Pages

Saturday, September 26, 2009

விரயச் சனியின் முடிவும், ஜென்மச் சனியின் துவக்கமும்..!

26-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்போதும் போலத்தான் சென்ற வியாழக்கிழமையும் இருந்தது. காலையில் இருந்து செய்ய வேண்டிய வேலைகளும், வர வேண்டிய வரவுகளும் வழக்கம்போல தட்டிக் கழித்துப் போனபடியே இருக்க.. முருகன் கூடத்தான் இருக்கான் என்கிற அதே எண்ணத்தில்தான் இருந்தேன்.

மாலை ஆறு மணி இருக்கும். நடிகர் சிவக்குமார் எழுதிய 'டைரி குறிப்புகள்' என்னும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தவன் தலையில் கிர்ரென்று ஏதோ சத்தம். தொடர்ந்து புத்தகத்தில் இருந்த எழுத்துக்கள் கோணல், மாணலாகத் தெரியத் துவங்கின.

தலை சுற்றுவது புத்தகத்தை பிடித்திருந்த கை நடுங்குவதில் இருந்து தெரிந்தது. 'என்னடா இது சோதனை..? நல்லாத்தான இருந்தோம்.. எல்லாம் நல்லாத்தான போய்க்கிட்டிருக்கு' என்று நினைத்தபடியே எழுந்து சென்று முகத்தைக் கழுவிவிட்டு திரும்பியவன் ஒரு கதவில் மோதி இன்னொரு கதவின் மீது விழுந்து திரும்பி நின்றபோது ஆஹா.. முருகன் விளையாட்டை ஆரம்பிச்சிட்டானே என்று தோன்றியது.

அவ்வளவுதான். அதற்கு மேல் முருகனைப் பற்றி யோசிக்கவெல்லாம் நேரமில்லை. வயிறு கலங்கியது. தலை கனத்தது. தலை சுற்றியது. அந்த அரைத் தள்ளாட்டத்துடன் டாய்லெட் சென்று அமர்ந்துவிட்டு கதவை உடைத்துவிட்டு வெளியே வந்தவன் வீட்டுச் சுற்றுச் சுவரில் மோதிதான் நின்றேன்.

உடலெங்கும் தெப்பமாக தண்ணீர் கொட்டியது. மூன்று வாளி தண்ணீரை ஊற்றியதுபோல் இருந்தது எனக்கு. வீட்டுக்குள் போக முடியாமல் வாசலிலேயே படுத்துவிட்டேன். பக்கத்து வீட்டுக்காரம்மா.. மேல் வீட்டுக்காரம்மாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ஓடி வந்தார்.

"இருங்க.. இருங்க.. எலுமிச்சம்பழம் கொண்டாரேன்.." என்று சொல்லிவிட்டு ஓடினார். அதற்குள்ளாக மதியம் சாப்பிட்டது மேலே வந்தே தீருவேன் என்று அடம்பிடிக்க சாக்கடையின் முன்பாக வாயைத் திறந்தேன்.. வாந்தியோ வாந்தி.. எடுத்து எவ்ளோ நாளாச்சு..? அப்படியே வாசலில் சுருண்டு விழுந்தேன்.

பக்கத்து வீட்டம்மாவின் எலுமிச்சம் பழச் சாறு கலந்த தண்ணீரைக் குடித்தும் போதை தெளியவில்லை. "யார் நீங்க..?" என்று கேட்க வேண்டும்போல் இருந்தது.

அப்புறம் பக்கத்து வீட்டுக்காரர் கைப்பிடித்துத் தூக்கிவிட ஆட்டோவில் அமர்த்தப்பட்டேன். வண்டி நெசப்பாக்கம் ஆரோக்யா மருத்துவமனையில் வந்து நின்றது. குடிகாரனைப் போல் சட்டை பட்டனைக்கூட போடாமல் தள்ளாடி தள்ளாடி வந்து நின்றவனை மருத்துவமனை அதிசயமாகப் பார்த்தது.

அவசரமாக ஒரு வெள்ளுடை தேவதை அருகில் வந்து "ஸார் வாங்க" என்று கையை நீட்ட நானும் வேகமாக அந்தக் கையைப் பற்றிக் கொண்டு உடன் ஓடினேன். என் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து அந்தத் தேவதையும் உடன் ஓடி வந்து ஒரு பெட்டை காட்ட.. அவ்வளவுதான் அப்படியே சுருண்டு படுத்தேன்.

மருத்துவர் ஒருவர் ஓடி வந்தார். "என்ன ஸார் பண்ணுது? என்ன சூஸைட் அட்டெம்ட்டா..?" என்று கேட்டு குரல்வளையில் கை வைத்தார். "ஐயோ.. அதெல்லாம் இல்ல ஸார்.. தலை சுத்துச்சு.. உடம்பு வேர்த்திருச்சு.. இப்ப வாந்தி வருது.." என்று சொல்லி முடிப்பதற்குள் வாந்தி குமட்டிக் கொண்டு வர.. அங்கேயும் ஒரு அக்கப்போர். பட்டென்று டப்பாவை எடுத்து நீட்டி அந்த தேவதையின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.. நல்ல ஸ்பீடுதான் போங்க..

சலைன் ஏற்றினார்கள்.. மயக்கத்தில் இருந்தவனைத் தட்டித் தட்டி பேர், ஊர், பிறந்த தேதி கேட்டார்கள். மயக்கத்தில் உளறியவனிடம் திரும்பித் திரும்பிக் கேட்டது ஒரு தேவதை. வேறு யாராவது கேட்டிருந்தால், எரிந்து விழுந்திருப்பேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்..

இ.சி.ஜி. எடுத்தார்கள். சுகர் செக் செய்தார்கள். பிளட் செக் செய்தார்கள். சலைன் அசுர வேகத்தில் இறங்கியது.. மூன்று மணி நேரத்தில் நான்கு பாட்டில்களை காலி செய்தது எனது உடம்பு.

கொஞ்சம் கொஞ்சமாக தேவதைகளின் முகத்தினை அடையாளம்காணும் அளவுக்கு தெம்பு வந்த பின்பு மருத்துவர் வந்து சொன்னார் "உங்களுக்கு பிளட்ல சுகர் கம்மியாயிருச்சு ஸார். அதான் பிராப்ளம்.." என்றார்.

"எனக்கு இதுவரைக்கும் அப்படியொரு பிரச்சினை வந்ததே இல்லையே.." என்றேன். "சரி.. இப்ப வந்திருச்சு.. இனிமே பார்த்து நடந்துக்குங்க.." என்று சொல்லி "இன்னும் இரண்டு சலைன் ஏற்ற வேண்டும்" என்றார்.

அலுவலகத்தில் இருந்து அரக்கப் பரக்க ஓடி வந்த என் மாப்ளை "மாமா.. இப்பவே ஆயிரம் ரூபா அவுட்டு.. சலைன் ஏத்திட்டு வீட்டுக்குப் போலாம்" என்றான். நம்ம நினைப்புதான் அம்பானிக்கே ஆப்பு வைக்குறவன் மாதிரில்ல இருக்கு..

ஒரு மணி நேரம் கழித்து வந்து நலம் விசாரித்த பெரிய டாக்டரம்மாவிடம், "இன்னும் கொஞ்சம் தலை சுத்துற மாதிரியிருக்கு.. எந்திரிச்சு உக்கார முடியலை.." என்றேன்.. "அப்புறம் அதுக்குள்ள எதுக்கு வீட்டுக்கு? மேல பெட்ல சேருங்க.. ராத்திரி இன்னும் ஒரு பாட்டில் ஏத்திரலாம்.." என்று சொல்லிவிட்டு திருப்தியுடன் நடையைக் கட்ட.. மாப்ளை தூக்கிப் போட்டு மிதிப்பது மாதிரி முறைத்தான்.

இரவு பத்து மணிக்கு ஏற்றத் துவங்கிய சலைன் மிக மெதுவாக போய்க் கொண்டிருக்க பொறுமை இழந்து நானே அதன் ஸ்பீடை கூட்டி வைத்தேன். கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வந்த ஒரு தேவதை "என்னாச்சு? இவ்ளோ ஸ்பீடா போகுது..? யார் வைச்சது..?" என்றார். "ஸ்பீடா..? அப்படீன்னா..?" என்று அப்பாவியாய் நான் கேட்டதும், "கையை இப்படி, அப்படி நகத்தாதீங்க.. ஒரே மாதிரி வைங்க." என்று அட்வைஸை அள்ளிவீசிவிட்டு ஸ்பீடை குறைத்து என் நெஞ்சில் பாறாங்கல்லை புதைத்துவிட்டுப் போனது அந்தத் தேவதை.

விடுவேனா நான்.. மறுபடியும் ஸ்பீடை கூட்டி வைத்து முடியப்போகும் நேரத்தில் சற்றுக் குறைத்துவைத்து பெல் அடித்தேன். வந்து பார்த்த தேவதை, "எப்படி அதுக்குள்ள முடிஞ்சது..?" என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே குழாயை உருவிவிட்டுப் போனது.

காலையில் முழித்தால் ஒரு தேவதையின் முகத்தில்தான் முழிக்க வேண்டும் என்று நினைத்தபடியே தூங்கிப் போனவன் காலையில் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டவுடன் கண்ணை இறுக்க மூடிக் கொண்டு வேண்டுமென்றே படுத்திருக்க.. "ஸார்.." என்ற இனிய குரலைக் கேட்டவுடன் சந்தோஷமாக கண்ணைத் திறக்க கையில் விளக்கமாற்றுடன் ஒரு கூட்டுகிற அம்மா நின்றிருந்தார். நமக்குக் கொடுப்பினை இவ்ளோதான்..

இன்று வீட்டுக்குச் சென்றே தீர வேண்டும் என்கிற ஒரு அம்சக் கோரிக்கையோடு இருந்ததால் "எல்லாம் நல்லாயிருக்கு.." என்ற பொய்யைச் சொல்லித் தப்பித்தோம், பிழைத்தோம் என்று வீடு வந்து சேர்ந்தேன்.

ஒரு நாள் மருத்துவனை செலவு மொத்தமாக சேர்த்து 2500 ரூபாய் என்றானது. கொடுமைதான்.. என்ன செய்வது..?

வேலையில்லாத இந்த நேரத்தில் என்னத்துக்கு மூணு வேளையும் மூக்குப் பிடிக்கக் கொட்டிக்கணும் என்று நினைத்து காலை சாப்பாட்டை தியாகம் செய்தது முதல் காரணம்..

இருக்கின்ற டென்ஷனில் அத்தனை பிரச்சினைகளையும் ஒரு சேர இழுத்துக் கொண்டு பி.பி.யை பதற வைத்தது இன்னொரு காரணம்..

எல்லாம் சேர்த்து கஷ்டகாலத்திலும் ஒரு கஷ்டமாக செலவை இழுத்துவிட்டது.. இப்போதும் உடல்நிலை அப்படியேதான் உள்ளது.. ஒரு டக்கீலாவை ராவாக அடித்ததுபோல் மப்பும், மந்தாரமுமாக இருக்கிறது. எப்போது தெளிவாகும் என்று தெரியவில்லை..

எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்து கை அரித்ததினால் கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்து தமிழ்மணத்தை நோண்ட.. மிகச் சரியாகப் பாருங்கள்.. நமது சக பதிவர் தேவன்மாயம், சர்க்கரைக் குறைவு - என்ன செய்ய வேண்டும்? என்கிற தலைப்பில் பதிவு போட்டிருக்கிறார். இது எப்படி இருக்கு..? படித்துப் பாருங்கள் பதிவர்களே.. இந்தக் குறை உள்ளவர்கள் இனிமேலாச்சும் தேவன்மாயம் அண்ணன் சொல்ற மாதிரி சூதானமா நடந்துக்குங்க..

இதைத்தான் தெய்வச் செயல் என்பதா..?

நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இன்னொன்று..

கடந்த இரண்டரை வருடங்களாக என்னை ஆட்டி வைத்தது 'விரயச் சனி'யாம்.. நமக்குத்தான் செலவே இல்லையே என்று தெம்பாக இருந்தவனுக்கு 'விரயச் சனி' முடிய இருந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் வேலையைக் காட்டிவிட்டான் சனி பகவான்..

இந்த லட்சணத்தில் இன்று பிற்பகல் 3.18 மணிக்கு எனது ராசியான கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து, அடுத்த இரண்டரை ஆண்களுக்கு எனக்கு 'ஏழரைச் சனி'யை வாரி வழங்கப் போகிறானாம் சனி பகவான்..

ஆக, அடுத்த மூன்றாண்டுகளில் பதிவர்களுக்கு என்னிடமிருந்து இது போன்ற நிறைய புலம்பல் பதிவுகள் வருவதற்குக் காத்திருக்கின்றன என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

அடேய் மயிறு கோவணான்டி..!!!

101 comments:

  1. //இரவு பத்து மணிக்கு ஏற்றத் துவங்கிய சலைன் மிக மெதுவாக போய்க் கொண்டிருக்க பொறுமை இழந்து நானே அதன் ஸ்பீடை கூட்டி வைத்தேன்.
    //
    ஸ்பீடை கூட்டுவது தவறு,அதனால் சில பிரச்சனைகள் வரும்ன்னு கேள்வி பட்டு இருக்கேன்

    ReplyDelete
  2. //அவசரமாக ஒரு வெள்ளுடை தேவதை அருகில் வந்து "ஸார் வாங்க" என்று கையை நீட்ட நானும் வேகமாக அந்தக் கையைப் பற்றிக் கொண்டு உடன் ஓடினேன்//

    இந்த கிழ வயசுல இதெல்லாம் தேவையா??

    ReplyDelete
  3. /அடேய் மயிறு கோவணான்டி..!!! /

    வசவு நாறுவதைப் பாத்தாக்க,
    "விரயச் சனியின் முடிவும், ஏழரைச் சனியின் துவக்கமும்..!"

    அந்த முருகனுக்குத் தான் -உண்மைத்தமிழனுக்கு ஒண்ணுமில்லை போல:-))

    துதிப்போர்க்கு வல்வினைபோம்! துன்பம் போம்!

    ReplyDelete
  4. அண்ணே..தேவதை?சீக்கிரம் கால் கட்டு போட்டுக்கங்க...உடம்பை பாத்துக்கங்க

    ReplyDelete
  5. அண்ணே, உடல் நிலையை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டா எடுத்துக்காதீங்க.

    ReplyDelete
  6. உடம்பை பாத்துக்கங்க !!!
    விளையாட்டா எடுத்துக்காதீங்க!!!

    repeattaiyai !!!

    ReplyDelete
  7. உடம்பு கிடக்குது... உடம்பு...! தேவதை எப்படி???? :) ;) ;0

    ///////////////////
    ஒரு டக்கீலாவை ராவாக அடித்ததுபோல்
    //////////////////

    ஐயா... டக்கீலா-ல எல்லாமா தண்ணி கலப்பீங்க இந்தியால??? அதை ராவாதான் அடிக்கனும்.

    ReplyDelete
  8. அண்ணே,

    உடம்பை பாத்துக்கோங்க... சுவரில்லாம சித்திரம் வரைய முடியாது...

    பிரபாகர்.

    ReplyDelete
  9. சிம்மம் என் கிட்ட இருந்து உங்க கிட்டதான் "தல" வருகிறாரா...:-))

    ReplyDelete
  10. வாந்தியோ வாந்தி.. எடுத்து எவ்ளோ நாளாச்சு..? ;;))

    ReplyDelete
  11. நீங்கள் ஜாலியாக கூறினாலும் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம்.
    அது சரி உங்களுக்கு எப்படி இப்படி hypoglycaemia ஏற்பட்டது, பொதுவாக நீரிழிவு நோய் உள்ள இன்சுலின் injection ஏற்றுபவருக்குத்தான் இப்படி நடக்கும்.
    அத்துடன் saline drip வேகத்தைக் கூட்டுகிற வேலை எல்லாம் செய்வது ஆபத்தானது ,உடலில்fluid கூடி heart failure வரக் கூடிய சத்தியம் உள்ளது.இனிமேல் இப்படி செய்யாதீர்கள் இப்படி சொல்கிறேன் என்று கோபிக்காதீர்கள் ,பதிவுலக நண்பர் என்ற ரீதியில் உள்ள அக்கறையினால் கூறுகிறேன்.
    பணக்கார நாடுகளான ஐரோப்பாவில் மருத்துவம் கல்வி போன்ற அடிப்படை விஷயங்கள் இலவசமாகத் தரமாகக் கிடைக்கின்றன பிரிட்டனில் பத்து விழுக்காடு மக்கள்தான் தனியார் மருத்துவத்தை நாடுகிறார்கள் ஏழு விழுக்காடு மாணவர்கள்தான் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் ,ஆனால் இந்தியாவிலோ மருத்துவத்தையும் கல்வியையும் அரசாங்கம் தனியார் துறையிடம் தாரை வார்த்துக் கொடுத்தபடியால்தால் பெரும்பாலான மருத்துவ நிலையங்களும் கல்விக்கூடங்களும் பணம் ஒன்றையே குறி என்று நினைத்து வேலை செய்கிறார்கள் மக்கள்தான் இந்த நிலைக்கு எதிராகப் போராட வேண்டும்.

    anyway ,look after your health and don't do anything silly like skipping your meal

    --வானதி

    ReplyDelete
  12. ///அடேய் மயிறு கோவணான்டி..!!! ////

    நியாயமா இது?

    உங்களை உயிர் பிழைக்க வைததவன் அவனதான்!

    இல்லையென்றால் இந்தப் பதிவு ஏது உனா தானா?

    ReplyDelete
  13. அச்சச்சோ............. அட ராமா.....

    உடம்பு இப்போ பரவாயில்லையா?

    ReplyDelete
  14. \\காலையில் முழித்தால் ஒரு தேவதையின் முகத்தில்தான் முழிக்க வேண்டும் என்று நினைத்தபடியே தூங்கிப் போனவன் காலையில் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டவுடன் கண்ணை இறுக்க மூடிக் கொண்டு வேண்டுமென்றே படுத்திருக்க.. "ஸார்.." என்ற இனிய குரலைக் கேட்டவுடன் சந்தோஷமாக கண்ணைத் திறக்க கையில் விளக்கமாற்றுடன் ஒரு கூட்டுகிற அம்மா நின்றிருந்தார். நமக்குக் கொடுப்பினை இவ்ளோதான்..//


    எப்படி பாஸ் இந்த மாதுரியான கொடுமை எல்லாம் உங்கள தேடி வருது.

    என்னமோ போங்க உடம்பு நல்லா இருந்தா சரி .

    ReplyDelete
  15. இரண்டரை வருடம் தானே ஓடிவிடும், அதன் பிறகு நாம தான் கிங்கு என்ற நம்பிக்கையோடு இருங்க. அதுதான் முக்கியம்.

    ReplyDelete
  16. ///அடேய் மயிறு கோவணான்டி..!!! //

    :-)))

    ReplyDelete
  17. எனக்கு ஏதோ தோன்றியது..அதனால்தான் உங்கள் பதிவு ஒன்றில் கூட இரத்த அழுத்தம் பரிசோதிதுக் கொள்ளுங்கள் என எழுதி இருந்தேன்..இனியாயினும் அநாவசிய கோபம் விடுங்கள்.

    ReplyDelete
  18. பாலா எக்ஸ்பீரியன்ஸ் கவனிச்சீங்களா?

    ReplyDelete
  19. //ஹாலிவுட் பாலா said...
    ///////////////////
    ஒரு டக்கீலாவை ராவாக அடித்ததுபோல்
    //////////////////

    ஐயா... டக்கீலா-ல எல்லாமா தண்ணி கலப்பீங்க இந்தியால??? அதை ராவாதான் அடிக்கனும்.
    //

    ஒரு flowல வந்திடுச்சு.... நெளியும் புழுவை அப்படியே தின்றது போலன்னு மாத்திடுங்கண்ணே அப்ப....

    ReplyDelete
  20. பிரச்சினைகள் எழரையிலேதான் வரனுங்குறது இல்லே.
    6மாசத்துக்கு முன்னாடி இந்தியா வந்தப்ப ஏர்போர்ட் லே செக்-இன் முடிச்சு ப்ளைட்டுக்கு வெயிட் பண்ணினபோது என் வீடியோ காமெராவை யாரோ சுட்டுட்டானுங்க.
    (விலை INR75,000௦௦௦/@japan in 2008march-Sony SDR HR 12JE-120GB அந்த மாடல் காமெரா இந்தியாலே இன்னமும் ரிலீஸ் ஆகவே இல்லை.இப்போ 250GBயே இங்கே வந்துடுச்சு.)

    எழரை முடிஞ்சு 5வருஷம் ஆச்சு.

    அதுனாலே பணம் போனா போகுது. உடம்பைப் பார்த்துக்குங்க.(அப்போதான் அடுத்த கமல் பட ரிலீஸ் அன்னிக்கு உதயம் தியேடேர்லே தெம்பா ப்ளொக்லே(?) டிக்கெட் எடுக்க முடியும். )

    ReplyDelete
  21. உடம்பை பார்த்த்துக்குங்க உண்மைத் தமிழன். அலோபதிக்குள்ள சுய வைத்தியத்தை கலக்காதீங்க, ஆபத்தாக முடியக்கூடும்.

    அப்பன்னு கூப்பிடறதை விட மயிருக் கோவணாண்டி எவ்வளவு அன்னோன்யமா இருக்கு பாருங்க :-)

    பிபி எகிறும் பக்கங்களுக்கு போவதை குறைத்துக்கொள்ளுங்கள் :-)

    ReplyDelete
  22. ///தமிழ் உதயன் said...

    super ponga
    udhay///

    என்ன சூப்பர் போங்க..! முதல் பின்னூட்டமே இப்படித்தானா..?

    ReplyDelete
  23. [[[சுரேஷ்குமார் said...

    //இரவு பத்து மணிக்கு ஏற்றத் துவங்கிய சலைன் மிக மெதுவாக போய்க் கொண்டிருக்க பொறுமை இழந்து நானே அதன் ஸ்பீடை கூட்டி வைத்தேன்.//

    ஸ்பீடை கூட்டுவது தவறு,அதனால் சில பிரச்சனைகள் வரும்ன்னு கேள்விபட்டு இருக்கேன்]]]

    சில பிரச்சினைகள் என்றில்லை.. பல பிரச்சினைகள் வரும்.. இருந்தாலும் அந்த நேரத்தில்தான் தூங்க வேண்டும் என்கிற ஆசைதான் அதிகம் இருந்தது.. அதனால்தான்..!

    ReplyDelete
  24. [[[♥ தூயா ♥ Thooya ♥ said...
    kiki]]]

    தூயா கண்ணு.. நீயா..? கி.கி.கி.யா..? சிரிப்பா வருதா என்னைப் பார்த்தா..?

    தங்கச்சி சிரிக்கிறாள்ன்னு நினைக்கும்போது எனக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு..!

    ReplyDelete
  25. [[[ஜெட்லி said...

    //அவசரமாக ஒரு வெள்ளுடை தேவதை அருகில் வந்து "ஸார் வாங்க" என்று கையை நீட்ட நானும் வேகமாக அந்தக் கையைப் பற்றிக் கொண்டு உடன் ஓடினேன்//

    இந்த கிழ வயசுல இதெல்லாம் தேவையா??]]]

    கிழ வயசா..? ஜெட்லி.. நான் யூத்து சாமி.. நிசமாவே யூத்துதான்..!

    ReplyDelete
  26. [[[கிருஷ்ணமூர்த்தி said...

    /அடேய் மயிறு கோவணான்டி..!!!/

    வசவு நாறுவதைப் பாத்தாக்க, "விரயச் சனியின் முடிவும், ஏழரைச் சனியின் துவக்கமும்..!"
    அந்த முருகனுக்குத்தான் -உண்மைத்தமிழனுக்கு ஒண்ணுமில்லை போல:-))
    துதிப்போர்க்கு வல்வினைபோம்! துன்பம்போம்!]]]

    என்ன செய்யறது? வேற யாரையாச்சும் இது மாதிரி சொல்ல முடியுமா? தேடி வந்து மிதிச்சுற மாட்டாங்க..!

    ReplyDelete
  27. [[[தண்டோரா ...... said...
    அண்ணே.. தேவதை? சீக்கிரம் கால் கட்டு போட்டுக்கங்க. உடம்பை பாத்துக்கங்க]]]

    கால் கட்டா..? வாந்தி, பேதியெடுத்து ஆஸ்பத்திரில படுக்குறது பத்தாதுன்னு.. கால்கட்டுப் போட்டும் ஆஸ்பத்திரில படுக்கணுமா?

    நல்ல எண்ணம் தண்டோராஜி..!

    ReplyDelete
  28. [[[இராகவன் நைஜிரியா said...
    அண்ணே, உடல் நிலையை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டா எடுத்துக்காதீங்க.]]]

    அண்ணனா..? இதுக்கே எனக்கு ஹார்ட்அட்டாக் வர்ற மாதிரியிருக்கு..!

    ஊமைக் குசும்புன்றது இதுதாண்ணே..!

    ReplyDelete
  29. [[[gulf-tamilan said...
    உடம்பை பாத்துக்கங்க !!!
    விளையாட்டா எடுத்துக்காதீங்க!!!
    repeattaiyai !!!]]]

    ஓகே.. ஓகே.. ஓகே.. கல்ப் தமிழன்..!

    ReplyDelete
  30. உடம்பை பாத்துக்கோங்க பாஸ்..

    ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிடுங்க..

    உணர்ச்சிவசப்படுறத குறைச்சுக்கோங்க பாஸ்..

    ReplyDelete
  31. [[[ஹாலிவுட் பாலா said...

    உடம்பு கிடக்குது... உடம்பு...! தேவதை எப்படி???? :) ;) ;0]]]

    தேவதைகள் அப்படியேதான்.. என்னைக்குமே முகம் மாறாத அழகிகள் அவர்கள்தான்..!

    ///////////////////
    ஒரு டக்கீலாவை ராவாக அடித்ததுபோல்
    //////////////////

    ஐயா... டக்கீலா-ல எல்லாமா தண்ணி கலப்பீங்க இந்தியால??? அதை ராவாதான் அடிக்கனும்.]]]

    அப்படியா..? நான் தண்ணி கலந்து அடிக்கணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் இத்தனை நாளா..? தெளிவாக்கியதற்கு தேங்க்ஸு..!

    ReplyDelete
  32. [[[பிரபாகர் said...
    அண்ணே, உடம்பை பாத்துக்கோங்க... சுவரில்லாம சித்திரம் வரைய முடியாது.
    பிரபாகர்.]]]

    அக்கறையான, அனுசரனையான விசாரிப்புக்கு மிக்க நன்றிகள் பிரபாகர்..!

    ReplyDelete
  33. [[[சிங்கக்குட்டி said...
    சிம்மம் என் கிட்ட இருந்து உங்ககிட்டதான் "தல" வருகிறாரா...:-))]]]

    ஆமா சிங்கம்.. எப்படி உங்க வீட்ல இருந்தப்ப ஒத்தாசையா இருந்தா? அல்லாட்டி ரவுசு செஞ்சாரா? வவுத்தைக் கலக்குதப்பா..!

    ReplyDelete
  34. [[[ஜீவன் said...
    வாந்தியோ வாந்தி.. எடுத்து எவ்ளோ நாளாச்சு..? ;;))]]]

    ம்.. அது ஆச்சு ரெண்டு வருஷத்துக்கு முந்தி..!

    ReplyDelete
  35. //ஹாலிவுட் பாலா said...
    உடம்பு கிடக்குது... உடம்பு...! தேவதை எப்படி???? :) ;) ;0

    ///////////////////
    ஒரு டக்கீலாவை ராவாக அடித்ததுபோல்
    //////////////////

    ஐயா... டக்கீலா-ல எல்லாமா தண்ணி கலப்பீங்க இந்தியால??? அதை ராவாதான் அடிக்கனும்.//

    :-)))))

    ReplyDelete
  36. [[[vanathy said...

    நீங்கள் ஜாலியாக கூறினாலும் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம். அது சரி உங்களுக்கு எப்படி இப்படி hypoglycaemia ஏற்பட்டது, பொதுவாக நீரிழிவு நோய் உள்ள இன்சுலின் injection ஏற்றுபவருக்குத்தான் இப்படி நடக்கும்.
    அத்துடன் saline drip வேகத்தைக் கூட்டுகிற வேலை எல்லாம் செய்வது ஆபத்தானது, உடலில் fluid கூடி heart failure வரக்கூடிய சத்தியம் உள்ளது. இனிமேல் இப்படி செய்யாதீர்கள் இப்படி சொல்கிறேன் என்று கோபிக்காதீர்கள், பதிவுலக நண்பர் என்ற ரீதியில் உள்ள அக்கறையினால் கூறுகிறேன்.
    பணக்கார நாடுகளான ஐரோப்பாவில் மருத்துவம் கல்வி போன்ற அடிப்படை விஷயங்கள் இலவசமாகத் தரமாகக் கிடைக்கின்றன பிரிட்டனில் பத்து விழுக்காடு மக்கள்தான் தனியார் மருத்துவத்தை நாடுகிறார்கள் ஏழு விழுக்காடு மாணவர்கள்தான் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் ஆனால் இந்தியாவிலோ மருத்துவத்தையும் கல்வியையும் அரசாங்கம் தனியார் துறையிடம் தாரை வார்த்துக் கொடுத்தபடியால்தால் பெரும்பாலான மருத்துவ நிலையங்களும் கல்விக்கூடங்களும் பணம் ஒன்றையே குறி என்று நினைத்து வேலை செய்கிறார்கள் மக்கள்தான் இந்த நிலைக்கு எதிராகப் போராட வேண்டும்.
    anyway, look after your health and don't do anything silly like skipping your meal

    --வானதி]]]

    மிக நீண்ட பின்னூட்டத்திற்கும், அன்பான, அனுசரணையான வார்த்தைகளுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகள் வானதி..

    ReplyDelete
  37. [[[SP.VR. SUBBIAH said...

    ///அடேய் மயிறு கோவணான்டி..!!! ////

    நியாயமா இது?

    உங்களை உயிர் பிழைக்க வைததவன் அவனதான்!

    இல்லையென்றால் இந்தப் பதிவு ஏது உனா தானா?]]

    உண்மைதான்.. ஆனா கோபம் வருதே வாத்தியாரே..! அடக்க முடியலையே..!

    ReplyDelete
  38. [[[துளசி கோபால் said...
    அச்சச்சோ............. அட ராமா..... உடம்பு இப்போ பரவாயில்லையா?]]]

    பரவாயில்லை டீச்சர். தங்களுடைய விசாரிப்புக்கும், ஸாரின் அன்பான நலம் கேட்புக்கும் எனது நன்றிகள்..!

    ReplyDelete
  39. [[[ராஜராஜன் said...

    \\காலையில் முழித்தால் ஒரு தேவதையின் முகத்தில்தான் முழிக்க வேண்டும் என்று நினைத்தபடியே தூங்கிப் போனவன் காலையில் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டவுடன் கண்ணை இறுக்க மூடிக் கொண்டு வேண்டுமென்றே படுத்திருக்க.. "ஸார்.." என்ற இனிய குரலைக் கேட்டவுடன் சந்தோஷமாக கண்ணைத் திறக்க கையில் விளக்கமாற்றுடன் ஒரு கூட்டுகிற அம்மா நின்றிருந்தார். நமக்குக் கொடுப்பினை இவ்ளோதான்..//

    எப்படி பாஸ் இந்த மாதுரியான கொடுமை எல்லாம் உங்கள தேடி வருது. என்னமோ போங்க உடம்பு நல்லா இருந்தா சரி.]]]

    நம்ம கிரகம் அப்படி..!

    ReplyDelete
  40. [[[குசும்பன் said...
    இரண்டரை வருடம்தானே ஓடிவிடும், அதன் பிறகு நாமதான் கிங்கு என்ற நம்பிக்கையோடு இருங்க. அதுதான் முக்கியம்.]]]

    குசும்பா.. அந்த நம்பிக்கை இருக்கு.. அதுக்குள்ள என்னென்ன நடக்கப் போகுதோ..?!

    ReplyDelete
  41. [[[T.V.Radhakrishnan said...

    ///அடேய் மயிறு கோவணான்டி..!!! //

    :-)))]]]

    சும்மா.. லைட்டா அவன் மேல கோபம்.. அதான் ஸார்..

    ReplyDelete
  42. [[[T.V.Radhakrishnan said...
    எனக்கு ஏதோ தோன்றியது.. அதனால்தான் உங்கள் பதிவு ஒன்றில் கூட இரத்த அழுத்தம் பரிசோதிதுக் கொள்ளுங்கள் என எழுதி இருந்தேன்.. இனியாயினும் அநாவசிய கோபம் விடுங்கள்.]]]

    ஞாபகம் இருக்கிறது ஐயா.. கவனித்தில் கொள்கிறேன்..!

    ReplyDelete
  43. [[[pappu said...
    பாலா எக்ஸ்பீரியன்ஸ் கவனிச்சீங்களா?]]]

    எந்த பாலா..? புரியல பாப்பூ..?

    ReplyDelete
  44. [[[பழமைபேசி said...

    //ஹாலிவுட் பாலா said...
    ///////////////////
    ஒரு டக்கீலாவை ராவாக அடித்ததுபோல்
    //////////////////

    ஐயா... டக்கீலா-ல எல்லாமா தண்ணி கலப்பீங்க இந்தியால??? அதை ராவாதான் அடிக்கனும்.//

    ஒரு flowல வந்திடுச்சு.... நெளியும் புழுவை அப்படியே தின்றது போலன்னு மாத்திடுங்கண்ணே அப்ப....]]]

    இல்ல. நிஜமாவே கலந்துதான் அடிக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன் பழமைபேசி அண்ணே..!

    ReplyDelete
  45. [[[minorwall said...

    பிரச்சினைகள் எழரையிலேதான் வரனுங்குறது இல்லே.
    6 மாசத்துக்கு முன்னாடி இந்தியா வந்தப்ப ஏர்போர்ட் லே செக்-இன் முடிச்சு ப்ளைட்டுக்கு வெயிட் பண்ணினபோது என் வீடியோ காமெராவை யாரோ சுட்டுட்டானுங்க.
    (விலை INR75,000௦௦௦/@japan in 2008march-Sony SDR HR 12JE-120GB அந்த மாடல் காமெரா இந்தியாலே இன்னமும் ரிலீஸ் ஆகவே இல்லை.இப்போ 250GBயே இங்கே வந்துடுச்சு.)

    எழரை முடிஞ்சு 5வருஷம் ஆச்சு.

    அதுனாலே பணம் போனா போகுது. உடம்பைப் பார்த்துக்குங்க.(அப்போதான் அடுத்த கமல் பட ரிலீஸ் அன்னிக்கு உதயம் தியேடேர்லே தெம்பா ப்ளொக்லே(?) டிக்கெட் எடுக்க முடியும். )]]]

    ஓகே.. நன்றி ஸார்..!

    ReplyDelete
  46. [[[வடுவூர் குமார் said...
    Get well soon.]]]

    தேங்க்ஸ் ஸார்..!

    ReplyDelete
  47. [[[minorwall said...

    sorry..HDR-SR12(JE)]]]

    சரி விடுங்க சாமி.. இதுவா முக்கியம்..? உங்க சோகம்தான் பெரிசு..!

    ReplyDelete
  48. [[[முத்துகுமரன் said...

    உடம்பை பார்த்த்துக்குங்க உண்மைத் தமிழன். அலோபதிக்குள்ள சுய வைத்தியத்தை கலக்காதீங்க, ஆபத்தாக முடியக்கூடும்.

    அப்பன்னு கூப்பிடறதை விட மயிருக் கோவணாண்டி எவ்வளவு அன்னோன்யமா இருக்கு பாருங்க :-)

    பிபி எகிறும் பக்கங்களுக்கு போவதை குறைத்துக்கொள்ளுங்கள் :-)]]]

    அப்பன் என்னை எப்போதும் மன்னிப்பான்னு ஒரு சின்னத்தனம்தான்..!

    பிபி எகிறும் பக்கங்கள் அப்பப்ப வந்து கண்ணு முன்னாடி நிக்குதே.. என்ன செய்யறது?

    போராட்டக் களத்துல குதிச்சிட்டு பாதில விட்டுட்டு ஓட முடியுமா? சொல்லுங்க..!

    ReplyDelete
  49. [[[தீப்பெட்டி said...

    உடம்பை பாத்துக்கோங்க பாஸ்..

    ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிடுங்க..

    உணர்ச்சிவசப்படுறத குறைச்சுக்கோங்க பாஸ்..]]]

    இதையெல்லாம் நான் செய்யணும்னா என் வீட்ல நெட் கனெக்ஷன் இருக்கவேகூடாது. முடியற காரியமா தீப்பெட்டி..?

    ReplyDelete
  50. [[[கிரி said...

    //ஹாலிவுட் பாலா said...
    உடம்பு கிடக்குது... உடம்பு...! தேவதை எப்படி???? :) ;) ;0

    ///////////////////
    ஒரு டக்கீலாவை ராவாக அடித்ததுபோல்
    //////////////////

    ஐயா... டக்கீலா-ல எல்லாமா தண்ணி கலப்பீங்க இந்தியால??? அதை ராவாதான் அடிக்கனும்.//

    :-)))))]]]

    கிரி ஸார்..

    முன்னப் பின்ன பழக்கமில்ல.. அதுதான் இப்படியொரு கேள்வி வருது..!!!

    ReplyDelete
  51. அண்ணா இதெல்லாம் வாழ்க்கையைல சகஜம்

    ReplyDelete
  52. ஹைப்போகிளைசீமியா வந்த மொத யூத்து நீங்கதான் போங்க...வயசாய் போச்சு பாஸ்,

    இனிமேல கையில எதனாச்சும் சாக்லெட் அல்லது கல்கண்டு எப்பவும் வச்சிக்கங்க, இந்த மாதிரி தலைசுத்தல் வந்தா உடனே வாயில் போட்டுக்கிட்டா உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    ReplyDelete
  53. உடம்ப பத்திரமா பார்த்துக்குங்க அண்ணாச்சி. ரெண்டாவது ஏழரையா இருக்கும். அது நல்லதுதான் செய்யும்.

    ReplyDelete
  54. உடம்ப கவனிச்சுகுங்க அண்ணே!

    ReplyDelete
  55. take care of your health. Dont take anything lightly. Hw is ur health now.

    I thought a man of similar thoughts like me is here. Dont shatter my dreams. Take care of your health

    ReplyDelete
  56. உடம்பையும்,மனதையும் சேர்த்துக் கவனித்துக் கொள்ளுங்கள்,சரவணன்.
    முருகன் அருள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  57. ///jaisankar jaganathan said...
    அண்ணா இதெல்லாம் வாழ்க்கையைல சகஜம்.///

    நோய் வருவதெல்லாம் சகஜம்தான் ஜெய்..

    ஆனால் இந்த நோய் வருவது இதுதான் முதல் முறை..!

    ReplyDelete
  58. [[[டவுசர் பாண்டி... said...
    ஹைப்போகிளைசீமியா வந்த மொத யூத்து நீங்கதான் போங்க... வயசாய் போச்சு பாஸ், இனிமேல கையில எதனாச்சும் சாக்லெட் அல்லது கல்கண்டு எப்பவும் வச்சிக்கங்க, இந்த மாதிரி தலைசுத்தல் வந்தா உடனே வாயில் போட்டுக்கிட்டா உடனடி நிவாரணம் கிடைக்கும்.]]]

    நான் ஒத்துக்க மாட்டேன்.. ஏதோ என் வயசுக்கு திடீர்ன்னு வந்திருச்சு. அதுக்காக நான் வயசானவன்னா?

    நோ.. நோ..

    ReplyDelete
  59. [[[மங்களூர் சிவா said...
    take care & Get well soon.]]]

    நன்றி தம்பி சிவா அவர்களே..!

    ReplyDelete
  60. [[[[ILA(@)இளா said...
    உடம்ப பத்திரமா பார்த்துக்குங்க அண்ணாச்சி. ரெண்டாவது ஏழரையா இருக்கும். அது நல்லதுதான் செய்யும்.]]]]

    அப்படியா? உங்களது வாக்கு பலிக்கட்டும் இளா..!!!

    ReplyDelete
  61. [[[ஜோ/Joe said...
    உடம்ப கவனிச்சுகுங்க அண்ணே!]]]

    நன்றி தம்பி ஜோ..!

    ReplyDelete
  62. [[[பித்தன் said...

    take care of your health. Dont take anything lightly. Hw is ur health now.

    I thought a man of similar thoughts like me is here. Dont shatter my dreams. Take care of your health.]]]

    ஆஹா பித்தன் ஸார்.. அந்த அளவுக்கெல்லாம் தகுதியான ஆளா நான்..? ஆச்சரியமாக இருக்கிறது.

    எனி வே.. தங்களுடைய வாழ்த்துக்களுக்கும், விசாரிப்புக்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete
  63. [[[ஷண்முகப்ரியன் said...
    உடம்பையும்,மனதையும் சேர்த்துக் கவனித்துக் கொள்ளுங்கள், சரவணன்.
    முருகன் அருள் கிடைக்கட்டும்.]]]

    அவன்தான் கொடுத்துக்கிட்டுத்தான இருக்கான் ஸார்..?

    அதான பிரச்சினை? இப்படியா கொடுக்கிறது..? கொஞ்சம் பாவம்னு அவனுக்கே தோணாதா..?

    ReplyDelete
  64. உடம்ப பத்திரமா பார்த்துக்குங்க அண்ணா!

    ReplyDelete
  65. [[[அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    உடம்ப பத்திரமா பார்த்துக்குங்க அண்ணா!]]]

    நன்றி பாஸ்கி..!

    ReplyDelete
  66. உண்மை தமிழன் சார்,
    அட்லீஸ்ட் நீங்க கீழ விழுந்தவுடனே தூக்கி, ஜூஸ் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆள் இருந்தாங்களே, இது தான் அந்த கோவணாண்டியின் அருள். துன்பம் நிகழ்வது கோள் சாரத்தினால், அதில் தப்பிப்பது இறை அருளால்.

    சீக்கிரம் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
    குரு

    ReplyDelete
  67. //விரயச் சனியின் முடிவும், ஏழரைச் சனியின் துவக்கமும்..!
    //

    விரயச்சனி முடிந்தால் துவங்குவது ஜன்மச்சனி.... விரயச்சனியுடன் துவங்குவது ஏழரை சனி

    சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் உங்களுக்கு 2007ல் ஏழரைச்சனி ஆரம்பித்ததல்லவா. அதில் முதல் இரண்டரை ஆண்டுகள் விரயச்சனி. அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜன்ம சனி

    எனவே

    உண்மைத்தமிழன் சார், தலைப்பை மாத்துங்க (நாட்டாமை தீர்ப்பை மாத்து மாடுலேஷனில் வாசித்துக்கொள்ளூங்கள்)

    எனது ஜோதிட அறிவு மிக மிக குறைவு என்பதால் வாத்தியாரிடம் சரிபார்த்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  68. //ஐயா... டக்கீலா-ல எல்லாமா தண்ணி கலப்பீங்க இந்தியால??? அதை ராவாதான் அடிக்கனும்.//

    ஏன் பேரிக்காவுல டக்கீலா ஷாட் மட்டும்தான் அடிப்பாங்களா?

    சிட்ரஸ் சூஸ், லெமனேடு, டைட் கோக் வித் லைம் ... இன்னமும் பல டக்கீலா காக்டைல் இருக்குங்க...

    கரப்பன்பூச்சி, ஓண்ணுக்கு சாம்பிள் (Urine sample)... இதெல்லாம் டக்கீலா காக்டைல் பேருகதான்!!!

    ReplyDelete
  69. Health is wealth. Please take care of your health. Suvar nandraga irundhaldhan chithiram varaya mudiyum.

    ReplyDelete
  70. ஆக, அடுத்த மூன்றாண்டுகளில் பதிவர்களுக்கு என்னிடமிருந்து இது போன்ற நிறைய புலம்பல் பதிவுகள் வருவதற்குக் காத்திருக்கின்றன என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

    அடேய் மயிறு கோவணான்டி//
    உ.த பாவம் அந்த குழந்தை :-)
    இந்தாங்க உங்களுக்கான ஸ்பெஷல் பிரிஸ்க்கிப்ஷன்


    நாளென் செயும்வினை தானென் செயும்எனை நாடிவந்த
    கோளென் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்துதோன்றிடினே

    --

    ReplyDelete
  71. [[[Guru said...

    உண்மை தமிழன் சார், அட்லீஸ்ட் நீங்க கீழ விழுந்தவுடனே தூக்கி, ஜூஸ் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆள் இருந்தாங்களே, இதுதான் அந்த கோவணாண்டியின் அருள். துன்பம் நிகழ்வது கோள் சாரத்தினால், அதில் தப்பிப்பது இறை அருளால்.

    சீக்கிரம் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
    குரு]]]

    எனக்கும் புரிந்தது..

    ஆனால் எனக்கு ஏன் என்பதுதான் எனது கோபம்..!

    ReplyDelete
  72. [[[புருனோ Bruno said...

    //விரயச் சனியின் முடிவும், ஏழரைச் சனியின் துவக்கமும்..!//

    விரயச்சனி முடிந்தால் துவங்குவது ஜன்மச்சனி.... விரயச்சனியுடன் துவங்குவது ஏழரை சனி

    சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உங்களுக்கு 2007ல் ஏழரைச்சனி ஆரம்பித்ததல்லவா. அதில் முதல் இரண்டரை ஆண்டுகள் விரயச்சனி. அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜன்ம சனி

    எனவே உண்மைத்தமிழன் சார், தலைப்பை மாத்துங்க (நாட்டாமை தீர்ப்பை மாத்து மாடுலேஷனில் வாசித்துக்கொள்ளூங்கள்)

    எனது ஜோதிட அறிவு மிக மிக குறைவு என்பதால் வாத்தியாரிடம் சரிபார்த்துக்கொள்ளவும்.]]]

    ஆஹா.. இப்படியொரு விஷயமும் இருக்குதா..?

    தலைப்பை மாத்திடறேன்..

    உங்களுடைய ஜோதிட அறிவு எனக்குத் தெரியாதுங்களா அண்ணே..!

    என்ன அடக்கம்.. என்ன அடக்கம்..!?

    ReplyDelete
  73. [[[நந்தவனத்தான் said...

    //ஐயா... டக்கீலா-ல எல்லாமா தண்ணி கலப்பீங்க இந்தியால??? அதை ராவாதான் அடிக்கனும்.//

    ஏன் பேரிக்காவுல டக்கீலா ஷாட் மட்டும்தான் அடிப்பாங்களா?
    சிட்ரஸ் சூஸ், லெமனேடு, டைட் கோக் வித் லைம் ... இன்னமும் பல டக்கீலா காக்டைல் இருக்குங்க...
    கரப்பன்பூச்சி, ஓண்ணுக்கு சாம்பிள் (Urine sample)... இதெல்லாம் டக்கீலா காக்டைல் பேருகதான்!!!]]]

    ஐய்ய்ய்யோ.. இப்படியா? இதுக்குப் பேரு காக்டெயிலா..?

    என்னவோ போங்க..! எல்லாம் ஒரே கர்மமா இருக்கு..!

    ReplyDelete
  74. [[[Pinnottam said...
    Health is wealth. Please take care of your health. Suvar nandraga irundhaldhan chithiram varaya mudiyum.]]]

    பி்ன்னூட்டம் ஸார்.. உங்களுடைய அறிவுரைக்கு எனது நன்றிகள்..!

    ReplyDelete
  75. [[[ramachandranusha(உஷா) said...

    ஆக, அடுத்த மூன்றாண்டுகளில் பதிவர்களுக்கு என்னிடமிருந்து இது போன்ற நிறைய புலம்பல் பதிவுகள் வருவதற்குக் காத்திருக்கின்றன என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

    அடேய் மயிறு கோவணான்டி//
    உ.த பாவம் அந்த குழந்தை :-)
    இந்தாங்க உங்களுக்கான ஸ்பெஷல் பிரிஸ்க்கிப்ஷன்


    நாளென் செயும்வினை தானென் செயும்எனை நாடிவந்த
    கோளென் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்துதோன்றிடினே]]]

    உஷா மேடம்..

    இந்த நேரத்துல வந்து செலவை இழுத்து வைச்சுட்டானேன்னு ஒரு சின்னக் கோபம் அவ்ளோதான்..!

    நான் கோபப்படாம வேற யார் கோபப்படுவா அவன்கிட்ட..!? எல்லாம் அவன் செயல்தான்.. அதில் எனக்கும் சந்தேகமில்லை..!

    ReplyDelete
  76. யூத்துன்னு சொல்லிக்கிறதுக்காகவாவது உடம்பைப் பாத்துக்கணுமே உ.த.! உங்களப்பன் முருகன் உங்களுக்குத் துணையிருக்கட்டும்!

    ReplyDelete
  77. உடம்பைப் பாத்துக்குங்க. சக்கரைத் தேவன் விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கனும்.
    உங்களுக்கும் கன்னி ராசியா? இந்தச் சனி கொஞ்சம் நல்லதும் செய்யுமாம். கோவணாண்டி அருள் புரிய வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  78. [[[சங்கா said...
    யூத்துன்னு சொல்லிக்கிறதுக்காகவாவது உடம்பைப் பாத்துக்கணுமே உ.த.! உங்களப்பன் முருகன் உங்களுக்குத் துணையிருக்கட்டும்!///

    சங்கர் கரெக்ட்டுதான்.. உங்க உள்குத்தை நான் ரசிக்கிறேன்.. உங்களின் நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது..!

    ReplyDelete
  79. [[[தஞ்சாவூரான் said...
    உடம்பைப் பாத்துக்குங்க. சக்கரைத் தேவன் விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கனும்.]]]

    இருந்துக்குறேன் தஞ்சாவூரான் ஸார்..

    [[[உங்களுக்கும் கன்னி ராசியா? இந்தச் சனி கொஞ்சம் நல்லதும் செய்யுமாம். கோவணாண்டி அருள் புரிய வாழ்த்துக்கள் :)]]]

    உங்களுக்கும்னா.. உங்களுக்கும் கன்னி ராசியா? ஜமாய்ங்கோ..

    உங்க வாக்கு பலிச்சா சரிதான் ஸார்..!

    ReplyDelete
  80. விடுங்க
    இனிமே இது போல நடக்காமல் முருகன் பார்த்துகுவான்

    ReplyDelete
  81. [[[[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

    -:)]]]

    நன்றி ஞானப்பித்தன் அவர்களே..

    அதுக்கெதற்கு இத்தனை அடைப்புக்குறிகள்..?

    ReplyDelete
  82. ///Arun Kumar said...
    விடுங்க.. இனிமே இது போல நடக்காமல் முருகன் பார்த்துகுவான்.///

    அப்படியா தம்பி.. முருகனுக்கு ரொம்ப குளோஸ் போல தெரியுது..!

    அப்படியே என்னை என்னிக்குக் கூப்பிட்டுக்குவான்றதையும் கொஞ்சம் கேட்டுச் சொல்றது..?

    தயாரா இருப்போம்ல..!

    ReplyDelete
  83. same to u .....நேக்கும் 3 நாள் முன்னாடி அப்படித்தான் நடந்தது....ஓரே ராசிங்கிறதாலா?

    ReplyDelete
  84. கஷ்டத்தையும் இவ்வளவு அருமையாக விளக்கிச் சொல்லியிருந்த பாங்கு மிகவும் அருமை

    ReplyDelete
  85. உடம்பை கவனிச்சுக்குங்க.
    முதல்ல நல்லா சாப்பிடுங்க.
    கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க

    ReplyDelete
  86. சார் நீங்க ஒரு இண்டலிஜண்ட்.... சாதிட கணக்குகளை விரல் நுணியில் வச்சிருக்கிங்க...

    அடுத்த முறை தேவதைகளிடம் என்னைப் பற்றி கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள்

    ReplyDelete
  87. வெல்கம் டு லோ சுகர் ஃபேமிலி.
    16 வயசுலேர்ந்து லோ பீபி லோ சுகர் தான். கையில எப்பவும் சாக்லேட் வெச்சிருப்பேன். ஃப்ரிட்ஜுலையும் சாக்லேட் கண்டிப்பா இருக்கும். சில நாட்கல் சுகர் க்ரேவிங் எனப்படும் சர்க்கரை தேவை அதிகமாகி சாக்லெட் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததும் உண்டு.

    அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதால் உடற்பயிற்சி, வாக்கிங் முக்கியம். ஏதோ எனக்கு தெரிஞ்சது உங்களுக்கும் உதவும்னு சொன்னேன்.

    ReplyDelete
  88. [[[கிறுக்கன் said...
    same to u ..... நேக்கும் 3 நாள் முன்னாடி அப்படித்தான் நடந்தது.... ஓரே ராசிங்கிறதாலா?]]]

    அப்படியா? நம்பவே முடியல.. எப்படிங்க இது..?

    ReplyDelete
  89. [[[Several tips said...
    கஷ்டத்தையும் இவ்வளவு அருமையாக விளக்கிச் சொல்லியிருந்த பாங்கு மிகவும் அருமை]]]

    நன்றிகள் ஸார்..

    தங்களது தளத்தை பார்த்தேன்.. அனைத்தும் பயனுள்ள தகவல்கள். அவைகளை தமிழில் எழுதினால் இன்னும் நன்மை பயக்குமே..!

    ReplyDelete
  90. [[[பிரேம்ஜி said...
    உடம்பை கவனிச்சுக்குங்க. முதல்ல நல்லா சாப்பிடுங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க]]]

    பிரேம்ஜி.. உடம்பை கவனிச்சுக்குறேன்.. நல்லா சாப்பிடுறேன்.. நல்லாவே ரெஸ்ட்டும் எடுக்குறேன்..

    ஆனா காசு எப்படி வரும்னு தெரியலையே..!

    ReplyDelete
  91. [[[VIKNESHWARAN said...

    சார் நீங்க ஒரு இண்டலிஜண்ட்.... சாதிட கணக்குகளை விரல் நுணியில் வச்சிருக்கிங்க...

    அடுத்த முறை தேவதைகளிடம் என்னைப் பற்றி கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள்.]]]

    சாதிட கணக்குகளா? அப்படீன்னா?

    ReplyDelete
  92. [[[புதுகைத் தென்றல் said...

    வெல்கம் டு லோ சுகர் ஃபேமிலி.
    16 வயசுலேர்ந்து லோ பீபி லோ சுகர்தான். கையில எப்பவும் சாக்லேட் வெச்சிருப்பேன். ஃப்ரிட்ஜுலையும் சாக்லேட் கண்டிப்பா இருக்கும். சில நாட்கல் சுகர் க்ரேவிங் எனப்படும் சர்க்கரை தேவை அதிகமாகி சாக்லெட் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததும் உண்டு.

    அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்வதால் உடற்பயிற்சி, வாக்கிங் முக்கியம். ஏதோ எனக்கு தெரிஞ்சது உங்களுக்கும் உதவும்னு சொன்னேன்.]]]

    ஆஹா.. அம்மணி நீயுமா? இனிமேதான் நான் இது அத்தனையையும் அனுபவிக்கணும்.. இப்பவே ஒரு நாளைக்கு மூணு சாக்லேட்டை முழுங்கவே கஷ்டமா இருக்கு..

    என்ன செய்றது? அந்த 2500 ரூபாயை நினைச்சா பகீர்ன்னுது..! அதுனால கண்ணை மூடிக்கிட்டு தின்னுக்கிட்டிருக்கேன்..!

    ReplyDelete
  93. உமது ஏழரைச் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது. அதில் முதல் இரண்டரை ஆண்டுகளே விரயச் சனி எனப்படும்! (ஜென்ம ராசியிலிருந்து 12 வது வீடான விரயஸ்தானத்தில் சனி பிரவேசிப்பதால் விரயச் சனி எனப்படும்.) இப்பொழுது உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் இந்த 2 1/2 வருடங்கள் ஜென்மச்சனி என்றழைக்கப்படும்.

    (அடுத்த 2 1/2 வருடங்கள் தன ஸ்தானமான 2மிடத்தில் பிரவேசிக்க இருப்பதால் அதனை தனச் சனி என்றழைக்கலாமா என்றெல்லாம் எடக்கு மடக்காக கேள்வி கேக்கக் கூடாது)

    முக்கியக் குறிப்பு:

    உங்கள் வயதை எடுத்துக் கொள்ளும்போது உங்களது வாழ்க்கையில் இது இரண்டாவது சுற்று ஏழரைச் சனியாக இருக்கக் கூடும். உங்கள் வாழ்வில் சுமார் 27 1/2 அல்லது 30 வருடங்களுக்கு முன்பே முதல் சுற்று ஏழரைச் சனியை நீங்கள் சந்தித்திருப்பீர்கள்!

    இரண்டாவது சுற்றில் பொதுவாக சனீஸ்வர பகவான் பெரிய அளவில் துன்பங்களைத் தரமாட்டார்! தைரியமாக இருக்கவும்! இவ்விரண்டாவது சுற்றில் வளமையான வாழ்க்கையை எதிர்கொள்ள எல்லா முயற்சிகளையும் நீங்கள் முன்வந்தெடுக்க வைப்பார்!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  94. //அப்படியா தம்பி.. முருகனுக்கு ரொம்ப குளோஸ் போல தெரியுது..!

    அப்படியே என்னை என்னிக்குக் கூப்பிட்டுக்குவான்றதையும் கொஞ்சம் கேட்டுச் சொல்றது..?

    தயாரா இருப்போம்ல..!//

    அண்ணே எதுக்கு இவ்வளவு tension !!

    டப்பா படம் உன்னை போல ஒருவன் விமர்சனங்களை விடாம தொறத்திகிட்டு இருந்தா விரய சனி துரத்தி துரத்தி அடிப்பாராம் :)

    ReplyDelete