Pages

Thursday, April 30, 2009

கலைஞரின் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் உண்மையானதா....!?

30-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



எத்தனை எத்தனை அரசியல்வாதிகள் புதிது புதிதாக படையெடுத்து வந்தாலும், எத்தனை பேர் தங்களது வாய்ப்பேச்சுக்களையும், வீறாப்புக்களையும் காட்டி எகத்தாளமிட்டாலும் அரசியல் சதிராட்டத்தில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கலைஞர்.

ஏதோ தான் சொன்னால்தான்.. சொன்னவுடன்தான் மத்திய அரசு போர்க்குணத்துடன் செயல்படும்.. முடிவெடுக்கும்.. என்று அவர் தனக்குத்தானே வஞ்சப் புகழ்ச்சி பாடிக் கொள்வது அவரது வாழ்க்கையில் 11 கோடியே 11 லட்சத்து 1 ஆயிரத்து 111-வது முறை என்பது அவரது அரசியல் வாழ்க்கையை பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்போது ஒரு நாளில் 6 மணி நேர உண்ணாவிரதத்தினால் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று புளகாங்கிதமடைந்து வெற்றியோடு அவர் வீடு போய் சேர்ந்திருக்கிறார். அடுத்த 3 மணி நேரத்தில் மீண்டும் தாக்குதல் தொடுத்துள்ளது இலங்கை ராணுவம். அன்றைக்கு மட்டும் 272 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் எங்கே போர் நிறுத்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்தான் தமிழ் கற்றறிந்த தமிழராச்சே.. சொல்லட்டும்..!

ஐயாவின் வெற்றிச் செய்தியும், “யார் சொன்னது போர் நிறுத்தம் என்று..?” என்று ராஜபக்சே கொக்கரிக்கும் செய்தியும் ஒரே பத்திரிகையில் ஒரே பக்கத்தில்தான் வெளியாகியிருந்தது.. படித்தாரோ படிக்கவில்லையோ.. அல்லது “வனவாசத்தை” படிக்கவே இல்லை என்று உலகமகா புரூடா விட்டதுபோல் இதையும் படிக்கவில்லை என்று சொல்வாரோ தெரியவில்லை.

ஆனாலும் எனக்கு இதில் புரியாத இன்னொரு விஷயம்.. எதிர்க்கட்சிகளின் பல்வேறு வகையான போராட்டங்கள்.. பொதுமக்களின் எதிர்ப்புகள்.. மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக 14 வீரத் தமிழர்கள் தங்களது உயிரை தீக்கு இரையாக்கியிருக்கிற கொடுமைகள். இவை எல்லாமே நடந்தும் அசைந்து கொடுக்காத மத்திய அரசு, முதல்வருக்கு மட்டுமே இந்த அளவுக்காவது அசைந்து கொடுக்கிறது என்றால் போராடிய மக்களையும், போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளையும், தீக்குளித்த அப்பாவிகளையும் இந்த அரசுகள் என்னவென்று நினைக்கிறார்கள்.?

இறந்தவர்களெல்லாம் விலங்குகள் என்றா..? எதிர்க்கட்சியினர் அனைவரும் மனிதர்களே அல்ல.. வேற்று நாட்டவர் என்றா..? சென்ற தேர்தலில் ஓட்டுப் போட்டு இந்தியக் குடிமகன் என்ற பொறுப்பைச் செய்திருக்கும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களும்தான் இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தபடியே வந்திருக்கிறார்களே.. அவர்களெல்லாம் யாராம்..?

தி.மு.க.வும், அதன் தலைவரும் மட்டும்தான் மனிதர்கள்.. இந்தியர்கள்.. தமிழர்கள்.. மற்றவர்களையெல்லாம் கண்டு கொள்ளவே வேண்டாம் என்று மத்திய அரசு நினைப்பது இதிலிருந்தே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.. இதிலிருந்தே இவர்களது ஆட்சியின் லட்சணமும், மக்கள் பற்றிய அவர்களது மிருகத்தனமான நிலைப்பாடும் தெரிகிறது, புரிகிறது..

இதேபோல் அதே இடத்தில் நான் ஒரு இந்தியன்.. நான் ஒரு தமிழன் எனக்கும் உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு.. நான் இருப்பேன் என்று சொல்லி நான் மேடை போட்டு அமர்ந்தால் அரசு என்ன செய்யும்..? அனுமதிக்குமா..? ஆள்பவருக்கு ஒரு சட்டம்..! பொதுமக்களுக்கு ஒரு சட்டமா..? எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் 3 நாட்களுக்கு முன்பாகவே அனுமதி பெற்றாக வேண்டும் என்று சொல்லி போராட்டக் குணங்களையும், போராட்டக்காரர்களையும் நெருக்கி வரும் இந்த அதிகார வர்க்கம், இப்போது மட்டும் வாய் மூடிவிட்டது ஏனாம்..?

“நான் சொன்னால் மட்டும்தான் அங்கே சாவு நிக்கும்.. நான் சொன்னால் மட்டும்தான் படுகொலைகள் மட்டுப்படுத்தப்படும்.. நான் சொன்னால் மட்டும்தான் உதவித் தொகைகள் வழங்கப்படும் என்று எதற்கெடுத்தாலும் நான்.. தான்.. நான்தான்.. என்னால்தான்..” என்று மண்டைக் காய்ச்சலால் கலைஞரால் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்க்கின்றபோது இந்த மாதிரியான ஒரு தற்பெருமைக்காரரை உலகத்தில் எந்தவொரு மூலையிலும், எந்தவொரு இனத்திலும் பார்த்திருக்கவே முடியாது என்றே தோன்றுகிறது..

“ஈழத் தமிழர்களுக்காக பழ.நெடுமாறன் அனுப்பிய உதவித் தொகைகளை ஏற்க முடியாது.. அதை யாரிடம் கொண்டுபோய் கொடுப்பது..?” என்று எகத்தாளமாகச் சொன்ன கலைஞர், பின்பு தி.மு.க.வின் சார்பில் அனுப்பப்பட்ட உதவிகளை மட்டும் பக்குவமாக இலங்கை அரசிடம் கொண்டு போய்ச் சேர்த்தாரே.. இது மட்டும் எப்படியாம்..?

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் பசி, பட்டினியால் இறந்து போனவர்களுக்கு கலைஞர்தானே பொறுப்பாளி.. அந்த நேரத்தில் பட்டினியால் இறந்து போன தமிழர்களைச் சாகடித்த பெருமையும் இவரைத்தானே போய் சேர்கிறது.. ‘தமிழர்களை பட்டினி கொண்டான்' என்ற பட்டத்தையும் இனிமேல் இவர் தன்னுடன் பெருமையாகச் சேர்த்துக் கொள்ளலாம். 1111-வது பட்டமாக இருந்துவிட்டுப் போகட்டும்..!

தற்போது நடப்பவைகளைப் பாருங்கள்.. ஏதோ தன்னுடைய ஆட்சியில் மனித உரிமைகள் மிகவும் மதிக்கப்படுகின்றன என்றும், அம்மா ஆட்சியில் அது காணாமல் போயிருந்தது என்றும் எகத்தாளமிடும் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்..?

ஈழப் போராட்டத்திற்கான ஆதரவை யார் எந்த ரூபத்தில் நடத்தினாலும் ஆதரிப்பதை விட்டுவிட்டு அதை ஒடுக்கி, மத்திய அரசுக்கு ஒரு விசுவாசமான ஊழியனாக, இனத் துரோகியாகத் தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே 24 மணி நேரத்தையும் செலவழித்து வருகிறார் இந்தப் புண்ணியவான்.

ஈழத்தில் நடப்பது என்ன என்கின்ற முழக்கத்தோடு ஈழப் போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புகைப்படங்களோடு, உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு குழுக்களால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள பிரச்சார சிடிக்களை பறிமுதல் செய்து அதை வைத்திருந்தவர்களை, தயாரித்தவர்களை கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்கிறார். இவரா ஈழத்தமிழர்களுக்கு உதவுபவர்..?

கேட்டால் “தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெறவில்லை” என்கிறார். என்ன முட்டாள்தனம் இது..? ஈழப் போராட்டத்திற்கும், தேர்தலுக்கும் என்னங்கய்யா சம்பந்தம் இருக்கு..?

பாரதிராஜா நடத்திய போராட்டத்திலேயே இந்த சிடிக்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதை வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்து ஓடத் துவங்க.. மேடையில் பேசிக் கொண்டிருந்த தமிழருவி மணியன் தனது பேச்சை நிறுத்த வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது மைக்கிற்கு முன்னால் ஓடி வந்த பாரதிராஜா, “சிடியை நிகழ்ச்சி முடிந்த பின்பு கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்ட பின்பும், சிடிக்கள் ரகசியமாக வரிசைக்கிரமமாக பாஸ் செய்யப்பட்டது. அவ்வளவு ஆர்வத்துடன் இருந்தனர் ஈழத்து ஆர்வலர்கள்.

அந்த சிடிக்களில் அப்படியொன்றும் எந்தவிதமான ஆட்சேபணையான கருத்துக்களும், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களும் இல்லவே இல்லை. என்னிடம் கிடைத்த சிடியை போட்டுப் பார்த்ததில் அதில் முழுக்க முழுக்க ஈழப் போரில் பாதிக்கப்பட்டு, சிதைந்து போன தமிழ் மக்களின் புகைப்படங்களும், இந்தப் போருக்கு பின்புலமாக, பக்கபலமாக, ஆயுதங்களயும், பண உதவியையும், ஆள் உதவியையும் வழங்கி வருவது இந்திய அரசுதான் என்கிற தகவலும், புகைப்படங்களும் மட்டுமே இருக்கின்றன.

இதைத்தானே வீதி, வீதியாக ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது..? மேடை போட்டுச் சொல்லலாம்.. பேசலாம்... கத்தலாம். ஆனால் அதையே சிடிக்களாகத் தரக்கூடாது என்றால் இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. எதற்காக இந்தக் கைதுகள்..? சித்ரவதைகள்.. பறிமுதல்கள்.?

கலைஞர் உண்மையான உணர்வோடு இருந்திருந்தால் இந்த சிடிக்களை அவரே வெளியிட்டிருக்க வேண்டு்ம்.. அதுதான் முறையானது..

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது “அவர் கிட்டத்தட்ட செத்துவிட்டார்..” என்றும், “உயிரோடு வந்தாலும் இனிமேல் அவரால் பேச முடியாது.. எழுத முடியாது.. நடக்க முடியாது.. முடமாகிவிட்டார்.. இதோ பாருங்கள் ஆதாரங்கள்..” என்று முரசொலியில் புகைப்படங்களை வெளியிட்டு அதனை நோட்டீஸாகவும் அச்சடித்து வெளியிட்டார்களே.. இது எந்த வகையான ஜனநாயகமாம்..? இதற்கு ஐயா யாரிடம் அனுமதி வாங்கினாராம்..?

வி.பி.சிங் பிரதமர் ஆன தேர்தலின்போது தெருத்தெருவாக போபர்ஸ் ஊழல் வழக்குகள் பற்றி புத்தகங்களையும், நோட்டீஸ்களையும் வெளியிட்டார்களே.. அப்போது எந்த உரிமையில், எந்த சட்டத்தின்கீழ் இதை செய்தார் கலைஞர்.. அவருக்கு ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒரு நியாயமா..?

ஜெயலலிதாவின் கொடூரமான முதல் ஐந்தாண்டு கால ஆட்சிக்குப் பின் வந்த தேர்தலின்போது அம்மாவும், உடன்பிறவா சகோதரியும் நகை, நட்டுக்களுடன் போஸ் கொடுத்த காட்சியை தேடியெடுத்து ஊர், ஊராக நோட்டீஸ் அடித்து ஒட்டினார்களே தி.மு.க.காரர்கள்.. இதற்கு யாரிடமாவது அனுமதி வாங்கினாரா கலைஞர்..?

சென்ற தேர்தலின்போது தனது ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் என்று சொல்லி புத்தகங்களையும், சிடிக்களையும் தொகுதி, தொகுதியாக தி.மு.க.வினர் வெளியிட்டார்களே.. அப்போது எங்கே போனது இவரது சட்டம்..? அப்போது மட்டும் தேர்தல் கமிஷன் அனுமதி வாங்கிவிட்டுத்தான் அதனை செய்தாரா அவர்..?

மக்கள் பணத்திலேயே கூட்டுக் கொள்ளையடித்துவிட்டு அதனையே சாதனையாக்கி வெளியிடுதைவிட, ஈழத்தில் அல்லல்படும் அப்பாவி மக்களின் துயரங்களை பட்டியலிடுவதும், இதனை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு போவதும் பாவமான செயல் என்று கருதுகிறாரா இந்த உத்தமத் தலைவர்..?

ஜெயலலிதாவை தாக்கி பேசினார்கள் என்ற காரணத்திற்காக விடுதலைவிரும்பி மற்றும் வெற்றி கொண்டானை கைது செய்து சிறையில் வைத்தபோது, பொங்கியெழுந்து தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதமெழுதி அவர்களை போராட வைத்து.. அவர்களது மண்டைகளை உடைக்க வைத்து.. அவர்களது ரத்தங்களை சிதற வைத்து.. அவர்களை சிறையில் தள்ள வைத்து.. அவர்களது குடும்பத்தினரை பதற வைத்து.. கடைசியில் அவர்கள் இருவரும் வெளியில் வந்தவுடன் எல்லாம் என்னுடைய போராட்டத்தினால்தான் என்று மார்தட்டிக் கொண்டாரே.. அப்போது மட்டும் அரசுக்கு எதிரான எதிர்ப்பை போராட்டமாகக் காட்டினால் அது தவறாக படவில்லையா இவருக்கு..?

இவருடைய ஆதரவு ஆட்கள்தான் தமிழர்கள்.. மற்றவர்களெல்லாம் மயிருகளா..?

இப்போது என்ன செய்கிறார் இந்த தமிழர் தலைவர்..? முறையான அனுமதியோடு நாகரிகமான பேச்சுக்களோடு, ஆழமான, உண்மையான கருத்துக்கள் அடங்கிய நோட்டீஸ்களோடு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எதிர்ப்புக்களை தொகுதி மக்களிடத்தில் கொண்டு சென்ற தனி அமைப்புகளைச் சேர்ந்த தமிழர்களை.. பொறியியல் படிப்பு படித்த அந்த தமிழ் இளைஞர்களை.. கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறாரே.. இதுவா ஜனநாயகம்..?

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தலைமையில் இனி ஒரு கூட்டம் காங்கிரஸுக்கு எதிராக களமிறங்கப் போவதையறிந்து அவர்களை வரவிடாமல் செய்வதற்காகவும், பயமுறுத்துவதற்காகவும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கைதுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதுவான ஜனநாயகம்..?

ஜனநாயகம் என்ற பெயரில் இந்த தலைவர் நடத்துகின்ற சர்வாதிகாரம்தான் இது.. கேட்டால் நான்தான் உலகத் தமிழர்களின் ஒப்பு விருப்பற்ற ஒரே தலைவன் என்கிறார். நான் சொல்வதுதான் தமிழர்களின் வேதவாக்கு என்கிறார்.

என்ன நடிப்புய்யா நடிக்கிறாரு மனுஷர்..? கவிதை எழுதும்போது ஒரு நடிப்பு.. பேசும்போது ஒரு நடிப்பு.. உறங்கும்போது ஒரு நடிப்பு. இப்போது உண்ணாவிரத்திலும் ஒரு நடிப்பு என்று சகலத்திலும் கை வைத்து நடிகர்களுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் இந்த மகா நடிகர்.

இந்த செட்டப் உண்ணாவிரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு புன்னகையுடன் வீடு திரும்பியிருக்கிறார் கலைஞர்.

கிட்டத்தட்ட அத்தனை தமிழர்களையும் ஒரு சேர பிடித்து முகாம்களில் அடைத்தாகிவிட்டது, என்கிற திருப்தியில் இருக்கிறார் நவீன கால ஹிட்லர் ராஜபக்சே.

எப்படியோ தனது தாலிக்கயிறு பறி போனதுக்கு முக்கால்வாசி பழிக்குப் பழி வாங்கிவிட்டு கூடவே, எல்லாரையும் திருப்திப்படுத்தி பிரச்சினையை முடிச்சாச்சு என்ற அகோர திருப்தியில் இருக்கிறார் அன்னை சோனியா..


இவர்களுடைய வெட்கங்கெட்ட அரசியலுக்கு நடுவில் உற்றார், உறவினரை இழந்து, தாய், தகப்பனை இழந்து, குடும்பத்தினரை இழந்து, தாய் மண்ணை இழந்து தினந்தோறும் நூறு தமிழராவது செத்துக் கொண்டேயிருப்பார்கள்.. இதுதான் தமிழனின் சாபம்..!

போங்கடா நீங்களும் உங்க கேடுகெட்ட அரசியலும்..!

67 comments:

  1. //14 வீரத் தமிழர்கள் தங்களது உயிரை தீக்கு இரையாக்கியிருக்கிற கொடுமைகள். இவை எல்லாமே நடந்தும் அசைந்து கொடுக்காத மத்திய அரசு, முதல்வருக்கு மட்டுமே இந்த அளவுக்காவது அசைந்து கொடுக்கிறது என்றால் போராடிய மக்களையும், போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளையும், தீக்குளித்த அப்பாவிகளையும் இந்த அரசுகள் என்னவென்று நினைக்கிறார்கள்.?//
    அதென்றால் சரி.
    மக்களை இப்போது யார் கணக்கில் எடுக்கிறார்கள்.
    இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான். தேர்தல் முடிய ஆளாளுக்கு
    சொத்து சேர்க்க போய்விடுவார்கள்.

    நேதஜியுடன் எத்தனையோ மக்கள் சேர்ந்து போராடி, உயிரை கொடுத்து
    பெற்ற சுதந்திரத்தை
    தாம் உண்ணாவிரதம் இருந்து(அகிம்சை) பெற்றதாக மாற்றி, நேதாஜியை
    வரலாற்றில் இருந்தே தூக்கி எறிந்துவிட்டார்களே.
    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

    ReplyDelete
  2. Whatever you have written is absolutely true. As a common man can't we do anything about this? I'm eagerly awaiting for the election results. I would be happy if Vijaykanth or BJP wins 40 out of 40. That will prove Tamils are not the same old political stupids any more. But will it ever happen?

    ReplyDelete
  3. தேர்தல் ஸ்டண்ட் காட்சிகள் இவையெல்லாம்.

    அரசியல்வியாதிகளுக்கு இதெல்லாம் சகஜம்.

    இப்படிக் கேள்விமேலே கேள்வியை அடுக்குனா எப்படிப்பா?

    கேட்டால், எப்பவோ நடந்ததையெல்லாம் மக்கள் ஏன் ஞாபகம் வச்சுக்கணுமுன்னு சொல்வாரோ?

    ReplyDelete
  4. //ஆனாலும் எனக்கு இதில் புரியாத இன்னொரு விஷயம்.. எதிர்க்கட்சிகளின் பல்வேறு வகையான போராட்டங்கள்.. பொதுமக்களின் எதிர்ப்புகள்.. மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக 14 வீரத் தமிழர்கள் தங்களது உயிரை தீக்கு இரையாக்கியிருக்கிற கொடுமைகள்//

    நீங்க வேற ..
    இதை போல மூளை சலவை செய்யபட்டு உண்ர்ச்சி வேகத்தில் தீக்குளிப்பதை எல்லாம் வீரம் என்று எழுதி இருக்கீங்க..

    இதை எல்லாம் எந்த வீரத்தில் சேர்பது??
    குமுததில் சில வாரங்களுக்கு முன் முத்துகுமார் குடும்பத்தின் தற்போதைய நிலை தொடர்பாக எழுதி இருந்தார்கள்..

    காலம் மாறி கொண்டே வருகிறது.
    தமிழ்நாட்டில் படிப்பறிவு அதிகமாகி கொண்டே செல்லும் போது இதை போல ஆசாமிகளும் உருவாகி கொண்டு தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. //நேதஜியுடன் எத்தனையோ மக்கள் சேர்ந்து போராடி, உயிரை கொடுத்து
    பெற்ற சுதந்திரத்தை
    தாம் உண்ணாவிரதம் இருந்து(அகிம்சை) பெற்றதாக மாற்றி, நேதாஜியை
    வரலாற்றில் இருந்தே தூக்கி எறிந்துவிட்டார்களே.
    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.//

    என்ன புதுசா சொல்றீங்க...
    காந்தி தொடர்பாகவும் போராட்டங்கள் தொடர்பாகவும் எதுவும் தெரியாமல் அடிச்சு வுடுறீங்க..

    நேதாஜியை யாரும் குறைவாக மதிப்பிடவில்லை.
    நேதாஜி ஜெயித்து இருந்தால் என்ன இந்தியா ஹிட்லர் கட்டுபாட்டில் வந்து இருக்கும்,

    நேதாஜி ஜெயித்து இருந்தால் என்னதான் ஆயிரம் நொல்லை நொட்டை இந்தியாவில் இருந்தாலும் சுதந்திரம் பேச்சு உரிமை இப்போது இருக்கும் அளவிற்க்காவது இருந்து இருக்காது. நேதாஜியே முன்னர் சொன்னது..இந்திய சுதந்திரத்த்ற்க்கு பின்னர் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி தான் என்று,


    நேதாஜியும் சுதந்திரத்திற்க்காக போராடினார்.. அவரால் தான் சுதந்திரம் கிடைத்தது என்று நீங்கள் நினைத்து கொண்டால் அதற்க்கு யாரும் பொருப்பில்லை..

    ReplyDelete
  6. இக்கரைக்கு அக்கர பச்ச... எவர நம்புறதுக்கு இந்த காலத்தில. எல்லாம் நாடகம் ஆகி போச்சு... ஷேக்ஸ்பியர் சொன்னது மாதிரி.

    அதுவும் இதெல்லாம் கபட நாடகம்

    ReplyDelete
  7. //போங்கடா நீங்களும் உங்க கேடுகெட்ட அரசியலும்..!//

    உங்க பதிவிலேயே பிடித்த வரிகள் இது தான்!

    ReplyDelete
  8. //@Arun Kumar said...//
    நேதாஜியின் வாழ்க்கை வரலாறை படியுங்கள்
    பின்பு தெரியும் காங்கிரஸ், நேரு, காந்தி அவருக்கு செய்த துரோகங்கள்.

    //நேதாஜி ஜெயித்து இருந்தால் என்ன இந்தியா ஹிட்லர் கட்டுபாட்டில் வந்து இருக்கும்,//
    அட நேதாஜியை கிட்லருக்கு ஒப்பிடுகிறீர்களா?

    இருவரை பற்றியும் வாசித்ததால் தான் நான் நேதாஜியை நேசிக்கிறேன்.
    தன்னலமற்ற வீரன்.

    காந்தி நேதாஜிக்கு மட்டுமல்ல அம்பேத்கருக்கும் துரோகம் செய்தவர்.
    நான் காந்திக்கு எதிரானவர் அல்ல.
    அவரது அகிம்சையை மதிக்காதவர்கள் இல்லை.
    ஆனால் நேதாஜியை நினைக்கும் போது காந்தியில் மதிப்புவருவதில்லை.

    ஆனால் இந்த பதிவு நேதாஜி, காந்தி பற்றியதல்லவே.

    ReplyDelete
  9. வணக்கம் தல
    நிச்சயமாக இவ்வளவு காரமான பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்க வில்லை. ஆச்சிரியமாக இருந்தது.

    இன்றையை தமிழனுடைய மன எழுசியை இந்த பதிவில் காண்கிறேன்.

    வாழ்க உன் இன உணர்வு.

    ReplyDelete
  10. ஹலோ ...

    சுகந்திரம் வாங்கும் போது " நேதாஜி சுபாஷ் சந்திர பொஸ்ஸை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒப்படைப்போம் ( ஏன் என்றல் அவர் திவிரவாதி) என்று வாக்குறுதி கொடுத்து தான் சுதந்திரம் வாங்கினார் XXX. தன் நாட்டிற்காக (விடுதலைக்காக ) உழைதவனை கூட்டி கொடுத்து தான் வாங்க பட்டது நமது சுதந்திரம். இது யாருக்கும் வெளியே தெரியாது. அதனால் தான் நேதாஜி தலைமறைவாகவே வாழ்ந்து மடிந்தார். ஒரு உன்னத தலைவன் வாழ்கையை கேவல படுத்தி விட்டார்கள்.

    ReplyDelete
  11. முரன்பாடுகளின் மொத்த உருவம்தான் அரசியல்வாதிகள். இதில் யாவரும் விதிவிலக்கு அல்லர். நல்லவர்கள் அரசில்வாதிகளாக இருந்தது அண்ணா காமராஜர் காலத்தோடு முடிந்து விட்டது. நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை. மீறி வந்தால் நல்லவர்களாக இருப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை.

    ReplyDelete
  12. வால் பையனை வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  13. உண்மை சார் உங்களுக்கு நிறய தெரியுது. என்னுடைய அரசியல் குரு நீங்க தான் ;-)

    //நேதாஜி ஜெயித்து இருந்தால் என்ன இந்தியா ஹிட்லர் கட்டுபாட்டில் வந்து இருக்கும்,

    நேதாஜி ஜெயித்து இருந்தால் என்னதான் ஆயிரம் நொல்லை நொட்டை இந்தியாவில் இருந்தாலும் சுதந்திரம் பேச்சு உரிமை இப்போது இருக்கும் அளவிற்க்காவது இருந்து இருக்காது. நேதாஜியே முன்னர் சொன்னது..இந்திய சுதந்திரத்த்ற்க்கு பின்னர் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி தான் என்று///

    இது முழுக்க முழுக்க நேர்மையற்ற வாதம். இதற்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  14. Had Karunanidhi withdrawn support to the central government last year during diwali as he promised
    (one of his dramas)..central government would have gone..atleast the number of people being killed in the genocide war on tamils would have reduced..

    official UN estimates say atleast 6400 people were killed only in the last 3 months..


    Atleast this lady from Italy should
    see the people being killed in SL
    as human beings if not tamils...


    We have given Karunanidhi and his coalition 40 MP seats in last elections...he made us beg for the life of tamils to some lady from Italy..


    ‘தமிழர்களை பட்டினி கொண்டான்' --this is apt for Karunanidhi..
    Also..he is the one who back-stabbed
    tamils, betrayed people in TN..

    ReplyDelete
  15. 'தமிழ் ஈன தலைவர்' பட்டத்தையும் சேர்த்து கொடுங்கள்.

    ReplyDelete
  16. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஆனால் எல்லாம் முடிந்து போனவை .

    இலங்கை பிரச்சனையில் கருணா நிதி யோ ஜெய்லலிதாவாலையோ எதுவும் செய்ய முடியாது என்பது வெளிப்படையான உண்மை அவர்கள் பூசி மெழுகுகிறார்கள் .

    இதில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் .மத்திய அரசால் என்னவெல்லாம் செய்ய முடிவும் .


    வேண்டும் என்றே செயாமல் இருக்கிறார்களா ? ஏன்? ராஜீவ் மரணத்தை சொல்லாதேர்கள் .

    ReplyDelete
  17. ///எப்படியோ தனது தாலிக்கயிறு பறி போனதுக்கு முக்கால்வாசி பழிக்குப் பழி வாங்கிவிட்டு கூடவே, எல்லாரையும் திருப்திப்படுத்தி பிரச்சினையை முடிச்சாச்சு என்ற அகோர திருப்தியில் இருக்கிறார் அன்னை சோனியா.. ///


    இது உண்மை என்றால் ஏன் நளினியை சிறையில் சென்று பார்கவேண்டும் ?

    ReplyDelete
  18. தாலி கைறு பறிபோனது சரி என்று நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா ?

    ReplyDelete
  19. //14 வீரத் தமிழர்கள் தங்களது உயிரை தீக்கு இரையாக்கியிருக்கிற//

    தமிழகத்தில் மக்கள் ஈழப் பிரச்சினைக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது வருத்தம் தரும் நிகழ்வுதான். ஆனால் இன்றைய நிலையில், 14 முத்துக் குமார்களுக்குப் பதிலாக, பிரபாகரனுக்கு ஒரே ஒரு சே குவேராதான் தேவை.

    ReplyDelete
  20. did u ever thing why is the central goverment not interfering in this issue. its very simple , we are not united. unless you are not united we cannot do anyhting. DMK and ADMK both people behave as if both of diffrent country. can you say in one issue where these people have spoken on the same page.
    Till jayalaitha came to power, there were diffrences between DMK and ADMK there was no enemity. once she entered tamilnadu politics there is real vengance bbetween both the parties.

    we tamilians cannot acheive unless we are united and i dont see happening in next 10 to 15 yrs unless both the leaders are out of politics , there is no light at the end of the tunnel.

    sorry i dont know to type in tamil.

    ReplyDelete
  21. தமிழகத்தில் ஈழ விசயமாக நடக்கும் கூத்துகளை பாத்தா....... கோபம் தான் மிஞ்சுது

    ReplyDelete
  22. Malar, siraiyel pooi parthathu enna pesiyathu patti eaan vaai thirakkavillai. soniya? avar enna pesinar endru konjam kooda ariyatha neengal konjam kooda yosipapthillaya avarkal nallathuku poonal enn sollamal poka venum endu? ethayum aarainthu paarka vendum. She didnt visit officlly. atha vidungo. ethinai makkal anga saka ava karanam endu ungaluku thirium tahane.

    Gandi is a traitor, he desiced the hanging date for bagath singh. Simple example, take politics of these days. see maran bros. they did politics in the madurai office matter. now they hide eveyting and now all gone. so how congress had made up the story over 50 years.

    ReplyDelete
  23. Moolai salavai saiya tamilnaatil muthukumaruku yaarum illai. ungalin suyalathathukkaka irantahvarkalai kevalapadutha venduam. bagath singh kooda apapdiya?
    உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா
    keetru.com pooi parungal.

    ReplyDelete
  24. தமிழகத்தில் ஈழப் போரட்டத்தினை வைத்து நடக்கும் பிணவரசியலை சொல்கின்றது உங்களுடைய இந்தப் பதிவு..

    //ஐயாவின் வெற்றிச் செய்தியும், “யார் சொன்னது போர் நிறுத்தம் என்று..?” என்று ராஜபக்சே கொக்கரிக்கும் செய்தியும் ஒரே பத்திரிகையில் ஒரே பக்கத்தில்தான் வெளியாகியிருந்தது.. படித்தாரோ படிக்கவில்லையோ.. //

    இல்லை.. படித்துள்ளார்.. அதனால் தான் "மழை விட்டும் தூவானம் தொடர்வது" என கவிநயமாக, மழை விட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். அதைப் போலத்தான் இலங்கையில் இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும் என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்...

    //போராடிய மக்களையும், போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளையும், தீக்குளித்த அப்பாவிகளையும் இந்த அரசுகள் என்னவென்று நினைக்கிறார்கள்.?//

    இப்பொழுது தெரிகின்றதா ஏன் சிலர் இந்தப் புண்ணியவான்களிடம் வேறு மொழியில் பேசுகின்றார்கள் என?

    //‘தமிழர்களை பட்டினி கொண்டான்' //

    இதற்கும் பெருமையாக பதிவெழுத வருவார்கள் நமது சிங்கங்கள்.... :(

    //இவருடைய ஆதரவு ஆட்கள்தான் தமிழர்கள்.. மற்றவர்களெல்லாம் மயிருகளா..?//

    இருக்கலாம்.. இந்த ஈனத்தலைவனின் ஆட்சியில் தான் நாம் பேசவாவது முடிகிறதாம்... என்னே பெருமை??? வெட்கம் கெட்டவர்கள்...

    ReplyDelete
  25. ///லட்சியா said...

    //14 வீரத் தமிழர்கள் தங்களது உயிரை தீக்கு இரையாக்கியிருக்கிற கொடுமைகள். இவை எல்லாமே நடந்தும் அசைந்து கொடுக்காத மத்திய அரசு, முதல்வருக்கு மட்டுமே இந்த அளவுக்காவது அசைந்து கொடுக்கிறது என்றால் போராடிய மக்களையும், போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளையும், தீக்குளித்த அப்பாவிகளையும் இந்த அரசுகள் என்னவென்று நினைக்கிறார்கள்.?//

    அதென்றால் சரி. மக்களை இப்போது யார் கணக்கில் எடுக்கிறார்கள்.
    இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான். தேர்தல் முடிய ஆளாளுக்கு சொத்து சேர்க்க போய்விடுவார்கள். நேதஜியுடன் எத்தனையோ மக்கள் சேர்ந்து போராடி, உயிரை கொடுத்து
    பெற்ற சுதந்திரத்தை தாம் உண்ணாவிரதம் இருந்து(அகிம்சை) பெற்றதாக மாற்றி, நேதாஜியை
    வரலாற்றில் இருந்தே தூக்கி எறிந்துவிட்டார்களே. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.///

    லட்சியா..

    நேதாஜியை யாரும் தூக்கியெறியவில்லை..

    நேதாஜி மட்டும் இப்போது உயிருடன் இருந்தால் அவர்தான் எனக்குப் பதிலாக பிரதமராகியிருப்பார் என்று நேருவே சொல்லியிருக்கிறார்..

    அனைவருமே சேர்ந்துதான் போராடினார்கள்.. ஒரே லட்சியம்தான்.. ஆனால் வழிகள்தான் வேறு.. வேறு..

    ReplyDelete
  26. //Jack said...
    Whatever you have written is absolutely true. As a common man can't we do anything about this? I'm eagerly awaiting for the election results. I would be happy if Vijaykanth or BJP wins 40 out of 40. That will prove Tamils are not the same old political stupids any more. But will it ever happen?///

    நீங்கள் நினைப்பதுபோல் பா.ஜ.க.வோ, விஜய்காந்தோ ஜெயிக்கப் போவதில்லை..

    என்னதான் கரடியாய் கத்தினாலும் தமிழகத்து மக்களில் பாதிப் பேர் தி.மு.க. அ.தி.மு.க. இந்த இரண்டில் ஒன்றுக்குத்தான் மாறி மாறி போடுவார்கள்.

    தி.மு.க. அ.தி.மு.க.வைவிட சற்றுக் குறைவான தொகுதிகளைப் பெறலாம்..

    ReplyDelete
  27. ///துளசி கோபால் said...

    தேர்தல் ஸ்டண்ட் காட்சிகள் இவையெல்லாம்.

    அரசியல்வியாதிகளுக்கு இதெல்லாம் சகஜம்.

    இப்படிக் கேள்வி மேலே கேள்வியை அடுக்குனா எப்படிப்பா?

    கேட்டால், எப்பவோ நடந்ததையெல்லாம் மக்கள் ஏன் ஞாபகம் வச்சுக்கணுமுன்னு சொல்வாரோ?///

    சொல்வாரு டீச்சர்.. இப்ப அவர் என்ன சொன்னாலும் ஆமாம்ன்னு தலையாட்ட பொம்மைக் கூட்டங்கள் நிறைய இருக்கு.. இதுதான் கொடுமையே..!

    ReplyDelete
  28. ///Arun Kumar said...

    //ஆனாலும் எனக்கு இதில் புரியாத இன்னொரு விஷயம்.. எதிர்க்கட்சிகளின் பல்வேறு வகையான போராட்டங்கள்.. பொதுமக்களின் எதிர்ப்புகள்.. மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக 14 வீரத் தமிழர்கள் தங்களது உயிரை தீக்கு இரையாக்கியிருக்கிற கொடுமைகள்//

    நீங்க வேற .. இதை போல மூளை சலவை செய்யபட்டு உண்ர்ச்சி வேகத்தில் தீக்குளிப்பதை எல்லாம் வீரம் என்று எழுதி இருக்கீங்க..

    இதை எல்லாம் எந்த வீரத்தில் சேர்பது?? குமுததில் சில வாரங்களுக்கு முன் முத்துகுமார் குடும்பத்தின் தற்போதைய நிலை தொடர்பாக எழுதி இருந்தார்கள்..

    காலம் மாறி கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் படிப்பறிவு அதிகமாகி கொண்டே செல்லும் போது இதை போல ஆசாமிகளும் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள்.///

    தம்பி.. நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் சொன்னேன்..

    இதோ. இப்போது பல மாத காலம் திட்டமிட்டு தமிழ் இனத்தையே அழித்தொழித்துவிட்டுத்தான் மறுவேலை என்கிற ரீதியில் நமது மத்திய அரசும், இலங்கை அரசும் இறங்கியிருக்கின்ற வேகத்தைப் பார்க்கின்றபோது..

    முத்துக்குமாரின் மரணம் பற்றி நிகழாமல் போயிருந்தால் தமிழ்நாட்டில் இப்போதைய எழுச்சி ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்..

    அவனவளவில் அது சரிதான்.. அவனுடைய போராட்டத்தின் ஒரு வடிவம் அது..

    எனக்கு தைரியம் இல்லை. நான் கோழை.. அதனால் உட்கார்ந்து டைப்பிங் செய்து கொண்டிருக்கிறேன்..

    ReplyDelete
  29. ///Arun Kumar said...

    //நேதஜியுடன் எத்தனையோ மக்கள் சேர்ந்து போராடி, உயிரை கொடுத்து
    பெற்ற சுதந்திரத்தை தாம் உண்ணாவிரதம் இருந்து(அகிம்சை) பெற்றதாக மாற்றி, நேதாஜியை
    வரலாற்றில் இருந்தே தூக்கி எறிந்துவிட்டார்களே.
    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.//

    என்ன புதுசா சொல்றீங்க...
    காந்தி தொடர்பாகவும் போராட்டங்கள் தொடர்பாகவும் எதுவும் தெரியாமல் அடிச்சு வுடுறீங்க.. நேதாஜியை யாரும் குறைவாக மதிப்பிடவில்லை.
    நேதாஜி ஜெயித்து இருந்தால் என்ன இந்தியா ஹிட்லர் கட்டுபாட்டில் வந்து இருக்கும், நேதாஜி ஜெயித்து இருந்தால் என்னதான் ஆயிரம் நொல்லை நொட்டை இந்தியாவில் இருந்தாலும் சுதந்திரம் பேச்சு உரிமை இப்போது இருக்கும் அளவிற்க்காவது இருந்து இருக்காது. நேதாஜியே முன்னர் சொன்னது.. இந்திய சுதந்திரத்த்ற்க்கு பின்னர் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சிதான் என்று, நேதாஜியும் சுதந்திரத்திற்க்காக போராடினார்.. அவரால்தான் சுதந்திரம் கிடைத்தது என்று நீங்கள் நினைத்து கொண்டால் அதற்க்கு யாரும் பொருப்பில்லை..///

    இதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்..

    சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் போர்த் தீரமும் நமக்குக் கிடைத்த ஒரு வெற்றிதான்..

    ReplyDelete
  30. ///எட்வின் said...

    இக்கரைக்கு அக்கர பச்ச... எவர நம்புறதுக்கு இந்த காலத்தில. எல்லாம் நாடகம் ஆகி போச்சு... ஷேக்ஸ்பியர் சொன்னது மாதிரி. அதுவும் இதெல்லாம் கபட நாடகம்///

    நாடக நடிப்பில் நிஜமான நடிகர்களையே ஓரங்கட்டிவிட்டார்கள் இந்த அரசியல்வியாதிகள்..

    ReplyDelete
  31. ///வால்பையன் said...

    //போங்கடா நீங்களும் உங்க கேடுகெட்ட அரசியலும்..!//

    உங்க பதிவிலேயே பிடித்த வரிகள் இதுதான்!///

    அப்போ மத்ததெல்லாம்..!?

    ReplyDelete
  32. ///லட்சியா said...

    //@Arun Kumar said...//
    நேதாஜியின் வாழ்க்கை வரலாறை படியுங்கள்
    பின்பு தெரியும் காங்கிரஸ், நேரு, காந்தி அவருக்கு செய்த துரோகங்கள்.

    //நேதாஜி ஜெயித்து இருந்தால் என்ன இந்தியா ஹிட்லர் கட்டுபாட்டில் வந்து இருக்கும்,//
    அட நேதாஜியை கிட்லருக்கு ஒப்பிடுகிறீர்களா?

    இருவரை பற்றியும் வாசித்ததால்தான் நான் நேதாஜியை நேசிக்கிறேன்.
    தன்னலமற்ற வீரன். காந்தி நேதாஜிக்கு மட்டுமல்ல அம்பேத்கருக்கும் துரோகம் செய்தவர்.
    நான் காந்திக்கு எதிரானவர் அல்ல. அவரது அகிம்சையை மதிக்காதவர்கள் இல்லை. ஆனால் நேதாஜியை நினைக்கும் போது காந்தியில் மதிப்பு வருவதில்லை. ஆனால் இந்த பதிவு நேதாஜி, காந்தி பற்றியதல்லவே.///

    லட்சியா.. நமக்கு இருவருமே தலைவர்கள்தான்.. அவரவர் பாணியில் அவரவர் செயல்பட்டார்கள் அந்த இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள், செயல்கள் இருந்தன. அது அப்போதைய நிலவரம் என்று நினைத்துக் கொள்வோமே..!!

    ReplyDelete
  33. ///தமிழன் said...

    ஹலோ சுகந்திரம் வாங்கும் போது "நேதாஜி சுபாஷ் சந்திர பொஸ்ஸை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒப்படைப்போம் ( ஏன் என்றல் அவர் திவிரவாதி) என்று வாக்குறுதி கொடுத்து தான் சுதந்திரம் வாங்கினார் XXX. தன் நாட்டிற்காக (விடுதலைக்காக) உழைதவனை கூட்டி கொடுத்துதான் வாங்க பட்டது நமது சுதந்திரம். இது யாருக்கும் வெளியே தெரியாது. அதனால்தான் நேதாஜி தலைமறைவாகவே வாழ்ந்து மடிந்தார். ஒரு உன்னத தலைவன் வாழ்கையை கேவலபடுத்தி விட்டார்கள்.///

    தமிழன் ஸார்..

    நான் இதுவரைக்கும் கேள்விப்படாத விஷயம் இது..?

    உண்மையாக இருக்காது என்றே நம்புகிறேன்.. நினைக்கிறேன்..

    ReplyDelete
  34. ///ananth said...

    முரன்பாடுகளின் மொத்த உருவம்தான் அரசியல்வாதிகள். இதில் யாவரும் விதிவிலக்கு அல்லர். நல்லவர்கள் அரசில்வாதிகளாக இருந்தது அண்ணா காமராஜர் காலத்தோடு முடிந்து விட்டது. நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை. மீறி வந்தால் நல்லவர்களாக இருப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை.///

    இதுதான் எல்லாக் குழப்பத்துக்கும் காரணம்..

    நல்லவர்கள் வல்லவர்களாக மாற வேண்டும்.. இங்கே நமது தலையெழுத்து கெட்டவர்களெல்லாம் வல்லவர்களாக மாறிவருகிறார்கள்..

    ReplyDelete
  35. ///வண்ணத்துபூச்சியார் said...

    வால் பையனை வழி மொழிகிறேன்.///

    அப்படீன்னா.. அவருக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்..

    ReplyDelete
  36. ///தீப்பெட்டி said...

    உண்மை சார் உங்களுக்கு நிறய தெரியுது. என்னுடைய அரசியல் குரு நீங்கதான் ;-)//

    நல்லாத்தான இருந்தீங்க.. பின்ன ஏன் இப்படி..?

    //நேதாஜி ஜெயித்து இருந்தால் என்ன இந்தியா ஹிட்லர் கட்டுபாட்டில் வந்து இருக்கும்,
    நேதாஜி ஜெயித்து இருந்தால் என்னதான் ஆயிரம் நொல்லை நொட்டை இந்தியாவில் இருந்தாலும் சுதந்திரம் பேச்சு உரிமை இப்போது இருக்கும் அளவிற்க்காவது இருந்து இருக்காது. நேதாஜியே முன்னர் சொன்னது..இந்திய சுதந்திரத்த்ற்க்கு பின்னர் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி தான் என்று///

    இது முழுக்க முழுக்க நேர்மையற்ற வாதம். இதற்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.///

    ஆதாரம் தேட வேண்டும்.. கிடைத்தால் நானும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்..

    ReplyDelete
  37. ///Sen said...

    Had Karunanidhi withdrawn support to the central government last year during diwali as he promised
    (one of his dramas).. central government would have gone.. atleast the number of people being killed in the genocide war on tamils would have reduced..

    official UN estimates say atleast 6400 people were killed only in the last 3 months.. Atleast this lady from Italy should see the people being killed in SL as human beings if not tamils... We have given Karunanidhi and his coalition 40 MP seats in last elections... he made us beg for the life of tamils to some lady from Italy..
    ‘தமிழர்களை பட்டினி கொண்டான்' --this is apt for Karunanidhi..
    Also.. he is the one who back-stabbed tamils, betrayed people in TN..///

    நன்றி சென்.. தேர்தல் பற்றிய பயம்தான் அவரை இப்படி நாடகமாட வைக்கிறது..!

    ReplyDelete
  38. ///அஹோரி said...

    'தமிழ் ஈன தலைவர்' பட்டத்தையும் சேர்த்து கொடுங்கள்.///

    -))))))))))))))))))))

    ReplyDelete
  39. ///malar said...

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஆனால் எல்லாம் முடிந்து போனவை .

    இலங்கை பிரச்சனையில் கருணாநிதியோ ஜெய்லலிதாவாலையோ எதுவும் செய்ய முடியாது என்பது வெளிப்படையான உண்மை அவர்கள் பூசி மெழுகுகிறார்கள் .

    இதில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும். மத்திய அரசால் என்னவெல்லாம் செய்ய முடிவும் .
    வேண்டும் என்றே செயாமல் இருக்கிறார்களா? ஏன்? ராஜீவ் மரணத்தை சொல்லாதேர்கள் .///

    இதற்கு பதில் சொல்ல வேண்டுமெனில் தனிப் பதிவே போட வேண்டும் மலர்.. சற்றுப் பொறுத்திருங்கள்..

    ReplyDelete
  40. ///malar said...

    ///எப்படியோ தனது தாலிக்கயிறு பறி போனதுக்கு முக்கால்வாசி பழிக்குப் பழி வாங்கிவிட்டு கூடவே, எல்லாரையும் திருப்திப்படுத்தி பிரச்சினையை முடிச்சாச்சு என்ற அகோர திருப்தியில் இருக்கிறார் அன்னை சோனியா.. ///


    இது உண்மை என்றால் ஏன் நளினியை சிறையில் சென்று பார்கவேண்டும்?///

    இந்த இறுதிப் போரைத் துவக்குவதற்கு முதல் புள்ளி இங்குதான் போடப்பட்டுள்ளது.

    விடுதலைப்புலிகள்தான் கொலை செய்தார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் இந்தப் படுகொலைகளை செய்யத் துவங்கினார்கள்.

    இதுதான் உண்மை மலரு..

    ReplyDelete
  41. ///malar said...
    தாலி கைறு பறிபோனது சரி என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா ?///

    நிச்சயமாக ஒத்துக் கொள்ள மாட்டேன்..

    ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது..!

    ReplyDelete
  42. ///சூடு பட்ட பூனை said...

    //14 வீரத் தமிழர்கள் தங்களது உயிரை தீக்கு இரையாக்கியிருக்கிற//

    தமிழகத்தில் மக்கள் ஈழப் பிரச்சினைக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது வருத்தம் தரும் நிகழ்வுதான். ஆனால் இன்றைய நிலையில், 14 முத்துக்குமார்களுக்குப் பதிலாக, பிரபாகரனுக்கு ஒரே ஒரு சே குவேராதான் தேவை.///

    சே குவேரா இல்லாததினால்தான் முத்துக்குமார்கள் கிளம்பியிருக்கிறார்கள்..

    ReplyDelete
  43. ///mayavi said...

    did u ever thing why is the central goverment not interfering in this issue. its very simple , we are not united. unless you are not united we cannot do anyhting. DMK and ADMK both people behave as if both of diffrent country. can you say in one issue where these people have spoken on the same page.
    Till jayalaitha came to power, there were diffrences between DMK and ADMK there was no enemity. once she entered tamilnadu politics there is real vengance bbetween both the parties.

    we tamilians cannot acheive unless we are united and i dont see happening in next 10 to 15 yrs unless both the leaders are out of politics , there is no light at the end of the tunnel.

    sorry i dont know to type in tamil.///

    நன்றி மாயாவி ஸார்..

    நீங்கள் சொன்னது போலவே தமிழகத்து தலைவர்களிடையே இருக்கும் ஒற்றுமையின்மைதான் அனைத்துவிதக் குழப்பங்களுக்கும் காரணம்..

    ஒற்றுமை சட்டென ஏற்பட்டுவிடாது.. ஏனெனில் இது காசு சம்பாதிக்கிற வழி.. ஒருத்தர் வழிவிட்டால்தான் அடுத்தவர் வந்து சம்பாதிக்க முடியும்..

    அதனால் இந்த ஒற்றுமை பிரச்சினை முடியவே முடியாது.

    ReplyDelete
  44. ///அத்திரி said...
    தமிழகத்தில் ஈழ விசயமாக நடக்கும் கூத்துகளை பாத்தா....... கோபம்தான் மிஞ்சுது///

    கூட ஆத்திரமும் வந்திருக்குமே.. எனக்கு வந்துச்சு.. அதனாலதான் இந்தப் பதிவு..!

    ReplyDelete
  45. ///வெண்காட்டான் said...

    Malar, siraiyel pooi parthathu enna pesiyathu patti eaan vaai thirakkavillai. soniya? avar enna pesinar endru konjam kooda ariyatha neengal konjam kooda yosipapthillaya avarkal nallathuku poonal enn sollamal poka venum endu? ethayum aarainthu paarka vendum. She didnt visit officlly. atha vidungo. ethinai makkal anga saka ava karanam endu ungaluku thirium tahane.//

    வெண்காட்டான் ஸார்.. மலர் அரசியலில் அவ்வளவு பரிச்சயம் இல்லாதவர். அதனால்தான் தெரியாததை தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டுள்ளார்.

    //Gandi is a traitor, he desiced the hanging date for bagath singh. Simple example, take politics of these days. see maran bros. they did politics in the madurai office matter. now they hide eveyting and now all gone. so how congress had made up the story over 50 years.///

    இதேதான் மறதி.. மறதி.. மறதி.. மக்களுடைய மறதிதான் அரசியல்வியாதிகளின் பலம்.. அதனால்தான் மாறி மாறி நம் தலையில் மிளகா அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  46. ///வெண்காட்டான் said...
    Moolai salavai saiya tamilnaatil muthukumaruku yaarum illai. ungalin suyalathathukkaka irantahvarkalai kevalapadutha venduam. bagath singh kooda apapdiya? உதம்சிங் யார் என்று நமக்கு தெரியுமா
    keetru.com pooi parungal.///

    நான் படித்தேன் வெண்காட்டான்..

    ஆனால் இப்போதும் சொல்கிறேன்.. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை சரியான தீர்வாகாது.!

    ReplyDelete
  47. ///பதி said...

    தமிழகத்தில் ஈழப் போரட்டத்தினை வைத்து நடக்கும் பிணவரசியலை சொல்கின்றது உங்களுடைய இந்தப் பதிவு..

    //ஐயாவின் வெற்றிச் செய்தியும், “யார் சொன்னது போர் நிறுத்தம் என்று..?” என்று ராஜபக்சே கொக்கரிக்கும் செய்தியும் ஒரே பத்திரிகையில் ஒரே பக்கத்தில்தான் வெளியாகியிருந்தது.. படித்தாரோ படிக்கவில்லையோ.. //

    இல்லை.. படித்துள்ளார்.. அதனால் தான் "மழை விட்டும் தூவானம் தொடர்வது" என கவிநயமாக, மழை விட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். அதைப் போலத்தான் இலங்கையில் இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும் என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்...

    //போராடிய மக்களையும், போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளையும், தீக்குளித்த அப்பாவிகளையும் இந்த அரசுகள் என்னவென்று நினைக்கிறார்கள்.?//

    இப்பொழுது தெரிகின்றதா ஏன் சிலர் இந்தப் புண்ணியவான்களிடம் வேறு மொழியில் பேசுகின்றார்கள் என?

    //‘தமிழர்களை பட்டினி கொண்டான்'//

    இதற்கும் பெருமையாக பதிவெழுத வருவார்கள் நமது சிங்கங்கள்.... :(

    //இவருடைய ஆதரவு ஆட்கள்தான் தமிழர்கள்.. மற்றவர்களெல்லாம் மயிருகளா..?//

    இருக்கலாம்.. இந்த ஈனத் தலைவனின் ஆட்சியில்தான் நாம் பேசவாவது முடிகிறதாம்... என்னே பெருமை??? வெட்கம் கெட்டவர்கள்...///

    நன்றி பதி..

    ReplyDelete
  48. இந்த அரசியல்வாதிகளை பற்றி கதைப்பதால் எந்த நலமும் இல்லை.
    ***************

    காந்தி, நேரு, அகிம்சை எல்லாம் வாசிக்க, கேட்க நன்றாக தான் இருந்தது நேதாஜி பற்றி தெரிந்து கொள்ளும்வரை.

    மருதன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட நேதாஜி பற்றிய புத்தகம்
    (மர்மங்களின் பரம பிதா) நேதாஜி பற்றி அறியும் ஆவலில் வாங்கினேன்.
    அவரை தெரிந்து கொள்ள ஆரம்பித்ததும் நேதாஜியில் மரியாதை கூடியது.

    அதற்கு பின் நேதாஜி பற்றிய புத்தகங்களை தேடி தேடி வாங்கிவேன்.
    சிவலை இளமதி எழுதிய "நேதாஜியின் வீர வரலாறு"
    என்ற புத்தகத்தில் அவரை பற்றி நிறைய தகவல் கிடைக்கிறது.
    நேதாஜியின் மன உறுதி பிரமிக்க வைக்கிறது.

    நேதாஜி பற்றி நேரு என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ளவே அவர் எழுதிய discovery of india இன் தமிழாக்கம் "கண்டுணர்ந்த இந்தியா" வாங்கினேன்.
    ஆனால் அதில் அவரது போராட்டம் பற்றி எதுவுமே இல்லை.
    காங்கிரஸ் பிளவுக்கு நேதாஜி காரணம், அவர் இந்தியாவை விட்டு ரகசியமாக
    தப்பி சென்றார் போன்ற குற்றசாட்டுகள் மட்டுமே இருந்தது ஏமாற்றமாக இருந்தது.
    அதுவும் அந்த 500 பக்க புத்தகத்தில் நேதாஜி பற்றி ஓரிரு வசனம் மட்டுமே இருந்தது.

    நீங்கள் " மர்மங்களின் பரம பிதா" வாசித்துவிட்டு உங்களது கருத்தை
    கூறவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

    நேதாஜி எப்போதும் காந்தி, நேருவை மதித்தே வாழ்ந்திருக்கிறார்.
    ஏனோ தெரியவில்லை, அவரது மர்மமான மரணத்தில் கட்டாயம்
    நேரு போன்றோரின் பங்கு இருக்கும் என்று தான் தோன்றுகிறது..

    ReplyDelete
  49. தமிழன் குருதியில் வயிறு வளர்க்கும் இவர்களை, ஈழத்தில் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் சாபம் பொசுக்கும்.

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. malar, ungalin pathil nandru. neengal padikka niraya irukku. gandhi kaai pada eluthiya pages scan panni our sitell paarthen. athil avar bagath sighku date fix pannithau pattri virivaka irunthatu. ippadi niraya matter engaluku mukkyamaka thamila makkaluku theiryahtu. ennaku kooda chumma padikkum poothu thann therinthatu. neenda kaala aatchuku avarkal payanpadakoodiyahtaka niraya saithullarkal. anyway vithiyasamana books vasiyungo. keetu.com ncbh.orgla minnoolkal noolagam.com endu niraya free sites iruku.
    unmaithamilan
    kolaiku kolai sariyaakahtu. unmai. but kolaikara kootathuku sarivarthu. emmai ippadi kolvathai neengal ettrukolla villai endu nambukiran

    ReplyDelete
  52. malar, kilakku pathippakam kooda oru pakka saarpana ondu than. neenal konjam vithiyasamana pathipakangallil ulla books vasiyungo.
    thamillan, sorry unga blogla vera kathaipatharku. thanks.

    ReplyDelete
  53. ஈழத்தமிழர்களின் உயிரை வைத்து ஏன் அரசியல் பண்ணுகின்றார்கள். மக்கள் இதற்கு நல்ல நல்ல பதில் அழிக்கமாட்டார்களா? இலங்கை அரசு யுத்தநிறுத்தம் அறிவிக்கவில்லை. எப்படி கலைஞர் யுத்தநிறுத்தம் என்று சொல்லமுடியும்.. எப்படியெல்லாம் நடிக்கிறாங்க... 7 கோடி தமிழ் மக்களையும் என்ன நினைத்துக்கொண்டிகுக்கிறார் கலைஞர்? தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது புரியவில்லை?? மக்களுக்காக அரசியலா? இல்லை அரசியலுக்காக மக்களா??

    ReplyDelete
  54. உண்மைத்தமிழன் சார்,

    வாழக்கம் போல் நடுநிலைமையான பதிவு!!! ஆனால் ரொம்ப கேபமாய் இருக்கிறீர்கள்!!!

    சிவகங்கையில் ஐடி மக்களை கைது செய்துள்ளனர், சிடி கொடுத்தாங்கன்னு...

    தன் இறுதி நாட்களில் இப்படி ஒரு பொழைப்பை பொழைக்கணூமா அவரு...

    என் அலுவலகத்தில், ஈழப் பிரச்சனையில் துளியும் ஆர்வம் காட்டாதவர்கள் கூட உண்ணாவிரதம் என்ற உடன் கோபப்படுகிறார்கள்....

    உங்கள் கோபம் எனக்கு இருக்கிறது....

    ReplyDelete
  55. Whatever you have written is absolutely true.

    ReplyDelete
  56. ///வாசுகி said...

    நேதாஜி பற்றி நேரு என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ளவே அவர் எழுதிய discovery of india இன் தமிழாக்கம் "கண்டுணர்ந்த இந்தியா" வாங்கினேன்.
    ஆனால் அதில் அவரது போராட்டம் பற்றி எதுவுமே இல்லை. காங்கிரஸ் பிளவுக்கு நேதாஜி காரணம், அவர் இந்தியாவை விட்டு ரகசியமாக
    தப்பி சென்றார் போன்ற குற்றசாட்டுகள் மட்டுமே இருந்தது ஏமாற்றமாக இருந்தது. அதுவும் அந்த 500 பக்க புத்தகத்தில் நேதாஜி பற்றி ஓரிரு வசனம் மட்டுமே இருந்தது. நீங்கள் " மர்மங்களின் பரம பிதா" வாசித்துவிட்டு உங்களது கருத்தை கூறவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.///

    நிச்சயம் வாசிக்கிறேன் வாசுகி.. அறிமுகத்திற்கு நன்றிகள்..

    ///நேதாஜி எப்போதும் காந்தி, நேருவை மதித்தே வாழ்ந்திருக்கிறார்.
    ஏனோ தெரியவில்லை, அவரது மர்மமான மரணத்தில் கட்டாயம்
    நேரு போன்றோரின் பங்கு இருக்கும் என்றுதான் தோன்றுகிறது..///

    அபத்தமான வாதம் வாசுகி.. இது போன்ற நினைப்பேயே தயவு செய்து உங்களுடைய மனதில் இருந்து தூக்கியெறிந்துவிடுங்கள்..

    நேதாஜியின் கொள்கைளும், அதற்கான வழிமுறைகளும் காந்தி, நேரு போன்றோரிடமிருந்து அவரை அந்நியப்படுத்தியதே தவிர.. வேறு எதுவுமில்லை..

    ReplyDelete
  57. ///தஞ்சாவூரான் said...
    தமிழன் குருதியில் வயிறு வளர்க்கும் இவர்களை, ஈழத்தில் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் சாபம் பொசுக்கும்.///

    இது சாபமெனில் நிச்சயம் பலிக்க வேண்டும் என்றே வேண்டுகிறேன்..

    அப்போதுதான் அடுத்து வரக்கூடிய ஆள்பவர்கள் தவறு செய்ய கொஞ்சமாவது யோசிப்பார்கள்..

    ReplyDelete
  58. ///வெண்காட்டான் said...

    unmaithamilan

    kolaiku kolai sariyaakahtu. unmai. but kolaikara kootathuku sarivarthu. emmai ippadi kolvathai neengal ettrukolla villai endu nambukiran.///

    யார் கொன்றாலும் நான் ஏற்க மாட்டேன்..

    ReplyDelete
  59. ///வெண்காட்டான் said...

    malar, kilakku pathippakam kooda oru pakka saarpana ondu than. neenal konjam vithiyasamana pathipakangallil ulla books vasiyungo.

    thamillan, sorry unga blogla vera kathaipatharku. thanks.///

    நன்றி வெண்காட்டான் ஸார்..

    ReplyDelete
  60. ///தயா பாலா said...

    ஈழத் தமிழர்களின் உயிரை வைத்து ஏன் அரசியல் பண்ணுகின்றார்கள். மக்கள் இதற்கு நல்ல நல்ல பதில் அழிக்கமாட்டார்களா? இலங்கை அரசு யுத்த நிறுத்தம் அறிவிக்கவில்லை. எப்படி கலைஞர் யுத்த நிறுத்தம் என்று சொல்லமுடியும்.. எப்படியெல்லாம் நடிக்கிறாங்க... 7 கோடி தமிழ் மக்களையும் என்ன நினைத்துக்கொண்டிகுக்கிறார் கலைஞர்? தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது புரியவில்லை?? மக்களுக்காக அரசியலா? இல்லை அரசியலுக்காக மக்களா??///

    தமிழ்நாட்டில் நடப்பது பக்கா பிஸினஸ்.. அரசியல் பிஸினஸ்.. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா ஓட்டுப் போட்டவங்களுக்கு நாமம்தான் கூலியாக கிடைக்கப் போவுது..

    ReplyDelete
  61. ///Naresh Kumar said...

    உண்மைத்தமிழன் சார், வாழக்கம் போல் நடுநிலைமையான பதிவு!!! ஆனால் ரொம்ப கேபமாய் இருக்கிறீர்கள்!!!

    சிவகங்கையில் ஐடி மக்களை கைது செய்துள்ளனர், சிடி கொடுத்தாங்கன்னு...

    தன் இறுதி நாட்களில் இப்படி ஒரு பொழைப்பை பொழைக்கணூமா அவரு...

    என் அலுவலகத்தில், ஈழப் பிரச்சனையில் துளியும் ஆர்வம் காட்டாதவர்கள் கூட உண்ணாவிரதம் என்ற உடன் கோபப்படுகிறார்கள்....

    உங்கள் கோபம் எனக்கு இருக்கிறது....///

    புரிந்தால் மட்டும் போதாது. உங்களது கோபத்தை ஓட்டுச் சீட்டில் காட்டுங்கள்..

    அதுதான் தமிழ்நாட்டுக்கு, தமிழகத்து மக்களுக்கு நன்மை பயக்கும்..!

    ReplyDelete
  62. ///visa said...
    Whatever you have written is absolutely true.///

    நன்றி விஸா அவர்களே..

    ReplyDelete
  63. தராசு : முடிவுக்கு வருமா இலங்கைப் போர் ?
    - மீனா [feedback@tamiloviam.com]
    Printable version | URL |

    இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது - விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் சரணடைய இலங்கை அரசு கொடுத்த கெடுவும் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் முல்லைத்தீவிற்கு அருகேயுள்ள கடற்கரைப்பகுதியில் கிட்டத்தட்ட 2 லட்சம் தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். புலிகளின் மீது நடக்கும் எல்லாத்தாக்குதல்களிலும் புலிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள்தான். உலக நாடுகள் ஒருசேர வற்புறுத்தியதால் 2 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்த அரசு மீண்டும் போரைத் துவங்கியுள்ளது. பிரபாகரனைப் பிடிக்க வேண்டும் அல்லது அவர் செத்து மடியவேண்டும் - அதற்காகத்தான் நாங்கள் இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறோம் என்று ராணுவம் கூறுவதை ஏற்கவே இயலாது.

    ஒவ்வொரு நாளும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்களை வெளியேற்றி வரும் ராணுவம் வெளியேறும் மக்களிடம் நடந்துகொள்ளும் விதம் மிகவும் கொடூரமாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசு விதித்த காலக்கெடு புலிகளுக்குத்தான் - அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அல்ல. அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு புலிகள் மற்றும் அரசு இருவருக்குமே உள்ளது. ஆனால் அதை இருதரப்பினருமே கருத்தில் கொள்ளவில்லை என்பது வருத்தமான விஷயம். 25 வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகச் சொல்லிக்கொண்டு அரசு நடந்துகொள்ளும் விதமும் - பதிலடி தருவதாக கூறிக்கொண்டு புலிகள் நடந்துகொள்ளும் விதமும் அப்பாவி மக்களின் பேரழிவிற்குத்தான் வழி செய்துவருகிறது. வரலாறு காணாத மோசமான மனித உரிமை மீறல் இலங்கையில் நிலவுகிறது. போரை நிறுத்த வேண்டும், அப்பாவிகள் வெளியேற வழி வகை செய்ய வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தியும் இலங்கை அரசு கேட்பதாக இல்லை. மக்களுக்கான அடிப்படை உரிமைகள் ராணுவ முகாம்களில் முற்றிலுமாக மறுக்கப்படுவதை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன.

    இலங்கைப் பிரசனையில் இந்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக தெரிந்துவிட்ட நிலையில் உலகில் வல்லரசுகளாக உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக்காக இல்லாமல் உண்மையான கரிசனத்தோடு தலையிட்டு இப்பிரசனைக்கு முடிவுகட்ட சீக்கிரம் முன்வரவேண்டும். அப்பாவி பொதுமக்களை புலிகள் மற்றும் ராணுவத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும். 25 ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களுக்கு ஒரு முடிவு காணவேண்டிய நேரம் இது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்காண உயிர்கள் அங்கே பலியாகிறார்கள். உலக வல்லரசுகள் இலங்கையில் அழிந்துவரும் மனித குலத்தைக் காக்க முன்வருவார்களா ?

    இந்தியாவால் இலங்கை பிரச்சனையில் ஒரு புல்லை கூட புடுங்க முடியாது.எல்லா நாடுகளும் இலங்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் பிரச்சனை முடிவுக்கு வரும்.

    ReplyDelete
  64. உ.த. உங்களது கோபம் வெகு நியாயமானதே. மதிக்கிறேன். அனைத்து வரிகளுடனும் ஒத்துப் போகிறேன்.

    எவரேனும் உடன் பிறப்பு வந்து உங்களுக்கு இன்னும் அம்மா பாசம் விடலைன்னு கேவலமாய் பதில் அளிக்கலாம். ஆனால் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் யோக்கியதை இருக்காது அவர்களிடம்.

    சமீபத்தில் எனக்கு பழகிய இரண்டு கெட்ட வார்த்தைகள் : காங்கிரஸ்காரர்கள், உடன் பிறப்புகள்

    ReplyDelete
  65. //இந்தியாவால் இலங்கை பிரச்சனையில் ஒரு புல்லைகூட புடுங்க முடியாது.எல்லா நாடுகளும் இலங்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் பிரச்சனை முடிவுக்கு வரும்.//

    இல்லை மலர்..

    முடியாது என்றில்லை முடிக்கலாம்.. ஆனால் மனது வைக்க வேண்டும்..

    தம்மாத்தூண்டு நாடு நம்மையே மிரட்டுகிறது.. நமது மீனவர்களைக் கொல்கிறது என்றால் அது நமது ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையைத்தான் குறிக்கிறது..

    ReplyDelete
  66. //நந்தா said...
    உ.த. உங்களது கோபம் வெகு நியாயமானதே. மதிக்கிறேன். அனைத்து வரிகளுடனும் ஒத்துப் போகிறேன்.

    எவரேனும் உடன் பிறப்பு வந்து உங்களுக்கு இன்னும் அம்மா பாசம் விடலைன்னு கேவலமாய் பதில் அளிக்கலாம். ஆனால் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் யோக்கியதை இருக்காது அவர்களிடம்.

    சமீபத்தில் எனக்கு பழகிய இரண்டு கெட்ட வார்த்தைகள் : காங்கிரஸ்காரர்கள், உடன் பிறப்புகள்//

    நன்றி நந்தா..

    தமிழ்நாட்டில் இதுவும் ஒரு பிரச்சினை..

    ஐயாவைத் திட்டினால் அம்மா ஆதரவாளர் என்கிறார்கள். அம்மாவைத் திட்டினால் ஐயா ஆதரவாளர் என்கிறார்கள்.

    இப்படி ஒரு சார்பாகச் சிந்தித்து, சிந்தித்துதான் தமிழர்கள் பிரிவுகளாக பிரிந்திருக்கிறார்களோ என்று நினைக்கிறேன்..

    ReplyDelete