Pages

Tuesday, September 29, 2009

கேவலமாகிப் போன தமிழக அரசின் திரைப்பட விருதுகள்..!

29-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'கோபப்படக் கூடாது..' 'ஆத்திரப்படக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது' என்று எத்தனையோ 'படக் கூடாது'களை 'பட்ட' பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.

'சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது' என்பதைப் போல பதிவுகளை போட்டே தீர வேண்டும் என்கிற அவசியத்தையும் என் அப்பன் முருகன் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான்.

நேற்று பாருங்கள்.. நேரு உள் விளையாட்டரங்கில் 'ஆழ்வார்பேட்டை ஆண்டவன்' தனது கலையுலகத்தின் 50-வது வருட பொன்விழாவை ஒட்டி நடைபெற்ற பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க.. அவருக்கு இன்னுமொரு சிறப்பு சேர்க்கும்விதமாக 'தசாவதாரம்' படத்தில் பத்து வேடங்களில் வந்து கலக்கியதற்காக 'சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது' கிடைத்திருக்கிறது.

இந்தத் 'தேர்வுப் பட்டியல்' பத்து நாட்களுக்கு முன்பே தயாராகிவிட்டாலும், நேற்றுதான்.. அதிலும் அண்ணன் கமலஹாசனுக்கு பாராட்டு விழா நடக்கும் தினத்தன்றுதான் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்கிற 'கோபாலபுரத்தாரின்' ஆசையை அரசு அதிகாரிகள் இன்றைக்கு நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இதற்கான நன்றிக் கடனை கடந்த சில நாட்களுக்கு முன்பேயே கமலஹாசன் கோபாலபுரத்தின் படியேறிச் சென்று செலுத்திவிட்டு வந்துவிட்டார். இவர் 2008-ம் ஆண்டுக்கு..

2007-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ள அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு விருது கிடைக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு கிளைமாக்ஸ் காட்சிக்காக காத்திருந்த 'எந்திரன்' டீமிற்கே கடுக்கான் கொடுத்துவிட்டு, கோபாலபுரத்தாரின் கவிதை பாடல் நிகழ்ச்சிக்கு சென்று மூன்றரை மணி நேரம் முக்காலிட்டு உட்கார்ந்திருந்து தனது 'நன்றிக் கடனை' செலுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

தேர்வு செய்வது தேர்வுக் கமிட்டி. அந்தத் தேர்வுக் கமிட்டியை நியமித்தது தமிழக அரசு. தேர்வு செய்தால் கமிட்டி அதனை அரசிடம் சமர்ப்பிக்கும். அரசு அதனை நாள், நேரம், நட்சத்திரம் பார்த்து வெளியிடும். அதற்கிடையில் அந்த நடிகர்களுக்கே இந்த விஷயம் போய்ச் சேர்ந்தது ஏன் என்றெல்லாம் சின்னப்புள்ளைத்தனமா கொஸ்டீன் கேக்கக் கூடாது..? இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்..

இதெல்லாம் நமக்குப் பிரச்சினையில்லை.

பரிசுக்காகத் தேர்வு செய்திருக்கும் திரைப்படங்களையும், தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களையும் பார்க்கும்போதுதான் பி.பி. தாறுமாறாக எகிறுகிறது. சில தேர்வுகள் பேலன்ஸ் செய்வதற்காக செய்யப்பட்டிருக்க.. பல தேர்வுகள் பல நல்ல கலைஞர்களை புறக்கணித்து, ஓரம்தள்ளிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கொடுமையாக உள்ளது.

முதலில் 2007-ம் ஆண்டை பார்ப்போம். வெற்றி பெற்ற பட்டியலைப் பாருங்கள்.

சிறந்த படம் - முதல் பரிசு - சிவாஜி

சிறந்த படம் - இரண்டாம் பரிசு - மொழி

சிறந்த படம் - மூன்றாம் பரிசு - பள்ளிக்கூடம்

சிறந்த படம் - சிறப்பு பரிசு - பெரியார்

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - மிருகம்

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு - தூவானம்

சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (சிவாஜி)

சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி)

சிறந்த நடிகர் - சிறப்புப் பரிசு - சத்யராஜ் (பெரியார்)

சிறந்த நடிகை - சிறப்புப் பரிசு - பத்மப்பிரியா (மிருகம்)

சிறந்த வில்லன் நடிகர் - சுமன் (சிவாஜி)

சிறந்த நகைச்சுவை நடிகர் - விவேக் (சிவாஜி)

சிறந்த குணசித்திர நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)

சிறந்த குணசித்திர நடிகை - அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)

சிறந்த இயக்குநர் - தங்கர்பச்சான் (பள்ளிக்கூடம்)

சிறந்த கதை ஆசிரியர் - வசந்த் (சத்தம் போடாதே)

சிறந்த உரையாடல் ஆசிரியர் - பாலாஜி சக்திவேல் (கல்லூரி)

சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி)

சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்)

சிறந்த பின்னணிப் பாடகர் - ஸ்ரீனிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)

சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (சிவாஜி)

சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா)

சிறந்த ஒலிப்பதிவாளர் - யு.கே.அய்யப்பன் (பில்லா)

சிறந்த எடிட்டர் - சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே)

சிறந்த கலை இயக்குநர் - தோட்டாதரணி (சிவாஜி)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)

சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா (தீபாவளி)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ராஜேந்திரன் (பெரியார்)

சிறந்த தையல் கலைஞர் - அனுவர்த்தன் (பில்லா)

சிறந்த பின்னணி குரல்(ஆண்) - கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய)

சிறந்த பின்னணி குரல்(பெண்) - மகாலட்சுமி (மிருகம்)

2007-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களின் பட்டியலில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது விருதுகளை வழங்கலாம் என்று கருதக்கூடிய திரைப்படங்களின் பட்டியல் இது.

சிவாஜி, பருத்தி வீரன், மொழி, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கற்றது தமிழ், ராமேஸ்வரம், மாயக்கண்ணாடி எவனோ ஒருவன், கல்லூரி, பச்சைக்கிளி முத்துச்சரம், மிருகம், சென்னை 600028, அம்முவாகிய நான்

இதில் 'பருத்தி வீரன்' திரைப்படம் 2006-ம் ஆண்டிலேயே சென்சார் சர்டிபிகேட் வாங்கி 2007-ம் ஆண்டில் வெளியானதால் 2006-ம் ஆண்டிற்கான விருதுகளை பெற்றுக் கொண்டு லிஸ்ட்டில் இருந்து வெளியேறிவிட்டது.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்திருக்கின்ற ஒரே காரணத்திற்காக 'பெரியார்' திரைப்படத்திற்கு சிறப்பு பரிசு வழங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் 'மிருகம்' பெண்களை மிக உயர்வாகக் காட்டிய திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பட்டியலில் தனி இடம் பெற்று விட்டது.

சிறந்த திரைப்படமாக 'சிவாஜி'யை தேர்வு செய்திருக்கிறார்கள் நமது கலை வல்லுநர்கள். என்ன காரணம் என்பது உங்களுக்கே தெரியும்.. ஆனால் அது சிறந்த திரைப்படத்திற்கு தகுதியான திரைப்படம்தானா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

'சிவாஜி' திரைப்படத்துடன் சிறந்த படத்திற்காக போட்டியிட்ட படங்கள் லிஸ்ட்டை பாருங்கள்.. மொழி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கற்றது தமிழ், ராமேஸ்வரம், மாயக்கண்ணாடி, எவனோ ஒருவன், கல்லூரி, பச்சைக்கிளி முத்துச்சரம், அம்முவாகிய நான்..

இந்தப் பட்டியலில் சந்தேகமேயில்லாமல் 'மொழி' திரைப்படம்தான் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கான எல்லாத் தகுதியும் அத்திரைப்படத்திற்கு உண்டு. சினிமா மொழியின் அடிப்படையில் பார்த்தால் 'சிவாஜி'யைவிட பல மடங்கு தரமான திரைப்படம் மொழி. மற்ற திரைப்படங்களும் வலுவான போட்டியைக் கொடுத்தாலும் கதை, நேர்த்தி, நடிகர்களின் நடிப்புத் திறன், திரைக்கதை ஆக்கம் என்று அனைத்திலும் மொழிதான் சிறப்பு வாய்ந்தது என்பது எனது கருத்து.

ஆனால் இவர்கள் 'சிவாஜி'யைத் தலையில் தூக்கி வைத்து ஆடியிருக்கிறார்கள். ரஜினியைக் காக்கா பிடிப்பது நல்லதுதான். அதற்காக இப்படியா..?

இரண்டாவது சிறந்த படமாக 'மொழி'யையும், மூன்றாவது சிறந்த படமாக 'பள்ளிக்கூடத்தையும்' தேர்வு செய்து பேலன்ஸ் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். கூடவே இன்னொரு கூத்தாக ரெடிமேட் தாக்குதலாக அறிக்கைவிடத் தயாராகக் காத்திருந்த தங்கர்பச்சானை கூல் செய்ய வேண்டி அவருக்கு 'சிறந்த இயக்குநருக்கான பரிசைக்' கொடுத்து சமாளித்துவிட்டார்கள். உண்மையில் இந்த விருதைப் பெற ராதாமோகனே தகுதியானவர் என்பது எனது தாழ்மையான கருத்து.

'பள்ளிக்கூடமும்', 'ஒன்பது ரூபாய் நோட்டு'வும் சிறந்த படைப்புகள்தான் என்றாலும் மதிப்பெண் விகிதத்தில் 'மொழி' திரைப்படத்திற்குப் பின்னால்தான் வரிசை கட்டி நிற்கின்றன. அதிலும் 'மொழி'யில் நடிகர்களின் நடிப்புத் திறன் வெளிப்பட்டிருப்பதில் இயக்குநரின் பங்குதான் அதிகம். ஆனால் ராதாமோகனுக்கு இங்கே பப்பே சொல்லிவிட்டு 2008-ம் ஆண்டு 'அபியும் நானும்' படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதைக் கொடுத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள்.

'மொழி'யில் இருந்த திரைக்கலை உணர்வும், படமாக்கிய திறனும் 'அபியும், நானும்' திரைப்படத்தில் பாதிதான் இருந்தது. ஆனால் எதற்காக அத்திரைப்படத்திற்கு என்று புரியவில்லை.

'சத்தம் போடாதே' படத்தின் கதையைவிட மாயக்கண்ணாடியின் கதை எவ்வளவோ பெஸ்ட்.. ஆனால் பேலன்ஸ் செய்யும் நோக்கில் வசந்திற்கு தரப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

கற்றது தமிழ், இராமேஸ்வரம், பச்சைக்கிளி முத்துச்சரம், மாயக்கண்ணாடி, எவனோ ஒருவன் ஆகிய திரைப்படங்களில் ஏதாவது ஒரு பிரிவில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. ஒரு பிரிவில்கூட இத்திரைப்படங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது அவர்களுடைய துரதிருஷ்டம்தான்.

அடுத்து 2008-ம் ஆண்டினை பார்ப்போம்..

முதலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை பார்ப்போம்..

சிறந்த படம் - முதல் பரிசு - தசாவதாரம்

சிறந்த படம் - இரண்டாம் பரிசு - அபியும் நானும்

சிறந்த படம் - மூன்றாம் பரிசு - சந்தோஷ் சுப்ரமண்யம்

சிறந்த படம் - சிறப்பு பரிசு - மெய்ப்பொருள்

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - பூ

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு - வல்லமை தாராயோ

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - இரண்டாம் பரிசு - வண்ணத்துப்பூச்சி

சிறந்த நடிகர் - கமலஹாசன் (தசாவதாரம்)

சிறந்த நடிகை - சிநேகா (பிரிவோம் சந்திப்போம்)

சிறந்த நடிகர் - சிறப்புப் பரிசு - சூர்யா (வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகை - சிறப்புப் பரிசு - த்ரிஷா (அபியும் நானும்)

சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்)

சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்)

சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை)

சிறந்த குணசித்திர நடிகர் - பிரகாஷ்ராஜ் (பல படங்கள்)

சிறந்த குணசித்திர நடிகை - பூஜா (நான் கடவுள்)

சிறந்த இயக்குநர் - ராதாமோகன் (அபியும் நானும்)

சிறந்த கதை ஆசிரியர் - சா.தமிழ்ச்செல்வன் (பூ)

சிறந்த உரையாடல் ஆசிரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)

சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)

சிறந்த பாடலாசிரியர் - வாலி (தசாவதாரம்)

சிறந்த பின்னணிப் பாடகர் - பெள்ளிராஜ் (சுப்ரமண்யபுரம்)

சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (நெஞ்சத்தைக் கிள்ளாதே)

சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)

சிறந்த ஒலிப்பதிவாளர் - ரவி (வாரணம் ஆயிரம்)

சிறந்த எடிட்டர் - ப்ரவீன் காந்த் (சரோஜா)

சிறந்த கலை இயக்குநர் - ராஜீவன் (வாரணம் ஆயிரம்)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)

சிறந்த நடன ஆசிரியர் - சிவசங்கர் (உளியின் ஓசை)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் - மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்)

சிறந்த தையல் கலைஞர் - ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - லட்சுமி (வண்ணத்துப்பூச்சி)

சிறந்த பின்னணி குரல்(ஆண்) - எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.)

சிறந்த பின்னணி குரல்(பெண்) - சவிதா (பல படங்கள்)

2009-ம் ஆண்டு வெளியானாலும் 2008-ம் ஆண்டிலேயே சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிட்டதால் 'நான் கடவுள்' திரைப்படம் 2008-ம் ஆண்டு படங்களுடன் போட்டியிட்டுள்ளது.

கமலஹாசன் சிறந்த நடிகர்தான். பெற வேண்டிய விருதுதான். சந்தேகமில்லை. வாழ்த்துவோம். ஆனால் 'தசாவதாரம்' சிறந்த படமா..?

2008-ம் ஆண்டில் அத்திரைப்படத்துடன் போட்டியிட்டிருக்கும் படங்களை பாருங்கள்.. நான் கடவுள், பிரிவோம் சந்திப்போம், அஞ்சாதே, சுப்ரமணியபுரம், வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்ரமணியம், சரோஜா, பொய் சொல்லப் போறோம், வாரணம் ஆயிரம், பூ, பொம்மலாட்டம், அபியும் நானும்.

இந்த லிஸ்ட்டில் கண்டிப்பாக 'பூ', 'அஞ்சாதே', 'சுப்ரமணியபுரம்' ஆகிய மூன்று திரைப்படங்களும் சிறந்த திரைப்படங்களுக்கான லிஸ்ட்டில் இருக்க வேண்டிய திரைப்படங்கள். ஆனால் இவற்றில் 'பூ' படத்திற்கு பெண்களை உயர்வாகக் காட்டுவதாகச் சொல்லி சிறப்புப் பரிசு கொடுத்து ஒதுக்கிவிட்டார்கள். என்னே தேர்வுக் கமிட்டியினரின் கலைத்திறமை...?

இதில் காமெடியாக 'அபியும் நானும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்' என்னும் இரண்டு கமர்ஷியல் குடும்பக் கதைகள் விருதை பெற்றுள்ளன. இவைகளும் நல்ல திரைப்படங்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் சினிமா மொழி இவற்றில் இல்லையே.. இவைகள் சாதாரணமான மேடை நாடகங்கள் போன்ற திரைப்படங்கள்தானே.. திரைப்படத்தின் உடற்கூற்றுக்கான ஒரு அடையாளம்கூட இத்திரைப்படங்களில் இடம்பெறவில்லை.

ஆனால் 'அஞ்சாதே'யும், 'சுப்ரமணியபுரமும்' தமிழ்த் திரையுலகின் டிரெண்ட்டையே தற்போதைக்கு இடம் மாற்றி வைத்துவிட்டன. அந்தச் சாதனையை செய்த திரைப்படங்களை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை எனில் இந்த தேர்வுக் கமிட்டியினரை சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.

இன்னும் எனக்கு இந்த மூன்றில் எதை சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்வது என்கிற குழப்பமே உள்ளது. அந்த அளவுக்கு சிறந்த காவியப் படைப்புகளை கையில் வைத்துக் கொண்டு விருதுகளை இரண்டரை மணி நேர நாடகங்களுக்கு வழங்கியிருப்பது கொடுமையான விஷயம்.

அடுத்த கொடுமை சிறந்த இயக்குநருக்கான விருது. நிச்சயம் இதில் போட்டியிடுபவர்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், மிஷ்கினும், சசிகுமாரும், சசியும்தான். ராதாமோகன் லிஸ்ட்டில் இல்லவே இல்லை. ஆனாலும் ராதாமோகனுக்குத்தான் கிடைத்திருக்கிறது. காரணம் நான் முன்பே சொன்னதுபோல தங்கர்பச்சானை கூல் செய்ய வேண்டி ராதாமோகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு இது. முறைகேடான விஷயம் இது.

சசிகுமார் பாவம்.. தமிழக அரசின் விருதைத் தவிர மற்ற அத்தனை குறிப்பிடத்தக்க விருதுகளையும் 'சுப்ரமணியபுரம்' படத்திற்காக வாங்கிக் குவித்துவிட்டார். சரி.. அந்த அளவுக்கு தமிழக அரசின் விருதிற்கு மரியாதை இல்லை என்பதை இப்போதைக்கு புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.

இதில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, சினேகாவுக்குக் கிடைத்த சிறந்த நடிகைக்கான விருது. நல்ல திரைப்படம்தான். நல்ல கதைதான். ஆனால் அழுத்தமான திரைக்கதையும், சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லக்கூடிய விதமாகவும் இல்லாமல் போனதால் 'பிரிவோம் சந்திப்போம்' திரைப்படம் மக்கள் மனதில் இடம் பெறாமல் போய்விட்டது. ஆனால் அதில் சிநேகாவின் நடிப்பு என்னை அப்போதே மிகவும் கவர்ந்திருந்தது.

சந்தேகம் இருப்பவர்கள் அதன் டிவிடியை வாங்கி பாருங்கள்.. எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.

இரண்டாவது சந்தோஷமான விஷயம், 'பூ' படத்திற்காக சிறந்த கதையாசிரியருக்கான விருதை நமது சக பதிவரும், எழுத்தாளரும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவருமான திரு.சா.தமிழ்ச்செல்வன் பெற்றிருப்பதுதான்.

'அஞ்சாதே' நரேனும், 'சுப்ரமணியபுரம்' சசிகுமாரும், 'பொம்மலாட்டம்' நானே படேகரும் 'வாரணம் ஆயிரம்' சூர்யாவைவிட பல மடங்கு நடித்திருக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மை. ஆனால் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் கிடைக்கவில்லை.

சிறந்த வில்லன் நடிகருக்கான போட்டியில் சந்தேகமே இல்லாமல் 'அஞ்சாதே' பிரசன்னாதான் என் கண்ணுக்குத் தெரிகிறார். ஆனால் இங்கே 'நான் கடவுள்' படத்திற்காக ராஜேந்திரனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பாரோ. ஆனால் 'டக் அஃப் வார்'தான்.. சந்தேகமில்லை..! பிரசன்னா தனது உடல் மொழியால் நடித்திருக்கிறார். நிச்சயம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அதில் சந்தேகமில்லை. ஆனால் ராஜேந்திரன் கதை அப்படியில்லை. அவருடைய இயல்பான உடல் வாகுவும், பேச்சுத் திறனும் அப்படியே அமைந்துவிட்டதாலும், அவர் கவரப்பட்டார் என்று நினைக்கிறேன்..!

'சுப்ரமணியபுரம்' ஸ்வாதியும், 'பொம்மலாட்டம்' நாயகி ருக்மணியும், 'பூ'வில் பார்வதியும் நடித்த நடிப்பைவிடவா 'அபியும் நானுமில்' த்ரிஷா நடிப்பைக் கொட்டியிருக்கிறார்..? சிறப்புப் பரிசில்கூடவா இவர்களுக்கு இடமில்லை..!

இதில் இன்னுமொரு அபத்தம் 'நான் கடவுள்' படத்தின் கதாநாயகி பூஜாவுக்கு குணசித்திர நடிகைக்கான பரிசைக் கொடுத்து ஒதுக்கிவிட்டதுதான். இனிமேல் கதாநாயகி யார்? குணசித்திர நடிகை யார் என்பதையெல்லாம் தமிழக அரசிடம் கேட்டுவிட்டுத்தான் நடிகைகள் நடிக்க வேண்டும் போலும்..!

இதில் கொடுமையிலும் கொடுமையாக தமிழக முதல்வரே தான் கொடுக்க வேண்டிய விருதுகளில் ஒன்றை தானே உரிமையாக கையைவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய 'உளியின் ஓசை'க்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதாம்..

அவருடைய விளம்பர வெறியும், பதவி ஆசையும், கூச்ச நாச்சமில்லாத படுத்துக்கொண்டே பாராட்டை கேட்கும் மனோபாவமும் உலகமறிந்த விஷயம் என்றாலும், இவ்வளவு பக்குவப்பட்ட வயதிலும் இன்னமும் அப்படியே இருக்கிறாரே என்பதை நினைத்தால்தான் மனம் பகீரென்கிறது.

இன்னும் அடுத்தடுத்த வருடங்களில் எதையெல்லாம் தான் எடுத்துக் கொண்டு மிச்சத்தை தமிழ்ப் படைப்பாளிகளுக்கு எச்சில் இலை போல் அள்ளி வீசப் போகிறாரோ தெரியவில்லை.

முதல்வராகப் பதவி வகிப்பவர் இது போன்ற அரசு விருதுகளுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் அந்தப் பதவிக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இங்கேதான் அந்தப் பெருமை சேர்ப்புகளையே குப்பைத் தொட்டிக்குக் கொண்டு போய் போட்டுவிட்டார்களே.. யார் கேட்பது..?

உண்மையில் 'உளியின் ஓசை' படைப்பு பரிசுக்குரியதா? சிறந்த உரையாடல் பரிசுப் போட்டியில் 'நான் கடவுளும்', 'பொம்மலாட்டமும்', 'அஞ்சாதே'யும், 'பூ'வும், 'சுப்ரமண்யபுரமும்' வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அவற்றைவிடவா ஐயா அற்புதமாக எழுதிக் குவித்துவிட்டார். கொடுமையடா சாமி..

'நான் கடவுளுக்கு' நிச்சயம் கொடுத்திருக்கலாம். அத்திரைப்படத்தின் வசனங்கள் தமிழ்த் திரையுலகத்துக்கு கிடைத்த புதுமை. பாவம் ஜெயமோகன்.. சாருநிவேதிதாவுக்கு பதிவு போடும் வேலையைக் கொடுக்க ஆசை, ஆசையாகத் தயாராகக் காத்திருந்தார். ஆப்படித்துவிட்டார் கோபாலபுரத்து ஐயா. சாருவுக்கு ஒரு வேலை மிச்சம்..

இந்த கேலிக்கூத்தான இரண்டு வருட பரிசு அறிவுப்புகளின் பின்னணிக்கு என்ன காரணம்? தான் ரிட்டையர்டுமெண்ட் பெற உள்ள இதே காலக்கட்டத்திலேயே கடைசியாக ஒரு முறை இரண்டு பெரும் நடிகர்களுக்கு நடுவில் அமர்ந்துவிடத் துடித்த ஒரு அல்பத்தனத்திற்கு அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகா கேவலமானது.

ஏன்? இப்படி? யாரும் யோசிக்க மாட்டார்களா? என்றெல்லாம் தேர்வுக் கமிட்டியினரிடம் விசாரித்ததில் அவர்களிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்த விஷயங்கள் ஒன்றுதானாம்..

“தலைவர் மனசு குளிர்ற மாதிரி செலக்ட் பண்ணுங்க. வீணா அவரை அப்செட்டாக்காதீங்க” என்று மட்டும் தேர்வுக் கமிட்டியினரின் காதில் ஓதப்பட்டதாம். அதன் விளைவினால்தான் ஐயா விருப்பப்படியே டாப் லிஸ்ட் தயார் செய்யப்பட்டதாம்.

ஐயாவின் மனம் குளிர வைக்க அடுத்த விழா ரெடி..

இதற்குப் பேசாமல் அவரும், அவருடைய குடும்பத்தினருமே பரிசுக்குரியவர்களின் பெயரை டிக் செய்து "வீட்ல வந்து பரிசை வாங்கிட்டு சமத்தா கால்ல விழுந்துட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு போய்ச் சேருங்க"ன்னு அறிக்கையே விட்ரலாம்.

எதையும் தாங்கும் தமிழன், நிச்சயம் இதையும் தாங்குவான்..!

112 comments:

  1. //கோபப்படக் கூடாது..' 'ஆத்திரப்படக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது' என்று எத்தனையோ 'படக் கூடாது'களை 'பட்ட' பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.//

    அப்புறம் ஏன் லோ பிபி, லோ சுகர் எல்லாம் வராது?

    முதல்ல உம்மை பத்தி கவலைப் படுமைய்யா! ஊர் உலகத்தைப் பத்தி அப்புறமா கவலைப் படலாம்!

    ReplyDelete
  2. //ஆனால் இவர்கள் 'சிவாஜி'யைத் தலையில் தூக்கி வைத்து ஆடியிருக்கிறார்கள். ரஜினியைக் காக்கா பிடிப்பது நல்லதுதான். அதற்காக இப்படியா..?
    //

    ஏம்பா வம்பு! 2011ல திடீர்னு அரசியல் வாய்ஸ்னு ஏதாச்சும் சிவாஜி யீரோ கூவினாலும் கூவிடுவாருல்ல!

    ReplyDelete
  3. கலைஞர் அரசின் கேவலமான சினிமா விருது பாலிடிக்ஸ் பற்றிய அருமையான விமர்சனம். வாழ்த்துகள்.

    ஞாநி

    ReplyDelete
  4. ////கோபப்படக் கூடாது..' 'ஆத்திரப்படக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது' என்று எத்தனையோ 'படக் கூடாது'களை 'பட்ட' பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.//

    :-))

    உண்மையைச் சொல்லியிருக்கீங்க..

    ஆனா ஒரு சந்தேகம். சுப்ரமணியபுரம் ஸ்வாதி அந்த படத்துல நடிச்சாங்களா. சும்மா ஓரக்கண்ணால ஹீரோவை லுக் விட்டுட்டு போயிட்டு இருந்தது அந்த புள்ள. கடைசியா கிளைமேக்ஸ்ல முழுசா அழுது முடிக்கறதுக்குள்ள சமுத்திரக்கனி வாம்மா வாம்மான்னு கூட்டிட்டு போயிடுறாரு.. என்னமோ போங்க! :)

    ReplyDelete
  5. //சிறந்த வில்லன் நடிகருக்கான போட்டியில் சந்தேகமே இல்லாமல் 'அஞ்சாதே' பிரசன்னாதான் என் கண்ணுக்குத் தெரிகிறார். ஆனால் இங்கே 'நான் கடவுள்' படத்திற்காக ராஜேந்திரனுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.//

    இல்லைண்ணே.. இதை நான் ஒத்துக்க மாட்டேன். பிரசன்னாவோட உடல்மொழி என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப செயற்கயா இருந்தது. ஆனா இதே நான் கடவுள் படத்துல நடிச்ச நடிகரோட நடிப்பு மத்த எல்லோரோட நடிப்பை விட நல்லாவே இருந்தது. இந்த வகையில நான் உஙக கருத்தோட முரண்பட வேண்டியிருக்குது.

    ReplyDelete
  6. உங்களுக்கும்,எனக்கும் ஒரு வித்தியாசம்.நான் டிஸ்கியில் எழுதியிருப்பதை நீங்கள் பதிவாக போட்டிருக்கிறீர்கள்..மற்றபடி உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த காமெடிபீசுகளை கண்டுகொள்ளாதீர்கள்

    ReplyDelete
  7. என்ன அண்ணே திரும்ப ஆஸ்பத்திரியில் போய் படுத்து அந்த நர்சம்மா கையால் ஊசி போட்டு கொள்ள ஆசையா .. இந்த பதிவிற்க்கே ஏகபட்ட ஆட்டோ அனுப்பலாம்

    ReplyDelete
  8. //ஆனால் 'அஞ்சாதே'யும், 'சுப்ரமணியபுரமும்' தமிழ்த் திரையுலகின் டிரெண்ட்டையே தற்போதைக்கு இடம் மாற்றி வைத்துவிட்டன. அந்தச் சாதனையை செய்த திரைப்படங்களை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை எனில் இந்த தேர்வுக் கமிட்டியினரை சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.//
    ipdi ellam sandhegapada padadhu.. theliva irukanum...
    mannangatti selection...

    ReplyDelete
  9. அரசியல் என்னும் சாக்கடையில் சினிமா விழுந்து நாறுவது என்னமோ உண்மை.

    ஆனால் சிறந்த நடிகருக்கான விருது ஜே.கே.ரித்தீஷுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன்

    ReplyDelete
  10. best producer: red gian movie;
    best distributor: Sun pictures;
    best Actress: namitha;
    best dance master: kala;
    best female support: manorama;
    best lyricts: kani மொழி;
    best movie: kathalil vilunthen

    இந்த லிஸ்ட் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா!

    ReplyDelete
  11. A good post. But Tamilnadu goverment awards are meaningless. This is how it has been for a long long time. Rajni & Kamal should have been ashamed to receive these awards. Unless they themselves say NO, this trend will continue. If DMK is in power Rajni will get the award again for Enthiran.
    It is good that "Sasikumar" didn't get these worthless awards. He deserves better things. Who knows if MK thinks Sasi is growing in popularity, then he may want to take a photo with him as well and give him many awards.

    ReplyDelete
  12. 2008ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சூர்யாவிற்கு கிடைத்திருக்கலாம்.

    நான் மிகவும் ரசித்த நடிகர். ஒவ்வொரு காலநிலையிலும் அந்தப் பருவத்திற்குரிய உடல்மொழியை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

    ReplyDelete
  13. பிரசன்னா -வுக்கு உங்கள் பரிந்துரையை தவிர அநேகமாக அனைத்தையும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  14. /
    நாமக்கல் சிபி said...

    //கோபப்படக் கூடாது..' 'ஆத்திரப்படக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது' என்று எத்தனையோ 'படக் கூடாது'களை 'பட்ட' பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.//

    அப்புறம் ஏன் லோ பிபி, லோ சுகர் எல்லாம் வராது?

    முதல்ல உம்மை பத்தி கவலைப் படுமைய்யா! ஊர் உலகத்தைப் பத்தி அப்புறமா கவலைப் படலாம்!
    /

    repeat!

    ReplyDelete
  15. அண்ணே, இதுக்கு போயி அலட்டிகாதீங்க..

    இதெல்லாம் ஒரு அவார்டு..??

    உங்களுக்கு ஏன் BP எகிறுதுன்னு இப்போ புரியுது..

    ReplyDelete
  16. அவருடைய குடும்பத்தினருமே பரிசுக்குரியவர்களின் பெயரை டிக் செய்து
    ///

    அப்படி தான் நடந்து இருக்கும் :)

    ReplyDelete
  17. நச்சுன்னு இருக்கு உங்க விமர்சனம், பதவி வெறி, புகழ் போதையில் இருப்பவர்களுக்கு எதுவும் கண்ணுக்கு தெரியாது

    ReplyDelete
  18. எதையும் தாங்கும் இதயம் இங்கு பதிவெழுதிக் கொண்டிருக்கிறது!!

    எதையும் தாங்கும் இதையம் கொடுத்த அண்னா வழ்க!!!

    ReplyDelete
  19. குறிப்பிட்ட சில கருத்துக்களைத் தவிர, பலவற்றில் நீங்கள் சொன்னதில் நான் உடன்படுகிறேன்.

    அஞ்சாதே, சுப்பிரமணியபுரம் - சினிமா மொழியில் தேர்ந்தவை. அவைகளுக்கு விருது இல்லையென்றால், அக்கிரமம்!

    சிவாஜி, தசாவதாரம் - இரண்டும் குப்பைகள்.

    ReplyDelete
  20. இதுக்கெல்லாம் நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க???...
    விடுங்க பாஸ் அவங்க கொடுக்குற விருதுக்கா எல்லாரும் படம் எடுக்குறாங்க...



    //எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.//

    என்னங்கண்ணா???!! ரைட்டு......

    ReplyDelete
  21. //எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.//

    இந்த களேபரத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குது!

    முருகா காப்பாத்து!
    கந்தா கரையேத்து!

    ReplyDelete
  22. சிறந்த திரைப்படங்களை இதை விட கேவலப்படுத்தி விட முடியாது. அதற்காகவே தமிழக அரசிற்கு காக்கா பிடிக்கும் அரசு என தனி விருது கொடுக்கலாம். சிவாஜி திரைப்படத்திற்கு விருது என்றதும் டரியல் ஆகி போனேன்.

    எங்க போய் சொல்றதுக்கு இந்த கொடுமைய எல்லாம்.

    ReplyDelete
  23. //நாமக்கல் சிபி said...

    //எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.//

    இந்த களேபரத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குது!

    முருகா காப்பாத்து!
    கந்தா கரையேத்து!

    //

    உ.த. யூத்துன்னு ஒவ்வொரு பதிவுலயும் நிரூபிச்சுட்டு இருக்கறது மாநக்கல்லாருக்கு பொறுக்கலை போலருக்குது :-)

    ReplyDelete
  24. அது என்னமோ ரஜினின்னாலே ஒரு மவுசு இருக்கத்தான் செய்யுது

    என் பார்வையில் இந்த விருதுகளை ஒரு பதிவாக போட உள்ளேன் .

    ReplyDelete
  25. சரவணன்,

    நீங்கள் கருணாநிதியைத் திட்டியவுடன் இங்கே மறுமொழி தந்தவர்கள் பலர் - ஞாநி உள்ளிட்டு - பரவசத்துடன் முதுகில் தட்டுவதைப் பார்க்க நகைச்சுவையாய் இருக்கிறது...

    முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை.. விருது / அங்கீகாரம் என்பதே சார்புத்தன்மையுடையது தான். ஏதோ இத்தனை வருடமாக தமிழ்நாட்டில் திறமையான படைப்புகளுக்கு விருது கொடுத்து வந்ததைப் போலவும், இப்போது ஏதோ கருணாநிதி வந்து வேண்டியவர்களுக்கும் ஜால்ராக்களுக்கும் கொடுத்து அதன் புனிதத்தன்மையைக் கெடுத்து விட்டது போலவும் ஒரு தொனி உங்கள் பதிவில் தெரிகிறது...

    எப்போது இங்கே திறமையாளர்களுக்கு அவர்களின் திறமையை மட்டும் கணக்கில் கொண்டு விருது வழங்கப்பட்டிருக்கிறது? எனக்குத் தெரிந்து எப்போதும் இல்லை - அதற்கான சமூகச் சூழலும் இங்கே இல்லை - முன்பும் இருந்ததில்லை..

    போற்றிப் பாடும் புலவனுக்கு பரிசில் கொடுத்த மண்ணல்லவா?? கருணாநிதி அந்தச் சங்கிலியின் கடைசிக் கண்ணி - அவ்வளவு தான்.

    சரி உலக அளவிலாவது சார்புத்தன்மையில்லாமல் விருதுகள் வழங்கப்படுகின்றனவா? அங்கேயும் இல்லை கிடையாது... உலக அழகிப் போட்டியோ ஆஸ்கர் / நோபெல் பரிசோ எல்லாவற்றிலும் ஒருவித சார்புத்தன்மையும் ( சார்புத்தன்மை என்று நான் குறிப்பிடுவது partiality எனும் அர்த்தத்தில்) எந்த ஒரு விருதுக்குப் பின்னும் ஒரு அரசியல் இருந்து கொண்டு தான் இருக்கிறது..

    என்ன.... நம்ம கருணாநிதி விஷயத்துல எல்லாம் கொஞ்சம் வெளிப்படையா இருக்கு அவ்வளவு தான். எம்.ஜி.ஆரும் இதான் செய்தார் செயலலிதவும் இதைத்தான் செய்தார்.. அதற்கு முன்பும் இப்படித்தான் இருந்தது...

    ஞாநிக்கு கருணாவைத் எங்காவது யாராவது எவ்வகையிலாவது திட்டி விட்டால் சந்தோசம் பொங்கி விடும் போலிருக்கிறது..

    ReplyDelete
  26. ///நாமக்கல் சிபி said...

    //கோபப்படக் கூடாது..' 'ஆத்திரப்படக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது' என்று எத்தனையோ 'படக் கூடாது'களை 'பட்ட' பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.//

    அப்புறம் ஏன் லோ பிபி, லோ சுகர் எல்லாம் வராது? முதல்ல உம்மை பத்தி கவலைப்படுமைய்யா! ஊர் உலகத்தைப் பத்தி அப்புறமா கவலைப்படலாம்!]]]

    முடியலையே.. முடியலையே..! என்ன செய்றது..?

    ReplyDelete
  27. //கருணாநிதி அந்தச் சங்கிலியின் கடைசிக் கண்ணி - அவ்வளவு தான்.//

    இந்தக் கண்ணி இனிமேலும் இப்படித்தான் தொடரும் - அதற்கான சமூக அடித்தளம் மாறாதவரை ( என்று குறிபிட எண்ணினேன்; மறந்து விட்டேன் ) ;)

    ReplyDelete
  28. [[[நாமக்கல் சிபி said...

    //ஆனால் இவர்கள் 'சிவாஜி'யைத் தலையில் தூக்கி வைத்து ஆடியிருக்கிறார்கள். ரஜினியைக் காக்கா பிடிப்பது நல்லதுதான். அதற்காக இப்படியா?//

    ஏம்பா வம்பு! 2011ல திடீர்னு அரசியல் வாய்ஸ்னு ஏதாச்சும் சிவாஜி யீரோ கூவினாலும் கூவிடுவாருல்ல!]]]

    அப்படீங்குற.. உனக்கு நெசமாவே பொலிட்டிக்கல் மைண்ட் இருக்கு முருகா..!

    ReplyDelete
  29. [[[gnani said...

    கலைஞர் அரசின் கேவலமான சினிமா விருது பாலிடிக்ஸ் பற்றிய அருமையான விமர்சனம். வாழ்த்துகள்.

    ஞாநி]]]

    நன்றிகள் ஞாநி ஸார்..! அப்பப்ப இது மாதிரி வந்துட்டுப் போங்க..!

    ReplyDelete
  30. [[[சென்ஷி said...
    //கோபப்படக் கூடாது..' 'ஆத்திரப்படக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது' என்று எத்தனையோ 'படக் கூடாது'களை 'பட்ட' பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.//

    :-))

    உண்மையைச் சொல்லியிருக்கீங்க..
    ஆனா ஒரு சந்தேகம். சுப்ரமணியபுரம் ஸ்வாதி அந்த படத்துல நடிச்சாங்களா. சும்மா ஓரக்கண்ணால ஹீரோவை லுக் விட்டுட்டு போயிட்டு இருந்தது அந்த புள்ள. கடைசியா கிளைமேக்ஸ்ல முழுசா அழுது முடிக்கறதுக்குள்ள சமுத்திரக்கனி வாம்மா வாம்மான்னு கூட்டிட்டு போயிடுறாரு.. என்னமோ போங்க!:)]]]

    அதுவே ஒரு நடிப்புதான் ராசா..! நல்லாயிருந்துச்சுல்ல.. அப்புறமென்ன?

    ReplyDelete
  31. [[[சென்ஷி said...

    //சிறந்த வில்லன் நடிகருக்கான போட்டியில் சந்தேகமே இல்லாமல் 'அஞ்சாதே' பிரசன்னாதான் என் கண்ணுக்குத் தெரிகிறார். ஆனால் இங்கே 'நான் கடவுள்' படத்திற்காக ராஜேந்திரனுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.//

    இல்லைண்ணே.. இதை நான் ஒத்துக்க மாட்டேன். பிரசன்னாவோட உடல்மொழி என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப செயற்கயா இருந்தது. ஆனா இதே நான் கடவுள் படத்துல நடிச்ச நடிகரோட நடிப்பு மத்த எல்லோரோட நடிப்பைவிட நல்லாவே இருந்தது. இந்த வகையில நான் உஙக கருத்தோட முரண்பட வேண்டியிருக்குது.]]]

    ஓகே.. அதுனால தப்பில்லை.. எல்லாரோட கருத்தும் ஒரே மாதிரி இருக்காதுல்ல.. தனி நபர் நடிப்போட அந்தத் திரைப்படத்துக்கும் பொருந்தி வந்த அம்சத்தையும் பார்க்கணும்..!

    ReplyDelete
  32. [[[தண்டோரா ...... said...
    உங்களுக்கும்,எனக்கும் ஒரு வித்தியாசம். நான் டிஸ்கியில் எழுதியிருப்பதை நீங்கள் பதிவாக போட்டிருக்கிறீர்கள். மற்றபடி உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த காமெடி பீசுகளை கண்டுகொள்ளாதீர்கள்]]]

    காமெடி பீசுன்னு விட முடியல தண்டோராஜி..!

    மனசு ரொம்ப வருத்தமா இருக்கு. அது மாதிரி படைச்சுத் தொலைஞ்சுட்டானே முருகன்..!

    ReplyDelete
  33. [[[Arun Kumar said...
    என்ன அண்ணே திரும்ப ஆஸ்பத்திரியில் போய் படுத்து அந்த நர்சம்மா கையால் ஊசி போட்டு கொள்ள ஆசையா .. இந்த பதிவிற்க்கே ஏகபட்ட ஆட்டோ அனுப்பலாம்]]]

    ஆட்டோ வரட்டுமே.. வந்தால்தான் என்ன..? அதையும் பார்த்திருவோம்..

    ReplyDelete
  34. Sachanaa said...

    //ஆனால் 'அஞ்சாதே'யும், 'சுப்ரமணியபுரமும்' தமிழ்த் திரையுலகின் டிரெண்ட்டையே தற்போதைக்கு இடம் மாற்றி வைத்துவிட்டன. அந்தச் சாதனையை செய்த திரைப்படங்களை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை எனில் இந்த தேர்வுக் கமிட்டியினரை சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.//

    ipdi ellam sandhegapada padadhu.. theliva irukanum... mannangatti selection...]]]

    ஓகே.. நானும் ஒரு தடவை சொல்லிக்கிறேன்.. மண்ணாங்கட்டி செலக்ஷன் கமிட்டி..!

    ஓகேவா?

    ReplyDelete
  35. [[[கிறுக்கல் கிறுக்கன் said...

    அரசியல் என்னும் சாக்கடையில் சினிமா விழுந்து நாறுவது என்னமோ உண்மை.

    ஆனால் சிறந்த நடிகருக்கான விருது ஜே.கே.ரித்தீஷுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன்]]]

    உங்க லொள்ளுக்கு ஒரு லொள்..!

    ReplyDelete
  36. [[[Movie Posters said...

    best producer: red gian movie;
    best distributor: Sun pictures;
    best Actress: namitha;
    best dance master: kala;
    best female support: manorama;
    best lyricts: kani மொழி;
    best movie: kathalil vilunthen

    இந்த லிஸ்ட் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா!]]]

    சூப்பர் கமெண்ட்டு மூவி போஸ்டர்ஸ்..!

    ReplyDelete
  37. //
    முடியலையே.. முடியலையே..! என்ன செய்றது..?//

    உமக்கு வெட்டியா நிறைய நேரம் இருக்குதுன்னு நினைக்கிறேன்!

    அதான் அநாவசிய டென்ஷன்களை வலிய இழுத்து வாங்கி கட்டி கொள்கிறீர்கள்!

    பொழுது போகாத நேரங்களில் கார்டூன் நெட்வர்க்(சன், ஜெயா, தமிழன், கேப்டன், சரத் செய்திகள் அல்ல) அல்லது சார்லின் சாப்ளின் டிவிடிக்கள் போன்றவை பார்த்து தொலைக்கவும்!

    பொழுது போன மாதிரியும் இருக்கும்! செலவில்லாமல் உடம்புக்கு வைத்தியம் பார்த்த மாதிரியும் இருக்கும்! (வருமுன் காப்பதே வைத்தியம் செய்வது கொள்வதற்கு ஒப்பாகும்)

    இல்லைன்னா சுந்தரகாண்டம்(பாக்யராஜின் சுந்தர காண்டம் திரைக்கதை அல்ல) வாங்கி தினமும் 5 முறை பாராயணம் செய்யவும்! அதுவும் பிடிக்கலைன்னா கந்த சஷ்டி கவசத்தை தினமும் 56 முறை படிக்கவும்!

    ReplyDelete
  38. [[[Jack said...
    A good post. But Tamilnadu goverment awards are meaningless. This is how it has been for a long long time. Rajni & Kamal should have been ashamed to receive these awards. Unless they themselves say NO, this trend will continue. If DMK is in power Rajni will get the award again for Enthiran.

    It is good that "Sasikumar" didn't get these worthless awards. He deserves better things. Who knows if MK thinks Sasi is growing in popularity, then he may want to take a photo with him as well and give him many awards.]]]

    இருக்கலாம்.. சசி சரணடைய மறுத்ததினால் விருதுகளும் வழங்காமல் போயிருக்கலாம்..! எல்லாரும் ஒரே மாதிரியாவா இருக்காங்க..?

    ReplyDelete
  39. [[[சென்ஷி said...

    2008ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சூர்யாவிற்கு கிடைத்திருக்கலாம்.

    நான் மிகவும் ரசித்த நடிகர். ஒவ்வொரு காலநிலையிலும் அந்தப் பருவத்திற்குரிய உடல்மொழியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.]]]

    இல்லை. இவரைவிட நானாபடேகரும், சசிகுமாரும்தான் என் சாய்ஸ்..!

    ReplyDelete
  40. [[[ஜோ/Joe said...
    பிரசன்னா -வுக்கு உங்கள் பரிந்துரையை தவிர அநேகமாக அனைத்தையும் வழிமொழிகிறேன்.]]]

    நன்றி ஜோ..

    பிரசன்னா கதையோடு பொருந்தி வந்த கதாபாத்திரம் என்பதாலும், கதையே அவரைச் சுற்றித்தான் வந்தது என்பதாலும்தான் அப்படி சொன்னேன்..!

    ReplyDelete
  41. [[[நையாண்டி நைனா said...
    ullen aiyya...]]]

    அட்டெண்டெண்ட்ஸ் போட்டாச்சு.. நெக்ஸ்ட்டு..!

    ReplyDelete
  42. [[[மங்களூர் சிவா said...
    CoooooooooooooooooooooooooooooooL!]]]

    தேங்க்ஸூ..!

    ReplyDelete
  43. [[[மங்களூர் சிவா said...
    /நாமக்கல் சிபி said...
    கோபப்படக் கூடாது..' 'ஆத்திரப்படக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது' என்று எத்தனையோ 'படக் கூடாது'களை 'பட்ட' பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.//

    அப்புறம் ஏன் லோ பிபி, லோ சுகர் எல்லாம் வராது? முதல்ல உம்மை பத்தி கவலைப் படுமைய்யா! ஊர் உலகத்தைப் பத்தி அப்புறமா கவலைப் படலாம்!/

    repeat!]]]

    தேங்க்ஸும் ரிப்பீட்டு..!

    ReplyDelete
  44. [[[butterfly Surya said...

    அண்ணே, இதுக்கு போயி அலட்டிகாதீங்க..

    இதெல்லாம் ஒரு அவார்டு..??

    உங்களுக்கு ஏன் BP எகிறுதுன்னு இப்போ புரியுது..]]]

    பின்ன..? செலவெல்லாம் நம்ம காசுலதானே..? பி.பி. எகிறாம என்ன செய்யும்?

    ReplyDelete
  45. [[[மின்னுது மின்னல் said...
    அவருடைய குடும்பத்தினருமே பரிசுக்குரியவர்களின் பெயரை டிக் செய்து///

    அப்படிதான் நடந்து இருக்கும் :)]]]

    அப்படிங்குறீங்க..? சரி.. நம்புறேன் மின்னலு..!

    ReplyDelete
  46. //சிநேகாவின் நடிப்பு என்னை அப்போதே மிகவும் கவர்ந்திருந்தது.
    //


    கவரும் கவரும்.....
    பயங்கரமா ரசிச்சு பார்த்திங்க போல,
    படத்தை தான் சொன்னேன் அண்ணே

    ReplyDelete
  47. [[[ghost said...
    நச்சுன்னு இருக்கு உங்க விமர்சனம், பதவி வெறி, புகழ் போதையில் இருப்பவர்களுக்கு எதுவும் கண்ணுக்கு தெரியாது.]]]

    எப்பத்தான் தெரியும்னு தெரியலையே கோஸ்ட்டு..?

    ReplyDelete
  48. [[[ஷாகுல் said...
    எதையும் தாங்கும் இதயம் இங்கு பதிவெழுதிக் கொண்டிருக்கிறது!!
    எதையும் தாங்கும் இதையம் கொடுத்த அண்னா வழ்க!!!]]]

    ஐயோ.. ஐயோ.. ஷாகுல் என்ன வார்த்தை சொல்லிட்டீங்க..!

    நான் எவ்வளவுதான் தாங்குவேன்..?

    ReplyDelete
  49. [[[நொந்தகுமாரன் said...

    குறிப்பிட்ட சில கருத்துக்களைத் தவிர, பலவற்றில் நீங்கள் சொன்னதில் நான் உடன்படுகிறேன்.

    அஞ்சாதே, சுப்பிரமணியபுரம் - சினிமா மொழியில் தேர்ந்தவை. அவைகளுக்கு விருது இல்லையென்றால், அக்கிரமம்!

    சிவாஜி, தசாவதாரம் - இரண்டும் குப்பைகள்.]]]

    நானும் நீங்கள் சொல்லியிருப்பதில் வேறுபடுகிறேன் நொந்தகுமாரன்ஜி..

    சிவாஜி, தசாவதாரம் இரண்டும் குப்பைகள் அல்ல.. பார்க்கக் கூடாத திரைப்படங்களும் அல்ல..

    ஆனால் காவியப் படைப்புகள் அல்ல..!

    ReplyDelete
  50. [[[ரசனைக்காரி said...
    இதுக்கெல்லாம் நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க???... விடுங்க பாஸ் அவங்க கொடுக்குற விருதுக்கா எல்லாரும் படம் எடுக்குறாங்க...]]]

    இல்ல.. ஆனாலும் அதுல கிடைக்குற அங்கீகாரத்துக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கே..!



    //எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.//

    என்னங்கண்ணா???!! ரைட்டு......]]]

    ஹி.. ஹி.. ஹி..!

    ReplyDelete
  51. [[[நாமக்கல் சிபி said...

    //எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.//

    இந்த களேபரத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குது!

    முருகா காப்பாத்து!
    கந்தா கரையேத்து!]]]

    ஐயோ முருகா.. இது கிளுகிளுப்பு இல்லை..

    சும்மா ஒரு உம்மாவுக்காக..!

    ReplyDelete
  52. [[[எட்வின் said...

    சிறந்த திரைப்படங்களை இதை விட கேவலப்படுத்திவிட முடியாது. அதற்காகவே தமிழக அரசிற்கு காக்கா பிடிக்கும் அரசு என தனி விருது கொடுக்கலாம். சிவாஜி திரைப்படத்திற்கு விருது என்றதும் டரியல் ஆகி போனேன். எங்க போய் சொல்றதுக்கு இந்த கொடுமைய எல்லாம்.]]]

    அதுனாலதான் இங்க வந்து புலம்பினேன் எட்வின்..!

    ReplyDelete
  53. [[[சென்ஷி said...
    /நாமக்கல் சிபி said...
    //எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.//

    இந்த களேபரத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குது!

    முருகா காப்பாத்து!
    கந்தா கரையேத்து!//

    உ.த. யூத்துன்னு ஒவ்வொரு பதிவுலயும் நிரூபிச்சுட்டு இருக்கறது மாநக்கல்லாருக்கு பொறுக்கலை போலருக்குது :-)]]]

    சென்ஷி தம்பி.. நீ சொல்றது நிசம்தான்..

    பொறாமை.. பொறாமை.. பொறாமை... மாநக்கலாருக்கு நிறைய இருக்குன்னு நினைக்கிறேன்..!

    ReplyDelete
  54. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அது என்னமோ ரஜினின்னாலே ஒரு மவுசு இருக்கத்தான் செய்யுது. என் பார்வையில் இந்த விருதுகளை ஒரு பதிவாக போட உள்ளேன்]]]

    போடுங்க.. போடுங்க.. தப்பே இல்லை..!

    ReplyDelete
  55. [[[Kaargi Pages said...

    சரவணன், நீங்கள் கருணாநிதியைத் திட்டியவுடன் இங்கே மறுமொழி தந்தவர்கள் பலர் - ஞாநி உள்ளிட்டு - பரவசத்துடன் முதுகில் தட்டுவதைப் பார்க்க நகைச்சுவையாய் இருக்கிறது...

    முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை.. விருது / அங்கீகாரம் என்பதே சார்புத் தன்மையுடையதுதான். ஏதோ இத்தனை வருடமாக தமிழ்நாட்டில் திறமையான படைப்புகளுக்கு விருது கொடுத்து வந்ததைப் போலவும், இப்போது ஏதோ கருணாநிதி வந்து வேண்டியவர்களுக்கும் ஜால்ராக்களுக்கும் கொடுத்து அதன் புனிதத் தன்மையைக் கெடுத்து விட்டது போலவும் ஒரு தொனி உங்கள் பதிவில் தெரிகிறது...

    எப்போது இங்கே திறமையாளர்களுக்கு அவர்களின் திறமையை மட்டும் கணக்கில் கொண்டு விருது வழங்கப்பட்டிருக்கிறது? எனக்குத் தெரிந்து எப்போதும் இல்லை - அதற்கான சமூகச் சூழலும் இங்கே இல்லை - முன்பும் இருந்ததில்லை..

    போற்றிப் பாடும் புலவனுக்கு பரிசில் கொடுத்த மண்ணல்லவா?? கருணாநிதி அந்தச் சங்கிலியின் கடைசிக் கண்ணி - அவ்வளவு தான்.

    சரி உலக அளவிலாவது சார்புத்தன்மையில்லாமல் விருதுகள் வழங்கப்படுகின்றனவா? அங்கேயும் இல்லை கிடையாது... உலக அழகிப் போட்டியோ ஆஸ்கர் / நோபெல் பரிசோ எல்லாவற்றிலும் ஒருவித சார்புத்தன்மையும் ( சார்புத்தன்மை என்று நான் குறிப்பிடுவது partiality எனும் அர்த்தத்தில்) எந்த ஒரு விருதுக்குப் பின்னும் ஒரு அரசியல் இருந்து கொண்டுதான் இருக்கிறது..

    என்ன.... நம்ம கருணாநிதி விஷயத்துல எல்லாம் கொஞ்சம் வெளிப்படையா இருக்கு அவ்வளவுதான். எம்.ஜி.ஆரும் இதான் செய்தார் செயலலிதவும் இதைத்தான் செய்தார்.. அதற்கு முன்பும் இப்படித்தான் இருந்தது...
    ஞாநிக்கு கருணாவைத் எங்காவது யாராவது எவ்வகையிலாவது திட்டி விட்டால் சந்தோசம் பொங்கி விடும் போலிருக்கிறது..]]]

    கார்க்கி பேஜஸ் ஸார்..!

    விருதுகளே சார்புகள்தான் என்றாலும் பொதுவான அமைப்புகள் தருகின்ற விருதுகள் மட்டும் எப்படி 99 சதவிகிதம் நேர்மையாக இருக்கின்றன.. அதுபோல கொஞ்சமாவது தரலாமே.. முழுக்கவே சார்புடன்தான் தருவேன் என்றால் எப்படி?

    வருடக்கணக்காக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் அது பற்றிக் குறிப்பிடக்கூடாதா?

    அரசு இதைத்தான் பின்பற்றும் என்றால் நானும் இதையேதான் பின்பற்றுவேன்..!

    ReplyDelete
  56. [[[Kaargi Pages said...

    //கருணாநிதி அந்தச் சங்கிலியின் கடைசிக் கண்ணி - அவ்வளவு தான்.//

    இந்தக் கண்ணி இனிமேலும் இப்படித்தான் தொடரும் - அதற்கான சமூக அடித்தளம் மாறாதவரை(என்று குறிபிட எண்ணினேன்; மறந்து விட்டேன்);)]]]

    நான்கூட கடைசி அரசர் என்கிற அர்த்தத்தில் சொல்கிறீர்களோ என்று நினைத்து ஏமாந்து போனேன்..!

    ReplyDelete
  57. //உண்மையில் 'உளியின் ஓசை' படைப்பு பரிசுக்குரியதா? சிறந்த உரையாடல் பரிசுப் போட்டியில் 'நான் கடவுளும்', 'பொம்மலாட்டமும்', 'அஞ்சாதே'யும், 'பூ'வும், 'சுப்ரமண்யபுரமும்' வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அவற்றைவிடவா ஐயா அற்புதமாக எழுதிக் குவித்துவிட்டார். கொடுமையடா சாமி..//

    ஆஸ்கார் அவார்டுக்கே தகுதி படைத்த உளியின் ஓசை வசனங்களைக் குறைகூறி, அதை வடித்த தங்கத்தமிழாம், தாய்த்தமிழாம், முத்தமிழ் வித்தகாராம், அண்ணா விருது கண்ட அன்னைத் தமிழாம் மருத்துவர் கலைஞருக்கு சிறந்த வசனகர்த்தா விருது தருவதை குறைகூறியுள்ளதற்கு என்னுடைய கண்டனங்களை கன்னா பின்னாவென்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    கலைஞர் இன்னும் பெறவேண்டிய விருது உலகத்தில் எதுவும் இல்லை என்பதையும் இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    யாராவது உள்ளூர் விருது (நுங்கை சிங்கம், தஞ்சைத் தங்கம் என்பது போல)எதாவது வைத்து இருந்தால் அதை பெற்றுக் கொண்டும் பாரட்டுவிழாவில் கலந்து கொண்டு தமிழுக்கு இன்னுமொரு தொண்டு செய்யவும் தயாராக இருக்கிறார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  58. [[[நாமக்கல் சிபி said...
    //முடியலையே.. முடியலையே..! என்ன செய்றது..?//

    உமக்கு வெட்டியா நிறைய நேரம் இருக்குதுன்னு நினைக்கிறேன்!
    அதான் அநாவசிய டென்ஷன்களை வலிய இழுத்து வாங்கி கட்டி கொள்கிறீர்கள்! பொழுது போகாத நேரங்களில் கார்டூன் நெட்வர்க்(சன், ஜெயா, தமிழன், கேப்டன், சரத் செய்திகள் அல்ல) அல்லது சார்லின் சாப்ளின் டிவிடிக்கள் போன்றவை பார்த்து தொலைக்கவும்! பொழுது போன மாதிரியும் இருக்கும்! செலவில்லாமல் உடம்புக்கு வைத்தியம் பார்த்த மாதிரியும் இருக்கும்! (வருமுன் காப்பதே வைத்தியம் செய்வது கொள்வதற்கு ஒப்பாகும்)
    இல்லைன்னா சுந்தரகாண்டம்(பாக்யராஜின் சுந்தர காண்டம் திரைக்கதை அல்ல) வாங்கி தினமும் 5 முறை பாராயணம் செய்யவும்! அதுவும் பிடிக்கலைன்னா கந்த சஷ்டி கவசத்தை தினமும் 56 முறை படிக்கவும்!]]]

    இப்படியும் முடியலைன்னா..?

    ReplyDelete
  59. [[[ஜெட்லி said...

    //சிநேகாவின் நடிப்பு என்னை அப்போதே மிகவும் கவர்ந்திருந்தது.//

    கவரும் கவரும்..... பயங்கரமா ரசிச்சு பார்த்திங்க போல, படத்தைதான் சொன்னேன் அண்ணே]]]

    ஆமா.. நெசந்தான்.. சிநேகாவை பிடிக்காத யூத்து யாராவது தமிழ்நாட்டில் இருக்க முடியுமா?

    ReplyDelete
  60. ///நல்லதந்தி said...

    //உண்மையில் 'உளியின் ஓசை' படைப்பு பரிசுக்குரியதா? சிறந்த உரையாடல் பரிசுப் போட்டியில் 'நான் கடவுளும்', 'பொம்மலாட்டமும்', 'அஞ்சாதே'யும், 'பூ'வும், 'சுப்ரமண்யபுரமும்' வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அவற்றைவிடவா ஐயா அற்புதமாக எழுதிக் குவித்துவிட்டார். கொடுமையடா சாமி..//

    ஆஸ்கார் அவார்டுக்கே தகுதி படைத்த உளியின் ஓசை வசனங்களைக் குறைகூறி, அதை வடித்த தங்கத்தமிழாம், தாய்த்தமிழாம், முத்தமிழ் வித்தகாராம், அண்ணா விருது கண்ட அன்னைத் தமிழாம் மருத்துவர் கலைஞருக்கு சிறந்த வசனகர்த்தா விருது தருவதை குறைகூறியுள்ளதற்கு என்னுடைய கண்டனங்களை கன்னா பின்னாவென்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    கலைஞர் இன்னும் பெறவேண்டிய விருது உலகத்தில் எதுவும் இல்லை என்பதையும் இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    யாராவது உள்ளூர் விருது (நுங்கை சிங்கம், தஞ்சைத் தங்கம் என்பது போல)எதாவது வைத்து இருந்தால் அதை பெற்றுக் கொண்டும் பாரட்டுவிழாவில் கலந்து கொண்டு தமிழுக்கு இன்னுமொரு தொண்டு செய்யவும் தயாராக இருக்கிறார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.///

    வஞ்சப் புகழ்ச்சில இது எத்தனையாவது பாட்டுன்னு தெரியலை..

    நல்லதந்தி ஸார்.. உளியின் ஓசையை தமிழ்நாட்டுல எத்தனை பேர் பார்த்திருப்பாங்கன்னு தெரியலை.. அதை ஞாபகப்படுத்தத்தான் கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்..!

    ReplyDelete
  61. என்னைப்போல் ஒருவனின் அரசியலை சொம்புடன் வரும் சினிமா தொழில் சம்பந்தப்பட்ட பதிவர்கள் இந்தக் கொடுமையை வரிந்து கட்டிக்கொண்டு விமர்சித்து இருக்கிறார்களா முருகா? இருக்காது என்றே நினைக்கிறேன்.

    நல்ல சினிமா என்பது அவர்களின் நோக்கம் அல்ல . எல்லாம் டப்பும் டப்பு சார்ந்த விசயமும்தான். முதல்வரை பகைத்தால் என்னாவது இவர்கள் முதுகெலும்பு.

    டப்பு டப்பு ஒன்றே நோக்கம். உதாரணம்:
    கந்தசாமியை U/A - குழந்தைகளுக்கான படம் என்று சொல்லி கல்லா கட்ட நினைத்த தயாரிப்பாளர் அதை குழந்தைகள்படம் என்று சொன்னது கொடுமையிலும் கொடுமை.

    U/A movies are only meant for people older then 12 years old.U/A rating stands for Unrestricted rating under the supervision of an adult as the movie may contain some sensitive content related to violence, language or sexuality.

    **

    இப்படி விருதை வாங்க உலக நாயகன் மற்றும் சூப்பருக்கு கூச்சம் இல்லையா?

    ReplyDelete
  62. //
    இப்படியும் முடியலைன்னா..?//

    முதல்ல நான் சொன்னதுல ஏதாச்சும் ஒண்ணையாச்சும் டிரை பண்னி பாருங்க! ஆட்டோமேடிக்கா உங்க கவனத்தில் நம்ம நாட்டுல நடக்குற சில நல்ல (பாஸிடிவான) விஷயங்களும் (உங்க) கண்ணுல படும்!

    அதான் உங்க தேவையில்லாத வியாதிகளுக்கு மருந்து!

    அப்பவும் முடியலைன்னா சொல்லுங்க! டிக் 20 க்கு நான் ஸ்பான்ஸர் செய்யுறேன்!

    ReplyDelete
  63. //என்றாலும் பொதுவான அமைப்புகள் தருகின்ற விருதுகள் மட்டும் எப்படி 99 சதவிகிதம் நேர்மையாக இருக்கின்றன.. அதுபோல கொஞ்சமாவது தரலாமே.. முழுக்கவே சார்புடன்தான் தருவேன் என்றால் எப்படி?//

    எந்த பொதுவான அமைப்பைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. :)

    எனது சிற்றறிவுக்கு எட்டியவரையில் எந்த அமைப்பு கொடுக்கும் விருதுமே சார்புதன்மையதும் பின்னனியில் அரசியலையுமே கொண்டிருக்கிறது.

    நான் சொல்லவந்தது - காலங்காலமாய் இருந்து வரும் ஜால்ராக்களை குளிர்விக்கும் நடைமுறையைப் பற்றி நீங்கள் பேசாமல் ஏதோ இன்றைக்கு கருணா வந்து தான் எல்லாத்தையும் கெடுத்துட்டார் என்று சொல்வது போன்ற ஒரு தொனியைத் தான். அந்த ஒரு அம்சத்தை விட்டுவிட்டால் ( என்ன... கருணாவை குறிவைத்துத் திட்டாமல் விட்டதற்காக ஞாநி கொஞ்சம் வருத்தப்பட்டிருப்பார்) பதிவின் பொருளில் எனக்கு மாறுபாடில்லை.

    ReplyDelete
  64. சிறந்த படம் சிவாஜியா!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  65. //இதில் கொடுமையிலும் கொடுமையாக தமிழக முதல்வரே தான் கொடுக்க வேண்டிய விருதுகளில் ஒன்றை தானே உரிமையாக கையைவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய 'உளியின் ஓசை'க்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதாம்//

    விருந்தாளிக்கு வச்சத பிள்ளைகள் சாப்பிடுராமாதிரி ஏதோ ஒன்னு எடுத்துட்டார் விடுங்க வயசானா எல்லோரும் பிள்ளைகள் மாதிரிதான்.

    ReplyDelete
  66. அண்ணே இதெல்லாம் கோபாலபுரத்தின் காமடி டிராமா ரொம்ப சிரியஸ் ஆகாதீங்க..... உங்க ஒடம்ப பார்த்துக்கோங்க....

    ReplyDelete
  67. [[[கல்வெட்டு said...
    என்னைப் போல் ஒருவனின் அரசியலை சொம்புடன் வரும் சினிமா தொழில் சம்பந்தப்பட்ட பதிவர்கள் இந்தக் கொடுமையை வரிந்து கட்டிக்கொண்டு விமர்சித்து இருக்கிறார்களா முருகா? இருக்காது என்றே நினைக்கிறேன்.

    நல்ல சினிமா என்பது அவர்களின் நோக்கம் அல்ல. எல்லாம் டப்பும் டப்பு சார்ந்த விசயமும்தான். முதல்வரை பகைத்தால் என்னாவது இவர்கள் முதுகெலும்பு. டப்பு டப்பு ஒன்றே நோக்கம். உதாரணம்:
    கந்தசாமியை U/A - குழந்தைகளுக்கான படம் என்று சொல்லி கல்லா கட்ட நினைத்த தயாரிப்பாளர் அதை குழந்தைகள்படம் என்று சொன்னது கொடுமையிலும் கொடுமை.
    U/A movies are only meant for people older then 12 years old.U/A rating stands for Unrestricted rating under the supervision of an adult as the movie may contain some sensitive content related to violence, language or sexuality.**

    இப்படி விருதை வாங்க உலக நாயகன் மற்றும் சூப்பருக்கு கூச்சம் இல்லையா?]]]

    இதுவும் டப்பு சார்ந்த மேட்டர்தான் கல்வெட்டுஜி...

    அதனால ஒழுங்கா விழாவுக்குப் போய் சமர்த்துப் பிள்ளையாக கொடுக்கிறதை வாங்கிட்டு சத்தமில்லாம திரும்பிப் போயிருவாங்க..!

    ReplyDelete
  68. [[[நாமக்கல் சிபி said...

    //இப்படியும் முடியலைன்னா..?//

    முதல்ல நான் சொன்னதுல ஏதாச்சும் ஒண்ணையாச்சும் டிரை பண்னி பாருங்க! ஆட்டோமேடிக்கா உங்க கவனத்தில் நம்ம நாட்டுல நடக்குற சில நல்ல (பாஸிடிவான) விஷயங்களும் (உங்க) கண்ணுல படும்!

    அதான் உங்க தேவையில்லாத வியாதிகளுக்கு மருந்து!

    அப்பவும் முடியலைன்னா சொல்லுங்க! டிக் 20 க்கு நான் ஸ்பான்ஸர் செய்யுறேன்!]]]

    அடப்பாவி.. எமலோகத்துக்கு பார்சல் பண்ற வேலையையும் நானே பார்க்குறேன்னு தெனாவெட்டா சொல்றியே.. என்ன தைரியம் உனக்கு.? என் அப்பன் முருகனைத் தவிர வேற யாருக்கும் என்னைத் தூக்குவதற்கு உரிமையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  69. [[[Kaargi Pages said...
    //என்றாலும் பொதுவான அமைப்புகள் தருகின்ற விருதுகள் மட்டும் எப்படி 99 சதவிகிதம் நேர்மையாக இருக்கின்றன.. அதுபோல கொஞ்சமாவது தரலாமே.. முழுக்கவே சார்புடன்தான் தருவேன் என்றால் எப்படி?//

    எந்த பொதுவான அமைப்பைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.:) எனது சிற்றறிவுக்கு எட்டியவரையில் எந்த அமைப்பு கொடுக்கும் விருதுமே சார்புதன்மையதும் பின்னனியில் அரசியலையுமே கொண்டிருக்கிறது.
    நான் சொல்ல வந்தது - காலங்காலமாய் இருந்து வரும் ஜால்ராக்களை குளிர்விக்கும் நடைமுறையைப் பற்றி நீங்கள் பேசாமல் ஏதோ இன்றைக்கு கருணா வந்துதான் எல்லாத்தையும் கெடுத்துட்டார் என்று சொல்வது போன்ற ஒரு தொனியைத்தான். அந்த ஒரு அம்சத்தை விட்டுவிட்டால் (என்ன... கருணாவை குறிவைத்துத் திட்டாமல் விட்டதற்காக ஞாநி கொஞ்சம் வருத்தப்பட்டிருப்பார்) பதிவின் பொருளில் எனக்கு மாறுபாடில்லை.]]]

    நான் கூர்ந்து கவனித்து வரும் இன்றைய அரசியல், சமூகச் சூழலை முன் வைத்துதான் நான் பேச முடியும்..

    எனது முன் காலத்தைய தவறுகளை படித்தாலோ, தெரிந்தாலோ கண்டிப்பா வெளிப்படையாக சொல்லத்தான் செய்வேன்.

    எம்.ஜி.ஆர். காலத்தில் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஸோ, அதைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை கார்க்கி..!

    ReplyDelete
  70. [[[வால்பையன் said...

    சிறந்த படம் சிவாஜியா!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!]]]

    இதென்ன பெருமூச்சா? ஏப்பமா?

    ReplyDelete
  71. [[[பித்தன் said...

    //இதில் கொடுமையிலும் கொடுமையாக தமிழக முதல்வரே தான் கொடுக்க வேண்டிய விருதுகளில் ஒன்றை தானே உரிமையாக கையைவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய 'உளியின் ஓசை'க்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதாம்//

    விருந்தாளிக்கு வச்சத பிள்ளைகள் சாப்பிடுரா மாதிரி ஏதோ ஒன்னு எடுத்துட்டார் விடுங்க வயசானா எல்லோரும் பிள்ளைகள் மாதிரிதான்.]]]

    அப்படீன்னு நினைச்சக்க வேண்டியதுதானா..?

    பித்தா உனக்கு பித்தம் தலைக்கு ஏறிருச்சுன்னு நினைக்கிறேன்..!

    ReplyDelete
  72. [[[பித்தன் said...
    அண்ணே இதெல்லாம் கோபாலபுரத்தின் காமடி டிராமா ரொம்ப சிரியஸ் ஆகாதீங்க..... உங்க ஒடம்ப பார்த்துக்கோங்க....]]]

    விசாரிப்புக்கு தேங்க்ஸ் தம்பீ..!

    ReplyDelete
  73. //என் அப்பன் முருகனைத் தவிர வேற யாருக்கும் என்னைத் தூக்குவதற்கு உரிமையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!
    //

    இப்படியே தினமும் 4 எழுதிகிட்டிருங்க! பழனிமலையானோ மருதமலையானோ உங்களைத் தூக்குறதுக்கு முன்னாடி கோபாலபுரத்தான் தூக்கிடப் போறான்!

    ReplyDelete
  74. [[[நாமக்கல் சிபி said...
    //என் அப்பன் முருகனைத் தவிர வேற யாருக்கும் என்னைத் தூக்குவதற்கு உரிமையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!//

    இப்படியே தினமும் 4 எழுதிகிட்டிருங்க! பழனிமலையானோ மருதமலையானோ உங்களைத் தூக்குறதுக்கு முன்னாடி கோபாலபுரத்தான் தூக்கிடப் போறான்!]]]

    செய்யட்டும். அப்படியாவது எல்லாருக்கும் முன்னாடி முதல் ஆளா "உள்ள" போயிட்டு வந்தர்றேன்..

    ReplyDelete
  75. //எந்திரன்' டீமிற்கே கடுக்கான் கொடுத்துவிட்டு//

    அப்ப கூட ரஜினிக்கு ஒரு உள்குத்து வச்சு எழுதனுமா? ஆனா பதிவு நல்லா இருக்கு :-))

    ReplyDelete
  76. [[[சிங்கக்குட்டி said...
    //எந்திரன்' டீமிற்கே கடுக்கான் கொடுத்துவிட்டு//

    அப்பகூட ரஜினிக்கு ஒரு உள்குத்து வச்சு எழுதனுமா? ஆனா பதிவு நல்லா இருக்கு :-))]]]

    உள்குத்தெல்லாம் இல்லீங்கோ.. நடந்ததைத்தான் எழுதினேன்..

    வருகைக்கு நன்றிங்கோ சிங்கக்குட்டி..!

    ReplyDelete
  77. நல்ல பதிவு உண்மைத் தமிழன் அண்ணே... இந்த லிஸ்ட் வந்தியத்தேவன் பதிவில் பார்த்த உடனே எனக்கு வாயில் வந்தது... 'என்ன ஓ* மாயமப்பா இது'

    ஜோவுக்கு:
    ஜோ, அஞ்சாதேவில் பிரசன்னாவை சிறந்த வில்லன் பாத்திரத்துக்கு நானும் பரிந்துரைக்க மாட்டேன். ஆங்கிலப் படங்களுக்கு விருது கொடுப்பது போல் ‘முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த சிறந்த நடிகர்' (Best Actor in a Leading Role) என்றுதான் விருது கொடுப்பேன். ஏனென்றால் அவரின் உடல்மொழி மூலம் மிஷ்கின் சொன்ன சேதிகள் நிறைய. வேறு பல நடிகர்களுக்கு அது குருவி தலையில் பனங்காய்.....

    உண்மைத் தமிழன் அண்ணே
    மற்றபடி அஞ்சாதேவை கடைசிவரை சிறந்த திரைப்படத்துக்கு பரிந்துரைக்க மாட்டேன். மிகப் பெரிய லாஜிக் ஓட்டை ஒன்றை மிஷ்கின் விட்டதால் அந்தக் காட்சிக்குப் பின் நடிகர்களின் performance, சில பாத்திரப் படைப்புகள் தவிர கதையில் மனம் ஒட்டவில்லை. (பார்த்திபனை ஆஸ்பத்திரியில் வைத்து நாலுபேர் கொல்ல வரும் காட்சியைச் சொல்கிறேன் தல... பெரிய ஓட்டை அது. ஏனென்றால் மீதிக் கதையே அதை மையமாய் வைத்துத்தான் ஓடுகிறது)

    ReplyDelete
  78. இதே ஜெயலலிதா செய்து இருந்தால் ஒரு ஆயிரம் பதிவாவது வந்து இருக்கும்.
    "வானத்தில் இருந்து வந்த புனிதர்" அரசில் நடப்பதால் ஒரே ஒரு "மாற்று கருத்து" பதிவு மட்டும் வந்து இருக்கு.

    ReplyDelete
  79. [[[Kiruthikan Kumarasamy said...
    நல்ல பதிவு உண்மைத் தமிழன் அண்ணே... இந்த லிஸ்ட் வந்தியத்தேவன் பதிவில் பார்த்த உடனே எனக்கு வாயில் வந்தது... 'என்ன ஓ* மாயமப்பா இது']]]

    ஊழல் மாயமப்பா..!

    [[[ ஜோவுக்கு:
    ஜோ, அஞ்சாதேவில் பிரசன்னாவை சிறந்த வில்லன் பாத்திரத்துக்கு நானும் பரிந்துரைக்க மாட்டேன். ஆங்கிலப் படங்களுக்கு விருது கொடுப்பது போல் ‘முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த சிறந்த நடிகர்' (Best Actor in a Leading Role) என்றுதான் விருது கொடுப்பேன். ஏனென்றால் அவரின் உடல்மொழி மூலம் மிஷ்கின் சொன்ன சேதிகள் நிறைய. வேறு பல நடிகர்களுக்கு அது குருவி தலையில் பனங்காய்.....]]]

    கரெக்ட்.. பிரசன்னா கதையை தன் முதுகில் தாங்கியது இவருடைய தனிச் சிறப்பு..

    [[[உண்மைத் தமிழன் அண்ணே
    மற்றபடி அஞ்சாதேவை கடைசிவரை சிறந்த திரைப்படத்துக்கு பரிந்துரைக்க மாட்டேன். மிகப் பெரிய லாஜிக் ஓட்டை ஒன்றை மிஷ்கின் விட்டதால் அந்தக் காட்சிக்குப் பின் நடிகர்களின் performance, சில பாத்திரப் படைப்புகள் தவிர கதையில் மனம் ஒட்டவில்லை. (பார்த்திபனை ஆஸ்பத்திரியில் வைத்து நாலுபேர் கொல்ல வரும் காட்சியைச் சொல்கிறேன் தல... பெரிய ஓட்டை அது. ஏனென்றால் மீதிக் கதையே அதை மையமாய் வைத்துத்தான் ஓடுகிறது)]]]

    எந்தப் படத்தில்தான் லாஜிக் ஓட்டை இல்லை.. ஆனால் அஞ்சாதேயில் இருந்த அசத்தல் உணர்வு அதற்கடுத்து சுப்ரமணியபுரத்தில்தான் வருகிறது என்பதால் அஞ்சாதேவுக்கு எனது ஓட்டு..!

    இதனைப் படிக்கவும்.. http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_19.html

    ReplyDelete
  80. [[[அஹோரி said...

    இதே ஜெயலலிதா செய்து இருந்தால் ஒரு ஆயிரம் பதிவாவது வந்து இருக்கும்.

    "வானத்தில் இருந்து வந்த புனிதர்" அரசில் நடப்பதால் ஒரே ஒரு "மாற்று கருத்து" பதிவு மட்டும் வந்து இருக்கு.]]]

    கொஞ்ச நாள் கழிச்சு ஒன்றிரண்டு பேர் போடுவாங்கன்னு எதிர்பார்க்கிறேன்..!

    இதுதான் கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் இருக்கின்ற வித்தியாசம்..

    கலைஞர் செய்தால் அது அவரை மீறிய செயல்.. ஜெயலலிதா செய்தால் அது கிரிமினல் குற்றம்..!

    என்னமோ போங்க..!

    ReplyDelete
  81. //காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.//

    சினேகா காபி கொடுக்காம சும்மா இருந்தாக் கூட அள்ளி முத்தமிடலாம்.
    ---
    அஞ்சாதே பற்றி கொஞ்சம் வருத்தமே.
    ---
    அலசல் நல்லா இருக்கு.

    ReplyDelete
  82. ///மாயக்கண்ணாடி///

    இதுக்கு நீங்க என்ன ரெண்டு அடி அடிக்கலாம்

    ReplyDelete
  83. நல்ல வேளை! உளியின் ஓசைக்கு சிறந்த திரைப்படம்னு அவார்ட் குடுக்காம விட்டாங்களேனு சந்தோஷப்படுங்க பாஸ்!

    ReplyDelete
  84. [[[எவனோ ஒருவன் said...

    //காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.//

    சினேகா காபி கொடுக்காம சும்மா இருந்தாக் கூட அள்ளி முத்தமிடலாம்.]]]

    அடப்பாவி.. முதுகுல டின் கட்டிருவாங்க போலிருக்கே..!

    [[[அஞ்சாதே பற்றி கொஞ்சம் வருத்தமே. அலசல் நல்லா இருக்கு.]]]

    நன்றி எவனோ ஒருவன்ஜி..!

    அடிக்கடி வருக. ஆதரவு தருக..!

    ReplyDelete
  85. [[[இரும்புத்திரை அரவிந்த் said...

    ///மாயக்கண்ணாடி///

    இதுக்கு நீங்க என்ன ரெண்டு அடி அடிக்கலாம்]]]

    ஏன் மாயக்கண்ணாடிக்கு என்ன குறைச்சல்..? நல்ல கதைதான்..!

    ReplyDelete
  86. [[[Its Me The Monk said...
    நல்ல வேளை! உளியின் ஓசைக்கு சிறந்த திரைப்படம்னு அவார்ட் குடுக்காம விட்டாங்களேனு சந்தோஷப்படுங்க பாஸ்!]]]

    அதானே.. வயித்துல பாலை வார்க்குறீங்க பாஸ்..!

    ReplyDelete
  87. சினேகா யூத்தா...என்ன கொடுமையிது சரவனா..

    இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த பதிவை நிராகரிக்கிறேன்...

    செல்லாது..செல்லாது...

    ReplyDelete
  88. தல உங்க பதிவைவிட பின்னுடம் எல்லாம் சூப்பர் ..

    உங்க கோவம் புரிகிறது. நியூஸ் சேனல்ல சற்று முன் என்று அந்த நியூஸ் போட்டு இருக்கும் போதே படிச்சி சிரிச்சிட்டு இருந்தேன். என்ன பண்ணுறது இது எல்லாம் கால கொடுமை அவ்வளவு தான்.

    ReplyDelete
  89. ஐயகோ!

    தமிழ் இனத் தலைவர் கலைஞர் அரசின் விருது அறி(ரி)(வி)ப்புகளை விமர்சிப்பதைக் கண்டு ஆற்றொணாத் துயர் அடைகிறேன்!

    சொல் வதை செய்வோம்!

    செய் வதை சொல்வோம்!

    அண்ணா நாமம் வாழ்க!

    ReplyDelete
  90. பின்னூட்டம் போடலாம்னா எவ்ளோ தூரம் உருட்டறது மவுசை? உங்க உண்மையான ஆதங்கத்துக்கு இவ்ளோ ஆதரவு இருக்கிறது சந்தோசமா இருக்கு. பாத்துண்ணே! ரொம்ப பேசுணா ஆட்டோ அனுப்புவாங்கலாமே?

    ReplyDelete
  91. தேன் எடுத்தவன் தன் கையை ஒரு நக்கு நக்கிக்கிட்டால் தப்பில்லையாமே!!!!

    அதான்......தனக்கும் ஒன்னு...ஹிஹிஹி

    ReplyDelete
  92. [[[டவுசர் பாண்டி... said...

    சினேகா யூத்தா...என்ன கொடுமையிது சரவனா..

    இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த பதிவை நிராகரிக்கிறேன்...

    செல்லாது..செல்லாது...]]]


    சினேகா யூத்து இல்லையா? என்ன கொடுமை இது சரவணா..!

    இந்த ஒரு காரணத்துக்காகவே உங்கள் மீது வழக்குத் தொடரப் போகிறேன்..

    செல்லாது.. செல்லாது..!

    ReplyDelete
  93. [[[ராஜராஜன் said...
    தல உங்க பதிவைவிட பின்னுடம் எல்லாம் சூப்பர். உங்க கோவம் புரிகிறது. நியூஸ் சேனல்ல சற்று முன் என்று அந்த நியூஸ் போட்டு இருக்கும்போதே படிச்சி சிரிச்சிட்டு இருந்தேன். என்ன பண்ணுறது இது எல்லாம் கால கொடுமை அவ்வளவுதான்.]]]

    என் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் ராஜராஜனுக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  94. [[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    ஐயகோ! தமிழ் இனத் தலைவர் கலைஞர் அரசின் விருது அறி(ரி)(வி)ப்புகளை விமர்சிப்பதைக் கண்டு ஆற்றொணாத் துயர் அடைகிறேன்!

    சொல் வதை செய்வோம்!

    செய் வதை சொல்வோம்!

    அண்ணா நாமம் வாழ்க!]]]

    பெரியாருக்கு போட்ட நாமம் வாழ்க..!

    ReplyDelete
  95. [[[தமிழ் நாடன் said...
    பின்னூட்டம் போடலாம்னா எவ்ளோ தூரம் உருட்டறது மவுசை? உங்க உண்மையான ஆதங்கத்துக்கு இவ்ளோ ஆதரவு இருக்கிறது சந்தோசமா இருக்கு. பாத்துண்ணே! ரொம்ப பேசுணா ஆட்டோ அனுப்புவாங்கலாமே?]]]

    அனுப்பட்டுமே..? எனக்கென்ன பயமா? தமிழ்நாடனெல்லாம் உதவிக்கு வர மாட்டீர்களா என்ன..?

    ReplyDelete
  96. [[[துளசி கோபால் said...
    தேன் எடுத்தவன் தன் கையை ஒரு நக்கு நக்கிக்கிட்டால் தப்பில்லையாமே!!!! அதான். தனக்கும் ஒன்னு. ஹிஹிஹி]]]

    யாரெங்கே.. நமது கூட்டணியில் துளியம்மாவும் இன்று முதல் இணைகிறார். ஆட்டோ அனுப்ப வேண்டிய பட்டியலில் அவருடைய முகவரியையும் இணைத்துவிடுங்கள்..

    எவ்வளவு அனுப்பினாலும் அம்மா சமாளிப்பாராக்கும்..!

    ReplyDelete
  97. என்னாது “ மாயக்கண்ணாடி” யா?

    எண்ணங்கண்ணா எதாவது எழுத்துப்பிழையா?

    ReplyDelete
  98. என்னுடைய வோட்டும் மொழி படத்துக்குதான்.
    சா. தமிழ்செல்வன் பதிவரா...News to me...வாழ்த்துக்கள்.
    உளியின் ஓசைக்கு விருது நல்ல தமாஷ்...அண்ணா விருது போலதான்....!
    'நான் கடவுளுக்கு' நிச்சயம் கொடுத்திருக்கலாம். அத்திரைப்படத்தின் வசனங்கள் தமிழ்த் திரையுலகத்துக்கு கிடைத்த புதுமை. பாவம் ஜெயமோகன்.. சாருநிவேதிதாவுக்கு பதிவு போடும் வேலையைக் கொடுக்க ஆசை, ஆசையாகத் தயாராகக் காத்திருந்தார். ஆப்படித்துவிட்டார் கோபாலபுரத்து ஐயா. சாருவுக்கு ஒரு வேலை மிச்சம்."
    !!!.....!!!!
    திறமைக்கு விருது என்றில்லாமல் ஆள் பிடிக்க விருது என்றாகி விட்டது. நல்ல வேளை, உதயநிதி தயாரித்த படங்களுக்கெல்லாம் விருது தராமல் போனார்களே....

    ReplyDelete
  99. **எதையும் தாங்கும் தமிழன், நிச்சயம் இதையும் தாங்குவான்..!
    **

    :-)

    ReplyDelete
  100. நல்ல பதிவு. வாழ்த்துக்கள். வாய்ப்பிருந்தால் எமது பதிவுகளைப் பார்க்கவும்.

    http://savukku.blogspot.com/

    ReplyDelete
  101. [[[யாசவி said...
    என்னாது “ மாயக்கண்ணாடி” யா?
    எண்ணங்கண்ணா எதாவது எழுத்துப் பிழையா?]]]

    யாசவி.. மாயக்கண்ணாடி நல்ல கதையம்சம் உள்ள திரைப்படம்தான். எனது விமர்சனத்தைப் படித்துப் பாருங்கள்..!

    ReplyDelete
  102. [[[ஸ்ரீராம். said...
    என்னுடைய வோட்டும் மொழி படத்துக்குதான்.
    சா. தமிழ்செல்வன் பதிவரா... News to me... வாழ்த்துக்கள்.
    உளியின் ஓசைக்கு விருது நல்ல தமாஷ். அண்ணா விருது போலதான்....!
    'நான் கடவுளுக்கு' நிச்சயம் கொடுத்திருக்கலாம். அத்திரைப்படத்தின் வசனங்கள் தமிழ்த் திரையுலகத்துக்கு கிடைத்த புதுமை. பாவம் ஜெயமோகன்.. சாருநிவேதிதாவுக்கு பதிவு போடும் வேலையைக் கொடுக்க ஆசை, ஆசையாகத் தயாராகக் காத்திருந்தார். ஆப்படித்துவிட்டார் கோபாலபுரத்து ஐயா. சாருவுக்கு ஒரு வேலை மிச்சம்."!!!.....!!!!

    திறமைக்கு விருது என்றில்லாமல் ஆள் பிடிக்க விருது என்றாகி விட்டது. நல்ல வேளை, உதயநிதி தயாரித்த படங்களுக்கெல்லாம் விருது தராமல் போனார்களே....]]]

    அடுத்த வருஷம் நிச்சயம் கிடைக்கும்..!

    ReplyDelete
  103. [[[மாயாவி said...

    **எதையும் தாங்கும் தமிழன், நிச்சயம் இதையும் தாங்குவான்..!
    **
    :-)]]]

    நீங்களும் தாங்கிக்குங்க மாயாவி..!

    ReplyDelete
  104. [[[ஒப்பாரி said...
    நல்ல பதிவு. வாழ்த்துக்கள். வாய்ப்பிருந்தால் எமது பதிவுகளைப் பார்க்கவும்.
    http://savukku.blogspot.com/]]]

    தங்களது வருகைக்கு நன்றி ஒப்பாரி ஸார்..!

    ReplyDelete
  105. ரெண்டு பேருக்கும் ஒரே வார்டு தானோ http://stalinfelix.blogspot.com/2009/09/blog-post_30.html

    ReplyDelete
  106. [[[காலப் பறவை said...
    ரெண்டு பேருக்கும் ஒரே வார்டுதானோ..!]]]

    சந்தேகமேயில்லை.. பக்கத்து பக்கத்து பெட்டுதான்..!

    ReplyDelete
  107. [[[சந்ரு said...
    நல்ல அலசல்...]]]

    நன்றி சந்ரு அவர்களே..!

    ReplyDelete