Pages

Tuesday, February 24, 2009

இந்தப் பதிவர்களை விடாதீர்கள்..!

24-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தினமும் சென்னைக்கு வந்திறங்கும் புதிய நகரவாசிகளின் எண்ணிக்கையில் பாதி அளவுக்காகவாவது புதிய, புதிய வாசகர்கள் தினந்தோறும் பதிவுலகத்திற்குள் பிரவேசித்தவாறே உள்ளார்கள்.

அப்படி உள் நுழைந்தவர்கள் பதிவுலகின் வாசனையும், கிறக்கமான சூழ்நிலையையும் கண்டு உற்சாகமாகி தாங்களும் ஒரு பதிவர்களாகி எழுத்து ஜமாவில் தங்களை ஐக்கியமாக்கிக் கொண்டே வருகிறார்கள்.

பதிவு எழுதியே நாசமாப் போனவர்கள் பட்டியலில் நான் முதன்மையானவனாக இருந்தும் புதிய புதிய பதிவர்களைப் பார்க்கின்றபோதும், அவர்களுடைய எழுத்துக்களை வாசிக்கின்றபோதும் பதிவுலகின் மாயவலை என்னைக் கைவிட மறுக்கிறது.. நானும் கள் குடித்த குரங்காய் இங்கேயே சுற்றிச் சுற்றி வர வேண்டியிருக்கிறது.

புதிய பதிவர்கள் என்றில்லாமல் நீண்ட நாட்களாக எழுதுபவர்களாக இருந்தாலும் பதிவுலகின் பதிவு அரசியல் தெரியாமல் உழன்று வருவதால், அவர்களுடைய பதிவுகள் பெரும்பாலான பதிவுலகத்தினரை சென்றடைவதில்லை. அப்படி நான் பார்த்த சிலரின் பதிவுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

1. பென்ஸ்

இந்த மனிதர் என்றைக்கு எனது தளத்தை படித்தார்..? எப்படி படித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து ஒரு பதிவு விடாமல் எனக்குப் பின்னூட்டம் போட்டு தாளித்துக் கொண்டிருக்கிறார். அதுலேயும் ஒரு பின்னூட்டமெல்லாம் போடவே மாட்டார். இரண்டு, நான்கு, ஆறு என மடங்குக் கணக்கில்தான் பின்னூட்டங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

இதில் ஆச்சரியம் இவர் ஒரு இலங்கை தமிழர். என்னையும் வாசிக்கும், என்னைப் பிடிக்கிறது என்று சொல்லும் இலங்கை தமிழர். இதைவிட ஆச்சரியம் இவருடைய வயது 71. அப்படியானால் நம்மிடையே இருக்கும் வயதான பதிவர்களில் இவரும் ஒருவர். ஆஸ்திரேலியாவில் குடியிருக்கிறார்.

கொண்ட கொள்கையில் சிங்கம். கொள்கையில் 'சிங்கமாக' இருப்பதால் தீவிரமான 'புலி' எதிர்ப்பாளராக விளங்குகிறார். ஈழத் தமிழில் பேசியும், எழுதியும் பெயரிலி போன்றவர்கள் பல தமிழ் மொழிகளை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும்வேளையில் இவரும் ஒரு மொழியினைக் கற்றுக் கொடுக்கிறார். அதுவும் தமிழ்தானாம்.. படித்துப் பாருங்கள்.. மொழியால் தலை சுற்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல.. இவருடைய முகவரி இது http://kavanitha.blogspot.com.

2. கலையரசன்

http://kalaiy.blogspot.com

உலக நாடுகளின் தற்போதைய நிலவரம், கலவரம் மற்றும் பிரச்சினைகள் பற்றி துல்லியமாக துப்பறிந்து எழுதுகிறார் பதிவர் கலையரசன். நானும் இவரது தளத்தை மேய்ந்துதான் உலக நாடுகள் பற்றிய எனது பொது அறிவை வளர்த்து வருகிறேன்.. தயவு செய்து மறந்தும் புறக்கணிக்க முடியாத வீடு இவருடையது.. விட்டுவிடாதீர்கள். வாழ்த்துக்கள் கலையரசன்.

3. திருமதி.பிரியா கதிரவன்

SYNAPSE என்பதை தளத்தின் தலைப்பாக வைத்திருக்கும் திருமதி பிரியா மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். திரட்டிகளில் இணைந்துள்ளாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இட்லிவடை மூலமாக லின்க் கிடைத்து சென்று படித்தேன். அற்புதமாக உள்ளது. அவருடைய இந்த ஒரு பதிவே அவர் யாரென்று காட்டுகிறது.. நானெல்லாம் பிச்சை எடுக்கணும் போல இருக்கு.. வாழ்த்துக்கள் பிரியா.

4. மாடசாமி

ஏற்கெனவே வலையுலகில் இருக்கின்ற பின்னவீனத்துவ சாமிகளையே சமாளிக்க முடியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்கும்போது, இன்னொரு பின்னவீனத்துவம் அவதாரமெடுத்து வந்திருக்கிறது. பெயர் மாடசாமி. அற்புதமான கணினி கலைஞர். போர்க்குணமிக்கவர். பா.ராகவனின் நான் கடவுள் விமர்சனத்தைப் படித்துவிட்டு கொதித்துப் போய் ஒரு தாக்குத் தாக்கிவிட்டு வந்திருக்கிறார். அதுதான் அவரது முதல் பின்னூட்டம். அதுவே அப்படியென்றால், இப்போது வலையில் உட்புகுந்து பின்னி பெடலெடுக்கப் போவதாகச் சொல்லி பயமுறுத்துகிறார்.

ஏற்கெனவே பல மாதங்களுக்கு முன்னால் ஒரு பதிவை
ஆரம்பித்துவிட்டு, “போடப் போறேன்.. போடப் போறேன்”னு பயமுறுத்துக்கிட்டிருந்தாரு. அதுல இருக்குற படத்தையெல்லாம் பார்த்துட்டு எனக்கு காய்ச்சலே வந்திருச்சு. “சாமி.. இது மாதிரி படமெல்லாம் போட்டீன்னா, எங்க வலையுலக பிள்ளைக கெட்டுப் போயிரும்.. ஏற்கெனவே நாலைஞ்சு பேரு ‘அந்தக் கதை’, ‘இந்தக் கதை’ன்னு சொல்லி பச்சைப் புள்ளைக மனசைக் கெடுத்துப்புட்டாங்க.. நீயும் சேர்ந்து ஆடிராத சாமி"ன்னு கெஞ்சிக் கூத்தாடி அந்தப் போட்டோவை எடுக்கச் சொன்னேன்.

நம்மளோட நல்ல நேரம்.. மாடசாமிக்கு அந்தப் பதிவோட பாஸ்வேர்டு மறந்து போச்சாம். வசதியாப் போச்சு.. “வேற புது தளம் ஒண்ணை ஆரம்பி.. ஆனா, வேற போட்டோவை போடு..”ன்னு பக்கத்துலேயே உக்காந்து ஸார் என்ன போட்டோவை எடுக்குறாருன்னு செக் பண்ணி போட வைச்சு, அவரோட புதிய இந்தப் பதிவை நானே துவக்கி வைச்சிருக்கேன். அது இதுதான்.. http://www.sowkkiyama.blogspot.com.

படிச்சுப் பாருங்க.. பிடிச்சிரும்.. பிடிக்கும்.. ஒரு பின்னூட்டத்தைத் தட்டி விடுங்க.. அப்புறம்தான் தொடர்ந்து எழுதுவாராம்.. இவர் எழுதறதும், எழுதாததும் உங்க கைலதான் இருக்கு.. சொல்லிட்டேன்..


5. மது கிருஷ்ணா

சீனால இருக்காங்களாம்.. IMEANDMYSELF அப்படீன்னு தளத்துக்கு பேரு வைச்சிருக்காங்க.. என்னன்னுதான் புரியல.. ஆனா எழுத்து நல்லாயிருக்கு.. ஏன் இன்னும் திரட்டில சேரலைன்னு தெரியலை.. படிக்க விரும்புறவங்க அங்கன போயி படிச்சிட்டு அப்படியே இவுகளை தொடர்றவங்களைப் பாருங்க.. அது ஒரு உலகம் தனியா இருக்குது போல.. திரட்டிகள்ல சேராம எழுதுறவங்க.. ஆனா நல்லாயிருக்குதேய்யா.. என்ன செய்யறது.. தேடிப் பிடிச்சுத்தான் படிக்கணும் போலிருக்கு.. இவுக முகவரி இது http://mathukrishna.blogspot.com.

6. கோபி

ரஜினியின் அதி தீவிர ரசிகராம். இப்போதுதான் எழுதத் துவங்கியிருக்கிறார். ஆனால் எழுத்து முழுவதுமே ஏதோ மூன்றாம் உலகத்தில் இருப்பவைகள் பற்றியும், அதுகளைப் பற்றியுமே என்று வித்தியாசமாக இருக்கிறது. சென்று படித்துக் கொள்ளுங்கள். இவருடைய முகவரி இது http://jokkiri.blogspot.com.

இந்தப் பட்டியல் மென்மேலும் தொடரும்.

நன்றி..

வணக்கம்..

36 comments:

  1. தமிழ்ஷ்-ல லிங்க் இல்லாம இருந்துச்சிங்க. நானே போட்டுட்டேனுங்க. அந்த டைம்-ல நீங்க இன்னும் ஒரு 10-15 பாராவை தட்டிவுடலாம் பாருங்க. அதான்.!!! :-)

    ReplyDelete
  2. இந்த பென்ஸ் சார் இருக்கிறாரே, அவர் இலங்கையில் பெரிய உத்தியோகத்தில் இருந்து ரிடயர் ஆகி உள்ளார். தமிழ், இங்கிலீஷ் சிங்களம் இந்த மூன்று மொழிகளையும் கரைத்து குடித்தவர். கூடுதலாக இங்கலிஷ் இல் அரசியல் பேசுபவர் எப்படித் தான் தமிழில் எழுதுகிறார் என்று நான் ஆச்சர்யப்படுவது உண்டு. எப்பவுமே தன்னை சிறுமைபடுத்தியே காட்டுவார், ஆனால் உலக அறிவு இவரைக் கேட்டுத் தான் - பொல்லாத பிடிவாதக் காரன்.

    இவர் புலி எதிர்ப்புவாதி அல்ல, அதேநேரம் இலங்கை அரசு சார்பும் அல்ல, பெருமைகளை தனக்குள் வைத்துக் கொண்டு, திருத்தப்பட வேன்டியவற்றை வெளியில் பேசுவார்.

    இவைகள் அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த உண்மைகள்.

    ReplyDelete
  3. //ஹாலிவுட் பாலா said...
    தமிழ்ஷ்-ல லிங்க் இல்லாம இருந்துச்சிங்க. நானே போட்டுட்டேனுங்க.//

    ஆஹா.. பாலா ஸார்.. உங்க பேருதவிக்கு என்ன நன்றிக் கடன் செய்றதுன்னு தெரியலையே..

    //அந்த டைம்-ல நீங்க இன்னும் ஒரு 10-15 பாராவை தட்டிவுடலாம் பாருங்க. அதான்.!!!:-)//

    உண்மைதாண்ணேன்.. அந்த நேரத்துல ரெண்டு பதிவோடேயும் மல்லுக் கட்டிக்கிட்டிருந்தேன். நீங்க வந்து ஒரு சுமையை இறக்கி வைச்சுட்டீங்க.. வாழ்க பாலாண்ணே..

    ReplyDelete
  4. //லேகா பக்க்ஷே said...
    இந்த பென்ஸ் சார் இருக்கிறாரே, அவர் இலங்கையில் பெரிய உத்தியோகத்தில் இருந்து ரிடயர் ஆகி உள்ளார். தமிழ், இங்கிலீஷ் சிங்களம் இந்த மூன்று மொழிகளையும் கரைத்து குடித்தவர். கூடுதலாக இங்கலிஷ் இல் அரசியல் பேசுபவர் எப்படித் தான் தமிழில் எழுதுகிறார் என்று நான் ஆச்சர்யப்படுவது உண்டு. எப்பவுமே தன்னை சிறுமைபடுத்தியே காட்டுவார், ஆனால் உலக அறிவு இவரைக் கேட்டுத்தான் - பொல்லாத பிடிவாதக்காரன்.
    இவர் புலி எதிர்ப்புவாதி அல்ல, அதே நேரம் இலங்கை அரசு சார்பும் அல்ல, பெருமைகளை தனக்குள் வைத்துக் கொண்டு, திருத்தப்பட வேன்டியவற்றை வெளியில் பேசுவார்.
    இவைகள் அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த உண்மைகள்.//

    எனக்கும் மிக, மிக ஆச்சரியத்தைத் தருகிறது இவரது எழுத்துக்கள்..

    அவருடைய தளத்தில் பாருங்கள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான செய்திகள்.. அனைத்தையும் சேகரித்து எதைக் கொடுக்க வேண்டுமோ அதனை மட்டுமே கொடுக்க முன் வருகிறார்.

    நிச்சயம் பொது அறிவுக் களஞ்சியம்தான் பென்ஸ் ஸார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை..

    இந்த வயதிலும் இவ்வளவு ஸ்போர்ட்டிவ்வாக பணியாற்றுகிறார் என்றால் நிச்சயம் அது பாராட்டுக்குரியது..

    அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைத் தந்தமைக்கு நன்றி லேகா..

    ReplyDelete
  5. //உலக நாடுகளின் தற்போதைய நிலவரம், கலவரம் மற்றும் பிரச்சினைகள் பற்றி துல்லியமாக துப்பறிந்து எழுதுகிறார் பதிவர் கலையரசன்.//
    அரசியல் அறிவை வள‌ர்த்துக்கொள்ள நல்ல தளம்.
    அவர் எழுதும் பல விடயங்கள் எனக்கு தெரியாததாகவே இருக்கிறது.(எனக்கு அரசியல் அறிவு குறைவு தான்)
    இவ்வளவு விசயம் தெரிந்து வைத்துள்ளார் என ஆச்சரியமாக இருக்கும்.

    ReplyDelete
  6. //நானும் கள் குடித்த குரங்காய் இங்கேயே சுற்றிச் சுற்றி வர வேண்டியிருக்கிறது.//

    மோர் குடிங்கன்னே போதை தெளிஞ்சுடும்!

    ReplyDelete
  7. அது சரி எங்க தல லிங்கு எங்கே ???

    ReplyDelete
  8. என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
    //


    ஆமா இவரு பெரிய பாரதிராஜா :)

    ReplyDelete
  9. ///வாசுகி said...
    //உலக நாடுகளின் தற்போதைய நிலவரம், கலவரம் மற்றும் பிரச்சினைகள் பற்றி துல்லியமாக துப்பறிந்து எழுதுகிறார் பதிவர் கலையரசன்.//
    அரசியல் அறிவை வள‌ர்த்துக் கொள்ள நல்ல தளம். அவர் எழுதும் பல விடயங்கள் எனக்கு தெரியாததாகவே இருக்கிறது.(எனக்கு அரசியல் அறிவு குறைவுதான்) இவ்வளவு விசயம் தெரிந்து வைத்துள்ளார் என ஆச்சரியமாக இருக்கும்.//

    உண்மைதான் வாசுகி.. நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் ஒன்று அவருடையது..

    வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  10. ///குசும்பன் said...
    //நானும் கள் குடித்த குரங்காய் இங்கேயே சுற்றிச் சுற்றி வர வேண்டியிருக்கிறது.//
    மோர் குடிங்கன்னே போதை தெளிஞ்சுடும்!///

    கள்ளுக்கு மோர்தான் எபெக்ட்டா..? எனக்கு அனுபவம் இல்ல சாமி.. சும்மா ஒரு பேச்சுக்கு உதார் விட்டேன்.. அதுக்கு விழுந்தடிச்சு ஓடி வர்றியே முருகா..

    ReplyDelete
  11. //க்ராக்ஜாக் said...
    அது சரி எங்க தல லிங்கு எங்கே???//

    அது யாரு உங்க தல..?

    ReplyDelete
  12. ///இம்சையரசன் said...
    என் இனிய வலைத்தமிழ் மக்களே..!//
    ஆமா இவரு பெரிய பாரதிராஜா:)///

    இல்லையே..

    நான் ஒண்ணும் அப்படி சொல்லலையே இம்சையரண்ணேன்..

    ReplyDelete
  13. ''இந்தப் பதிவர்களை விடாதீர்கள்'' பதிவில்
    [[[மொழியால் தலை சுற்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல..]]]

    இதுதானே வேணாங்கிறது - - -

    அறிமுகபடுத்தியது நீங்கள் - - -

    தலை சுற்றும் பதிவுகளை கொடுத்த பின்னர் பொறுப்பை மறுத்தால் வாசகர் என்ன பண்ணுவார் சார் ?

    இரண்டு முறைகளை அணுகி இருக்கலாம் என்று படுகிறது - - -

    ஒன்னாவது தலை சுற்றுக்கு மருந்து பரிந்துரைத்திருக்கலாம் - - -

    ரெண்னாவது தலை சுற்றும் தன்மையை தவிர்க்க எனக்கு
    நேரடியாக அறிவுரை தந்திருக்கலாம் - - -

    இருந்தும் Compliment ஆக தான் மனதில பசுமையாக பதியுது - - -

    நன்றி உதா

    ReplyDelete
  14. லேகா பக்ஷ உங்களுக்கு றக்கா ரோடு தெரிந்துள்ளதால் உங்களுக்கு யாழ் நகர் பிறந்த அல்லது புகுந்து பழகிய சூழலாக இருக்கும் போல தெரியுது - - - உங்களது
    பண்பான அணுகுமுறை என்னை தலை குனிய வைக்கின்றது - - - காரணம் - - -

    எனது இடுகைகள் ஒரு நல்ல பண்பான மனதை குத்திவிட்டதே என்று தான் - - -
    இருந்தும் மனதில் இருந்ததை உண்மைக்கு சாட்சியாகியது ''சரி'' என்றே தோன்றுகின்றது.

    அது நிற்க - - - உங்களது பதிவில் சில பிழைகள் இருக்குதையா - - -

    [[[ பெரிய உத்தியோகத்தில் இருந்து ரிடயர் ]]] பெரிதாக வர அரசியல் விடல்லையே - - - எனது இடது சாரி அரசியல் அல்ல - - - எனது அமைச்சரது அரசியல் !

    [[[ எப்படித் தான் தமிழில் எழுதுகிறார் ]]] வண பிதா பெஸ்கி (இத்தாலி --- வசன நடை
    எமக்கு தந்தவர்) மற்றும் ராஜாஜி ஆகியோரும் தமிழ் படித்தனர் தானே ? --- நான் அவர்களது மேற்படியில் இல்லை ஆனால் அவர்களை தானே உங்களுக்கு தெரியும் என்றதால் அவர்களை சுட்டினேன் [ இது தலை சுத்தும் தமிழா தலைவா ?]

    [[[ பொல்லாத பிடிவாதக் காரன் ]]]

    என்னாங்கண்ணா இப்பிடி --- சத்து Margin விட்டு கொடேண்டா என்பார்கள் பெரியோர் --- நான் மார்ஜின் இல்லை பக்கம் பாகமாக விட்டுக்கொடுப்பதே என்னுடைய பலவீனம் என்பார்களே !
    இதை எப்பிடி கண்டு பிடித்தீர்கள் ? யாழ் நகரில் என்னை தெரியுமா ?

    ReplyDelete
  15. Leka Pakshe
    [[[ இவர் புலி எதிர்ப்புவாதி அல்ல, அதேநேரம் இலங்கை அரசு சார்பும் அல்ல,]]]

    ஆகா கணக்கு அண்ணாக்கு அத்துப்படி --- புலி தொடங்க முன்னர் --- அரச எதிர்ப்பு ஆயுதத்தில் தொடங்க வியுகம் அமைக்கும் குமந்திரம் நான் கல்விபயின்ற கல்லூரியில் நடந்தேறியது --- எடுபிடி வேலைகளில் என் பங்குண்டு ---

    தமிழ் ஆராச்சியில் இரு கதோலிக்க மத குருவர் --- ஒருவருடன் பாடம் கற்றேன் --- மற்றவருடன் வழமை போல எடுபிடி வேலைதான் --- எடுபிடி என்றாலும் நெருக்கம் கூடியதாயிற்றே --- அதுதானையா படித்தோருக்கு நடந்ததை மன்னிக்க முடியாதுள்ளது.

    ReplyDelete
  16. லேகா பக்ஷே
    [[[ இவைகள் அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த உண்மைகள் ]]]

    உங்களது புகழாரம் எனது தலையை சுற்ற வைக்கிறது --- உங்களுடன் ஈமெயில் பரிமாற ஆவலாக உள்ளது --- முதலில் ஒன்று --- நான் (இந்த சொல்லை தவிர்ப்பது பெரும் தொல்லை ) சாதி பார்ப்பது பாவம் என்பவன் --- அதற்காக எனது மகளை கட்டி கொடுப்பவனும் அல்ல --- பிறப்பில் கிறிஸ்தவன் ஆனால் கோயில் போகாதவன் ---
    முருகன் அவரது அண்ணன்னான பிள்ளையார் என் தெய்வம் --- அறிவுக்கடவுள் அல்லவா ? --- மற்றபடி நிறைய வாசிக்கும் சாதாரண மொக்கன் --- நன்றி

    ReplyDelete
  17. உதா அண்ணாச்சி

    [[[ இவரும் ஒரு மொழியினைக் கற்றுக் கொடுக்கிறார். அதுவும் தமிழ்தானாம்]]]

    அதென்னாது '' தமிழ்தானாம் '' ?

    ஐயா அரசு அண்ணாமலை ஒரு தடவை --- சுத்த தமிழ் எங்கே கிடைக்கும் ? மதுரையிலா ? என்று கேட்டதுக்கு அவரது பதில் --- ''மதுரை கு மேலும் தெற்கே போனால் கிடைக்கும்'' ---

    அவர் குறிபிட்டது ''யாழ் குடாநாட்டை'' ---

    உண்மையில் விளங்காது தவிக்கிறேன்.

    ReplyDelete
  18. [[[ படித்துப் பாருங்கள்.. மொழியால் தலை சுற்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல.. இவருடைய முகவரி இது http://kavanitha.blogspot.com ]]]

    பெருமைக்குரிய அறிமுகம் --- பரவாயில்லை விளம்பரம் --- எனது முகவரி சரி தான் --- ஆனால் அதில் எனது கொள்கைகள் எங்கே ஐயா ?
    சில நேரங்களில் ராவணன் போன்றோரது மத மாற்றத்தில் உள்ள குறிகிய பார்வை என்னை பாதிக்கின்றது --- இப்படியும் படித்த மனிதர் சிந்திப்பார்களா என்று ஆச்சரியத்தை விட ஒரு ஏமாற்ற துக்கமாயும் இருக்குது --- இந்த வலைத்தள விளையாட்டை கை
    விடுவோமா என்ற கேள்வியும் வருகுது --- online Chess விளையாடினால் தேவலாம் !

    ReplyDelete
  19. ///அதுலேயும் ஒரு பின்னூட்டமெல்லாம் போடவே மாட்டார். இரண்டு, நான்கு, ஆறு என மடங்குக் கணக்கில்தான் பின்னூட்டங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.///

    சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள் உண்மை தமிழண்னே.

    பென்ஸ் சார்,
    ஆகத்தான் உங்களை குறைத்தது பேசுகிறீர்கள். உங்களுக்கே இது நல்லவா இருக்கு??

    ReplyDelete
  20. குறைகவோ கூட்டவோ எதுவுமே என்னிடம் இல்லை தம்பி --- எல்லாம் அவன் தந்தது ---
    என்னிடம் பல கெட்ட குணங்கள் இருக்குதே --- அதுகளை யாரிடம் சொல்வது --- சிலருக்கு நல்லவன் --- யதார்த்த வாதி வெகு ஜன விரோதி --- பலர் என்னை ஏமாற்றி இருகின்றார்கள் --- உற்ற நண்பன் என்று இன்றும் தான் தேடுகின்றேன் --- உற்றவன் போல் தோன்றுவான் --- எனது பர்ஸ் வீக்கம் வற்றியதும் அவனை காணவே கிடைக்காது --- அது தான் எனது ரசி பலன் --- கடும் சொல் தாங்க இயலாது வாழ்கையில் பெரும் பாதிப்புகள் அனுபவிக்கிறேன் இன்றும் --- நீங்கள் என்னை தவறாக மிகையாக கணக்கு போடுறீங்க --- வேண்டாம் ப்ளீஸ் விடுங்க !

    ReplyDelete
  21. Miga alazha irukirathu ungaloda eluthu mattrum ungaloda tamil alumai, valthukal :-) Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

    Kandipa ungaluku pidikum endru nambugiran.
    http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

    கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
    அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
    உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

    ReplyDelete
  22. //benzaloy said...

    ''இந்தப் பதிவர்களை விடாதீர்கள்'' பதிவில்
    [[[மொழியால் தலை சுற்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல..]]]

    இதுதானே வேணாங்கிறது - - -

    அறிமுகபடுத்தியது நீங்கள் - - -

    தலை சுற்றும் பதிவுகளை கொடுத்த பின்னர் பொறுப்பை மறுத்தால் வாசகர் என்ன பண்ணுவார் சார் ?

    இரண்டு முறைகளை அணுகி இருக்கலாம் என்று படுகிறது - - -

    ஒன்னாவது தலை சுற்றுக்கு மருந்து பரிந்துரைத்திருக்கலாம் - - -

    ரெண்னாவது தலை சுற்றும் தன்மையை தவிர்க்க எனக்கு
    நேரடியாக அறிவுரை தந்திருக்கலாம் - - -

    இருந்தும் Compliment ஆக தான் மனதில பசுமையாக பதியுது - - -

    நன்றி உதா//

    நன்றி பென்ஸ் ஸார்..

    சீரியஸாக எடுத்துக் கொள்ளாதற்கும் தனியாக ஒரு நன்றி..

    பதிவர்களுக்கு இது மாதிரி ஒரு விளம்பரம் கொடுத்தால்தான் அது வொர்க்அவுட் ஆகிறது..

    உங்களது தளத்திற்குள் வந்து முதலில் படிக்கும்போதுதான் கஷ்டம். பின்பு போகப் போக அதுவே பழகிவிடும்.

    கவலை வேண்டாம்..!

    ReplyDelete
  23. //benzaloy said...
    லேகா பக்ஷ உங்களுக்கு றக்கா ரோடு தெரிந்துள்ளதால் உங்களுக்கு யாழ் நகர் பிறந்த அல்லது புகுந்து பழகிய சூழலாக இருக்கும் போல தெரியுது - - - உங்களது பண்பான அணுகுமுறை என்னை தலை குனிய வைக்கின்றது - - - காரணம் - - -
    எனது இடுகைகள் ஒரு நல்ல பண்பான மனதை குத்திவிட்டதே என்றுதான் இருந்தும் மனதில் இருந்ததை உண்மைக்கு சாட்சியாகியது ''சரி'' என்றே தோன்றுகின்றது. அது நிற்க - - - உங்களது பதிவில் சில பிழைகள் இருக்குதையா - - -
    [[[ பெரிய உத்தியோகத்தில் இருந்து ரிடயர் ]]] பெரிதாக வர அரசியல் விடல்லையே - - - எனது இடது சாரி அரசியல் அல்ல - - - எனது அமைச்சரது அரசியல் !
    [[[ எப்படித் தான் தமிழில் எழுதுகிறார் ]]] வண பிதா பெஸ்கி (இத்தாலி --- வசன நடை
    எமக்கு தந்தவர்) மற்றும் ராஜாஜி ஆகியோரும் தமிழ் படித்தனர்தானே? --- நான் அவர்களது மேற்படியில் இல்லை ஆனால் அவர்களைதானே உங்களுக்கு தெரியும் என்றதால் அவர்களை சுட்டினேன் [ இது தலை சுத்தும் தமிழா தலைவா ?]
    [[[ பொல்லாத பிடிவாதக் காரன் ]]]
    என்னாங்கண்ணா இப்பிடி --- சத்து Margin விட்டு கொடேண்டா என்பார்கள் பெரியோர் --- நான் மார்ஜின் இல்லை பக்கம் பாகமாக விட்டுக்கொடுப்பதே என்னுடைய பலவீனம் என்பார்களே ! இதை எப்பிடி கண்டு பிடித்தீர்கள்? யாழ் நகரில் என்னை தெரியுமா?//

    உஷ்ஷ்ஷ்ஷ்...

    அப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுது சாமி..

    உங்க ரெண்டு பேரோட அன்பும், பண்பும், பாசமும், நேசமும்.. எனக்கு இப்பவே ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பலாம் போல இருக்கு..

    பாஸ்போர்ட் கைல ரெடியா இருக்கு பென்ஸ் ஸார்.. விசாவுக்கு எங்கிட்டாச்சும் ரெடி பண்ணுங்க..

    மொதல்ல உங்களை நேர்ல பார்த்து கால்ல விழுந்து ஒரு கும்பிடு போட்டாத்தான் எனக்குத் திருப்தி..!

    ReplyDelete
  24. //benzaloy said...
    Leka Pakshe
    [[[ இவர் புலி எதிர்ப்புவாதி அல்ல, அதே நேரம் இலங்கை அரசு சார்பும் அல்ல,]]]
    ஆகா கணக்கு அண்ணாக்கு அத்துப்படி புலி தொடங்க முன்னர் அரச எதிர்ப்பு ஆயுதத்தில் தொடங்க வியுகம் அமைக்கும் குமந்திரம் நான் கல்வி பயின்ற கல்லூரியில் நடந்தேறியது எடுபிடி வேலைகளில் என் பங்குண்டு
    தமிழ் ஆராச்சியில் இரு கதோலிக்க மத குருவர் ஒருவருடன் பாடம் கற்றேன் மற்றவருடன் வழமை போல எடுபிடி வேலைதான் --- எடுபிடி என்றாலும் நெருக்கம் கூடியதாயிற்றே --- அதுதானையா படித்தோருக்கு நடந்ததை மன்னிக்க முடியாதுள்ளது.//

    நல்ல அனுபவசாலிதான்.. ஏன் பென்ஸ் ஸார்.. உங்களுடைய அனுபவங்களை நீங்கள் ஏன் தொடர் கட்டுரையாக வடிக்கக்கூடாது..!

    நாங்களும் தெரிந்து கொள்வோமே..!

    ReplyDelete
  25. //benzaloy said...
    லேகா பக்ஷே
    [[[ இவைகள் அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த உண்மைகள் ]]]

    உங்களது புகழாரம் எனது தலையை சுற்ற வைக்கிறது --- உங்களுடன் ஈமெயில் பரிமாற ஆவலாக உள்ளது --- முதலில் ஒன்று --- நான் (இந்த சொல்லை தவிர்ப்பது பெரும் தொல்லை ) சாதி பார்ப்பது பாவம் என்பவன் --- அதற்காக எனது மகளை கட்டி கொடுப்பவனும் அல்ல --- பிறப்பில் கிறிஸ்தவன் ஆனால் கோயில் போகாதவன் ---
    முருகன் அவரது அண்ணன்னான பிள்ளையார் என் தெய்வம் --- அறிவுக் கடவுள் அல்லவா ? --- மற்றபடி நிறைய வாசிக்கும் சாதாரண மொக்கன் --- நன்றி//

    ஆஹா.. என் அப்பன் முருகனோட அண்ணனோட பக்தனா..!

    அப்ப பென்ஸ் ஸார்.. ரொம்ப, ரொம்ப நெருங்கிட்டோம் போங்க..

    ReplyDelete
  26. //benzaloy said...
    உதா அண்ணாச்சி
    [[[ இவரும் ஒரு மொழியினைக் கற்றுக் கொடுக்கிறார். அதுவும் தமிழ்தானாம்]]]
    அதென்னாது '' தமிழ்தானாம்''?
    ஐயா அரசு அண்ணாமலை ஒரு தடவை --- சுத்த தமிழ் எங்கே கிடைக்கும் ? மதுரையிலா ? என்று கேட்டதுக்கு அவரது பதில் --- ''மதுரை கு மேலும் தெற்கே போனால் கிடைக்கும்'' ---
    அவர் குறிபிட்டது ''யாழ் குடாநாட்டை'' ---
    உண்மையில் விளங்காது தவிக்கிறேன்.//

    உண்மைதான்..

    உங்கட தமிழ்தான் உண்மையான தமிழ் என்று பலரும் சொல்கிறார்கள்.

    ஆனால் எனக்கென்னவோ சிங்களமும் சேர்ந்து கலந்ததனால்தான் பொதுவான தமிழில் இருந்து ஈழத்துத் தமிழ் வித்தியாசமானதாக உள்ளது என்று கருதுகிறேன்..

    சரியா ஸார்..

    ReplyDelete
  27. //benzaloy said...
    [[[ படித்துப் பாருங்கள்.. மொழியால் தலை சுற்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல.. இவருடைய முகவரி இது http://kavanitha.blogspot.com ]]]

    பெருமைக்குரிய அறிமுகம் --- பரவாயில்லை விளம்பரம் --- எனது முகவரி சரிதான் --- ஆனால் அதில் எனது கொள்கைகள் எங்கே ஐயா ?
    சில நேரங்களில் ராவணன் போன்றோரது மத மாற்றத்தில் உள்ள குறிகிய பார்வை என்னை பாதிக்கின்றது --- இப்படியும் படித்த மனிதர் சிந்திப்பார்களா என்று ஆச்சரியத்தை விட ஒரு ஏமாற்ற துக்கமாயும் இருக்குது --- இந்த வலைத்தள விளையாட்டை கை
    விடுவோமா என்ற கேள்வியும் வருகுது --- online Chess விளையாடினால் தேவலாம்!//

    பென்ஸ் ஸார்,

    இது விளையாட்டு மாதிரியல்ல.. நிஜமாகவே ஒரு விளம்பரம்தான்.. இதையெல்லாம் தயவு செய்து சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்..

    உங்களது தளத்தின் மீதான பார்வை ஈர்க்கப்படுவதற்காகத்தான் அப்படி சொல்லியிருக்கிறேன்..

    வந்து படிப்பவர்களுக்கு நிச்சயம் உங்களது தமிழ் கொஞ்சம் வித்தியாசப்படும் அல்லவா.. அதனால்தான்..

    கோபிக்க வேண்டாம்..!

    ReplyDelete
  28. ///லேகா பக்க்ஷே said...

    ///அதுலேயும் ஒரு பின்னூட்டமெல்லாம் போடவே மாட்டார். இரண்டு, நான்கு, ஆறு என மடங்குக் கணக்கில்தான் பின்னூட்டங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.///

    சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள் உண்மை தமிழண்னே.

    பென்ஸ் சார், ஆகத்தான் உங்களை குறைத்தது பேசுகிறீர்கள். உங்களுக்கே இது நல்லவா இருக்கு??//

    அதானே.. இதைத்தான் நானும் கேக்குறேன்..

    ரொம்பத்தான் தன்னைத் தாழ்த்திக்கிறார்.. அவர் பெருமை நமக்குத்தானே தெரியுது..

    ReplyDelete
  29. //benzaloy said...
    குறைகவோ கூட்டவோ எதுவுமே என்னிடம் இல்லை தம்பி --- எல்லாம் அவன் தந்தது ---
    என்னிடம் பல கெட்ட குணங்கள் இருக்குதே --- அதுகளை யாரிடம் சொல்வது --- சிலருக்கு நல்லவன் --- யதார்த்தவாதி வெகு ஜன விரோதி --- பலர் என்னை ஏமாற்றி இருகின்றார்கள் --- உற்ற நண்பன் என்று இன்றும்தான் தேடுகின்றேன் --- உற்றவன் போல் தோன்றுவான் --- எனது பர்ஸ் வீக்கம் வற்றியதும் அவனை காணவே கிடைக்காது --- அதுதான் எனது ரசி பலன் --- கடும் சொல் தாங்க இயலாது வாழ்கையில் பெரும் பாதிப்புகள் அனுபவிக்கிறேன் இன்றும் --- நீங்கள் என்னை தவறாக மிகையாக கணக்கு போடுறீங்க --- வேண்டாம் ப்ளீஸ் விடுங்க!//

    பென்ஸ் ஸார்..

    உங்களுக்கு மட்டும்தான் இல்ல.. எங்களுக்கும் இதே அனுபவந்தான்.. மனிதர்களிடையே இப்போது பணத்திற்குத்தானே மதிப்பு. அதுதான் பர்ஸ் வற்றியதும் கூட்டம் குறைகிறது.. இதை நன்கு கற்றறிந்த, வாழ்க்கை அனுபவம் பெற்ற உங்களுக்குச் சொல்லத்தான் வேண்டுமா..!

    ReplyDelete
  30. //Suresh said...
    Miga alazha irukirathu ungaloda eluthu mattrum ungaloda tamil alumai, valthukal :-) Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.
    Kandipa ungaluku pidikum endru nambugiran.
    http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html
    கருணாநதி அரசு மருத்துவமனையில்?
    அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே, உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.//

    படித்தேன் சுரேஷ்..

    முதல் பதிவிலேயே அசத்தியிருக்கிறீர்கள்.. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்.. ஆனால் யாருக்கு இதையெல்லாம் யோசிப்பதற்கு நேரமிருக்கிறது..

    அவரவர்க்கு அவரவர் உயிர்தானே மேல்.. அரசும், மக்களுமா மேல்.. அப்படிச் சொல்வதெல்லாம் சும்மா.. ரீலு..

    நன்றாக இருக்கிறது.. தொடருங்கள் சுரேஷ்..

    ReplyDelete
  31. [[[ உங்கட தமிழ்தான் உண்மையான தமிழ் என்று பலரும் சொல்கிறார்கள்.
    ஆனால் எனக்கென்னவோ சிங்களமும் சேர்ந்து கலந்ததனால்தான் பொதுவான தமிழில் இருந்து ஈழத்துத் தமிழ் வித்தியாசமானதாக உள்ளது என்று கருதுகிறேன்
    சரியா ஸார் ]]]

    தமிழில் என்னை பொறுத்தவரை ''உண்மை தமிழ்'' கிடையாது ---
    மதராஸ் தமிழில் இருந்து இலங்கையின் மலைநாட்டு தமிழ் வரை சகலதும் ஒவ்வோர் ''Dialect'' மட்டுமே ---
    சொந்த தாய்மொழித் தமிழிலும் பார்க்க பிறத்தி கவர்ச்சியானது ---

    மதராஸ் தமிழை NS Krishnan ரொம்ப சுவையாக நடித்து காட்டுவார் --- ''இஸ்துகின்னு
    போயிதன்னே'' ---

    இங்கு இலங்கையில் யாழ்ப்பாண தமிழ் மன்னார் தமிழ் வன்னி தமிழ் மட்டகளப்பு தமிழ் மலையக தமிழ் சோனக தமிழ் என பிரிவுகள் இருந்தாலும் சிங்கள மக்கள் தமிழ் பேசும்போது ஒரு தனிசுவை இருக்குதையா !

    ஆனால் தமிழ் ''accent'' உடன் சிங்களம் கதைத்தால் அதில் சுவையே கிடையாது ---

    கேட்பதற்கு மெத்த அசிங்கமாக இருக்கும்.

    சிங்களவர்களுடன் நெருங்கி பழகிய சில தமிழர்கள் தமிழ் ''accent''
    இல்லாது பேசுவார்கள் ---

    இவர்களை சகல சிங்கள மக்களும் ஒரு அதிசய பிறவிகளை காண்பதுபோல உணர்ந்து விருந்தோம்பல் செய்யும் போது மேலெல்லாம் புல்லரிக்குமையா !!!

    பாரதியார் கேரளா நாட்டு பெண்களை பாடினார் ---

    அதே அமைப்பு தான் சிங்கள பெண்களும் !!!

    தமிழ் நாட்டு தமிழ் எழுத்திற்குப் பக்கத்தில் நிற்பதர்த்கு எமக்கு தகுதி
    இல்லவே இல்லை ---

    எனது 18 வயது காலத்தில் சிங்கள பகுதிக்கு மாற்றலாக சென்றேன் ---
    1958 கலவரத்தில் என்னை காப்பற்றினார்கள் ---

    சிங்கள மக்கள் எனது யாழ் உத்தியோகதினரால் லஞ்சம் உழல் என்று பாதிகப்படத்தை எந்த ஊடகமும் இன்னும் சொல்லவில்லை ---

    ''தனி சிங்களம்'' கொள்கையால்
    நானும் பாதிக்கப்பட்டேன் --- ஆனால் காலம் காலமாக சிங்களவர்கள் யாழ்
    தமிழ் வர்கத்தினால் பாதிக்கபட்டது உண்மை !

    மற்றது இந்த நூலை (thread) இத்துடன் முட்டித்துகொள்வோம் ---

    நான் கதோலிகன் பிறப்பில் --- இப்போ வணங்குவது பிள்ளையாரப்பனை ---

    visa எடுத்து என்னை சந்தித்து ஒரு ஊமையை உணர்ந்து ஏமாறாது நாம்
    Email மூலம் தொடர்பு கொள்வது உசிதம் ---

    உண்மை தமிழ் அன்பரே உங்களது எழுத்து திறனும் நடு நிலையும் தான்
    என்னை கவர்கின்றது ---

    நன்றி.

    ReplyDelete
  32. ///benzaloy said...
    [உங்கட தமிழ்தான் உண்மையான தமிழ் என்று பலரும் சொல்கிறார்கள்.
    ஆனால் எனக்கென்னவோ சிங்களமும் சேர்ந்து கலந்ததனால்தான் பொதுவான தமிழில் இருந்து ஈழத்துத் தமிழ் வித்தியாசமானதாக உள்ளது என்று கருதுகிறேன் சரியா ஸார் ]]]
    தமிழில் என்னை பொறுத்தவரை ''உண்மை தமிழ்'' கிடையாது ---
    மதராஸ் தமிழில் இருந்து இலங்கையின் மலைநாட்டு தமிழ் வரை சகலதும் ஒவ்வோர் ''Dialect'' மட்டுமே --- சொந்த தாய்மொழித் தமிழிலும் பார்க்க பிறத்தி கவர்ச்சியானது --- மதராஸ் தமிழை NS Krishnan ரொம்ப சுவையாக நடித்து காட்டுவார் --- ''இஸ்துகின்னு
    போயிதன்னே'' --- இங்கு இலங்கையில் யாழ்ப்பாண தமிழ் மன்னார் தமிழ் வன்னி தமிழ் மட்டகளப்பு தமிழ் மலையக தமிழ் சோனக தமிழ் என பிரிவுகள் இருந்தாலும் சிங்கள மக்கள் தமிழ் பேசும்போது ஒரு தனிசுவை இருக்குதையா ! ஆனால் தமிழ் ''accent'' உடன் சிங்களம் கதைத்தால் அதில் சுவையே கிடையாது ---
    கேட்பதற்கு மெத்த அசிங்கமாக இருக்கும். சிங்களவர்களுடன் நெருங்கி பழகிய சில தமிழர்கள் தமிழ் ''accent''
    இல்லாது பேசுவார்கள் --- இவர்களை சகல சிங்கள மக்களும் ஒரு அதிசய பிறவிகளை காண்பதுபோல உணர்ந்து விருந்தோம்பல் செய்யும் போது மேலெல்லாம் புல்லரிக்குமையா!
    பாரதியார் கேரளா நாட்டு பெண்களை பாடினார் --- அதே அமைப்புதான் சிங்கள பெண்களும்! தமிழ்நாட்டு தமிழ் எழுத்திற்குப் பக்கத்தில் நிற்பதர்த்கு எமக்கு தகுதி இல்லவே இல்லை ---
    எனது 18 வயது காலத்தில் சிங்கள பகுதிக்கு மாற்றலாக சென்றேன் ---
    1958 கலவரத்தில் என்னை காப்பற்றினார்கள் --- சிங்கள மக்கள் எனது யாழ் உத்தியோகதினரால் லஞ்சம் உழல் என்று பாதிகப்படத்தை எந்த ஊடகமும் இன்னும் சொல்லவில்லை --- ''தனி சிங்களம்'' கொள்கையால்
    நானும் பாதிக்கப்பட்டேன் --- ஆனால் காலம் காலமாக சிங்களவர்கள் யாழ்
    தமிழ் வர்கத்தினால் பாதிக்கபட்டது உண்மை ! மற்றது இந்த நூலை (thread) இத்துடன் முடித்து கொள்வோம் --- நான் கதோலிகன் பிறப்பில் --- இப்போ வணங்குவது பிள்ளையாரப்பனை --- visa எடுத்து என்னை சந்தித்து ஒரு ஊமையை உணர்ந்து ஏமாறாது நாம் Email மூலம் தொடர்பு கொள்வது உசிதம் ---
    உண்மை தமிழ் அன்பரே உங்களது எழுத்து திறனும் நடு நிலையும்தான்
    என்னை கவர்கின்றது ---
    நன்றி.//

    ஐயோ பென்ஸ் ஸார்..

    அசத்தி விட்டீர்கள்! மிக அருமையான டச்சிங்கான பின்னூட்டம்.

    நீங்கள் சொல்வதைப் போல பேச்சுத் தமிழில் பல வித மொழிகள் உண்டு. இங்கே தமிழ்நாட்டிலேயே ஊருக்கு ஊர் தமிழ் மாறுபடும்.. ஆனால் எழுத்துத் தமிழ் மட்டும் ஒன்றுதான்..!

    தமிழர்-சிங்களவர் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். அறிந்து கொண்டேன்.. நீங்களும்தான் நடுநிலைமையோடு எழுதியிருக்கிறார்கள். நன்றிகள் கோடி..!

    ReplyDelete
  33. கூகுள் தேடு கருவி மூலம் இந்தப் பக்கத்தை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. என்னை பிறருக்கும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  34. [[[கலையரசன் said...
    கூகுள் தேடு கருவி மூலம் இந்தப் பக்கத்தை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. என்னை பிறருக்கும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.]]]

    வருகைக்கு நன்றி கலை ஸார்..

    நல்ல விஷயங்கள் எங்கே தென்பட்டாலும் நான்கு பேரிடம் சொல்லவில்லையென்றால் என்னைப் போன்ற சிலருக்குத் தூக்கம் வராது..

    ReplyDelete