31-01-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எப்பாடுபட்டாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் தமிழ்த் தாத்தா, எப்போதும்போல் தமிழர்களை ஆட்டிப் படைக்கும் சினிமா என்னும் மாய வலையினால் உருவாகியிருக்கும் பிரபலத்தனத்தை தனது கட்சிக்கான பிரச்சார யுக்தியாக மாற்றும்விதமாக முதலில் இரண்டாண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அவசரம், அவசரமாக வெளியிட்டார்.
இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக கலைமாமணியை அள்ளி வழங்கி தனது கொடை வள்ளல்தனத்தை மக்களிடையே கொண்டு வந்திருக்கிறார். முதலில் பட்டியலைப் படியுங்கள்.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எப்பாடுபட்டாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் தமிழ்த் தாத்தா, எப்போதும்போல் தமிழர்களை ஆட்டிப் படைக்கும் சினிமா என்னும் மாய வலையினால் உருவாகியிருக்கும் பிரபலத்தனத்தை தனது கட்சிக்கான பிரச்சார யுக்தியாக மாற்றும்விதமாக முதலில் இரண்டாண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அவசரம், அவசரமாக வெளியிட்டார்.
இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக கலைமாமணியை அள்ளி வழங்கி தனது கொடை வள்ளல்தனத்தை மக்களிடையே கொண்டு வந்திருக்கிறார். முதலில் பட்டியலைப் படியுங்கள்.
2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :
1. சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம்
2. காயத்ரி சங்கரன்- கர்நாடக இசை
3. வே. நாராயணப் பெருமாள் - கர்நாடக இசை
4. எம்.வி. சண்முகம் - இசைக் கலைஞர்
5. இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர்
6. பி. லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர்
7. காளிதாஸ், திருமாந்திரை - நாதஸ்வரக் கலைஞர்
8. பிரேமா ஜெகதீசன் - நாட்டியம்
9. ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர்
10. நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட்
11. திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதஸ்வரக்
கலைஞர்கள்
12. கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்
13. ச. சுஜாதா க/பெயர் பீர் முகமது - நாட்டியம்
14. ராணி மைந்தன் - இயற்றமிழ் கலைஞர்
15. ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்
16. கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்
17. தஞ்சை சுபாஷினி மற்றும் ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்
18. சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்
19. திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்
20. பரத்வாஜ் - இசையமைப்பாளர்
21. ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்
22. சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்
23. தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்
24. என். எத்திராசன் - கலைப் பரப்புனர்
25. கருணாஸ் - நகைச்சுவை நடிகர்
12. கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்
13. ச. சுஜாதா க/பெயர் பீர் முகமது - நாட்டியம்
14. ராணி மைந்தன் - இயற்றமிழ் கலைஞர்
15. ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்
16. கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்
17. தஞ்சை சுபாஷினி மற்றும் ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்
18. சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்
19. திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்
20. பரத்வாஜ் - இசையமைப்பாளர்
21. ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்
22. சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்
23. தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்
24. என். எத்திராசன் - கலைப் பரப்புனர்
25. கருணாஸ் - நகைச்சுவை நடிகர்
2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :
1. காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை
2. சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா
3. சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர்
4. மாளவிகா - சின்னத்திரை நடிகை
5. பூவிலங்கு - மோகன் சின்னத்திரை நடிகர்
6. எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர்
7. பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர்
8. ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை
9. தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர்
10. எல். ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர்
11. ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்
12. கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர்
13. கே.ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர்
14. எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர்
15. சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர்
16. டி. சேகர் - கிராமியக் கருவி இசைக் கலைஞர்
17. மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர்
18. சா. கந்தசாமி - இயற்றமிழ்
19. ராஜேஷ் குமார் - இயற்றமிழ்
20. நாஞ்சில் நாடன் - இயற்றமிழ்
21 ரோகிணி - குணச் சித்திர நடிகை
22 சரண்யா - குணச் சித்திர நடிகை
23 சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்
2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :
1. பொன். செல்வகணபதி - இயற்றமிழ்
2. பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ்
3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்
4. டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ்
5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்
6. சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர்
7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்
8. டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்
9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்
10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்
11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்
12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்
13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்
14. ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர்
15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல்
16. கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல்
17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர்
18. கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி
19. திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர்
20. ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்
21. ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம்
22. பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்
23. எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்
24. ஆர்யா - திரைப்பட நடிகர்
25. அனுஷ்கா - திரைப்பட நடிகை
26. தமன்னா - திரைப்பட நடிகை
இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறுமாம். மேலும் அன்றைக்கே ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளும் - பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் சேர்த்து வழங்கப்படுமாம்.
இப்போது எந்த முறையில் கலைமாமணி விருதைப் பெறுவதற்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்தான் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து செய்தித் துறைக்கு அனுப்பி வைக்கிறது. அங்கிருந்து முதல்வருக்கு அது பாஸ் செய்யப்படுகிறது என்கிறார்கள்.
ஆனால் நடிக்க வந்து சில ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் தமன்னாவுக்கும், அனுஷ்காவுக்கும் கொடுத்திருப்பது கோடம்பாக்கத்தில் வழக்கமான தி.மு.க.வின் காமெடியாகவே பேசப்படுகிறது.
ஒரு காலத்தில் கலைமாமணி விருது பெற சில விதிமுறைகள் இருந்தன என்கிறார் கோடம்பாக்கத்தின் அதிசய மனிதரான பிலிம் நியூஸ் ஆனந்தன்.. அதிகமான படங்களில் நடித்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு முறையாவது தமிழக அரசின் சிறந்த நடிகை அல்லது நடிகருக்கான விருதைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருந்தனவாம். இப்போது இதுவெல்லாம் கட்சிகளின் தேர்தல் அறிக்கையைப் போல காணாமலேயே போய்விட்டன.
இப்போது யார், யாருக்கு விருதுகளை வழங்கினால், அவர்கள் அங்கே வருகை தருவதால், நம்முடைய சொந்த டிவிக்கு விளம்பர வருவாய் கூடுதலாகக் கிடைக்கும் என்றுதான் யோசிக்கிறார்கள். இந்தச் சிந்தனையை முதலில் ஆரம்பித்து வைத்தது தி.மு.க. பின்பு இந்த வழிமுறையையே தொடர்ந்திருக்கிறது அ.தி.மு.க. இப்போது மீண்டும் தி.மு.க. இப்போதும் அதையே யோசித்து செயல்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய கோடம்பாக்கத்து டாக்..!
என்னவோ செஞ்சுட்டுப் போய்த் தொலைங்க..! சினிமா துறையில் யாருக்கு கலைமாமணி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் நான் கவலைப்படப் போவதில்லை. அதனைப் பற்றி அக்கறையும் படப் போவதில்லை. ஏன் என்பதை தயவு செய்து இந்தப் பதிவிற்குச் சென்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!
மற்றபடி இந்த முறை நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, கவிக்கொண்டல் செங்குட்டுவன், இளசை எஸ்.சுந்தரம், ராணிமைந்தன், ராஜேஷ்குமார், சொ.சத்தியசீலன், தமிழண்ணல், லியோனி போன்றோரும் இருப்பது பெருமைக்குரியதுதான்..!
நாஞ்சில் நாடனுக்கும், சா.கந்தசாமிக்கும் இப்போதுதானா என்று நினைத்துப் பார்க்காமல் இப்போதாவது கொடுத்தார்களே என்று நினைத்துத் திருப்திப்பட்டுக் கொள்ளலாம்..!
ஏனெனில் ஆள்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஆண்டவர்கள். அவர்களாகப் பார்த்து எப்போது, எதைக் கொடுத்தாலும் சமர்த்தாக வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போவதுதான் நம்மை மாதிரி அடிமைகளுக்கு நல்லது..! வேறு வழியில்லை.
அடுத்த பிறவியிலாவது உண்மையான ஜனநாயகமுள்ள நாட்டில் பிறந்து தொலைப்போம்..!
நன்றி..!
மற்றபடி இந்த முறை நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, கவிக்கொண்டல் செங்குட்டுவன், இளசை எஸ்.சுந்தரம், ராணிமைந்தன், ராஜேஷ்குமார், சொ.சத்தியசீலன், தமிழண்ணல், லியோனி போன்றோரும் இருப்பது பெருமைக்குரியதுதான்..!
நாஞ்சில் நாடனுக்கும், சா.கந்தசாமிக்கும் இப்போதுதானா என்று நினைத்துப் பார்க்காமல் இப்போதாவது கொடுத்தார்களே என்று நினைத்துத் திருப்திப்பட்டுக் கொள்ளலாம்..!
ஏனெனில் ஆள்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஆண்டவர்கள். அவர்களாகப் பார்த்து எப்போது, எதைக் கொடுத்தாலும் சமர்த்தாக வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போவதுதான் நம்மை மாதிரி அடிமைகளுக்கு நல்லது..! வேறு வழியில்லை.
அடுத்த பிறவியிலாவது உண்மையான ஜனநாயகமுள்ள நாட்டில் பிறந்து தொலைப்போம்..!
நன்றி..!
தொடர்புடைய முந்தைய பதிவு இது :