்கட்சிகள் பார்ப்பன எதிர்ப்புப்பிரச்சாரத்தைப் பண்ணி, தமிழ்ப்பார்ப்ப்னர்களை, ஆரிய் வந்தேறிகள் எனப்பரிகாசம்ம் செய்கின்றன என்ற் உரத்த வாதம் செய்யும் போது மட்டும், திராவிடம் என்ற சொல் தேவையில்லை. இப்போது தேவையாம்! என்ன வேடிக்கை!!

திராவிடக்கலைக்காக கண்ணீர் வடிக்கிறது ஆர்? Why didn’t you mention just ‘Dravidian art’? Why particular to say it is Srivillputtoor Andaal temple?

திராவிடக்கலைக்காக கண்ணீர் வடிக்கிறது ஆர்? Why didn’t you mention just ‘Dravidian art’? Why particular to say it is Srivillputtoor Andaal temple?

How much can you appreciate the importance of Dravidian art? You are part of the group, which denigrate the very word, Dravidian. Have you anywhere written about art, temple art? All that you are writing in your blog is the mumbo-jumbo of Hindu religious customs and legendary tales from the Ithikaasams!

தமிழ்நாடு இந்துக்களுக்கு மட்டுமல்ல. அனைத்துமதத்தினருக்கும் சொந்தம்.

என்வே, கோயிலை எடுத்து வள்ளுவரைப்போட்டாலே தமிழக அரசு சின்னம் பொதுச்சின்னமாகும்.

அப்புறம்…400 கோடி கோயில்கள் கும்பாபிசேகம். கருனானிதி சொந்தச்சொத்திலிருந்தால் என நான் கேட்கலாமா?

இலவ்சங்கள் தன் சொந்த சொத்திலிருந்தா கருனானிதி கொடுக்கிறார் என்று கேட்டார் சரவணன். நான் கேட்கலாமா? ஆர் கொடுத்த வரிப்பணம்: இந்துக்கள் மட்டுமா? கிருத்துவர்கள் கொடுக்கவில்லையா? முசுலீம்கள் கொடுக்கவில்லையா?

geethasmbsvm6 said...

@Jo Amalan Rayen Fernando இதைத் தவிரவும் வலைப்பூக்கள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் கோயில்கள் பற்றியே எழுதி வருகின்றேன் ஐயா, எனக்குத் தெரிந்ததைத் தான் நான் எழுத முடியும். தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்க முடியாது. ஓமந்தூரார் சொன்னதும் சரி, அதற்கு நேருவின் பதிலும் சரி, ஓமந்தூராரின் வேண்டுகோளும் சரி, ஆவணங்களில் உள்ள விஷயங்களே. புதியதே அன்று. பள்ளிப் பருவத்திலேயே இதைப் படிக்கும்போது எங்கள் ஆசிரியர்கள் சொல்லி இருக்கின்றனர். மற்றபடி ஆன்மீகம் வேறே, பக்தி வேறே. பக்தியின் படிக்கட்டுகளில் ஏற முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அத்தனையையும் கடந்தல்லவோ ஆன்மீகத்துக்குள் நுழையவேண்டும்??? இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். நன்றி, தங்கள் மேலான கருத்துகளுக்கு.

Unknown said...

/இன்றைய செய்தியின்படி தமிழ்க அரசு 400 கோடி தமிழக கோயில்களின் குடமுழுக்கு விழாக்கள் நடாத்த செல்வழிக்கப்போகிறதாம்.

இவர்கள் ஏன் 400 கோடி தலா கிருத்துவ தேவாலாயண்ட்களுக்கும், மசூதி சீரமைப்புகளுக்கும் கொடுக்கவில்லை? //

அதானே, கோவில் நிர்வாகத்தைப் போல தமிழக அனைத்து மசூதி சர்ச் நிர்வாகங்களை அரசு அறநிலயத்துறை கீழ் கொண்டு வந்து குடமுழுக்கு செய்யும் நாளை எதிர்பார்க்கிறோம்!

Anonymous said...

தெனாலி,

செய்யலாம்.

அப்படி அரசு செய்ய விருப்பமில்லையென்றால்,

400 கோடியை இந்துக்களிடமிருந்து வசூலித்த வரிப்பணத்திலிருந்தே கொடுக்க வேண்டும்.


ஏன் கிருத்துவர்களும் முசுலீம்களும் இந்து கோயில்களின் குடமுழுக்குகளுக்கு உதவ வேண்டும்?


சுற்றுலாத்தளத்தைப் பற்றி தெனாலியின்ன் கருத்தென்ன்ன்வோ?

Trails of a Traveler said...

சரவணன், மிக்க தகவல் பூர்வமான கட்டுரை. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்?
நான் பூனை என்று சொல்வது அரசாங்கத்தை அல்ல, மக்களை! இலவசங்களை நிராகரித்து தொலைநோக்கு பார்வையுடன் வாக்களிக்கும் மக்கள் எத்தனை பேர் உள்ளனர்?
ஆயிரம் ரூபாய்க்கு தங்கள் வாக்கை விட்டு கொடுக்கும் மாக்களாக மக்கள் இருக்கும் வரை கொள்ளையரின் ஆட்சி தான் நடக்கும்!

ராம்.

Unknown said...

சுற்றுலாத்தளத்தைப் பற்றி தெனாலியின்ன் கருத்தென்ன்ன்வோ//

என்னவோ சாரே நீ ஆரம்பத்துல இருந்து குழந்தைமாரியே கேக்குற. அந்த கோவிலு அரசு கஸ்ட்டில இருக்குதா? அதான் மேட்டரு. கோவில் வரும்படி அரசு கஜானாவுக்கு போவுது. அப்பால அரசியல்வியாதிக அறங்காவலர் போஸ்ட், காண்ராகடெல்லாம் வாங்கி துட்டு பாப்பாங்க. சர்சுக்கு பண்ணினா இப்படி மேல் வரும்படி உண்டா? அட ஓட்டாவது கிடைக்குமான்னு பாத்தா
இலங்கை, கேரளம், மற்றும் கோவா போன்றவிடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான் யாத்ரீகர்கள் வர்றாங்கன்ற. அவுனுவளுக்கு தமிழ்நாட்டுல ஓட்டு இல்லை. இதான் மேட்டரு. கேடுகெட்ட அரசு இந்துக்களுக்குத்தான் இல்ல அரசியல்வாதிகளுக்குதான்.புரிதா, இல்லைநாளும் ஆள வுடு நான் எஸ்ஸாவுறன்!

திவ்யாஹரி said...

சரியச் சொன்னீங்க சார்.. திருந்த மாட்டாங்க.. திருந்த விடவும் மாட்டாங்க..

மதன்செந்தில் said...

அட கேள்வி கேட்க வேண்டிய மக்களே 1 ரூவாய்க்கு அரிசி வாங்கிட்டு 40 ரூவாய் பருப்பு வாங்கிட்டு 50 ரூவாய்க்கு மசாலா சாமான் வாங்கி சமைச்சு சாப்பிட்டு 70 ரூவாய் குவாட்டர் குடுச்சிட்டு ஓசீ டீவி பார்க்கிறான்.. யாரை சொல்ல...


தொடருங்கள்..

www.narumugai.com

abeer ahmed said...

See who owns dynamiteinfoproducts.com or any other website:
http://whois.domaintasks.com/dynamiteinfoproducts.com

abeer ahmed said...

See who owns sonna3ma.com or any other website.