26-11-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இதுதான் சினிமா. சினிமா என்பது மொழியானால் இதுவே சினிமா. சினிமாவுக்கு ஒரு இலக்கணம் இருப்பது உண்மையானால் தமிழ்ச் சினிமாவில் இருந்து இதனை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் சினிமா ரசிகனுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்..! உலகச் சினிமாவில் தமிழ் மொழியின் கீழ் இடம் பிடித்திருக்கும் பெருமிதமானத் திரைப்படம் இது..!
இத்தனை சிறப்புக்களையும் தாராளமாக நாம் வாரி வழங்கலாம் இந்தப் படத்திற்கு..!
ஆனாலும் நெருஞ்சி முள்ளாய் இதயத்தைத் துளைக்கிறது ஒரு குறை. படத்தின் கதை தழுவல்தான். நிச்சயமாக கிகுஜிரோ என்ற ஜப்பானியத் திரைப்படத்தின் கதையைத் ஆரத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.. ஆனால் எடுத்தவிதத்தில் உலகத் தரமான இயக்குநர்களின் வரிசையில் தைரியமாக நிற்கிறார் மிஷ்கின்.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இதுதான் சினிமா. சினிமா என்பது மொழியானால் இதுவே சினிமா. சினிமாவுக்கு ஒரு இலக்கணம் இருப்பது உண்மையானால் தமிழ்ச் சினிமாவில் இருந்து இதனை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் சினிமா ரசிகனுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்..! உலகச் சினிமாவில் தமிழ் மொழியின் கீழ் இடம் பிடித்திருக்கும் பெருமிதமானத் திரைப்படம் இது..!
இத்தனை சிறப்புக்களையும் தாராளமாக நாம் வாரி வழங்கலாம் இந்தப் படத்திற்கு..!
ஆனாலும் நெருஞ்சி முள்ளாய் இதயத்தைத் துளைக்கிறது ஒரு குறை. படத்தின் கதை தழுவல்தான். நிச்சயமாக கிகுஜிரோ என்ற ஜப்பானியத் திரைப்படத்தின் கதையைத் ஆரத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.. ஆனால் எடுத்தவிதத்தில் உலகத் தரமான இயக்குநர்களின் வரிசையில் தைரியமாக நிற்கிறார் மிஷ்கின்.
அன்னவாசல் என்னும் ஊரில் இருந்து கொண்டு மாதந்தோறும் லெட்டரையும், பணத்தையும் அனுப்பி வைக்கும் தனது அம்மாவைத் தேடிப் புறப்படுகிறான் சிறுவன் ஹரி. சிறிதளவு மனநலம் பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிக்கியிருக்கும் ஒரு நோயாளி. எல்லாரையும் பார்க்கவும், நேசிக்கவும், சோறு ஊட்டவும் அம்மாவும், அப்பாவும் வரும்போது, தன்னைப் பார்க்க யாரும் வரவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத கேரக்டர்.. ஒரு நாள் மருத்துவமனையைவிட்டு வெளியேறுகிறான்.
அதே நாள்தான் அந்தச் சிறுவனும் தனது தாயைத் தேடி அன்னவாசல் நோக்கிப் புறப்படுகிறான். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். முதலில் முரண்படுகிறார்கள். பின்பு இணைகிறார்கள். இருவருக்குமே அவரவர் தாயைச் சந்திக்கும் ஆவல்.. சிறுவனுக்கோ தனது தாயைச் சந்தித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை. இதனாலேயே யாரிடமும் முத்தம் பெறாமல் தவிர்த்து வருகிறான்.
பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்கள், பிரச்சினைகள், எதிர்ப்புகள்.. என்று பலவற்றையும் சந்திக்கிறார்கள். அந்தச் சூழலுடன் கதையை நகர்த்தி, இறுதியில் சிறுவன் தாயை சந்தித்தானா? மனநலம் பாதித்தவனும் தனது அம்மாவை பார்த்தானா? என்பதையும் தயவு செய்து தியேட்டருக்குச் சென்று பாருங்கள்..!
முதல் ஷொட்டு இயக்குதலுக்கு..! அஞ்சாதே படத்தைப் போல் முதல் ஷாட்டிலேயே துவங்கிவிட்டது மிஷ்கினின் ராஜ்ஜியம். இப்படியெல்லாம் காட்சியமைப்புகள் வைக்க முடியுமா என்று பல துணை இயக்குநர்களையும், இயக்குநர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.
இயக்கம் அற்புதம் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமெனில் படத்தின் அத்தனை ஷாட்டுகளையும் சொல்லியாக வேண்டும்.. அப்படித்தான் இருக்கிறது..
எந்தக் காட்சியிலும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டுமென்பதற்காக கேரக்டர்களை எல்லை மீறி பேச விடவில்லை. தானும் பேசவில்லை. இயக்குதல் ஒரு பக்கம் இருந்தாலும் தானும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் மிஷ்கின்.
முதல் ஷொட்டு இயக்குதலுக்கு..! அஞ்சாதே படத்தைப் போல் முதல் ஷாட்டிலேயே துவங்கிவிட்டது மிஷ்கினின் ராஜ்ஜியம். இப்படியெல்லாம் காட்சியமைப்புகள் வைக்க முடியுமா என்று பல துணை இயக்குநர்களையும், இயக்குநர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.
இயக்கம் அற்புதம் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமெனில் படத்தின் அத்தனை ஷாட்டுகளையும் சொல்லியாக வேண்டும்.. அப்படித்தான் இருக்கிறது..
எந்தக் காட்சியிலும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டுமென்பதற்காக கேரக்டர்களை எல்லை மீறி பேச விடவில்லை. தானும் பேசவில்லை. இயக்குதல் ஒரு பக்கம் இருந்தாலும் தானும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் மிஷ்கின்.
தனது கருவிழி பிதுங்கி வந்துவிடுவதைப் போல முகத்தைக் குரூரமாக்கிக் காட்டுவதிலும், மென்ட்டலா என்று கேட்டவுடன் அவர் காட்டும் வேகமும், அதே வேகத்தைப் பையனிடம் காட்ட முடியாமல் தவியாய் தவிக்கின்ற தவிப்பும், தனது அம்மாவின் கோலத்தைப் பார்த்து கதறி அழுவதுமாக இயக்குநர் என்பவனே ஒரு நடிகன்தான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகியிருக்கிறார் மிஷ்கின்.
வெறும் காட்சியமைப்பிலேயே நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்.. ஹனிமூன் தம்பதிகளை ஓவர்டேக் செய்யும் அலம்பல் பார்ட்டிகளை இடுப்பில் நிற்காத தனது பேண்ட்டை ஒரு கையால் பிடித்தபடியே சமாளிக்கும்விதம் செம கலகலப்பு..!
போலீஸிடம் இருந்து தப்பிக்க அந்தச் சிறுவன் பேசும் ஆங்கிலச் சொற்பொழிவும், அதற்கு அந்த இன்ஸ்பெக்டரி்ன் முக பாவனையும் சூப்பர்..! இதேபோல் இளநீர் திருடி மாட்டிக் கொண்டு தப்பித்து ஓடுவதும், கடைசியில் இளநீர்க்காரருக்கே இளநீரை வெட்டிக் கொடுப்பதுமாக காட்சிகளை மிஷ்கின் நகர்த்தியிருக்கும்விதம் அருமை..!
வெறும் காட்சியமைப்பிலேயே நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்.. ஹனிமூன் தம்பதிகளை ஓவர்டேக் செய்யும் அலம்பல் பார்ட்டிகளை இடுப்பில் நிற்காத தனது பேண்ட்டை ஒரு கையால் பிடித்தபடியே சமாளிக்கும்விதம் செம கலகலப்பு..!
போலீஸிடம் இருந்து தப்பிக்க அந்தச் சிறுவன் பேசும் ஆங்கிலச் சொற்பொழிவும், அதற்கு அந்த இன்ஸ்பெக்டரி்ன் முக பாவனையும் சூப்பர்..! இதேபோல் இளநீர் திருடி மாட்டிக் கொண்டு தப்பித்து ஓடுவதும், கடைசியில் இளநீர்க்காரருக்கே இளநீரை வெட்டிக் கொடுப்பதுமாக காட்சிகளை மிஷ்கின் நகர்த்தியிருக்கும்விதம் அருமை..!
பையனின் அம்மா காலில் விழுந்து அழுத பின்பு அவள் கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியேறிய காட்சியில் தியேட்டரே கைதட்டலில் அதிர்ந்தது. இத்தனைக்கும் அதில் வசனமே இல்லை. இளையராஜா மட்டும்தான்..! அப்படியிருந்தும் ஆக்கத்தினால் தூண்டப்பட்டுவிட்டோம்..!
ஜாதிக் கலவரத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க வழி கேட்டு கடைசியில் அவன் உடல் ஊனமுற்றவன் என்பது தெரிந்தாலும், அவன் காசு கேட்கின்ற கொடுமையை வைத்திருப்பதில் இருந்தே இங்கே காசில்லாமல் எதுவும் நகராது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!
கீழே விழுந்த பின்பே தான் உடல் ஊனமுற்றவன் என்பதை உணர்ந்து அவர் படும் மனக்கஷ்டத்தை அடுத்தடுத்த ஷாட்டுகளில் காட்டியிருப்பது மிக இயல்பு. அதேபோல் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த பின்பு அவனுக்குச் சிகிச்சையளித்த பெண் டாக்டர் நொண்டிக் கொண்டே செல்வதைக் காட்டுகின்றபோதும் மனதை என்னவோ செய்தது..!
ஜாதிக் கலவரத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க வழி கேட்டு கடைசியில் அவன் உடல் ஊனமுற்றவன் என்பது தெரிந்தாலும், அவன் காசு கேட்கின்ற கொடுமையை வைத்திருப்பதில் இருந்தே இங்கே காசில்லாமல் எதுவும் நகராது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!
கீழே விழுந்த பின்பே தான் உடல் ஊனமுற்றவன் என்பதை உணர்ந்து அவர் படும் மனக்கஷ்டத்தை அடுத்தடுத்த ஷாட்டுகளில் காட்டியிருப்பது மிக இயல்பு. அதேபோல் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த பின்பு அவனுக்குச் சிகிச்சையளித்த பெண் டாக்டர் நொண்டிக் கொண்டே செல்வதைக் காட்டுகின்றபோதும் மனதை என்னவோ செய்தது..!
ஸ்னிக்தாவைக் காப்பாற்றும் பொருட்டு நடக்கும் சண்டையில் அடி வாங்கி கடைசியில் நட்பு குண்டர்களைப் பார்த்தவுடன் “இப்ப வந்து அடிங்கடா பார்க்கலாம்..” என்பதைப் போல குண்டரின் தோளில் கை வைத்துக் கொண்டு குதிக்கின்ற குதி இருக்கிறதே.. இந்தக் காட்சியில் தனது உடலின் பின்புறத்தை மட்டுமே காட்டியிருக்கிறார் மிஷ்கின்.. எந்தக் காட்சிக்கு குளோஸப் அவசியமோ அப்போது மட்டும்தான்..
ஆட்டோக்காரராக பத்திரிகைக்கார அண்ணன் அருள்எழிலன் நடித்திருக்கிறார். ஆச்சரியம். இவர் எப்படி களத்தில் இறங்கினார் என்று தெரியவில்லை. அண்ணன் தனது பேவரிட் வார்த்தையான “என்னம்மா..” என்பதையும் டயலாக்கில் சேர்த்தே பேசியிருக்கிறார். இப்படியாவது பொழச்சுக்கட்டும்..!
ஆட்டோக்காரராக பத்திரிகைக்கார அண்ணன் அருள்எழிலன் நடித்திருக்கிறார். ஆச்சரியம். இவர் எப்படி களத்தில் இறங்கினார் என்று தெரியவில்லை. அண்ணன் தனது பேவரிட் வார்த்தையான “என்னம்மா..” என்பதையும் டயலாக்கில் சேர்த்தே பேசியிருக்கிறார். இப்படியாவது பொழச்சுக்கட்டும்..!
பையனிடம் மிஷ்கினைக் குறிப்பிட்டு “மென்ட்டலா..?” என்று கேட்டவுடன் மிஷ்கின் ஆக்ரோஷத்துடன் அடிதடியில் இறங்கி அவரை அடித்துவிட்டு பின்பு அதற்காகவும் வருத்தப்பட்டு கதறுகின்ற கதறல்.. அவரது இயலாமையைச் சுட்டிக் காட்டும்விதமாக செய்திருக்கிறார்.. ஆனால் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சில் மிகக் கவனமாக இப்படித்தான் கையாண்டிருக்கிறார் மிஷ்கின்..!
லாரியின் ஹாரனைத் திருடியதால் லாரிக்காரன் மிஷ்கினை போட்டு புரட்டியெடுக்கும்போது மனம் பிறழ்ந்தவன் மிஷ்கின் என்பதை உணர்ந்த நொடியில் லாரி்க்காரன் ஸ்தம்பித்துப் போகும் காட்சி.! ஸ்னிக்தாவின் கதையைக் கேட்டு நால்வரும் திறந்த வாய் மூடாமல் திகைப்புடன் இருக்கும் காட்சி.. சிறுவனின் அம்மா எங்கே என்று கேட்டவுடன் “வரேன்டி சிறுக்கி முண்டை..” என்று திட்டியபடியே தனது அம்மாவைத் தேடி வெக்கு, வெக்கென்று நடக்கும் காட்சி என்று இந்தப் படத்தில் இன்னும் சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு கேமிரா மூலமும் நம் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.
தனது அம்மாவைப் பார்த்தவுடன் கதறி அழும் காட்சியும் அந்தப் பாடல் காட்சியுடன் தாயை மனநலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கிளம்பும்போது காட்டுகின்ற வெறி.. போகாதே என்பதைப் போல் அப்போது மட்டும் ஆக்ஷனை காட்டும் அம்மா ரோகிணி.. என்று எங்குமே ஓவர் ஆக்ட் இல்லை.. அத்தனையும் ஒருவித சுயகட்டுப்பாட்டுக்குள்தான் கொண்டு போயிருக்கிறார்..!
இறுதிக் காட்சியில் பையனிடம் இதற்கு மேலும் பொய் சொல்ல முடியாமல் அவன் அம்மாவைப் பற்றிச் சொல்ல அவன் பதிலுக்கு “மென்ட்டல்” என்று சொல்லிவிட.. மிஷ்கின் கோபத்தில் துடிக்கும்போது பையன் சொல்கின்ற பதில் அட்டகாசம்..
லாரியின் ஹாரனைத் திருடியதால் லாரிக்காரன் மிஷ்கினை போட்டு புரட்டியெடுக்கும்போது மனம் பிறழ்ந்தவன் மிஷ்கின் என்பதை உணர்ந்த நொடியில் லாரி்க்காரன் ஸ்தம்பித்துப் போகும் காட்சி.! ஸ்னிக்தாவின் கதையைக் கேட்டு நால்வரும் திறந்த வாய் மூடாமல் திகைப்புடன் இருக்கும் காட்சி.. சிறுவனின் அம்மா எங்கே என்று கேட்டவுடன் “வரேன்டி சிறுக்கி முண்டை..” என்று திட்டியபடியே தனது அம்மாவைத் தேடி வெக்கு, வெக்கென்று நடக்கும் காட்சி என்று இந்தப் படத்தில் இன்னும் சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு கேமிரா மூலமும் நம் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.
தனது அம்மாவைப் பார்த்தவுடன் கதறி அழும் காட்சியும் அந்தப் பாடல் காட்சியுடன் தாயை மனநலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கிளம்பும்போது காட்டுகின்ற வெறி.. போகாதே என்பதைப் போல் அப்போது மட்டும் ஆக்ஷனை காட்டும் அம்மா ரோகிணி.. என்று எங்குமே ஓவர் ஆக்ட் இல்லை.. அத்தனையும் ஒருவித சுயகட்டுப்பாட்டுக்குள்தான் கொண்டு போயிருக்கிறார்..!
இறுதிக் காட்சியில் பையனிடம் இதற்கு மேலும் பொய் சொல்ல முடியாமல் அவன் அம்மாவைப் பற்றிச் சொல்ல அவன் பதிலுக்கு “மென்ட்டல்” என்று சொல்லிவிட.. மிஷ்கின் கோபத்தில் துடிக்கும்போது பையன் சொல்கின்ற பதில் அட்டகாசம்..
“எனக்கும் இப்படித்தான இருந்திருக்கும்.. இதோ இவங்களைச் சொல்லலாம்ல.. இவங்கதான் அம்மான்னு சொல்லிருக்கலாம்ல.. நான் முத்தமாவது கொடுத்திருப்பேன்ல..” என்று சொல்லும்போது அந்தப் பையனை வாரியணைக்க வேண்டும்போல இருந்தது..!
தாயின் ஒரு முத்தத்திற்காக இத்தனை அல்லல்பட்டு, துன்பத்தில் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு வேறென்ன செய்ய முடியும்..!
தாயின் ஒரு முத்தத்திற்காக இத்தனை அல்லல்பட்டு, துன்பத்தில் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு வேறென்ன செய்ய முடியும்..!
படம் இறுதிவரையிலும் மெல்லிய சோகத்துடன்தான் இழையாடுகிறது.. இதற்குப் பக்க பலம் இசைஞானி இளையராஜா.. இங்கே ஒரு இசை ராஜ்ஜியத்தையே செய்து காட்டியிருக்கிறார்.
மிஷ்கினின் அறிமுகக் காட்சியில் துவங்கும் இளையராஜாவின் பின்னணி இசை, படத்தின் இறுதிவரையில் அவரும் ஒரு கேரக்டர் என்பதைப் போல் தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். இனி பின்னணி இசையின் உதாரணத்துக்கு இந்தப் படத்தை நிச்சயமாக, தைரியமாகக் குறிப்பிட்டுப் பேசலாம். ராஜா ராஜாதான்..! அடுத்த வருட தேசிய விருது ராஜாவுக்கு நிச்சயம்..!
டிவியை உடைப்பது.. அருள் எழிலனை அடிப்பது.. அவருடன் சண்டையிடுவது.. ஸ்னிக்தாவுக்காக அந்தக் கிழவனுடன் சண்டையிடும் காட்சி.. அம்மாவைத் தேடி வீடு, வீடாகக் கதவைத் தட்டி கேட்கின்ற காட்சி, மிஷ்கின் தனது அம்மாவைத் தேடிப் போகும் காட்சி.. மிஷ்கின் ஆக்ரோஷப்படும் காட்சிகள்.. என்று அத்தனையிலும் இசைஞானி தனியாகத் தெரிகிறார்.
பின்னணி இசை என்றாலே ஏதாவது கேரக்டர்கள் தூங்கும்போதுகூட எதையாவது போட்டு நம் காதை நிரப்பி வைத்திருக்கும் இயக்குநர்கள் மத்தியில் இந்தப் படத்தில் தேவையான இடங்களில் மட்டுமே பி்ன்னணி இசை ஒலிக்கிறது. மற்ற இடங்களில் கேமிரா தான் செல்லும் பாதையிலேயே கதையைக் கொண்டு செல்ல.. இசை தேவையில்லாமல்தான் தெரிகிறது..
இந்தப் பயணத்துக்கான லொகேஷன்களைத் தேடிப் பிடித்து அவற்றை அழகுற காட்டியிருக்கும் பாங்கில் கேமிராமேனுக்கும் ஒரு சபாஷ்..! கலை இயக்குநருக்கும் ஒரு சபாஷ்..
பரபரப்பான கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை எப்படி இத்தனைக் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு வெறும் கால்களை மட்டுமே அழகுர படம் பிடிக்க முடிந்தது என்று தெரியவில்லை..! பல ஷாட்டுகளில் பாதி நபர்கள்தான் தெரிகிறார்கள். ஆனாலும் அதுவும் ஒரு அழகு. குறிப்பாக குண்டர்கள் பைக்கில் உட்கார்ந்திருக்கும் காட்சியில் பாதி ஸ்கிரீனை அவர்களே அடைத்துக் கொள்ள.. பின்னணி இசையே இல்லாமல் ரசிக்க முடிகிறது..!
மிஷ்கினின் அறிமுகக் காட்சியில் துவங்கும் இளையராஜாவின் பின்னணி இசை, படத்தின் இறுதிவரையில் அவரும் ஒரு கேரக்டர் என்பதைப் போல் தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். இனி பின்னணி இசையின் உதாரணத்துக்கு இந்தப் படத்தை நிச்சயமாக, தைரியமாகக் குறிப்பிட்டுப் பேசலாம். ராஜா ராஜாதான்..! அடுத்த வருட தேசிய விருது ராஜாவுக்கு நிச்சயம்..!
டிவியை உடைப்பது.. அருள் எழிலனை அடிப்பது.. அவருடன் சண்டையிடுவது.. ஸ்னிக்தாவுக்காக அந்தக் கிழவனுடன் சண்டையிடும் காட்சி.. அம்மாவைத் தேடி வீடு, வீடாகக் கதவைத் தட்டி கேட்கின்ற காட்சி, மிஷ்கின் தனது அம்மாவைத் தேடிப் போகும் காட்சி.. மிஷ்கின் ஆக்ரோஷப்படும் காட்சிகள்.. என்று அத்தனையிலும் இசைஞானி தனியாகத் தெரிகிறார்.
பின்னணி இசை என்றாலே ஏதாவது கேரக்டர்கள் தூங்கும்போதுகூட எதையாவது போட்டு நம் காதை நிரப்பி வைத்திருக்கும் இயக்குநர்கள் மத்தியில் இந்தப் படத்தில் தேவையான இடங்களில் மட்டுமே பி்ன்னணி இசை ஒலிக்கிறது. மற்ற இடங்களில் கேமிரா தான் செல்லும் பாதையிலேயே கதையைக் கொண்டு செல்ல.. இசை தேவையில்லாமல்தான் தெரிகிறது..
இந்தப் பயணத்துக்கான லொகேஷன்களைத் தேடிப் பிடித்து அவற்றை அழகுற காட்டியிருக்கும் பாங்கில் கேமிராமேனுக்கும் ஒரு சபாஷ்..! கலை இயக்குநருக்கும் ஒரு சபாஷ்..
பரபரப்பான கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை எப்படி இத்தனைக் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு வெறும் கால்களை மட்டுமே அழகுர படம் பிடிக்க முடிந்தது என்று தெரியவில்லை..! பல ஷாட்டுகளில் பாதி நபர்கள்தான் தெரிகிறார்கள். ஆனாலும் அதுவும் ஒரு அழகு. குறிப்பாக குண்டர்கள் பைக்கில் உட்கார்ந்திருக்கும் காட்சியில் பாதி ஸ்கிரீனை அவர்களே அடைத்துக் கொள்ள.. பின்னணி இசையே இல்லாமல் ரசிக்க முடிகிறது..!
பவானி, சேலம் போன்ற பகுதிகளின் சாலைகளிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அழகான இடங்களை இன்னும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.. மிக எளிமையான முறையில் சிறுவனின் வீடு இருப்பதையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பார்க்கும்போதும், கண் தெரியாத பாட்டியை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று கொண்டு வந்து விடும் சிறுவனின் கடமையையும் முதலிலேயே காட்டிவிடுவதால் இதென்ன வாழ்க்கை என்று நமக்கே வெறுப்பாகிறது.. இதைத்தான் தனது பலமாக ஆக்கிக் கொண்டு பையனை அழைத்துக் கொண்டு நம்மையும் டூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வசனங்களும் மிகக் குறைவு.. நான் ஆவலுடன் எதிர்பார்த்த அந்தப் பையனின் அம்மாவைக் கண்டுபிடிக்கும் இடத்தில் வசனமில்லாதது பெரும் ஆச்சரியம்.. எதுக்கு டயலாக்கு என்பதோடு இந்தக் காட்சியிலும் அம்மாவின் முதுகுப்புறத்தை மட்டுமே காட்டிவிட்டு நிறுத்தியது மிஷ்கினின் ஸ்டைல்..!
நிச்சயம் இது போன்ற ஷாட்டுகளையும், காட்சியமைப்புகளையும் பல வெளிநாட்டுத் திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.. கிகுஜிரோவில்கூட இப்படியான காட்சிகள் இல்லை.. அதைவிடவும் மேம்பட்ட நிலையில்தான் இது எடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்..!
மிஷ்கின் இறுதியில் சிறுவனின் தாயைப் பற்றிச் சொல்லும்போது மட்டும்தான் இயல்பான மனநிலையில் பேசுகிறார். அப்படீன்னா அவர் இதுவரையில் பேசியது, நடந்து கொண்டதெல்லாம் என்கிற நமது கேள்விக்கு நம்மையே விடை தேடச் சொல்லியிருக்கிறார். ஏனெனில் அறிமுகக் காட்சியிலேயே “யாரோ டிவியை உடைச்சுட்டாங்க..” என்று மிகச் சாதாரணமாக வார்டனிடம் சொல்லிவிட்டுப் போகும்போதே மிஷ்கினை கவனித்தேன். ஏதோ ஒன்றை அவர் சொல்லாமல் சொல்கிறார் என்று..! இறுதியில் பலூன் விற்கும்போதுதான் தனியாகத் தெரிகிறார்..!
வசனங்களும் மிகக் குறைவு.. நான் ஆவலுடன் எதிர்பார்த்த அந்தப் பையனின் அம்மாவைக் கண்டுபிடிக்கும் இடத்தில் வசனமில்லாதது பெரும் ஆச்சரியம்.. எதுக்கு டயலாக்கு என்பதோடு இந்தக் காட்சியிலும் அம்மாவின் முதுகுப்புறத்தை மட்டுமே காட்டிவிட்டு நிறுத்தியது மிஷ்கினின் ஸ்டைல்..!
நிச்சயம் இது போன்ற ஷாட்டுகளையும், காட்சியமைப்புகளையும் பல வெளிநாட்டுத் திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.. கிகுஜிரோவில்கூட இப்படியான காட்சிகள் இல்லை.. அதைவிடவும் மேம்பட்ட நிலையில்தான் இது எடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்..!
மிஷ்கின் இறுதியில் சிறுவனின் தாயைப் பற்றிச் சொல்லும்போது மட்டும்தான் இயல்பான மனநிலையில் பேசுகிறார். அப்படீன்னா அவர் இதுவரையில் பேசியது, நடந்து கொண்டதெல்லாம் என்கிற நமது கேள்விக்கு நம்மையே விடை தேடச் சொல்லியிருக்கிறார். ஏனெனில் அறிமுகக் காட்சியிலேயே “யாரோ டிவியை உடைச்சுட்டாங்க..” என்று மிகச் சாதாரணமாக வார்டனிடம் சொல்லிவிட்டுப் போகும்போதே மிஷ்கினை கவனித்தேன். ஏதோ ஒன்றை அவர் சொல்லாமல் சொல்கிறார் என்று..! இறுதியில் பலூன் விற்கும்போதுதான் தனியாகத் தெரிகிறார்..!
மனநல மருத்துவமனை கேரக்டர்கள், உடல் ஊனமுற்றவர், ஸ்னிக்தா, குண்டர்கள், தோப்புக்குச் சொந்தக்காரர், மாட்டு வண்டி ஓட்டுபவர், போலீஸ் இன்ஸ்பெக்டர்.. அம்மாவைத் தேடிப் போகும்போது முதலில் கதவைத் திறந்து முகத்தில் அடித்தாற்போல் இல்லை என்று சொல்லி கதவை மூடும் பெண், சிறுவனின் அம்மா, மிஷ்கினின் அண்ணன், டூவிலர் மெக்கானிக் கடை வைத்திருக்கும் அந்த குள்ளமான தம்பதிகள்.. பீர் பாட்டில் இளைஞர்கள்.. ஆங்கிலத்தில் சங்கடத்தைப் பகிர்ந்து கொள்ளும் புதுமணத் தம்பதிகள்.. என்று படத்தில் இருக்கும் அத்தனை பேருமே நடித்திருக்கிறார்கள் என்பது மிகச் சிறப்பான விஷயம்....
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களில் ரசிகர்களைக் கவருகின்றவிதத்தில் அவர்களுக்குப் பிடித்தமான காதல் சப்ஜெக்ட்டையும் தொட்டு அதை வைத்துத்தான் தனது இயக்கத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மிஷ்கின். இது முன் வரிசை டிக்கெட்டுகளையும் கவர்ந்தது..! அதனால்தான் அந்த இரண்டு படங்களும் பி அண்ட் சி சென்டரில்கூட ஓடின..
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களில் ரசிகர்களைக் கவருகின்றவிதத்தில் அவர்களுக்குப் பிடித்தமான காதல் சப்ஜெக்ட்டையும் தொட்டு அதை வைத்துத்தான் தனது இயக்கத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மிஷ்கின். இது முன் வரிசை டிக்கெட்டுகளையும் கவர்ந்தது..! அதனால்தான் அந்த இரண்டு படங்களும் பி அண்ட் சி சென்டரில்கூட ஓடின..
ஆனால் இந்தப் படத்தில் எந்தவித சமரசத்தையும் வைத்துக் கொள்ளாமல் பாடல் காட்சிகளைக்கூட கதையை நகர்த்துமிடத்தில் மட்டுமே வைத்திருந்து தனக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆக, மிஷ்கின் சமீபத்தில் சொன்னதுபோல அவருடைய கேரியரில் இதுதான் முதல் படம் என்றே சொல்லலாம்..!
இப்போதெல்லாம் படத்தின் ரிலீஸுக்கு முன்பே படத்தின் பிரிவியூ போடுவதைத் தவிர்த்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் மிஷ்கின் இந்தப் படத்தை டிவிடி வடிவத்திலேயே தமிழ்நாட்டின் அறிவுஜீவி பத்திரிகையாளர்கள் பலருக்கும் போட்டுக் காட்டி கேன்வாஸ் செய்துவிட்டார். சாருவும் தன்னால் முடிந்த அளவுக்கு தனது நண்பருக்கு வேண்டிய உதவிகளைச் செய்திருக்கிறார்..!
பத்திரிகையாளர்கள், மற்றும் திரையுலகப் பிரமுகர்களுக்காக இந்த வாரம் திங்கள்கிழமையில் இருந்தே தினம்தோறும் ஷோ நடத்தி காண்பித்துவிட்டார். அத்தனை பேருமே "கண் கலங்கிய நிலையில்தான் வெளியில் வந்தோம்.." என்றார்கள். நானும் அப்படித்தான்..!
தமிழ்ச் சினிமா தற்போது தாங்க முடியாத வருத்தத்திலும், குழப்பத்திலும்தான் இருக்கிறது. லோ பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகும் சூழலே இல்லாமல் இருக்கும் நிலையில் இது போன்ற தரமானத் திரைப்படங்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமானது...! நிச்சயம் நாம் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்..! பதிவர்கள் அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இது..!
எப்போதும்போல் “தமிழ்ச் சினிமா ஒண்ணுமேயில்லை.. குப்பை. மொக்கை.. இவங்களுக்கு படம் எடுக்கவே தெரியலை.. ஈரான் படத்தைப் பாருங்க.. ஸ்வீடன் படத்தைப் பாருங்க.. செக் படத்தைப் பாருங்க..” என்று சொல்லி புலம்புவதைவிட அவைகள் போன்று தரமான நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தையும் உலகளாவிய அளவுக்குக் கொண்டு போக வேண்டியது நமது கடமை..!
மிஷ்கினின் தனிப்பட்ட நடத்தையையும், பேச்சையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் அவரது இயக்குதல் திறமை, கதை சொல்லுதலில் இருக்கின்ற திறமையை மட்டும் பார்த்துச் சொல்வதானால் உறுதியாகச் சொல்கிறேன்.. மணிரத்னத்தையும் மிஞ்சியவர் மிஷ்கின்..!
அதற்கு இந்த ஒரு படமே சாட்சி..!
டிஸ்கி : நமது சக வலையுலகத் தோழி லிவிங் ஸ்மைல் வித்யா இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்..!
இதையும் படியுங்கள் :
இப்போதெல்லாம் படத்தின் ரிலீஸுக்கு முன்பே படத்தின் பிரிவியூ போடுவதைத் தவிர்த்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் மிஷ்கின் இந்தப் படத்தை டிவிடி வடிவத்திலேயே தமிழ்நாட்டின் அறிவுஜீவி பத்திரிகையாளர்கள் பலருக்கும் போட்டுக் காட்டி கேன்வாஸ் செய்துவிட்டார். சாருவும் தன்னால் முடிந்த அளவுக்கு தனது நண்பருக்கு வேண்டிய உதவிகளைச் செய்திருக்கிறார்..!
பத்திரிகையாளர்கள், மற்றும் திரையுலகப் பிரமுகர்களுக்காக இந்த வாரம் திங்கள்கிழமையில் இருந்தே தினம்தோறும் ஷோ நடத்தி காண்பித்துவிட்டார். அத்தனை பேருமே "கண் கலங்கிய நிலையில்தான் வெளியில் வந்தோம்.." என்றார்கள். நானும் அப்படித்தான்..!
தமிழ்ச் சினிமா தற்போது தாங்க முடியாத வருத்தத்திலும், குழப்பத்திலும்தான் இருக்கிறது. லோ பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகும் சூழலே இல்லாமல் இருக்கும் நிலையில் இது போன்ற தரமானத் திரைப்படங்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமானது...! நிச்சயம் நாம் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்..! பதிவர்கள் அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இது..!
எப்போதும்போல் “தமிழ்ச் சினிமா ஒண்ணுமேயில்லை.. குப்பை. மொக்கை.. இவங்களுக்கு படம் எடுக்கவே தெரியலை.. ஈரான் படத்தைப் பாருங்க.. ஸ்வீடன் படத்தைப் பாருங்க.. செக் படத்தைப் பாருங்க..” என்று சொல்லி புலம்புவதைவிட அவைகள் போன்று தரமான நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தையும் உலகளாவிய அளவுக்குக் கொண்டு போக வேண்டியது நமது கடமை..!
மிஷ்கினின் தனிப்பட்ட நடத்தையையும், பேச்சையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் அவரது இயக்குதல் திறமை, கதை சொல்லுதலில் இருக்கின்ற திறமையை மட்டும் பார்த்துச் சொல்வதானால் உறுதியாகச் சொல்கிறேன்.. மணிரத்னத்தையும் மிஞ்சியவர் மிஷ்கின்..!
அதற்கு இந்த ஒரு படமே சாட்சி..!
டிஸ்கி : நமது சக வலையுலகத் தோழி லிவிங் ஸ்மைல் வித்யா இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்..!
இதையும் படியுங்கள் :
|
|
Tweet |











