Pages

Thursday, August 19, 2010

மக்கள் பணத்துல இப்படியா திம்பானுங்க இந்த நாதாரிங்க..?


19-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எவ்வளவுதான் திட்டினாலும் நம்ம அரசியல்வியாதிகளுக்கு உரைக்கவே மாட்டேங்குது.. எருமை மாட்டு மேல கல்லெறிஞ்ச மாதிரி.. “நீ என்ன வேண்ணாலும் செஞ்சுக்க.. சொல்லிக்க.. திட்டிக்க.. நாங்க அப்படித்தான் ஊர்க் காசுலதான் ஊர் மேய்வோம்” என்கிறார்கள் இவர்கள்.

எதுல, எதுலதான் திருடுறதுன்னு விவஸ்தையே இல்லாம போயிருச்சு இவனுகளுக்கு.. சுதந்திர தினம், குடியரசு தினத்துல நமக்கு ஒரு நாள் லீவை கொடுத்திட்டு, நம்ம காசுல இவனுக விருந்து வைச்சு கொண்டாடுறானுக பாருங்க..

இன்னிக்கு வந்த ஜூனியர் விகடன்ல இந்தக் கட்டுரையைப் படிச்சவுடனேயே பி.பி. உச்சத்துக்குப் போயிருச்சு.. ஒரு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சுத்தான் பி.பி.யை குறைச்சேன்.. நீங்களும் படிச்சுப் பாருங்க..

இனி ஜூனியர் விகடன் கட்டுரை..

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியும் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சிகள், சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தில் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த தினங்களில் மத்திய அரசில் ஜனாதிபதியும், மாநில அரசுகளில் கவர்னரும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள்.

எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்தது என்பது தெரியவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலில் இந்த விருந்து நிகழ்ச்சிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இந்த தேநீர் விருந்துகளை கூட்ட “இது எதற்கு? இதனால் என்ன பயம்..? இதற்காக எவ்வளவு செலவு?” என்ற கேள்விகளுடன் கவர்னர் மாளிகையையும், கோட்டையையும் ஆராய்ந்தோம்.

தமிழகத்தில் பரந்து விரிந்து கிடக்கும் கவர்னர் மாளிகையின் பெரிய புல்வெளியில் தேநீர் விருந்து. இதற்காக கவர்னர் மாளிகையை மலர் மற்றும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க வைத்தார்கள். புல்வெளியில் வட்ட வடிவில் போடப்பட்ட மேஜைகளில் விருந்து நிகழ்ச்சி நடைபெற.. நடுநாயகமாக கவர்னரும், முதல்வரும் பங்கேற்பார்கள்.

மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், பிரபலங்கள் என்று 48 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருந்துக்கான அழைப்பு போகும்.

தேநீர் விருந்து என்றதும் வெறும் டீ, காபி என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. குளிர்பானம், காஜர் அல்வா, சாக்லேட் பிரெளனி, ஜிலேபி, பிஸ்தா கேசரி போன்ற இனிப்பு வகைகளும், டால் கச்சோரி, வெங்காயம் மற்றும் தக்காளி சட்னியுடன் கூடிய ச்சீஸ் க்ராய்சன்ட், புளிச் சட்னியுடன் கூடிய சமூசா, மின்ட் சட்னியுடன் கூடிய டோக்லா போன்ற கார வகைகளோடு வெண்ணிலா ஐஸ்கிரீம், டீ, காபி போன்ற அயிட்டங்கள் அனைத்தும் பரிமாறப்படும். இந்த அயிட்டங்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஆர்டர் செய்யப்படும். 3000 பேருக்கு விருந்து ஆர்டர் செய்வார்கள்.

இந்த விருந்துக்கான செலவுகளை தமிழக அரசின் பொதுத்துறைதான் பொறுப்பேற்றுச் செய்கிறது. அழைப்பிதழ் அச்சடித்தல் தொடங்கி, விருந்து முடியும்வரையில் உள்ள எல்லா ஏற்பாடுகளும் இவர்கள் பொறுப்புதான். நடனக் கலைஞர்களுக்குப் பொன்னாடை, பரிசுப் பொருட்கள், மேடை அலங்காரம், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஊதியம், போக்குவரத்துச் செலவு, ஊக்கத் தொகை, தற்காலிகப் பணியாளர்களுக்குத் தினக்கூலி என்று விருந்துக்காக நிறைய செலவாகும்.

கடந்தாண்டுக்கான சுதந்திரம் மற்றும் குடியரசு தின விருந்துக்காக தலா 3000 அழைப்பிதழ்கள் அச்சாயின. அரசு அச்சகத்தில் அச்சானாலும் இதற்காக 34 ஆயிரத்து 503 ரூபாய் செலவானது. இவற்றை விநியோகம் செய்வதற்காக 10,836 ரூபாய் செலவாகியிருக்கிறது.

கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சாவூரில் இருக்கும் தென்னகப் பண்பாட்டு மையம் செய்யும். கடந்தாண்டு இந்த நிகழ்ச்சிகளுக்காக மட்டும் 1,72,960 ரூபாய் ஒதுக்கப்பட்டது. அப்போது தேநீர் விருந்துக்காக ஜி.ஆர்.டி.கிராண்ட் ஹோட்டலில் உணவுப் பொருட்கள் ஆர்டர் தரப்பட்டது.

இப்படி கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு 4,92,225 ரூபாயும், குடியரசு தினத்துக்கு 5,98,619 ரூபாயும் செலவாகியிருக்கிறது.

1994 முதல் 2009-ம் ஆண்டு வரை ஒவ்வொரு வருட சுதந்திர தின தேநீர் விருந்துக்காகவும் செலவழிக்கப்பட்ட ஒட்டு மொத்தத் தொகை 75,93,000 ரூபாய்.

இதே போல குடியரசு தின விருந்து செலவு 75,75,000 ரூபாய். இரண்டையும் சேர்த்தால் கடந்த 16 ஆண்டுகளில் 1,51,71,265 ரூபாய் செலவாகியுள்ளது.

ஆண்டு வாரியாக செலவழிக்கப்பட்ட தொகையைப் பாருங்கள்..

ஆண்டு        -           சுதந்திர தினச் செலவு       -         குடியரசு தினச் செலவு
 
1994               -                     1,05,702                 -                      97,660
 
1995                -                    1,98,609                 -                    1,28,359
 
1996                -                    6,29,643                 -                    4,70,115
 
1997                -                    6,85,866                 -                    6,01,452
 
1998                -                    7,71,003                 -                    6,06,399
 
1999                -                    6,08,732                 -                    7,43,266
 
2000                -                    6,94,306                 -                    7,72,607

2001                -                    5,35,712                 -                    8,61,075

2002                -                    4,39,712                 -                    5,47,154
 
2003                -                    4,33,274                 -                    5,03,654
 
2004                -                                                   -                    1,87,563
 
2005                -                     4,22,648                -
 
2006                -                     3,52,441                -                    4,96,621
 
2007                -                     5,38,026                -                     5,74,887
 
2008                -                     6,86,005                -                     5,87,230
 
2009                -                     4,92,225                -                     5,98,919

இனி நான்..

யாரோ ஒரு புண்ணியவான் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் இந்த விவரங்களைப் பெற்றிருக்கிறார் போலிருக்கிறது..

பாருங்க.. இந்த அரசியல் வியாதிகளுக்கு மூணு மணி நேரம் உக்காந்து டீ சாப்பிடுற செலவு 7 லட்சம் ரூபாய்ன்னா நாடு என்னங்க ஆகுறது..?

இவனுக சொந்தக் காசுன்னு இப்படி செலவு செய்வானுகளா..? கொஞ்சமாவது யோசிக்க மாட்டானுங்களா இந்தக் கஸ்மாலங்க..? டீ, காபி, பிஸ்கட்ன்னு முடிச்சிட்டுப் போறதை விட்டுட்டு பிஸ்தா கேசரி வேணுமாம்ல இந்த அயோக்கிய ராஸ்கல்களுக்கு..?

ஊனமுற்றவர்களுக்கு உதவித் தொகையாக கொடுப்பது மாதம் வெறும் 300 ரூபாய்.. ஆதரவற்ற விதவைகளுக்கு உதவித் தொகையாக வழங்குவது மாதம் வெறும் 400 ரூபாய்.. வேலையற்ற இளைஞர்களுக்குக் கொடுக்கும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்று 'அள்ளி' வழங்குகின்ற இந்த அயோக்கியர்கள்தான், ஒரு நாளில் முழுங்குவதற்கு மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் பணத்தில் செலவு செய்கிறார்கள்.

வேலையற்ற இளைஞர்கள் 200 ரூபாயை வைத்து ஒரு மாதத்தில் என்ன செலவு செய்துவிடுவார்கள்..? ஆதரவற்ற விதவைகள் 400 ரூபாயில் குடும்பம் நடத்தி விடுவார்களா..? உடல் ஊனமுற்றவர்கள் 300 ரூபாயில் தங்களுடைய உடல் உபாதைகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்வார்களா..?  இதையெல்லாம் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டார்களா..? 

சொந்த வீட்டில் இருந்தாலும் அதற்காக வாடகைப் படியையும், வெள்ளையடிக்க.. வீட்டின் பரமாரிப்பு, சோபா செட்டுக்களை வாங்கிப் போட என்று மக்கள் பணத்தில் கை வைத்து சுரண்டியெடுக்கும் இந்தக் கேடு கெட்டவர்களை என்னவென்றுதான் சொல்வது..?

3000 பேரை கூப்பிடுறோம்.. அதுனால.. என்று இழுக்காதீங்கடா பரதேசிகளா.. பன்னாடைகளா..? உங்களை எவன்டா இப்போ பார்ட்டி வைச்சு கொண்டாடச் சொன்னான்..?

இந்தியால அரசியல்வியாதிகளுக்கு மட்டும்தான் சுதந்திரம்.. மக்களுக்கு இல்லைன்றதுதான் உலகத்துக்கே நல்லாத் தெரியுமே.. அதான் காலைல ஊர்வலம் நடத்தி, கொடியேத்தி நீங்களே கொண்டாடிக்கிறீங்களே.. அந்தச் செலவு பத்தாதா..? வட்டமா உக்காந்து தின்னு வேற எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கணுமா?

நாசமாப் போகப் போறீங்கடா.. 

72 comments:

  1. ரொம்ப சூடாயிட்டிங்க போல!!

    ReplyDelete
  2. அண்ணே,

    இதில் என்ன வேடிக்கை என்றால்... உங்கள் தலைவர் அம்மா ஜெவின் ஆட்சியில் இந்த செலவுகள் குறைவு...

    காரணம் உங்களுக்கு புரியாமல் இருக்காது...

    1994-95இல் ஜெவிடம் தவறாக நடந்து கொண்டதாக ஜெவால் சொல்லப்பட்ட டாக்டர் சென்னா ரெட்டி கவர்னராக இருந்த காரணத்தால் பார்ட்டிக்கு உங்கள் ஜெ... கட்சிகாரர்கள் செல்லாத காரணத்தாலும்... பின்னர் 2005இல் பர்னாலா கவர்னராக இருந்தால் உங்க ஜெ... கட்சி ஆட்கள் போகாததாலும் பார்ட்டி டல்...

    அதற்காக இந்த மக்கள் பணத்தை சாப்பிடும் பார்ட்டிகளை ஆதரிக்க முடியாது... இதெல்லாம் வெள்ளைக்காரன் செய்ததை தொடரும் அவலம்...

    மற்றபடி நவீன் சாவ்லா மூலம்... 1999இல் நடந்தது போல் இன்னொரு டி பார்ட்டி ஏற்பாடு செய்து... உங்க அம்மாவும்... இத்தாலி அன்னையும்... இத்தாலி அன்னையின் பிள்ளை ரோகுலும் கலந்தால்... உங்களை போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்...

    இந்தியாவில் பார்ப்பன ஆதிக்க விஷ நச்சுகளுக்கு மட்டுமே சுதந்திரம் சொந்தம்... உங்களை போன்றவர்கள் எப்படி பார்ப்பனீயத்திற்கு அடிவருடினாலும்... அடிமைகள்தான்...

    பாவம்... முடியும் வரை... பார்ப்பனீயத்திற்கும்... பார்ப்பன ஜெவுக்கும் பல்லக்கு தூக்கி கொண்டே இருங்கள் அண்ணே...

    உங்கள் ஹிந்தியாவே நாசமா போய் அற்ப ஆயுசியில் இருக்குது அண்ணே...

    கேடு கெட்ட ஹிந்தியாவை தொங்கி கொண்டு யாரை நாசமா போக சொல்கிறீர்கள் என தெரியவில்லை...

    ReplyDelete
  3. //நாசமாப் போகப் போறீங்கடா.. //

    நான் என்னண்ணே பன்னினேன்?? எல்லாம் இந்த இராமசாமிதாண்ணே!!

    ReplyDelete
  4. ஹாலிவுட் பாலா said...

    //நாசமாப் போகப் போறீங்கடா.. //

    நான் என்னண்ணே பன்னினேன்?? எல்லாம் இந்த இராமசாமிதாண்ணே!!
    ---
    ஆருண்ணே அது இராமசாமி :)

    ReplyDelete
  5. எத்தனை திட்டினாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க......

    சூடு, சுரணை போனப்பறம் தானே அரசியலுக்கே வாராங்க....

    விடுங்கண்ணே.....சனநாயகத்தில இதெல்லாம் சகசம்.....

    ReplyDelete
  6. வருடத்தில் இரண்டு பார்ட்டிக்கள் அதுவும் கொண்டாட்டத்தில் சில லட்சங்கள் செலவு ஒன்றும் பெரிதாக தவறில்லை என தோன்றுகிறது.

    இதில் எப்படியும் சில ஆயிரம் பேர்களாவது கலந்து கொண்டிருப்பார்கள்.

    எவ்வளவோ அனாவசிய வீண் செலவு செய்வதை விட்டுவிட்டு இதை பெரிது படுத்துவது தேவையில்லை என படுகிறது

    :(

    ReplyDelete
  7. நானும் அந்த கட்டுரையை படித்தேன்... இந்த ஆடம்பர செலவு தேவையா என்றும் யோசித்தேன்...

    ReplyDelete
  8. <<<
    இந்தியால அரசியல்வியாதிகளுக்கு மட்டும்தான் சுதந்திரம்.. மக்களுக்கு இல்லைன்றதுதான் உலகத்துக்கே நல்லாத் தெரியுமே.. அதான் காலைல ஊர்வலம் நடத்தி, கொடியேத்தி நீங்களே கொண்டாடிக்கிறீங்களே.. அந்தச் செலவு பத்தாதா..? வட்டமா உக்காந்து தின்னு வேற எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கணுமா?
    >>>

    இது என்ன ஆச்சிரியம், இன்னும் ஒவ்வொன்னா ஆராய போனா ஏன்டா நாம டாக்ஸ் கட்டனும்னு தோனும். படுச்சவுடன் அப்படி ஒரு வயித்தெரிச்சலா இருக்கு...

    பாத்துன்னே... இப்பவுலாம் பிளாக்லாம் ரெம்ப கண்கானிக்கபடுதாம், சூசனமா இருந்துக்கங்க :)

    ReplyDelete
  9. இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சி மிகவும் அவசியமானது.
    இதில் கலந்து கொள்வதால் அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் இடையே உள்ள இடைவெளி குறைந்து நெருக்கம் ஏற்படும்.
    இது போன்ற பல விழாக்கள் மூலமாக பல சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு பஸ் வசதி, பலி வசதி போன்றவற்றை அமைச்சர்கள் மூலம் கேட்டு பெற்றுள்ளனர்.

    பத்திரிக்கைகள் எதிர்மறை எண்ணங்களுடனே எல்லாவற்றையும் அணுகுகின்றன. நீங்களும் அடுத்தவரை குறை கூறல், எதிர் மறை எண்ணம் கொண்டு வாழாதீர்கள். வாழ்வில் முன்னேறி வருவது கடினம்..

    Please change the habit of finding fault on others. Finding fault, blaming others r the easiest jobs in the world.

    ReplyDelete
  10. ராம்ஜி யை வழி மொழிகிறேன்...

    குடிகாரர்களுக்கு ராவாக குடிக்க ஒரு காரணம்....

    ப்ளாகர்களுக்கு எழுத ஒரு பதிவு... என இல்லாமல் நிஜமாகவே ஒரு சீரியஸான பதிவை இட்டால் நலம்

    ReplyDelete
  11. [[[gulf-tamilan said...
    ரொம்ப சூடாயிட்டிங்க போல!!]]]

    ரொம்ப.. ரொம்ப..

    இதையெல்லாம் படிச்சிட்டு சூடாகாம எப்படி இருக்க முடியும்..?

    ReplyDelete
  12. //1994 முதல் 2009-ம் ஆண்டு வரை ஒவ்வொரு வருட சுதந்திர தின தேநீர் விருந்துக்காகவும் செலவழிக்கப்பட்ட ஒட்டு மொத்தத் தொகை 75,93,000 ரூபாய்.

    இதே போல குடியரசு தின விருந்து செலவு 75,75,000 ரூபாய். இரண்டையும் சேர்த்தால் கடந்த 16 ஆண்டுகளில் 1,51,71,265 ரூபாய் செலவாகியுள்ளது.

    ///
    அட பாவிகளா 'சுதந்திரமா' முழுன்குரானுக்ளா ???.... எனக்கும் பீ பீ எகிறுது,, குவாட்டர் பிளீஸ்....................

    ReplyDelete
  13. [[[தமிழ் குரல் said...

    அண்ணே, இதில் என்ன வேடிக்கை என்றால் உங்கள் தலைவர் அம்மா ஜெவின் ஆட்சியில் இந்த செலவுகள் குறைவு. காரணம் உங்களுக்கு புரியாமல் இருக்காது...

    1994-95-ல் ஜெவிடம் தவறாக நடந்து கொண்டதாக ஜெவால் சொல்லப்பட்ட டாக்டர் சென்னா ரெட்டி கவர்னராக இருந்த காரணத்தால் பார்ட்டிக்கு உங்கள் ஜெ கட்சிகாரர்கள் செல்லாத காரணத்தாலும் பின்னர் 2005இல் பர்னாலா கவர்னராக இருந்தால் உங்க ஜெ கட்சி ஆட்கள் போகாததாலும் பார்ட்டி டல்...

    அதற்காக இந்த மக்கள் பணத்தை சாப்பிடும் பார்ட்டிகளை ஆதரிக்க முடியாது. இதெல்லாம் வெள்ளைக்காரன் செய்ததை தொடரும் அவலம்...

    மற்றபடி நவீன் சாவ்லா மூலம்... 1999இல் நடந்தது போல் இன்னொரு டி பார்ட்டி ஏற்பாடு செய்து... உங்க அம்மாவும்... இத்தாலி அன்னையும்... இத்தாலி அன்னையின் பிள்ளை ரோகுலும் கலந்தால்... உங்களை போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்...

    இந்தியாவில் பார்ப்பன ஆதிக்க விஷ நச்சுகளுக்கு மட்டுமே சுதந்திரம் சொந்தம். உங்களை போன்றவர்கள் எப்படி பார்ப்பனீயத்திற்கு அடிவருடினாலும் அடிமைகள்தான்.

    பாவம். முடியும் வரை பார்ப்பனீயத்திற்கும் பார்ப்பன ஜெவுக்கும் பல்லக்கு தூக்கி கொண்டே இருங்கள் அண்ணே...

    உங்கள் ஹிந்தியாவே நாசமா போய் அற்ப ஆயுசியில் இருக்குது அண்ணே. கேடு கெட்ட ஹிந்தியாவை தொங்கி கொண்டு யாரை நாசமா போக சொல்கிறீர்கள் என தெரியவில்லை...]]]

    தமிழ்க்குரல்..!

    தி.மு.க.வையும், கருணாநிதியையும் எதிர்த்தால் அவர் ஜெயலலிதாவின் ஆள் என்று நினைக்கும் பொதுபுத்தியான உடன்பிறப்பாக நீங்கள் இருக்கின்றவரையில் உங்களுடன் பேசி புண்ணியமில்லை..!

    தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுபட்டு கொள்ளையடித்தோர் பட்டியலில் இரண்டு பேர் முன்னணியில் இருக்கிறார்கள்.. ஒருவர் கருணாநிதி. அடுத்த இடத்தில் சந்தேகமேயில்லாமல் இருப்பவர் ஜெயலலிதாதான்..!

    இதையெல்லாம் எத்தனை பதிவுகளில் எழுதினாலும் உங்களது கண்ணுக்கு இது மட்டும் மறைந்து போய் "நான் அம்மா ஆளு" என்றுதான் தெரியும்..

    காமாலை கண்ணல்லவா..? அதான்..

    ReplyDelete
  14. அண்ணே...

    விடுங்க இந்த நாய்கள் பிணத்தின் வாயில் இருக்கும் அரிசியைகூட நோண்டி தின்கும் பிணம் தின்னி கருமங்கள்....

    இவர்கள் குடும்பம் நாசமாக போகவேண்டும்.

    ReplyDelete
  15. [[[ஹாலிவுட் பாலா said...

    //நாசமாப் போகப் போறீங்கடா.. //

    நான் என்னண்ணே பன்னினேன்?? எல்லாம் இந்த இராமசாமிதாண்ணே!!]]]

    இதுதான் தமிழன் புத்தி..! நான் ஒண்ணும் செய்யலை.. எனக்கு முன்னாடி இருந்தவன் செஞ்சு வைச்சிட்டுப் போயிருக்கான்.. நான் உக்காந்தே சாப்பிட்டுட்டிருக்கேன்.. இதைத்தான் அத்தனை அரசியல்வியாதியான தமிழனும் சொல்லிச் சொல்லித் தின்னுக்கி்ட்டிருக்கான்..!

    ReplyDelete
  16. [[[இராமசாமி கண்ணண் said...

    ஹாலிவுட் பாலா said...

    //நாசமாப் போகப் போறீங்கடா.. //

    நான் என்னண்ணே பன்னினேன்?? எல்லாம் இந்த இராமசாமிதாண்ணே!!
    ---
    ஆருண்ணே அது இராமசாமி :)]]]

    அப்போ அது நீங்க இல்லியா..?

    நீங்கதான்னு நினைச்சு நான் சந்தோஷத்துல இருந்தேன்..

    பை தி பை.. ஏன் மீ தி பர்ஸ்ட் போடலை..! ரொம்ப வேலையோ..?

    ReplyDelete
  17. [[[ஆரூரன் விசுவநாதன் said...

    எத்தனை திட்டினாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க......

    சூடு, சுரணை போனப்பறம் தானே அரசியலுக்கே வாராங்க....

    விடுங்கண்ணே.....சனநாயகத்தில இதெல்லாம் சகசம்.....]]]

    ம்.. என்னத்த சொல்றது விச்சு..? எவ்ளோ அடிச்சாலும், அடி வாங்காத மாதிரியே திரியறானுங்க பாருங்க..!

    ReplyDelete
  18. [[[யாசவி said...

    வருடத்தில் இரண்டு பார்ட்டிக்கள் அதுவும் கொண்டாட்டத்தில் சில லட்சங்கள் செலவு ஒன்றும் பெரிதாக தவறில்லை என தோன்றுகிறது.
    இதில் எப்படியும் சில ஆயிரம் பேர்களாவது கலந்து கொண்டிருப்பார்கள்.
    எவ்வளவோ அனாவசிய வீண் செலவு செய்வதை விட்டுவிட்டு இதை பெரிது படுத்துவது தேவையில்லை என படுகிறது
    :(]]]

    வருஷத்துக்கு ரெண்டு நாள்தான்.. ஆனால் அதுவே வீண்தானே.. அவங்க சொந்தக் காசை பயன்படுத்தலாமே.. எதுக்கு எங்க வீட்டுக் காசு..?

    இதுவும் ஒரு அனாவசியமான செலவுதான்..!

    ReplyDelete
  19. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    நானும் அந்த கட்டுரையை படித்தேன். இந்த ஆடம்பர செலவு தேவையா என்றும் யோசித்தேன்.]]]

    -))))))))))))

    ReplyDelete
  20. [[[..:: Mãstän ::.. said...

    <<>>

    இது என்ன ஆச்சிரியம், இன்னும் ஒவ்வொன்னா ஆராய போனா ஏன்டா நாம டாக்ஸ் கட்டனும்னு தோனும். படுச்சவுடன் அப்படி ஒரு வயித்தெரிச்சலா இருக்கு...
    பாத்துன்னே. இப்பவுலாம் பிளாக்லாம் ரெம்ப கண்கானிக்கபடுதாம், சூசனமா இருந்துக்கங்க :)]]]

    மஸ்தான் கரிசனத்திற்கு மிக்க நன்றி..!

    ஏதாவது ஒண்ணுன்னா.. அதான் நீங்க இருக்கீங்களே..! ஓடி வர மாட்டீங்களா அப்படீன்ற தைரியம்தான்..!

    ReplyDelete
  21. [[[ராம்ஜி_யாஹூ said...

    இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சி மிகவும் அவசியமானது.
    இதில் கலந்து கொள்வதால் அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் இடையே உள்ள இடைவெளி குறைந்து நெருக்கம் ஏற்படும். இது போன்ற பல விழாக்கள் மூலமாக பல சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு பஸ் வசதி, பலி வசதி போன்றவற்றை அமைச்சர்கள் மூலம் கேட்டு பெற்றுள்ளனர்.
    பத்திரிக்கைகள் எதிர்மறை எண்ணங்களுடனே எல்லாவற்றையும் அணுகுகின்றன. நீங்களும் அடுத்தவரை குறை கூறல், எதிர் மறை எண்ணம் கொண்டு வாழாதீர்கள். வாழ்வில் முன்னேறி வருவது கடினம்..

    Please change the habit of finding fault on others. Finding fault, blaming others r the easiest jobs in the world.]]]

    ராம்ஜி.. காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்..!

    இந்த மாதிரி ஊர்க்காசுல கூட்டம் போட்டு பேசித்தான் இவனுக நமக்கு நல்லது செய்றானுகளாக்கும்..!

    அடப் போங்கண்ணே..!

    ReplyDelete
  22. [[[sivakasi maappillai said...

    ராம்ஜியை வழி மொழிகிறேன்...

    குடிகாரர்களுக்கு ராவாக குடிக்க ஒரு காரணம்....

    ப்ளாகர்களுக்கு எழுத ஒரு பதிவு... என இல்லாமல் நிஜமாகவே ஒரு சீரியஸான பதிவை இட்டால் நலம்.]]]

    இது ரொம்ப சீரியஸான மேட்டர் சிவகாசி மாப்ளை..!

    நாட்டு பிரச்சினையை பத்தி எழுதினா அள்ளிட்டுப் போகட்டுமேன்னு சொல்றீங்க.. ஒண்ணும் புரியலை..!

    ReplyDelete
  23. [[[பிரபா said...

    //1994 முதல் 2009-ம் ஆண்டுவரை ஒவ்வொரு வருட சுதந்திர தின தேநீர் விருந்துக்காகவும் செலவழிக்கப்பட்ட ஒட்டு மொத்தத் தொகை 75,93,000 ரூபாய். இதே போல குடியரசு தின விருந்து செலவு 75,75,000 ரூபாய். இரண்டையும் சேர்த்தால் கடந்த 16 ஆண்டுகளில் 1,51,71,265 ரூபாய் செலவாகியுள்ளது.

    //அட பாவிகளா 'சுதந்திரமா' முழுன்குரானுக்ளா ???.... எனக்கும் பீ பீ எகிறுது,, குவாட்டர் பிளீஸ்.]]]

    சீக்கிரமா "பெரிய" குடும்பத்துல யாரையாவது புடிச்சு எம்.எல்.ஏ. சீட்டு வாங்கிருங்க.. அடுத்த தபா அங்க போய் உக்காந்தே குடிக்கலாம்..!

    ReplyDelete
  24. ''
    மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், பிரபலங்கள் என்று 48 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருந்துக்கான அழைப்பு போகும்."


    இந்த அரசியல் வியாதிகளுக்கு மூணு மணி நேரம் உக்காந்து டீ சாப்பிடுற செலவு 7 லட்சம் ரூபாய்ன்னா நாடு என்னங்க ஆகுறது..?


    ellaarum arasiyalviyaadhikal illaiyee ingku.

    ReplyDelete
  25. ///எவ்வளவுதான் திட்டினாலும் நம்ம அரசியல்வியாதிகளுக்கு உரைக்கவே மாட்டேங்குது.. எருமை மாட்டு மேல கல்லெறிஞ்ச மாதிரி..///
    எருமை மேல மழை பேஞ்ச மாதிரின்னு சொல்வாங்க...
    எமனோட வாகனம் எருமை'ன்னு அவங்களுக்கும் தெரியும்தானே....!!!!

    ReplyDelete
  26. வொய் ப்ளட் இதுக்கே இப்படி திட்டினா எப்படி இது டீ காசுதானே இன்னும் விமானம், ஊர் சுற்றுதல் எல்லாம் கேட்டீங்கன்னா ரொம்ப சூடாயிடுவீங்க. இந்த ஈர வெங்காய மேட்டர விட்டுட்டு பேசாம நல்ல விதமா எக்சாம் எழுதி பாசாகுற வழியப் பாருங்க.

    ReplyDelete
  27. எவ்வளவு அவமான பட்டாலும் கருணாநிதி குடும்பத்துக்கு சொம்பு தூக்கியே நாசமாப்போன தமிழ்குரல் போன்றவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்

    ReplyDelete
  28. அன்பிற்கினிய அண்ணனே..,


    / /...இன்னிக்கு வந்த ஜூனியர் விகடன்ல இந்தக் கட்டுரையைப் படிச்சவுடனேயே பி.பி. உச்சத்துக்குப் போயிருச்சு.. ஒரு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சுத்தான் பி.பி.யை குறைச்சேன்.. நீங்களும் படிச்சுப் பாருங்க../ /


    ஒரு பெரியமனுசன் இப்படியெல்லாம் பேசக்கூடாது..

    எல்லோருக்கும் தேவையான பதிவு.

    நன்றி..,
    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
    அன்புடன் ச.ரமேஷ்.

    ReplyDelete
  29. ஹிஹி. இது மட்டுமா? ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் இதற்காகும் செலவெல்லாம் எந்த கணக்குல? அது போகும் பல கோடி ரூயாய். மொத்த பணத்துல வருசத்துக்கு கல்விக்குன்னு மானியமா கொடுத்திருந்தாலே நல்ல கட்டமைப்பு வந்திருக்கும். பண்ண எவ்வளவோ இருக்கு.

    ReplyDelete
  30. [[[தமிழ் உதயன் said...

    அண்ணே... விடுங்க இந்த நாய்கள் பிணத்தின் வாயில் இருக்கும் அரிசியைகூட நோண்டி தின்கும் பிணம் தின்னி கருமங்கள். இவர்கள் குடும்பம் நாசமாக போகவேண்டும்.]]]

    குடும்பம் எதுக்கு..? இவர்களுக்கு மட்டும் தண்டனை கிடைக்க வேண்டும்..!

    ReplyDelete
  31. [[[கள்ளபிரான் said...

    ''மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், பிரபலங்கள் என்று 48 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருந்துக்கான அழைப்பு போகும்."

    இந்த அரசியல் வியாதிகளுக்கு மூணு மணி நேரம் உக்காந்து டீ சாப்பிடுற செலவு 7 லட்சம் ரூபாய்ன்னா நாடு என்னங்க ஆகுறது..?

    ellaarum arasiyalviyaadhikal illaiyee ingku.]]]

    பார்ட்டி நடத்த ஏற்பாடு செய்யறது யாரு.. இவுங்கதானே..?

    பை தி பை கள்ளபிரான்.. நீங்க முன்ன மாதிரி அடிக்கடி வர்றதில்லையே.. ஏனுங்கோ..?

    ReplyDelete
  32. [[[ஆகாயமனிதன்.. said...

    //எவ்வளவுதான் திட்டினாலும் நம்ம அரசியல்வியாதிகளுக்கு உரைக்கவே மாட்டேங்குது.. எருமை மாட்டு மேல கல்லெறிஞ்ச மாதிரி..//

    எருமை மேல மழை பேஞ்ச மாதிரின்னு சொல்வாங்க. எமனோட வாகனம் எருமை'ன்னு அவங்களுக்கும் தெரியும்தானே....!!!!]]]

    அப்படீங்கிறீங்க..? ஓகே.. ஓகே..

    ReplyDelete
  33. பின்ன எதுக்கு நாம அரசியலுக்கு வரோம்? உண்டு கழித்து உறங்க தானே!

    ReplyDelete
  34. அண்ணே. உங்களுக்கு எதிரா சதி. வீ. ஏ. ஓ விண்ணப்ப படிவத்துல , அரசியல் ஈடுபாடு , போராட்டம் குறித்து கேட்டு இருக்காய்ங்களாம் . பார்த்து சூதானமா ஃபில் அப் செஞ்சு அனுப்புங்க

    ReplyDelete
  35. //விடுங்கண்ணே.....சனநாயகத்தில இதெல்லாம் சகசம்.....//

    Mr CM learnt politics from Anna and Kamaraj. And then he lowered the bar.

    Ms Jayalalitha is learning politics from Karunanidhi. She lowered it further.

    The rest that learns politics from these two is going to match it with despots of banana republics.

    Who is going to raise the bar?
    It is we.
    It is me.

    ReplyDelete
  36. இதை படியுங்கள் அப்புறம் சொல்லுங்கள்
    ன்றடையும்
    3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்
    http://athiradenews.blogspot.com/2010/08/3.html

    ReplyDelete
  37. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[இராமசாமி கண்ணண் said...

    ஹாலிவுட் பாலா said...

    //நாசமாப் போகப் போறீங்கடா.. //

    நான் என்னண்ணே பன்னினேன்?? எல்லாம் இந்த இராமசாமிதாண்ணே!!
    ---
    ஆருண்ணே அது இராமசாமி :)]]]

    அப்போ அது நீங்க இல்லியா..?

    நீங்கதான்னு நினைச்சு நான் சந்தோஷத்துல இருந்தேன்..

    பை தி பை.. ஏன் மீ தி பர்ஸ்ட் போடலை..! ரொம்ப வேலையோ..?

    Read more: http://truetamilans.blogspot.com/2010/08/blog-post_19.html#ixzz0x3jY9RYi
    ---
    இல்லன்னே உங்க போஸ்ட்ட முத எழுத்துலேந்து கடைசி எழுத்து வரைக்கும் படிச்சு முடிக்கற்துக்குள்ள மூணு பேரு முந்திடாங்க..நான் என்ன பன்ன :)

    ReplyDelete
  38. ///இந்த மாதிரி ஊர்க்காசுல கூட்டம் போட்டு பேசித்தான் இவனுக நமக்கு நல்லது செய்றானுகளாக்கும்..! //

    அப்படிப்போடு...இவனுங்க நல்லது செய்யனும்னா அப்ப தேநீர் விருநது போட்டாட்டாத்தான் நல்லவது செய்வானுங்க,...இல்லன்னா செய்யமாட்டானுங்களா...

    விடுங்கண்ணே....எல்லாத்தையும் ஒருத்தர் பாரத்துட்டுதான் இருக்காரு... நான் உங்களைச்சொன்னேன்...:))

    ReplyDelete
  39. இங்க பின்னூட்டம் எழுதினவங்க எல்லோருக்கும் ஒரு கேள்வி?

    உங்களை இந்த பார்ட்டிக்கு அழைத்தால் போவீங்களா, இல்லையா????

    போய் வேலையை பாருங்கப்பா!!!

    முதல்ல தேர்தல்ல காசும், பிரியாணியும் வாங்காமல் ஓட்டு போடுங்க,அப்புறம் இதற்க்கெல்லாம் தானே ஒரு முடிவு வரும்.

    ReplyDelete
  40. எனக்கென்னவோ நீங்கள் கொஞ்சம் (கொஞ்சமா, ஜாஸ்தின்னு யாரவது சொன்னால் நான் மறுக்க மாட்டேன்) ஓவர் ரியாக்ட் செய்வதாகப் படுகிறது. இது சம்பந்தமான செய்திகள் ஜூனியர் விகடனில் வந்த பிறகுதான் உங்களுக்கு இது போன்ற அரசாங்கம் செய்யும் செலவுகள் பற்றி முதன் முறையாகத் தெரியுமா?

    \\இன்னிக்கு வந்த ஜூனியர் விகடன்ல இந்தக் கட்டுரையைப் படிச்சவுடனேயே பி.பி. உச்சத்துக்குப் போயிருச்சு.. ஒரு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சுத்தான் பி.பி.யை குறைச்சேன்..\\

    பி. பி.க்கு அதான் மருந்தா? இந்த டாக்டருங்க வேற ஏதோ மாத்திரையை எல்லாம் தருகிறார்களே:)

    ReplyDelete
  41. [[[பித்தன் said...
    வொய் ப்ளட் இதுக்கே இப்படி திட்டினா எப்படி இது டீ காசுதானே இன்னும் விமானம், ஊர் சுற்றுதல் எல்லாம் கேட்டீங்கன்னா ரொம்ப சூடாயிடுவீங்க. இந்த ஈர வெங்காய மேட்டர விட்டுட்டு பேசாம நல்ல விதமா எக்சாம் எழுதி பாசாகுற வழியப் பாருங்க.]]]

    உண்மைதான் பித்தன்ஜி.. இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுற மேட்டரெல்லாம் இருக்கு..

    இதுதான் ஆதாரமா கைல சிக்கிருக்கே. அதுனாலதான் எழுதினேன்..!

    இதே தமிழக கிண்டி கவர்னர் மாளிகை பத்தின இன்னொரு நியூஸும் சிக்கிருக்கு.. அதையும் கூடிய சீக்கிரம் போடுறேன்..!

    ReplyDelete
  42. [[[லெனின் said...
    எவ்வளவு அவமானபட்டாலும் கருணாநிதி குடும்பத்துக்கு சொம்பு தூக்கியே நாசமாப் போன தமிழ்குரல் போன்றவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்.]]]

    நானும்தான்..!

    ReplyDelete
  43. [[[S.ரமேஷ். said...

    அன்பிற்கினிய அண்ணனே..,

    //இன்னிக்கு வந்த ஜூனியர் விகடன்ல இந்தக் கட்டுரையைப் படிச்சவுடனேயே பி.பி. உச்சத்துக்குப் போயிருச்சு.. ஒரு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சுத்தான் பி.பி.யை குறைச்சேன்.. நீங்களும் படிச்சுப் பாருங்க../ /

    ஒரு பெரிய மனுசன் இப்படியெல்லாம் பேசக் கூடாது..
    எல்லோருக்கும் தேவையான பதிவு.
    நன்றி..,
    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
    அன்புடன் ச.ரமேஷ்.]]]

    ஆஹா.. என்னவொரு பாசம்..? தம்பி ரமேஷூ தலை வணங்குகிறேன்..!

    அன்பிற்கும், பண்பிற்கும், பாசத்திற்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

    ReplyDelete
  44. [[[வானம்பாடிகள் said...
    ஹிஹி. இது மட்டுமா? ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் இதற்காகும் செலவெல்லாம் எந்த கணக்குல? அது போகும் பல கோடி ரூயாய். மொத்த பணத்துல வருசத்துக்கு கல்விக்குன்னு மானியமா கொடுத்திருந்தாலே நல்ல கட்டமைப்பு வந்திருக்கும். பண்ண எவ்வளவோ இருக்கு.]]]

    மனசில்ல ஸார்.. இந்த அரசியல்வியாதிகளுக்கு மனசே இல்லை. தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் அள்ளுவதற்காகவே தங்களை மக்கள் தேர்ந்தெடுத்ததாக நினைத்துக் கொள்கிறார்கள்..!

    நாமும் இதனை மெளனிகளாக வேடிக்கை பார்க்க வேண்டியதாக இருக்கிறது..!

    ReplyDelete
  45. [[[லேகா பக்க்ஷே said...
    பின்ன எதுக்கு நாம அரசியலுக்கு வரோம்? உண்டு கழித்து உறங்கதானே!]]]

    சரிதான்..! எல்லா நாட்டிலும் இந்தக் கதைதான் போலிருக்கிறது..!

    ReplyDelete
  46. [[[பார்வையாளன் said...
    அண்ணே. உங்களுக்கு எதிரா சதி. வீ. ஏ. ஓ விண்ணப்ப படிவத்துல , அரசியல் ஈடுபாடு, போராட்டம் குறித்து கேட்டு இருக்காய்ங்களாம் . பார்த்து சூதானமா ஃபில் அப் செஞ்சு அனுப்புங்க.]]]

    ஆமாம்.. இருநதுச்சு நண்பரே.. சூதானமா எழுதியனுப்பியிருக்கேன்..!

    ReplyDelete
  47. [[[Indian said...
    //விடுங்கண்ணே.....சனநாயகத்தில இதெல்லாம் சகசம்.....//

    Mr CM learnt politics from Anna and Kamaraj. And then he lowered the bar. Ms Jayalalitha is learning politics from Karunanidhi. She lowered it further. The rest that learns politics from these two is going to match it with despots of banana republics. Who is going to raise the bar? It is we. It is me.]]]

    சரியாச் சொன்னீங்க இந்தியன் ஸார்..!

    ஆனா இவுங்களை விட்டுட்டு வேற ஆளுகளுக்கு ஓட்டுப் போட நம்ம ஆளுகளுக்கு அறிவும் இல்லை.. மனசும் இல்லையே..! நாம என்ன செய்யறது..?

    ReplyDelete
  48. [[[beer mohamed said...

    இதை படியுங்கள் அப்புறம் சொல்லுங்கள்
    ன்றடையும்
    3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்

    http://athiradenews.blogspot.com/2010/08/3.html]]]

    படிக்கிறேன்.. கண்டிப்பா படிக்கிறேன்..!

    ReplyDelete
  49. [[[இராமசாமி கண்ணண் said...

    உண்மைத்தமிழன்(15270788164745573644) said...

    [[[இராமசாமி கண்ணண் said...

    ஹாலிவுட் பாலா said...

    //நாசமாப் போகப் போறீங்கடா..//

    நான் என்னண்ணே பன்னினேன்?? எல்லாம் இந்த இராமசாமிதாண்ணே!!
    ---
    ஆருண்ணே அது இராமசாமி :)]]]
    அப்போ அது நீங்க இல்லியா..?

    நீங்கதான்னு நினைச்சு நான் சந்தோஷத்துல இருந்தேன்..
    பை தி பை.. ஏன் மீ தி பர்ஸ்ட் போடலை..! ரொம்ப வேலையோ..?

    இல்லன்னே உங்க போஸ்ட்ட முத எழுத்துலேந்து கடைசி எழுத்து வரைக்கும் படிச்சு முடிக்கற்துக்குள்ள மூணு பேரு முந்திடாங்க..நான் என்ன பன்ன :)]]]

    இனிமே என்ன பண்றீங்கன்னா.. மொதல்லேயே ஆஜராயிட்டேன்னு ஒரு பின்னூட்டத்தைப் போட்டிருங்க..

    அப்புறமா சாவகாசமா படிச்சு முடிச்சிட்டு இன்னொரு பின்னூட்டத்தையும் போட்டிருங்க..!

    சரிங்களா..!

    எப்படியோ எனக்கு ஓசில ஒரே டைம்ல 2 பின்னூட்டம் கிடைக்குதே..!))))))))

    ReplyDelete
  50. [[[நாஞ்சில் பிரதாப் said...

    ///இந்த மாதிரி ஊர்க் காசுல கூட்டம் போட்டு பேசித்தான் இவனுக நமக்கு நல்லது செய்றானுகளாக்கும்..! //

    அப்படிப் போடு. இவனுங்க நல்லது செய்யனும்னா அப்ப தேநீர் விருநது போட்டாட்டாத்தான் நல்லவது செய்வானுங்க. இல்லன்னா செய்ய மாட்டானுங்களா...

    விடுங்கண்ணே. எல்லாத்தையும் ஒருத்தர் பாரத்துட்டுதான் இருக்காரு. நான் உங்களைச் சொன்னேன்...:))]]]

    அவனைச் சொல்லணும்.. அவனைத்தான் குத்தம் சொல்லணும்..! எல்லாரையும் ஆட விட்டுட்டு கடைசி நேரத்துலதான் அவன் அவனோட வேலையைக் காட்டுவானாம்..!

    இதுக்குப் பேரா நீதி..? இவுங்க சரியில்லைனனா அவனும் சரியில்லாம இருக்கானே..

    இதை யார்கிட்ட போய்ச் சொல்றது..?

    ReplyDelete
  51. [[[மாயாவி said...

    இங்க பின்னூட்டம் எழுதினவங்க எல்லோருக்கும் ஒரு கேள்வி?

    முதல்ல தேர்தல்ல காசும், பிரியாணியும் வாங்காமல் ஓட்டு போடுங்க, அப்புறம் இதற்க்கெல்லாம் தானே ஒரு முடிவு வரும்.]]]

    அதான.. இதுவும் கரெக்ட்டுதான்..!

    ReplyDelete
  52. [[[R Gopi said...

    எனக்கென்னவோ நீங்கள் கொஞ்சம் (கொஞ்சமா, ஜாஸ்தின்னு யாரவது சொன்னால் நான் மறுக்க மாட்டேன்) ஓவர் ரியாக்ட் செய்வதாகப் படுகிறது. இது சம்பந்தமான செய்திகள் ஜூனியர் விகடனில் வந்த பிறகுதான் உங்களுக்கு இது போன்ற அரசாங்கம் செய்யும் செலவுகள் பற்றி முதன் முறையாகத் தெரியுமா?

    \\இன்னிக்கு வந்த ஜூனியர் விகடன்ல இந்தக் கட்டுரையைப் படிச்சவுடனேயே பி.பி. உச்சத்துக்குப் போயிருச்சு.. ஒரு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சுத்தான் பி.பி.யை குறைச்சேன்..\\

    பி. பி.க்கு அதான் மருந்தா? இந்த டாக்டருங்க வேற ஏதோ மாத்திரையை எல்லாம் தருகிறார்களே:)]]]

    கோபி..

    முன்னாடியே தெரிஞ்சாலும் ஆதாரப்பூர்வமா தெரியாதே.. இப்பத்தான தெரிஞ்சது..!

    பி.பி.க்கு மருந்து சாப்பிட்டதுன்னு சொன்னது ச்சும்மா..!

    ReplyDelete
  53. //*
    தமிழ்க்குரல்..!

    தி.மு.க.வையும், கருணாநிதியையும் எதிர்த்தால் அவர் ஜெயலலிதாவின் ஆள் என்று நினைக்கும் பொதுபுத்தியான உடன்பிறப்பாக நீங்கள் இருக்கின்றவரையில் உங்களுடன் பேசி புண்ணியமில்லை..!

    தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுபட்டு கொள்ளையடித்தோர் பட்டியலில் இரண்டு பேர் முன்னணியில் இருக்கிறார்கள்.. ஒருவர் கருணாநிதி. அடுத்த இடத்தில் சந்தேகமேயில்லாமல் இருப்பவர் ஜெயலலிதாதான்..!

    இதையெல்லாம் எத்தனை பதிவுகளில் எழுதினாலும் உங்களது கண்ணுக்கு இது மட்டும் மறைந்து போய் "நான் அம்மா ஆளு" என்றுதான் தெரியும்..

    காமாலை கண்ணல்லவா..? அதான்..
    *//

    இங்கு பதிந்த நான் எங்காவது திமுகவை ஆதரித்தேனா?

    இல்லையே

    அண்ணே,

    நீங்கள்தான் ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் எல்லாம் திமுககாரர்கள் எனும் பொது புத்தியில் இருக்கிறீர்கள்?

    மலத்தில் தேய்ந்த செருப்பால் கருணாநிதியை அடிக்கும் நீங்கள்...

    ஜெவை அதே மலம் தேய்ந்த செருப்பால் அடிப்பீர்களா?

    கருணாநிதியை திட்டுவதை தவிர மற்றது எல்லாம் உங்களுக்கு அவுட் ஆம் சிலபஸ் ஆகி விடும் அல்லவா?

    முதலில் பார்ப்பன ஹிந்திய பாசிசத்தை எதிர்க்க முடியாத நீங்கள்...

    பார்ப்பன அடிவருடியான நீங்கள்...

    சொல்லும் எந்த நியாயமும் பார்ப்பனீயத்திற்கு மட்டுமே நியாயமாக இருக்கும்...

    ReplyDelete
  54. [[[தமிழ் குரல் said...

    இங்கு பதிந்த நான் எங்காவது திமுகவை ஆதரித்தேனா?
    இல்லையே
    அண்ணே,
    நீங்கள்தான் ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் எல்லாம் திமுககாரர்கள் எனும் பொது புத்தியில் இருக்கிறீர்கள்?
    மலத்தில் தேய்ந்த செருப்பால் கருணாநிதியை அடிக்கும் நீங்கள்...
    ஜெவை அதே மலம் தேய்ந்த செருப்பால் அடிப்பீர்களா?]]]

    ஒருவேளை இப்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்து இதே போல் நடந்து கொண்டிருந்தால் ஜெயலலிதாவை இதேபோல் திட்டியிருப்பேன்..! இதுக்கெல்லாம் உதாரணம் கிடைக்கணும்னா அடுத்த ஆட்சி அம்மா கைக்குப் போகணும்னு வேண்டிக்கோ..

    [[[கருணாநிதியை திட்டுவதை தவிர மற்றது எல்லாம் உங்களுக்கு அவுட் ஆம் சிலபஸ் ஆகி விடும் அல்லவா?]]]

    ஏதோ எனக்குத் தெரிஞ்சதை.. எனக்குள் பாதிப்பை ஏற்படுத்துவதை.. எனக்கு எழுதத் தோன்றுவதை எழுதிக்கிட்டிருக்கேன். இதுவே தப்புன்னா எப்படி? மத்த எண்ணம் எனக்கு வரலைன்னா நீ என் அப்பன் முருகனைத்தான் திட்டணும்..!

    [[[முதலில் பார்ப்பன ஹிந்திய பாசிசத்தை எதிர்க்க முடியாத நீங்கள்
    பார்ப்பன அடிவருடியான நீங்கள் சொல்லும் எந்த நியாயமும் பார்ப்பனீயத்திற்கு மட்டுமே நியாயமாக இருக்கும்...]]]

    பார்ப்பன ஹிந்திய பாசிசமா..? அப்படீன்னா..?

    ReplyDelete
  55. நிச்சயமா இது எதிர் கருத்து இல்ல: சரிங்க பாஸ் இப்படி வச்சிக்குவோம், நாம் பொலம்பரத விட்டுடுவோம், நம்மால இதுல என்ன செய்ய முடியும்னு யோசிப்போம், நாம எந்த தப்பும் பண்ணாம இருக்கணும் (ஒரு சின்ன கமிசனுக்கு கூட ஆசபடக்கூடாது, எப்பவும் விதி முறைகளை கடைப்பிடிக்கணும்) இப்படி பல தப்பான விசயங்கள் நம்ப கிட்டயும் இருக்கு, அதெல்லாம் உதறிட்டு உண்மையோடு, உரிமையோடு குரல் கொடுப்போம் பாஸ், ஏதாவது மாற்றம் நடக்க வழி செய்வோம்...........

    ReplyDelete
  56. 46 departments high officials and politicians are participating in one place na - its a meeting and there would be some secret agenda and decisions would be taken for the nxt year..nadakutha ilaiyanrathu vera vishesam..but it should have been created for a purpose..
    enga office la 2 delivery unit people a meeting ku kutitu poonavee 2 lakh selavu aguthu..govt enna ..
    namba arasiyal viyathinga karanatha vitutu seyala matum seiranga poola ..

    ReplyDelete
  57. //நிச்சயமா இது எதிர் கருத்து இல்ல: சரிங்க பாஸ் இப்படி வச்சிக்குவோம், நாம் பொலம்பரத விட்டுடுவோம், நம்மால இதுல என்ன செய்ய முடியும்னு யோசிப்போம், நாம எந்த தப்பும் பண்ணாம இருக்கணும் (ஒரு சின்ன கமிசனுக்கு கூட ஆசபடக்கூடாது, எப்பவும் விதி முறைகளை கடைப்பிடிக்கணும்) இப்படி பல தப்பான விசயங்கள் நம்ப கிட்டயும் இருக்கு, அதெல்லாம் உதறிட்டு உண்மையோடு, உரிமையோடு குரல் கொடுப்போம் பாஸ், ஏதாவது மாற்றம் நடக்க வழி செய்வோம்.......

    //

    Never in the past there was a idealistic society where both citizens and rulers were 100% puritans. And never it is going to be in future. And hence we cannot dream of achieving that "state". Mature democracies seperates private discipline from public/societal discipline. One can be a not so perfect in private life and yet he/she have every right to expect and highest standard from our rulers. It is simply because, the rulers have responsibility over goveranance of huge population and decide fate of current and future generations. There cannot be any compromise in the expectation for whatever reasons.

    We Indians mix up both of these qualities and feel guilty for immorality of our rulers. And the rulers feed us with bread crumbs; exploit our guilty feeling and thrive on looting bigtime.

    A morally superior ruler can courageouly discipline his/her citizens without fear of anything.

    ReplyDelete
  58. அண்ணே , இதெல்லாம் இருக்கட்டும் . நாங்கள் எதிர்பார்ப்பது வேறு .

    நர்ஸ் (சேவைக்கு மொழி தேவை இல்லை ) படம் எப்படி இருக்கு ? ரகசியம் படத்தின் பாடல்கள் எப்படி ? விலை (செய்யும் தொழிலே தெய்வம் ) எப்ப ரிலீஸ் ?
    இதையெல்லாம் எழுதுங்கணே

    ReplyDelete
  59. [[[டுபாக்கூர்கந்தசாமி said...
    நிச்சயமா இது எதிர் கருத்து இல்ல: சரிங்க பாஸ் இப்படி வச்சிக்குவோம், நாம் பொலம்பரத விட்டுடுவோம், நம்மால இதுல என்ன செய்ய முடியும்னு யோசிப்போம், நாம எந்த தப்பும் பண்ணாம இருக்கணும் (ஒரு சின்ன கமிசனுக்கு கூட ஆசபடக்கூடாது, எப்பவும் விதி முறைகளை கடைப்பிடிக்கணும்) இப்படி பல தப்பான விசயங்கள் நம்பகிட்டயும் இருக்கு, அதெல்லாம் உதறிட்டு உண்மையோடு, உரிமையோடு குரல் கொடுப்போம் பாஸ், ஏதாவது மாற்றம் நடக்க வழி செய்வோம்.]]]

    நிச்சயமா நாமதான் மொதல்ல திருந்தணும்..!

    லஞ்சம் கொடுக்கக் கூடாது.. ஊழலுக்குத் துணை கோபக் கூடாதுன்னு நாமதான் உறுதியெடுக்கணும்..!

    ReplyDelete
  60. [[[butterfly Surya said...
    கொடுமை...]]]

    -))))))))))))

    ReplyDelete
  61. [[[Valaipayan said...
    46 departments high officials and politicians are participating in one placena - its a meeting and there would be some secret agenda and decisions would be taken for the nxt year.. nadakutha ilaiyanrathu vera vishesam. but it should have been created for a purpose. enga officela 2 delivery unit people a meetingku kutitu poonavee 2 lakh selavu aguthu. govt enna. namba arasiyal viyathinga karanatha vitutu seyala matum seiranga poola.]]]

    அதான் நானும் கேக்குறேன் வலைப்பையன்.. அவங்க சொந்தக் காசுன்னு இவ்ளோ செலவு செய்வாங்களா..?

    ReplyDelete
  62. //ஒரு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சுத்தான் பி.பி.யை குறைச்சேன்..
    //

    Hello, Neenga adichathu verum Water, not a quarter!

    ReplyDelete
  63. [[[Indian said...

    //Never in the past there was a idealistic society where both citizens and rulers were 100% puritans. And never it is going to be in future. And hence we cannot dream of achieving that "state". Mature democracies seperates private discipline from public/societal discipline.

    One can be a not so perfect in private life and yet he/she have every right to expect and highest standard from our rulers. It is simply because, the rulers have responsibility over goveranance of huge population and decide fate of current and future generations. There cannot be any compromise in the expectation for whatever reasons.

    We Indians mix up both of these qualities and feel guilty for immorality of our rulers. And the rulers feed us with bread crumbs; exploit our guilty feeling and thrive on looting bigtime.

    A morally superior ruler can courageouly discipline his/her citizens without fear of anything.]]]

    திருந்த வேண்டியது மக்கள் என்பதில் சந்தேகமில்லை இந்தியன்..!

    ஆனால் இவர்களுக்கு திருந்துகின்ற அளவுக்கு அறிவு எப்போது வரப் போகின்றது என்பதுதான் பிரச்சினையே..!

    ReplyDelete
  64. [[[பார்வையாளன் said...

    அண்ணே , இதெல்லாம் இருக்கட்டும். நாங்கள் எதிர்பார்ப்பது வேறு.

    நர்ஸ் (சேவைக்கு மொழி தேவை இல்லை) படம் எப்படி இருக்கு? ரகசியம் படத்தின் பாடல்கள் எப்படி ? விலை (செய்யும் தொழிலே தெய்வம்) எப்ப ரிலீஸ் ?

    இதையெல்லாம் எழுதுங்கணே]]]

    படம் வரட்டும் சாமி.. அப்புறமா பார்க்கலாம்..!

    ReplyDelete
  65. [[[என்.ஆர்.சிபி said...

    //ஒரு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சுத்தான் பி.பி.யை குறைச்சேன்..//

    Hello, Neenga adichathu verum Water, not a quarter!]]]

    வாங்க நக்கலாரே..! நல்வரவாகட்டும்..!

    தண்ணியைத்தான் அடிச்சேன். ஆனா இந்தத் தண்ணியா? அந்தத் தண்ணியா சொல்ல மறந்துட்டேன்..!

    ReplyDelete
  66. Paid bribe? Tell the world you had to

    Janaagraha Hopes Website Will Draw Attention To Graft

    Jayashree Nandi | TNN

    Bangalore: Greased a greedy palm? Whose, and how much? Tell the world — it could be a petty Rs 20 over the fare to the autodriver, or a hefty sum to a government official. You can log on to ipaidabribe.com and list your soul-smirching experience.
    Set up by Janaagraha on August 15, this website has already gathered 130 reports by people who paid up various denominations for various services. While someone paid Rs 3,000 to an agent to get married, another person from Chennai had to pay a similar sum to get a death certificate after his mother’s death. A group of youngsters, out late in the night, paid up Rs 7,000 to cops to wriggle out of a sticky situation.
    These are only a few examples of the bribery cases uploaded on ipaidabribe.com. Here, you can make public what you paid as bribe, when and to whom. But whether this is shame enough for our thick-skinned babus, only time will tell. You could also upload how you managed to get a job done without paying a bribe or how a very honest officer helped you.
    www.ipaidabribe.com is Janaagraha’s campaign to have citizens from all cities upload their bribe tales. This unique campaign will document how big the problem of corruption is.
    “We want citizens to report instances of corruption as they happen. This will tell us the dimension of the problem. Otherwise, we hear of anecdotes but nothing is documented. For instance, if a cop asks for a bribe, we are asking citizens to describe how, and where it happened. However, we also want people who have managed to fight corruption by not paying a bribe or by exposing officers who ask for bribes, profiles of honest, helpful officers and other interesting experiences,” said T R Raghunandan, coordinator for the campaign and an IAS officer.
    Though sponsored by Janaagraha, it has 10 to 12 volunteers at present, many from IT companies. Lokayukta Justice N Santosh Hegde said he would take a look at the website and respond.
    ASK RAGHU If you have a specific question on dealing with corruption in any government department, you could ask Raghunandan at the page ‘Ask Raghu’. He replies to individual queries and also suggests that you read the FAQs page
    Questions like ‘What is a khata? Why is a khata important?’ ‘What are the essential documents required for a new water connection? What is the fee?’ and many other queries are addressed in the FAQs page

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. [[[Indian said...

    Paid bribe? Tell the world you had to Janaagraha Hopes Website Will Draw Attention To Graft

    Jayashree Nandi | TNN

    Bangalore: Greased a greedy palm? Whose, and how much? Tell the world — it could be a petty Rs 20 over the fare to the auto driver, or a hefty sum to a government official. You can log on to ipaidabribe.com and list your soul-smirching experience.

    Set up by Janaagraha on August 15, this website has already gathered 130 reports by people who paid up various denominations for various services.

    While someone paid Rs 3,000 to an agent to get married, another person from Chennai had to pay a similar sum to get a death certificate after his mother’s death.

    A group of youngsters, out late in the night, paid up Rs 7,000 to cops to wriggle out of a sticky situation.

    These are only a few examples of the bribery cases uploaded on ipaidabribe.com.

    Here, you can make public what you paid as bribe, when and to whom. But whether this is shame enough for our thick-skinned babus,

    only time will tell. You could also upload how you managed to get a job done without paying a bribe or how a very honest officer helped you.

    www.ipaidabribe.com is Janaagraha’s campaign to have citizens from all cities upload their bribe tales. This unique campaign will document how big the problem of corruption is.

    “We want citizens to report instances of corruption as they happen. This will tell us the dimension of the problem.

    Otherwise, we hear of anecdotes but nothing is documented. For instance, if a cop asks for a bribe, we are asking citizens to describe how, and where it happened.

    However, we also want people who have managed to fight corruption by not paying a bribe or by exposing officers who ask for bribes, profiles of honest, helpful officers and other interesting experiences,” said T R Raghunandan, coordinator for the campaign and an IAS officer.

    Though sponsored by Janaagraha, it has 10 to 12 volunteers at present, many from IT companies. Lokayukta Justice N Santosh Hegde said he would take a look at the website and respond.

    ASK RAGHU If you have a specific question on dealing with corruption in any government department, you could ask Raghunandan at the page ‘Ask Raghu’. He replies to individual queries and also suggests that you read the FAQs page

    Questions like ‘What is a khata? Why is a khata important?’ ‘What are the essential documents required for a new water connection? What is the fee?’ and many other queries are addressed in the FAQs page.]]]

    தகவலுக்கு மிக்க நன்றி இந்தியன் ஸார்..!

    மக்களே லஞ்சம் கொடுக்க மாட்டோம்.. வாங்கவும் மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து அதன்படி நடந்தால் ஒழிய இதனை முற்றிலுமாக ஒழி்கக முடியாது..!

    ReplyDelete