02-04-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
காவல்துறையினரைப் பார்க்கின்றபோது அவர்கள் சீருடையைவிட அவர்கள் கையில் வைத்திருக்கும் லத்திதான் பொதுமக்களுக்கு அதிக பயத்தைத் தரும்.

‘ஒரு தடவை அதுல அடி வாங்கிப் பாரு.. அதோட மகிமை தெரியும்..!’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திருக்காத கட்சித் தொண்டர்களும், இளைஞர் இயக்கத்து தோழர்களும் இந்தியத் திருநாட்டில் இருக்கவே முடியாது.
பதிவர்களில் எத்தனை பேருக்கு அந்த அனுபவம் கிட்டியதோ எனக்குத் தெரியாது.. ஆனால் எனக்கு நிறைய உண்டு. அதில் மறக்க முடியாதது முதல் அனுபவம்தான்.. எங்கே என்பதுதான் கொஞ்சம் வேடிக்கையான, வேதனையான விஷயம்..
நான் மதுரையில் சில ஆண்டு காலம் எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டு நிம்மதியாக ராஜா மாதிரி இருந்த நேரம் அது.
மதுரையின் மண்ணின் மைந்தனான நடிகர், புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணம் பற்றிய செய்திகள் அனைத்தும் திருமணத்திற்கு முன்பே அப்போதைய பல பத்திரிகைகளில் வாராவாரம் வெளி வந்தபடியே இருந்ததால் மதுரையே ஏக பரபரப்பில் இருந்தது.
விஜயகாந்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு சில பத்திரிகைகளுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக ஆதித்தனார் குடும்பப் பத்திரிகைகள் விஜயகாந்திற்குத்தான் முக்கியத்துவம் அளித்து வந்தார்கள்.
திரு.சிவந்தி ஆதித்தனின் 'ராணி', மற்றும் திரு.ராமச்சந்திர ஆதித்தனின் 'தேவி' பத்திரிகையிலும் விஜயகாந்த் பற்றிய செய்தி வராத இதழ்களே இருக்க முடியாது.
திரு.சிவந்தி ஆதித்தனின் 'ராணி', மற்றும் திரு.ராமச்சந்திர ஆதித்தனின் 'தேவி' பத்திரிகையிலும் விஜயகாந்த் பற்றிய செய்தி வராத இதழ்களே இருக்க முடியாது.
இந்த இரண்டு இதழ்களுமே விஜயகாந்த் திருமணத்திற்கு முன்பாகவே திருமதி பிரேமலதாவின் புகைப்படத்தை பிரசுரித்து அமர்க்களம் செய்திருந்தன. பத்திரிகை செய்திகளின் தூண்டுதலில் நானும் அந்தத் திருவிழாவைக் காண நானும் ஆவலோடு காத்திருந்தேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மதுரை நகரமே திருமண விளம்பரத் தட்டிகளால் அல்லலோகப்பட்டுக் கொண்டிருந்தது. சுவரொட்டிகளாலும், சின்னச் சின்னத் தோரணங்களாலும் களை கட்டியிருந்தது மதுரை. தல்லாகுளம் பகுதி முழுவதும் விஜயகாந்தின் திருமண வாழ்த்து சுவரொட்டிகளைத் தாங்காத சுவர்களே கிடையாது. மேலமாசிவீதியில் உள்ள விஜயகாந்தின் அக்கா வீட்டிலிருந்து, மண்டபம் வரையிலானதூரம் வரையிலும் கட்சிக் கொடி போல் விஜயகாந்தின் மன்றத்துக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் பார்த்து மதுரை ஏக திகைப்பில் இருந்தது.

1990 ஜனவரி 30 இரவு 'தங்கரீகல்' தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 'தங்கம்' தியேட்டர் வழியாக வீடு திரும்பியபோது 'சுப்ரீம் ஹோட்டல்' வாசலில் ஏகமான கூட்டம்..
திருமணத்திற்கு முன்பும், திருமணம் முடிந்த அன்று இரவும் மணமக்கள் இந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தனர். அண்ணனைப் பார்க்க அப்போதே அவரது ரசிகர்கள் ஒன்று திரண்டு சாலையை மறித்து நின்று கொண்டிருந்தார்கள்.
கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து அப்போதே முடிவு செய்துவிட்டேன், நாளைக்கு முதல் வேலை அண்ணன் கல்யாணத்துக்கு போறதுதான்னு..! (அழைப்பிதழ் வந்துச்சான்னு சின்னப்புள்ளத்தனமா கொஸ்டீன் கேக்கக்கூடாது..!)
மறுநாள் ஜனவரி 31. விடிந்ததும், விடியாததுமாக அவசர, அவசரமாகக் கிளம்பி எனது சைக்கிளில் ராஜா முத்தையா மன்றத்திற்கு வந்தால், ஒரு அரசியல் கட்சி மாநாடு நடப்பது போல் ரசிகர்களின் கூட்டம். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மொட்டை வெயில் என்றே சொல்லலாம்..
மூன்று புற வாசல்களுமே மூடப்பட்டு போலீஸ், ரசிகர் மன்றப் பொறுப்பாளர்கள் என்ற பாதுகாப்பில் இருந்தது மண்டபம். ரசிகர் மன்றத்தினர் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்து தட்டிகளை வைத்திருந்ததால் மண்டபமே மறைக்கப்பட்டிருந்ததுபோல் தெரிந்தது.
மண்டபத்தின் வெளியே இருந்த பெட்டிக் கடைகளின் மேலேகூட ரசிகர்கள் ஏறி நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த மரங்களிலும் ரசிகர்கள் கூட்டம் தொற்றிக் கொண்டிருந்தது.
மூன்று புற வாசல்களுமே மூடப்பட்டு போலீஸ், ரசிகர் மன்றப் பொறுப்பாளர்கள் என்ற பாதுகாப்பில் இருந்தது மண்டபம். ரசிகர் மன்றத்தினர் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்து தட்டிகளை வைத்திருந்ததால் மண்டபமே மறைக்கப்பட்டிருந்ததுபோல் தெரிந்தது.
மண்டபத்தின் வெளியே இருந்த பெட்டிக் கடைகளின் மேலேகூட ரசிகர்கள் ஏறி நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த மரங்களிலும் ரசிகர்கள் கூட்டம் தொற்றிக் கொண்டிருந்தது.
சில ரசிகர்கள் மெயின் கேட்டின் மீது ஏறி நின்று உள்ளே இறங்க முயல.. போலீஸார் அவர்களை அடிக்கப் போவதைப் போல் பாவ்லா காட்ட, அவர்கள் பட்டென்று வெளிப்பக்கமாக காலை போட்டுக் கொள்ள என்று விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
மண்டபத்தைச் சுற்றிலும் இருந்த இரும்புக் கிராதிகளின் மேலேயும் ரசிகர்கள் ஏறி நின்று கொண்டு எங்காவது கிடைக்கின்ற நேரத்தில் தங்கள் தலைவனின் முகம் தெரியாதா என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மண்டபத்தின் வலது பக்கமிருந்தும், இடது பக்கமிருந்தும் பார்த்தால் மண்டபத்தினுள் நுழையும் கதவுகள் தெரியும். அந்தக் கதவுகள் நி்மிடத்துக்கொரு முறை திறக்கப்பட்டுக் கொணடிருக்க, அந்த ஒரு நொடி தரிசனத்தையே ஐயப்ப தரிசனம்போல் ரசித்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்..
அரங்கத்தின் வலது புறமாக இருந்த ரோட்டோரத்தில் நின்றுதான் பார்க்கவும், கேட்கவும் முடிந்தது.. இங்கேதான் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது.
மண்டபத்தின் வலது பக்கமிருந்தும், இடது பக்கமிருந்தும் பார்த்தால் மண்டபத்தினுள் நுழையும் கதவுகள் தெரியும். அந்தக் கதவுகள் நி்மிடத்துக்கொரு முறை திறக்கப்பட்டுக் கொணடிருக்க, அந்த ஒரு நொடி தரிசனத்தையே ஐயப்ப தரிசனம்போல் ரசித்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்..
அரங்கத்தின் வலது புறமாக இருந்த ரோட்டோரத்தில் நின்றுதான் பார்க்கவும், கேட்கவும் முடிந்தது.. இங்கேதான் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது.
கலைஞர் தலைமையில் திருமணம். கலைஞர் 13 வருட கால வனவாசத்திற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருந்த நேரம். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கலைஞர், விஜயகாந்தின் மனம் கவர்ந்த தலைவர் மூப்பனார், இசைஞானி இளையராஜா, சத்யராஜ், பிரபு, எஸ்.எஸ்.சந்திசந்திரசேகர், பாண்டியன், தியாகு, தாணு, இராம.நாராயணன், பாரதிராஜா, மணிவண்ணன், எஸ்.பி.முத்துராமன், சங்கர்கணேஷ், ஜி.வி.. என்று எனக்கு நினைவில் இருக்கிறவரைக்கும் தெரிகிறது.
இதனாலேயே விஜயகாந்த் ரசிகர்களைவிடவும், தி.மு.க. கரைவேட்டிகளின் எண்ணிக்கையும், காங்கிரஸ் கட்சியினரின் எண்ணிக்கையும் அந்த இடத்தில் அதிகமாக இருந்தது. உள்ளே மைக்கில் பேசுவது வெளியில் கேட்க வேண்டும் என்பதற்காக மண்டபத்தின் மூன்று பக்கமும் ஸ்பீக்கரை கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.
உள்ளே பேசியவர்களெல்லாம் 'புரட்சிக் கலைஞர்' என்றும் 'விஜயகாந்த்' என்றும் சொல்லும்போதெல்லாம் உள்ளே இருந்து எழுந்த கைதட்டலைவிட, மண்டபத்தைச் சுற்றி அந்த வேகாத வெயிலில் காத்திருந்த ரசிகர் பெருமக்கள் எழுப்பிய கரகோஷம்தான் அதிகம்.
உள்ளே இசை வாத்தியங்களின் மங்கள இசையில் மாலை மாற்றுதலும், தாலி கட்டுதலும் நடக்க.. சட்டென்று வெளியே வந்த ஒருவர் ரசிகர்களைப் பார்த்து கை தட்டல் எழுப்பும்படி சைகை செய்ய.. அதற்காகவே காத்திருந்ததைப் போல ரசிகர்கள் எழுப்பிய விசில் சப்தமும், கை தட்டலும் அந்தப் பகுதியை அலற வைத்தது. வித்தியாசமான அனுபவம்யா இது..!
போலீஸார்தான் பாவம்.. ஒரு பக்கம் ரசிகர்களின் கண்ணாமூச்சி விளையாட்டு. மறுபக்கம் கட்சிக்காரர்களின் நொச்சு. இரண்டையும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.
கலைஞர் பேசியது அப்போது நியாபகத்தில் இல்லை.. இப்போது பத்திரிகைகளில் பதிவாகியிருப்பதை தட்டச்சு செய்து இடுகிறேன்..!
"தம்பி விஜயகாந்த் எளிமை, இனிமை ஆகிய இயல்புகளுடன் தன்னடக்கத்துடன் விளங்குகிறார். கலையுலகின் உச்சிக்குச் சென்றாலும், ஆணவம், செருக்கு, அகம்பாவம் ஆகியவை தன்னை அணுகாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
விஜயகாந்த் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ந்து வெற்றிப் படங்களாக தந்து கலையுலகிற்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் தம்பி விஜயகாந்த்.
இந்த விழாவுக்கு என்னையும் அழைத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரையும் அழைத்திருப்பதால் இதுவொரு வித்தியாசமான விழா என்று யாரும் கருத வேண்டாம். நானும் அப்படி கருதவில்லை. நாம் எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழன் என்ற உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம்..!
தன்மானத் திருமணம், சுயமரியாதைத் திருமணம், பகுத்தறிவு திருமணம் என்று தந்தை பெரியார்தான் அறிமுகப்படுத்தினார். கிராமம், பட்டி தொட்டிகளில் எல்லாம் இந்த சுயமரியாதை திருமணத்தை அண்ணா பரப்பினார். இன்று மூட நம்பிக்கையைத் தவிர்த்து தமிழனின் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது..!
ராஜா தேசிங்கிற்கு ஒரு மகமத்கான் கிடைத்ததுபோல் விஜயகாந்திற்கு ஒரு ராவுத்தர் கிடைத்திருக்கிறார். என்னை மாத்திரம் இந்த விழாவுக்கு அழைத்தால், தன்னை அடையாளம் தெரிந்து கொள்வார்கள் என்று தம்பி விஜயகாந்துக்கு ஒரு தயக்கம்..
பஞ்சாங்கத்தை நம்புகிறவர்கள், கிழக்கே இருக்கும் ஊருக்குப் போகும்போது, கிழக்கே சூலம் என்றால் போகக் கூடாது என்று நினைப்பார்கள். அதே பஞ்சாங்கத்தில் இதனை நிவர்த்தி செய்ய சிறு குறிப்பும் இருக்கும். அதில் கிழக்கே சூலமாக இருந்தாலும் அதற்குப் பரிகாரமாக வெல்லத்தை சாப்பிட்டுக் கொண்டு செல்லலாம் என்று குறிப்பிட்டிருக்கும்.
அது போலத்தான் தம்பி விஜயகாந்த் வெல்லமாக நண்பர் மூப்பனாரை இங்கே அழைத்துள்ளார். அவர் நட்பில் வெல்லமாக இனிக்கக் கூடியவர். தஞ்சாவூர் பண்பு அது. அந்த பண்பின் அடிப்படையில் அவர் இங்கு வந்திருக்கிறார். மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.." என்றார் கலைஞர் மு.கருணாநிதி.
ஆனால் இளையராஜா பேசியதில் ஒன்றே ஒன்றுதான்(சப்ஜெக்ட் அப்படி) எனக்கு பளிச்சென்று இன்றும் நினைவுக்கு வருகிறது.
"தம்பி விஜயகாந்த் எளிமை, இனிமை ஆகிய இயல்புகளுடன் தன்னடக்கத்துடன் விளங்குகிறார். கலையுலகின் உச்சிக்குச் சென்றாலும், ஆணவம், செருக்கு, அகம்பாவம் ஆகியவை தன்னை அணுகாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
விஜயகாந்த் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ந்து வெற்றிப் படங்களாக தந்து கலையுலகிற்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் தம்பி விஜயகாந்த்.
இந்த விழாவுக்கு என்னையும் அழைத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரையும் அழைத்திருப்பதால் இதுவொரு வித்தியாசமான விழா என்று யாரும் கருத வேண்டாம். நானும் அப்படி கருதவில்லை. நாம் எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழன் என்ற உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம்..!
தன்மானத் திருமணம், சுயமரியாதைத் திருமணம், பகுத்தறிவு திருமணம் என்று தந்தை பெரியார்தான் அறிமுகப்படுத்தினார். கிராமம், பட்டி தொட்டிகளில் எல்லாம் இந்த சுயமரியாதை திருமணத்தை அண்ணா பரப்பினார். இன்று மூட நம்பிக்கையைத் தவிர்த்து தமிழனின் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது..!
ராஜா தேசிங்கிற்கு ஒரு மகமத்கான் கிடைத்ததுபோல் விஜயகாந்திற்கு ஒரு ராவுத்தர் கிடைத்திருக்கிறார். என்னை மாத்திரம் இந்த விழாவுக்கு அழைத்தால், தன்னை அடையாளம் தெரிந்து கொள்வார்கள் என்று தம்பி விஜயகாந்துக்கு ஒரு தயக்கம்..
பஞ்சாங்கத்தை நம்புகிறவர்கள், கிழக்கே இருக்கும் ஊருக்குப் போகும்போது, கிழக்கே சூலம் என்றால் போகக் கூடாது என்று நினைப்பார்கள். அதே பஞ்சாங்கத்தில் இதனை நிவர்த்தி செய்ய சிறு குறிப்பும் இருக்கும். அதில் கிழக்கே சூலமாக இருந்தாலும் அதற்குப் பரிகாரமாக வெல்லத்தை சாப்பிட்டுக் கொண்டு செல்லலாம் என்று குறிப்பிட்டிருக்கும்.
அது போலத்தான் தம்பி விஜயகாந்த் வெல்லமாக நண்பர் மூப்பனாரை இங்கே அழைத்துள்ளார். அவர் நட்பில் வெல்லமாக இனிக்கக் கூடியவர். தஞ்சாவூர் பண்பு அது. அந்த பண்பின் அடிப்படையில் அவர் இங்கு வந்திருக்கிறார். மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.." என்றார் கலைஞர் மு.கருணாநிதி.
ஆனால் இளையராஜா பேசியதில் ஒன்றே ஒன்றுதான்(சப்ஜெக்ட் அப்படி) எனக்கு பளிச்சென்று இன்றும் நினைவுக்கு வருகிறது.
"இனிமேல் விஜயகாந்த், 'விரிச்சு வைச்ச பாயும், எடுத்து வைச்ச பாலும் வீணாகத்தான் போகுது.. அந்த வெள்ளி நிலாக் காயுது..' என்று பாட முடியாது என்று நினைக்கிறேன்.." என்றார். இது எப்படி இருக்கு..? மறக்கவா முடியும்..!?
கல்யாணம் செய்துவைத்துவிட்டு கலைஞரும், மற்றவர்களும் வெளியேறிய பின்பு, ஒரு பெரும்கூட்டமே திமுதிமுவென்று கேட்டின் மீது ஏறி உள்ளே குதித்து ஓடியது. அதுவரையில் அவர்களை அடக்கியிருந்ததே பெரிய விஷயம்.. நானும் சைக்கிளை ஓரமாக வைத்துவிட்டு கேட்டில் ஏறி உள்ளே இறங்கி ஓடினேன்..
அந்தப் பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் திரண்டு வந்த ரசிகர்களை வழி மறித்த மன்றப் பொறுப்பாளர் ஒருவர், "அண்ணன்(விஜயகாந்த்) பொருளாளர் கல்யாணத்துக்குப் போறாருப்பா.. திரும்பி வருவாரு.. அப்புறமா பாருங்க..” என்று கெஞ்சாத குறையாக எங்களைத் தடுத்து நிறுத்தினார்.
யார் கேக்கப் போறா..? அவரையும் தாண்டி மேலே ஏற.. பட்டென்று மேலேயிருந்த கதவை இழுத்துப் பூட்டிவிட்டு போலீஸாரை வரவழைத்தார் அவர்.. போலீஸ் தலையைப் பார்த்தவுடன் கூட்டம் பிய்த்துக் கொண்டு நாலாபுறமும் ஓடியது. நானும்தான்..
யார் கேக்கப் போறா..? அவரையும் தாண்டி மேலே ஏற.. பட்டென்று மேலேயிருந்த கதவை இழுத்துப் பூட்டிவிட்டு போலீஸாரை வரவழைத்தார் அவர்.. போலீஸ் தலையைப் பார்த்தவுடன் கூட்டம் பிய்த்துக் கொண்டு நாலாபுறமும் ஓடியது. நானும்தான்..
பழையபடி அதே மரத்தடியில் வந்து நின்று, “என்னடா..! உடனேயே மனுஷன் கிளம்பி்ட்டாரு..?”ன்னு விசாரிச்சா.. விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் பொருளாளரும், விஜயகாந்தின் நீண்ட கால நண்பருமான சுந்தர்ராஜனுக்கும் அன்றைக்குத்தான் திருமணமாம்.
‘விஜயகாந்த் திருமணத்தன்றுதான் நானும் திருமணம் செய்து கொள்வேன்..’ என்று சபதமெடுத்து அதன்படியே செய்து காட்டிய உத்தம நண்பர் இவர். அந்தத் திருமணம் தெற்குவாசல் பகுதியில் ஒரு மண்டபத்தில் நடந்தது.
(விஜயகாந்த் சமீபத்தில் திருவரங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏதோ ஒரு கோபத்தில், கட்சிக்காரர் ஒருவரை உரிமையுடன் கன்னத்தில் அறைந்தாரே. ஞாபகமிருக்கிறதா..? அது இந்த சுந்தர்ராஜனைத்தான்..!)
அந்தத் திருமணத்திற்குச் சென்று தனது உற்ற நண்பனுக்கு தாலியைக் கையில் எடுத்துக் கொடுத்து, அந்தக் கல்யாணத்தையும் நடத்தி வைத்துவிட்டுத்தான் திரும்பவும் இங்கே வந்தார்..!
‘விஜயகாந்த் திருமணத்தன்றுதான் நானும் திருமணம் செய்து கொள்வேன்..’ என்று சபதமெடுத்து அதன்படியே செய்து காட்டிய உத்தம நண்பர் இவர். அந்தத் திருமணம் தெற்குவாசல் பகுதியில் ஒரு மண்டபத்தில் நடந்தது.
(விஜயகாந்த் சமீபத்தில் திருவரங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏதோ ஒரு கோபத்தில், கட்சிக்காரர் ஒருவரை உரிமையுடன் கன்னத்தில் அறைந்தாரே. ஞாபகமிருக்கிறதா..? அது இந்த சுந்தர்ராஜனைத்தான்..!)
அந்தத் திருமணத்திற்குச் சென்று தனது உற்ற நண்பனுக்கு தாலியைக் கையில் எடுத்துக் கொடுத்து, அந்தக் கல்யாணத்தையும் நடத்தி வைத்துவிட்டுத்தான் திரும்பவும் இங்கே வந்தார்..!
பாதுகாப்புக்கு உள்ளே மண்டப கேட்டில் நின்று கொண்டிருந்த போலீஸாரிடம் பல ரசிகர்கள் சிநேகத்துடன் "ஏண்ணே யாராவது நடிகைங்க வந்திருக்காங்களா..?" என்று விசாரித்தார்கள்.. ஒருத்தர்கூட வரலை என்றவுடன் பலருக்கும் சோகம்.. எனக்கும்தான்..!
"ஒரு நடிகைகூட வரலியே..!? எத்தனை பேரோட அண்ணன் டூயட் பாடியிருப்பாரு.. எத்தனை பேருக்கு சான்ஸ் கொடுத்தாரு.. இது முக்கியம் இல்லியா..? எப்படி வராம போனாங்க..! ஏமாத்திட்டாங்க அத்தனை பேரும்..!" என்று சிலர் திட்டித் தீர்த்தார்கள்.
(வந்தால் சட்னிதான் என்பதை உணர்ந்துதான் எந்த நடிகையும் வரவில்லை. ஆனால் சென்னையில் வைத்த திருமண வரவேற்புக்கு வந்திருந்த ரேகாவும், வைஷ்ணவியும் கண்கலங்கித்தான் வெளியில் வந்தார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் 'அன்பு'த் தொல்லை இருந்தது..)
நேரம் ஓடிக் கொண்டிருந்தது.. வி.ஐ.பி.க்கள் கியூ வரிசையில் நின்று அன்பளிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வேகாத வெயிலில் என்ன செய்வது என்று தெரியாமல் உலாத்திக் கொண்டிருந்த எனக்கு அருகில் இருந்த தமுக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்காக பிரியாணி காத்திருப்பதாகவும், ராவுத்தர் ஏற்பாடு அது என்றும், அங்கே ரசிகர்களோடு ரசிகராக விஜயகாந்தும் சாப்பிடப் போகிறார் என்றும் சொன்னார்கள்.
ஆஹா.. பிரியாணியா..? அதுவும் ஓசிலயா..? எவன் விடுவான்.. மனம் பரபரத்தது நடக்கப் போவது தெரியாமல்.. நாம ஒண்ணு நினைச்சா, முருகன் ஒண்ணு செய்வானே..! செஞ்சுட்டான்..!
நேரம் ஆக, ஆக ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. சிறிது நேரம் கழித்து தெற்கு வாசலில் இருந்து காந்தி மியூஸியம் வழியாக மீண்டும் முத்தையா மன்றத்திற்கே வந்தார்கள் மணமக்கள்.
கூட்டம் அருகே ஓட.. போலீஸ் மிகப் பிரயத்தனப்பட்டு அவர்களை அடக்க, விஜயகாந்த் போலீஸை ஒதுங்கச் சொன்னார். அவர்களும் ஆளை விட்டால் போதும் என்று மனதுடன் ஒதுங்கிக் கொள்ள.. ஒரு திறந்த ஜீப்பில் விஜயகாந்தும், பிரேமலதாவும் மாலையும், கழுத்துமாக ஏறினார்கள். பிரேமலதா அடக்கமாக கை கூப்பியபடியே வர.. விஜயகாந்த் தனது ரசிகர்களை நோக்கி கை ஆட்டியபடியே வந்தார்.. ஜீப், தமுக்கம் மைதானம் நோக்கிச் சென்றது.
கூட்டம் அருகே ஓட.. போலீஸ் மிகப் பிரயத்தனப்பட்டு அவர்களை அடக்க, விஜயகாந்த் போலீஸை ஒதுங்கச் சொன்னார். அவர்களும் ஆளை விட்டால் போதும் என்று மனதுடன் ஒதுங்கிக் கொள்ள.. ஒரு திறந்த ஜீப்பில் விஜயகாந்தும், பிரேமலதாவும் மாலையும், கழுத்துமாக ஏறினார்கள். பிரேமலதா அடக்கமாக கை கூப்பியபடியே வர.. விஜயகாந்த் தனது ரசிகர்களை நோக்கி கை ஆட்டியபடியே வந்தார்.. ஜீப், தமுக்கம் மைதானம் நோக்கிச் சென்றது.
ஜீப்பின் முன்னும், பின்னும் அப்படியொரு கூட்டம். நெரிசலில் கூடவே ஓடினேன்.. வியர்வை பொங்கி வழிந்தது.. அதெல்லாம் இப்பத்தான் தோணுது. அப்ப இருந்தது ஒரு ஆர்வமும், பிரியாணி மீதான பாசமும்தான்..
சாலையில் ஒரு புறம் மட்டுமே போக்குவரத்து திறந்துவிடப்பட அதையும் ரசிகர்கள் தடை செய்துவிட்டார்கள். கொஞ்ச நேரத்திற்கு அடக்கமாக கை கூப்பியபடியே வந்த பிரேமலதா, விஜயகாந்தின் அறிவுரைக்குப் பின் அவரும் கையை அசைக்க ஆரம்பிக்க கரகோஷம் பிய்த்தது. இதற்கு ரோட்டின் இரு புறமும் இருந்த பெண்களிடத்தில் அமோக ரெஸ்பான்ஸ்..
கூட்டம் நகராமல் அப்படியே நிற்க.. “சீக்கிரம் போங்க.. சாப்பிடணும்.. நிறைய பேர் காத்துக்கிட்டிருக்காங்க..” என்று மைக்கில் சொல்லிச் சொல்லி நகர்த்தினார்கள் ரசிகர் மன்றத் தலைவர்கள்.
சில இடங்களில் ரசிகர்களே கரகாட்டம், காவடியாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் வேறு சில சில இடங்களில் ஜீப்பை நிறுத்தி தங்களது ஆட்டத்தைத் தொடர விஜயகாந்தே தலையிட்டு சீக்கிரம் போகும்படி சொல்ல வேண்டியதாயிற்று..
கூட்டம் நகராமல் அப்படியே நிற்க.. “சீக்கிரம் போங்க.. சாப்பிடணும்.. நிறைய பேர் காத்துக்கிட்டிருக்காங்க..” என்று மைக்கில் சொல்லிச் சொல்லி நகர்த்தினார்கள் ரசிகர் மன்றத் தலைவர்கள்.
சில இடங்களில் ரசிகர்களே கரகாட்டம், காவடியாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் வேறு சில சில இடங்களில் ஜீப்பை நிறுத்தி தங்களது ஆட்டத்தைத் தொடர விஜயகாந்தே தலையிட்டு சீக்கிரம் போகும்படி சொல்ல வேண்டியதாயிற்று..
தமுக்கம் மைதானத்தின் உட்புறம் இருந்த மண்டபத்தில் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கேயும் போலீஸ் குவிப்பு. விஜயகாந்தின் ஜீப் மைதானத்தின் உள்ளே நுழையவே 20 நிமிடங்கள் பிடித்தது.. கூட்டத்தில் என் செருப்பு பிய்ந்து, ஒரு செருப்பை மட்டுமே போட மனமில்லாமல் தூக்கியெறிந்துவிட்டு வீராதிவீரனாக உள்ளே நுழைந்தேன்.
உள்ளே ஏற்கெனவே ரசிகர் மன்றத் தலைவர்கள் ரசிகர்களைப் பொறுக்கியெடுத்து சாப்பிடுவதற்குத் தயாராக, வரிசையாக அமர வைத்திருந்தார்கள். பிரியாணி என்றவுடன் சாப்பிட பசியாய் பறந்து வந்திருந்த, என்னைப் போன்றவர்களுக்கு இதைப் பார்த்தவுடன் திக்கென்றானது, எப்ப நாம சாப்பிடறது என்று..!?
கூட்டம் விஜயகாந்த் தம்பதிகளோடு உள்ளே நுழைய முயல இரும்பு கேட்டை லேசாகத் திறந்து விஜயகாந்தோடு 5 பேரை மட்டுமே உள்ளே அனுமதித்த ராவுத்தர், கேட்டை இழுத்துச் சாத்திவிட்டார். பின்பு ஆரம்பி்த்தது எங்களுக்கு சாத்து..
லேசான தள்ளுமுள்ளு.. தடியடிதான்.. உள்ளே பிரியாணியை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்த என் தொடையில் ஏதோ ஒரு அடி.. ‘ஐயோ..!’ என்று கத்தியபடியே கீழே விழுந்தேன். அடுத்த அடியும் அதே தொடையில் விழுந்தது.. நிமிர்ந்துகூட பார்க்க தைரியமில்லாமல், கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியில் வந்து விழுந்தேன்.

தமுக்கம் மைதானத்தின் முகப்பில் ஒரு மரம் இருந்தது. இப்போது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அந்த மரத்தின் ஓரமாகப் போய் தொடையைப் பிடித்துக் கொண்டு நின்றவன், சில நொடிகளில் நிற்கவே முடியவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டேன்.
சிறிது நேரத்திற்கு காலை அசைக்கக்கூட முடியவில்லை. என்னைப் போன்று அடி வாங்கிய பல ரசிகர்களும் மரியாதையாக வெளியே வந்து ஒதுங்கி நிற்க.. சில நொடிகளில் கூட்டம் கட்டுக்குள் வந்தது.. பின்பு ரசிகர் மன்றத் தலைவர்கள் பலரும் ஓடோடி வந்து ரசிகர்களை சமாதானப்படுத்தி ‘அனைவருக்கும் பிரியாணி உண்டு..’ என்று சொல்லி வயிற்றில் பால் வார்த்தார்கள்.
ஆனால் என்னால்தான் அதனை ரசிக்க முடியவில்லை. வலி என்றால் அப்படி ஒரு வலி.. அழுதேவிட்டேன். என் நிலையைப் பார்த்த ஒரு ஆள், “தம்பி... மாமனுங்க அடிச்சிட்டானுங்களா..?” என்றார். என்னத்த சொல்றது நானு..!? பதில் சொல்லாமல் நான் அவரைப் பார்க்க.. “மொதல்ல கொஞ்ச நேரம் அப்படித்தான் இருக்கும்.. அப்படியே ஆட்டாம, அசையாம இருங்க.. தசை இறுகிருக்கும். கொஞ்ச நேரத்துல சரியாப் போயிரும்..” என்றார் அக்கறையோடு.. ஒருவேளை நல்ல அனுபவசாலியாக இருப்பார் போலிருக்கு..!
சட்டையின் பின்பக்கம் கிழிந்து தொங்கிய நிலையில், பேண்ட்டும் அழுக்காகி, செருப்பு இல்லாமல் தலைமுடி கலைந்து, கிட்டத்தட்ட ஓசி பிரியாணி சாப்பிடக் கூடிய தோற்றத்தில்தான் நானும் இருந்தேன். ஆனால் பிரியாணி சாப்பிடும் மனநிலையில் இல்லை.
வலியோடு நான் உட்கார்ந்திருக்க.. முதல் பந்தி முடிந்து விஜயகாந்த் ரசிகர்களோடு சாப்பிட்டுவிட்டு வெளியேறினார். மறுபடியும் கூட்டம் அவரை மொய்த்தது.. “எல்லாரும் கண்டிப்பா சாப்பிட்டுட்டுத்தான் போகணும்..” என்று விஜயகாந்த் சொன்னபோது தமுக்கமே கை தட்டலில் அரண்டு போனது..
பின்பு அம்பாசிடர் காரில் அவரும், அவரது திருமதியாரும் வெளியேற.. ரசிகர்கள் கூட்டம் அவர்களது காரைத் துரத்திக் கொண்டே ஓடியது. எனக்கும் கால் நல்லாயிருந்தா சத்தியமா துரத்தியிருப்பேன். முடியலையே..
கொஞ்சம், கொஞ்சமாக கால் வலி குறைய.. எழுந்து நடந்தேன்.. நேரம் மதியம் 1 மணி இருக்கும் என்று நினைக்கிறேன்.. ‘இப்போதைக்கு வீட்ல போய் படுக்கணும்யா..’ என்ற ஒரு எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை அப்போதைக்கு..
அங்கிருந்து பொடி நடையாய் நொண்டியபடியே நடந்து ராஜா முத்தையா மன்றத்திற்கு வந்து, எனது ஓட்டை சைக்கிளைத் தேடியெடுத்து வீடு திரும்பியபோது, வீட்டில் அனைவரும் என்னை பார்த்த பார்வை இருக்கிறது பாருங்க..! ம்ஹும்.. ரெண்டு நாளைக்கு ஒருத்தர் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்க முடியல..!!!
இதற்கு பின்பு பல கட்சி ஊர்வலங்களில் போலீஸ் தடியடியில் சிக்கி அடிபட்ட அனுபவம் உண்டு என்றாலும், முதல் அனுபவம் இதுதான் என்பதால் மறக்க முடியாமல் போய்விட்டது..!
இதுல இருந்து நான் சொல்றது என்னன்னா..!
1. தயவு செய்து ஓசி பிரியாணிக்காக எங்கேயும் அலையாதீங்க..!?????????
2. எந்தக் கூட்டத்துக்குப் போனாலும், போலீஸ் இருந்தா கொஞ்சம் சுதாரிப்பா இருந்துக்குங்க..! மாட்டினீங்க அவ்ளோதான்..!
விஜயகாந்தின் அரசியல் நிலவரம் பத்தி பதிவெழுதலாம்னு யோசிச்சுட்டு அவரோட நல்ல புகைப்படம் கேட்டு, கூகிளாண்டவர்கிட்ட தேடினப்போ திடீர்ன்னு இந்த போட்டோ கிடைச்சது.

இதைப் பார்த்தவுடனேயே இதை எழுதிரணும்னு தோணுச்சு.. எழுதி்ட்டேன்..
நன்றி..
வணக்கம்..
புகைப்பட உதவிக்காக ஸ்டில்ஸ் ரவியண்ணனுக்கு எனது நன்றிகள்..!
|
|
Tweet |

