அண்ணன் அசுரனுக்கு எனது பணிவான பதில்கள்..!

28-04-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தோழர் அசுரன் அவர்கள் நமது வலையுலகத்தின் மிக மூத்தப் பதிவர்களில் ஒருவர். இன்று அவர் என்னையும் சக தோழர் அய்யனாரையும் குறிப்பிட்டு கும்மியிருக்கும் பதிவு ­இது.
.
அவருடைய இந்தப் பதிவே மிக நீளமானதாகவும், விவரணைகள் அதிகம் கொண்டதாகவும் இருந்தபடியால் நான் அங்கே பின்னூட்டமிட்டு எனது பதில்களைச் சொல்ல முடியவி்ல்லை. தனிப்பதிவாகவே போட வேண்டிய கட்டாயம்..

இனி ஓவர் டூ தோழர் அசுரன்..!

அண்ணன் அசுரன் அவர்களுக்கு...!

எனது வணக்கங்கள்.. நலமா..? வெகு நாட்களாகிவிட்டது உங்களைச் சந்தித்து..!

முதலிலேயே உங்களுக்கு மனசார ஒரு நன்றியைச் சொல்லிக்கிறேன்..! இங்க, வலையுலகத்துல ஏதோ ஒரு மூலைல.. யாருமே சீண்டாத.. எந்த லிஸ்ட்டுலேயுமே சேர முடியாத.. வைக்க முடியாத.. ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு வெட்டிப் பயல் நான்.. என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு எனக்காக ஒரு பதிவு போட்டிருக்கீங்க பாருங்க..! கும்பிட்டுக்குறேண்ணே..!

உங்களோட ‘அசுரன்’ அப்படீன்ற பேர் பொருத்தமா இல்லைன்னாலும், நான்  என் அப்பன் முருகன்கிட்ட உங்களுக்காக.. ‘நீங்க தீர்க்காயுசா.. நல்ல உடல் சுகத்தோட, எல்லா வளத்தையும் பெற்று சந்தோஷமா வாழணும்’னு வேண்டிக்கிறேண்ணே..!

நான் வலையுலகத்தின் உள்ளே கால் பதிக்காமல் வெறும் கண் பார்வையோடு இருந்த காலத்திலும், உங்களுடைய தளத்தினை வாசித்துக் கொண்டுதான் இருந்தேன்.

நீங்களும், தோழர் ஸ்டாலினும், தோழர் ஸ்பார்ட்டகஸும், ரவி சீனிவாஸும், கால்காரி சிவாவும், அரவிந்தன் நீலகண்டனும், வஜ்ராவும், ராஜாவனஜ்ஜும், தியாகுவும், தமிழ்மணியும், அதியமானும் ரவுண்டு கட்டி விளையாடியதெல்லாம் வலையுலகத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

உங்களுடைய வார்த்தை விளையாட்டுக்களையெல்லாம் பார்த்து “நமக்கு இப்படியொரு எழுத்தறிவையும், படிப்பறிவையும் கொடுக்காம போயி்ட்டானே..!” என்று நான் என் அப்பன் முருகனைத் திட்டாத நாளில்லை..! அவ்வளவு பொறாமை கொள்ள வைத்திருக்கிறது உங்களுடைய வார்த்தை விளையாட்டுக்கள்..!

சில இடங்களில் உங்களுக்கு பின்னூட்டம் இட்டு.. அதுலேயே நான் மூக்குடைபட்டு திரும்பிய நாட்களுக்குப் பிறகு நம் அறிவுக்கு இந்த அண்ணன்கிட்டேயெல்லாம் போய் மோதக் கூடாது.. வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு ஒதுங்கிப் போறதுதான் நம்ம உடம்புக்கும், மனசுக்கும் நல்லது என்று நினைத்து ஓரமாகவே நின்றிருந்தேன்.!

அப்படியிருக்க.. இன்றைக்கு உங்களது இந்த 19 பக்க கட்டுரையில் பல முறை எனது பெயரை இட்டே பதிவு போட வைத்திருக்கும் அந்த முருகனின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது..?

அந்தக் கோவணாண்டிக்கு எனது நன்றிகள்..!

விஷயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் என்னைக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு, பின்பு பொதுவாக எனது கருத்துக்களை வைக்க விரும்புகிறேன்..!

[[[தமிழச்சியின் கட்டுரைகள் பெண்களின் பல்வேறு பிரச்சினைகள், மத பிற்போக்குவாதிகள் யோனிகளை எப்படியெல்லாம் புண்படுத்துகிறார்கள், பெண்ணடிமைத்தனம் என்று பல்வேறு விசயங்களைப் பேசின.]]]

அசுரன் அண்ணே.. நான் இதனை அப்பொழுதே மறுக்கவில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எனது
­இந்தப் பதிவிலும் இதனை நான் பதிவு செய்திருக்கிறேன்..! நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் நமது வாசகர்கள் சிலர் சரியாகப் படிக்காமல் போய், என்னைத் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எனது அந்தப் பதிவில் நான் எழுதியிருப்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

"நாம் ஒன்றும் அந்த வீராங்கனையின்(தோழர் தமிழச்சி) பதிவுகளைத் தவறு என்று சொல்லவே இல்லை.. பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமையான அந்த நிகழ்வுகளைத்தான் அவர் படம் பிடித்திருந்தார். நடக்கவே இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது."

- இப்படித்தான் தோழர் தமிழச்சியின் பதிவுகளைப் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன் என்பதைத் தங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்..!

ஆகவே தோழர் தமிழச்சியின் பதிவுகளில் பொருந்தியிருந்த உட்கருத்துக்கள் பற்றிய உங்களுடைய கருத்தும், எனது கருத்தும் ஒன்றுதான்..!

[[[ஆயினும், அவர் வெளியேற்றப்பட்டார். அன்றைக்கு எம்மையும், தோழர் தமிழச்சியின் நண்பர்கள் சிலரும், முற்போக்கு பேசும் பதிவர்களும் தவிர யாருமே அவருடன் நிற்கவில்லை. புனிதக் ‘பசு’ பதிவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து அவர் மீது நடத்திய அராஜகம் அது. அவ்வாறு, அவரை வெளியேற்றக் ‘குறி’ பார்த்துக் கூட்டுச் சேர்ந்த அராஜகவாதிகள் இன்று லீனாவுக்காகவும் ஒன்று சேர்வது ஆச்சர்யமானதல்ல. அன்று, தமிழச்சியோ தனது யோனிக் கட்டுரைகளை யாரிடம் காட்டினாலும் பேசத் தயார் என்றுதான் சொன்னார். மக்கள் விரோதமாக இருந்தால் அல்லவா அவர் பயப்பட்டிருக்க வேண்டும்?

தமிழச்சியின் கருத்துரிமையை கொல்வதற்காக அன்று ஒன்று சேர்ந்தவர்களில் அய்யனார்-உண்மைத்தமிழன் போன்ற இன்றைய கருத்துரிமைக் காவலர்களும் அடங்குவர். அன்று, உண்மைத்தமிழன் அண்ணாச்சி எழுதிய பதிவு இது.]]]

இங்கேதான் விஷயமே இருக்கிறது.. தோழர் தமிழச்சி ஏன் தமிழ்மணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்..? உண்மையான காரணம் என்ன..? என்பது இப்போதைய புதிய வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தெரியாது..

ஆனால் உங்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்திருந்தும் வேண்டுமென்றே எனது ­இந்தப் பதிவில் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கின்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை குழி தோண்டி புதைத்திருக்கிறீர்கள். “அசுரன் அண்ணே நீங்களுமா..?” என்றுதான் இதனைப் பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

தோழர் தமிழச்சியை தமிழ்மணத்தில் இருந்து வெளியேற்றும்படி கோரிக்கை வைக்கும் அளவுக்கு என்ன நடந்தது..? இதையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எனது ­இந்தப் பதிவிலேயே தெளிவாக நான் எழுதியிருக்கிறேன்..

"அந்த 'வீராங்கனை' முதலில் ஒழுங்காக காப்பி-பேஸ்ட் செய்து வந்து, பின்பு திடீரென்று தடம் மாறி ரயில் புரண்டபடி தண்டவாளத்தில் ஓடுவதைப் போல் பதிவுகள் எழுதியபோதே பலரும் சொல்லிப் பார்த்தார்கள். கண்டித்துப் பார்த்தார்கள். பேசிப் பார்த்தார்கள். அம்மையார் திருந்தியபாடில்லை."

"இந்த வீராங்கனையின் பதிவின் தலைப்புகளை பார்த்து, பார்த்து தமிழ்மணம் தளப் பக்கத்தை திறப்பதற்கே எரிச்சல் வந்துவிட்ட நிலையில்தான் நானும் ஒரு பதிவைப் போட்டேன்.. கிடைத்தது 'காயடிக்கப்பட்ட காளை' என்றொரு பட்டம்."

"ஏற்கெனவே பல பதிவர்களும் விதவிதமான பட்டங்களை அம்மையாரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருந்ததால், எனக்கும் இப்படித்தான் நடக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.. அதுவே நடந்தது."

"நாம் ஒன்றும் அந்த வீராங்கனையின் பதிவுகளைத் தவறு என்று சொல்லவே இல்லை.. பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமையான அந்த நிகழ்வுகளைத்தான் அவர் படம் பிடித்திருந்தார். நடக்கவே இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது."

"ஆனால் அதை மலிவான விளம்பர நோக்கில் தலைப்பிலேயே அந்த வார்த்தையைக் குறிப்பிட்டு தொடர்ந்து பல நாட்கள், பல இடுகைகளாக எழுதியதுதான் அப்பதிவுகள் குறித்து பரிதாபத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக பலருக்கும் அருவருப்பை ஏற்படுத்திவிட்டது."

"இதை பலரும் பலவிதமாக, நல்லவிதமாக, மிக மரியாதையாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல் சக பதிவர்களுக்கு எழுதிய பதிலில் ஒரு மனிதனாககூட அவர்களைக் கருதாமல் அள்ளி வீசிய வசவுகளால்தான் அந்த அம்மணி பலரிடமிருந்தும் கண்டனங்களையும், விரோதங்களையும் எதிர்கொண்டார். அதை அவர் இன்றுவரையிலும் புரிந்து கொள்ளாதது நமக்கு வருத்தமே."

"அப்போது தூங்கியிருந்த தமிழ்மணம் இப்போது அதே வீராங்கனை, பெயரிலியுடன் மோதிய பின்பு முழித்துக் கொண்டதைப் போல் ஆக்ஷன் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை."

"அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் 'வீராங்கனை' பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது."

"அது சரி.. இதற்கு முன்பு நான் உள்ளிட்ட பல பதிவர்கள் அம்மையாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் தமிழ்மணத்திற்குத் தெரியுமே.."

"அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே' என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண  நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது."

"அப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..?"

மேற்படிதான் நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் பதிவில் நான் முழுமையாக தோழர் தமிழச்சி பற்றி எழுதியிருக்கிறேன்.

இனி விரிவாக..

தோழர் தமிழச்சி பதிவெழுத வந்த புதிதில் முதல் நாள் 'விடுதலை' பத்திரிகையில் வெளி வரும் பெரியாரின் கட்டுரைகளை காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார். பிடித்தவர்கள் சென்றார்கள். படித்தார்கள்.. பாராட்டினார்கள். வாழ்த்தினார்கள்.

தோழர் தமிழச்சிக்கு வலையுலகத்தில் நுழையும்போதே தமிழில் அவ்வளவு பரிச்சயம் இல்லை. சில தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தமே அவருக்குத் தெரியாது..

இதன் பின்பு திடீரென்று 'பெண்ணியம் காக்கிறேன்' என்று சொல்லி கோணேஸ்வரி பற்றிய கவிதையை எடுத்துப் போட்டு அதனை விளக்க முற்பட்டார்.

இதுதான் சாக்கு என்று சொல்லி நம்மிடையே இருந்த சிலர் அனானிகளாக அவதாரம் எடுத்து, தமிழின் பல கெட்ட வார்த்தைகளை அவருக்கு நல்ல வார்த்தைகளைப் போல் சொல்லிக் கொடுத்தார்கள். அவரும் அர்த்தம் புரியாமலேயே முதலில் அதனை எடுத்துக் கையாண்டார்.

நம்மில் சிலர் அதனைக் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியபோது, "போடா பொறம்போக்கு.." "செருப்பால அடிப்பேன்டா நாயே.." "போடா பேமானி" என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினார்.

அனானி ஆப்ஷனை நீக்கும்படியும், சக பதிவர்கள் பற்றிய ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் நடுநிலையான பதிவர்கள் பலர் சொல்லியும் அவர்களுக்கும் இதுதான் பதிலாகக் கிடைத்தது. (ஆதாரத்திற்கு இப்போது இதையெல்லாம் தோண்டியெடுக்க முடியாது. அவற்றையெல்லாம் தோழர் தமிழச்சி அப்போதே நீக்கிவிட்டார்)

திடீரென்று யோனியை மையமாக வைத்தே பதிவின் தலைப்புகளை இடத் தொடங்கினார். காமம் ததும்பும் விதமாகவே வேறு, வேறு வார்த்தைகளில் அவரது தினப்படியான பதிவுகள் வலம் வர ஆரம்பித்தன. பதிவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அனைவரின் சங்கடத்திற்கும் காரணமென்ன..?

பல பதிவர்கள் வீடுகளில் தமிழ்மணத்தைப் பார்ப்பதற்காக உட்கார்ந்தவுடன் இந்தப் பதிவின் தலைப்புதான் கண்ணில்படுகிறது. இதனால் எதிர்பாராத சங்கடங்கள் நேர்ந்தன.. "பதிவின் உள்ளடகத்தில் எதை வேண்டுமானாலும் எழுதித் தொலைக்கட்டும்.. தமிழச்சி என்ற பெயரைப் பார்த்தாலே நாங்கள் திறக்காமலேயே விட்டுவிடுவோம். ஆனால் தலைப்பிலேயே வந்தால் எங்களுக்கு சங்கடமாக இருக்கிறதே.." இதைத்தான் அனைத்து பதிவர்களும் நினைத்துப் பார்த்து, தங்களுக்குள் பேசி, கதைத்து, பின்பு பொறுமையிழந்து அவரவரும் தனித்தனிப் பதிவுகளாக இட்டு பின்னூட்டங்களை இட்டார்கள்.

அத்தனைக்கும் நமது தோழர் தமிழச்சி தனது பாணியிலேயே பதில் சொன்னார். மீண்டும் இகழ்ந்துதான் பேசினார். எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பட்டப் பெயரையும் வைத்தார். எனக்கும்தான்.. 'காயடிக்கப்பட்ட காளை' நல்ல பெயர்.. வாங்கிக் கட்டிக் கொண்டேன்..

கடைசியாக எத்தியோப்பியா நாட்டில் சிறுமிகளின் பிறப்பு உறுப்பை அவர்களது சிறிய வயதிலேயே தைத்து விடுவதாக ஒரு செய்தியைப் போட்டு அதனை படத்துடன் விளக்கியிருந்தார் தோழர் தமிழச்சி. தலைப்பும் விகாரமாக இருந்தது.. உள்ளே படங்களும் அகோரமாக காட்சியளித்தன. இதுதான் கிளைமாக்ஸ் சண்டையாகிவிட்டது.

தகவல் என்னவோ தெரிந்து கொள்ள வேண்டியதுதான். இவருக்கு முன்பாகவே நாங்களும் படித்துவிட்டோம். ஆனாலும் தனது தளத்தின் ஹிட்ஸை உயர்வதற்காக இவர் தொடர்ச்சியாக வைத்திருந்த காமத் தலைப்புகளை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது..!

இதனால்தான் என்னோடு சேர்த்து நிறைய பேர் தமிழ்மணத்திற்கு புகார் தெரிவித்து பதிவு எழுதினோம். தமிழ்மணமே மிகவும் தாமதமாகத்தான் இதற்கு ஆக்ஷன் எடுத்தது.. அது உங்களுக்கே தெரியும் அசுரன் அண்ணே..!

ஆனால் நீங்களோ, [[[நியாயமாக இவர் தமிழச்சியிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும், விவாதம் செய்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் அறிவுரை வழங்கியிருக்கிறார் இந்த பெரிய மனிதர்.]]]

என்று எழுதியிருக்கிறீர்கள். அறிவுரை சொல்லி பின்னூட்டம் போட்டவர்களுக்கெல்லாம் என்னென்ன மாதிரியான மரியாதையான பதில்கள் கிடைத்தன என்பது அப்போதைய பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். ஏன் உங்களுக்கே தெரியும்..?

எனக்கும் பட்டம்தான் கிடைத்தது. 'காயடிக்கப்பட்ட காளை.' இதற்கு மேல் ஜனநாயக உணர்வுள்ள அந்தத் தோழரிடம் நான் என்ன விவாதம் நடத்தியிருக்க முடியும்..? யாரால் முடிந்தது..?

[[[அதற்கு அடங்காத பொழுது வெளியே போ என்று வன்முறையை ஏவியுள்ளார் இன்றைய கருத்துரிமை காவலர். அன்றைய புனிதக் கூட்டணியில் உ..த. அண்ணாச்சி]]] 

எது வன்முறைங்கண்ணா..?

"ஆபாச வார்த்தைகளை தலைப்புகளாக வைக்காமல், சக பதிவர்களை நண்பர்களாக பாவித்து பதில் சொல்லி, அவர்களைத் திட்டாமல், வையாமல், 'நாயே, சொரி நாயே, டேய்., அவனே, இவனே.. கொட்டையை கட் பண்ணிருவேன்.. பக்கத்துல வந்து பாரு.. ஒரு செகண்ட்ல ‘அது’ இருக்காது..  காணாப் போயிரும்..’ என்றெல்லாம் பதில் சொல்லாமல் மரியாதையாக பேசும்மா.." என்று சொன்னது வன்முறையா..? சிரிப்புதாண்ணே வருது உங்களோட..!

தமிழ்மணத்தை திறக்க கணிணி முன்பு உட்காரும்போதே "முருகா.. இன்னிக்காச்சும் நல்ல தலைப்பா வைச்சுத் தொலைஞ்சிருக்கணும்.. மானத்தை வாங்கிராத.." அப்படீன்னு வேண்டிக்கிடே எத்தனை பதிவர்கள் அப்போதைக்கு நடுக்கத்துடன் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

போங்கண்ணே.. லீனா மேட்டர்ல உங்களுக்கு என் மேல பழி போடுறதுக்கு போயும், போயும் இந்த வீராங்கனைதான் உங்களுக்குக் கிடைத்தாரா..? மிக, மிகத் தவறான வாதத்தைத் துணைக்கு அழைத்திருக்கிறீர்கள் அண்ணே..! 

தோல்வி உங்களுக்குத்தான்..!

[[[இன்னொரு புத்திசாலித்தனமான கேள்வி "இந்துக் கடவுளர்களை இது போலத்தானே அவமானப்படுத்தினீர்கள் அப்பொழுது எங்களுக்கு கோபம் வந்து கலகம் செய்யலாமா?" என்று சந்தடி சாக்கில் கேட்கப்பட்டுள்ளது. கேட்டது உண்மைத்தமிழன் அண்டு அதியமான் அண்ணாச்சி. முற்போக்குவாதிகளின் கூட்டத்துக்கு வந்து கலகம் செய்யுங்க, கேள்வி கேளுங்க பதில் சொல்றோம் ('எல்லா' வகையிலும்).]]]

"எல்லா வகையிலு”ம் அப்படீன்னுனு பிராக்கெட்ல போட்டிருக்கீங்க பாருங்க.. அதுக்காகத்தான் இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் பார்த்து நாங்க ஓரமா ஒதுங்கிப் போறது..!

பேச்சு பேச்சா இருக்கும்னா என்ன வேணாலும் பேசலாம்ண்ணே. நீங்கதான் அடுத்த ஸ்டெப்புக்கு தயாரா இருக்கீங்களே..? அப்ப அதுக்கும் தயாரா இருக்குறவங்கதான் உங்ககிட்ட சரிக்கு சரி மல்லுக்கட்ட முடியும்.. எங்களால முடியாதுங்கண்ணா..!

[[[ஆனால், லீனாவினுடையது கருத்துக்கள் அல்ல, அவை கம்யூனிசத் தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையே யோனி தேடி அலையும் ஆண் குறிகளாகச் சித்தரிக்கும் புளுபிலிம் ஆகும். அது ஒரு வன்முறை ஆகும்.]]]

இங்கேதான் நீங்கள் மீண்டும், மீண்டும் தவறு செய்கிறீர்கள். மேலே சொல்லப்பட்டது உங்களுடைய கருத்துதான். ஆனால் நீங்கள் சொல்கின்ற முறை எப்படி இருக்கிறதெனில், இந்தக் கவிதை பற்றி நீங்கள் சொல்வதுதான் சரியானது.. இறுதியானது. கடைசி வார்த்தை.. யாரும் மறுக்கக் கூடாது. அதுதான் நியாயம்.. அதனை நீங்கள் அனைவரும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மறைமுகமான மிரட்டல்.. பயமுறுத்தல்..! இது எப்படி ஜனநாயகமாகும்.!

[[[புளுபிலிமை, அது உருவாக்கும் சமூக வன்முறையை தோழர்கள் எப்படி எதிர் கொள்வார்கள் என்பதை அராஜகவாதி உண்மைத்தமிழன் தனது பதிவில் பதிவு செய்துள்ளார் (அவருக்கு ஆத்திரம் என்னடா புளுபிலிம் போடுற தியேட்டரை தோழர்கள் உடைச்சுட்டாங்களே, அராஜகவாதிகள், என்று ஒரே புலம்பல்ஸ்).]]]

உண்மைதாண்ணே.. மறுக்க மாட்டேன். அந்த மது தியேட்டர்ல என் இளமைப் பருவத்தில் ரெகுலர் பாஸ் வாங்காத ஒரு ரசிகன். நான். அது இருக்கட்டும்..

உண்மையா அந்தத் தியேட்டர்ல போய் ரகளை பண்றதை விட்டுட்டு, கண்டுகொள்ளாமல் இருக்க தினமும் மாமூல் வாங்கிட்டு அனுமதி கொடுத்திருந்த மதுரை, தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷனைத்தான நீங்க அடிச்சு நொறுக்கியிருக்கணும்..! ஏண்ணே விட்டுட்டீங்க..! அங்கேயும் நீங்க பலமில்லாதவர்கள்கிட்டதான வந்தீங்க..! கடைசியா உங்க தோழர்கள் சிலர் ‘உள்ளே’ போய் வந்ததுதான் மிச்சம்..! இந்தப் போராட்டம் தவறு என்று நான் சொல்லவில்லை. முறைதான் தவறாகிவிட்டது.

ஒரு சமயம் வில்லாபுரம் மக்களெல்லாம் ஒன்று திரண்டு தியேட்டர் வாசலில் நின்று கூச்சல் போட்டார்கள். தர்ணா போராட்டம் நடத்தினார்கள். சாலை மறியல் செய்தார்கள். போலீஸ் வந்து சமாதானம் சொன்னதும் ஒரு வாரத்திற்கு மட்டும் 'சங்கர்குரு' படத்தை ரிலீஸ் செய்து பார்த்துவிட்டு அது 'வேகாததால்' மீண்டும் பழையபடிக்கு மாறிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள். எவ்வளவு அடிச்சாலும் தாங்கினாங்கண்ணே அந்தத் தியேட்டர்காரங்க..! ஒருவேளை தியேட்டரை திறந்து வைச்சவரோட கை ராசியோ என்னவோ..? இப்போ அந்த தியேட்டர் வேறொருவரின் கைக்குப் போய் பெயர் மாற்றப்பட்டு நல்ல தமிழ்ப் படங்களாகத் திரையிடுகிறார்களாம். கேள்விப்பட்டேன்..!

"இப்படியெல்லாம் பேச உனக்கு வெக்கமா இல்லையாடா? நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..? உனக்கு என்னடா நீதி, நியாயத்தை பேச உரிமை இருக்கு.. மானங்கெட்டப் பயலே.."  அப்படீன்னு நீங்க நினைக்கலாம்.. கேக்கலாம்..! 

தப்புதாண்ணே. மன்னிச்சுக்குங்கண்ணே..! ஆனா அந்த வயசுல அது தப்புன்னு தோணவே இல்லைண்ணே..! நான் என்ன செய்யறது..? நமக்கு சரியான கைட்னஸ் இல்லை. எது சரி.. எது தப்புன்னு வாழ்க்கைய வேற இடத்துக்கு மாத்துறதுக்கான வழிகாட்டி இல்லாத தறிகெட்டத்தனமான குடும்பச் சூழல்ல இருந்ததாலதான் அப்படியொரு கெட்ட வாழ்க்கையை அனுபவிச்சுத் தொலைஞ்சேன்.

வாழ்க்கைல சில அனுபவங்கள் கிடைச்சாத்தாண்ணே மனுஷன் திருந்த முடியும்..! அந்தத் தியேட்டர்ல நான் விட்ட காசை சேர்த்து வைச்சிருந்தா இன்னிக்கு ஒரு வீடே வாங்கியிருக்கலாம்..!  எல்லாம் கெட்ட பின்புதான் புத்தி வருகிறது..! அன்னிக்கு நான் அனுபவிச்ச சந்தோஷத்துக்குப் பதிலைத்தான் இப்ப முருகன் எனக்குத் தண்டனையா வாழ்க்கைல கொடுத்திட்டிருக்கான்.. தினமும் அனுபவிச்சிக்கிட்டிருக்கேன்..! ஸோ.. கெட்டுத் தெளிஞ்சிருக்கேன்.. அவ்வளவுதாண்ணே..!

[[[அத்தனைக்கும் லீனா ஒரு புளுபிலிம் தரகர் என்ற போதும் ம.க.இ.க. நியயமாகவே கேள்வி கேட்டுள்ளனர். ஆனால், இதையே கருத்துரிமைக்கெதிரானதாக திரிக்கிறார்கள் உண்மைத்தமிழனும்-அய்யனார் அண்டு கோவும். அராஜகவாதிகள் உண்மைத்தமிழனும், அய்யனாரும் வேண்டுமானால் தமது வீட்டாரை புளுபிலிமில் சித்தரித்து எடுப்பவனிடம் சென்று அஹிம்சை பேசி விளக்கம் கேட்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள முயலலாம். புரட்சியாளர்களுக்கு அவ்வாறு சுயமாரியதை விற்று நடித்து நல்லவன் பட்டம் வாங்க வேண்டிய அவசியமில்லை.]]]

இதற்குப் பெயர் சுயமரியாதை இல்லண்ணே.. ஜனநாயகம்.. பேச்சு உரிமை, எழுத்து உரிமை, சக மனிதர்களுக்கு இருக்கின்ற உரிமைகளை மதித்து நடக்கின்ற நாகரிகப் பண்பு.. இதையெல்லாம் தூக்கிக் காலில் போட்டு மிதித்துவிட்டு 'போராளி' என்றோ, 'புரட்சிவாதி' என்றோ பெயர் எடுக்க வேண்டிய அவசியம் எங்களைப் போன்றவர்களுக்கு இல்லீங்கண்ணா..!

[[[ஓவர் டூ உண்மைத்தமிழன்,

லீனா கூட்ட நிகழ்வுகள் குறித்து உண்மைத்தமிழன் ‘சோ’த்தனமாகக் காட்சிகளைச் சித்தரிக்கும் விதம்..

@@"பேசணும் ஸார்.. கொஞ்சம் சந்தேகம் இருக்கு ஸார்.. கண்டிப்பா பேசியே ஆகணும் ஸார்.. கொஞ்சம் தயவு பண்ணுங்க ஸார்.." என்று முதலில் நாகரிகமாகத்தான் ஆரம்பித்தது வினை.@@

@@'நயமான, நாகரிமான' கேள்வியை எழுப்ப.. அதைக் கேட்டு அதைக் கேட்டு சட்டென்று உஷ்ணமான லீனா ஏதோ சொல்லிக் கொண்டே முன்னால் வர..@@

லீனாவிடம் நயமாக கேட்க்கப்பட்ட கேள்வி என்னவென்று எழுத வேண்டியதுதானே உ.த. சார்? வினவு எழுதியுள்ளதே? வினவைத் தவறாகச் சித்தரிக்கத் தேவையானதை விலாவாரியாகவும், எதிர்தரப்பை ஏதோ செஞ்சுட்டாங்க என்பது போல காட்டி நல்லவர்களாக்கத் தேவையானதை சுருக்கமாகவும், பூடகமாகவும் எழுதும் இந்த நரித்தனம் ஒன்றுதான் உண்மைத்தமிழனின் ஒரே பலம் போலும்.]]]

அந்தக் கேள்வி லீனாவின் தனி மனித வாழ்க்கை பற்றியது. அது போன்று கேள்வி கேட்கவோ, வெளிப்படுத்தவோ வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதால்தான் அந்தக் கேள்வியை நான் புறந்தள்ளினேன்..!

[[[@@அவர் பேசி முடிக்கின்றவரையில் அமைதி காத்த தோழர்கள் மறுபடியும் எழுந்தார்கள்.. இம்முறை ஆதரவுக் கூட்டத்தில் இருந்து ஒருவர் ஆவேசமாகப் பேச பதிலுக்கு இவர்களும் ஆவேசமாகப் பேச கனன்றது அரங்கத்தின் சூழ்நிலை..@@

@@இந்த நேரத்தில் ஆதரவுக் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் 'டா' போட்டு பேச.. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பதைப் போல பிடித்துக் கொண்டார்கள் தோழர்கள்.@@

ஆதரவுக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு திட்டுவதற்கு உரிமை உண்டு என்று சொல்ல வருகிறார் உண்மைத்தமிழன்.]]]

தவறான புரிதல் அசுரன் அண்ணே..! லீனா தரப்பினர்தான் முதலில் ஆரம்பித்தார்கள் என்பதற்காகத்தான் நான் அதை பதிவு செய்தேன்..!

[[[அயோக்கியத்தனத்தையும் செய்துவிட்டு, திட்டவும் செய்வானாம் நாம் அமைதியாக வரவேண்டும் என்பது உண்மைத்தமிழனின் எதிர்பார்ப்பு. அப்படியெல்லாம் வரமுடியாது. மேலும், அவர் சொல்வது போல வெறும் 'டா' போட்டு மட்டுமல்ல, வசவுகளும், திட்டுகளுமே ம.க.இ.கவினரை பார்த்து நிகழ்ந்தன.]]]

எது அயோக்கியத்தனம் என்பது பற்றிய தீர்மானமான முடிவு இதுவரையில் நம்  இருவருக்குமிடையில் ஏற்படாததால், இதைப் பற்றிய உங்களது அபிப்ராயத்திற்கு என்னிடம் பதில்லை..!

ஆனால் ம.க.இ.க. தோழர்களும், தோழியர்களும் வெளியேறுகின்றபோது பேசிய பேச்சுக்களையும், ஒரு தோழர் லீனாவின் கவிதைக்கு விளக்கம் சொல்வதற்காகப் பயன்படுத்திய வார்த்தைகளும் அட்சரச்சுத்தம் 'சரோஜாதேவி' புத்தகத்தின் வரிகள்தான்..!

[[[ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்..

அதாவது தோழர்களின் கத்தல்கள் மட்டுமே உ.த.வின் காதில் விழுந்துள்ளது எனில் அவர் நல்ல மனநல மருத்துவரை அனுகுவது நல்லது. லீனாவின் அடிபொடிகள் சலம்பியை எதுவுமே அவர் காதில் விழவில்லையெனில் அந்த வார்த்தைகள் எல்லாம் உ.த.வின் காதில் தேனாக பாய்ந்துள்ளது என்றே பொருள்.]]]

அவர்கள் அதிகம் பேசியது "வெளிய போங்கடா.." என்ற ரீதியில் 'டா' போட்டு பேசியதுதான்..!

[[[உ.த.வின் உளறல்களை அம்பலப்படுத்தி அவரது தளத்தில் வந்த பின்னூட்டங்களுக்கு அவரது எதிர்வினை,

[[[கிருஷ்ணமூர்த்தி said...
இங்கே பிரச்சினையே, சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பதை ஆளுக்காள், அவரவர் சௌகரியங்களுக்கேற்றபடி புரிந்து கொண்டிருப்பதுதான்! Your freedom ends where my nose begins என்பதாக ஒரு விவரணையும்கூட உண்டு!

கருத்துச் சுதந்திரம் என்பது என்னவாக, எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உங்களுடைய கருத்தாக இருந்தால், உங்கள் வாதப்படியே, லீனா அண்ட் கம்பனிக்குத் தங்கள் கருத்தை அவர்களுக்குத் தெரிந்த உபரி மயிர் வார்த்தைப் பிரயோகத்தில் சொல்ல உரிமை இருப்பது போலவே, வினவு தளத்துக்கும் அவர்கள் வழியில் கலகத்தைத் தோற்றுவிப்பதும் சரியானதே!]]]

உ.த.அண்ணாச்சி : எப்படி ஸார்..? லீனா எழுத்தில்தான் தனது கருத்தைப் பதித்தார். வினவு அண்ட் கோ..?@@

அடிக்க வந்தது லீனா. வினவு தனது கருத்துக்களை கடைசிவரை கருத்துக்களாகத்தான் பதிவு செய்துள்ளதை உ.த.வின் பதிவும் பதிவு செய்துள்ளது. ஆனாலும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது கருத்து உ.த.வின் மொத்த பதிவையும் ஒன்றுமில்லாமல் செய்கிறது என்றவுடன் இப்படி டுவிஸ்டு செய்கிறார் மிஸ்டர் உண்மை.]]]

இல்லை.. பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆவேசமான கோபத்துடன் ஏதோ சில வார்த்தைகளைச் சொன்னபடியே கணேசனை நோக்கி வந்தார். அது ஏன் பேசுவதற்காகவே இருக்கக் கூடாது..! உங்களுடைய பார்வையில் அது அடிப்பதற்காக வந்ததுபோல் இருந்திருக்க வேண்டும்..!  .

[[[மேலும், ம.க.இ.க. அனுகுமுறை சரி என்று சொன்ன ஒருவரை ம.க.இ.க.வின் பி.ஆர்.ஓ.வா என்று கேட்கிறார் உ.த. இவரென்ன லீனாவின் பி.ஆர்.ஓ.வா?]]]

போச்சுடா.. நான் எங்கே லீனாவை ஆதரித்து எழுதினேன்? கூட்ட நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். லீனாவின் கவிதை பற்றிய எனது கருத்தை முகப்பிலேயே சொல்லிவிட்டனே.. இதன் பின்பும் ஏன் இந்தக் கேள்வி..?

[[[அந்தக் கூட்டத்தை நடத்திய அமா பத்தி உங்களுக்க தெரியாது. எழுதுனா இந்து மக்கள் கட்சியும் ம•க•இ.க.வும் ஒன்னுன்னு கூட்டம் போடுற•.. ஏம்பா ன்னு கேக்க வந்தா பேச விடமாட்ட•.. எங்க அம்மாவ தேவடியான்னு சொல்லுவ கேக்க வந்த உனக்கு ஜனநாயகம் இருக்கும்ப•.. என்னப்பா நியாயம்..?

உ.த.அண்ணாச்சி : அ.மார்க்ஸ் பற்றி வெளியுலகில் எந்த அளவுக்குத் தெரியுமோ அது அளவுக்குத்தான் எனக்கும் தெரியும்.. இந்த இடத்தில் அவரது முந்தைய செயல்பாடுகளை பற்றி நாம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்..?

அதாவது, ம.க.இ.க.வைப் பற்றி பேசும்போது மட்டும் எல்லா எஸ்டிடியும்(ஹிஸ்டரியும்) பேசுவார் மிஸ்டர் உண்மை. ஆனால், ம.க.இ.க. மட்டும் இளிச்சவாயன் மாதிரி அ.மார்க்ஸ், லீனாவினுடைய முந்தைய நடவடிக்கைகளை சுத்தமாக மறந்துவிட்டு புதிதாக எல்லாம் செய்ய வேண்டும் என்கிறார் இந்த ‘சோ’க்கால்டு உண்மைத்தமிழன்.]]]

அ.மார்க்ஸ் அந்த இடத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தார். அந்த வேலையைச் சரியாகத்தான் செய்தார். அதைப் பற்றி மட்டுமே பேசுங்கள்.. அவருடைய மற்றக் காரணிகளை ஏன் நான் கூட்ட நிகழ்வுகள் பற்றிய விஷயத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறேன்..!

ம.க.இ.க. பற்றி நல்லவிதமாகவும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறனே.. சிதம்பரம் தீட்சிதர் விவகாரம், முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நான் பார்த்தது.. இதையெல்லாம் நீங்க படிக்கலையாண்ணே..!

சங்கர்ராமசுப்பிரமணியன் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி இப்போதுதான் எழுதியிருப்பதால் அதனைக் குறிப்பிட்டேன். இதில் ஒன்றும் தவறில்லையே..?

[[[உ.த.வின் மழுப்பல்ஸ்,
@@ஏழர said...

''கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம்.முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது”

இதுதான் அதியமான் அந்த கேள்வி. இது தொடர்பான வினவின் பதிவு
http://www.vinavu.com/2010/04/17/pala-rising/

உ.த.அண்ணாச்சி : கோபம் வராம என்ன செய்யும்..? நீங்கள் நேரில் கேட்டதால் அவரும் நேரிலேயே தனது கோபத்தை வெளிக்காட்டிவிட்டார்.. எழுத்தில் செய்திருந்தால் அவரும் எழுத்தில் தனது ஆவேசத்தைக் காட்டியிருப்பார்..! இதிலென்ன தவறு..?

லீனாவுக்கு நேரில் கேட்டால் கோபம் வரும். எங்களுக்கு எழுத்தில் படித்தால் கோபம் வரும். கோபம் வருவதில்கூட சீமாட்டிக்குத்தான் உரிமை உண்டு என ஜொள்ளுகிறார் உ.த.]]]

கோபத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். மீறி வெடித்தால் பிரச்சினைகளுக்கும் நீங்களே காரணமாவீர்கள். இது உங்களுக்கும் பொருந்தும், லீனா என்கிற அந்த சீமாட்டிக்கும் பொருந்தும்..!

[[[ஏழர said...
ம்கஇக செய்த 1000 விசயங்களை விடுத்து, லீனா மேட்டர் கிடைத்தவுடன் அராஜக கம்யூனிசம் என்று முடிவுக்கு வந்து எழுத முடிந்த உங்களால் தீபக்கை லீனாவும் சோபாவும் அடித்ததை வைத்து அவர்கள் மேல் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறீங்க பாருங்க. அடடா. அதுதான் சார் உண்மைத் தவிப்பு!!!]]]

ஏழர அண்ணே..! இதுக்கு மேல அந்த விஷயத்துல என்ன எழுதுறது..? நீங்களே சொல்லுங்க.. தெரிஞ்சுக்குறேன்..!]]]

இப்போதும் இதைத்தான் சொல்கிறேன்.. இந்த விஷயத்தில் இப்போது நான் என்ன எழுதுவது..? அடித்தவரே உண்மை என்று சொல்லி அபராதத்தைக் கட்டிவிட்டுப் போய்விட்டார். அடி வாங்கிய நண்பரும் நடந்ததைச் சொல்லிவிட்டார். வேறென்ன..? இனி இது போல் நடக்காமல் இருக்க இரண்டு தரப்பாருமே தயாராகவே இருப்பார்கள்..!

[[[ஏன், அழையா விருந்தாளியாக கூட்டத்துக்குப் போகிறாய்? என்பது இன்னொரு வாதம். லீனா ஆதரவு அராஜகவாதிகளின் இந்தக் கூட்டம் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக வினவை குறி வைத்தே தயாரிக்கப்பட்டது. மேலும், இதில் குறிப்பிட்டது போல “இ.ம.கட்சி, ம.க.இ.க, வினவு தளம் ஆகியோரை இணைத்து லீனா ஏற்கெனவே எழுதியிருந்ததார். இதையே குமுதம் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார்”.

‘இணையத்தள அராஜகம்’, ‘இடது தீவிரவாதம் பேச மட்டும் செய்யும் சிறு கும்பல்’ போன்ற சொற்றொடர்கள் வினவை நேரடியாகக் குறிப்பிட்டு வம்பை விலைக்கு வாங்கப் பயப்படும் வகையில் பூடகமான, அயோக்கியத்தனமான சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டன. சரியாகச் சொன்னால் உண்மைத்தமிழன் பாணி சொல்லாடல்கள் அவை. அ.மார்க்ஸும் பலரை வினவைக் குறிப்பிட்டே கூட்டத்திற்கு அழைத்துள்ளார். மேலும், கூட்டம் குறித்த வெளிவந்த அழைப்பிதழில் முதல் பேராவிலேயே ‘இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது’ என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. ]]]

யார் இல்லை என்று மறுத்தது..? நீங்களும் இதே போல் மறுநாள் அதே இடத்தில் கூட்டம் நடத்தி உங்களது எதிர்ப்பைக் காட்டியிருக்கலாமே என்றுதான் மீண்டும், மீண்டும் கேட்கிறேன்..!

[[[உண்மைத்தமிழன், அய்யனார் ஆகியோர் வீட்டார் விபச்சாரம் செய்வதாக ஒரு கவிதை. அதை எதிர்த்து அதே மொழியில் அவர்கள் பேசினால் அவர்களை அராஜகவாதிகள் என்று கண்டித்து ஊர் பெரிய மனுசங்க எல்லாம் கூட்டம் போடுவானுங்க. அதைக் கண்டிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும், விளக்கம் கேட்க வேண்டும், மறுநாள் அங்கு அதே போல கூட்டம் போட வேண்டும் என்று உண்மைத்தமிழனும், அய்யனாரும் நியாயம் பேசுவார்கள். அவர்களது வீட்டில் இதே போலச் சொல்லிப் பார்க்கட்டும், அதற்குப் பிறகு அங்கு நிகழும் குடும்ப அராஜகமே அவர்களுக்குச் சரியானதைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக் கொடுக்கும்.

என்ன செய்ய புரட்சியாளர்கள் மானங்கெட்டவர்கள் அல்லவே? ஒரு வேளை உ.த.வின் குடும்பத்தாருக்கு அவ்வாறு நிகழ்ந்தால் உண்மைத்தமிழன் அண்ணாச்சி வழக்கமாக தான் விண்ணப்பிக்கும் முருகனுக்குப் பதிலாக போலீசைக் கூப்பிடவும் வாய்ப்புள்ளது.]]]

முதலில் எனது வீட்டார் விபச்சாரம் செய்யட்டும். பின்பு அது பற்றிய கவிதை ஏதேனும் வெளி வந்து அது என்னைக் கோபமாக்கி என்ன செய்வது என்று நான் பல்லைக் கடித்துக் கொண்டிருக்கும்போது, உங்களை அழைத்து ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கிறேன்..! அல்லது நடக்க முயல்கிறேன்..!

அப்போதும் நான் சட்டத்தின் துணையைத்தான் நாடுவேனே தவிர.. நானே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்ய மாட்டேன்..!

[[[தமிழச்சியை மிரட்ட தமிழ்மணத்திற்கு விண்ணப்பித்த கருத்துரிமைக் காவலர்தானே இவர்]]]

இதை மட்டும் தோழர் தமிழச்சி படித்தால் உங்கள் நிலைமை என்னாகுமோ தெரியவில்லை அசுரண்ணே..!

“என்னை எவண்டா.. எந்தக் கபோதிடா.. மிரட்டுறது..?” அப்படீன்னு வரிஞ்சு கட்டிட்டு உங்ககூடத்தான் சண்டைக்கு வருவாங்க..! எங்க அனுபவம் அப்படீண்ணே..!

[[[ஏனென்றால் போலீசுக்கு அராஜகம் செய்யும் உரிமை உண்டு என்று நம்பும் சோவின் சீடர்தானே அவர்.]]]

ஏண்ணே.. தேவையில்லாம சோ ஸாரை இதுல இழுக்குறீங்க..? நான் சோ ஸாரின் சீடன்ன்னு உங்களை மாதிரி நிறைய பேர்தான் வேலை வெட்டியில்லாம சொல்லிக்கிட்டிருக்கீங்க..!

துக்ளக்கில் வந்த சில அட்டைப் படங்கள், கருத்துப் படங்கள் எனது அரசியல் கருத்துக்களோடு ஒத்துப் போயிருந்ததால், அவற்றை ஸ்கேன் செய்து எனது தளத்தில் வெளியிட்டு வந்தேன். எனக்கு ஒத்துப் போயிருந்தால் மட்டுமே..! பல விஷயங்களில் அவருடைய கருத்துக்கும் எனக்கும் மலையளவு வித்தியாசங்கள் உண்டு..!

உதாரணங்களாக.. மகளிர் மசோதா, மனித உரிமை மீறல், காவல்துறையின் அத்துமீறல், வீரப்பன் வேட்டை, இந்த வேட்டையில் பலிகடாக்களாக ஆக்கப்பட்ட அப்பாவி மலைவாழ் மக்களின் கதி, ஈழப் பிரச்சினை.. இப்போது பார்வதியம்மாளைத் திருப்பியனுப்பிய விவகாரம்.. இப்படி நிறைய இருக்குண்ணே..!

நமக்குத் 'துக்ளக்'குல பிடிச்சது கட்சிகளின் நடவடிக்கைகளைப் பற்றி புட்டு புட்டு வைப்பார் பாருங்க.. அது ஒண்ணுதான்..!

'துக்ளக்'ன்னாலே வயித்து வலி வந்த மாதிரியும், வாந்தி பேதி ஆகுற மாதிரியும் பயப்படுறவங்களுக்கு இதெல்லாம் தெரியாது.. புரியாது..!

சொல்றவங்க.. சொல்லிக்குங்க..!

[[[லீனாவுக்கு மட்டுமே பம்மி பதுங்கும் இந்தக் கருத்துரிமை காவலர் சதாரண மக்களின் சில்லரைத் தவறுகளுக்கு எதிராக பிரயோகித்துள்ள அராஜகங்களில் ஒன்றை பார்ப்போமா? சினிமாத் தியேட்டரில் கள்ள டிக்கெட் விற்பவர்களுக்கு எதிராக அண்ணன் உ.த.வின்  .

@@@நான் அவருடன் வாக்குவாதம் செய்வதைப் பார்த்தபடியே இருந்த ரவுடிகள் கூட்டம் தூரத்தில் இருந்தே என்னை கவனித்தபடியே இருந்தார்கள். எனக்கு என்ன வேகம் வந்ததோ தெரியவில்லை. சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்து கத்திக் குவித்துவிட்டேன். "எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா..? காசு இருக்குதுன்னு நிறைய பேரு அள்ளி வீசுறதாலதான் அவன் கொள்ளையடிக்கிறான். ஏண்டா நாய்களா கொடுக்குறீங்க?" என்று கத்தினேன்.(இந்த வாரம் முழுக்கவே ரொம்ப டென்ஷனா இருக்கு) கூட்டம் வேடிக்கைதான் பார்த்ததே ஒழிய.. உதவிக்கு வரவில்லை..@@@

@@@அண்ணன் கமல் வெடிகுண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைக்கும்போது இந்தத் தியேட்டரிலும் அப்படியொரு குண்டை வைக்கக் கூடாதா என்றுதான் எனக்குத் தோன்றியது.@@@

தியேட்டரில் டிக்கெட் பிளாக்கில் விற்கும் அநியாயத்துக்கே உ.த. அண்ணாச்சிக்கு இவ்வளவு கோபம் வருகிறது. அவரை யாராவது சினிமாவுக்கு வா என்று கூப்பிட்டார்களா? அல்லது கள்ள டிக்கெட்டில் பார் என்று கூவி அழைத்தார்களா? கவுண்டரில் டிக்கெட் இருந்தால் பார், இல்லையெனில் என்னைக்கு கிடைக்கிறதோ அன்று வந்து பார். இதுவே அவரது கருத்துரிமை கோட்பாட்டின்படி சரியான நடைமுறையாக இருக்க முடியும். ஆயினும், நம்ம அண்ணாச்சி, அங்கு சென்று போலீசுக்காரரையும், டிக்கெட் விற்றவர்களையும் திரும்பத் திரும்ப தொந்தரவு செய்துள்ளார், பிறகு யாரும் எதுவும் செய்யாமலேயே (ஒருத்தனும் அவரை கண்டுகொள்ளவில்லயென்றவுடன்) அவரது கோபம் உச்சத்துக்குச் சென்று 'டேய்' 'போய்' என்று சுற்றியிருந்தவர்களை கத்தி அவதூறு செய்து ரவுடியிசம் செய்துள்ளார். குண்டு வைத்து அவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் விருப்பபட்டு பயங்கரவாதியாக மாறியுள்ளார்.]]]

அண்ணே.. அது சினிமா ரசிகர்களுக்கான இடம். அந்தச் சினிமா அரசால் அங்கீகரிக்கப்பட்டு வெளி வந்திருக்கிறது. படம் பார்க்கச் செல்வது எனது உரிமை.. அதனால் சென்றேன்.. தியேட்டருக்கு வந்து படம் பார் என்று சொல்லியிருப்பது அரசு. அங்கே எனக்காக சில வசதிகளை செய்து வைத்திருப்பதாக உறுதியளித்திருப்பது அரசு. டிக்கெட் விலையை நிர்ணயம் செய்திருப்பது அரசு.. அதனை சரியான முறையில் கவனிக்க வேண்டியது அரசு. எனது அரசு  அதனைச் செய்யவில்லை என்னும்போது சாதாரண பாமரனுக்கு என்ன தோணுமோ அதுதான் எனக்கும் அன்றைக்குத் தோன்றியது..! அந்த நிமிடத்தில் என் மனதில் தோன்றிய எண்ணத்தைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். போலியாக இல்லையே..!

[[[ஆனால், ம.க.இ.க.வினரோ லீனா கூட்டத்தில் அமைதியாகவே கேள்வி கேட்டுள்ளனர், லீனா கும்பல் திட்டத் தொடங்கிய பிற்பாடே ஆக்ரோசம் அடைந்து பதிலுக்குத் திட்டியுள்ளனர். இத்தனைக்கும் ம.க.இ.க. கோபம் கொண்டதோ சமூகப் பிரச்சினைக்கு.. ஆயினும் இவர்கள் கருத்தில் அது அராஜகவாதம். உண்மைத்தமிழன் போன்றோரின் சினிமா டிக்கெட் பிரச்சினையோ ஜனநாயகவாதம்.]]]

அரசு முறைப்படி நிர்ணயித்திருக்கும் சினிமா டிக்கெட்டின் விலையை உயர்த்தி பிளாக்கில் விற்காதீர்கள் என்று சொன்னதென்ன எனது தனிப்பட்ட பிரச்சினையா..? அதுவும் சமூகப் பிரச்சினைதான் அண்ணாச்சி..!

[[[அடப் போங்கப்பா.. முருகன் ஏன் கோவனத்தோடு பழனியில் குந்தியிருக்கான் என்று இப்போதான் தெரியுது. உ.த. மாதிரி பக்தர்களின் சல்லை தாங்கமால்தான் கோவணமாவது மிஞ்சட்டும் என்று அங்கு போய்விட்டான்.]]]

சத்தியமான உண்மைதாண்ணே.. "நம்ம பசங்க தொல்லை தாங்க முடியலை.. வர்றவனெல்லாம் எனக்கு அதைக் கொடு.. இதைக் கொடு.. இம்புட்டு கொடு.. அள்ளிக் கொடு.. கிள்ளிக் கொடுன்னு கேக்குறாங்க.. அல்லாருக்கும் தூக்கிக் கொடுக்க என் மாமன் திருமலையான் மாதிரி நானென்ன கோடீஸ்வரனா..?" அப்படீன்னு நினைச்சுத்தான் என் அப்பன் முருகன் கோவணத்தோட நிக்குறான்.. இப்ப வர்றவனுங்க என்ன கேப்பானுங்க..? இருக்கிறதே கோவணந்தான..?

[[[ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்@@

மொத்தத்தில் அங்கு கெட்டவார்த்தை பேசியது கத்தியது எல்லாம் ம.க.இ.க.வினர் மட்டுமே, லீனா தரப்பினர் அமைதியாகவே (சிலர் உணர்ச்சிவசப்பட்டு 'டா' என்று சொன்னது தவிர்த்து) இருந்தனர், லீனா சும்மா ஓடிப் பார்த்தார், தோழர்களோ கொலை வெறியோடு பாய்ந்தனர், என்று உண்மையை உள்ளபடியே பதிவு செய்துள்ளார் உண்மைத்தமிழன்.]]]

இல்லை.. அவர்களும் கோபத்தில் கத்தினார்கள். பேசினார்கள். ஆனால் உங்கள் அளவுக்கு தரம் தாழவில்லை..! பெண்கள் தரப்பில் மதுரையில் இருந்து வந்திருந்த ரஜினி என்கிறவரும், கவின்மலரும்தான் மரியாதையாக மன்றாடிக் கேட்டுப் பார்த்தார்கள்.

ரஜினி சிறிது நேரம் கழித்து கோபத்தில் “எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. போங்க.. நீங்க போங்க.. வெளில போங்க.” என்று கோபத்தில் பொங்கினார். கவின்மலரோ அவ்வப்போது மைக்கில் நாகரிகமாக அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். நீங்கள் யாரும் கேட்கவில்லை. கடைசியில், "தோழர்களே தயவு செய்து வெளியேறுங்கள். நாங்கள் உங்களை இங்கே அழைக்கவில்லை. நீங்கள் வெளியேறலாம்.." என்று மரியாதையுடன் கேட்டுக் கொண்டார்..!

[[[இன்னொன்றையும் அவர் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். லீனா தரப்பினரை அடித்து, துவைத்து காயப்போட்டு, வெளியே அனுப்பிவிட்டு கூட்டத்தை ம.க.இ.க. மொத்தமாகக் கைப்பற்றிக் கொண்டது என்று.]]]

இவ்ளோ பெரிய பொய்யை நான் எப்படிங்கண்ணே உண்மைன்னு  சொல்ல முடியும்..?

[[[எதுக்கு சார் பெயரில் தேவையில்லாமல் 'உண்மை'யை வைச்சிருக்கீங்க? பெசாம எடுத்துடுங்க எல்லாம் வல்ல முருகப் பெருமானாவது பிழைத்துப் போகட்டும்.]]]

வைக்கச் சொன்னவனே அவன்தானே..!!!

[[[வினவு மீதான உண்மைத்தமிழனின் ஆத்திரத்திற்கு காரணங்களில் ஒன்று புளுபிலிம் தியேட்டரை உடைத்து அவரது எண்டெர்டெயின்மெண்டுக்கு ஆப்பு வைத்தது என்பதாகக் கருதலாம்(எனது கருத்துச் சுதந்திரம்)]]]

இதற்கான பதிலை நான் மேலே சொல்லியிருக்கிறேன். உங்களது கருத்துச் சுதந்திரத்திற்கு எனது சல்யூட்..!

[[[ஈராக், ஆப்கானில் போராடும் மக்களை படு மோசமாக இழிவுபடுத்தி கவிதை என்ற பெயரில் குடித்துவிட்டு எழுதினார்கள் அவரது ‘இனிய நண்பர்’கள். அவர்கள் உண்மைத்தமிழனின் ‘இனிய நண்பர்’கள் என்பதால் ம.க.இ.க.வினர் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதும், அதுவே ஜனநாயகம் என்பதும் அவரது எதிர்பார்ப்பாக இருக்கலாம்.]]]

நான் எங்கண்ணே அப்படிச் சொன்னேன்..!?

[[[அவ்வாறு இருக்க முடியாது. சரி இவராவது இவரது ‘ஜனநாயக முறை’ப்படி ‘இனிய நண்பர்’களிடம் ஐயன்மீர் ஏன் இவ்வாறு கவிதை எழுதினீர்கள் என்று கேட்டாரா (இப்போது லீனாவின் கருத்துரிமைக்காக பக்கம் பக்கமாக எழுதி சோடா குடிக்கிறார் இல்லையா..! அது போன்றதொரு உன்னதமான அக்கறையின் வெளிப்பாடாக ஈராக் மக்களின் கருத்துரிமைக்காக அவர்களிடம் பேசினாரா?)  என்றால் அதுவும் இல்லை.]]]

அதெல்லாம் அப்பவே பேசி முடிச்சாச்சுண்ணே.. பதிவுலகம்னா என்னன்னு தெரியாத காலம் அது.. கவிதை எழுதவது அவரவர் உரிமை.. பிடித்திருந்தால் பாராட்டலாம். பிடிக்காவிட்டால் விமர்சிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் எதிர் கவிதை எழுதலாம்..! ஆனால் கை கலப்பும், நேரடித் தாக்குதலும் மட்டும் கூடவே கூடாது..!

[[[மொத்தத்தில் இவருக்கு இவரது நட்பு முக்கியம், எங்களுக்கு எமது கற்பு (அவருக்கு கற்பு தேவையில்லாமல் இருக்கலாம்)]]]

கற்பா..? அப்படீன்னா..?

[[[முக்கியம் என்ற சின்ன லாஜிக்கை அராஜகவாதம் என்ற பெரிய பிரேமில் போட்டு அடைக்க முயன்று சோடா குடித்துள்ளார் உண்மைத்தமிழன்.]]]

அச்சச்சோ.. நட்புதான் கடைசியா சுடுகாடுவரைக்கும் வரும்னு தெரியாதாண்ணே உங்களுக்கு..!

[[[அத்தனைக்கும் அவரது ‘இனிய நண்பரி’ன் வீட்டுக்குச் சென்று அவரது சுற்றத்தாரிடம் இந்தக் கவிதையை எழுதியவர் இவர்தான், இதில் உங்களுக்கு ஒப்புதலா என்றுதான் தோழர்கள் கேட்டுள்ளார்கள்.]]]

இதைத்தான் தப்பு என்கிறோம். இதைச் செய்ய நீங்கள் யார்? யார் உங்களுக்கு இந்த அனுமதியைக் கொடுத்தது...? இந்திய அரசா..? தமிழக அரசா..? இந்திய அரசியலமைப்புச் சட்டமா..? மொதல்ல அதைச் சொல்லுங்க..! அரசுகளையும், சட்டத்தையும் நம்பித்தான் இங்கே மக்கள் வாழ்கிறார்களே தவிர.. உங்களை நம்பி அல்ல.. உங்களுக்காகவும் அல்ல.! உங்களிடம் இது பற்றி விளக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கில்லை..!

[[[இத்தனை கூறிய பிறகு ஒரு கேள்வி எழலாம் கருத்துச் சுதந்திர புனிதக் கூட்டணியாளர்கள், எப்போதுமே அராஜகவாதம் தவறுதான் என்று சொல்லும் உத்தமர்கள், ஆனால் ம.க.இ.க.வினரோ அயோக்கியத்தனத்திற்கு அராஜகமே பதில் என்று சொல்லும் வன்முறையாளர்கள் என்ற கருத்து சரிதானே?]]]

எது அயோக்கியத்தனம் என்பதே இன்னும் முடிவாகலை.. அதையும் நீங்களே முடிவு பண்ணிக்கி்டடீங்கன்னா எப்படிங்கண்ணா..?

[[[நிற்க, மேற்படி உண்மைத்தமிழன் - அய்யனார் அண்டு கோவின் கருத்துரிமை கபர்தஸ்து சுத்த சுயம்புவான அராஜகவாதமாக பல்லிளிக்கும் இடமே ‘இனிய நண்பர்’ விவகாரத்திலும் லீனா விவகாரத்திலும்தான் உள்ளது. அதாவது, எந்தவொரு விசயத்தையும் மக்களிடம் முன் வைத்து பிரச்சாரம் செய்யும் நடைமுறையைக் கொண்ட ம.க.இ.க. நான் மக்களிடம் சென்று இவற்றை பேசிக் கொள்கிறேன் என்று சொன்னால் அது கருத்துரிமைக்கு எதிரான பாசிசம் என்கிறார்கள் இந்த அராஜகவாதிகள். அதாவது, மக்களுக்கான கருத்துரிமையை எதிர்க்கிறார்கள். அதாவது, மக்கள் முட்டாள், அவர்களுக்கு இவற்றை புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது என்ற மேட்டுக்குடித் திமிரிலிருந்து வரும் அராஜகவாதமே இவர்களின் கூற்று.]]]

உங்களது பிரச்சாரத்தை நாங்கள் தடை செய்யவில்லையே.. ஆனால் அது யாருடைய தனி மனித உரிமையையும் பாதிக்கக் கூடாது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுத்திருக்கும் ஒரு உரிமை..!

[[[இன்னும் சொன்னால் எதையும் சொல்லும், தெரிந்து கொள்ளும் ‘கருத்து’ உரிமை எங்களை மாதிரி இண்டலெக்சுவலுக்கு மட்டுமே உண்டு, மக்கள் எல்லாம் அந்தளவுக்கு வளரவில்லை, அவர்களுக்கும் சேர்த்து நாங்களே படித்து சிந்திக்கிறோம் எனவே மக்களுக்கு அனைத்தும் அறிந்துகொள்ளும் ‘கருத்து’ உரிமைக்கான வாய்ப்பை வழங்கி விடாதே என்பதே இந்த அராஜகவாதிகளின் கோரிக்கை.]]]

இப்ப அராஜகம் செஞ்சது நீங்களா..? அவங்களா..? இல்ல நாங்களா..? குழப்புறீங்களே..! நாங்க என்னிக்கு இண்டலெக்சுவல் என்று எங்களைச் சொல்லிக் கொண்டு சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தடாலடியில் இறங்கியிருக்கிறோம். செஞ்சதெல்லாம் நீங்க.. பழி எங்க மேலயா..?

[[[மக்களைப் பார்த்துப் பயப்படும் இவர்களின் பிழைப்புவாத அரசியலும், உ.த.வின் எதிர்ப் புரட்சி அரசியலும் புரட்சியாளர்களுக்கு எதிராக இவ்வாறு புனிதக் கூட்டணி சேர்ந்துள்ளது.]]]

அண்ணே.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. டூ மச்சு.. ஏதோ நானே ஓசில கிடைச்சிருக்கு.. தமிழ் டைப்பிஸ்ட்டு.. கொளுத்திரலாம்னு நினைச்சு ஏதோ என் மனசுல தோணுறதை டைப் செஞ்சு போட்டுக்கிட்டிருக்கேன்.. என்னைய போயி.. அரசியல் நடத்துறேன்.. எதிர்ப் புரட்சி அரசியல்.. அது.. இதுன்னு எழுதுறீங்களேண்ணே.. இதைப் படிக்கிறவங்க கண்டிப்பா சிரிக்கத்தான் போறாங்க.. பாருங்க..!

[[[அராஜவாதத்தை உள்ளடக்கமாகக் கொண்ட இவர்கள் புரட்சியாளர்களை அராஜகவாதிகள் என்று சொல்வது வேடிக்கையானது. இவர்களின் கருத்துரிமை ஆவேசங்கள் ஆபரேசன் கிரின் ஹண்டு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து என்றுமே வெளிவராது.]]]]

அண்ணே.. எங்களுக்குப் புரியற விஷயம்னா.. தெரிஞ்ச விஷயம்னா.. படிச்ச விஷயம்னா எங்க தளத்துல.. எங்களுக்குப் பிடிச்சமான முறைல எங்களோட மனசாட்சிப்படி நியாயமா நடிக்காம எழுதி வைப்போம்ண்ணே.. இதுக்கு நீங்க என்ன பேர் வேண்ணாலும் வைச்சுக்குங்க..!

[[[உண்மைத்தமிழனோ, அய்யனாரோ இது சார்ந்து பதிவு போட்டதாக தெரியவில்லை. அவர்களது அதிகபட்ச கருத்துரிமை எதிரிகள் கள்ள டிக்கெட் விற்பவன், சூடு வைத்த ஆட்டோ மீட்டர், போன் கனெக்சனுக்கு கமிசன் கேட்பவன், அப்புறம் லீனாவை எதிர்க்கும் வினவு போன்றோர். லீனாவின் யோனிக் கவிதையில்தான் உனது கருத்துரிமை கொப்புளிக்கிறது என்றால், ஆப்புரேசன் கிரின் ஹண்டு போன்றவற்றில் கருத்துரிமை பறி போவது பற்றி நீட்டி முழக்க நீ தயாரில்லை எனில், உன்னுடைய கருத்துரிமை என்ற பெயரிலான அராஜகவாத பிதற்றலை யோனி மசிராகக்கூட நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை.]]]

வேண்டாம்ண்ணே.. மயிராப் போச்சு.. விட்ருண்ணே..! நீங்க உங்க லெவலுக்கு எதிராளியைப் பாருங்கண்ணே.. நான் என் லெவலுக்கு பார்க்குறேண்ணே.. அத்தோட நிறுத்திக்குவோம்ண்ணே..!

[[[புரட்சிக்காரன் சமூக விரோத சக்திகளிடமிருந்து தன்னைக் காக்க தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான், அயோக்கியன் மக்களிடமிருந்து தன்னைக் காக்க தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான். இரண்டும் ஒன்று என்பது அயோக்கியர்களின் கருத்தாகத்தான் இருக்கும். இப்படியாக அனைவருக்குமான இவர்களின் கருத்துரிமை, அராஜகவாதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு அற்பமானதுதான் இவர்களது கருத்துரிமை அராஜகவாதம். அதாவது லீனாவின் யோனிக்கு மட்டுமே இவர்களது கருத்துரிமை செல்லுபடியாகும்.]]]

இந்தப் பத்திக்கு யாராவது விளக்கம் சொல்லிட்டா இதே மாதிரி இருபது பக்க மேட்டரை நான் இலவசமா தட்டச்சு செஞ்சு தர்றேன்..!

அப்பாடா.. இப்ப நாலு சோடாவை ஒரே நேரத்துல குடிக்கணும் போலிருக்கு..!

அசுரன் அண்ணே.. மூணு வருஷமா இருந்த புகையை, பகையா மாத்தி ஒரே பதிவுல தீர்த்துக்கிட்டாருன்னு நினைக்கிறேன்..! ரொம்பக் கொடுமைடா முருகா..!

நான் அப்படியென்ன எழுதிட்டேன்..!

"லீனாவின் கவிதைக்கு விளக்கம் கேட்க நினைத்த வினவு அண்ட் கோவின் முயற்சி தவறில்லை. ஆனால் கேட்டவிதம்தான் தவறு" என்கிறேன்.. இது தப்பா..?

"அவர்களுக்கு எதிரான கூட்டம் என்று தெரிந்தும், வந்திருந்து கூட்டம் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தது தப்பு"ண்ணேன்.. இது தப்பா..?

"லீனாவின் கவிதையே ஆபாசம் என்றால் அதற்கு வினவு எழுதிய மறுப்பு கவிதை அதைவிட ஆபாசம்.. இருவருமே ஒருவராக மாறிவிட்டார்கள். பின்பு வினவுக்கு லீனாவைக் குற்றம் சொல்ல என்ன உரிமை இருக்கிறது?" அப்படீன்னு கேட்டேன்.. இது தப்பா..?

"ஒரு ஆள் என்ன வேண்ணாலும் எழுதட்டும்.. பிடிக்கலைன்னா நீங்களும் எதிர்க் கருத்தை எழுதுங்க.. பேசுங்க.. கூட்டம் போடுங்க.. நடத்துங்க.. இல்லைன்னா கோர்ட்ல கேஸ் போடுங்க.. போலீஸ்ல புகார் கொடுங்க.. " அப்படீன்னு சொன்னேன்.. இது தப்பா..?

"இதையெல்லாம் விட்டுப்போட்டு வீட்டுக்குப் போய் விளக்கம் கேட்பேன். அக்கம்பக்கத்துல அவரைப் பத்திச் சொல்லி விளக்கம் கேட்பேன்.. இழுத்துட்டுப் போயி ஆபீஸ்ல கட்டப் பஞ்சாயத்து செய்வேன்.. இப்படியெல்லாம் செய்றது நியாயமா..?" அப்படீன்னு கேட்டேன்.. இது தப்பா..?

என்னங்கய்யா இது..? இது என்ன சுதந்திர நாடா.. இல்லை அடிமைகள் நாடா..?

டிராபிக் போலீஸை பார்த்தா பயப்படணும்..! ரேஷன் கடைக்காரனைப் பார்த்தா பயப்படணும்..! தாசில்தார் ஆபீஸ்ல பியூனை பார்த்தா பயப்படணும்..! வி.ஏ.ஓ.வை பார்த்தா பயப்படணும்..! ரெவின்யூ இன்ஸ்பெக்டரை பார்த்தா பயப்படணும்..! செத்ததுக்கு சர்டிபிகேட் வாங்க டாக்டரை பார்க்கப் போனா அவருக்கும் பயப்படணும்..! ஆளும் கட்சி தொண்டனை பார்த்தாலும் பயப்படணும்..! எதிர்க்கட்சி வட்டச் செயலாளரைப் பார்த்தாலும் பயப்படணும்..! எல்லாக் கட்சித் தொண்டர்களை பார்த்தாலும் பயப்படணும்..! பதிப்பாளரை பார்த்தாலும் பயப்படணும்.. பத்திரிகை ஆசிரியரைப் பார்த்தாலும் பயப்படணும்..! கார்ப்பரேஷன் கிளார்க்கை பார்த்தாலும் பயப்படணும்..! கவுன்சிலரை பார்த்தாலும் பயப்படணும்..! கார்ப்பரேஷன் கக்கூஸ் வாசல்ல உக்காந்திருக்கிறவனைப் பார்த்தாலும்கூட பயப்படணும்..!  கடைசியா சுயமா கருத்தை எழுதினால்கூட எதிர்ப்பாளருக்குப் பயப்படணும்..! உஷ் முருகா..

நாட்டுல யார், யாருக்குத்தான் பயப்படறது..? இன்னும் எத்தனை பேருக்குத்தான்யா பயப்படுறது..? ஆள் மாத்தி ஆள் சட்டம் என் கைலதான் இருக்குன்னு கூட்டத்தைக் கூட்டி மிரட்டினா.. தனி ஆளு.. காமன்மேன்.. பொது ஜனம்.. என்னை மாதிரியான மிடில் கிளாஸ் மாதவன்கள் என்னதான் செய்யறது..?

அடப் போங்கண்ணே.. நீங்களும் உங்களோட புண்ணாக்குப் புரட்சியும்..!


55 comments:

Senthilkumar said...

உண்மைத்தமிழன் அண்ணே வணக்கம்,

நானும் சிறிது காலமாக பிளாக் படிச்சிட்டு வரேன்.
இங்க மற்ற விசயங்களை விவாதிப்பதை விட, தனிப்பட்ட தாக்குதல்கள் தான் அதிகமாக வருகிறது. வர வர பிளாக் படிக்கறதே விட்டிடலாமுன்னு இருக்குதுண்ணே.

நீங்க வழக்கம் போல எழுதுங்க, இவர் மாதிரி ஆளுங்களை கண்டுக்காம விட்டிருங்க.

Right vidu.. Joot......

? said...

கருத்த சொல்ல நீங்க ஏன்னா பயப்படுறீங்க .. அதான் ஆனானப்பட்ட அஜால் குஜால் அலம்பல் கவிதைக்கே எழுத உரிம இருக்குன்றீங்க• அதுல உபரி மதிப்ப அவ எதுக்கு நிகரா வச்சிருஃக்கானு பாத்தா அதயே பொழப்பா நினைச்சி வாழ்க்கய அர்ப்பணிச்சவனுக்கு கோபம் வரக்கூடாதா... கேட்டா சிபிஎம் பாலபாரதி சொன்ன மாரி நீங்க எது செஞ்சாலும் சட்டப்படி தான் செய்யணும். எதுக்கும் ஒரு முறைன்னு ஒன்னு இருக்குல்லா அப்படிங்குறீங்க•.. இத்தானே அவங்களும் சொல்றாங்க•. முருகா முருகா

எல்லா வகையிலும் என்பது லீணா அடிக்க பாய்ந்த போது என்னவாக உணர்ந்தீர்கள். ஆமா அது என்னங்க கவித எழுதுன அம்மிணி இன்னும் சாகல• அவ கவிதக்கு நீங்க விளக்கம் சொல்றீங்க• அம்மிணி சாதாரண பட்டவங்க கேட்டா நேரா பதில் சொல்ல மாட்டாங்க•(அம்மா ஜனநாயகம் முருகா). அம்மா அடிக்க வந்த்த‍ நான் பக்கத்தில் இருந்து பாத்தேன். ஆனா பாருங்க ஏன் கண்ணு மாலைக்கண்ணுனு எனக்கோ டபாக்குறீங்க• அதுவும் பத்து நாள் சென்ன அப்புறம் சொல்றீக•. முருகா முருகா

தியோட்டர அடிச்சா போலிச அடிங்கிரீங்க•. சங்கரசுப்ரமணிய கேக்க வந்தா தமிழ்செல்வன் வீட்டுக்கு வரமுடியுமாங்குறீஃங்க•. கருணாநிதிக்கு தோழர்கள் உயர்நீதி மன்றத்தில கருப்பு கொடி காட்டுனா அறிவாலயத்தில தினசரி காட்ட முடியுமான்னு சிபிஎம் காரன் கேக்குறான். என்னதான் செய்யணும்னு அறிவாளிங்கல்லாம் சேந்து ஒரு முடிவு எடுங்க•.. சட்டப்படிதான் செய்யணும்னு சொன்னா அது தனியா பேச வேண்டிய விசயம்னே.. சட்டப்படி இல்லாத எதிரய சட்டப்படி மாத்திரமே எதுக்கணும்னா நீங்க நேரடியாக அதிகம் பாதிக்கபடாதவரா இருந்தா மாத்திரம்தான் இப்படி பேசுவீகனு நெனைக்கேன்.

புரட்சிவாதின்னு பேரு எடுக்கதுக்காக 50 பேரு அன்னிக்கு வந்தாங்களா.. இது லீனா கவிதய விட மோசமா இருக்கே.. சரி இத நேர அடுத்த பதிவர் சந்திப்புல இல்லாட்டி இத்தா பெரிய சென்னல எங்காச்சும் பாக்குறப்ப நேர்ல பேசிக்குவம். 50 பேரு லீனாவுக்கு ஜனநாயகத்த மறுத்துதான் புரட்சிவாதி ஆவணுமா. ஜனநாயகத்த போராடி பெறாத ஒரு பின்தங்கிய சமூகத்தில பிறக்குற அறிவாளிங்க தொல்ல இதுதான்.. நீங்க பாட்டுக்கு எது நடந்தாலும் ஜனநாயகம் அது இதுன்னு உங்கள விட கீழ இருக்குறவங்க போராடுறப்ப பேச வந்துருவீங்க•. இத மேல இருக்குற மின்பிம்பங்கள் பாலச்சந்தர் போன்றவங்க்கிட்ட பேசாம ரெட்டச்சுழிக்கு மூணு சுழி போட போயிருவீங்க•. ஆனா ஒரு ஏரியாவுல தண்ணி இல்லாம மக்கள் காலங்காத்தால மறியல் செஞ்சா கூட நீங்க ஆபீசு போற ஜனநாயக உரிமய அவுக போராட்டம் பாதிச்சுரும். பாருங்க தண்ணி வராட்டி கூட அவுங்க நீதிமன்றம் போயி பெர்மிசன் வாங்கி சட்டப்படிதான மறியல் நடத்தணும். என்ன பன்றது அவுக வேற அறிவாளிகள் னு சொல்லிட்டீங்க•.

லீனாவின் தனிமனித வாழ்க்கையை பற்றிய கேள்வியை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றால் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கும் உபரிமதிப்பு என்ற மார்க்சியத்தின் முக்கியமான பகுதியை தனது கவிதையில் பாலியல் குறியீட்டிற்கு நிகராக வைக்கும் வன்மத்தை அதாவது அம்மக்களின் விடுதலையும் தனது யோனி மயிரும் ஒன்று என்பதன் மூலம் அம்மக்களையும், உபரிமதிப்பை புரிந்து த்ங்களது வாழ்க்கையை புரட்சிக்கு ஒப்படைத்திருக்கும் உலகப் போராளிகளையும் யோனி மயிருக்கு ஒப்பிட்டு பேசிய தற்கு எப்படி அம்மணிக்கு உரிமை இருக்கிறது. இது செலக்டிவ் டெமாக்ரசியா அய்யா.

tamil said...

ம.க.இ.க வினரை விமர்சித்தால் அவர்களின் எதிரி பட்டியலில் சேர்த்து விடுவார்கள் போலிருக்கிறது.
லீனாவின் கவிதை எனக்கு பிடிக்கவில்லை, உங்கள் எதிர்ப்பை நாகரிகமாக காட்டுங்கள் என்று எழுதினால் இப்படிக் குதிக்கும் அசுரனோ,வினவோ ஒரு போதும் சினிமாவில் கவிதை எழுதும் பேர்வழிகளிடம் சங்கர ராம சுப்பிரமண்யனிடம் நடந்தது கொண்டது போல் நடந்து கொள்ள மாட்டார்கள்.ஏனெனில் அங்கெல்லாம் தகராறு செய்தால் என்ன பதிலடி கிடைக்கும் என்று தெரியும். உண்மைத் தமிழன்,அய்யனார்,ரோசா வசந்த் என்று இப்படி குறிப்பாக எழுதினால் அவர்கள் மிரண்டு ம.க.இ.கவினரிடம் இனி இப்படி எழுத மாட்டோம் என்று எழுதிக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறார்களா என்ன?.
வலைப்பதிவர்கள் இந்த கும்பலை
புறக்கணிக்க வேண்டும்.வினவு தளத்தை தவிர்க்க வேண்டும்.
ம.க்.இ.க ஆதரவு பதிவாளர்களான
ருத்ரன் போன்றவர்கள் இந்த கும்பலை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.

? said...

ம•க•இ.க தோழர்கள் அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வாய்ப்பே இல்லை. கூட்டத்தை முழுவதும் கவனித்து கொண்டுதான் இருந்தேன். எனது மின்னஞ்சலுக்கு வார்த்தைகளை ஆட்களை குறிப்பிடும் பட்சத்தில் இதுகுறித்து அந்த அமைப்பின் தோழர்களிடம் விமர்சனமாக வைக்க நானும் கடமைப்பட்டுள்ளேன். கிசுகிசுவாக இது இல்லாத பட்சத்தில் உண்மையான தமிழனாக இருக்கும்பட்சத்தில் இதனை எனக்கு அனுப்பி தருவீர்கள் என நம்புகிறேன்.

அந்த அம்மணி அடிக்க மட்டும் வரவில்லை. காலையும் தூக்கிக் கொண்டு மிதிக்கத்தான் வந்தார்கள். நிறைய கேசட் எடுத்தார்கள். போகஸ் பண்ணி பாருங்க• மேல மட்டும் பாக்காதீங்க கீழயும் பாருங்க• பக்கத்தில் நின்றவன் என்ற முறையில் அனைத்தையும் பார்த்தேன். அம்மணியின் ஜனநாயத்தை விடுங்கள். கணேசனை பேச விடவதற்கே அ.மா விடம் பரிந்துரை செய்த கே.ஏ.கே விடம் போய் கேட்டுப் பாருங்கள். எவ்வளவு நேரம் அவர் அமா விடம் வாதாடினார் என்று. இந்த கூட்டம் முறையற்றது என்பதை ம•க•இ.க தோழர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னேரே எழுந்து அ.மா விடம் வாதாடி வெளியில் சென்ற பேச்சாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்த இந்திரனிடம் கேட்டுப் பாருங்கள்.

கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள சொல்லி நீங்கள் யார் சார்பாக யாருக்கு சொல்லுகிறீர்கள். க்ம்யூனிச எதிரிகள் சார்பாக கம்யூனிஸ்டுகளிடம் சொல்கிறீர்கள். உங்களது பதிவின் கடசியில் புரட்சியையும் புண்ணாக்கையும் நிகராக வைத்து கட்டுரை எழுதி உள்ளார்கள். அதற்கு வேறு பொழிப்புரை தேவையில்லை என கருதுகிறேன். சரியா எண்ணெய் தடவிட்டு வாங்க• அடுத்த பதிவர் கூட்டத்தில பாப்போம். என்ன பிரச்சின வருதுன்னு பாத்துருவோம். ம•க•இ.க தோழர்க்ள உங்கள சும்மா விட்டாலும் நான் விடுறதா இல்ல• முருகனுக்கே பாதுகாப்பா இருந்த அண்ணன் வீரபாகு என்ன பாத்துக்உகவான்

ஒரு கம்யூனிஸ்டு கட்சி எழுப்புகிற கேள்வியில் தொழிலாளி ஒருவன் தாக்கப்பட்ட செய்திக்கு விளக்கம் கேட்டா கட்டப்பஞ்சாயத்து பண்ணி சமாதனம் சொல்லி போக சொல்லிட்டோம்னு சொல்லுவீங்களா.. உங்கள சொல்லி குத்தமில்ல• மதுர சிபிஎம் காரனுகள சொல்லனும். ஏண்டா மானத்த வாங்குறீங்க• பேர மாத்துங்கடான்னு சொன்னா கேக்குறானுகளா.

மறுநாள் கூட்டம் போடலாம்னு வச்சுக்கோங்க• ஆனா அறிவாளி கூட்டங்களுக்கு ஒன்னு புரியலயே. லீனா ஒன்னு எழுதுறாக• அத தடுக்க சொல்லி சட்டப்படி இந்து மக்கள் கட்சி புகார் தர்றான். அவன் பண்ணுனத ஏத்துக்குறீங்களா சட்ட தமிழன். சரி அத எதுத்துதான கூட்டன் அப்புறம் எப்புடி அத ஜனநாயகம்பீங்க• சரி. இணையதள அராஜகத்திற்கு எதிராக எழுத வேண்டியதுதானே சரி (கூட்டத்திக்கு கூட்டம்னா எழுத்துக்கு எழுத்துதான பதிலு). அப்புறம் எதுக்கு கூட்டம் போட்டாங்க• இந்து மக்கள் கட்சி காரன் நியாயமானவன். நேர போயி அந்த அம்மா க‌விதய தட பண்ண சொன்னான். நீங்க என்னா பண்றீங்க•.. இந்த மாதிரி பேசி தனிப்பட்ட தாக்குதல்லாம் யாரும் யாரயும் பண்ண விடக் கூடாது ன்னு சட்டம் போட வச்சு (சட்டப்படிதான நீங்க நடப்பீங்க), எந்த ரவடி, ஓட்டுப்பொறுக்கி, ஆளும்வர்க்க ஐகான்கள், ஊழல் நீதிபதிகள், மோடி, அத்வானி, ஜெயா, கருணா என யாரையும் விமர்சனம் செய்யாமல் பதிவு உலகத்தில் மொக்கை மட்டுமே நடக்க வேண்டும் என்பதற்காக புறவாசல் வழியாக ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயக விரோத சட்டத்தை சைபர் கிரைமின் கீழ் கொண்டு வரவும் போராட முயன்றீர்கள். இந்த அயோக்கியத்தனத்தை உங்கள் வாயால் சொல்ல வைக்க முடியும். அதற்கு நேர்மையாக விவாதிக்கும் மனிதர்கள் தேவை.

மணிஜி said...

உங்கள் தரப்பை பதிவு செய்துவிட்டீர்கள்..(மூச்சு வாங்குது)

? said...

த‌னக்கு ஏற்பட்ட பிரச்சினையை பெண் எழுத்துக்கு எதிராக ஆணாதிக்க வெறியர்கள் நடத்தும் அராஜகம் என சமூக பிரச்சினை ஆக்குகிறார் உங்கது மின்பிம்பம் தோழி. தியோட்டர்ல பிளாக் டிக்கட்ட பாத்தவுடன உங்களுக்கு பிரச்சினைன உடன சமூக பிரச்சினை ஆக்குறீங்க• அதுனாலதான் சமூகம் சார்ந்த உபரிமதிப்புக்காக சண்டைக்கு வருபவர்களை உங்களைப் போன்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையோ..

அப்புறம் துக்ளக்.. நீங்க துக்ளக் வாசகரா... எனக்கு தெரிந்து சென்னலதான் நான் பாப்பானுகள ஒரே இடத்தில இவ்வளவு பேரா பாக்கேண். நம்மூரு பக்கமெல்லாம் அவனுக ரொம்ப விவரமானவுனுகனுதான் நெனச்சேன். பத்து வருசத்துக்கு முன்னால மஞ்சப் பைய தூக்கிட்டு வர்றப்ப அப்பிடித்தான் நினைச்சிட்டு தொட நடுங்கிட்டு வந்தேன். வந்த அப்புறம் பாத்த லாஜிக் இல்லாம பேசுறதுல தொண்ணூறு சதவீதம் அவன்தான் என் கண்ணுக்கு முன்னால இருந்தான். ஆனா பெரிய பதவிலயும் இருந்தான். அதுக்கு காரணம் ஒரு ஐந்து வருசத்துக்கு முன்னால துக்ளக் படிச்சப்புறம்தான் தெரிந்த்து.

த‌ரம் தாழ்த்த மொழி என்னவாக இருந்த்து என எனது மெயுல்க்காவுத அனுப்இ வையுங்கள் உண்மை அய்யா.

உங்களுடைய உரிமை மற்றவர்களது நலனை பாதிக்காதவரையில்தான் அதற்கு பெயர் உரிமை. அதன் பிறகு அது குற்றம். சட்டத்தின் மொழியில் பேசுங்கள் உணைமை.

கவிதய எழுதி டயரில வச்சுக்கிட்டா பிரச்சின இல்ல• பத்து ருவா இருக்கிற எவனும் வாங்கி படிக்கலாம்னு சொன்ன அப்புறம், அதுக்கு பதில் சொல்ல மாட்டேனு அடம் பிடிக்க முடியாது. சட்டம் வந்து பன்னாட்டு நிறவனத்தில தொழிற்சங்கம் கட்ட கூடாதுன்னு சொல்லுது. அதக் கேட்டுக்கிட்டு இருந்தா தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிம என்ன ஆகிறது அய்யா. அப்புறம் இந்த சட்டம் கூட பிடி கத்திரிக்காய் பற்றி பேசுவபவர்களை தண்டிக்க ஒப்பந்தங்களை மீறி விடுவிக்க எல்லாம் முடியாது. இந்த சட்டம் என்பது உலக வங்கியின் நிபந்தனைக்கு உட்பட்ட ஒன்றுதான் என்பதால் உலக வங்கியின் நிபந்தனைக்கு உட்பட்டு உலக வங்கியை வெளியேற்ற போராட வேண்டும் என அறிவுரை சொல்வீர்கள் பொல•

தனிமனித உரிமை என்பது சமூக மாற்றத்திற்கு எதிராக இருக்குமென்றால் அந்த உரிமை ஜனநாயத்தின் உண்மையான அர்த்த்த்தில் மறுக்கப்பட்டுதான் ஆகும். இது சட்டத்தின் மொழிதானே உஃண்மை. சட்டத்தை கையில் எடுக்கும் அளவுக்கு அறிவாளிகள் எந்த நாட்டிலும் தயாராக இர்உந்த்தாக காட்ட முடியுமா மிஸ்டர் உண்மை

இந்த ஆறு வரிகள் புரிய வேண்டுமானால் துக்ளக் படிப்பதை ஒரு வாரம் நிறுத்தி விட்டு சோடா வேண்டாம் தணிணீர் குடித்தாலே புரியும்.

ரவி said...

எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையான்னே ??

சென்ஷி said...

//செந்தழல் ரவி said...

எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையான்னே ??//

why blood? same blood!

NO said...

// அண்ணன் அசுரனுக்கு எனது பணிவான................//

// முதலிலேயே உங்களுக்கு மனசார ஒரு நன்றியைச் சொல்லிக்கிறேன்..! இங்க, வலையுலகத்துல ஏதோ ஒரு மூலைல.. யாருமே சீண்டாத.. எந்த லிஸ்ட்டுலேயுமே சேர முடியாத.. வைக்க முடியாத.. ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு வெட்டிப் பயல் நான்.. என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு எனக்காக ஒரு பதிவு போட்டிருக்கீங்க பாருங்க..! கும்பிட்டுக்குறேண்ணே..!//

//சில இடங்களில் உங்களுக்கு பின்னூட்டம் இட்டு.. அதுலேயே நான் மூக்குடைபட்டு திரும்பிய நாட்களுக்குப் பிறகு நம் அறிவுக்கு இந்த அண்ணன்கிட்டேயெல்லாம் போய் மோதக் கூடாது.. வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு ஒதுங்கிப் போறதுதான் நம்ம உடம்புக்கும், மனசுக்கும் நல்லது என்று நினைத்து ஓரமாகவே நின்றிருந்தேன்.!//


மதம் கொண்டாரை மடமை சொல்வாரை மாணிக்கம் என சொல்வீரோ
தரம் அற்று வன்மம் எனும் உரம் இட்டு
தான் வணங்கும் வன்முறைகளை புரட்சி என பெயரிட்டு
சொல்லால் மட்டும் சொர்க்கம் அமைக்கும் சண்டைக்கார சரடுகளை
சாதனையாளர்கள் என புகழ்வீரோ

எழுத்தில் கண்ணியம் தனை தொடுத்து
கருத்தில் வன்மங்களை களை எடுத்து
படிப்போர் மனம் கோணாமல்
பண்புடன் பல எழுதும் நல்லவர் நீர்

நச்சு விதைகள் இவர்களுக்கு
நா மடித்து இடை முறித்து,
நாணப்படுவது ஏனோ,

நன்றி

Dr.Rudhran said...

படித்துத்துக்கொண்டிருக்கிறேன்!

tamil said...

'கவிதய எழுதி டயரில வச்சுக்கிட்டா பிரச்சின இல்ல• பத்து ருவா இருக்கிற எவனும் வாங்கி படிக்கலாம்னு சொன்ன அப்புறம், அதுக்கு பதில் சொல்ல மாட்டேனு அடம் பிடிக்க முடியாது'

கேள்வி கேட்கலாம்,பதில் சொல்லணும்னு கட்டாயப்படுத்த முடியாது. பதில் சொல்ல முடியாதுன்னு சொன்னா கலாட்டா பண்ணுவேன், அது என் உரிமைன்னு கூவ முடியாது. நீங்கள் கூட்டம் போடுங்கள், உங்கள் தரப்பை பேசுங்கள், எழுதுங்கள்.பிறர் நடத்தும் கூட்டத்தில் ஏன் கலாட்டா செய்கிறீர்கள்.

’தனிமனித உரிமை என்பது சமூக மாற்றத்திற்கு எதிராக இருக்குமென்றால் அந்த உரிமை ஜனநாயத்தின் உண்மையான அர்த்த்த்தில் மறுக்கப்பட்டுதான் ஆகும்’

அதை தீர்மானிக்க நீங்கள் யார். இது ம.க.இ.க ஆட்சி நடக்கும் நாடு அல்ல.

.

? said...

முதலில் தான் எழுதியதற்கு தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயக பண்பு இருக்க வேண்டும். நீ உன்னோட மனதப் பத்தி உடல பத்தி எழுதிக்கோ யாரு கேக்க போறா... ஏம்மா தாயி இதுக்கு விளக்கம் சொன்னாதான் விளக்க மாத்த கீழ வப்பேன்னு சொல்ல• அத முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

ஆனா நீ பேசிருக்கிற கவித போராளிகள பத்தியது .. அத என்னோட கேரியரா எடுக்கிறதுக்காக பல ஆண்டுகளா போராடிட்டு இருக்கேன். என் கேரியர உன் யோனி மயிருக்கு சம்ம்னு பேசிட்டு வெளிய நடக்க விட்டதே தப்பு.. என்னோட மன உளைச்சல் அப்போது என்ன பீக்ல இருந்திருக்கும்னு யோசித்திருந்தா எனக்கு பதிலா என்னோட தனிமனித உரிமைக்காக நீங்களே அந்த அம்மாவ அடிச்சிருக்கணும்.

ஆனா பாருங்க•. ஜனநாயக உரிமைய தந்துதான் என்னம்மா எழுதிருக்க னு கேட்டா.. சோல்ல மாட்டேனு சொல்றது அதுவும் தனிமனிதர்களாக நிறைய பேரு மன உளைச்சலை உருவாக்குற கவிதக்கு விளக்கம் தர மாட்டேனு அவுக கேட்டப்புறமும் சொல்றது ஜனநாயக விரோதமானது. அதுக்கு பேரு உரிமை இல்ல• மத்தவன் உரிமய கால்ல போட்டு மிதிக்கிறது. இது புரியலயா

இணையத்தில கமாண்டு போடுறப்ப கூட தனிமனித தாக்குதல் நடத்திட்டா உடனே அராஜகம்னு கொடிபிடிச்சு சைபர் கிரைம் சட்டங்கள இறுக்கி எவனது கருத்தையும் இணையத்தில் பேச விடாம தடுக்க்குறதுதான அந்த கூட்டத்தின் நோக்கம். ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நரித்தந்திரம் அது இல்லையா..

இங்கு ம•க•இ.க ஆட்சி நடந்தாலும், லீனா போன்றவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இந்த அற்பத்தனங்களை அழிப்பதற்கு ஒரு இயக்கமெல்லாம் தேவையில்லை என்பதை தெரிவிக்கேறேன். என்னுடைய மன உளைச்சலை அதிகரித்த அந்த கவிதையும், ஐந்து மாதங்களாக இன்னும் இறக்காத படைப்பாளி அதற்கு அர்த்தம் சொல்லாத்தாலும் என்னுடைய மன உளைச்சல் அதிகரித்த்தாலும் ஏற்படும் கோபத்திற்கு அடுத்த இலக்கிய கூட்டம் வரை தாங்காது எனது கோபம் என கருதுகிறேன். என் மன உளைச்சலுக்காக இக்சால கூட்டம் போடுற அளவுக்கு எனக்கு வசதி இல்ல என்ன பண்றது சொல்லுங்க சார்.

உண்மைத்தமிழன் said...

[[[senthilkumar said...

உண்மைத்தமிழன் அண்ணே வணக்கம், நானும் சிறிது காலமாக பிளாக் படிச்சிட்டு வரேன். இங்க மற்ற விசயங்களை விவாதிப்பதைவிட, தனிப்பட்ட தாக்குதல்கள்தான் அதிகமாக வருகிறது. வர வர பிளாக் படிக்கறதே விட்டிடலாமுன்னு இருக்குதுண்ணே. நீங்க வழக்கம் போல எழுதுங்க, இவர் மாதிரி ஆளுங்களை கண்டுக்காம விட்டிருங்க.
Right vidu.. Joot.]]]

முதல் பின்னூட்டமே ஆறுதல் அளிக்கிறது..

அதுவும் எனது அப்பன் பெயரில்..!

வாழ்க..! வாழ்க..!

உண்மைத்தமிழன் said...

[[[? said...

கருத்த சொல்ல நீங்க ஏன்னா பயப்படுறீங்க. அதான் ஆனானப்பட்ட அஜால் குஜால் அலம்பல் கவிதைக்கே எழுத உரிம இருக்குன்றீங்க• அதுல உபரி மதிப்ப அவ எதுக்கு நிகரா வச்சிருஃக்கானு பாத்தா அதயே பொழப்பா நினைச்சி வாழ்க்கய அர்ப்பணிச்சவனுக்கு கோபம் வரக்கூடாதா.]]]

எங்களுக்குத்தான் நாங்கள் வணங்குகின்ற கடவுள்களை நீங்கள் அவமதிக்கின்றபோது கோபமும், ஆத்திரமும் வருகிறது..!

ஆனாலும் இது உங்களது தனி மனித உரிமை என்பதைப் போல் அமைதியாக இல்லையா..?

அது போல் இருங்கள்..!

[[[சட்டப்படிதான் செய்யணும்னு சொன்னா அது தனியா பேச வேண்டிய விசயம்னே.. சட்டப்படி இல்லாத எதிரய சட்டப்படி மாத்திரமே எதுக்கணும்னா நீங்க நேரடியாக அதிகம் பாதிக்கபடாதவரா இருந்தா மாத்திரம்தான் இப்படி பேசுவீகனு நெனைக்கேன்.]]]

சட்டத்திற்குட்பட்டவர்தான் லீனா.. ஒரு இந்தியக் குடிமகள்தான்.. காவல்துறையை நாடுங்கள்.. நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள்..! யார் உங்களை வேண்டாம் என்று தடுத்தது..?

[[[ஆனா ஒரு ஏரியாவுல தண்ணி இல்லாம மக்கள் காலங்காத்தால மறியல் செஞ்சாகூட நீங்க ஆபீசு போற ஜனநாயக உரிமய அவுக போராட்டம் பாதிச்சுரும். பாருங்க தண்ணி வராட்டிகூட அவுங்க நீதிமன்றம் போயி பெர்மிசன் வாங்கி சட்டப்படிதான மறியல் நடத்தணும். என்ன பன்றது அவுக வேற அறிவாளிகள்னு சொல்லிட்டீங்க•.]]]

எல்லாவற்றுக்கும் சில விதிவிலக்குகள் உண்டு.. நாங்களும் இது மாதிரி குடும்பத்தோட நடுரோட்டுல தண்ணி கேட்டு உக்காந்திருக்கோம்..!

? said...

உபரி மதிப்பு என்ற லாஜிக் இன் உதவியால்தான் என்னுடைய கேரியரை மாற்றி சமூக மாற்றத்திற்காக பிரியாரிட்டி கொடுத்து வேலை செய்கிறேன். என் கேரியர தீர்மானித்த ஒரு விசயம் லீனாவோட யோனி மயிருஃக்கு சம்ம்னா எனக்கு என் மீது ஏவப்பட்ட தனிப்பட்ட தாக்குதலா எடுத்துக்கிட்டு அவா அன்னைக்கு பாஞ்ச மாதிரி உங்க எல்லார் மேலயும் எவ அல்லது எவன் இது ஜனநாயக உரிமன்னு பேச வர்றானோ அவன் மேல எல்லாம் பாய கூடாது. அப்படி பாயும் போது என்னோட மன உணர்வுகள நீங்க படம் பிடித்து என்னோட தனிமனித உரிமைக்காக வாதடணும்... அதுதான நியாயமான தமிழன் செய்யக் கூடியது.

இல்ல நீதிமன்றம் போவணுமா.. போனாலும் எதிர்து கூட்டம் போடுவீங்க•. அது கெட்க்கட்டும். நான் போனா ... இந்த மாதிரி இந்த மாதிரி னு சொன்னா அத புரியுற அளவுக்கு இந்த நீதிமன்றம் ஒடுக்கப்படுற வர்க்கத்தின் சார்பாகவோ அல்லது அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலோவா இருஃக்கு.. எத்தன உதாரணம் வேணும்.. இந்த சட்டம் எல்லாம் உலக வங்கி உலக முதலாளிகள் அவ்வளவு ஏன் சுசாமிக்கு முன்னால கூட வால ஆஃட்டும். இத தெரிந்த பிறகும் சட்டமாம் சட்டம். இது நியாயம் தரும்னு நம்புறதாம். இளிச்ச வாய தமிழனா இருக்காதன்னா

புரியா தமிழா கொஞ்ச்ம் புரிஞ்சுஃக்கோ தமிழா... நீ ரோட்டில வந்து தண்ணி பிடிஃக்கிற வர்க்கம்னு சொல்ல வேண்டாம் தமிழா.. நமக்கு கீழ இருக்கவன் போராடுறப்ப நாம லேட்டாவுது னு திட்டிருப்பமே அத சொல்றேன் தமிழா..

உண்மைத்தமிழன் said...

[[[tamil said...
ம.க.இ.க வினரை விமர்சித்தால் அவர்களின் எதிரி பட்டியலில் சேர்த்து விடுவார்கள் போலிருக்கிறது.
லீனாவின் கவிதை எனக்கு பிடிக்கவில்லை, உங்கள் எதிர்ப்பை நாகரிகமாக காட்டுங்கள் என்று எழுதினால் இப்படிக் குதிக்கும் அசுரனோ, வினவோ ஒரு போதும் சினிமாவில் கவிதை எழுதும் பேர்வழிகளிடம் சங்கர ராம சுப்பிரமண்யனிடம் நடந்தது கொண்டது போல் நடந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அங்கெல்லாம் தகராறு செய்தால் என்ன பதிலடி கிடைக்கும் என்று தெரியும். உண்மைத் தமிழன், அய்யனார், ரோசா வசந்த் என்று இப்படி குறிப்பாக எழுதினால் அவர்கள் மிரண்டு ம.க.இ.கவினரிடம் இனி இப்படி எழுத மாட்டோம் என்று எழுதிக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறார்களா என்ன?.
வலைப்பதிவர்கள் இந்த கும்பலை
புறக்கணிக்க வேண்டும். வினவு தளத்தை தவிர்க்க வேண்டும்.
ம.க்.இ.க ஆதரவு பதிவாளர்களான ருத்ரன் போன்றவர்கள் இந்த கும்பலை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.]]]

புறக்கணிப்பு தேவையில்லை..! படிக்கலாம்..! தெரிந்து கொள்ளலாம்.. பார்வையிடலாம்.. அத்தோடு நிறுத்திக் கொள்வது உத்தமம் என்று இப்போது நான் நினைத்துள்ளேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[? said...
ம•க•இ.க தோழர்கள் அது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வாய்ப்பே இல்லை. கூட்டத்தை முழுவதும் கவனித்து கொண்டுதான் இருந்தேன். எனது மின்னஞ்சலுக்கு வார்த்தைகளை ஆட்களை குறிப்பிடும் பட்சத்தில் இது குறித்து அந்த அமைப்பின் தோழர்களிடம் விமர்சனமாக வைக்க நானும் கடமைப்பட்டுள்ளேன். கிசுகிசுவாக இது இல்லாத பட்சத்தில் உண்மையான தமிழனாக இருக்கும்பட்சத்தில் இதனை எனக்கு அனுப்பி தருவீர்கள் என நம்புகிறேன்.

அந்த அம்மணி அடிக்க மட்டும் வரவில்லை. காலையும் தூக்கிக் கொண்டு மிதிக்கத்தான் வந்தார்கள். நிறைய கேசட் எடுத்தார்கள். போகஸ் பண்ணி பாருங்க• மேல மட்டும் பாக்காதீங்க கீழயும் பாருங்க• பக்கத்தில் நின்றவன் என்ற முறையில் அனைத்தையும் பார்த்தேன். அம்மணியின் ஜனநாயத்தை விடுங்கள். கணேசனை பேச விடவதற்கே அ.மா விடம் பரிந்துரை செய்த கே.ஏ.கே விடம் போய் கேட்டுப் பாருங்கள். எவ்வளவு நேரம் அவர் அமா விடம் வாதாடினார் என்று. இந்த கூட்டம் முறையற்றது என்பதை ம•க•இ.க தோழர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னேரே எழுந்து அ.மா விடம் வாதாடி வெளியில் சென்ற பேச்சாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்த இந்திரனிடம் கேட்டுப் பாருங்கள்.

கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள சொல்லி நீங்கள் யார் சார்பாக யாருக்கு சொல்லுகிறீர்கள். க்ம்யூனிச எதிரிகள் சார்பாக கம்யூனிஸ்டுகளிடம் சொல்கிறீர்கள். உங்களது பதிவின் கடசியில் புரட்சியையும் புண்ணாக்கையும் நிகராக வைத்து கட்டுரை எழுதி உள்ளார்கள். அதற்கு வேறு பொழிப்புரை தேவையில்லை என கருதுகிறேன். சரியா எண்ணெய் தடவிட்டு வாங்க• அடுத்த பதிவர் கூட்டத்தில பாப்போம். என்ன பிரச்சின வருதுன்னு பாத்துருவோம். ம•க•இ.க தோழர்க்ள உங்கள சும்மா விட்டாலும் நான் விடுறதா இல்ல• முருகனுக்கே பாதுகாப்பா இருந்த அண்ணன் வீரபாகு என்ன பாத்துக்உகவான். ஒரு கம்யூனிஸ்டு கட்சி எழுப்புகிற கேள்வியில் தொழிலாளி ஒருவன் தாக்கப்பட்ட செய்திக்கு விளக்கம் கேட்டா கட்டப்பஞ்சாயத்து பண்ணி சமாதனம் சொல்லி போக சொல்லிட்டோம்னு சொல்லுவீங்களா.. உங்கள சொல்லி குத்தமில்ல• மதுர சி.பி.எம். காரனுகள சொல்லனும். ஏண்டா மானத்த வாங்குறீங்க• பேர மாத்துங்கடான்னு சொன்னா கேக்குறானுகளா.

மறுநாள் கூட்டம் போடலாம்னு வச்சுக்கோங்க• ஆனா அறிவாளி கூட்டங்களுக்கு ஒன்னு புரியலயே. லீனா ஒன்னு எழுதுறாக• அத தடுக்க சொல்லி சட்டப்படி இந்து மக்கள் கட்சி புகார் தர்றான். அவன் பண்ணுனத ஏத்துக்குறீங்களா சட்ட தமிழன். சரி அத எதுத்துதான கூட்டன் அப்புறம் எப்புடி அத ஜனநாயகம்பீங்க• சரி. இணையதள அராஜகத்திற்கு எதிராக எழுத வேண்டியதுதானே சரி (கூட்டத்திக்கு கூட்டம்னா எழுத்துக்கு எழுத்துதான பதிலு). அப்புறம் எதுக்கு கூட்டம் போட்டாங்க• இந்து மக்கள் கட்சி காரன் நியாயமானவன். நேர போயி அந்த அம்மா க‌விதய தட பண்ண சொன்னான். நீங்க என்னா பண்றீங்க•.. இந்த மாதிரி பேசி தனிப்பட்ட தாக்குதல்லாம் யாரும் யாரயும் பண்ண விடக் கூடாது ன்னு சட்டம் போட வச்சு (சட்டப்படிதான நீங்க நடப்பீங்க), எந்த ரவடி, ஓட்டுப்பொறுக்கி, ஆளும்வர்க்க ஐகான்கள், ஊழல் நீதிபதிகள், மோடி, அத்வானி, ஜெயா, கருணா என யாரையும் விமர்சனம் செய்யாமல் பதிவு உலகத்தில் மொக்கை மட்டுமே நடக்க வேண்டும் என்பதற்காக புறவாசல் வழியாக ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயக விரோத சட்டத்தை சைபர் கிரைமின் கீழ் கொண்டு வரவும் போராட முயன்றீர்கள். இந்த அயோக்கியத்தனத்தை உங்கள் வாயால் சொல்ல வைக்க முடியும். அதற்கு நேர்மையாக விவாதிக்கும் மனிதர்கள் தேவை.]]]

கேள்விக்கிறயண்ணே.. என்ன இது..? தமிழ்தானா..? பாதி புரியுது.. மீதி புரியலை..!

நான் யோக்கியமில்லை என்று உங்களுக்குத் தெரிந்தாற் பின்பு எதற்கு என்னுடன் வாதிடுகிறீர்கள்..?

விட்டுட்டு உங்க பொழைப்பை போய் பாருங்க ஸார்..!

Dr.Rudhran said...

நான் எங்கே இதில் வந்தேன் என்று புரியவில்லை!

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜீ...... said...
உங்கள் தரப்பை பதிவு செய்துவிட்டீர்கள். (மூச்சு வாங்குது)]]]

என்ன.. பேலன்ஸ் செய்ற மாதிரி பின்னூட்டமா..? ம்.. வைச்சுக்குறேன்.. எனக்கொரு சந்தர்ப்பம் கிடைக்காமயா போகும்..?

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையான்னே??]]]

பாவம் பார்த்தா பொழைப்பை நடத்த முடியுமா..?

என்னைப் பார்த்தா உனக்கு பாவமா இல்லியா..?

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...

//செந்தழல் ரவி said...

எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையான்னே??//

why blood? same blood!]]]

இருக்கும்டி இருக்கும்..!

ஆதரவா நாலு வார்த்தை.. இல்ல ஒரு வார்த்தை.. ம்ஹூம்.. எழுத வரலீல்ல..!

வைச்சுக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[NO said...

//அண்ணன் அசுரனுக்கு எனது பணிவான................//

// முதலிலேயே உங்களுக்கு மனசார ஒரு நன்றியைச் சொல்லிக்கிறேன்..! இங்க, வலையுலகத்துல ஏதோ ஒரு மூலைல.. யாருமே சீண்டாத.. எந்த லிஸ்ட்டுலேயுமே சேர முடியாத.. வைக்க முடியாத.. ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு வெட்டிப் பயல் நான்.. என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு எனக்காக ஒரு பதிவு போட்டிருக்கீங்க பாருங்க..! கும்பிட்டுக்குறேண்ணே..!//

//சில இடங்களில் உங்களுக்கு பின்னூட்டம் இட்டு.. அதுலேயே நான் மூக்குடைபட்டு திரும்பிய நாட்களுக்குப் பிறகு நம் அறிவுக்கு இந்த அண்ணன்கிட்டேயெல்லாம் போய் மோதக் கூடாது.. வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு ஒதுங்கிப் போறதுதான் நம்ம உடம்புக்கும், மனசுக்கும் நல்லது என்று நினைத்து ஓரமாகவே நின்றிருந்தேன்.!//

மதம் கொண்டாரை மடமை சொல்வாரை மாணிக்கம் என சொல்வீரோ
தரம் அற்று வன்மம் எனும் உரம் இட்டு
தான் வணங்கும் வன்முறைகளை புரட்சி என பெயரிட்டு
சொல்லால் மட்டும் சொர்க்கம் அமைக்கும் சண்டைக்கார சரடுகளை
சாதனையாளர்கள் என புகழ்வீரோ

எழுத்தில் கண்ணியம் தனை தொடுத்து
கருத்தில் வன்மங்களை களை எடுத்து
படிப்போர் மனம் கோணாமல்
பண்புடன் பல எழுதும் நல்லவர் நீர்

நச்சு விதைகள் இவர்களுக்கு
நா மடித்து இடை முறித்து,
நாணப்படுவது ஏனோ,

நன்றி]]]

யாரும் இங்கே நச்சு விதைகள் இல்லை ஸார்..!

அவர்கள் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ள மறுத்து எதையும் சிந்தாந்த ரீதியாகவே பார்க்கப் பழகிவிட்டார்கள். அதுதான் பிரச்சினை..!

உண்மைத்தமிழன் said...

[[[Dr.Rudhran said...
படித்துத்துக் கொண்டிருக்கிறேன்!]]]

கருத்து எதிர்பார்த்துத்துத்துத்துக் கொண்டிருக்கிறேன்..!

? said...

//புறக்கணிப்பு தேவையில்லை..! படிக்கலாம்..! தெரிந்து கொள்ளலாம்.. பார்வையிடலாம்.. அத்தோடு நிறுத்திக் கொள்வது உத்தமம் என்று இப்போது நான் நினைத்துள்ளேன்..!//

who gave the rights to say like this anti-democratic approach

tamil said...

To the person(s) posting with the Id ?:
I think you are more obsessed with Leena's poetry than Leena hersef.
Perhaps you need a treatment or counselling to overcome that.Consult a good psychiatrist.

உண்மைத்தமிழன் said...

[[[tamil said...
'கவிதய எழுதி டயரில வச்சுக்கிட்டா பிரச்சின இல்ல• பத்து ருவா இருக்கிற எவனும் வாங்கி படிக்கலாம்னு சொன்ன அப்புறம், அதுக்கு பதில் சொல்ல மாட்டேனு அடம் பிடிக்க முடியாது'

கேள்வி கேட்கலாம், பதில் சொல்லணும்னு கட்டாயப்படுத்த முடியாது. பதில் சொல்ல முடியாதுன்னு சொன்னா கலாட்டா பண்ணுவேன், அது என் உரிமைன்னு கூவ முடியாது. நீங்கள் கூட்டம் போடுங்கள், உங்கள் தரப்பை பேசுங்கள், எழுதுங்கள்.பிறர் நடத்தும் கூட்டத்தில் ஏன் கலாட்டா செய்கிறீர்கள்.

’தனி மனித உரிமை என்பது சமூக மாற்றத்திற்கு எதிராக இருக்குமென்றால் அந்த உரிமை ஜனநாயத்தின் உண்மையான அர்த்த்த்தில் மறுக்கப்பட்டுதான் ஆகும்’

அதை தீர்மானிக்க நீங்கள் யார். இது ம.க.இ.க ஆட்சி நடக்கும் நாடு அல்ல.]]]

இந்திய நாடு.. அதிலும் தமிழக நாடு.. ம.க.இ.க நாடல்ல..!

ஓகே குட் தமிழ்..!

உண்மைத்தமிழன் said...

[[[? said...
புரியா தமிழா கொஞ்ச்ம் புரிஞ்சுஃக்கோ தமிழா... நீ ரோட்டில வந்து தண்ணி பிடிஃக்கிற வர்க்கம்னு சொல்ல வேண்டாம் தமிழா.. நமக்கு கீழ இருக்கவன் போராடுறப்ப நாம லேட்டாவுதுனு திட்டிருப்பமே அத சொல்றேன் தமிழா..]]]

சரிங்கண்ணே.. இனிமே அது மாதிரி திட்டாம இருந்துக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Dr.Rudhran said...
நான் எங்கே இதில் வந்தேன் என்று புரியவில்லை!]]]

தமிழ் என்பவர் உங்களை ம.க.இ.கழகத்தின் ஆதரவாளர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.. அவ்வளவுதான்..!

நான் அதற்கு எதுவும் சொல்லவில்லை ஐயா.. ஏனெனில் எனக்கு உண்மை நிலவரம் தெரியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[? said...

//புறக்கணிப்பு தேவையில்லை..! படிக்கலாம்..! தெரிந்து கொள்ளலாம்.. பார்வையிடலாம்.. அத்தோடு நிறுத்திக் கொள்வது உத்தமம் என்று இப்போது நான் நினைத்துள்ளேன்..!//

who gave the rights to say like this anti-democratic approach]]]

இரண்டு நண்பர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்..!

நீங்கள் பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இங்கில்லை..!

விட்ருங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[tamil said...

To the person(s) posting with the Id ?:

I think you are more obsessed with Leena's poetry than Leena hersef.

Perhaps you need a treatment or counselling to overcome that Consult a good psychiatrist.]]]

இது ரொம்ப ஓவர் தமிழ்..!

அவர் கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்..

நம்மைப் போலவே அவரும் இருப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா..?

முடிகின்றவரையில் பேசுவோம். இல்லாவிட்டால் ஒதுங்குவோம்..!

குறும்பன் said...

குமுதம் வாரஇதழ் சிக்கலில் உங்களுக்கு தெரிஞ்சதை இடுகையில் போடுங்க.

அசுரன் காலமாயிட்டார் இல்ல (தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க)

இப்ப அவர் வலைப்பதிவை நடத்துவது குழுவா? (வினவு மாதிரி).

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...
குமுதம் வார இதழ் சிக்கலில் உங்களுக்கு தெரிஞ்சதை இடுகையில் போடுங்க.]]]

இது வேறய்யா..! பார்க்கலாம் சாமி..!

[[[அசுரன் காலமாயிட்டார் இல்ல (தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க)]]]

அந்த அசுரன் வேற.. இவர் வேற சாமி.. பிரச்சினையைக் கிளப்பாதீங்கப்பா..!

[[[இப்ப அவர் வலைப்பதிவை நடத்துவது குழுவா? (வினவு மாதிரி).]]]

அவர் ஒருவரேதான்..!

உண்மைத்தமிழன் said...

ஜோ ஸார்..

தயவு செய்து நீங்க எனக்கு பின்னூட்டமே போட வேண்டாம்..!

தயவு செய்து என்னை விட்ருங்க..!

உங்க லெவலுக்கு உள்ள வேற யாரையாவது பாருங்க..!

புண்ணியமாப் போகும்..!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உண்மைத்தமிழன் அண்ணாச்சி,

அளவுக்கு மீறிய விமர்சனத்துக்கு, அளவுக்கு மீறிய பணிவன்புடனும்,கண்ணியத்துதுடனும் எழுதப்பட்ட பதி(ல்)வு என்று மட்டும் எனக்கு புலப்படுகிறது.

? said...

இதனை கவிதாயிணிக்கும் பொருத்தலாம்தானே... யாராலாவது பாதிக்கப்பட்டால் மனநல மருத்துவரைத்தானே அணுக வேண்டும். கவிதை எழுதி திட்டுவது அதுவும் சம்பந்தமில்லாதவர்களை திட்டுவது சரியா.. உங்களது கவனத்திற்காக பின்வரும் அவரது சொற்கள்

//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

? said...

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.


ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

pichaikaaran said...

நடுநிலையாளர்களின் ஆதரவை பெற்று பொது எதிரியுடன் மோதாமல், தங்கள் சக்தியை, தேவயற்றவர்களுடன் மோதுவதில் வீணடிக்கிறார்கள் என்பது, அவர்கள் மேல் நல்லெண்ணம் கொண்ட நடுநிலையாளர்களின் வருத்தம்,,,

? said...

லீணா தேவையற்ற சக்தி அல்ல• முதலாளிகளின் சார்பாக கம்யூனிசத்தை அவதூறு செய்ய வார்க்கப்பட்ட கவிதாயிணி. தான் பெண் எமன்ற காரணத்தை கேடாகவும், தனது பாரம்பரியத்தின் மூலம் கம்யூனிசத்தை அவதூறு செய்யவும் விரும்பும் நடுத்தர வர்க்க லும்பன்களின் வகைமாதிரியும் அதனாலேயே முதலாளிகளின் துருப்புச் சீட்டாக இருப்பதும் தெரியவில்லையா..

pichaikaaran said...

" முதலாளிகளின் துருப்புச் சீட்டாக இருப்பதும் தெரியவில்லையா.."

முதலாளிகளுடன் மோதுவதையும், ஒரு துருப்பு சீட்டுடன் மோதுவதையும், நீங்கள் ஒன்றாக நினக்கலாம்... அனால், நடுநிலையாளர்கள் அப்படி நினைக்கவில்லை....

மது திரை அரங்கு போரட்டத்தில் தோழர்களுக்கு ( ஒருவேளை ) காயம் ஏற்பட்டு இருந்தால், அதை அவர்கள் ஒரு பெருமை மிக்க சின்னமாக தம் வாழ்நாள் முழுக்க நினைவு கூறலாம்... அனால், லீனா விஷயத்தில் ( ஒருவேளை ) காயம் ஏறபட்டு இருந்தால், அது அவ்வளவு பெருமையை தராது ...

அந்த கவிதையை, நடுநிலையாளர்கள் யாருமே ஏற்கவில்லை.... உங்கள் வேதனையை சரியான முறையில் வெளி படுத்தி, வெகு சுலபாமாக பொது ஆதரவை நீங்கள் பெற்று இருக்க முடியும்.... நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டனர் தோழர்கள் என்பது நடுநிலையாளர்களின் ஆதங்கம்... இப்படி சொன்னால், அவர்கள் மீதும் பாய்கிறீர்கள்...

உண்மைத்தமிழன் said...

[[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...
உண்மைத்தமிழன் அண்ணாச்சி,
அளவுக்கு மீறிய விமர்சனத்துக்கு, அளவுக்கு மீறிய பணிவன்புடனும், கண்ணியத்துதுடனும் எழுதப்பட்ட பதி(ல்)வு என்று மட்டும் எனக்கு புலப்படுகிறது.]]]

வேறு வழியில்லை ஜோதி..!

அவர்கள் போராளிகள்.. புரட்சிவாதிகள்.. மக்களின் தோழர்கள்..!

நாமெல்லாம் வெட்டி ஆபீஸர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[? said...
இதனை கவிதாயிணிக்கும் பொருத்தலாம்தானே. யாராலாவது பாதிக்கப்பட்டால் மனநல மருத்துவரைத்தானே அணுக வேண்டும். கவிதை எழுதி திட்டுவது, அதுவும் சம்பந்தமில்லாதவர்களை திட்டுவது சரியா?

உங்களது கவனத்திற்காக பின்வரும் அவரது சொற்கள்....

//அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//]]]

அவரிடம்தான் கேட்க வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
நடுநிலையாளர்களின் ஆதரவை பெற்று பொது எதிரியுடன் மோதாமல், தங்கள் சக்தியை, தேவையற்றவர்களுடன் மோதுவதில் வீணடிக்கிறார்கள் என்பது, அவர்கள் மேல் நல்லெண்ணம் கொண்ட நடுநிலையாளர்களின் வருத்தம்.]]]

எனது வருத்தமும் இதேதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[? said...
லீணா தேவையற்ற சக்தி அல்ல• முதலாளிகளின் சார்பாக கம்யூனிசத்தை அவதூறு செய்ய வார்க்கப்பட்ட கவிதாயிணி. தான் பெண் எமன்ற காரணத்தை கேடாகவும், தனது பாரம்பரியத்தின் மூலம் கம்யூனிசத்தை அவதூறு செய்யவும் விரும்பும் நடுத்தர வர்க்க லும்பன்களின் வகை மாதிரியும் அதனாலேயே முதலாளிகளின் துருப்புச் சீட்டாக இருப்பதும் தெரியவில்லையா.]]]

லீனாவுக்கும், அவரது கவிதைக்கும் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை..!

இதில் கம்யூனிஸ அவதூறு என்பது முதலாளித்துவம் என்பதெல்லாம் நீங்களே கண்டு கொண்ட பயத்துடன் கூடிய அர்த்தங்கள்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
" முதலாளிகளின் துருப்புச் சீட்டாக இருப்பதும் தெரியவில்லையா.."

முதலாளிகளுடன் மோதுவதையும், ஒரு துருப்பு சீட்டுடன் மோதுவதையும், நீங்கள் ஒன்றாக நினக்கலாம். அனால், நடுநிலையாளர்கள் அப்படி நினைக்கவில்லை.

மது திரை அரங்கு போரட்டத்தில் தோழர்களுக்கு (ஒருவேளை) காயம் ஏற்பட்டு இருந்தால், அதை அவர்கள் ஒரு பெருமைமிக்க சின்னமாக தம் வாழ்நாள் முழுக்க நினைவு கூறலாம். அனால், லீனா விஷயத்தில் (ஒருவேளை) காயம் ஏறபட்டு இருந்தால், அது அவ்வளவு பெருமையை தராது.

அந்த கவிதையை, நடுநிலையாளர்கள் யாருமே ஏற்கவில்லை. உங்கள் வேதனையை சரியான முறையில் வெளிபடுத்தி, வெகு சுலபாமாக பொது ஆதரவை நீங்கள் பெற்று இருக்க முடியும். நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டனர் தோழர்கள் என்பது நடுநிலையாளர்களின் ஆதங்கம். இப்படி சொன்னால், அவர்கள் மீதும் பாய்கிறீர்கள்.]]]

"கடைசியாகப் பேசுங்கள்" என்று அ.மார்க்ஸ் சொன்னதை இவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்பது இப்போதும் எனது ஆதங்கம்..!

உண்மைத்தமிழன் said...

அண்ணன் அசுரன் எனது பதிவில் பின்னூட்டமிடுவதை கவுரவக் குறைச்சலாக நினைத்தாரோ என்னவோ..

இந்தப் பதிவில் நான் எழுதியிருக்கும் எனது பதில்களை அவருடைய பதிவுக்கே காப்பி பேஸ்ட் செய்து அங்கேயே பதிலளித்துள்ளார்.

பதிவர்கள் கோபித்துக் கொள்ளாமல் இந்தப் பதிவிற்கும்
http://poar-parai.blogspot.com/2010/04/blog-post.html சென்று மீதிக் காமெடியை படித்துக் கொள்ளுங்கள்..!

அத்தோடு இதையும் படித்துக் கொள்ளுங்கள்.. தொடர்ச்சி இங்கே என்று கை காட்டுகிறார் அண்ணன் அசுரன்..

http://poar-parai.blogspot.com/2010/04/blog-post_28.html

pichaikaaran said...

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் தமிழ்நாட்டின் ஆதரவை, வெகு சுலபமாக தோழர்கள் பெற முட்யும்.. ( பெற வேண்டும் ) .. இது ஒரு புறம்...

உண்மை தமிழன் அவர்களே, நீங்கள் ஒரேடியாக தோழர்களை அராஜகவாதிகள் , வன்முறையாளர்கள் என்றெல்லாம் முத்திரை குத்துவதும் தவறுதான்... நீங்கள் அவர்களின் ( நல்ல ) மறுபக்கத்தை பார்த்ததில்லை...

இன்னொன்று, நீங்கள் திரை அரங்கில், ஆவேசம் அடைந்த பொது, யாரும் உதவிக்கு வரவில்லை என்று சொன்னிர்கள் அல்லவா? ஒரு முறை எங்கள் நண்பன் ஒருவன் , மிக சரியாக, அதே நிலையில் ஆவேசம் அடைந்தான்...நாங்கள் யாரும் அவனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை... ரிலாக்ஸ் டா மச்சி.. அவிங்க அப்படித்தான்... என்று சமாதன படுத்தி, ப்ளாக் டிக்கட் வாங்கி படம் பார்த்து அவனை சமாதானபடுத்தினோம் ...

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு பணம் கொடுத்துப் பாடச் சொன்னானாம்! ஒன்பது பணம் கொடுத்து ஓயச் சொன்னானாம் என்ற கதையாக, ஒரே ஒரு சோடா குடிக்கக் கேட்கிற அளவுக்கு மூச்சுத் தள்ள ஒரு பதிவை போட்டு, இப்போ ஒன்பது சோடா குடிக்கிற அளவுக்கு வந்துருச்சா இல்லையா?

லீனாவை பொருட்படுத்தத் தேவையே இல்லை என்று சொன்னது போல, உங்களை இவ்வளவு மூச்சுத் தள்ளப் பதில் பதிவு எழுத வைத்த பதிவையும் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாமே!

வினை-எதிர் வினை என்றே போய்க் கொன்டிருந்தால் எங்கே போய் முடியும்?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் தமிழ்நாட்டின் ஆதரவை, வெகு சுலபமாக தோழர்கள் பெற முட்யும். (பெற வேண்டும்) இது ஒரு புறம்.
உண்மை தமிழன் அவர்களே, நீங்கள் ஒரேடியாக தோழர்களை அராஜகவாதிகள், வன்முறையாளர்கள் என்றெல்லாம் முத்திரை குத்துவதும் தவறுதான். நீங்கள் அவர்களின் (நல்ல) மறு பக்கத்தை பார்த்ததில்லை.]]]

அதான் இங்கேயே பார்த்தாச்சே..? இது போதாதா ஸார்..?

[[[இன்னொன்று, நீங்கள் திரை அரங்கில், ஆவேசம் அடைந்த பொது, யாரும் உதவிக்கு வரவில்லை என்று சொன்னிர்கள் அல்லவா? ஒரு முறை எங்கள் நண்பன் ஒருவன், மிக சரியாக, அதே நிலையில் ஆவேசம் அடைந்தான். நாங்கள் யாரும் அவனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ரிலாக்ஸ் டா மச்சி. அவிங்க அப்படித்தான். என்று சமாதனபடுத்தி, ப்ளாக் டிக்கட் வாங்கி படம் பார்த்து அவனை சமாதானபடுத்தினோம்.]]]

ஒண்ணும் சொல்றதுக்கில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்ணமூர்த்தி said...
ஒரு பணம் கொடுத்துப் பாடச் சொன்னானாம்! ஒன்பது பணம் கொடுத்து ஓயச் சொன்னானாம் என்ற கதையாக, ஒரே ஒரு சோடா குடிக்கக் கேட்கிற அளவுக்கு மூச்சுத் தள்ள ஒரு பதிவை போட்டு, இப்போ ஒன்பது சோடா குடிக்கிற அளவுக்கு வந்துருச்சா இல்லையா?
லீனாவை பொருட்படுத்தத் தேவையே இல்லை என்று சொன்னது போல, உங்களை இவ்வளவு மூச்சுத் தள்ளப் பதில் பதிவு எழுத வைத்த பதிவையும் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாமே! வினை-எதிர் வினை என்றே போய்க் கொன்டிருந்தால் எங்கே போய் முடியும்?]]]

அன்றைய நிகழ்வு அமைதியாகப் போயிருந்தால் நானும் எனது முதல் பதிவை எழுதியிருக்கவே மாட்டேன்..!

அது ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்ததாக நினைத்துப் போயிருப்பேன்..!

pichaikaaran said...

எது எப்படியோ,,, உண்மை தமிழன் ஐயா... நம்ம ஊரு ஆளுன்னு கொஞ்சம் உரிமை எடுத்து உங்களை லேசா கிண்டல் செஞ்சு தொலைச்சுட்டேன்... விமர்சனம் வேற பண்ணிட்டேன்... அனால், நீங்க எதிர் புரட்சியெல்லாம் செய்ற அளவுக்கு கில்லாடி னு இப்பத்தான் தெரிய வந்துச்சு... அதுனால, என்னை எதுவும் உங்க ஹிட் லிஸ்ட் ல சேர்த்துடாதீங்க,.,, நன்றி வணக்கம்,,

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
எது எப்படியோ, உண்மை தமிழன் ஐயா நம்ம ஊரு ஆளுன்னு கொஞ்சம் உரிமை எடுத்து உங்களை லேசா கிண்டல் செஞ்சு தொலைச்சுட்டேன். விமர்சனம் வேற பண்ணிட்டேன். அனால், நீங்க எதிர் புரட்சியெல்லாம் செய்ற அளவுக்கு கில்லாடினு இப்பத்தான் தெரிய வந்துச்சு. அதுனால, என்னை எதுவும் உங்க ஹிட் லிஸ்ட்ல சேர்த்துடாதீங்க. நன்றி வணக்கம்.]]]

பொறுமையாக பின்னூட்டங்களை இட்டதற்கு நன்றிகள் பார்வையாளன் ஸார்..!

நான் ரொம்ப ரொம்ப சாதாரணமானவன்தான்..!

நீங்கள் சொல்லியிருப்பதை சாதாரண கிண்டலாகவே எடுத்துக் கொள்கிறேன்..!

பாலா said...

யாருங்கண்ணே.. அது தமிழச்சிங்கறது?

நீங்க மொதல்ல இருந்து ஆரம்பிங்கண்ணே.!!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
யாருங்கண்ணே.. அது தமிழச்சிங்கறது? நீங்க மொதல்ல இருந்து ஆரம்பிங்கண்ணே.!!]]]

ஹாலிவுட்ஜி..

எங்க போனீங்க இத்தனை நாளா..?

உங்களை வலைவீசி தேடிக்கிட்டிருக்கோம்..!

என்னாச்சு..?

பதிவைக் காணோம்.. புதுப் படங்களையும் காணோம்..!?

abeer ahmed said...

See who owns atwitter.info or any other website:
http://whois.domaintasks.com/atwitter.info

abeer ahmed said...

See who owns blog.hu or any other website.