Pages

Sunday, April 03, 2011

உலகக் கோப்பை நமக்கு ஒரு கேடா..?

03-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று இரவு முதல் இந்திய நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். கும்மாளங்கள்..! ஏதோ இந்திய நாட்டின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டதாம்..! அதனால் சந்தோஷமாம்..!
நானும் மிகச் சமீபம் காலம்வரையிலும் நல்ல இந்தியனாகத்தான் இருந்து வந்தேன். சில, பல உண்மைகளை நேரில் அறியும்வரையிலும்.. படித்தறியும்வரையிலும் உண்மையான தேச பக்தனாகத்தான் இருந்து தொலைந்தேன்.. ஆனால் இப்போது இந்தியன் என்கிற அடையாளத்தை வெறுத்து ரொம்ப நாளாச்சு..

என்னிக்கு இவனுக கிரிக்கெட்டை சர்வதேச வியாபாரமா மாத்தினாங்களோ.. அன்னிக்கே கிரிக்கெட் மேல இருந்த பைத்தியமும் போயிருச்சு.. போதாக்குறைக்கு மேட்ச் பிக்ஸிங்ன்னு ஒண்ணை உறுதிப்படுத்திய நாளில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது கொலை வெறிதான் வந்திருக்கு.

ஊர், ஊருக்கு இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியங்களை தனி அமைப்பின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில, பல பணக்கார முதலைகளின் கைகளில்தான் உள்ளது. அவர்களது பொழுது போக்குக்காக கூடும் கிளப்பிற்கு இன்னொரு பெயராகத்தான் இந்தியக் கிரிக்கெட் வாரியம் காட்சியளிக்கிறது.

கோடிகளை வாரிக் குவித்தாலும் பிச்சைக்காரத்தனமாக அத்தனைக்கும் வரிவிலக்கு கேட்கிறார்கள் இந்த உலக மகா பிச்சைக்காரக் கோடீஸ்வரர்கள்..! ஒவ்வொரு மாநிலத்திலும் இவர்களே தனி அமைப்பை வைத்துக் கொண்டு இவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு எப்பாடுபட்டாலும் அரசு இதில் தலையிடாத வண்ணம் பார்த்துக் கொள்வதில்தான் சூட்சுமமே இருக்கிறது..

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தை வருடத்திற்கு சில ஆயிரம் ரூபாய்க்குத்தான் அரசு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது..! ஒரு போட்டி நடந்தாலே கோடிக்கணக்கில் கல்லா கட்டும் இந்தக் கொள்ளையரிடமிருந்து கூடுதலான தொகையை வசூல் செய்ய எந்த அரசுகளுக்கும் மனமில்லை. வாங்கிக் கொடுக்கவும் எந்த புரோக்கர் அதிகாரிகளுக்கும் மனமில்லை. அந்த அதிகாரிகளின் வீட்டம்மா, சின்ன வீடு, கொழுந்தியாள், மாமியார், மைத்துனர்களுக்கெல்லாம் வீடு தேடிப் போய் கிரிக்கெட் டிக்கெட்டுகளை பிச்சை போட்டுவிடுவதால் அவர்களுக்குக் கவலையில்லை..

இதேபோல் அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும் அவரவர்க்குச் சொந்தமான வீடுகளையோ, நிலங்களையோ இதேபோல் மிகக் குறைந்த விலைக்கு விற்கச் சொன்னாலோ, குத்தகைக்குக் கொடுக்கச் சொன்னாலோ கொடுத்துவிடுவார்களா..? கணக்குப் போட மாட்டார்கள்..?

ஆனால் இதில் மட்டும் கேட்க மாட்டார்கள். ஏனெனில் இது ஊரான் வீட்டுக் காசு. மக்களுடைய காசு.. இதனை வைத்துத்தான் அந்த அயோக்கியர்கள் வாழ வேண்டியிருக்கிறது.. அதிகார வர்க்கமும், பணக்கார வர்க்கமும் இணைந்து, இயைந்து ஒட்டி உரசிப் போவதுகூட இதனால்தான்..!

கலைஞர் டிவிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலமாக கிடைத்த 214 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்தபோதுகூட உடனுக்குடன் கை மாத்தாக இதில் பாதி பணத்தைக் கொடுத்து உதவியிருப்பது கிரிக்கெட் வாரிய செயலாளர், 'மெட்ராஸ் சிமெண்ட்ஸ்' சீனிவாசன்தான் என்கிறார்கள்..

அரசு தானே தலையிட்டு தேர்வு செய்யும் வேலையைச் செய்தால் எத்தனை வில்லங்கங்கள் நடக்குமோ அதையெல்லாம் இப்போது இந்த முதலைகளே செய்து வருகிறார்கள். அத்தனை மாநில கிரிக்கெட் அமைப்புகளின் பின்னணியிலும் இருப்பது சில அரசியல்வியாதிகள்தான். அவர்களுக்கு ஏற்ற பதவிகளைக் கொடுத்து காக்கா பிடித்து வைத்துக் கொண்டு அவர்கள் விரும்பும் சிலரை ஆட்டக்காரர்களாகத் தேர்வு செய்து சரிக்கட்டும் வேலையையும் செய்து வருகிறார்கள்..!

கிரிக்கெட் என்பது இங்கு மதமாக ஆக்கப்பட்டுள்ளது. சினிமாவைப் போல இதுவும் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது. எனது சிறு வயதில் நேரத்தைச் செலவழிக்க எனக்கு வேறு போக்கிடம் இல்லாததால் நான் அழகுத் தமிழில் கேட்ட கிரிக்கெட் வர்ணனை என்னை கிரிக்கெட் வாசம் நோக்கி இழுத்துச் சென்றது..

இப்போதுதான் மூன்றாவது பாராவில் சொன்னதுபோல புத்தி வந்து தெளிந்திருக்கிறது..! இப்போதும் எந்தக் கவலையும் இல்லை என்பார்களுக்கு கிரிக்கெட் என்பது விளையாட்டாகத்தான் தெரிகிறது..!

நேற்று ஒரு நாளில் மட்டும் ட்விட்டரிலும், பிற இணையத்தளங்களிலும் இவர்கள் உதிர்த்த தேச பக்தியை பார்க்க வேண்டுமே..? இது போல் ஒரு நாள்கூட தங்களது தமிழ் பாசத்தைக் இவர்கள் காட்டியிருக்கவே மாட்டார்கள்..!

இந்தியா, இந்தியா.. என்பவர்களின் இந்திய தேசியம் உண்மையில் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ஈழத்தில் நடந்த கடைசிப் போர் எனக்கு நன்றாகவே உணர்த்திவிட்டது..!

பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் மோதலில் எத்தனையோ தமிழர்கள் இந்தியாவுக்காக தங்களது உயிரை இழந்து பிணமாக கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தேசியம் பேசும் இந்தியவாதிகள், தமிழ் ஈழப் பிரச்சினையில் தமிழர்கள் சாகும்வரை வேடிக்கை பார்த்தபடியே கையைக் கட்டிக் கொண்டார்கள்..!

இந்திய தேசியத்துக்காக உயிரைக் கொடுக்கிறான் தமிழன். அவனுக்காக நானும் இனவெறி பிடித்த இலங்கையை புறக்கணிக்கிறேன் என்று இந்திய நாடும் சொல்லவில்லை. இந்தியாவின் கிரிக்கெட் வாரியமும் சொல்லவில்லை.

என்ன செய்தாலும் அவர்களுக்குத் தனி நாடு கொடுத்துவிடக் கூடாது என்பதில் இந்திய ஏகாதிபத்தியம் வரிந்து கட்டிக் கொண்டு நின்றது.. இப்போதும் அப்படியே நிற்கிறது..! பதவிக்கும், பணத்துக்கும் சோரம் போன தமிழர்களே இதற்கு ஒத்து ஊத, அவர்களுக்கு வேண்டியதை தள்ளிவிட்டு அவர்கள் செய்யும் விபச்சாரத்தையும் ஊக்குவித்து வருகிறது இந்திய தேசியம்..!

வாரியத்துக்குத் தேவை இந்தியா முழுவதும் கிரிக்கெட்டை கொண்டாடுவதினால் கிடைக்கின்ற பணம்.. அதில் முத்துக் குளிக்கும் அவர்கள் இந்த வருமானத்தை இழக்க விரும்பவில்லை. ஆனால் இளிச்சவாயன் தமிழன்தான்..!

மும்பை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மும்பையில் விளையாடக் கூடாது என்று சிவசேனா அமைப்பு இன்றுவரையில் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகிறது..! ஆனால் அப்படியொரு சின்ன எதிர்ப்பைக்கூட தமிழனால் இங்கே சொல்ல முடியவில்லை. இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணியுங்கள்.. இந்தியாவில் விளையாட அனுமதிக்காதீர்கள் என்ற கோஷம்கூட தீவிர இயக்கத்தினர் சிலர் மட்டும்தான் சொல்லி வருகிறார்கள். இப்படி முன் வருபவர்களை முன் மொழிபவர்கள்கூட குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கேடு கெட்ட அரசும், கேவலங்கெட்ட அதிகார அமைப்பும் பணத்தைத் தவிர வேறு எதுவும் தங்களுக்குத் தேவையில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இதனைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள்..!



இவர்களுக்கு பக்கத்து வீட்டில் நடப்பது விருந்து என்றும் தன் வீட்டில் நடந்தால் அது சாவு என்பதுமான மனநிலை.. இந்த மனநோய் பிடித்த மனநிலையில் இருந்து இந்த தமிழன் என்றைக்கு வெளியே வருவது..?

வெங்காயம் கிலோ என்ன விலை விக்குது..? ஏற்றுமதி செய்யலாமா? கூடாதா? கையிருப்பு எவ்வளவு உள்ளது..? என்றெல்லாம் ஒரு நாள் மீட்டிங் போட்டு தெரிந்து கொள்ளத் துப்பில்லாத ஒரு விவசாயத் துறை அமைச்சர்தான் தற்போது கிரிக்கெட் வாரியத் தலைவரா நாள் முழுக்க, கிரிக்கெட் வேலையையே பார்த்துக்கிட்டிருக்கிறாரு..

ஆனா இந்தாளுக்கு கவர்ன்மெண்ட்டு சம்பளம், காரு, பங்களா.. ஊர் சுற்ற அரசு காசு.. இதே மாதிரி கவர்ன்மெண்ட்டுல சாதாரண ஊழியம் பார்ப்பவர்கள், “நாங்க பார்ட் டைமா எல்.ஐ.சி. பாலிஸி பிடிக்குற வேலைக்குப் போறோம்.. அப்பப்ப வந்து எங்க வேலையைப் பார்க்கிறோம்”னு சொல்லிட்டுப் போனா நீங்க விட்ருவீங்களா..?

தாசில்தார் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் இன்ன பிற அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை இல்லை. அரசு அலுவலர்கள் யாரும் மிகச் சரியான நேரத்துக்கு  வருவதில்லை.. ஒழுங்கா வேலை பார்க்கிறதில்லை என்றெல்லாம் புகார் மனுவை நீட்டும் மிஸ்டர் காமன்மேன்கள் இந்த பெருச்சாளிகளான கபோதி அமைச்சர்களை மட்டும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

ஆனா அந்தக் கபோதி மந்திரி இப்படித்தான் இப்போதும் ஊர் சுத்திக்கிட்டிருக்காரு. இந்தாளு என்னிக்கு தனது துறையைக் கவனிச்சிருக்காரு..? நேத்துகூட இந்தாளுதான் கோப்பையைத் தூக்கிக் கொடுக்குறாரு.. இது மாதிரி தனது துறை வேலையை ஒரு நாள்கூட இந்தாளு பார்த்திருக்க மாட்டிருக்காரு.. உலகக் கோப்பை நடந்த இத்தனை நாட்களும் இந்த அமைச்சர் ஸ்டேடியங்களைத்தான் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும் தினத்துக்கு 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல லட்சணத்தில் நாடு இருக்கின்ற நிலையில் அவர்களது குறைகள் என்ன? கோரிக்கைகள் என்ன என்றெல்லாம்கூட காது கேட்க முடியாத இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்களை அமைச்சராக்கி நமக்கென்ன புண்ணியம்..?  நம்ம மன்னமோகனசிங்குக்கு தான்தான் பிரதமர் அப்படீன்றதே சில சமயம் மறந்து போகுது.. இதையும் அவர்கிட்ட சொல்லி என்னாகப் போகுது..? இந்த லட்சணத்துலதான் இவனுக ஆட்சி நடத்துறானுக..!

இதுல உங்களுக்கு உலகக் கோப்பை ஒரு கேடு..!

அடப் போங்கப்பா.. நீங்களும் உங்க இந்தியப் பாசமும்..!

185 comments:

  1. என்னோட நெகட்டிவ் வோட்

    ReplyDelete
  2. உங்களுக்கு சிங்கிமாங் சக்கோ மேனியான்னு ஒரு நோய் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்...அது வந்தா அப்படிதான் யாராவது சந்தோசமா ஜாலியா இருந்தா....சிரிக்கிறீயா நல்லா சிரி பூமா தேவி வாயை பொளக்கப்போறான்னு சொல்லுவது மாதிரி எதுனா பேசு வைக்கும் அந்த நோய்.

    ReplyDelete
  3. நெத்தி அடி ....

    ReplyDelete
  4. அப்பன் முருகனுக்கு அரோகரா அரோகரா

    ReplyDelete
  5. அப்பன் முருகனுக்கு அரோகரா அரோகரா

    ReplyDelete
  6. அருமையா சொன்னீங்கண்ணே..

    தமிழ் சாதியை நினைத்தால் கவலையாக இருக்கிறது


    கிரிக்கெட்- ராஜபக்சேவின் வெற்றியும் , சிலரின் அப்பாவித்தனமான மகிழ்ச்சியும் ..

    ReplyDelete
  7. உண்மையான அறச்சீற்றம் நண்பா.

    ReplyDelete
  8. சூழ்கலி நீங்கித் தமிழ்மொழி ஓங்கித் துலங்குக வையகமே!

    ReplyDelete
  9. ஆயிரம் பேரை திட்டுங்கள் ஆனால் வென்ற teamஐ பாராட்ட தவறலாமா???

    ReplyDelete
  10. உங்களோட மொக்கை-est பதிவு...

    ReplyDelete
  11. ”இந்தியா, இந்தியா.. என்பவர்களின் இந்திய தேசியம் உண்மையில் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ஈழத்தில் நடந்த கடைசிப் போர் எனக்கு நன்றாகவே உணர்த்திவிட்டது..!”

    துன்பக் கடலில் துவளும் இந்தியா!
    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்….
    http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

    ReplyDelete
  12. அதென்னமோ ராஜபக்சேவை தொங்கின முகத்தோட, வெறுங்கையோட அனுபியதால ஒரு ஈழத்தவனாக எனக்கு கொஞ்சூண்டு மகிழ்ச்சி. அந்தவகையில் டோனிக்கும் அவரது குழுவினருக்கும்(கவனிக்கவும், இந்திய அரசுக்கு இல்லை)நன்றிகள்..

    ReplyDelete
  13. அண்ணே!எப்பவுமா பொங்கல்,தீபாவளி கொண்டாடுறோம்?அது மாதிரி இறுதிப் போட்டி.

    எதுவுமே இணைக்காத இந்தியாவை கிரிக்கெட் இணைக்கிறதென்றாவது சந்தோசப்படுங்க.

    இளைய தலைமுறை இதனை இந்தியா என்றும்,மனதை ஆக்கிரமித்து விளையாட்டு என்றுதான் பார்க்கிறார்கள்.

    நீங்கள் வெறும் ரசிகனாகப் பார்க்கலாம்.குறைந்த பட்சம் ஒரு த்ரில்லர் படம் பார்க்கிற மாதிரியாவது பார்க்கலாம்.

    நெகட்டிவா ஓட்டு வந்து விழுந்துச்சுன்னா நான் பொறுப்பில்லை:)

    ReplyDelete
  14. Unmai Anna,

    This is the first post that I completely agree to your view. Even I’m having the same feeling. In my school & collage days, I was a member in local cricket club and had a crazy on this game; even now I can say the batting order of most teams of 1987/91 World Cup, that much I was addicted to that game.

    When I understood the Politics and regional bias shown in Indian Cricket and particularly the domination of certain high-class society & groups and sidelining of Tamil Nadu players etc, I lost complete interest in that game, not even watching them on TV now.

    ReplyDelete
  15. ஒவ்வொரு முறையும் ஏழாவது ஓட்டு என் கைகளுக்குத்தான் வருகிறது தமிழா.

    ReplyDelete
  16. சினிமா இப்ப டுபாக்கூர் பசங்க கையில சிக்கீடுச்சி அதுனால இனி சினிமா நமக்கு ஒரு கேடா......

    ஹோட்டல் பிஸினஸ் எல்லாம் கொள்ளையடிக்கற பசங்க கையில போயிடுச்சு.அதுனால சாப்பிடறது நமக்கு ஒரு கேடா....

    செல் போன் கம்பெனி நடத்தறவனால நாட்டுக்கு நஷ்டமாயிடுச்சு. அதுனால செல்போன் நமக்கு ஒரு கேடா....

    இனி வரிசையா இந்த மாதிரி பதிவுகள் இங்கே வரும்னு எதிர்பார்க்கலாமா....? :)

    Be positive...

    ReplyDelete
  17. த்தா...எங்கள என்னதாண்டா செய்ய சொல்றீங்க ? ஈழ தமிழன்...ஈழ தமிழன்னு.......துப்பாக்கி எடுதுட்டுட்டு போயி....யாரடா சுடனும் ? இல்லன்னா மனித வெடிகுண்டா போயி...ராஜபக்ஷேவ கொல்லனுமா ? இந்த மசுராண்டிகளுக்கு....எழுதறதுக்கு வாய்ப்பிருக்குன்னு, எதனாலும் எழுதுவானுங்க....இவனுங்க லிங்க்க நாலு வீணா போனவனுங்க ஷேர் பண்ணுவாங்க....த்தா கிரிக்கெட் கூட பாக்க கூடாதாடா ? நாம எல்லோரும் இந்தியன்தான....நாம ஜெயிக்கறத.....நம்மதான்டா கொண்டாடனும்....இதுக்கும்....ஈழ தமிழனுக்கும், என்னடா சம்பந்தம் ? முதல்ல....இது மாதிரி புலம்பறத தவிர....தமிழனுக்கு நீங்கெல்லாம் என்னதாண்டா....கிழிச்சீங்க ?

    ReplyDelete
  18. "அதென்னமோ ராஜபக்சேவை தொங்கின முகத்தோட, வெறுங்கையோட அனுபியதால ஒரு ஈழத்தவனாக எனக்கு கொஞ்சூண்டு மகிழ்ச்சி."

    ஈழத்து சகோதரர்களே இதை ராஜபக்சேவின் தோல்வியாக நினைத்தால், தமிழ் நாட்டு மக்களை குறை சொல்லி பயன் என்ன?
    நீதி மன்றத்தில் நிற்க வேண்டியவர் , ஜாலியாக க்ரிக்கெட் பார்ப்பது, நம் தோல்வி என ஏன் நம்மவர்களுக்கு புரியவில்லை... ?

    ReplyDelete
  19. அண்ணே !

    உலகத்தில் ஐ.நா.சபை அங்கீகாரம் பெற்ற சுமார் 250 நாடுகள் இருக்கின்றன. ஆனால் கிரிக்கெட் விளையாடுவதோ சுமார் 15 நாடுகள் மட்டும்தான்.

    ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமையாக இருந்த நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகின்றன.

    கிரிக்கெட் என்பதே ஒரு அடிமைச் சின்னம்.

    ஒரு அடிமைச்சின்னத்தை,அதன் உண்மை அறியாமல், நம்மில் பெரும்பாலானவர்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களை மூளைச்சலவை செய்ததே நமது ஆட்சியாளர்களின் சாதனை!!

    நடப்பு உலகின் அவலங்களை மறக்க, மறைக்க இது ஒரு போதை வஸ்துவாக பயன்படுத்தப்படுகிறது.

    ReplyDelete
  20. // உங்களுக்கு சிங்கிமாங் சக்கோ மேனியான்னு ஒரு நோய் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்//

    இந்த நோய்க்கு இவ்வளவு பெரிய பெயர் போல குசும்பன் ஊர்ல. எங்கூர்ல லூசுன்னு சொல்லுவோம்.

    ReplyDelete
  21. RT @Kusumban உங்களுக்கு சிங்கிமாங் சக்கோ மேனியான்னு ஒரு நோய் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்...அது வந்தா அப்படிதான் யாராவது சந்தோசமா ஜாலியா இருந்தா....சிரிக்கிறீயா நல்லா சிரி பூமா தேவி வாயை பொளக்கப்போறான்னு சொல்லுவது மாதிரி எதுனா பேசு வைக்கும் அந்த நோய்.

    ReplyDelete
  22. நல்ல இடுகை. என்ன இருந்தாலும் மராட்டியக்காரனின் ரோசம் தமிழனுக்கு வராது.

    வந்தாரை வாழவைக்கும் தமிழன், ஒரு போதும் ரோசப்படமாட்டான். முடிந்த உமது ரோசத்தையும் கருவருப்பான்.

    ReplyDelete
  23. RAJENDRAN RAJA said...
    த்தா...எங்கள என்னதாண்டா செய்ய சொல்றீங்க ? ஈழ தமிழன்...ஈழ தமிழன்னு.......துப்பாக்கி எடுதுட்டுட்டு போயி....யாரடா சுடனும் ? இல்லன்னா மனித வெடிகுண்டா போயி...ராஜபக்ஷேவ கொல்லனுமா ? இந்த மசுராண்டிகளுக்கு....எழுதறதுக்கு வாய்ப்பிருக்குன்னு, எதனாலும் எழுதுவானுங்க....இவனுங்க லிங்க்க நாலு வீணா போனவனுங்க ஷேர் பண்ணுவாங்க....த்தா கிரிக்கெட் கூட பாக்க கூடாதாடா ? நாம எல்லோரும் இந்தியன்தான....நாம ஜெயிக்கறத.....நம்மதான்டா கொண்டாடனும்....இதுக்கும்....ஈழ தமிழனுக்கும், என்னடா சம்பந்தம் ? முதல்ல....இது மாதிரி புலம்பறத தவிர....தமிழனுக்கு நீங்கெல்லாம் என்னதாண்டா....கிழிச்சீங்க ?


    ராஜா..எதுக்கு ஆர்ம்ஸை முறுக்கறீங்க. உண்மைத்தமிழன் என்றுமே தரக்குறைவாக எந்த பதிவரையும் பேசியதில்லை. இத்தனை கெட்ட வார்த்தை போட்டுவிட்டால் நீங்க என்னவோ பெரிய ரௌடி என்பது போல் காட்டிக்கொள்ள வேண்டாம். இப்படி எழுதும் பலர் நிஜத்தில் தொடை நடுங்கிகள் என்பதே உண்மை. நீங்க துப்பாக்கி எடுக்கவும் வேணாம். எவனையும் கொல்லவும் வேண்டாம்.

    //இந்த மசுராண்டிகளுக்கு//

    நீங்க வச்சிருக்கறது ஜடா முடியா இல்ல மொட்டையா??

    //எழுதறதுக்கு வாய்ப்பிருக்குன்னு, எதனாலும் எழுதுவானுங்க//

    நீங்க மட்டும் அசிங்கமா எழுதலையா?

    //த்தா கிரிக்கெட் கூட பாக்க கூடாதாடா ?//

    என்னமோ உங்க வீட்டு கேபிள் ஒயர கட் பண்ண மாதிரி கொந்தளிக்கறீங்க???

    //நாம ஜெயிக்கறத.....நம்மதான்டா கொண்டாடனும்//

    வெள்ளைக்காரன் அடிமை விளையாட்டை கொண்டாடனுமா? உருப்பட்ட எந்த நாடும் கிரிக்கெட்ட சீந்தி கூட பாக்க மாட்டான். அவனுக்கு நேரம் முக்கியம். இங்க டெஸ்ட் மாட்சை கூட அஞ்சு நாலு சோறு தண்ணி இல்லாம பாக்க கோடிக்கணக்குல கூட்டம் இருந்தா நல்லா வெளங்கும் நாடு.

    //இதுக்கும்....ஈழ தமிழனுக்கும், என்னடா சம்பந்தம் ?//

    அது சரி....நம்ம தமிழன் அஷ்வினை ஒதுக்கி வச்சி இறுதிப்போட்டில ஆட விடாம செஞ்சானுங்களே..அதுக்கு இருக்கு சம்மந்தம். இவரை மட்டுமா...பத்ரிநாத், ரமேஷ், குமரன் இப்படி எல்லாரையும் ஒதுக்கி தள்ளுனானுங்க.

    தலைமை தேர்வாளர் ஸ்ரீகாந்துக்கு கூட போட்டி இந்த உலகக்கோப்பை பார்க்க டிக்கட் தராம நக்கல் பண்ணானுங்க.

    //தமிழனுக்கு நீங்கெல்லாம் என்னதாண்டா....கிழிச்சீங்க ?//

    குறைஞ்ச பட்சம் நாகரீகமா பதிவு எழுதறமே அது போதும். நீங்க அடுத்த வாரம் பாப்கார்ன் சாப்டுக்கிட்டு ஐ.பி.எல். பாருங்க!! ஜெய் ஹிந்த்!!

    ReplyDelete
  24. இந்த உலக கோப்பையை என்னுடைய ஹோட்டலில் ( இருந்திருந்தால் ) பெரிய ஸ்க்ரீன் வைத்து அதிலே குடிக்க king fisher குடிதண்ணீர் வைத்து காசு பார்த்திருப்பேன்.,இந்தியா ஜெய்க்க ஜெய்க்க எனக்குதான் காசு., உங்களுக்கும் அந்த மாதிரி ஏதேனும் ஐடியா வேணுமா சார்!

    உப்பு விக்க மழைகாலத்தில் போகும் அறிவு அடியேனுக்கு கிடையாது சார்!

    ReplyDelete
  25. நீதி மன்றத்தில் நிற்க வேண்டியவர் , ஜாலியாக க்ரிக்கெட் பார்ப்பது, நம் தோல்வி என ஏன் நம்மவர்களுக்கு புரியவில்லை... ?//

    இதுவேதான் எனது கேள்வியும். இது வரையிலும் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த உலக மானுட ஒழுக்க நெறி, மாண்புகளை எல்லாம் இழந்து விட்டோம் என்ற வாக்கில் ஒரு மனிதன் இனப் படுகொலை நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் எல்லாம் நிகழ்த்தி விட்டு எப்படி இப்படி விசிலடித்துக் கொண்டு கேளிக்கை விளையாட்டுகளில் நல்லவனாக வலம் வர முடியும்?

    விளையாட்டை விளையாட்டாக பார் என்றால் அத்தனை உயிர்களின் விலை என்ன மயிரா? யார் நீதியை பெற்றுத் தருவது. இது போன்ற விளையாட்டுக்களிலிருந்து தனிமை படுத்தி காட்டுவதிலிருந்து உலக சபையில் என்ன நடந்திருக்கிறது என்று நாம் யோசிக்க வைக்க வில்லையெனில் யார் யோசிக்க வைப்பார்கள்?

    தனிப்பதிவாக கொண்டு வருகிறேன். உ.தா. உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் மனநிலையை பெற முதிர்ச்சி வேண்டும். சமரசம் பண்ணிக்கொள்ளாத மனிதம் வேண்டும். புரியாதவர்களே இங்கே வேகப் படுவார்கள், ஜால்ஜாப்பு சொல்லிக் கொள்வார்கள். நன்றி!

    ReplyDelete
  26. ஸாரி சரவணன் .. இந்த பருப்பு இங்கு வேகாது. நாலு பேரு ஒரு விஷயத்தை பாராட்டியோ சந்தோசப்பட்டோ பேசுனா.. அத எதிர்த்து பேசும் முந்திரி கொட்டைதனமே தங்கள் பதிவு!!
    நீங்கள் கூறியிருப்பது உண்மைதான்.. ஆனால்.. அது அரசியல்.. 28 ஆண்டுகளுக்கு பிறகு.. இங்கு நம் வீரர்கள் இத்துனை ஊழல்களுக்கு மத்தியில் வென்றிருப்பதுதான் சாதனை!!..ஏன் இவ்வளவு..வக்கனையாக பதிவு போட்ட தாங்க்ள்.. இதை போன வாரம் போட்டு.. விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கலாமே..உங்களுக்கே அத செய்ய தோணலயே..!!

    ReplyDelete
  27. முற்றிலுமாய் வெறுக்கிறேன். உண்மை தமிழன் அவர்களே, எந்த விசயத்தையும் எதிர்த்து எழுதினால் தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை உணர்ந்து, உலக கோப்பை கிரிக்கெட்டையும் எதிர்த்து எழுதி இருப்பதாய் உணர்கிறேன்.. அமைதியாக யோசித்து பாருங்கள். இந்தியாவில் நிலவும் கேடுகெட்ட அரசியலை விட, கிரிக்கெட் பரவாயில்லை தான்.. நேற்று உலக அரங்கில் கிரிக்கெட்டினால் தேசம் தலை நிமிர்ந்தது மறுக்க முடியாத உண்மை. இந்த தருணத்தை கொண்டாடுவதை விட்டு விட்டு குறை சொல்லாதீர்கள், அப்படி குறை சொல்வதென்றால் இந்தியாவில் நிறைய விஷயம் இருக்கிறது. தமிழகத்தின் கேடு கேட்ட அரசியலை விட கிரிக்கெட் மோசமானது அல்ல... அரசியல்வாதிகள் நம்மை மதங்கள், சாதிகள் கூறி பிரித்தாளுகிறார்கள். கிரிக்கெட் அனைத்தையும் முறியடித்து நம்மை இணைக்கிறது.. கிரிக்கெட் மட்டும் அல்ல. இந்திய சார்பில் நடை பெரும் அனைத்து விளையாட்டுக்களும் தான்..
    நெருப்பை உமிழாதீர்கள், எறிவது நம் ஒற்றுமைதான்.

    ReplyDelete
  28. நான் உங்களது கருத்தில் முழுவதுமாக உடன்படுகிறேன்..நீங்கள் மிகமட்டமாக பின்னூட்டம் இடுபவர்களை கவனத்தில் கொள்ளவேண்டாம்..கூட்டிக்கொடுக்கும் காட்டிக்கொடுக்கும் களவாணிகள் உலகில் எங்கும் உண்டு... அதில் இந்தியாவும் ஒன்று... (ஈழ விஷயத்தில்...உ.ம். ராஜா ராஜேந்திரா.. கருணாநிதி)

    ReplyDelete
  29. அண்ணே! பொதுவாக நான் யாருக்கும் மைனஸ் ஓட்டுப் போடுறதில்லை. இன்னிக்கு ரிப்பன் வெட்டி உங்க இடுகையிலே ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete
  30. [[[எல் கே said...

    என்னோட நெகட்டிவ் வோட்.]]]

    எதிர்பார்த்தேன். அதுவும் முதல் வடையே இப்படித்தானா..?

    மிக்க நன்றி..!

    ReplyDelete
  31. [[[குசும்பன் said...

    உங்களுக்கு சிங்கிமாங் சக்கோ மேனியான்னு ஒரு நோய் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது வந்தா அப்படிதான் யாராவது சந்தோசமா ஜாலியா இருந்தா. சிரிக்கிறீயா நல்லா சிரி பூமா தேவி வாயை பொளக்கப் போறான்னு சொல்லுவது மாதிரி எதுனா பேசு வைக்கும் அந்த நோய்.]]]

    தம்பி குசும்பா..

    நோயுக்கான விளக்கவுரை நல்லாத்தான் இருக்கு..!

    ஆனால் நோயின் பெயர்தான் கொஞ்சம் நீளமா இருக்கு. அத்தோட வாயிலேயும் நுழைய மாட்டேங்குது.. சி்ன்னதா, புரியறாப்புல வைச்சிருக்கலாம்..!

    ReplyDelete
  32. [[[Jittu said...

    நெத்தி அடி.]]]

    அப்பாடா.. மூணாவது பின்னூட்டம் பிளஸ்.. தப்பிச்சேன்.. நன்றி ஜிட்டு..!

    ReplyDelete
  33. [[[ராஜகோபால்.S.M said...

    அப்பன் முருகனுக்கு அரோகரா அரோகரா.]]]

    விபூதியும், பஞ்சாமிர்தமும் கிடையாதா?

    ReplyDelete
  34. [[[பார்வையாளன் said...
    அருமையா சொன்னீங்கண்ணே..
    தமிழ் சாதியை நினைத்தால் கவலையாக இருக்கிறது.]]]

    ஒத்தக் கருத்திற்கு நன்றி பார்வை..!

    ReplyDelete
  35. [[[Feroz said...

    உண்மையான அறச்சீற்றம் நண்பா.]]]

    மிக்க நன்றி பெரோஸ்..!

    ReplyDelete
  36. [[[திவியரஞ்சினியன் said...
    சூழ்கலி நீங்கித் தமிழ்மொழி ஓங்கித் துலங்குக வையகமே!]]]

    இதென்ன புதிய மொழியாக இருக்கு..? என்ன ஸார் ஆச்சு..?

    ReplyDelete
  37. [[[Wahe Guru said...

    ஆயிரம் பேரை திட்டுங்கள் ஆனால் வென்ற teamஐ பாராட்ட தவறலாமா???]]]

    விளையாட்டை ரசிக்கும் மன நிலையில் இல்லை.. அதனால்தான் சொல்ல முடியவில்லை..!

    ReplyDelete
  38. [[[சீனு said...

    உங்களோட மொக்கை-est பதிவு...]]]

    தங்களின் கருத்துக்கு நன்றி சீனு..!

    ReplyDelete
  39. [[[ஊரான் said...

    ”இந்தியா, இந்தியா என்பவர்களின் இந்திய தேசியம் உண்மையில் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ஈழத்தில் நடந்த கடைசிப் போர் எனக்கு நன்றாகவே உணர்த்திவிட்டது..!”

    துன்பக் கடலில் துவளும் இந்தியா!
    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்….
    http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html]]]

    மிக்க நன்றி நண்பரே..

    உமது கட்டுரையும் அருமையாக, தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது..!

    ReplyDelete
  40. [[[சுருதிரவி..... said...

    அதென்னமோ ராஜபக்சேவை தொங்கின முகத்தோட, வெறுங்கையோட அனுப்பியதால ஒரு ஈழத்தவனாக எனக்கு கொஞ்சூண்டு மகிழ்ச்சி. அந்த வகையில் டோனிக்கும் அவரது குழுவினருக்கும் (கவனிக்கவும், இந்திய அரசுக்கு இல்லை) நன்றிகள்..]]]

    இந்த அளவுக்குக் கூட இறங்கி வர என் மனம் ஒப்பவில்லை நண்பரே..! ஸாரி..

    ReplyDelete
  41. [[[ராஜ நடராஜன் said...

    அண்ணே! எப்பவுமா பொங்கல், தீபாவளி கொண்டாடுறோம்? அது மாதிரி இறுதிப் போட்டி. எதுவுமே இணைக்காத இந்தியாவை கிரிக்கெட் இணைக்கிறதென்றாவது சந்தோசப்படுங்க.]]]

    இதைத்தான் நானும் கொஸ்டீன் கேக்குறேன்.. இந்தியாவை இணைப்பதினால் தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்திருக்கிறது..?

    [[[இளைய தலைமுறை இதனை இந்தியா என்றும், மனதை ஆக்கிரமித்து விளையாட்டு என்றுதான் பார்க்கிறார்கள். நீங்கள் வெறும் ரசிகனாகப் பார்க்கலாம். குறைந்தபட்சம் ஒரு த்ரில்லர் படம் பார்க்கிற மாதிரியாவது பார்க்கலாம்.]]]

    இத்தனை வருஷமா அதைத்தானே செஞ்சுக்கிட்டிருந்தேன். நான் ஒரு காலத்தில் கிரிக்கெட் வெறியன்..!

    [[[நெகட்டிவா ஓட்டு வந்து விழுந்துச்சுன்னா நான் பொறுப்பில்லை:)]]]

    அதான் வந்து குவிஞ்சிருக்கே..! உங்களுடைய ஓட்டுக்கும் எனது நன்றி..!

    ReplyDelete
  42. [[[Prakash said...

    Unmai Anna, This is the first post that I completely agree to your view. Even I’m having the same feeling. In my school & collage days, I was a member in local cricket club and had a crazy on this game; even now I can say the batting order of most teams of 1987/91 World Cup, that much I was addicted to that game.

    When I understood the Politics and regional bias shown in Indian Cricket and particularly the domination of certain high-class society & groups and sidelining of Tamil Nadu players etc, I lost complete interest in that game, not even watching them on TV now.]]]

    இந்த மனநிலைதான் எனக்கும்.. மிக்க நன்றி பிரகாஷ்..!

    ReplyDelete
  43. [[[ஜோதிஜி said...
    ஒவ்வொரு முறையும் ஏழாவது ஓட்டு என் கைகளுக்குத்தான் வருகிறது தமிழா.]]]

    ஆஹா.. நீரே என் நண்பன்.. நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  44. [[[மு.சரவணக்குமார் said...

    சினிமா இப்ப டுபாக்கூர் பசங்க கையில சிக்கீடுச்சி அதுனால இனி சினிமா நமக்கு ஒரு கேடா......

    ஹோட்டல் பிஸினஸ் எல்லாம் கொள்ளையடிக்கற பசங்க கையில போயிடுச்சு.அதுனால சாப்பிடறது நமக்கு ஒரு கேடா..

    செல்போன் கம்பெனி நடத்தறவனால நாட்டுக்கு நஷ்டமாயிடுச்சு. அதுனால செல்போன் நமக்கு ஒரு கேடா.

    இனி வரிசையா இந்த மாதிரி பதிவுகள் இங்கே வரும்னு எதிர்பார்க்கலாமா?:)

    Be positive...]]]

    விதண்டாவாதத்திற்கு நானென்ன பதில் சொல்வது..?

    ReplyDelete
  45. Neenga sonna nalathelam nadanthuta matum neenga santhosama iruka porengala..athulayum kutram kandu pudichu polambitu thaan irupenga..Nalla velai neenga kalyanam panikala ..adhu nollai ithu nollai nu solliye torture senchu irupenga...oru ponnu valkai ya neenga kaapathi irukenga..

    ReplyDelete
  46. இதைத்தான் நானும் கொஸ்டீன் கேக்குறேன்.. இந்தியாவை இணைப்பதினால் தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்திருக்கிறது..?

    - Ippadiye seperate senchute poonga...tamilan..en jadhi..en kodumbam..naan..en kannu..athukula irukiya pupil nu ..ennatha solrathu poonga..

    ReplyDelete
  47. [[[RAJENDRAN RAJA said...

    த்தா. எங்கள என்னதாண்டா செய்ய சொல்றீங்க? ஈழ தமிழன். ஈழ தமிழன்னு. துப்பாக்கி எடுதுட்டுட்டு போயி. யாரடா சுடனும்? இல்லன்னா மனித வெடிகுண்டா போயி. ராஜபக்ஷேவ கொல்லனுமா? இந்த மசுராண்டிகளுக்கு. எழுதறதுக்கு வாய்ப்பிருக்குன்னு, எதனாலும் எழுதுவானுங்க. இவனுங்க லிங்க்க நாலு வீணா போனவனுங்க ஷேர் பண்ணுவாங்க. த்தா கிரிக்கெட்கூட பாக்க கூடாதாடா ? நாம எல்லோரும் இந்தியன்தான. நாம ஜெயிக்கறத. நம்மதான்டா கொண்டாடனும். இதுக்கும். ஈழ தமிழனுக்கும், என்னடா சம்பந்தம்? முதல்ல இது மாதிரி புலம்பறத தவிர தமிழனுக்கு நீங்கெல்லாம் என்னதாண்டா கிழிச்சீங்க ?]]]

    மிஸ்டர் இந்தியன் ராஜேந்திரன் ராஜா தங்களது அன்பான, பாசமான, நாகரிகமான கருத்திற்கு எனது நன்றி..!

    ReplyDelete
  48. [[[பார்வையாளன் said...

    "அதென்னமோ ராஜபக்சேவை தொங்கின முகத்தோட, வெறுங்கையோட அனுபியதால ஒரு ஈழத்தவனாக எனக்கு கொஞ்சூண்டு மகிழ்ச்சி."

    ஈழத்து சகோதரர்களே இதை ராஜபக்சேவின் தோல்வியாக நினைத்தால், தமிழ்நாட்டு மக்களை குறை சொல்லி பயன் என்ன?
    நீதிமன்றத்தில் நிற்க வேண்டியவர், ஜாலியாக க்ரிக்கெட் பார்ப்பது, நம் தோல்வி என ஏன் நம்மவர்களுக்கு புரியவில்லை.?]]]

    பார்வை சரியான கேள்வி.

    நன்றி..!

    ReplyDelete
  49. உ.த. அண்ணை,

    மாற்றுப்பார்வையை வரவேற்கிறேன் :) அதுவும், கிரிக்கெட் வாரிய அவலங்கள் பற்றி எழுதியிருப்பது சரியே. அதற்காக, உலகக்கோப்பை ஒரு கேடா என்ற தலைப்புக்கு கண்டனம்! இந்த வெற்றியை எனக்குப் பிடித்த (சச்சின் என்னுன் ஜாம்பவான் விளையாடும்) ஒரு அணியின் திறமைக்கு கிடைத்த வெற்றியாக ஏன் பார்க்கக் கூடாது? ஸ்ரீலங்கா வெற்றி பெறுவதை, நீங்கள் சொல்லும் காரணங்களுக்காகவே, என்னாலும் பொறுத்துக் கொள்ள இயலாது.

    எ.அ.பாலா

    ReplyDelete
  50. [[[VJR said...

    நல்ல இடுகை. என்ன இருந்தாலும் மராட்டியக்காரனின் ரோசம் தமிழனுக்கு வராது. வந்தாரை வாழ வைக்கும் தமிழன், ஒரு போதும் ரோசப்படமாட்டான். முடிந்த உமது ரோசத்தையும் கருவருப்பான்.]]

    நம்முடைய தலைமையே கொலைகாரர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் இருக்கும்போது மக்களுக்கு ரோஷம் எப்படி வரும்..!?

    நாம் இப்படி நமது கருத்தை வெளிப்படுத்தி ஆற்றாமையை ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான்..!]]]

    ReplyDelete
  51. [[[வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

    அண்ணே! உலகத்தில் ஐ.நா. சபை அங்கீகாரம் பெற்ற சுமார் 250 நாடுகள் இருக்கின்றன. ஆனால் கிரிக்கெட் விளையாடுவதோ சுமார் 15 நாடுகள் மட்டும்தான். ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமையாக இருந்த நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகின்றன.

    கிரிக்கெட் என்பதே ஒரு அடிமைச் சின்னம். ஒரு அடிமைச் சின்னத்தை, அதன் உண்மை அறியாமல், நம்மில் பெரும்பாலானவர்கள் இயல்பாக ஏற்றுக் கொள்ளும்வகையில் அவர்களை மூளைச் சலவை செய்ததே நமது ஆட்சியாளர்களின் சாதனை!!

    நடப்பு உலகின் அவலங்களை மறக்க, மறைக்க இது ஒரு போதை வஸ்துவாக பயன்படுத்தப்படுகிறது.]]]

    அதேதான்.. இந்தக் கதை மக்களுக்குத் தெரிய வேண்டுமே..? புரிய மறுக்கிறதே..!? இதுலேயே பாருங்கள்.. எத்தனை மைனஸ் ஓட்டுக்கள்..!

    ReplyDelete
  52. [[[பா.ராஜாராம் said...

    // உங்களுக்கு சிங்கிமாங் சக்கோ மேனியான்னு ஒரு நோய் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்//

    இந்த நோய்க்கு இவ்வளவு பெரிய பெயர் போல குசும்பன் ஊர்ல. எங்கூர்ல லூசுன்னு சொல்லுவோம்.]]]

    ஹா.. ஹா.. ஹா.. அண்ணே நீங்களுமா..? கொஞ்சம் யோசிங்கண்ணே..!

    ReplyDelete
  53. [[[David said...

    RT @Kusumban உங்களுக்கு சிங்கிமாங் சக்கோ மேனியான்னு ஒரு நோய் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது வந்தா அப்படிதான் யாராவது சந்தோசமா ஜாலியா இருந்தா. சிரிக்கிறீயா நல்லா சிரி பூமா தேவி வாயை பொளக்கப் போறான்னு சொல்லுவது மாதிரி எதுனா பேசு வைக்கும் அந்த நோய்.]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  54. தி அயர்ன் மேன் ஸார்..

    எவன் செத்தாலும் கவலையில்லை. தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற தன்னலம்தான் மக்களிடத்தில் அதிகமாக உள்ளது..! அதன் ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த நண்பர்..!

    ReplyDelete
  55. [[[ஷர்புதீன் said...

    இந்த உலக கோப்பையை என்னுடைய ஹோட்டலில் (இருந்திருந்தால்) பெரிய ஸ்க்ரீன் வைத்து அதிலே குடிக்க king fisher குடிதண்ணீர் வைத்து காசு பார்த்திருப்பேன். இந்தியா ஜெய்க்க ஜெய்க்க எனக்குதான் காசு. உங்களுக்கும் அந்த மாதிரி ஏதேனும் ஐடியா வேணுமா சார்! உப்பு விக்க மழைக் காலத்தில் போகும் அறிவு அடியேனுக்கு கிடையாது சார்!]]]

    செய்யுங்க.. கடைசில உப்பு வாங்க ஆளை இல்லாமல் போகும் காலமும் வரும்.. அப்போது வெயில் காலத்தில்கூட உங்களது உப்பு விற்காது..!

    ReplyDelete
  56. [[[Thekkikattan|தெகா said...

    நீதிமன்றத்தில் நிற்க வேண்டியவர், ஜாலியாக க்ரிக்கெட் பார்ப்பது, நம் தோல்வி என ஏன் நம்மவர்களுக்கு புரியவில்லை... ?//

    இதுவேதான் எனது கேள்வியும். இதுவரையிலும் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த உலக மானுட ஒழுக்க நெறி, மாண்புகளை எல்லாம் இழந்து விட்டோம் என்ற வாக்கில் ஒரு மனிதன் இனப் படுகொலை நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் எல்லாம் நிகழ்த்தி விட்டு எப்படி இப்படி விசிலடித்துக் கொண்டு கேளிக்கை விளையாட்டுகளில் நல்லவனாக வலம் வர முடியும்?

    விளையாட்டை விளையாட்டாக பார் என்றால் அத்தனை உயிர்களின் விலை என்ன மயிரா? யார் நீதியை பெற்றுத் தருவது. இது போன்ற விளையாட்டுக்களிலிருந்து தனிமைபடுத்தி காட்டுவதிலிருந்து உலக சபையில் என்ன நடந்திருக்கிறது என்று நாம் யோசிக்க வைக்க வில்லையெனில் யார் யோசிக்க வைப்பார்கள்?

    தனிப் பதிவாக கொண்டு வருகிறேன். உ.தா. உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் மனநிலையை பெற முதிர்ச்சி வேண்டும். சமரசம் பண்ணிக்கொள்ளாத மனிதம் வேண்டும். புரியாதவர்களே இங்கே வேகப் படுவார்கள், ஜால்ஜாப்பு சொல்லிக் கொள்வார்கள். நன்றி!

    பதிவைப் புரிந்து கொண்டமைக்கு எனது நன்றி தெகா..!

    தனிப் பதிவைப் போடுங்கள். காத்திருக்கிறேன்..!

    ReplyDelete
  57. [[[Rafeek said...

    ஸாரி சரவணன் இந்த பருப்பு இங்கு வேகாது. நாலு பேரு ஒரு விஷயத்தை பாராட்டியோ சந்தோசப்பட்டோ பேசுனா அத எதிர்த்து பேசும் முந்திரி கொட்டைதனமே தங்கள் பதிவு!!
    நீங்கள் கூறியிருப்பது உண்மைதான். ஆனால் அது அரசியல். 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு நம் வீரர்கள் இத்துனை ஊழல்களுக்கு மத்தியில் வென்றிருப்பதுதான் சாதனை!! ஏன் இவ்வளவு. வக்கனையாக பதிவு போட்ட தாங்க்ள். இதை போன வாரம் போட்டு. விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கலாமே..உங்களுக்கே அத செய்ய தோணலயே..!!]]]

    "நம் வீரர்கள்" என்று நீங்கள் சொல்லியிருப்பதிலேயே உங்கள் நிலைப்பாடு புரிகிறது. இதற்கு மேல் நான் எது சொன்னாலும் உங்களுக்குப் புரியாது. விட்டுவிடுங்கள்..!

    ReplyDelete
  58. [[[gpmforever said...

    முற்றிலுமாய் வெறுக்கிறேன். உண்மை தமிழன் அவர்களே, எந்த விசயத்தையும் எதிர்த்து எழுதினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை உணர்ந்து, உலக கோப்பை கிரிக்கெட்டையும் எதிர்த்து எழுதி இருப்பதாய் உணர்கிறேன்.. அமைதியாக யோசித்து பாருங்கள். இந்தியாவில் நிலவும் கேடுகெட்ட அரசியலைவிட, கிரிக்கெட் பரவாயில்லைதான். நேற்று உலக அரங்கில் கிரிக்கெட்டினால் தேசம் தலை நிமிர்ந்தது மறுக்க முடியாத உண்மை. இந்த தருணத்தை கொண்டாடுவதை விட்டுவிட்டு குறை சொல்லாதீர்கள், அப்படி குறை சொல்வதென்றால் இந்தியாவில் நிறைய விஷயம் இருக்கிறது. தமிழகத்தின் கேடு கேட்ட அரசியலைவிட கிரிக்கெட் மோசமானது அல்ல. அரசியல்வாதிகள் நம்மை மதங்கள், சாதிகள் கூறி பிரித்தாளுகிறார்கள். கிரிக்கெட் அனைத்தையும் முறியடித்து நம்மை இணைக்கிறது. கிரிக்கெட் மட்டும் அல்ல. இந்திய சார்பில் நடை பெரும் அனைத்து விளையாட்டுக்களும்தான்..
    நெருப்பை உமிழாதீர்கள், எறிவது நம் ஒற்றுமைதான்.]]]

    "நம் ஒற்றுமை" என்று நீங்கள்தான் கூறுகிறார்கள்.. அவர்கள் சொல்லவில்லையே..? இல்லையெனில் ராஜபக்சே திருப்பதிக்கும், மும்பைக்கும் ராஜமரியாதையோடு வந்து சென்றிருக்க முடியுமா..?

    ReplyDelete
  59. [[[kama said...

    நான் உங்களது கருத்தில் முழுவதுமாக உடன்படுகிறேன். நீங்கள் மிக மட்டமாக பின்னூட்டம் இடுபவர்களை கவனத்தில் கொள்ளவேண்டாம். கூட்டிக் கொடுக்கும் காட்டிக் கொடுக்கும் களவாணிகள் உலகில் எங்கும் உண்டு. அதில் இந்தியாவும் ஒன்று.

    (ஈழ விஷயத்தில்...உ.ம். ராஜா ராஜேந்திரா.. கருணாநிதி)]]]

    நன்றி காமா.. ஈழ மக்களைக் கொன்றொழித்ததில் ராஜபக்சேவுக்கு இருக்கும் அதே பங்களிப்பு இந்திய அரசுக்கும் உண்டு.. தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இருவரும்தான்..!

    ReplyDelete
  60. [[[சேட்டைக்காரன் said...
    அண்ணே! பொதுவாக நான் யாருக்கும் மைனஸ் ஓட்டுப் போடுறதில்லை. இன்னிக்கு ரிப்பன் வெட்டி உங்க இடுகையிலே ஆரம்பிக்கிறேன்.]]]

    மிக்க நன்றி..!

    ReplyDelete
  61. [[[Ramesh said...

    Neenga sonna nalathelam nadanthuta matum neenga santhosama iruka porengala. athulayum kutram kandu pudichu polambitu thaan irupenga. Nalla velai neenga kalyanam panikala. adhu nollai ithu nollai nu solliye torture senchu irupenga. oru ponnu valkaiya neenga kaapathi irukenga..]]]

    அடப் பாவிகளா.. இப்படியெல்லாமாய்யா சிந்திப்பீங்க..? இதுக்குப் பின்னூட்டமே போடாம இருந்திருக்கலாம்..!

    ReplyDelete
  62. [[[Ramesh said...

    இதைத்தான் நானும் கொஸ்டீன் கேக்குறேன்.. இந்தியாவை இணைப்பதினால் தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்திருக்கிறது..?

    - Ippadiye seperate senchute poonga. tamilan. en jadhi. en kodumbam. naan. en kannu. athukula irukiya pupil nu. ennatha solrathu poonga.]]]

    அடிமையாக இருக்கிறோம் என்பதை உணராமலேயே இருப்பதைத்தான் சந்தோஷம் என்கிறீர்கள்..! அப்படியே இருங்கள்..!

    ReplyDelete
  63. [[[enRenRum-anbudan.BALA said...

    உ.த. அண்ணை, மாற்றுப் பார்வையை வரவேற்கிறேன்:) அதுவும், கிரிக்கெட் வாரிய அவலங்கள் பற்றி எழுதியிருப்பது சரியே. அதற்காக, உலகக் கோப்பை ஒரு கேடா என்ற தலைப்புக்கு கண்டனம்!

    இந்த வெற்றியை எனக்குப் பிடித்த (சச்சின் என்னுன் ஜாம்பவான் விளையாடும்) ஒரு அணியின் திறமைக்குக் கிடைத்த வெற்றியாக ஏன் பார்க்கக் கூடாது? ஸ்ரீலங்கா வெற்றி பெறுவதை, நீங்கள் சொல்லும் காரணங்களுக்காகவே, என்னாலும் பொறுத்துக் கொள்ள இயலாது.

    எ.அ.பாலா]]]

    ஏன் இந்த நேரத்தில் நாம் கிரிக்கெட்டை விரும்ப வேண்டும்..? இலங்கை அணியை இந்தியாவுக்குள் விளையாட விடக் கூடாது என்ற எண்ணம் தமிழர்களாகிய நமக்குள்தான் முதலில் எழுந்திருக்க வேண்டும். ஏன் அது நமக்கு எழவில்லை. இதற்கான பதிலிலேயே எனது பதிலும் அடங்கியிருக்கிறது..!

    ReplyDelete
  64. என்னுடைய பின்னூட்டம் விதண்டாவாதம் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு மேட்ச் நடக்கும் போதும் சத்தமில்லாமல் பார்த்தவர் நீங்கள் என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். உடனுக்குடனான உங்கள் ட்விட் கமெண்டுகள் அதற்கு சாட்சி

    இத்தனை வெறுப்பிருப்பவர் எதனால் அந்த போட்டிகளை உட்கார்ந்து பார்த்தீர்கள்? நக்கலும் நையாண்டியுமான பொழுதுபோக்கும் தொனியில்தான் உங்களின் ட்விட்டுகள் இருந்தன என்பது ஊரறிந்த ரகசியம்...

    பதிவில் மட்டும்தான் உங்களுக்கு இன உணர்வு பொங்குகிறது.

    மீண்டும் சொல்கிறேன், என்னுடைய முந்தைய பின்னூட்டம் விதண்டாவாதம்தான்ல்...

    உங்களுடைய பதிவு?

    ReplyDelete
  65. சிங்கள பன்றிகளை நேற்று தோற்கடித்ததுக்கு பெருமை படாவிட்டாலும் இப்படி மண்ணை வாரிதூற்றவேண்டாம், ராஜபக்சே என்னும் நாதாரியை திருப்பதியில் அனுமதித்ததை கண்டித்து போட்டிருந்தாலும் அர்த்தமாயிருக்கும்? அவன் எப்படி ஒவ்வொரு மூனு மாசத்துக்கும் வந்து ஊஞ்சல் சேவை செய்துட்டு போறான்? அதை விசாரிச்சு எழுதுங்க. ஜெய்ச்சதுக்கு பாராட்டாவிட்டாலும் திட்டாதீங்க. நேற்று ராஜபக்‌ஷே பன்னி முகத்தில் கரியப்பியதை பார்த்தீங்கல்ல?

    ReplyDelete
  66. அதே சிங்கள அணியில் ஒரு கைகாட்டியாக முரளிதரனும் இருக்கான், அவன் தமிழனாம்,அவனுக்கு சென்னையில் பெண் கொடுத்திருக்கோம்.அவமானம்

    ReplyDelete
  67. @ RAJENDRAN RAJA

    உண்மைத்தமிழன் ஒரு நல்ல மனிதர்.

    மொதல்ல பொதுவுல என்ன பேச வேண்டும் யார்கிட்ட எப்படி பேசவேண்டும்னு கத்துகிட்டு வாங்க

    உபயோகப்படுத்திய வார்தைகளுக்கு அட்லீஸ்ட் ஒரு மன்னிப்பாவது கேட்பது நீங்கள் மனிதர் என்பதை உணர்த்தும்.

    @உத
    என்ன கொடுமைண்ணே இது :((

    ReplyDelete
  68. //
    ஏன் இந்த நேரத்தில் நாம் கிரிக்கெட்டை விரும்ப வேண்டும்..? இலங்கை அணியை இந்தியாவுக்குள் விளையாட விடக் கூடாது என்ற எண்ணம் தமிழர்களாகிய நமக்குள்தான் முதலில் எழுந்திருக்க வேண்டும். ஏன் அது நமக்கு எழவில்லை. இதற்கான பதிலிலேயே எனது பதிலும் அடங்கியிருக்கிறது..!
    //

    இது மகா விதண்டாவாதம் !!! இலங்கையை (இந்த ஆட்டத்தை) இந்தியாவுக்குள் ஆடவிடாமல் செய்வது முடியாத விஷயம். அதே சமயம், தென்னாப்பிரிக்காவை நிறவெறிக்காக ஒரு காலத்தில் ஒதுக்கி வைத்தது போல, இலங்கை மீதும் ICC நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட வேண்டும் என்று ஒரு டிவிட்டில் சொல்லியிருந்தேன். ஆனால், BCCI யின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதால், அது சாத்தியமில்லாத ஒன்றும் கூட. இந்த யதார்த்த சூழலில், இலங்கை அணி தோற்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூட (இந்த விஷயத்தில்) ஒரு சரியான நிலைப்பாடு தான்! ஆக, நீங்கள் சொல்வது மட்டுமே சரியான தீர்வு என்று விரைப்பாக நிற்காதீர்கள் :)

    ReplyDelete
  69. சகோ.உண்மைத்தமிழன்,

    மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய நல்ல கருத்துக்கள்தான்...!

    ஆனால், கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் யாருமே அப்படி செய்வதில்லை. அதுதான் பரிதாபம்.

    பிரபல பதிவர்கள் எல்லாருமே, கிரிக்கெட் விஷயத்தில் மட்டும் நல்ல பதிவு எழுதிவிட்டு...

    அதற்கு தவறான தலைப்பிட்டு வாங்கிக்கட்டிக்கொள்வதையே தொடர்கதையாக வைத்திருக்கிறீர்கள்.

    நல்லபதிவு. தவறான தலைப்பு.

    நல்ல கிரிக்கெட்டையும் அது விழுந்து கிடக்கும் அசிங்கமான இடத்தையும் பிரித்தறியவேண்டியது அவசியம்.

    மக்களுக்கு கிரிக்கெட் பிடிக்கிறது. அதனை சுற்றி இருக்கும் சாக்கடை யாருக்குமே பிடிக்கவில்லை.

    உங்கள் பதிவை தவறாக புரிந்துகொள்ளவே வழிவகுக்கிறது...

    "பாகிஸ்தானை வெற்றி பெற வாழ்த்துவோம்" மாதிரியே...!

    ReplyDelete
  70. ஆரம்பிச்சிட்டீங்களாய்ய்யா...நாட்டுல ஒரு பய சந்தோசமா இருக்ககூடாதே...பொறுக்காதே...

    ReplyDelete
  71. நான் நினைத்ததை எழுதிவிட்டீர்கள், நன்றி.

    நம் மக்களுக்கு கிரிக்கெட் மட்டும் தான் தெரியும் என்பதை மறக்க வேண்டாம். கிரிக்கெட் வெற்றிக்காக தங்கள் குடும்பத்தில் சாவு விழுந்தால் கூட கவலைப்படமாட்டார்கள். கென்யா கூட வெற்றி பெற்றாலே 1 மாசம் அதை பற்றியே பேசற ஆளுங்க, அந்தளவு கிரிக்கெட் மூலம் தேசபக்தி பரப்புபவர்கள்.

    ReplyDelete
  72. நீங்கள் எழுதி இருக்கும் பல விதயங்களை ஒத்துக் கொள்ள முடிகிறது..

    கிரிக்கெட் அசுரத்தனமாகப் பரவி மற்ற விளையாட்டுகளை அழிக்கிறது என்பது சரி..

    ராட்ஷசன் ஒருவன் அங்கு அமர்ந்து பாரத்துக் கொண்டிருந்ததையும் சகிக்க இயலவில்லை..

    சரத்பவாருக்கு இதைவிட முக்கியமான வேலைகள் பல இருக்கும் போது கோப்பையை நகர்த்தக் கூட முடியாமல் பாம்பாய்க்கு வந்து முக்க வேண்டிய அவசியமில்லை..

    ஆனாலும்...

    ஆனாலும் நம்ம பசங்க ஜெயித்திருக்கிறார்கள்..கொஞ்சம் சந்தோஷிப்பதில் தப்பில்லை உ.த.

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. நல்லாச் சொன்னீங்க. கிரிக்கெட்டும், திருப்பதியும் ரொம்பவே வெறுப்பாயிருக்கு. ஏன் இப்படி என்று யாரை நோக.

    இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவரின் அண்மைய கூற்றுப்படி வடக்கில் தமிழ் சிறுவர்கள் முப்பது வருட வாழ்க்கையை இழந்து விட்டார்களாம். அதை இவர்கள் கிரிக்கெட் மட்டையையும், பந்தையும் கொடுத்து நிவர்த்தி செய்யப்போகிறார்களாம். அதைப் படித்ததிலிருந்து பதிவெழுதுவதற்கு கூட எரிச்சலாயிருக்கு.

    ReplyDelete
  77. ஒரு கட்டுல எத்தன கார்டு இருக்குன்னு உனக்கு தெரியுமாடா?
    "அது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க வரேன்"

    ReplyDelete
  78. ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் !

    அங்கு ஒரு கும்பல் நுழைந்து கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது.கையில் அகப்பட்ட பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.அதை ஒரு பெரிய கும்பல் வெறுமனே நின்றவாறு வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கிறது.
    அப்பொழுது திடீரென ஒரு 5 வயது சிறுவன் அங்கு வருகிறான்.அவன் முகம் பசியினால் வாடியிருக்கிறது.எல்லோரும் உணவுப்பொருட்களை கொள்ளை அடித்து செல்வதை அவன் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.ஒரு பழக்கூடையை எடுத்துக்கொண்டு ஓடி வரும் ஒரு திருடன் இந்த சிறுவனைப்பார்க்கிறான்.அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தன கையில் இருந்த பழக்கூடையிலிருந்து சில பழங்களை எடுத்து அந்த சிறுவனிடம் கொடுக்கிறான்.சிறுவன் முகத்தில் மகிழ்ச்சி.சுற்றியிருந்த பொதுமக்களும் கைதட்டி இந்த திருடனை பாராட்டுகிறார்கள்.அப்பொழுது அந்த கூட்டத்திலிருந்து ஒரு "உண்மையானவன்" வெளிவந்து அந்த கூட்டத்தினரை கடிந்து கொள்கிறான்.
    cut
    இதுதாங்க இப்போ எடுக்கற சீன்!

    இந்த உவமை கொஞ்சம் புதுமை
    இன்னும் உனக்கேன் புரியவில்லை?
    வேறென்ன சொல்வேன் தெரியவில்லை?

    ReplyDelete
  79. அண்ணே : இவ்வளவு நாளா கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் தில்லுமுல்லுகள் உங்களுக்கு தெரியவில்லயா???

    திடீர்ன்னு ஏன் இப்ப பொங்குறீங்க???

    ReplyDelete
  80. அண்ணே! பொதுவாக நான் யாருக்கும் மைனஸ் ஓட்டுப் போடுறதில்லை. இன்னிக்கு உங்க இடுகையிலே ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete
  81. சூதாட்டம், கேம் ஃபிக்ஸிங், அதிலும் வர்ணாசிரம் தர்மம், பணத்துக்கேற்ப தேச பக்தியை அதிகரிப்பதும், குறைப்பதுமாய், முழு நாள், முழு வருடம், முழு வயது வரையிலும் வேர்வை சிந்தி, மூச்சு முட்டி, தான் விதைத்த உணவை தானே சாப்பிடக் கூட கொடுத்து வைக்காமல் தினம் தினம் சாவும் விவசாயிகளுக்கு மத்தியில் மேலை நாட்டு மக்களுக்கு கொஞ்சமும் குறைவிலாமல் வாழ்க்கை வாழும் இவர்களின் கொள்கையில்லா விளையாட்டுக்களுக்கு இவ்வளவு சப்போர்ட் என்றால், அட் த லீஸ்ட் இப்படியாவது எதிர்ப்பைக் காட்டிய உங்களின் பதிவை வரவேற்கிறேன் அண்ணா.

    ReplyDelete
  82. //நானும் மிகச் சமீபம் காலம்வரையிலும் நல்ல இந்தியனாகத்தான் இருந்து வந்தேன். சில, பல உண்மைகளை நேரில் அறியும்வரையிலும்.. படித்தறியும்வரையிலும் உண்மையான தேச பக்தனாகத்தான் இருந்து தொலைந்தேன்.. ஆனால் இப்போது இந்தியன் என்கிற அடையாளத்தை வெறுத்து ரொம்ப நாளாச்சு..//


    இந்திய அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், இந்தியன் என்ற உணர்வு உனக்கு ஏன் போக வேண்டும்? அப்படி போன பிறகும் உம்மை யார் இங்கு இருக்கச்சொல்வது?

    ReplyDelete
  83. உலக நாடுகள் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவை தங்கள் நாடுகளில் அனுமதிக்கவே தயங்குகிற நிலையில், இந்தியா அவனுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து மதியாதை அளிப்பது வெட்கக்கேடு.

    உலகக்கோப்பை கிரிக்கெட்டால் உண்மையில் வெற்றியடைந்தது சிங்கள இனவெறியர்களே!

    ReplyDelete
  84. //செய்யுங்க.. கடைசில உப்பு வாங்க ஆளை இல்லாமல் போகும் காலமும் வரும்.. அப்போது வெயில் காலத்தில்கூட உங்களது உப்பு விற்காது..!//


    நீங்க சொல்லவதை மறுக்கவில்லை, நாமும் சேர்ந்து கொள்ளை அடிப்போம் என்பதையும் வெறுக்கிறேன்., ஆனால் நல்லவன் என்பதை விட, காசுள்ளவன் என்பதையே முக்கியமாக இப்பொழுது உணர்கிறேன்., வருங்காலம் எனபது எனது அடுத்த இருபது வருடத்தையும் சேர்த்துதான்., எனது பிள்ளைக்கு முக்கியம் என்று சேர்த்து வைப்பது ( இயற்கையையும் சேர்த்துதான்) எவ்வளவு முக்கியமோ, அதை விட நான் (னும்) வாழ்வது முக்கியம், என் பொழப்பா , ஏன் பிள்ளை பொழப்ப என்றால், முதலில் நான்தான் எனக்கு முக்கியம்.

    ReplyDelete
  85. [[[மு.சரவணக்குமார் said...

    என்னுடைய பின்னூட்டம் விதண்டாவாதம் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு மேட்ச் நடக்கும் போதும் சத்தமில்லாமல் பார்த்தவர் நீங்கள் என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். உடனுக்குடனான உங்கள் ட்விட் கமெண்டுகள் அதற்கு சாட்சி

    இத்தனை வெறுப்பிருப்பவர் எதனால் அந்த போட்டிகளை உட்கார்ந்து பார்த்தீர்கள்? நக்கலும் நையாண்டியுமான பொழுது போக்கும் தொனியில்தான் உங்களின் ட்விட்டுகள் இருந்தன என்பது ஊரறிந்த ரகசியம்...]]]

    போட்டிகள் நடந்தபோது பால் பை பால் நேரடி வர்ணனையைச் சிலர் செய்து கொண்டிருந்தார்கள். அதற்காகத்தான் நானும் அவர்களைப் போல அதற்கு எதிரான எனது கருத்துக்களையும் பதிவு செய்து வந்தேன்..! இதிலென்ன தவறு..?

    ReplyDelete
  86. [[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

    சிங்கள பன்றிகளை நேற்று தோற்கடித்ததுக்கு பெருமைபடாவிட்டாலும் இப்படி மண்ணை வாரி தூற்ற வேண்டாம், ராஜபக்சே என்னும் நாதாரியை திருப்பதியில் அனுமதித்ததை கண்டித்து போட்டிருந்தாலும் அர்த்தமாயிருக்கும்? அவன் எப்படி ஒவ்வொரு மூனு மாசத்துக்கும் வந்து ஊஞ்சல் சேவை செய்துட்டு போறான்? அதை விசாரிச்சு எழுதுங்க. ஜெய்ச்சதுக்கு பாராட்டாவிட்டாலும் திட்டாதீங்க. நேற்று ராஜபக்‌ஷே பன்னி முகத்தில் கரியப்பியதை பார்த்தீங்கல்ல?]]]

    ராஜபக்சே என்பவர் தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமைகளுக்கு இந்நேரம் சிறையில் இருக்க வேண்டியவர். நமது இந்திய ஏகாதிபத்தியம் அவரைத் தாங்கிப் பிடிப்பதால்தான் இன்றைக்கும் அரசுப் பாதுகாப்பில் இந்தியா வந்து போய்க் கொண்டிருக்கிறார்..!

    இதற்கும் சேர்த்துத்தான் இந்திய ஏகாதிபத்தியத்தைக் கண்டித்திருக்கிறேன்..!

    ReplyDelete
  87. [[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

    அதே சிங்கள அணியில் ஒரு கைகாட்டியாக முரளிதரனும் இருக்கான், அவன் தமிழனாம், அவனுக்கு சென்னையில் பெண் கொடுத்திருக்கோம். அவமானம்]]]

    முரளிதரன் உண்மையான தமிழராக இருந்திருந்தால் இந்நேரம் இது பற்றி யோசித்திருப்பார். இல்லை என்னும்போது அவரை தமிழர் என்ற கேட்டகிரியில் நாம் ஏன் அழைக்க வேண்டும்..?

    ReplyDelete
  88. [[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    @உத
    என்ன கொடுமைண்ணே இது :((]]]

    மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறேன்.. இருக்கக் கூடாது என்று நாம் சொல்ல முடியாது.. ஆனால் கொஞ்சம் நாகரிகத்துடன் வந்தால் நல்லது..!

    ReplyDelete
  89. [[[enRenRum-anbudan.BALA said...

    //ஏன் இந்த நேரத்தில் நாம் கிரிக்கெட்டை விரும்ப வேண்டும்..? இலங்கை அணியை இந்தியாவுக்குள் விளையாட விடக் கூடாது என்ற எண்ணம் தமிழர்களாகிய நமக்குள்தான் முதலில் எழுந்திருக்க வேண்டும். ஏன் அது நமக்கு எழவில்லை. இதற்கான பதிலிலேயே எனது பதிலும் அடங்கியிருக்கிறது!//

    இது மகா விதண்டாவாதம் !!! இலங்கையை (இந்த ஆட்டத்தை) இந்தியாவுக்குள் ஆடவிடாமல் செய்வது முடியாத விஷயம். அதே சமயம், தென்னாப்பிரிக்காவை நிறவெறிக்காக ஒரு காலத்தில் ஒதுக்கி வைத்தது போல, இலங்கை மீதும் ICC நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட வேண்டும் என்று ஒரு டிவிட்டில் சொல்லியிருந்தேன். ஆனால், BCCI யின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதால், அது சாத்தியமில்லாத ஒன்றும்கூட. இந்த யதார்த்த சூழலில், இலங்கை அணி தோற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்கூட (இந்த விஷயத்தில்) ஒரு சரியான நிலைப்பாடு தான்! ஆக, நீங்கள் சொல்வது மட்டுமே சரியான தீர்வு என்று விரைப்பாக நிற்காதீர்கள் :)]]]

    இலங்கையுடன் இந்திய அணியை விளையாட அனுமதித்த குற்றத்திற்கு நாம் பிசிசிஐயும் தண்டிக்க வேண்டும். கண்டிக்க வேண்டும். அவர்களுக்கு இதுதான் இந்திய தேசியம் என்றால், நமக்கு எதற்கு அந்தத் தேசியம்..?

    ReplyDelete
  90. [[[முஹம்மத் ஆஷிக் said...

    சகோ.உண்மைத்தமிழன்,
    மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய நல்ல கருத்துக்கள்தான்...!
    ஆனால், கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் யாருமே அப்படி செய்வதில்லை. அதுதான் பரிதாபம்.
    பிரபல பதிவர்கள் எல்லாருமே, கிரிக்கெட் விஷயத்தில் மட்டும் நல்ல பதிவு எழுதிவிட்டு அதற்கு தவறான தலைப்பிட்டு வாங்கிக் கட்டிக் கொள்வதையே தொடர்கதையாக வைத்திருக்கிறீர்கள்.
    நல்ல பதிவு. தவறான தலைப்பு.
    நல்ல கிரிக்கெட்டையும் அது விழுந்து கிடக்கும் அசிங்கமான இடத்தையும் பிரித்தறிய வேண்டியது அவசியம்.
    மக்களுக்கு கிரிக்கெட் பிடிக்கிறது. அதனை சுற்றி இருக்கும் சாக்கடை யாருக்குமே பிடிக்கவில்லை.
    உங்கள் பதிவை தவறாக புரிந்து கொள்ளவே வழி வகுக்கிறது.
    "பாகிஸ்தானை வெற்றி பெற வாழ்த்துவோம்" மாதிரியே...!]]]

    உங்களுடைய கருத்திற்கு நன்றி சகோதரரரே..

    கிரிக்கெட்டே சாக்கடையாகிவிட்டது என்பதை இந்த அப்பாவி ரசிகர்கள் எப்போது உணரப் போகிறார்கள்..!

    ReplyDelete
  91. [[[அவிய்ங்க ராசா said...
    ஆரம்பிச்சிட்டீங்களாய்ய்யா...நாட்டுல ஒரு பய சந்தோசமா இருக்ககூடாதே. பொறுக்காதே...]]]

    நமது வீட்டில் இருக்கும் சோகத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமே ராசா..?

    ReplyDelete
  92. [[[குறும்பன் said...
    நான் நினைத்ததை எழுதி விட்டீர்கள், நன்றி. நம் மக்களுக்கு கிரிக்கெட் மட்டும்தான் தெரியும் என்பதை மறக்க வேண்டாம். கிரிக்கெட் வெற்றிக்காக தங்கள் குடும்பத்தில் சாவு விழுந்தால்கூட கவலைப்பட மாட்டார்கள். கென்யா கூட வெற்றி பெற்றாலே 1 மாசம் அதை பற்றியே பேசற ஆளுங்க, அந்தளவு கிரிக்கெட் மூலம் தேச பக்தி பரப்புபவர்கள்.]]]

    அந்தத் தேச பக்தி உண்மையானதாக இருக்க வேண்டாமா..? மாநிலத்துக்கு, மாநிலம் ஒரு தேச பக்தியை வைத்துக் கொண்டு பிறகெதற்கு இந்திய தேசியத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்..?

    ReplyDelete
  93. [[[அறிவன்#11802717200764379909 said...

    ஆனாலும்... ஆனாலும் நம்ம பசங்க ஜெயித்திருக்கிறார்கள். கொஞ்சம் சந்தோஷிப்பதில் தப்பில்லை உ.த.]]]

    இவர்கள் இந்திய நாட்டின் பிரதிநிதிகள் இல்லை. பணத்தைக் குறி வைத்து இந்த நாட்டை சுரண்டிக் கொண்டிருக்கும் சில பணக்கார முதலைகளின் கம்பெனி வீரர்கள்..!

    ReplyDelete
  94. அண்ணே உங்க அனுமதியோட ஒரு விளம்பரம் பண்ணிக்கிறேன்!

    :))

    உண்மைத்தமிழனின் உளறல்கள்!!

    http://palaapattarai.blogspot.com/2011/04/blog-post.html

    ReplyDelete
  95. என்னோடு கருத்தினை நீங்க திருடிவிட்டீர்கள். :) அந்த அளவுக்கு ஒற்றுமை. நீங்கள் எழுதிய 90% சதவித கருத்துக்கள் கடந்த இரண்டுவாரமாக என் நண்பர்களிடம் நான் புலம்பிக்கொண்டிருந்தேன்.

    ReplyDelete
  96. இந்திய மக்கள் கிரிக்கெட்டை வெகுவாக ரசிக்கிறார்கள். அது திணிக்கப்பட்டதோ அல்லது எப்படியோ! ஆனால் மக்கள் ரசிக்கிறார்கள். அதன் வருமானம், அதனால் பலனடைவோரைப் பற்றி யாரும் இங்கு கவலைப்படுவதில்லை. அதற்கான அவசியமும் இங்கு யாருக்கும் இல்லை. அது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது.

    உதாரணமாக, எங்கள் ஊரில் பொழுதுபோக்குவதற்கென்று எவ்வித சிறப்பு வசதிகளும் கிடையாது. ஆறு, கடல், பார்க், ஷாப்பிங் மால்கள், நல்ல தியேட்டர்கள், கலை சார்ந்த வளர்ச்சிகள் என்று எதுவுமே கிடையாது. மக்கள் அனைவருக்கும் டிவியை விட்டால் வேறு கதியில்லாதபோது அதில் கவனிக்கப்படத்தக்கதாய் கிரிக்கெட்டைத் தவிர வேறொன்றுமில்லை.

    எனக்குத் தெரிந்து பெரும்பான்மையான நம் ஜனங்களுக்கு கிரிக்கெட்டில் இந்தியா அணி வென்றுவிட்டால் தாங்களே வென்றுவிட்டதைப் போன்றதொரு உணர்வு. அதைத் தவறென்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    ஐ.பி.எல். முழுமையான வியாபாரத்தனம் நிறைந்த ஒன்று! ஆனால் இந்தியா அணியை அவ்வாறு சொல்ல இயலாது.

    இங்கு டெண்டுல்கரைப் பார்த்து யாரும் பெப்சி குடிப்பதில்லை. தோனியைப் பார்த்து யாரும் ஏர்செல்லுக்கு மாறுவதில்லை.

    பரந்துபட்ட இந்த தேச மக்களை இன்று அரசியலோ, கலைகளோ, சினிமாக்களோ ஒன்றிணைப்பதில்லை. விளையாட்டுதான் இணைக்கிறது. அது இருந்துவிட்டுப் போகட்டுமே!!

    ReplyDelete
  97. AALUNGA said...

    ஏன்யா... உனக்கு தேச பக்தியே கிடையாதுங்குற!! அப்புறம் எதுக்குயா உனக்கு இந்த நாட்டு அரசாங்கம் குடுக்குற VAO வேல?]]]

    அடேங்கப்பா.. எவ்ளோவ் புத்திசாலித்தனமான கேள்வி..? பின்ன நான் போய் அமெரிக்காக்காரன்கிட்டயே கேக்க முடியும்..? எந்த நாட்ல குடியிருக்கனோ அங்கதான் கேட்டுத் தொலையணும்..!

    [[[தேச பக்தியே இல்லாத உன்னயெல்லாம் வேலைக்கு வச்சா இந்த நாடு உருப்பட்டுறுமா? போயா.]]]

    ஆமாமாம்.. காசு, காசுன்னு கிரிக்கெட்ல அத்தனையிலும் காசு பார்த்து நம்மிடமிருந்து சுரண்டியெடுக்கும் கொள்ளைக்காரர்களைவிட எனக்கு தேச பக்தி குறைவுதான்..!

    ReplyDelete
  98. [[[AALUNGA said...

    என்னது இலங்கைய விளையாட விட்டது தப்பா?

    யோவ்... அங்க இருந்து எத்தனை பேர் இங்க வியாபாரம் செய்ய வராங்க.. முதல்ல அதை நிறுத்துங்க.]]

    இதையும்தான் சொல்லிக்கிட்டிருக்கோம். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறோம்..!

    [[[இலங்கைக்கு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தைத் தடை பண்ணுங்க பார்ப்போம்..]]]

    இதையும் கேட்டிருக்கோம். செய்ய வேண்டியது நீங்கதான்..

    [[[விளையாட வந்தவன் வர கூடாதாம். சரி தெரியாமதான் கேக்குறேன். அந்த ராஜபக்சே கோவிலுக்குத்தானே போனார்? கூட்டத்தை எதுவும் கூட்டலியே?
    ஒரு மனிதன் கோவிலுக்கு வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்வது மிகவும் கேவலம்..
    இதை முருகன் கூட மன்னிக்க மாட்டார்!!]]]

    அவர் மனிதர்தான் என்றாலும், தற்போது பல லட்சம் மனிதர்களைக் கொன்ற கொலைக் குற்றவாளி..! ஒருத்தனை கொலை செஞ்சாலே உள்ள தூக்கி போடுறீங்க.. இவருக்கு மட்டும் எதுக்கு ராஜ மரியாதை..?

    [[[இவ்வளவு எழுதுற உங்ககிட்ட ஒரு கேள்வி.. ஈழத் தமிழன் அங்க அவ்வளவு கஷ்டப்படும்போது, உங்களுக்கு இந்த blog ஒரு கேடா?]]]

    நியாயம்தான்.. இன்னும் ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாம். ஏண்டா நீ இன்னும் உசிரோட இருக்க..? அவங்களோடவே செத்துப் போயிருக்கலாமே என்று..!

    வந்துட்டானுகப்பா நியாயம் பேச..!

    ReplyDelete
  99. [[[AALUNGA said...

    //விளையாட்டை விளையாட்டாக பார் என்றால் அத்தனை உயிர்களின் விலை என்ன மயிரா? யார் நீதியை பெற்றுத் தருவது. இது போன்ற விளையாட்டுக்களிலிருந்து தனிமை படுத்தி காட்டுவதிலிருந்து உலக சபையில் என்ன நடந்திருக்கிறது என்று நாம் யோசிக்க வைக்க வில்லையெனில் யார் யோசிக்க வைப்பார்கள்?//

    ஏங்க அப்ப வர்த்தகத்தையும் இன்ன பிற உறவுகளையும் தடை பண்ணுங்க. எதுக்கு விளையாட்டுல மட்டும் தனிமையா நிக்குறீங்க?]]]

    இதையும்தான் நாங்க செய்யச் சொல்றோம்.. இந்திய ஏகாதிபத்தியம்தான் செய்யவில்லை..!

    ReplyDelete
  100. [[[Rathi said...

    நல்லாச் சொன்னீங்க. கிரிக்கெட்டும், திருப்பதியும் ரொம்பவே வெறுப்பாயிருக்கு. ஏன் இப்படி என்று யாரை நோக.

    இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவரின் அண்மைய கூற்றுப்படி வடக்கில் தமிழ் சிறுவர்கள் முப்பது வருட வாழ்க்கையை இழந்து விட்டார்களாம். அதை இவர்கள் கிரிக்கெட் மட்டையையும், பந்தையும் கொடுத்து நிவர்த்தி செய்யப் போகிறார்களாம். அதைப் படித்ததிலிருந்து பதிவெழுதுவதற்குக்கூட எரிச்சலாயிருக்கு.]]]

    அவரவர்க்குத் தெரிந்ததைத்தானே சொல்வார்கள்..? அவர்கள் மனிதர்களாக இருந்திருந்தால் இது போன்ற யோசனையே வந்திருக்காதே..?

    ReplyDelete
  101. [[[nandu said...

    ஒரு கட்டுல எத்தன கார்டு இருக்குன்னு உனக்கு தெரியுமாடா?

    "அது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க வரேன்"]]]

    எனக்கும் தெரியாது நண்டு..!

    ReplyDelete
  102. [[[Ganpat said...

    ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் !

    அங்கு ஒரு கும்பல் நுழைந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது.கையில் அகப்பட்ட பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.அதை ஒரு பெரிய கும்பல் வெறுமனே நின்றவாறு வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கிறது. அப்பொழுது திடீரென ஒரு 5 வயது சிறுவன் அங்கு வருகிறான். அவன் முகம் பசியினால் வாடியிருக்கிறது. எல்லோரும் உணவுப் பொருட்களை கொள்ளை அடித்து செல்வதை அவன் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு பழக் கூடையை எடுத்துக் கொண்டு ஓடி வரும் ஒரு திருடன் இந்த சிறுவனைப் பார்க்கிறான். அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தன கையில் இருந்த பழக்கூடையிலிருந்து சில பழங்களை எடுத்து அந்த சிறுவனிடம் கொடுக்கிறான். சிறுவன் முகத்தில் மகிழ்ச்சி. சுற்றியிருந்த பொதுமக்களும் கைதட்டி இந்த திருடனை பாராட்டுகிறார்கள். அப்பொழுது அந்த கூட்டத்திலிருந்து ஒரு "உண்மையானவன்" வெளிவந்து அந்த கூட்டத்தினரை கடிந்து கொள்கிறான்.
    cut
    இதுதாங்க இப்போ எடுக்கற சீன்!
    இந்த உவமை கொஞ்சம் புதுமை.
    இன்னும் உனக்கேன் புரியவில்லை? வேறென்ன சொல்வேன் தெரியவில்லை?]]]

    எனக்குப் புரிந்தது.. நன்றி கண்பத்..!

    ReplyDelete
  103. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    அண்ணே : இவ்வளவு நாளா கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் தில்லுமுல்லுகள் உங்களுக்கு தெரியவில்லயா???
    திடீர்ன்னு ஏன் இப்ப பொங்குறீங்க???]]]

    தெரியும்.. எதையும் எழுதுவதற்கு மிகச் சரியான நேரமும் கிடைக்க வேண்டுமல்லவா..?

    ReplyDelete
  104. [[[மரா said...

    அண்ணே! பொதுவாக நான் யாருக்கும் மைனஸ் ஓட்டுப் போடுறதில்லை. இன்னிக்கு உங்க இடுகையிலே ஆரம்பிக்கிறேன்.]]]

    அப்படீன்னா நானும் உன்னை என் குட்புக்கில் இருந்து மைனஸ் பண்ணிர்றேன்..!

    ReplyDelete
  105. [[[அன்னு said...

    சூதாட்டம், கேம் ஃபிக்ஸிங், அதிலும் வர்ணாசிரம் தர்மம், பணத்துக்கேற்ப தேச பக்தியை அதிகரிப்பதும், குறைப்பதுமாய், முழு நாள், முழு வருடம், முழு வயது வரையிலும் வேர்வை சிந்தி, மூச்சு முட்டி, தான் விதைத்த உணவை தானே சாப்பிடக் கூட கொடுத்து வைக்காமல் தினம் தினம் சாவும் விவசாயிகளுக்கு மத்தியில் மேலை நாட்டு மக்களுக்கு கொஞ்சமும் குறைவிலாமல் வாழ்க்கை வாழும் இவர்களின் கொள்கையில்லா விளையாட்டுக்களுக்கு இவ்வளவு சப்போர்ட் என்றால், அட் த லீஸ்ட் இப்படியாவது எதிர்ப்பைக் காட்டிய உங்களின் பதிவை வரவேற்கிறேன் அண்ணா.]]]

    நன்றி பிரதர்..!

    ReplyDelete
  106. [[[Ram said...

    //நானும் மிகச் சமீபம் காலம்வரையிலும் நல்ல இந்தியனாகத்தான் இருந்து வந்தேன். சில, பல உண்மைகளை நேரில் அறியும்வரையிலும்.. படித்தறியும்வரையிலும் உண்மையான தேச பக்தனாகத்தான் இருந்து தொலைந்தேன்.. ஆனால் இப்போது இந்தியன் என்கிற அடையாளத்தை வெறுத்து ரொம்ப நாளாச்சு..//

    இந்திய அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், இந்தியன் என்ற உணர்வு உனக்கு ஏன் போக வேண்டும்? அப்படி போன பிறகும் உம்மை யார் இங்கு இருக்கச் சொல்வது?]]]

    வேறு எங்கே போவது.. நான் பிறந்த மண் இதுதானே..?

    ReplyDelete
  107. [[[seeprabagaran said...

    உலக நாடுகள் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவை தங்கள் நாடுகளில் அனுமதிக்கவே தயங்குகிற நிலையில், இந்தியா அவனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து மதியாதை அளிப்பது வெட்கக்கேடு.]]]

    இதுதான் இந்திய தேசியம்.. இந்திய ஏகாதிபத்தியம்.. இந்திய பக்தி..! இவர்களுக்குத் தமிழர்கள் என்பவர்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதை மீண்டும், மீண்டும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்கள்..!

    ReplyDelete
  108. [[[ஷர்புதீன் said...

    //செய்யுங்க.. கடைசில உப்பு வாங்க ஆளை இல்லாமல் போகும் காலமும் வரும்.. அப்போது வெயில் காலத்தில்கூட உங்களது உப்பு விற்காது..!//

    நீங்க சொல்லவதை மறுக்கவில்லை, நாமும் சேர்ந்து கொள்ளை அடிப்போம் என்பதையும் வெறுக்கிறேன். ஆனால் நல்லவன் என்பதைவிட, காசுள்ளவன் என்பதையே முக்கியமாக இப்பொழுது உணர்கிறேன். வருங்காலம் எனபது எனது அடுத்த இருபது வருடத்தையும் சேர்த்துதான். எனது பிள்ளைக்கு முக்கியம் என்று சேர்த்து வைப்பது (இயற்கையையும் சேர்த்துதான்) எவ்வளவு முக்கியமோ, அதைவிட நான்(னும்) வாழ்வது முக்கியம், என் பொழப்பா, ஏன் பிள்ளை பொழப்ப என்றால், முதலில் நான்தான் எனக்கு முக்கியம்.]]]

    இதுதான் முக்கால்வாசி பேரின் எண்ணம்.. இதிலிருந்து அவர்களை மாற்றத்தான் இப்போது போராடிக் கொண்டிருக்கிறோம்..!

    ReplyDelete
  109. [[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    அண்ணே உங்க அனுமதியோட ஒரு விளம்பரம் பண்ணிக்கிறேன்!:))

    உண்மைத்தமிழனின் உளறல்கள்!!

    http://palaapattarai.blogspot.com/2011/04/blog-post.html]]]

    அடப்பாவி.. நீயுமா..? நல்லாயிருப்பா.. நல்லாயிரு..!

    ReplyDelete
  110. [[[பல்பம் said...

    என்னோடு கருத்தினை நீங்க திருடி விட்டீர்கள். :) அந்த அளவுக்கு ஒற்றுமை. நீங்கள் எழுதிய 90% சதவித கருத்துக்கள் கடந்த இரண்டு வாரமாக என் நண்பர்களிடம் நான் புலம்பிக் கொண்டிருந்தேன்.]]]

    ஒருமித்தக் கருத்துக் கொண்டமைக்காக எனது வாழத்துகளும் நன்றிகளும்..!

    ReplyDelete
  111. [[[ரிஷி said...

    பரந்துபட்ட இந்த தேச மக்களை இன்று அரசியலோ, கலைகளோ, சினிமாக்களோ ஒன்றிணைப்பதில்லை. விளையாட்டுதான் இணைக்கிறது. அது இருந்துவிட்டுப் போகட்டுமே!!]]]

    தமிழர்களை மனிதர்களாகவே மதிக்காத இந்த இந்திய தேசியம் நமக்குத் தேவையா..?

    ReplyDelete
  112. எனக்கென்னவோ நீங்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புபவாரகவே தெரிகிறீர்கள்.

    திறந்த மனதுடன் விவாதிப்பவர்களிடம் தர்க்கம் பேசலாம். உங்களிடம் அது சிரமம்

    ReplyDelete
  113. //[[[நெகட்டிவா ஓட்டு வந்து விழுந்துச்சுன்னா நான் பொறுப்பில்லை:)]]]

    அதான் வந்து குவிஞ்சிருக்கே..! உங்களுடைய ஓட்டுக்கும் எனது நன்றி..!//

    மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்க மறுபடியும் வந்தேன்:)

    நான் யாருக்கும் மைனஸ் போடுவதேயில்லை.அதுவும் உங்களுக்குப் போடுவேனா?

    ReplyDelete
  114. 1. Very true.
    2. Sports has got nothing to do with National pride.
    3. Nation's pride reflects in Human Development Index and Human Rights.
    4. Cricket is a professional sports - everyone involved makes money. So be it. But don't mix it with Patriotism.

    ReplyDelete
  115. //உண்மைத்தமிழன் said...

    [[[seeprabagaran said...

    உலக நாடுகள் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவை தங்கள் நாடுகளில் அனுமதிக்கவே தயங்குகிற நிலையில், இந்தியா அவனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து மதியாதை அளிப்பது வெட்கக்கேடு.]]]

    இதுதான் இந்திய தேசியம்.. இந்திய ஏகாதிபத்தியம்.. இந்திய பக்தி..! இவர்களுக்குத் தமிழர்கள் என்பவர்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதை மீண்டும், மீண்டும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்கள்..!//

    அதற்காக உலகக்கோப்பையை எதற்கு புறக்கணிக்கவேண்டும்?? இராஜபக்சேவுக்கு நம் எதிர்ப்பைக் காண்பிக்கலாமே! தமிழின உணர்வாளர்கள் ஒருவர் கூட ராஜபக்சேவை கிரிக்கெட் பார்க்க அனுமதித்ததை எதிர்க்கவில்லையே ஏன்?

    இந்த தேசமே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கும்படி - உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது - மும்பையில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாமே, உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே??

    இப்போது தமிழின ஆதரவாளர்கள் அனைவரும் ஓட்டுப் பொறுக்கிக்கொண்டிருப்பதில் பிஸியாக இருப்பதால் அவர்கள் அதைச் செய்யவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர்கள் காசு பார்ப்பதில் குறியாக இருப்பதுபோல், இவர்களும் தேர்தலுக்குப் பின் காசு பார்த்தாகவேண்டுமே! அதற்கு ஜெயித்தாக வேண்டுமே என்ற பதைபதைப்பில் ஊரேங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

    உண்மையான தமிழின உணர்வாளர்கள் அரிதிலும் அரிது..!!

    ReplyDelete
  116. ///உண்மைத்தமிழன் said...

    [[[ரிஷி said...

    பரந்துபட்ட இந்த தேச மக்களை இன்று அரசியலோ, கலைகளோ, சினிமாக்களோ ஒன்றிணைப்பதில்லை. விளையாட்டுதான் இணைக்கிறது. அது இருந்துவிட்டுப் போகட்டுமே!!]]]

    தமிழர்களை மனிதர்களாகவே மதிக்காத இந்த இந்திய தேசியம் நமக்குத் தேவையா..?///

    ஈழத்தமிழர்களைப் பற்றித்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இங்கே காவிரித்தண்ணீரைக்கூடத்தான் கர்நாடகாவிடமிருந்து சண்டையிட்டுப் பெறவேண்டியிருக்கிறது. முல்லைப்பெரியாரில் கேரளா சண்டையிடுகிறது. ஏதாவது தேவையென்றால் சண்டையிட்டுத்தான் நாம் பெற்றாக வேண்டும். அதற்காக இந்திய தேசியமே வேண்டாமென்று ஒதுங்கிப்போவது அழகல்ல.

    ReplyDelete
  117. (வேறொரு பதிவில் நான் எழுதிய பின்னூட்டமே!)
    எப்படி சினிமா இந்தியர்களை (ஓரளவேனும்) ஒன்றினைக்கிறதோ அது போல கிரிக்கெட்டும் இணைக்கட்டுமே! என்ன தவறு நேர்ந்துவிடும்? இந்த தேசத்தின் முன்னேற்றத்துக்கு நமது ஒற்றுமை மிக மிக அவசியம்!! மொழி வாரியாக ஜாதி வாரியாக வெல்லாம் பிரித்துதான் அரசியல்வியாதிகள் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்! நம் தேச ஒற்றுமை முழுமையடையாமல், கொள்ளைத் தலைவர்களை விரட்ட இயலாது!! நம் நாடும், நம் சந்ததிகளும் நிம்மதி காண இது ரொம்ப முக்கியம்! அதற்கு கிரிக்கெட் ஒரு கருவியாக இருந்து விட்டுப் போகட்டுமே!!

    நம்ம பக்கமும் எட்டியாவது பாருங்க நண்பர்களே!!

    http://sagamanithan.blogspot.com/

    ReplyDelete
  118. Mr.rajendran(Iron Man)...nenga eela thamizharai parkka vendam.... nammudaiya meenavargal kollapaduvathai yosithu parungal.. mariyaithiyana varthaigalai payanpaduthuvathu nalam...

    ungala mathiri naalu peru irukkira varaiyila tamilnadu thirunthathu..

    ReplyDelete
  119. //அதே சிங்கள அணியில் ஒரு கைகாட்டியாக முரளிதரனும் இருக்கான்
    அவன் தமிழனாம் அவனுக்கு சென்னையில் பெண் கொடுத்திருக்கோம்.அவமானம்// முரளிதரன் தமிழர் என்பதற்க்கு யாரிடமும் அத்தாட்சி வாங்க வேண்டிய தேவையில்லை. உண்மைத்தமிழன் ஒரு நல்ல மனிதர் என்பது போல் முரளிதரன் ஒரு கிரிக்கட் விளையாட்டு வீரர். மக்களை கொலை செய்த பிரபாகரன் மாதிரி இல்லை. யாருக்கு பெண் கொடுக்கலாம் யார் யார் கோவிலுக்குள் போகலாம் தமிழக முறைகளை கேட்க ஆச்சரியமாக இருக்கிறது!

    ReplyDelete
  120. நாமெல்லாம் ஆட்சிக்கு வரவேண்டும் எனத் துடிக்கும் ஜெயலலலிதா, பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தினமலரில் வந்திருக்கிறது.

    //உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக கோப்பை போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளனர். இந்திய அணிக்கும், கேப்டன் டோனிக்கும் சாதனை படைத்து வரும் சச்சினுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.//

    இந்திய தேசியத்தையே நாம் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அதற்கு வக்காலத்து வாங்கும் ஜெயாவிற்கா நம் ஓட்டு? தமிழர் நலனைப் புறக்கணித்திருக்கும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகப் பேசும் தலைவியா தேர்தலில் ஜெயித்து தமிழர் நலனைக் காக்கப் போகிறார்? நாமெல்லாம் ஜெயாவிற்கு ஆதரவாக ஓட்டுப் போட்டுத்தான் தீரவேண்டுமா????

    ReplyDelete
  121. சரசர....சுறுசுறு... பரபர...

    ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

    ஸூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

    என்ன தல.... சும்மா தூளா அடிச்சு ஆடியிருக்கீங்க....

    யப்பா... என்னா ஒரே சமயத்துல 10 பத்தாயிரம் வாலா வெடிக்க வைச்ச மாதிரி... ஒரு ஜூடு பதிவுல....

    ReplyDelete
  122. கிரிக்கெட் விளையாடக்கூடாது, நடிக, நடிகையர் படப்பிடிப்புக்காக கூட இலங்கைக்கு செல்லக்கூடாது...

    இந்த ரெண்டு மட்டும் பண்ணினா போதுமா, ஏன்னா இந்த ரெண்டு எதிர்ப்பு மட்டுமே இருக்கு..

    அப்படின்னா, அங்க பிசினஸ் பண்ணுற நம்மாளுங்க? டெய்லி ஃப்ளைட் சர்வீஸ்?

    ReplyDelete
  123. என்னமோ சொல்றிங்க வாஸ்தவம் தான் சனிக்கிழமை ( உலக கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற்ற அன்று ) அன்று நான் என் வேலை சம்பந்தமாக ஒரு மருத்துவமனைக்கு சென்று இருந்தேன், அங்கு ஒரு பெருசு என்னிடம் வந்து தம்பி பவலிங் யாருன்னு கேக்குது, பாடைல போற வயசுல பவலிங் யாருன்னு தெரியணுமாம் இதை விட கொடுமை அந்த பெருசு கைல அட்மிசன் கார்டு வேற

    அந்த சரத்பவார் இருக்கானே அவனையெல்லாம் அம்மணமாய் ஓடவிட்டு வெறிநாயை கொண்டு கடிக்க விடனும்

    முட்டாபசங்க கிரிகெட்டை ரொம்ப தான் கொண்டாடுராணுக, ஹாக்கி, பூட் பால் , இன்னும் நிறைய போட்டிகளில் நாம துளிகூட தேறவில்லை, அது எல்லாம் சக நாடுகளை இணைக்கும் பாலமாக இருக்காதா ??????? கிரிக்கெட் மட்டும் தான் பாலமா ?????? வெங்காயங்க

    ReplyDelete
  124. Dear TT
    I am a regular to ur blog.I disagree with this post.Cricket is a game and this is one of the few games that we use to shine.Let us keep politics apart from games

    ReplyDelete
  125. ///முட்டாபசங்க கிரிகெட்டை ரொம்ப தான் கொண்டாடுராணுக, ஹாக்கி, பூட் பால் , இன்னும் நிறைய போட்டிகளில் நாம துளிகூட தேறவில்லை, அது எல்லாம் சக நாடுகளை இணைக்கும் பாலமாக இருக்காதா ??????? கிரிக்கெட் மட்டும் தான் பாலமா ?????? வெங்காயங்க///

    துளி கூட நாம தேறுவது இருக்கட்டும்.. மொதல்ல நீங்க இந்தியா விளையாடுற எல்லா காக்கி மேட்சும் பார்க்கிறீங்களா என்ன??? யார் யாருக்கு என்னென்ன பிடிக்குதோ அதைத்தான் பார்க்கிறார்கள். எல்லா விளையாட்டுமே சக மனிதர்களை இணைக்கிற பாலம்தான். அந்த விளையாட்டுகளுக்கு உசிரு இல்லைன்னா நாக்கை புடுங்குற மதிரி கவர்ன்மென்டைக் கேளுங்க. அவற்றோட வளர்ச்சிக்கு என்ன பண்ணீங்கன்னு அரசாங்கத்தைக் கேளுங்க..!! கிரிக்கெட்டை கொண்டாடுறதல இப்போ என்ன இருக்கு!

    ReplyDelete
  126. [[[மு.சரவணக்குமார் said...

    எனக்கென்னவோ நீங்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புபவாரகவே தெரிகிறீர்கள். திறந்த மனதுடன் விவாதிப்பவர்களிடம் தர்க்கம் பேசலாம். உங்களிடம் அது சிரமம்.]]]

    நான் எப்போதும் திறந்த மனதுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்..! உங்களுடைய பார்வையில் இது தவறெனில் நான் என்ன செய்ய முடியும்..?

    ReplyDelete
  127. [[[ராஜ நடராஜன் said...

    //[[[நெகட்டிவா ஓட்டு வந்து விழுந்துச்சுன்னா நான் பொறுப்பில்லை:)]]]

    அதான் வந்து குவிஞ்சிருக்கே..! உங்களுடைய ஓட்டுக்கும் எனது நன்றி..!//

    மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்க மறுபடியும் வந்தேன்:)
    நான் யாருக்கும் மைனஸ் போடுவதேயில்லை. அதுவும் உங்களுக்குப் போடுவேனா?]]]

    அப்படியா..? ரொம்ப சந்தோஷம்.. தங்களது உதவிக்க மிக்க நன்றி..!

    ReplyDelete
  128. [[[sfk said...

    1. Very true.
    2. Sports has got nothing to do with National pride.
    3. Nation's pride reflects in Human Development Index and Human Rights.
    4. Cricket is a professional sports - everyone involved makes money. So be it. But don't mix it with Patriotism.]]]

    தங்களுடைய புரிதலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  129. [[[ரிஷி said...

    அதற்காக உலகக் கோப்பையை எதற்கு புறக்கணிக்கவேண்டும்?? இராஜபக்சேவுக்கு நம் எதிர்ப்பைக் காண்பிக்கலாமே! தமிழின உணர்வாளர்கள் ஒருவர்கூட ராஜபக்சேவை கிரிக்கெட் பார்க்க அனுமதித்ததை எதிர்க்கவில்லையே ஏன்?

    இந்த தேசமே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கும்படி - உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது - மும்பையில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாமே, உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே??

    இப்போது தமிழின ஆதரவாளர்கள் அனைவரும் ஓட்டுப் பொறுக்கிக் கொண்டிருப்பதில் பிஸியாக இருப்பதால் அவர்கள் அதைச் செய்யவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர்கள் காசு பார்ப்பதில் குறியாக இருப்பதுபோல், இவர்களும் தேர்தலுக்குப் பின் காசு பார்த்தாகவேண்டுமே! அதற்கு ஜெயித்தாக வேண்டுமே என்ற பதைபதைப்பில் ஊரேங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
    உண்மையான தமிழின உணர்வாளர்கள் அரிதிலும் அரிது!!]]]

    இந்தக் குற்றவுணர்வு எனக்கும் உண்டு நண்பரே..! செய்திருக்க வேண்டியதுதான்.. ஆனால் செய்ய முன் வராதததற்கு இங்கு ஒரு நல்ல எதிர் தலைமை இல்லாததுதான் காரணம்..!

    ReplyDelete
  130. [[[ரிஷி said...

    ஈழத் தமிழர்களைப் பற்றித்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இங்கே காவிரித் தண்ணீரைக் கூடத்தான் கர்நாடகாவிடமிருந்து சண்டையிட்டுப் பெற வேண்டியிருக்கிறது. முல்லைப் பெரியாரில் கேரளா சண்டையிடுகிறது. ஏதாவது தேவையென்றால் சண்டையிட்டுத்தான் நாம் பெற்றாக வேண்டும். அதற்காக இந்திய தேசியமே வேண்டாமென்று ஒதுங்கிப் போவது அழகல்ல.]]]

    வேறென்ன பேசுவது ரிஷி..? நமக்கான மரியாதையும் இல்லையும் இல்லை.. உதவிகளும் இல்லை என்றால் நாம் எதற்காக அந்தத் தேசியத்தை அணிந்து இன்னமும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்க வேண்டும்..!

    ReplyDelete
  131. [[[சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

    (வேறொரு பதிவில் நான் எழுதிய பின்னூட்டமே!)

    எப்படி சினிமா இந்தியர்களை (ஓரளவேனும்) ஒன்றினைக்கிறதோ அது போல கிரிக்கெட்டும் இணைக்கட்டுமே! என்ன தவறு நேர்ந்துவிடும்? இந்த தேசத்தின் முன்னேற்றத்துக்கு நமது ஒற்றுமை மிக மிக அவசியம்!! மொழி வாரியாக ஜாதி வாரியாகவெல்லாம் பிரித்துதான் அரசியல் வியாதிகள் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்! நம் தேச ஒற்றுமை முழுமையடையாமல், கொள்ளைத் தலைவர்களை விரட்ட இயலாது!! நம் நாடும், நம் சந்ததிகளும் நிம்மதி காண இது ரொம்ப முக்கியம்! அதற்கு கிரிக்கெட் ஒரு கருவியாக இருந்துவிட்டுப் போகட்டுமே!!
    நம்ம பக்கமும் எட்டியாவது பாருங்க நண்பர்களே!!
    http://sagamanithan.blogspot.com/]]]

    எல்லாம் சரிதான். ஆனால் மக்கள் இணைவது என்பது நடக்கவே நடக்காது.. தமிழக மக்களே பிரிந்து கிடக்கும்போது மும்பைவாழ் மக்கள் ஈழத்து மக்கள் மீது அனுதாபம் கொண்டு இலங்கை அணியை விரட்டியடிப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்திருக்க முடியுமா..? சொல்லுங்கள்..!

    ReplyDelete
  132. [[[pozhthupoku said...
    Mr.rajendran(Iron Man) nenga eela thamizharai parkka vendam. nammudaiya meenavargal kollapaduvathai yosithu parungal.. mariyaithiyana varthaigalai payanpaduthuvathu nalam. ungala mathiri naalu peru irukkira varaiyila tamilnadu thirunthathu..]]]

    விடுங்க ஸார்.. அவரோட பழக்கம்போல. சொல்லிட்டுப் போறார். விடுங்க..!

    ReplyDelete
  133. [[[Chandran said...

    //அதே சிங்கள அணியில் ஒரு கைகாட்டியாக முரளிதரனும் இருக்கான்
    அவன் தமிழனாம் அவனுக்கு சென்னையில் பெண் கொடுத்திருக்கோம்.அவமானம்//

    முரளிதரன் தமிழர் என்பதற்க்கு யாரிடமும் அத்தாட்சி வாங்க வேண்டிய தேவையில்லை. உண்மைத்தமிழன் ஒரு நல்ல மனிதர் என்பது போல் முரளிதரன் ஒரு கிரிக்கட் விளையாட்டு வீரர். மக்களை கொலை செய்த பிரபாகரன் மாதிரி இல்லை. யாருக்கு பெண் கொடுக்கலாம் யார் யார் கோவிலுக்குள் போகலாம் தமிழக முறைகளை கேட்க ஆச்சரியமாக இருக்கிறது!]]]

    சந்திரன் நானும் முரளிதரன் திருமணம், பிறப்பு பற்றி கமெண்ட் அடிக்கவில்லை..!

    ஆனால் அவர் தமிழர் எனில் இதுவரையிலும் சிறிதளவாவது இலங்கை அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறாரா? ஆதாரம் காட்டுகிறீர்களா..?

    ReplyDelete
  134. [[[ரிஷி said...

    நாமெல்லாம் ஆட்சிக்கு வரவேண்டும் எனத் துடிக்கும் ஜெயலலலிதா, பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தினமலரில் வந்திருக்கிறது.

    இந்திய தேசியத்தையே நாம் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அதற்கு வக்காலத்து வாங்கும் ஜெயாவிற்கா நம் ஓட்டு? தமிழர் நலனைப் புறக்கணித்திருக்கும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகப் பேசும் தலைவியா தேர்தலில் ஜெயித்து தமிழர் நலனைக் காக்கப் போகிறார்? நாமெல்லாம் ஜெயாவிற்கு ஆதரவாக ஓட்டுப் போட்டுத்தான் தீர வேண்டுமா????]]]

    யோசியுங்க மக்களே.. உங்களது தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர வேறு யார் உண்மையாக உங்களுக்காக உழைப்பார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு ஓட்டளியுங்கள்..!

    ReplyDelete
  135. [[[R.Gopi said...

    சரசர. சுறுசுறு. பரபர.
    ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
    ஸூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

    என்ன தல. சும்மா தூளா அடிச்சு ஆடியிருக்கீங்க. யப்பா. என்னா ஒரே சமயத்துல 10 பத்தாயிரம் வாலா வெடிக்க வைச்ச மாதிரி. ஒரு ஜூடு பதிவுல.]]]

    அப்படியா தெரியுது. நானே நினைக்கலை.. இப்படிப் பத்திக்கும்ணு..?

    ReplyDelete
  136. [[[R.Gopi said...

    கிரிக்கெட் விளையாடக் கூடாது, நடிக, நடிகையர் படப்பிடிப்புக்காக கூட இலங்கைக்கு செல்லக் கூடாது...
    இந்த ரெண்டு மட்டும் பண்ணினா போதுமா, ஏன்னா இந்த ரெண்டு எதிர்ப்பு மட்டுமே இருக்கு..
    அப்படின்னா, அங்க பிசினஸ் பண்ணுற நம்மாளுங்க? டெய்லி ஃப்ளைட் சர்வீஸ்?]]]

    இலங்கை மீது அனைத்து வகையிலும் தடை விதித்து அதனை தனிமைப்படுத்தி ஈழ விஷயத்தில் அந்த மக்களுக்கு இந்திய அரசு உதவியிருக்க வேண்டும்..!

    ReplyDelete
  137. [[[அப்பாவி தமிழன் பரணி said...

    என்னமோ சொல்றிங்க..! வாஸ்தவம்தான் சனிக்கிழமை (உலக கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற்ற அன்று) அன்று நான் என் வேலை சம்பந்தமாக ஒரு மருத்துவமனைக்கு சென்று இருந்தேன், அங்கு ஒரு பெருசு என்னிடம் வந்து தம்பி பவலிங் யாருன்னு கேக்குது, பாடைல போற வயசுல பவலிங் யாருன்னு தெரியணுமாம் இதைவிட கொடுமை அந்த பெருசு கைல அட்மிசன் கார்டு வேற. அந்த சரத்பவார் இருக்கானே அவனையெல்லாம் அம்மணமாய் ஓட விட்டு வெறி நாயை கொண்டு கடிக்க விடனும். முட்டா பசங்க கிரிகெட்டை ரொம்பதான் கொண்டாடுராணுக, ஹாக்கி, பூட்பால், இன்னும் நிறைய போட்டிகளில் நாம துளிகூட தேறவில்லை, அது எல்லாம் சக நாடுகளை இணைக்கும் பாலமாக இருக்காதா? கிரிக்கெட் மட்டும்தான் பாலமா? வெங்காயங்க.]]]

    வெங்காயம்தான்.. அந்த வெங்காயத்தைத்தான்.. உரிக்க.. உரிக்க வந்து கொண்டேயிருக்கும் ஒன்றுமேயில்லாத அந்த வெங்காயத்தைத்தான் கண்களில் நிஜக் கண்ணீரோடு உரித்துக் கொண்டிருக்கிறோம் இத்தனை ஆண்டுகளாக..!

    ReplyDelete
  138. [[[San said...
    Dear TT
    I am a regular to ur blog.I disagree with this post. Cricket is a game and this is one of the few games that we use to shine. Let us keep politics apart from games.]]]

    கேளிக்கைகளுக்கும் ஒரு நேரம் இருக்கு ஸார்.. இந்த நேரத்தில் நாம் இதனைச் செய்யாவிட்டால் வேறு எப்போது செய்வது..?

    ReplyDelete
  139. [[[ரிஷி said...

    ///முட்டாபசங்க கிரிகெட்டை ரொம்பதான் கொண்டாடுராணுக, ஹாக்கி, பூட் பால் , இன்னும் நிறைய போட்டிகளில் நாம துளிகூட தேறவில்லை, அது எல்லாம் சக நாடுகளை இணைக்கும் பாலமாக இருக்காதா ??????? கிரிக்கெட் மட்டும் தான் பாலமா ?????? வெங்காயங்க///

    துளி கூட நாம தேறுவது இருக்கட்டும்.. மொதல்ல நீங்க இந்தியா விளையாடுற எல்லா காக்கி மேட்சும் பார்க்கிறீங்களா என்ன??? யார் யாருக்கு என்னென்ன பிடிக்குதோ அதைத்தான் பார்க்கிறார்கள். எல்லா விளையாட்டுமே சக மனிதர்களை இணைக்கிற பாலம்தான். அந்த விளையாட்டுகளுக்கு உசிரு இல்லைன்னா நாக்கை புடுங்குற மதிரி கவர்ன்மென்டைக் கேளுங்க. அவற்றோட வளர்ச்சிக்கு என்ன பண்ணீங்கன்னு அரசாங்கத்தைக் கேளுங்க!! கிரிக்கெட்டை கொண்டாடுறதல இப்போ என்ன இருக்கு!]]]

    கொண்டாடலாம் ரிஷி. நானும் கொண்டாடுபவன்தான்.. கொண்டாடியவன்தான்..

    ஆனால் இந்த நேரத்தில் நமது எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும். இலங்கை அணியுடன் இந்தியா விளையாடாது என்ற அறிவிப்பை சொல்லியிருந்தால் இந்திய தேசியத்தின் கீழ் இந்த நாடு உண்மையாகவே வாழ்கிறது என்று சொல்லலாம்..!

    ReplyDelete
  140. //நன்றி பிரதர்..!//

    ஹெ ஹெ ஹெ அண்ணா, Take enough time to see whether the blogger is a brother or sister..!!

    :))

    ReplyDelete
  141. This comment has been removed by the author.

    ReplyDelete
  142. This comment has been removed by the author.

    ReplyDelete
  143. [[[அன்னு said...

    //நன்றி பிரதர்..!//

    ஹெ ஹெ ஹெ அண்ணா, Take enough time to see whether the blogger is a brother or sister..!!

    :))]]]

    ஸாரிம்மா.. நான் உன் தளத்துக்கு வந்து பார்க்கலை. அதுதான்..

    ReplyDelete
  144. [[[AALUNGA said...

    யோவ்...

    //இங்க எழுதி கிழிக்கிறதைத் தவிர வேற என்ன செஞ்சு கிழிச்சீங்க?//

    //கிரிக்கெட் பிடிக்கலனா எதுக்காக ட்விட்டர்ட்ல இந்தியாவுக்கு எதிரா ட்வீட் பண்ண?தலைவரை பார்க்குறேன்னு பைனலையும் ட்வீட் பண்ண?
    பேசாம இருக்க வேண்டியது தானே!!//

    //போட்டி ஆரம்பிக்கும் போதே இந்த எழவு பிடிச்ச பதிவைப் போட்டு இருக்கது?//

    இது எதுக்கும் உருப்படியா பதில் சொல்லலா..

    நீயெல்லாம் திறந்த மனதுடன் பேசுறியா?

    //நான் எப்போதும் திறந்த மனதுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்..!//

    போயா..]]]

    கொஞ்சம் மரியாதையாத்தான் பேசுறது..?

    ட்விட்டர்ல இந்தியா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எழுதியது எதற்காகவாம்..? இந்திய தேசியத்தை எதிர்த்ததினால்தான் எழுதினேன். கிரிக்கெட்டை சிலாகித்து எழுதியது அப்போதும் விடாமல் பலரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை பற்றிப் பேசியதால், நானும் எனது கருத்தாக பதிவு செய்தேன். இதிலென்ன தவறு. எப்படியிருப்பினும் எனது கருத்து இந்திய தேசியத்திற்கு எதிரானதாகத்தான் இருந்தது..! இது உங்களுக்குப் புரியாததற்கு நான் காரணமில்லை..!

    ReplyDelete
  145. [[[AALUNGA said...

    //இந்தியாவை இணைப்பதினால் தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்திருக்கிறது..?//

    டேய்... நீ இவ்வளவு சுதந்திரமா இங்க எழுதுறனா அது இந்தியாக்கு மொத்தமா கிடைச்ச சுதந்திரத்தாலதான். அதுவே உனக்கு புரியலயா?]]]

    ஆஹா.. எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு.. இதை நீங்க சொல்லித்தான் ஸார் நான் என் வாழ்க்கைல முதல் முறையா தெரிஞ்சுக்குறேன்.. தேங்க்ஸ்..!

    [[[எங்க சீனாவுக்கு போய் இப்படி சீன அரச விமர்சிச்சு எழுதிடு பார்ப்போம்!!]]]

    அடக் கண்றாவியே.. என்னை நிரூபிக்க நான் சீனாவுக்குப் போகணுமாக்கும்..!

    [[[எழுத்து சுதந்திரம் வேணும். ஆனா, வாங்கி குடுத்த இந்தியா வேணாம். உன்னயெல்லாம் நாடு கடத்தணும்!!]]]

    அதைத்தான் நாங்களும் சொல்றோம். இந்தியா வேணும்னா விந்திய மலைத் தொடருக்குப் போயிருங்களேன்.. யார் உங்களை இங்க இருக்கச் சொன்னது..?

    [[[இவ்வளவு கோவம் இருக்கவன் தில் இருந்தா இலங்கையில போய் எதாவது பண்றது. ஏன் வலிக்குதா? முடியாதுல????]]]

    காசில்லை. அங்க உள்ளேயே விட மாட்டான். புடிச்சு உள்ள போட்டா யார் வந்து என்னைக் காப்பாத்துறது..?

    [[[எதாவது பண்ணிட்டு என்ன வேணா எழுது!! சும்மா கைக்கு வந்ததையெல்லாம் எழுதுறதெல்லாம் ஒரு பிழைப்பு. எதா இருந்தாலும் அதுல சமபந்தம் இல்லாத் கோர்த்து அனுதாபமும் அபிமானமும் தேடுறது தான் நீ செய்ற சமூக சேவையா? இப்படி கேவலமா எழுதி பேர் புகழ் சம்பாதிகிறதுக்கு உனக்கே வெட்கமா இல்ல?]]]

    தம்பி.. வலையுலகத்துக்கு ரொம்பப் புதுசு போலிருக்கு.. சரிங்க தம்பி.. ரொம்ப டயர்டா இருப்பீங்க.. ஒரு சோடாவைக் குடிச்சிட்டு தூங்குங்க..!

    ReplyDelete
  146. .

    உதா,
    ஒரு சின்ன கருத்து மட்டும்.

    என்ன நடந்தாலும் உங்க‌களுக்கு முருகன் மீது எப்படி நம்பிக்கையின்மை வராதோ அதுபோல் தேசியமும். அது ஒரு மதம் போன்றதே. :-))))

    18 வயதில் ஒருவன் விரும்பும் தேசத்தை தேர்ந்தெடுக்கலாம் என்று சொல்லிவிட்டால் அதன்பின்பு தெரிந்து எடுப்பதில்தான் உண்மையான தேசப்பற்று உள்ளது. மற்றபடி நீங்கள் உங்களை முருகனுக்கு நேர்ந்துவிட்டுக்கொண்டது போல, சிலர் தங்கபாலு தலைமையில் இருக்கும் தமிழ காங்கிராசுக்கு நேர்ந்துவிட்டுக்கொண்டது போல , பிரியாணிக்குஞ்சுகள் ஏதோ ஒரு கழகத்திற்கு நேர்ந்துவிட்டுக்கொண்டது போல தேசியமும்.

    தேசமக்களின் நலன்தான் தேசியம் என்பது தெரிந்து , இருந்தால் 500 மீனவன் செத்ததிற்கு காரணாமான நாட்டுடன் சேர்ந்து விளையாட விசில் அடித்து கொண்டாடுவார்களா?

    .

    அமெரிக்க தேசியத்துக்கும் , கனடா தேசியத்திற்கும் விண்ணப்பித்து காத்து இருக்கும் டமிளகர்களைத் தெரியுமா?

    அம்ரிக்காவில் இருக்கும் எதனை இந்திய தேசிய‌வியாதிகள் அங்கு பிறக்கும் அவர்களின் குழந்தைகளை இந்திய தேசத்து குழந்தைகளாக பதிவு செய்கிறார்கள்? ஏன் அவர்களின் குழந்தைகளை இந்திய தேசத்தினராக பதிவு செய்து இந்திய பாஸ்போர்ட் எடுக்காமல் லபக் என்று அம்ரிக்க குடியாக பதிவு செய்கிறார்கள்?

    இதில் 99. 9% பேர் இந்திய கரிக்கெட்டுக்கு கைதட்டி இந்தியா தேசியம் பேசுபர்களே. :‍-)))

    தேசியம் என்பது நிரந்தரம் அல்ல. தேவை பொறுத்து மாற்றிக்கொல்லும் ஒரு சட்டை. வாய்ப்புள்ளவன் அமெரிக்கனகாவோ அல்லது கடனியனாகவோ அல்லது ஆஸ்திரேலியனாகவோ மாறிவிடுகிறான்.

    .

    ReplyDelete
  147. This comment has been removed by the author.

    ReplyDelete
  148. This comment has been removed by the author.

    ReplyDelete
  149. This comment has been removed by the author.

    ReplyDelete
  150. .
    AALUNGA,
    பல நாடுகள் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கிகின்றன. (அரேபிய நாடுகளில் அப்படி இல்லை)

    அப்படி கேட்காமலேயே வந்தது வருவதுதான் தேசியம்.

    விண்ணப்பிக்கும் நாடு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தேசியம் மாறும். சட்டப்படி அது சரியானதே.

    காசுக்காக சொகுசுக்காக அமெரிக்க தேசியத்திற்கு விண்ணப்பித்து இந்திய பாஸ்போர்ட்டை திருப்பியளிக்க காத்து இருப்பவர்களைவிட , 500 மீனவர்களுக்காக‌ நாட்டில் இருந்துகொண்டே தனது நாட்டையும் அதன் ஆட்சியாளர்கலையும் கேள்வி கேட்கும் உதா சிறந்தவர் அவரைப் புரிந்தவர்களுக்கு.

    **

    வெட்டியாக ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவந்து இந்திய பாஸ்போர்ட்டை திருப்பியளித்து அம்ரிக்க தெசியத்தை தழுவி க்ரிகெட்டுக்கு விசிலடிப்பவர்களைவிட 500 மீனவர்களுக்காக‌ நாட்டில் இருந்துகொண்டே போராடும் உதா சிறந்தவர் அவரைப் புரிந்தவர்களுக்கு.

    *

    நீங்கள் சொல்லும் இந்திய இராணுவவீரனின் தேசபக்தி சிறந்தது என்றால் ஏன் அவன் டோனியைவிட குறைந்த சம்பளம் வாங்கிகிறான்.

    இராணுவவீர்களை மதிக்காத நாடு இது.

    சவப்ப்ட்டியில் ஆரம்பித்து பீரங்கிவரை ஊழல்.

    உண்மையாக இராணுவ வீரரை நீங்கள் மதித்தால், உங்கள் ஊரில் உள்ள அல்லது மாவட்டத்தில் உள்ள எதனை இராணுவ குடும்பங்களை உங்களுக்குத் தெரியும் டோனியையும் சில விளம்பரச்சட்டைகளையும் தெரிந்த அளவிற்கு?

    என்றாவது ஒருநாள் உங்கள் வீட்டு விசேசத்தில் உங்கள் பகுதியில் வாழும் ஒரு இராணுவ வீரன் குடும்பத்தை அழைத்த்து அவர்களைப் பாராட்டி சிறப்பித்து இருக்கிறீர்களா?

    உங்கள் கருத்துக்கு உண்மையாய் இருங்கள்.

    .

    ReplyDelete
  151. .

    உண்மையான இந்திய தேசபக்தி என்ற ஒன்று இருந்தால்...

    ஒரு கிரிக்கெட் அணி வென்றத்ற்கு கொந்தளிப்பதைவிட...

    1.இறந்த இராணவீரர்களின் சவப்பெட்டியிலும் ஊழல் செய்த...
    2.விசவாயுவால் போபாலில் மக்கள் செத்தாலும் கவலைபடாமல் அது சகசம் என்று சொல்லிய..
    3.ஒரு நாளைக்கு 10 பேர் தூக்குப்போட்டுசாகும் விவசாய கொடுமைகளுக்கு எதிராக...

    ஒரு பெரும் போர் வெடித்து இருக்க வேண்டும் இந்த தேசபக்திமான்களால். அப்படி ஏதும் நடக்கவில்லை. பிச்சாத்து க்ரிகெட்டைத்தவிர எதற்கு தேசிய அள‌வில் கொந்தளித்து உள்ளீர்கள்?

    உங்கள் தேசியம் இந்திய தேசியம் அல்ல கிரிக்கெட் தேசியம்.

    ஒவ்வொரு சராசரி இந்தியர்களின் நலனுக்கான தேசியமே இந்திய‌ தேசியம். அப்படி ஒன்று இல்லை. உங்களி நோக்கி நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

    .

    .

    ReplyDelete
  152. இந்திய அணியில் தமிழனுக்கு வாய்ப்பு இல்லை, இது பெரிய அரசியல் என்று புலம்புகிறோம். நமது தமிழக அணியில் மட்டும் என்ன நடக்கிறதாம்? சென்னைக்கு வெளியில் இருந்து எத்தனை பேர் தமிழக அணியில் இருக்கிறார்கள்? இதுவுமே பெரிய அரசியல் மற்றும் புறக்கணிப்புதானே? தமிழ்க கிரிக்கெட் தேர்வர்களிடம் சென்று, நான் திருச்சி என்றோ, மதுரை என்றோ, நாகர்கோவில் என்றோ சொல்லிப்பாருங்கள், ஒரு சாணியை பார்ப்பதுபோலத்தான் உங்களை பார்ப்பார்கள். இது உண்மை! என் நண்பனின் அனுபவம்!

    ReplyDelete
  153. அண்ணே! விளையாட்டையும் ஈழத்தையும் சம்பந்தப்படுத்திப் பார்த்ததால் உங்களுடன் கருத்து வேறுபட்டேன்.

    மற்றபடி, அரசியல்வியாதிகளின் மீதான நம் தாக்குதல் தொடரவேண்டும். உணவுத்துறை அமைச்சராகவும் இருந்துகொண்டு, ஒரு வாரியத்தின் தலைவனாகவும் ஏன் இவர் இருக்கிறார் எனத் தெரியவில்லை. ஒருவனுக்கு ஒரு பதவிதான் என்று சட்டம் கொண்டுவரவேண்டும் போலிருக்கிறது. இந்தக் கிரிக்கெட் ஜுர காலத்தில் கண்டிப்பாக இந்த ஆள் விவசாயத்துறை வேலைகளைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அடுத்து ஐபிஎல் வேறு வருவதால் இந்த ஆள் காட்டில் மழைதான்!!

    ஆனாலும் மக்கள்தானே இதுபோன்ற ஆட்களைத் தேர்ந்தெடுத்து மேலே அனுப்புகிறார்கள்??

    ReplyDelete
  154. [[[கல்வெட்டு said...
    தேச மக்களின் நலன்தான் தேசியம் என்பது தெரிந்து இருந்தால் 500 மீனவன் செத்ததிற்கு காரணமான நாட்டுடன் சேர்ந்து விளையாட விசில் அடித்து கொண்டாடுவார்களா?]]]

    சூப்பரண்ணே..! இந்த வார்த்தைகள்தான் எனக்குச் சிக்காமல் போய்விட்டது..

    விளையாட்டாக விளையாட்டாக பார்க்க வேண்டும் என்றாலும், உயிர்கள் பலியாவதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாதே..

    அவர்களுக்காக நம்மைத் தவிர வேறு யார் கவலைப்படுவார்கள்..?

    ReplyDelete
  155. [[[AALUNGA said...

    என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளாதவர்கள் வன்மையாக சொன்னாலாவது புரிந்து கொள்கிறனரா என்று பார்த்தேன்..
    தோல்விதான். எனவே, என் கருத்துக்களை அழித்து விட்டேன்.]]]

    மிக்க நன்றி நண்பரே..!

    [[[உண்மைத் தமிழனின் ரசிகர்களில் ஒருவன் ஒழிந்தான்.]]]

    இதற்கு மட்டும் பெரிதும் வருந்துகிறேன்..!

    ReplyDelete
  156. [[[கல்வெட்டு said...
    AALUNGA,
    பல நாடுகள் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கிகின்றன. (அரேபிய நாடுகளில் அப்படி இல்லை)
    அப்படி கேட்காமலேயே வந்தது வருவதுதான் தேசியம்.
    விண்ணப்பிக்கும் நாடு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தேசியம் மாறும். சட்டப்படி அது சரியானதே.
    காசுக்காக, சொகுசுக்காக அமெரிக்க தேசியத்திற்கு விண்ணப்பித்து இந்திய பாஸ்போர்ட்டை திருப்பியளிக்க காத்து இருப்பவர்களைவிட, 500 மீனவர்களுக்காக‌ நாட்டில் இருந்து கொண்டே தனது நாட்டையும் அதன் ஆட்சியாளர்கலையும் கேள்வி கேட்கும் உதா சிறந்தவர் அவரைப் புரிந்தவர்களுக்கு.

    **

    வெட்டியாக ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்கா வந்து இந்திய பாஸ்போர்ட்டை திருப்பியளித்து அம்ரிக்க தெசியத்தை தழுவி க்ரிகெட்டுக்கு விசிலடிப்பவர்களைவிட 500 மீனவர்களுக்காக‌ நாட்டில் இருந்துகொண்டே போராடும் உதா சிறந்தவர் அவரைப் புரிந்தவர்களுக்கு.

    *

    நீங்கள் சொல்லும் இந்திய இராணுவ வீரனின் தேசபக்தி சிறந்தது என்றால் ஏன் அவன் டோனியைவிட குறைந்த சம்பளம் வாங்கிகிறான். இராணுவ வீர்களை மதிக்காத நாடு இது.
    சவப்ப்ட்டியில் ஆரம்பித்து பீரங்கிவரை ஊழல்.
    உண்மையாக இராணுவ வீரரை நீங்கள் மதித்தால், உங்கள் ஊரில் உள்ள அல்லது மாவட்டத்தில் உள்ள எதனை இராணுவ குடும்பங்களை உங்களுக்குத் தெரியும் டோனியையும் சில விளம்பரச் சட்டைகளையும் தெரிந்த அளவிற்கு?
    என்றாவது ஒரு நாள் உங்கள் வீட்டு விசேசத்தில் உங்கள் பகுதியில் வாழும் ஒரு இராணுவ வீரன் குடும்பத்தை அழைத்த்து அவர்களைப் பாராட்டி சிறப்பித்து இருக்கிறீர்களா?
    உங்கள் கருத்துக்கு உண்மையாய் இருங்கள்.]]]

    கல்வெட்டு கல்வெட்டுதான்..! இந்த அளவுக்கு உங்களைப் போல நறுக்குத் தெரித்தாற்போல் எனக்கு எழுத வர மாட்டேங்குதுண்ணே..!

    ReplyDelete
  157. [[[கல்வெட்டு said...

    உண்மையான இந்திய தேசபக்தி என்ற ஒன்று இருந்தால்...

    ஒரு கிரிக்கெட் அணி வென்றத்ற்கு கொந்தளிப்பதைவிட...

    1.இறந்த இராணுவ வீரர்களின் சவப்பெட்டியிலும் ஊழல் செய்த...
    2.விசவாயுவால் போபாலில் மக்கள் செத்தாலும் கவலைபடாமல் அது சகஜம் என்று சொல்லிய..
    3.ஒரு நாளைக்கு 10 பேர் தூக்குப் போட்டு சாகும் விவசாய கொடுமைகளுக்கு எதிராக...

    ஒரு பெரும் போர் வெடித்து இருக்க வேண்டும் இந்த தேசபக்திமான்களால். அப்படி ஏதும் நடக்கவில்லை. பிச்சாத்து கிரிக்கெட்டைத் தவிர எதற்கு தேசிய அள‌வில் கொந்தளித்து உள்ளீர்கள்?
    உங்கள் தேசியம் இந்திய தேசியம் அல்ல கிரிக்கெட் தேசியம்.
    ஒவ்வொரு சராசரி இந்தியர்களின் நலனுக்கான தேசியமே இந்திய‌ தேசியம். அப்படி ஒன்று இல்லை. உங்களை நோக்கி நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.]]]

    நன்றி கல்வெட்டு அண்ணே..! நான் இவ்வளவு நீளமாக எழுதியதை நீங்கள் இந்த ஒரு பாராவில் குறிப்பிட்டு முடித்துவிட்டீர்கள். மிக்க நன்றி..!

    ReplyDelete
  158. [[[Sundar said...

    இந்திய அணியில் தமிழனுக்கு வாய்ப்பு இல்லை, இது பெரிய அரசியல் என்று புலம்புகிறோம். நமது தமிழக அணியில் மட்டும் என்ன நடக்கிறதாம்? சென்னைக்கு வெளியில் இருந்து எத்தனை பேர் தமிழக அணியில் இருக்கிறார்கள்? இதுவுமே பெரிய அரசியல் மற்றும் புறக்கணிப்புதானே? தமிழ்க கிரிக்கெட் தேர்வர்களிடம் சென்று, நான் திருச்சி என்றோ, மதுரை என்றோ, நாகர்கோவில் என்றோ சொல்லிப் பாருங்கள், ஒரு சாணியை பார்ப்பது போலத்தான் உங்களை பார்ப்பார்கள். இது உண்மை! என் நண்பனின் அனுபவம்!]]]

    விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் என்பவர்களிடம்தான் இதனைச் சொல்ல வேண்டும்..! கிரிக்கெட் ஊழல்கள் பற்றித் தனியாகத்தான் பதிவு போட்டு புலம்ப வேண்டும் போலிருக்கிறது..!

    ReplyDelete
  159. [[[ரிஷி said...

    அண்ணே! விளையாட்டையும் ஈழத்தையும் சம்பந்தப்படுத்திப் பார்த்ததால் உங்களுடன் கருத்து வேறுபட்டேன்.
    மற்றபடி, அரசியல்வியாதிகளின் மீதான நம் தாக்குதல் தொடர வேண்டும். உணவுத் துறை அமைச்சராகவும் இருந்துகொண்டு, ஒரு வாரியத்தின் தலைவனாகவும் ஏன் இவர் இருக்கிறார் எனத் தெரியவில்லை. ஒருவனுக்கு ஒரு பதவிதான் என்று சட்டம் கொண்டு வர வேண்டும் போலிருக்கிறது. இந்தக் கிரிக்கெட் ஜுர காலத்தில் கண்டிப்பாக இந்த ஆள் விவசாயத் துறை வேலைகளைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அடுத்து ஐபிஎல் வேறு வருவதால் இந்த ஆள் காட்டில் மழைதான்!! ஆனாலும் மக்கள்தானே இது போன்ற ஆட்களைத் தேர்ந்தெடுத்து மேலே அனுப்புகிறார்கள்??]]]

    எதைப் பற்றியும் கவலைப்படாத மேட்டுக்குடி மக்கள் மூலமாகத்தானே அந்தாள் தேர்ந்தெடுக்கப்பட்டுகிறார்..? நாம் என்ன செய்ய முடியும் ரிஷி.. மக்கள் இப்போது பணக்காரர்கள், ஏழைகள் என்ற வர்க்கப் பிரிவினையால் பிரிக்கப்பட்டுள்ளார்கள். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஏழைகளும் இதையே நினைத்தால் எப்படி..? நம் தலையில் நாமே மண்ணையள்ளிப் போடுவது போலத்தானே இதுவும்..!

    ReplyDelete
  160. ///எதைப் பற்றியும் கவலைப்படாத மேட்டுக்குடி மக்கள் மூலமாகத்தானே அந்தாள் தேர்ந்தெடுக்கப்பட்டுகிறார்..? நாம் என்ன செய்ய முடியும் ரிஷி.. மக்கள் இப்போது பணக்காரர்கள், ஏழைகள் என்ற வர்க்கப் பிரிவினையால் பிரிக்கப்பட்டுள்ளார்கள். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஏழைகளும் இதையே நினைத்தால் எப்படி..? நம் தலையில் நாமே மண்ணையள்ளிப் போடுவது போலத்தானே இதுவும்..! ///

    அதற்குத்தான் சொல்கிறேன். இப்போதுள்ள தேர்தல் முறைகளிலேயே மாற்றம் வேண்டும். கூடுதல் வாக்குகள் பெற்றதாலேயே ஒருவர் ஜெயித்ததாகக் கருதிவிடக்கூடாது. பதிவான வோட்டுகளில் 50% சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மொத்த வோட்டுகளில் 40% சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அப்படிப் பெற்றிருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கருதப்படவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் மறுமுறை தேர்தல் நடத்தப்படவேண்டும். அதே வேட்பாளர்கள் மீண்டும் நிற்பதற்கு அனுமதி கிடையாது.

    இதுபோன்றதொரு முறை இல்லாதவரை நாம் திரும்பத் திரும்ப ஒரு பன்னாடையையோ, முடிச்சவிக்கியையோ, மொள்ளமாரியையோதான் ஆட்சிமன்றத்திற்கு அனுப்பிக் கொண்டிருப்போம்!

    ReplyDelete
  161. poda pundai! periya paruppu maari eluthi irukka sunni moodura un soothai..punda magane...

    ReplyDelete
  162. \\இது போல் ஒரு நாள்கூட தங்களது தமிழ் பாசத்தைக் இவர்கள் காட்டியிருக்கவே மாட்டார்கள்..!\\ தமிழுக்கு பாசம் கூட வேண்டாம், ஆளும் அதிகார வர்க்கம் செய்யும் அயோக்கியத் தனங்களை எதிர்த்து ஒரு முனகலைக் கூட வெளியே விடாமல் எருமை மாட்டு மேல மழை பேஞ்சா மாதிரி இருக்கானுங்களே எங்கே போய்ச் சொல்ல? அப்போ தேச பக்தி வரக் காணோமே!
    \\மும்பை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மும்பையில் விளையாடக் கூடாது என்று சிவசேனா அமைப்பு இன்றுவரையில் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகிறது..!\\ அதான் பாகிஸ்தான் காரனுங்க ஜெயிக்க வேண்டிய மேட்சில் வேணுமின்னே நிறைய கேட்சுகளை மிஸ் பண்ணி சரியாக விளையாடாமல் தோத்துட்டு ஓடிப் போயிட்டானுங்களா!!
    \\இந்தியா முழுவதும் தினத்துக்கு 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல லட்சணத்தில் நாடு இருக்கின்ற நிலையில் அவர்களது குறைகள் என்ன?\\ அதான் கப்பு வந்துடுச்சுல்ல, இனிமே இதெல்லாம் இருக்காது. ["We are on Top of the world" அப்படின்னு எல்லா TV news chennel, News paper எல்லாத்துலேயும் போடுரானுங்களே, இதப் பாத்தா சிரிப்பதா அழுவதானே தெரியலை. Top என்றால் எதில்? விவசாயத்திலா, அறிவியல், தொழில் நுட்பத்திலா, கல்வியிலா, உணவுத் தன்னிறைவிலா ...??? அடங்கொய்யால இங்கிலீஷ் காரனுக்கு அடிமைப் பட்டுக் கிடந்த கைதி நாடுகள் மட்டுமே ஆடும் அவனாலேயே திணிக்கப் பட்ட பதினோரு சோம்பேறி ஆட 1,11,000 சோம்பேறிகள் பார்க்கும் வெட்டி ஆட்டத்தில் Top-ல் வந்ததையாடா சொல்றீங்க?? போங்கடா நீங்களும், உங்க மூஞ்சியும்...]

    ReplyDelete
  163. அன்பு சகோதரரே!

    ஒரு பதிவின் மூலம் சிலரை சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.

    ஒத்த கருத்து கொண்டவர்களை அடையாளம் காட்டி இருக்கிறீர்கள்.

    நன்றி.

    ReplyDelete
  164. போலி தேசிய நரிகளின் ஊளைச்சத்தம் இன்று கொஞ்சம் பலமாக கேட்கிறதே.

    ReplyDelete
  165. போலி தேசிய நரிகளின் ஊளைச்சத்தம் இன்று கொஞ்சம் பலமாக கேட்கிறதே.

    ReplyDelete
  166. [[[ரிஷி said...

    அதற்குத்தான் சொல்கிறேன். இப்போதுள்ள தேர்தல் முறைகளிலேயே மாற்றம் வேண்டும். கூடுதல் வாக்குகள் பெற்றதாலேயே ஒருவர் ஜெயித்ததாகக் கருதிவிடக்கூடாது. பதிவான வோட்டுகளில் 50% சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மொத்த வோட்டுகளில் 40% சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அப்படிப் பெற்றிருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கருதப்படவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் மறுமுறை தேர்தல் நடத்தப்படவேண்டும். அதே வேட்பாளர்கள் மீண்டும் நிற்பதற்கு அனுமதி கிடையாது. இது போன்றதொரு முறை இல்லாதவரை நாம் திரும்பத் திரும்ப ஒரு பன்னாடையையோ, முடிச்சவிக்கியையோ, மொள்ளமாரியையோதான் ஆட்சி மன்றத்திற்கு அனுப்பிக் கொண்டிருப்போம்!]]]

    இந்த நடைமுறையை கொண்டு வருவதற்கு நமது அரசியல்வியாதிகளே தடைக்கற்களாக இருக்கிறார்கள்..! அவர்களது பொழைப்பை நிறுத்தும்விதமாக அவர்களே ஏதாவது செய்வார்களா என்ன..?

    ReplyDelete
  167. [[[surendran said...
    poda pundai! periya paruppu maari eluthi irukka sunni moodura un soothai. punda magane...]]]

    ஆஹா.. என்னவொரு பாராட்டு.. தமிழனுக்குத் தமிழனே இப்படி பாராட்டலைன்னா எப்படி..? நன்றி சுரேந்திரன்..!

    ReplyDelete
  168. [[[Jayadev Das said...

    தமிழுக்கு பாசம் கூட வேண்டாம், ஆளும் அதிகார வர்க்கம் செய்யும் அயோக்கியத்தனங்களை எதிர்த்து ஒரு முனகலைக் கூட வெளியே விடாமல் எருமை மாட்டு மேல மழை பேஞ்சா மாதிரி இருக்கானுங்களே எங்கே போய்ச் சொல்ல? அப்போ தேச பக்தி வரக் காணோமே!

    அதான் பாகிஸ்தான்காரனுங்க ஜெயிக்க வேண்டிய மேட்சில் வேணுமின்னே நிறைய கேட்சுகளை மிஸ் பண்ணி சரியாக விளையாடாமல் தோத்துட்டு ஓடிப் போயிட்டானுங்களா!!

    அதான் கப்பு வந்துடுச்சுல்ல, இனிமே இதெல்லாம் இருக்காது. ["We are on Top of the world" அப்படின்னு எல்லா TV news chennel, News paper எல்லாத்துலேயும் போடுரானுங்களே, இதப் பாத்தா சிரிப்பதா அழுவதானே தெரியலை. Top என்றால் எதில்? விவசாயத்திலா, அறிவியல், தொழில் நுட்பத்திலா, கல்வியிலா, உணவுத் தன்னிறைவிலா.? அடங்கொய்யால இங்கிலீஷ்காரனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த கைதி நாடுகள் மட்டுமே ஆடும் அவனாலேயே திணிக்கப்பட்ட பதினோரு சோம்பேறி ஆட 1,11,000 சோம்பேறிகள் பார்க்கும் வெட்டி ஆட்டத்தில் Top-ல் வந்ததையாடா சொல்றீங்க?? போங்கடா நீங்களும், உங்க மூஞ்சியும்.]]]]

    ம்.. கொதிச்சிருக்கீங்க ஜெயவேல்.. நன்றி..!

    ReplyDelete
  169. [[[வழக்கறிஞர் சுந்தரராஜன் said...
    அன்பு சகோதரரே! ஒரு பதிவின் மூலம் சிலரை சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். ஒத்த கருத்து கொண்டவர்களை அடையாளம் காட்டி இருக்கிறீர்கள்.

    நன்றி.]]]

    நம்ம மக்கள்ஸே புரிஞ்சுக்கலையே வக்கீல் ஸார்..? நான் என்னமோ விளையாட்டே பிடிக்காத மாதிரியும், சந்தோஷமா இருக்கிறதையே வெறுக்கற மாதிரியும்ல அவங்க நினைச்சுக்குறாங்க..

    என்னமோ போங்க..! படிச்ச நாமே இப்படியிருந்தா.. கிராமத்துல இருக்குறவங்ககிட்ட எப்படி மனமாற்றத்தைக் கொண்டு வர்றது..?

    ReplyDelete
  170. [[[basheer said...

    போலி தேசிய நரிகளின் ஊளைச் சத்தம் இன்று கொஞ்சம் பலமாக கேட்கிறதே.]]]

    அது போலி இல்லை. அறியாமை.. அவர்களே தங்களது வாழ்க்கையில் உணர்ந்தால் மட்டும்தான் இதனைப் பெற முடியும்..!

    ReplyDelete
  171. Good Article. Ennoda vunarvukalum ithey than.

    ReplyDelete
  172. In Sep30,2004 a case between Zee vs BCCI, Came before Five judjes of Constitution bench of Supreme court for controversy over ''Indian cricket cricket team'' . Advocate K.K.Venugopal appeared for BCCI said ''1.The players like Sachin, Ganguly and Dravid play for official team of BCCI and are NOT THE OFFICIAL TEAM OF INDIA.'' 2. ''The activites of the bord including selection of Indian team had nothing to do with Govt of India.'' 3.'We do not even fly the NATIONAL FLAG nor we use any national emblem in the activities of the BCCI.''. 4.''BCCI has neither applied for any recognition fron Govt, nor has it recognition by centre or any of its agency.''. 5.''The BCCI has never submitted its accounts for audit to the Govt.''

    ReplyDelete
  173. சகோ.உண்மைத்தமிழன்,

    //கிரிக்கெட்டே சாக்கடையாகிவிட்டது என்பதை இந்த அப்பாவி ரசிகர்கள் எப்போது உணரப் போகிறார்கள்..!//--இது முற்றிலும் உங்கள் தவறான அணுகுமுறை.

    அதற்குத்தான்...

    //நல்ல பதிவு. தவறான தலைப்பு.
    நல்ல கிரிக்கெட்டையும் அது விழுந்து கிடக்கும் அசிங்கமான இடத்தையும் பிரித்தறிய வேண்டியது அவசியம்.//--என்று உங்களுக்கு சொல்லி இருந்தேன்.

    இன்றைய நிலையில் கிரிக்கெட் அல்லாது வேறு எந்த விளையாட்டிலாவது 120 கோடி மக்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டால் அதுவும் பணம் பண்ணும் இதே அரசியல் சாக்கடையில்தான் விழும்.

    ஆக, கிரிக்கெட்டை வெறுக்க வேண்டாம்... அது விழுந்து கிடக்கும் சாக்கடையை வெறுங்கள்.

    உங்கள் தலைப்பு.... "தனியார் BCCI நமக்கு ஒரு கேடா..!" என்று இருந்திருக்க வேண்டும்..!

    மேலும் விபரங்களுக்கு... இந்த பதிவை நீங்கள் அவசியம் படியுங்கள்...

    ReplyDelete
  174. @ Namy ...

    அருமையான தவல்கள். ஆனால், இது எந்த மரமண்டையனுக்கும் புரியாது. சோனியா, மன்மோகன் சிங், ராகுல், அப்புறம் எல்லா சினிமா முன்னணி நட்சத்திரங்கள் வந்து பார்க்கிறாங்க, வழக்கம் போல நம்மை முட்டாளாக்கி காசு பண்றாங்க. நாம இந்த தேச பக்தர்களைப் பார்த்து புல்லரித்துப் போயி பெப்சியைக் குடித்து அல்சர் வந்து சாக வேண்டியதுதான். அவனுங்க, கோடி கோடியாய் சுருட்டிகிட்டு சூதாட்டக் காரன் கிட்ட காசு வாங்கிட்டு, கிடைக்கும் பொட்டச்சியை தள்ளிகிட்டு போயி மஜா பண்ணுவானுங்க. நாட்டுக்காக உண்மையிலேயே உயிரைக் கொடுக்கும் ராணுவ வீரன் நாதியத்துப் போய் கிடப்பான். இதுதான் நம்ம விதி.

    ReplyDelete
  175. [[[Ezhil Arasu said...

    Good Article. Ennoda vunarvukalum itheythan.]]]

    அப்படியா..? ரொம்ப சந்தோஷம் ஸார்..!

    ReplyDelete
  176. [[[Namy said...

    In Sep30, 2004 a case between Zee vs BCCI, Came before Five judjes of Constitution bench of Supreme court for controversy over

    ''Indian cricket cricket team'' . Advocate K.K.Venugopal appeared for BCCI said

    ''1.The players like Sachin, Ganguly and Dravid play for official team of BCCI and are NOT THE OFFICIAL TEAM OF INDIA.''

    2. ''The activites of the bord including selection of Indian team had nothing to do with Govt of India.''

    3.'We do not even fly the NATIONAL FLAG nor we use any national emblem in the activities of the BCCI.''.

    4.''BCCI has neither applied for any recognition fron Govt, nor has it recognition by centre or any of its agency.''.

    5.''The BCCI has never submitted its accounts for audit to the Govt.'']]]

    இனிமேலும் நாம் இந்த அணியினை இந்திய தேசியத்தின் அணியாகத்தான் நினைக்க வேண்டுமா..?

    ReplyDelete
  177. [[[முஹம்மத் ஆஷிக் said...

    சகோ.உண்மைத்தமிழன்,

    //கிரிக்கெட்டே சாக்கடையாகிவிட்டது என்பதை இந்த அப்பாவி ரசிகர்கள் எப்போது உணரப் போகிறார்கள்..!//--இது முற்றிலும் உங்கள் தவறான அணுகுமுறை.
    அதற்குத்தான்.
    //நல்ல பதிவு. தவறான தலைப்பு.
    நல்ல கிரிக்கெட்டையும் அது விழுந்து கிடக்கும் அசிங்கமான இடத்தையும் பிரித்தறிய வேண்டியது அவசியம்.//--என்று உங்களுக்கு சொல்லி இருந்தேன்.
    இன்றைய நிலையில் கிரிக்கெட் அல்லாது வேறு எந்த விளையாட்டிலாவது 120 கோடி மக்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டால் அதுவும் பணம் பண்ணும் இதே அரசியல் சாக்கடையில்தான் விழும்.
    ஆக, கிரிக்கெட்டை வெறுக்க வேண்டாம். அது விழுந்து கிடக்கும் சாக்கடையை வெறுங்கள்.
    உங்கள் தலைப்பு.... "தனியார் BCCI நமக்கு ஒரு கேடா..!" என்று இருந்திருக்க வேண்டும்..!
    மேலும் விபரங்களுக்கு. இந்தப் பதிவை நீங்கள் அவசியம் படியுங்கள்.]]]

    நன்றி முகம்மது..!

    ReplyDelete
  178. [[[Jayadev Das said...

    @ Namy ...

    அருமையான தவல்கள். ஆனால், இது எந்த மரமண்டையனுக்கும் புரியாது. சோனியா, மன்மோகன் சிங், ராகுல், அப்புறம் எல்லா சினிமா முன்னணி நட்சத்திரங்கள் வந்து பார்க்கிறாங்க, வழக்கம் போல நம்மை முட்டாளாக்கி காசு பண்றாங்க. நாம இந்த தேச பக்தர்களைப் பார்த்து புல்லரித்துப் போயி பெப்சியைக் குடித்து அல்சர் வந்து சாக வேண்டியதுதான். அவனுங்க, கோடி கோடியாய் சுருட்டிகிட்டு சூதாட்டக்காரன்கிட்ட காசு வாங்கிட்டு, கிடைக்கும் பொட்டச்சியை தள்ளிகிட்டு போயி மஜா பண்ணுவானுங்க. நாட்டுக்காக உண்மையிலேயே உயிரைக் கொடுக்கும் ராணுவ வீரன் நாதியத்துப் போய் கிடப்பான். இதுதான் நம்ம விதி.]]]

    என்னைவிட கொதிக்கிறாரே ஜெயதேவ்..?

    ReplyDelete
  179. In Feb 2, 2005 (BCCI vs ZEE TELEFILMS LTD.). A five judge constitutional bench by a majority 3:2 gave the following ruling. ''1.Mearly because a NON GOVERNMENTEL BODY(BCCI) excercises certain public functions does not mean that it is a 'state' with in the meaning of Art 12 of constitution. ''2.The court accepted the argument that if the cricket board was to be declare a 'state' because it selected the Indian team then those who organise 'miss India' show should also be declared as state. ''3.The attempt to show the control excercised by the government over BCCI was NOT ADMINISTRATIVE in nature and could best be termed as REGULATORY NATURE''. So concltion is BCCI is an NOT GOVT. BODY.

    ReplyDelete
  180. [[[Namy said...

    In Feb 2, 2005 (BCCI vs ZEE TELEFILMS LTD.).

    A five judge constitutional bench by a majority 3:2 gave the following ruling.

    ''1.Mearly because a NON GOVERNMENTEL BODY(BCCI) excercises certain public functions does not mean that it is a 'state' with in the meaning of Art 12 of constitution.

    ''2.The court accepted the argument that if the cricket board was to be declare a 'state' because it selected the Indian team then those who organise 'miss India' show should also be declared as state.

    ''3.The attempt to show the control excercised by the government over BCCI was NOT ADMINISTRATIVE in nature and could best be termed as REGULATORY NATURE''. So concltion is BCCI is an NOT GOVT. BODY.]]]

    இந்த அமைப்பைக் கலைத்துவிட்டு அரசுகளே ஏன் மு்னனாள் கிரிக்கெட் வீரர்களின் உதவியோடு தேர்வு நடத்திய உண்மையான இந்திய அணியைத் தேர்வு செய்யக் கூடாது..?

    ReplyDelete
  181. பலரும் பலவிதமாக கருத்துக்களை சொல்றாங்க இதுவே இலங்கையில் இல்லாம தமிழ்நாட்டுல நடந்திருந்தா நாம் எல்லோரும் கூடி இந்தியா கோப்பைய வாங்கியதை கொண்டாடி இருப்போமா? அவங்கவங்களுக்கு வந்ததுன்னா தெரியும் வழியும் வேதனையும்

    ReplyDelete
  182. [[[Manitha said...

    பலரும் பலவிதமாக கருத்துக்களை சொல்றாங்க. இதுவே இலங்கையில் இல்லாம தமிழ்நாட்டுல நடந்திருந்தா நாம் எல்லோரும் கூடி இந்தியா கோப்பைய வாங்கியதை கொண்டாடி இருப்போமா? அவங்கவங்களுக்கு வந்ததுன்னா தெரியும் வழியும் வேதனையும்.]]]

    நிஜம்தான். மக்கள் மிகப் பெரிய சுயநலவாதிகளாக உருமாறிக் கொண்டேயிருக்கிறார்கள்..! தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை என்றைக்கு இவர்கள் உணர்கிறார்களோ.. அதுவரையில் இந்த போலிகளின் ஆட்டம் தொடரும்..!

    ReplyDelete
  183. படித்த பின்னுட்டத்தில் பிடித்தவை
    -----------------------
    /**
    வழக்கறிஞர் சுந்தரராஜன் said...
    அன்பு சகோதரரே!

    ஒரு பதிவின் மூலம் சிலரை சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.

    ஒத்த கருத்து கொண்டவர்களை அடையாளம் காட்டி இருக்கிறீர்கள்.

    நன்றி.
    **/

    /**
    [[[basheer said...

    போலி தேசிய நரிகளின் ஊளைச் சத்தம் இன்று கொஞ்சம் பலமாக கேட்கிறதே.]]]

    அது போலி இல்லை. அறியாமை.. அவர்களே தங்களது வாழ்க்கையில் உணர்ந்தால் மட்டும்தான் இதனைப் பெற முடியும்..!
    **/


    /**
    [[[கல்வெட்டு said...
    தேச மக்களின் நலன்தான் தேசியம் என்பது தெரிந்து இருந்தால் 500 மீனவன் செத்ததிற்கு காரணமான நாட்டுடன் சேர்ந்து விளையாட விசில் அடித்து கொண்டாடுவார்களா?]]]

    சூப்பரண்ணே..! இந்த வார்த்தைகள்தான் எனக்குச் சிக்காமல் போய்விட்டது..

    விளையாட்டாக விளையாட்டாக பார்க்க வேண்டும் என்றாலும், உயிர்கள் பலியாவதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாதே..

    அவர்களுக்காக நம்மைத் தவிர வேறு யார் கவலைப்படுவார்கள்..?
    **/

    /**

    [[[AALUNGA said...

    //இந்தியாவை இணைப்பதினால் தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்திருக்கிறது..?//

    டேய்... நீ இவ்வளவு சுதந்திரமா இங்க எழுதுறனா அது இந்தியாக்கு மொத்தமா கிடைச்ச சுதந்திரத்தாலதான். அதுவே உனக்கு புரியலயா?]]]

    ஆஹா.. எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு.. இதை நீங்க சொல்லித்தான் ஸார் நான் என் வாழ்க்கைல முதல் முறையா தெரிஞ்சுக்குறேன்.. தேங்க்ஸ்..!

    [[[எங்க சீனாவுக்கு போய் இப்படி சீன அரச விமர்சிச்சு எழுதிடு பார்ப்போம்!!]]]

    அடக் கண்றாவியே.. என்னை நிரூபிக்க நான் சீனாவுக்குப் போகணுமாக்கும்..!

    [[[எழுத்து சுதந்திரம் வேணும். ஆனா, வாங்கி குடுத்த இந்தியா வேணாம். உன்னயெல்லாம் நாடு கடத்தணும்!!]]]

    அதைத்தான் நாங்களும் சொல்றோம். இந்தியா வேணும்னா விந்திய மலைத் தொடருக்குப் போயிருங்களேன்.. யார் உங்களை இங்க இருக்கச் சொன்னது..?
    **/

    /**
    உண்மைத்தமிழன் said...
    [[[ரிஷி said...

    பரந்துபட்ட இந்த தேச மக்களை இன்று அரசியலோ, கலைகளோ, சினிமாக்களோ ஒன்றிணைப்பதில்லை. விளையாட்டுதான் இணைக்கிறது. அது இருந்துவிட்டுப் போகட்டுமே!!]]]

    தமிழர்களை மனிதர்களாகவே மதிக்காத இந்த இந்திய தேசியம் நமக்குத் தேவையா..?
    **/

    /**
    உண்மைத்தமிழன் said...
    [[[பல்பம் said...

    என்னோடு கருத்தினை நீங்க திருடி விட்டீர்கள். :) அந்த அளவுக்கு ஒற்றுமை. நீங்கள் எழுதிய 90% சதவித கருத்துக்கள் கடந்த இரண்டு வாரமாக என் நண்பர்களிடம் நான் புலம்பிக் கொண்டிருந்தேன்.]]]

    ஒருமித்தக் கருத்துக் கொண்டமைக்காக எனது வாழத்துகளும் நன்றிகளும்..!
    **/

    /**
    [[[Ram said...

    //நானும் மிகச் சமீபம் காலம்வரையிலும் நல்ல இந்தியனாகத்தான் இருந்து வந்தேன். சில, பல உண்மைகளை நேரில் அறியும்வரையிலும்.. படித்தறியும்வரையிலும் உண்மையான தேச பக்தனாகத்தான் இருந்து தொலைந்தேன்.. ஆனால் இப்போது இந்தியன் என்கிற அடையாளத்தை வெறுத்து ரொம்ப நாளாச்சு..//

    இந்திய அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், இந்தியன் என்ற உணர்வு உனக்கு ஏன் போக வேண்டும்? அப்படி போன பிறகும் உம்மை யார் இங்கு இருக்கச் சொல்வது?]]]

    வேறு எங்கே போவது.. நான் பிறந்த மண் இதுதானே..?
    **/

    /**
    உண்மைத்தமிழன் said...
    இலங்கை மீது அனைத்து வகையிலும் தடை விதித்து அதனை தனிமைப்படுத்தி ஈழ விஷயத்தில் அந்த மக்களுக்கு இந்திய அரசு உதவியிருக்க வேண்டும்..!
    **/

    /**
    உண்மைத்தமிழன் said...
    [[[Ramesh said...

    இதைத்தான் நானும் கொஸ்டீன் கேக்குறேன்.. இந்தியாவை இணைப்பதினால் தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்திருக்கிறது..?

    - Ippadiye seperate senchute poonga. tamilan. en jadhi. en kodumbam. naan. en kannu. athukula irukiya pupil nu. ennatha solrathu poonga.]]]

    அடிமையாக இருக்கிறோம் என்பதை உணராமலேயே இருப்பதைத்தான் சந்தோஷம் என்கிறீர்கள்..! அப்படியே இருங்கள்..!
    **/

    /**
    உண்மைத்தமிழன் said...
    [[[kama said...

    நான் உங்களது கருத்தில் முழுவதுமாக உடன்படுகிறேன். நீங்கள் மிக மட்டமாக பின்னூட்டம் இடுபவர்களை கவனத்தில் கொள்ளவேண்டாம். கூட்டிக் கொடுக்கும் காட்டிக் கொடுக்கும் களவாணிகள் உலகில் எங்கும் உண்டு. அதில் இந்தியாவும் ஒன்று.

    (ஈழ விஷயத்தில்...உ.ம். ராஜா ராஜேந்திரா.. கருணாநிதி)]]]

    நன்றி காமா.. ஈழ மக்களைக் கொன்றொழித்ததில் ராஜபக்சேவுக்கு இருக்கும் அதே பங்களிப்பு இந்திய அரசுக்கும் உண்டு.. தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இருவரும்தான்..!
    **/

    ReplyDelete
  184. மிக பிடித்தவை
    ----------
    /***
    உண்மைத்தமிழன் said...
    "நம் ஒற்றுமை" என்று நீங்கள்தான் கூறுகிறார்கள்.. அவர்கள் சொல்லவில்லையே..? இல்லையெனில் ராஜபக்சே திருப்பதிக்கும், மும்பைக்கும் ராஜமரியாதையோடு வந்து சென்றிருக்க முடியுமா..?

    "நம் வீரர்கள்" என்று நீங்கள் சொல்லியிருப்பதிலேயே உங்கள் நிலைப்பாடு புரிகிறது. இதற்கு மேல் நான் எது சொன்னாலும் உங்களுக்குப் புரியாது. விட்டுவிடுங்கள்..!

    இந்தியாவை இணைப்பதினால் தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்திருக்கிறது..?

    கல்வெட்டு said...
    தேச மக்களின் நலன்தான் தேசியம் என்பது தெரிந்து இருந்தால் 500 மீனவன் செத்ததிற்கு காரணமான நாட்டுடன் சேர்ந்து விளையாட விசில் அடித்து கொண்டாடுவார்களா

    ***/

    /---
    ஈழத்தமிழர்களைப் பற்றித்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இங்கே காவிரித்தண்ணீரைக்கூடத்தான் கர்நாடகாவிடமிருந்து சண்டையிட்டுப் பெறவேண்டியிருக்கிறது. முல்லைப்பெரியாரில் கேரளா சண்டையிடுகிறது. ஏதாவது தேவையென்றால் சண்டையிட்டுத்தான் நாம் பெற்றாக வேண்டும். அதற்காக இந்திய தேசியமே வேண்டாமென்று ஒதுங்கிப்போவது அழகல்ல.
    ---/
    இதுதான் தமிழனின் பலகீனம்.உதவாத தேசியத்தை வைத்து என்ன செய்றது
    தமிழர்கள் இந்தியாவை ஒருதலையாக காதிலிக்கிறான்
    அது அவனை முற்றிலும் புறக்கணிக்கிறது, இருந்தாலும் என் காதல் உண்மையானது என்று சொல்லி
    தன் வாழ்கையை(இனத்தின் வாழ்க்கையும் சேர்த்து) எமாற்றி கொண்டுயிருக்கிறான்.
    /---
    இந்திய அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், இந்தியன் என்ற உணர்வு உனக்கு ஏன் போக வேண்டும்? அப்படி போன பிறகும் உம்மை யார் இங்கு இருக்கச் சொல்வது
    ---/
    அதைதான் கேட்கிறோம் தமிழர்கள் என்ன அனாதைகளா, இல்ல பிழப்பு தேடி வந்தேறியவர்களா,
    இல்ல தில்லிஅரசாங்கம் தன் சொந்த காசு கொடுத்து தமிழர்களை வாழவைத்து கொண்டிருக்கிருக்கிறதா
    இந்தியாவுக்கு தமிழர்களை பாதுகாக்க துப்பில்லை என்றால்
    பின்ன என்ன இதுக்காக தமிழர்களிடம் வரி பணத்தை வாங்குகிறார்கள்.
    தமிழ்நாட்டை தமிழர்களிடமே கொடுத்துவிட வேண்டியதானே தமிழர்களை பாதுகாக்க தமிழர்களுக்கு தெரியும்.
    உங்க வீட்டில் யாரவது மீன் படிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்படை சுட்டு கொன்றால் இதுபோல்தான் பேசிகொண்டிருப்பிர்களா.
    /**** கடைசி கேள்வி இதே கதி இந்தி பேசும் மக்களுக்கு நேர்ந்திருந்தால் இந்திய அரசு சும்மா இருந்திருக்குமா, இல்ல எதிர்கட்சிதான் சும்மாயிருந்திருக்குமா, உச்ச நீதிமன்றம் சும்மாயிருந்திருக்குமா, தேசிய ஊடகங்கள் சும்மாயிருந்திருக்குமா ****/
    அப்ப தமிழன் உயிர் எல்லாம் என்ன மயிரா.

    ReplyDelete
  185. [[[அதைதான் கேட்கிறோம் தமிழர்கள் என்ன அனாதைகளா, இல்ல பிழப்பு தேடி வந்தேறியவர்களா,
    இல்ல தில்லி அரசாங்கம் தன் சொந்த காசு கொடுத்து தமிழர்களை வாழ வைத்து கொண்டிருக்கிருக்கிறதா?
    இந்தியாவுக்கு தமிழர்களை பாதுகாக்க துப்பில்லை என்றால்
    பின்ன என்ன இதுக்காக தமிழர்களிடம் வரி பணத்தை வாங்குகிறார்கள்.
    தமிழ்நாட்டை தமிழர்களிடமே கொடுத்துவிட வேண்டியதானே தமிழர்களை பாதுகாக்க தமிழர்களுக்கு தெரியும். உங்க வீட்டில் யாரவது மீன் படிக்க செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படை சுட்டு கொன்றால் இதுபோல்தான் பேசி கொண்டிருப்பிர்களா?

    கடைசி கேள்வி இதே கதி இந்தி பேசும் மக்களுக்கு நேர்ந்திருந்தால் இந்திய அரசு சும்மா இருந்திருக்குமா, இல்ல எதிர்கட்சிதான் சும்மாயிருந்திருக்குமா, உச்ச நீதிமன்றம் சும்மாயிருந்திருக்குமா, தேசிய ஊடகங்கள் சும்மாயிருந்திருக்குமா? அப்ப தமிழன் உயிர் எல்லாம் என்ன மயிரா.]]]

    புகல்..

    நீங்கள் கேட்டவைகள் அனைத்தும் சரியான கேள்விகள்தான்..!

    ஆனால் இந்திய மாயை இவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது..! இவர்களுக்கு பதில் சொல்ல வராது.. தெரியாது.. என்னைப் போல ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உண்மையை உணர்வார்கள்..!

    ReplyDelete