Pages

Monday, March 22, 2010

ஏழு நாட்கள் மட்டும் பொறுத்துக்குங்க..!

22-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



என்னைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை.. பிறந்தது திண்டுக்கல்லில்.. வளர்ந்தது பாதி திண்டுக்கல்லிலும், மீதி பாதி மதுரையிலுமாக எனது வாலிபப் பருவத்தை ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித் தொலைத்தேன்.


இயற்பெயர் ச.சரவணன். படித்தது பத்தாம் வகுப்பு, திண்டுக்கல் அரசு ஐ.டி.ஐ.யில் டீசல் மெக்கானிக்.. ரோட்டோர கம்யூட்டர் இன்ஸ்ட்டிட்யூட்டில் டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட்டில் டிப்ளமோ என்று இப்போதைய தொழிலுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத படிப்பு.

படிக்க வேண்டிய வயதில் அதனைச் செய்யாமல் போனதாலும், வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பல பாடங்களை அப்போதைக்கு புரிந்து கொள்ளாமல் போனதாலும் எனது வாழ்க்கையை மிகச் சரியாக 27-வது வயதில்தான் உணரத் தொடங்கினேன்.

எனது தந்தை எனது 17-வயதில் மறைந்தபோது எனது எதிர்காலம் என்னவாகப் போகிறது என்று கவலைப்பட்டேன். எனது தாயார் அடுத்த ஐந்தாண்டுகளில் காலமானபோதுதான் எனது குடும்பத்தில் எனது நிலை என்ன என்பது புரிந்தது. குடும்பச் சூழலால் புலிப்பாய்ச்சல் காட்ட வேண்டிய வயதில் சோம்பலாகவும், கற்பனைக் கதைகளை எனது மனதுக்குள் கட்டி வைத்துக் கொண்டு உழலுகின்ற சாதாரணமானவனாகும் இருந்துவிட்டதால் வாழ்க்கை என்னை இழுத்தடித்துவிட்டது.

என்னவாகப் போகிறேன்.. என்ன செய்யப் போகிறேன். எப்படி வாழப் போகிறேன் என்றெல்லாம் தெரியாத சூழலில் வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் காலடி எடுத்து வைத்தேன். நான் வந்த தினம் முதல் சென்னையில் வாசம் செய்து வந்த அத்தனை பிச்சைக்காரர்களோடு ஒருவனாக நானும்தான் வளர்ந்து வந்தேன்.

படித்தது ஒன்று.. விரும்பியது ஒன்று என்ற ஊசலாட்டத்தில் விரும்பியதை நாடி மனம் செல்ல.. அது எழுத்தின் பக்கம் என்னைக் கொண்டு சென்றுவிட்டது. பத்திரிகையுலகில் நான் விரும்பியதைச் செய்யப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்த எனக்கு அது அவ்வளவு எளிதல்ல என்பதை சொல்லிக் கொடுத்தது நான்கரை ஆண்டு பத்திரிகை பணி.

அது முடியும் தருவாயில் டிவி மீடியாவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க அங்கேயும் ஒரு பரமபத ஆட்டம். தொடர்ந்து 7 வருடங்கள் அருமையாக எனக்குக் கிடைத்த அனுபவங்களை ஆழ்ந்து அனுபவித்த நான் எனது வாழ்க்கையை செப்பனிட இப்போதும் ஏனோ மறந்து தொலைத்துவிட்டேன். தொலைந்தது தொலைந்ததுதான். இன்றைய எனது பிச்சைக்காரத்தனமான நிலைமைக்கு இந்தக் காலக்கட்டத்தை நான் பயன்படுத்திக் கொள்ளாத முட்டாள்தனம்தான் காரணம்.

தொலைந்தது அந்தக் கனவு. ஒரு கதவு மூட மறு கதவு திறக்கும் என்பார்களே... அதைப் போல மற்றுமொரு கனவை எனக்குள் விதைத்தது தமிழகத்தின் தலையாய கனவுத் தொழிற்சாலை.. அதை நோக்கி நான் அலைந்து கொண்டிருந்த சூழலில்தான் பதிவுலகத்தில் மூத்த பதிவரான 'தடாலடி' கெளதமின் அறிமுகத்தில் இந்த பிளாக் எனப்படும் வலைப்பதிவின் அறிமுகம் கிட்டியது.

ஓசிதானே.. நமக்குத்தான் தமிழ் தட்டச்சு தண்ணிபட்ட பாடாச்சே.. நாமும் செய்து பார்த்தால் என்ன என்ற ஆர்வத்தில் கெளதம் கொடுத்த உற்சாகத்திலும், உசுப்பேற்றலிலும் சிக்குண்டு வலை உலகத்திற்குள் பிரவேசித்தேன்.

எப்போதும் உற்சாகத்திலும், உழைப்பிலும் ஈடு இணையில்லாத முனைப்புடனும் பலருக்கு வழிகாட்டுதலில் முதன்மையானவராகவும் இருக்கும் எனது உடன் பிறவா சகோதரர் கெளதமிற்கு எனது நன்றியும், வாழ்த்துக்களும்..!


முதல் போனியே ராசியான கையால் கிடைத்தது. அருமைத் தம்பி பாலபாரதிதான் என் கைப்பிடித்து எனது வலைத்தளத்தைத் திறந்து வைத்து பதிவுகளை எப்படி இடுவது..? படங்களை எப்படி இணைப்பது..? எப்படி பின்னூட்டங்களை இடுவது..? இத்யாதி.. இத்யாதி.. என்று பலவற்றையும் சொல்லிக் கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்..!

2007-ம் ஆண்டு இதே மார்ச் மாதம் இதே 23-ம் தேதியன்றுதான் எனது முதல் பதிவினை எனது தளத்தில் பதிவு செய்தேன். என்னவொரு ஒற்றுமை பாருங்கள்..?

இந்த மூன்றாண்டுகளில் இதுவரையிலும் 455 பதிவுகளைத்தான் எழுதியிருக்கிறேன். மிகக் குறைவுதான். ஆனாலும் இடையிடையே சிறுபிள்ளைத்தனமாக பலருடனும் கோபப்பட்டு எழுதாமல் நிறுத்திக் கொண்ட காரணத்தினால் அன்றைய காலக்கட்டத்தில் மட்டும் வலைப்பதிவர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட கதையையும் அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அடியேன் பதிவுலகத்தில் நடக்க வேண்டிய நேரத்திலேயே ஓடத் துவங்கினேன். நிறுத்த வேண்டிய இடத்திலெல்லாம் விடாப்பிடியாக நடந்து கொண்டே சென்றேன். போகக் கூடாத இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்தேன். தோண்டக் கூடாத செய்திகளையெல்லாம் தோண்டிப் பார்த்து.. நோண்டக் கூடாததையெல்லாம் நோண்டிப் பார்த்து.. இதனால் படக்கூடாததையெல்லாம் பட்ட பின்புதான் எனது விதிப்பயன் என்னவென்று புரிந்தது.

வலையுலகம் எனக்குக் கற்றுக் கொடுத்தது வாழ்க்கையில் நான் பார்த்திராத சில அனுபவங்களை.. குறிப்பாக, போலி டோண்டுவான மூர்த்தி என்னும் வலைப்பதிவருடன் நான் மல்லுக்கட்டியதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.

காவல்துறையினரை வெளியில் இருந்தே விமர்சித்து வந்த நான், அவர்களை மிக அருகில் பார்த்துப் பழகும் நேரம் இந்த மூர்த்தி அண்ணனால் கிடைத்தது ஒரு புறமிருந்தாலும், காவல்துறையினர் பற்றிய மறுபக்கத்தையும் நேரிலேயே உணர முடிந்தது. அந்த வகையில் அன்னாருக்கு எனது நன்றிகள்.

அதேபோல் பார்த்தவர்களையும் நண்பராக்கிக் கொள்ளத் துடித்த எனது மனதுக்கு கடிவாளம் போட்டதும் போலி டோண்டு மேட்டர்தான். அத்தோடு அந்தப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எழுத்து என்பது எழுத்தோடு சரி.. தனிப்பட்ட முறையில் அனைவரையும் நண்பராக்கிக் கொள்வது, நம்முடைய நடத்தையால்தான் ஏற்படும்.. எழுத்து பற்றிய பிரமிப்பினாலோ, எழுத்தின் மீது ஏற்படும் கவர்ச்சியினாலோ ஏற்படாது என்பதையும் எனக்குப் புரிய வைத்தது இந்த போலி டோண்டுவான மூர்த்தியுடனான உரசல் மேட்டர்.

மேலும் வலையுலகத்தில் எனக்கென்று இருக்கின்ற நண்பர்கள்தான் இப்போதும் தினமும் என்னுடன் பேசுகின்றவர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது நான் வலையுலகத்தினால் சம்பாதித்தது இந்த நட்பு ஒன்றை மட்டும்தான் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இத்தனை வருடங்களாகியும் இப்போதுவரையிலும் நெருங்கியவர்கள் என்று உறவினர்களையும், உடன் பிறந்தவர்களையும் பலரும் சொல்கின்றபோது நான் மட்டும் எனது வலையுலக நண்பர்களைச் சுட்டிக் காட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறேன்.

நட்புகளே இன்றைக்கும் என்னைத் தாங்கிக் கொண்டிருப்பதையும், இருக்கின்றவரையில் நமக்கென்று சிலர் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையைத் தந்து கொண்டிருப்பதையும் நினைத்தால் பெருமையாகத்தான் இருக்கிறது.

எனது அப்பா கற்றுக் கொடுத்த வாசிப்பு என்கிற பழக்கத்தினால்தான் இன்றைக்கு உங்கள் முன் உண்மைத்தமிழனாக காட்சியளிக்கிறேன். முதலில் அவருக்கு எனது நன்றி.

கடந்த நான்காண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருகிறேன். ஏதோ எனக்குத் தோன்றியது, எழுத வந்தது என்று அத்தனையையும் மனதில் ஒன்று வைக்காமல் எழுதிக் குவிப்பதால் 'நீட்டமான பதிவர்', 'அலுப்பான பதிவுகள்..' 'போரடிக்கும் எழுத்து நடை' என்று 'காட்டமான' விமர்சனங்கள் பல வந்தாலும், மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையையெல்லாம் ஒரு தட்டில் வைத்து என் அப்பன் முருகப்பெருமானிடம் "நீயே வைச்சுக்க உன் சொத்தை..!" என்று சொல்லித் திருப்பிக் கொடுத்துவிட்டதினால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கவும் முடிகிறது.. எழுதவும் முடிகிறது. இனியும் அப்படித்தான் எழுதுவேன்..

வலைப்பதிவில் எழுதத் துவங்கி மூன்றாண்டுகளாகியும் இப்போதுதான் முதல் முறையாக தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக இருக்கிறேன். இதற்கு முன்பும் பல முறை தமிழ்மணம் நிர்வாகிகள் என்னை நட்சத்திர போஸ்ட்டிற்கு அழைத்தபோது என் அப்பன் முருகன் மீதிருந்த பயத்தில் "வேண்டாம்.. முடியாது.." என்று சொல்லியிருந்தேன்.

ஆனால் இப்போது கேட்டவுடன் இனிமேலும் முருகனிடம் பயந்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்பது எனக்குப் புரிந்ததினால் இப்போது சம்மதித்துவிட்டேன்.

என்னையும் ஒரு பதிவராக எண்ணி ஒரு வாரத்திற்கு உலகளாவிய தமிழ்மணத்தின் ரசிகர்களை விரட்டியடிக்கும் வேலையைக் கொடுத்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எனது பணிவான நன்றிகளும், வணக்கங்களும். ஆனாலும் இவர்களுடைய நல்ல மனதுக்காக இந்த வாரம் இவர்களை நோக்கி வீசுகின்ற பழி அம்புகள் அனைத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்..!

ச்சும்மா.. ஒரு வாரம் மட்டும்தான்.. வழக்கம்போல முருகன் மேல பழியைப் போட்டுட்டு என் ரம்பத்தை ஆரம்பிக்கிறேன்.. பல்லைக் கடிச்சுக்கிட்டு ஏழு நாள் மட்டும் பொறுத்துக்குங்க சாமிகளா..!!!

139 comments:

  1. வாழ்த்துக்கள் சரவணன் அண்ணே!!

    சாதனை கண்ட சிகரமய்யா நீர். மேலும் சிகரம்தொட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. என்றும் நீங்கள் நட்சத்திரம்தான் :)

    வாழ்த்துகள். அடிச்சு ஆடுங்க :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  3. ஐய்யய்யோ நாந்தான் முதல்லயா...

    ReplyDelete
  4. வாழ்த்துகள். அடிச்சு ஆடுங்க :)

    ReplyDelete
  5. எவ்ளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டமா :)

    ReplyDelete
  6. வாழ்த்துகள் சார்:). அசத்துங்க

    ReplyDelete
  7. வாங்க வந்து தூள் பண்ணுங்க!!!

    ReplyDelete
  8. அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. திரும்ப இங்கனயும் ஒரு வாழ்த்து சொல்லிடுறோம்... வாழ்த்துகள்... அருமையா எழுதி இருக்கீங்க....

    ReplyDelete
  10. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  11. அண்ணனுக்கு ஸ்டார் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  12. அண்ணே நீங்க என்னைக்குமே நட்சத்திரம் தான்.. புகுந்து விளையாடுங்க

    ReplyDelete
  13. நட்சத்திர வாழ்த்துக்கள்!

    IPL மாதிரி உங்கள் ஸ்டைலில் அடித்து ஆடுங்கள்!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  14. தமிழ்மண விண்மீனாக மிளிர வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. ஓகே....
    வாழ்த்துக்கள் அண்ணே....

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சரவணன்.
    பத்திரிக்கைகள் கருணாநிதியை தினமும் திட்டினாலும் அவரைப் பற்றி எழுதாமல் (திட்டாமல்) இருக்க முடியாது, அது போலத்தான் உங்கள் விசயமும். நீண்ட பதிவுகள், போரடிக்கும் பதிவுகள் என்று கூறினாலும், பெரும்பான்மையானவர்களால் உங்க எல்லாப் பதிவுகளும் படிக்கப் படுகின்றன.

    சுய பச்சாதாபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள், அப்புறம் இந்த ஒரு வாரம் சின்ன பதிவிகளா (ஒரு சேஞ்சுக்கு) போட்டுப் பாருங்களேன்...

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  18. தலைவரே.... இந்த 7 நாளு மட்டுமில்ல... நீங்க எப்பவுமே.....

    ReplyDelete
  19. நெகிழ்ச்சியான பதிவு.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. நட்சத்திர பதிவர் என்றால் என்ன? தங்கும் விடுதி போல் இதற்கும் 1 முதல் 5 நட்சத்திரம் இருக்குமா. என்னை போன்ற அதிகம் படிக்காத பாமரர்களுக்கும் விளங்கும் படியாக விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும். எவ்வளவோ நீளமாக எழுதுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் நீளமாகப் போகிறது அவ்வளவுதானே.

    ReplyDelete
  21. நட்சத்திர வார வாழ்த்துக்கள்...

    கலக்குங்கள் அண்ணா!

    உங்களைப்பற்றிய நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்...

    நல்லவர்களுக்கு சோதனைகள் வரும்... கண்டிப்பாய் கடவுள் கைவிடமாட்டார்!

    பிரபாகர்.

    ReplyDelete
  22. அண்ணே தமிழ் மணம் நட்சத்திர அந்தஸ்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. அண்ணே தமிழ் மணம் நட்சத்திர அந்தஸ்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. நல்வரவு.

    எதுவும் நம் கையில் இல்லை என்ற எண்ணத்துடன் 'அவன் பார்த்துக்குவான்' என்ற நம்பிக்கையும் மனசில் வச்சு,

    முழுமூச்சோடு 'தேடலை' ஆரம்பிங்க.

    முயற்சியே திருவினை ஆக்குமாம்!

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள்!
    \\\
    முழுமூச்சோடு 'தேடலை' ஆரம்பிங்க.

    முயற்சியே திருவினை ஆக்குமாம்!\\\
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேய்

    ReplyDelete
  26. அண்ணே கலக்குங்க...உங்களை விமர்சித்து நான்கூட ஒரு பதிவு முன்னாடி போட்டிருந்தேன்...உங்களுக்கு ஞாபகம் இருக்கும்ன நினைக்கிறேன்...
    அதெல்லாம் மனசுல வச்சுருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்....

    ReplyDelete
  27. அண்ணே ,

    எப்பவும் நீங்க ஸ்டார் எங்களுடன்தான் அண்ணே

    பிரிச்சு மேயுங்க

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் அண்ணே..

    ReplyDelete
  29. நட்சத்திர வாழ்த்துக்கள் உண்மைத் தமிழரே.

    ReplyDelete
  30. அப்பப்போ கலங்க வச்சுடுறீங்க அண்ணே. எத்தனையோ கருத்துக்களில் உங்களோடு மாறுபட்டாலும் ,உங்க மேலே ரொம்ப மதிப்பு உருவாகிப் போச்சுண்ணே.

    ReplyDelete
  31. நட்சத்திர வாழ்த்துகள் பாஸ்...!

    ReplyDelete
  32. ஆங்கிலத்தைக் கண்டவுடன் அலர்ஜி என்று தெரிந்தவுடனே எனக்கு வந்த ஐயத்தை இந்த சி.வி நிலைப்படுத்தி விட்டது.

    ஆங்கிலம் பெரிய விசயமல்ல. ஆனால் வாழ்க்கையில் கடைசி மனிதர்களோடு வாழ்ந்தவன், அம்மனிதர்களைபற்றி ‘பாசத்தோடுதான்’ என்றும் இருப்பான். நான் படித்தவரை, அதைக்காணேம். மாறாக, இளையராஜாத்தனம்தான் தெரிகிறது. முதல்வகுப்புப்பெட்டி பயண்மே. முதல்வகுப்பு மனிதர்களுக்காகவே மூச்சு விடப்படுகிறது. அவர்களுக்கு ஒன்று என்றால் உணர்ச்சிகரமாக பதிவுகல் வருகின்றன. அவர்களை பார்த்துக்கொள்ள அவர்களுக்குத் தெரியாதா?

    ஏன் என்று தெரியவைல்லை.

    காதுகேட்கும் கருவி. ஒரு புலன் குறைவு. இது எங்கேயோ கொண்டு சென்றிருக்கவேண்டும்: புலன் இல்லார்; அல்லது குறைந்தோர் வாழ்க்கையில் வஞ்சிக்கப்படுகிறார்கள். அவர்கள் மானத்திற்கும் வாழ்க்கை வாய்ப்புக்களுக்கும் போராடி வருகிறார்கள். அவர்களோடு அவர்களின் துயரங்க்ளோடு தொடர்பு கொண்ட பதிவுகள் எங்கேயும் கண்டதில்லை.

    பெண்கள் பெண்களுக்கு இழைக்கப்படும் சமூகத்துரோகங்களுக்காக எழுதிக்கொண்டே, பேசிக்கொண்டே, போராடிக்கொண்டே, பதிவுலகத்திலும் இருக்கிறார்கள்.

    தலித்துகள் - அவர்களால் முடியாவிட்டாலும் - மற்றவர்கள் உதவியை நாடுகிறார்கள். ப்திவுலகிலும் ஏகலைவன், பாரதிதம்பி போன்றோர் எழுதி வருகிறார்கள். அண்மையில் ஒரு தலித்து பதிவாளர் அலுவலகத்தில் ஒரு மேலதிகாரியிடம் தலித்துப்பெண் ஊழியர்கள் படும் ஜாதிய் கொடுமையைப்பற்றி பதிவு போட்டிருந்தார்.

    பார்ப்பனர்கள், தங்களுக்கு இழைக்கப்படும் அனீதியைப்பற்றி பக்கம்பக்கமாக் எழுதித்தள்ளுகிறார்கள். டோண்டு is the supreme star.

    ஆனால், செவித்திறன் குறைந்த் நட்சத்திர பதிவாளர் ஏனோ ஒரு போலி வாழ்க்கையைத்தான் பதிவுலகில் விரும்புகிறார்.

    பிச்சைக்காரர்களோடு வாழ்ந்தாராம். நானும் வாழப்போகிறேன். அதன் பிறகு சமூகத்தைச் சுரண்டி வாழும் பணக்காரர்களுக்காக பதிவுகள் வரிசையாகப்போட்டால், என்னையும் நட்சத்திரப்பதிவாளராக தமிழ்மணம் கூப்பிடாதா என்ன?

    ReplyDelete
  33. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணே...

    உங்கள் பதிவுகள் நீளமாக இருந்தாலும் ஓரு சுவாரஸ்ய நடை உங்களுது.

    தொடருங்கள்..

    ReplyDelete
  34. //அடியேன் பதிவுலகத்தில் நடக்க வேண்டிய நேரத்திலேயே ஓடத் துவங்கினேன். நிறுத்த வேண்டிய இடத்திலெல்லாம் விடாப்பிடியாக நடந்து கொண்டே சென்றேன். போகக் கூடாத இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்தேன். தோண்டக் கூடாத செய்திகளையெல்லாம் தோண்டிப் பார்த்து.. நோண்டக் கூடாததையெல்லாம் நோண்டிப் பார்த்து.. இதனால் படக்கூடாததையெல்லாம் பட்ட பின்புதான் எனது விதிப்பயன் என்னவென்று புரிந்தது.//

    அப்போ பதிவுலகில் பல வேண்டா வேலையெல்லாம் செய்துள்ளீர்கள். அது தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் அண்ணா.

    எங்களை போன்ற தொடக்க பதிவர்களை நீங்கள் உற்சாகபடுத்தி எங்களை எழுத சொன்னது என்னால் மறக்க முடியாது.

    ReplyDelete
  36. பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாத சரவணனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. உங்களால அந்த நட்சத்திர அந்தஸ்தும் உயரும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. // எழுதிக் குவிப்பதால் 'நீட்டமான பதிவர்', 'அலுப்பான பதிவுகள்..' 'போரடிக்கும் எழுத்து நடை' என்று 'காட்டமான' விமர்சனங்கள் பல வந்தாலும் //

    எல்லாம் உங்க மேல உள்ள அன்பினால் சும்மா லூலூவாயிக்கு சொல்றாங்களே தவிர உங்கள் பதிவுகள் படிப்பதற்கு சுவாரசியமானவை. உங்களது சினிமா விமர்சனம் ‘விமர்சனம்’ என்ற அளவில் இல்லாமல் சின்ன வயசில் சினிமாவுக்கு போய்ட்டு வந்து எங்களுக்கு கதை சொல்லும் அண்ணனின் பாணியில் இருப்பதால் - சினிமா விமர்சனங்கள் தவிர்த்த உங்கள் அனைத்து பதிவையும் பெரும்பாலும் முழுமையாகவே படித்திருக்கிறேன் நான் (பலரும்தான் என்று நினைக்கிறேன்). அதிலும் நட்பு வட்ட விசாரிப்பு பதிவுகள் மற்றும் நேரடி அனுபவ தொகுப்புகள் - முக்கியமாக ஆரம்பகால கருணாநிதி குடும்ப விவகார பதிவு, முத்துக்குமார் இறுதி ஊர்வலம் போன்ற பல அதற்குள் முடிந்து விட்டதா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவை. எழுத்திலும் கனவு தொழிற்சாலையிலும் நீங்கள் விரும்பியதை அடைய உங்கள் நண்பன் முருகன் அருள் புரிவான்.

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன்.

    ReplyDelete
  41. // Jo Amalan Rayen Fernando said... // ஜோ அமலன் ராயன் பெர்ணாண்டோ... கதவை திற.. சர்வ நிச்சயமாக உமக்கு காற்று அவசரமாக தேவைப்படுகிறது...

    ReplyDelete
  42. சவாலே சமாளி என்னும் ரேஞ்சில் இதையும் சமாளித்து வெற்றி கொள்வீர்களாக.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  43. வாழ்த்துகள் அண்ணே.. :))

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள். தன்னம்பிக்கையின் சிகரமாய் இருக்கும் நீங்கள் நிறைய சாதிப்பீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. நட்சத்திர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  46. வெல்ல வாழ்த்துக்கள்.
    அன்புடன் ........

    ReplyDelete
  47. வாழ்த்துகள் உண்மைத்தமிழன் அவர்களே.

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  49. பதிவில் எவரஸ்டை தொட்ட உனக்கு
    பரங்கிமலை ஒரு பஞ்சு மிட்டாய்..

    இரவு வந்தால்தான் தெரியும் நட்சத்திரம்

    வலைபதிவில் நீ என்றும் அட்சயபாத்திரம்

    பழைய ஈயம் பித்தளைக்கு தருவான் பேரீச்சம் பழம் - உன்

    ஒவ்வொறு பதிவும் எங்களுக்கு ஞானபழம்.

    உன்னை வாழ்த்த வயதில்லை தமிழா

    நாளை முதல் வெற்றி தொடரட்டும் - உன்

    காலடி நிழலாய். . . .

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள் நண்பா! தொடர்ந்தும் நிறையப் படைப்புக்களோடு தங்களது இலக்கியப் பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  52. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  53. வாழ்க்கையின் போராட்டத்துல சிக்கி சிதைஞ்சுதான் வெளியில வந்த மாதிரி தெரியுது.
    வாழ்க்கையின் போராட்டத்துல சிக்கி சிதைஞ்சுதான் வெளியில வந்த மாதிரி தெரியுது.

    ReplyDelete
  54. அன்பின் சரவணன்,

    வணக்கம் வாழ்த்துக்கள்!!!

    விரைவில் வெள்ளித்திரையிலும் நீ நட்சத்திரமாய் மின்ன வாழ்த்துகிறேன்

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள் அண்ணே. அண்ணே ஒரு வேண்டுகோள், ஒரு நாளைக்குள்ள ஒரு பதிவ படிச்சி முடிக்கணும் அந்த மாதிரி எழுதுங்க அப்பத்தான் ஏழு நாளைக்கு ஏழு பதிவை நாங்க படிக்கமுடியும். இல்லைனால பதினைந்து நாட்கள் ஆகும் எல்லாத்தையும் படிச்சு பின்னுடம் போடுறதுக்கு. :)))))

    ReplyDelete
  56. தமிழ்மண வானில் என்றுமே நீங்கள் நட்சத்திரம்தான். உங்களை நடேசன் பூங்காவில் முதன்முறையாகச் சந்தித்தது, பின்பு கோவை பதிவர் பட்டறையில் உங்களுடன் அதிகம் உரையாடியது, சென்னை பட்டறையில் அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தது, உங்களுடன் இருந்த அனைத்து நிமிடங்களும் சுவாரசியமானவை. டெஸ்ட் ஆட்டம்போல் உங்கள் பதிவுகள் நீட்டமாய் இருந்தாலும், ஒவ்வொரு வரிகளும் படிக்க படிக்க அலுப்புத் தட்டாதவை. விரைவில் நீங்கள் ஒரு திரைப்படம் இயக்கி அது வெற்றி அடைய எல்லாம் வல்ல இயற்கையை கேட்டுக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  57. Just by seeing the title & the pic I thought its your marriage invitation anna.... All the best for "Star Blogger" ...

    ReplyDelete
  58. வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  59. மூன்றாண்டுகளுக்கு முன் கோவை பதிவர் பட்டறையில் சந்தித்தோமே ஞாபகம் இருக்கிறதா.நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. வாழ்த்துகள், உண்மைத்தமிழன்.

    ReplyDelete
  61. வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன்.

    வலைபதிவில் நீ என்றும் அட்சயபாத்திரம்

    தன்னம்பிக்கையின் சிகரமாய் இருக்கும் நீங்கள் நிறைய சாதிப்பீர்கள்

    ReplyDelete
  62. நாலு வருஷமா பொறுத்துக்குறோம். ஏழு நாள்தானே ! அடிச்சு ஆடுங்க !

    ReplyDelete
  63. பதிவுலக தினதந்தியே..

    சும்மா கதற கதற எழுதுங்க..:)))

    ---

    ஸ்டார் வாழ்த்துகள் அண்ணே .:)))

    ReplyDelete
  64. வாழ்த்துகள் உண்மைத்தமிழன்.

    ReplyDelete
  65. வாழ்த்துக்கள்.

    சில சமயம் நாம் சொல்லவேண்டிய விசயம் முழுவதுமாக சென்றடைய அந்த நீளம் தேவைப்படுகிறது. உதாரணத்திற்க்கு ஒரு விண்ணைத்தாண்டி வருவாயா, அவதார் படங்கள் போல.

    கவலைய விடுங்க... ஏழரையெல்லாம் பார்த்திருக்கோம், நீங்க கம்மியா ஏழுதான... கலக்குங்க தமிழன்.

    ReplyDelete
  66. தம்பி எல்லாப்புகழும் பெற, வேலுண்டு வினையில்லை என்றிருக்கும் என்னப்பன் முருகப்பெருமானை வேண்டுகிறேன்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  67. நீங்க என்றுமே முருகன் அருளால் நட்சத்திர பதிவர் தாண்ணே....ஓம் முருகா!!!

    ReplyDelete
  68. இப்போதுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள் தம்பி.

    ReplyDelete
  69. அலுவலகம் வந்தவுடன் முதல் பதிவு உங்களுடையது வாசித்தேன் வாழ்த்துக்கள். என்றும் நீங்கள் மிகப்பெரிய நட்சத்திரம் என்பதை இன்று உணர துவங்கியதால் உங்களை அன்புத்தொல்லை கொடுத்து தமிழ்மணம் இன்று உங்களை நட்சத்திரப்பதிவாக்கியிருக்கிறது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள் என்று அன்புடன் வடிவேலன். http://www.gouthaminfotech.com

    ReplyDelete
  70. அன்புள்ள சரவணன்,

    நீளமான பதிவுகளை வெளியிடுபவர் நீங்கள் என்பதில் உண்மை இருந்தாலும் போரடிக்கும் பதிவுகள் என்று யாராவது சொன்னால் அவர்கள் நிச்சயம் தங்கள் மனசாட்சியை அடகு வைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். தமிழில் வரும் வலைப்பதிவுகளில் அருகில் இருப்பவர்களிடம் உரையாடும் அளவு நெருக்கம் மிகுந்த நேர்மையான பதிவு உங்களுடையது என்பதை சொல்ல விரும்புகிறேன். சில சமயங்கள் உங்கள் கருத்துடன் ஒத்துப்போக முடியாதவர்கள் கூட உங்களை மிகவும் நேசிக்கும் வண்ணம் அமைகின்றது உங்கள் பதிவு. தொடரட்டும் உங்கள் பதிவுகள். சொந்த வாழ்க்கையில் நீங்கள் நிறைவு பெறும் வகையில் வெற்றி காணவும் எனது வாழ்த்துக்கள். அன்புடன், jigopi

    ReplyDelete
  71. வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

    ReplyDelete
  72. //2007-ம் ஆண்டு இதே மார்ச் மாதம் இதே 23-ம் தேதியன்றுதான் எனது முதல் பதிவினை எனது தளத்தில் பதிவு செய்தேன்//

    நம் அப்பன் எம்பெருமான் முருகன் துணை இருப்பான்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  73. நட்சத்திர வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன்.

    ReplyDelete
  74. வாழ்த்துக்கள் சரவணன் அண்ணே!!

    Miles to go........
    மேலும் சிகரம்தொட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  75. நானும் வாழ்த்திகிறேன்..

    ReplyDelete
  76. //ஜோ அமல ராயன் பெர்னாண்டோ//

    ஹூம்.... :((

    ReplyDelete
  77. நட்சத்திர வாரம் !!! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  78. என்ன‌! இவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் முடித்துவிட்டீர்க‌ள்....
    வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  79. வாழ்த்துக்கள் உண்மைதமிழ்ன்

    ReplyDelete
  80. இந்த ஏழு (திகீல்) நாட்கள்!

    ReplyDelete
  81. / வடுவூர் குமார் said...

    என்ன‌! இவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் முடித்துவிட்டீர்க‌ள்....
    வாழ்த்துக்க‌ள்.//

    உடம்புக்கு முடியலை போல!

    ReplyDelete
  82. //என்னையும் ஒரு பதிவராக எண்ணி ஒரு வாரத்திற்கு உலகளாவிய தமிழ்மணத்தின் ரசிகர்களை விரட்டியடிக்கும் வேலையை//

    உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

    ReplyDelete
  83. //இந்த மூன்றாண்டுகளில் இதுவரையிலும் 455 பதிவுகளைத்தான் எழுதியிருக்கிறேன்//

    அது மொத்தம் 4550 பிளாக்குக்கான் மெமரியை அடைச்சிருக்குன்னு கூகிள் காரன் புலம்புறானாமே!

    ReplyDelete
  84. //2007-ம் ஆண்டு இதே மார்ச் மாதம் இதே 23-ம் தேதியன்றுதான் எனது முதல் பதிவினை எனது தளத்தில் பதிவு செய்தேன்//

    இன்று முதல் மார்ச் 23 உலகளாவிய உண்மைத் தமிழன் தினமாகக் கொண்டடப் படும்!

    ReplyDelete
  85. //போகக் கூடாத இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்தேன். தோண்டக் கூடாத செய்திகளையெல்லாம் தோண்டிப் பார்த்து.. நோண்டக் கூடாததையெல்லாம் நோண்டிப் பார்த்து.. இதனால் படக்கூடாததையெல்லாம் பட்ட பின்புதான் எனது விதிப்பயன் என்னவென்று புரிந்தது.
    //

    டோண்ட் டூ ன்னு சொன்னா கேட்டாத்தானே!

    ReplyDelete
  86. நானே 100 போட்டு வாழ்த்திடுறேன்!

    ReplyDelete
  87. எங்களுக்கு பொறுமை அதிகம்ன்னே! நீங்க எழுதுங்க. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  88. வாழ்த்துகள் தலைவா.. நட்சத்திரம் மின்னட்டும்.

    ReplyDelete
  89. இங்கே வாழ்த்துத் தெரிவித்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களுக்கும், இனியும் வாழ்த்தப் போகும் ஆயிரமாயிரம் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

    இந்த நன்றியினை அனைவருக்கும் தனித்தனியாக தெரிவித்த நன்றியாக கருதிக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  90. //ஷாகுல் said...

    எங்களுக்கு பொறுமை அதிகம்ன்னே! நீங்க எழுதுங்க. வாழ்த்துக்கள்

    //

    அதான் பொறுமையா ஒரு வாரம் கழிச்சி வரோம்னு சொல்றீங்களா ஷாகுல்?

    ReplyDelete
  91. நட்சத்திர ஆட்டத்துக்கு வாழ்த்துகள் சரவணன்!

    எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்தான் வாழ்க்கை என்ற உலகியல் உண்மையைப் புரிந்து கொண்டு, புலம்பல்களையும் வருத்தங்களையும் விட்டொழித்து,
    வாழ்க்கையிலும் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  92. வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன்
    நீண்ண்ண்ண்ண்ண்ட பதிவுகளோடு நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  93. வாழ்த்துக்கள் அண்ணே

    நீங்க இங்கிட்டு அங்கிட்டு ஊர்காரரா??
    நன்றி
    தமிழ் உதயன்

    ReplyDelete
  94. ..//இந்த மூன்றாண்டுகளில் இதுவரையிலும் 455 பதிவுகளைத்தான் எழுதியிருக்கிறேன். மிகக் குறைவுதான்.
    //..

    ஆகவே இந்த 7 நாளில் 700 பதிவுகளை எழுதப்போகும்
    உண்மைத்தமிழனை.. அன்போடு வரவேற்கிறோம்.

    ReplyDelete
  95. சரி,இதுதான் அஃபிஷியல் ஆரம்பமா?

    இங்கும் வாழ்த்துக்கள்..

    கௌதமன் 7 வயதிலிருந்தே அப்படித்தான்...நாங்கள் சேர்ந்து பல விதயங்கள் செய்திருக்கிறோம்! இனிமையான நாட்களை நினைவுபடுத்தி விட்டீர்கள் !

    ReplyDelete
  96. நட்சத்திர வாழ்த்துகள்.

    ReplyDelete
  97. வாழ்த்துக்கள் உண்மை தமிழன்.ரொம்ப சந்தோசமாக உள்ளது..:-)

    ReplyDelete
  98. வாழ்த்துகள் உண்மைதமிழன். நட்சத்திரவாரத்தில் உங்கள் பன்முக பரிமாணத்தை எதிர்பார்க்கிறேன். நீளமோ குறைவோ உங்களுக்கு தோணுவதை எழுதுங்கள்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  99. நீங்க என்ன குறுந்தகவலா அனுப்புறீங்க...?

    உங்கள் எண்ண ஓட்டத்தை எழுதுகிறீர்கள். வரிகளை எண்ணிப்பார்க்காமல் எழுதுங்கள். கொஞ்சம் நேரம் செலவழித்து படித்துவிட்டுப் போகிறோம்.

    அனைத்து நண்பர்களின் கேலிகளை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டதும் பாராட்டத் தகுந்தது தான் அண்ணா.


    வாழ்த்துகள் அண்ணே.

    ReplyDelete
  100. நட்சத்திர வாழ்த்துக்கள் ச.சரவணன்!

    கலக்குங்க.

    ReplyDelete
  101. நட்சத்திர வாழ்த்துக்கள் ச.சரவணன்!

    கலக்குங்க.

    ReplyDelete
  102. என்னங்க,ரெண்டு தடவை கமென்ட் ஆயிருச்சு?சரி,சாரி.

    :-)

    ReplyDelete
  103. வாழ்த்துகள் அண்ணே... வாழ்த்துகள் குவிஞ்சிடுச்சு... :)

    ReplyDelete
  104. To
    Unmai Tamilan
    tamil blog world

    Dear Eternal young man of tamil blog world
    congrats on becoming a star.If Lord Muruga is the eternal young god of tamils unmai tamilan is the ever green ever young blogger among tamils.

    ReplyDelete
  105. சிபி கொழுப்பு ரொம்ப உனக்கு..!

    கண்ணகி நன்றி..!

    கெளதம்ஜி.. புலம்பல்களை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள முயல்கிறேன்..!

    தீப்பெட்டி நன்றி..!

    கண்மணி மிக்க நன்றிகள்..

    தமிழ்உதயன் அண்ணே.. நன்றிங்கோண்ணா..!

    மோனி.. ஏழு நாள்ல 700 பதிவு போடணும்னா நான் பேயாத்தான் இருக்கணும்..!

    அறிவன் ஸார்.. கெளதம் டிரவுசர்லேயே இப்படித்தானே..!!! நல்லாயிருக்கு உங்க கூட்டணி..!

    அது ஒரு கனாக்காலம்.. மிக்க நன்றி

    மாதேவி நன்றி..

    கிரியண்ணே நன்றிங்கண்ணே..!

    முத்துக்குமரன்.. உங்களை மாதிரியான நண்பர்களெல்லாம் இருக்கும்போது என்ன கவலை..? அடிச்சு ஆடுறேன்..

    ரோஸ்விக் நன்றிகள் கோடி..!

    ராஜாராம் ஸார்.. வாழ்த்துக்கு நன்றி..!

    ஈரோடு கதிர் ஸார்.. நன்றி..!

    அசோக் தம்பி.. நன்றி..

    தமிழ்.. அப்பன் முருகனின் ஆசி நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்..! நன்றி..!

    ReplyDelete
  106. அன்பின் சரவணன்

    நட்சத்திரப் பதிவரானதற்கு பார்ராட்டுகள் - நல்வாழ்த்துகள்

    கலக்குங்க சும்மா -

    ReplyDelete
  107. துளசி சொன்னது அப்படியே ரிப்பீட்டு

    ReplyDelete
  108. அன்புக்குரிய சரவணன் அவர்களுக்கு,

    தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவரானதற்கு நல்வாழ்த்துக்கள்!

    தொடர்ந்தும் அருமையான பதிவுகளைத் தாருங்கள்!

    என்றும் அன்புடன்
    தங்க. முகுந்தன்.

    ReplyDelete
  109. மகுடம்ன்னு தலையில தொப்பிய வச்சிகிட்டு மூலையில போய் உட்கார்ந்துகிட்டா யாருக்கு தெரியுது?மகுடம் தரிச்சவங்க தமிழ்மணத்துக்கு கொஞ்சம் பிராது சொல்லுங்க.

    (என்னது!தமிழ்மணத்துக்கு காது கேட்குமா:))

    ReplyDelete
  110. எழுத்துக்களாய் மகுடம்.மனதை நெகிழ வைத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  111. சிறப்புப் பதிவருக்கு வாழ்த்துகள். பதிவின் நீளத்தை பின்னூட்டங்களின் எண்ணணிக்கைத் தாண்டும் வரை குறைப்பட ஒன்றுமில்லை :-)

    ReplyDelete
  112. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  113. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  114. சீனா ஸார் மிக்க நன்றி..!

    தங்கமுகுந்தன் நன்றிகள்..!

    ராஜநடராஜன் மகுடம்னாலே தலைல இருக்குறதுதான். அதான் தமிழ்மணத்தின் தலைப்பகுதில இருக்கு..!

    ராஜநடராஜன் ஸார்.. வாழ்த்துக்கு நன்றி..

    பனித்துளி சங்கர் மிக்க நன்றி..

    முகவை மைந்தன்.. நீளத்தை பத்தி நான் கவலைப்படலை..! கை வலிக்கிறவரைக்கும் எழுதுவேன். அதுதான் நமது எல்லைக்கோடு..

    எஸ்பிஜிஆர்.. நன்றிகள் ஸார்..

    சிவா தம்பி.. என்னையெல்லாம் ஞாபகமிருக்கா.. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ராசா..!

    ReplyDelete
  115. [[[Ram said...

    try panrom.. :)

    Ram]]]

    எதுக்குங்கண்ணா..?

    ReplyDelete
  116. அண்ணே! ரொம்பத் தாமதமா நீங்க நட்சத்திர ஆக்கப்பட்டிருக்கீங்க! இருந்தாலும் அதை விட நான் தமாதமா வாழ்த்துகள் சொல்றேன்! ஏத்துக்குங்க சாமியோவ்..! (இதை முருகன் தாளடியில் வைக்க வேண்டாம்:P )

    ReplyDelete
  117. யோவ் இந்த கொடுமை எல்லாம் எப்பய்யா நடந்துச்சு:-))

    அடங்கொக்கமக்கா, இதல்லாம் ஒரு மெயில் போட்டாவது சொல்ல கூடாதா? இப்பதான் பார்த்தேன். ரொம்ப மாசம் கழிச்சு இந்த வாழ்த்தை வச்சிக்கோ. சூப்பரு. இரு எல்லா பதிவையும் படிக்கிறேன். இன்னிக்கு இதான் வேலை!

    ReplyDelete