Pages

Sunday, October 24, 2010

ராதிகாவின் சந்தோஷப் பேச்சு..! சரத்குமாரின் சங்கடம்..!

24-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
!

நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இயக்குநர்கள் சங்க ஆண்டு விழாவில் கே.பி.-ரஜினி பேட்டி ஒரு ஹைலைட் என்றால் மற்றொரு ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சியாக்கிய விஷயம் நடிகை ராதிகாவின் வெளிப்படையான பேச்சு..!



 
ராதிகாவின் இந்த வெளிப்படையான பேச்சு கடைசியில் டபுள், டிரிபுள் மீனிங்கையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட, சம்பந்தப்பட்ட பாரதிராஜா, சரத்குமாரெல்லாம் சங்கடத்தில் நெளிய வேண்டியதாகிவிட்டது.

நேற்றைக்கு ஏதோ என்றைக்கும் இல்லாத அளவுக்கு மிக சந்தோஷமாக இருந்தார் ராதிகா. காரை விட்டு இறங்கி காரிடாரில் நடந்து வந்தபோதே எதிரில் வந்து வரவேற்ற பாரதிராஜாவை இறுக்கி அணைத்து அவருடைய இடுப்பில் கை போட்டபடியே கிட்டத்தட்ட இழுத்தபடியேதான் வந்தார் ராதிகா. இவர்களுக்குப் பின்னாலேயேதான் சரத்குமாரும் வந்தார். உள்ளரங்கத்திற்குள் நுழைந்தபோதுதான் பாரதிராஜாவே தவியாய் தவித்து ராதிகாவின் கையை எடுத்துவிட்டார்.

"சரத்குமார் பாடுவார். ராதிகா துணைக்கு ஆடுவார்" என்று சொல்லித்தான் அவர்களை மேடைக்கு அழைத்தார் தொகுப்பாளர் மதன்பாப். சரத்குமாரும், ராதிகாவும் மேடைக்கு வந்தார்கள்.

சரத்குமார் தான் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் பாடும் “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்..” என்ற புரட்சித் தலைவரின் பாடலை அட்சரப் பிசகாமல் அழகாகப் பாடினார். அதுவரையில் தூரத்தில் நின்றபடியே சரத் பாடும் அழகை ரசித்தபடியே இருந்தார் ராதிகா.

மைக் ராதிகாவின் கைக்கு வந்த பின்புதான் ரகளையே துவங்கியது. எடுத்த எடுப்பிலேயே பாரதிராஜாவை பார்த்தே பேச ஆரம்பித்தார் ராதிகா.

“நானெல்லாம் அந்தக் காலத்துல என்ன லட்சணத்துல இருந்தேன்னு எனக்குத்தான் தெரியும். ஐஸ்வர்யா ராய் மாதிரி கொஞ்சமாச்சும் அழகா இருந்தால்தான், சினிமால நடிக்க முடியும்.. ஆனா அப்புறமும் எதுக்கு ஸார் என்னை செலக்ட் செஞ்சீங்க..? அதுவே எனக்கு ரொம்ப ஆச்சரியம்..

ஒரு சமயம் 'கிழக்கே போகும் ரயில்' ஷூட்டிங்கப்ப நீங்க ஒரு பாறைல தலையை முட்டிக்கிட்டிருந்தீங்க.. நான் அப்போ உங்ககிட்ட வந்து ‘Why are you doing sir..?’ அப்படீன்னு அப்பாவியா கேட்டேன். அதுக்கு நீங்க ‘இனிமே நீயே டைரக்ட் செஞ்சுக்க. நான் செய்ய மாட்டேன். உன்னையெல்லாம் வைச்சு நான் என்ன டைரக்ட் செய்யறது?’ன்னு கேட்டீங்களா இல்லையா..?

அப்புறம் ‘நிறம் மாறாத பூக்கள்’ல நடிக்கும்போது நடந்த கூத்து. கூட நடிச்ச விஜயனுக்கு April Fool என்ற வார்த்தையை இங்கிலீஷ்ல உச்சரிக்கவே தெரியலை. அவர் அதை எப்படி உச்சரிச்சாருன்னு நான் என் வாயால சொல்ல மாட்டேன். சத்தியமா சொல்ல மாட்டேன் ஸார்..

அப்போவெல்லாம் ஹீரோயினை பாம்பேல இருந்து கொண்டு வந்துக்கிட்டிருந்தாங்க.. இந்த நேரத்துல நம்மளை செலக்ட் பண்ணியிருக்காரேன்னு நானும் பயந்து, பயந்துதான் நடிச்சேன். ஒரு நாள் அப்படியே நீங்க கேட்டீங்க.. ‘உனக்கெல்லாம் போய் நடிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கு பாரு.. என் தலையெழுத்து…’ அப்படின்னீங்க.. சொன்னீங்களா இல்லையா.. ஸார்..?

ஒரு நாள் வீட்ல ஏதோ வேலை பார்த்துக்கிட்டிருந்தேன்.. அப்போ டிவி ஓடிக்கிட்டிருந்துச்சு.. அதுல கேள்வி கேட்டுக்கிட்டிருந்தாங்க. ‘உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாரு?’ன்னு.. அப்போ ஒரு பொண்ணு சொல்லுச்சு ‘சரத்குமார்’ன்னு.. எனக்கு பயங்கர ஷாக்கு.. எப்படிங்க இது..? அடுத்து அந்தப் பொண்ணுகிட்ட ‘சரத்குமாரை ஏன் பிடிக்குது’ன்னு கேட்டா ‘அவர் நல்லா பண்ணுவாரு’ன்னுச்சு.. சரத் நல்லாப் பண்ணுவாராம். எனக்குத் தாங்க முடியல. அதுலேயும் சன் டிவில..? அவங்களை எதிர்த்துதான் வேற கட்சிக்குப் போய், அப்புறம் அது சரி  வராம தனிக்கட்சி ஆரம்பிச்சோம். அதுக்கப்புறமும் இப்படியா..?” என்று பேசிக் கொண்டே போக சரத்குமார் இதற்கு மேல் தாங்க முடியாமல் கீழே இறங்கி வந்துவிட்டார்.

அதற்குப் பிறகும் எந்திரன் படம் பற்றியும், பாரதிராஜா தனது ஹீரோயின்களை செலக்ட் செய்யும்விதம் பற்றியும் ஏகத்திற்கும் கமெண்ட் செய்துவிட்டு பெரும் கைதட்டலுடன்தான் மேடையில் இருந்து இறங்கினார் ராதிகா.

அவருடைய ஒவ்வொரு சொற்றொடருக்கும் பாரதிராஜாவை குளோஸ்அப்பில் காட்டும்போது, பாரதிராஜாவின் அவஸ்தை அவருடைய முகத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

என்னமோ தெரியவில்லை.. நேற்றைய தினம் முகம் கொள்ளாச் சிரிப்புடன் ராதிகா பேசிய பேச்சு கவர்ச்சிகரமானதுதான் என்றாலும் தெரிந்துதான் பேசினாரா அல்லது தெரியாமலேயே சந்தோஷத்தின் உச்சத்தில் பேசிவிட்டாரா என்பது புரியாமல் வந்திருந்த சினிமா பிரபலங்கள் முழித்தது தனிக்கதை..

ஆனாலும் விழாவின் காலை நிகழ்ச்சியில் வார்த்தைக்கு வார்த்தை அப்ளாஸ் வாங்கியது ராதிகாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

தீபாவளியன்று சன் டிவியை பாருங்கள். உங்களுக்கே தெரியும்..!

61 comments:

  1. இந்த கூத்தெல்லாம் வேறயா......... பாவம் சரத்.............

    ReplyDelete
  2. //// தீபாவளியன்று சன் டிவியை பாருங்கள். உங்களுக்கே தெரியும்..!///

    ச்சே ....,எடிட் பண்ணிட மாட்டாங்களா ?

    ReplyDelete
  3. ஒருவேளை ராவா அடிச்சிருப்பாரோ? :-)

    ReplyDelete
  4. இனிமே பார்த்ததும் கமெண்ட் போட்டாத்தான் ஃபர்ஸ்ட் கிடைக்கும் போல இருக்கு.. படித்து முடிப்பதற்குள் , வடை பறி போய் விடுகிறது

    ReplyDelete
  5. நானும் நேரில் வந்திருந்தேன். மேலும் சில சகிக்க முடியாத ராதிகாவின் இரட்டை அர்த்த பேச்சுகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா? அல்லது எடிட் செய்துவிட்டீர்களா? எனத் தெரியவில்லை.

    எது எப்படியிருந்தாலும், ராதிகாவின் இந்த இரட்டை அர்த்தப் பேச்சு நிச்சயம் சன் டிவியில் ஒளிபரப்பாகாது.

    ReplyDelete
  6. "ராதிகாவின் இந்த இரட்டை அர்த்தப் பேச்சு நிச்சயம் சன் டிவியில் ஒளிபரப்பாகாது"

    அட ஆண்டவா..

    எடிட் பண்ணாத தொகுப்பை வழங்குமாறு ( சன் டிவையை அல்ல, உங்களை ) அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  7. என்ன இவ்ளோ தானா?? ரொம்ப சுருக்கமா எழுதிட்டீங்க... ஏன் ராதிகாவை பிடிக்காதா?/ :):)

    ReplyDelete
  8. endhiran padam pathi radhika yenna sonnanga sir? nalla badiya sonnanala illai ulkuthu yethuvum unda??

    ReplyDelete
  9. நித்தியானந்தா மேட்டரையே எடிட் செய்யாமதான் காட்டுனாங்க இதெல்லாம் சன் க்கு ரொம்ப சாதாரணம்.தீபாவளி வரைக்கும் வெயிட் பண்ணி பாத்துட்டா போச்சு.

    ReplyDelete
  10. //வார்த்தைக்கு வார்த்தை அப்ளாஸ் வாங்கியது ராதிகாதான் //

    அப்ளாஸா?? நல்லாப் பேசுனவங்களுக்கு எல்லாம் துன்றதுக்கு அப்பளங் குடுத்தாய்ங்களாண்ணே??

    ReplyDelete
  11. கண்டிப்பாக கத்தரித்துவிடுவார்கள் தலைவரே...

    ReplyDelete
  12. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    இந்த கூத்தெல்லாம் வேறயா......... பாவம் சரத்.............]]]

    -))))))))))))))))

    ReplyDelete
  13. [[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

    //// தீபாவளியன்று சன் டிவியை பாருங்கள். உங்களுக்கே தெரியும்..!///

    ச்சே. எடிட் பண்ணிட மாட்டாங்களா?]]]

    நிச்சயம் எடிட்டிங் இருக்கும்..!

    ReplyDelete
  14. [[[எப்பூடி.. said...
    ஒருவேளை ராவா அடிச்சிருப்பாரோ?:-)]]]

    -)))))))))))))))

    ReplyDelete
  15. [[[பார்வையாளன் said...
    இனிமே பார்த்ததும் கமெண்ட் போட்டாத்தான் ஃபர்ஸ்ட் கிடைக்கும் போல இருக்கு. படித்து முடிப்பதற்குள், வடை பறி போய் விடுகிறது]]]

    எதுக்கு பர்ஸ்ட்..? மெதுவா படிச்சிட்டு பின்னூட்டத்தை மட்டும் போட்டாலே போதுமே..?

    ReplyDelete
  16. [[[r.selvakkumar said...

    நானும் நேரில் வந்திருந்தேன். மேலும் சில சகிக்க முடியாத ராதிகாவின் இரட்டை அர்த்த பேச்சுகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா? அல்லது எடிட் செய்துவிட்டீர்களா? எனத் தெரியவில்லை.]]]

    இல்லை ஸார்.. எனக்குத் தெரிந்தவரையில்தான் எழுதியிருக்கிறேன். கேலரியில் தூரத்தில் அமர்ந்திருந்ததால் சில பேச்சுக்கள் காதில் விழுகவில்லை.. ஆனாலும் அனர்த்தமான பேச்சுக்களை பேசியிருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது..

    [[[எது எப்படியிருந்தாலும், ராதிகாவின் இந்த இரட்டை அர்த்தப் பேச்சு நிச்சயம் சன் டிவியில் ஒளிபரப்பாகாது.]]]

    நிச்சயமாக நம்பலாம்..!

    ReplyDelete
  17. [[[பார்வையாளன் said...

    "ராதிகாவின் இந்த இரட்டை அர்த்தப் பேச்சு நிச்சயம் சன் டிவியில் ஒளிபரப்பாகாது"

    அட ஆண்டவா..

    எடிட் பண்ணாத தொகுப்பை வழங்குமாறு (சன் டிவையை அல்ல, உங்களை ) அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்]]]

    ஸாரி..

    ReplyDelete
  18. [[[ஸ்வாதி said...
    என்ன இவ்ளோதானா?? ரொம்ப சுருக்கமா எழுதிட்டீங்க... ஏன் ராதிகாவை பிடிக்காதா?:):)]]]

    தெரிஞ்சதே இவ்ளோதான். அதுனால மேட்டரும் இவ்ளோதான்..!

    ReplyDelete
  19. [[[Arun said...
    endhiran padam pathi radhika yenna sonnanga sir? nalla badiya sonnanala illai ulkuthu yethuvum unda??]]]

    எந்திரன் மாதிரி படத்துல அவங்களும் நடிக்கணும்னு விரும்பறதா சொன்னாங்க..!

    ReplyDelete
  20. [[[Meshak said...
    நித்தியானந்தா மேட்டரையே எடிட் செய்யாமதான் காட்டுனாங்க. இதெல்லாம் சன்க்கு ரொம்ப சாதாரணம்.தீபாவளிவரைக்கும் வெயிட் பண்ணி பாத்துட்டா போச்சு.]]]

    ஓகே.. வெயிட் பண்ணிப் பாருங்க..

    ReplyDelete
  21. [[[பழமைபேசி said...

    //வார்த்தைக்கு வார்த்தை அப்ளாஸ் வாங்கியது ராதிகாதான் //

    அப்ளாஸா?? நல்லாப் பேசுனவங்களுக்கு எல்லாம் துன்றதுக்கு அப்பளங் குடுத்தாய்ங்களாண்ணே??]]]

    நோ.. கை தட்டல் ஓங்கி ஒலித்தது..!

    ReplyDelete
  22. [[[philosophy prabhakaran said...
    கண்டிப்பாக கத்தரித்து விடுவார்கள் தலைவரே.]]]

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன்..!

    ReplyDelete
  23. சித்தி குவாட்டர் கிவாட்டர் அடிச்சுட்டுதா என்ன?

    ReplyDelete
  24. April Fool என்ற வார்த்தையை இங்கிலீஷ்ல உச்சரிக்கவே தெரியலை. அவர் அதை எப்படி உச்சரிச்சாருன்னு நான் என் வாயால சொல்ல மாட்டேன்"

    எப்படி உச்சரித்து இருந்திருப்பாரு? புரிய்லையே? நீங்களாவது விளக்க கூடாதா ?
    அவங்க கொடுக்ற பில்ட் அப் ஆர்வத்தை தூண்டுதே !!

    ReplyDelete
  25. [[[கானா பிரபா said...
    சித்தி குவாட்டர் கிவாட்டர் அடிச்சுட்டுதா என்ன?]]]

    நோ.. ஆனால் ஏதோவொரு சந்தோஷம்..!

    ReplyDelete
  26. [[[பார்வையாளன் said...

    April Fool என்ற வார்த்தையை இங்கிலீஷ்ல உச்சரிக்கவே தெரியலை. அவர் அதை எப்படி உச்சரிச்சாருன்னு நான் என் வாயால சொல்ல மாட்டேன்."

    எப்படி உச்சரித்து இருந்திருப்பாரு? புரிய்லையே? நீங்களாவது விளக்க கூடாதா? அவங்க கொடுக்ற பில்ட் அப் ஆர்வத்தை தூண்டுதே!!]]]

    ம்ஹும்.. நான் மாட்டேன்பா..!

    ReplyDelete
  27. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    புல் மப்பா இருக்கும்.]]]

    இல்லை. மிகையான சந்தோஷம். அவ்வளவே..!

    ReplyDelete
  28. ஹாஹாஹா சரவணா எப்பிடிப்பா இதெல்லாம்.. இந்த ந்யூஸ் எல்லாம் உனக்கு மட்டும் கவர் பண்ண முடியுது..:))

    ReplyDelete
  29. ஆறு மாதங்கள் கழித்து ஓட்டு கேட்கவும் வருவாங்க, அந்த தியாக நடிப்பையும் நாம் பார்க்கணும். சாமி.

    ReplyDelete
  30. ராதிகா மற்றும் கமல் போன்ற கழிசடைகளுக்கு, உள்ளுக்குள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும், ஆனாலும் அதை வெளியே வெளிச்சம் போட்டு காட்டுவது ஒன்றும் புதிதில்லையே..

    ReplyDelete
  31. பாவம் சரத் இவருக்கு போய் தாலிய கட்டிட்டமேன்னு வருத்தப்பட்டிருப்பார்..அப்புறம்..அய்யய்யோ அத கூட நாம கட்டலை இல்லையான்னு முழிச்சிருப்பார்..

    ReplyDelete
  32. நிறைய பேட்டிகளில் இவர் பேசினால் பயம்கிற மாதிரிதான் சில் பிரபலங்கள் சொல்லியிருக்காங்க!

    ஒரு பேட்டியை அதே உணர்வோடு எழுதுகிறீர்கள். படிக்கிறவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கவிட்டாலும் அந்த உணர்வை கொண்டு வருகிறீர்கள் எல்லா பதிவிலும்! மிக்க நன்றி!

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. A very famous English Joke, a lady tells her husband, "Hi dear, come here and see, your children and my children are playing with our children" [Ha....ha....ha....]. I have an intense desire that it should remain an English joke, but afraid maybe it will soon become a Tamil reality, thanks to Kodambakkam fellows.

    ReplyDelete
  35. அவங்க(சன்டிவி)விளம்பரத்த ஆரம்பிக்கும் முன்பே நீங்க ஆரம்பிச்சுட்டிங்களா?.நடத்துங்க

    ReplyDelete
  36. இதுதாங்க தீபாவளி ஒரிஜினல் சரவெடி...!

    ReplyDelete
  37. //ஒரு பொண்ணு சொல்லுச்சு ‘சரத்குமார்’ன்னு.. எனக்கு பயங்கர ஷாக்கு.. எப்படிங்க இது..? அடுத்து அந்தப் பொண்ணுகிட்ட ‘சரத்குமாரை ஏன் பிடிக்குது’ன்னு கேட்டா ‘அவர் நல்லா பண்ணுவாரு’ன்னுச்சு.. சரத் நல்லாப் பண்ணுவாராம். எனக்குத் தாங்க முடியல.//

    athaane atha saraththoda munnaal manaiviyo, radhigaavothaane solla mudiyum eppadi intha ponnu solluchchi. Something somewhere wrong.

    ReplyDelete
  38. இன்னொரு கோடம்பாக்கம் divorse ஸ்டார்ட் ஆகிடிச்சு

    ReplyDelete
  39. [[[தேனம்மை லெக்ஷ்மணன் said...
    ஹாஹாஹா சரவணா எப்பிடிப்பா இதெல்லாம்.. இந்த ந்யூஸ் எல்லாம் உனக்கு மட்டும் கவர் பண்ண முடியுது..:))]]]

    பத்திரிகையாளன் புத்தி இதுதான்க்கா..!

    ReplyDelete
  40. [[[raghava said...
    ஆறு மாதங்கள் கழித்து ஓட்டு கேட்கவும் வருவாங்க, அந்த தியாக நடிப்பையும் நாம் பார்க்கணும். சாமி.]]]

    பாருங்க.. பார்க்கத்தான போறோம்..!

    ReplyDelete
  41. [[[kudakku said...
    ராதிகா மற்றும் கமல் போன்ற கழிசடைகளுக்கு, உள்ளுக்குள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும், ஆனாலும் அதை வெளியே வெளிச்சம் போட்டு காட்டுவது ஒன்றும் புதிதில்லையே.]]]

    இது ரொம்ப ஓவர்.. கழிசடை என்கிற வார்த்தையையெல்லாம் பயன்படுத்துகிற அளவுக்கு இங்கே ஒன்றுமில்லை..!

    ReplyDelete
  42. [[[பிரியமுடன் ரமேஷ் said...
    பாவம் சரத் இவருக்கு போய் தாலிய கட்டிட்டமேன்னு வருத்தப்பட்டிருப்பார்.. அப்புறம்.. அய்யய்யோ அத கூட நாம கட்டலை இல்லையான்னு முழிச்சிருப்பார்.]]]

    நடிகர், நடிகைன்னா எப்படி வேண்ணாலும் பேசலாம்ன்னு இல்லை ரமேஷ்..! இது ஒரு இன்ஸிடெண்ட் அவ்ளோதான்..!

    ReplyDelete
  43. [[[எஸ்.கே said...
    நிறைய பேட்டிகளில் இவர் பேசினால் பயம்கிற மாதிரிதான் சில் பிரபலங்கள் சொல்லியிருக்காங்க!

    ஒரு பேட்டியை அதே உணர்வோடு எழுதுகிறீர்கள். படிக்கிறவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கவிட்டாலும் அந்த உணர்வை கொண்டு வருகிறீர்கள் எல்லா பதிவிலும்! மிக்க நன்றி!]]]

    மிக்க நன்றிகள் ஸார்..! ராதிகா ரொம்ப டேலண்ட்டானவங்கதான்..! அதுனால சொல்லியிருப்பாங்க.. இல்லைன்னா இத்தனை வருஷமா ஒரு சாம்ராஜ்யத்தை நடத்திட்டு வர முடியுமா?

    ReplyDelete
  44. [[[Jayadeva said...
    A very famous English Joke, a lady tells her husband, "Hi dear, come here and see, your children and my children are playing with our children" [Ha....ha....ha....]. I

    have an intense desire that it should remain an English joke, but afraid maybe it will soon become a Tamil reality, thanks to Kodambakkam fellows.]]]

    காலம் அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது..! வேறு வழியில்லை. மேற்கத்திய தாக்கம் நம்மை அந்த அளவுக்குச் சூழ்ந்துவிட்டது தப்பிப்பது மிகக் கடினம்..!

    ReplyDelete
  45. [[[Siva said...
    அவங்க(சன்டிவி)விளம்பரத்த ஆரம்பிக்கும் முன்பே நீங்க ஆரம்பிச்சுட்டிங்களா?.நடத்துங்க]]]

    நன்றி சிவா..!

    ReplyDelete
  46. [[[ஸ்ரீராம். said...
    இதுதாங்க தீபாவளி ஒரிஜினல் சரவெடி...!]]]

    சூப்பர்ல்ல..! ஆனா கத்திரி போட்டிருவாங்களேன்னு ஏமாற்றமா இருக்கு..!

    ReplyDelete
  47. [[[பித்தன் said...

    //ஒரு பொண்ணு சொல்லுச்சு ‘சரத்குமார்’ன்னு.. எனக்கு பயங்கர ஷாக்கு.. எப்படிங்க இது..? அடுத்து அந்தப் பொண்ணுகிட்ட ‘சரத்குமாரை ஏன் பிடிக்குது’ன்னு கேட்டா ‘அவர் நல்லா பண்ணுவாரு’ன்னுச்சு.. சரத் நல்லாப் பண்ணுவாராம். எனக்குத் தாங்க முடியல.//

    athaane atha saraththoda munnaal manaiviyo, radhigaavothaane solla mudiyum eppadi intha ponnu solluchchi. Something somewhere wrong.]]]

    -)))))))))))))

    ReplyDelete
  48. [[[நா.மணிவண்ணன் said...
    இன்னொரு கோடம்பாக்கம் divorse ஸ்டார்ட் ஆகிடிச்சு.]]]

    ஆகவே ஆகாது..!

    ReplyDelete
  49. இந்த தடவை உங்களுக்குப் பின்னுட்டம் கிடையாது.பரீசீலனைக்கு மட்டும் ஒன்று.

    நிறைய நிகழ்ச்சிகள்,அதன் தொகுப்பெல்லாம் முடிந்தவரை சொல்றீங்க.(ஒருத்தன் சினிமா பார்த்துட்டு பத்துபேருக்கு கதை சொல்றமாதிரி:))

    சோனி,பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் வாய்ஸ் ரெக்கார்டர் நீண்ட நேரத்துக்கு பதிவு செய்றமாதிரி தயாரிக்கிறாங்க.நிகழ்ச்சிக்குப் போகும் போது பாக்கெட்ல இல்லேன்னா மேடைல வச்சுட்டா இடுகைக்கு முழு விசயமும் கிடைச்சமாதிரியிருக்கும்.பதிவும் இன்னும் கொஞ்சம் நீளமாக்கிடலாம்:)

    ReplyDelete
  50. நானே என்னுள் இல்லை அண்ணே இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதுங்க அண்ணே ...

    ReplyDelete
  51. சரவணன் தொடர்ச்சியாக வியக்க வைத்துக் கொண்டுருக்கீங்க. தொடருங்கள்.

    ReplyDelete
  52. [[[ராஜ நடராஜன் said...

    இந்த தடவை உங்களுக்குப் பின்னுட்டம் கிடையாது. பரீசீலனைக்கு மட்டும் ஒன்று.

    நிறைய நிகழ்ச்சிகள், அதன் தொகுப்பெல்லாம் முடிந்தவரை சொல்றீங்க. (ஒருத்தன் சினிமா பார்த்துட்டு பத்து பேருக்கு கதை சொல்ற மாதிரி:))

    சோனி, பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் வாய்ஸ் ரெக்கார்டர் நீண்ட நேரத்துக்கு பதிவு செய்ற மாதிரி தயாரிக்கிறாங்க. நிகழ்ச்சிக்குப் போகும்போது பாக்கெட்ல இல்லேன்னா மேடைல வச்சுட்டா இடுகைக்கு முழு விசயமும் கிடைச்ச மாதிரியிருக்கும்.பதிவும் இன்னும் கொஞ்சம் நீளமாக்கிடலாம்:)]]]

    நல்ல ஐடியா ஸார்.. நிச்சயமா வாங்கிர்றேன்.. அடுத்த நிகழ்ச்சில இருந்து ஜமாய்ச்சுடலாம்.

    ReplyDelete
  53. [[[♥ RomeO ♥ said...
    நானே என்னுள் இல்லை அண்ணே இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதுங்க அண்ணே ...]]

    சான்ஸே இல்லை.. பார்க்கவே மாட்டேன்..!

    ReplyDelete
  54. [[[ராம்ஜி_யாஹூ said...
    paarvaiyaalan's pinnotam is excelent]]]

    ஆஹா... கொடுத்து வைச்சவர் பார்வையாளன்.. உங்ககிட்டேயிருந்து பாராட்டுன்னா ச்சும்மாவா?

    ReplyDelete
  55. [[[ஜோதிஜி said...
    சரவணன் தொடர்ச்சியாக வியக்க வைத்துக் கொண்டுருக்கீங்க. தொடருங்கள்.]]]

    நன்றிங்கண்ணே..

    ReplyDelete
  56. ஒரு நாலாந்தர பெண் எப்படி பொது நிகழ்வுகளில் நடந்துக்கொள்ளவேண்டுமோ.. அப்படி நடந்திருக்கிறார். இதில் ஆச்சர்யபடவோ.. விளக்கிபேசவோ நாம் தேவையில்லை.. உண்மைத்தமிழன்.. நீங்கள் சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் அப்பாவி கைதிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதன் காரணமாக உங்கள் மீது அபரிதமான மரியாதை உண்டு. அசிங்ககளை நீங்கள் விளக்கி எழுதவேண்டியதில்லை என்பது தாழ்மையான கருத்து

    ReplyDelete
  57. [[[raja said...

    ஒரு நாலாந்தர பெண் எப்படி பொது நிகழ்வுகளில் நடந்து கொள்ள வேண்டுமோ.. அப்படி நடந்திருக்கிறார். இதில் ஆச்சர்யபடவோ.. விளக்கிப் பேசவோ நாம் தேவையில்லை.. உண்மைத்தமிழன்.. நீங்கள் சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் அப்பாவி கைதிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதன் காரணமாக உங்கள் மீது அபரிதமான மரியாதை உண்டு. அசிங்ககளை நீங்கள் விளக்கி எழுதவேண்டியதில்லை என்பது தாழ்மையான கருத்து.]]]

    நண்பரே..

    ராதிகா, எப்பவுமே இப்படி பேசுபவர் இல்லை. அன்றைக்குத்தான் ஏனோ அப்படி பேசிவிட்டார். காரணம்தான் தெரியவில்லை..

    அவர் எப்போதுமே அப்படித்தான் என்று நீங்கள் தவறாக அர்த்தம் கொண்டுவிட்டீர்கள்..!

    ReplyDelete