Pages

Sunday, November 07, 2010

சாருவின் எந்திரன் புலம்பல் விமர்சனம் படுமுட்டாள்தனம்..!

07-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
"நாடோடிகள்' படத்தைப் பார்க்க முடியாமல் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன்" என்று சாரு எழுதியிருந்ததைப் படித்தபோதே, இனி இந்த மனிதரின் சினிமா விமர்சனங்களை பொருட்படுத்தவே தேவையில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் முடியவில்லை..!

எதிர்பார்த்தது போலவே சாருவின் எந்திரன் புலம்பல் வரைமுறையே இல்லாமல் ஒப்பாரிப் புலம்பலாக இருக்கிறது..!


முதலில் 'எந்திரன்' திரைப்படம் ஒரு அக்மார்க் ஹை டெக் மசாலா திரைப்படம் என்பதை சாரு ஏன் உணர மறுக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை.

இது அவருக்கான படமும் அல்ல என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தும் படத்தைப் பார்த்துவிட்டு இது சரியல்ல.. அது சரியல்ல... என்று நொட்டைச் சாக்கு சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய செயல் அல்ல..!

அவர் “ஆபாசம்” என்று அவர் திருப்பித் திருப்பிச் சொல்வது ஒரேயொரு விஷயத்தைத்தான். அது 61 வயதான ரஜினியும், 37 வயதான ஐஸ்வர்யாவும் காதலிப்பதை மட்டும்.

முதலில் சாரு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 61 வயதான ரஜினி கல்லூரி மாணவனாக இதே தோற்றத்தில் நடித்திருந்தால் நிச்சயமாக ரசிகர்களே அதனை நிராகரித்திருப்பார்கள். ஆனால் இதில் அப்படியல்ல..

ரஜினி தற்போது ஒரு மாஸ் ஹீரோ.. அந்த ஹீரோ தமிழ்ச் சினிமாவின் இலக்கணப்படி படத்தில் காதலிக்கப்பட வேண்டும். காதலிக்க வேண்டும். டூயட் பாட வேண்டும். சண்டையிட வேண்டும். இதுதான் மாஸ் ஹீரோவிடம் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பது. இதைத்தான் ரஜினி தன்னையொரு தொழிலாளியாக நினைத்துக் கொண்டு செய்திருக்கிறார்.

ரஜினியின் உண்மையான வயதையும், ஐஸ்வர்யாவின் உண்மையான வயதையும் மனதில் வைத்துக் கொண்டு இங்கே கதை செய்யப்படுவதில்லை. ரசிகர்களும் அதனை விரும்புவதில்லை. அவர்களுக்குத் தேவை ஒரு ஹீரோயிஸம். அந்த இஸத்தை எதிர்பார்த்துதான் எந்திரனுக்கு வந்தார்கள். கிடைத்தது. மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். அவ்வளவுதான்..

இது பல வருடங்களாக இந்திய சினிமாவில் நடைபெற்று வருவதுதான். இதில் அப்படியென்ன ஆபாசத்தைக் கண்டுவிட்டார் சாரு..?

1971-ல் 'ரிக்ஷாக்காரனில்' மஞ்சுளா அறிமுகமானபோது அவருடைய வயது 15. ஆனால் அப்போது எம்.ஜி.ஆரின் வயது 54. இதன் பின் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் அனைவருமே அவரது வயதில் பாதியானவர்கள்தான். 'வாழ்க்கை' படத்தில் நடித்தபோது அம்பிகாவுக்கு வயது 25. சிவாஜியின் வயது 58. வயதைப் பார்த்தா அப்போது படத்தைப் பார்த்தார்கள்..?


அதுவொரு மாயவுலகம். கனவுலகம்.. இரண்டரை மணி நேரம் பொழுது போகிறதே என்ற நோக்கத்திலும், தன்னால் முடியாததை தன் ஆதர்ச நாயகன் செய்கிறானே என்ற கடைக்கோடி மனிதனின் பிரமிப்பாலும்தான் இந்த சினிமா வளர்ந்தது..! இப்போதும் வளர்ந்து கொண்டிருக்கிறது..!

நாயகன் திரைப்படத்தில் சின்னப் பையனாக, விபச்சார விடுதிக்குச் செல்லும் இளைஞனாக, ஒரு கணவனாக, ஒரு அப்பாவாக, ஒரு தாத்தாவாக என்று அத்தனையையும் தனது மேக்கப்பின் துணையோடு கமல் செய்து காட்டியபோது அதனை நடிப்பு என்றுதான் நம்மால் பார்க்க முடிந்ததே தவிர.. என்ன இப்படி 32 வயசுக்காரர் 70 வயது தாத்தா மாதிரி மேக்கப் போட்டு நடிச்சிருக்காரு..? என்றெல்லாம் அப்போது யாரும் யோசித்ததில்லை. அவர்களுக்கு வேண்டியது அந்த வயதுக்கேற்ற நடிப்பு. கிடைத்தது. பார்த்தார்கள்.

கனவுலகம் என்பதையெல்லாம் தாண்டி 20 வயதான பெண், 50 வயதான பெண் போல மேக்கப் போட்டு எப்படி நடித்திருக்கிறார் என்பதில்தான் நடிப்பு என்கிற வார்த்தை ஒளிந்திருக்கிறது. அதனை ஏன் உண்மையாக்கிப் பார்க்க வேண்டும்? பிறகு நடிப்புத் தொழில், திறமை என்கிற பேச்சுக்கே இடமில்லையே..?

சாரு அதே கட்டுரையில் மார்லன் பிராண்டோவை பற்றிச் சிலாகித்துச் சொல்லும்போது 'Last Tango in Paris' என்னும் திரைப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கும்போது மார்லன் பிராண்டோவின் வயது 49. உடன் நடித்த மரியா ஷிண்டரின் வயது 21. கிட்டத்தட்ட 28 வயது வித்தியாசம். ஏன் இது மட்டும் சாருவின் கண்ணுக்கு ஆபாசமாகத் தெரியவில்லை.?

தமிழ்ப் படம் என்றால் ஒரு அளவுகோல்.. மற்ற மொழிப் படங்கள் என்றால் வேறொரு அளவுகோலா..? அதிலும் 'எந்திரனில்' ஐஸ்வர்யாராயுடன் மரத்தைச் சுற்றி டூயட்தானே பாடியிருக்கிறார் ரஜினி. குடும்பத்தோடு இதைப் பார்க்கலாமே..? இதிலென்ன ஆபாசம் இருக்கிறது..? ஆனால் Last Tango-வில் பிராண்டோவும் அந்தப் பெண்ணும் செய்வது என்ன..? அதை எவனாவது குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியுமா..?(நான் தனிமையில்தான் பார்த்தேன்) இந்த இரண்டில் உண்மையில் எது ஆபாசம்..?

தன் அறிவுக்கு ஒத்து வராத தமிழ்த் திரைப்படத்தை பார்த்துவிட்டு, தனக்குப் பிடித்ததுபோல் எடுக்கவில்லையே என்ற சாருவின் புலம்பல் சுத்த முட்டாள்தனம்..!


'ராவணன்' படத்திலாவது இறுதிக் காட்சியில் லோ நெக் டிரெஸ்ஸில் ஐஸ்வர்யாவைக் காட்டியிருக்கும் விதத்தை வைத்து 'ஒரு துளி ஆபாசம் 'என்று சொல்லலாம். ஆனால் எந்திரனில் அப்படியென்ன ஆபாசத்தைக் கண்டுவிட்டார் சாரு..?

இவர் எதை 'ஆபாசம்' என்கிறார் என்பதே தெரியவில்லை. அதை முதலில் தெரிந்து கொண்டு பின்புதான் இவரிடம் பேச வேண்டும் போலிருக்கிறது..!

சென்ற மாதம் தனக்குக் கடிதம் அனுப்பியிருந்த ஒரு வாசகருக்கு சாரு எழுதியிருந்த பதிலில் சொல்லியிருப்பதுதான் உண்மையிலேயே ஆபாசம்.

தனி உரையாடல்களில் நண்பர்களிடத்தில், உரிமையுள்ளவர்களிடத்தில் கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளையும், வீட்டுக்குள் புழுங்கும், புழங்கும் வார்த்தைகளையும் பொதுவில் வைத்து தான் எழுதியிருந்த ஆபாசத்தையெல்லாம் மறந்துவிட்டு இப்போது ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை ஆபாசம்  என்று சொல்லி மேலும், கீழுமாகக் குதிக்கிறார்.

“அருவருப்பும் இருக்கிறது” என்கிறார். கரப்பான்பூச்சி கையில் ஊர்கின்றபோது நமக்கு வருவது அருவருப்பு. காலில் மலம் ஒட்டிக் கொண்டால் நாம் முகம் சுழிப்பது அருவருப்பில்..! பிட்டு பட சீன்களை குடும்பத்துடன் பார்க்கும்படியான படத்தில் பார்க்கும்போது நமக்குத் தோன்றுவதும் இதுதான். ஆனால் 'எந்திரனில்' அது போன்ற காட்சியமைப்புகளே இல்லையே..?

தீக்காயம் பட்ட அந்தப் பெண்ணைத் தூக்கி வரும்போதுகூட நிர்வாணத்தை மறைத்துத்தான் காட்டியிருக்கிறார் ஷங்கர். “செக்ஸ்” என்ற வசனத்தைக்கூட வாய்ஸ் ஓவர் லேப்பாக ரோபோவின் மீதே திணித்திருப்பதால் அதுவும் எதையும் நமக்குத் தோற்றுவிக்கவில்லை..! வேறு எந்த வகை உணர்ச்சியை அருவருப்பு என்கிறார் சாரு...?

எந்திரன் திரைப்படத்தின் விளம்பரப்படுத்ததலைப் பற்றி இவர் மட்டுமல்ல ஒட்டு மொத்தப் பதிவுலகமே எழுதிச் சுட்டிக் காட்டியாகிவிட்டது. அசுர பலத்துடன் அரசாட்சி செய்யும் ஒரு அரசு அமைப்பைப் போல சன் டிவி விஸ்வரூபமெடுத்தாகிவிட்டது. இதை அவர்கள் செய்யாமல் விட்டால்தான் ஆச்சரியம்..!

இதனால் மற்ற திரைப்படங்களுக்கு வசூல் குறைவும், கவன ஈர்ப்பும் இல்லை என்பதை ஒத்துக் கொண்டாலும், ரஜினி மீதான கவர்ச்சி அம்சமாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை..!


ரஜினியைத் தவிர வேறு எந்த ஹீரோவை வைத்து 150 கோடியில் தைரியமாக படமெடுக்க முடியும்..? போட்ட காசுக்கு மேலேயே இரண்டு மடங்கு தொகையை இப்போது சன் டிவி அள்ளிவிட்டது. வியாபாரம் நுணுக்கம் தெரிந்தவர்கள்.. தந்திரக்காரர்கள்.. அள்ளுகிறார்கள்.

ஒரு பக்கம் இதனை மறைமுகமான கொள்ளை என்று மற்றவர்கள் சொன்னாலும், அனைத்து வியாபாரத் துறைகளும் இப்படித்தானே இருக்கிறது. 

'உயிர்மை' பதிப்பகம் அல்லாமல் வேறு அட்ரஸ் தெரியாத, அறிமுகமில்லாத பதிப்பகங்களுக்கு சாரு தனது புத்தகங்களை விற்பனை செய்யும் உரிமையைத் தருவாரா...? மாட்டார் அல்லவா...?

பதிப்பாளர் தன்னையொத்த சிந்தனையாளராக இருப்பாரா? யாரிடம் தன்னால் சரிக்குச் சமமமாக பேச முடியும்..? நம் பெயருக்கு ஏற்றாற்போல் மார்க்கெட்டிங்கை அவரால் செய்ய முடியுமா..? நம்பிக்கையா ராயல்டி தொகை நமக்குக் வருடாவருடம் கிடைக்குமா..? நூல் வெளியீட்டு விழாவை காமராஜர் அரங்கத்தில் செலவு செய்து நடத்தும் அளவுக்கு வல்லமை படைத்தவரா..? கூட்டத்தை அவரால் சேர்க்க முடியுமா..? நண்பர்களுடன் அளவளாவுவதற்கு இரவு நேர தண்ணி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வாரா..?   என்பதையெல்லாம் யோசிச்சுத்தானே கொடுப்பார்..? கொடுத்திருப்பார்..?.

இதைத்தான் ரஜினியும் செய்திருக்கிறார். ஒரு நடிகர் என்ற முறையில் ரஜினி எதிர்பார்ப்பது வெற்றியை.. அதற்குத் தோதான ஆட்கள் யார் என்று தேடி, தேடித்தான் சன், ரஹ்மான், ஷங்கர் இணைந்திருக்கிறார்கள். ஒருவகையில் வியாபாரத்தின்படி இது சக்ஸஸ்புல் ஜோடிதான்..!

வேறு எந்த தமிழ் ஹீரோவுக்கும் இல்லாத எதிர்பார்ப்பும், ஆதரவும் ரஜினிக்கு இருக்கிறது. கார்த்திக்கும், ராதாவும் மேடையேறி ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ரஜினியின் தலை தென்படுகிறது. அவ்வளவுதான் அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு கைதட்டலைத் தவிர வேறில்லை நேரு ஸ்டேடியத்தில்..! இதையெல்லாம் யார் செய்யச் சொன்னது..? "ரஜினி வந்ததும் அனைவரும் கை தட்டுங்கள்" என்று இயக்குநர்கள் சங்கமா சொன்னது..?

ரசிகர்களின் மனதில் அந்த நேரத்தில் தோன்றிய மயிர்க்கூச்செறியும் தூண்டுதல் அது. எப்படி, யாரால் என்றெல்லாம் யாராவது ஆராய்ச்சி செய்ய முடியுமா? இதற்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும்..? அதற்கு ரசிகர்கள்தானே காரணம்..? “எழுத்துலகின் சூப்பர் ஸ்டார் சாரு அவர்களே..” என்று சாருவை அழைத்தபோது, பிலிம் சேம்பர் தியேட்டரில் இதேபோல்தானே கை தட்டல் கிடைத்தது. இரண்டிலும் என்ன தவறு இருக்கிறது..? அவரவர் உணர்ச்சிகளை அவரவர் ரசிகர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதில் ரஜினியை மட்டும் குறை சொன்னால் எப்படி?

இதற்கு முன்பு தான் வாங்கி, விநியோகம் செய்த கூட்டமே வராத படங்களுக்கு எப்படி, எப்படியோ விளம்பரங்களை வெளியிட்டு ஓட்டிப் பார்த்தது சன் டிவி. அப்போதெல்லாம் சன் டிவியின் விளம்பரத்தைப் பார்த்தா ரசிகர்கள் கூட்டம் தியேட்டருக்கு ஓடியது..?

'எந்திரன்' படம், ரஜினி ரசிகர்களையும் தாண்டிய பொதுவான மக்கள் மத்தியிலும் சூப்பர் ஹிட்டானது சன் டிவியே எதிர்பார்க்காத ஒன்று. பொதுவாக ரஜினி ரசிகர்களுக்குத்தான் பிடிக்கும்.. முதல் ஒரு வாரத்தில் அவருடைய அனைத்து ரசிகர்களையும் பார்க்க வைததுவிட வேண்டும் என்று நினைத்துதான் அவர்கள் தங்களது விளம்பர யுத்தத்தை ஆரம்பித்தார்கள்.

ஆனால் முதல் காட்சியிலேயே இது ரசிகர்களையும் தாண்டிப் பொதுவான மக்களையும் கவரப் போகிறது என்பது புரிந்து, அதற்கேற்றாற் போல் தங்களது வியாபார தந்திரத்தை மாற்றிக் கொண்டார்கள்.

மக்களுடைய கருத்து என்ன..? “ரெண்டரை மணி நேரம் நல்லா பொழுது போச்சு ஸார்.! குட் எண்ட்டர்டெயிண்மெண்ட். இது மாதிரி இன்னொரு தமிழ்ப் படம் வரணும்னா அந்த இயக்குநர் ஷங்கரைவிட டேலண்ட்டாத்தான் இருக்கணும்.. கண்டிப்பா அதுலேயும் ரஜினிதான் நடிக்க முடியும்” என்கிறார்கள்.

சன் டிவியைத் திட்டுகின்ற சாக்கில் ரஜினியின் உழைப்பையும், சங்கரின் உழைப்பையும் முட்டாள்தனம் என்று சொல்லும் முட்டாள்தனத்தைத்தான் சாரு செய்திருக்கிறார்.


'எந்திரன்' மேக்கிங் காட்சிகளைப் பார்த்தபோது ரஜினியின் உழைப்பும், ஷங்கரின் மேக்கிங் திறமையும் நன்கு தெரிந்தது. இதற்கடுத்த பேட்டியில் “2 மணி நேரத்துல பானு மேக்கப் போட்டுட்டாங்க...” என்று அலட்சியமாக ரஜினி சொன்னதைக் கேட்டு வாயருகே சோறுடன் சென்ற எனது கை ,அப்படியே அனிச்சை செயலாக நின்றுவிட்டது. அவ்வளவு அதிர்ச்சி.!

ரஜினி எந்த விஷயத்தை எப்படி சொல்கிறார் பாருங்கள். இதுதான் அவரது வெற்றியின் ரகசியம். இந்த வெற்றிக் கோடு  ஒன்றை மட்டுமே அளவுகோலாக வைத்துத்தான் அவரவர், அவரவர் துறைகளில் புலிப்பாய்ச்சல் காட்டுகிறார்கள். இதில் சன் டிவி, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, அம்பானிகள், விஸ்வநாதன் ஆனந்த், சானியா மிர்சா என்று அனைவருமே அடக்கம்..!

அந்த ஒரு உழைப்பை சாரு எவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தியிருக்கிறார் என்பது அவரது விமர்சனத்தைப் படித்தாலே புரிகிறது. தெரிகிறது. இவர் மட்டும் “நான் நாளொன்றுக்கு 18 மணி நேரம் எழுதுகிறேன். படிக்கிறேன்.. தமிழ் எழுத்துலகத்துக்காக உழைக்கிறேன். ஆனால் பதிலுக்கு இந்த பாழாய்ப் போன தமிழ்ச் சமூகம் எனக்கு எந்த அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை..” என்று புலம்புகிறாரே..?

ரஜினியும், ஷங்கரும்தான் ஒரு நாளைக்கு 18 மணி நேரத்தை இந்தப் படத்திற்காக கொடுத்து உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்பையாவது பாராட்ட வேண்டாமா? இவருக்கென்றால் ஒன்று.. மற்றவருக்கென்றால் வேறா..? 

61 வயதிலும் ஒரு மனிதரை இவ்வளவு தூரம் படத்தில் இன்வால்வாக வைத்து, உழைக்க வைத்து, சண்டையிட வைத்து, இயக்கியிருக்கிறாரே ஷங்கர்.. உண்மையில் இந்த இருவரின் கடின உழைப்பு சாருவின் கண்ணுக்குத் தெரியவில்லையா..? தமிழ்ச் சினிமாவில் இவருடைய பிரச்சினைதான் என்ன..?

"எந்திரன் படம் காப்பியடிக்கப்பட்டது" என்கிறார். நிச்சயமாக இந்த விஷயத்தில் மட்டும் சாருவுடன் நான் ஒத்துப் போகிறேன். ஹாலிவுட் படங்களின் தாக்கம் இல்லாமல் இந்தப் படத்தின் கதையை ஷங்கரால் சிந்தித்திருக்கவே முடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மையான வாதம்.

இதில் பல ஹாலிவுட் படங்களின் காட்சியமைப்புகள் தெரிந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகளில் அந்த பாம்பைத் தவிர மீதியெல்லாம் ஹாலிவுட்டுக்கும் புதுசுதான்.. நான் பார்த்தவரையில்..!


பொதுவாக அனைத்து வகை திரைப்படங்களுமே காப்பிதான்.. புத்தகம், இலக்கியம், புராணம், மக்கள் கதை, பத்திரிகைகள் என்ற பல்வேறு பிரிவுகளில் கதைகளை எடுத்தாண்டிருக்கிறார்கள் நமது முன்னோர்களான இயக்குநர்கள்.

இது இப்போது சற்று முன்னேறி மற்ற மொழி திரைப்படங்களின் கதையை காப்பியடிப்பது என்னும் கட்டத்திற்கு வந்துவிட்டது..! 'இன்ஸ்பிரேஷன்' என்கிறார்கள் தமிழ் இயக்குநர்கள். இதற்கும் காப்பி செய்வித்தலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. சில படங்களில் கதை,. சில படங்களில் சீன்கள் என்று நமக்கு முன்பே அறிமுகமான காட்சிகளெல்லாம் சுட்டிருப்பது ஹாலிவுட் படங்களை பார்க்கும் இரண்டாயிரம் பேர் கொண்ட சமூகத்திற்கு மட்டுமே தெரியும். பெருவாரியான முன் பெஞ்சு ரசிகர்களுக்குத் தெரியாது.

'எந்திரன்' படம் பற்றிய செய்தியை பத்தாண்டுகளுக்கு முன்பாகவே தமிழுகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் சாருவின் குருவும் நமது வாத்தியாருமான சுஜாதாதான். இப்போது இந்தப் படம் பற்றிய செய்திகளும், சர்ச்சைகளும், வழக்குகளும் வரிசை கட்டி நிற்பதைப் பார்த்தால் சிந்தனைச் சிற்பிகள் அத்தனை பேரின் சிந்தனைகளும் ஒரே மாதிரி இருக்குமா? இருக்காதா? என்பதற்கு கோர்ட்டுதான் முடிவு சொல்ல வேண்டும் போலிருக்கிறது.

ஆனாலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் அத்தனை சுலபத்தில் முடிந்துவிடாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் படம் ஆரம்பித்த நேரத்தில் 2000 பக்கங்கள் கொண்ட ஸ்கிரிப்ட்டை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ஷங்கரின் உதவியாளர்கள் கொண்டு வந்து இரண்டு நாட்கள் முழுவதுமாக அமர்ந்து பதிவு செய்துவிட்டுப் போனார்கள். ஸோ.. என் கற்பனை.. உன் கற்பனை.. என்ற ரீதியில் இந்த வழக்கு அல்லல்படத்தான் போகிறது..!

இந்தப் படத்தில் பல இடங்களில் சுஜாதாவின் வசனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை ஷங்கரும் ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சாருவோ வசனங்களையும் காறித் துப்பியிருக்கிறார். சுஜாதா எழுதியது எது என்று அவருக்குத் தெரியாது என்பதால் இதனை ஒதுக்கிவிடுவோம்..! ஆனாலும் சில ஷார்ப்பான வசனங்கள் எனக்கு வாத்தியாரை ஞாபகப்படுத்தியது. இது சாருவுக்கும் நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். நான்  நம்புகிறேன் நமது வாத்தியாரின் கைவண்ணம் இப்படத்தில் இருக்கிறது என்று..!

ஒருவேளை வாத்தியார் சுஜாதா இன்று உயிருடன் இருந்திருந்தால், சாருவின் இந்த 'எந்திரன்' விமர்சனம், நிச்சயம் வேறு மாதிரியாகத்தான் இருந்திருக்கும் என்று என் உள் மனது சொல்கிறது..!

“இதுவரை என் தமிழ் சினிமா அனுபவத்தில் இவ்வளவு ஆபாசமான,  அருவருப்பான காட்சிகளை நான் பார்த்ததில்லை” என்று சொல்லியிருக்கிறார் சாரு..!

எந்திரன் படத்தில் ஆபாசமான காட்சிகள், அருவருப்பான காட்சிகள் என்று ஒரு காட்சியையாவது இவரால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? பின் எதற்கு அந்த வார்த்தைகளை இரவல் வாங்கி, சினிமா விமர்சனத்தில் திணித்து வைத்துக் குதிக்கிறார்..?

எனது வாழ்க்கையிலும் இந்த அளவுக்கு அவதூறான, பொய்யான ஒரு விமர்சனத்தை இதுவரையிலும் நான் கண்டதேயில்லை..!

121 comments:

  1. என் அண்ணே, இவருக்கு எல்லாம் மதிப்புக் கொடுக்கறீங்க.... எதையோ பார்த்து எதோ குலைக்குதுன்னு விட்டுட்டு போவீங்களா?

    ReplyDelete
  2. இன்னொரு முக்கியமான விஷயம்: சாரு கூறும் உதாரணங்கள் - அதாவது ரஜினி அமிதாப் அவர்களை பார்த்து திருந்த வேண்டுமாம். அதாவது அமிதாப் இப்போது செய்யும் வயதான, சீனியர் ரோல் மாதிரி ரஜினியும் செய்ய வேண்டுமாம். அதற்க்கு அவர் கூறும் உதாரணங்கள் சீனி கம் போன்ற படங்கள்.

    ஆனால் அவர் ஒன்றை மறந்து விட்டு பேசுகிறார். ஐந்து வருடங்கள் வனவாசம் கழித்துவிட்டு திரும்ப 1997ல் நடிக்கவந்தபோது அமிதாப் நடித்த படங்களில் அவரின் ஜோடி யார் தெரியுமா? மனிஷா கொய்ராலா, ஷில்பா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா போன்றவர்கள்தான். அதாவது ஐம்பத்தெட்டு வயதில் அமிதாப் இருவது ஐந்து வயது மனிஷாவுக்கு ஜோடியாக நடிக்கலாமாம். ஆனால் ரஜினி நடிக்க கூடாதாம்.

    இந்த ஐந்து வருடங்களில் அமிதாப் நடித்த படங்களில் படே மியான், சோட்டே மியான் தவிர அனைத்துமே மொக்கையாகி ஓடாமல் போனவை.(இதில் படே மியான் சோட்டே மியான் ஒடக்காரணம் கோவிந்தாவும் ரவீனாவும் தான் என்பது நமக்கு தெரியும்)

    அதற்க்கு பின்னர் தொலைக்காட்சிக்கு போய் பின்னர் வயதான கேரக்டரே வந்ததால் அவற்றை நடிக்கிறார். இந்த உண்மை சாருவுக்கு தெரியுமா?


    அதைவிட்டு விட்டு சும்மா அமிதாப் மாதிரி நடி, அமிதாப் மாதிரி நடி என்றால், ரஜினியை அப்படி நடிக்க சொல்ல நீ யார் சாரு? Amithab is doing these roles out of finding out the truth that the audience is no longer accepting his mass characters. Sheer necessity forced him to don these roles, not his taste. He still did films Nishabd, RGV's Aag where he did roles which are pathetic compared to Rajni's roles.

    அப்படியானால் இப்போது நான் கேட்கிறேன்: சாரு, நீங்கள் என் சரோஜாதேவி கதைகள் போல எழுதக்கூடாது? (இப்போது மட்டும் அவரது எழுத்துக்கள் என்ன வாழுகிறதாம்?) சரோஜாதேவி கதைகள் பலருக்கும் மகிழ்ச்சியை தருபவை. ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்து மணிநேரம் உழைக்கும் நீங்கள் என் இந்த மாதிரி கதைகளை எங்களுக்கு அழகிய தமிழில் எழுதக்கூடாது?

    ReplyDelete
  3. தல
    இது ஒரு விளம்பர உத்தி .. ஹிட்ஸ் அதிக புடுத்த எழுதி இருப்பாரு .. எதுக்கு சாருக்கு எல்லாம் முக்கியத்துவம் தருங்க .. அவரு இளையராஜா பற்றி சொல்லும் போதே அவரின் தரம் எனக்கு புரிந்து விட்டது .

    தமிழுடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  4. சரியாக சொன்னிர்கள் முத்துக்குமார்

    ReplyDelete
  5. சமீபத்தில் பிலிம் சேம்பரில் நடந்த ஒரு விழாவில் கூட சாரு இந்த மாதிரியே பேசி அந்த விழாவின் ஆரம்பத்தையே மொக்கையாக்கிவிட்டார். எல்லா படங்களையும் பார்க்க லீவு எடுத்துக்கொண்டு வந்த நான், உடனடியாக மனம் நொந்தேன். எந்த இடத்தில் எது பேச வேண்டும் என்ற இங்கிதம் கூடவா அந்த உலக மகா எழுத்தாளருக்கு தெரியாது? திராவிட கட்சிகள்தான் திருமனக்கூடத்தில்கூட அரசியல் பேசுவார்கள்.

    அதில் சாரு சொன்ன கதை ஒன்று: இவர் ஒரு சினிமா விழாவிற்கு சென்றாராறம். அங்கு ஒரு பெரிய மனிதர் (யாரென்று சொல்ல மாட்டாராம்) வந்தாராம். அவர் காக்டெயில் பக்கமே போக மாட்டேன் என்றாராறம். ஏனென்றுகேட்டால், இன்றுதான் நான் எந்திரன் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் என்று பதில் சொன்னாராம்.

    இந்த மாதிரி கதையை எல்லாம் பலரும் கூறுவார்கள். அந்த கதையை சொன்ன சாருவிற்கு உண்மையிலேயே முதுகெலும்பு என்று ஒன்று இருந்தால் சொன்னவர் யார், எந்த இடத்தில் அதை சொன்னார் என்று கூறு இயலுமா? சும்மா கதை கட்டிவிடுவது தான் விக்கிபீடியா சாருவிற்கு கைவந்த கலையாயிற்றே?

    கடைசியாக ஒரு கேள்வி: ஒரு அறையில் வெறும் பேப்பரை மட்டும் கொடுத்து (கணினி, இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், குறிப்பாக விக்கிபீடியா இல்லாமல்) சாருவால் ஒரு கட்டுரை எழுத முடியுமா?

    ReplyDelete
  6. அந்த எழவெடுத்த சனியனை ஏண்ணே கண்டுக்கறீங்க!... எதையுமே நெகடிவா பேசறதுதான் பாலிசின்னு இருக்கிறதுங்கள விட்டுத்தள்ளுங்க!....

    ReplyDelete
  7. அவரின் இந்த மாதிரி எழுத்துக்களில் நிறைய அசட்டுக்களை தட்டும்.
    தாங்கமுடியாது.

    ReplyDelete
  8. அமிதாப், அபிஷேக்குக்கே இல்லாத கவலை சாருவுக்கு எதற்கு! ரஜினி என்ன ஐஸை ரேப்பா செய்து விட்டார். தமிழ் சினிமாவில் மீசை முளைக்காத நண்டுகள் கூட இன்று நாயகியை கண்ட இடத்தில் தடவுகையில், ரஜினி மட்டும் அவ்வாறு நடிக்காமல் இருந்ததே அவரின் ஒழுக்கத்தை காட்டுகிறது.

    ReplyDelete
  9. எந்திரன் உருவான விதம்" மட்டும் ஒளிபரப்பாகவில்லை என்றால், இந்த மனிதர் பட்ட கஷ்டம் வெளியே தெரியாமலே இருந்திருக்கும்.. அவராக வாயைத் திறந்திருக்க மாட்டார். விஷயம் தெரியாதவர்கள் எல்லாம் ரஜினியும் எந்திரன் டீமும் பட்ட கஷ்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமலே போயிருந்திருக்கும்.

    எல்லாம் கிராபிக்ஸ், கிராபிக்ஸ் என்று சொல்லிவிட்டு ரஜினி ஒன்றுமே செய்யாதது போல் பேசி வந்த அனைவரின் வாய்க்கும் ஒரு நவ்டால் பூட்டு போடப்பட்டு விட்டது. அதற்காக சன் டிவிக்கு ஒரு நன்றி.

    உடல் ரீதியாக தலைவர் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிந்தது. உடம்பெல்லாம் வலிக்கிறது என்று தன்னிடம் குறிப்பிட்டதாக சில நாட்களுக்கு முன் வைரமுத்து கூறியபோது அவ்வளவாக நமக்குப் புரியவில்லை. இப்பொழுதுதான் அந்த வலி நமக்கு தெரிந்தது. சும்மா இப்படி அப்படி என்று ஸ்டைல் மட்டுமே காட்டிக் கைதட்டலை பெற முடிந்த ஒரு மாபெரும் கலைஞன் இப்படி தன்னை வருத்திக் கொண்டதைப் பார்த்த போது அவரது தொழில் பக்தியும், கடும் உழைப்பும் கண்கலங்கச் செய்தது. அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இவர் அத்தியாவசியப் பாடம் என்று உணரச் செய்தது.

    இதற்குப் பின்னும் ரஜினியை குறை சொல்ல நினைப்பவர்களுக்கு மன நோய் என்று தான் நினைக்க முடியும். இவர்களுக்கு குடி போதையை விட இந்த மனநோய் போதை தலைக்கேறி இருப்பதால் குடியை விட்டுவிட்டார்கள்...விட்டுத் தள்ளுங்கள்..

    அன்புடன்

    ஈ. ரா

    ReplyDelete
  10. "கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்" எனும் பாடலின் ரீமிக்ஸ்: "சாரு, ஒரு படத்தை இயக்க வேண்டும். அதை மக்கள் விமர்சிக்கும் நாள் வர வேண்டும்!" பருத்திவீரன் கேங் ரேப், சுப்ரமணியபுரம் தொடர்கொலை, அனைத்து படங்களிலும் வரும் டாஸ்மாக், கெட்டவார்த்தைகள்.. என எதுவுமே இல்லாத எந்திரன் மட்டமான படமா? உலக சினிமாவை மனதில் கொண்டு அனைத்து தமிழ் சினிமாவையும் விமர்சிப்பது சரியல்ல. கமல் படம் எடுத்தால் பார்ப்பனீயம் என்பது, ரஜினி என்றால் அதீத கற்பனை என்பது.. செம காமெடி பாஸ். கமல், விஜய் டிவியில் ஐம்பதாம் ஆண்டு திரை வாழ்க்கை விழாவில் சொன்னது "சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என எங்களை நீங்கள்தான் அழைக்கிறீர்கள். நாங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்". எனவே சாரு சார், "பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருட சௌக்யமா?...யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே! கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது" . குறிப்பு: நான் ஒன்றும் ரஜினி ரசிகன் அல்ல. ஒரு சில ரஜினி படங்களில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனால் அவர் ஒரு என்டர்டைனர் என்பதை மீண்டும் மீண்டும் தன் படத்தின் மூலம் சொல்வதால், அவரிடம் இருந்து நீங்கள் வேறு எதைத்தான் எதிர்பார்க்கிறீர்கள்? I WANT MORE IN THE RAIN! I WANT MORE IN THE RAIN!!

    ReplyDelete
  11. marai kalanda case intha charu..athu thaan ellarukum teriyumee ..

    ReplyDelete
  12. //தன் அறிவுக்கு ஒத்து வராத தமிழ்த் திரைப்படத்தை பார்த்துவிட்டு, தனக்குப் பிடித்ததுபோல் எடுக்கவில்லையே என்ற சாருவின் புலம்பல் சுத்த முட்டாள்தனம்..!]]

    ரொம்ப சரி அண்ணே!

    ReplyDelete
  13. இந்த சிந்திரன் பையன் இங்கே எங்கோ சுத்திகிட்டு இருந்தான்.நீங்க சரின்னு சொன்னா சிந்திரன்கிட்ட சொல்லி சாரு தலையில ஒரு கொட்டு வைக்கச் சொல்கிறேன்:)

    ReplyDelete
  14. //படம் காப்பியடிக்கப்பட்டது" என்கிறார். நிச்சயமாக இந்த விஷயத்தில் மட்டும் சாருவுடன் நான் ஒத்துப் போகிறேன். ஹாலிவுட் படங்களின் தாக்கம் இல்லாமல் இந்தப் படத்தின் கதையை ஷங்கரால் சிந்தித்திருக்கவே முடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மையான வாதம்.//


    இதைத் தான் தெளிவாக தன் உலக சினிமா ஞானத்துடன் சொல்லி யிருக்கிறார். மேலும் அவர் ரஜினியின் உழைப்பை எதுவும் குறிப்பிட வில்லை. அமிதாப் போல இனி நடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். சன் டி.வி.யின் விளம்பர யுத்தியால் , உலக தரமான சினிமா என மக்கள் ஏமாறுவதை சாடியுள்ளார்.
    ஒரு எழுத்தாளன் என்ற முறையில் மறுபக்கமாய் எப்போதும் இருப்பதால் , சாரு மோசமானவன் , விளம்பரத்திற்காக எழுதுகிறான் என்பது தவறு என கருதுகிறேன். யாரும் சுட்டிக் காட்டாததை தொட்டு பேசுவதால் தவறானவராகவே எப்போதும் தென்படுகிறார்.

    எனக்கும் சாரு மீது கோபம் இருந்தது , ஆனால் தொடர்ந்து அவரை வாசிப்பதால் , அது அவரின் இயல்பு என்ற நிலைக்கு வந்து விட்டேன்...

    எப்போதும் பாசிடிவ் சைடில் மட்டுமே பார்ப்போமே...!

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. ஏண்ணே சாருவையெல்லாம் படிக்கிறீங்க. அந்த அறிவழகனின் அழகப்பத்தி எனக்கு அதிகமாகவேத் தெரியும். யார் யாரிடம் எவ்ளவு மோசமாக விளையாடியுள்ளார் என்று. சரி பணம் விசயத்தைத்தான் விடுவோமென்றால் இவர் எத்தனை பேரின் எழுத்தை லவட்டியுள்ளார் என்பதை அவரின் நெருங்கிய நபர்களைக்கேளுங்கள், கேட்டுக்கொண்டே இருக்கலாம். ராஜபக்சே மனித உயிரின் முக்கியத்துவத்தைப் பேசுவது போன்றது இவரின் சினிமா விமர்சனம்.

    ReplyDelete
  16. கடவுளே! கடவுளே! கடவுளே! கடவுளே! கடவுளே! கடவுளே! கடவுளே! கடவுளே!

    ReplyDelete
  17. சாருவுடன் சில கருத்துக்களில் உடன்படுகிறேன்.
    நாடோடிகள் பாதிக்கு மேல் பார்க்கமுடியவில்லை. சுத்த பைத்தியக்காரத்தனமாக இருந்தது அந்த படம்
    எந்திரன் Hollywood க்கு சவால் போன்ற ஏமாற்று வேலைகளை நிராகரிக்கிறேன். முதலில் இதில் பலதும் ஒரிஜினல் இல்லை. இரண்டாவது hollywood கலைஞர்களை வைத்து படம் எடுத்துவிட்டு hollywood க்கு சவால் என்பது சுத்த மோசடி.
    Bicentinneal Man -இல் இருக்கும் அறிவுபூர்வமான அலசல் எதுவும் இல்லாமல் எடுத்துவிட்டு இது உலக தரமான சினிமா என்பது கேலிக்கூத்து. தமிழர்களுக்கு இது போதும் என்று சங்கர் நினைப்பது போல் உள்ளது.
    கடைசியாக, ரோபோவை வைத்து எவ்வளவோ கற்பனை பண்ணலாம். ஆனால் அதிலும் வெறும் காதல் தானா? தமிழ் சினிமாவை காதலை விட்டு வெளியே வரவே விடமாட்டேன் என்கிறார்களே, அது ஏன்? வாழ்கையில் காதலை விட எவ்வளவோ இருக்கிறது.
    எந்திரன். ஏமாற்றம்
    (சன் டிவி யில் கோட் போட்டுகொண்டு விமர்சனம் செய்பவரை நினைத்துக்கொள்ளுங்கள்!)

    ReplyDelete
  18. சாருவின் எழுத்தை ரசிக்கும் அளவிற்கு ரஜினியையும் ரசிக்கும் சாமானியன் நான். சாருவிற்கு இருப்பது ஒரு வித கமர்ஷியலுக்கு எதிரான மன‍நிலை என்றே தோன்றுகிறது. சன் டிவியின் அரசியலையும் வெகுஜன ரசனையையும் ஒரே கட்டில் நிராகரிப்பது என்பது ஒருவித இலக்கியவாதிகளின் மன நிலையே தவிர வேறில்லை. இவர்கள் குமுததை வாங்கிப்படித்துவிட்டு குமுதத்தில் இலக்கிய கட்டுரை வரவில்லை, அது குப்பை. படிப்பவன் எல்லாம் முட்டாள் என்ற ரீதியில் திட்டுபவர்கள். இதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.

    ReplyDelete
  19. namma oorla vayalaye vada suduravanga jasthiiiiiiiiiiiii.......athaula avarum oruthar

    ReplyDelete
  20. @bandu

    ///Bicentinneal Man -இல் இருக்கும் அறிவுபூர்வமான அலசல் எதுவும் இல்லாமல் எடுத்துவிட்டு இது உலக தரமான சினிமா என்பது கேலிக்கூத்து.
    கடைசியாக, ரோபோவை வைத்து எவ்வளவோ கற்பனை பண்ணலாம்.
    எந்திரன். ஏமாற்றம்//////
    எவ்வளவோ கற்பனை பண்ணலாம் என சொல்வதும்,சாரூ போல விளம்பரத்துக்கு எழுதுவதும் சுலபம்..களத்தில் நின்று போராடுபவனுக்கு தான் தெரியும் அதனுடைய கஷ்டம்....மூன்று மணிநேர சினிமா என்பது அறிவை அலசுவதற்கு அல்ல..அது ஒரு என்டர்டைன்மென்ட் ...பொழுதுபோக்கு அம்சமாகவே எடுத்து கொள்ள வேண்டும்..நமது நாட்டு மக்களுக்கு பிடித்தாற்போல் கதை எடுக்க பட்டுள்ளது..இதை முழுக்க முழுக்க அறிவியல் சொல்கிறேன் என படம் எடுத்து இருந்தால் ,கலாநிதிமாறன் தலையில் துண்டு தான் போடவேண்டும்.அது என்ன சண் டிவி இப்படி விளம்பரம் செய்தார்கள் ,அப்படி விளம்பரம் செய்தார்கள்? அவர்கள் கோடி கணக்கில் முதல் போட்டார்கள்,அதை எடுக்க என்ன விளம்பரம் செய்ய வேண்டுமோ செய்தார்கள்..காசு போட்டவனுக்கு தான் அதன் வலி தெரியும்..இதில் என்ன தவறு உள்ளது?
    ரஜினி இப்படி உழைத்து தன்னை வருத்தி தான் சம்பாதிக்க வேண்டுமா? அவசியம் இல்லையே..? மக்களுக்கு நல்ல என்டேர்டைன்மென்ட் கொடுக்க நினைத்தார்..நல்ல டீம் அமைந்தது..ஜெயித்தார்கள்..நீங்கள் அவர்களை வாழ்த்த வேண்டாம்..குறை கூறாமல் இருந்தால் போதும்..
    தவிர....எந்திரன் எங்களுக்கு ஏமாற்றம் அல்ல...வருடம் முழுக்க வரும் படங்களில் ஒரு ஓபனிங் சாங்,ஆறு குத்து பாட்டு,நூறு பன்ச் டயலாக் ,பார்த்து வெறுத்து போயிருந்த எங்களுக்கு எந்திரன் ஒரு மிகப்பெரிய விருந்தே..இந்த குத்து படங்களை பார்த்து வெறுத்து போவதை விட....உங்களை ஏமாற்றிய எந்திரன் போன்ற படங்களை நாங்கள் மனமார வரவேற்கிறோம்...
    சங்கர் காபி அடித்தார்...சங்கர் காப்பி அடிச்சுட்டார்!..எந்த இந்திய டைரெக்டர் காபி அடிக்கவில்லை? பக்கத்து மாநிலத்தில் வந்த வெற்றி படங்களை தானே ,வெறும் நடிகர் மாற்றத்துடன் சீன் பை சீன் தமிழில் பார்க்கிறீர்கள்? அப்போதெல்லாம் ஏன் இந்த குறை சொல்லவில்லை?
    யாரு அந்த சாறு? யார் சொன்னது அவர் எழுத்துலகின் சூப்பர் ஸ்டார் என்று? இல்லாத ஒரு பட்டத்தை தனக்கு தானே சூட்டி கொண்டால் அவர் சூப்பர் ஸ்டாரா? தான் ஒரு பெரிய எழுத்தாளன் என்றும்,தனக்கு யாரும் எந்திரன் டிக்கெட் வாங்கி தரமாட்டேன்குறாங்க என்று சொல்லி அழுதவர் தானே இவர்? என்னை பொறுத்தவரை இவரெல்லாம் ,எழுத்துலகில் ஒரு காமெடி பீசு!!

    ReplyDelete
  21. //
    //தன் அறிவுக்கு ஒத்து வராத தமிழ்த் திரைப்படத்தை பார்த்துவிட்டு, தனக்குப் பிடித்ததுபோல் எடுக்கவில்லையே என்ற சாருவின் புலம்பல் சுத்த முட்டாள்தனம்
    //
    rompa sari...

    ReplyDelete
  22. LAST TANGO படத்தை பார்க்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள் .நீங்க விமர்சனம் எழுதறதே, இது போல கிளுகிளுப்பான சீன்களை பார்ப்பதற்காகத்தான் என்பது தெரிஞ்ச விஷயம்தான் . பார்த்ததை சொல்லி காட்டி , எங்களையும் ஏங்க வைப்பது சற்று ஓவர்

    ReplyDelete
  23. தமிழா போய் தண்ணி குடிச்சிட்டு அடுத்த வேலைய பாருங்க‌

    ReplyDelete
  24. சாரு அதே கட்டுரையில் மார்லன் பிராண்டோவை பற்றிச் சிலாகித்துச் சொல்லும்போது 'Last Tango in Paris' என்னும் திரைப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கும்போது மார்லன் பிராண்டோவின் வயது 49. உடன் நடித்த மரியா ஷிண்டரின் வயது 21. கிட்டத்தட்ட 28 வயது வித்தியாசம். ஏன் இது மட்டும் சாருவின் கண்ணுக்கு ஆபாசமாகத் தெரியவில்லை.?


    அண்ணே செம டிடெய்லு... இது சாருவே எதிர்பார்த்து இருக்கமாட்டர்ர்..

    ReplyDelete
  25. மிக மிக அழகாகவும், நேர்மையாகவும் அமைந்த இந்த கட்டுரைக்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ் தலைவா...

    அமிதாப் ரஜினியின் வயதில் நடித்த “ஜாதுகர்”, ”தூஃபான்” போன்ற படங்கள் பப்படம் ஆனதால், ஃபீல்ட் அவுட் ஆகி, பின்னர் தன் வயதுக்கேற்ற படங்கள் நடிக்க தொடங்கினார் என்பது “சாரு”வுக்கு தெரியுமா, தெரியாதா?

    அடுத்தவர்களை அப்படி நடி, இப்படி நடி என்று சொல்லும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது...

    இவர் எழுத்தை ஏதாவது விமர்சனம் செய்தால், உலகில் உள்ள அனைத்து மோசமான வார்த்தைகளாலும் சம்பந்தப்பட்ட நபரை அர்ச்சனை செய்யும் இவர், அடுத்தவர் நடிக்கும் படங்களை எப்படி இவ்வளவு மோசமாக விமர்சிக்க முடிகிறது?

    இவருக்கு ஒரு நியாயம்... அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா?

    ReplyDelete
  26. அமிதாப் பார்த்து கத்துமாமாம்.. அந்த ஆளு பத்தாயிரம் பணம் கொடுத்தா அண்டர்வேர் விளம்பரத்துல கூட தான் நடிப்பாரு.
    ////Last Tango-வில் பிராண்டோவும் அந்தப் பெண்ணும் செய்வது என்ன..? அதை எவனாவது குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியுமா..?(//
    //

    சேச்சே அந்த படத்துல என்னங்க ஆபாசாம் இருந்திருக்க போகுது, அந்த மாதிரி படத்தை எல்லார் அவரு சம்சாரத்தோட தான் பார்த்திருப்பாரு, அப்படி எதாச்சு ஆபாசம் இருந்தா சொல்லிருப்பாருல.
    ஊருக்குல்ல தேர் வரும் போது, இந்த மாதிரி புளுதி கிளம்ப தான் செய்யும். நல்லது நாய்க்கு சேராதுன்னு சொல்லுவாங்க அது மாதிரி தான் இவரும், கமல் புடிக்காது இளையராஜா புடிக்காது, ரஜினி புடிக்காது.. யார தாண்டா புடிக்கும்னு கேட்டா கூகிள்ல பத்து நிமிசம் தேடிட்டு எதாச்சும் தெனமரிக்கா வட கொரியா, அண்டார்டிக்கான்னு எதாவது ஒரு நாட்டுல இருக்கிறவர் பேர சொல்லுவார், யாரு போய் நாம சொல்றவங்களை படிக்க போறாங்கன்ற நம்பிக்கைல.
    கமலோ, ராஜாவோ, இல்லை ரஜினியோ யாராச்சும் இவரை மதிச்சு எதாச்சும் எதிர்வினை சொல்றாங்களான்னு பாருங்க, எல்லாருக்கும் தெரியும் எங்க கல்யாணம் நடந்தாலும் இழவு கொட்டு இது வந்திரும்ன்னு

    ட்விட்டர்ல, ஷாருக்கிட்ட தன்னோட நாவலை படிக்க கெஞ்சிட்டு இருக்காரு, பெரிய எழுத்தாளர்ன்னு சொல்ற இவருக்கு இது அசிங்கமா தெரியலை

    ReplyDelete
  27. மிக பண்பாக விமர்சனத்திற்கு எதிர்வினை எழுதிய deen_uk -க்கு நன்றி. பதிவுலகத்தில் அரிதாக காணப்படும் பண்பு இது. மிக்க நன்றி

    ReplyDelete
  28. அண்ணே இந்த மாதிரி லூசு கேசு கெல்லாம் நாம பதில் சொல்ல கூடாது!
    சாரு ஒரு அரை வேக்கடுனு எல்லாருக்குமே தெரியுமே?
    ஒரு நேர்த்தியான கட்டுரைய எழுதிய உங்களுக்கு தலைவர் ரசிகர்கள்
    சார்பில் ஒரு நன்றி

    ReplyDelete
  29. மன்னிக்கவும் உண்மை தமிழன் ..நான் சூப்பர் ஸ்டார் சாறு (காமெடி தான்! சீரியஸா எடுத்துக்காதிங்க..!)
    விஷயம் பேச போய் ,,உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன்.....இவங்கள (குறிப்பா இந்த ஆளை ) பற்றி நாம எழுதுறதும்,கண்டுக்கிறதும் time waste அண்ணா....இவர் எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்னா ,நம்ம சுஜாதா சார் யாருங்க அண்ணா?,ஜெயகாந்தன் ,ஜானகிராமன் லாம் யாருனா? நல்லவேளை சுஜாதா சார் இல்ல... இவர் விமர்சனம் கேட்க..(அவர் உயிரோட இருந்திருந்தா எந்திரனுக்கு இவர் வாலாட்டி இருப்பார்..அது வேறு விஷயம்.)
    உங்க பதிவு,ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகராக இல்லாமல்,ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனின் ஆதங்கமாக இருந்தது....வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  30. இங்கே பின்னூட்டம் எழுதிய பல நண்பர்கள்... சாரு எழுதும் வசவையே அவர்களும் எழுதுகிறார்கள்.. முதலில் பொது இடங்களில் நாம் (குறிப்பாக அறிவுப்பூர்வமாக பேசும் இடங்களில்) கவனமாக பேசவேண்டும். அறிவை அறிவாலே எதிர்கொள்ளவேண்டும். நாம் இவ்வளவு மெனக்கெட்டு கலாநிதிமாறனின் கல்லாவை நிரப்பவேண்டாம்... சாரு விமர்சனம் செய்த அனைவரும் ஒரு வேளை கஞ்சிக்கு சிங்கியடிப்பவர்கள் இல்லை.. இதே உண்மைத்தமிழன் சிறையில் நீண்டநாட்களாக இருப்பவர்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். பின்னூட்டம் எழுதும் நண்பர்களிடம் இந்த அளவுக்கு ஆவேச்சத்தை நான் பார்த்ததில்லை..நண்பர்களே (உண்மைதமிழன் உங்களுக்கும்தான்) எதுக்கு இவ்வளவு மெனக்கெடல் ? சாருவுக்கு,எந்திரனுக்கு.. ?திரும்ப திரும்ப சொல்கிறேன் உங்களுக்கு மொழி மிகப்பிரமாதமாக வருகிறது. அரசியல் பற்றி எழுதுங்கள், சமுகஅவலங்களை பற்றி எழுதுங்கள்... உங்களுக்கு நிச்சியம் தனியொரு இடம் கிடைக்கும்.. இம்மாதிரியான விஷயங்கள் பற்றி எழுதினால் மொழியும் தேய்ந்து போகும், உங்களது வாசகர்களின் அறிவும் விசாலமாகாது.. நீங்களும் எழுத்தில் முக்கிய இடத்தை அடையலாம் PLEASE CONSIDER MY OBLIGATION.. PLZ PLZ..

    ReplyDelete
  31. மீண்டும் சொல்கிறேன்..கோடிஸ்வரர்களின் பாக்கெட் நிரம்பிய பிரச்சினை பற்றி எழுத முயற்சி செய்யவேண்டாம் .. இது என் வேண்டுகோள்... அவ்வளவே..

    ReplyDelete
  32. @ நண்பர் bandu...
    /////மிக பண்பாக விமர்சனத்திற்கு எதிர்வினை எழுதிய deen_uk -க்கு நன்றி. பதிவுலகத்தில் அரிதாக காணப்படும் பண்பு இது. மிக்க நன்றி////
    அண்ணா.,நீங்க உங்க கருத்து சொன்னீங்க...நான் என் கருத்து சொன்னேன்! அவ்ளோ தான்! இது ஒரு ஆரோக்யமான விவாதமே தவிர வேறொன்றும் இல்லை..!!தவிர..எனக்கு அந்த சாறு மேல நிறைய கோபம் உண்டு....அவருடைய எந்திரன் விமர்சனம் அப்படி..(எந்திரன் விமர்சனம் மட்டுமல்ல..இவர் ஒரு விளம்பர பிரியர்..எந்திரனுக்கு எதிரா எழுதினா நிறைய ஹிட்ஸ் கிடைக்கும் என்ற ஐடியா ,மேலும் ரஜினி மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி,இன்னொரு ரெண்டெழுத்து எழுத்தாளரும் இருக்கிறார்..அவருக்கு ரஜினி மேல் அதீத காழ்புணர்ச்சி..இவர்களை திருத்த வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.. )பதிவுலக நாகரீகம் கருதி ,நான் அவரை பற்றி வேறொன்றும் எழுத விரும்பவில்லை.

    மேலும்..
    உங்களுடைய விமர்சனமும் மிகவும் பண்பாக இருந்தது...உங்களுக்கு பதில் சொல்லிய எனக்கே நாகரிகமாக பதில் சொல்லிய விதத்தில் ,நீங்களும் ஒரு நல்ல பண்பாளரே..
    வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  33. Ungal karuthododu naan udanpadugiren... Charu idharkku padhil solliye aaga vendum!!!

    ReplyDelete
  34. Yarindha charu,

    Nithyavin X Assistant t hane ivar.. ivareppati Abasathai pathhi pesukirar...

    ReplyDelete
  35. // 'எந்திரனில்' ஐஸ்வர்யாராயுடன் மரத்தைச் சுற்றி டூயட்தானே பாடியிருக்கிறார் ரஜினி// ஐஸ் கூட நம்மால ஆட முடியல, ஆனா 61 வயது ரஜினி ஆடறாரேன்னு போறாமை. சாரு வேணும்னா நடிகனாகி ட்ரை பண்ணட்டும். ஐஸ் கால்ஷீட் குடுப்பாங்களான்னு பாக்கலாம்.

    ReplyDelete
  36. அண்ணே செம டிடெய்லு... இது சாருவே எதிர்பார்த்து இருக்கமாட்டர்ர்../////// அவ்வ்வ்வ்

    ReplyDelete
  37. இந்த ஆளு மிஷ்கின் படத்துல போட்ட குத்தாட்த்துல கூட ஆடினது என்ன அறுபது வயசு கிழவியா?

    ReplyDelete
  38. //சாரு அதே கட்டுரையில் மார்லன் பிராண்டோவை பற்றிச் சிலாகித்துச் சொல்லும்போது 'Last Tango in Paris' என்னும் திரைப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கும்போது மார்லன் பிராண்டோவின் வயது 49. உடன் நடித்த மரியா ஷிண்டரின் வயது 21. கிட்டத்தட்ட 28 வயது வித்தியாசம். ஏன் இது மட்டும் சாருவின் கண்ணுக்கு ஆபாசமாகத் தெரியவில்லை.?//

    ஆனால் அந்த படத்தின் கேரக்டருக்கும் அதே வயது தானே! அது தான் சாரு கேட்பது...

    மத்தபடி, அவர் சொல்வதெல்லாம், 'விடுங்க பாஸு. எவ்வளவோ பாத்துட்டோம், இவரை பாக்கமாட்டோமா?'

    ReplyDelete
  39. //damildumil said...
    இந்த ஆளு மிஷ்கின் படத்துல போட்ட குத்தாட்த்துல கூட ஆடினது என்ன அறுபது வயசு கிழவியா?//

    ******

    ஹா...ஹா..ஹா... நல்லா சொல்றான்யா டீடெயிலு....

    யோவ்... அந்த குத்தாட்டத்த படத்துல இருந்து தூக்கிட்டாய்ங்களாமே...

    அதனால தான்யா நான் கோவத்துல எந்திரன் படத்துல ரஜினி-ஐஸ்வர்யா ராய் டூயட் பாடுனதுக்கு கொதிச்சு எழுந்தேன் (இப்படிக்கு : சாரு.....)

    ReplyDelete
  40. விமர்சனத்துக்கே விமர்சனமா .தங்கமுடியலே அப்பா சாமி .போதும் இந்த எந்திர கூத்து .

    ReplyDelete
  41. intha manithar solrar.manirathnam roja edukkum mun eduttha padankalai rasitharam.mouna ragam nenjathai killathey padathin copy.idaya koil mattrum akni natchatram sumarana padangal mattume.in fact adarkku enthiran better than.
    rajasekaran

    ReplyDelete
  42. அவரு ஒரு டம்மி பீசு சரோஜா தேவி கதை மாதிரி ஏதையாவது எழுதுவாரு. அதுவுமில்லாம கேட்டேயிராத பேரைச் சொல்லி அவரப் படி யாவரப் படின்னு பீலா உட்டுக்க்னு சுத்துவாரு. இதெல்லாம் எழுதுனப்புரம் அவரு எழுதாம உட்டது ------ "மச்சி ஒரு கோட்டாறு சொல்லேன்...."

    ReplyDelete
  43. நான் சாருவின் அடிவருடி அல்ல.

    ஆனால் சாருவின் கட்டுரையில் உள்ள விஷயங்களை உள் வாங்கி கொள்ளாமல், பிச்சைக்காரன் வா குவாட்டர் கட்டின் அடித்தது போல் அடித்துவிட்டு புலம்புவது சாருவா அல்லது நீரா?

    லோ கட் காண்பித்தால் ஆபாசமா? அட பாவி. மணி ரத்னம் என்ன ஷகீலா படத்தில் வருவது போலவா காண்பித்தார்?

    லாஸ்ட் டங்கோ படத்தில் அவர்களுக்குள் உள்ள வயது வித்தியாசத்தை படத்தில் கூறியிருப்பார். படத்தை மீண்டும் பார்த்து தொலையும். அது ஒரு எரோடிக் படம். எ சான்றிதழ் பெற்ற படம். அதை குடும்பத்துடன் உட்கார்ந்து பார்ப்பது அவர் அவர் இஷ்டம்.

    ReplyDelete
  44. ஒரு காட்சியில் ரஜினியுடன் ஐஸ்வர்யா நன்றாக குனிந்த வாரு பேசிக்கொண்டிருப்பார்,ஷங்கர் நினைத்திருந்தால க்ளோஸ் ஷாட் எடுத்திருக்கலாம் ஆனால் அந்த ஸீனில் கேமிரா சைட் ஆங்கிளில் இருக்கும்,முடிவு செய்து விட்டு எழுத ஆரம்பித்தால் எல்லாமே தவறு தான்.

    ReplyDelete
  45. nethi varaikum doubt. iniku conform. Chaaru is mentally retarded, antha aalu pesurathukellam mathipu kudukiringale boss..

    ReplyDelete
  46. மக்கா என் அன்பின் அதிகப் பட்ச உச்சமாய் ஓர் அன்பு முத்தம்."குசேலன் " படம் பார்பதற்கு முன்னால் என் கூட உட்கார்ந்து 'படம் குப்பையாகதான் இறக்கும் என்று போதையில் சொன்னவர். ஏன் முதல் நாள் டிக்கெட்டுக்கு கெஞ்சியவர் அடுத்த நாளே விமர்சனம் போட வேண்டியதுதானே ...அப்புறம் உயிர்மை டிப்ஸ் காசு போய் விடுமே . நான் ரஜினி மற்றும் சாரு வின் தீவிர ரசிகன் .

    ReplyDelete
  47. டேர்மினடரயும் ரோபோ கொப்பையும் அப்பட்டமாக கொப்பி செய்து எடுக்கப்பட்ட படம் எந்திரன்...சன் டிவி நிருவனத்தாரையும் ரஜனியையும் ஆசியாவின் பெரிய பணக்காரர்கள் ஆக்கிய குப்பை...தன் வீட்டில் அழும குழந்தைக்கு பால் இல்லை ஆனால் ரஜனி கட் அவிட்டுக்கு பால் ஊற்ற பணம் உண்டு...மார்லன் பிராண்டோ வுக்கு ஜோடியாக 28 வயது பெண் நடித்து உண்மை ஆனால் மார்லன் பிராண்டோ தன்னை 28 வயதாக காட்ட மேக் அப் பண்ணவில்லை இதுதான் வித்தியாசம் சரியா.

    ReplyDelete
  48. Last tango in paris படத்தில் மார்லன் பிராண்டோ தன்னை ஒரு 55 வயதான ஒரு wash out ஆகத்தான் தன்னை காண்பிக்கிறார்.ஒரு வயது முதிர்ந்தவனுக்கும் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் பாலியல் தொடர்பால் வரும் பிரச்சனைகளை அந்த படம் காண்பிக்கிறது.கடைசியாக அந்த படம் பார்த்தவர்களுக்கு ஒரு மெசேஜ் யும் சொல்லி விட்டு போகிறது.அங்கு மார்லன் பிராண்டோ தன்னை வாலிபனாக காட்டவில்லை..உலகுக்கு method acting என்றால் என்ன என்று சொல்லிகொடுத்த மார்லன் ப்ராண்டோவை என்ன பாடு படுத்துகிறீர்கள்

    ReplyDelete
  49. உங்க பெயருக்குப் பொருத்தமான கட்டுரை!..தயவுசெய்து இவரைப் பற்றி எழுதுவது இதுவே கட்டக் கடைசியாக இருக்கட்டும்!உங்கள் அளப்பரிய ஆற்றலை வீணாக்காதீர்கள்!..தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவனைப் பார்த்து பிச்சைக்காரன் ஒருவன் புலம்புவது தான் இந்த சாரு செய்வதும்!

    ReplyDelete
  50. [[[LK said...
    என் அண்ணே, இவருக்கு எல்லாம் மதிப்புக் கொடுக்கறீங்க. எதையோ பார்த்து எதோ குலைக்குதுன்னு விட்டுட்டு போவீங்களா?]]]

    என்னதிது..? முதல் பி்ன்னூட்டமே இப்படி..? எல்.கே. ஸார்.. இது கொஞ்சமும் சரியில்லை. அவரைப் பிடித்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அவருக்கென்று ஒரு வட்டமும் இருக்கிறது. இந்த விஷயத்தில் அவரது பார்வை சரியில்லை என்பது நமது கருத்தாகக் கொள்வோம்..!

    ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்ற வகையில் எப்போதும் அவர் மேல் எனக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு..

    ReplyDelete
  51. [[[வெடிகுண்டு வெங்கட் said...

    இன்னொரு முக்கியமான விஷயம்: சாரு கூறும் உதாரணங்கள் - அதாவது ரஜினி அமிதாப் அவர்களை பார்த்து திருந்த வேண்டுமாம். அதாவது அமிதாப் இப்போது செய்யும் வயதான, சீனியர் ரோல் மாதிரி ரஜினியும் செய்ய வேண்டுமாம். அதற்க்கு அவர் கூறும் உதாரணங்கள் சீனி கம் போன்ற படங்கள்.

    1997-ல் நடிக்க வந்தபோது அமிதாப் நடித்த படங்களில் அவரின் ஜோடி யார் தெரியுமா? மனிஷா கொய்ராலா, ஷில்பா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா போன்றவர்கள்தான். அதாவது ஐம்பத்தெட்டு வயதில் அமிதாப் இருவது ஐந்து வயது மனிஷாவுக்கு ஜோடியாக நடிக்கலாமாம். ஆனால் ரஜினி நடிக்க கூடாதாம்.]]]

    சீனி கம், பா போன்ற படங்களில் ஏன் நீ நடிக்கக் கூடாது என்று இயக்குநர்கள் சங்க விழா மேடையில் பாலச்சந்தர் கேட்டபோது அது எனது ஒத்து வராது என்று நேரிடையாக பதிலளித்தவர் ரஜினி. எனது பதிலும் இதுதான். ரஜினிக்கென்றே ஒரு வட்டம் இருக்கிறது. அதை அவர் தாண்டினால் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் நிச்சயம் நஷ்டமாகும்..!

    ReplyDelete
  52. [[[muthukumar said...
    தல.. இது ஒரு விளம்பர உத்தி. ஹிட்ஸ் அதிகபுடுத்த எழுதி இருப்பாரு. எதுக்கு சாருக்கு எல்லாம் முக்கியத்துவம் தருங்க. அவரு இளையராஜா பற்றி சொல்லும்போதே அவரின் தரம் எனக்கு புரிந்து விட்டது .

    தமிழுடன்
    முத்துக்குமார்]]]

    ஹிட்ஸுக்காக என்பதை நான் ஏற்க முடியாது முத்துக்குமார். இப்போதே அவர் ஹிட்ஸ் லிஸ்ட்டில் முதலிடத்தில்தான் உள்ளார்.

    அவருடைய கருத்தே இப்படி ஆபத்தானதாக உள்ளது..! அதுதான் எனக்கு வருத்தம்..!

    ReplyDelete
  53. [[[தோழி said...
    சரியாக சொன்னிர்கள் முத்துக்குமார்.]]]

    -)))))))))))

    ReplyDelete
  54. [[[வெடிகுண்டு வெங்கட் said...
    சாரு சொன்ன கதை ஒன்று: இவர் ஒரு சினிமா விழாவிற்கு சென்றாராறம். அங்கு ஒரு பெரிய மனிதர் (யாரென்று சொல்ல மாட்டாராம்) வந்தாராம். அவர் காக்டெயில் பக்கமே போக மாட்டேன் என்றாராறம். ஏனென்று கேட்டால், இன்றுதான் நான் எந்திரன் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் என்று பதில் சொன்னாராம்.

    இந்த மாதிரி கதையை எல்லாம் பலரும் கூறுவார்கள். அந்த கதையை சொன்ன சாருவிற்கு உண்மையிலேயே முதுகெலும்பு என்று ஒன்று இருந்தால் சொன்னவர் யார், எந்த இடத்தில் அதை சொன்னார் என்று கூறு இயலுமா? சும்மா கதை கட்டிவிடுவதுதான் விக்கிபீடியா சாருவிற்கு கை வந்த கலையாயிற்றே?]]]

    நானும் இந்தக் கதையை நம்பவில்லை வெங்கட்..! ஏதோ ஒரு பில்டப்புக்காக சொல்கிறார் என்று நினைக்கிறேன்..!

    ReplyDelete
  55. [[[பிரபாகர் said...
    அந்த எழவெடுத்த சனியனை ஏண்ணே கண்டுக்கறீங்க! எதையுமே நெகடிவா பேசறதுதான் பாலிசின்னு இருக்கிறதுங்கள விட்டுத் தள்ளுங்க!]]]

    இது ரொம்ப ஓவர் பிரபாகர்..! என்ன இருந்தாலும் அவர் ஒரு எழுத்தாளர்.. இத்தனை மணி நேரம் இந்தப் பி்ன்னூட்டம் இருந்துவிட்டதால் நீக்க முடியாமல் விட்டுவிட்டேன்.. இனி இதுபோல் சொல்லாதீர்கள்..!

    ReplyDelete
  56. [[[கே.ரவிஷங்கர் said...
    அவரின் இந்த மாதிரி எழுத்துக்களில் நிறைய அசட்டுக்களை தட்டும்.
    தாங்க முடியாது.]]]

    வர.. வர இது போலவே நிறைய எழுதுகிறார்.. தாங்க முடியவில்லை..!

    ReplyDelete
  57. [[[சிவகுமார் said...
    அமிதாப், அபிஷேக்குக்கே இல்லாத கவலை சாருவுக்கு எதற்கு! ரஜினி என்ன ஐஸை ரேப்பா செய்து விட்டார். தமிழ் சினிமாவில் மீசை முளைக்காத நண்டுகள்கூட இன்று நாயகியை கண்ட இடத்தில் தடவுகையில், ரஜினி மட்டும் அவ்வாறு நடிக்காமல் இருந்ததே அவரின் ஒழுக்கத்தை காட்டுகிறது.]]]

    ஆரம்பத்தில் இருந்தே ரஜினி அப்படித்தான்..! இந்த விஷயத்தில் யாராவது அவரைக் குற்றம் சொல்லி நான் கேட்டதுமில்லை. படித்ததுமில்லை..!

    ReplyDelete
  58. [[[ஈ ரா said...

    எந்திரன் உருவான விதம்" மட்டும் ஒளிபரப்பாகவில்லை என்றால், இந்த மனிதர் பட்ட கஷ்டம் வெளியே தெரியாமலே இருந்திருக்கும்.. அவராக வாயைத் திறந்திருக்க மாட்டார். விஷயம் தெரியாதவர்கள் எல்லாம் ரஜினியும் எந்திரன் டீமும் பட்ட கஷ்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமலே போயிருந்திருக்கும்.]]]

    உடம்பெல்லாம் வலிக்கிறது என்று தன்னிடம் குறிப்பிட்டதாக சில நாட்களுக்கு முன் வைரமுத்து கூறியபோது அவ்வளவாக நமக்குப் புரியவில்லை. இப்பொழுதுதான் அந்த வலி நமக்கு தெரிந்தது. சும்மா இப்படி அப்படி என்று ஸ்டைல் மட்டுமே காட்டிக் கைதட்டலை பெற முடிந்த ஒரு மாபெரும் கலைஞன் இப்படி தன்னை வருத்திக் கொண்டதைப் பார்த்த போது அவரது தொழில் பக்தியும், கடும் உழைப்பும் கண்கலங்கச் செய்தது. அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இவர் அத்தியாவசியப் பாடம் என்று உணரச் செய்தது.]]]

    வழி மொழிகிறேன்..!

    ReplyDelete
  59. "ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்ற வகையில் எப்போதும் அவர் மேல் எனக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு"

    ஹா ஹா... சாருவை இந்த வரிகள் கண்டிப்பாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்...

    உளறலுக்கு சாரு என்றால் உள் குத்துக்கு உண்மை தமிழன் :-)

    ReplyDelete
  60. [[[சிவகுமார் said...

    "கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்" எனும் பாடலின் ரீமிக்ஸ்: "சாரு, ஒரு படத்தை இயக்க வேண்டும். அதை மக்கள் விமர்சிக்கும் நாள் வர வேண்டும்!" பருத்திவீரன் கேங் ரேப், சுப்ரமணியபுரம் தொடர்கொலை, அனைத்து படங்களிலும் வரும் டாஸ்மாக், கெட்டவார்த்தைகள்.. என எதுவுமே இல்லாத எந்திரன் மட்டமான படமா? உலக சினிமாவை மனதில் கொண்டு அனைத்து தமிழ் சினிமாவையும் விமர்சிப்பது சரியல்ல. கமல் படம் எடுத்தால் பார்ப்பனீயம் என்பது, ரஜினி என்றால் அதீத கற்பனை என்பது.. செம காமெடி பாஸ்.]]]

    உண்மைதான். கோடிகளில் செலவழிக்கும் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது முதல் நோக்கம். இல்லாவிடில் சினிமா இங்கே பிஸினஸாக இருக்க முடியாது. இதைப் புரிந்து கொண்டால் ரஜினி ஏன் இப்படி நடிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்..!

    ReplyDelete
  61. [[[charupenline said...
    marai kalanda case intha charu. athu thaan ellarukum teriyumee.]]]

    ஸாரி.. இதனை என்னால் ஏற்க முடியாது. தயவு செய்து கருத்துக்களை மட்டுமே பகிருங்கள். தனி மனிதத் தாக்குதல்கள் வேண்டாம்..!

    ReplyDelete
  62. [[[ஜோ/Joe said...

    //தன் அறிவுக்கு ஒத்து வராத தமிழ்த் திரைப்படத்தை பார்த்துவிட்டு, தனக்குப் பிடித்ததுபோல் எடுக்கவில்லையே என்ற சாருவின் புலம்பல் சுத்த முட்டாள்தனம்..!]]

    ரொம்ப சரி அண்ணே!]]]

    கருத்தொற்றுமைக்கு மிக்க நன்றிகள் ஜோ..!

    ReplyDelete
  63. கலக்கிபுட்டீங்க போங்க.....

    ReplyDelete
  64. [[[ராஜ நடராஜன் said...
    இந்த சிந்திரன் பையன் இங்கே எங்கோ சுத்திகிட்டு இருந்தான். நீங்க சரின்னு சொன்னா சிந்திரன்கிட்ட சொல்லி சாரு தலையில ஒரு கொட்டு வைக்கச் சொல்கிறேன்:)]]]

    இது தலை பிரச்சினை இல்லை. மனப் பிரச்சினை..! இதனை இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் திருத்த முடியும்..!

    ReplyDelete
  65. [[[மதுரை சரவணன் said...

    இதைத்தான் தெளிவாக தன் உலக சினிமா ஞானத்துடன் சொல்லியிருக்கிறார். மேலும் அவர் ரஜினியின் உழைப்பை எதுவும் குறிப்பிடவில்லை. அமிதாப் போல இனி நடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.]]]

    சரி.. யார் பார்ப்பது..? பாபாவை, குசேலனை குப்புறக் கவிழ்க்கவில்லையா? போட்ட காசு எப்படி வரும்..? ரசிகர்கள் அதற்குத் தயாரில்லையே.. இதற்கு ரஜினி என்ன செய்வார்..?

    [[[சன் டி.வி.யின் விளம்பர யுத்தியால் , உலக தரமான சினிமா என மக்கள் ஏமாறுவதை சாடியுள்ளார்.]]]

    நிச்சயம் உலகத் தரமான படம்தான். அதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  66. [[[VJR said...

    ஏண்ணே சாருவையெல்லாம் படிக்கிறீங்க. அந்த அறிவழகனின் அழகப் பத்தி எனக்கு அதிகமாகவே தெரியும். யார் யாரிடம் எவ்ளவு மோசமாக விளையாடியுள்ளார் என்று. சரி பணம் விசயத்தைத்தான் விடுவோமென்றால் இவர் எத்தனை பேரின் எழுத்தை லவட்டியுள்ளார் என்பதை அவரின் நெருங்கிய நபர்களைக் கேளுங்கள். கேட்டுக் கொண்டே இருக்கலாம். ராஜபக்சே மனித உயிரின் முக்கியத்துவத்தைப் பேசுவது போன்றது இவரின் சினிமா விமர்சனம்.]]]

    தனி மனித அவதூறுகள் வேண்டாமே..? அவருடைய விமர்சனத்திற்கு எதிர் விமர்சனத்தை மட்டும் வைப்போமே..?

    எதுக்கு இந்தக் கதையெல்லாம்?

    ReplyDelete
  67. [[[எஸ்.கே said...
    கடவுளே! கடவுளே! கடவுளே! கடவுளே! கடவுளே! கடவுளே! கடவுளே! கடவுளே!]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  68. [[[bandhu said...

    சாருவுடன் சில கருத்துக்களில் உடன்படுகிறேன். நாடோடிகள் பாதிக்கு மேல் பார்க்கமுடியவில்லை. சுத்த பைத்தியக்காரத்தனமாக இருந்தது அந்த படம்.]]]

    ஆச்சரியமாக உள்ளது. மனிதர்கள்தான் எத்தனை விதம்..?

    [[[எந்திரன் Hollywood க்கு சவால் போன்ற ஏமாற்று வேலைகளை நிராகரிக்கிறேன். முதலில் இதில் பலதும் ஒரிஜினல் இல்லை. இரண்டாவது hollywood கலைஞர்களை வைத்து படம் எடுத்துவிட்டு hollywood க்கு சவால் என்பது சுத்த மோசடி.]]]

    ஹாலிவுட் கலைஞர்களை வைத்து எடுத்திருப்பதைத்தான் அன்றைக்கு மேக்கிங் வீடியோவில் காட்டினார்களே ஸார்..?

    ReplyDelete
  69. [[[லதாமகன் said...
    சாருவின் எழுத்தை ரசிக்கும் அளவிற்கு ரஜினியையும் ரசிக்கும் சாமானியன் நான். சாருவிற்கு இருப்பது ஒரு வித கமர்ஷியலுக்கு எதிரான மன‍நிலை என்றே தோன்றுகிறது. சன் டிவியின் அரசியலையும் வெகுஜன ரசனையையும் ஒரே கட்டில் நிராகரிப்பது என்பது ஒருவித இலக்கியவாதிகளின் மன நிலையே தவிர வேறில்லை. இவர்கள் குமுததை வாங்கிப் படித்துவிட்டு குமுதத்தில் இலக்கிய கட்டுரை வரவில்லை, அது குப்பை. படிப்பவன் எல்லாம் முட்டாள் என்ற ரீதியில் திட்டுபவர்கள். இதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.]]]

    ரஜினி படத்தை ரஜினி படமாகவே பார்க்க வேண்டும். இது சாருவுக்குத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன்..!

    ReplyDelete
  70. [[[Sekar said...
    namma oorla vayalaye vada suduravanga jasthiiiiiiiiiiiii. athaula avarum oruthar]]]

    நோ.. ஏன் இப்படி சாருவுக்கு எதிர்மறை பின்னூட்டங்கள் மிகவும் காரமாக வருகின்றன..?

    ReplyDelete
  71. deen_uk ஸார்..

    உங்களுடைய கருத்துக்களை வழிமொழிகிறேன்..

    வருகைக்கு நன்றி..!

    ReplyDelete
  72. [[[Sivakumar said...
    Charu oru commedy piece.]]]

    சில சமயங்களில் மட்டும்..!

    ReplyDelete
  73. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    //தன் அறிவுக்கு ஒத்து வராத தமிழ்த் திரைப்படத்தை பார்த்துவிட்டு, தனக்குப் பிடித்ததுபோல் எடுக்கவில்லையே என்ற சாருவின் புலம்பல் சுத்த முட்டாள்தனம்//

    rompa sari...]]]

    ரொம்ப நன்றி..!

    ReplyDelete
  74. [[[பார்வையாளன் said...
    LAST TANGO படத்தை பார்க்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள். நீங்க விமர்சனம் எழுதறதே, இது போல கிளுகிளுப்பான சீன்களை பார்ப்பதற்காகத்தான் என்பது தெரிஞ்ச விஷயம்தான். பார்த்ததை சொல்லி காட்டி, எங்களையும் ஏங்க வைப்பது சற்று ஓவர்.]]]

    இன்னும் பார்க்கலியா? பார்த்திருங்க. அதுக்காக என்னை இந்த அளவுக்கு மட்டமா நினைக்கக் கூடாது பார்வையாளன் ஸார்..!

    ReplyDelete
  75. [[[sivakasi maappillai said...
    தமிழா போய் தண்ணி குடிச்சிட்டு அடுத்த வேலைய பாருங்க‌.]]]

    ஓகே.. நன்னி..!

    ReplyDelete
  76. [[[ஜாக்கி சேகர் said...

    சாரு அதே கட்டுரையில் மார்லன் பிராண்டோவை பற்றிச் சிலாகித்துச் சொல்லும்போது 'Last Tango in Paris' என்னும் திரைப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கும்போது மார்லன் பிராண்டோவின் வயது 49. உடன் நடித்த மரியா ஷிண்டரின் வயது 21. கிட்டத்தட்ட 28 வயது வித்தியாசம். ஏன் இது மட்டும் சாருவின் கண்ணுக்கு ஆபாசமாகத் தெரியவில்லை.?

    அண்ணே செம டிடெய்லு. இது சாருவே எதிர்பார்த்து இருக்கமாட்டர்ர்.]]]

    -)))))))))))))))

    ReplyDelete
  77. [[[R.Gopi said...

    மிக மிக அழகாகவும், நேர்மையாகவும் அமைந்த இந்த கட்டுரைக்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ் தலைவா...

    அமிதாப் ரஜினியின் வயதில் நடித்த “ஜாதுகர்”, ”தூஃபான்” போன்ற படங்கள் பப்படம் ஆனதால், ஃபீல்ட் அவுட் ஆகி, பின்னர் தன் வயதுக்கேற்ற படங்கள் நடிக்க தொடங்கினார் என்பது “சாரு”வுக்கு தெரியுமா, தெரியாதா?

    அடுத்தவர்களை அப்படி நடி, இப்படி நடி என்று சொல்லும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது?

    இவர் எழுத்தை ஏதாவது விமர்சனம் செய்தால், உலகில் உள்ள அனைத்து மோசமான வார்த்தைகளாலும் சம்பந்தப்பட்ட நபரை அர்ச்சனை செய்யும் இவர், அடுத்தவர் நடிக்கும் படங்களை எப்படி இவ்வளவு மோசமாக விமர்சிக்க முடிகிறது?

    இவருக்கு ஒரு நியாயம். அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா?]]]

    ம்ஹும்.. நியாயமான கேள்விகள்தான்.. ஒத்துக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  78. [[[damildumil said...

    ட்விட்டர்ல, ஷாருக்கிட்ட தன்னோட நாவலை படிக்க கெஞ்சிட்டு இருக்காரு, பெரிய எழுத்தாளர்ன்னு சொல்ற இவருக்கு இது அசிங்கமா தெரியலை.]]]

    ஓ.. இது வேற நடந்துக்கிட்டிருக்கா..? எனக்குத் தெரியாம போயிருச்சே..!

    ReplyDelete
  79. [[[bandhu said...
    மிக பண்பாக விமர்சனத்திற்கு எதிர்வினை எழுதிய deen_uk -க்கு நன்றி. பதிவுலகத்தில் அரிதாக காணப்படும் பண்பு இது. மிக்க நன்றி.]]]

    மிக மிக பண்பாக உரையாடல் நடத்தும் உங்கள் இருவருக்குமே எனது நன்றி..!

    ReplyDelete
  80. [[[S Maharajan said...

    ஒரு நேர்த்தியான கட்டுரைய எழுதிய உங்களுக்கு தலைவர் ரசிகர்கள்
    சார்பில் ஒரு நன்றி]]]

    நன்றிக்கு ஒரு நன்றி.. அதற்காக விமர்சனம் செய்தவர்களை இந்த அளவுக்கு நீங்களும் விமர்சனம் செய்திருக்கக் கூடாது..?!

    ReplyDelete
  81. [[[deen_uk said...

    உங்க பதிவு, ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகராக இல்லாமல்,ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனின் ஆதங்கமாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே.]]]

    நன்றிகள் நண்பரே..!

    ReplyDelete
  82. [[[raja said...

    இங்கே பின்னூட்டம் எழுதிய பல நண்பர்கள்... சாரு எழுதும் வசவையே அவர்களும் எழுதுகிறார்கள்.. முதலில் பொது இடங்களில் நாம் (குறிப்பாக அறிவுப்பூர்வமாக பேசும் இடங்களில்) கவனமாக பேசவேண்டும். அறிவை அறிவாலே எதிர்கொள்ளவேண்டும். நாம் இவ்வளவு மெனக்கெட்டு கலாநிதிமாறனின் கல்லாவை நிரப்ப வேண்டாம்... சாரு விமர்சனம் செய்த அனைவரும் ஒரு வேளை கஞ்சிக்கு சிங்கியடிப்பவர்கள் இல்லை.. இதே உண்மைத்தமிழன் சிறையில் நீண்ட நாட்களாக இருப்பவர்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். பின்னூட்டம் எழுதும் நண்பர்களிடம் இந்த அளவுக்கு ஆவேச்சத்தை நான் பார்த்ததில்லை. நண்பர்களே (உண்மைதமிழன் உங்களுக்கும்தான்) எதுக்கு இவ்வளவு மெனக்கெடல்? சாருவுக்கு, எந்திரனுக்கு..? திரும்ப திரும்ப சொல்கிறேன் உங்களுக்கு மொழி மிகப் பிரமாதமாக வருகிறது. அரசியல் பற்றி எழுதுங்கள், சமுக அவலங்களை பற்றி எழுதுங்கள்... உங்களுக்கு நிச்சியம் தனியொரு இடம் கிடைக்கும்.. இம்மாதிரியான விஷயங்கள் பற்றி எழுதினால் மொழியும் தேய்ந்து போகும், உங்களது வாசகர்களின் அறிவும் விசாலமாகாது.. நீங்களும் எழுத்தில் முக்கிய இடத்தை அடையலாம் PLEASE CONSIDER MY OBLIGATION.. PLZ PLZ..]]]

    தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete
  83. ஹிட்ஸ் அதிகம் ஆனத்துக்கு இது போன்ற ஏளன பேச்சுக்கள் தான் kaaranam என நான் நினைக்குறேன்

    தமிழுடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  84. ...//இதை விட ’காதலிக்க நேரமில்லை’ படத்தில் முத்துராமனும் காஞ்சனாவும் மைசூர் பிருந்தாவனத்தில் ஓடியாடி டூயட் பாடும் ’ராஜ ராஜ ஸ்ரீராமன் வந்தான்’ என்ற பாடல் ஆயிரம் மடங்கு தேவலாம்//...
    என்று சாரு நிவேதிதா தவறாக எழுதி இருக்கிறார்.
    இப்பாடல் "ஊட்டி வரை உறவு" படத்தில் முத்துராமனும் எல்.விஜயலட்சுமியும் பாடியது.

    வரலாறு மிகவும் முக்கியம் அல்லவா?

    ReplyDelete
  85. நண்பரே,
    ரஜினி எந்த இடத்திலும் தான் ஒரு அதி மேதாவி என்றோ, தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்றோ சொன்ன தில்லை. மாறாக எல்லாமே மற்றவரின் அறிவு சார்ந்தாகவும், தான் அதில் ஒரு கருவி மட்டுமே என்று பல இடங்களில் உரைத்திருக்கிறார். இதில் இந்த மேதாவி பத்திரிகை ஜென்மங்கள் என்ன சொன்னால் என்னவாகிவிடபோகிறது விடுங்கள்..

    ReplyDelete
  86. [[[raja said...
    மீண்டும் சொல்கிறேன். கோடிஸ்வரர்களின் பாக்கெட் நிரம்பிய பிரச்சினை பற்றி எழுத முயற்சி செய்ய வேண்டாம். இது என் வேண்டுகோள்... அவ்வளவே.]]]

    சரிதான் ராஜா ஸார்.. ஆனால் ரசிகர்களின் ரசிப்புத் தன்மை பற்றிய விஷயமும் அடங்கியிருக்கிறதே.. அதனால்தான் இது போன்ற விமர்சனங்கள் எல்லாம் வெளியே வருகின்றன..!

    ReplyDelete
  87. [[[deen_uk said...

    @ நண்பர் bandu...
    //மிக பண்பாக விமர்சனத்திற்கு எதிர்வினை எழுதிய deen_uk-க்கு நன்றி. பதிவுலகத்தில் அரிதாக காணப்படும் பண்பு இது. மிக்க நன்றி//

    அண்ணா... நீங்க உங்க கருத்து சொன்னீங்க. நான் என் கருத்து சொன்னேன்! அவ்ளோதான்! இது ஒரு ஆரோக்யமான விவாதமே தவிர வேறொன்றும் இல்லை..!!

    உங்களுடைய விமர்சனமும் மிகவும் பண்பாக இருந்தது. உங்களுக்கு பதில் சொல்லிய எனக்கே நாகரிகமாக பதில் சொல்லிய விதத்தில், நீங்களும் ஒரு நல்ல பண்பாளரே. வாழ்த்துக்கள் நண்பரே..]]]

    நல்லது நண்பர்களே.. உங்கள் இருவரைப் போலவே அனைத்துப் பதிவர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயலாற்றினால் வலையுலகத்தில் சச்சரவுகள் எழ வாய்ப்பே இல்லை..

    உங்கள் இருவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்..!

    ReplyDelete
  88. [[[மதுரை பாண்டி said...
    Ungal karuthododu naan udanpadugiren... Charu idharkku padhil solliye aaga vendum!!!]]]

    ஏன் இந்த ஆசை..? பதில் சொல்லாமல் இருந்தாலும் எனக்கு சந்தோஷமே..!

    ReplyDelete
  89. ]]]Jegan said...

    Yarindha charu,

    Nithyavin X Assistant t hane ivar.. ivareppati Abasathai pathhi pesukirar...]]]

    அது முன்னாடி.. இப்போது இல்லை. அது ஒன்றை வைத்தே நாம் அவரைக் குற்றம் சொல்ல முடியாது..!

    ReplyDelete
  90. [[[hayyram said...

    //'எந்திரனில்' ஐஸ்வர்யாராயுடன் மரத்தைச் சுற்றி டூயட்தானே பாடியிருக்கிறார் ரஜினி//

    ஐஸ்கூட நம்மால ஆட முடியல, ஆனா 61 வயது ரஜினி ஆடறாரேன்னு போறாமை. சாரு வேணும்னா நடிகனாகி ட்ரை பண்ணட்டும். ஐஸ் கால்ஷீட் குடுப்பாங்களான்னு பாக்கலாம்.]]]

    ம்.. எப்படிங்க.. இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..?

    ReplyDelete
  91. [[[butterfly Surya said...
    அண்ணே செம டிடெய்லு... இது சாருவே எதிர்பார்த்து இருக்க மாட்டர்ர்..//

    அவ்வ்வ்வ்]]]

    அப்படீன்றீங்க..?

    ReplyDelete
  92. [[[damildumil said...
    இந்த ஆளு மிஷ்கின் படத்துல போட்ட குத்தாட்த்துலகூட ஆடினது என்ன அறுபது வயசு கிழவியா?]]]

    இல்லை.. 30 வயது பேரிளம்பெண்..!

    ReplyDelete
  93. [[[சீனு said...

    //சாரு அதே கட்டுரையில் மார்லன் பிராண்டோவை பற்றிச் சிலாகித்துச் சொல்லும்போது 'Last Tango in Paris' என்னும் திரைப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கும்போது மார்லன் பிராண்டோவின் வயது 49. உடன் நடித்த மரியா ஷிண்டரின் வயது 21. கிட்டத்தட்ட 28 வயது வித்தியாசம். ஏன் இது மட்டும் சாருவின் கண்ணுக்கு ஆபாசமாகத் தெரியவில்லை.?//

    ஆனால் அந்த படத்தின் கேரக்டருக்கும் அதே வயதுதானே! அதுதான் சாரு கேட்பது.]]]

    அதுவே ஆபாசமில்லை என்றால் ரஜினி-ஐஸ் காதல் மட்டும் எப்படி
    ஆபாசமாகும்..?

    ReplyDelete
  94. [[[R.Gopi said...

    //damildumil said...
    இந்த ஆளு மிஷ்கின் படத்துல போட்ட குத்தாட்த்துல கூட ஆடினது என்ன அறுபது வயசு கிழவியா?//

    ******

    ஹா... ஹா.. ஹா... நல்லா சொல்றான்யா டீடெயிலு....

    யோவ். அந்த குத்தாட்டத்த படத்துல இருந்து தூக்கிட்டாய்ங்களாமே...

    அதனாலதான்யா நான் கோவத்துல எந்திரன் படத்துல ரஜினி-ஐஸ்வர்யா ராய் டூயட் பாடுனதுக்கு கொதிச்சு எழுந்தேன் (இப்படிக்கு : சாரு.)]]]

    இல்லை கோபி. அந்தக் குத்தாட்டம் மட்டுமே படத்தில் இருக்கும் ஒரே பாடல் காட்சியாம்..!

    ReplyDelete
  95. [[[smk981 said...
    விமர்சனத்துக்கே விமர்சனமா . தங்க முடியலே அப்பா சாமி .போதும் இந்த எந்திர கூத்து.]]]

    முடியாது.. இன்னும் தொடரத்தான் போகிறது..!

    ReplyDelete
  96. [[[rajasekaran said...
    intha manithar solrar. manirathnam roja edukkum mun eduttha padankalai rasitharam. mouna ragam nenjathai killathey padathin copy. idaya koil mattrum akni natchatram sumarana padangal mattume. in fact adarkku enthiran betterthan.

    rajasekaran]]]

    இதுதான் இவரது ரசனையின் அளவுகோல்..!

    ReplyDelete
  97. [[[பித்தன் said...
    இதெல்லாம் எழுதுனப்புரம் அவரு எழுதாம உட்டது ------ "மச்சி ஒரு கோட்டாறு சொல்லேன்...."]]]

    இதென்ன பித்தன்ஜி.. எனக்கும் புரியலை..!

    ReplyDelete
  98. [[[சாரு புழிஞ்சதா said...

    நான் சாருவின் அடிவருடி அல்ல.

    ஆனால் சாருவின் கட்டுரையில் உள்ள விஷயங்களை உள்வாங்கி கொள்ளாமல், பிச்சைக்காரன் வா குவாட்டர் கட்டின் அடித்தது போல் அடித்துவிட்டு புலம்புவது சாருவா அல்லது நீரா?

    லோ கட் காண்பித்தால் ஆபாசமா? அடபாவி. மணிரத்னம் என்ன ஷகீலா படத்தில் வருவது போலவா காண்பித்தார்?

    லாஸ்ட் டங்கோ படத்தில் அவர்களுக்குள் உள்ள வயது வித்தியாசத்தை படத்தில் கூறியிருப்பார். படத்தை மீண்டும் பார்த்து தொலையும். அது ஒரு எரோடிக் படம். எ சான்றிதழ் பெற்ற படம். அதை குடும்பத்துடன் உட்கார்ந்து பார்ப்பது அவர் அவர் இஷ்டம்.]]]

    அப்படின்னா இதில் உள்ள ஆபாசம்தான் என்ன..? நீராவது சொல்லும். தெரிந்து கொள்கிறேன்..!

    ReplyDelete
  99. [[[Aaryan66 said...
    ஒரு காட்சியில் ரஜினியுடன் ஐஸ்வர்யா நன்றாக குனிந்த வாரு பேசிக் கொண்டிருப்பார். ஷங்கர் நினைத்திருந்தால க்ளோஸ் ஷாட் எடுத்திருக்கலாம். ஆனால் அந்த ஸீனில் கேமிரா சைட் ஆங்கிளில் இருக்கும். முடிவு செய்து விட்டு எழுத ஆரம்பித்தால் எல்லாமே தவறுதான்.]]]

    -)))))))))))))))

    ReplyDelete
  100. [[[Nelson said...
    nethi varaikum doubt. iniku conform. Chaaru is mentally retarded, antha aalu pesurathukellam mathipu kudukiringale boss..]]]

    நோ.. கொஞ்சம் ஓவரான அறிவுஜீவியா இருக்காரு. அதுதான் பிரச்சினை..!

    ReplyDelete
  101. [[[சூர்யா - மும்பை said...

    மக்கா என் அன்பின் அதிகப் பட்ச உச்சமாய் ஓர் அன்பு முத்தம்.

    "குசேலன் " படம் பார்பதற்கு முன்னால் என்கூட உட்கார்ந்து 'படம் குப்பையாகதான் இறக்கும் என்று போதையில் சொன்னவர். ஏன் முதல் நாள் டிக்கெட்டுக்கு கெஞ்சியவர் அடுத்த நாளே விமர்சனம் போட வேண்டியதுதானே. அப்புறம் உயிர்மை டிப்ஸ் காசு போய் விடுமே. நான் ரஜினி மற்றும் சாருவின் தீவிர ரசிகன்.]]]

    இது போன்ற முரண்பாடுகள் அவரிடத்தில் நிறைய உண்டு..!

    ReplyDelete
  102. [[[ranjan11 said...

    டேர்மினடரயும் ரோபோ கொப்பையும் அப்பட்டமாக கொப்பி செய்து எடுக்கப்பட்ட படம் எந்திரன்.]]]

    அப்பட்டமான காப்பி அல்ல. சில காட்சிகள் அடிப்படை மட்டுமே..!

    [[[சன் டிவி நிருவனத்தாரையும் ரஜனியையும் ஆசியாவின் பெரிய பணக்காரர்கள் ஆக்கிய குப்பை.]]]

    குப்பைக்கு ஏன் இத்தனை வசூல்..?

    [[[தன் வீட்டில் அழும் குழந்தைக்கு பால் இல்லை ஆனால் ரஜனி கட் அவிட்டுக்கு பால் ஊற்ற பணம் உண்டு.]]]

    இது ரசிகர்களின் முட்டாள்தனமான மனோபாவம்..!

    [[[மார்லன் பிராண்டோவுக்கு ஜோடியாக 28 வயது பெண் நடித்து உண்மை. ஆனால் மார்லன் பிராண்டோ தன்னை 28 வயதாக காட்ட மேக்அப் பண்ணவில்லை இதுதான் வித்தியாசம் சரியா.]]]

    மேக்கப் செய்யாமல் உடலுறவில் ஈடுபட்டு அதை அப்படியே எடுத்து வெளியிட்டால் அது ஆபாசமில்லை. அது போன்ற காட்சிகள் இல்லாமல் மேக்கப்பில் குறைபாடு என்றாலே அது ஆபாசமா..?

    என்ன கூத்துய்யா உங்களோட..?

    ReplyDelete
  103. [[[ranjan11 said...
    Last tango in paris படத்தில் மார்லன் பிராண்டோ தன்னை ஒரு 55 வயதான ஒரு wash out ஆகத்தான் தன்னை காண்பிக்கிறார். ஒரு வயது முதிர்ந்தவனுக்கும் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் பாலியல் தொடர்பால் வரும் பிரச்சனைகளை அந்த படம் காண்பிக்கிறது. கடைசியாக அந்த படம் பார்த்தவர்களுக்கு ஒரு மெசேஜ்யும் சொல்லி விட்டு போகிறது.]]]

    அந்த சீன்களெல்லாம் ஆபாசமில்லையோ?

    [[[அங்கு மார்லன் பிராண்டோ தன்னை வாலிபனாக காட்டவில்லை. உலகுக்கு method acting என்றால் என்ன என்று சொல்லிகொடுத்த மார்லன் ப்ராண்டோவை என்ன பாடுபடுத்துகிறீர்கள்]]]

    அப்படியா..? எனக்குத் தெரிந்து சிவாஜி அளவுக்கு அவருடைய நடிப்பு இல்லையே என்பதுதான். மேக்கப்பின் துணையோடு நடித்ததை எப்படி முழுமையான நடிப்பு என்பீர்கள்..?

    ReplyDelete
  104. [[[M.G.ரவிக்குமார்™..., said...
    உங்க பெயருக்குப் பொருத்தமான கட்டுரை!. தயவு செய்து இவரைப் பற்றி எழுதுவது இதுவே கட்டக் கடைசியாக இருக்கட்டும்! உங்கள் அளப்பரிய ஆற்றலை வீணாக்காதீர்கள்!. தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவனைப் பார்த்து பிச்சைக்காரன் ஒருவன் புலம்புவதுதான் இந்த சாரு செய்வதும்!]]]

    இந்த அளவுக்கெல்லாம் அவர் மேல் வெறுப்பு வேண்டாம் நண்பரே..!

    கருத்து பரிமாற்றத்தோடு நான் நின்று கொள்கிறேன்..!

    ReplyDelete
  105. [[[பார்வையாளன் said...

    "ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்ற வகையில் எப்போதும் அவர் மேல் எனக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு"

    ஹா ஹா... சாருவை இந்த வரிகள் கண்டிப்பாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்...

    உளறலுக்கு சாரு என்றால் உள்குத்துக்கு உண்மை தமிழன் :-)]]]

    இல்லை.. உண்மையாகத்தான் சொல்கிறேன்..! இப்ப நீங்க வைக்கிறதுதான் உள்குத்து..!

    ReplyDelete
  106. [[[Lucky Limat லக்கி லிமட் said...
    கலக்கிபுட்டீங்க போங்க.]]]

    அப்படியா..? நன்றிகள்..!

    ReplyDelete
  107. [[[muthukumar said...
    ஹிட்ஸ் அதிகம் ஆனத்துக்கு இது போன்ற ஏளன பேச்சுக்கள்தான் kaaranam என நான் நினைக்குறேன்

    தமிழுடன்
    முத்துக்குமார்]]]

    ஏற்கெனவே அவர் ஹிட்டானவர் ஸார்..! ஹிட்ஸ் எல்லாம் அவருக்குத் தேவையில்லை..! கவன ஈர்ப்புதான் முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்..!

    ReplyDelete
  108. [[[முருகப் பெருமான் said...

    //இதை விட ’காதலிக்க நேரமில்லை’ படத்தில் முத்துராமனும் காஞ்சனாவும் மைசூர் பிருந்தாவனத்தில் ஓடியாடி டூயட் பாடும் ’ராஜ ராஜ ஸ்ரீராமன் வந்தான்’ என்ற பாடல் ஆயிரம் மடங்கு தேவலாம்//...

    என்று சாரு நிவேதிதா தவறாக எழுதி இருக்கிறார்.

    இப்பாடல் "ஊட்டி வரை உறவு" படத்தில் முத்துராமனும் எல்.விஜயலட்சுமியும் பாடியது.

    வரலாறு மிகவும் முக்கியம் அல்லவா?]]]

    ஆஹா.. அட ஆமாம்ல்ல.. எனக்கெப்படி இதை செக் செய்யணும்ன்ற எண்ணம் தோணாமப் போச்சு..?

    ReplyDelete
  109. [[[மனசாட்சியே நண்பன் said...

    நண்பரே, ரஜினி எந்த இடத்திலும் தான் ஒரு அதிமேதாவி என்றோ, தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்றோ சொன்னதில்லை. மாறாக எல்லாமே மற்றவரின் அறிவு சார்ந்தாகவும், தான் அதில் ஒரு கருவி மட்டுமே என்று பல இடங்களில் உரைத்திருக்கிறார். இதில் இந்த மேதாவி பத்திரிகை ஜென்மங்கள் என்ன சொன்னால் என்னவாகிவிடப் போகிறது விடுங்கள்.]]]

    ஆனாலும் பணமும், புகழும், பெருமையும் அவரிடம் நிறைகிறது என்கிற பொறாமையும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்..!

    ReplyDelete
  110. hi

    your exactly correct some people wants their publicity by critisice the better one. This is called negative imagining. He always want to show his publicity and even he is not a write person to give comments.

    the best example he is paruthiveeran is one of the wrost movie. How come he is became writer... he is definatly a fooolllll

    ReplyDelete
  111. [[[varan said...

    hi your exactly correct some people wants their publicity by critisice the better one. This is called negative imagining. He always want to show his publicity and even he is not a write person to give comments.

    the best example he is paruthiveeran is one of the wrost movie. How come he is became writer... he is definatly a fooolllll]]]

    முழுவதுமாக என்னால் இப்படி ஏற்றுக் கொள்ள முடியாது..! ஆனால் தனது அறிவுத்தனத்தை மேட்டுக்குடியினரோடு மட்டுமே பொருத்திப் பார்க்கிறார். அதுதான் பிரச்சினை..!

    ReplyDelete
  112. படம் வெளியாவதற்கு முன்னமே "படத்தக் கிழிக்கறேன் வா" என்று சூளுரைத்தவர் சாரு. பிறகு எப்படி அவரிடம் படத்திற்கான நேர்மையான விமரிசனத்தை எதிர்பார்க்க முடியும்? மேலும், படம் வெளியான நான்கு நாட்கள் டிக்கெட் கிடைக்காமல் "படத்துக்கு விமரிசனம் (இதுக்கு ஏதோ ஒரு இலக்கியத் தர வார்த்தையை உபயோகிச்சாரு, நினைவில்லை) எழுத முயலும் ஒருவனுக்கு டிக்கெட் தராத கேடு கேட்ட சமூகம் தமிழ் சமூகம்" என தமிழனைக் கெட்ட வார்த்தையில் வைதவரும் அவர்தான். படத்துக்கு அவர் எழுதினது குரைப்புரை, அதைப் படிச்சுட்டு ஆகர்ஷிப்புவயப்பட அவரோட பக்த கேடிகள் இருக்காங்க. நீங்க படிச்சிட்டு சிரிச்சிட்டு போவீங்களா?

    ReplyDelete
  113. [[["ஸஸரிரி" கிரி said...
    படம் வெளியாவதற்கு முன்னமே "படத்தக் கிழிக்கறேன் வா" என்று சூளுரைத்தவர் சாரு. பிறகு எப்படி அவரிடம் படத்திற்கான நேர்மையான விமரிசனத்தை எதிர்பார்க்க முடியும்? மேலும், படம் வெளியான நான்கு நாட்கள் டிக்கெட் கிடைக்காமல் "படத்துக்கு விமரிசனம் (இதுக்கு ஏதோ ஒரு இலக்கியத் தர வார்த்தையை உபயோகிச்சாரு, நினைவில்லை) எழுத முயலும் ஒருவனுக்கு டிக்கெட் தராத கேடு கேட்ட சமூகம் தமிழ் சமூகம்" என தமிழனைக் கெட்ட வார்த்தையில் வைதவரும் அவர்தான். படத்துக்கு அவர் எழுதினது குரைப்புரை, அதைப் படிச்சுட்டு ஆகர்ஷிப்புவயப்பட அவரோட பக்த கேடிகள் இருக்காங்க. நீங்க படிச்சிட்டு சிரிச்சிட்டு போவீங்களா?]]

    இதுதான் சாருவிடம் இருக்கும் முரண்பாடுகள்.

    அதிலும் நான் குறிப்பிட மறந்த ஒன்று இதில் உள்ளது..

    எந்திரன் படம் வெளியான அன்றே சாரு தனது ட்வீட்டரில் எந்திரன் ஒரு குப்பை என்று விமர்சனம் செய்திருந்தார். அப்போது நானே அவருக்குப் பதில் ட்வீட்டாக "தயவு செய்து இனிமேல் தமிழ்ச் சினிமாக்களுக்கு விமர்சனம் செய்ய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டேன்.

    ஆனால் இந்தப் பதிவில் தான் நான்கு நாட்கள் கழித்துதான் படம் பார்த்ததாகச் சொல்கிறார்.. என்ன காமெடி இது..?

    ReplyDelete
  114. நண்பரே,

    நேர்மையாக சிந்திக்க தெரிந்த பதிவர்களும் தமிழ் வலைதளத்தில இருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள்

    மிகவும் நன்றி..நீவிர் வாழ்க உம குடி வாழ்க!

    வணக்கம்

    ReplyDelete
  115. [[[Ganpat said...
    நண்பரே, நேர்மையாக சிந்திக்க தெரிந்த பதிவர்களும் தமிழ் வலைதளத்தில இருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள். மிகவும் நன்றி.. நீவிர் வாழ்க உம குடி வாழ்க!
    வணக்கம்]]]

    கண்பத் ஸாரின் நீண்ட நாட்களுக்குப் பிறகான வருகைக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

    ReplyDelete
  116. சினிமா என்பது வெறும் நடிப்புதான் என்பது ஏன் இந்த மரமண்டை சாருவுக்குப் புரிய மறுக்கிறது? 61 வயதான ரஜினி 21 வயது கல்லூரிப் பையனாக நடித்தால்தான் என்ன தப்பு? It is after all acting, not reality! 61 வயதான ரஜினி 37 வயதான ஐஸ்வர்யா ராயுடன் நடித்தார் அவ்வளவுதானே, ஆனால் இந்த மக்கு சாறு அவர் என்னமோ கல்யாணமே செய்து கொண்டாது மாதிரி ஊளையிடுகிறாரே? இந்தப் படத்தில் ரஜினி ஐஸ்வர்யா ராயை பட்டும் படாமலேதான் நடித்துள்ளார். ஆபாசம் எங்கிருந்து வந்தது? மேலும் சபையில் சொல்ல வாய் கூசும் வார்த்தைகளை எழுத்தாக தனது பதிவுகளில் போட்டுவிட்டு இந்த மிருகம் எந்திரன் படத்தை ஆபாசம் என்பது கூனன் அடுத்தவர் முதுகைத்தான் பார்ப்பான், ஒருபோதும் தன முதுகைப் பார்க்க மாட்டான் என்பது போல உள்ளது.

    ReplyDelete
  117. [[[Jayadeva said...
    சினிமா என்பது வெறும் நடிப்புதான் என்பது ஏன் இந்த மரமண்டை சாருவுக்குப் புரிய மறுக்கிறது?

    61 வயதான ரஜினி 21 வயது கல்லூரிப் பையனாக நடித்தால்தான் என்ன தப்பு? It is after all acting, not reality! 61 வயதான ரஜினி 37 வயதான ஐஸ்வர்யா ராயுடன் நடித்தார் அவ்வளவுதானே, ஆனால் இந்த மக்கு சாறு அவர் என்னமோ கல்யாணமே செய்து கொண்டாது மாதிரி ஊளையிடுகிறாரே?

    இந்தப் படத்தில் ரஜினி ஐஸ்வர்யா ராயை பட்டும் படாமலேதான் நடித்துள்ளார். ஆபாசம் எங்கிருந்து வந்தது? மேலும் சபையில் சொல்ல வாய் கூசும் வார்த்தைகளை எழுத்தாக தனது பதிவுகளில் போட்டுவிட்டு இந்த மிருகம் எந்திரன் படத்தை ஆபாசம் என்பது கூனன் அடுத்தவர் முதுகைத்தான் பார்ப்பான், ஒருபோதும் தன முதுகைப் பார்க்கமாட்டான் என்பது போல உள்ளது.]]]

    - மிருகம், கூனன், அவன், இவன் என்ற ஏக வசனத்தையெல்லாம் நீக்கியிருக்கலாம் நண்பரே..

    என்ன இருந்தாலும் சாருநிவேதிதா ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரே.. அதற்குரிய மரியாதையையாவது அவருக்கு நாம் தர வேண்டும்..!

    ReplyDelete
  118. மன்னிக்கணும் சார். இவரு ஒரு வாசகிக்கு எழுதுன பதிலைப் பாத்துத் தொலைக்க நேர்ந்தது. அதப் பாத்ததுக்கப்புறம் இந்த ஈனப் பிறவியை ஒரு எழுத்தாளராக மட்டுமல்ல ஒரு மனுஷனா கூட மதிக்க முடியல. இந்த மாதிரி விஷமிகள் எழுதுவதை நிறுத்தினால் சமுதாயத்திற்கு நல்லது நடக்கும்.

    ReplyDelete
  119. [[[Jayadeva said...
    மன்னிக்கணும் சார். இவரு ஒரு வாசகிக்கு எழுதுன பதிலைப் பாத்துத் தொலைக்க நேர்ந்தது. அதப் பாத்ததுக்கப்புறம் இந்த ஈனப் பிறவியை ஒரு எழுத்தாளராக மட்டுமல்ல ஒரு மனுஷனாகூட மதிக்க முடியல. இந்த மாதிரி விஷமிகள் எழுதுவதை நிறுத்தினால் சமுதாயத்திற்கு நல்லது நடக்கும்.]]]

    நானும் அதைப் படித்துத் தொலைந்தேன்..! விட்டுத் தொலைங்க..!

    ReplyDelete
  120. நீங்கள் கூறியது முற்றிலும் சரி , ( நிஜமாகவா , சுஜாதாவின் வசனங்கள் இதில் இருக்கிறது! )

    ReplyDelete