29-08-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நான் முன்பு எப்போதோ எழுதித் தொலைத்த அந்த இரவு நேர ஆபாச நடனம் பற்றிய மேட்டரை நானே மறந்து போயிருந்த வேளையில் ஒரு வாசகர் எனக்கு ஒரு லின்க்கை கொடுத்து போய்ப் பாருங்க ஸார் என்று அன்பாக மிரட்டியிருக்கிறார்.
சென்று பார்த்தேன். அதே பாணியிலான நடனம்தான். ஆனால் இது கொஞ்சம் தில்லாலங்கடியாக.. ஆண், பெண் சமத்துவத்தை மேடையிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டிய நடனமாக இருந்தது.
ஒரு ஆணும், பெண்ணும் அரைகுறை ஆடையோடு நடனமாடத் துவங்கினார்கள். ஆடத் துவங்கிய நேரத்திலேயே அந்தப் பெண்ணின் கையில் ஒரு புல் பீர் பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஆடவனின் கையில் ஒரு சிகரெட்.. பீர் முழுவதையும் அந்தப் பெண் அந்தப் பாட்டு முடிவதற்குள் காலி செய்துவிட்டார்.
இடையிடையே தன் வாயில ஊற்றி ஆடவனின் வாயில் டிரான்ஸ்பர் செய்யும் கிளுகிளுப்பு வேலையையும் செய்து முடித்தார். அவ்வப்போது பாட்டிலை கவிழ்ப்பதும், சிகரெட்டை வாங்கி புகை, புகையாக ஊதுவதுமாக ஒரு ஆம்பளைத்தனத்தை மேடையில் வெளிச்சம் போட்டுக்காட்டினார்.
நம்மாளு ஆம்பளைத்தனத்தை அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு அந்தப் பெண்ணின் உடலை நோண்டுவதிலும், தோண்டுவதிலுமாகவே நேரத்தைச் செலவழிக்க.. விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம கிளுகிளுப்புதான் போங்க..
இப்படியே ஒவ்வொரு லின்க்கையும் ஓப்பன் பண்ணி பார்த்தா.. யார் ஆம்பளை.. யார் பொம்பளைன்னே தெரியாத அளவுக்கு மேட்டர் கிளுகிளுப்பா போய்க்கிட்டிருக்கு..
இதுக்கு மெட்ராஸ்ல ஐந்து நட்சத்திர ஓட்டல்ல ஆடுற ஆட்டம் எவ்வளவோ பரவாயில்லப்பா.. நம்மதான் சிட்டிதான் வளர்ந்திருக்கு.. கிராமம் வளரலைன்னு பொய், பொய்யா சொல்லிக்கிட்டிருக்கோம்.. எதுல இருக்கோ இல்லையோ.. இதுல மட்டும் நல்லாவே வளர்ந்திருக்கு சாமி..!
டிஸ்கி : புகைப்படம் போடணும்னு நினைச்சேன். ஆனா ஏதோ ஒண்ணு, ரெண்டு வலையுலக மகளிரணியினர் ரெகுரலா என் தளத்துக்குள்ள வந்து போற மாதிரி தெரியுது.. வீணா அவங்களையும் பகைச்சுக்கிட்டு இரண்டு வாசகர்களை நான் இழக்க விரும்பவில்லை. ஸோ.. போட்டோ இல்லை..
கலக்கலான இரவு நேர மேடை நடனம்..!
Labels: அனுபவம், நாட்டு நடப்பு, மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)





21 comments:
me the firstuuuuuu..............
linku plzzzzzzu...........
ஏன்னே உடம்பு கிடம்பு சரியில்லையா???... ஒரே பதிவா போட்டு தள்றீங்க.... அதுவும் மேட்டர் பதிவா போடறிங்க... வேணும்னா நல்ல ஒரு டாக்டர பாருங்க
உண்மைத்தமிழன்,
கலாச்சாரக் காவலர்கள் எங்கே போனார்கள் ?
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
லிங்க் தராத உங்களுக்கு கருட புராணத்தின் படி என்ன தண்டனை கொடுக்கலாம்..?
link pls......
[[[யாரோ ஒருவன் said...
me the firstuuuuuu..............]]]
இதுக்கும்மா..?
[[[யாரோ ஒருவன் said...
linku plzzzzzzu...........]]]
நோ.. ப்ளீஸ்.. அதை மட்டும் கேட்காதீர்கள்..!
[[[ராஜகோபால் said...
ஏன்னே உடம்பு கிடம்பு சரியில்லையா???... ஒரே பதிவா போட்டு தள்றீங்க.... அதுவும் மேட்டர் பதிவா போடறிங்க... வேணும்னா நல்ல ஒரு டாக்டர பாருங்க]]]
இதுக்குப் போய் எப்படி நல்ல டாக்டரை பார்க்கிறது..?
கெட்ட டாக்டரைத்தான் பார்க்கோணும்..!
[[["அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...
உண்மைத்தமிழன்,
கலாச்சாரக் காவலர்கள் எங்கே போனார்கள் ?
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்]]]
வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய தலைவருக்கு என்றைக்கு பணமுடை வந்து ஏதாவது போராட்டம் துவக்கினால் உடனேயே எழுந்து வருவார்கள்.
அதுவரைக்கும் கும்பகர்ணத் தூக்கம்தான்..!
[[[டக்ளஸ்... said...
லிங்க் தராத உங்களுக்கு கருட புராணத்தின் படி என்ன தண்டனை கொடுக்கலாம்..?]]]
சாகும்வரை சாகடிக்கலாம்..
நான் தயாராக இருக்கிறேன் டக்ளஸ்..
[[[பித்தன் said...
link pls......]]]
நோ.. நீங்கள்லாம் சின்னப் பசங்க.. கெட்டுப் போயிருவீங்க..!
LINK PLEASE
ப்ோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ாஅஆ
[[[குழலி / Kuzhali said...
LINK PLEASE]]]
கெட்டுப் போயிருவீங்க குழலி.. உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்..?
[[[தண்டோரா ...... said...
ப்ோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ாஅஆ]]]
ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா..
லிங்க் குடுக்கமாட்டேன்னு சொல்லிட்டிங்கல்ல. ரைட்டு விடு
// ஸோ.. போட்டோ இல்லை.//
:-((((((
[[[மங்களூர் சிவா said...
லிங்க் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்கல்ல. ரைட்டு விடு]]]
கோச்சுக்காத கண்ணா.. அதெல்லாம் நீ பார்க்கக் கூடாது..!
[[[கிரி said...
// ஸோ.. போட்டோ இல்லை.//
:-((((((]]]
யெஸ்.. யெஸ்.. யெஸ்..
Neengathane youtube-la upload pannunathu? unmai-ya sollunga..
Post a Comment