ஆகவே வாக்காளர்களே.. தயவு செய்து வாக்களியுங்கள்..

12-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இந்தியத் திருநாட்டு அப்பாவிகளான நமக்கு இருக்கின்ற ஒரேயொரு ஆயுதமான நமது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாளைய ஒரு தினத்தில் மட்டும் எத்தனையோ வேலைகள் இருந்தாலும், சிரமங்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் தூசி போல் ஊதித் தள்ளிவிட்டு பஞ்சாய்ப் பறந்து வந்து வாக்களித்து விடுங்கள்.

இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நம்மால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இந்த அரசியல்வியாதிகளின் முன்னால் நடக்க முடிகிறது என்றால் அது இது போன்ற வாக்குப்பதிவு அன்றுதான்..

அந்த ஒரு நாளை தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைவிடவும் அமோகமாக நாம் கொண்டாட வேண்டும்.

“அவன் சரியில்லை.. இவன் சரியில்லை.. அவன் நொட்டை.. இவன் குட்டை.. இவன் கெட்டவன்.. அவன் கெட்டவனிலும் கெட்டவன்..” என்றெல்லாம் வருடக்கணக்காக எழுதியும், படித்தும், பேசியும் வரும் நாம், நாளைய தினத்தில் மட்டும் வாக்கு என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தும் போர் வீரனாக மாறுவோம்.

மாறத்தான் வேண்டும்.

கடந்த சில தேர்தல்களில் ஒட்டு மொத்த வாக்காளர்களில் 55 சதவிகிதம்பேர்தான் வாக்களிக்க முன் வருகிறார்கள். மீதமிருப்பவர்களில் நிச்சயமாக 45 சதவிகிதம்பேர் ஓட்டளிக்க முன் வராதவர்கள்தான். மீதி பத்து சதவிகிதம்பேர் வர முடியாமல் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கியவர்களாக இருப்பார்கள்.

வாக்களிக்க முன் வராத 45 சதவிகித வாக்காளர்களில் அதிகம் பேர் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள்.. “ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகுது..? ஓட்டு வாங்குறவன் எப்படியும் திருந்த மாட்டான்.. மறுபடியும் கொள்ளையடிக்கத்தான் போறான்.. இதுல நம்ம ஓட்டுப் போட்டா என்ன போடாட்டி என்ன..?” என்கிற அவநம்பிக்கையோடு இருப்பவர்கள்.

இதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் மகா சுயநலவாதிகள்.. இந்தச் சுயநலவாதிகளை நீங்கள் நாளை காலை சத்யம், ஐநாக்ஸ் திரையரங்களுக்குச் சென்றால் மிக எளிதாக அடையாளம் காணலாம்.

“எவன் வந்தால் என்ன..? வராவிட்டால் என்ன..? எனக்கு வேண்டியது இங்கே இருக்கிறது.. கிடைக்கிறது.. அனுபவிப்பேன்.. எந்த அரசுகள் வந்தாலும் எங்களுக்கு அவர்களால் கஷ்டமில்லை. ஏனெனில் என்னிடம் அளவுக்கதிமான பணமும், அதனால் வாழ்க்கை பற்றிய எவ்வித பயமும் இல்லாத தன்மையும் உள்ளது.. எவன் போய் ஓட்டு போடுவான்..?” என்கிற மேட்டுக்குடி வர்க்க மனோபாவத்தை உடையவர்கள்.

இன்னும் சிலர் வாக்களிக்க கியூவில் நிற்கவே தயக்கம் காட்டுபவர்கள். இவர்கள் சொல்லும் காரணம் “போனா ஏதாவது சண்டை வரும்.. அடிச்சுக்குவாங்க.. போலீஸ் வரும்.. நமக்கெதுக்கு வம்பு..” இப்படியொரு கூட்டமும் இருக்கிறது.

இந்தக் கூட்டத்தை அடையாளம் காண வேண்டுமெனில் ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் வாக்குச்சாவடிகளுக்கு நீங்கள் சென்றால் எளிதில் பார்க்க முடியும். வரவே மாட்டார்கள். காரணம், கியூவில் நிற்பதற்கு அவ்வளவு சோம்பேறித்தனம்.

முன்பெல்லாம் திராவிடக் கட்சிகள் தங்களுடைய குஞ்சுகளைத் தவிர வேறு யாரும் ஓட்டளித்துவிட முடியாத அளவுக்கு பல தந்திரங்களை செய்திருந்தார்கள். அதில் ஒன்றுதான் தேர்தல் கமிஷனை நிர்ப்பந்தித்து பாதுகாப்பு அளிக்க முடியாது என்கிற பெயரில் மிகக் குறைந்த அளவு வாக்குச்சாவடிகளை அமைத்தது.. முணுக்கென்றாலே சோடாபாட்டிலை வீசும் கட்சியின் உயிருக்குயிரான தொண்டர்களை பூத் ஏஜெண்டுகளாகப் பயன்படுத்துவது.. காவலர்களை குறைந்த அளவில் பயன்படுத்துவது.. பூத்திற்குள்ளேயே ரவுடிகளை நிறுத்தி வைத்து மிரட்டுவது என்று சகலத்தையும் பயன்படுத்தித்தான் வாக்களிக்க நினைக்கும், நினைத்த இது போன்ற மேட்டுக்குடியினரை வாக்குச்சாவடிக்கு வராமலேயே தடுத்தார்கள்.

நல்லவேளையாக இப்போது வாக்குச்சீட்டுகளுக்குப் பதிலாக இயந்திரங்களும், இவ்வளவு கடுமையான விதிமுறைகள் அடங்கிய தேர்தலாகவும் மாற்றிய பின்புதான் கொஞ்சமாவது அந்த மேன்மக்கள் வீட்டுப் படியிறங்கி வருகிறார்கள். இந்த நிலைமை மென்மேலும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தத் தேர்தலில் 14 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாகக் காட்டி வாக்காளர்கள் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1.புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை

2.ஓட்டுநர் உரிமம்

3.பாஸ்போர்ட்

4.ரேஷன் கார்டு

5.மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் பொது நிறுவனப் பணியாளர்களுக்கு வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்.

6.பொதுத்துறை வங்கிகள், அஞ்சலக மற்றும் விவசாயிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்.

7.அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை.

8.பான் கார்டு

9. புகைப்படத்துன் கூடிய ஆவணங்கள், முன்னாள் படை வீரர் பென்ஷன் புத்தகம், பென்ஷனுக்கான ஆணை..

10.புகைப்படத்துடன் கூடிய முதியோர் பென்ஷன் ஆணை, குடும்ப ஓய்வூதிய ஆணை

11.புகைப்படத்துடன் கூடிய துப்பாக்கி லைசென்ஸ்

12.ஊனமுற்றோர் இயக்குனரகத்தால் வழங்கப்பட்டுள்ள ஊனமுற்றோருக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.

13.புகைப்படத்துடன் கூடிய ரயில்வே அடையாள அட்டை.

14. புகைப்படத்துடன் கூடிய சுதந்திரப் போராட்ட வீரர் அடையாள அட்டை.

இந்த 14 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று உங்கள் கையில் இருந்தால் நீங்கள் தாராளமாக வாக்களிக்க வரலாம்.

நாளைய தினம் வேலை இருக்கிறது.. கண்டிப்பாக போயே தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் விடியற்காலையிலேயே கிளம்பி ஆறரை மணிக்கெல்லாம் பூத்துக்கு போய்விடுவது நல்லது.

ஏனெனில் காலையில் இருந்து மதியத்திற்குள்தான் கட்சித் தொண்டர்கள் தங்களது குடும்பம், குடும்பமாக வாக்களிக்க வருவார்கள். கூட்டம் அமோகமாக இருக்கும். மிகத் தாமதம் ஏற்படும்.

பூத்திற்குள் நுழைவதற்கு முன்னர் உங்களுடைய வாக்குச் சீட்டு எந்த வட்டத்தின் எண்ணில் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு தேர்தல் சாவடிகளுக்குள்ளும் வட்ட எண்ணின் அடிப்படையில்தான் வாக்கு அளிக்கும் அறைகளைப் பிரித்துள்ளார்கள். பூத்திற்கு மிக தொலைவில் பல்வேறு கட்சியினரும் பூத் ஸ்லிப்போடு அமர்ந்திருப்பார்கள். அவர்களிடத்தில் உங்களது வீட்டு முகவரியைச் சொல்லி பூத் ஸ்லிப்பை பெற்றுக் கொண்டு பின்பு பூத்தின் உள்ளே நுழையுங்கள்.

கூட்டமாக இருந்தால் நிற்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு அப்படியே திரும்பிப் போய்விடக் கூடாது.. உங்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு நோய் என்று மருத்துவமனைக்குச் சென்றால் கூட்டம் அதிகமாக இருந்தால் திரும்ப மாட்டீர்கள் அல்லவா.. அது போன்று நாளைய தினத்தை நினைத்துக் கொள்ளுங்கள். இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது.. நோயை விரட்டுவதில் நமக்கும் பங்கு உள்ளது. எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து எனது கையில் இருக்கும் மருந்தை புகட்டுவேன் என்றெண்ணி உங்களது பொன்னான வாக்குகளை அளியுங்கள்.


வரிசையில் நிற்கும்போது அவ்வப்போது ஏதாவது கூச்சல், குழப்பம் இருக்கத்தான் செய்யும். வரத்தான் செய்யும்.. அதற்காகவெல்லாம் தலைதெறிக்க ஓடி வரக்கூடாது.. குழப்பம், அடிதடி என்று நடந்தால்கூட முடிந்த அளவு உங்களை முதலில் தற்காத்துக் கொள்ளுங்கள். பின்பும் அங்கேயே இருந்து வாக்குகளை அளிக்க மறந்துவிடாதீர்கள்.

சில இடங்களில் தங்களை எதிர்க்கும் கூட்டத்தினர் அதிகமாக இருப்பது தெரியவந்தால் சில கட்சிக்காரர்களே வேண்டுமென்றே ஏதாவது தகராறு செய்து கூட்டத்தைக் கலைத்துவிடுவார்கள். காரணம் அவர்கள் கட்சிக்கு எதிரான வாக்குகள் குறையுமல்லவா அதற்காகத்தான். இந்த டெக்னிக்கை முழுமையாகக் கற்றறிந்தவர்கள் திராவிடக் கட்சியினர்தான்.. எதற்கும் ஜாக்கிரதையாகவே இருங்கள்.

கியூவில் நிற்கும்போதுகூட தப்பித் தவறி நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை சும்மாவாச்சும்கூட சொல்லிவிடாதீர்கள். கேட்பவன் நம்ம குசும்பனுக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா மகனாக்கூட இருந்து தொலைக்கலாம். பின்பு துபாயில் இருந்து குசும்பன்தான் வந்து நமது புண்ணுக்கு மருந்திட வேண்டும். இது ஒன்றை வைத்தே யாராவது ஒருவர் ஏதாவதொரு பிரச்சினையைக் கிளப்பிவிட வாய்ப்புண்டு.

குடும்பத்தோடு உள்ளே செல்பவர்கள் குடும்பத்தோடுதான் வாக்களிப்போம் என்று பின்னவீனத்துவம் பாணியில் வாதாடக்கூடாது.. அங்கே ஆண்கள், பெண்கள் தனித்தனி கியூதான்.. குழந்தைகள் இருந்தால் பொறுப்பாக நீங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, மகளிரை முதலில் அனுப்பி வாக்கைப் பதிவு செய்ய வைத்துவிட்டு பின்பு நீங்கள் சென்று வாக்களியுங்கள். இப்படியெல்லாம் செய்தீர்களானால் ஆதிமூலகிருஷ்ணாவை தலைவராக கொண்டிருக்கும் உலகமகா இளிச்சவாயர்கள் சங்கத்தில் உங்களுக்கு ஆயுட்கால உறுப்பினர் பதவி உறுதி.

தப்பித் தவறி உங்களுடைய வாக்கை வேறு எந்தவொரு இந்தியக் குடிமகனாவது போட்டிருந்தால் அதற்காக அந்த நேரத்தில், அந்த இடத்தில் ஒப்பாரி வைக்காதீர்கள். நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள். “இது என்னுடைய வாக்கு.. நான் பதிலி வாக்கினைப் பதிவு செய்தாக வேண்டும். இது எனது உரிமை..” என்று வாதிடுங்கள். உங்களுடைய வாக்கினை தனிப் பதிவேட்டில் பூத் அதிகாரி பதிவு செய்ய வேண்டியது அவருடைய கடமை.

சும்மாவாச்சும்கூட கைகளை விரித்துக் காட்டியோ, ரெண்டு விரலைக் காட்டியோ விடாதீர்கள். கையை சும்மா சொரிஞ்சேன்.. அவ்வளவுதான் என்றோ, ரெண்டுக்கு வந்தது.. அதான் எங்க இருக்குன்னு காட்டினேன் என்றோ கையில் ஒண்ணுமேயில்லைன்னு காட்டத்தான் சிம்பாலிக்கா கையை விரிச்சுக் காட்டினேன் என்றோ நீங்கள் உதாரும், சுதாரும் விடலாம். ஆனால் உள்ளேயிருக்கும் கட்சிக்காரர்கள் அல்வா கிண்டிவிடுவார்கள். எத்தனை வருட அனுபவசாலிகள் அவர்கள். ஓட்டுப் போட விடாமல் தடுத்து வெளியேற்றி விடுவார்கள். உள்ளே போய் வெளியே வரும்வரையிலும் வாக்களிப்பது என்ற ஒன்றைத் தவிர வேறு ஒரு சிந்தனையிலும் இருக்காதீர்கள்.

வேலை இருக்கு.. முடியலை.. நேரமாச்சு என்றெல்லாம் சொல்லிவிட்டு மாலை 4.30 மணிக்கு பூத்துக்கு செல்லாதீர்கள். அதற்கும் முன்னதாகவே செல்வதற்கு தயவு செய்து முயற்சி செய்யுங்கள்.

சிற்சில இடங்களில் கலவரங்கள் வெடிக்கலாம். அல்லது தூண்டப்படலாம். அப்போதெல்லாம் சற்று ஓரம் தள்ளி வேடிக்கை பார்த்துவிட்டு கலவரம் ஓய்ந்தவுடன் பூத்தின் உள்ளே செல்லுங்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ரிப்பன் பில்டிங்கில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கீழ்க்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - 9445191463
பெரம்பூர் - 9445191464
கொளத்தூர் - 9445191465
திரு.வி.க. நகர் - 9445191466
ராயபுரம் - 9445191467
எழும்பூர் - 9445191468
துறைமுகம் - 9445191469
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - 9445191470
அண்ணா நகர் - 9445191471
ஆயிரம் விளக்கு - 9445191472
வில்லிவாக்கம் - 9445191473
தி.நகர் - 9445191474
விருகம்பாக்கம் 9445191475
சைதாப்பேட்டை - 9445191476
மயிலாப்பூர் - 9445191477
வேளச்சேரி - 9445191478
திருவொற்றியூர் - 9445191479
சோழிங்கநல்லூர் - 9445191480

மேற்குறிப்பிட்ட ஏதேனும் தொகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டால் உடனடியாக பொறுப்பான இந்தியக் குடிமகனைப் போல அலைசேயில் அழைத்து விஷயத்தைத் தெரிவித்துவிடுங்கள். புண்ணியம் கிடைக்கும்.

கடைசியாக ஒன்று..

புதிய போஸ்ட் எழுத ஒரு மேட்டர் கிடைக்கிறதே என்றெண்ணி ஆங்காங்கே நடைபெறவிருக்கும் கலவரத்தில் தலையைக் கொடுத்து உடம்பை புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள்..

பின்பு கட்டுப் போட்ட நிலையில் உங்களது போட்டோவுடனான செய்தியை நாங்கள் எங்கள் பதிவில் போட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஜாக்கிரதை..

மறந்தும் இருந்து விடாதீர்கள் தோழர்களே..

நாளைய தினம் நமது தினம்..

35 comments:

எட்வின் said...

//கியூவில் நிற்பதற்கு அவ்வளவு சோம்பேறித்தனம்.//

உண்மை.உண்மை..உண்மை...

இந்த முறை கடந்த தேர்தல்களை விட குறைவாகவே வாக்கு பதிவு இருக்கும் என எதிர்பார்க்கிறேன். எல்லாம் குழம்பி போயிருக்கிறார்கள்.

ஆனால் மும்பையை விட முந்தலாம் ஒரு வேளை. அங்கு 47 சதவீதம் மட்டுமே பதிவாகியிருக்கிறது

இராகவன் நைஜிரியா said...

வாக்குரிமை என்பது நமது பிறப்புரிமை. அதை தயவு செய்து யாரும் வீணாக்கிவிடாதீர்கள்.

உங்களுடைய ஓட்டு அவசியம் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். இந்த நினைவில் அனைவரும் ஓட்டு போடுங்க.

வெளி நாட்டில் இருப்பதால் நான் ஓட்டு போட முடியாத வருத்தத்தில் இதைச் சொல்லுகின்றேன்.

நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களில், இது தான் முதல் தடவை நான் ஓட்டு போடாதது.

இராகவன் நைஜிரியா said...

என்னால முடிஞ்சது தமிழ் மணம், தமிழிஷ் இரண்டுலேயும் ஓட்டு போடுவது மட்டும் தாங்க. அதைப் போட்டுட்டேன்.

அரவிந்தன் said...

//என்னால முடிஞ்சது தமிழ் மணம், தமிழிஷ் இரண்டுலேயும் ஓட்டு போடுவது மட்டும் தாங்க. அதைப் போட்டுட்டேன்.//


இராகவன்

உங்கள் பின்னூட்டத்தினை மிகவும் இரசித்தேன் :)-

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Prabhu said...

கியூவில் நிற்கும்போதுகூட தப்பித் தவறி நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை சும்மாவாச்சும்கூட சொல்லிவிடாதீர்கள். கேட்பவன் நம்ம குசும்பனுக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா மகனாக்கூட இருந்து தொலைக்கலாம்.//////


இதுக்கு எதுக்குங்க குசும்பனோட குடும்பத்த இழுக்குறீங்க!


ஓட்டுதான? காலையில 7 மணிக்கே போயிரலாம்னு இருக்கேன்.

உண்மைத்தமிழன் said...

///எட்வின் said...

//கியூவில் நிற்பதற்கு அவ்வளவு சோம்பேறித்தனம்.//

உண்மை.உண்மை..உண்மை...

இந்த முறை கடந்த தேர்தல்களை விட குறைவாகவே வாக்கு பதிவு இருக்கும் என எதிர்பார்க்கிறேன். எல்லாம் குழம்பி போயிருக்கிறார்கள்.

ஆனால் மும்பையை விட முந்தலாம் ஒரு வேளை. அங்கு 47 சதவீதம் மட்டுமே பதிவாகியிருக்கிறது///

ஓட்டு சதவிகிதம் 65 சதவிகிதத்திற்கு மேல் இருந்தால்தான் நிலையான ஒரு முடிவு கிடைக்கும். இல்லாவிடில் வழக்கம்போல சொதப்பலாகத்தான் இருக்கும். அரசியல்வியாதிகளின் கை ஓங்கி மக்களின் கை தாழ்ந்துவிடும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..!

உண்மைத்தமிழன் said...

///இராகவன் நைஜிரியா said...

வாக்குரிமை என்பது நமது பிறப்புரிமை. அதை தயவு செய்து யாரும் வீணாக்கிவிடாதீர்கள்.

உங்களுடைய ஓட்டு அவசியம் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். இந்த நினைவில் அனைவரும் ஓட்டு போடுங்க.

வெளி நாட்டில் இருப்பதால் நான் ஓட்டு போட முடியாத வருத்தத்தில் இதைச் சொல்லுகின்றேன்.

நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களில், இதுதான் முதல் தடவை நான் ஓட்டு போடாதது.///

கவலைப்படாதீங்க.. அடுத்த சட்டமன்றத் தேர்தல்ல நீங்க நிச்சயமா ஓட்டுப் போடலாம்..

அப்பவும் முடியலைன்னா அட்லீஸ்ட் முன்னாடியே சொல்லிருங்க..

உங்க ஓட்டை நான் போட்டுர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

//இராகவன் நைஜிரியா said...
என்னால முடிஞ்சது தமிழ் மணம், தமிழிஷ் இரண்டுலேயும் ஓட்டு போடுவது மட்டும்தாங்க. அதைப் போட்டுட்டேன்.///

சந்தோஷம் ஸார்..

மிக்க நன்றி..

கோடி புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கட்டும்..!

உண்மைத்தமிழன் said...

///அரவிந்தன் said...

//என்னால முடிஞ்சது தமிழ் மணம், தமிழிஷ் இரண்டுலேயும் ஓட்டு போடுவது மட்டும் தாங்க. அதைப் போட்டுட்டேன்.//


இராகவன்

உங்கள் பின்னூட்டத்தினை மிகவும் இரசித்தேன் :)-

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்///

நானும்தான்..!

உண்மைத்தமிழன் said...

///pappu said...

கியூவில் நிற்கும்போதுகூட தப்பித் தவறி நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை சும்மாவாச்சும்கூட சொல்லிவிடாதீர்கள். கேட்பவன் நம்ம குசும்பனுக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா மகனாக்கூட இருந்து தொலைக்கலாம்.//////

இதுக்கு எதுக்குங்க குசும்பனோட குடும்பத்த இழுக்குறீங்க!///

குசும்பு புடிச்ச குடும்பத்துல ஒருத்தனா இருந்து தொலைச்சுட்டா வம்பு தானா வரும்ல.. அதனாலதான் சொன்னேன்..

//ஓட்டுதான? காலையில 7 மணிக்கே போயிரலாம்னு இருக்கேன்.///

ஓகே பாப்பூ.. ஆனா தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு வேண்டாம்.. வேறு எவருக்கு வேண்டுமானாலும் போடுங்கள்..

ஷண்முகப்ரியன் said...

ஓட்டுப் போட்ட விரலோடு வந்து உங்கள் பதிவினைப் பார்க்கிறேன்.நீங்கள் போட்டு விட்டீர்களா,சரவணன்?

வால்பையன் said...

அண்ணே வெயில் கடுமையா இருக்கு!
என் ஓட்ட போட யாராவது ஆள் கிடைப்பாங்களா?

Raju said...

\\இந்த 14 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று உங்கள் கையில் இருந்தால் நீங்கள் தாராளமாக வாக்களிக்க வரலாம்.\\

ஓட்டு லிஸ்ட்ல பேரு இருக்கனும்ல....!

மதிபாலா said...

வாக்குரிமை என்பது நமது பிறப்புரிமை. அதை தயவு செய்து யாரும் வீணாக்கிவிடாதீர்கள்.

உங்களுடைய ஓட்டு அவசியம் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். இந்த நினைவில் அனைவரும் ஓட்டு போடுங்க.

வெளி நாட்டில் இருப்பதால் நான் ஓட்டு போட முடியாத வருத்தத்தில் இதைச் சொல்லுகின்றேன்.

நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களில், இது தான் "மூன்றாவது" தடவை நான் ஓட்டு போடாதது.

ப்ரியா கதிரவன் said...

Very well said.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

\\புதிய போஸ்ட் எழுத ஒரு மேட்டர் கிடைக்கிறதே என்றெண்ணி ஆங்காங்கே நடைபெறவிருக்கும் கலவரத்தில் தலையைக் கொடுத்து உடம்பை புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள்..

பின்பு கட்டுப் போட்ட நிலையில் உங்களது போட்டோவுடனான செய்தியை நாங்கள் எங்கள் பதிவில் போட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஜாக்கிரதை..

\\

இந்த இடம்தான் பதிவின் எல்லாவற்றையும் விட நன்றாக இருந்தது..

jokes apart இந்தியாவில் தேர்தல்கள் நியாயமாகவும்,தெளிவாகவும் நடக்க சில அவசியமான நல்ல யோசனைகள் இருக்கின்றன..

அதைப்பற்றி ஒரு பதிவாக எழுத எண்ணியிருக்கிறேன்...

butterfly Surya said...

உலக நாயகன் கமலுக்கே ஒட்டில்லையாமே..??

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தாலும் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி ஒட்டளிக்கலாமா..??

வலையுலகில் எங்கள் ஒட்டு என்றும் உங்களுக்கே...

புருனோ Bruno said...

வாக்களித்தாகி விட்டது :)

புருனோ Bruno said...

//வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தாலும் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி ஒட்டளிக்கலாமா..??
//

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து அடையாள அட்டை இல்லை என்றால் மட்டுமே வேறு ஏதாவது ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம்

தீப்பெட்டி said...

நல்ல அவசியமான பதிவு.......

butterfly Surya said...

நன்றி புருனோ..

உலக நாயகனுக்கும் எனக்கும் ஒரே நிலைதான்.

உண்மைத்தமிழன் said...

///ஷண்முகப்ரியன் said...

ஓட்டுப் போட்ட விரலோடு வந்து உங்கள் பதிவினைப் பார்க்கிறேன்.நீங்கள் போட்டு விட்டீர்களா,சரவணன்?///

பதிவுலகில் முதல் ஓட்டைத் தாங்கள்தான் அளித்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்..

என்னதான் 'பெரிசு'ன்னு கூப்பிட மனசில்லேன்னாலும் கூப்பிட்டாவது பார்க்கலாமேன்னு நினைக்கிறேன்.. வாய்ப்பே தர மாட்டேங்குறீங்க..!

நல்லா இருங்க சாமி..!

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...
அண்ணே வெயில் கடுமையா இருக்கு! என் ஓட்ட போட யாராவது ஆள் கிடைப்பாங்களா?///

வெயில் என்ன பெரிய வெயிலு..?

டாஸ்மாக் கடை குளோஸ். அதான் மேட்டரு.. வீட்டை விட்டு வெளில வர மாட்டீங்குறே..

வாலு.. எப்படி இந்தியா முன்னேறும்..? எனக்கு நம்பிக்கையில்லை..!

உண்மைத்தமிழன் said...

///மதிபாலா said...

வாக்குரிமை என்பது நமது பிறப்புரிமை. அதை தயவு செய்து யாரும் வீணாக்கிவிடாதீர்கள்.

உங்களுடைய ஓட்டு அவசியம் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். இந்த நினைவில் அனைவரும் ஓட்டு போடுங்க.

வெளி நாட்டில் இருப்பதால் நான் ஓட்டு போட முடியாத வருத்தத்தில் இதைச் சொல்லுகின்றேன்.

நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களில், இது தான் "மூன்றாவது" தடவை நான் ஓட்டு போடாதது.///

பரவாயில்லை. வெளிநாட்டில் இருந்தாலும் மனசு உள்நாட்டிலேயே இருக்கிறதே..

வாழ்க மதிபாலா..

உண்மைத்தமிழன் said...

///ப்ரியா said...

Very well said.///

மிக்க நன்றி ப்ரியா..

உண்மைத்தமிழன் said...

///டக்ளஸ்....... said...

\\இந்த 14 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று உங்கள் கையில் இருந்தால் நீங்கள் தாராளமாக வாக்களிக்க வரலாம்.\\

ஓட்டு லிஸ்ட்ல பேரு இருக்கனும்ல....!///

ஆஹா டக்ளஸு.. முக்கியமான விஷயத்தை மறந்திட்டனே..

ஸாரி.. திருத்தியமைக்கு மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

///அறிவன்#11802717200764379909 said...

\\புதிய போஸ்ட் எழுத ஒரு மேட்டர் கிடைக்கிறதே என்றெண்ணி ஆங்காங்கே நடைபெறவிருக்கும் கலவரத்தில் தலையைக் கொடுத்து உடம்பை புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள்..

பின்பு கட்டுப் போட்ட நிலையில் உங்களது போட்டோவுடனான செய்தியை நாங்கள் எங்கள் பதிவில் போட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஜாக்கிரதை..\\

இந்த இடம்தான் பதிவின் எல்லாவற்றையும் விட நன்றாக இருந்தது..

jokes apart இந்தியாவில் தேர்தல்கள் நியாயமாகவும், தெளிவாகவும் நடக்க சில அவசியமான நல்ல யோசனைகள் இருக்கின்றன..

அதைப் பற்றி ஒரு பதிவாக எழுத எண்ணியிருக்கிறேன்...///

நன்றி அறிவன் ஸார்..

நம்ம நாட்டு நடப்பைத்தான் எழுதியிருக்கிறேன்.

இன்றைக்கு ராயப்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சித் தொண்டர்களுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதைத்தான் சொன்னேன்.. வேறென்ன செய்யறது..?

உண்மைத்தமிழன் said...

///வண்ணத்துபூச்சியார் said...

உலக நாயகன் கமலுக்கே ஒட்டில்லையாமே..??

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தாலும் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி ஒட்டளிக்கலாமா..??

வலையுலகில் எங்கள் ஒட்டு என்றும் உங்களுக்கே...///

இது முழுக்க, முழுக்க அரசு ஊழியர்களின் தவறுதான்..

கமலஹாசன் யார் என்று கண்டிப்பாக அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வீடு யாருடையது என்பதும் அவர்களுக்கும் தெரிந்திருக்கும். வீட்டில் ஆள் இல்லை என்பதால் பட்டியலில் இருந்து தூக்குதல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் துணை கொண்டு அரசு ஊழியர்கள் நடத்தியிருக்கும் அராஜக நிகழ்வு.

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...

வாக்களித்தாகி விட்டது :)///

எங்க மெட்ராஸ்லயா..? ஊர்லயா..?

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...

//வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தாலும் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி ஒட்டளிக்கலாமா..??//

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து அடையாள அட்டை இல்லை என்றால் மட்டுமே வேறு ஏதாவது ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம்.///

உண்மைதான் புருனோ ஸார்..

நான் எழுத மறந்து தொலைந்துவிட்டேன்.. கோபிக்க வேண்டாம்..

உண்மைத்தமிழன் said...

///தீப்பெட்டி said...

நல்ல அவசியமான பதிவு.......///

கொஞ்சம் லேட்டா போட்டுட்டேன்னு நினைக்கிறேன்..

எல்லாம் முருகன் செய்த சதி..!

உண்மைத்தமிழன் said...

///வண்ணத்துபூச்சியார் said...

நன்றி புருனோ.. உலக நாயகனுக்கும் எனக்கும் ஒரே நிலைதான்.///

ஹைய்யா.. கமலஹாசன், பரிசல்காரன் வரிசையில் நம்ம பூச்சியாருக்கும் ஒரு இடம் உண்டு..

மணிஜி said...

உண்மையை சொல்லுங்க..நீங்க ஓட்டு போட "பிரியாணி" வாங்கீணீங்கதானே?

பதி said...

ஓட்டுப் போட சொல்லி எழுதுன இந்த சின்னப் பதிவு சில கட்சிகளோட 'போலித் தேர்தல் வாக்குறுதிகளை' விட பெருசா இருக்கு...

இருந்தாலும், உங்க ஆர்வத்தை பாராட்டுகின்றேன் !!!!!! :)))))

abeer ahmed said...

See who owns sudowudo.com or any other website:
http://whois.domaintasks.com/sudowudo.com