Pages

Saturday, April 03, 2010

யார் தேசத் துரோகிகள்..? நளினியா..? இன்றைய அரசியல்வாதிகளா?

02-04-10

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் கலைஞர், தான்தான் உலகிலேயே ஒப்பற்ற மனித இனத் துரோகி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.

டெல்லிக்கார அம்மாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. தான் உயிருடன் இருக்கின்றவரையில் அதிகாரத்தில் இருந்தாக வேண்டும். அதற்காக எதை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதாக நளினியை விடுதலை செய்ய முடியாது என்கிற வார்த்தையில் சொல்லிவிட்டார்.

இதற்காக அவர் சொல்லியிருக்கின்ற காரணங்கள் மிக மிக அற்பமானவை.



1. ராஜீவ் கொலை தொடர்பாக அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும்
,​​ கொலையாளிகளுடன் முழுமையாக ஒத்துழைத்துள்ளார்.​ இதன் மூலம் அவர் கொடூரமான குற்றத்தைப் புரிந்துள்ளார்.

பத்தாண்டுகளை சிறையில் கழித்த நிலையில் விடுவிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிகள் அனைவருமே கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள்தான். இதில் நளினியை மட்டும் ஏன் தனித்துப் பார்க்க வேண்டும்..?

2. சிறையில் அவர் பட்ட மேற்படிப்பும்,​​ பட்டயப் படிப்பும் பெற்றுள்ளார்.​ இதன் மூலம் அவரது மனப்போக்கு ​ மாறியுள்ளதாகக் கருத முடியாது.​

சிறையில் அவர் விடுதலைப்புலிகள் கொள்கை விளக்க முழுக்கங்களை எழுப்பவில்லை. அவர்களது செயலை நியாயப்படுத்தும் வகையில் புத்தகங்கள் எழுதவில்லை. பேசவில்லை. பேட்டியளிக்கவில்லை. மனதைத் திசை திருப்பி படிப்பில் இறங்கினார்.

3. இதுவரை அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.​ தனது செயல்களுக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை.

இதுவரையிலும் ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளன்று நூற்றுக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்கு வருத்தப்பட்டு கதறியழுத பின்பா விடுவிக்கப்பட்டார்கள். அல்லது இவர்களிடம் இது தொடர்பாக ஏதேனும் ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளதா..? இருந்தால் ஆதாரமாக காட்ட முடியுமா..?

4. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால்,​​ அவரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்வதாக நளினியின் தாயார் உத்தரவாதம் அளித்துள்ளார்.​

சோனியா காந்தி தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்வதாகத் தெரிவித்திருந்தால்கூட அதிலொன்றும் தவறில்லை.

5. இது தொடர்பான வழக்கில் நளினியின் தாயாரும்,​​ சகோதரரும்கூட சிறையில் அடைக்கப்பட்டு,​​ பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நளினியின் தாயார் சென்னையிலுள்ள ராயப்பேட்டையில் வசிக்கிறார்.​ நளினி விடுதலை செய்யப்பட்டால் அவரது தாயாருடன் அந்தப் பகுதியிலேயே வசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.​

ராயப்பேட்டை என்ன ராஜஸ்தானுக்கே போகட்டும். அதனால் உங்களுக்கென்ன பாதிப்பு..?

6. அந்தப் பகுதி அதி முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதி.​ அமெரிக்கத் தூதரகமும் அருகிலேயே உள்ளது. விடுதலைக்குப் பிறகு நளினி இந்தப் பகுதியில் தனது தாயாருடன் வசித்தால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த இன்ஸ்பெக்டர் ரொம்பவும் பயந்து சுபாவம் உள்ளவராக இருப்பதால் அவரை உடனடியாக போலீஸ் வேலையிலிருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பலாம்..

19 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு வெளியே வருபவர் வந்தவுடன் மனித வெடிகுண்டாக மாறப் போகிறாரா..? அல்லது யாருக்கும் அது தொடர்பாக டிரெயினிங் கொடுக்கப் போகிறாரா..?

7. ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளதால்,​​ தன்னை விடுவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.

ஒரு குழந்தை என்பதுதான் பிரச்சினையா..? பத்து குழந்தைகள் என்றால் உடனேயே விடுவித்திருப்பீர்களா..? ஒரு குழந்தை என்றாலும் அதன் அருகாமையையும் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இழந்துள்ளார். இந்தப் பெரிய தண்டனையே அவருக்குப் போதாதா..?


8. அவர் இந்திய தேசத்துக்கு எதிரான குற்றத்தை
செய்துள்ளார்.​ எனவே,​​ 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளதால் தன்னை விடுவிக்குமாறு அவர் கோருவதையும் ஏற்க முடியாது.

2000 சீக்கியர்கள் கொலைக்குக் காரணமான ஜெகதீஷ் டைட்லரும், அவருடைய அடிப்பொடிகளும் இன்றைக்கும் நாடாளுமன்றத்தின மைய மண்டபத்தில் உலாவருகிறார்.

போபர்ஸ் ஊழலில் பணத்தை பங்கு போட்டுக் கொண்டு இன்றைக்கும் வெட்கமில்லாமல் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது காங்கிரஸ் அரசு.. இது தேசத்துக்கு எதிரான துரோகம் இல்லையா..?

பாபர் மசூதி இடிப்பை தூண்டிவிட்டு இடிக்கின்றவரையில் வேடிக்கை பார்த்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆப்படித்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் வெளியில்தான் உலா வருகிறார்கள். அவர்கள் செய்தது தேசத் துரோகம் இல்லையா..?

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் முடிந்த அளவுக்கு சுரண்டியெடுத்து தனது கொல்லைப்புறத்தில் இருக்கும் மாட்டுக்கு தானியமாக வாங்கிப் போட்டிருக்கும் லாலு யாதவ் கயிற்றுக் கட்டிலில் காலாட்டிக் கொண்டு படுத்தபடி பேட்டியளிக்கிறாரே.. இவர் ரொம்பவே தேச பக்தரா..?

மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி வருட முடிவில் 32 கோடி ரூபாய்க்கு கணக்குக் காட்டி விட்டு ஆயிரத்து ஐநூறு முறை ரெக்கார்ட் பிரேக் அடிக்கின்றவகையில் வாய்தா வாங்கி புகழும், சொத்தையும் சேர்த்திருக்கும் புரட்சித் தலைவி அம்மா செய்தது தேசத் துரோகம் இல்லையா..?

தனது மகனின் தூண்டுதலால் நடத்தப்பட்ட தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவிகளை கருத்தில் கொள்ளாமல் மகனைக் காப்பாற்ற வேண்டி மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் அப்பீல் செய்யாமல் நடுநிலைமை டான்ஸ் ஆடும் கலைஞர் ரொம்பவே தேசபக்தரா..?

9. குற்றச்சூழல்,​​ குற்றத்தின் தன்மை ஆகியவற்றைப் பார்க்கும்போது,​​ முன் கூட்டியே விடுதலை செய்யுமாறு பரிந்துரைக்க இது சரியான வழக்கல்ல என்று ஆய்வுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால் ஆட்சிக்கு பாதிப்பு வரும் என்கின்றபோது முடிவுரையை இப்படித்தானே ஆரம்பிப்பீர்கள்..?

10. ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை தமிழக அரசு கவனமாக பரிசீலித்தது. நளினியை முன் கூட்டியே விடுதலை செய்வதாலும்,​​ராயப்பேட்டை பகுதியில் அவர் வசிப்பதாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என்று நளினியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.​ அதனடிப்படையிலேயே அவரை விடுதலை செய்ய நன்னடத்தை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். ஆனால்,​​ சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.​ மண்டல நன்னடத்தை அதிகாரி இந்த இரு அறிக்கைகளையும் ஆராய்ந்து முன்கூட்டியே விடுதலைக்குப் பரிந்துரைக்க இது சரியான வழக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

நாளை இதே நன்னடத்தை அதிகாரி பரிந்துரைக்கும் அத்தனைக்கும் இது போன்று நீங்களும் ஒரு பிரேக் போட்டுத்தான் விடுதலை செய்வீர்களா..?

11. அதேபோல், ​​ உளவியல் நிபுணரின் அறிக்கையிலும் நளினியை ஏன் விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான முடிவான காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை.

உளவியல் நிபுணர் எதற்கு..? அனைத்துக் கைதிகளையும் உளவியல் நிபுணரை வைத்து ஆராய்ச்சி செய்து அவரிடமும் சர்டிபிகேட் வாங்கித்தான் வெளியில் விட்டீர்களோ..?

12. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு,​​ நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்ற ஆலோசனைக் குழுவின் பரிந்துரை ஏற்கப்படுகிறது.​ நளினியின் மனுவை நிராகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிந்த அளவுக்கு காங்கிரஸ் ஆட்சியை பகைத்துக் கொள்ளாமல் அவர்களை அண்டியே பிழைப்பை நடத்தி இன்னமும் மூன்று தலைமுறையை அரியணையில் அமர்த்திவிட முடிவு கட்டிவிட்டீர்கள்..

இவர் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.. ஆனால் வெறும் பத்து நாட்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 'பதிலுக்குப் பதிலாக' ஐயாவை உள்ளே தூக்கி வைத்தபோது உலகமே இடிந்து விழுவதைப் போல கதறித் துடித்த இவருக்கு சிறைச்சாலையின் வலி உணர்ந்திருந்தும், அது எல்லாவற்றையும்விட தான், எனது, எனது குடும்பம் மட்டுமே முக்கியம் என்பதையே மீண்டும், மீண்டும் பல வழிகளில் இப்போதும் நிரூபித்து வருகிறார்.

முதலில் இவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா..? பொது வாழ்க்கைக்குத் தகுதியானவர்தானா..? என்பதைக் கண்டறிய உளவியல் நிபுணரின் சோதனையை இவருக்குத்தான் நடத்த வேண்டும்.

19 ஆண்டு காலம் சிறையைவிட்டு வெளியே வர விடாமல் வைத்திருப்பது என்பது ஒருவரைக் கொலை செய்ததற்கு சமம். அவர் செய்தது குற்றம்தான். ஆனால் மன்னிக்கக் கூடியது. உலகில் நடக்கும் அத்தனைக் குற்றங்களுக்கும் காரணம் சூழ்நிலைதான்.

அவருடைய வயது, அவருடைய அப்போதைய குடும்பச் சூழல், அவருடய சுபாவம் எல்லாம் ஒன்று சேர்ந்து அவருக்குத் துரோகமிழைத்துவிட்டன. அதற்கு 19 ஆண்டுகள் என்பது மிகக் கொடுமை..

ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு வெறும் 8 ஆண்டுகள் சிறையில் இருந்தாலே போதும். அவர்களை விடுவித்தாக வேண்டும் என்கிறது. ஆனால் இந்தக் கயவர்கள் தங்களது வசதிக்காக மட்டுமே அதனை பயன்படுத்தி வருகிறார்கள்.

மதுரையில் கம்யூனிஸ்ட்டு கட்சி கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை பத்தாண்டு முடிவதற்குள் விடுவித்தார்கள். லீலாவதி கொலையும் ஒரு தேசத் துரோகம்தானே..! ராஜீவ்காந்தி கொலை போன்றதுதானே அதுவும்.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..?

ஒன்றே ஒன்று.. அதில் நளினியின் பங்கு அந்த விஷயம் தெரிந்திருந்தது அவ்வளவுதான்.. ஆனால் இதில்.. கொலை செய்தவர்களே இவர்கள்தான். இவர்களுக்கு விடுதலையாம்.. அந்தப் பெண்ணுக்கு ஆயுள்காலச் சிறையாம்..!

மனுநீதிச் சோழன் பரம்பரை என்று வெட்கமில்லாமல் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொள்ளும் இந்த முறைகெட்ட அரசியல்வாதிகள்தான் உண்மையான தேசத் துரோகிகள்..!

இவர்களைப் போன்ற கேடுகெட்டவர்கள் என்றைக்கு அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்களோ அன்றைக்குத்தான் உண்மையிலேயே இந்த நாட்டுக்கு விடுதலை..!

71 comments:

  1. இவர்களை அப்புறப்படுத்துறது .........?! நடந்துருமா? எனக்கு நம்பிக்கையில்லை? ஆனால் நடக்கணும்!!!

    ReplyDelete
  2. இப்படி நெறய விஷயங்கள் நாட்டுல நடக்குது சரவணன். ஆட்சியில் இருப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்ட கும்பலிடமிருந்து வேறெதையும் எதிர்பார்க்கக்கூடாது. கொடுமை என்னன்னா எல்லா கட்சியுமே இப்படித்தான் இருக்குது. நல்ல மாற்று கண்ணுக்கு தென்படமாட்டேங்குது..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  3. உங்கள் எழுத்துக்கெல்லாம் பெப்பேன்னு இவர்களின் அநீதி.குரல் எழுப்பும் எதிர் கட்சிகளும் லாப கணக்கீடுகளை கணக்கிட்டு அனைத்தையும் நீர்த்துப் போக செய்கிறார்கள்.இது போன்ற மனுநீதி சோழ மணியடிக்கிறதுக்கும்,மக்கள் விழிப்புணர்ச்சிக்கும் வேண்டியாவது பதிவர்கள் ஒன்றாக இணைவது அவசியம்.

    ReplyDelete
  4. ராஜீவ் செத்தப்போ சந்தோசப் பட்டது ஞாபகம் இருக்கு ... இப்பவும் அவர் இறந்தது குறிச்ச வருத்தங்கள் எதுவும் மனசுல இல்ல ...

    நளினியை விடுதலை செய்யல ன்னு தெரிஞ்சப்போ கோபம் ஒன்னும் வரல்ல ... நான் நளினியோட எடத்தில இருந்திருந்தா விடுதலை செய்ங்கன்னு பிச்சை கேட்ருக்க மாட்டேன் கண்டிப்பா ...

    டீன் ஏஜில அவங்க போட்டாவை ரசிச்சு பாத்துட்டே இருந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வருது .... இப்பல்லாம் ஏனோ அவங்க எனக்கு ரொம்ப அருவருப்பா தெரியுறாங்க...

    ஆமா .... நீங்க எழுதினதெல்லாம் பெரும்பாலானவங்க நினைக்கிறது தான் ... ஆனா இப்படி வெளிப்படையா எழுதுறீங்களே பயமா இல்லை ...

    உண்மை முக்கியம் தான்... ஆனால் உயிர் அதை விட முக்கியம் தோழரே ....

    ReplyDelete
  5. whats the problem is no body (oposition parties vaico, Jay incl communists) wants to raise a voice for Nalini. Atleast if somebody raise their voice for Nalini then MK can consider this.

    If he did this alone then he will be in a big problem. He already suffered a lot during Rajiv's assignation.

    I know you as a Jay's supporter, why don't you condemn Jay, Vaigo and other opposition leaders in this regard.

    Santhose

    ReplyDelete
  6. வானம்பாடி அவர்களின் அறச்சீற்ற வார்த்தைகளை நீக்கியதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கின்றேன்.

    ReplyDelete
  7. //மக்கள் விழிப்புணர்ச்சிக்கும் வேண்டியாவது பதிவர்கள் ஒன்றாக இணைவது அவசியம்.//


    :-))))

    ReplyDelete
  8. .

    உண்மைத்தமிழன்,
    நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதி இருக்கிறீர்கள்.
    வர வர நீங்கள் பதிவுலக வைகோ ‍- வாக மாறிக்கொண்டு இருக்கிறீர்கள். :-(((

    உங்களுக்கு இருக்கும் பிரச்சனையே (நான் நினைப்பது) நீங்கள் சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல மாறிக்கொண்டு உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொண்டு பிறரையும் முட்டாளாக்குவது. :-(((

    **
    "ராஜீவ் - நளினி - புலிகள் தண்டனை - கருணாநிதி - சோனியா கைதிகள் மன்னிப்பு - விடுதலை" என்ற அனைத்தையும் நீங்கள் உங்களின் நம்பிக்கை கொள்கை சார்ந்து அணுகலாம்.

    1.கடவுள் பெரியவரா அல்லது கருணாநிதி பெரியவரா?

    2.கடவுளை மீறி "ராஜீவ் - நளினி - புலிகள் தண்டனை - கருணாநிதி - சோனியா கைதிகள் மன்னிப்பு - விடுதலை" என்ற நிகழ்வு நடந்துவிட முடியுமா?

    3.எல்லாம் கடவுளின் சித்தம்.
    ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியின்படியே எல்லாம் நடக்கும்போது (நீங்கள் பேசுவது முதல் நான் பேசுவது வரை) அனைவரும் பார்வையாளர்களே.

    4.ஜாதகம் என்பது உண்மை என்று நம்பும் நீங்கள் "ராஜீவ் - நளினி - புலிகள் தண்டனை - கருணாநிதி - சோனியா கைதிகள் மன்னிப்பு - விடுதலை" எல்லாம் கிரகக்காரன் பலன் என்றுதானே எடுக்கவேண்டும்?

    4.எப்படி விதியையும் கடவுளின் சித்தத்தையும் கோச்சார கிரக பலன்களையும் கருணாநிதி நினைத்தால் (நினைப்பதே விதியின் செயல் அல்லவா) மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்?????

    **

    கடவுளை நம்பவில்லை ஜாதகத்தை நம்பவில்லை விதியை நம்பவில்லை, மனிதனின் செயல்களும் சட்டவிதிகளையும் மட்டுமே நம்புகிறேன்"... என்று நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில் நான் "ராஜீவ் - நளினி - புலிகள் தண்டனை - கருணாநிதி - சோனியா கைதிகள் மன்னிப்பு - விடுதலை" போன்றவற்றை "சட்டம் - குற்றம் மனிதர்களின் சுயநலம்" என்ற கோணத்தில் உங்களுக்கு நிச்சயம் புரியவைக்க முடியும்.

    நீங்கள் அடிக்கடி எடுக்கும் இரட்டைநிலையால் குழம்பிப்போய் உள்ளேன். :-((((

    **
    உங்களை எதில் சேர்ப்பது எதை நம்புகிறீர்கள் என்று தெரியாமல் என்ன செய்வது?

    .

    நீங்கள் ஒன்றும் எனது விளக்கத்தை எதிர்பார்த்த்து இல்லை என்றாலும், உங்களின் நம்பிக்கைகள் பதிவுகள் வழியாக தெரிந்ததால், எப்படி பிரச்சனை இந்தமாதிரி பிரச்சனை வந்தால்மட்டும் பகுத்தறிவுவாதியாக மாறிவிடுகிறீர்கள்? செலக்டிவ் நம்பிக்கைகள் ??

    .

    ReplyDelete
  9. Santhose சொல்வதும் சரிதான். ஏற்கனவே விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டித்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1991 தேர்தலில் இவர்களால்தான் பயங்கர அடி வாங்கினார். இவர்களால் இழந்தது போதாதா. நளினியை விடுதலை செய்தால் இதை காரணம் காட்டி புரட்சி தலைவி அம்மா திமுக ஆட்சியைக் கலைக்கக் கோருவார். காங்கிரசுடன் கூட்டு வைக்க இதை ஒரு அடித்தலமாக் ஆக்கிக் கொள்வார். இப்படி செய்வது கண்ணைத் திறந்து கொண்டு பாழும் கிணற்றில் விழுவதற்கு சமம் என்று கலைஞருக்குத் தெரியாதா. நீங்களும் நானும் பதவியில் இருந்தாலும் அதை இழக்க விரும்ப மாட்டோம். என்ன செய்தாவது அதைத் தக்க வைத்துக் கொள்ளதான் பார்ப்போம்.

    ReplyDelete
  10. //ஏற்கனவே விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டித்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1991 தேர்தலில் இவர்களால்தான் பயங்கர அடி வாங்கினார். இவர்களால் இழந்தது போதாதா.
    //
    விடுதலைபுலிகளால் திமுக எதையும் இழக்கவில்லை ஆனால் திமுக வால் எல்லாவற்றையும் விடுதலைபுலிகள் இழந்துள்ளனர், அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் போராளிகளை சந்திக்கிறார் என்றவுடன் அவர் சந்திப்பதற்க்கு முதல் நாள் நரித்தனத்துடன் எதிர்கட்சி தலைவர் கருணாநிதி போராளி தலைவர்களை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் போராளி அமைப்புகளுக்குள் தன் அசிங்க அரசியலை திணித்தார் கருணாநிதி, மேலும் ஈழத்திற்காக கருணாநிதி ஆட்சி கலைக்கப்படவில்லை, "நயனம்" என்ற பதிவர் இவர் ஒரு (முன்னாள்) திமுக அனுதாபியும் கூட அவர் எழுதிய பதிவிலிருந்து சில வரிகள்

    1) கருணாநிதி ஏற்கனவே இரண்டு முறை
    ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா?

    இல்லை.


    1976-ல் இந்திராகாந்தி அம்மையார்
    அவசரகாலம் அறிவித்து நாடெங்கும்
    நெருக்குதலுக்கு ஆன போது
    அதை எதிர்த்தார் கருணாநிதி.
    அந்தச் சமயம் மலையாளியான
    ம.கோ.இராமச்சந்திரனை வைத்து
    தி.மு.க உடை பட்டிருந்த காலத்தில்,
    ம.கோ.இராவிடம் கூட்டு வைத்துக்
    கொண்ட இந்திராகாந்தி, தங்களிருவர்
    விருப்பத்திற்கிணங்க
    தி.மு.க ஆட்சியைக் கலைத்தார்கள்.


    1991ல் கலைக்கப்பட்ட காரனங்கள்:


    மண்டல் பரிந்துரையை நிறுவனப்
    படுத்திய மாண்புமிகு வி.பி.சிங்
    அவர்களை ஆதரித்ததால் இந்தியாவின்
    ஆதிக்க சக்திகள் கட்சி வேறுபாடின்றி
    திரண்டிருந்தன.


    தமிழகம் தவமாய் தவமிருந்து
    பெற்ற பெறற்கரிய பேறான
    செயலலிதா அம்மையார் தமிழகத்திற்காக
    அல்லும் பகலும் உழைக்க
    ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தார்.



    இராசீவ் காந்தியுடன் கூட்டணி
    வைத்திருந்தார். இராசீவும், செயலலிதாவும்
    வி.பி.சிங்கிற்கும் மண்டலுக்கும் எதிரானவர்கள்.
    இருவரும் சேர்ந்து சனநாயகத் திருச்சேவை
    செய்து பொம்மை அரசின் தலைவராக
    இருந்த சந்திரசேகரை வைத்து கருணாநிதி
    ஆட்சியைக் கலைத்தனர்.


    ஆக, 1976ல் ம.கோ.இராவும் இந்திராகாந்தி
    அம்மையாரும் தி.மு.க ஆட்சியை கலைத்தனர்.

    1991ல் ம.கோ.இராவின் வாரிசும்,
    இந்திராகாந்தியின் வாரிசும் கலைத்தார்கள்.

    இங்கு எங்கேயும் ஈழத்தமிழர் என்ற
    விவகாரம் இல்லை.

    2) செயலலிதாவும் சில உதிரிகளும்
    1991ல் ஆட்சியைக் கலைக்க, தி.மு.க
    விடுதலைப் புலிகள் ஆதரவு
    கொண்ட கட்சி என்று
    பேசியதால்தான் ஆட்சி
    கலைந்தது என்றார்களே?


    1991ல் கருணாநிதி ஆட்சி கலைக்கப்
    பட்ட போது விடுதலைப் புலிகள் இயக்கம்
    இந்தியாவில் தடை செய்யப் பட்ட
    இயக்கம் அல்ல.

    1991 சனவரியில் தி.மு.க ஆட்சி கலைக்கப்
    பட்ட பின்னர் அதே ஆண்டு மே மாதம்
    நடக்கவிருந்த தேர்தலுக்குச் சில நாள்கள்
    முன்னர்தான் இராசீவ் காந்தி
    கொல்லப் பட்டார்.

    இராசீவ் கொலைக்குப் பின்னர்தான்
    விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்
    மேல் தடை கொண்டு வரப் பட்டது.
    அதற்குப் பின்னர்தான் அவர்களுக்கு
    எதிரான பிரச்சாரம் வலுவாகச்
    செய்யப்பட்டது.

    அதொடு, தி.மு.க என்றைக்குமே,
    விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்
    இல்லை என்பது "உரோ" அமைப்பிற்கும்
    காங்கிரசிற்கும் நன்கு தெரியும்.

    ஆகவே ஈழத்தமிழர் சரவலால் ஆட்சியை
    இழந்தோம் என்று தி.மு.க சொல்ல முடியாது.

    ம.கோ.இரா, இந்திரா, வி.பி.சிங், இராசீவ்,
    செயலலிதா ஆகியோரின் செயல்பாடுகளை
    ஈழத்தமிழரைக் கொண்டு மறைக்கக்
    கூடாதல்லவா?

    http://nayanam.blogspot.com/2009/01/raqs-recently-asked-qns-on-dmk-part1.html எழுதியதி

    ReplyDelete
  11. உண்மை தமிழன்:

    ஒரு மாபெரும் கொலை சம்பவத்தில் மறைமுகமாக பங்கு பெற்றவரை அவ்வளவு எளிதாக விடுதலை செய்து விட்டால்,ம அது அடுத்து சதி டிடம் தீட்ட விரும்புவோருக்கு பாடமாக அமையாது.

    இந்தியாவில் பரவ இல்லை, இதே நிலை அராபிய நாடுகளில் சாத்தியமா.

    சரி இதை கண்டித்து அதிமுக, பா மா கா ஒரு போராட்டம் நடத்தலாமே. அவர்களுக்கு நன்கு தெரியும் இருக்கிற வாக்குகளும் போய் விடும் என்று.

    ReplyDelete
  12. //Santhose//
    இது நான் இல்லை..

    ReplyDelete
  13. //2000 சீக்கியர்கள் கொலைக்குக் காரணமான ஜெகதீஷ் டைட்லரும், அவருடைய அடிப்பொடிகளும் இன்றைக்கும் நாடாளுமன்றத்தின மைய மண்டபத்தில் உலாவருகிறார்.//

    சீக்கியர்களாள் இறந்தது மாமியார்!

    அந்த சந்தோஷத்தில் இந்த வெகுமானம்.

    இங்கு எல்லாமே சோனியா அம்மையாரின் விருப்பப்படிதானே நடக்கிறது.

    இந்தியா மறுபடி அடிமை நாடாகிவிட்டது என்பதுதான் உண்மை.

    அவளுடைய கணவன் உயிருக்காக நம் நாட்டை அடகு வைத்து ஒரு இனத்தையே அழித்தவள்தானே.

    அவளுக்கு கருணாநிதை அடிமைதானே.
    இதை தவிர வேறு என்ன அவரிடம் இருந்து எதிர் பார்க்கமுடியும்.

    ReplyDelete
  14. [[[திரவிய நடராஜன் said...
    பாராட்டுக்கள்.மனசாட்சி கூறுவதை அப்படியே எழுதியுள்ளீர்கள். தொடரட்டும்.]]]

    தங்களுடைய ஆதரவிற்கு நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  15. நளினி விடுதலை: அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும்! ஒரு விவாதம்
    நாள் நேரம்: 04-04-10 (ஞாயிறு) மாலை 5 மணி

    இடம்: தெய்வநாயகம் பள்ளி, தி.நகர், சென்னை.

    கருத்துரை

    பூங்குழலி

    அருள் எழிலன்

    பாரதி கிருஷ்ணகுமார்

    தாமரை

    விடுதலை இராசேந்திரன்

    சுந்தரராஜன்

    பாண்டிமாதேவி

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: www.keetru.com

    ReplyDelete
  16. //இந்தியா மறுபடி அடிமை நாடாகிவிட்டது என்பதுதான் உண்மை//

    அதுவும் இத்தாலிக்கு! :((

    ReplyDelete
  17. குழலி அவர்களே விடுதலைப் புலிகளால் திமுக ஆட்சியை இழக்கவில்லை என்பதை வேண்டுமானால் நான் ஒப்புக் கொள்கிறேன். திமுக வால் எல்லாவற்றையும் விடுதலைபுலிகள் இழந்துள்ளனர். இதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜிவ் காந்தி படுகொலையில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் எப்போது சம்பந்தப் பட்டதாக தெரிய வந்ததோ அன்றைக்கே அவர்களுக்கு சனி பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதன் பிறகு தங்களைத் திருத்திக் கொள்ள எவ்வளவோ சந்தர்ப்பம் வாய்த்தும் அதை அவர்கள் சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் விதைத்த வினையை அவர்களே அறுவடை செய்துக் கொண்டார்கள் என்பது என் கருத்து.

    ReplyDelete
  18. போய் எதாவது கோயில்ல தீபாரதனை காட்டு..இல்லைன்னா தேங்காமூடி பொறுக்கு. போயஸ் கார்டன் வாசலை பெருக்கு.அதுவும் முடியலைன்னா டோமினோஸ்ன்னு ஒரு பிட்ஸா கடை இருக்கு. அங்க போய் வெண்ணை வெட்டற கத்திக்கு சாணை பிடி. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம். எத்தனை தமிழர் பிரதிநிதிகள் இருக்காங்க? இந்த வேலையெல்லாம் அவங்க பாத்துகுவாங்க.

    ReplyDelete
  19. அப்சல் குருன்னு ஒருத்தன் இருக்கான். இங்களுக்கெல்லாம் நியாபகம் இருக்குமான்னு தெரியலை. அன்னிக்கு நடந்த தாக்குதல்ல இவனுங்க கட்சிக்காரன் எவனாச்சும் செத்திருந்தால் தெரிஞ்சிருக்கும்.அவனுக்கு விடுதலை வேணும்னு இவனுங்க போராடாமல் இருக்காங்களேன்னு சந்தோஷப்படுய்யா..

    ReplyDelete
  20. நளினிக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது நண்பரே...

    ReplyDelete
  21. மானமிகு கீ.வீரமணி, எழுச்சித்தமிழன் திருமா, இன்னும் தமிழுக்காக வாழும் அத்தனை பேரும் இன்னிக்கு எண்ணெய் தேய்த்து தலை முழுகி விட்டு , நாட்டுக்கோழி அடித்து குழம்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்கென்னய்யா வந்துச்சு..நீ மட்டும் பேசாமலிருந்தால் எத்தனை பேர் தீக்குளிக்க தயாராய் இருக்கிறார்கள் தெரியுமா?

    ReplyDelete
  22. கல்வெட்டு சொன்னதுதான் என் கருத்தும்...

    வயசுக்கும், அனுபவத்துக்கும் மீறி உணர்சிவசப்படுகிறீர்கள்.

    மற்றபடி, இத்தாலி ஆட்சி, கருங்காலி கருணாநிதி என்பதை தினம் பத்து தடவை சொல்லி சந்தோஷிக்கும் இனமான பெருச்சாளிகளுக்கு வேண்டுமானால் உங்கள் பதிவு தேனாய்,தீம்பாலாய் இருக்கும்.

    உடம்பை பார்த்துக்கங்க...

    ReplyDelete
  23. மிகவும் கோபத்துடன் எழுதப்பட்ட பதிவு என்றாலும், தர்க்க ரீதியில் சரியாகவே உள்ளது.

    ஆறுமாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட எனது பதிவு
    http://marchoflaw.blogspot.com/2008/10/4.html

    ReplyDelete
  24. [[[திரவிய நடராஜன் said...
    பாராட்டுக்கள். மனசாட்சி கூறுவதை அப்படியே எழுதியுள்ளீர்கள். தொடரட்டும்.]]]

    நன்றிங்க ஐயா..!

    எவ்வளவுதான் சமாதானப்படுத்தினாலும் மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது..!

    ReplyDelete
  25. [[[வானம்பாடிகள் said...
    சூப்பர்ப். சூப்பர்ப். இப்படியே இழுபட்டு தண்டனைக் காலம் முடிந்தாலும் இந்தக் காரணங்கள் மாறப் போவதில்லைதானே? அப்ப எதச் சொல்லி உள்ள வைக்கிறது? இதப்போய் எவன் கேக்கப் போறான். நடத்துன்னு செய்யுறாங்க போல.]]]

    கேட்பதற்கு ஆள் இல்லை..! தனி நபர்கள்தானே என்றெண்ணுகிறார்கள்..

    நளினி என்றில்லாமல் ஒட்டுமொத்தமாக இது போன்று அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுவிக்க மாநிலம் தழுவிய ஒரு அமைப்போ கட்சியோ தேவை ஸார்..!

    ReplyDelete
  26. [[[பொற்கோ said...
    இவர்களை அப்புறப்படுத்துறது?! நடந்துருமா? எனக்கு நம்பிக்கையில்லை? ஆனால் நடக்கணும்!!!]]]

    கஷ்டமே வரக்கூடாது.. நல்லதே நடக்கணும்னு நாம வேண்டிக்குவோம் இல்லையா..? அதே மாதிரிதான் இதையும் நினைச்சுக்க வேண்டியிருக்கு..!

    போய்த் தொலைய மாட்டேங்குறானுங்க..!

    ReplyDelete
  27. [[[sriram said...
    இப்படி நெறய விஷயங்கள் நாட்டுல நடக்குது சரவணன். ஆட்சியில் இருப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்ட கும்பலிடமிருந்து வேறெதையும் எதிர்பார்க்கக்கூடாது. கொடுமை என்னன்னா எல்லா கட்சியுமே இப்படித்தான் இருக்குது. நல்ல மாற்று கண்ணுக்கு தென்படமாட்டேங்குது..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    அதான் நம்ம பிரச்சினையே.. எல்லாருமே கூட்டுக் களவாணிகளாக இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை..!

    ReplyDelete
  28. [[[ராஜ நடராஜன் said...
    உங்கள் எழுத்துக்கெல்லாம் பெப்பேன்னு இவர்களின் அநீதி. குரல் எழுப்பும் எதிர்கட்சிகளும் லாப கணக்கீடுகளை கணக்கிட்டு அனைத்தையும் நீர்த்துப் போக செய்கிறார்கள். இது போன்ற மனுநீதி சோழ மணியடிக்கிறதுக்கும், மக்கள் விழிப்புணர்ச்சிக்கும் வேண்டியாவது பதிவர்கள் ஒன்றாக இணைவது அவசியம்.]]]

    அவசியத்தை உணர்த்தியிருக்கிறீர்கள் ஸார்.. மிக்க நன்றி..!

    ReplyDelete
  29. [[[A.Muthu Prakash said...

    ராஜீவ் செத்தப்போ சந்தோசப்பட்டது ஞாபகம் இருக்கு. இப்பவும் அவர் இறந்தது குறிச்ச வருத்தங்கள் எதுவும் மனசுல இல்ல.]]]

    என்ன ஸார் இப்படி எளிமையா சொல்றீங்க.. அது ராஜீவ்காந்தின்னு பார்க்காதீங்க.. நம்மைப் போன்ற ஒரு உயிர்தான்னு நினைக்கலாமே..?

    [[[நளினியை விடுதலை செய்யலன்னு தெரிஞ்சப்போ கோபம் ஒன்னும் வரல்ல. நான் நளினியோட எடத்தில இருந்திருந்தா விடுதலை செய்ங்கன்னு பிச்சை கேட்ருக்க மாட்டேன் கண்டிப்பா.]]]

    இல்ல ஸார்.. நீங்க அவங்களை புரிஞ்சுக்கலை.. அவங்க சந்தர்ப்ப சூழ்நிலையாலதான் அந்தக் கொடுமையைத் தெரிஞ்சும் மெளனமா இருந்திட்டாங்க. இப்ப அந்தத் தப்பை உணர்ந்துட்டாங்க.. அதை நாமளும் ஏத்துக்குறதுதான் மனிதாபிமானம்..!

    [[[டீன் ஏஜில அவங்க போட்டாவை ரசிச்சு பாத்துட்டே இருந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வருது. இப்பல்லாம் ஏனோ அவங்க எனக்கு ரொம்ப அருவருப்பா தெரியுறாங்க...]]]

    நான் மேல போட்டிருக்கனே இந்த புகைப்படத்தைத்தான பார்த்தீங்க.. இதையா..? அதிர்ச்சியாக இருக்கிறது..!

    [[[ஆமா. நீங்க எழுதினதெல்லாம் பெரும்பாலானவங்க நினைக்கிறதுதான். ஆனா இப்படி வெளிப்படையா எழுதுறீங்களே பயமா இல்லை. உண்மை முக்கியம்தான். ஆனால் உயிர் அதை விட முக்கியம் தோழரே.]]]

    உயிரைவிட உண்மையான கருத்து மிகவும் முக்கியம் தோழரே..!

    அதுக்குத்தானே வலையுலகம்..!

    ReplyDelete
  30. [[[Santhose said...

    whats the problem is no body (oposition parties vaico, Jay incl communists) wants to raise a voice for Nalini. Atleast if somebody raise their voice for Nalini then MK can consider this.

    If he did this alone then he will be in a big problem. He already suffered a lot during Rajiv's assignation.

    I know you as a Jay's supporter, why don't you condemn Jay, Vaigo and other opposition leaders in this regard.

    Santhose]]]

    எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்த விஷயத்தில் ஒத்துப் போகாமல் ஒதுங்கியிருக்கிறார்கள்.

    இதுவும் கருணாநிதிக்கு கிடைத்த தைரியத்திற்கான காரணங்களில் ஒன்று..

    ஏன் என்றால்.. நம்ம மக்களோட மனநிலைதான்.. ரொம்ப, ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே. அதைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள்..

    நான் ஜெயாவின் அடிவருடியோ, வைகோவின் அடியாளோ, திருமாவின் தொண்டனோ கிடையாது..

    எனது முந்தைய அரசியல் பதிவுகள் அனைத்தையும் எடுத்துப் படித்துப் பாருங்கள் புரியும்..

    ஏன் இதில்கூட ஜெயலலிதா செய்திருக்கும் தேசத் துரோகத்தை சொல்லியிருக்கிறனே.. இன்னுமா சந்தேகம்..?

    ReplyDelete
  31. [[[ஜோதிஜி said...
    வானம்பாடி அவர்களின் அறச்சீற்ற வார்த்தைகளை நீக்கியதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கின்றேன்.]]]

    அண்ணே.. மன்னிக்கணும்..

    அதை நான் நீக்கவில்லை.. அவரேதான் டெலீட் செய்திருக்கிறார். வேண்டுமானால் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்..!

    ReplyDelete
  32. [[[T.V.ராதாகிருஷ்ணன் said...

    //மக்கள் விழிப்புணர்ச்சிக்கும் வேண்டியாவது பதிவர்கள் ஒன்றாக இணைவது அவசியம்.//

    :-))))]]]

    கரெக்ட்டான பாயிண்ட்டை புடிச்சிருக்காரு அந்த ஸாரு..

    இந்த ஸாரும் அதையே கரெக்ட்டா எடுத்துப் போட்டிருக்காரு..

    நன்றிங்கோ..!

    ReplyDelete
  33. [[[ananth said...
    Santhose சொல்வதும் சரிதான். ஏற்கனவே விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டித்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1991 தேர்தலில் இவர்களால்தான் பயங்கர அடி வாங்கினார். இவர்களால் இழந்தது போதாதா. நளினியை விடுதலை செய்தால் இதை காரணம் காட்டி புரட்சி தலைவி அம்மா திமுக ஆட்சியைக் கலைக்கக் கோருவார். காங்கிரசுடன் கூட்டு வைக்க இதை ஒரு அடித்தலமாக் ஆக்கிக் கொள்வார். இப்படி செய்வது கண்ணைத் திறந்து கொண்டு பாழும் கிணற்றில் விழுவதற்கு சமம் என்று கலைஞருக்குத் தெரியாதா. நீங்களும் நானும் பதவியில் இருந்தாலும் அதை இழக்க விரும்ப மாட்டோம். என்ன செய்தாவது அதைத் தக்க வைத்துக்கொள்ளதான் பார்ப்போம்.]]]

    பதவி வெறி பிடித்த அரசியல் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது..!

    ReplyDelete
  34. [[[சுந்தரராஜன் said...
    :)]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  35. [[[குழலி / Kuzhali said...
    //ஏற்கனவே விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டித்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1991 தேர்தலில் இவர்களால்தான் பயங்கர அடி வாங்கினார். இவர்களால் இழந்தது போதாதா//

    விடுதலைபுலிகளால் திமுக எதையும் இழக்கவில்லை ஆனால் திமுகவால் எல்லாவற்றையும் விடுதலைபுலிகள் இழந்துள்ளனர், அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் போராளிகளை சந்திக்கிறார் என்றவுடன் அவர் சந்திப்பதற்க்கு முதல் நாள் நரித்தனத்துடன் எதிர்கட்சி தலைவர் கருணாநிதி போராளி தலைவர்களை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் போராளி அமைப்புகளுக்குள் தன் அசிங்க அரசியலை திணித்தார் கருணாநிதி, மேலும் ஈழத்திற்காக கருணாநிதி ஆட்சி கலைக்கப்படவில்லை, "நயனம்" என்ற பதிவர் இவர் ஒரு (முன்னாள்) திமுக அனுதாபியும் கூட அவர் எழுதிய பதிவிலிருந்து சில வரிகள்

    1) கருணாநிதி ஏற்கனவே இரண்டு முறை ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா?

    இல்லை.

    1976-ல் இந்திராகாந்தி அம்மையார்
    அவசரகாலம் அறிவித்து நாடெங்கும்
    நெருக்குதலுக்கு ஆன போது
    அதை எதிர்த்தார் கருணாநிதி.
    அந்தச் சமயம் மலையாளியான
    ம.கோ.இராமச்சந்திரனை வைத்து
    தி.மு.க உடைபட்டிருந்த காலத்தில்,
    ம.கோ.இராவிடம் கூட்டு வைத்துக்
    கொண்ட இந்திராகாந்தி, தங்களிருவர்
    விருப்பத்திற்கிணங்க தி.மு.க ஆட்சியைக் கலைத்தார்கள்.

    1991ல் கலைக்கப்பட்ட காரனங்கள்:

    மண்டல் பரிந்துரையை நிறுவனப்படுத்திய மாண்புமிகு வி.பி.சிங் அவர்களை ஆதரித்ததால் இந்தியாவின் ஆதிக்க சக்திகள் கட்சி வேறுபாடின்றி திரண்டிருந்தன.
    தமிழகம் தவமாய் தவமிருந்து
    பெற்ற பெறற்கரிய பேறான
    செயலலிதா அம்மையார் தமிழகத்திற்காக அல்லும் பகலும் உழைக்க ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தார். இராசீவ்காந்தியுடன் கூட்டணி
    வைத்திருந்தார். இராசீவும், செயலலிதாவும் வி.பி.சிங்கிற்கும் மண்டலுக்கும் எதிரானவர்கள்.
    இருவரும் சேர்ந்து சனநாயகத் திருச்சேவை செய்து பொம்மை அரசின் தலைவராக இருந்த சந்திரசேகரை வைத்து கருணாநிதி
    ஆட்சியைக் கலைத்தனர்.

    ஆக, 1976ல் ம.கோ.இராவும் இந்திராகாந்தி அம்மையாரும் தி.மு.க ஆட்சியை கலைத்தனர்.

    1991ல் ம.கோ.இராவின் வாரிசும்,
    இந்திராகாந்தியின் வாரிசும் கலைத்தார்கள்.

    இங்கு எங்கேயும் ஈழத்தமிழர் என்ற
    விவகாரம் இல்லை.

    2) செயலலிதாவும் சில உதிரிகளும்
    1991ல் ஆட்சியைக் கலைக்க, தி.மு.க
    விடுதலைப்புலிகள் ஆதரவு கொண்ட கட்சி என்று பேசியதால்தான் ஆட்சி
    கலைந்தது என்றார்களே?

    1991ல் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டபோது விடுதலைப்புலிகள் இயக்கம்
    இந்தியாவில் தடை செய்யப்பட்ட
    இயக்கம் அல்ல.

    1991 சனவரியில் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் அதே ஆண்டு மே மாதம் நடக்கவிருந்த தேர்தலுக்குச் சில நாள்கள்
    முன்னர்தான் இராசீவ் காந்தி
    கொல்லப்பட்டார்.

    இராசீவ் கொலைக்குப் பின்னர்தான்
    விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்
    மேல் தடை கொண்டு வரப்பட்டது.
    அதற்குப் பின்னர்தான் அவர்களுக்கு
    எதிரான பிரச்சாரம் வலுவாகச்
    செய்யப்பட்டது.

    அதொடு, தி.மு.க என்றைக்குமே,
    விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்
    இல்லை என்பது "உரோ" அமைப்பிற்கும் காங்கிரசிற்கும் நன்கு தெரியும்.

    ஆகவே ஈழத்தமிழர் சரவலால் ஆட்சியை இழந்தோம் என்று தி.மு.க சொல்ல முடியாது.

    ம.கோ.இரா, இந்திரா, வி.பி.சிங், இராசீவ், செயலலிதா ஆகியோரின் செயல்பாடுகளை ஈழத்தமிழரைக் கொண்டு மறைக்கக் கூடாதல்லவா?

    http://nayanam.blogspot.com/2009/01/raqs-recently-asked-qns-on-dmk-part1.html எழுதியதி]]]

    குழலி..

    நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்..!

    வெளிப்படையாக ராஜீவ், ஜெயலலிதாவின் ஆதிகத்தைச் சொல்ல முடியாத காரணத்தால்தான் சுப்பிரமணியம் சுவாமி புலிகள் தொடர்பு என்று ஓங்கி, ஒங்கி குதித்ததால் அது அப்படியே நமது மக்கள் மனதில் மண்டிவிட்டது..!

    அவ்வளவுதான் விஷயம்..!

    ReplyDelete
  36. [[[ராம்ஜி_யாஹூ said...

    உண்மை தமிழன்: ஒரு மாபெரும் கொலை சம்பவத்தில் மறைமுகமாக பங்கு பெற்றவரை அவ்வளவு எளிதாக விடுதலை செய்து விட்டால், அது அடுத்து சதி டிடம் தீட்ட விரும்புவோருக்கு பாடமாக அமையாது. இந்தியாவில் பரவ இல்லை, இதே நிலை அராபிய நாடுகளில் சாத்தியமா. சரி இதை கண்டித்து அதிமுக, பா மா கா ஒரு போராட்டம் நடத்தலாமே. அவர்களுக்கு நன்கு தெரியும் இருக்கிற வாக்குகளும் போய்விடும் என்று.]]]

    இதேதான்.. ஆனால் இவர்களை மட்டும் ஒரு நாளில் ஜெயிலில் போட்டால் போதும். அவ்வளவுதான் உலகமே இடிந்து விழுந்து விடுவதைப் போல துள்ளிக் குதிப்பார்கள்..!

    19 ஆண்டுகள் தண்டனை போதாதா ராம்ஜி ஸார்..! விடுங்க.. இனியாச்சும் எங்கயாச்சும் போய் பொழைச்சுக்கட்டும்..!

    ReplyDelete
  37. [[[சந்தோஷ் = Santhosh said...

    //Santhose//

    இது நான் இல்லை..]]]

    சொல்லவே வேணாம்ண்ணே.. எனக்குத் தெரியாதா..?

    ReplyDelete
  38. [[[பரிதி நிலவன் said...

    //2000 சீக்கியர்கள் கொலைக்குக் காரணமான ஜெகதீஷ் டைட்லரும், அவருடைய அடிப்பொடிகளும் இன்றைக்கும் நாடாளுமன்றத்தின மைய மண்டபத்தில் உலாவருகிறார்.//

    சீக்கியர்களாள் இறந்தது மாமியார்!
    அந்த சந்தோஷத்தில் இந்த வெகுமானம். இங்கு எல்லாமே சோனியா அம்மையாரின் விருப்பப்படிதானே நடக்கிறது.
    இந்தியா மறுபடி அடிமை நாடாகிவிட்டது என்பதுதான் உண்மை.
    அவளுடைய கணவன் உயிருக்காக நம் நாட்டை அடகு வைத்து ஒரு இனத்தையே அழித்தவள்தானே.
    அவளுக்கு கருணாநிதை அடிமைதானே. இதை தவிர வேறு என்ன அவரிடம் இருந்து எதிர் பார்க்கமுடியும்.]]]

    அதான் நீங்களே சொல்லிட்டீங்க.. நான் என்ன சொல்றது..?

    ஆனாலும் அவள்.. இவள் என்கிற ஏக வசனம் வேண்டாமே..? இனியாவது தவிர்த்து விடுங்கள்..!

    ReplyDelete
  39. நன்றி வீரமணி அவர்களே..!

    சுந்தர்ராஜன் ஸார்.. அவசியம் கண்டிப்பாக வருகிறேன்..!

    ReplyDelete
  40. ப்ரீத்திவ் மிக்க நன்றி..!

    ReplyDelete
  41. [[[என்.ஆர்.சிபி said...
    //இந்தியா மறுபடி அடிமை நாடாகிவிட்டது என்பதுதான் உண்மை//
    அதுவும் இத்தாலிக்கு!:((]]]

    சிபி தம்பி..! நன்னி..! கூட துணைக்கு ஒரு ஆள் இருக்குடோய்..!

    ReplyDelete
  42. [[[ananth said...
    குழலி அவர்களே விடுதலைப்புலிகளால் திமுக ஆட்சியை இழக்கவில்லை என்பதை வேண்டுமானால் நான் ஒப்புக் கொள்கிறேன். திமுகவால் எல்லாவற்றையும் விடுதலைபுலிகள் இழந்துள்ளனர். இதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜிவ்காந்தி படுகொலையில் விடுதலைப்புலிகள் மற்றும் பிரபாகரன் எப்போது சம்பந்தப்பட்டதாக தெரிய வந்ததோ அன்றைக்கே அவர்களுக்கு சனி பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதன் பிறகு தங்களைத் திருத்திக் கொள்ள எவ்வளவோ சந்தர்ப்பம் வாய்த்தும் அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் விதைத்த வினையை அவர்களே அறுவடை செய்துக் கொண்டார்கள் என்பது என் கருத்து.]]]

    பெரும்பான்மையரின் கருத்தும் இதுதான் ஆனந்த்..!

    ReplyDelete
  43. [[[மணிஜீ...... said...
    போய் எதாவது கோயில்ல தீபாரதனை காட்டு. இல்லைன்னா தேங்காமூடி பொறுக்கு. போயஸ் கார்டன் வாசலை பெருக்கு.அதுவும் முடியலைன்னா டோமினோஸ்ன்னு ஒரு பிட்ஸா கடை இருக்கு. அங்க போய் வெண்ணை வெட்டற கத்திக்கு சாணை பிடி. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம். எத்தனை தமிழர் பிரதிநிதிகள் இருக்காங்க? இந்த வேலையெல்லாம் அவங்க பாத்துகுவாங்க.]]]

    அவங்கதான் பார்க்கலையே..? அதுக்காக நாம சும்மா இருக்க முடியுமாண்ணே..!

    ReplyDelete
  44. [[[மணிஜீ...... said...
    அப்சல் குருன்னு ஒருத்தன் இருக்கான். இங்களுக்கெல்லாம் நியாபகம் இருக்குமான்னு தெரியலை. அன்னிக்கு நடந்த தாக்குதல்ல இவனுங்க கட்சிக்காரன் எவனாச்சும் செத்திருந்தால் தெரிஞ்சிருக்கும். அவனுக்கு விடுதலை வேணும்னு இவனுங்க போராடாமல் இருக்காங்களேன்னு சந்தோஷப்படுய்யா..]]]

    நான் போராடுவேன்..

    எந்தவொரு குற்றமாக இருந்தாலும் தூக்கிப் போடக் கூடாது..

    சிறைத்தண்டனையும் எட்டு வருடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது..!

    இது என்னோட கொள்கை..! ஹி.. ஹி.. உலக மனித உரிமை ஆணையத்தின் கொள்கையும் இதுதான்..!

    ReplyDelete
  45. [[[மணிஜீ...... said...
    நளினிக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது நண்பரே.]]]

    இருந்துவிட்டுப் போகட்டும்.. அந்த ஒரு அடையாளமே அவருடைய வாழ்க்கை முழுவதும் அவருக்கு இருக்கும் தண்டனையாக இருந்துவிட்டுப் போகட்டுமே..

    ஏன் உடல் ரீதியாக நாம் தண்டிக்க வேண்டும்..?

    ReplyDelete
  46. [[[மணிஜீ...... said...
    மானமிகு கீ.வீரமணி, எழுச்சித்தமிழன் திருமா, இன்னும் தமிழுக்காக வாழும் அத்தனை பேரும் இன்னிக்கு எண்ணெய் தேய்த்து தலை முழுகி விட்டு , நாட்டுக்கோழி அடித்து குழம்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்கென்னய்யா வந்துச்சு. நீ மட்டும் பேசாமலிருந்தால் எத்தனை பேர் தீக்குளிக்க தயாராய் இருக்கிறார்கள் தெரியுமா?]]]

    ஐயையோ.. வேண்டாம்ன்னே..! நம்மாளால முடிஞ்ச அளவுக்கு நம்மளோட எதிர்ப்பைக் காட்டுவோம்ண்ணே..!

    ReplyDelete
  47. HELLO, I FULLY ENDORSE THE STATEMENT OF Unmai Tamilan.Only Prabhakaran is to be blamed for this catostrophe. But for Prabhakaran the movement would have won, atleast got international recognision

    ReplyDelete
  48. [[[டவுசர் பாண்டி... said...
    கல்வெட்டு சொன்னதுதான் என் கருத்தும்... வயசுக்கும், அனுபவத்துக்கும் மீறி உணர்சிவசப்படுகிறீர்கள்.
    மற்றபடி, இத்தாலி ஆட்சி, கருங்காலி கருணாநிதி என்பதை தினம் பத்து தடவை சொல்லி சந்தோஷிக்கும் இனமான பெருச்சாளிகளுக்கு வேண்டுமானால் உங்கள் பதிவு தேனாய், தீம்பாலாய் இருக்கும்.
    உடம்பை பார்த்துக்கங்க...]]]

    டவுசர் பாண்டி எப்பவாச்சும் ஒருவாட்டித்தான் நம்ம வூட்டுக்குள்ள கால் வைக்குறீங்க..!

    வந்ததுக்கும், அக்கறையான விசாரிப்புக்கும் மிகவும் நன்றிங்கண்ணே..!

    ReplyDelete
  49. [[[Prabhu Rajadurai said...

    மிகவும் கோபத்துடன் எழுதப்பட்ட பதிவு என்றாலும், தர்க்க ரீதியில் சரியாகவே உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட எனது பதிவு
    http://marchoflaw.blogspot.com/2008/10/4.html]]]

    நன்றி பிரபு ஸார்..!

    உங்களுடைய பதிவைப் படிக்கிறேன்..!

    ReplyDelete
  50. [[[Dr.SK said...
    HELLO, I FULLY ENDORSE THE STATEMENT OF Unmai Tamilan. Only Prabhakaran is to be blamed for this catostrophe. But for Prabhakaran the movement would have won, atleast got international recognision.]]]

    உண்மைதான்.. ஜெயித்திருந்தால் அங்கீகாரம் கிடைத்திருக்கும்.. இல்லையே ஸார்..! தோல்விக்குப் பல காரணங்கள் உண்டு..

    ReplyDelete
  51. நம்ம முதல்வர திட்டி திட்டி எனக்கு ஒரு வெறுப்பே வந்துடுச்சு அண்ணா... அவரும் திருந்த போறதில்ல... நாட்டையும் உருப்பட விட போறதுதில்ல...

    நளினிய ஏன் விடுதலை செய்யல-னு சுத்தி வளைக்காம நேராவே அவர் சொல்லி இருக்கலாம்.. ஏன்னா உண்மை என்னனு எல்லாருக்குமே தெரியும்.... அவரோட இந்த அறிக்கை முரசொலிக்கு மட்டும் தான் உதவி இருக்கும்...

    ReplyDelete
  52. உண்மை தமிழர் அவர்களுக்கு ...
    காலை வணக்கங்கள் ...

    ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் மதிப்பளித்து கருத்துக்களை சொல்வதற்கு நன்றிகள் நண்பரே ...

    மரணத்தை எளிமையாக கடந்து போகும் அளவுக்கு புரிதலோ அல்லது கல் இதயமோ கொண்டவனல்லன் என்றே என்னை கருதுகிறேன்... பல்லாயிரக்கணக்கான உயிர்களின் அழிவுக்கு காரணமாக என் மனம் கருதும் ஒருவரின் மரணத்திற்கு வருந்த்துவதற்குரிய முதிர்ச்சி இன்னும் எனக்கு கைகூடவில்லை ... நேர்மறையில் அல்ல சாதாரணனின் மனம் எதிர்மறையில் தான்அடுத்தவனை தொகுத்துக் கொள்கிறது ... நான் சாதாரணன்

    தப்பை நளினி உணர்ந்துட்டாங்கன்னு சொன்னீங்க ... தப்புன்னு எனக்கொண்ணும் தோணல... தப்புக்கு மேல தப்பா செஞ்ச சதாமே மன்னிப்பேதும் கேக்காதப்ப இவங்க ஏன் கேக்கனும்கிறது மனசு ... ஒரு இனத்தின் பிரதிநிதியா செயல்பட்டவங்க மன்னிப்பு கேக்கக்கூடாதுன்னு சொல்ல வரல ... அப்படி கேட்கிறவங்க மேல எனக்கு மரியாதை இல்லைங்கிறத தான்சொல்லியிருந்தேன் ...

    டீன் ஏஜில எனக்கு அவங்க தேவதை மாதிரி இருந்தாங்க ... இப்போவும் எனக்கு ஒரு தேவதை இருக்காங்க,பர்மாவில ...

    முதிர்ச்சியற்ற ஒருத்தனோட வரிகள் னு என்னை கடந்து போயிடணும்னு நான் நினைக்கிறேன் ;என்னால முடிய மாட்டேன்கிறது ..

    நெஞ்சை நிமித்திகிட்டு பயம்கிறதே கொஞ்சம் கூட இல்லாம இருக்ற எல்லாருமே தேவதைகள் தானே தேவதையே !

    gv prakash's நெல்லாடிய நிலமெங்கே(male version) கேக்கணும் போல தோணுது ...கொஞ்சம் அழுதா சரியாயிடும் ....

    ReplyDelete
  53. [[[கல்வெட்டு said...
    உண்மைத்தமிழன், நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதி இருக்கிறீர்கள். வர வர நீங்கள் பதிவுலக வைகோ‍-வாக மாறிக் கொண்டு இருக்கிறீர்கள்:-(((]]]

    நல்லவேளை.. வேற யாரையும் சொல்லலியே.. தப்பிச்சேன். இதுவே எனக்குப் பெருமைதாண்ணே..!

    ஏண்ணே.. என்னை மட்டும் எப்பவுமே இதே கண்ணோட்டத்தோடயே பார்க்குறீங்க..? சூழ்நிலையைப் பொறுத்து ஒருவர் எழுதுறாருன்னா அதுக்குப் பேரு சந்தர்ப்பமா..?

    லஞ்சம், ஊழல், அரசு, அரசியல், அரசியல்வியாதிகள் இதில் எனது கருத்து எப்போதுமே ஒன்றாகத்தான் உள்ளது..!

    அண்ணே... நான் என்னுடைய சொந்த வாழ்க்கையில் தினம் தினம் நேரில் பார்க்கின்ற விஷயங்களை வைத்துத்தான் அதனை நான் நம்ப ஆரம்பித்தேன். இப்போதும் நம்புகிறேன். இது எல்லாருக்குமே அப்படியே அமைந்துவிடாது..

    ஜாதகங்கள், கிரகங்களை நம்பாத உங்களை மாதிரியானவர்களுக்கு எல்லாமே சரியாக நடக்கிறது. அல்லது சிக்கல்கள் வந்தாலும் உங்களால் சரி பண்ண முடிகிறது..

    இப்படியும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் பலருக்கும் முடியாததாக இருக்கிறது.. இதைத்தான் நான் சொன்னேன்.. சொல்கிறேன்..!

    இப்போது நானே ஏதோ ஒரு வழக்கில் ஜெயிலுக்குள் போனால், நேரம் சரியில்லை போலிருக்குன்னு சொல்லிட்டு உள்ளேயே இருந்திரலாம்னு நினைக்க மாட்டேன். இந்த சோதனையை உடைத்தெறிந்துவிட்டு வெளியே வருவது எப்படி என்றுதான் யோசிப்பேன். அதைத்தான் செயல்படுத்துவேன்..

    அதில் தோல்வி கிடைத்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சிகளை செய்வேன்.. ஒவ்வொரு முயற்சியின் தோல்வியிலும் இன்னொரு தடவை செய்யச் சொல்றான் போலிருக்கு என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு மேலும் மோதுவேன்..!

    இங்கே நான் சொல்ல விரும்புவது திருப்பங்களை அவைகள் ஏற்படுத்தலாம்.. ஆனால் அதிலிருந்து தப்பிப்பது நம்முடைய கைகளில்தான் இருக்கிறது. அதை நாம்தான் செய்ய வேண்டும்.. கடவுள் இறங்கி வந்து செய்ய மாட்டார்..

    இதில் எனக்கு அசாத்தியமான நம்பிக்கை இருக்கிறது..!

    எல்லாம் முடிந்த நிலைமைக்குப் பின்புதான் விதியைப் பற்றி பேச முடியும்..!

    திருமணமே ஆகாமல் கடைசிவரையில் தனியாளாக இருந்து போய்ச் சேர்ந்தவனை சுடுகாட்டில் விட்டுவிட்டு வரும்போதுதான் பேசுவார்கள்.. அவன் விதி இப்படி இருக்கணும்னு.. போயிருச்சு என்று..!

    அதுவரையிலும் அவன் முயற்சி செய்து கொண்டுதான் இருந்தான். இனிமேலும் முடியாத நிலைமைக்கு வரும்போதுதான் விதி என்கிற வார்த்தை வெளிப்படுகிறது..!

    எனக்கு இருக்கிற சிற்றறிவுக்கு இவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்..

    ReplyDelete
  54. [[[kanagu said...

    நம்ம முதல்வர திட்டி திட்டி எனக்கு ஒரு வெறுப்பே வந்துடுச்சு அண்ணா. அவரும் திருந்த போறதில்ல. நாட்டையும் உருப்பட விட போறதுதில்ல. நளினிய ஏன் விடுதலை செய்யலனு சுத்தி வளைக்காம நேராவே அவர் சொல்லி இருக்கலாம். ஏன்னா உண்மை என்னனு எல்லாருக்குமே தெரியும். அவரோட இந்த அறிக்கை முரசொலிக்கு மட்டும்தான் உதவி இருக்கும்.]]]

    கூட்டணியின் இறுக்கத்திற்கும் உதவி செய்துவிட்டது கனகு..!

    ReplyDelete
  55. [[[A.Muthu Prakash said...

    உண்மை தமிழர் அவர்களுக்கு ...
    காலை வணக்கங்கள் ...
    ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் மதிப்பளித்து கருத்துக்களை சொல்வதற்கு நன்றிகள் நண்பரே ...

    மரணத்தை எளிமையாக கடந்து போகும் அளவுக்கு புரிதலோ அல்லது கல் இதயமோ கொண்டவனல்லன் என்றே என்னை கருதுகிறேன். பல்லாயிரக்கணக்கான உயிர்களின் அழிவுக்கு காரணமாக என் மனம் கருதும் ஒருவரின் மரணத்திற்கு வருந்த்துவதற்குரிய முதிர்ச்சி இன்னும் எனக்கு கைகூடவில்லை. நேர்மறையில் அல்ல சாதாரணனின் மனம் எதிர்மறையில்தான் அடுத்தவனை தொகுத்துக் கொள்கிறது. நான் சாதாரணன்
    தப்பை நளினி உணர்ந்துட்டாங்கன்னு சொன்னீங்க. தப்புன்னு எனக்கொண்ணும் தோணல. தப்புக்கு மேல தப்பா செஞ்ச சதாமே மன்னிப்பேதும் கேக்காதப்ப இவங்க ஏன் கேக்கனும்கிறது மனசு. ஒரு இனத்தின் பிரதிநிதியா செயல்பட்டவங்க மன்னிப்பு கேக்கக்கூடாதுன்னு சொல்ல வரல. அப்படி கேட்கிறவங்க மேல எனக்கு மரியாதை இல்லைங்கிறததான் சொல்லியிருந்தேன். டீன் ஏஜில எனக்கு அவங்க தேவதை மாதிரி இருந்தாங்க. இப்போவும் எனக்கு ஒரு தேவதை இருக்காங்க, பர்மாவில.
    முதிர்ச்சியற்ற ஒருத்தனோட வரிகள்னு என்னை கடந்து போயிடணும்னு நான் நினைக்கிறேன்; என்னால முடிய மாட்டேன்கிறது.
    நெஞ்சை நிமித்திகிட்டு பயம்கிறதே கொஞ்சம்கூட இல்லாம இருக்ற எல்லாருமே தேவதைகள்தானே தேவதையே!
    gv prakash's நெல்லாடிய நிலமெங்கே(male version) கேக்கணும் போல தோணுது. கொஞ்சம் அழுதா சரியாயிடும்.]]]

    முத்து பிரகாஷ்.. மன்னிக்கணும்..

    நான்தான் உங்களது பின்னூட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் எழுதிவிட்டேன்..!

    வருந்துகிறேன்.. ராஜீவ் மரணத்தை நான் எந்தவிதத்திலும் ஏற்கமாட்டேன்..! அது நடந்திருக்கக் கூடாது.. அன்றைய சம்பவம்தான் இன்றைக்கும் ஈழப் பிரச்சினை முடியாமல் போனதற்கும் ஒரு காரணமாகிவிட்டது..!

    ஆத்திரப்பட்டால் அனைத்துமே நாசமாகும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்..!

    பர்மா உதாரணம் சிறப்பு.. ஆனால் நளினி.. வேண்டாம்.. அது அவரது காதலினால் வந்த தொல்லை.. இனப் பாசத்தினாலோ, ஈழப் பாசத்தினாலோ, அல்லது கொள்கையினாலோ விளைந்தது அல்ல..!

    ReplyDelete
  56. இவர்களைப் போன்ற கேடுகெட்டவர்கள் என்றைக்கு அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்களோ அன்றைக்குத்தான் உண்மையிலேயே இந்த நாட்டுக்கு விடுதலை..!

    wish to say one thing.
    no chance in near future.
    everyone running behind rs.100.

    ReplyDelete
  57. உண்மைத்தமிழன்:
    உங்கள் கோபம் புரிந்து கொள்ளக்கூடியதே..
    ஆனாலும் சில நெருடல்கள் மனதில் வருவதை தவிர்க்க முடியவில்லை. நீங்கள் நளினியை ஏன் விடுதலை செய்யக்கூடாது என்று கேட்பது செரி அனால் அதற்கான உதாரணங்கள் சில செரியில்லை என்பது ஏன் கருது!
    மற்ற தேச துரோகிகள் வெளியே இருக்கிறார்கள் அனால் நளினியை ஏன் விட கூடாது என்ற வாதம் தவறு! இதில் 2 விஷயங்கள் கவனிக்க தக்கது.
    1. மற்ற தேச துரோகிகளும் தண்டிக்க பட வேண்டியவர்களே. அது எந்த விதமான தேச துரோகமானாலும் செரி.. அவர்கள் வெளியே இருப்பதால் மற்ற தேச துரோகிகளும் வெளியே வர வேண்டும் என்பது நாட்டுக்கு கேடு! இது பொதுவான விஷயம் நளினியை பற்றி அல்லே.
    2. நீங்கள் மற்ற தேச துரோகிகளோடு நளினியை ஒப்பிடும் போது அவளும் ஒரு தேச துரோகி என்றே ஆகிறது! பிறகு எதற்கு மன்னிப்பு?

    இது மட்டும் அல்லாமல், சிலர் ராஜேவின் கொலையை நியாயப்புட்துகிரார்கள். ஐயா இது மிகவும் ஆபத்தானது. நாட்டின் ஒருமைபாட்டிற்கு மிகவும் கேடு விளைவிக்கும் வாதம்! உங்கள் தாயோ தந்தையோ தவறு செய்தால், அது மிக பெரிய தவறாகவே இருந்தாலும், அவருக்கு தண்டனை வழங்க மாற்றான் வீட்டானை நீங்கள் அனுமதிப்பீர்கள? அது போன்று தான் இதுவும்! நம் தந்தை தவறு செய்தால் நாம் தண்டிப்போம்!

    சிங்கள தமிழர்கள் மட்டும் அல்லே, வேறு எங்கு எந்த இனத்தை சேர்ந்தவர்கள் துன்புறுத்த பட்டாலும் அது தவறு தான்! இதில் எனக்கு மாற்று கருத்து எதுவும் இல்லை.. ஆனாலும் இலங்கையில் ஒரு சிலருக்கு பிரச்னை என்றால், அதை அவர்கள் தீர்த்து கொள்ளவது தான் நல்லது! நாம் அதிக்கப்படியாக மூக்கை நுழைத்தால், மூக்கு அரு பதாவது தான் மிச்சமாகும்.. பிறகு பாகிஸ்தான் ஏன் நம் நாட்டு விஷயங்களில் தலை இட மாட்டன்?

    நம் வெட்டு பிரச்சனைகளை நாம் எப்படி எதிர் வீட்டுக்கு எடுத்து செல்ல மாட்டோமோ, அதே போல் எதிர் வீட்டு விஷயங்களில் அவர்கள் அழைக்காமல் நாம் போவது செரி இல்லை என்பது ஏன் கருது!
    இதன் மூலமாக நான் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ பேசவில்லை. ராஜீவ் கொள்ளையை விடுதலை புலிகள் செய்திருந்தாலும், அல்லது சிங்கள அரசே செய்திருந்தாலும் அது ஏற்புடையது அல்லே! இது ஏன் வீடு, இதில் அடுத்தவன் நாட்டமை செய்வது எனக்கு ஏற்புடையது அல்லே!

    -ராம்

    ReplyDelete
  58. மு.க ஒன்னும் யோக்கிய சிகாமணி இல்ல ஆனாலும் நாலு குற்றவாளிங்க தப்பிச்சிட்டாங்க அதுனால மாட்டிகிட்டா இன்னொரு குற்றவாளியையும் 'மனிதநேய' அடிப்படைல விடுதலை செய்யணுமுன்னு சொல்லுறது உணர்ச்சி பூர்வமா பேசுறதுக்கு சரியாய் இருக்கலாம் ஆனா அறிவுபூர்வம சரிவராது.

    முதல்ல இந்தியனா நடப்போம் சார். தமிழங்க்க்ரா உணர்வோட முதல்ல நடப்போமுன்னு நீங்க சொன்னீங்கன்ன இஸ்லாமிய தீவிரவாதிங்களுக்கும் உங்களுக்கும் வித்யாசம் இல்லாம போய்டும்.

    ReplyDelete
  59. [[[அரைகிறுக்கன் said...
    இவர்களைப் போன்ற கேடு கெட்டவர்கள் என்றைக்கு அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்களோ அன்றைக்குத்தான் உண்மையிலேயே இந்த நாட்டுக்கு விடுதலை..!

    wish to say one thing. no chance in near future. everyone running behind rs.100.]]]

    அரைக்கிறுக்கன்னு பேர் வைச்சிட்டு இப்படி முழு உண்மையைச் சொன்னா எப்படிங்க ஸார்..?

    ReplyDelete
  60. [[[உண்மைத்தமிழன் :
    1. மற்ற தேச துரோகிகளும் தண்டிக்கபட வேண்டியவர்களே. அது எந்தவிதமான தேச துரோகமானாலும் செரி. அவர்கள் வெளியே இருப்பதால் மற்ற தேச துரோகிகளும் வெளியே வர வேண்டும் என்பது நாட்டுக்கு கேடு! இது பொதுவான விஷயம் நளினியை பற்றி அல்லே.

    2. நீங்கள் மற்ற தேச துரோகிகளோடு நளினியை ஒப்பிடும் போது அவளும் ஒரு தேச துரோகி என்றே ஆகிறது! பிறகு எதற்கு மன்னிப்பு?]]]

    நளினி தேசத்துரோகம் செய்தவரில்லை. பயங்கரவாதக் குற்றங்கள் செய்தவருமில்லை.. இதனை உச்சநீதிமன்றமே தனது இறுதித் தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது..!

    ராஜீவ்காந்தி இன்று கொலை செய்யப்படுகிறார் என்பதே அவரும் அந்தக் குழுவினரோடு பெரும்புதூர் சென்ற பின்புதான் அவருக்கே தெரியும்..! அதுவரையில் தெரியாது என்பது நீதிமன்றத்தாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று..!

    அந்தச் சமயத்தில் இருந்த சூழல்.. அவர்களுடன் இருந்த நட்பு.. முருகன் மீது கொண்டிருந்த காதல் எல்லாமும் சேர்ந்துதான் அவரை மெளனித்துவிட்டது..!

    இந்தக் குற்றத்துக்கு 19 வருடங்கள் தண்டனை என்பது என்னைப் பொறுத்தவரையில் சரியல்ல..!

    [[[இது மட்டும் அல்லாமல், சிலர் ராஜேவின் கொலையை நியாயப்புட்துகிரார்கள். ஐயா இது மிகவும் ஆபத்தானது. நாட்டின் ஒருமைபாட்டிற்கு மிகவும் கேடு விளைவிக்கும் வாதம்! உங்கள் தாயோ தந்தையோ தவறு செய்தால், அது மிக பெரிய தவறாகவே இருந்தாலும், அவருக்கு தண்டனை வழங்க மாற்றான் வீட்டானை நீங்கள் அனுமதிப்பீர்கள? அது போன்றுதான் இதுவும்! நம் தந்தை தவறு செய்தால் நாம் தண்டிப்போம்!
    சிங்கள தமிழர்கள் மட்டும் அல்லே, வேறு எங்கு எந்த இனத்தை சேர்ந்தவர்கள் துன்புறுத்தபட்டாலும் அது தவறு தான்! இதில் எனக்கு மாற்று கருத்து எதுவும் இல்லை.. ஆனாலும் இலங்கையில் ஒரு சிலருக்கு பிரச்னை என்றால், அதை அவர்கள் தீர்த்து கொள்ளவதுதான் நல்லது! நாம் அதிக்கப்படியாக மூக்கை நுழைத்தால், மூக்கு அருபதாவதுதான் மிச்சமாகும்.. பிறகு பாகிஸ்தான் ஏன் நம் நாட்டு விஷயங்களில் தலை இட மாட்டன்?
    நம் வெட்டு பிரச்சனைகளை நாம் எப்படி எதிர் வீட்டுக்கு எடுத்து செல்ல மாட்டோமோ, அதே போல் எதிர் வீட்டு விஷயங்களில் அவர்கள் அழைக்காமல் நாம் போவது செரி இல்லை என்பது ஏன் கருது!
    இதன் மூலமாக நான் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ பேசவில்லை. ராஜீவ் கொள்ளையை விடுதலை புலிகள் செய்திருந்தாலும், அல்லது சிங்கள அரசே செய்திருந்தாலும் அது ஏற்புடையது அல்லே! இது ஏன் வீடு, இதில் அடுத்தவன் நாட்டமை செய்வது எனக்கு ஏற்புடையது அல்லே!
    -ராம்]]]

    ராம் உங்களது கருத்துரைக்கு மிக்க நன்றிகள்..!

    இலங்கை தமிழர்கள் யாரோ அடுத்த நாட்டுக்காரர்கள் அல்ல.. நம் தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் வாழும் சக தமிழனைப் போன்றவர்கள்தான்..!

    உங்களை மாதிரிதான் நானும் கொஞ்ச நாட்களுக்கு முன்புவரையிலும் இந்திய ஏகாதிபத்தியத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தேன்..!

    இது நம் தவறல்ல.. சின்ன வயதில் இருந்தே நமக்குள் திணிக்கப்பட்டிருக்கும் இந்தியத்தனம்தான்..!

    ReplyDelete
  61. [[[Sreenivasan said...
    மு.க ஒன்னும் யோக்கிய சிகாமணி இல்ல ஆனாலும் நாலு குற்றவாளிங்க தப்பிச்சிட்டாங்க அதுனால மாட்டிகிட்டா இன்னொரு குற்றவாளியையும் 'மனிதநேய' அடிப்படைல விடுதலை செய்யணுமுன்னு சொல்லுறது உணர்ச்சிபூர்வமா பேசுறதுக்கு சரியாய் இருக்கலாம் ஆனா அறிவுபூர்வம சரி வராது.]]]

    நளினி குற்றவாளிதான். ஆனால் அவர் செய்த குற்றத்திற்கு இந்தத் தண்டனை அதிகம் என்பது எனது கருத்து..!

    [[[முதல்ல இந்தியனா நடப்போம் சார். தமிழங்க்க்ரா உணர்வோட முதல்ல நடப்போமுன்னு நீங்க சொன்னீங்கன்ன இஸ்லாமிய தீவிரவாதிங்களுக்கும் உங்களுக்கும் வித்யாசம் இல்லாம போய்டும்.]]]

    அப்படியா..? என்னிடம் நெருங்குகின்ற அரசு அமைப்புகள் என்னை முதலில் இந்தியனாக நினைத்திருந்தால் நானும் அதே போல் நினைத்திருப்பேன்..! இல்லையே..!

    ReplyDelete
  62. //நளினி குற்றவாளிதான். ஆனால் அவர் செய்த குற்றத்திற்கு இந்தத் தண்டனை அதிகம் என்பது எனது கருத்து..!

    காந்தியம் எல்லா இடத்துலயும் செல்லாது சார்.

    //அப்படியா..? என்னிடம் நெருங்குகின்ற அரசு அமைப்புகள் என்னை முதலில் இந்தியனாக நினைத்திருந்தால் நானும் அதே போல் நினைத்திருப்பேன்..! இல்லையே..!

    அப்போ, இந்த தேசத்துல ஊழலற்ற ஆட்சி, பண்பாடுள்ள அரசு அதிகாரிகள் இருந்தா (more specifically if our country is with a Heaven image) நீங்க இலங்கை தமிழர்களுக்கு உங்க ஆதரவை குடுக்கமாட்டேன்னு சொல்ல வறீங்களா ?

    1) ஒரு உண்மையை புரிஞ்சிக்குங்க, இலங்கை தமிழர்கள ஆதரிக்கிரதுன்ன விடுதலை புலிங்கள ஆதரிகனுமுன்னு அர்த்தம் இல்லை.

    2) அப்ப உங்க கருத்துப்படி (thought process) இஸ்லாமியத்தை ஆதரிக்கிரதுன்ன, இஸ்லாமிய தீவிரவாதிங்கள/தீவிரவாதத்த ஆத்ரிக்கனுமுன்னு அர்த்தமா?

    ReplyDelete
  63. [[[Sreenivasan said...

    //நளினி குற்றவாளிதான். ஆனால் அவர் செய்த குற்றத்திற்கு இந்தத் தண்டனை அதிகம் என்பது எனது கருத்து..!

    காந்தியம் எல்லா இடத்துலயும் செல்லாது சார்.]]]

    அவங்க நிலைமைல நீங்க இருந்திருந்தீங்கன்னா என்ன செய்வீங்கன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..!

    //அப்படியா..? என்னிடம் நெருங்குகின்ற அரசு அமைப்புகள் என்னை முதலில் இந்தியனாக நினைத்திருந்தால் நானும் அதே போல் நினைத்திருப்பேன்..! இல்லையே..!

    அப்போ, இந்த தேசத்துல ஊழலற்ற ஆட்சி, பண்பாடுள்ள அரசு அதிகாரிகள் இருந்தா (more specifically if our country is with a Heaven image) நீங்க இலங்கை தமிழர்களுக்கு உங்க ஆதரவை குடுக்கமாட்டேன்னு சொல்ல வறீங்களா?]]]

    இல்லை.. முதலில் இந்தியனா.. தமிழனா என்கிற கேள்விக்கு மட்டும்தான் இது..!

    நானும் சென்ற வருடம் வரையிலும் ஒரு நல்ல இந்தியனாகத்தான் இருந்தேன்..!

    [[[1) ஒரு உண்மையை புரிஞ்சிக்குங்க, இலங்கை தமிழர்கள ஆதரிக்கிரதுன்ன விடுதலை புலிங்கள ஆதரிகனுமுன்னு அர்த்தம் இல்லை.]]]

    என்னுடைய கொள்கையும் இதுதான்..!

    [[[2) அப்ப உங்க கருத்துப்படி (thought process) இஸ்லாமியத்தை ஆதரிக்கிரதுன்ன, இஸ்லாமிய தீவிரவாதிங்கள / தீவிரவாதத்த ஆத்ரிக்கனுமுன்னு அர்த்தமா?]]]

    இந்தக் கேள்வியை இஸ்லாத்தை ஆதரிப்பவர்களிடம்தான் கேக்கணும்..!

    ReplyDelete
  64. \\உங்களை மாதிரிதான் நானும் கொஞ்ச நாட்களுக்கு முன்புவரையிலும் இந்திய ஏகாதிபத்தியத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தேன்..!\\
    இங்கே இந்திய ஏகாதிபத்தியம் எங்கே வந்தது? மேலும் இலங்கையை சேர்ந்தவர்கள் இந்திய குடி மக்கள் அல்லவே! அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டாம் என்றும் நான் கூறவில்லை, அதற்கு ஒரு எல்லை உண்டு என்று தான் கூறுகிறேன். முன்பே சொன்னது போல், பாகிஸ்தானுக்கு எவ்வாறு நம் நாட்டு விஷயங்களில் மூக்கை நுழைக்க உரிமை இல்லையோ அவ்வாறு நமக்கும் இலங்கையில் நடக்கும் விஷயங்களில் மூக்கை நுழைக்கி உரிமை இல்லை!

    \\இது நம் தவறல்ல.. சின்ன வயதில் இருந்தே நமக்குள் திணிக்கப்பட்டிருக்கும் இந்தியத்தனம்தான்..!\\

    இந்தியத்தனம் புகுக்கப்படுவதில் தவறு ஒன்றும் இல்லையே! உண்மையாக நம்மில் இந்தியத்தனம் இருந்தால் அதை விட பெருமை பட கூடிய விஷயம் எதுவுமில்லை..
    சேரி ஒரு வாதத்திற்காக கேட்கிறேன்.. இலங்கை தமழர்கள் உரிமைக்கு நாம் (செரி நீங்கள்) குரல் கொடுக்கிறீர்கள். அதற்க்கு காரணம் அவர்களுக்கு இலங்கையில் சம உரிமை வேண்டும் என்பதற்காக! இதன் அர்த்தம் அவர்களுக்குள் தாம் இலங்கையின் குடிமக்கள் என்ற உணர்வு இருப்பதால்தானே தவிரே அவர்கள் வெறும் தமிழர்கள் என்ற உணர்வோடு மட்டும் அல்ல..
    பிறகு உங்களுக்கு மட்டும் ஏன் ஐயா இந்தியனாய் இருப்பதில் இவ்வளவு சங்கடம்?

    Ram

    ReplyDelete
  65. நளினியை விடுங்கைய ,ராமேஸ்வரத்தில்,தினம் தினம் அடிவாங்கும் உடன் பிறப்புகளையாவது ,தமிழ் ஈனத்தின் தலைவன் காப்பர்ருவாரா?

    ReplyDelete
  66. உனா தானா அண்ணே, உங்களது வாதம் சரியாதான் இருக்கு --- புலிகள் இப்ப இல்லாததால் நளினியை விடுதலை செய்லாமே என கேட்டிருக்கலாமே.
    முக வை வேறு விதமாக உருட்டி பிரட்ட வேண்டும். யோசியுங்கள்.
    இலங்கையில் இருந்து பென்அலோய்

    ReplyDelete
  67. [[[உருத்திரா said...
    நளினியை விடுங்கைய, ராமேஸ்வரத்தில், தினம் தினம் அடிவாங்கும் உடன் பிறப்புகளையாவது தமிழ் ஈனத்தின் தலைவன் காப்பர்ருவாரா?]]]

    அவங்களை காப்பாத்தினா இவர் வீட்டுக்குப் போயிருவாரே..?

    அதுக்காகவா இவ்ளோ கஷ்டப்பட்டு அரியணை ஏறியிருக்காரு..!?

    ReplyDelete
  68. [[[benza said...
    உனா தானா அண்ணே, உங்களது வாதம் சரியாதான் இருக்கு --- புலிகள் இப்ப இல்லாததால் நளினியை விடுதலை செய்லாமே என கேட்டிருக்கலாமே. முகவை வேறு விதமாக உருட்டி பிரட்ட வேண்டும். யோசியுங்கள்.
    இலங்கையில் இருந்து பென்அலோய்]]]

    பென்ஸ் ஸார்.. சவுக்கியந்தானா..?

    ஈழம் எப்படி இருக்கிறது..? புகைப்படங்களை எடுத்தீர்களானால் உங்களது தளத்தில் வெளியிடுங்கள்..! கட்டுரைக்காகவும் காத்திருக்கிறேன்..!

    ReplyDelete
  69. <a href="http://www.tamilnet.tv/news/2009/123333/karunanidhi-hospitalized/>கருனாநிதி</a> சிங்களவன் என்னா அருமையா எழுதறான் .... கருனாநிதியைப் பத்தி!!!

    ReplyDelete