Pages

Monday, May 17, 2010

குங்குமம் இதழின் முதன்மை ஆசிரியருக்கு கத்திக்குத்து - தகவல் வெளிவராத மர்மம்..

16-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கம்போல இன்று காலையில் வெளிவந்த செய்தித்தாள்களையும், நான் எப்போதும் வாங்கும் வார இதழ்களையும் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது 'நவீன நெற்றிக்கண்' என்னும் வாரப் பத்திரிகையில் வெளி வந்த இந்தச் செய்தி என்னை ஒரு கணம் திடுக்கிட வைத்ததும்.. கூடவே ஆச்சரியத்தையும் தந்தது.

நீங்களும் படித்துப் பாருங்கள்..

"கலாநிதி மாறன் - தயாநிதி மாறன் குடும்பத்திற்குச் சொந்தமான 'குங்குமம்' இதழின் முதன்மை ஆசிரியராக இருப்பவர் தி.முருகன். இவர் ஏற்கெனவே 'ஜூனியர் விகடன்' இதழில் பணியாற்றியவர்.


முருகன் 'குங்குமம்' இதழில் பணியாற்றி வந்தாலும் நடிகர் சூர்யா, அவரது அகரம் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகியான முன்னாள் 'ஜூ.வி.' நிருபர் ஞானவேல், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஆகியோருடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிஸினஸ் விரிவாக செய்து வந்தார் என்று போலீஸ் வட்டாரம் கூறுகிறது.

முருகன், நடிகர் சூர்யா, ஞானவேல், ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஆகிய நால்வர் கூட்டணி, இராமநாதபுரம் மாவட்டம் - கீழக்கரை பகுதியில் ஒரு பெரிய சொத்து வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், இந்த வர்த்தக நடவடிக்கையில் சென்னைக்கு தெற்கே, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் அவர் கொதிப்பில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'குங்குமம்' முதன்மை ஆசிரியரான தி.முருகன், கடந்த 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து குங்குமம் அலுவலகம் நோக்கி தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் புறப்பட்டுச் சென்றார்.

5-வது குறுக்குத் தெருவில் இருந்து புறப்பட்ட முருகன், 6-வது குறுக்குத் தெருவைக் கடக்கும்போது இரண்டு பேர் வழி மடக்கி முகவரி கேட்பது போல பேசியபடியே அவரது இடுப்பு மற்றும் கைகளில் குத்திவிட்டுத் தப்பியோடி விட்டனர்.

ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய முருகனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.

தற்போது முருகன் ராமச்சந்திரா மருத்துவனையில் 4-வது மாடியில் டி-4 அறையில்(படுக்கை எண் 4412) தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது சொந்த ஊர் செஞ்சி. இவரது மனைவியின் பெயர் திண்டிவனம். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர்.

வளசரவாக்கம் போலீஸுக்குத் தகவல் கிடைத்து மருத்துவமனையில் இருந்து முருகனை சந்தித்து புகார் பெற்றனர். விசாரணை அதிகாரியாக வளசரவாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளார்.

முருகனை கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது மே 7-ம் காலை எட்டரை மணியில் இருந்து ஒன்பதரை மணிவரைக்குள். 94430-33305 என்ற மொபைலில் இருந்து முக்கியமான பத்திரிகையாளர்களுக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் முருகனின் நண்பர்களுக்கும் "முருகன் தாக்கப்பட்ட விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்" என்று ஒரு எஸ்.எம்.எஸ். பறந்து சென்றது.

மேற்கண்ட மொபைல் எண் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாருடையது. அவர் சட்டமன்றத்தில் இருந்தபடியே இந்த எஸ்.எம்.எஸ்ஸை அனைவருக்கும் அனுப்பியுள்ளார்.

இந்த விஷயங்களுடன் ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை 11-ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 6.20 மணிக்கு தொடர்பு கொண்டு “எதற்காக நீங்கள் இப்படி எஸ்.எம்.எஸ். கொடுத்தீர்கள்?” என்று கேட்டோம். ரவிக்குமார், “இது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது..” என்று மறுத்துவிட்டார்.

மே 11 செவ்வாய் மாலை 6.15 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியுமான கணேசனை தொடர்பு கொண்டு முருகன் கொலை முயற்சி வழக்கின் கிரைம் எண்ணைக் கேட்டோம். “உங்களுக்கு எதுக்கு கிரைம் எண்..? 'குங்குமம்' நிர்வாகமே எண்ணைக் கேட்கவில்லையே..? உங்களுக்கு எதற்கு கிரைம் எண்ணைத் தர வேண்டும்?” என்ற சூடாகக் கேட்டார்.

அவரை நிதானத்திற்கு வரவழைத்து, “க்ரைம் எண் மறைத்து பாதுகாக்கப்பட்ட வேண்டியதா என்ன?” என்று நாம் மடக்கியதும் "271/10 "என்று க்ரைம் எண்ணைக் கொடுத்தார் கணேசன். “விசாரணை எந்த அளவில் உள்ளது?” என்று கேட்டோம். “இப்பத்தான் முருகனைப் பார்த்தேன். அவரோட ஆபீஸ்(குங்குமம்) எம்.டி.யைப் பார்த்தேன். முருகனைத் தாக்கியது தொடர்பாக அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை..” என்றார். மேலும், “ஒரு க்ளூ கிடைச்சா.. குற்றவாளியைப் பிடிச்சிருவோம்..” என்றார் கணேசன்.

“க்ளூ கொடுத்தா கண்டிப்பா குற்றவாளியைப் பிடிச்சிருவீங்களா?” என்றதும், “நிச்சயமா.. பத்து நிமிஷத்துல பிடிச்சிருவோம்..” என்று உற்சாகமாகக் கூறினார் கணேசன்.

நமது கைவசம் உள்ள க்ளூவை கணேசனிடம் கூறிவிட்டு “இந்தக் க்ளூவை வைத்து குற்றவாளியை பத்து நிமிடம் இல்லை.. 24 மணி நேரத்தில் பிடிச்சிருங்க.. உங்களுக்கு ஜனாதிபதி அவார்டு கொடுக்கும்படி எங்க பத்ரிகைலேயே சிபாரிசு செய்றோம்.. அட்டையிலேயே கவர்ல உங்க புகைப்படத்தைப் போட்டு பாராட்டுறோம்..” என்று கூறினோம்.

சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வாயடைத்துப் போய் “சரி ஸார்.. சரி ஸார்..” என்றார்.

'குங்குமம்' முதன்மை ஆசிரியர் தி.முருகனை கொலை செய்ய முயன்ற கூட்டத்தின் பின்னணியைப் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்தால் பாராட்டலாம்.. ஆனால் அதற்கான வாய்ப்பு நம் கண்ணுக்குத் தெரியவில்லை..!"

(நன்றி : நவீன நெற்றிக்கண் இதழ் 21-05-2010)

இனி விஷயத்துக்கு வருவோம்..

இந்தச் செய்தி தமிழகத்தின் முதன்மையான பத்திரிகைகளில் இன்றுவரையிலும் வெளியாகாமல் இருந்ததற்கும், இருப்பதற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை இதிலே சொல்லப்பட்டிருப்பதைப் போல விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் வேண்டுகோளாகவோ அல்லது 'குங்குமம்' நிர்வாகத்தின் விருப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட க்ரைம் எண் கொடுக்கப்பட்ட செய்தியொன்று விருப்பு, வெறுப்பில்லாமல் பகிரங்கப்படுத்தப்படுவதுதான் காவல் துறையின் சட்டம்.

தனிப்பட்ட புகார்கள் காரணமாக குடும்பத்தினருடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது.. குடும்பத்தினருடன் சண்டையிடுவது.. புகார் போலீஸ் ஸ்டேஷன் வருவது.. பஞ்சாயத்து செய்வது.. சமரசம் செய்து வைப்பது இதையெல்லாம்கூட ஒருவகையில் வெளியில் சொல்ல வேண்டியதில்லை என்றே கருதலாம்..

ஆனால் ரத்தம் சிந்தும் அளவுக்கு ஆயுதத்தால் செய்யப்பட்ட படுகொலை முயற்சியையும் இதேபோல் வெளியிடாமல் முயற்சிப்பது காவல்துறையின் நடவடிக்கைகளும் நல்லதல்ல.

நாளை இது போன்ற ஏதேனும் ஒரு அரசியல் வழக்கிலோ அல்லது பத்திரிகையாளர்களின் பத்திரிகை தொடர்பான வழக்கிலோ காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு க்ரைம் எண் கொடுக்கப்பட்டு அது வெளியில் தரப்படாமல் கடைசி நிமிடத்தில் கைது நடவடிக்கையில் இறங்கும்போது இதே பத்திரிகையாளர்களும், பத்திரிகை உலகமும் என்ன செய்யும்..?

அதுவும் தங்களுக்கு விருப்பப்பட்ட செய்திகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கி சந்தேகத்தின்பேரில் சிலரைப் பிடித்து அவர்களை தொலைக்காட்சிகளின் முன் நிறுத்தி அவர்கள்தான் குற்றவாளிகள் என்பதை மறைமுகமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தும் காவல்துறையின் உள்ளடி வேலைக்கு ஒரு பக்கம் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளுக்கு இடையேயான வர்த்தகப் போட்டியும், செயலும் உடந்தையாக இருப்பது என்பதே நமது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.

இன்றைக்குக்கூட 'தினந்தந்தி' பத்திரிகையிலே ஒரு செய்தி. நடிகர் சின்னி ஜெயந்த் வளர்த்து வந்த நாய் திருடு போய்விட்டது. நடிகர் சின்னி, காவல்துறையில் புகார் செய்திருக்கிறார். காவல்துறை வழக்குப் பதிவு செய்துவிட்டு வலைவீசித் தேடி அந்த நாயை மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நாயைக் கடத்தியதாக ஒரு இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது ஒரு சாம்பிள்தான்..

இப்படி ஒரு வழக்குப் பதிவு செய்தால் அதனை வெளியிடுவதையும், வேறொரு வழக்கு பதிவு செய்தால் அதனை வெளியிடாமல் மறைப்பது ம் நல்லதொரு ஜனநாயக நடைமுறை அல்ல.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நக்கீரன் கோபாலை கைது செய்தபோதுகூட எந்தக் குற்றச்சாட்டின் கீழ், எந்த போலீஸ் ஸ்டேஷனில்  அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கின்ற தகவலை மூடி மறைத்து, கோபாலை கைது செய்த பிறகுதான் அதனை வெளியிட்டார்கள். இதனாலேயே கோபால் முன் ஜாமீன் பெற முடியாமல் போய்விட்டது.

பத்திரிகையாளர்களுக்கு ஒரு நீதி.. பொதுமக்களுக்கு வேறொரு நீதி என்கிற போக்கிலேயே சமீப காலமாக பல்வேறு சம்பவங்கள் கண் முன்னே நடந்து வருவதை பார்த்துக் கொண்டு மெளனமாகத்தான் இருக்கிறோம்..

நித்தியானந்தம் விஷயத்தில் பெங்களூருக்கே சிறப்பு நிருபரை அனுப்பி விஷயத்தை தோண்டித் துருவி வெளியே கொண்டு வந்து 5 பக்கங்களுக்கு சிறப்புக் கட்டுரை எழுதிய 'குங்குமம்' இதழ் இதனைப் பற்றி இதுவரையில் ஒரு சிறிய செய்தியைக்கூட வெளியிடாதது பத்திரிகையியல் ரீதியாக சரியானதல்ல..

ஒரு குற்றம் நடந்திருந்தால் அதில் தவறு செய்தவர் கண்டிப்பாக குற்றவாளிதான்.. அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பத்திரிகையில் வெளிப்படுத்தக் கூடியவர்தான். நித்தியின் சொந்த வாழ்க்கையைத் தோண்டித் துருவியவர்கள் தங்களது பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் தாக்கப்பட்டதையே கண்டு கொள்ளாமல் இருப்பது இவர்களுக்கு ஒரு நீதி.. அடுத்தவர்களுக்கு ஒரு நீதி என்பதைத்தான் காட்டுகிறது..

சமீப காலமாக பல்வேறு பத்திரிகைகளிலும் இது போன்று அவர்களது காம்பவுண்டுக்குள் நடக்கும் குற்ற வழக்கான செய்திகளை அவர்களுடைய பத்திரிகையிலோ, அல்லது பிற பத்திரிகைகளிலோ வெளிவராமல் பார்த்துக் கொள்ளும் போக்கு அதிகரித்தே வருகிறது.

இதில் விதிவிலக்கு நக்கீரன். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதன் மதுரை நிருபர் ஒருவர் அப்போதைய மதுரையின் பெண் அமைச்சர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து கொண்டு சொத்துக் குவிக்கும் விஷயத்தில் இறங்கியதை பகிரங்கப்படுத்தி அவரை டிஸ்மிஸ் செய்ததாக தெரிவித்தது.

சமீபத்தில் 'குமுதம்' பத்திரிகை அலுவலகத்திற்குள் நடந்ததாகச் சொல்லப்பட்ட பாலியல் புகார், அதன் எம்.டி.வரதராஜன் பணத்தைச் சுருட்டியதாக ஆசிரியர் அளித்த புகார்.. இது பற்றிய செய்திகள் அதே புலனாய்வு பத்திரிகையில் கவர் ஸ்டோரியாக வெளிவரும் என்று ஆசையோடு காத்திருந்தேன். புஸ்வாணமாகிவிட்டது. பத்திரிகைகளே இப்படியிருந்தால் எப்படி..?

இது மாதிரியான ஒரு பக்கச் சார்பான நடைமுறைகள் ஆட்சி, அதிகார வர்க்கத்தின் முறைகேடுகளை வெளிப்படையாக்கி மக்களுக்குத் துணை நிற்க வேண்டிய உண்மையான பத்திரிகை உலகத்திற்கே ஒரு பக்க பாதிப்பாகத்தான் போய் முடியும்.. ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையுலகம் தற்போது திசை மாறி ரங்கநாதன் தெரு அண்ணாச்சிகள் கடை லெவலுக்கு வருவாய் என்பதை மட்டுமே குறிக்கோளாய் போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

நண்பர் தி.முருகன் உடல் நலம் பெற்று வீடு திரும்ப என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..

42 comments:

  1. பணக்காரங்க சகவாசமும் .....................காரங்க சகவாசமும் இருந்தா எப்ப வேணுன்னாலும் நமக்கே ஆப்பு வரலாம்னு சொல்லுவாங்க. பத்திரிகையையும் அந்த லிஸ்ட்டுல சேர்த்துக்கலாம் போலிருக்கு.

    ReplyDelete
  2. //சமீபத்தில் 'குமுதம்' பத்திரிகை அலுவலகத்திற்குள் நடந்ததாகச் சொல்லப்பட்ட பாலியல் புகார், அதன் எம்.டி.வரதராஜன் பணத்தைச் சுருட்டியதாக ஆசிரியர் அளித்த புகார்.. இது பற்றிய செய்திகள் அதே புலனாய்வு பத்திரிகையில் கவர் ஸ்டோரியாக வெளிவரும் என்று ஆசையோடு காத்திருந்தேன்.//

    அவ்ளோ அப்பாவியாண்ணே நீங்க‌ ???????

    ReplyDelete
  3. பத்திரிகையாளர் தி.முருகன் தாக்கப்பட்ட விஷயம் குறித்து 7ம்தேதி பகலிலேயே நண்பர் வழியாக தகவல் தெரிந்தது.செய்தியை எதிலும் வெளிவரச்செய்யாமல் இருந்த பத்திரிகை ஜனநாயகம் குறித்தும் தெரிய வந்தது. வணிக ஊடக அரசியலும், வகணி ஊடகங்களின் பொய்களும்தான் இந்த நிலைக்கு காரணம். பத்திரிகைகள் முதலாளிகளாக நின்று செயல்படுவதால் பாதிக்கப்படுவது அதற்காக உயிரைக் கொடுத்து செய்தி சேகரித்து எழுதும் பத்திரிகையாளர்கள்தான். இன்றைக்கு சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி என காட்சி ஊடகங்கள் செய்கிற போலியான கருத்தாக்கங்களை கிண்டல் செய்கிற அச்சு ஊடகங்கள் செய்கிற அநியாயங்களும் உண்மை மறைப்புகளும் காட்சி ஊடகத்திற்கு சற்றும் இளைத்தவை அல்ல.

    ReplyDelete
  4. உ.தமிழன், மே 17, 18, 2009 க்கு அப்புறமும் நீங்கள் இந்த மாதிரி பேசுவது எனக்கு வியப்பளிக்கிறது. :)

    ReplyDelete
  5. [[[சரண் said...
    பணக்காரங்க சகவாசமும் .....................காரங்க சகவாசமும் இருந்தா எப்ப வேணுன்னாலும் நமக்கே ஆப்பு வரலாம்னு சொல்லுவாங்க. பத்திரிகையையும் அந்த லிஸ்ட்டுல சேர்த்துக்கலாம் போலிருக்கு.]]]

    அந்தப் பத்திரிகையில் சொல்லப்பட்டிருப்பது போல ரியல் எஸ்டேட் பிஸினஸ் உண்மையில் இது நிச்சயம் கவலைக்குரிய விஷயம்தான்..!

    ReplyDelete
  6. [[[க‌ரிச‌ல்கார‌ன் said...

    //சமீபத்தில் 'குமுதம்' பத்திரிகை அலுவலகத்திற்குள் நடந்ததாகச் சொல்லப்பட்ட பாலியல் புகார், அதன் எம்.டி.வரதராஜன் பணத்தைச் சுருட்டியதாக ஆசிரியர் அளித்த புகார்.. இது பற்றிய செய்திகள் அதே புலனாய்வு பத்திரிகையில் கவர் ஸ்டோரியாக வெளிவரும் என்று ஆசையோடு காத்திருந்தேன்.//

    அவ்ளோ அப்பாவியாண்ணே நீங்க‌ ???????]]]

    அப்போ எதிர்பார்த்தது என் தப்புங்குறீங்க..! ம் சரி.. சரி.. ஒத்துக்குறேன்..!

    ReplyDelete
  7. [[[அகநாழிகை said...
    பத்திரிகையாளர் தி.முருகன் தாக்கப்பட்ட விஷயம் குறித்து 70ம் தேதி பகலிலேயே நண்பர் வழியாக தகவல் தெரிந்தது. செய்தியை எதிலும் வெளிவரச் செய்யாமல் இருந்த பத்திரிகை ஜனநாயகம் குறித்தும் தெரியவந்தது. வணிக ஊடக அரசியலும், வணிக ஊடகங்களின் பொய்களும்தான் இந்த நிலைக்கு காரணம். பத்திரிகைகள் முதலாளிகளாக நின்று செயல்படுவதால் பாதிக்கப்படுவது அதற்காக உயிரைக் கொடுத்து செய்தி சேகரித்து எழுதும் பத்திரிகையாளர்கள்தான். இன்றைக்கு சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி என காட்சி ஊடகங்கள் செய்கிற போலியான கருத்தாக்கங்களை கிண்டல் செய்கிற அச்சு ஊடகங்கள் செய்கிற அநியாயங்களும் உண்மை மறைப்புகளும் காட்சி ஊடகத்திற்கு சற்றும் இளைத்தவை அல்ல.]]]

    உண்மைதாண்ணே..!

    ReplyDelete
  8. [[[யாசவி said...
    உ.தமிழன், மே 17, 18, 2009 க்கு அப்புறமும் நீங்கள் இந்த மாதிரி பேசுவது எனக்கு வியப்பளிக்கிறது.:)

    என்ன செய்வது..? சொந்த ஊழியர்களில் நலனிலாவது இவர்கள் நடிக்காமல் இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்..!

    ReplyDelete
  9. ஊடகங்களில் இருப்போர் செய்தி வராமல் இருக்க பணம் வாங்குவதும், செய்தியைப் போட கவர் வாங்குவதும்,புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் தனிப்பட்ட வாழ்க்கையை கிளறி தொடர்புடையவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அதை மறைப்பதும் புதிதா.இப்போது இது ‘பரிணாம’ வளர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்கு போய் விட்டது. ஜூனியர் விகடனில் ஒருவர் செய்த தில்லுமுல்லுகளை கண்டுபிடித்து துரத்தினார்கள்.அவர்கள் நிஜமாகவே அப்பாவியா அல்லது விவகாரம் முற்றி இனியும் விட முடியாது என்று நடவடிக்கை எடுத்தார்களா.உண்மையைச் சொன்னால் இந்த ஊடகவியலாளர்கள்,
    எலக்கியவாதிகள்,கலைஞர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஒரு கட்சியே தனியார் நிலத்தை ஆகரமித்து அதை வெளியேற்ற கோர்டிற்கு போக வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது.
    அவர்களிடம் போய் எந்த நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

    ReplyDelete
  10. [[[tamil said...

    ஊடகங்களில் இருப்போர் செய்தி வராமல் இருக்க பணம் வாங்குவதும், செய்தியைப் போட கவர் வாங்குவதும், புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் தனிப்பட்ட வாழ்க்கையை கிளறி தொடர்புடையவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அதை மறைப்பதும் புதிதா. இப்போது இது ‘பரிணாம’ வளர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்கு போய் விட்டது. ஜூனியர் விகடனில் ஒருவர் செய்த தில்லுமுல்லுகளை கண்டுபிடித்து துரத்தினார்கள்.அவர்கள் நிஜமாகவே அப்பாவியா அல்லது விவகாரம் முற்றி இனியும்விட முடியாது என்று நடவடிக்கை எடுத்தார்களா. உண்மையைச் சொன்னால் இந்த ஊடகவியலாளர்கள்,
    எலக்கியவாதிகள்,கலைஞர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு கட்சியே தனியார் நிலத்தை ஆகரமித்து அதை வெளியேற்ற கோர்ட்டிற்கு போக வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது. அவர்களிடம் போய் எந்த நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.]]]

    நியாயமான ஆதங்கம்தான் தமிழ்..!

    மற்றவர்களை விடுங்கள்.. ஆனால் பத்திரிகையாளர்களுக்கென்று கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி வேண்டாமா..?

    ReplyDelete
  11. கடைசி யாரு குத்துனது?

    ReplyDelete
  12. உங்களுக்கும் சேர்த்து அமைச்சர் ராஜாவுக்கு வக்காலத்து மறுமொழியில் முதுகில் தட்டியுள்ளேன்.

    ReplyDelete
  13. //Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[யாசவி said...
    உ.தமிழன், மே 17, 18, 2009 க்கு அப்புறமும் நீங்கள் இந்த மாதிரி பேசுவது எனக்கு வியப்பளிக்கிறது.:)

    என்ன செய்வது..? சொந்த ஊழியர்களில் நலனிலாவது இவர்கள் நடிக்காமல் இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்..!//

    இது புதுசா என்ன? மதுரை தினகரன் ஊழியர்கள் கொலை வழக்கு ஒரு முன்னுதாரணம் இருக்கிறதே. இவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?

    ஆனால் ஒன்று, நீங்கள் இந்த பதிவு போடாமல் இருந்திருந்தால் இப்படி ஒன்று நடந்ததே எனக்கு தெரியாமல் போயிருக்கும்.

    ReplyDelete
  14. அவனவன் தன் முதுகைப் பார்ப்பதே இல்லை. யாராவது காட்டினாலும் போடா .....ரே போச்சுன்னு கம்னு இருக்கானுவ. நாட்டின் காண்ணாடி மீடியா ஆனா இப்போ அதில் ரசம் போயிடிச்சு.

    ReplyDelete
  15. நிருபர்களுக்கும் இதே கதியா. இது நல்லதேயில்லை. மொத்தமாக பத்திரிகை பகிஷ்கரிப்புதான் பாடம் புகட்டும்.

    ReplyDelete
  16. பத்திரிக்கைகாரவுகளுக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம்னு சொன்னாங்களே...உடனடியா அதுக்கு ஒரு அப்ளிகேசன் குடுத்து வைங்க, உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

    இம்புட்டு அப்பாவி மனுசனா இருக்கீரே!

    ReplyDelete
  17. நாங்களே யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தால் நீ உலகெங்கும் பரப்பிவிடுகிறாயா????

    பேசாம நவீன நெத்திகண்ணப் படிச்சியா, கண்ண மூடிட்டு தூங்குனியானு இல்லாம நமக்கு ஏண்ணா இந்த வேலையெல்லாம்.
    தி.மு.க(லி) காலத்துல இதெல்லாம் சகஜமப்பா...
    மவனே லாரி வந்திக்கிட்டு இருக்கு...

    ReplyDelete
  18. உள்குத்தோ வெளிக்குத்தோ வலைக் குத்து எப்போதுமே நம்பகத்தன்மையோடவே இருக்குண்ணே!!

    :))

    ReplyDelete
  19. [[[ஷாகுல் said...
    கடைசி யாரு குத்துனது?]]]

    அது தெரிஞ்சிருந்தா அதையும் எழுதியிருக்க மாட்டேனா ஷாகுல்ஜி..!

    ReplyDelete
  20. [[[ராஜ நடராஜன் said...
    உங்களுக்கும் சேர்த்து அமைச்சர் ராஜாவுக்கு வக்காலத்து மறுமொழியில் முதுகில் தட்டியுள்ளேன்.]]]

    மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete
  21. [[[வரதராஜலு .பூ said...

    //Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[யாசவி said...
    உ.தமிழன், மே 17, 18, 2009 க்கு அப்புறமும் நீங்கள் இந்த மாதிரி பேசுவது எனக்கு வியப்பளிக்கிறது.:)

    என்ன செய்வது..? சொந்த ஊழியர்களில் நலனிலாவது இவர்கள் நடிக்காமல் இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்..!//

    இது புதுசா என்ன? மதுரை தினகரன் ஊழியர்கள் கொலை வழக்கு ஒரு முன்னுதாரணம் இருக்கிறதே. இவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?

    ஆனால் ஒன்று, நீங்கள் இந்த பதிவு போடாமல் இருந்திருந்தால் இப்படி ஒன்று நடந்ததே எனக்கு தெரியாமல் போயிருக்கும்.]]]

    தினகரன் அலுவலகத்திலாவது நடந்தது என்னவென்று வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இதில்..!

    வெளியில் சொல்லாமல் இருப்பதே மிகப் பெரும் தவறான முன்னுதாரணமாக இருக்கிறது..!

    ReplyDelete
  22. [[[பித்தன் said...
    அவனவன் தன் முதுகைப் பார்ப்பதே இல்லை. யாராவது காட்டினாலும் போடா .....ரே போச்சுன்னு கம்னு இருக்கானுவ. நாட்டின் காண்ணாடி மீடியா ஆனா இப்போ அதில் ரசம் போயிடிச்சு.]]]

    பித்தன்ஜி.. இந்த ரசம் போன கண்ணாடிகள்தான் அவ்வப்போது ரசத்தை பூசிக் கொண்டு நாங்களெல்லாம் ரசவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்..!

    ReplyDelete
  23. [[[வானம்பாடிகள் said...
    நிருபர்களுக்கும் இதே கதியா. இது நல்லதேயில்லை. மொத்தமாக பத்திரிகை பகிஷ்கரிப்புதான் பாடம் புகட்டும்.]]]

    எப்படி ஸார்..? பக்கத்து வீட்டுக்காரன் செத்தால் ஒரு நிமிடம்கூட வருத்தப்படாத ஜனங்கள்தான் நாம்.. இதற்காக போய் பகிஷ்கரிப்பு செய்வோமா..?

    ReplyDelete
  24. [[[டவுசர் பாண்டி... said...
    பத்திரிக்கைகாரவுகளுக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம்னு சொன்னாங்களே. உடனடியா அதுக்கு ஒரு அப்ளிகேசன் குடுத்து வைங்க, உங்களுக்கு புண்ணியமாப் போகும்.
    இம்புட்டு அப்பாவி மனுசனா இருக்கீரே!]]]

    வாங்கிட்டேன் பாண்டி..! பின்ன.. உடம்பு புண்ணாப் போனதுக்கு பின்னூட்டம் போட்டு மருந்து போட முடியாதே.. நிஜமான மருந்துதானே வேணும்..!

    ReplyDelete
  25. [[[சதீஷ் said...

    நாங்களே யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தால் நீ உலகெங்கும் பரப்பிவிடுகிறாயா????

    பேசாம நவீன நெத்திகண்ணப் படிச்சியா, கண்ண மூடிட்டு தூங்குனியானு இல்லாம நமக்கு ஏண்ணா இந்த வேலையெல்லாம்.
    தி.மு.க(லி) காலத்துல இதெல்லாம் சகஜமப்பா... மவனே லாரி வந்திக்கிட்டு இருக்கு...]]]

    என் வீட்டுத் தெருவுல லாரி நுழைய முடியாதுண்ணே.. ரொம்ப சின்னத் தெரு..

    தப்பிச்சிருவேன்..!

    ReplyDelete
  26. [[[♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...
    உள்குத்தோ வெளிக்குத்தோ வலைக் குத்து எப்போதுமே நம்பகத்தன்மையோடவே இருக்குண்ணே!!
    :))]]]

    வலைக்குத்தா?

    ஷங்கர் தம்பி.. இப்பத்தான் கொஞ்சம் மூச்சு விட்டுக்கிட்டிருக்கேன்.. திரும்பவும் கழுத்துல துண்டை போடாதப்பா..!

    இதில் எந்த உள்குத்தும் இல்லை..!

    ReplyDelete
  27. எப்ப அண்ணே புலனாய்வு நிருபரா ஆகினீங்க

    ReplyDelete
  28. [[[அத்திரி said...
    எப்ப அண்ணே புலனாய்வு நிருபரா ஆகினீங்க]]]

    தம்பி..

    இது புலனாய்வு மாதிரியா இருக்கு.. பார்த்து, படிச்சவுடனேயே எழுதினது..!

    ReplyDelete
  29. அவுங்க எல்லாம் பத்திரிகை நடத்தவில்லை வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அண்ணே!

    ReplyDelete
  30. பத்திரிக்கைகள் எல்லாம் தங்கள் தர்மத்தை
    இழந்து வெகுகாலமாகி விட்டன.ஏனெனில்
    அதைத் தான் நம்பிக் கொண்டு இருக்கின்றனர்
    வெளியுலக மக்கள்.பத்திரிகை போன்ற ,ஊடகங்கள்
    செய்யும் தவறைச் சுட்டிகாட்டவும் ஒரு நல்ல வலைப் பூ
    உள்ளதை கண்டு மகிழ்கிறேன். ஏனெனில் சுமார்
    13 வருடங்களுக்கு முன் எந்த பத்திரிக்கையும் படிப்பதை
    நிறுத்தி விட்டேன். அப்படியே எதையாவது எப்போதாவது
    படித்தாலும் அதையும் ஒரு போலீஸ்காரனைப் போல் சந்தேகக்
    கண்ணோடுதான் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் மனோரமா
    அவர்களைப்‍ பற்றிய செய்தியைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன்
    அது கூட பத்திரிகை வாங்க வே வேண்டியதில்லை. பேப்பர்
    கடைகளில் தொங்கவிட்டிருக்கும் போஸ்டரைப் பார்த்தாலே போதும்.
    அந்தம்மா பாட்டுக்கு யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் ஏதோ
    நடித்து விட்டு மக்களை முடிந்த வரை சந்தோஷப்படுத்தியவர், அவரைக்
    கொண்டு வந்து இப்படி யெல்லாம் செய்தியில் போடுவது கொஞ்சமும்
    நியாயமேஇல்லை. இவர்களைப் போன்ற பல அப்பாவிகளின் மனம்
    புண்படுத்தப் பட்டால் என்ன ஆகும் இந்த பத்திரிக்கைகளின் நிலை.
    எனது ஆசை ஒன்று முழுமையாக ஆராயாமல் செய்தியைத் தரும் எந்தப்
    பத்திரிக்கையும் கடைகளில் தொங்கக்கூடாது என்பதுதான். பத்திரிகைகள்
    செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக் காட்ட ஏதாவது ஒரு பத்திரிகை வந்தால்
    அதை முதலில் வாங்கிப் படிக்கும் நபராக நானாகத்தான் இருப்பேன்.
    இப்போது நிறைய வலைப்பூக்கள் தொடங்கப்பட்டு நல்ல காரியங்கள் நடை
    பெறுவது பாராட்டுக்குரியது. ஆனாலும் இதிலும் அம்மாதிரியான ஆட்கள்
    நுழைந்து விடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்
    கொள்கிறேன்
    தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
    இனியன் பாலாஜி

    ReplyDelete
  31. //[[[வரதராஜலு .பூ said...


    //Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[யாசவி said...
    உ.தமிழன், மே 17, 18, 2009 க்கு அப்புறமும் நீங்கள் இந்த மாதிரி பேசுவது எனக்கு வியப்பளிக்கிறது.:)

    என்ன செய்வது..? சொந்த ஊழியர்களில் நலனிலாவது இவர்கள் நடிக்காமல் இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்..!//

    இது புதுசா என்ன? மதுரை தினகரன் ஊழியர்கள் கொலை வழக்கு ஒரு முன்னுதாரணம் இருக்கிறதே. இவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?

    ஆனால் ஒன்று, நீங்கள் இந்த பதிவு போடாமல் இருந்திருந்தால் இப்படி ஒன்று நடந்ததே எனக்கு தெரியாமல் போயிருக்கும்.]]]

    தினகரன் அலுவலகத்திலாவது நடந்தது என்னவென்று வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இதில்..!

    வெளியில் சொல்லாமல் இருப்பதே மிகப் பெரும் தவறான முன்னுதாரணமாக இருக்கிறது..! //

    அப்படியே இருக்கமுடியுமா? அடுத்தக்கட்டத்திற்கு போக வேண்டாமா?

    அவர்கள் அடுத்தகட்டத்திற்கு முன்னேறிவிட்டார்கள்.

    நல்ல டெவலப்மென்ட்.

    ReplyDelete
  32. [[[smart said...
    அவுங்க எல்லாம் பத்திரிகை நடத்தவில்லை வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அண்ணே!]]]

    அந்த வியாபாரத்திலும் ஒரு நேர்மை இருக்க வேண்டாமா ஸ்மார்ட்..?

    ReplyDelete
  33. [[[இனியன் பாலாஜி said...
    பத்திரிக்கைகள் எல்லாம் தங்கள் தர்மத்தை இழந்து வெகுகாலமாகி விட்டன. ஏனெனில் அதைத்தான் நம்பிக் கொண்டு இருக்கின்றனர்
    வெளியுலக மக்கள். பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்யும் தவறைச் சுட்டி காட்டவும் ஒரு நல்ல வலைப் பூ உள்ளதை கண்டு மகிழ்கிறேன். ஏனெனில் சுமார்
    13 வருடங்களுக்கு முன் எந்த பத்திரிக்கையும் படிப்பதை
    நிறுத்தி விட்டேன். அப்படியே எதையாவது எப்போதாவது
    படித்தாலும் அதையும் ஒரு போலீஸ்காரனைப் போல் சந்தேகக்
    கண்ணோடுதான் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் மனோரமா
    அவர்களைப்‍ பற்றிய செய்தியைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன்
    அது கூட பத்திரிகை வாங்க வே வேண்டியதில்லை. பேப்பர்
    கடைகளில் தொங்கவிட்டிருக்கும் போஸ்டரைப் பார்த்தாலே போதும்.
    அந்தம்மா பாட்டுக்கு யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் ஏதோ
    நடித்து விட்டு மக்களை முடிந்தவரை சந்தோஷப்படுத்தியவர், அவரைக்
    கொண்டு வந்து இப்படியெல்லாம் செய்தியில் போடுவது கொஞ்சமும்
    நியாயமே இல்லை. இவர்களைப் போன்ற பல அப்பாவிகளின் மனம்
    புண்படுத்தப்பட்டால் என்ன ஆகும் இந்த பத்திரிக்கைகளின் நிலை.
    எனது ஆசை ஒன்று முழுமையாக ஆராயாமல் செய்தியைத் தரும் எந்தப்
    பத்திரிக்கையும் கடைகளில் தொங்கக்கூடாது என்பதுதான். பத்திரிகைகள் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக் காட்ட ஏதாவது ஒரு பத்திரிகை வந்தால் அதை முதலில் வாங்கிப் படிக்கும் நபராக நானாகத்தான் இருப்பேன்.
    இப்போது நிறைய வலைப்பூக்கள் தொடங்கப்பட்டு நல்ல காரியங்கள் நடை பெறுவது பாராட்டுக்குரியது. ஆனாலும் இதிலும் அம்மாதிரியான ஆட்கள் நுழைந்து விடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்
    ங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இனியன் பாலாஜி]]]

    நன்றி பாலாஜி..!

    பத்திரிகைகளும் பணத்தை மையமாக வைத்தே இயங்கி வருவதாலும், அவர்களுக்குள்ளேயே சில சமயம் விட்டுக் கொடுத்து நட்புறவாடிக் கொள்வதாலும்தான் இது மாதிரி அரசியல்தனங்களை செய்து கொள்கிறார்கள்.

    ஆனாலும் இவர்கள் அரசியல்வாதிக்கு ஒப்பானவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை..!

    ReplyDelete
  34. [[[வரதராஜலு .பூ said...

    //[[[வரதராஜலு .பூ said...

    /Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [யாசவி said...
    உ.தமிழன், மே 17, 18, 2009 க்கு அப்புறமும் நீங்கள் இந்த மாதிரி பேசுவது எனக்கு வியப்பளிக்கிறது.:)

    என்ன செய்வது..? சொந்த ஊழியர்களில் நலனிலாவது இவர்கள் நடிக்காமல் இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்..!//

    இது புதுசா என்ன? மதுரை தினகரன் ஊழியர்கள் கொலை வழக்கு ஒரு முன்னுதாரணம் இருக்கிறதே. இவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?

    ஆனால் ஒன்று, நீங்கள் இந்த பதிவு போடாமல் இருந்திருந்தால் இப்படி ஒன்று நடந்ததே எனக்கு தெரியாமல் போயிருக்கும்.]]]

    தினகரன் அலுவலகத்திலாவது நடந்தது என்னவென்று வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இதில்..!

    வெளியில் சொல்லாமல் இருப்பதே மிகப் பெரும் தவறான முன்னுதாரணமாக இருக்கிறது..! //

    அப்படியே இருக்க முடியுமா? அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டாமா? அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவிட்டார்கள்.
    நல்ல டெவலப்மென்ட்.]]]

    ஹா.. ஹா.. நல்லதொரு டைமிங் கமெண்ட் நண்பரே..!

    ReplyDelete
  35. Athigaramum arasiyalum ella edathulayum velayaduthu na :( :( ithula pala per paathika paduratha paakum podhu kastama irukku...

    ReplyDelete
  36. [[[kanagu said...
    Athigaramum arasiyalum ella edathulayum velayaduthu na :( :( ithula pala per paathika paduratha paakum podhu kastama irukku...]]]

    கனகு.. அதிகாரமும், அரசியலும் சேர்ந்ததுதான் தற்போதைய பத்திரிகையுலகம்..! இது தெரிந்ததுதான்..!

    முதலாளிகள் சரி.. தொழிலாளிகளுமா இப்படியிருப்பது..?

    ReplyDelete
  37. பத்திரிக்கை அதிகம் படிக்க முடியாமல் ஓடிக்கொண்டுருக்கும் எனக்கு உங்கள் இடுகைகள் ஒவ்வொன்றும் ஆறுதல் அளிக்கின்றது.

    ReplyDelete
  38. தங்களின் அலுவலகத்தில் ஒரு தனித்துவம் வாய்ந்த பணியில் இருக்கும் இவரைப் பற்றியே இந்த பத்திரிக்கைகள் கண்டுகொள்ளவில்லையே . பின்பு எப்படி ஏழை மக்களுக்கு நிகழும் அநீதிகளை பற்றி எழுதப்போகிறது இந்த பத்திரிக்கை சமுதாயம் . மிகவும் வெக்கப்படும் நிலையில் போய்விட்டது பத்திரிக்கை சுதந்திரம் .

    ReplyDelete
  39. [[[ஜோதிஜி said...
    பத்திரிக்கை அதிகம் படிக்க முடியாமல் ஓடிக் கொண்டுருக்கும் எனக்கு உங்கள் இடுகைகள் ஒவ்வொன்றும் ஆறுதல் அளிக்கின்றது.]]]

    நன்றி ஜோதிஜி ஸார்..!

    ReplyDelete
  40. [[[♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    தங்களின் அலுவலகத்தில் ஒரு தனித்துவம் வாய்ந்த பணியில் இருக்கும் இவரைப் பற்றியே இந்த பத்திரிக்கைகள் கண்டு கொள்ளவில்லையே? பின்பு எப்படி ஏழை மக்களுக்கு நிகழும் அநீதிகளை பற்றி எழுதப் போகிறது இந்த பத்திரிக்கை சமுதாயம்? மிகவும் வெக்கப்படும் நிலையில் போய்விட்டது பத்திரிக்கை சுதந்திரம்.]]]

    -))))))))))))))))

    இப்போதைக்கு இவ்வளவுதான் முடியும் சங்கர் ஸார்..!

    ReplyDelete
  41. See who owns regisztralj.com or any other website.

    ReplyDelete