Pages

Sunday, March 27, 2011

லஞ்சம் பெற்று சட்டத் திருத்தம் செய்த கருணாநிதி - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

27-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரப் பத்திரிகையில் 'இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்' என்கிற தலைப்பில் 'தஞ்சை ஆச்சிமுத்து' என்பவர் தொடர் கட்டுரை எழுதி வருகிறார்.

இதில் இந்தியாவின் மிக முக்கிய ஊழல்களான முந்த்ராவில் ஆரம்பித்து ஸ்பெக்ட்ரம்வரையிலும் பட்டியலிடப் போவதாக அறிவிப்பு வந்திருந்தது. அந்த வரிசையில் தற்போது சர்க்காரியா கமிஷன் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன..

தனி நபருக்காக கையூட்டு பெற்றுக் கொண்டு சட்டத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை அண்ணாவுக்குப் பிறகான தி.மு.க. ஆட்சியில் முதல்வரான கலைஞர் கருணாநிதி செய்து காண்பித்திருக்கிறார் என்று சர்க்காரியா கமிஷன் குற்றம் சாட்டியிருப்பதை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் கட்டுரையாளர்.

சென்னை அண்ணா சாலையில் இருக்கும் பழைய அலங்கார் தியேட்டர் பில்டிங் தனக்கு வேண்டிய வரதராஜ பிள்ளை என்பவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக முரசொலி மாறன் மற்றும் ப.உ.சண்முகம் மூலமாக கையூட்டுப் பெற்றுக் கொண்டு சட்டமன்றத்தில் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றி அதன் மூலம் கருணாநிதி பண ஆதாயம் அடைந்திருப்பதை சர்க்காரியா கமிஷன் வெளிப்படுத்தியுள்ளது. அதன் முழு விபரம் இங்கே..

கடந்த கால வரலாறுகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நமது வாரிசுகளுக்கும் நல்லதாச்சே. அவசியம் படியுங்கள் தோழர்களே..!

முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம்வரை - பகுதி - 16

'சர்க்காரியா' என்ற பெயரைக் கேட்டால் இன்றும் தி.மு.க.வினருக்கு கிலி எடுக்கும். அப்படி பயமுறுத்தும் அளவுக்கு அது யார் சர்க்காரியா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அவர் ரஞ்சித்சிங் சர்க்காரியா..! உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற திறமையான, நியாயமான நீதிபதி..!

1975 ஜூன் 15 இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். அன்றுதான் இந்திராகாந்தியால் நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 1976-ல் தி.மு.க. அரசை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்கிறார். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டவுடன் உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் தி.மு.க. அரசின் ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார் இந்திராகாந்தி.

நீதிபதி சர்க்காரியா ஒரு நீண்ட விசாரணையை நடத்தி தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். இந்த விசாரணை அறிக்கையும் மற்ற ஊழல் விசாரணைகளைப் போலவே கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும், அன்றைய தி.மு.க. ஆட்சி நிர்வாகம் எப்படி இருந்தது என்பதையும் அந்த விசாரணை அறிக்கை தெளிவாகத் தெரிவிக்கிறது.

தி்.மு.க. ஆட்சி நடத்திய லட்சணம் தெரிந்துவிடும் என்பதற்காக அந்த அறிக்கையின் நகல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. நெருக்கடி நிலையின் அத்துமீறர்களை விசாரிப்பதற்கென்று அமைக்கப்பட்ட ஷா கமிஷனின் அறிக்கையை இந்திராகாந்தி இது போலத்தான் ஒரு நகல் விடாமல் அழித்துவிட்டதாகத் தெரிகிறது. முன்னாள் ஜனதா கட்சித் தலைவர் செழியனின் முயற்சியால் அந்தப் புத்தகம் இப்போது புதிய வடிவில் கிடைக்கிறது. ஆனால் சர்க்காரியா கமிஷன் அறிக்கைக்கு அந்த பாக்கியமெல்லாம் இல்லை. ஏறக்குறைய அனைத்து நகல்களுமே அழிக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க.வின் ஆட்சியில் அதிகாரிகள் நடவடிக்கை குறித்து சர்க்காரியா இவ்வாறு கூறுகிறார்..

"சில முதுநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தாங்கள் தவறாக நடக்கிறோம் என்று தெரிந்தே கடமையில் இருந்து தவறியுள்ளார். அமைச்சர் வாய் மொழியாகப் பிறப்பித்த கட்டளைகளை நிறைவேற்றியதைத் தவிர வேறு வழி ஏதும் தங்களுக்கு இல்லை” என்று அவர்கள் கூறியுள்ளனர். அமைச்சர் சார்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி லஞ்சம் வாங்கித் தரும் ஆளாக தங்களைப் பயன்படுத்திக் கொள்வதை அவர்கள் அனுமதித்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் அமைச்சரின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும் என்பதற்காக முறை தவறிச் செயல்பட்டிருக்கிறார்கள். அசட்டையாகவும், மெத்தனமாகவும் அஞ்சிச் சாகும் கோழைகளாகவும் உள்ள இத்தகைய அரசு அதிகாரிகளால் அதிகார வர்க்கம் முழுவதும் நேர்மை கெட்டுவிடுகிறது. அதனால் அவர்களிடம் பரிவு எதுவும் காட்ட வேண்டியதில்லை.." என்று காட்டமாகக் குறிப்பிடுகிறார்.

சர்க்காரியா நடத்திய விசாரணையில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வழக்கமாக விசாரணை கமிஷன்களுக்கென்று ஒரு அளவுகோல் உண்டு. அந்த கமிஷனை அமைத்த ஆட்சியாளர்கள் என்ன விரும்புகிறார்களோ அவ்வாறே அறிக்கை கொடுப்பதற்கு வசதியாக நீதிமன்றங்களில் கடைப்பிடிக்கப்படும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்ற அளவுகோலைப் பின்பற்றாமல் தங்கள் இஷ்டத்திற்கு விசாரணையை நடத்துகிறார்கள்.

ஆனால் சர்க்காரியா, ஒரு குற்றவியல் நீதிமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளையும் தவறாமல் கடைப்பிடித்தார். பூர்வாங்கமான ஆதாரங்கள் பல குற்றச்சாட்டுக்களில் இருந்தும், சந்தேகத்திற்கு இடமில்லாவகையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று பல குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.

இவ்வளவு சிறப்பாக விசாரணை நடத்தி, கொடுக்கப்பட்ட அறிக்கை அரசியல் காரணங்களுக்காக குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. நெருக்கடி நிலைக்குப் பிறகு, தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது. இதனால் இந்த விசாரணைக் கமிஷனின் பரிந்துரையை குப்பையில் போட்டார் இந்திராகாந்தி.


அப்போதைய நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன தெரியுமா..? தி.மு.க., இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்ததால், சர்க்காரியா விசாரணையை கல்லறைக்குள் புதைத்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார் இந்திரா. இன்றும் தி.மு.க. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறது. ஆனால் ஸ்பெக்ட்ரம் விசாரணையில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் அந்த அளவுக்கு உதவி செய்யவில்லை. மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் என்பது போல உதவி செய்கிறோம். ஆனால் செய்ய மாட்டோம் என்று தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது. அவர் இந்திரா. இவர் தந்திரா இல்லையா..?

உச்சநீதிமன்றம் என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால் ஸ்பெக்ட்ரம் விசாரணையும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை புதைக்கப்பட்ட அதே கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கும்.

புதைக்கப்பட்ட அந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை..!

உங்களுக்கு பரம்பரைக் கட்டிடம் ஒன்று இருக்கிறது.. அந்தக் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக ஒருவர் குடியிருக்கிறார். அந்தக் கட்டிடத்தில் வைத்து அவர் தொழில் செய்வதால், அவருக்கு மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் உங்களுக்கு அவர் வருடத்துக்கு 10 ஆயிரம் ரூபாய்தான் வாடகை தருகிறார் என்றால் ஒப்புக் கொள்வீர்களா..? இதே கதைதான் சென்னை அண்ணா சாலையில் இருந்த க்ளோப் தியேட்டரின் கதையும்..

அண்ணா சாலை எல்.ஐ.சி. அருகே ஒரு பெரிய கட்டிடம் இருக்கிறதல்லவா? அது, முதலில் குளோப் தியேட்டராக இருந்து நியூ க்ளோபாக மாறி, பிறகு அலங்கார் தியேட்டராக மாறி இப்போது வணிக வளாகமாக ஆகியிருக்கிறது..

அந்தக் கட்டிடம் குஷால்தாஸ் என்பவரின் பரம்பரைச் சொத்தாகும். அந்தக் கட்டிடத்தை வரதராஜபிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால்தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். ஆனால் தியேட்டர் நடத்துவதால் வரதராஜனுக்கு வாரந்தோறும் 8000 ரூபாய் வருமானம் வருகிறது. அதாவது ஆண்டுக்கு 4,14,000 ரூபாய் வரதராஜப் பிள்ளைக்குக் கிடைக்கும்.

இந்த வருமானத்தைப் பார்த்தும், எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை முடிவடைந்ததும் குத்தகையை புதுப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்.. வாரம் 8000 ரூபாய் வருமானம் பார்க்கும் வரதராஜபிள்ளை விடுவாரா? கட்டிடத்தை எனக்கே விற்றுவிடுங்கள் என்று அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்குச் செல்கிறது. ஊச்சநீதிமன்றம், குஷால்தாஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறது. அது மட்டுமில்லாமல், ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.


கட்டிடத்தின் மீதிருந்த ஆசையால் சட்டத்தையே மாற்ற நினைத்த வரதராஜன், தி.மு.க. அரசின் அதிகார மையங்களை அணுகுகிறார். அப்போதெல்லாம் அமைச்சர்களும், அதிகார மையங்களாக இருந்தார்கள். முக்கிய அதிகார மையமாக முரசொலி மாறன் இருந்தார்.


சர்க்காரியா கமிஷனில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின்படி வரதராஜப் பிள்ளை முதலில் முரசொலி மாறனை அணுகுகிறார். அவர் அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்குமாறு அறிவுறுத்துகிறார். ப.உ.சண்முகம், சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கிறார். முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் ப.உ.சண்முகத்துக்கு கொடுக்கப்படுகிறது.

அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த வரதராஜப் பிள்ளையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டால் வெறும் 40 ஆயிரம்தான் கொடுத்திருக்கிறீர்கள்.. சட்டத்தைத் திருத்த மேலும் 60 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என்று கருணாநிதி கூறியதாகவும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் வரதராஜப் பிள்ளை தன்னிடம் 60 ஆயிரம் இல்லை என்றும், 30 ஆயிரம்தான் மேற்கொண்டு தர முடியும் என்றும் சொல்கிறார். அதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி 30 ஆயிரம் ரூபாயை ஒரு பழுப்பு நிறக் கவரில் வைத்து பெற்றுக் கொண்டதாகவும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகவே மந்த கதியில் செயல்படும் அரசு இந்திரம் இந்தப் பணத்தைப் பெற்ற பிறகு மின்னல் வேகத்தில் செயல்பட்டது. உடனடியாக சட்டப் பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டிய வரைவுச் சட்டம் முதல் நாள்தான் கொடுக்கப்படுகிறது.

இதைப் பற்றி அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த டாக்டர் ஹெண்டே, சர்க்காரியா கமிஷன் முன் சாட்சியம் அளித்தார். அவசரம், அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டு தபாலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் தாமதமாகும் என்று ஒரு அதிகாரி விமானத்தில் டெல்லி சென்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று வந்தார்கள். இந்தச்சட்டத் திருத்தத்தின் மூலம் ஒரிஜினல் உரிமையாளரிடம் சேர வேண்டிய சொத்து ஆட்டையைப் போட்டவருக்கு வந்து சேர்ந்தது. இத்தோடு இந்தக் கொடுமை முடியவில்லை..

இந்தச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் வரதராஜப் பிள்ளை நிலத்தை தான் நிர்ணயிக்கும் விலைக்கு தனக்கே விற்க வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றங்களை அணுகுகிறார். ஆனால் உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்ததையடுத்து உச்சநீதிமன்றம் செல்கிறார். அங்கே வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் தி.மு.க.வின் அதிகார மையத்தை அணுகுகிறார்.

அவரது விருப்பத்தின்படி, மீண்டும் இரண்டாவது முறையாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இது பற்றிக் குறிப்பிடும் சர்க்காரியா, “முதல் திருத்தத்தின் விளைவாக தனது நோக்கம் ஈடேற முடியாத வரதராஜ பிள்ளைக்காகவே இந்த இரண்டாவது திருத்தமும் செய்யப்பட்டது என்பதை இது வெளிப்படையாகக் காட்டுகின்றது” என்று கூறுகிறார்.

இந்த விசாரணையி்ன முடிவில், நீதிபதி சர்க்காரியா, “இந்தச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து விவாதித்து நிறைவேற்றுவதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும், உணவு மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ப.உ.சண்முகமும், சட்டத் துறை அமைச்சர் மாதவனும், வரதராஜப் பிள்ளைக்கு மறைமுகமாக உதவ வேண்டும் என்ற தீய நோக்கத்துக்காக உத்தரவிட்டிருக்கின்றனர்” என்று கூறுகிறார்.

சட்டமன்றத்தையும், சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் தனி நபரின் நலனைக் கருத்திக் கொண்டு தி.மு.க.வினர் எப்படியெல்லாம் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா..?

இந்தக் கதை இன்றுவரை தொடர்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கிரவுண்டு நிலங்கள் மகாபலிபுரம் அருகே என்று அறிவித்தபோது மார்க்சிஸ்ட் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி அது நிறைவேற்றப்பட்டது.

சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்காக ஆஜரானவர் பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷன். ஆனால் தற்போது  உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை ஒழுங்காக நடைபெறுவதற்கும்,
கருணாநிதியின் குடும்பத்தினர், சி.பி.ஐ.யால், விசாரிக்கப்படுவதற்கும் காரணமான முக்கியமான வழக்கை தாக்கல் செய்து அதில் வாதிட்டுவருவது இதே சாந்திபூஷனின் மகன் பிரசாந்த் பூஷன்தான் என்பது காலத்தின் கோலம்தானே..?

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் - 24-03-2011

இனி நான்..!

ஷா கமிஷன் அறிக்கைகூட தற்போது மிகப் பெரும் புத்தகமாக அச்சிடப்பட்டு மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் சர்க்காரியா கமிஷனின் அறிக்கை தற்போது சட்டப் பேரவை நூலகத்தில்கூட கிடைக்கவில்லை என்றுதான் நான் விசாரித்த மூத்த பத்திரிகையாளர்கள்கூட சொல்கிறார்கள்..

இந்தக் கட்டுரையில் கட்டுரையாளர் விவரிக்காமல் விட்டுப் போன விஷயம் ஒன்று.. அது கருணாநிதி கொண்டு சட்டத் திருத்தத்தின் வாசகங்கள் என்ன என்பதுதான்..! நானும் இதனை மேற்கொண்டு விசாரித்துப் பார்த்தேன்.

அதாவது, "15 வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தை அனுபவித்து வரும் ஒருவர், அதே இடம் விற்பனைக்கு வரும்போது அதனை வாங்குவதற்கு முதல் உரிமையுள்ளவர் என்றும், இடத்தின் உரிமையாளர் இடத்தை விற்பதாக முடிவெடுத்தால், முதலில் அதன் தற்போதைய குத்தகைதாரர் அல்லது அதனை அனுபவித்து வருபவருக்கே விற்க வேண்டும். அவர் வாங்க மறுத்தால் மட்டும்தான், வெளி நபர்களுக்கு விற்க வேண்டும் என்பதாக இருந்தது" என்கிறார்கள்..

இதில் வரதராஜ பிள்ளைக்காகச் சேர்க்கப்பட்ட இரண்டாவது சட்டத் திருத்தத்தில்தான் "குத்தகைதாரர் அல்லது அனுபவித்து வருபவர் கேட்கும் விலைக்கே இடத்தை விற்க வேண்டும்..' என்கிற வாசகங்கள் சேர்க்கப்பட்டது" என்கிறார்கள். 

'நெஞ்சுக்கு நீதி'யை தலைகீழாகப் புரட்டிப் பார்த்துவிட்டேன்.. சர்க்காரியா கமிஷனின் இந்தக் குற்றச்சாட்டுக்களை பொய் என்று சொல்லி எந்த ஆதாரத்தையும் தாத்தா அதில் வைக்கவில்லை. ஆகவே, அந்த 'நெஞ்சுக்கு நீதி'யை நம் 'நெஞ்சுக்கு அநீதி'யாக்கி நடந்த உண்மைகளை உணர்ந்து கொள்வோம்..!

அண்ணா நாமம் வாழ்க..!

பெரியார் நாமம் வாழ்க..!

50 comments:

  1. கருணாநிதி அரசின் ஐந்தாண்டு சாதனைகள் :
    1.ஸ்பெக்ட்ரம் மூலம் ஒருலட்சத்து எலுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் சுருட்டியது (அமெரிக்க பத்திரிக்கை வரை தமிழனை அறிமுகபடுத்தியது)
    2.இரண்டு மகன்கள் ஒரு மகள் பேரன் முதலானோருக்கு பதவி
    3.குடும்ப சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது
    4.ஐந்தாண்டுகளில் 634 பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்கியது
    6.ஐந்தாண்டுகளில் ஏழு உலக புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது
    7.ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
    8.கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்காமல் அடுத்த கட்சியினரை விலைக்கு வாங்கியது (மதிமுக கூட்டரத்தையே காலி பண்ணிய புண்ணியவான்)
    9.ஒட்டு மொத்த ஊடகத்தையும் (பத்திரிக்கை ,தொலைக்காட்சி உட்பட) தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
    10.ஓட்டுக்கு பணம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கே அறிமுகபடுத்தியது
    11.ஐந்தாண்டு காலம் தினம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் (சென்னையை தவிர) இதுதான் மிகப்பெரிய சாதனை
    12.பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரம் ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசு இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு
    13.அரைமணி நேரம் உண்ணாவிரதம் (கின்னஸ் சாதனை இதுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை) இருந்து இலங்கை போரை நிறுத்தியதாக நாடகம் ஆடியது
    14.அரசு பணத்தை செலவு செய்து கோவையில் குடும்ப மாநாடு நடத்தியது(தனது குடும்பம் மட்டும் பார்த்து ரசிக்க தனி மேடை)
    15.அரசு பணத்தில் இலவச டிவி கொடுத்து கேபிள் இணைப்பை தனது பேரன்கள் மூலம் குடுத்து (சுமங்கலி கேபிள், ராயல் கேபிள்) குடும்ப வருமானத்தை பெருக்கியது
    16.மனைவி, துணைவி, பெரியமகன், சின்னமகன், பேரன்கள், ஆகியோர் இடையே சண்டை சச்சரவுகள் வராமல் தமிழ் நாட்டை தனித்தனி மண்டலங்களாக பிரித்து கொடுத்தது (ஐந்தாண்டு காலம் இவர் இதற்க்கு தான் அதிக நேரம் செலவிட்டார்)
    17.இலவசங்கள் கொடுத்து ஆட்சியை பிடிக்கலாம் என நிரூபித்த மேதை
    இன்னும் நிறைய சாதனைகள் செய்துள்ளார் எழுதிக்கொண்டே போகலாம் தமிழக மக்களே மீண்டும் இவரை ஆறாவது முறையாக முதல்வராக்கினால் இது போல் நிறைய சாதனை செய்வார். திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் மீண்டும் திருவாரூக்கே போகிறார் மன்னனாக.

    ReplyDelete
  2. கருணாநிதி அரசின் ஐந்தாண்டு சாதனைகள் :
    1.ஸ்பெக்ட்ரம் மூலம் ஒருலட்சத்து எலுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் சுருட்டியது (அமெரிக்க பத்திரிக்கை வரை தமிழனை அறிமுகபடுத்தியது)
    2.இரண்டு மகன்கள் ஒரு மகள் பேரன் முதலானோருக்கு பதவி
    3.குடும்ப சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது
    4.ஐந்தாண்டுகளில் 634 பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்கியது
    6.ஐந்தாண்டுகளில் ஏழு உலக புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது
    7.ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
    8.கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்காமல் அடுத்த கட்சியினரை விலைக்கு வாங்கியது (மதிமுக கூட்டரத்தையே காலி பண்ணிய புண்ணியவான்)
    9.ஒட்டு மொத்த ஊடகத்தையும் (பத்திரிக்கை ,தொலைக்காட்சி உட்பட) தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
    10.ஓட்டுக்கு பணம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கே அறிமுகபடுத்தியது
    11.ஐந்தாண்டு காலம் தினம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் (சென்னையை தவிர) இதுதான் மிகப்பெரிய சாதனை
    12.பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரம் ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசு இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு
    13.அரைமணி நேரம் உண்ணாவிரதம் (கின்னஸ் சாதனை இதுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை) இருந்து இலங்கை போரை நிறுத்தியதாக நாடகம் ஆடியது
    14.அரசு பணத்தை செலவு செய்து கோவையில் குடும்ப மாநாடு நடத்தியது(தனது குடும்பம் மட்டும் பார்த்து ரசிக்க தனி மேடை)
    15.அரசு பணத்தில் இலவச டிவி கொடுத்து கேபிள் இணைப்பை தனது பேரன்கள் மூலம் குடுத்து (சுமங்கலி கேபிள், ராயல் கேபிள்) குடும்ப வருமானத்தை பெருக்கியது
    16.மனைவி, துணைவி, பெரியமகன், சின்னமகன், பேரன்கள், ஆகியோர் இடையே சண்டை சச்சரவுகள் வராமல் தமிழ் நாட்டை தனித்தனி மண்டலங்களாக பிரித்து கொடுத்தது (ஐந்தாண்டு காலம் இவர் இதற்க்கு தான் அதிக நேரம் செலவிட்டார்)
    17.இலவசங்கள் கொடுத்து ஆட்சியை பிடிக்கலாம் என நிரூபித்த மேதை
    இன்னும் நிறைய சாதனைகள் செய்துள்ளார் எழுதிக்கொண்டே போகலாம் தமிழக மக்களே மீண்டும் இவரை ஆறாவது முறையாக முதல்வராக்கினால் இது போல் நிறைய சாதனை செய்வார். திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் மீண்டும் திருவாரூக்கே போகிறார் மன்னனாக.

    ReplyDelete
  3. தி(ருடர்) முக-வின் அல்லக்கைகள் எங்கிருந்தாலும் உடனே வரவும்...

    ReplyDelete
  4. இந்த முறை தேர்தல் முடிவு வரும் போது என் நினைப்பு உங்க மேலத்தான் இருக்கும் அண்ணே. பார்க்கலாம்.

    ReplyDelete
  5. 'குமுதம் ரிப்போர்ட்டர்' - i dont belive this.

    what happen to 'குமுதம் ரிப்போர்ட்டர்' .

    ReplyDelete
  6. //இனி நான்..!//

    இந்த வசனத்தை வேறு எங்கோ கேட்ட மாதிரி இருக்குதே:)

    ReplyDelete
  7. //முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம்வரை//

    முந்துடா முதலில் ஸ்பெக்ட்ரம்ன்னு சொல்லி விட்டு கைப்புள்ளய களி திங்க வச்சுட்டாங்களே?

    ReplyDelete
  8. ராசா களி திங்கறதும் கூட அனுமானம் (பெர்ஷப்சன்)பேர்லதான்,ஸ்பெக்ட்ரம் ஒன்றும் நிரூபிக்கப்படவில்லைன்னு கனியக்கா நேத்து ஒரு போடு போட்டாங்களே!

    சர்க்காரியாவையே கடந்து வந்தாச்சு!ஸ்பெக்ட்ரமும் கடப்போம்.

    ReplyDelete
  9. இந்த தபா இவருக்கு ஒட்டு போடுங்க!
    25 வருடங்களுக்கு ஒரு முறைதான் தேர்தல்ன்னு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து அதை உதவாக்கரை சிங்கும் அங்கீகரிப்பார் பாருங்க!

    ReplyDelete
  10. sarkariya commision madiri, sasikala commisionayum pottingana nalla irukum.
    to அ(சிங்கமான) தி(ருடர்) மு-க-வின் அல்லக்கை

    sasikala thunai!
    tasmac captain jeyam!

    ReplyDelete
  11. கணபதி..

    நேற்று இரவு முதல் உங்களுடைய விலை மதிக்க முடியாத முதல் பின்னூட்டம்தான் பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் அலை மோதியது..! பரவலாகப் படிக்கப்பட்டது. பலராலும் ரீஷேர் செய்யப்பட்டது.

    மிக்க நன்றி..!

    ReplyDelete
  12. [[[சீனு said...

    தி(ருடர்) முக-வின் அல்லக்கைகள் எங்கிருந்தாலும் உடனே வரவும்.]]]

    வர மாட்டாங்க..! ஏன் வராதங்களைப் பிடிச்சுத் தொங்கிக்கிட்டிருக்கீங்க..?

    ReplyDelete
  13. [[[ரிஷி said...

    :-)]]]

    நன்றி ரிஷி..

    ReplyDelete
  14. [[[ரிஷி said...

    :-)]]]

    நன்றி ரிஷி..

    ReplyDelete
  15. [[[ஜோதிஜி said...
    இந்த முறை தேர்தல் முடிவு வரும்போது என் நினைப்பு உங்க மேலத்தான் இருக்கும் அண்ணே. பார்க்கலாம்.]]]

    ஓ.. மிக்க நன்றிண்ணே..

    ReplyDelete
  16. [[[muthukumar said...

    'குமுதம் ரிப்போர்ட்டர்' - i dont belive this.

    what happen to 'குமுதம் ரிப்போர்ட்டர்'.]]]

    அவர்களை நம்பாவிட்டாலும், சர்க்காரியா கமிஷனை நான் நம்புகிறேன்..!

    ReplyDelete
  17. [[[ராஜ நடராஜன் said...

    //இனி நான்..!//

    இந்த வசனத்தை வேறு எங்கோ கேட்ட மாதிரி இருக்குதே:)]]]

    சென்ற தேர்தலின்போது கேப்டன் அதிகமாக பயன்படுத்திய வார்த்தை..!

    ReplyDelete
  18. [[[ராஜ நடராஜன் said...

    //முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம்வரை//

    முந்துடா முதலில் ஸ்பெக்ட்ரம்ன்னு சொல்லிவிட்டு கைப்புள்ளய களி திங்க வச்சுட்டாங்களே?]]]

    கைப்புள்ளையை விரைவில் அரசியலைவிட்டு ஒதுக்கும்போது அவருக்கே தெரியும்..!

    ReplyDelete
  19. [[[ராஜ நடராஜன் said...
    ராசா களி திங்கறதும்கூட அனுமானம்(பெர்ஷப்சன்) பேர்லதான். ஸ்பெக்ட்ரம் ஒன்றும் நிரூபிக்கப்படவில்லைன்னு கனியக்கா நேத்து ஒரு போடு போட்டாங்களே! சர்க்காரியாவையே கடந்து வந்தாச்சு! ஸ்பெக்ட்ரமும் கடப்போம்.]]]

    இந்தக் காலக்கட்டத்தில் அப்படிச் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். தேர்தலில் நிச்சயம் ஸ்பெக்ட்ரம் எதிரொலிக்கும்..!

    ReplyDelete
  20. [[[Ganpat said...
    இந்த தபா இவருக்கு ஒட்டு போடுங்க! 25 வருடங்களுக்கு ஒரு முறைதான் தேர்தல்ன்னு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து அதை உதவாக்கரை சிங்கும் அங்கீகரிப்பார் பாருங்க!]]]

    ஓ.. ஜெயிச்சாத்தானே..? செய்தாலும் செய்வார்..!

    ReplyDelete
  21. [[[ELANGOVAN said...

    sarkariya commision madiri, sasikala commisionayum pottingana nalla irukum.

    to அ(சிங்கமான) தி(ருடர்) மு-க-வின் அல்லக்கை

    sasikala thunai! tasmac captain jeyam!]]]

    அது போடும்போது நிச்சயம் அந்தக் கூட்டணியும் கூண்டிலேறும்..!

    ReplyDelete
  22. [[[SurveySan said...

    :|]]]

    வருகைக்கு நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  23. கிழிச்சு தொங்கவிட்டிருக்கீங்க...

    சர்க்காரியா பற்றிய முழு தகவல் பதியப்பட்டிருக்கிறது,நன்றி..

    நானே இதைப் பற்றி முழுதாக அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..நன்றி மீண்டும்..

    ஆட்டோ வரப் போகிறது,சாக்கிரதையாக இருங்க சரவணன்...

    ReplyDelete
  24. Manjoor Raja - தமிழ் நாட்டில் ஊழலை ஆரம்பித்து வைத்ததே திமுகவில் அப்போதிருந்த சிலர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


    மிக முக்கியமான ஒன்றை பலர் மறந்து விடுகின்றனர். அது:

    அறிஞர் அண்ணா தனக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சராக விரும்பவில்லை என்பதும் அவர் நெடுஞ்செழியனுக்கே முக்கியத்துவம் அளித்து வந்தார் என்பதும். ஆனால் அண்ணா இறந்தப்போது சில பல உல்டாலக்கடி வேலைகள் மூலம் கருணாநிதி முதல்வர் ஆனார் என்பதும் அக்காலத்தில் திமுகவின் தொண்டராக இருந்து, டால்மியாபுரம் (தற்போதிய கல்லக்குடி) போராட்டம் என பல போராட்டங்களில் கலந்துக்கொண்ட என் தந்தை நண்பர்களிடம் அண்ணா இறந்த நேரத்தில் பேசிக்கொண்டிருந்ததை சின்ன வயதில் கேட்டிருக்கிறேன்

    ReplyDelete
  25. DMK achievements in past 5 years is listed below, can anyone list what Jaya done in 2001-06,

    Part 1:

    விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த:
    1. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோஅரிசி ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு அதன்

    மூலமாக மாதந்தோறும் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்கள் பயனடைகிறார்கள்.

    2. குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா கோதுமை ரேஷன் கடைகள்

    மூலமாக வழங்கப்படுகின்றன.

    3. "மானிய விலையில் மளிகைப் பொருள்கள்''என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக

    வழங்கப்படுகின்றன.

    கூட்டுறவு கடன் தள்ளுபடி

    4. 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.

    5. 35 லட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள்

    வழங்கப்பட்டுள்ளன.

    6. 2005 2006ல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010 2011ல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய்;

    சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்;

    7. உழவர்களும், வாங்குவோரும் பயனடைய மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45

    உழவர் சந்தைகள் அமைப்பு;

    8. 2009 2010 ம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்றுப் பயிர்க் காப்பீடு

    செய்தனர். இதுவரை 9 லட்சத்து ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை

    வழங்கப்பட்டுள்ளது;

    9. கரும்பு விவசாயிகளுக்கு 2005 2006ல் டன் ஒன்றுக்கு வழங்கப்பட்ட விலை ரூ.1014; தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2000

    வழங்கப்படுகிறது.

    10. மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி

    குண்டாறு இணைப்புத் திட்டம்; 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத்

    திட்டம்;

    11. விவசாயிகளைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் 27 ஆயிரத்து 294

    குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப்பட்டு, 32 ஆயிரத்து 940

    குழுக்களுக்கு 402 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது.

    இலவச கலர் டி.வி.

    12. ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும்,

    சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்;

    மேலும், 2 லட்சம் பம்ப் செட்களுக்கும் இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிடப்பட்டு

    வழங்கப்படுகிறது.

    13. 3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு

    இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து

    59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

    14. 661 கோடி ரூபாய் செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள்

    வழங்கப்பட்டு உள்ளன;

    15. ஒரு லட்சத்து 79 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து

    12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம்; 8 லட்சத்து 29 ஆயிரத்து 236 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்

    பட்டா.

    ReplyDelete
  26. Part 2:

    16. 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5

    நாட்களும் முட்டைகள்; முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்;

    17. தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும்

    பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 லட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12 ம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக்

    கட்டணங்களும் ரத்து.

    18. பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின்

    படிப்புக் கட்டணங்கள் ரத்து; 2010 2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி. வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து.

    19. படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை

    வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில்

    திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை;

    20. ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 லட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும்

    இலவச பஸ் பாஸ்; ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு

    வரை நீட்டிப்பு.

    21. தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.

    22. பட்டதாரிகள் இல்லாக் குடும்பங்களிலிருந்து தொழிற் கல்லூரிகளில் சேரும் முதல் மாணவர் அல்லது முதல்

    மாணவிக்கு கல்விக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் ரத்து;

    23. "மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி'' கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை,

    பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்;

    24. அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம்,

    திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக

    அரசு பொறியியல் கல்லூரிகள்.

    25. நூறாண்டு கனவை நனவாக்கிச் "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்'' சென்னையில் அமைப்பு.

    26. நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பது 1000

    ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

    27. 4724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள்

    நடத்தப்பட்டுள்ளன;

    28. அனைத்துத் திருமண உதவித் திட்டங்களின் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக

    உயர்த்தப்பட்டு; 4 லட்சத்து 67 ஆயிரத்து 419 ஏழைப் பெண்களுக்கு 882 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதியுதவி;

    29. ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின்கீழ் 25 லட்சத்து 76 ஆயிரத்து 612

    ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதியுதவி;

    30. 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய்

    உதவித் தொகை;

    31. "வருமுன் காப்போம் திட்டம்'' மீண்டும் செயல் படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே

    77 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் ஏழை எளியோர் பயன்;

    32. தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்; புதிதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார

    நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதால்,

    அங்கு 2005 2006ல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 532 என்பது, 2009 2010ல் 2 லட்சத்து 98

    ஆயிரத்து 853

    ReplyDelete
  27. Part 3:

    கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ வசதி

    33. குழந்தைகள் உயிர் காத்திட மூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய்; சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு

    50 ஆயிரம் ரூபாய்; கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி

    வழங்கப்படுகிறது.

    34. 21.11.2007ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம், 3.6.2008ல் தொடங்கப் பட்ட பள்ளிச்

    சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின்கீழ் 3264 சிறார்க்கு 17 கோடியே 10 லட்சம்

    ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள்

    செய்யப்பட்டு, குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன.

    35. கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட 445 ஊர்திகளுடன் கூடிய அதிநவீன "அவசர

    கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்''தமிழகம் முழுவதும் நடை முறை; 8 லட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன்;

    36. அரசு ஊழியர்களுக்கு புதிய "மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்'';

    37. "உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்''; இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 744 ஏழை

    மக்களுக்கு 667 கோடி ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.

    வேலை வாய்ப்பு

    38. ஏறத்தாழ 2 லட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய்

    முதலீட்டிலான 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்;

    39. 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை

    12 தொழிற் சாலைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

    40. 4 லட்சத்து ஓராயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை

    வழங்கப்பட்டுள்ளது;

    41. ஏறத்தாழ 5 லட்சத்து 5 ஆயிரத்து 314 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள்

    வழங்கப்பட்டுள்ளன.

    42. ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் 500 ரூபாய்

    என மேலும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 23 லட்சத்து 71 ஆயிரத்து 370 பேர் மாதம் 500 ரூபாய் வீதம் உதவித்தொகை

    பெறுகின்றனர்.

    சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி

    43. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 5,54,538. இக்குழுக்களுக்கு

    வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் 9 ஆயிரத்து 32 கோடி ரூபாய். 2006க்குப்பின் 26 லட்சத்து 94 ஆயிரம் மகளிர்

    உறுப்பினரைக் கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 493 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு;

    44. 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 2,81,883 மகளிர் குழுக்களுக்கு

    வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 281 கோடியே 88 லட்சம் ரூபாய்.

    45. 19 ஆயிரத்து 885 இளைஞர் சுயஉதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களும், 11 ஆயிரத்து 155

    விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு நிதியுதவிகள் வழங்கப் படுகின்றன.

    46. நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் ரூபாய் செலவில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப்

    பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட

    அவை அரசுக்கு செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி;

    ReplyDelete
  28. ஒரு கட்டத்தில் முரசொலியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு அதை விற்க நடந்த முயற்சிகளும் மக்கள் குரல் அல்லது அலை ஓசை பத்திரிகையில் வந்த ஞாபகம்.

    ReplyDelete
  29. Part 4:

    சாலை மேம்பாடு

    47. 12 ஆயிரத்து 94 கோடி ரூபாய்ச் செலவில் 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப்

    பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப் பட்டன; 4 ஆயிரத்து 730கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள்

    இருவழித்தடங்களாக அகலப் படுத்தப்பட்டுள்ளன;

    48. தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச் சிறுபாலங்கள் 881 கோடி ரூபாய்ச் செலவில்

    கட்டப் பட்டுள்ளன; தமிழகத்தில் உள்ள 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கி.மீ நீளச் சாலைகள் 4

    வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளன;

    49. இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;

    50. அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;

    51. சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு

    சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    52. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப் பட்டுள்ள 145 பெரியார் நினைவு

    சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவ புரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச்

    சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறை; 95 சமத்துவ புரங்களில் இதுவரை 65 சமத்துவபுரங்கள் திறப்பு; 30

    சமத்துவபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

    புதிய சட்டமன்ற வளாகம்

    53. சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 181 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான "அண்ணா நூற்றாண்டு நினைவு

    நூலகம்'' திறப்பு;

    54. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம் திறந்து சாதனை;

    55. 100 கோடி ரூபாய் செலவில் அடையாறு தொல்காப்பியர் பூங்கா திட்டம்; மேம்பால

    56. சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான

    "செம்மொழிப் பூங்கா''திறப்பு;

    குடிநீர் திட்டம்

    57. சென்னை குடிநீர் பற்றாக்குறையை தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் "கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்''

    நிறைவேற்றப்பட்டு திறப்பு;

    58. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் "கடல்நீரைக்

    குடிநீராக்கும் திட்டம்;''

    59. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "மெட்ரோ

    ரெயில் திட்ட'' அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன;

    60. 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;''630 கோடி ரூபாய்ச் செலவில், "ராமநாதபுரம்

    கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றம்;''

    61. சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "பறக்கும் சாலைத் திட்டம்;''

    வேகமாக உருவாகி வருகிறது.

    62. மத சுதந்திரம் பேண "கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து;''

    63. "மூன்றாவது காவல் ஆணையம்'' மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அது

    வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந்துரைகள் நடைமுறை;

    64. 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்;

    அரசு ஊழியர்களுக்கு...

    65. டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளைகள் மீண்டும்

    வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில்

    6வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

    66. ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பயன்பெறும்வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில்

    ஒருநபர் குழு பரிந்துரை நடைமுறை;

    67. ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள்; 2.73 லட்சம்

    ஆசிரியர்கள் பயன்.

    68. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத

    அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு

    மாதந்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆணை;

    குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடு

    69. 21 லட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்''

    என்னும் புரட்சிகரமான திட்டம். மேலும் 12 லட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன

    ReplyDelete
  30. @ பிரகாஷ்

    ஹி ஹி ஹி ஹி ...,செல்ப் எடுக்காது ..

    ReplyDelete
  31. தலைவா...

    இவ்வளவு நடந்தும், இந்த கேடிகளை உலகம் நம்பிகிட்டு இருக்கோன்னு எனக்கு ஒரு டவுட்டு இருந்துகிட்டே இருக்கு...

    ReplyDelete
  32. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9036.html ஒன்னுக்கு போகாம இருக்கலாம் - ஆனால் ஓட்டுப் போடாம இருக்கலாமா ?

    ReplyDelete
  33. @ பிரகாஷ் ///
    a good list. nobody here can answer you.
    The one main thing i support karuna is, during all his terms, he has done so much for education development. even all of his budget the more spending for education. in 2011 budget, education got 13000 crores+ for education.
    i wish Jaya shd come again and Tamilnadu should see the backward again.

    ReplyDelete
  34. [[[அறிவன்#11802717200764379909 said...
    கிழிச்சு தொங்கவிட்டிருக்கீங்க...
    சர்க்காரியா பற்றிய முழு தகவல் பதியப்பட்டிருக்கிறது, நன்றி. நானே இதைப் பற்றி முழுதாக அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. நன்றி மீண்டும்..]]]

    உங்களுடைய நன்றிகள் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகைக்கும், கட்டுரை எழுதி வரும் தஞ்சை ஆச்சிமுத்து என்பவருக்கும் போய்ச் சேரட்டும்..!

    [[[ஆட்டோ வரப் போகிறது, சாக்கிரதையாக இருங்க சரவணன்.]]]

    அதெல்லாம் வராதுண்ணே.. அம்மா ஆட்சின்னா உறுதியா சொல்லலாம்..!

    ReplyDelete
  35. [[[manjoorraja said...

    Manjoor Raja - தமிழ் நாட்டில் ஊழலை ஆரம்பித்து வைத்ததே திமுகவில் அப்போதிருந்த சிலர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.]]]

    எனக்கும் இல்லை. வரலாற்றுச் சுவடுகள் அதைத்தான் சொல்கின்றன..

    [[[மிக முக்கியமான ஒன்றை பலர் மறந்து விடுகின்றனர். அது:
    அறிஞர் அண்ணா தனக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சராக விரும்பவில்லை என்பதும் அவர் நெடுஞ்செழியனுக்கே முக்கியத்துவம் அளித்து வந்தார் என்பதும். ஆனால் அண்ணா இறந்த போது சில பல உல்டாலக்கடி வேலைகள் மூலம் கருணாநிதி முதல்வர் ஆனார் என்பதும் அக்காலத்தில் திமுகவின் தொண்டராக இருந்து, டால்மியாபுரம் (தற்போதிய கல்லக்குடி) போராட்டம் என பல போராட்டங்களில் கலந்து கொண்ட என் தந்தை நண்பர்களிடம் அண்ணா இறந்த நேரத்தில் பேசிக் கொண்டிருந்ததை சின்ன வயதில் கேட்டிருக்கிறேன்.]]]

    இதற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் உடந்தையாக இருந்ததுதான் உண்மைதான்.. அந்தச் சமயத்தில் மதியூகியான கருணாநிதியின் உண்மை முகத்தை எம்.ஜி.ஆரால் அறிய முடியவில்லை.

    ReplyDelete
  36. மிஸ்டர் பிரகாஷ்..

    எல்லாம் சரி..

    இப்போது ஒரு உணவு வேளையில் ரசம் மட்டுமே வைப்பதற்கு தனியாக 60 ரூபாய் தேவைப்படுகிறது. அதற்கு என்ன சொல்கிறீர்கள்..?

    இதையெல்லாம் அரசுப் பணத்தில் செய்துவிட்டு, அரசு கஜனாவில் சேர வேண்டிய பணத்தைக் கொள்ளையடித்து தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கும் கருணாநிதியை என்னவென்று சொல்வீர்கள்..?

    இப்போதும் அவர் நல்லவர்தானா..?

    ReplyDelete
  37. [[[manjoorraja said...
    ஒரு கட்டத்தில் முரசொலியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு அதை விற்க நடந்த முயற்சிகளும் மக்கள் குரல் அல்லது அலை ஓசை பத்திரிகையில் வந்த ஞாபகம்.]]]

    எனக்கும் படித்த நியாபகம் வருகிறது..! இதனை கலைஞரே ஒரு முறை பேசியிருக்கிறார்..!

    ReplyDelete
  38. [[[பனங்காட்டு நரி said...

    @ பிரகாஷ்

    ஹி ஹி ஹி ஹி.., செல்ப் எடுக்காது..]]]

    ஓவரா சீன் போடுறாரு பிரகாஷ்..! கதைக்கு ஆவாது..!

    ReplyDelete
  39. [[[R.Gopi said...
    தலைவா இவ்வளவு நடந்தும், இந்த கேடிகளை உலகம் நம்பிகிட்டு இருக்கோன்னு எனக்கு ஒரு டவுட்டு இருந்துகிட்டே இருக்கு.]]]

    அப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்..! பட்டும் புத்தி வரவில்லை..!

    ReplyDelete
  40. [[[நிலவு said...

    http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9036.html

    ஒன்னுக்கு போகாம இருக்கலாம் - ஆனால் ஓட்டுப் போடாம இருக்கலாமா?]]]

    சூப்பர் டைட்டில்.. எங்கயாச்சும் ரூம் போட்டு யோசிச்சு வைச்சீங்களோ..?

    ReplyDelete
  41. [[[ELANGOVAN said...

    @ பிரகாஷ் ///

    a good list. nobody here can answer you. The one main thing i support karuna is, during all his terms, he has done so much for education development. even all of his budget the more spending for education. in 2011 budget, education got 13000 crores+ for education. i wish Jaya shd come again and Tamilnadu should see the backward again]]]

    ஆமாம்.. உங்க ஐயா திரும்பி வந்து இன்னும் ஒரு லட்சம் கோடியை அடிச்சிட்டுப் போகப் போறாரு.. அப்பவும் நீங்க இதையே சொல்லிட்டிருங்க..!

    ReplyDelete
  42. Prakash,

    I am sure either you don't have brain or you belong to Karuna's family tree. You should be illiterate.

    ReplyDelete
  43. ///ஆமாம்.. உங்க ஐயா திரும்பி வந்து இன்னும் ஒரு லட்சம் கோடியை அடிச்சிட்டுப் போகப் போறாரு.. அப்பவும் நீங்க இதையே சொல்லிட்டிருங்க..!///
    In corruption, you cant name one politician in recent years, including MGR? so i dont see corruption as my list for voting. i'm going to see only the governance, that was the list Prakash has given.
    on the other hand from Jaya's rule, except rain water harvesting. i dont find any other thing that changed the state.
    whereas in Karuna's period there are many, especially lot of changes in education system. They introduced computer education even in corp schools. this played a major role in TN development.
    even anti-dmk channel has to award tamilnadu for best state of 2010.

    ReplyDelete
  44. @Unmai,
    I’ve given the data, if you have, pls share. Even I could say, you might belong to CHO/Swamy group that believes “Having Brain is their Birth right”, or belong to Sasi’s grandmother’s onnu vita chithappa’s family.

    ReplyDelete
  45. [[[ELANGOVAN said...

    ///ஆமாம்.. உங்க ஐயா திரும்பி வந்து இன்னும் ஒரு லட்சம் கோடியை அடிச்சிட்டுப் போகப் போறாரு.. அப்பவும் நீங்க இதையே சொல்லிட்டிருங்க..!///

    In corruption, you cant name one politician in recent years, including MGR? so i dont see corruption as my list for voting. i'm going to see only the governance, that was the list Prakash has given.

    on the other hand from Jaya's rule, except rain water harvesting. i dont find any other thing that changed the state.

    whereas in Karuna's period there are many, especially lot of changes in education system. They introduced computer education even in corp schools. this played a major role in TN development.

    even anti-dmk channel has to
    award tamilnadu for best state of 2010.]]]

    அந்த சேனல் எதுக்காக பரிசு கொடுத்தாங்கன்றதுக்கு பி்ன்னணியில நிறைய கதை இருக்கு ஸார்.. விடுங்க. உங்களுக்குத் தெரியாது..

    கொள்ளையடிச்சாலும் பரவாயில்லை. அதுல நமக்கு நிறைய பங்கு கொடுக்கிறதால கருணாநிதி பெஸ்ட்டுன்னு நீங்க சொல்றீங்க.. இதுக்கு மேல சொல்றதுக்கு என்ன இருக்கு..? நல்லாயிருங்க..!

    ReplyDelete
  46. [[[Prakash said...

    @Unmai, I’ve given the data, if you have, pls share. Even I could say, you might belong to CHO/Swamy group that believes “Having Brain is their Birth right”, or belong to Sasi’s grand mother’s onnu vita chithappa’s family.]]]

    தங்களுடைய அனுமானத்திற்கு மிக்க நன்றி பிரகாஷ்..!

    ReplyDelete
  47. ///அந்த சேனல் எதுக்காக பரிசு கொடுத்தாங்கன்றதுக்கு பி்ன்னணியில நிறைய கதை இருக்கு ஸார்.. விடுங்க. உங்களுக்குத் தெரியாது..///
    கொஞ்சம் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்! அதேய் போல் sarkaria report, kumudam/vikatan reports பின்னனிலும் என்ன இருக்குனு கொஞ்சம் சொல்லுங்க! also if you have a time pls watch the ibnlive video of how & why they choose TN ? see who are all the participants? (the selection team consists of top economists/journos/analysts) in fact most of them are anti-dmk and the ones brought up spectrum case to limelight?

    ///கொள்ளையடிச்சாலும் பரவாயில்லை. அதுல நமக்கு நிறைய பங்கு கொடுக்கிறதால கருணாநிதி பெஸ்ட்டுன்னு நீங்க சொல்றீங்க.. ///
    karuna pol கொள்ளையடிச்சாலும் பரவாயில்லை.
    ஆனால் ஜெயா போல கொள்ளை மட்டுமே அடிக்கிற முதல்வர் வேணாம் என்கிறேன்!

    ReplyDelete
  48. [[[ELANGOVAN said...

    //கொள்ளையடிச்சாலும் பரவாயில்லை. அதுல நமக்கு நிறைய பங்கு கொடுக்கிறதால கருணாநிதி பெஸ்ட்டுன்னு நீங்க சொல்றீங்க.//

    karuna pol ொள்ளையடிச்சாலும் பரவாயில்லை. ஆனால் ஜெயா போல கொள்ளை மட்டுமே அடிக்கிற முதல்வர் வேணாம் என்கிறேன்!]]]

    சரி.. உங்க விருப்பம். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை..!

    ReplyDelete