Pages

Monday, August 10, 2009

பதினைந்து நாட்கள் வலைப்பதிவுக்கு விடுமுறை - நடந்தது என்ன..?

10-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கடந்த பதினைந்து தினங்களுக்கு முன்பாக ஆழ்வார்பேட்டையில் ஒரு நண்பரின் வீட்டில் மதிய உணவுக்காக போயிருந்தபோது அவரது வீட்டு கேபிள் கனெக்ஷன் கட் செய்யப்பட்டுவிட்டதாக புலம்பினார். அது ஹாத்வே நிறுவனத்தாரின் கனெக்ஷன்.

இது வருடக்கணக்காக நடப்பதுதானே என்று அலட்சியமாக நினைத்தேன். அந்த நண்பரே வருத்தத்துடன் சொன்னார், “இனிமேல் ஹாத்வே கேபிள் கனெக்ஷன் மெட்ராஸ்ல இருக்காதாம். பிஸினஸை மூடிட்டோம்னு சொல்லிட்டாங்க..” என்றார். இது முதல் அதிர்ச்சி.

அடுத்த அதிர்ச்சி அடுத்த இரண்டாவது நாளே வட சென்னை முழுவதும் கோலோச்சிக் கொண்டிருந்த ஹாத்வேயின் கேபிள்கள் இரவோடு இரவாக அறுத்தெறியப்பட்டன. ஒரே நாளில் அளவுக்கதிகமாக கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் அன்றோடு ஹாத்வே நிறுவனத்தாரின் கேபிள் டிவி கனெக்ஷனும் முடக்கப்பட்டு உடனுக்குடன் அப்பகுதி கேபிள் டிவிக்காரர்கள் சுமங்கலி கேபிளில் உறுப்பினராக்கப்பட்டு அவர்களுக்கு கேபிள் கனெக்ஷன் தங்குத் தடையில்லாமல் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு நிம்மதியும், ஆனந்தமும் அளிக்கப்பட்டது.

அதற்கடுத்த இரண்டாவது நாள் மூன்றாவது அதிர்ச்சி. ஹாத்வேயின் இண்டர்நெட் கேபிள்கள் பலவும் நகரின் பலவிடங்களிலும் புயல் வேகத்தில், அசுர பலத்துடன் அறுத்தெறியப்பட்டன. எனது வீட்டிலும் ஹாத்வே இண்டர்நெட் கேபிள்தான் இருந்தது. அன்றோடு தொலைந்தது இண்டர்நெட் கனெக்ஷன்.

நெருங்கி, நெருக்கி விசாரித்தபோது அடுத்த ஒரு மணி நேரத்தில் பதில் சொல்வதாகச் சொன்ன கஸ்டமர் கேர் அதிகாரிகள் பின்பு லைனுக்கு வரவேயில்லை. இரண்டு நாட்களாகத் தகவல் தெரியாமல் அல்லாடிய பின்பு மூன்றாவது நாள்தான் லைன் கிடைத்து பதிலும் வந்தது.

“எங்க ஆபீஸ்ல பிஸினஸை மூடிட்டாங்க ஸார்.. இனிமே ஹாத்வே வராது ஸார்.. நீங்க வேற எந்த கம்பெனி இண்டர்நெட் கனெக்ஷனாவது வாங்கிக்குங்க..” என்று வருத்தத்தோடு சொல்லி போனை வைத்தார்கள்.

கடந்த பதின்மூன்றாண்டுகளாக ஆளும்கட்சி ஆதரவுடனும், அரசியல் ரவுடிகளின் பக்க பலத்துடனும், காவல்துறையின் கண்ணாமூச்சி ஒத்துழைப்புடனும் போராடி பார்த்து, சக்தியில்லாமல் தற்போது ஓய்ந்து, ஒழிந்தே போய்விட்டது ஹாத்வே.

அவர்களுடைய கருவிகளை வாங்கக்கூட வரவில்லை. வருவார்களா என்பதுகூட சந்தேகம்தானாம்..

துவக்கக் காலத்தில் ஒரு மும்பை கம்பெனியிடம் இருந்த இந்த ஹாத்வேக்கு ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் காக்கிச் சட்டைகளின் உதவி கிடைத்ததால் அப்போது மட்டும்தான் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அம்மையாரின் ஆட்சி போய் ஐயாவின் ஆட்சி வந்ததும் பேரன்களின் முதல் குறிக்கோளே ஹாத்வேயை ஓட, ஓட விரட்டிவிட வேண்டும் என்பதுதான். ஏனெனில் தமிழ்நாடு முழுவதிலுமே கிட்டத்தட்ட முக்கால்வாசி மார்க்கெட்டைக் கைப்பற்றியிருக்கும் சுமங்கலி கேபிள் விஷனுக்கு சென்னையில் ஒரு புறத்தில் இடமில்லாமல் இருப்பது அவர்களுக்கு கவுரவக் குறைச்சலாகத் தெரிந்தது.

இதனால் இனியும் இவர்களோடு கண்ணாமூச்சி ஆடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்து அதிரடிப் பாய்ச்சல் காட்டியிருக்கிறார்கள் மீடியா பிரதர்ஸ். இன்னொரு காரணம், வாய்ப்புள்ளபோதே தூற்றிக் கொள்வோம். மறுபடியும் ஆட்சி இல்லாமல் போனாலோ, அல்லது மேலிடத்துடன் ராசி இல்லாமல் போனாலோ ஹாத்வேயை விரட்ட முடியாது என்று உறுதியுடன் நம்பிவிட்டார்கள்.

இதற்கிடையில் ஹாத்வேயை நடத்திக்கொண்டிருந்த மும்பை நிறுவனத்திடமிருந்து ஸ்டார் டிவி ஹாத்வேயை விலைக்கு வாங்கி 'ஸ்டார் ஹாத்வே' என்று பெயரிட்டு நடத்தத் துவங்கியது. ஆனாலும் சோழ சக்கரவர்த்தியின் வாரிசுகள் தமிழகம் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட மண். தாங்களே அதிபதிகள் என்பதை நிரூபித்துக் காட்டுவதில் உறுதியாகவே இருந்தார்கள்.

கோபாலபுரம் வீட்டில் சகோதரர்களும், மாமன், மச்சான்களும் ஒன்று சேர்ந்து காட்சியளித்த மறுநாளில் இருந்தே ஹாத்வே கேபிள்களை கட் செய்வது அதிகமாகிவிட்டதாம். கடந்த இரு மாதங்களில் அது உச்சக்கட்டத்திற்குப் போய்விட்டது.

என் வீட்டருகே சென்ற மாதம் என் கண் முன்பாகவே கேபிளை வெட்டினார்கள். வெட்டியவர்கள் லோக்கல் கேபிள் சேனல்காரர்கள். ஏன் என்று கேட்டால் வெட்டச் சொன்னார்கள். வெட்டினோம். அவ்வளவுதான் பதில்..

அடுத்த நாள் காலை வரையிலும் எனக்கு இண்டர்நெட் கனெக்ஷன் இல்லை. மறுநாள் காலையில் அதே இடத்தில் வைத்து போலீஸாருடன் வாக்குவாதமும், சண்டையும் நடந்தது. “என்னால ஒண்ணும் செய்ய முடியாது.. கம்ப்ளையிண்ட்டைகூட வாங்க முடியாது.. உங்களால முடிஞ்சா என்ன செய்யணுமோ செஞ்சுக்குங்க..” என்று சைரன் காரில் சொகுசாக வந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கூலாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இந்த அக்கிரமத்திற்கு முடிவு கட்டவே முடியாது என்பதை உணர்ந்துதான் ஹாத்வே தனது தொழிலை நிறுத்திக் கொண்டுவிட்டது.

பாவம்.. அவர்களும் என்னதான் செய்வார்கள்..? ஒரு நாள் வடபழனியில் கட் செய்தால் மறுநாள் சாலிக்கிராமம். அடுத்த நாள் விருகம்பாக்கம் என்று தினந்தோறும் புகார்கள் சொல்லியே ஓய்ந்துவிட்டார்கள் ஹாத்வே சந்தாதாரர்கள்.

குறைந்தபட்சம் ஒரு 300 தமிழர்களாவது அந்த நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற்று வந்தார்கள். இப்போது அவர்கள் வேலை கோவிந்தா..

தங்கள் வீட்டு கஜானா நிறைய வேண்டும் என்பதற்காக சக தமிழர்களின் வாயில் மண்ணையள்ளிப் போட்ட இந்த முடிசூடாத அரசாளர்கள்தான் வாய் வலிக்க கூசாமல் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்கிறார்கள் நியாயமான ஆட்சியை மக்களுக்கு அளிக்கிறோம் என்று..!

வெட்கங்கெட்ட ஜென்மங்கள்..!

71 comments:

  1. அண்ணே,
    இப்பத்தான் உங்க ஏரியா பக்கம் நடந்ததா?
    எங்க ஏரியாவுல 3 மாசத்துக்கு முன்னாடியே வெட்டிட்டாங்க - ஹாத்வே கேபிள் டிவி. ஒரு வாரத்தில் வந்து ஹாத்வே செட்டப் பாக்ஸை எடுத்துவிட்டு எஸ்.சி.வி. செட்டாப் பாக்ஸ் வச்சிட்டாங்க. விலை ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை.

    இதுல லோக்கல் கேபிள்காரனுக சைடு கேப்புல வெளாடிட்டானுக. ஹாத்வே வாங்கும்போது 500 டெபாசிட், அதுல 250 disconnect பண்ணும்போது ரிட்டன்னு சொன்னாங்க. இப்போ scv செட்டப் பாக்ஸ் ஃப்ரீ... மாத்திட்டானுக. ஆனா அந்த 250 க்கு பதில் இல்ல. கேட்டா நீங்க எல்லாரும் இளிச்சவாயந்தாண்டாங்குற ரேஞ்சுக்குதான் பதில் வருது...

    உண்மையிலேயே நாம எல்லாரும் இளிச்சவாயனுகதான்.

    ReplyDelete
  2. இப்படியெல்லாம் நடக்குதா??? ஏதோ ரௌடியிஷ சினிமா கதை கேட்பது மாதிரி இருக்குங்க..

    ReplyDelete
  3. உண்மைத் தமிழன்,

    படிக்கும் போதே கோபம் பொங்குகிறது. இவர்களின் குடும்பத் தகராறில் போட்டிக்காக பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தைப் பயன்படுத்தி அரசு கேபிள் கார்ப்பரேஷன் என்ற ஒன்றை ஆரம்பித்து ஏதோ செய்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் குடும்ப இணைப்பு அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இனி சென்னையைப் பொறுத்தவரை மாறன் மாபியா காண்பிப்பதைத்தான் நாம் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உண்மையில் இதற்கெலல்லாம் தீர்வு என்று ஒன்று இருக்கிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. நம்ம மக்களுக்கு தான் ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டா போதுமே தேர்தல் வரும் பொது பணம் கிடச்சா சரி அதை விட்டுட்டு எவன் செத்த என்ன . எவன எவன் கொன்னா என்ன எவன் பொண்டாட்டிய எவன் கொண்டு போனா என்ன ? எவன் பணத்த எவன் கொள்ளையடிச்சா என்ன ?

    ReplyDelete
  5. உன் நாட்கள் எண்ணபடுகிறது தம்ப்ரீ.. ஜாக்கிரதையாக இரு.. உன்னையே தூக்கி உள்ளே போட்டுவிட போகிறார்கள்..

    ReplyDelete
  6. அண்ணே.பொணந்திண்ணி கழுகுகள்..பாத்து சூதானமா நடந்துக்குங்க..சொல்லிபுட்டேன் ஆமா..

    ReplyDelete
  7. //கோபாலபுரம் வீட்டில் சகோதரர்களும், மாமன், மச்சான்களும் ஒன்று சேர்ந்து காட்சியளித்த மறுநாளில் இருந்தே ஹாத்வே கேபிள்களை கட் செய்வது அதிகமாகிவிட்டதாம். கடந்த இரு மாதங்களில் அது உச்சக்கட்டத்திற்குப் போய்விட்டது.
    //
    இந்த கம்னாட்டிங்க சண்டை போட்டுக்கிட்டாலும் எவன் வீட்லயாவது எழவு விழ வைக்கிறானுங்க, ஒன்னா சேர்ந்துக்கிட்டாலும் எவன் வீட்லயாவது எழவு விழ வைக்கிறானுங்க....

    ReplyDelete
  8. சர்வாதிகார ஆட்சி என்பது இதுதானோ!

    ReplyDelete
  9. இந்த செய்தியெல்லாம் பற்றி எந்த பத்திரிக்கையும் வாய் திறக்க மாட்டானுங்க. மூச்..

    அவனுங்களை சொல்லணும்.

    இதெல்லாம் ஒரு பொழப்பா..??

    ReplyDelete
  10. "குறைந்தபட்சம் ஒரு 300 தமிழர்களாவது அந்த நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற்று வந்தார்கள். இப்போது அவர்கள் வேலை கோவிந்தா.."

    இதெல்லாம் ஒரு பொழப்பா..??

    ReplyDelete
  11. Me too Hathway net connection..
    Same blood.. :-(

    ReplyDelete
  12. //
    அதற்கடுத்த இரண்டாவது நாள் மூன்றாவது அதிர்ச்சி. ஹாத்வேயின் இண்டர்நெட் கேபிள்கள் பலவும் நகரின் பலவிடங்களிலும் புயல் வேகத்தில், அசுர பலத்துடன் அறுத்தெறியப்பட்டன. எனது வீட்டிலும் ஹாத்வே இண்டர்நெட் கேபிள்தான் இருந்தது. அன்றோடு தொலைந்தது இண்டர்நெட் கனெக்ஷன்.
    //

    என் உறவினர் தம் குடியிருப்பில் உள்ள அனைவரும் சேர்ந்து வாங்கிய இணைய தொடர்பு சரியாக ஒரு மாதம் முடிவதற்குள்ளாக கடந்த வாரம் இப்படி திடும்மென்று துண்டிக்கப்பட்டுவிட்டது - கேட்டதற்கு கம்பெனியை கேன்சல் ஆகிடுச்சுன்னு சொல்லியிருக்காங்க கொடுமைதான் :(((

    ReplyDelete
  13. :-(

    கொடுமையான நிகழ்வு!

    ReplyDelete
  14. அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா........என்ன கேட்டா ஜெயாவையும்,கலைஞரையும் நம்பி போனது ஹாத்வே செய்த மிகப்பெரிய தவறு....அவங்களுக்கு அவங்களே ஆப்பு வச்சிக்கிட்டாங்க.

    ReplyDelete
  15. //ஸ்டார் டிவி ஹாத்வேயை விலைக்கு வாங்கி 'ஸ்டார் ஹாத்வே' என்று பெயரிட்டு நடத்தத் துவங்கியது//

    விடாக்கொண்டனுக்கெல்லம் ஒரு கொடாக்கொண்டன் இருப்பானுங்கிறது இதுதானோ?

    'ஸ்டார்' குழுமத்தின் முதலாளி ராபெர்ட் முர்டோச்(Robert Murdoch) நடத்தும் 'News Corporation' நிறுவனம் வெளிநாடுகளில் அட்டூழியங்கள் செய்து (அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டும்) , 'Paper/TV/Cable/Satellite' துறைகளில் ஏகபோக உரிமையை அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறது!

    'News Corporation' குழுமத்தின் பத்திரிக்கைகள் மற்றும் தொ.காட்சிகளில், இந்தியாவுக்கு 'Jobs Outsource' செய்வதை எதிர்த்து பிரச்சாரம் செய்து, அதில் வெற்றியும் பெற்று, 'BPO' துறைகளில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்தனரே?
    [பிரித்தானிய நிறுவனங்கள், "UK Call Centre" என்று விளம்பரம் செய்யும் அளவுக்கு நிலைமை இருக்கிறது]

    சமீப காலமாக இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வரும் வெளி நாட்டு நோயாளிகளை(Medical Tourism) குறிவைத்திருக்கிறது இந்த 'News Corporation'.

    ReplyDelete
  16. ஒன்னும் சொல்றதுக்கு இல்லனா....

    ReplyDelete
  17. ///எவனோ ஒருவன் said...

    அண்ணே, இப்பத்தான் உங்க ஏரியா பக்கம் நடந்ததா? எங்க ஏரியாவுல 3 மாசத்துக்கு முன்னாடியே வெட்டிட்டாங்க - ஹாத்வே கேபிள் டிவி. ஒரு வாரத்தில் வந்து ஹாத்வே செட்டப் பாக்ஸை எடுத்துவிட்டு எஸ்.சி.வி. செட்டாப் பாக்ஸ் வச்சிட்டாங்க. விலை ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை.
    இதுல லோக்கல் கேபிள்காரனுக சைடு கேப்புல வெளாடிட்டானுக. ஹாத்வே வாங்கும்போது 500 டெபாசிட், அதுல 250 disconnect பண்ணும்போது ரிட்டன்னு சொன்னாங்க. இப்போ scv செட்டப் பாக்ஸ் ஃப்ரீ... மாத்திட்டானுக. ஆனா அந்த 250 க்கு பதில் இல்ல. கேட்டா நீங்க எல்லாரும் இளிச்சவாயந்தாண்டாங்குற ரேஞ்சுக்குதான் பதில் வருது...
    உண்மையிலேயே நாம எல்லாரும் இளிச்சவாயனுகதான்.///

    நீங்க எவனோ ஒருவன் இல்லீங்கோ.. நூத்துல ஒருத்தருங்கோ..

    கடைசி வார்த்தை சத்தியமான உண்மைங்கோ..

    அதனாலதான் சொல்றேனுங்கோ..!

    ReplyDelete
  18. [[[லோகு said...
    இப்படியெல்லாம் நடக்குதா??? ஏதோ ரௌடியிஷ சினிமா கதை கேட்பது மாதிரி இருக்குங்க..]]]

    மாதிரி இல்லீங்க லோகு..

    அதுவேதான்.. என்ன இதுல ரெளடிகளும் சிக்கலை.. அவங்களோட தலைவர்களும் சிக்கலை..

    ReplyDelete
  19. [[[சுரேஷ் கண்ணன் said...

    உண்மைத் தமிழன், படிக்கும் போதே கோபம் பொங்குகிறது. இவர்களின் குடும்பத் தகராறில் போட்டிக்காக பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தைப் பயன்படுத்தி அரசு கேபிள் கார்ப்பரேஷன் என்ற ஒன்றை ஆரம்பித்து ஏதோ செய்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் குடும்ப இணைப்பு அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இனி சென்னையைப் பொறுத்தவரை மாறன் மாபியா காண்பிப்பதைத்தான் நாம் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உண்மையில் இதற்கெலல்லாம் தீர்வு என்று ஒன்று இருக்கிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது.]]]

    அரசு கேபிள் கார்ப்பரேஷனும் அம்போதான்.. இனி சத்தியமாக அது வரவே வராது..

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள்தான் நூறு சதவிகிதம் சுயநலமானவர்களாக மாறிவிட்டார்களே..

    தங்களது வருகைக்கு நன்றி சுரேஷ் ஸார்..!

    ReplyDelete
  20. [[[Suresh Kumar said...
    நம்ம மக்களுக்குதான் ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டா போதுமே தேர்தல் வரும் பொது பணம் கிடச்சா சரி அதை விட்டுட்டு எவன் செத்த என்ன. எவன எவன் கொன்னா என்ன எவன் பொண்டாட்டிய எவன் கொண்டு போனா என்ன? எவன் பணத்த எவன் கொள்ளையடிச்சா என்ன?]]]

    சுரேஷ் இதே கோபம்தான் எனக்கும்..? ஒரு ரூபாய் அரிசியும், இலவச டிவியுமே போதும் என்று நினைக்கிற மக்களிடத்தில் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..?

    ReplyDelete
  21. [[[கொடூரன் said...

    கொடுமை. உன் நாட்கள் எண்ணபடுகிறது தம்ப்ரீ.. ஜாக்கிரதையாக இரு.. உன்னையே தூக்கி உள்ளே போட்டுவிட போகிறார்கள்..]]]

    அய்.. அப்படியாவது ஜெயிலை பார்த்திட்டு வந்திடறேன்..!

    ReplyDelete
  22. [[[தண்டோரா இனி... மணிஜி.. said...
    அண்ணே. பொணந்திண்ணி கழுகுகள்.. பாத்து சூதானமா நடந்துக்குங்க.. சொல்லிபுட்டேன் ஆமா..]]]

    எச்சரிக்கைக்கு நன்றிண்ணே..

    அதென்ன தண்டோராவே நல்லாத்தான இருக்கு.. எதுக்கு இப்ப புதுசா மணிஜி..?

    ReplyDelete
  23. [[[குழலி / Kuzhali said...

    //கோபாலபுரம் வீட்டில் சகோதரர்களும், மாமன், மச்சான்களும் ஒன்று சேர்ந்து காட்சியளித்த மறுநாளில் இருந்தே ஹாத்வே கேபிள்களை கட் செய்வது அதிகமாகிவிட்டதாம். கடந்த இரு மாதங்களில் அது உச்சக்கட்டத்திற்குப் போய்விட்டது.//

    இந்த கம்னாட்டிங்க சண்டை போட்டுக்கிட்டாலும் எவன் வீட்லயாவது எழவு விழ வைக்கிறானுங்க, ஒன்னா சேர்ந்துக்கிட்டாலும் எவன் வீட்லயாவது எழவு விழ வைக்கிறானுங்க....]]]

    ஹா.. ஹா.. ஹா..

    எனக்கொரு தோஸ்த்து கிடைச்சிருக்காரு..

    ஸோ எனக்கொண்ணும் பயமில்லே..!

    ReplyDelete
  24. [[[வால்பையன் said...
    சர்வாதிகார ஆட்சி என்பது இதுதானோ!]]]

    இதேதான் வாலு..!

    ReplyDelete
  25. [[[வண்ணத்துபூச்சியார் said...
    இந்த செய்தியெல்லாம் பற்றி எந்த பத்திரிக்கையும் வாய் திறக்க மாட்டானுங்க. மூச்.. அவனுங்களை சொல்லணும். இதெல்லாம் ஒரு பொழப்பா..??]]]

    அதான.. பூச்சியாரே.. எனக்கும் இதுதான் ரொம்ப, ரொம்ப ஆச்சரியமா இருக்கு..?!!!

    ReplyDelete
  26. [[[♠புதுவை சிவா♠ said...

    "குறைந்தபட்சம் ஒரு 300 தமிழர்களாவது அந்த நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற்று வந்தார்கள். இப்போது அவர்கள் வேலை கோவிந்தா.."

    இதெல்லாம் ஒரு பொழப்பா..??]]]

    இப்படித்தான் அவுங்க பொழப்பு நடக்குது..!

    ReplyDelete
  27. [[[Karthikeyan G said...
    Me too Hathway net connection..
    Same blood.. :-(]]]

    ஓகே நண்பரே..

    வருத்தங்களை பகிர்ந்து கொள்கிறேன்..

    ReplyDelete
  28. [[[ஆயில்யன் said...
    //என் உறவினர் தம் குடியிருப்பில் உள்ள அனைவரும் சேர்ந்து வாங்கிய இணைய தொடர்பு சரியாக ஒரு மாதம் முடிவதற்குள்ளாக கடந்த வாரம் இப்படி திடும்மென்று துண்டிக்கப்பட்டுவிட்டது - கேட்டதற்கு கம்பெனியை கேன்சல் ஆகிடுச்சுன்னு சொல்லியிருக்காங்க கொடுமைதான் :(((]]]

    யார் செய்த கொடுமைன்னு பாருங்க ஆயில்யன்..!

    இந்த லட்சணத்துலதான் ஆட்சி நடக்குது..!

    ReplyDelete
  29. [[[சென்ஷி said...
    :-( கொடுமையான நிகழ்வு!]]]

    நினைத்துப் பார் தம்பீ..

    எப்பேர்ப்பட்ட ஆட்சியாளர்களின் தலைமையில் எமது வாழ்க்கை நடக்கிறது என்று..!

    ReplyDelete
  30. [[[அத்திரி said...
    அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா........ என்ன கேட்டா ஜெயாவையும், கலைஞரையும் நம்பி போனது ஹாத்வே செய்த மிகப் பெரிய தவறு.... அவங்களுக்கு அவங்களே ஆப்பு வச்சிக்கிட்டாங்க.]]]

    சரி.. தப்பு செஞ்சவனை யார் கேக்குறது தம்பி..?!!

    ReplyDelete
  31. [[[செல்வநாயகி said...

    :((]]]

    தங்களுடைய முதல் வருகைக்கு நன்றி செல்வநாயகி..!

    ReplyDelete
  32. [[[சூடு பட்ட பூனை said...

    //ஸ்டார் டிவி ஹாத்வேயை விலைக்கு வாங்கி 'ஸ்டார் ஹாத்வே' என்று பெயரிட்டு நடத்தத் துவங்கியது//

    விடாக்கொண்டனுக்கெல்லம் ஒரு கொடாக்கொண்டன் இருப்பானுங்கிறது இதுதானோ? 'ஸ்டார்' குழுமத்தின் முதலாளி ராபெர்ட் முர்டோச்(Robert Murdoch) நடத்தும் 'News Corporation' நிறுவனம் வெளிநாடுகளில் அட்டூழியங்கள் செய்து (அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டும்) , 'Paper/TV/Cable/Satellite' துறைகளில் ஏகபோக உரிமையை அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறது! 'News Corporation' குழுமத்தின் பத்திரிக்கைகள் மற்றும் தொ.காட்சிகளில், இந்தியாவுக்கு 'Jobs Outsource' செய்வதை எதிர்த்து பிரச்சாரம் செய்து, அதில் வெற்றியும் பெற்று, 'BPO' துறைகளில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்தனரே?
    பிரித்தானிய நிறுவனங்கள், "UK Call Centre" என்று விளம்பரம் செய்யும் அளவுக்கு நிலைமை இருக்கிறது]
    சமீப காலமாக இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வரும் வெளி நாட்டு நோயாளிகளை(Medical Tourism) குறிவைத்திருக்கிறது இந்த 'News Corporation'.]]]

    அவர்களும், இவர்களும் ஒன்றுதான் என்று சொல்ல வருகிறீர்களா..?

    ஆனால் இது நமது மாநிலத்தில் அதிகாரத் துஷ்பிரயோகமாச்சே..

    இதே இடத்தில் ஸ்டார் இருந்து சுமங்கலி கேபிளை காலி செய்தால்கூட அதையும் தவறு என்றுதான் சொல்வேன்..!

    ReplyDelete
  33. [[[ஜெட்லி said...
    ஒன்னும் சொல்றதுக்கு இல்லனா....]]]

    என்னத்த சொல்றது..? நம்ம தலையெழுத்து..

    இவங்களையெல்லாம் தலைவனா வைச்சுக்கிட்டு வாழணும்னு இருக்கு..!

    ReplyDelete
  34. எவன் அகபடுவான் எப்படி அவன அமுக்கலாம்ன்னு ரூம் போட்டு யோசிகுறங்க. போகுற போக்க பார்த்த இந்தியாவின் பணகாரகள் வரிசையில் இவங்க முதலிடம் வந்தாலும் ஆச்சரிய பட அவசியம் இருக்காது போல.

    ReplyDelete
  35. //”பதினைந்து நாட்கள் வலைப்பதிவுக்கு விடுமுறை - நடந்தது என்ன..?//

    என்ன கொடுமை அண்ணாச்சி! இது வெறும் பதினைந்து நாட்களில் திரும்ப உங்களுக்கு இண்டெர்நெட் கனெக்கசன் கொடுத்த மாஹா பாவி யாரு அண்ணாச்சி சொல்லுங்க!

    ReplyDelete
  36. அண்ணே போன பின்னூட்டத்தில் ”மாஹா” என்று தப்பாக இருக்கிறது அதை மஹான்னு திருத்தி வாசிக்கவும்:)))))

    ReplyDelete
  37. Its all in our hand dont let monopoly to take over.Give 5yrs to this Robbers and give another 5 years to next robber no need steady rule.Its our fault to elect the same robbers.two time.Every thing will come to the same point where it started it is the karma..

    ReplyDelete
  38. ///தங்கள் வீட்டு கஜானா நிறைய வேண்டும் என்பதற்காக சக தமிழர்களின் வாயில் மண்ணையள்ளிப் போட்ட இந்த முடிசூடாத அரசாளர்கள்தான் வாய் வலிக்க கூசாமல் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்கிறார்கள் நியாயமான ஆட்சியை மக்களுக்கு அளிக்கிறோம் என்று..!
    வெட்கங்கெட்ட ஜென்மங்கள்..!////

    சூப்பர்! இதுதான் உண்மைத்தமிழரின் பிராண்டட் வோர்ட்ஸ்!

    ReplyDelete
  39. //ஹாத்வேயின் இண்டர்நெட் கேபிள்கள் பலவும் நகரின் பலவிடங்களிலும் புயல் வேகத்தில், அசுர பலத்துடன் அறுத்தெறியப்பட்டன. எனது வீட்டிலும் ஹாத்வே இண்டர்நெட் கேபிள்தான் இருந்தது. அன்றோடு தொலைந்தது இண்டர்நெட் கனெக்ஷன்.//

    உங்கள் நாட்டில் wireless broadband சேவையெல்லாம் கிடையாதா. Cable என்று ஒன்று இருப்பதால்தானே அதை அறுக்கிறார்கள். பல நாட்களாக தங்களைக் காணவில்லை என்றதும் ஏதோ தெலுங்கு பட discussion அல்லது shootingல் இருப்பதாக நினைத்து விட்டேன். உங்கள் நாட்டு அரசியலைப் பற்றி அயல் நாட்டுக்காரனான நான் விமர்சிக்க கூடாது. ஆக இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  40. i feel sorry for you.

    my kind request for you hereafter donot use the word "chozha" for those people. it realy hurt me as i am from that place.

    ReplyDelete
  41. நாசமாய் போகட்டும்...

    ReplyDelete
  42. I applaud your guts! when almost no one spoke about this, you really had the guts to speak out.

    I am just astonished to see how low these guys can stoop to. My only hope is all these will come to an end eventually!

    But it is sad to see that this family is keeping the entire people in dark by feeding all sort of garbage in all forms of media they own.

    I really hope for the eternal intervention. thanks for bringing this up.

    Ravi

    ReplyDelete
  43. ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி வாயில போட்டுட்டு, நாமளே போய் மின் மயானத்துல படுத்துக்க வேண்டியதுதான்...... இ.... வாயனுங்க... நாமதான்னு நெத்தியில அடிச்சு சொல்றாங்க...

    ReplyDelete
  44. ரெம்ப நல்ல ஆள காணோமே.. சரி போன பதிவுல, கமலா தியேட்டர்ல ஏதோ பிரச்சினைன்னு சொனின்களே அதுக்காக நீதி கேட்டு போராட்டம் பண்ண போய்டிங்கனு நினைச்சேன் ...
    ரெண்டு விஷயம் நீங்க சொல்லவே இல்லை..இப்ப எந்த நெட் கனெக்சன் யூஸ் பண்றீங்க??ரெண்டாவது அந்த கமலா தியேட்டர் மேட்டர் என்னனு சொல்லவே இல்லையே...ஏன்னா அடுத்தவனுக்கு ஒரு பிரச்சினைனா அத நாங்க சந்தோசமா கேட்போம் ... ஹி ஹி..நாங்களும் (உண்மை) தமிழங்கோ

    ReplyDelete
  45. ///ராஜராஜன் said...
    எவன் அகபடுவான் எப்படி அவன அமுக்கலாம்ன்னு ரூம் போட்டு யோசிகுறங்க. போகுற போக்க பார்த்த இந்தியாவின் பணகாரகள் வரிசையில் இவங்க முதலிடம் வந்தாலும் ஆச்சரியபட அவசியம் இருக்காது போல.///

    இவர்களுடைய வாழ்க்கை லட்சியமே அதுதான் ராஜராஜன்..!

    ReplyDelete
  46. [[[குசும்பன் said...

    //”பதினைந்து நாட்கள் வலைப்பதிவுக்கு விடுமுறை - நடந்தது என்ன..?//

    என்ன கொடுமை அண்ணாச்சி! இது வெறும் பதினைந்து நாட்களில் திரும்ப உங்களுக்கு இண்டெர்நெட் கனெக்கசன் கொடுத்த மாஹா பாவி யாரு அண்ணாச்சி சொல்லுங்க!]]]

    அந்த மாஹாபாவிகள் பி.எஸ்.என்.எல்.காரர்கள்.. அவர்களுக்கும் இருக்கு ஆப்பு.. அடுத்த பதிவு அவர்களைப் பற்றித்தான்..!

    ReplyDelete
  47. [[[குசும்பன் said...

    அண்ணே போன பின்னூட்டத்தில் ”மாஹா” என்று தப்பாக இருக்கிறது அதை மஹான்னு திருத்தி வாசிக்கவும்:)))))]]]

    தம்பீ..

    போன பின்னூட்டத்தில் ”மாஹாபாவிகள்” என்று தப்பாக இருக்கிறது அதை மஹாபாவிகள்ன்னு திருத்தி வாசிக்கவும்:)))))]]]

    ReplyDelete
  48. [[[Ilaya said...
    Its all in our hand dont let monopoly to take over. Give 5 yrs to this Robbers and give another 5 years to next robber no need steady rule. Its our fault to elect the same robbers. two time. Every thing will come to the same point where it started it is the karma..]]]

    இளயா..

    நம்முடைய தவறுதான்.. ஒருவர் மட்டும் நினைத்தால் போதாது.. ஓராயிரம் பேர் நினைக்க வேண்டும். பாழாய்ப் போன நமது தமிழக சமூகத்தில் புரையோடிருக்கும் குடும்பமே பெரிது என்ற எண்ணமே பொதுநலன் பெரிது என்ற எண்ணத்தைக் கீழ் நோக்கித் தள்ளியிருப்பதால்தான் இந்த நிலைமை..

    தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றிகள்..!

    ReplyDelete
  49. [[[SP.VR. SUBBIAH said...

    ///தங்கள் வீட்டு கஜானா நிறைய வேண்டும் என்பதற்காக சக தமிழர்களின் வாயில் மண்ணையள்ளிப் போட்ட இந்த முடிசூடாத அரசாளர்கள்தான் வாய் வலிக்க கூசாமல் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்கிறார்கள் நியாயமான ஆட்சியை மக்களுக்கு அளிக்கிறோம் என்று..!
    வெட்கங்கெட்ட ஜென்மங்கள்..!////

    சூப்பர்! இதுதான் உண்மைத்தமிழரின் பிராண்டட் வோர்ட்ஸ்!]]]

    ரொம்பக் கோவத்துல இருந்தேனா வாத்தியாரே..

    அதுதான் அந்த வாழ்த்து தானா வந்திருச்சு..

    என்னவோ.. இந்த அரசியல்வியாதிகளை நமக்கு பிடிக்கவே மாட்டேங்குது..!

    உங்களுக்கு இருக்குற ஆயிரம் பிரச்சினைகள்ல என்னையும் மதித்து பின்னூட்டம் போட வந்தமைக்கு நன்றிகள் வாத்தியாரே..!

    ReplyDelete
  50. [[[ananth said...

    //ஹாத்வேயின் இண்டர்நெட் கேபிள்கள் பலவும் நகரின் பலவிடங்களிலும் புயல் வேகத்தில், அசுர பலத்துடன் அறுத்தெறியப்பட்டன. எனது வீட்டிலும் ஹாத்வே இண்டர்நெட் கேபிள்தான் இருந்தது. அன்றோடு தொலைந்தது இண்டர்நெட் கனெக்ஷன்.//

    உங்கள் நாட்டில் wireless broadband சேவையெல்லாம் கிடையாதா. Cable என்று ஒன்று இருப்பதால்தானே அதை அறுக்கிறார்கள்.]]]

    ஆமா ஆனந்து.. எங்க நாட்டுல வயர்லெஸ் பிராட்பேண்ட் இன்னும் வரலைன்னு நினைக்கிறேன். ஆமா உங்க நாட்டுல வந்திருச்சா..?

    [[[பல நாட்களாக தங்களைக் காணவில்லை என்றதும் ஏதோ தெலுங்கு பட discussion அல்லது shootingல் இருப்பதாக நினைத்து விட்டேன்.]]]

    சந்தோஷம்.. ஏதோ என் நினைப்பு இருந்தாலே போதும்..

    [[[உங்கள் நாட்டு அரசியலைப் பற்றி அயல்நாட்டுக்காரனான நான் விமர்சிக்க கூடாது. ஆக இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.]]]

    ஆஹா.. ரொம்ப சந்தோஷம்.. இப்படியே உங்க நாடு, எங்க நாடுன்னு எல்லாரும் பிரிச்சுக்கிட்டே போயிருங்க.. கடைசியா எல்லாருக்கும் ஒரு நாடுதான்.. அது சுடுகாடு..!

    ReplyDelete
  51. [[[கிள்ளிவளவன் said...
    i feel sorry for you. my kind request for you hereafter do not use the word "chozha" for those people. it realy hurt me as i am from that place.]]]

    கிள்ளி ஸார்..

    இப்படிச் சொல்லித்தான் இந்த வேந்தர்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் சொல்ல வேண்டி வந்தது..!

    நீங்கள் மட்டுமல்ல யாருக்கே இந்த வார்த்தைகள் தீயைத் தொட்டது போலத்தான் உள்ளது.

    ஆனால் அவர்களுக்கு உரைக்கவில்லையே.. என்ன செய்வது..?

    ReplyDelete
  52. [[[நித்யகுமாரன் said...
    நாசமாய் போகட்டும்...]]]

    வேண்டாம்.. உண்மையை உணரும்வகையில் முருகன் இவர்களைத் தண்டிக்கட்டும்.. அதுவே போதும்..!

    ReplyDelete
  53. [[[Ravi said...

    I applaud your guts! when almost no one spoke about this, you really had the guts to speak out.

    I am just astonished to see how low these guys can stoop to. My only hope is all these will come to an end eventually!

    But it is sad to see that this family is keeping the entire people in dark by feeding all sort of garbage in all forms of media they own.

    I really hope for the eternal intervention. thanks for bringing this up.

    Ravi]]]

    ரவி..

    இதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.. இதுவரையில் இந்த விஷயத்தை எந்த ஊடகமும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

    கொடுமை..

    அத்தனை பணக்காரர்களும் கூட்டுக் கொள்ளையடிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்..!

    ReplyDelete
  54. [[[பித்தன் said...
    ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி வாயில போட்டுட்டு, நாமளே போய் மின் மயானத்துல படுத்துக்க வேண்டியதுதான்...... இ.... வாயனுங்க... நாமதான்னு நெத்தியில அடிச்சு சொல்றாங்க...]]]

    பித்தன் ஸார்..

    அப்படி நாமளே போய் படுத்தாலும் நாமதாங்கிறதுக்கு ஐ.டி.கேப்பாங்க.. கொடுத்தாலும், போறதுதான் போற.. கொஞ்சம் கவனிச்சுட்டுப் போன்னு கூசாம கேப்பாங்க..

    இதுதான் தமிழ்நாடு..!

    ReplyDelete
  55. [[[ராஜகோபால் said...

    ரெம்ப நல்ல ஆள காணோமே.. சரி போன பதிவுல, கமலா தியேட்டர்ல ஏதோ பிரச்சினைன்னு சொனின்களே அதுக்காக நீதி கேட்டு போராட்டம் பண்ண போய்டிங்கனு நினைச்சேன்.]]]

    நான் ஒருத்தன் மட்டு்ம் போராடினா போதுமா..? கூட துணைக்கு யாராவது வர வேண்டாமா..?

    [[[ரெண்டு விஷயம் நீங்க சொல்லவே இல்லை.. இப்ப எந்த நெட் கனெக்சன் யூஸ் பண்றீங்க??]]]

    பி.எஸ்.என்.எல்.

    [[ரெண்டாவது அந்த கமலா தியேட்டர் மேட்டர் என்னனு சொல்லவே இல்லையே...ஏன்னா அடுத்தவனுக்கு ஒரு பிரச்சினைனா அத நாங்க சந்தோசமா கேட்போம். ஹி ஹி.. நாங்களும் (உண்மை) தமிழங்கோ]]]

    போடுவோம்ல..

    மனுஷங்களை கும்முறதுன்னா அத்தனை பேரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றீங்கப்பா..

    இதுதான் தமிழனின் உண்மையான குணம்..!

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  56. //ஆமா ஆனந்து.. எங்க நாட்டுல வயர்லெஸ் பிராட்பேண்ட் இன்னும் வரலைன்னு நினைக்கிறேன். ஆமா உங்க நாட்டுல வந்திருச்சா..?//

    ஆம் சில வருட காலமாக இருக்கிறது. mobile phoneக்கு பயன்படுத்தப் படும் signalதான் அதற்கும். 3G phone அல்லது கை கட்டைவிரல் அளவே இருக்கும் modem மூலமாக connection செய்து கொள்ளலாம். அதை எங்கு வேண்டுமானலும் உடன் எடுத்து செல்லலாம்.

    //ஆஹா.. ரொம்ப சந்தோஷம்.. இப்படியே உங்க நாடு, எங்க நாடுன்னு எல்லாரும் பிரிச்சுக்கிட்டே போயிருங்க.. கடைசியா எல்லாருக்கும் ஒரு நாடுதான்.. அது சுடுகாடு..!//

    உ.த. அண்ணன் அவர்களெ நீவிர் சினம் காக்க. நீங்கள் கட்டும் வரிதான் அரசுக்கு சம்பளம். உங்களுக்கு தட்டிக் கேட்கும் உரிமை இருக்கிறது. எனக்கு இல்லை. அதைத்தான் சொல்ல வந்தேன்.

    ReplyDelete
  57. எங்க ஏரியா தாம்பரத்திலும் இந்த கேபிள் வெட்டு இரு மாதங்களுக்கு முன் நடந்தது. பின்பு ஒரு மாதம் கழித்து hathway set top box ஐ எடுத்து விட்டு scv set top box ஐ வைத்து விட்டு போனார்கள்.

    ஒரு வருடத்திற்கு முன் மதுரை அண்ணனின் உதவியுடன் hathway எங்க எரியாவுக்கு வந்தது. இப்போது குடும்பம் சேர்ந்து கொண்டு hathway ஐ சென்னையிலிருந்தே விரட்டி விட்டனர்.

    இதை ஊடகம், எதிர்கட்சியினர் கூட கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். இது மாதிரியான கொடுமைகளுக்கு எப்போது விடுதலை?

    ReplyDelete
  58. இப்போது இரண்டு நாட்களாக, பல தமிழ் சேனல்களைக் காணவில்லை (scvல்), சில ஆங்கில சேனல்களும்தான்... இதுல என்ன உள்குத்து இருக்கோ தெரியல.

    ஒரு வாரம் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

    ReplyDelete
  59. ///ananth said...
    //ஆமா ஆனந்து.. எங்க நாட்டுல வயர்லெஸ் பிராட்பேண்ட் இன்னும் வரலைன்னு நினைக்கிறேன். ஆமா உங்க நாட்டுல வந்திருச்சா..?//

    ஆம் சில வருட காலமாக இருக்கிறது. mobile phoneக்கு பயன்படுத்தப் படும் signalதான் அதற்கும். 3G phone அல்லது கை கட்டைவிரல் அளவே இருக்கும் modem மூலமாக connection செய்து கொள்ளலாம். அதை எங்கு வேண்டுமானலும் உடன் எடுத்து செல்லலாம்.///

    ஓ.. அந்த வகையைத்தான் சொல்கிறீர்களா ஆனந்த்..

    அதுபோல இங்கும் இருக்கு ஆனந்த்.. ஆனால் அது கொள்ளை விலை.. அதிகமாக லேப்டாப்பில் பயன்படுத்திக் கொள்ளவும், வெளி ஊர்களுக்குச் செல்லும்போதும் பயன்படுத்துகிறார்கள்.

    மாதக் கட்டணம் 2000 ரூபாய்க்கு குறைவில்லை. என்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளுக்கு அது பயன்படாது..

    //ஆஹா.. ரொம்ப சந்தோஷம்.. இப்படியே உங்க நாடு, எங்க நாடுன்னு எல்லாரும் பிரிச்சுக்கிட்டே போயிருங்க.. கடைசியா எல்லாருக்கும் ஒரு நாடுதான்.. அது சுடுகாடு..!//

    உ.த. அண்ணன் அவர்களெ நீவிர் சினம் காக்க. நீங்கள் கட்டும் வரிதான் அரசுக்கு சம்பளம். உங்களுக்கு தட்டிக் கேட்கும் உரிமை இருக்கிறது. எனக்கு இல்லை. அதைத்தான் சொல்ல வந்தேன்.///

    தட்டிக் கேட்க ரெடிதான்.. ஆனால் தொடர்ந்து வரும் அரசியல் அராஜகம், அதிகார துஷ்பிரயோகத்தை யார் சந்திப்பது..? எந்த கோர்ட்டுக்கும் கட்டுப்படாதவர்கள் நமது அரசியல்வியாதிகள் ஆனந்த்..!

    ReplyDelete
  60. [[[Chandrasekaran said...

    எங்க ஏரியா தாம்பரத்திலும் இந்த கேபிள் வெட்டு இரு மாதங்களுக்கு முன் நடந்தது. பின்பு ஒரு மாதம் கழித்து hathway set top box ஐ எடுத்து விட்டு scv set top box ஐ வைத்து விட்டு போனார்கள்.

    ஒரு வருடத்திற்கு முன் மதுரை அண்ணனின் உதவியுடன் hathway எங்க எரியாவுக்கு வந்தது. இப்போது குடும்பம் சேர்ந்து கொண்டு hathwayஐ சென்னையிலிருந்தே விரட்டிவிட்டனர்.

    இதை ஊடகம், எதிர்கட்சியினர்கூட கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். இது மாதிரியான கொடுமைகளுக்கு எப்போது விடுதலை?]]]

    கண்ணுக்கெட்டிய தூரம்வரையிலும் தேடிப் பார்த்தேன். கிடைக்காது என்றே தெரிகிறது.

    இந்த கபோதிகளுக்கு ராணுவ ஆட்சியே பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  61. [[[எவனோ ஒருவன் said...
    இப்போது இரண்டு நாட்களாக, பல தமிழ் சேனல்களைக் காணவில்லை (scvல்), சில ஆங்கில சேனல்களும்தான்... இதுல என்ன உள்குத்து இருக்கோ தெரியல.
    ஒரு வாரம் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.]]]

    அவர்களுக்கு ஆதரவானவர்களை, பணம் கட்டுபவர்களை மட்டுமே அவர்கள் காட்டுவார்கள்.

    இன்னும் போகப் போகத் தெரியும் மீடியா பிரதர்ஸின் சக்தி என்னவென்று..?

    ReplyDelete
  62. I wish these people suffer sleepless nights for the rest of their lives for doing such unethical and shameful acts.

    ReplyDelete
  63. //இப்போது இரண்டு நாட்களாக, பல தமிழ் சேனல்களைக் காணவில்லை (scvல்), சில ஆங்கில சேனல்களும்தான்... இதுல என்ன உள்குத்து இருக்கோ தெரியல.
    ஒரு வாரம் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.]]]

    அவர்களுக்கு ஆதரவானவர்களை, பணம் கட்டுபவர்களை மட்டுமே அவர்கள் காட்டுவார்கள்.

    இன்னும் போகப் போகத் தெரியும் மீடியா பிரதர்ஸின் சக்தி என்னவென்று..?//

    இன்று மீண்டும் வந்துவிட்டது. zee tamilஐத்தான் ரொம்ப நாளாக காணவில்லை.

    ReplyDelete
  64. //குறைந்தபட்சம் ஒரு 300 தமிழர்களாவது அந்த நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற்று வந்தார்கள். இப்போது அவர்கள் வேலை கோவிந்தா.. //

    இவர்கள் எந்தக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று தயை கூர்ந்து தெரிவிக்க வேண்டும். அப்பத்தானே போராட்டம் நடத்த வசதியா இருக்கும்.

    இது போன்ற செய்திகளை கடந்த வருடமே படித்தேன். நண்பன் 'ஹாத்வே' என்று உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தான். இப்போது 'பி.எஸ்.என்.எல்.' என்கிறான்.

    ReplyDelete
  65. ///KK said...
    I wish these people suffer sleepless nights for the rest of their lives for doing such unethical and shameful acts.///

    உப்பைத் தின்னவன் கண்டிப்பா ஒரு நாள் தண்ணி குடிச்சே ஆகணும்..

    முருகன் தண்டிப்பான்..!

    ReplyDelete
  66. [[[எவனோ ஒருவன் said...
    இன்று மீண்டும் வந்துவிட்டது. zee tamilஐத்தான் ரொம்ப நாளாக காணவில்லை.]]]

    என் வீட்லேயும் காணோம்..! எங்க போய் சொல்றது..?!!!

    ReplyDelete
  67. [[[ஊர்சுற்றி said...

    //குறைந்தபட்சம் ஒரு 300 தமிழர்களாவது அந்த நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற்று வந்தார்கள். இப்போது அவர்கள் வேலை கோவிந்தா.. //

    இவர்கள் எந்தக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று தயை கூர்ந்து தெரிவிக்க வேண்டும். அப்பத்தானே போராட்டம் நடத்த வசதியா இருக்கும். இது போன்ற செய்திகளை கடந்த வருடமே படித்தேன். நண்பன் 'ஹாத்வே' என்று உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தான். இப்போது 'பி.எஸ்.என்.எல்.' என்கிறான்.]]]

    வேற வழியில்ல ஸார்..! கெடுவான் கேடு நினைப்பான்றது விரைவில் நிரூபணமாகும் பாருங்க..!

    ReplyDelete
  68. எங்களுக்கு இந்த பிரச்சனையே கிடையாதுங்க. எப்போதுமே ஒரே Network தான்.

    ஆமா சன் டைரக்ட் வாங்கிட்டீங்களா?

    ReplyDelete
  69. அற்புதமான பதிவு நண்பரே. ஒரு ஜனநாயக நாட்டில், முதலாளிகளே தொழில் செய்ய முடியாமல், அலறி ஓடுவதென்பது, ஒரு மோசமான நெருக்கடியை காட்டுகிறது.

    ReplyDelete