Pages

Thursday, September 06, 2007

சுகுணா திவாகருக்கு இறுதியாய்ச் சில வார்த்தைகள்

மானமிகு சுகுணா ஐயா அவர்களுக்கு,


போலி டோண்டு பற்றி இறுதியாகச் சில வார்த்தைகள் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறீர்கள். வழமைபோல் உங்களது மேலாண்மையான அறிவுத்திறமை அதில் பளிச்சென வெளிப்படுகிறது.


எல்லாரும் செல்வது ஒரு பாதையெனில் நாம் வேறு பாதையில் சென்றால் அதில்தான் நமது அறிவுத்திறன் வெளிப்படும் என்கின்ற பொதுவான பகுத்தறிவின் காரணமாக எந்த ஒரு விஷயத்திலும் உங்களுடைய கருத்துக்கள் வலையுலகில் அவசியம் கோரப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.


நீங்களும் வஞ்சகமில்லாமல் எங்களுக்கு தேவாலய அப்பத்தைப் போல் அவ்வப்போது பிட்டு பிட்டுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். நாங்களும் கேட்டுக் கொண்டுதான்.. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. நன்றி..


முதலில் போலி டோண்டுவைப் போலவே நாமும் ஒரு மனநோயாளி என்றீர்கள். மெளனமாக அனைவரும் ஒத்துக் கொண்டோம். காரணம் உலக ஜீவராசிகளில் பேசக்கூடிய அனைவருக்கும் மனதில் ஒரு ஆற்றாமை இருக்கும். இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. அந்த அடைய முடியாத ஆற்றாமையை நீங்கள் மன நோய் என்ற நோக்கில் பார்க்கிறீர்கள் எனில் சந்தேகமேயில்லை. நாம் அனைவரும் மனநோயாளிகள்தான். ஒத்துக் கொள்கிறோம்.


ஆனாலும் மனநோயால் ஒருவனைத் திட்டுவதற்கும், கொலை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதே சுகுணா.. ஒருவரைத் திட்டினால், "பாவம் நோய் முத்திருச்சு. திட்டிட்டுப் போறான்.." என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் கொலையே செய்துவிட்டால்.. கத்தியை உருவி நாமே துடைத்து அவரிடம் கொடுத்து திருப்பி அனுப்ப முடியுமா?


இதில் திட்டுவது என்பது நமது வலையுலக மாற்றுக் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதாக எடுத்துக் கொள்ளுங்கள். கொலை என்பது திருவாளர் போலி டோண்டு இப்போது செய்து கொண்டிருப்பது.


//நான் போலியை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.//


சுயநினைவோடுதான் இதை எழுதினீர்களா சுகுணா.. மாற்றுக் கருத்தை ஏற்கப் பிடிக்காமல் அவரை அவமானப்படுத்தி, அதன் மூலம் அவர் துன்புறுவதை நேரில் பார்த்து அனுபவிக்கும் சாடிஸ்ட் மனப்பான்மையை நீங்கள் ஆதிக்கச் சாதி வெறி என்று வழமை போல் உங்களது பகுத்தறிவு கட்சியின் தாக்கத்தினால் சாதி சாயம் பூசிவிட்டீர்கள்.


இந்த சாடிஸ்ட் மனப்பான்மையுள்ள மனிதர்கள் நிறைய பேர். அவர்களுடைய எண்ண அளவுகோல்தான் ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும். தாங்கள் அறியாததல்ல. அப்படியிருந்தும் கண் முன்னே தெரிந்த ஒரு கற்பழிப்புக்கு சாதி சாயம் பூசி, கற்பழிப்பின் நோக்கமான மாற்றுக் கருத்தை ஏற்க முடியாமை என்கிற தனி மனித எண்ணக் குறைபாட்டை நீங்கள் போலியிடமிருந்து அப்புறப்படுத்த நினைப்பது எந்த வகையில் நியாயம்?


ஆணாதிக்க பாசிஸ்ட் என்று இன்னொரு வரி.. இதற்கு என்ன அர்த்தம் என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆணாதிக்கம் நிறைந்தவர்கள்தான் மற்றவர்கள் வீட்டுப் பெண்களையும் தாங்களே பெண்டாள நினைப்பார்கள் என்று நினைத்தீர்களோ..? இங்கே நீங்கள் போலியாரை ஆணாதிக்கவாதி என்று சொன்னால் 'உண்மை'யானவர் ஆணாதிக்கத்தை மீறி திமிருபவர் என்று அர்த்தமாகி.. அது அவருக்கே அனர்த்தமாகிவிடும். 'உண்மை' அப்படியா எழுதுகிறார்..?


//மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.//


இதை எப்படி ஸார் இவ்வளவு தைரியமாக எழுதுகிறீர்கள்? ஆச்சரியம்தான் போங்க.. போலியார் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் கெட்ட வார்த்தைகள் என்று நீங்கள் ஒத்துக் கொண்டாலும் அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்கிறீர்கள்.. இது என்ன லாஜிக்..? பிறகு எதற்கு அந்த 'கெட்ட வார்த்தை' என்கின்ற இரண்டு வார்த்தைகள். "கெட்ட வார்த்தைகள் என்று ஏதுமில்லை.. எல்லாமே ஒன்றுதான்.." என்று எழுதிவிட்டுப் போய் விடலாமே.. ஏன் உங்களுக்கே 'அது போன்ற நிறைய மெயில்கள் வந்தும் பப்ளிஷ் செய்யவில்லை..' என்றும் சொன்னீர்களே.. பேசாமல் அவற்றையும் பப்ளிஷ் செய்திருக்கலாமே நல்ல வார்த்தைகள்தான் எனில்..


"யாரை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம். இதில் நல்ல வார்த்தையோ, கெட்ட வார்த்தையோ இல்லை.. எல்லாமே தமிழ் வார்த்தைகள்தான்.." என்ற உங்களது புதிய சூத்திரம் எனக்குப் புதிய பகுத்தறிவைப் புகட்டுகிறது.. "என் வீட்டில் உள்ள பெண்களைத் திட்டினால்கூட எனக்கு கோபம் வராது.." என்ற ரீதியில் எழுதியிருக்கிறீர்களே.. இது என்ன விளையாட்டா? உங்களைப் போலவே மற்றவர்களும் "அவைகள் அனைத்தும் நல்ல வார்த்தைகள்தான்.." என்று சொல்லி ஆளுக்கொரு நாலு பக்கம் பிரிண்ட் எடுத்து வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து மனப்பாடம் செய்து மற்றவர்களிடம் சொல்லிக் கொடுங்கள் என்று அட்வைஸ் செய்கிறீர்களா?


//இப்போது போலியை எதிர்ப்பவர்களுக்கும் சரி இதற்கு முன்னால் போலியை எதிர்ப்பவர்களுகும் சரி இப்படியான நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது.//


போலியை எதிர்ப்பவர்கள் எதற்கு ஸார் எதிர்க்கிறார்கள்..? அவரென்ன தாவூத் இப்ராஹிமா நாட்டு நலனை முன்னிட்டு எதிர்ப்பதற்கு..? இந்த போலி விஷயத்தில் நிலைப்பாடு என்ற ஒன்றை எதற்கு எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லீங்கோ..


எதிர்ப்பாளர்கள் அனைவருமே ஏதோ கொள்கை குன்றுகளோ அல்லது கொள்கைக்காக வலையுலகில் வலம் வருபவர்களோ அல்ல.. தன்னுடைய எண்ணங்களை(எண்ணங்கள்தான்; கொள்கைகள் அல்ல. நாளையே சூழ்நிலை மாறும்போது அவர்கள் மாறித்தான் ஆவார்கள்) வெளிப்படுத்தி எதிர்வினையின் மூலம் கிடைக்கும் தகவல்களைப் படித்துத் தெரிந்து கொள்கிறார்கள். இதுதானே வலைப்பூக்களின் நோக்கம். இதில் வருபவர்கள் அனைவரும் ஒரு கட்சியின் தொண்டனைப் போல.. கொள்கைக் குன்றின் மீது பளிச்சிடும் நட்சத்திரத்தைப் போல் தெரிய வேண்டும் என்றால் எப்படிங்கோ ஐயா..?


//போலியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் சித்தாந்தம், அறம் என ஒரு புண்ணாக்கும் கிடையாது. தன்முனைப்பு, தனிமனித அரிப்பு, அப்போது யாரை எதிரியாய் வரித்துக்கொண்டோமோ அந்த எதிரியை ஒழித்துக்கட்டும் வெறி இது மட்டும்தான் இரண்டுதரப்பிற்குமான அடிப்படை.//


எதற்கு இங்கே அறமும், சிந்தாந்தமும் தேவை? திருடனையும், கொலைகாரனையும் பிடிக்கச் சொன்னால் எந்த சிந்தாந்தத்தின் அடிப்படையில் அவன் திருடன், கொலைகாரன் என்று கேட்பீர்களோ..?

போலியாரை யாரும் எதிரியாக நினைக்கவில்லை.. தெருவில் குடியிருக்கும் ஒருவன் குடித்துவிட்டு அம்மணமாக தினமும் ரகளை செய்து வருகிறான் என்றால், அவனைக் கண்டால் ஓரமாக ஒதுங்கித்தான் போவார்கள் மற்றவர்கள். அவனை அந்தத் தெருவிலிருந்து அப்புறப்படுத்தினால் நாம் நிம்மதியாக இருக்கலாம் என்றுதான் நினைப்பார்கள்.
இதை எதிரி என்று நினைத்து என்னை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று குடிகாரன் புலம்பினால் நீங்களும் அதற்கு ஒத்து ஊதுறீகளே சாமி..?


அசுத்தமான ரத்தம் யார் உடம்பில் ஓடினாலும் ஆஸ்பத்திரிக்கு ஓடித்தான் ஆக வேண்டும்.. உடனுக்குடன் அதை நீக்கித்தான் ஆக வேண்டும்..
நல்ல ரத்தம் அசுத்தமானது எப்படி என்பதை அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, அதன் பின் அந்தக் காரணகர்த்தாவை கண்டுபிடித்து.. சிரச்சேதம் செய்துவிட்டு, அதன் பின்தான் ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும் என்றால்..


எந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தினால் இவையெல்லாம் எங்கள் புத்தியில் ஏறி, எங்கள் மனது சாந்தியாகும் என்பதை முதலில் சொல்லுங்கள்.. கற்றுக் கொள்ள முயல்கிறோம்..

58 comments:

  1. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு தலை சுத்துது....
    காரணம்..நீங்களா.., சுகணாவா தெரியல..அவர் பின்னுட்டத்திலே பதிவு போடுறார்..
    நீங்க..பதிவுக்கு ஒரு எதிர் பதிவு..
    ஒரே நேரத்தில இரண்டையும்..படிச்ச பின்னாடி..இப்படி ஆகிருச்சு..
    கொஞ்சம்...சோடா கிடைக்கும்மா.....

    ReplyDelete
  2. அவருக்கு இவர் பதில் ,இவருக்கு கடைசி வார்த்தை ,ஒரே ஒரு இறுதிக் கேள்வி ..அய்ய்யய்யயோ ..எப்பய்யா நிறுத்துவீங்க!

    ReplyDelete
  3. முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் வலையுலக வாரியார் அவர்களே.

    1)டோண்டு தன் ஜாதியை பெருமையாக சொன்னதை தவறு என்று ஏற்கிறீர்களா இல்லையா? தவறு என்றால் ஏன் நீங்கள் அவருக்கு சுட்டிக் காட்டவில்லை?

    2)போலி டோண்டு மகள் போட்டோவை போட்டதை எதிர்க்கிறீர்களா இல்லையா? எதிர்க்கிறீர்கள் என்றால் ஏன் நீங்கள் அந்த பதிவில் உங்கள் எதிர்ப்பினை காட்டவில்லை?

    3)சாதா கடையில் டீக்குடிக்க கடைக்குள் விடவில்லை என்றால் தலித்துகள் சொந்தமாக தனிக்கடை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே என்ற்று டோண்டு ராகவன் சொல்வதை ஆதரிக்கிறீர்களா?

    4)அதியமான் என்பவர் போன் செய்து ஆபாசமாக பேசியதாக சிலர் சொல்கின்றனர். அவர் உங்கள் நண்பர் என்றால் எதிரியிடமும் ஆபாசம் பேசாதே என்று நீங்கள் சொல்லி இருக்கலாம்தானே?

    5)பெண்கள் எல்லாரிடமும் உடலுறவு கொள்ளலாம் என்று டோண்டு சொன்னதாக போலி சொல்கிறான். இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?

    6)சிறு குழந்தைகளுக்கும் காம ஆசை வந்ததால்தான் பால்ய விவாகம் என்ற கான்செப்டே தோன்றியதாக டோண்டு சொல்கிறார். இது உண்மையா?

    7)போலி உங்களை எங்குமே திட்டவில்லை என்கிறான். நீங்கள் அவனை வம்பிழுத்த பிறகுதான் அவன் உங்களை தாக்கியதாக சொல்கிறான். சும்மா இருந்த அவனை தூண்டி விட்டது உங்கள் குற்றம் அல்லவா?

    8)கையொடிய நாள் சம்பளத்துக்கு தட்டச்சு செய்யும் உங்களுக்கு இதுபோல பெரிய பெரிய பதிவுகள் போட நேரம் எப்படி கிடைக்கிறது?

    9)செந்தழல்ரவி, குழலி, செல்லா ஆகியோர் இன்னொருவரின் புகைப்படம் எல்லாம் போட்டு பதிவு போடுகின்றனர். இது தவறு இல்லையா? கண்டித்தீர்களா?

    10)உங்கள் உடல் ஊனத்தை காரணம் காட்டியதாக போலி மீது சுகுணா குற்றச் சாட்டு சொல்கிறார். நான் போலிப்பதிவில் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. தயவு செய்து அதன் லிங் தர முடியுமா?

    ReplyDelete
  4. காசி ஆறுமுகம் மற்றும் பெயரிலி ஆகிய பெயர்களில் வருவது எல்லாம் போலிகள். இதுகூட உங்களுக்குத் தெரியவில்லையே!

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. //TBCD said...
    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு தலை சுத்துது....
    காரணம்..நீங்களா.., சுகணாவா தெரியல..அவர் பின்னுட்டத்திலே பதிவு போடுறார்..
    நீங்க..பதிவுக்கு ஒரு எதிர் பதிவு..
    ஒரே நேரத்தில இரண்டையும்..படிச்ச பின்னாடி..இப்படி ஆகிருச்சு..
    கொஞ்சம்...சோடா கிடைக்கும்மா.....//

    மொதல்ல மீட்டிங் முடியட்டும்.. மிச்சம், மீதி ஏதாவது சோடா உடையாம இருந்தா தர்றேன்.. அதுவரைக்கும் கமுக்கமாக பேசுறதை கேக்கணும்..

    ReplyDelete
  7. //ஜோ / Joe said...
    அவருக்கு இவர் பதில் ,இவருக்கு கடைசி வார்த்தை ,ஒரே ஒரு இறுதிக் கேள்வி ..அய்ய்யய்யயோ ..எப்பய்யா நிறுத்துவீங்க!//

    இப்போதைக்கு நிற்கும் வாய்ப்பே இல்லை ஜோ.. வினை என்று ஒன்றிருந்தால் எதிர்வினை என்ற ஒன்றும் இருந்தே தீரும்..

    ReplyDelete
  8. வேகாதவன் ஸார்..

    முகமூடியைக் கழட்டிவிட்டு நேராக வாருங்கள்.. ஆற, அமர உட்கார்ந்து பேசுவோம்..

    ReplyDelete
  9. //Kasi Arumugam - காசி said...
    உண்மை தமிழன்:-)//

    காசி ஸார் நன்றி.. உண்மையாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் சரி..

    ReplyDelete
  10. //Anonymous said...
    காசி ஆறுமுகம் மற்றும் பெயரிலி ஆகிய பெயர்களில் வருவது எல்லாம் போலிகள். இதுகூட உங்களுக்குத் தெரியவில்லையே!//

    காசி ஸார் சரி.. பெயரிலி எங்கே பின்னூட்டம் போட்டிருக்கிறார். இதில் எது போலி, எது போலியல்ல என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இருக்கவே இருக்கு other option..

    ReplyDelete
  11. பிரபு said...
    அதெல்லாம் இருக்கட்டும் உண்மை சார், நம்ம டோண்டு ஸார், புதிதாக இரண்டாம் சாணக்கியன் என்ற பெயரில் தமிழ்மணத்தில் புகுந்து இருக்கிறாரே, அதைப ்பற்றி உங்கள் கருத்து என்ன?

    அது சரி பிரபு ஸார்.. நீங்க எந்த பிரபு..?

    ReplyDelete
  12. உண்மைத் தமிழன் போலியைக் குறித்தான சுகுணாவின் இரண்டு கட்டுரைகளைப் படித்த போது எனக்குத் தோன்றிய அதே எண்ணங்களை உங்கள் எழுத்தில் காண்கிறேன்.

    சுகுணா தனது கலகக் குரலால் பலரை ஈர்த்தவர். ஆனால் எல்லாவற்றிலும் வித்தியாசமாய்த்தான் தனது பார்வை இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரா அல்லது உண்மையிலேயே அவரது எண்ணம் அதுதானா என்று தெரிய வில்லை.

    ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. என்ன செய்வது என்னையோ, என் வீட்டைச் சேர்ந்தவர்களையோ கேவலமாகச் சித்தரித்து யாரேனும் திட்டும்போது சித்தாந்த ரீதியாய் யோசிக்காமல் வெறுமனே கோபப் படும் வெகு சாதாரண மனிதனாய் வாழவே என்னால் முடிகிறது.

    ஜாதியை வைத்து திட்டியதும், பெண்களை வைத்து கேவலமாய் எழுதியது என எல்லாமே சேர்ந்துதான் எனக்கு அறுவறுப்பைத் தருகிறது என்று ஒரு சிலர் சொல்ல முயலும் போது, இல்லை இல்லை நீ கொள்கை ரீதியாக எதிர்க்க வில்லை, இது உனது தனி மனித அரிப்பு என்று உட்கார்ந்த இடத்தில் இருந்துக் கொண்டு சொல்கிறார்.

    ஒன்றே ஒன்றுதான் தோன்றுகிறது. தேவை இல்லாமல் காம்ப்ளிகேட் செய்து கொள்கிறீர்களோ சுகுணா???

    ReplyDelete
  13. //நந்தா said...
    உண்மைத் தமிழன் போலியைக் குறித்தான சுகுணாவின் இரண்டு கட்டுரைகளைப் படித்த போது எனக்குத் தோன்றிய அதே எண்ணங்களை உங்கள் எழுத்தில் காண்கிறேன். சுகுணா தனது கலகக் குரலால் பலரை ஈர்த்தவர். ஆனால் எல்லாவற்றிலும் வித்தியாசமாய்த்தான் தனது பார்வை இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரா அல்லது உண்மையிலேயே அவரது எண்ணம் அதுதானா என்று தெரிய வில்லை.//

    நந்தா எனக்கும் இதுபோல்தான் தோன்றுகிறது.. சுகுணா எந்தத் தளத்திலும் தனித்தே இயங்கே வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்..

    //ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. என்ன செய்வது என்னையோ, என் வீட்டைச் சேர்ந்தவர்களையோ கேவலமாகச் சித்தரித்து யாரேனும் திட்டும்போது சித்தாந்த ரீதியாய் யோசிக்காமல் வெறுமனே கோபப் படும் வெகு சாதாரண மனிதனாய் வாழவே என்னால் முடிகிறது.//

    இதுதான் பெருவாரியான மனிதர்களின் நிலைமை. அனைவருமே சிந்தாந்தம் அறிந்த அறிஞர்களாய் இருந்துவிட்டால் அவர்கள் சொல்லப் போகும் அறிவுரைகள் யாருக்கு வேண்டும்? யார் கேட்க இருப்பார்கள்?

    //ஜாதியை வைத்து திட்டியதும், பெண்களை வைத்து கேவலமாய் எழுதியது என எல்லாமே சேர்ந்துதான் எனக்கு அறுவறுப்பைத் தருகிறது என்று ஒரு சிலர் சொல்ல முயலும் போது, இல்லை இல்லை நீ கொள்கை ரீதியாக எதிர்க்க வில்லை, இது உனது தனி மனித அரிப்பு என்று உட்கார்ந்த இடத்தில் இருந்துக் கொண்டு சொல்கிறார். ஒன்றே ஒன்றுதான் தோன்றுகிறது. தேவை இல்லாமல் காம்ப்ளிகேட் செய்து கொள்கிறீர்களோ சுகுணா???//

    - )))))))))

    ReplyDelete
  14. மிகச்சரியான பதில்கள், எனக்கு தோன்றியதையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்..

    ReplyDelete
  15. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    பிரபு said...
    அதெல்லாம் இருக்கட்டும் உண்மை சார், நம்ம டோண்டு ஸார், புதிதாக இரண்டாம் சாணக்கியன் என்ற பெயரில் தமிழ்மணத்தில் புகுந்து இருக்கிறாரே, அதைப ்பற்றி உங்கள் கருத்து என்ன?

    அது சரி பிரபு ஸார்.. நீங்க எந்த பிரபு..?//

    டோண்டு நானா? காமெடி.. பிரச்சினையே வேணாம்.. நான் வேற.. அவர் வேற.. இருவரும் ஒருவரல்ல என்பதை வலுக்கட்டாயமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  16. //PPattian : புபட்டியன் said...
    மிகச்சரியான பதில்கள், எனக்கு தோன்றியதையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்..//

    அது சரி சாமி.. அதென்ன பேரே ஒரு தினுசா இருக்கு..

    ReplyDelete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  18. //அது சரி சாமி.. அதென்ன பேரே ஒரு தினுசா இருக்கு.. //

    தெரியாத்தனமா சில "புதுமை"கள் என்னில் கலந்து விட்டாலும், அடிப்படையில் நான் ஒரு பட்டிக்காட்டான் என்பதுதான் புபட்டியன்

    என் பேரை விளக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.. :)))))))))

    ReplyDelete
  19. ///PPattian : புபட்டியன் said...
    //அது சரி சாமி.. அதென்ன பேரே ஒரு தினுசா இருக்கு.. //
    தெரியாத்தனமா சில "புதுமை"கள் என்னில் கலந்து விட்டாலும், அடிப்படையில் நான் ஒரு பட்டிக்காட்டான் என்பதுதான் புபட்டியன். என் பேரை விளக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.. :)))))))))///

    பட்டியன் ஸார்.. பட்டிக்காட்டான் என்றே பெயர் வைத்திருக்கலாம். அதுவும் திரும்பிப் பார்க்க வைக்கும் பெயர்தான்.. மிஸ் செய்து வீட்டீர்களே..

    ReplyDelete
  20. Your beloved poli has started his filthy things again.

    For sure, the language used is a Tanjore district (Vidaathu moorthi) or North/South Arcot district (may be kuzhali or mahendranp) slang.

    And, the audio file posted by Osai Chella sounded like a kid's voice or someone who is a school dropout with some computer diploma from NIIT or APTECH!!! (I mean so innocent, but not the kind of words he used)

    Now it is a million dollar question "Who is the real poli"?
    Onemore observation, after the poli eposode I dont see any postings from some people.

    Disclaimer: I am not a blogger and I dont have any blog in my name (not even gmail id!!!). I am a regular reader of Thamizmanam.

    ReplyDelete
  21. //வேகாதவன் ஸார்..

    முகமூடியைக் கழட்டிவிட்டு நேராக வாருங்கள்.. ஆற, அமர உட்கார்ந்து பேசுவோம்..//

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க வாரியார். இந்த மழுப்பல் எல்லாம் வேண்டாம்.

    உங்க பிரெண்டு முரளி மனோஹர் முகமூடிய கழட்டிட்டுதான் பதிவுகள் எழுதினாரா? முகமூடிய கழட்டிட்டுதான் ராஜாவனஜ் வேலை பார்த்த இடத்தை செல்வன் பதிவில் ஆபாசமாக சொன்னாரா?

    ReplyDelete
  22. //காசி ஸார் சரி.. பெயரிலி எங்கே பின்னூட்டம் போட்டிருக்கிறார். இதில் எது போலி, எது போலியல்ல என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இருக்கவே இருக்கு other option..//

    காசி சார் பெயரில் அதர் ஆப்சனில் பின்னூட்டம் இப்போதெல்லாம் போடுவது நம்ம மரம்வெட்டி சார். அதில் புகைப்படம் இருக்காது.

    பெயரிலி சாரின் பெயரிலும் கமெண்டு போடுவது அதே மரம்வெட்டி சார். இதில் படம் இருக்கும். ஆனால் கிளிக் செய்தால் பெயரிலி தளத்துக்கு செல்லாது.

    ReplyDelete
  23. //காசி ஸார் சரி.. பெயரிலி எங்கே பின்னூட்டம் போட்டிருக்கிறார். இதில் எது போலி, எது போலியல்ல என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இருக்கவே இருக்கு other option..//

    காசி சார் பெயரில் அதர் ஆப்சனில் பின்னூட்டம் இப்போதெல்லாம் போடுவது நம்ம சிங்கப்பூர் மரம்வெட்டி சார். அதில் புகைப்படம் இருக்காது.

    பெயரிலி சாரின் பெயரிலும் கமெண்டு போடுவது அதே சிங்கப்பூர் மரம்வெட்டி சார். இதில் படம் இருக்கும். ஆனால் கிளிக் செய்தால் பெயரிலி தளத்துக்கு செல்லாது.

    சுந்தரமூர்த்தி என்ற பெயரில் எழுதி இருப்பதும் அதே சிங்கப்பூர் மரம்வெட்டி சாரேதான்!


    இது உங்கள் தகவலுக்கு!

    ReplyDelete
  24. //Anonymous said...
    Your beloved poli has started his filthy things again.

    For sure, the language used is a Tanjore district (Vidaathu moorthi) or North/South Arcot district (may be kuzhali or mahendranp) slang.

    And, the audio file posted by Osai Chella sounded like a kid's voice or someone who is a school dropout with some computer diploma from NIIT or APTECH!!! (I mean so innocent, but not the kind of words he used)

    Now it is a million dollar question "Who is the real poli"?
    Onemore observation, after the poli eposode I dont see any postings from some people.

    Disclaimer: I am not a blogger and I dont have any blog in my name (not even gmail id!!!). I am a regular reader of Thamizmanam.//

    ஐயோ அனானி.. விடிய விடிய ராமாயணம் கேட்டு விடிஞ்சப்புறம் ராமன் சீதைக்கு சித்தப்பனான கதையை மறுபடியும் சொல்ல வைக்காதீங்க..

    அதான் அவரே ஒத்துக்கிட்டாரே நான்தான் போலி என்று.. பின்ன எதுக்கு இங்க வந்து நூல் விடுறீங்க..? மேட்டர் முடிஞ்சிருச்சு. விட்ருங்க..

    ReplyDelete
  25. ///வேகாதவன் said...
    //வேகாதவன் ஸார்..
    முகமூடியைக் கழட்டிவிட்டு நேராக வாருங்கள்.. ஆற, அமர உட்கார்ந்து பேசுவோம்..//
    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க வாரியார். இந்த மழுப்பல் எல்லாம் வேண்டாம்.///

    நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல நீங்க யார் சாமி..? மருதமலை முருகனா..? எழுதும்போது கரெக்ட்டா எழுதணும்.. இல்லேன்னா சட்டுன்னு கோபம் வந்திரும்..

    //உங்க பிரெண்டு முரளி மனோஹர் முகமூடிய கழட்டிட்டுதான் பதிவுகள் எழுதினாரா? முகமூடிய கழட்டிட்டுதான் ராஜாவனஜ் வேலை பார்த்த இடத்தை செல்வன் பதிவில் ஆபாசமாக சொன்னாரா?//

    இப்ப புரியுது இந்த வேகாதவன் யாருன்னு..? என்கிட்ட உங்க பருப்பு வேகாது ஸார்.. வேற இடம் பாருங்க ஸார்..

    ReplyDelete
  26. ///Anonymous said...
    //காசி ஸார் சரி.. பெயரிலி எங்கே பின்னூட்டம் போட்டிருக்கிறார். இதில் எது போலி, எது போலியல்ல என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இருக்கவே இருக்கு other option..//
    காசி சார் பெயரில் அதர் ஆப்சனில் பின்னூட்டம் இப்போதெல்லாம் போடுவது நம்ம மரம்வெட்டி சார். அதில் புகைப்படம் இருக்காது. பெயரிலி சாரின் பெயரிலும் கமெண்டு போடுவது அதே மரம்வெட்டி சார். இதில் படம் இருக்கும். ஆனால் கிளிக் செய்தால் பெயரிலி தளத்துக்கு செல்லாது.///

    இதையெல்லாம் யார் கேட்டா..? ஏன் ஸார் உங்க நேரத்தை வேஸ்ட் பண்றீங்க..?

    ReplyDelete
  27. ///Anonymous said...
    //காசி ஸார் சரி.. பெயரிலி எங்கே பின்னூட்டம் போட்டிருக்கிறார். இதில் எது போலி, எது போலியல்ல என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இருக்கவே இருக்கு other option..//
    காசி சார் பெயரில் அதர் ஆப்சனில் பின்னூட்டம் இப்போதெல்லாம் போடுவது நம்ம சிங்கப்பூர் மரம்வெட்டி சார். அதில் புகைப்படம் இருக்காது.
    பெயரிலி சாரின் பெயரிலும் கமெண்டு போடுவது அதே சிங்கப்பூர் மரம்வெட்டி சார். இதில் படம் இருக்கும். ஆனால் கிளிக் செய்தால் பெயரிலி தளத்துக்கு செல்லாது.
    சுந்தரமூர்த்தி என்ற பெயரில் எழுதி இருப்பதும் அதே சிங்கப்பூர் மரம்வெட்டி சாரேதான்!
    இது உங்கள் தகவலுக்கு!///

    நான் கேட்டனா..? இல்ல நான் கேட்டனான்னு கேக்குறேன்..

    இதை எழுதுற நேரத்துக்கு உங்க பதிவுல ஏதாவது ஒரு மேட்டர் எழுதிப் போட்டிருக்கலாம்.. போய் பொழைப்பைப் பாருங்க ஸார்..

    ReplyDelete
  28. நண்பர் உண்மைத்தமிழனுக்கு,

    முதலில் உங்கள் கேள்விகள் குறித்து உரையாடுவதற்கு முன் சிலவைகள் :

    1. /மானமிகு சுகுணா ஐயா அவர்களுக்கு,/

    இந்த மானமிகு விவகாரம் பிரின்ஸ் என்னாரெஸ்ஸிற்குத் தெரியுமா? கடுப்பாகப் போகிறார். அய்யா என்று அழைக்கவேண்டாம். ஏதோ வயதான பீல் வருகிறது. 21 வயது இளைஞனுக்கு இப்படியொரு பீல் வரவைத்ததற்காக உங்கள் மருதமலை முருகனே உங்களை மன்னிக்க மாட்டார்.

    2. முதலில் இந்தப் பதிவிலிருந்து என்னுடைய புகைப்படத்தை நீக்குங்கள். காரணங்கள்

    இ) 'இவ்வளவு வாயடிக்கிற நீ ஏன் உன்னோட புரொபைலில் போட்டோ போட்டுக்கொண்டாய்?' என்று நீங்கள் செருப்பாலடிக்க வேண்டும். அதை விடுத்து நீங்களும் என்னோட போட்டோவை உங்கள் பதிவில் போட்டுக்கொள்ளக்கூடாது.((-

    ஈ) இப்போதுதான் ஆளாளுக்குத் தமிழச்சியின் போட்டோ போட்டு செய்த அநியாயத்தைக் கண்டித்துப் பதிவு எழுதியிருக்கிறேன். நீங்கள் இந்தப் பதிவில் என் போட்டோ போட்டிருப்பதைப் பார்த்தால் ஏதோ யாரும் தன்னுடைய பதிவில் என் போட்டோ போடாத வயிற்றெரிச்சலில் எழுதியதைப் போல இருக்கிறது. ((-;

    சரி, உங்கள் வாதங்களுக்கு வருவோம்.

    /சுயநினைவோடுதான் இதை எழுதினீர்களா சுகுணா.. மாற்றுக் கருத்தை ஏற்கப் பிடிக்காமல் அவரை அவமானப்படுத்தி, அதன் மூலம் அவர் துன்புறுவதை நேரில் பார்த்து அனுபவிக்கும் சாடிஸ்ட் மனப்பான்மையை நீங்கள் ஆதிக்கச் சாதி வெறி என்று வழமை போல் உங்களது பகுத்தறிவு கட்சியின் தாக்கத்தினால் சாதி சாயம் பூசிவிட்டீர்கள்.



    இந்த சாடிஸ்ட் மனப்பான்மையுள்ள மனிதர்கள் நிறைய பேர். அவர்களுடைய எண்ண அளவுகோல்தான் ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும். தாங்கள் அறியாததல்ல. அப்படியிருந்தும் கண் முன்னே தெரிந்த ஒரு கற்பழிப்புக்கு சாதி சாயம் பூசி, கற்பழிப்பின் நோக்கமான மாற்றுக் கருத்தை ஏற்க முடியாமை என்கிற தனி மனித எண்ணக் குறைபாட்டை நீங்கள் போலியிடமிருந்து அப்புறப்படுத்த நினைப்பது எந்த வகையில் நியாயம்?

    /

    நான் எந்த பகுத்தறிவுக் கட்சியிலும் இல்லை. இருதரப்புமே பார்ப்பன ஆதரவு மற்றும் பார்ப்பன எதிர்ப்பைத் தானாகவே பேசிவருகிறது. இதை நான் ஒன்றும் 'கண்டுபிடித்துச்' சொல்லவில்லை. என் அம்மாவைத் 'தேவடியாள்' என்று திட்டினால் அது குறித்து எனக்குக் கவலையில்லை. அந்த வார்த்தைகளுக்கு நான் பெரிதாய் அர்த்தம் பாவிப்பதில்லை என்று சொல்கிறேனே தவிர, எல்லோரும் அப்படி இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. அதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

    மாற்றுக்கருத்தை ஏற்று உரையாடும் மனப்பக்குவம் இங்கு பலருக்கும் இல்லையென்பதே உண்மை. என்னுடைய 'போலிடோண்டுவும் துப்பறியும் சாம்புகளும்' பதிவைப் படித்தீர்களானால் அதில் இணைப்பாக எனது பழைய பதிவான 'உங்களுக்கு காமன்சென்ஸ் இல்லையா?' என்ற பதிவையும் அளித்திருக்கிறேன். அதை இன்னொருமுறை தெளிவாகப் படித்தால், நான் போலியையோ விடாதுகருப்பையோ ஆதரிக்கவில்லை என்பதும் மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது என்பது அவரவர் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நின்று கொண்டு 'விவாதிப்பதால்' சாத்தியப்பாடாது, 'உரையாடல்' மூலமே சாத்தியப்படும் என்பதைச் சொல்லியிருப்பதை உங்களால் விளங்கிக்கொள்ளமுடியும்.

    /ஆணாதிக்க பாசிஸ்ட் என்று இன்னொரு வரி.. இதற்கு என்ன அர்த்தம் என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆணாதிக்கம் நிறைந்தவர்கள்தான் மற்றவர்கள் வீட்டுப் பெண்களையும் தாங்களே பெண்டாள நினைப்பார்கள் என்று நினைத்தீர்களோ..? இங்கே நீங்கள் போலியாரை ஆணாதிக்கவாதி என்று சொன்னால் 'உண்மை'யானவர் ஆணாதிக்கத்தை மீறி திமிருபவர் என்று அர்த்தமாகி.. அது அவருக்கே அனர்த்தமாகிவிடும். 'உண்மை' அப்படியா எழுதுகிறார்..?/

    இங்கே நான் போலி (அ) கருப்புவை ஆணாதிக்கப் பாசிஸ்ட் என்று சொல்வதன் அர்த்தம் கற்பு குறித்த அவர்களது நிலைப்பாடுகளையொட்டியே. அந்த விஷயத்தில் நீங்கள் சொல்கிற 'உண்மை'யானவர் எவ்வளவோ மேல்.

    /பிறகு எதற்கு அந்த 'கெட்ட வார்த்தை' என்கின்ற இரண்டு வார்த்தைகள். "கெட்ட வார்த்தைகள் என்று ஏதுமில்லை.. எல்லாமே ஒன்றுதான்.." என்று எழுதிவிட்டுப் போய் விடலாமே.. ஏன் உங்களுக்கே 'அது போன்ற நிறைய மெயில்கள் வந்தும் பப்ளிஷ் செய்யவில்லை..' என்றும் சொன்னீர்களே.. பேசாமல் அவற்றையும் பப்ளிஷ் செய்திருக்கலாமே நல்ல வார்த்தைகள்தான் எனில்.. /

    கெட்ட வார்த்தைகள் என்பதற்காக நான் எந்தப் பின்னூட்டங்களையும் வெளியிடாமல் இருந்ததில்லை. அவை மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைப் பேசிப் போரடிக்க வைக்கின்றன என்பதாலேயே அவற்றை வெளியிடாமலிருந்திருப்பேன். வேண்டுமானால் கெட்ட வார்த்தைகள் என்பதில் கெட்ட - விற்கு மேல் ஒற்றை மேற்கோள்குறிகள் (' ') போட்டுக்கொள்ளுங்கள்.


    /எதற்கு இங்கே அறமும், சிந்தாந்தமும் தேவை? திருடனையும், கொலைகாரனையும் பிடிக்கச் சொன்னால் எந்த சிந்தாந்தத்தின் அடிப்படையில் அவன் திருடன், கொலைகாரன் என்று கேட்பீர்களோ..?


    /

    குறிப்பாக நான் சொன்னது ஒருகாலத்தில் போலியை ஆதரித்து, இப்போது எதிர்ப்பவர்களாக இருந்தாலும், அல்லது இப்போது ஆதரித்துக் கொண்டேயிருப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள், பெரியாரியம், திராவிடம், பார்ப்பன எதிர்ப்பு ஆகிய சித்தாந்தங்களின் பேராலேயே இதைச் செய்திருக்கிறார்கள், செய்துவருகிறார்கள். ஆனால் நுணுக்கமாக அணுகிப் பார்த்தால் அது தனிமனிதப் பிரச்சினைகளே தவிர வேறல்ல என்றே சொல்ல வந்தேன். மற்றபடி அறம் என்பது நம் அனைவருக்குமே அவசியமான ஒன்று என்றே நான் கருதுகிறேன்.


    --
    சுகுணாதிவாகர்

    ReplyDelete
  29. சுகுணா இதை முன்னமே சொல்லி இருந்தால் இடைப்பட்ட இத்தனை கமெண்டுகள் பொய் தமிழனுக்கு தேவைபட்டு இருக்காது :)

    ReplyDelete
  30. சுகுணா திவாகர்,

    இணையத்தில் பெரியாரியம் எப்படியாக வளர்க்கப்படுகிறது என்பதை நல்ல உதாரணங்களுடன் உங்கள் பதிவில் எழுதியிருந்தீர்கள். நண்பர்களே என்றாலும் தவறுசெய்யும்போது அதைச் சுட்டிக்காட்டுவதும், இங்கே நீங்கள் உண்மைத்தமிழனுக்கு எழுதியிருக்கும் பதில் குறிப்புகளும் எனக்கு மிகப்பிடித்தன. "அறம்" என்பது அனைவருக்குமே வேண்டிய ஒன்று என்ற இடம் அதிலும் குறிப்பாய். நானும் இந்த அறம் பற்றியும் வலையுலக அறம் பற்றியும் நேற்றுச் சிந்தித்துக்கொண்டிருந்ததால் இப்போது அதை இங்கே உங்கள் பின்னூட்டத்திலும் பார்க்க மகிழ்வாகவும் உள்ளது.

    பிறகு இங்கே விவாதங்களுக்குப் பதிலாய் உரையாடல்கள் நடப்பது எவ்வளவு பயனுடையாதாக இருக்கும் என்பதையெல்லாம் இப்போதைக்குக் கற்பனையில் மட்டும்தான் பார்த்துக்கொள்ள முடிகிறது. ஆனாலும் உங்களைப்போன்றோர் அதை வலியுறுத்திவருவதற்கு நன்றி. எனக்கும்கூட உங்களின் சில நிலைப்பாடுகளை விமர்சித்து உங்களுடனே ஒரு உரையாடல் நிகழ்த்தும் ஆர்வம் வருவதுண்டு. இருவருக்குமான நேர அமைவுகள் அப்படி ஒரு தினத்தில் கைகூடுமா தெரியவில்லை:((

    பிறகு இந்தப்பின்னூட்டத்தை உங்கள் பதிவில் இடாமல் இங்கே இடுவதற்குக் காரணம். ஒரு மூன்றுவாரங்களுக்கு முன்பு உங்களின் ஒரு கவிதைக்குப் பாராட்டி எழுதிய என் பின்னூட்டம் ஒன்று அங்கே பிரசுரிக்கப்படவில்லை:)) அதில் கெட்டவார்த்தைகள் ஏதும் இல்லை:)) ஒருவேளை ஒருவர் உங்களின் கவிதைகளுக்கு ஒருமுறைக்கு மேல் பாராட்டிப் பின்னூட்டினால் அதையும் கெட்ட வார்த்தைகள் பட்டியலில் சேர்த்துவிடுவீர்களோ என்றும் குழப்பமாக உள்ளது:)) என்றாலும் பிடிக்காத கவிதைக்குக்கூட மௌனமாய் நகர்ந்துவிடலாம். பிடித்ததை அப்படிச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும்?

    ///'இவ்வளவு வாயடிக்கிற நீ ஏன் உன்னோட புரொபைலில் போட்டோ போட்டுக்கொண்டாய்?' என்று நீங்கள் செருப்பாலடிக்க வேண்டும்////


    அங்கேயே கேட்கத் தோன்றியதுதான். சரி இப்போது இங்கே கேட்டுவைக்கிறேன். "நீங்கள் படம்போட்டுக்கொண்டது மட்டும் விளம்பரம் இல்லையா?". இது லொள்ளுக்கு. அவரவர் பதிவில் அவரவர் படம் போட்டுக்கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம் என்பதே என் நிலைப்பாடு.

    பின்குறிப்பு:

    உண்மைத்தமிழன், சென்னைப் பதிவர் பட்டறை பற்றிய உங்களின் தொடரை விரும்பிப் படித்தேன். நன்றாக எழுதியிருந்தீர்கள். இயல்பான நகைச்சுவை உங்களுக்கு எழுத்தில் கைகூடுகிறது. தொடருங்கள் அதை. நன்றி.

    ReplyDelete
  31. அன்பு சுகுணாவுக்கு

    //1. /மானமிகு சுகுணா ஐயா அவர்களுக்கு,/
    இந்த மானமிகு விவகாரம் பிரின்ஸ் என்னாரெஸ்ஸிற்குத் தெரியுமா? கடுப்பாகப் போகிறார். அய்யா என்று அழைக்கவேண்டாம். ஏதோ வயதான பீல் வருகிறது. 21 வயது இளைஞனுக்கு இப்படியொரு பீல் வரவைத்ததற்காக உங்கள் மருதமலை முருகனே உங்களை மன்னிக்க மாட்டார்.//

    'மானமிகு' என்கின்ற வார்த்தை வேறு யாருக்கும் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதா சுகுணா..? தமிழ்தானே.. அனைவருக்கும் பொதுவானதுதான்.. தம்பி பிரின்ஸ் கோபித்துக் கொண்டால் நாம் இருவரும் சேர்ந்தே அவரை மன்னிப்போம்..

    21 வயது இளைஞன் என்று உங்களைக் காட்டிக் கொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை நடந்துவிடப் போகிறது என்பது எனக்குப் புரியவில்லை. நான் 'அய்யா' என்று அழைத்தது மரியாதையால்தானே தவிர தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை யாருக்கும் போட்டுக் கொடுப்பதற்காக அல்ல. உங்களுக்கு அப்படியரு பீலிங் வரவேகூடாதே.. ஏன் வந்தது..? மருதமலை முருகனை நீங்கள் வேண்டியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. அபயம் தேடி சரணடைந்தவனை அபயமளித்து காப்பவன் என் அப்பன் முருகன். நிச்சயம் என்னையும் மன்னிப்பான். உங்களையும் காத்தருள்வான்.. கவலை வேண்டாம்..

    //2. முதலில் இந்தப் பதிவிலிருந்து என்னுடைய புகைப்படத்தை நீக்குங்கள். காரணங்கள்..//

    நீக்கிவிட்டேன்.. அப்புறம்..

    //இ) 'இவ்வளவு வாயடிக்கிற நீ ஏன் உன்னோட புரொபைலில் போட்டோ போட்டுக்கொண்டாய்?' என்று நீங்கள் செருப்பாலடிக்க வேண்டும். அதை விடுத்து நீங்களும் என்னோட போட்டோவை உங்கள் பதிவில் போட்டுக்கொள்ளக்கூடாது.((-//

    புகைப்படங்களை போடுவதால் சிலருக்கு மட்டுமே ஏற்பட்ட பிரச்சினையால்தான் இப்படி நானும், நீங்களும் மோதிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    உங்களது புகைப்படத்தை இடுவதால் இப்படியரு அழகன்(!) (நிஜமாகவே அழகான போஸ் தலைவா..) வலைப்பதிவுகளில் இருக்கிறார் என்பதைக் காட்டலாமே என்று நினைத்தேன். அவ்வளவுதான்.. மற்றபடி புகைப்படத்தை வைத்து திருவாளர் போலியார் மற்றவர்களை பயமுறுத்துவதைப் போல் தங்களையும் பயமுறுத்தும் வாய்ப்பே வராது.. உங்கள் பெயரில் போலி பதிவு ஆரம்பிக்கும் தைரியம் வலையுலகில் யாருக்கும் இல்லை என்று நினைக்கிறேன். காரணம், நான் முன்பே உங்களிடம் நேரில் சொன்னதுதான்.. "உங்களைப் போலவே எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். டவுசர் கிழிந்துவிடும்.."

    ஈ) இப்போதுதான் ஆளாளுக்குத் தமிழச்சியின் போட்டோ போட்டு செய்த அநியாயத்தைக் கண்டித்துப் பதிவு எழுதியிருக்கிறேன். நீங்கள் இந்தப் பதிவில் என் போட்டோ போட்டிருப்பதைப் பார்த்தால் ஏதோ யாரும் தன்னுடைய பதிவில் என் போட்டோ போடாத வயிற்றெரிச்சலில் எழுதியதைப் போல இருக்கிறது. ((-;

    நிச்சயம் கொஞ்சம் வயிற்றெரிச்சல்தான்.. சென்ற மாதம் டிரைவ் இன் உட்லண்ட்ஸில் நடந்த வலைப்பதிவர் கூட்டத்தில் சுகுணா திவாகர் யார் என்று நிறைய பேர் கேட்டார்கள். வந்திருந்த விருந்தினர்களுக்கே நாங்களே அறிமுகம் செய்து வைக்க வேண்டியதாக இருந்தது. அதனால்தான் இப்படி பளிச்சென எடுத்துப் போட்டுவிட்டால் பலரும் பார்த்துக் கொள்ளட்டுமே என்ற சமூக அக்கறையோடு செய்த செயல் அது.. இதற்கும் தமிழச்சியின் புகைப்படத்தை வலைத்தளத்தில் சிலர் ஒட்டியதற்கும் வித்தியாசம் உண்டு நண்பரே.. அது சிறுபிள்ளைத்தனம். இது எனக்குப் பெருமிதம்.

    //நான் எந்த பகுத்தறிவுக் கட்சியிலும் இல்லை. இருதரப்புமே பார்ப்பன ஆதரவு மற்றும் பார்ப்பன எதிர்ப்பைத் தானாகவே பேசிவருகிறது. இதை நான் ஒன்றும் 'கண்டுபிடித்துச்' சொல்லவில்லை. என் அம்மாவைத் 'தேவடியாள்' என்று திட்டினால் அது குறித்து எனக்குக் கவலையில்லை. அந்த வார்த்தைகளுக்கு நான் பெரிதாய் அர்த்தம் பாவிப்பதில்லை என்று சொல்கிறேனே தவிர, எல்லோரும் அப்படி இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. அதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.//

    இல்லை சுகுணா.. உதாரணமாக நான் போலியை எதிர்க்கிறேன் எனில் அதற்குக் காரணம் போலியின் பார்ப்பன எதிர்ப்பை குறித்தல்ல.. குடும்பத்தையே கொலை செய்வதைப் போல் எழுதுகிறாரே அந்த எழுத்துக்களைத்தான் கண்டிக்கிறேன்.. எதிர்க்கிறேன்.. பார்ப்பன எதிர்ப்பு என்பது இப்போதெல்லாம் இளைஞர்களுக்கு ஒரு பேஷன்தானே.. அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன்.

    உங்களுடைய குடும்பத்தினரை இதே போல் தாக்கினால் எனக்குக் கவலையில்லை என்கிறீர்கள். இந்த மனப்பக்குவம் உங்களுக்கு இந்த வயதில் கிடைத்ததே உங்களுடைய அதிர்ஷ்டம். ஆனால் எங்களுக்கு அப்படியில்லையே.. வாழ்க்கை முழுக்க உணர்வுகளாலேயே உந்தப்பட்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதை உடையில் ஒட்டிய தூசியைப் போல் தட்டிவிட்டு வாழ்க்கையை ஓட்ட நாங்கள் இன்னும் பழகவில்லை. பழகிவிட்டால் நாங்களும் உங்களைப் போல் 'தியாகி' என்ற பெயரைப் பெற்றுவிடுவோம்..

    //மாற்றுக்கருத்தை ஏற்று உரையாடும் மனப்பக்குவம் இங்கு பலருக்கும் இல்லையென்பதே உண்மை. என்னுடைய 'போலிடோண்டுவும் துப்பறியும் சாம்புகளும்' பதிவைப் படித்தீர்களானால் அதில் இணைப்பாக எனது பழைய பதிவான 'உங்களுக்கு காமன்சென்ஸ் இல்லையா?' என்ற பதிவையும் அளித்திருக்கிறேன். அதை இன்னொருமுறை தெளிவாகப் படித்தால், நான் போலியையோ விடாதுகருப்பையோ ஆதரிக்கவில்லை என்பதும் மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது என்பது அவரவர் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நின்று கொண்டு 'விவாதிப்பதால்' சாத்தியப்பாடாது, 'உரையாடல்' மூலமே சாத்தியப்படும் என்பதைச் சொல்லியிருப்பதை உங்களால் விளங்கிக்கொள்ளமுடியும்.//

    இது உண்மைதான். நான் மறுக்கவில்லை. கருத்தொன்றை மறுப்பதற்கு வார்த்தைகள் கிடைக்காதபட்சத்தில் கருத்து சொன்னவரின் ஜாதியும், படிப்பும், வேலையும், லெளகீக வாழ்க்கையும் அர்ச்சனைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படியரு நூழிலை வித்தியாசத்தில்தான் போலி இப்படியரு போலியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

    //இங்கே நான் போலி (அ) கருப்புவை ஆணாதிக்கப் பாசிஸ்ட் என்று சொல்வதன் அர்த்தம் கற்பு குறித்த அவர்களது நிலைப்பாடுகளையொட்டியே. அந்த விஷயத்தில் நீங்கள் சொல்கிற 'உண்மை'யானவர் எவ்வளவோ மேல்.//

    நீங்கள் இந்த நிலைப்பாட்டின்படிதான் சொன்னீர்கள் எனில் நான் உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் கொலையே செய்யவில்லை என்று நடிப்பவனைவிட ஏன் கொலை செய்தேன் என்று கேள் என்று நெஞ்சை நிமிர்த்திச்ச ல்பவன் மேலானவன் என்பது எனது கருத்து. உங்களது எண்ணப்படியே 'உண்மை'யானவரின் இது பற்றிய கருத்துக்கள் ஆரோக்கியமான வெளிப்பாடே..

    //கெட்ட வார்த்தைகள் என்பதற்காக நான் எந்தப் பின்னூட்டங்களையும் வெளியிடாமல் இருந்ததில்லை. அவை மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைப் பேசிப் போரடிக்க வைக்கின்றன என்பதாலேயே அவற்றை வெளியிடாமலிருந்திருப்பேன். வேண்டுமானால் கெட்ட வார்த்தைகள் என்பதில் கெட்ட - விற்கு மேல் ஒற்றை மேற்கோள்குறிகள் (' ') போட்டுக்கொள்ளுங்கள்.//

    போரடிக்கிறது என்று சொல்லி அவற்றை லேசுபாசாக விட்டுவிடாதீர்கள். இந்த எண்ணம்தான் ஒருவனை குரூரமாக்குகிறது. எண்ணங்கள்தானே மனிதர்களை இயக்குகிறது.. எண்ணங்கள்தானே மனிதர்களைச் செயல்பட வைத்து மேம்பட வைக்கிறது. எண்ணங்களே தவறாக இருக்கும்பட்சத்தில் அவனது செயல்பாடுகளும் தவறாகத்தானே இருக்கும். செயல்களே தவறாக இருக்கும்போது அவன் குறைந்தபட்சம் நல்ல மனிதனாக வாழ்வது எவ்வாறு.. இதற்குத்தான் சொன்னேன்.. புறந்தள்ளப்பட்ட வேண்டியவைகள் என்று நமது சந்ததியினருக்கு அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு.

    //குறிப்பாக நான் சொன்னது ஒருகாலத்தில் போலியை ஆதரித்து, இப்போது எதிர்ப்பவர்களாக இருந்தாலும், அல்லது இப்போது ஆதரித்துக் கொண்டேயிருப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள், பெரியாரியம், திராவிடம், பார்ப்பன எதிர்ப்பு ஆகிய சித்தாந்தங்களின் பேராலேயே இதைச் செய்திருக்கிறார்கள், செய்துவருகிறார்கள். ஆனால் நுணுக்கமாக அணுகிப் பார்த்தால் அது தனிமனிதப் பிரச்சினைகளே தவிர வேறல்ல என்றே சொல்ல வந்தேன். மற்றபடி அறம் என்பது நம் அனைவருக்குமே அவசியமான ஒன்று என்றே நான் கருதுகிறேன்.//

    பெரியாரியம், திராவிடம், பார்ப்பன எதிர்ப்பு என்பதை தங்களது நுகத்தடியில் தாங்கி தனி மனித சுதந்திரத்தை அனுமதிக்கும் மனப்பக்குவமுள்ளவர்களுக்கும் போலியின் இந்த வாழ்த்துரை கிடைக்கப் பெற்றிருக்கிறது. போலியின் ஒரே குறிக்கோள் நான் சொல்வதை நீங்கள் அனைவரும் கேட்க வேண்டும். இல்லாவிடில் இதுதான் நடக்கும் என்ற முட்டாள்தனமான சர்வாதிகாரம்.. அதைத்தான் அனைத்துத் தரப்பினரும் எதிர்க்கிறார்கள். எதிர்க்க வேண்டும். நீங்கள் சொல்வதைப் போல் கொள்கை ரீதியாக ஆதரித்து பின் இப்போது எதிர்த்தவர்களுக்கும்கூட அந்த வார்த்தைகள் ஓவர் டோஸாகி இப்போது ரிவர்ஸில் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

    டோண்டு-போலி டோண்டு என்ற இரு தனி மனிதர்களின் தனிப்பட்ட கொள்கைகள் காரணமாக ஒரு சமூகமே பாதிக்கப்படுகிறது என்னும் பட்சத்தில் நாமும் நமது சிம்மாசனத்தைவிட்டு கீழே இறங்கி வந்து வினவத்தான் வேண்டும். இவேறு வழியில்லை. அதனால்தான் இப்படியரு அக்கப்போர் உங்களுக்கும், எனக்கும்..

    அறம் என்கிற கூற்றை அவரவர் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொண்டு கடைசியில் தனக்கே அறம் கிடைக்காமல் அல்லல்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அறம் பொதுவானது. அனைவருக்கும் ஒன்றே என்கிற பக்குவம் அனைவரையும் எட்டும் வரையிலும் ந்த எதிர்பாட்டுக்களும் நடந்து கொண்டுதான் இருக்கும். வேறு வழியில்லை சுகுணா.

    மற்றபடி உங்களைக் கேட்காமல் புகைப்படத்தை இட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  32. //கம்யூனிச பூச்சாண்டி said...
    சுகுணா இதை முன்னமே சொல்லி இருந்தால் இடைப்பட்ட இத்தனை கமெண்டுகள் பொய் தமிழனுக்கு தேவைபட்டு இருக்காது :)//

    நண்பரே.. எனக்கும் கம்யூனிஸத்திற்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.. கம்யூனிஸ்ட்களுக்கு நான் எதிரியும் அல்ல. பின்பு எதற்கு இப்படியரு பெயர்..?

    நான் பொய்த் தமிழனாகவே இருந்து கொள்கிறேன்.. ஆனால் கம்யூனிஸத்தை வைத்து பூச்சாண்டி காட்ட வேண்டாம்.. பின்பு பயம் பிடித்துவிட்டால் எந்த ஊர் வேப்பிலை அடித்தாலும் 'ஆத்தா' விடாது..

    ReplyDelete
  33. //பிறகு இந்தப்பின்னூட்டத்தை உங்கள் பதிவில் இடாமல் இங்கே இடுவதற்குக் காரணம். ஒரு மூன்றுவாரங்களுக்கு முன்பு உங்களின் ஒரு கவிதைக்குப் பாராட்டி எழுதிய என் பின்னூட்டம் ஒன்று அங்கே பிரசுரிக்கப்படவில்லை:)) அதில் கெட்டவார்த்தைகள் ஏதும் இல்லை:)) ஒருவேளை ஒருவர் உங்களின் கவிதைகளுக்கு ஒருமுறைக்கு மேல் பாராட்டிப் பின்னூட்டினால் அதையும் கெட்ட வார்த்தைகள் பட்டியலில் சேர்த்துவிடுவீர்களோ என்றும் குழப்பமாக உள்ளது:)) என்றாலும் பிடிக்காத கவிதைக்குக்கூட மௌனமாய் நகர்ந்துவிடலாம். பிடித்ததை அப்படிச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும்?//

    மேடம், உங்களுக்கு மட்டுமல்ல.. பலரும் சுகுணாவுக்கு போடுகின்ற கமெண்ட்ஸ் மாடுரேஷன்லேயே காணாமல் போய்விடும். அவர் ரேஷன் கடை கணக்காக மெயில்களை ஓப்பன் செய்து பார்ப்பதால் நிறைய மெயில்கள் அவர் கண்ணில் படாமலேயே போய் விடுகின்றன. நான் போட்ட பத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் போன்ற எனது கமெண்ட்களை நான் பார்க்கவே இல்லை என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்து சொல்லிவிட்டார். என்ன செய்வது?

    //அங்கேயே கேட்கத் தோன்றியதுதான். சரி இப்போது இங்கே கேட்டுவைக்கிறேன். "நீங்கள் படம்போட்டுக்கொண்டது மட்டும் விளம்பரம் இல்லையா?". இது லொள்ளுக்கு. அவரவர் பதிவில் அவரவர் படம் போட்டுக்கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம் என்பதே என் நிலைப்பாடு.//

    ஆஹா.. நியாயமான கேள்வி.. எனக்குத் தோணாம போயிருச்சு.. கரீக்ட்டான கேள்வி..

    //உண்மைத்தமிழன், சென்னைப் பதிவர் பட்டறை பற்றிய உங்களின் தொடரை விரும்பிப் படித்தேன். நன்றாக எழுதியிருந்தீர்கள். இயல்பான நகைச்சுவை உங்களுக்கு எழுத்தில் கைகூடுகிறது. தொடருங்கள் அதை. நன்றி.//

    தங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுரைக்கும் மிக்க நன்றி மேடம்..

    ReplyDelete
  34. தமிழன் அய்யா,

    மனிதனுக்கு "அறம்" வேனும்..

    நான் சோடா கேப்பன்..

    என்ன யாராச்சும் சோடா கேட்டாக் கூட நான்...குடுத்த குடுப்பேன்..இல்லையின்னா ஒன்னுமே சொல்ல மாட்டேன்..

    கமுக்கமா கேக்கனுமின்னு நீங்க ஆதிக்கம் செலுத்தப் பாக்குறீங்க..

    நீங்க சொன்னத நான் கேட்டா நான் ஒரு வரைமுறைகுள்ள ஒடுங்கியவனா ஆகிடுவேன்..

    இந்த உலகிலே..சோடாவ யார் வேனா கேக்கலாம்..

    எல்லாருமே ஒரு நேரம் இல்லையின்னா ஒரு நேரத்தில வெயில் தாங்க முடியாமா பெப்ஸி, கோக் குடிக்கிறவங்க தானே..அதுலேயும் கேஸ்.. சோடாவிலேயும் கேஸ்...

    ...................(மூச்சு வாங்குது...)....

    உடையாத சோடா தான் நான் கேட்டேன் அப்படின்னு நீங்களா எப்படி முடிவு பன்னலாம். உங்க வாழ்க்கையிலே.....நீங்க வேனா உடையாத சோடா சாப்பிட்டிருப்பீங்க...ஆனா நான்..உடைஞ்ச சோடாவானாலும்..சாப்பிடுவேன்..

    அய்யயோ...எப்படி எழுதுறாங்க..பின்னும் நவினத்தத்துவம்..கை, கால், மவுஸ் எல்லாமே பின்னது...

    //*உண்மைத் தமிழன்(15270788164745573644) said..

    மொதல்ல மீட்டிங் முடியட்டும்.. மிச்சம், மீதி ஏதாவது சோடா உடையாம இருந்தா தர்றேன்.. அதுவரைக்கும் கமுக்கமாக பேசுறதை கேக்கணும்..*//

    ReplyDelete
  35. உண்மைத்தமிழன்,

    தயைசெய்து பதிவுகளைப் பதிவாகப் போடவும் பின்னூட்டமாக அல்ல.

    நண்பன் சுகுணாவின் ஒவ்வொரு வரியிலும் உடன்படுகிறேன்.

    ReplyDelete
  36. who the hell is vehaadavan ?
    i think he is moorthy himself.
    i never phones anyone. nonsense

    athiyaman

    ReplyDelete
  37. பதிவையும் பின்னூட்டத்தையும் படிச்சி முடிக்கறதுக்குள்ள ரெண்டு தடவை தூங்கி எந்திரிசாச்சு...

    என்னய்யா நடக்குது...கின்னஸ் புத்தகத்துல இடம்புடிக்க பதிவும் பின்னூட்டமும் எழுதுறீங்களா....

    தாங்கல சாமி....தாங்கல...

    ReplyDelete
  38. சொன்னாங்க கேட்காம உன் பதிவ படிச்சேன் பாரு என்ன சொல்லனும் முதலில் .

    ஏய்யா பொய் தமிழா உனக்கு விசயத்தை சுருக்கமா சொல்லவே தெரியாதா .

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா கண்ண கட்டுதே

    ReplyDelete
  39. செல்வநாயகிக்கு,

    உண்மைத்தமிழன் மீது சத்தியமாக உங்களுடைய பின்னூட்டம் வரவில்லை. அப்படி வந்திருந்தால் நிச்சயமாக வெளியிட்டிருப்பேன். ஆனால் புது பிளாக்கருக்கு மாறியபிறகோ என்னவோ, இதுமாதிரியான புகார்கள் அடிக்கடி நண்பர்களிடமிருந்து வருகின்றன. எனது பாஸ்வேர்ட் தெரிந்த இருபத்தைந்துபேரில் யாராவது சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன். ((-.

    கம்யூனிசப்பூச்சாண்டி,

    உடனடியாக உ.த க்குப் பதில் எழுத முடியாமல் போனதற்குக் காரணம் நேரம் தவிர வேறொன்றுமல்ல.

    உண்மைத்தமிழன்,

    /நான் 'அய்யா' என்று அழைத்தது மரியாதையால்தானே தவிர தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை யாருக்கும் போட்டுக் கொடுப்பதற்காக அல்ல/

    ஆட்டோ அனுப்பவா?

    /உங்கள் பெயரில் போலி பதிவு ஆரம்பிக்கும் தைரியம் வலையுலகில் யாருக்கும் இல்லை என்று நினைக்கிறேன்./
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டே, உடம்பை ரணகளமாக்கப் போறீங்கன்னு மட்டும் தெரியுது.

    சத்யா,

    /தயைசெய்து பதிவுகளைப் பதிவாகப் போடவும் பின்னூட்டமாக அல்ல.
    /

    நீ லொள்ளுக்குப் பிறந்தவனாடா?

    /நண்பன் சுகுணாவின் ஒவ்வொரு வரியிலும் உடன்படுகிறேன்./

    நீ நேற்றுப் போன் பண்னியதை ரெகார்டு பண்னவில்லை. அதனால் நீ நான் போற இடமெல்லாம் வந்து பாவமன்னிப்பு கேட்கவேண்டாம். ஒரே ஒரு உதவி மட்டும் செய். தமிழச்சி விவகாரத்தை நான் எழுதப்போக செல்லா அதைவைத்தே பில்டர்காபி, போஸ்ட்மாடர்னிசம், என்று மொக்கைபோட (இன்னும் மூன்று மொக்கைப்பதிவுகள் தயார்பண்ணிவைத்திருப்பதாக பகீர் தகவல்கள் வருகின்றன)தியாகு வேறு இந்தப் பிரச்சினையை வைத்துக் கவிதை எழுதி நம்மைக் கதிகலங்கவைக்கிறார். அதைத் தடுத்து நிறுத்த உடனடி ஆக்ஷன் தேவை.

    ReplyDelete
  40. அய்ய்யய்யயோ ...தலை சுத்துது....ஆனால் ஒன்றே ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெரிய பதிவுகள் போட அணுகவும்

    - உண்மைத் தமிழன் -

    ReplyDelete
  41. இது மாதிரி..பின்னுட்டம் எல்லாம்..அனுமதிக்காதீங்கய்யா..

    இது கட்டளை அல்ல.
    வேண்டுகோள்...

    கிசு கிசு ன்னு சிண்டு முடியுவானுங்க...

    நீங்க..எதிர்க்கிறதும்..இத போல ஒரு விசயம் தான்..

    உங்கள பத்தின கிசு கிசுன்னா போடுங்க..அது உங்க உரிமை..


    //*Anonymous said...

    Your beloved poli has started his filthy things again.

    For sure, the language used is a Tanjore district (xxxxx) or North/South Arcot district (may be ய்ய்ய்ய் or ழ்ழ்ழ்ழ்) slang.

    And, the audio file posted by Osai Chella sounded like a kid's voice or someone who is a school dropout with some computer diploma from NIIT or APTECH!!! (I mean so innocent, but not the kind of words he used)

    Now it is a million dollar question "Who is the real poli"?
    Onemore observation, after the poli eposode I dont see any postings from some people.

    Disclaimer: I am not a blogger and I dont have any blog in my name (not even gmail id!!!). I am a regular reader of Thamizmanam.*//

    ReplyDelete
  42. உண்மை தமிழர்,

    உங்க பதிவில் பின்னூட்டம் போடலாம்னு வந்து வந்து பார்க்கிறேன் கொஞ்சம் கூட கேப் விடாமால் பேசுரிங்களே!

    //டோண்டு-போலி டோண்டு என்ற இரு தனி மனிதர்களின் தனிப்பட்ட கொள்கைகள் காரணமாக ஒரு சமூகமே பாதிக்கப்படுகிறது என்னும் பட்சத்தில் நாமும் நமது சிம்மாசனத்தைவிட்டு கீழே இறங்கி வந்து வினவத்தான் வேண்டும்//


    யாருங்க சொன்னா ஒரு சமூகமே பாதிக்கப்பட்டதுனு , அந்த ரெண்டு மனுசன்களைப்பத்தியும் இங்கே கவலைப்பட ஆள் கிடையாது , யாரோ ஒரு சிலர் தான் இதைப்பேசி பேசி இழுக்கிறாங்க, கண்டுக்காம விட்டா தானாவே காணாமல் போகும் ஆட்கள் தான் அவர்கள்!

    எனக்கு இதுவரைக்கும் ஒன்னு தான் புரியலை , எல்லாரும் கமெண்ட் மாடரேஷன் வச்சுக்கிட்டு அவன் ஆபாச பின்னூட்டம் போடுரானு புலம்பினா என்ன அர்த்தம்? மெயிலில் வந்தால் ... தலைப்பு பார்க்கும் போதே பக்கத்தில் இருப்பவருக்கு ஆபாசம் தெரியுமா என்ன?

    எத்தனை ஜன்க் மெயில் வருது அதை எல்லாம் ஸ்பாம்னு பில்டர் பண்ணுவதில்லை. என்னையா , கம்பியூட்டர் உங்களுக்கு மட்டும் தான் தெரிஉம் என்பது போல எல்லாம் ஓவரா அலம்பல் பண்றிங்க!

    இந்த போலி மேட்டர் ஒன்னுமே இல்லாத சப்பை மேட்டர் அதை புடிச்சு இழுத்து விளம்பரம் தேடிக்கொண்டவர்கள் தான் இங்கே அதிகம்.

    இந்த புலம்பல் கோஷ்டிய தூக்கி போட்டு மிதிச்சா எல்லாம் அடங்கிடும்!

    ReplyDelete
  43. //ஐயோ அனானி.. விடிய விடிய ராமாயணம் கேட்டு விடிஞ்சப்புறம் ராமன் சீதைக்கு சித்தப்பனான கதையை மறுபடியும் சொல்ல வைக்காதீங்க..

    அதான் அவரே ஒத்துக்கிட்டாரே நான்தான் போலி என்று.. பின்ன எதுக்கு இங்க வந்து நூல் விடுறீங்க..? மேட்டர் முடிஞ்சிருச்சு. விட்ருங்க..//

    செவிட்டு நண்பரே,

    யார் எந்த பதிவில் நான் போலி என்று ஒப்புக் கொண்டிருக்கிறான்? லிங் பிளீஸ்?

    ReplyDelete
  44. டோண்டு சொல்வதில் செய்வதில் தவறு இல்லையா?

    அவன் உன் ஜாதியையும் சேர்த்துத்தாண்டா தீண்டத்தகாதவன் என்று சொல்கிறான்.

    நீ வேனும்னா அவன் வீட்டுக்கு போய் அமர்ந்து விட்டு எழுந்து வா. திண்ணையை கழுவுகிறானா இல்லையா என்று பாரேன்.

    ReplyDelete
  45. //உடையாத சோடா தான் நான் கேட்டேன் அப்படின்னு நீங்களா எப்படி முடிவு பன்னலாம். உங்க வாழ்க்கையிலே.....நீங்க வேனா உடையாத சோடா சாப்பிட்டிருப்பீங்க...ஆனா நான்..உடைஞ்ச சோடாவானாலும்..சாப்பிடுவேன்..அய்யயோ...எப்படி எழுதுறாங்க..பின்னும் நவினத்தத்துவம்..கை, கால், மவுஸ் எல்லாமே பின்னது...//

    உடைஞ்ச சோடா பாட்டிலை சாப்பிடுற அளவுக்கு வாயும், வயிறும் இருக்குறவுகளுக்கு ஏன் இப்படியரு பொறாமை.. தம்பி டிபிசிடி.. உடம்பை பார்த்துக்கப்பூ..

    ReplyDelete
  46. //Pot"tea" kadai said...
    உண்மைத்தமிழன், தயைசெய்து பதிவுகளைப் பதிவாகப் போடவும் பின்னூட்டமாக அல்ல.

    பொட்டீ.. பதிவுகளைப் பதிவுகள்ன்னு நினைச்சுக்கிட்டுப் படிக்கணும்.. பின்னூட்டம்னு நினைச்சுப் படிக்கக் கூடாது. அப்படிப் படிச்சா இப்படித்தான் குழப்பம் வரும்..

    //நண்பன் சுகுணாவின் ஒவ்வொரு வரியிலும் உடன்படுகிறேன்.//

    ஏன்? போன்ல பேசும்போது எதுனாச்சும் ரப்ஸர் ஆயிருச்சா..?

    ReplyDelete
  47. //K.R.அதியமான். 13230870032840655763 said...
    who the hell is vehaadavan ? i think he is moorthy himself. i never phones anyone. nonsense
    athiyaman.//

    Don't Worry. Coolma..

    ReplyDelete
  48. //பங்காளி... said...
    பதிவையும் பின்னூட்டத்தையும் படிச்சி முடிக்கறதுக்குள்ள ரெண்டு தடவை தூங்கி எந்திரிசாச்சு... என்னய்யா நடக்குது...கின்னஸ் புத்தகத்துல இடம் புடிக்க பதிவும் பின்னூட்டமும் எழுதுறீங்களா.... தாங்கல சாமி....தாங்கல...//

    ரெண்டு தடவை தூங்க வைச்சிருக்கோம்ல.. அதுக்கு நன்றி சொல்லாம புலம்புறீங்களே பங்கு..

    ReplyDelete
  49. //டிராஸ்க்கி said...
    சொன்னாங்க கேட்காம உன் பதிவ படிச்சேன் பாரு என்ன சொல்லனும் முதலில் .ஏய்யா பொய் தமிழா உனக்கு விசயத்தை சுருக்கமா சொல்லவே தெரியாதா .ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா கண்ண கட்டுதே.//

    இதைவிடச் சுருக்கமா எழுதுறதுன்னா நீங்க எழுதிக் காமிங்க.. பார்த்துக்குறேன்..

    ReplyDelete
  50. //உண்மைத்தமிழன்,
    /நான் 'அய்யா' என்று அழைத்தது மரியாதையால்தானே தவிர தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை யாருக்கும் போட்டுக் கொடுப்பதற்காக அல்ல/
    ஆட்டோ அனுப்பவா?//

    இதுக்கெதுங்கண்ணா ஆட்டோ.. வாடான்னா நேர்ல வந்திரப் போறேன்.. உரையாடல் மூலமே எதையும் திர்த்துக் கொள்வோம் தோழரே..

    ReplyDelete
  51. ///உங்கள் பெயரில் போலி பதிவு ஆரம்பிக்கும் தைரியம் வலையுலகில் யாருக்கும் இல்லை என்று நினைக்கிறேன்./
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டே, உடம்பை ரணகளமாக்கப் போறீங்கன்னு மட்டும் தெரியுது.///

    ஆகாது தோழரே.. உங்களைப் போல் எழுத முடியுமென்றால் இந்நேரம் யாராவது போலிப் பதிவை ஆரம்பித்திருப்பார்கள். முடியவில்லை. அதான்.. விட்டு வைச்சிருக்காங்க..

    ReplyDelete
  52. //viswa said...
    அய்ய்யய்யயோ ...தலை சுத்துது....ஆனால் ஒன்றே ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய பதிவுகள் போட அணுகவும்
    - உண்மைத் தமிழன் -//

    சுகுணாவின் பதிவு மட்டும் ரொம்பச் சின்னதோ..?

    ReplyDelete
  53. //TBCD said...
    இது மாதிரி..பின்னுட்டம் எல்லாம்..அனுமதிக்காதீங்கய்யா.. இது கட்டளை அல்ல.வேண்டுகோள்... கிசு கிசு ன்னு சிண்டு முடியுவானுங்க...நீங்க..எதிர்க்கிறதும்..இத போல ஒரு விசயம் தான்.. உங்கள பத்தின கிசு கிசுன்னா போடுங்க..அது உங்க உரிமை..//

    சரி. முயற்சி பண்றேன்..

    ReplyDelete
  54. ///வவ்வால் said...
    உண்மை தமிழர், உங்க பதிவில் பின்னூட்டம் போடலாம்னு வந்து வந்து பார்க்கிறேன் கொஞ்சம் கூட கேப் விடாமால் பேசுரிங்களே!

    இல்லையே.. நான் இந்தப் பதிவைப் போட்டு மூணு நாளு நாளாச்சே.. நீங்கதான் ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க..

    ///டோண்டு-போலி டோண்டு என்ற இரு தனி மனிதர்களின் தனிப்பட்ட கொள்கைகள் காரணமாக ஒரு சமூகமே பாதிக்கப்படுகிறது என்னும் பட்சத்தில் நாமும் நமது சிம்மாசனத்தைவிட்டு கீழே இறங்கி வந்து வினவத்தான் வேண்டும்//

    //யாருங்க சொன்னா ஒரு சமூகமே பாதிக்கப்பட்டதுனு , அந்த ரெண்டு மனுசன்களைப்பத்தியும் இங்கே கவலைப்பட ஆள் கிடையாது , யாரோ ஒரு சிலர் தான் இதைப் பேசி பேசி இழுக்கிறாங்க, கண்டுக்காம விட்டா தானாவே காணாமல் போகும் ஆட்கள் தான் அவர்கள்!///

    கண்டுக்காமல் விடக்கூடிய அளவுக்கா போலியார் செய்து வைத்திருக்கிறார். இதையட்டி தினமும் எனக்கு ஒரு மெயிலாவது தெரிந்த நண்பர்களிடமிருந்து வருகிறது. எப்படி மறக்க முடியும்?

    //எனக்கு இதுவரைக்கும் ஒன்னு தான் புரியலை , எல்லாரும் கமெண்ட் மாடரேஷன் வச்சுக்கிட்டு அவன் ஆபாச பின்னூட்டம் போடுரானு புலம்பினா என்ன அர்த்தம்? மெயிலில் வந்தால் ... தலைப்பு பார்க்கும் போதே பக்கத்தில் இருப்பவருக்கு ஆபாசம் தெரியுமா என்ன? எத்தனை ஜன்க் மெயில் வருது அதை எல்லாம் ஸ்பாம்னு பில்டர் பண்ணுவதில்லை. என்னையா , கம்பியூட்டர் உங்களுக்கு மட்டும் தான் தெரிஉம் என்பது போல எல்லாம் ஓவரா அலம்பல் பண்றிங்க! இந்த போலி மேட்டர் ஒன்னுமே இல்லாத சப்பை மேட்டர் அதை புடிச்சு இழுத்து விளம்பரம் தேடிக்கொண்டவர்கள் தான் இங்கே அதிகம்.இந்த புலம்பல் கோஷ்டிய தூக்கி போட்டு மிதிச்சா எல்லாம் அடங்கிடும்!//

    ஒருவருக்குப் பயந்து கொண்டு நாம் ஏன் கமெண்ட் மாடுரேஷன் செய்து கொள்ள வேண்டும். ஊரில் ஒருவன் திருடிக் கொண்டேயிருக்கிறான் என்றால் அவனுக்குப் பயந்து ஊர், ஊராக மாறிக் கொண்டேயிருக்க முடியுமா?

    ஜிமெயிலில் பில்டர் செய்வது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் தனி மடலில் எழுதி அனுப்புங்கள். தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  55. ///Anonymous said...
    //ஐயோ அனானி.. விடிய விடிய ராமாயணம் கேட்டு விடிஞ்சப்புறம் ராமன் சீதைக்கு சித்தப்பனான கதையை மறுபடியும் சொல்ல வைக்காதீங்க..
    அதான் அவரே ஒத்துக்கிட்டாரே நான்தான் போலி என்று.. பின்ன எதுக்கு இங்க வந்து நூல் விடுறீங்க..? மேட்டர் முடிஞ்சிருச்சு. விட்ருங்க..//
    செவிட்டு நண்பரே,யார் எந்த பதிவில் நான் போலி என்று ஒப்புக் கொண்டிருக்கிறான்? லிங் பிளீஸ்?///

    ஐயா அனானி.. மொதல்ல நீங்க யார்? உங்களை நான் எப்ப போலின்னு சொன்னேன்.. நீங்களே அனானியா வந்திருக்கீங்க.. உங்களை நான் எப்படி போலின்னு சொல்ல முடியும்..

    காலங்கார்த்தால எந்திரிச்சவுடனே அவசரம், அவசரமா மெயில் டைப் செய்யக்கூடாது.. இப்படித்தான் மொத்தமே குழப்பமாயிரும்.

    ReplyDelete
  56. //Anonymous said...
    டோண்டு சொல்வதில் செய்வதில் தவறு இல்லையா? அவன் உன் ஜாதியையும் சேர்த்துத்தாண்டா தீண்டத்தகாதவன் என்று சொல்கிறான்.நீ வேனும்னா அவன் வீட்டுக்கு போய் அமர்ந்து விட்டு எழுந்து வா. திண்ணையை கழுவுகிறானா இல்லையா என்று பாரேன்.//

    2 நிமிட இடைவெளியில் அடுத்த கமெண்ட்டா..? உன் முட்டாள்தனமா கேள்விக்கெல்லாம் பதில் கேட்டா எப்படி மிஸ்டர் போலி..

    ReplyDelete