Pages

Friday, November 26, 2010

நந்தலாலா - உலகத் தரமான தமிழ்ச் சினிமா..!

26-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுதான் சினிமா. சினிமா என்பது மொழியானால் இதுவே சினிமா. சினிமாவுக்கு ஒரு இலக்கணம் இருப்பது உண்மையானால் தமிழ்ச் சினிமாவில் இருந்து இதனை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் சினிமா ரசிகனுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்..! உலகச் சினிமாவில் தமிழ் மொழியின் கீழ் இடம் பிடித்திருக்கும் பெருமிதமானத் திரைப்படம் இது..!

இத்தனை சிறப்புக்களையும் தாராளமாக நாம் வாரி வழங்கலாம் இந்தப் படத்திற்கு..!

ஆனாலும் நெருஞ்சி முள்ளாய் இதயத்தைத் துளைக்கிறது ஒரு குறை. படத்தின் கதை தழுவல்தான். நிச்சயமாக கிகுஜிரோ என்ற ஜப்பானியத் திரைப்படத்தின் கதையைத் ஆரத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.. ஆனால் எடுத்தவிதத்தில் உலகத் தரமான இயக்குநர்களின் வரிசையில் தைரியமாக நிற்கிறார் மிஷ்கின்.


அன்னவாசல் என்னும் ஊரில் இருந்து கொண்டு மாதந்தோறும் லெட்டரையும், பணத்தையும் அனுப்பி வைக்கும் தனது அம்மாவைத் தேடிப் புறப்படுகிறான் சிறுவன் ஹரி. சிறிதளவு மனநலம் பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிக்கியிருக்கும் ஒரு நோயாளி. எல்லாரையும் பார்க்கவும், நேசிக்கவும், சோறு ஊட்டவும் அம்மாவும், அப்பாவும் வரும்போது, தன்னைப் பார்க்க யாரும் வரவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத கேரக்டர்.. ஒரு நாள் மருத்துவமனையைவிட்டு வெளியேறுகிறான்.
 
அதே நாள்தான் அந்தச் சிறுவனும் தனது தாயைத் தேடி அன்னவாசல் நோக்கிப் புறப்படுகிறான். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். முதலில் முரண்படுகிறார்கள். பின்பு இணைகிறார்கள். இருவருக்குமே அவரவர் தாயைச் சந்திக்கும் ஆவல்.. சிறுவனுக்கோ தனது தாயைச் சந்தித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை. இதனாலேயே யாரிடமும் முத்தம் பெறாமல் தவிர்த்து வருகிறான்.



பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்கள், பிரச்சினைகள், எதிர்ப்புகள்.. என்று பலவற்றையும் சந்திக்கிறார்கள். அந்தச் சூழலுடன் கதையை நகர்த்தி, இறுதியில் சிறுவன் தாயை சந்தித்தானா? மனநலம் பாதித்தவனும் தனது அம்மாவை பார்த்தானா? என்பதையும் தயவு செய்து தியேட்டருக்குச் சென்று பாருங்கள்..!

முதல் ஷொட்டு இயக்குதலுக்கு..! அஞ்சாதே படத்தைப் போல் முதல் ஷாட்டிலேயே துவங்கிவிட்டது மிஷ்கினின் ராஜ்ஜியம். இப்படியெல்லாம் காட்சியமைப்புகள் வைக்க முடியுமா என்று பல துணை இயக்குநர்களையும், இயக்குநர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.

இயக்கம் அற்புதம் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமெனில் படத்தின் அத்தனை ஷாட்டுகளையும் சொல்லியாக வேண்டும்.. அப்படித்தான் இருக்கிறது..

எந்தக் காட்சியிலும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டுமென்பதற்காக கேரக்டர்களை எல்லை மீறி பேச விடவில்லை. தானும் பேசவில்லை. இயக்குதல் ஒரு பக்கம் இருந்தாலும் தானும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் மிஷ்கின்.



தனது கருவிழி பிதுங்கி வந்துவிடுவதைப் போல முகத்தைக் குரூரமாக்கிக் காட்டுவதிலும், மென்ட்டலா என்று கேட்டவுடன் அவர் காட்டும் வேகமும், அதே வேகத்தைப் பையனிடம் காட்ட முடியாமல் தவியாய் தவிக்கின்ற தவிப்பும், தனது அம்மாவின் கோலத்தைப் பார்த்து கதறி அழுவதுமாக இயக்குநர் என்பவனே ஒரு நடிகன்தான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகியிருக்கிறார் மிஷ்கின்.

வெறும் காட்சியமைப்பிலேயே நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்.. ஹனிமூன் தம்பதிகளை ஓவர்டேக் செய்யும் அலம்பல் பார்ட்டிகளை  இடுப்பில் நிற்காத தனது பேண்ட்டை ஒரு கையால் பிடித்தபடியே சமாளிக்கும்விதம் செம கலகலப்பு..!

போலீஸிடம் இருந்து தப்பிக்க அந்தச் சிறுவன் பேசும் ஆங்கிலச் சொற்பொழிவும், அதற்கு அந்த இன்ஸ்பெக்டரி்ன் முக பாவனையும் சூப்பர்..! இதேபோல் இளநீர் திருடி மாட்டிக் கொண்டு தப்பித்து ஓடுவதும், கடைசியில் இளநீர்க்காரருக்கே இளநீரை வெட்டிக் கொடுப்பதுமாக காட்சிகளை மிஷ்கின் நகர்த்தியிருக்கும்விதம் அருமை..!




பையனின் அம்மா காலில் விழுந்து அழுத பின்பு அவள் கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியேறிய காட்சியில் தியேட்டரே கைதட்டலில் அதிர்ந்தது. இத்தனைக்கும் அதில் வசனமே இல்லை. இளையராஜா மட்டும்தான்..! அப்படியிருந்தும் ஆக்கத்தினால் தூண்டப்பட்டுவிட்டோம்..!

ஜாதிக் கலவரத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க வழி கேட்டு கடைசியில் அவன் உடல் ஊனமுற்றவன் என்பது தெரிந்தாலும், அவன் காசு கேட்கின்ற கொடுமையை வைத்திருப்பதில் இருந்தே இங்கே காசில்லாமல் எதுவும் நகராது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!

கீழே விழுந்த பின்பே தான் உடல் ஊனமுற்றவன் என்பதை உணர்ந்து அவர் படும் மனக்கஷ்டத்தை அடுத்தடுத்த ஷாட்டுகளில் காட்டியிருப்பது மிக இயல்பு. அதேபோல் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த பின்பு அவனுக்குச் சிகிச்சையளித்த பெண் டாக்டர் நொண்டிக் கொண்டே செல்வதைக் காட்டுகின்றபோதும் மனதை என்னவோ செய்தது..!




ஸ்னிக்தாவைக் காப்பாற்றும் பொருட்டு நடக்கும் சண்டையில் அடி வாங்கி கடைசியில் நட்பு குண்டர்களைப் பார்த்தவுடன் “இப்ப வந்து அடிங்கடா பார்க்கலாம்..” என்பதைப் போல குண்டரின் தோளில் கை வைத்துக் கொண்டு குதிக்கின்ற குதி இருக்கிறதே.. இந்தக் காட்சியில் தனது உடலின் பின்புறத்தை மட்டுமே காட்டியிருக்கிறார் மிஷ்கின்.. எந்தக் காட்சிக்கு குளோஸப் அவசியமோ அப்போது மட்டும்தான்..

ஆட்டோக்காரராக பத்திரிகைக்கார அண்ணன் அருள்எழிலன் நடித்திருக்கிறார். ஆச்சரியம். இவர் எப்படி களத்தில் இறங்கினார் என்று தெரியவில்லை. அண்ணன் தனது பேவரிட் வார்த்தையான “என்னம்மா..” என்பதையும் டயலாக்கில் சேர்த்தே பேசியிருக்கிறார். இப்படியாவது பொழச்சுக்கட்டும்..!




பையனிடம் மிஷ்கினைக் குறிப்பிட்டு “மென்ட்டலா..?” என்று கேட்டவுடன் மிஷ்கின் ஆக்ரோஷத்துடன் அடிதடியில் இறங்கி அவரை அடித்துவிட்டு பின்பு அதற்காகவும் வருத்தப்பட்டு கதறுகின்ற கதறல்.. அவரது இயலாமையைச் சுட்டிக் காட்டும்விதமாக செய்திருக்கிறார்.. ஆனால் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சில் மிகக் கவனமாக இப்படித்தான் கையாண்டிருக்கிறார் மிஷ்கின்..!

லாரியின் ஹாரனைத் திருடியதால் லாரிக்காரன் மிஷ்கினை போட்டு புரட்டியெடுக்கும்போது மனம் பிறழ்ந்தவன் மிஷ்கின் என்பதை உணர்ந்த நொடியில் லாரி்க்காரன் ஸ்தம்பித்துப் போகும் காட்சி.! ஸ்னிக்தாவின் கதையைக் கேட்டு நால்வரும் திறந்த வாய் மூடாமல் திகைப்புடன் இருக்கும் காட்சி.. சிறுவனின் அம்மா எங்கே என்று கேட்டவுடன் “வரேன்டி சிறுக்கி முண்டை..” என்று திட்டியபடியே தனது அம்மாவைத் தேடி வெக்கு, வெக்கென்று நடக்கும் காட்சி என்று இந்தப் படத்தில் இன்னும் சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு கேமிரா மூலமும் நம் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.

தனது அம்மாவைப் பார்த்தவுடன் கதறி அழும் காட்சியும் அந்தப் பாடல் காட்சியுடன் தாயை மனநலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கிளம்பும்போது காட்டுகின்ற வெறி.. போகாதே என்பதைப் போல் அப்போது மட்டும் ஆக்ஷனை காட்டும் அம்மா ரோகிணி.. என்று எங்குமே ஓவர் ஆக்ட் இல்லை.. அத்தனையும் ஒருவித சுயகட்டுப்பாட்டுக்குள்தான் கொண்டு போயிருக்கிறார்..!

இறுதிக் காட்சியில் பையனிடம் இதற்கு மேலும் பொய் சொல்ல முடியாமல் அவன் அம்மாவைப் பற்றிச் சொல்ல அவன் பதிலுக்கு “மென்ட்டல்” என்று சொல்லிவிட.. மிஷ்கின் கோபத்தில் துடிக்கும்போது பையன் சொல்கின்ற பதில் அட்டகாசம்..



“எனக்கும் இப்படித்தான இருந்திருக்கும்.. இதோ இவங்களைச் சொல்லலாம்ல.. இவங்கதான் அம்மான்னு சொல்லிருக்கலாம்ல.. நான் முத்தமாவது கொடுத்திருப்பேன்ல..” என்று சொல்லும்போது அந்தப் பையனை வாரியணைக்க வேண்டும்போல இருந்தது..!

தாயின் ஒரு முத்தத்திற்காக இத்தனை அல்லல்பட்டு, துன்பத்தில் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு வேறென்ன செய்ய முடியும்..!

 

படம் இறுதிவரையிலும் மெல்லிய சோகத்துடன்தான் இழையாடுகிறது.. இதற்குப் பக்க பலம் இசைஞானி இளையராஜா.. இங்கே ஒரு இசை ராஜ்ஜியத்தையே செய்து காட்டியிருக்கிறார்.

மிஷ்கினின் அறிமுகக் காட்சியில் துவங்கும் இளையராஜாவின் பின்னணி இசை, படத்தின் இறுதிவரையில் அவரும் ஒரு கேரக்டர் என்பதைப் போல் தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். இனி பின்னணி இசையின் உதாரணத்துக்கு இந்தப் படத்தை நிச்சயமாக, தைரியமாகக் குறிப்பிட்டுப் பேசலாம். ராஜா ராஜாதான்..! அடுத்த வருட தேசிய விருது ராஜாவுக்கு நிச்சயம்..!

டிவியை உடைப்பது.. அருள் எழிலனை அடிப்பது.. அவருடன் சண்டையிடுவது.. ஸ்னிக்தாவுக்காக அந்தக் கிழவனுடன் சண்டையிடும் காட்சி.. அம்மாவைத் தேடி வீடு, வீடாகக் கதவைத் தட்டி கேட்கின்ற காட்சி, மிஷ்கின் தனது அம்மாவைத் தேடிப் போகும் காட்சி.. மிஷ்கின் ஆக்ரோஷப்படும் காட்சிகள்.. என்று அத்தனையிலும் இசைஞானி தனியாகத் தெரிகிறார்.

பின்னணி இசை என்றாலே ஏதாவது கேரக்டர்கள் தூங்கும்போதுகூட எதையாவது போட்டு நம் காதை நிரப்பி வைத்திருக்கும் இயக்குநர்கள் மத்தியில் இந்தப் படத்தில் தேவையான இடங்களில் மட்டுமே பி்ன்னணி இசை ஒலிக்கிறது. மற்ற இடங்களில் கேமிரா தான் செல்லும் பாதையிலேயே கதையைக் கொண்டு செல்ல.. இசை தேவையில்லாமல்தான் தெரிகிறது..

இந்தப் பயணத்துக்கான லொகேஷன்களைத் தேடிப் பிடித்து அவற்றை அழகுற காட்டியிருக்கும் பாங்கில் கேமிராமேனுக்கும் ஒரு சபாஷ்..! கலை இயக்குநருக்கும் ஒரு சபாஷ்..

பரபரப்பான கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை எப்படி இத்தனைக் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு வெறும் கால்களை மட்டுமே அழகுர படம் பிடிக்க முடிந்தது என்று தெரியவில்லை..! பல ஷாட்டுகளில் பாதி நபர்கள்தான் தெரிகிறார்கள். ஆனாலும் அதுவும் ஒரு அழகு. குறிப்பாக குண்டர்கள் பைக்கில் உட்கார்ந்திருக்கும் காட்சியில் பாதி ஸ்கிரீனை அவர்களே அடைத்துக் கொள்ள.. பின்னணி இசையே இல்லாமல் ரசிக்க முடிகிறது..!



பவானி, சேலம் போன்ற பகுதிகளின் சாலைகளிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அழகான இடங்களை இன்னும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.. மிக எளிமையான முறையில் சிறுவனின் வீடு இருப்பதையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பார்க்கும்போதும், கண் தெரியாத பாட்டியை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று கொண்டு வந்து விடும் சிறுவனின் கடமையையும் முதலிலேயே காட்டிவிடுவதால் இதென்ன வாழ்க்கை என்று நமக்கே வெறுப்பாகிறது.. இதைத்தான் தனது பலமாக ஆக்கிக் கொண்டு பையனை அழைத்துக் கொண்டு நம்மையும் டூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வசனங்களும் மிகக் குறைவு.. நான் ஆவலுடன் எதிர்பார்த்த அந்தப் பையனின் அம்மாவைக் கண்டுபிடிக்கும் இடத்தில் வசனமில்லாதது பெரும் ஆச்சரியம்.. எதுக்கு டயலாக்கு என்பதோடு இந்தக் காட்சியிலும் அம்மாவின் முதுகுப்புறத்தை மட்டுமே காட்டிவிட்டு நிறுத்தியது மிஷ்கினின் ஸ்டைல்..!

நிச்சயம் இது போன்ற ஷாட்டுகளையும், காட்சியமைப்புகளையும் பல வெளிநாட்டுத் திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.. கிகுஜிரோவில்கூட இப்படியான காட்சிகள் இல்லை.. அதைவிடவும் மேம்பட்ட நிலையில்தான் இது எடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்..! 

மிஷ்கின் இறுதியில் சிறுவனின் தாயைப் பற்றிச் சொல்லும்போது மட்டும்தான் இயல்பான மனநிலையில் பேசுகிறார். அப்படீன்னா அவர் இதுவரையில் பேசியது, நடந்து கொண்டதெல்லாம் என்கிற நமது கேள்விக்கு நம்மையே விடை தேடச் சொல்லியிருக்கிறார். ஏனெனில் அறிமுகக் காட்சியிலேயே “யாரோ டிவியை உடைச்சுட்டாங்க..” என்று மிகச் சாதாரணமாக வார்டனிடம் சொல்லிவிட்டுப் போகும்போதே மிஷ்கினை கவனித்தேன். ஏதோ ஒன்றை அவர் சொல்லாமல் சொல்கிறார் என்று..! இறுதியில் பலூன் விற்கும்போதுதான் தனியாகத் தெரிகிறார்..!




மனநல மருத்துவமனை கேரக்டர்கள், உடல் ஊனமுற்றவர், ஸ்னிக்தா, குண்டர்கள், தோப்புக்குச் சொந்தக்காரர், மாட்டு வண்டி ஓட்டுபவர், போலீஸ் இன்ஸ்பெக்டர்.. அம்மாவைத் தேடிப் போகும்போது முதலில் கதவைத் திறந்து முகத்தில் அடித்தாற்போல் இல்லை என்று சொல்லி கதவை மூடும் பெண், சிறுவனின் அம்மா, மிஷ்கினின் அண்ணன், டூவிலர் மெக்கானிக் கடை வைத்திருக்கும் அந்த குள்ளமான தம்பதிகள்.. பீர் பாட்டில் இளைஞர்கள்.. ஆங்கிலத்தில் சங்கடத்தைப் பகிர்ந்து கொள்ளும் புதுமணத் தம்பதிகள்.. என்று படத்தில் இருக்கும் அத்தனை பேருமே நடித்திருக்கிறார்கள் என்பது மிகச் சிறப்பான விஷயம்....

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களில் ரசிகர்களைக் கவருகின்றவிதத்தில் அவர்களுக்குப் பிடித்தமான காதல் சப்ஜெக்ட்டையும் தொட்டு அதை வைத்துத்தான் தனது இயக்கத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மிஷ்கின். இது முன் வரிசை டிக்கெட்டுகளையும் கவர்ந்தது..! அதனால்தான் அந்த இரண்டு படங்களும் பி அண்ட் சி சென்டரில்கூட ஓடின..




ஆனால் இந்தப் படத்தில் எந்தவித சமரசத்தையும் வைத்துக் கொள்ளாமல் பாடல் காட்சிகளைக்கூட கதையை நகர்த்துமிடத்தில் மட்டுமே வைத்திருந்து தனக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆக, மிஷ்கின் சமீபத்தில் சொன்னதுபோல அவருடைய கேரியரில் இதுதான் முதல் படம் என்றே சொல்லலாம்..!

இப்போதெல்லாம் படத்தின் ரிலீஸுக்கு முன்பே படத்தின் பிரிவியூ போடுவதைத் தவிர்த்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் மிஷ்கின் இந்தப் படத்தை டிவிடி வடிவத்திலேயே தமிழ்நாட்டின் அறிவுஜீவி பத்திரிகையாளர்கள் பலருக்கும் போட்டுக் காட்டி கேன்வாஸ் செய்துவிட்டார். சாருவும் தன்னால் முடிந்த அளவுக்கு தனது நண்பருக்கு வேண்டிய உதவிகளைச் செய்திருக்கிறார்..!

பத்திரிகையாளர்கள், மற்றும் திரையுலகப் பிரமுகர்களுக்காக இந்த வாரம் திங்கள்கிழமையில் இருந்தே தினம்தோறும் ஷோ நடத்தி காண்பித்துவிட்டார். அத்தனை பேருமே "கண் கலங்கிய நிலையில்தான் வெளியில் வந்தோம்.." என்றார்கள். நானும் அப்படித்தான்..!

தமிழ்ச் சினிமா தற்போது தாங்க முடியாத வருத்தத்திலும், குழப்பத்திலும்தான் இருக்கிறது. லோ பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகும் சூழலே இல்லாமல் இருக்கும் நிலையில் இது போன்ற தரமானத் திரைப்படங்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமானது...! நிச்சயம் நாம் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்..! பதிவர்கள் அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இது..!

எப்போதும்போல் “தமிழ்ச் சினிமா ஒண்ணுமேயில்லை.. குப்பை. மொக்கை.. இவங்களுக்கு படம் எடுக்கவே தெரியலை.. ஈரான் படத்தைப் பாருங்க.. ஸ்வீடன் படத்தைப் பாருங்க.. செக் படத்தைப் பாருங்க..” என்று சொல்லி புலம்புவதைவிட அவைகள் போன்று தரமான நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்  படத்தையும் உலகளாவிய அளவுக்குக் கொண்டு போக வேண்டியது நமது கடமை..!

மிஷ்கினின் தனிப்பட்ட நடத்தையையும், பேச்சையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் அவரது இயக்குதல் திறமை, கதை சொல்லுதலில் இருக்கின்ற திறமையை மட்டும் பார்த்துச் சொல்வதானால் உறுதியாகச் சொல்கிறேன்.. மணிரத்னத்தையும் மிஞ்சியவர் மிஷ்கின்..!

அதற்கு இந்த ஒரு படமே சாட்சி..!

டிஸ்கி : நமது சக வலையுலகத் தோழி லிவிங் ஸ்மைல் வித்யா இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்..!


இதையும் படியுங்கள் : 

105 comments:

  1. கிகு ஜீரோன்ற என்ற பெயரையே இப்பொழுதுதான் கேள்வி படுகிற தமிழ் பட ரசிகர்கள் தான் 90% இருக்கிறார்கள்.
    ஆதலால் மீதி இருக்கிற 10% உலக பட ரசிகர்கள் சொல்லுவதெல்லாம் எங்களுக்கு டோண்ட் கேர்ங்க...

    அந்த அளவில் மிஷ்கினின் திரைப்படம் மிகச்சிறந்த படமே எங்களுக்கு!

    சிறப்பான திரைவிமர்சனம்!

    ReplyDelete
  2. லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. கண்டிப்பா பார்க்கணும் :)

    ReplyDelete
  4. nice review . Want to see the film.

    ReplyDelete
  5. பாத்துருவோம்னே.. மிஷ்கின் சிகுஜீரோ பட யுனிட் தேடிக்கிட்டு இருக்காம். எங்கயாது போயி ஒழிஞ்சிக்க சொல்லுங்க :)

    ReplyDelete
  6. அருமை விமர்சனம்,

    உங்கள் விமர்சனமே படம் பார்க்க தூண்டுகிறது அந்தளவுக்கு சிறப்பாக எழுதியுள்ளீர்கள் சார்,

    //மிஷ்கினின் தனிப்பட்ட நடத்தையையும், பேச்சையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் அவரது இயக்குதல் திறமை, கதை சொல்லுதலில் இருக்கின்ற திறமையை மட்டும் பார்த்துச் சொல்வதானால் உறுதியாகச் சொல்கிறேன்.. மணிரத்னத்தையும் மிஞ்சியவர் மிஷ்கின்..!//

    உண்மைதான் சார்..

    “படைப்புகள்தான் பேச வேண்டுமே தவிர படைப்பாளிகள் பேடக்கூடாது”

    இந்த வரிகள் மிஷ்கின் சாருக்கு பொருத்தமாக இருக்குமோ?

    ஒரு சிறந்த படைப்பை வழங்கியதற்கு
    மிஷ்கின் சாருக்கு கோடான கோடி நன்றிகள்...

    நன்றி

    ReplyDelete
  7. விமர்சனம் சூப்பர்னே...படம் பார்த்துட்டு மறுபடி வர்றேன்..

    -செங்கோவி

    ReplyDelete
  8. வித்யாவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அடுத்தடுத்து நல்ல படங்களா பார்க்கும் அபூர்வ வாய்ப்பு இப்பத்தான் வந்து இருக்கு..
    நானும் பார்க்கணும் ...

    படத்தையும் , மிஷ்கினியையும் இவ்வளவு தூரம் பாராட்டிய நீங்கள் கடைசி வரியில் அசிங்கப்படுத்தி விட்டீர்களே..அதுதான் கஷ்டமாக இருக்கிறது...

    மணிரத்னத்தையும் மிஞ்சியவர் மிஷ்கின்..! என்று சொல்லி , ராவணன் போன்ற ஒரு குப்பை பட இயக்குனருடன் ஒப்பிட்டு இருக்க வேண்டாம்..

    ReplyDelete
  10. இது கொஞ்சமல்ல... ரொம்ப ரொம்ப ஓவர் தமிழன்.

    தமிழ் சினிமா இப்போது நன்றாக இல்லைதான். ஆனால் அதற்கு மாற்றல்ல இந்தப் படம்.

    அது என்ன எப்போதும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தி எடுத்தால்தான் தரமான படம் என்று ஒப்புக் கொள்வீர்களா. இருக்கும் மற்றவர்களும் மெண்டலாகி அலைந்தால்தான் நல்லவன் என்று நம்புவீர்களா?

    இயல்பாய் ஒரு படம் தரட்டுமே. அதற்கு தூண்டுங்கள்.. ஒரு நியாயம் இருக்கிறது.

    சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம். இதில் இயல்பான, அதே நேரம் அசாதரண விஷயங்களை காட்டி கவர்வதுதான் கலைத் திறன். திரும்பத் திரும்ப சைக்கோத்தனமான கதைகளைப் பார்த்து, அதற்கான புகழ்மொழிகளைக் கேட்டு நிஜமாகவே மகா வெறுப்பாக இருக்கிறது.

    மிஷ்கினின் சமீபத்திய நடத்தைகள் பற்றிய சிந்தனை ஏதுமின்றிதான் இந்தப் படத்தைப்பார்த்தேன். பார்த்ததும் தோன்றியதையே இப்போதும் சொல்கிறேன்.

    தமிழ் சினிமாவுக்கும் படைப்பாளிகளுக்கும் சீக்குப் பிடித்துவிட்டது. ஒன்று காப்பியடிக்கும் நோய்... இன்னொன்று தன்னைத் தானே உயர்ந்த இடைத்தில் வைத்துப் பார்த்து சிலாகிக்கும் சுயமோகம். இந்த சுயமோகத்தின் விளைவுதான் அசாதாரணம் என்ற பெயரில் திணிக்கப்படும் நந்தலாலாக்கள்.

    இந்த இரண்டிலிருந்தும் வெளியில் வந்தால் ஆரோக்கியமான சிந்தனையுடன் நல்ல படங்கள் வரலாம்.

    இனி வரும் நாட்களில் இந்தப் படத்துக்கு வக்காலத்து வாங்கி அறிவுஜீவிகள் அலப்பறை பண்ணுவார்கள் டிவிக்களிலும், இணையதளங்களிலும்...

    இளையராஜாவின் இசையை மட்டும் கழித்துவிட்டுப் பார்த்தால், நந்தலாலா மகா கொடுமை!

    ReplyDelete
  11. படத்தை பார்க்கும் வரை;என் பதிவு, மிஷ்கினின் தனிப்பட்ட நடத்தையையும், பேச்சையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் அவரது இயக்குதல் திறமை, கதை சொல்லுதலில் இருக்கின்ற திறமையை மட்டும் பார்த்துச் சொல்வதானால் உறுதியாகச் சொல்கிறேன்.. மணிரத்னத்தையும் மிஞ்சியவர் மிஷ்கின்..!

    Read more: http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_26.html#ixzz16OdbjuV3

    ReplyDelete
  12. மிகச்சிறப்பான விமர்சனம்... அண்ணன் சொல்லிட்டிங்கல்ல, அவசியம் பார்த்துவிட வேண்டியதுதான்!...

    பிரபாகர்...

    ReplyDelete
  13. அழகான விமர்சனம்!

    ReplyDelete
  14. விமர்சனம் நல்லாயிருக்கு..

    கதை தழுவல்தான் என்றாலும் தமிழுக்கே உரிய விதத்தில் கொடுத்ததற்காக மிஷ்கினை பாராட்டலாம்..

    ReplyDelete
  15. என்ன இம்பூட்டுப் பாராட்டு...? கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறது பாராட்டின் அளவு. ஆனால் மிஷ்கினின் முந்தைய இரண்டு படங்களுமே ரசிக்கும்படி இருந்தன. பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

    ReplyDelete
  16. அண்ணே உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு, படத்தை தியேட்டரில் கண்டிப்பாக பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது. மிஷ்கினின் படங்கள் எப்போதும் வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பவை+ராஜாவின் இசை அதற்காவது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.மிஷ்கின் மிக மிகத் திறமைசாலி ஆனால்.....

    ReplyDelete
  17. இப்படத்தை காண வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன் ,உங்கள் விமர்சனம் என்னை உடனே காண தூண்டுகிறது .

    ReplyDelete
  18. [[[ப்ரியமுடன் வசந்த் said...

    கிகுஜீரோன்ற என்ற பெயரையே இப்பொழுதுதான் கேள்விப்படுகிற தமிழ்ப் பட ரசிகர்கள்தான் 90% இருக்கிறார்கள்.

    ஆதலால் மீதி இருக்கிற 10% உலகப் பட ரசிகர்கள் சொல்லுவதெல்லாம் எங்களுக்கு டோண்ட் கேர்ங்க...
    அந்த அளவில் மிஷ்கினின் திரைப்படம் மிகச் சிறந்த படமே எங்களுக்கு! சிறப்பான திரை விமர்சனம்!]]]

    வருகைக்கு நன்றி வசந்த்..!

    ReplyDelete
  19. [[[ப்ரியமுடன் வசந்த் said...
    லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கும் வாழ்த்துகள்!]]]

    வித்யாவிடம் சொல்லி விடுகிறேன்..!

    ReplyDelete
  20. [[[இளங்கோ said...
    கண்டிப்பா பார்க்கணும் :)]]]

    அவசியம் பாருங்க இளங்கோ.. தவறவிடக் கூடாத திரைப்படம்..!

    ReplyDelete
  21. [[[sivaG said...
    nice review. Want to see the film.]]]

    அவசியம் பாருங்கள் சிவா..!

    ReplyDelete
  22. [[[இராமசாமி கண்ணண் said...
    பாத்துருவோம்னே.. மிஷ்கின் சிகுஜீரோ பட யுனிட் தேடிக்கிட்டு இருக்காம். எங்கயாது போயி ஒழிஞ்சிக்க சொல்லுங்க :)]]]

    எதுக்கு..? அதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது..! என்ன உலகப் பட விழாக்களில் இந்தப் படம் திரையிடும்போது சர்ச்சைகள் எழலாம்..!

    ReplyDelete
  23. [[[மாணவன் said...
    அருமை விமர்சனம், உங்கள் விமர்சனமே படம் பார்க்க தூண்டுகிறது அந்தளவுக்கு சிறப்பாக எழுதியுள்ளீர்கள் சார்,
    உண்மைதான் சார்.
    “படைப்புகள்தான் பேச வேண்டுமே தவிர படைப்பாளிகள் பேடக்கூடாது”
    இந்த வரிகள் மிஷ்கின் சாருக்கு பொருத்தமாக இருக்குமோ?
    ஒரு சிறந்த படைப்பை வழங்கியதற்கு மிஷ்கின் சாருக்கு கோடான கோடி நன்றிகள்...
    நன்றி]]]

    வருகைக்கு நன்றி மாணவன்.. மிஷ்கின் இனி தன் பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்..!

    ReplyDelete
  24. [[[செங்கோவி said...
    விமர்சனம் சூப்பர்னே... படம் பார்த்துட்டு மறுபடி வர்றேன்..
    - செங்கோவி]]]

    அவசியம் வாங்க செங்கோவி..!

    ReplyDelete
  25. [[[LK said...
    வித்யாவிற்கு வாழ்த்துக்கள்.]]]

    நன்றி எல்.கே. ஸார்..!

    ReplyDelete
  26. [[[பார்வையாளன் said...
    அடுத்தடுத்து நல்ல படங்களா பார்க்கும் அபூர்வ வாய்ப்பு இப்பத்தான் வந்து இருக்கு. நானும் பார்க்கணும்.

    படத்தையும், மிஷ்கினியையும் இவ்வளவு தூரம் பாராட்டிய நீங்கள் கடைசி வரியில் அசிங்கப்படுத்தி விட்டீர்களே. அதுதான் கஷ்டமாக இருக்கிறது.

    மணிரத்னத்தையும் மிஞ்சியவர் மிஷ்கின்..! என்று சொல்லி , ராவணன் போன்ற ஒரு குப்பை பட இயக்குனருடன் ஒப்பிட்டு இருக்க வேண்டாம்.]]]

    ராவணன் என்ற ஒன்றுக்காக மணிரத்னத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது பார்வையாளன்.. ராவணன் குப்பை படமும் அல்ல..!

    ReplyDelete
  27. siva said...

    இது கொஞ்சமல்ல... ரொம்ப ரொம்ப ஓவர் தமிழன். தமிழ் சினிமா இப்போது நன்றாக இல்லைதான். ஆனால் அதற்கு மாற்றல்ல இந்தப் படம்.]]]

    வேறு எந்தப் படம்..?

    [[[அது என்ன எப்போதும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தி எடுத்தால்தான் தரமான படம் என்று ஒப்புக் கொள்வீர்களா. இருக்கும் மற்றவர்களும் மெண்டலாகி அலைந்தால்தான் நல்லவன் என்று நம்புவீர்களா?]]]

    இல்லை.. கதையைப் பாருங்கள்.. உணருங்கள்..!

    [[[இயல்பாய் ஒரு படம் தரட்டுமே. அதற்கு தூண்டுங்கள்.. ஒரு நியாயம் இருக்கிறது.]]]

    இதுவே மிக இயல்புதான். இதைவிடவும் இயல்பு வேண்டுமெனில் நாம் வேறு நாடுகளுக்குத்தான் செல்ல வேண்டும்..!

    [[[சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம். இதில் இயல்பான, அதே நேரம் அசாதரண விஷயங்களை காட்டி கவர்வதுதான் கலைத் திறன். திரும்பத் திரும்ப சைக்கோத்தனமான கதைகளைப் பார்த்து, அதற்கான புகழ்மொழிகளைக் கேட்டு நிஜமாகவே மகா வெறுப்பாக இருக்கிறது.]]]

    பொழுது போக்கு என்பது உங்களது கருத்து.. சினிமாவுக்கு ஒரு மொழி இருக்கிறது. அதுவொரு கலை.. அதை உணர்ந்தால்தான் இந்தப் படத்தின் மகிமையும் உங்களுக்குப் புரியும்..!

    ReplyDelete
  28. [[[Aaryan66 said...
    படத்தை பார்க்கும் வரை என் பதிவு]]]

    பார்த்துவிட்டு வாருங்கள். காத்திருக்கிறேன்..!

    ReplyDelete
  29. [[[பிரபாகர் said...
    மிகச் சிறப்பான விமர்சனம்... அண்ணன் சொல்லிட்டிங்கல்ல, அவசியம் பார்த்துவிட வேண்டியதுதான்!...

    பிரபாகர்.]]]

    பாருங்கோ.. பாருங்கோ..!

    ReplyDelete
  30. [[[எஸ்.கே said...
    அழகான விமர்சனம்!]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  31. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    கண்டிப்பா பார்க்கணும்.]]]

    மிஸ் பண்ணிராத ராசா..!

    ReplyDelete
  32. [[[Riyas said...
    விமர்சனம் நல்லாயிருக்கு..
    கதை தழுவல்தான் என்றாலும் தமிழுக்கே உரிய விதத்தில் கொடுத்ததற்காக மிஷ்கினை பாராட்டலாம்.]]]

    நிச்சயம் பாராட்டலாம்..! இதையேதான் நானும் சொல்லியிருக்கிறேன் ரியாஸ்..!

    ReplyDelete
  33. [[[ஸ்ரீராம். said...
    என்ன இம்பூட்டுப் பாராட்டு...? கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறது பாராட்டின் அளவு. ஆனால் மிஷ்கினின் முந்தைய இரண்டு படங்களுமே ரசிக்கும்படி இருந்தன. பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.]]]

    பார்த்துட்டுச் சொல்லுங்கண்ணே..!

    ReplyDelete
  34. [[[Thomas Ruban said...
    அண்ணே உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு, படத்தை தியேட்டரில் கண்டிப்பாக பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது. மிஷ்கினின் படங்கள் எப்போதும் வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பவை+ராஜாவின் இசை அதற்காவது கண்டிப்பாக பார்க்க வேண்டும். மிஷ்கின் மிக மிகத் திறமைசாலி ஆனால்.....]]]

    "ஆனாலே" நமக்குத் தேவையில்லாதது.. ஒரு கலையை கலைக்காக மட்டும் பார்ப்போம்.. விடுங்கண்ணே..!

    ReplyDelete
  35. [[[dr suneel krishnan said...
    இப்படத்தை காண வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். உங்கள் விமர்சனம் என்னை உடனே காண தூண்டுகிறது.]]]

    அவசியம் பாருங்கள் ஸார்..!

    ReplyDelete
  36. தங்கள் விமர்சனத்தை படிக்கும் போது படம் பார்க்கின்ற உணர்வு ஏற்படுகிறது.

    கிக்கிஜுரோ படத்தை நான் ஏற்கனவே பார்த்துதிருக்கிறேன்.
    இன்று நந்தலாலாவும் பார்த்தேன். படம் மிகவும் அற்புதம்.
    ராஜாவின் இசை, காமரா கோணங்கள்,சிறுவனின் நடிப்பு இந்த மூன்றும் படத்திர்க்கு மிகப்பெரிய பலம். படத்தின் முதல் பாதி கிக்கிஜுரோவின் பாதிப்பு முழுமையாக இருக்கும். ஆனால் இரண்டாம் பாதி அப்படி அல்ல,தமிழ் சினிமாவின் விதிகள் அடங்கி இருக்கும்.
    கிக்கிஜுரோ படத்தை நான் பார்த்த பொழுது எனக்கு சில இடங்களில் சில மாற்றங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் எதிர்பார்த்த பல இடங்களில் இயக்குநர் கட்சிததமாக காட்சிகளை எடுத்துள்ளார். இதற்கு மேல் இந்த படத்தை யாரும் நேர்த்தியாக எடுக்க முடியாது.

    நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள். சைக்கிளில் வரும் மாணவியை நீங்கள் குறிப்பிடவில்லை.
    அவள் மிஷகினை அறைந்துவிட்டு வருந்தும் காட்சி மிகவும் அருமை....
    எல்லா காட்சியிலும் மனித வாழ்க்கையின் நிஜ சோகமும்,வருத்தமும்,மகிழ்ச்சியும் தொடர்த்து கொண்டே இருப்பதுதான் படத்தின் வெற்றி..

    ReplyDelete
  37. வித்யாவுக்கு என் வாழ்த்துக்கள். மற்றபடி படத்தை பார்க்க தூண்டும் உங்க விமர்சனத்துக்கு பின்னே பார்க்காம இருப்பனா? பார்த்து விட்டு வருகின்றேன்.

    ReplyDelete
  38. அருமையான விமர்சனம் சரவணன்!!! விமர்சன பார்வையையே உங்களிடம் இருந்து படம் அழகா மாற்றிவிட்டு படத்தோடு ஒன்ற செய்துவிட்டது.. என்பது விமர்சனத்தில் இருந்து தெரிகிறது...:) அதுதான் படத்தின் வெற்றியும் கூட!!

    ReplyDelete
  39. அருமையான விமர்சனம்... கண்டிப்பாக படம் பார்க்கிறேன்....!

    ReplyDelete
  40. :))))))) நல்ல விமர்சனம் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்

    ReplyDelete
  41. அருமையான விமர்சனம்... கண்டிப்பாக படம் பார்க்கிறேன்


    பார்த்துட்டு மறுபடி வர்றேன்

    ReplyDelete
  42. அண்ணே படம் பார்த்துட்டேன், உங்கள் விமர்சனத்துக்கு என் வந்தனங்கள்...

    ReplyDelete
  43. விரிவான விமர்சனம்................

    வித்யாவிற்க்கு வாழ்த்துக்கள்.............

    ReplyDelete
  44. அன்புள்ள உண்மைத்தமிழன்,

    மிஷ்கினின் தனிப்பட்ட நடத்தையையும், பேச்சையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் அவரது இயக்குதல் திறமை, கதை சொல்லுதலில் இருக்கின்ற திறமையை மட்டும் பார்த்துச் சொல்வதானால் உறுதியாகச் சொல்கிறேன்.. மணிரத்னத்தையும் மிஞ்சியவர் மிஷ்கின்..!


    எடுத்துக் கொண்ட பணியில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் விமரிசனம் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    சிறப்பான படத்திற்கு நீங்களும் தண்டோராவும் கேஆர்பி செந்திலும் சரியான விமரிசனம் செய்து பதிவுலகை பெருமைப்பட வைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  45. [[[Umesh said...

    தங்கள் விமர்சனத்தை படிக்கும்போது படம் பார்க்கின்ற உணர்வு ஏற்படுகிறது.

    கிக்கிஜுரோ படத்தை நான் ஏற்கனவே பார்த்துதிருக்கிறேன்.
    இன்று நந்தலாலாவும் பார்த்தேன். படம் மிகவும் அற்புதம். ராஜாவின் இசை, காமரா கோணங்கள், சிறுவனின் நடிப்பு இந்த மூன்றும் படத்திர்க்கு மிகப் பெரிய பலம். படத்தின் முதல் பாதி கிக்கிஜுரோவின் பாதிப்பு முழுமையாக இருக்கும். ஆனால் இரண்டாம் பாதி அப்படி அல்ல. தமிழ் சினிமாவின் விதிகள் அடங்கி இருக்கும்.

    கிக்கிஜுரோ படத்தை நான் பார்த்த பொழுது எனக்கு சில இடங்களில் சில மாற்றங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் எதிர்பார்த்த பல இடங்களில் இயக்குநர் கட்சிததமாக காட்சிகளை எடுத்துள்ளார். இதற்கு மேல் இந்த படத்தை யாரும் நேர்த்தியாக எடுக்க முடியாது.

    நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள். சைக்கிளில் வரும் மாணவியை நீங்கள் குறிப்பிடவில்லை. அவள் மிஷகினை அறைந்துவிட்டு வருந்தும் காட்சி மிகவும் அருமை....

    எல்லா காட்சியிலும் மனித வாழ்க்கையின் நிஜ சோகமும், வருத்தமும், மகிழ்ச்சியும் தொடர்த்து கொண்டே இருப்பதுதான் படத்தின் வெற்றி..]]]

    நன்றி உமேஷ்.. அந்தப் பெண்ணைப் பற்றியும் நான் இதில் குறிப்பிட்டிருக்கிறேன்..!

    உங்களுடைய கருத்தும் எனக்கு ஏற்புடையதே..!

    ReplyDelete
  46. [[[அபி அப்பா said...
    வித்யாவுக்கு என் வாழ்த்துக்கள். மற்றபடி படத்தை பார்க்க தூண்டும் உங்க விமர்சனத்துக்கு பின்னே பார்க்காம இருப்பனா? பார்த்து விட்டு வருகின்றேன்.]]]

    பார்த்துட்டு வாங்கண்ணே..!

    ReplyDelete
  47. [[[Rafeek said...
    அருமையான விமர்சனம் சரவணன்!!! விமர்சன பார்வையையே உங்களிடம் இருந்து படம் அழகா மாற்றிவிட்டு படத்தோடு ஒன்ற செய்துவிட்டது.. என்பது விமர்சனத்தில் இருந்து தெரிகிறது...:) அதுதான் படத்தின் வெற்றியும் கூட!!]]]

    படம் உருவாக்கிய வெறி அப்படியானது ரபீக்..!

    ReplyDelete
  48. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அருமையான விமர்சனம்... கண்டிப்பாக படம் பார்க்கிறேன்....!]]]

    பாருங்க ராமசாமி..!

    ReplyDelete
  49. [[[koodalnagar said...
    :))))))) நல்ல விமர்சனம் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.]]]

    நன்றி கூடல்நகர்..!

    ReplyDelete
  50. [[[சி.வேல் said...
    அருமையான விமர்சனம்... கண்டிப்பாக படம் பார்க்கிறேன்.
    பார்த்துட்டு மறுபடி வர்றேன்.]]]

    அவசியம் வாங்க.. காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  51. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    அண்ணே படம் பார்த்துட்டேன், உங்கள் விமர்சனத்துக்கு என் வந்தனங்கள்...]]]

    உங்க விமர்சனத்தை படிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன் செந்தில்..!

    ReplyDelete
  52. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    விரிவான விமர்சனம்................
    வித்யாவிற்க்கு வாழ்த்துக்கள்.]]]

    படத்தைப் பாருங்கண்ணே.. அப்புறம் சொல்லுங்க.. விமர்சனம் தப்பா சரியான்னு..?

    ReplyDelete
  53. [[[gopi g said...

    அன்புள்ள உண்மைத்தமிழன்,

    எடுத்துக் கொண்ட பணியில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் விமரிசனம் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    சிறப்பான படத்திற்கு நீங்களும் தண்டோராவும் கேஆர்பி செந்திலும் சரியான விமரிசனம் செய்து பதிவுலகை பெருமைப்பட வைத்துள்ளீர்கள்.]]]

    வேறு என்ன செய்வது..? இப்படியொரு படத்தைத்தானே தமிழில் இதுநாள் வரையில் தேடிக் கொண்டிருந்தோம்..!

    ReplyDelete
  54. தரமான படம் ஆனால் தமிழனின் பெருமையை ஆஸ்காருக்குக் கொண்டுசெல்ல முடியாத படம். கதைத் தழுவல் என்பதால், ஆஸ்கார் நழுவல். "ஆஸ்கார் என்னப்பெரிய பட்டமா" என்று, குப்புறக் கவிழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனச்சொல்லலாம்.

    ReplyDelete
  55. நந்தலாலா - நேற்று இரவு காட்சிக்கு சென்றேன். பார்த்ததும் தெரிந்தது.., இது தமிழ் சினிமா அல்ல. தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு அருமையான உலக சினிமா. தமிழ் படங்களின் பின்னணி இசை, காமெரா, பாத்திரங்கள், தொழில்நுட்பம் போன்றவற்றை உலகுக்கு காட்ட வந்த மற்றும் ஓர் உன்னத படைப்பு. கிக்குஜிரோ-வைத் தழுவி எடுக்கப்படாலும் அதை விட பல காட்சிகளில் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் மிஷ்கின். இத்தகைய படங்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும்.

    உங்கள் விமர்சனம் அருமை! மீண்டும் படம் பார்த்தது போலவே உணர்கிறேன்!!!

    ReplyDelete
  56. வணக்கம் ,
    நேற்று இரவு அடம் பிடித்து படத்தை பார்த்தேன் , இது உலக படம் , உங்களது விமர்சனம் படத்திற்கு சமர்ப்பணம் , உங்கள் விமர்சனம் படத்தின் வெற்றியை அதிகரிக்கும் என்று நினகிறேன் , மிக அருமையான விமர்சனம் , படம் என்று சொல்லாமல் இதை காவியம் என்றும் சொல்லல்லாம் அந்த அளவிற்கு காவியம் அருமை , ராஜா சார் ராஜா சார் தான் , படத்தின் வெற்றில் சரி பாதி அவருக்கும் உண்டு அந்த அளவிற்கு படத்தின் பின்னணி இசை இது வரை தமிழ் சினிமா பார்த்திடதே ஒன்று , படம் முழுக்க நான் என்னையே மறந்து விட்டேன் , ஆனால் எனக்கு படத்தில் ஒரு காட்சி சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை , தமிழக காவல் துறையில் உழவர்கள் ஆங்கிலம் தெரியாது என்று ஒரு காட்சியில் சித்தரிப்பது . காவல் துறயை இழிவு படுத்துகிறோமோ என்று எனக்கு சிந்திக்க வைகின்றது . மிஸ்கின் அவர்களே இனிமேலே இதை போல் செயதீர்கள் . படம் முழுவதும் பார்த்தேன் எல்லா காட்சி களிலும் கை தட்டினேன் ஆனால் அந்த காவல் துறையின் காட்ச்யில் மட்டும் வருத்தமாக இருந்தது ,ஆனால் திரை அரங்கில் அந்த கட்சிக்கு மட்டும் பலத்த கை தட்டல் , தமிழர்கள் என்றைக்கு தமிழர்களாக இருப்பார்கள் என்று தெரியவில்லை , கடைசியாக தாய் என்றால் என்ன என்பதை உணர்தேன் இன்னும் அதிகமாக

    ReplyDelete
  57. வணக்கம் ,
    நேற்று இரவு அடம் பிடித்து படத்தை பார்த்தேன் , இது உலக படம் , உங்களது விமர்சனம் படத்திற்கு சமர்ப்பணம் , உங்கள் விமர்சனம் படத்தின் வெற்றியை அதிகரிக்கும் என்று நினகிறேன் , மிக அருமையான விமர்சனம் , படம் என்று சொல்லாமல் இதை காவியம் என்றும் சொல்லல்லாம் அந்த அளவிற்கு காவியம் அருமை , ராஜா சார் ராஜா சார் தான் , படத்தின் வெற்றில் சரி பாதி அவருக்கும் உண்டு அந்த அளவிற்கு படத்தின் பின்னணி இசை இது வரை தமிழ் சினிமா பார்த்திடதே ஒன்று , படம் முழுக்க நான் என்னையே மறந்து விட்டேன் , ஆனால் எனக்கு படத்தில் ஒரு காட்சி சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை , தமிழக காவல் துறையில் உழவர்கள் ஆங்கிலம் தெரியாது என்று ஒரு காட்சியில் சித்தரிப்பது . காவல் துறயை இழிவு படுத்துகிறோமோ என்று எனக்கு சிந்திக்க வைகின்றது . மிஸ்கின் அவர்களே இனிமேலே இதை போல் செயதீர்கள் . படம் முழுவதும் பார்த்தேன் எல்லா காட்சி களிலும் கை தட்டினேன் ஆனால் அந்த காவல் துறையின் காட்ச்யில் மட்டும் வருத்தமாக இருந்தது ,ஆனால் திரை அரங்கில் அந்த கட்சிக்கு மட்டும் பலத்த கை தட்டல் , தமிழர்கள் என்றைக்கு தமிழர்களாக இருப்பார்கள் என்று தெரியவில்லை , கடைசியாக தாய் என்றால் என்ன என்பதை உணர்தேன் இன்னும் அதிகமாக

    ReplyDelete
  58. முன்னுரையோட நான் பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன்.படம் பார்த்துட்டு மறுபடியும் படிக்கிறேன்.

    மந்திரப்புன்னகை பாடல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுது.உங்க விமர்சனம்தான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  59. //கிகு ஜீரோன்ற என்ற பெயரையே இப்பொழுதுதான் கேள்வி படுகிற தமிழ் பட ரசிகர்கள் தான் 90% இருக்கிறார்கள்.//

    ப்ரியமான வசந்த்!என்னையும் சேர்த்து 91%

    வீட்டுப்பாடம் படிக்காம தெரியலன்னு கிளாஸ்ல வாத்தியார்கிட்ட சொல்றது இல்ல:)

    ReplyDelete
  60. படம் போட்டு சுபம் போட்டப்புறம்தான் நான் வர்ரேனா!அவ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  61. மிஷ்கினிடம் திறமை உள்ளது என்பது முந்தைய படங்களிலே நிரூபிக்கப்பட்டதுதான்.இந்த படத்தைபற்றி பார்த்தவர்களிடம் எல்லாம் சொல்லுவார்.இந்த அளவு உயர்வுள்ள படம் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.எந்திரத்தையும் கிராபிக்ஸையும் உலகத்தரம் என்கிறார்கள்.இதுதான் உலகத்தரம்.ஒரு சீன கூட போர் அடிக்கவில்லை.பாசமலர் கடைசி காட்சி போல அழவைத்துவிட்டது.விநியோகஸ்தர்களுக்கு புரியாமல் போனதில் வியப்பில்லை.

    ReplyDelete
  62. இன்றுதான் இப்படத்தைப் பார்த்தேன்..தாயைத் தேடும் பயணத்தின் டெஸ்டினேசன் ‘அன்னை வயல்’ & ‘தாய் வாசல்’ என்று பெயர் வைப்பதிலேயே தெரிகிறது மிஷ்கினின் டச். இப்படம் ஒரு விஷுவல் & மியுசிகல் ட்ரீட்..இன்னும் ரீங்காரமிடுகிறது ராஜாவின் பிண்ணனி இசை..கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்று ஒளிப்பதிவு..கண் கலங்க வைக்கும் க்ளைமாக்ஸ்..

    ஆனாலும் முதல் பாதி ஆர்ட் ஃபிலிம் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது..காதாபாத்திரங்கள் கேமிராவைப் பார்த்து திகைத்து நிற்பதும், கேமிராவைத் திருப்பி சர்ஃப்ரைசாக ஏதோவொன்றை காட்டும் உத்தி ஆரம்பத்தில் ரசிக்கவைத்தாலும் திரும்பத் திரும்ப வருவதால் சலிப்பூட்டுகிறது..

    கமர்சியல் அயிட்டங்களைப் பற்றி கவலைப்பட்டாமல் இக்கலைப்படைப்பைத் தந்த ஐங்கரனுக்கும் மிஷ்கினுக்கும் பாராட்டுக்கள்...இப்பட்த்தைப் பார்க்கத்தூண்டிய உங்கள் விமர்சனத்திற்கும் நன்றி!

    --செங்கோவி

    ReplyDelete
  63. உங்களுடைய விமர்சனமும் ராஜா சாரின் இசையும் நிச்சயம் பார்த்தே ஆக வேண்டிய படம் என்பதை உணர்த்துகிறது. இரவு காட்சிக்கு டிக்கட் புக் செய்து விட்டேன்.

    அது சரி உங்களை போன்றவர்கள் மணிரத்தினத்தை பெஞ்ச்மார்க் டைரக்டராக எதை
    வைத்து நிர்ணயம் செய்கிறீர்கள் என்பது புரியவில்லை. அவர் அந்த சூழ்நிலையின் பரபரப்பையோ அல்லது காப்பி அடித்தோ தான் கமெர்சியல் படத்தைத்தானே எடுத்து கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  64. நிறைய இடங்களில் படத்தை பற்றிய விமர்சனம் நன்றாகவே வந்திருக்கிறது..

    ஐங்கரனுக்கு மற்றுமொரு வெற்றி..

    என்ன, அந்த மிஷ்கின் வாய் நீளத்தை கொஞ்சம் குறைத்தால், அவர் இன்னமும் நிறைய நல்ல படங்களை தர வாய்ப்புள்ளது...

    உதவி இயக்குநர்கள் கும்மியதில், கொஞ்சமாவது திருந்தியிருக்க வாய்ப்புள்ளது...

    பொறுத்திருந்து பார்ப்போம்....

    ReplyDelete
  65. சூப்பர் வாத்தியாரே இன்னிக்கு ராவோட ராவா ராவா சரக்கடிச்சுட்டு பாத்துடறேன்

    ReplyDelete
  66. உங்களது இந்த விமர்சனம் படிச்சு காட்டுனேன் ,என்னோட மலையாளத்த தாய் மொழியா வச்சிருக்க நண்பன் ஒருத்தன் தமிழ் சொல்லி குடுடான்னு கேக்குறான் உண்மையிலே நீங்க உண்மை தமிழன் தான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  67. இங்க ஒரு படைப்பும் ஓவரா பேசுது
    படைப்பாளியும் ஓவரா பேசுறாரு சரிதானே

    ReplyDelete
  68. இது போன்ற படங்களுக்கு வலையுலக ஆதரவு என்பது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    ReplyDelete
  69. [[[Vasudevan said...
    தரமான படம். ஆனால் தமிழனின் பெருமையை ஆஸ்காருக்குக் கொண்டு செல்ல முடியாத படம். கதைத் தழுவல் என்பதால், ஆஸ்கார் நழுவல். "ஆஸ்கார் என்ன பெரிய பட்டமா" என்று, குப்புறக் கவிழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனச் சொல்லலாம்.]]]

    ஆஸ்காருக்குச் செல்ல வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன்..!

    ReplyDelete
  70. [[[செல்லையா said...
    நந்தலாலா - நேற்று இரவு காட்சிக்கு சென்றேன். பார்த்ததும் தெரிந்தது.. இது தமிழ் சினிமா அல்ல. தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு அருமையான உலக சினிமா. தமிழ் படங்களின் பின்னணி இசை, காமெரா, பாத்திரங்கள், தொழில் நுட்பம் போன்றவற்றை உலகுக்கு காட்ட வந்த மற்றும் ஓர் உன்னத படைப்பு. கிக்குஜிரோ-வைத் தழுவி எடுக்கப்படாலும் அதை விட பல காட்சிகளில் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் மிஷ்கின். இத்தகைய படங்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும். உங்கள் விமர்சனம் அருமை! மீண்டும் படம் பார்த்தது போலவே உணர்கிறேன்!!!]]]

    நன்றி செல்லையா ஸார்.. இதை நீங்கள் பார்க்கின்ற திரைப்பட ரசிகர்கள் பலரிடமும் சொல்லுங்கள்..!

    ReplyDelete
  71. மந்திரப் புன்னகை பார்த்த மகிழ்ச்சியை இந்த படம் நீக்கி விட்ட்து..
    வழக்கமான ( விருது பட ) ஃபார்முலா படம்தான்..
    தமிழ் நாட்டு பிரச்சினைகளை பேசாமல் ஒரு யதார்த்தபடம்.. வெட்க கேடு..
    படிப்பை விட அனுப்வம்தான் முக்கியம் என நீங்கள் சொன்னது உண்மை என இப்போது உணர்கிறேன்..
    ந்ந்தலாலா- நொந்தலாலா

    ReplyDelete
  72. [[[immie said...
    வணக்கம். நேற்று இரவு அடம் பிடித்து படத்தை பார்த்தேன். இது உலகப் படம். உங்களது விமர்சனம் படத்திற்கு சமர்ப்பணம். உங்கள் விமர்சனம் படத்தின் வெற்றியை அதிகரிக்கும் என்று நினகிறேன். மிக அருமையான விமர்சனம். படம் என்று சொல்லாமல் இதை காவியம் என்றும் சொல்லல்லாம் அந்த அளவிற்கு காவியம் அருமை. ராஜா சார் ராஜா சார்தான். படத்தின் வெற்றில் சரி பாதி அவருக்கும் உண்டு. அந்த அளவிற்கு படத்தின் பின்னணி இசை. இதுவரை தமிழ் சினிமா பார்த்திடதே ஒன்று. படம் முழுக்க நான் என்னையே மறந்து விட்டேன். ஆனால் எனக்கு படத்தில் ஒரு காட்சி சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை. தமிழக காவல் துறையில் உழவர்கள் ஆங்கிலம் தெரியாது என்று ஒரு காட்சியில் சித்தரிப்பது. காவல் துறயை இழிவுபடுத்துகிறோமோ என்று எனக்கு சிந்திக்க வைகின்றது. மிஸ்கின் அவர்களே இனிமேலே இதை போல் செயதீர்கள். படம் முழுவதும் பார்த்தேன். எல்லா காட்சி களிலும் கை தட்டினேன் ஆனால் அந்த காவல் துறையின் காட்ச்யில் மட்டும் வருத்தமாக இருந்தது, ஆனால் திரை அரங்கில் அந்த கட்சிக்கு மட்டும் பலத்த கை தட்டல், தமிழர்கள் என்றைக்கு தமிழர்களாக இருப்பார்கள் என்று தெரியவில்லை, கடைசியாக தாய் என்றால் என்ன என்பதை உணர்தேன் இன்னும் அதிகமாக..]]]

    இன்ஸ்பெக்டர்கள் அத்தனை பேருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது ஸார்..! மிஷ்கின் மீது தவறில்லை. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் சரிதான்..!

    ReplyDelete
  73. [[[ராஜ நடராஜன் said...
    முன்னுரையோட நான் பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன். படம் பார்த்துட்டு மறுபடியும் படிக்கிறேன்.]]]

    ஓகே.. அவசியம் உங்களது பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்..!

    [[[மந்திரப்புன்னகை பாடல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுது. உங்க விமர்சனம்தான் நினைவுக்கு வந்தது.]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  74. [[[ராஜ நடராஜன் said...

    //கிகுஜீரோன்ற என்ற பெயரையே இப்பொழுதுதான் கேள்விபடுகிற தமிழ் பட ரசிகர்கள்தான் 90% இருக்கிறார்கள்.//

    ப்ரியமான வசந்த்! என்னையும் சேர்த்து 91% வீட்டுப் பாடம் படிக்காம தெரியலன்னு கிளாஸ்ல வாத்தியார்கிட்ட சொல்றது இல்ல:)]]]

    உலகப் படம் பார்த்தவர்களுக்கு மட்டும்தானே அது தெரியும்..! அது எத்தனை சதவிகிதம் பேர்..? யோசித்துப் பாருங்கள்..!

    ReplyDelete
  75. [[[ராஜ நடராஜன் said...
    படம் போட்டு சுபம் போட்டப்புறம்தான் நான் வர்ரேனா!அவ்வ்வ்வ்வ்.....]]]

    ஆமாம்.. நோ பிராப்ளம்..!

    ReplyDelete
  76. [[[thamizhan said...
    மிஷ்கினிடம் திறமை உள்ளது என்பது முந்தைய படங்களிலே நிரூபிக்கப்பட்டதுதான். இந்த படத்தைப் பற்றி பார்த்தவர்களிடம் எல்லாம் சொல்லுவார். இந்த அளவு உயர்வுள்ள படம் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். எந்திரத்தையும் கிராபிக்ஸையும் உலகத் தரம் என்கிறார்கள். இதுதான் உலகத் தரம். ஒரு சீன கூட போர் அடிக்கவில்லை. பாசமலர் கடைசி காட்சி போல அழ வைத்துவிட்டது. விநியோகஸ்தர்களுக்கு புரியாமல் போனதில் வியப்பில்லை.]]

    நன்றி தமிழன் ஸார்..!

    ReplyDelete
  77. [[[செங்கோவி said...

    இன்றுதான் இப்படத்தைப் பார்த்தேன். தாயைத் தேடும் பயணத்தின் டெஸ்டினேசன் ‘அன்னை வயல்’ & ‘தாய் வாசல்’ என்று பெயர் வைப்பதிலேயே தெரிகிறது மிஷ்கினின் டச்.

    இப்படம் ஒரு விஷுவல் & மியுசிகல் ட்ரீட். இன்னும் ரீங்காரமிடுகிறது ராஜாவின் பிண்ணனி இசை. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்று ஒளிப்பதிவு. கண் கலங்க வைக்கும் க்ளைமாக்ஸ்..

    ஆனாலும் முதல் பாதி ஆர்ட் ஃபிலிம் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. காதாபாத்திரங்கள் கேமிராவைப் பார்த்து திகைத்து நிற்பதும், கேமிராவைத் திருப்பி சர்ஃப்ரைசாக ஏதோவொன்றை காட்டும் உத்தி ஆரம்பத்தில் ரசிக்க வைத்தாலும் திரும்பத் திரும்ப வருவதால் சலிப்பூட்டுகிறது..

    கமர்சியல் அயிட்டங்களைப் பற்றி கவலைப்பட்டாமல் இக்கலைப் படைப்பைத் தந்த ஐங்கரனுக்கும் மிஷ்கினுக்கும் பாராட்டுக்கள். இப்பட்த்தைப் பார்க்கத் தூண்டிய உங்கள் விமர்சனத்திற்கும் நன்றி!

    --செங்கோவி]]]

    நன்றி செங்கோவி ஸார்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போலத்தான்..!

    ReplyDelete
  78. [[[Rajaraman said...

    உங்களுடைய விமர்சனமும் ராஜா சாரின் இசையும் நிச்சயம் பார்த்தே ஆக வேண்டிய படம் என்பதை உணர்த்துகிறது. இரவு காட்சிக்கு டிக்கட் புக் செய்து விட்டேன்.]]]

    ஆஹா.. கேட்பதற்கே சநதோஷமாக உள்ளது..! நீங்கள்தான் நண்பர்..!

    ReplyDelete
  79. [[[R.Gopi said...
    நிறைய இடங்களில் படத்தை பற்றிய விமர்சனம் நன்றாகவே வந்திருக்கிறது. ஐங்கரனுக்கு மற்றுமொரு வெற்றி. என்ன, அந்த மிஷ்கின் வாய் நீளத்தை கொஞ்சம் குறைத்தால், அவர் இன்னமும் நிறைய நல்ல படங்களை தர வாய்ப்புள்ளது...
    உதவி இயக்குநர்கள் கும்மியதில், கொஞ்சமாவது திருந்தியிருக்க வாய்ப்புள்ளது...
    பொறுத்திருந்து பார்ப்போம்.]]]

    கோபி ஸார்.. நாம் அவருடைய கலைத்திறனைப் பற்றி மட்டும் பேசுவோம்.. மற்றவையெல்லாம் சூழலால் உண்டாவதுதான். தானாகவே போய்விடும்..!

    ReplyDelete
  80. [[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
    சூப்பர் வாத்தியாரே இன்னிக்கு ராவோட ராவா ராவா சரக்கடிச்சுட்டு பாத்துடறேன்.]]]

    ஓகே.. பார்த்து.. அங்கேயே மட்டையாயிராதீங்க..!

    ReplyDelete
  81. [[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
    உங்களது இந்த விமர்சனம் படிச்சு காட்டுனேன். என்னோட மலையாளத்த தாய் மொழியா வச்சிருக்க நண்பன் ஒருத்தன் தமிழ் சொல்லி குடுடான்னு கேக்குறான். உண்மையிலே நீங்க உண்மை தமிழன்தான் வாழ்த்துக்கள்.]]]

    நன்றி ஸார்.. அவருக்கும் தமிழ்ச் சொல்லிக் கொடுங்கள்.. தப்பில்லை..!

    ReplyDelete
  82. [[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
    இங்க ஒரு படைப்பும் ஓவரா பேசுது
    படைப்பாளியும் ஓவரா பேசுறாரு சரிதானே..]]]

    மிகச் சரி.. இரண்டும் சரிதான்..

    ReplyDelete
  83. [[[ஜோதிஜி said...
    இது போன்ற படங்களுக்கு வலையுலக ஆதரவு என்பது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது.]]]

    இதையும் தாண்டி பொதுவிலும் மக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டும்தான் இவைகள் போன்ற காவியங்கள் தமிழில் இனிமேல் வெளிவரும்..!

    உதவியும், ஆதரவும் நீட்ட வேண்டியது நம்முடைய கடமைகள் ஸார்..!

    ReplyDelete
  84. இவைகள் போன்ற காவியங்கள் தமிழில் இனிமேல் வெளிவரும்..! "

    இது போன்ற காப்பி படங்கள் வந்தால் தமிழ் திரை உலகம் அழிந்து விடும்...

    உங்களுடன் பத்து நிமிஷம் பேசினால் ஆயிரம் கதைகள் கிடைக்குமே.. ஏன் அயல் நாட்டு காபி அடிப்பு..அவர்கள் குறியீடாக பயன்படுத்தும் விஷ்யங்கள் நமக்கு பொருந்துமா?

    அதே சமயம் , மண்ணின் மைந்தனான கரு. அவர்களின் மந்திர புன்னகை , தமிழனக்கு பெருமை சேர்க்கிறது.. அவரின் மெயில் ஐடி யை எனக்கு மெயில் செய்யுங்கள்... அவரை பாராட்டியே ஆக வேண்டும்..

    ReplyDelete
  85. [[[பார்வையாளன் said...
    மந்திரப் புன்னகை பார்த்த மகிழ்ச்சியை இந்த படம் நீக்கிவிட்ட்து.. வழக்கமான (விருது பட) ஃபார்முலா படம்தான்.
    தமிழ்நாட்டு பிரச்சினைகளை பேசாமல் ஒரு யதார்த்த படம். வெட்ககேடு. படிப்பைவிட அனுப்வம்தான் முக்கியம் என நீங்கள் சொன்னது உண்மை என இப்போது உணர்கிறேன்..
    ந்ந்தலாலா- நொந்தலாலா]]]

    தமிழ்நாட்டுப் பிரச்சினைகளைப் பேசினால்தான் அது தமிழ்ச் சினிமாவா..?

    சினிமாவுக்கு மொழியில்லை.. அது ஒரு கலைப்படைப்பு..! முதலில் இப்படி யோசித்துப் பழகுங்கள்..!

    ReplyDelete
  86. [[[பார்வையாளன் said...

    இவைகள் போன்ற காவியங்கள் தமிழில் இனிமேல் வெளிவரும்..! "
    இது போன்ற காப்பி படங்கள் வந்தால் தமிழ் திரை உலகம் அழிந்து விடும். உங்களுடன் பத்து நிமிஷம் பேசினால் ஆயிரம் கதைகள் கிடைக்குமே. ஏன் அயல் நாட்டு காபி அடிப்பு. அவர்கள் குறியீடாக பயன்படுத்தும் விஷ்யங்கள் நமக்கு பொருந்துமா?]]]

    தயவு செய்து இது போன்ற விஷயங்களில் என்னையும் இணைத்துப் பேசாதீர்கள்..! உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் பிடிக்கலை என்று சொல்லிவிட்டுப் போகலாம்.. யாருக்கும் இங்கே நஷ்டமில்லை..!

    ReplyDelete
  87. [[[சி.பி.செந்தில்குமார் said...
    vimarsanam விமர்சனம் டாப் அண்ணே]]]

    நன்றிண்ணே.. உம்ம விமர்சனம் எப்பண்ணே.. நாளைக்கா..?

    ReplyDelete
  88. //இறுதியில் சிறுவன் தாயை சந்தித்தானா? மனநலம் பாதித்தவனும் தனது அம்மாவை பார்த்தானா? என்பதையும் தயவு செய்து தியேட்டருக்குச் சென்று பாருங்கள்..!//

    அண்ணே இது எப்பேலேந்து? முடிவை எல்லாம் தியேட்டரில் போய் பார்க்க சொல்றீங்க.. சஸ்பென்ஸ் திரில்லர் படமா இருந்தாலும் முதல் வரியிலேயே கதை முடிவு சொல்லிட்டு , திரைக்கதையை எழுதுவதுதானே உங்க ஸ்டைல்? என்ன ஆச்சு?:)))

    ReplyDelete
  89. //பரபரப்பான கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை எப்படி இத்தனைக் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு வெறும் கால்களை மட்டுமே அழகுர படம் பிடிக்க முடிந்தது என்று தெரியவில்லை..! //

    அண்ணே இதெல்லாம் சும்மா பிசாத்து மேட்டரு... ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒருத்தர் ஒரு குறும்படம் எடுத்தாரு பாருங்க அதுல பலபேரோட வாயை மட்டும் தான் காட்டுவாங்க...அதை பார்த்துதான் காப்பியடிச்சிட்டாய்ங்க போல:)))


    அண்ணே அந்த குறும்படம் எடுத்தவர் பேரு தெரியனுமா?:))))

    ReplyDelete
  90. //ஈரான் படத்தைப் பாருங்க.. ஸ்வீடன் படத்தைப் பாருங்க.. செக்ஸ் படத்தைப் பாருங்க..”//

    அண்ணே நீங்களே இப்படி என்னை போன்ற சிறுவர்களுக்கு தப்பாக வழிகாட்டலாமா?

    ReplyDelete
  91. [[[குசும்பன் said...

    //இறுதியில் சிறுவன் தாயை சந்தித்தானா? மனநலம் பாதித்தவனும் தனது அம்மாவை பார்த்தானா? என்பதையும் தயவு செய்து தியேட்டருக்குச் சென்று பாருங்கள்..!//

    அண்ணே இது எப்பேலேந்து? முடிவை எல்லாம் தியேட்டரில் போய் பார்க்க சொல்றீங்க.. சஸ்பென்ஸ் திரில்லர் படமா இருந்தாலும் முதல் வரியிலேயே கதை முடிவு சொல்லிட்டு , திரைக்கதையை எழுதுவதுதானே உங்க ஸ்டைல்? என்ன ஆச்சு?:)))]]]

    உங்களை நினைச்சு கொஞ்சம் பரிதாபப்பட்டுட்டேன். அவ்ளோதான்..!

    ReplyDelete
  92. [[[குசும்பன் said...

    //பரபரப்பான கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை எப்படி இத்தனைக் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு வெறும் கால்களை மட்டுமே அழகுர படம் பிடிக்க முடிந்தது என்று தெரியவில்லை..! //

    அண்ணே இதெல்லாம் சும்மா பிசாத்து மேட்டரு... ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒருத்தர் ஒரு குறும்படம் எடுத்தாரு பாருங்க அதுல பலபேரோட வாயை மட்டும்தான் காட்டுவாங்க...அதை பார்த்துதான் காப்பியடிச்சிட்டாய்ங்க போல:)))
    அண்ணே அந்த குறும்படம் எடுத்தவர் பேரு தெரியனுமா?:))))]]]

    டேய்.. சகுனி.. சகுனி.. நீயெல்லாம் ஒரு தம்பியாடா..? போட்டுக் கொடுக்குறதுக்குன்னே பொறந்திருக்கீங்கடா..!

    ReplyDelete
  93. [[[குசும்பன் said...
    //ஈரான் படத்தைப் பாருங்க.. ஸ்வீடன் படத்தைப் பாருங்க.. செக்ஸ் படத்தைப் பாருங்க..”//

    அண்ணே நீங்களே இப்படி என்னை போன்ற சிறுவர்களுக்கு தப்பாக வழிகாட்டலாமா?]]]

    ராசா.. நல்லா கண்ணைத் தொறந்து பாருடா.. அது செக்ஸ் படம் இல்லை. செக் படம்.. செக்கோஸ்லாவாகியா நாட்டைச் சொன்னேன்..!

    உனக்கெல்லாம் எப்படித்தான் இதெல்லாம் தோணுதோ தெரியலியேடா கண்ணா..! குசும்பு கூடவே பொறந்ததா..?

    ReplyDelete
  94. All good foreign language films are not accessible to us, Tamilians. Fortunately we have shankar, Mani Ratnam and people like Miskin who constantly give all those films one by one. But, later they should not send the same films abroad for awards, they will spit on our faces for using their story without permission.

    ReplyDelete
  95. Myshkin's direction is extremely good, but Its impossible to think the look at the greatness Maniratnam have. Somebody commented about Raavanan. - One Raavanan cannot rub his classics like Nayagan, Iruvar, Dalapathi, Roja, Bombay, Dil Se and Guru.
    Myshkin is just a COPYCAT. I expected a Lot aftr Anjaathey but never expected a Copycat one.
    Myshkin does the same thing like Kamal Haasan. Copying other language Movies.

    ReplyDelete
  96. [[[Jayadeva said...
    All good foreign language films are not accessible to us, Tamilians. Fortunately we have shankar, Mani Ratnam and people like Miskin who constantly give all those films one by one. But, later they should not send the same films abroad for awards, they will spit on our faces for using their story without permission.]]]

    காப்பி என்பது இந்திய சினிமாவில் ஆதி காலம் தொட்டே நடந்து வருவதுதான்..! இதில் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படங்களின் கதைக்கரு இங்கே மசாலாவாக அரைக்கப்பட்டதுதான் உண்மை. இப்போதுதான் முதல் முறையாக அங்கே அனுப்பப்படும் அளவுக்கு தயாராகியிருப்பதால் சர்ச்சைகள் மிஷ்கினை சூழ்ந்துள்ளன..!

    ReplyDelete
  97. [[[P Sudhir ARJUN said...
    Myshkin's direction is extremely good, but Its impossible to think the look at the greatness Maniratnam have. Somebody commented about Raavanan. - One Raavanan cannot rub his classics like Nayagan, Iruvar, Dalapathi, Roja, Bombay, Dil Se and Guru.

    Myshkin is just a COPYCAT. I expected a Lot aftr Anjaathey but never expected a Copycat one.
    Myshkin does the same thing like Kamal Haasan. Copying other language Movies.]]]

    சரி.. அதையாவது நல்லதாக கொடுக்கிறாரே என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

    காப்பியே அடிக்கவி்ல்லை என்று மிஷ்கின் சொன்னால் அப்போது பார்த்துக் கொள்வோம்..!

    ReplyDelete
  98. I've read all the reviews on this movie. I've seen this film, but I was not at all impressed.... I really like reality movies. But I don't find it that impressive..... I doubt whether I saw a different movie instead of nandalala!!!!!! Anyhow, what is th public talk and is the movie a hit?????

    ReplyDelete
  99. And also, can u justify this as a world class movie?? how?? what is ur point of view of the movie??

    ReplyDelete
  100. [[[Sai said...
    I've read all the reviews on this movie. I've seen this film, but I was not at all impressed.... I really like reality movies. But I don't find it that impressive..... I doubt whether I saw a different movie instead of nandalala!!!!!! Anyhow, what is th public talk and is the movie a hit?????]]]

    சினிமா தொடர்பானவர்களிடம் மட்டுமே படம் பற்றிய பிரமிப்பு உள்ளது. பி அண்ட் சி தியேட்டர்களில் படத்திற்கு வரவேற்பில்லை. இது எதிர்பார்த்ததுதான்..!

    ReplyDelete
  101. [[[Sai said...
    And also, can u justify this as a world class movie?? how?? what is ur point of view of the movie??]]]

    ஆமாம்.. சினிமா தழைத்தோங்கும் அத்தனை நாடுகளில் இருக்கும் ரசிகர்களாலும் இந்தப் படம் வரவேற்கப்படும்..!

    ReplyDelete